மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.10.09

Lessons on Astrology: வர்கோத்தமம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: வர்கோத்தமம்!
Yogam No.11
-----------------------------------
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

79 comments:

  1. Sir, I have a question, I will take my own example, for meena lagna, in my chart, mars owns 2nd and 9th house and it is in 12 th house kumabam, but also in namavamsa it is in kumbam, but my lagna is kumbam for navamsa so will this bring good or bad or both mixed results?

    ReplyDelete
  2. ////Thanuja said...
    Sir, I have a question, I will take my own example, for meena lagna, in my chart, mars owns 2nd and 9th house and it is in 12 th house kumabam, but also in namavamsa it is in kumbam, but my lagna is kumbam for navamsa so will this bring good or bad or both mixed results?////

    மீன லக்கினம்: செவ்வாய் 12ல், அதாவது கும்பத்தில். அம்சத்திலும் 12ல் அதாவது கும்பத்தில். வர்கோத்தமம் பெற்றும் செவ்வாய் 12ல் மறைந்துவிட்டதால், அவரால்
    உரிய பலன்களை உரிய நேரத்தில் தர முடியாது. வர்கோத்தமம் பெற்றும் பலனில்லை!

    ReplyDelete
  3. Ok sir, thank u!!! sevvai enaku durogam seithu vittar!!!

    ReplyDelete
  4. ஐயா,

    நான் ஜோதிடத்தில் நடை பழகி கொண்டு இருக்கும் மாணவி. ஜோதிடத்தில் கடேசி பெஞ்ச் ஆனால் ஓங்கல் எழுத்துகள் எனக்கு தன்னம்பிக்கை தந்தது.விருச்சிகத்தில் சந்திரன் என்ன்றும் மன உலசல் தந்தான் இப்பொது உங்கள் எழுத்துகளை படிக்க தொடங்கிய பின் மனம் strong ஆகி விட்டது...கவலை படும் மனது இல்லை .....

    பல கோடி நன்றி

    ReplyDelete
  5. நீச குரு நவாம்சத்திலும் நீசம் பெற்று விடுகிறார். ராசி சக்கரத்தில் 6,9க்கு
    உரிய அவர் 7ல் நீசமனார்.ந்வாம்சத்தில் லக்னாதிபதி,4க்கு உரியவராகி 2ல் நீசமானார்.ராசியில் 7,8க்கு உரிய சனீஸ்வ‌ரன் சிம்ம்மத்தில் சூர்யனோடு இருந்தார். நவாம்சத்தில் 2,3க்கு உரிய அவர் 9ல் சிம்மத்தில் இருந்தார்.இப்பொது 8க்கு உரிய சந்திரன் அவரோடு 9ல் சேர்ந்து விட்டார்.
    இது எப்ப்டி இருக்கு?
    அய்யா‌ சேலம் அரசுக் க‌ல்லூரியில் நான் 65 முத‌ல் 69 வ‌ரை கெமிஸ்ட்ரி
    ப‌டித்தேன். தாங்க‌ளும் அதே ச‌ம‌ய‌த்தில் சேல‌த்தில் இருந்த‌தாக‌த் தெரிகிற‌து.
    நாம் க‌ல்லூரித் தோழ‌ர்க‌ளோ?

    ReplyDelete
  6. அய்யா,

    என் நண்பர் ஒருவருக்கு மேஷ லஞதில் குரு வக்கிரம், வர்கோத்தமம் அடைந்து இருக்கிறார் . அவன் கேட்கிறான் , வரோகோதமம் பெற்றதால் 5,7,9 இடங்களுக்கு மிகவும் நல்லதா என்று . நன் உங்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன் .

    நன்றி சார்
    சரவணா

    ReplyDelete
  7. எனக்கு கன்னி லக்கினம் வர்கோத்தமம். என் மனைவிக்கு 7ல் இருக்கும் மகர செவ்வாய் வர்கோத்தமம்.

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    வர்க்கோத்தமம் (வர்க்கத்தை ஒத்த இடம் என கொள்கிறேன்) பாடம் அருமை.

    லக்னாதிபதி பன்னிரெண்டில் மறைவது சிறப்பல்ல இருந்தும் அது மற்ற சில அமைப்பால் சற்று மேம்படலாம் அப்படி இருக்க,

    அதே அமைப்பு லக்னமும் வர்க்கோத்தமம் ஆகி லக்னாத்பதியும் வர்க்கோத்மமாகியிருந்தால், லக்னாதிபதி பன்னிரெண்டில் மறைந்ததன் நிலை இன்னும் மோசமாகுமா? அல்லது வர்க்கோத்தமம் என்பதன் அடிப்படையில் பலன் கிடைக்குமா?

    உதாரணம்: ராசிக் கட்டத்தில் விருச்சிக லக்னம், லக்னாதிபதி செவ்வாய் பன்னிரெண்டில் மறைவு இதே நிலையில் நவாம்சத்திலும் இருந்தால் அதாவது வர்க்கோத்தமம் ஆகி இருந்தால் எப்படிக் கொள்வது.

    (மன்னிக்கவும் அடியேன் தனுசு லக்னம் அதனால் தானோ என்னவோ இத்தனை விரிவாக எழுதச் செய்கிறதோ எனத் தோனுகிறது.)

    சற்று விளக்கேற்றுங்களே எந்தன் இருட்டுக்கு.

    நன்றிகள் குருநாதா.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  9. அய்யா வணக்கம். வர்கோத்தமம் பற்றி சில சந்தேகங்கள் கேட்கலாம் என்றிருந்தேன்.எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் பாடம்டபுள் டக்கர்.வாழ்க தங்கள் நல்ஆசிரியர் பணி.வளர்கமாணவர்கள் ஜோதிட அறிவு.நன்றி

    ReplyDelete
  10. ஐயா, மகர லக்னம் 7ம் இட சந்திரன் வர்கோத்திரம் பெற்று சூரியனுடன் நவாம்சத்தில் துலாமிலுள்ளது. ராசி சக்கிரதில் 7ல் குரு.10ல் சந்திரன் + சுக்கிரன் திருமணத்தில் அதிக தடைகள் வருகிறது. வர்கோத்திரம் பெற்றும் ஏன் தடை ஐயா.. மனஉலைச்சலாக உள்ளது. தயவுசெய்து விலக்குக்கள் ஐயா ஆறுதலாக இருக்கும்.....

