மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.10.12

Astrology புத்தி எத்தனை வகையடா?

 Astrology புத்தி எத்தனை வகையடா?

தேதி 30.10.2012 செவ்வாய்க் கிழமை
---------------------------------------
புத்தி எப்படி வகைப்படும்?  புத்தி ஒன்றுதானே என்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்

இன்டெலிஜென்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லும் புத்திசாலித்தனதைச் சொல்ல விழைகிறேன்!

I.Q. stands for intelligence quotient, and it is supposed to be a measurement of how naturally intelligent a person is. Intelligence tests are not designed to show how much a person has learned; rather, they are meant to measure a person's ability to learn. This ability is something that doesn't change much as a person grows older, even though he or she may pick up a lot of new facts and skills. Scientists think that each person is born with a certain amount of intelligence or mental ability. Still, how well a person uses his or her natural intelligence has a lot to do with the person's desire to learn and the learning environment in which he or she grows up.quotient means A result obtained by dividing one quantity by another.A degree or amount of a specified quality or characteristic: "an increase in our cynicism quotient".

புத்திசாலித்தனம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அது பிறவியிலேயே உண்டாவது. படிப்பினாலோ அல்லது பயிற்சியினாலேயோ உண்டாக்க முடியாதது!

புத்தி மூன்று வகைப்படும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டுப்போயிருக்கிறார்கள்

1. கற்பூரப் புத்தி
2. கரிப் புத்தி
3. வாழைமட்டைப் புத்தி

கற்பூரம் நெருப்பைக் காட்டியவுடன் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ அப்படி எதையும், பார்த்தால், படித்தால், கேட்டால் சட்டென்று பிடித்துக் கொள்வான்.
அவன்தான் கற்பூர புத்திக்காரன். அதுதான் புத்தியில் முதல் நிலை!

கரியின் மேல் நெருப்பை வைத்து ஊத ஊதத்தான் அது மெதுவாகப் பற்றிக் கொள்ளும். கரிப் புத்திக்காரனும் அப்படித்தான், ஒரு முறைக்கு இருமுறை அல்லது  பல முறை சொல்லச் சொல்ல அல்லது படிக்கப் படிக்கத்தான் விஷயத்தைக் கிரகித்துக்கொள்வான். அதாவது அவன் மண்டையில் ஏறும். புத்தியில் அது இரண்டாவது நிலை!

வாழை மட்டையின் மேல் என்ன செய்தாலும் நெருப்பைப் பற்ற வைக்க முடியாது. அதுப்போல வாழைமட்டைப் புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. அல்லது விளங்காது. படித்தாலும் அப்படித்தான். கேட்டாலும் அப்படித்தான். அது மூன்றாவது நிலை
---------------------------------------------------------------------------------------------------
இவை ஜாதகத்தில் தெரியுமா?

ஏன் தெரியாது?

ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும்! வலிமையாக இருக்க வேண்டும். உச்சமாக அல்லது ஆட்சி பலத்துடன் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்! அது முதல் நிலை!

மேற்சொன்ன நிலைப் பாட்டில் (அதாவது உச்சமாகவோ அல்லது ஆட்சி பலத்துடனோ) இருந்தும், 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் புதன் அமர்ந்திருந்தால், அது 2ஆம் நிலை!

மேற் சொன்ன நிலைப் பாட்டில் இல்லாமல் அதாவது உச்சம், சொந்த வீடு பலம் எதுவும் இல்லாமல் நேரடியாக 6 அல்லது எட்டு அல்லது 12ஆம் வீடுகளில் புதன் இருந்தால் அது மூன்றாம் நிலை. புத்திக் குறைவு! (இது பொது விதி. இந்த நிலையில் குருவின் பார்வையைப் புதன் பெற்றால், இந்த விதி கேன்சலாகிவிடும். ஜாதகனுக்குக் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். மட்டை காய்ந்து சருகாகி இருக்கும்)
----------------------------------------------------------------------------------------------------
இதை உங்களுக்காக எழுதவில்லை. நம் வகுப்பறைக்கு வரும் அனைவருமே புத்திசாலிகள் என்பது தெரியும். இதை நீங்கள் மற்ற ஜாதகங்களைப் பரிசீலிக்கும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று இங்கே கொடுத்துள்ளேன்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 1.11.2012  வியாழக் கிழமையன்று நடைபெறும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.10.12

Astrology: DST (Daylight saving time) என்றால் என்னவென்று தெரியுமா?