    ReplyDelete
  11. அய்யா காலை வணக்கம் ,
    எனக்கு சூரியன் வர்கோதமம் ,,தனுசு லக்னம் 6 இல் ரிசபதில் சூரியன் அவர் எனக்கு பக்யாதிபதி அவர் சனி பார்வை(சனி 12 இல்) பெற்று அமர்ந்துளார்,க்ரக சேர்கை இல்லை அம்சத்திலும் அவர் ரிசபதில் அமர்ந்துள்ளார் உடன் கேது இருகிரர் துலாம் அம்ச லக்னம் பலன் தருவரா?

    அய்யா பதில் தருவர் என்று ஆன்லைனில் காத்திருகும் அன்பு மாணவன்

    நன்றி

    ReplyDelete
  12. வர்கோத்தமம் பாடம் அருமை.
    அசத்தலான விளக்கங்கள்.
    7ம் இடம், 10ம் இடம் தவிர,
    மற்ற இடங்களையும் உதாரணமாக‌
    பரவலாக சொன்னால்
    எல்லாஇடங்களையும் தொட்டமாதிரி
    இருக்கும்.மற்ற பாவங்களையும் புரிந்துகொண்ட‌
    மாதிரி இருக்கும்.
    நண்றி அய்யா.

    ReplyDelete
  13. (ஆசிரியரும் மாணவரும்)
    இருவர் ஒரே மன நிலையில் இருந்தால் அது வர்கோத்தமம் என்று
    எளிமையாக பாடம் சொல்லும்
    திறன் எங்கள் வாத்தியாருக்கு மட்டுமே உண் . . டு

    வாழ்க வாத்தியார் . . .
    வளர்க மாணவர்கள் . . .

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Ayya in my rasi and in navamsa chart guru is in scorpio and moon is in leo.but rasi lagnam is libra and kumba lagnam in navamsa.Is that results vary?

    ReplyDelete
  16. உள்ளேன் ஐயா...

    தனுஜா,ஆலாசியம்,கிருக்ஷ்ணன்-இவர்களின் சந்தேகங்களுக்கான பதில் தெளிவாக இருந்தாலே என் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்...

    நன்றி குருவே!!!

    ReplyDelete
  17. ஐயா காலை வணக்கம்

    எனக்கு கன்னி லக்னம். இரண்டில் (துலாம்) புதனும் சுக்கிரனும், நவாம்சத்திலும் துலாம் - ல் புதன். சரிதான். வாய் கொஞ்சம் அதிகம் தான்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. /////Thanuja said...
    Ok sir, thank u!!! sevvai enaku durogam seithu vittar!!!/////

    2nd & 9th அதிபதியான செவ்வாய் உங்களுக்கு முக்கியமானவர். அவர் எதற்கு துரோகம் செய்யப்போகிறார்? அவர் 12 ல் மறைந்தாலும், தன்னுடைய தசா, புத்திகளில் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். அண்டா, அண்டாவாகச் செய்யாவிட்டாலும், குடம் குடமாகச் செய்வார்.
    வடிவேலனை வணங்குங்கள் அவர்தான் செவ்வாய்க்கு உரிய தெய்வம்!

    ReplyDelete
  19. //Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  20. ////Priya said...
    ஐயா,
    நான் ஜோதிடத்தில் நடை பழகி கொண்டு இருக்கும் மாணவி. ஜோதிடத்தில் கடைசி பெஞ்ச் ஆனால் உங்கள் எழுத்துகள் எனக்கு தன்னம்பிக்கை தந்தது.விருச்சிகத்தில் சந்திரன் என்ன்றும் மன உலைச்சல்தான் இப்பொது உங்கள் எழுத்துகளை படிக்க தொடங்கிய பின் மனம் strong ஆகி விட்டது...கவலை படும் மனது இல்லை .....
    பல கோடி நன்றி////

    நான் எழுதும் நோக்கமும் அதுதான். அனைவருக்கும் தன்னம்பிக்கை வரவேண்டும். 337ஐ அடிக்கடி சொல்வதற்கும் அதுதான் காரணம்!

    ReplyDelete
  21. மதிப்பிரற்குரிய ஐயா,

    வணக்கம். வர்கோத்தமம் பற்றிய பாடம் அருமை.

    எனது சந்தேகம் ஐயா,

    ராசி நிலையில் ஒருவரது ஜாதகத்தில்(உதாரணத்திற்க்கு) கடக லக்னம், ‍‍‍7ம் இடத்தில்(மகரம்) சூரிய பகவான் இருக்கிறார்.

    அதே ஜாதகத்தில், அம்ச நிலையில், லக்கனம் கும்பத்தில், 7ம் இடத்தில்(சிம்மம்) சூரிய பகவான் இருக்கிறார்.

    இந்த நிலைப்பாடு சூரிய பகவான் வர்கோத்தமம் என்று கூற முடியுமா?

    உங்கள் மாணவன்,
    தெய்வேந்திர குமார் பெப‌

    ReplyDelete
  22. ////kmr.krishnan said...
    நீச குரு நவாம்சத்திலும் நீசம் பெற்று விடுகிறார். ராசி சக்கரத்தில் 6,9க்கு
    உரிய அவர் 7ல் நீசமனார்.நவாம்சத்தில் லக்னாதிபதி,4க்கு உரியவராகி 2ல் நீசமானார்.ராசியில் 7,8க்கு உரிய சனீஸ்வ‌ரன் சிம்ம்மத்தில் சூர்யனோடு இருந்தார். நவாம்சத்தில் 2,3க்கு உரிய அவர் 9ல் சிம்மத்தில் இருந்தார்.இப்பொது 8க்கு உரிய சந்திரன் அவரோடு 9ல் சேர்ந்து விட்டார்.
    இது எப்படி இருக்கு?//////

    இது ஒன்றும் புதிதல்ல! இதைப்போல ஒவ்வொருவர் ஜாதகத்திலும் கலக்கல்கள் இருக்கும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    /////அய்யா‌ சேலம் அரசுக் க‌ல்லூரியில் நான் 65 முத‌ல் 69 வ‌ரை கெமிஸ்ட்ரி
    ப‌டித்தேன். தாங்க‌ளும் அதே ச‌ம‌ய‌த்தில் சேல‌த்தில் இருந்த‌தாக‌த் தெரிகிற‌து.
    நாம் க‌ல்லூரித் தோழ‌ர்க‌ளோ?/////

    நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் அங்கே நான் படிக்கவில்லை!
    உங்கள் கல்லூரித் தோழனாகும் வாய்ப்பு அடுத்த பிறவியில் கிடைக்கட்டும்!
    ஆறுமுகன் அருள் புரியட்டும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  23. //////Saravana said...
    அய்யா,
    என் நண்பர் ஒருவருக்கு மேஷ லக்கினத்தில் குரு வக்கிரம், வர்கோத்தமம் அடைந்து இருக்கிறார் . அவன் கேட்கிறான் , வரோகோத்தமம் பெற்றதால் 5,7,9 இடங்களுக்கு மிகவும் நல்லதா என்று . நன் உங்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன் .
    நன்றி சார்
    சரவணா//////

    மேஷ லக்கினத்திற்கு குரு 12ஆம் வீட்டிற்கும் அதிபதி. அதோடு முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்.(வக்கிரமாகியிருக்கிறார்). என்னத்தைச் சொல்வது? குருவாக இருப்பதால் நன்மைகளைச் செய்வார். கரண்டியில் கொடுக்க மாட்டார்.ஸ்பூனில் கொடுப்பார்.
    உங்களுக்குத்தான் டெக்னிக் தெரியுமே! மீண்டும் மீண்டும் ஸ்பூனை நீட்டி, கரண்டியை நிறைத்துவிடுங்கள்! அதாவது குருவை வழிபடுங்கள்!

    ReplyDelete
  24. ////ananth said...
    எனக்கு கன்னி லக்கினம் வர்கோத்தமம். என் மனைவிக்கு 7ல் இருக்கும் மகர செவ்வாய் வர்கோத்தமம்./////

    லக்கினம் வர்கோத்தமம் என்றால் மிகவும் நல்லதாயிற்றே! உங்கள் மனைவிக்கு 7ஆம் வீடு வர்கோத்தமம். அதனால்தான் நீங்கள் கணவராகக் கிடைத்துள்ளீர்கள்!

    ReplyDelete
  25. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    வர்க்கோத்தமம் (வர்க்கத்தை ஒத்த இடம் என கொள்கிறேன்) பாடம் அருமை.
    லக்னாதிபதி பன்னிரெண்டில் மறைவது சிறப்பல்ல இருந்தும் அது மற்ற சில அமைப்பால் சற்று மேம்படலாம் அப்படி இருக்க,
    அதே அமைப்பு லக்னமும் வர்க்கோத்தமம் ஆகி லக்னாத்பதியும் வர்க்கோத்மமாகியிருந்தால், லக்னாதிபதி பன்னிரெண்டில் மறைந்ததன் நிலை இன்னும் மோசமாகுமா? அல்லது வர்க்கோத்தமம் என்பதன் அடிப்படையில் பலன் கிடைக்குமா?/////

    கலந்த பலன் கிடைக்கும்! (Mixed results)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  26. ////Meena said...
    அய்யா வணக்கம். வர்கோத்தமம் பற்றி சில சந்தேகங்கள் கேட்கலாம் என்றிருந்தேன்.எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் பாடம் டபுள் டக்கர்.வாழ்க தங்கள் நல்ஆசிரியர் பணி.வளர்கமாணவர்கள் ஜோதிட அறிவு.நன்றி/////

    புரிதலுக்காக அப்படத்தைப் போட்டேன். நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. எனக்கு புதன் மட்டுமே வர்கோத்ததாமம்.....பதிவிற்கு நன்றி, தங்கள் டிசம்பரில் வெளியிடும் ஜாதக புத்தகம் எப்படி முன் பதிவு செய்வது?

    ReplyDelete
  28. /////VA P RAJAGOPAL said...
    ஐயா, மகர லக்னம் 7ம் இட சந்திரன் வர்கோத்திரம் பெற்று சூரியனுடன் நவாம்சத்தில் துலாமிலுள்ளது. ராசி சக்கிரதில் 7ல் குரு.10ல் சந்திரன் + சுக்கிரன் திருமணத்தில் அதிக தடைகள் வருகிறது. வர்கோத்திரம் பெற்றும் ஏன் தடை ஐயா.. மனஉலைச்சலாக உள்ளது. தயவுசெய்து விலக்குக்கள் ஐயா ஆறுதலாக இருக்கும்...../////

    particulars are not sufficient to give proper answer!

    ReplyDelete
  29. உள்ளேன் அய்யா. பாடம் அருமை. எனக்கு சூரியன் + சனி வர்கோத்தமம். தலைமைப் பண்பு இருந்தாலும் இப்போதுதான் அதற்கான வாயில் கண்களுக்கு தெரிகிறது..! இன்னு கடுமையாக உழைக்கவேண்டும். சனி - அதீத சகிப்புதன்மை - என் விசயத்தில் இது முற்றும் உண்மை. :)

    ReplyDelete
  30. //ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள்//
    அப்படியா அய்யா?
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது சரிதான் போலும்!

    ReplyDelete
  31. ஐயா வணக்கம்

    பத்தாமிடத்தை பற்றி பார்க்கும் பொது தசாம்சம் பார்கவேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.