Astrology: DST (Daylight saving time) என்றால் என்னவென்று தெரியுமா?

கடிகாரத்தில் நேரத்தை அதிகப்படுத்தி, பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாகச் செய்ததால் ஏற்பட்ட குழப்பம்!

1.9.1941 ஆம் ஆண்டு முதல் 15.10.1945ஆம் ஆண்டு வரை, இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் உலக நாடுகள் அனைத்தும் பகல் நேரத்தை அதிகப் படுத்துவதற்காக கடிகாரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துக் கொண்டு விட்டார்கள். வெள்ளைக்காரர்கள்தான் அதைச் செய்தது.

பிறகு அது இல்லை என்று சொல்ல முடியாது. இன்னும் பல நாடுகளில் குளிர்காலங்களில் அதுபோன்று பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துப் பிறகு கோடை காலங்களில் பழைய கண்க்கிற்குத் திரும்பி வந்து
விடுவார்கள்.. அதாவது தேசம் முழுவதும் ஒரு மணி நேரத்தை மீண்டும் சரி செய்து பழைய நிலைக்குத் திரும்பி  விடுவார்கள்

இந்தியாவும் காரண காரியமில்லாமல் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில், அதற்கு உட்படுத்தப்பெற்றது. அச்சமயம் நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தால், நம்மைக் கேட்காமலே நம் நாட்டையும் அதற்கு
உட்படுத்தி, அதைச் செய்து விட்டார்கள்

அதாவது இந்தியாவில் காலை ஆறு மணி என்னும் போது இந்தியக் கடிகாரங்கள் எல்லாம் ஏழு மணி என்று காட்டும்

இந்திய நேரம் க்ரீன்விச் நேரத்தில் இருந்து + 5.30 மணி நேரம் என்பது அனைவருக்கும் தெரியும்.

லண்டனில் உள்ள விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தில், போட்டி விளையாட்டு துவங்கி, ஸ்டெஃபி கிராஃப் அல்லது வேறு ஒரு வீராங்கனை டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் பிடித்துத் தூக்கி முதல் சர்வீஸைப் போட்டாரென்றால், அப்போது அங்கே மதியம் 3 மணி. அதை இங்கேயிருந்து நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் போது நம் கடிகாரம் இரவு மணி 8:30 என்று காட்டும். அதுதான் இன்றும் நடப்பில் (நடைமுறையில்) உள்ளது.

IST is the Indian Standard time at 82.30 degree east longitude and is 5.30 minutes ahead of Greenwhich mean time

அதனால் என்ன கோளாறு? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

யுத்தகாலத்தில் அவ்வாறு கூட்டி வைத்ததால், அந்த சம்யத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்தைக் கழித்துக் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் செய்தார்கள். அதுதான் குறிப்பிட்ட அந்தக் குழந்தையின் பிறந்த நேரம்.

அதற்குப் பிறகு உள்ளூர் நேரத்தை வேறு கழிக்க வேண்டும். அந்த சமயத்தில் கோவையில் பிறந்த குழந்தைக்கு IST பிறந்த நேரம் மைனஸ் 13 நிமிடங்கள். ISTக்கு 13 நிமிடங்கள் தூரத்தில் பின்னால் இருக்கிறது கோவை. அதை
மனதில் வையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் கழிக்க வேண்டும்

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அது சுத்தமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை.

ஆகவே சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை! உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஜாதகத்தைக் கணிக்கும்போது மட்டும் அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை இன்று உங்களுக்கு நான் அறியத் தந்திருக்கிறேன்!

இது மேல்நிலை வகுப்பிற்கென்று  (http://classroom2012.in/) எழுதப் பெற்ற பாடங்களில் ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகங்களாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------
மேலதிகத் தகவல்: விக்கி காமாட்சியிடம் அது பற்றி உள்ள தகவல்களைப் படித்துப் பார்ப்பதற்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். அவசியம் படித்துப் பாருங்கள்.