    இப்போதுதான் ஜாதகத்தை பார்த்தேன் (கன்னி லக்னம் தனுசு ராசி ) ராசி சக்கரம் மற்றும் நவாம்சம், மேலும் திரேக்கோணம், சதுர்தாம்சம் சப்தாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம் எல்லாவற்றிலும் புதன் துலாமில் இருக்கிறார்.

    மேலும் திரேக்கோணம், சதுர்தாம்சம் சப்தாம்சம், தசாம்சம ஆகியவற்றிலும் தனுசில் குரு (ராசியில் தனுசில் குரு).

    இவையெல்லாம் எதை குறிக்கின்றது என்று விளக்கம் ப்ளீஸ். அல்லது மேற்சொன்ன அம்சங்கள் பற்றிய தனி பாடங்கள் பதிவிட்டாலும் சரி

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. my chandran gets Vagothamam.
    Both Rasi and Navamsam- chandran located in Mesham. Reshaba Lagnam Chandran is marakathipathi moreover
    Being situated in 12 House, and Chandra Dasa going on.
    i have mix of both good and bad
    விரையஸ்தானம் no control over money flowing out.
    Only Just because of chandran being Vagothamam, I am surviving.
    Looks like nothing good in this dasa for me.

    ReplyDelete
  33. ஐயா வண்க்கம்,

    வ்ர்கோத்தமர்ம் பாட்ம் மிக் ந்ன்ற்ர்க் இருந்தது. என்க்கு சந்தரன்,புதன்,கேது,ரர்கு
    வர்கோத்தம்ர்ம் சந்தரன் 8ல் ம்ரைந்து விட்டார் ரொம்ப் மன் உள்ச்சல் ரொம்ப புரியுஇம் சக்தி. புத்ன் வாயாடி, கேது ராகு ரொம்ப துணீச்ச்ல் தைரியத்தை
    கொடுத்துள்ள்ர்ர். ஐயா நிங்க ரொம்ப நலல் சொல்லி இருக்கிறீங்க ரொம்ப ந்ன்றி

    உஙகள் அன்பு மர்ண்வி
    சுந்தரி

    ReplyDelete
  34. உள்ளேன் ஐயா.

    எனக்கு இராசி chart-ல் 11-ல் (மீனத்தில்) இருக்கும் சூரியன் வர்கோத்தமம். மற்றும் (சிம்மத்தில்) 4-ல் சனீஸ்வரர் வர்கோத்தமம்.

    அப்பாடா.......... இந்த யோகமாவது இருக்குதே.

    ReplyDelete
  35. /////VA P RAJAGOPAL said...
    ஐயா, மகர லக்னம் 7ம் இட சந்திரன் வர்கோத்திரம் பெற்று சூரியனுடன் நவாம்சத்தில் துலாமிலுள்ளது. ராசி சக்கிரதில் 7ல் குரு.10ல் சந்திரன் + சுக்கிரன் திருமணத்தில் அதிக தடைகள் வருகிறது. வர்கோத்திரம் பெற்றும் ஏன் தடை ஐயா.. மனஉலைச்சலாக உள்ளது. தயவுசெய்து விலக்குக்கள் ஐயா ஆறுதலாக இருக்கும்...../////

    particulars are not sufficient to give proper answer!

    MY BIRTH DETAILS:
    27 NOVEMBER 1978, TIME:10:30AM PLACE:TIRUCHIRAPALLI.
    Please tell me reason sir... Thanks

    ReplyDelete
  36. Dear Sir

    Padam Arumai Iyya.

    Note: Kethu Enpadhai Type pannamal Palan mattum Solli irukkireergal.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  37. குரு வணக்கம்,

    வகுப்பு அறைக்கு வந்துவிட்டேன் ஐயா

    வர்கோத்தமம் பாடம் மிகவும் அருமை

    தாங்கள் இதுவரை நடத்திய அனைத்து பாடங்களும் அருமை


    பாடத்தின் நடையும், சுவையும், கருத்துக்களும் என்றுமே திகட்டாதவை...


    தங்களின் இறைபணி என்றும் தொடர..........

    எங்கும் நிறைந்த இறைவனை வேண்டுகிறேன்....


    என்றும் அன்புடன்
    சிறுதுளி

    ReplyDelete
  38. /////thirunarayanan said...
    வர்கோத்தமம் பாடம் அருமை.
    அசத்தலான விளக்கங்கள்.
    7ம் இடம், 10ம் இடம் தவிர,
    மற்ற இடங்களையும் உதாரணமாக‌
    பரவலாக சொன்னால்
    எல்லாஇடங்களையும் தொட்டமாதிரி
    இருக்கும்.மற்ற பாவங்களையும் புரிந்துகொண்ட‌
    மாதிரி இருக்கும்.
    நன்றி அய்யா./////

    பதிவு பெரியதாகப் போய்விடும் சாமி! அதனால்தான் இரண்டோடு விட்டேன்!

    ReplyDelete
  39. ////iyer said...
    (ஆசிரியரும் மாணவரும்)
    இருவர் ஒரே மன நிலையில் இருந்தால் அது வர்கோத்தமம் என்று
    எளிமையாக பாடம் சொல்லும்
    திறன் எங்கள் வாத்தியாருக்கு மட்டுமே உண்டு
    வாழ்க வாத்தியார் . . .
    வளர்க மாணவர்கள் . . .////

    வாழ்க அய்யர்! வளர்க அவருடைய பின்னூட்டங்கள்!:-))))

    ReplyDelete
  40. Self Realization said...
    Ayya in my rasi and in navamsa chart guru is in scorpio and moon is in leo.but rasi lagnam is libra and kumba lagnam in navamsa.Is that results vary?

    குழப்பிக் கொள்ளாதீர்கள். குரு & சந்திரன் வர்கோத்தமம் அடைந்ததோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி அடையுங்கள்.
    ராசி லக்கினத்தையும், நவாம்ச லக்கினத்தையும் அதோடு பொருத்திக் குழப்பம் அடையாதீர்கள்

    ReplyDelete
  41. /////Arul said...
    உள்ளேன் ஐயா...
    தனுஜா,ஆலாசியம்,கிருக்ஷ்ணன்-இவர்களின் சந்தேகங்களுக்கான பதில் தெளிவாக இருந்தாலே என் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்...
    நன்றி குருவே!!!////

    பதில்கள் வெளியாகியுள்ளன! உங்களுக்கு விடை கிடைத்ததா?

    ReplyDelete
  42. நான் சொல்ல வந்தது என்னவென்றால்
    வேறுவேறு பாடங்களில்
    மற்ற பாவங்களில் உதாரணம் கொடுத்தால்
    நன்றாக இருக்கும்.ஒரு பாடத்தில்
    2ம்பாவம் 3ம்பாவம் உதாரணமாக சொன்னால்
    அடுத்த பாடத்தில்11ம் பாவம் 12ம் பாவம்
    இப்படி உதாரணமாக சொல்லலாமே.
    எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான்
    அய்யா.

    ReplyDelete
  43. ////Blogger T K Arumugam said...
    ஐயா காலை வணக்கம்
    எனக்கு கன்னி லக்னம். இரண்டில் (துலாம்) புதனும் சுக்கிரனும், நவாம்சத்திலும் துலாம் - ல்

    புதன். சரிதான். வாய் கொஞ்சம் அதிகம் தான்.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. /////Blogger Theivendrakumar PP said...
    மதிப்பிரற்குரிய ஐயா,
    வணக்கம். வர்கோத்தமம் பற்றிய பாடம் அருமை.
    எனது சந்தேகம் ஐயா,
    ராசி நிலையில் ஒருவரது ஜாதகத்தில்(உதாரணத்திற்க்கு) கடக லக்னம், ‍‍‍7ம் இடத்தில்(மகரம்)

    சூரிய பகவான் இருக்கிறார்.
    அதே ஜாதகத்தில், அம்ச நிலையில், லக்கனம் கும்பத்தில், 7ம் இடத்தில்(சிம்மம்) சூரிய பகவான்

    இருக்கிறார்.
    இந்த நிலைப்பாடு சூரிய பகவான் வர்கோத்தமம் என்று கூற முடியுமா?
    உங்கள் மாணவன்,
    தெய்வேந்திர குமார் பெப‌////

    லக்கினம் தனி டிராக், அதை வைத்துக் குழப்பம் செய்யாதீர்கள். ராசி, நவாம்சம் இரண்டும் ஒரே லக்கினம் என்றால் மட்டுமே வர்கோத்தம லக்கினம் எனப்படும். அவை மாறும் போது, அவற்றையும் கிரகங்களின் நிலைமையையும் வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள்!

    ReplyDelete
  45. ////Blogger மதி said...
    எனக்கு புதன் மட்டுமே வர்கோத்தமம்.....பதிவிற்கு நன்றி, தங்கள் டிசம்பரில் வெளியிடும்

    ஜாதக புத்தகம் எப்படி முன் பதிவு செய்வது?////

    ஜோதிட நூல்களுக்கு முன் பதிவு செய்ய கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பெயர், மற்றும் முகவரியைத் தெரியப்படுத்துங்கள்!
    spvrsubbiah@gmail.com

    ReplyDelete
  46. /////Blogger RVC said...
    உள்ளேன் அய்யா. பாடம் அருமை. எனக்கு சூரியன் + சனி வர்கோத்தமம். தலைமைப் பண்பு

    இருந்தாலும் இப்போதுதான் அதற்கான வாயில் கண்களுக்கு தெரிகிறது..! இன்னு கடுமையாக

    உழைக்கவேண்டும். சனி - அதீத சகிப்புதன்மை - என் விசயத்தில் இது முற்றும் உண்மை. :)/////

    நன்றி ஆர்.வி.சி!

    ReplyDelete
  47. /////Blogger RVC said...
    //ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம்

    பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள்//
    அப்படியா அய்யா?
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது சரிதான் போலும்!////

    அதில் என்ன சந்தேகம்?

    ReplyDelete
  48. ////Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    பத்தாமிடத்தை பற்றி பார்க்கும் பொது தசாம்சம் பார்கவேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.
    இப்போதுதான் ஜாதகத்தை பார்த்தேன் (கன்னி லக்னம் தனுசு ராசி ) ராசி சக்கரம் மற்றும்

    நவாம்சம், மேலும் திரேக்கோணம், சதுர்தாம்சம் சப்தாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம்

    எல்லாவற்றிலும் புதன் துலாமில் இருக்கிறார்.
    மேலும் திரேக்கோணம், சதுர்தாம்சம் சப்தாம்சம், தசாம்சம ஆகியவற்றிலும் தனுசில் குரு

    (ராசியில் தனுசில் குரு).
    இவையெல்லாம் எதை குறிக்கின்றது என்று விளக்கம் ப்ளீஸ். அல்லது மேற்சொன்ன அம்சங்கள்

    பற்றிய தனி பாடங்கள் பதிவிட்டாலும் சரி
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    போட்டால் போயிற்று. ஏற்கனவே ஒன்று பதிந்துள்ளேன். பழைய பாடங்களில் தேடிப்பாருங்கள்!

    ReplyDelete
  49. //////Blogger singaiSuri said...
    my chandran gets Vagothamam.
    Both Rasi and Navamsam- chandran located in Mesham. Reshaba Lagnam Chandran is

    marakathipathi moreover
    Being situated in 12 House, and Chandra Dasa going on.
    i have mix of both good and bad
    விரையஸ்தானம் no control over money flowing out.
    Only Just because of chandran being Vagothamam, I am surviving.
    Looks like nothing good in this dasa for me.////

    தகவலுக்கு நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  50. /////Blogger sundari said...
    ஐயா வணக்கம்,
    வர்கோத்தமம் பாடம் மிக நன்றாக இருந்தது. எனக்கு சந்திரன்,புதன்,கேது,ராகு
    வரகோத்தமம் சந்தரன் 8ல் மறைந்து விட்டார் ரொம்ப மன உளைச்சல் ரொம்ப புரியும் சக்தி.