India
http://en.wikipedia.org/wiki/Daylight_saving_time_by_region_and_country#India

The Republic of India used Daylight Saving Time (DST) briefly during wartime.[second world war] Currently, India does not observe DST.

http://en.wikipedia.org/wiki/Daylight_saving_time

Daylight saving time (DST)—also summer time in several countries in British English,
and European official terminology (see Terminology)—is the practice of advancing
clocks so that evenings have more daylight and mornings have less. Typically clocks
are adjusted forward one hour near the start of spring and are adjusted backward
in autumn.

Why is day light saving time not suitable for India?

"India’s location on the lower latitudes (8 N–35 N)makes DST unattractive for India.
The longest day of the year is the summer solstice, whereas theshortest day is the
winter solstice. The length ofthe day varies from 11.5 hours to 13 hours through the
year in the southern city of Chennai. In Srina-gar, it varies from 10.5 hours to 14
hours. Clearly, all of India has plenty of sunlight year round. Even in the
northernmost city, Srinagar, the sun rises at approximately 7:30 AM and sets at
approximately 5:30 PM in the dark days of December.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.10.12

தர்மம் தலை காக்கும்!


இசைஞானி பாடிய இனிமையான பாடல்
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
our sincere thanks to person who uploaded this video clipping



+++++++++++++++++++++++++++++++++++++++++
“தர்மம் தலை காக்கும்: தக்க சமயத்தில் உயிர் காக்கும்”

மாணவக் கண்மணிகளுக்கு,

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே. முத்துராமன் அவர்களின் கடிதத்தை உங்கள் பார்வைக்கு அப்படியே கொடுத்துள்ளேன்
படித்துப் பார்த்து உங்களால் முடிந்த பொருள் உதவியைச் செய்யுங்கள்.

நமது வகுப்பறைக்குச் சராசரியாகத் தினமும் 4,000 பேர்கள் வருகிறார்கள். அவர்களில் 10 சதவிகதம் பேர்களாவது நன்கொடை கொடுத்து ஒரு நல்ல செயலுக்கு, ஒரு கிராமத்துக் குழந்தைகள், இலவசமாகக் கணினி பயிலுவதற்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பணம் அளவல்ல. உங்களால் முடிந்த தொகையை, அவருக்கு அனுப்பலாம். அவரின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி அவரின் கடிதத்தில் உள்ளது.

 ரூபாய் 100, அல்லது 200, அல்லது 500, அல்லது ரூ.1000 என்று உங்களால் முடிந்த பணத்தை அவர் கொடுக்கும் வங்கி எண்ணிற்கு (Through NEFT) அனுப்பி வைக்கலாம் அல்லது மணியார்டர் மூலம் அனுப்பிவைக்கலாம். சராசரியாக தலைக்கு ரூ.250 அனுப்பினால் கூட அது லட்சத்தைத் தொடும். அதுதான் என் எதிர்பார்ப்பும். வகுப்பறையின் சார்பில் அதை, சேரும் அந்தப் பணத்தில் அந்தப்  பளிளிக்கு வேண்டிய கணினிகளை (சுமார் 3 அல்லது 4 கணினிகளை) வாங்கிக்கொடுத்து விடுவார். பண உதவி செய்தவர்களின் பெயரை நீங்கள் விரும்பினால் ஒரு நாள் வகுப்பறையில் தனிப் பதிவாக வலை ஏற்றுகிறேன்

ராமபிரானுக்கு அணில் உதவி செய்ததைப்போல, உங்களால் முடிந்த தொகையை அந்த மடத்தில் உள்ள பள்ளிக்குக் கொடுக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் பணம், உங்கள் தர்மக் கணக்கில் வரவாகும். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளில் சொன்னால், “தர்மம் தலை காக்கும்: தக்க சமயத்தில் உயிர் காக்கும்” அதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்.

 ----------------------------------------------------
இடைச்சேர்க்கை:

ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நற்பணிக்குக் கொடை கொடுத்தவர்களின் பெயர் மட்டுமே வலை ஏற்றப்படும். தொகையைப் பற்றிய் (கொடுத்த பணத்தைப் பற்றிய விவரம்) குறிப்பு இருக்காது. அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே!