    புதன் வாயாடி, கேது ராகு ரொம்ப துணிச்சல் தைரியத்தை
    கொடுத்துள்ளார். ஐயா நீங்க ரொம்ப நல்லா சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி
    உஙகள் அன்பு மாணவி
    சுந்தரி////

    தட்டச்சில் நிறையப் பிழைகள். சரி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்!

    ReplyDelete
  51. /////Blogger JS said...
    உள்ளேன் ஐயா.
    எனக்கு இராசி chart-ல் 11-ல் (மீனத்தில்) இருக்கும் சூரியன் வர்கோத்தமம். மற்றும் (சிம்மத்தில்)

    4-ல் சனீஸ்வரர் வர்கோத்தமம்.
    அப்பாடா.......... இந்த யோகமாவது இருக்குதே.////

    உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் வாத்தியாருக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  52. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Padam Arumai Iyya.
    Note: Kethu Enpadhai Type pannamal Palan mattum Solli irukkireergal.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.!

    ReplyDelete
  53. /////Blogger Chiruthuli said...
    குரு வணக்கம்,
    வகுப்பு அறைக்கு வந்துவிட்டேன் ஐயா
    வர்கோத்தமம் பாடம் மிகவும் அருமை
    தாங்கள் இதுவரை நடத்திய அனைத்து பாடங்களும் அருமை
    பாடத்தின் நடையும், சுவையும், கருத்துக்களும் என்றுமே திகட்டாதவை...
    தங்களின் இறைபணி என்றும் தொடர..........
    எங்கும் நிறைந்த இறைவனை வேண்டுகிறேன்....
    என்றும் அன்புடன்
    சிறுதுளி/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. ஐயா, சிறிய கேள்வி
    ராசியில் புதன் ஆட்சி பெற்று வக்கிரம், அதோடு வர்க்கோத்தமம்.
    பலன் அண்டாவில் கிடைக்காது என்று தான் நினைக்கின்றேன்
    ஆனால் டம்லரிலாவது கிடைக்குமா, இல்லை டீ ஸ்பூனில் தானா?

    ReplyDelete
  55. ayya,
    Enaku Meena Lagnam..Varkothmama.. enna palangal ayya???

    ReplyDelete
  56. //////astroadhi said...
    அய்யா காலை வணக்கம் ,
    எனக்கு சூரியன் வர்கோத்தமம் ,,தனுசு லக்னம் 6 இல் ரிசபத்தில் சூரியன் அவர் எனக்கு பக்யாதிபதி அவர் சனி பார்வை(சனி 12 இல்) பெற்று அமர்ந்துளார்,க்ரக சேர்கை இல்லை அம்சத்திலும் அவர் ரிசபதில் அமர்ந்துள்ளார் உடன் கேது இருகிரர் துலாம் அம்ச லக்னம் பலன் தருவரா?
    அய்யா பதில் தருவர் என்று ஆன்லைனில் காத்திருகும் அன்பு மாணவன்
    நன்றி/////

    ஸ்பூனில் தருவார். ஏன் ஸ்பூனில்?
    இருப்பது ஆறில், சனியின் பார்வையில்!

    ReplyDelete
  57. //////Blogger VA P RAJAGOPAL said...
    /////VA P RAJAGOPAL said...
    ஐயா, மகர லக்னம் 7ம் இட சந்திரன் வர்கோத்திரம் பெற்று சூரியனுடன்

    நவாம்சத்தில் துலாமிலுள்ளது. ராசி சக்கிரதில் 7ல் குரு.10ல் சந்திரன் + சுக்கிரன்

    திருமணத்தில் அதிக தடைகள் வருகிறது. வர்கோத்திரம் பெற்றும் ஏன் தடை ஐயா..

    மன உளைச்சலாக உள்ளது. தயவுசெய்து விளக்குக்கள் ஐயா ஆறுதலாக

    இருக்கும்...../////
    particulars are not sufficient to give proper answer!
    MY BIRTH DETAILS:
    27 NOVEMBER 1978, TIME:10:30AM PLACE:TIRUCHIRAPALLI.
    Please tell me reason sir... Thanks/////

    31 வயது முடியப்போகிறது. மகர லக்கினம். துலாம் ராசி
    1. லக்கினதிபதி சனி 8ல்
    2. விரையாதிபதி குரு 7ல்
    3, பாக்கிய ஸ்தானத்தில் ராகு
    4. லக்கினத்தில் 26 பரல்கள்
    5. அதைவிட முக்கியமாக 7ஆம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே.
    இவை அனைத்துமே சாதகமாக இல்லாததால் திருமணம் தள்ளிக்கொண்டே
    வந்திருக்கலாம்.

    5.11.2006 முதல் 22.06 2009 வரை உங்களுக்கு குரு தசையில் சுக்கிர புத்தி நடைபெற்றுள்ளது. அப்போது உங்களுக்கு வாய்ப்புக்கள் வந்திருக்கும்.
    நீங்கள்தான் அவற்றை நழுவ விட்டிருப்பீர்கள். அத்துடன் இப்போது ஏழரைச் சனி
    வேறு ஆரம்பம்!

    7ஆம் வீட்டில் பரல்கள் குறைவாக இருப்பதால், நீங்கள் மனதில் வர்ணித்து வைத்திருக்கும் பெண் கிடைக்கமாட்டாள். கிடைக்கிற பெண்ணை, மணந்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்! வாழ்த்துக்கள்!

    இனியும், பெண்ணின் அழகு, படிப்பு, ஜாதகப் பொருத்தம் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், பழநி அப்பன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, கிடைக்கிற பெண்ணை மணந்து கொள்ளூங்கள். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான்.

    ReplyDelete
  58. ///Blogger ceylonstar said...
    ketu got missed out in the list/////

    இருக்கிறது. கேது என்று அதில் குறிப்பதற்கு மறந்து விட்டேன். இப்போது அந்தச் சொல்லைச் சேர்த்துவிட்டேன்.பாருங்கள்!சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  59. ////Blogger Aachi said...
    ஐயா, சிறிய கேள்வி
    ராசியில் புதன் ஆட்சி பெற்று வக்கிரம், அதோடு வர்க்கோத்தமம்.
    பலன் அண்டாவில் கிடைக்காது என்று தான் நினைக்கின்றேன்
    ஆனால் டம்ளரிலாவது கிடைக்குமா, இல்லை டீ ஸ்பூனில் தானா?/////

    நீங்கள் தாய்க்குலம். இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். ஆகவே டம்ளரில்
    கிடைக்கும். பழநி அப்பனை வழிபடுங்கள்.

    ReplyDelete
  60. /////Blogger Karthi said...
    ayya,
    Enaku Meena Lagnam..Varkothmama.. enna palangal ayya???////

    லக்கினம் வர்கோத்தமம் அல்லவா? கார்த்தி கீர்த்தியுடனும், நீண்ட ஆயுளடனும் இருப்பீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  61. அய்யா...

    ஒரு ஜோதிட நூலில் நீசனை நீசன் பார்கினில் குச்சும் மச்சாகும் என குறிப்பு படித்ததாக ஞாபகம்??? உண்மயா? விளக்கம் வேண்டுகிறேன்.....

    நன்றி

    ReplyDelete
  62. //Self Realization said...
    Ayya in my rasi and in navamsa chart guru is in scorpio and moon is in leo.but rasi lagnam is libra and kumba lagnam in navamsa.Is that results vary?///

    ///SP.VR. SUBBIAH said...
    குழப்பிக் கொள்ளாதீர்கள். குரு & சந்திரன் வர்கோத்தமம் அடைந்ததோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி அடையுங்கள்.
    ராசி லக்கினத்தையும், நவாம்ச லக்கினத்தையும் அதோடு பொருத்திக் குழப்பம் அடையாதீர்கள்///

    Ayya actually my question is based on the lagnam the position of the planets will vary and their results will vary if so is that varkothamam gives good results.....irrespective of lagnam

    ReplyDelete
  63. அய்யா வணக்கம்
    மேஷ லக்கணம் ரிஷப ராசி 5ல் மாந்தி
    வர்க்கோத்தமம் ஆனால் 5க்குடைய சூரியன் மேசத்தில் உச்சம் லக்கினதிபதி செவ்வாய் ரிசபத்தில்
    நவம்சம் லக்கணம் தனுசு சூரியன் நவம்சத்தில் ரிசபத்தில் பகை
    பலன் என்ன அய்யா

    ReplyDelete
  64. அய்யா
    வணக்கம். நான் எப்படி உங்கள் பதிவலைக்கு வந்தேன் என்பதே இன்னும் எனக்கு புரியவில்லை. எல்லாம் மாயை போல் உள்ளது.
    கடந்த மூன்று நாட்களில் பிதுப்பிடித்தவன் போல் உங்கள் வலைப்பதிவில் உள்ள பெரும்பாலான பாடங்களை படித்துவிட்டேன். என் ராசி சக்கரத்தை உதாரணமாக வைத்து பல நுணுக்கங்களை அறிய முடிந்தது.
    இப்படி அனைவருக்கும் ஜோதிட அறிவை கொடை அளித்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
    நான் மூன்று நாட்களுக்கு முன்பு தேடி கிடைக்காத வர்கோத்தமம் பகுதியை என் மனம் அறிந்து நேற்று பதிவு செய்து என்னை வியப்பு கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இந்த பின்னூட்டல் எழுதும் படி தூண்டி உள்ளீர்கள்.

    மானசீக குருவுக்கு என் வணக்கங்கள்.
    கணேஷ் சீனீராஜ்

    ReplyDelete
  65. Thanks.I read it.

    Balakumaran

    ReplyDelete
  66. ///Blogger Success said...
    அய்யா...
    ஒரு ஜோதிட நூலில் நீசனை நீசன் பார்கினில் குச்சும் மச்சாகும் என குறிப்பு படித்ததாக ஞாபகம்??? உண்மயா? விளக்கம் வேண்டுகிறேன்.....
    நன்றி////

    உச்சனை உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான் என்று சொல்வார்கள்.
    அவைகள் எல்லாம் வழக்குச் சொல்லடைகள். உண்மைக்குப் புறம்பானவை!

    ReplyDelete
  67. ////Blogger Self Realization said...
    //Self Realization said...
    Ayya in my rasi and in navamsa chart guru is in scorpio and moon is in leo.but rasi lagnam is libra and kumba lagnam in navamsa.Is that results vary?///
    ///SP.VR. SUBBIAH said...
    குழப்பிக் கொள்ளாதீர்கள். குரு & சந்திரன் வர்கோத்தமம் அடைந்ததோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி அடையுங்கள்.
    ராசி லக்கினத்தையும், நவாம்ச லக்கினத்தையும் அதோடு பொருத்திக் குழப்பம் அடையாதீர்கள்///
    Ayya actually my question is based on the lagnam the position of the planets will vary and their results will vary if so is that varkothamam gives good results.....irrespective of lagnam//////

    ராசியிலும் அம்சத்திலும் லக்கினம் மாறுபட்டிருந்தாலும், கிரகத்திற்கு உரிய வர்கோத்தமம் வேலை செய்யும். பலன் கிடைக்கும்.போதுமா?

    ReplyDelete
  68. /////Blogger S.SETHU RAMAN said...
    அய்யா வணக்கம்
    மேஷ லக்கணம் ரிஷப ராசி 5ல் மாந்தி
    வர்க்கோத்தமம் ஆனால் 5க்குடைய சூரியன் மேசத்தில் உச்சம் லக்கினதிபதி செவ்வாய் ரிசபத்தில்
    நவம்சம் லக்கணம் தனுசு சூரியன் நவம்சத்தில் ரிசபத்தில் பகை
    பலன் என்ன அய்யா/////

    எல்லாவற்றையும் வைத்துக் குழப்புகிறீர்களே? ask a specific question with a specific planet!