திரு.கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களுக்கு நீங்கள் மின்னஞ்சலில் செய்தி அனுப்பினால் (அதாவது கொடுக்கும் விருப்பம் பற்றிய செய்தியை எழுதினால்) அவர் உங்களுக்கு தனது வங்கிக் கணக்கு விவரத்தையும், மணியார்டர் அனுப்ப விரும்புவர்களுக்கு தனது வீட்டு முகவரியையும் தெரியப்படுத்துவார்!

அன்புடன்
வாத்தியார்


++++++++++++++++++++++++++++
Over to K.M.R.K's letter dated 23.10.2012

அன்புள்ளம் கொண்டவர்களே,

ஒரு சில மாத‌ங்களுக்கு முன்னால் பின் மதிய நேரத்தில் கணினி முன் அமர்ந்து 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்று'க் கொண்டு இருந்தேன்.அப்போது என் கை பேசி அழைத்தது. திறந்து நான் 'ஹலோ' சொல்லும் முன்னரே 'ஹரி ஓம்' என்று மறு முனையில் இருந்து குரல் கேட்டது.அட! வித்தியாசமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து அமர்ந்தேன்.

மறுமுனையில் இருந்து "நான் சுவரூபானந்தா பேசுகிறேன். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலிருந்து சன்னியாசம் பெற்றுக் கொண்ட‌ துறவி."

ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயரைக் காதால் கேட்டவுடனேயே மனம் கனிந்துவிட்டது.திருப்பராய்த்துறை தபோவனம் என்றவுடன் 'பெரியசுவாமி' என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படட ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரைப் பற்றிய நினைவு ஓடியது.அடியேன் சிறுவனாக இருந்தபோது பெரியசுவாமிகளின் முன்னால் விவேகானந்தரின் சிகாகோ உரையைப் பேசிக் காண்பித்துப் பாராட்டைப் பெற்றது நினைவுக்கு வந்தது.பெரிய சுவாமிகள்தான் தென் தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தை வளர்த்து எடுத்தவர். 7 கல்லூரிகள் 70 பள்ளிகள் அவருடைய ஊக்கத்தால் தோற்றுவிக்கப்பட்டன.

அவருடைய ஸ்ரீம‌த்பகவத்கீதை உரை நூலும், திருவாச‌கம் மற்றும் தாயுமானவர் உரைக்கோவையும் இல்லாத இல்லங்கள், பள்ளிகள், நூலகங்கள் இல்லை என்ற அளவு லட்சக்கணக்கில் மலிவு விலையில் தபோவன‌ம் வெளியிட்டுள்ளது. தினசரித் தியானம் என்ற நூலும் ஒரு நாளைக்கு ஓர் நற்சிந்தனை என்ற அளவில் கையடக்கமாகப் பலரும் எப்போதும் வைத்துள்ளனர்.

"உங்களுடைய கைபேசி எண்ணை தஞ்சை நாகராஜன் என்ற அனபர் எனக்கு அளித்தார். தங்களைப் பற்றியும் உயர்வாகக் கூறினார்"

என் சிந்தனைகளுக்குக் கடிவாளம் போடுவதுபோல மறுமுனையில் இருந்து சுவரூபானந்தரின் குரல் ஒலித்தது.

தஞ்சை நாகராஜன்! எனக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்.ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் எளிய பணி செய்யும் ஊழியர்.  குணத்திலும், சேவையிலும், பழகுவதிலும், ஆன்மீகத்திலும் முதல் த‌ரமானவர்.சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அவரிடம் நல்லதொரு நூலகம் உள்ளது.அத்தனை நூல்களையும் எழுத்தெண்ணிப் படித்தவர்.ஆனால் வெளியில் தன் அறிவைப் பறை சாற்றமாட்டார். ஆன்மீகப் புத்தகங்கள் பலவற்றையும் அவரிடமிருந்தே நான் வாங்கி வாசித்துள்ளேன். திருமண பந்தத்தில் கட்டுப்படாமல் எந்த பொதுச் சேவையிலும் தன்னால் ஆன உடல் உழைப்பை நல்கக் கூடியவர். 'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு' என்ற குற‌ளுக்கு நாகராஜன் ஒரு முன்னுதாரணம்.