    ReplyDelete
  69. Blogger GKS said...
    அய்யா
    வணக்கம். நான் எப்படி உங்கள் பதிவலைக்கு வந்தேன் என்பதே இன்னும் எனக்கு புரியவில்லை. எல்லாம் மாயை போல் உள்ளது.
    கடந்த மூன்று நாட்களில் பித்துப்பிடித்தவன் போல் உங்கள் வலைப்பதிவில் உள்ள பெரும்பாலான பாடங்களை படித்துவிட்டேன். என் ராசி சக்கரத்தை உதாரணமாக வைத்து பல நுணுக்கங்களை அறிய முடிந்தது.
    இப்படி அனைவருக்கும் ஜோதிட அறிவை கொடை அளித்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
    நான் மூன்று நாட்களுக்கு முன்பு தேடி கிடைக்காத வர்கோத்தமம் பகுதியை என் மனம் அறிந்து நேற்று பதிவு செய்து என்னை வியப்பு கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இந்த பின்னூட்டல் எழுதும் படி தூண்டி உள்ளீர்கள்.
    மானசீக குருவுக்கு என் வணக்கங்கள்.
    கணேஷ் சீனீராஜ்/////

    மேலும் பித்துப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளூங்கள்:-)))))

    ReplyDelete
  70. Ketu in 12th house (Vrichikam - uchcham). In Navamsam also Ketu in Vrichikam so Vargottamam. Is it beneficial for Moksham? Regards, Sekhar

    ReplyDelete
  71. ////nc sekhar said...
    Ketu in 12th house (Vrichikam - uchcham). In Navamsam also Ketu in Vrichikam so Vargottamam. Is it beneficial for Moksham? Regards, Sekhar////

    ஆமாம்!

    ReplyDelete
  72. மதிப்பிற்குரிய ஐயா,

    வர்க்கோத்தமம் பாடத்தில் மேலும் ஒரு சந்தேகம் ஐயா,

    செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு 2 வீடுகள் உள்ளன.

    ராசி நிலையில் ஒருவருக்கு (கடக லக்னம்) மூன்றாம் வீட்டில், புதன் பகவான் வீட்டில்(கன்னி) குரு இருக்கிறார்.

    ஆனால், அம்ச நிலையில்(கும்ப ராசி) மிதுனம் வீட்டில், புதன் பகவான் வீட்டில் குரு இருக்கிறார்.

    இரண்டு வீடுகளும் புதன் பஹவானுடையது, ஆனால் வெவ்வேறு ராசிகள்.

    இந்த நிலை குரு வர்கோத்தமம் என்று கூற முடியுமா?


    உங்கள் மாணவன்,
    தெய்வேந்திர குமார் PP

    ReplyDelete
  73. ////Theivendrakumar PP said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    வர்க்கோத்தமம் பாடத்தில் மேலும் ஒரு சந்தேகம் ஐயா,
    செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு 2 வீடுகள் உள்ளன.
    ராசி நிலையில் ஒருவருக்கு (கடக லக்னம்) மூன்றாம் வீட்டில், புதன் பகவான் வீட்டில்(கன்னி) குரு இருக்கிறார்.
    ஆனால், அம்ச நிலையில்(கும்ப ராசி) மிதுனம் வீட்டில், புதன் பகவான் வீட்டில் குரு இருக்கிறார்.
    இரண்டு வீடுகளும் புதன் பஹவானுடையது, ஆனால் வெவ்வேறு ராசிகள்.
    இந்த நிலை குரு வர்கோத்தமம் என்று கூற முடியுமா?
    உங்கள் மாணவன்,
    தெய்வேந்திர குமார் PP////

    கூறமுடியாது! இரண்டு இடங்களிலும் அதே ராசியில் இருக்க வேண்டும் கன்னி என்றால் இரண்டு இடங்களிலும் கன்னி. துலாம் என்றால் இரண்டு இடங்களிலும்
    துலாம்!

    ReplyDelete
  74. அய்யா

    என்க்கு துலா லக்கினம் வர்கோத்தம விவரம்

    லக்கினம் வர்கோத்தமம்
    செவ்வாய் மகரம்(ராசி மற்றும் நவாம்சம்) ஆனால் அவர் சூரியனடன் அஸ்தங்கம்.

    சூரியன் மகரம் (ராசி மற்றும் நவாம்சம்) அவர் சனியுடன் பரிவர்த்தனை

    செவ்வாய் அஸ்தங்கம் அடைந்ததால் வர்கோத்தம பலன்களுக்கு பங்கம் வருமா?

    ReplyDelete
  75. Slakshmanan said...
    அய்யா
    என்க்கு துலா லக்கினம் வர்கோத்தம விவரம்
    லக்கினம் வர்கோத்தமம்
    செவ்வாய் மகரம்(ராசி மற்றும் நவாம்சம்) ஆனால் அவர் சூரியனடன் அஸ்தங்கம்.
    சூரியன் மகரம் (ராசி மற்றும் நவாம்சம்) அவர் சனியுடன் பரிவர்த்தனை
    செவ்வாய் அஸ்தங்கம் அடைந்ததால் வர்கோத்தம பலன்களுக்கு பங்கம் வருமா?///

    அஸ்தமனம் பெற்ற கிரகங்களால் பயன் இருக்காது!

    ReplyDelete
  76. ஐயா மாந்தி க்கு வர்க்கோதமம் இல்லையா....

    ReplyDelete
  77. ஐயா வணக்கம்,
    வர்கோத்தமம் பெற்ற ராகு துணிச்சல்,கேது ஞானம்,சனி பொறுமை,சகிப்பு தன்மை என்றால் வர்கோத்தமம் பெறற மாந்தியின் குணம் என்ன ஐயா தயவு செய்து சொல்லுங்கள் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
    சுந்தரி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com