"நான் இப்போது துறையூரிலிருந்து எட்டுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையத்தில் ஸ்ரீலஸ்ரீ பிரமானந்த சுவாமிகள் மடாலயத்தில் உள்ளேன். இங்கு தேனி சித்பவானந்தர் ஆசிரமம் மற்றும் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடம் அதிபதி ஸ்ரீமத் சுவாமி ஓங்கரானந்தர் அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ண வேதாந்த ஆசிரமம் அமைத்துக்கொள்ள இந்த மடாலயத்தை வழங்கியுள்ளார்கள்"

ஸ்ரீ சுவாமி ஓங்காரானந்தர்! கடந்த 25 ஆன்டுகளுக்கும் மேலாக பகவத் கீதையையும், வேதாந்த பாடங்களையும் பலருக்கும் அழகிய தமிழில் போதிக்கும் மகான்.

"நீங்கள் இங்கு ஒருமுறை வரவேண்டும்.இங்கே ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பணிகளைத் துவங்கிச் சேவைகள் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை. இங்கே வியாழக்கிழமை தோறும் சத்சங்கம் நடக்கும் அந்த சமயம் வாருங்கள் இரவு தங்கி கலந்தாலோச‌னை செய்வோம்." இது மறுமுனையில் சுவாமி சுவரூபானந்தர்.

சரி என்று ஒப்புக் கொண்டு அடுத்த வியாழன் அன்று அந்த ஆசிரமத்துக்கு சரியாக மாலை ஆறுமணிக்குச்  சென்று சேர்ந்தேன்.

நான் சென்று சேர்ந்த சமயம் சுவாமி சுவரூபானந்தர் சத்சங்கம் துவங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு தயாராகக் காத்திருந்தார்கள். அந்தக் கிரமத்து மகளிரும், சிறுவர், சிறுமிகளும் ஒரு சில பெரியவர்களும் ஒவ்வொருவராக வந்து குழுமினார்கள். அவர் அவர்களுக்குத் தெரிந்த பக்திப்பாடல், நாமாவளிகள் எல்லாம் பாடினார்கள். இறுதியில் சுவாமிகளின் சிறிய உரையுடன் வழிபாடு முடிந்தது.

வழிபாடு ஒரு சிறிய கோவிலின் முன்னர் நடந்த்தது. அக்கோவிலின் உள்ள சிவலிங்கத்திற்குப் பெயர் உண்டா என்று வினவினேன்.

'இது ஸ்ரீலஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகளின் அதிஷ்டான ஜீவசமாதிக் கோவில்' என்று விளக்கினார் சுவரூபான‌ந்தர் ஜீவ சமாதியில் இருக்கும் சுவாமிகளின் வரலாறு என்ன? சுருக்கமாகப் பார்ப்போம்.

ஸ்ரீபிரமானந்த சுவாமிகள் 1867‍‍‍ல் தஞ்சையில் பிறந்து வளர்ந்து, இங்கே துறையூர் சிக்கதம்பூர் பாளையத்தில் 1921ல் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். சுவாமிகளின் சிறப்பு என்னவெனில் அவர்கள் வேத வேதாந்தங்களையும், தத்துவங்களையும் நன்றாகக் கற்றுணர்ந்து அதனை பிறருக்கும் உபதேசங்களாகக் கொடுக்கும் ஆற்றலுடையவர்களாக இருந்துள்ளார்கள். தமிழ்,சமஸ்கிருதம்,மராட்டி, தெலுங்கு, வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்யம் உடையவராக இருந்துள்ளார்கள். தஞ்சை வடக்கு ராஜவீதியில் நூலகமும், அச்சுக்கூடமும் நிறுவி நாற்பதுக்கும் மேற்பட்ட வேதாந்த நூல்களுக்கு தமிழில் விளக்கம் அளித்து நூல்களாக வெளியிட்டுள்ளார்கள்.அவ‌ர்கள் தமிழில் மொழி பெயர்த்து விளக்கவுரை எழுதிய மிகப் பெரிய நூல் 'பஞ்சதசி' இது சிருங்கேரி ஸ்ரீவித்யாரண்யர் சமஸ்கிருதத்தில் ஆக்கிய நூல். பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்நூல் திருக்கோவிலூர், ஸ்ரீஞானாந‌ந்த தபோவனத்தாரால்  இரண்டுபாகங்களாக வெளியிடப்ப‌ட்டுள்ளது.

அன்று இரவு அந்த ஜீவ சமாதி கோவில் உள்ள இடத்தில் தங்கினேன். நீண்ட நேரம் சுவரூபானந்தருடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நள்ளிரவுக்குப்பின் கண்ணயர்ந்தேன். கனவுத்தோற்றமாக ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் தோன்றியது.சிறிது நேரம் கழித்து சுவாமி சிதபவாநந்தர் தோற்றம் தெரிந்தது.மீண்டும் ஜடாமுடியுடன் கூடிய ஒரு சாது நடமாடுவது போன்ற‌ தோற்றம் கனவில் வந்தது. காலையில் சமாதிக்கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கே சுவாமி பிரம்மானந்தரின் உருவப் படம் மாட்டியிருந்தது. அது நான் கனவில் கண்ட அதே உருவமே.ஆச்சரியத்தில் அசைவற்று நின்றேன். எனக்கு கனவில் வந்து ஏதோ செய்தியை சொல்வது போலத் தோன்றியது.

சுவாமி சுவரூபானந்தருடன் கலந்தாலோசித்தேன். ஸ்ரீ ராமகிருஷ்ண சம்பிரதாயப்படி ஏதாவது சமுதாயப்பணியையும், ஆன்மீகப்பணியுடன் கலந்து செய்ய வேண்டும்; என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம். பல யோசனைகளுடன் மறு நாள் விடை பெற்று வந்து விட்டேன்.

ஒரு மகான் வாழ்ந்த இடம். அவருடைய ஜீவ சமாதி இருக்கும் இடம். அத‌னைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் அந்த நிறுவனத்தால் சமூகத்திற்கும் ஏதாவது பயன் இருக்க வேண்டும். என்ன செய்யலாம்?

என் குணம் ஏதாவது ஒரு செய்தி மனதில் விழுந்துவிட்டால் அதைப்பற்றியே தொடர்ந்து சிந்திப்பது. அடுத்து என்ன என்ன என்று மனம்   கேட்டது. கைபேசியில் சுவாமிஜியுடனும் நண்பர்களுடனும் பேசினேன். எனது நெடுநாளைய நண்பர்  திரு முரளீதரன் ‘சேவாலயா’ என்ற தொண்டு நிறுவனத்தைக் கால் நூற்றாண்டாக நடத்தி வருபவர்.(சேவாலயாவைப் பற்றி நம் வகுப்பறையில் 11 ஏப்ரல் 2011 ல் கட்டுரை எழுதியுள்ளேன்) அவரை சென்னையில் இருந்து  அழைத்து வந்து இரண்டு நாட்கள் சிக்கத்தம்பூர் மடாலயத்தில்  தங்க வைத்து ஆலோசனை கலந்தோம். இறுதியாக ஒரு இலவச கணினிப்பயிற்சி மையத்தைத் துவங்குவது என்ற முடிவுக்கு வந்தோம்.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 12 ஜனவரி 2013 அன்று துவங்க உள்ளன. அதனை ஒட்டி இந்த சேவையைத் துவங்க உள்ளோம்.

குக்கிராமமான சிக்கத்தம்பூர் பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவர்கள்  இளைஞர்களுக்குப் பயன்படும் வண்ணம் இந்த மையம் நிறுவப்பட‌ வேண்டும்.

அங்கே இருக்கும் கட்டிடங்களைப் பழுது பார்த்தல், மின்சார இணைப்பு, இன்வர்டர், கணினிகள், மேசை நாற்காலிகள்,  தொடர் செலவுகள் என்று ரூபாய் பத்துலட்சம் மதிப்பீடு செய்துள்ளோம்.

என் வகையாக 4 கணினிகள், ஐந்து மேசைகள், பத்து நாற்காலிகள்  ஆகியவற்றுக்கான தொகையை வசூலித்தோ அல்லது என் சொந்தப் பணத்திலிருந்தோ தருகின்றேன் என்று சுவரூபானந்தருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்.இது ரூ.1,30,000/= வரை ஆகலாம்.அதற்காக நன்கொடை வேண்டி என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள் வைத்து வருகிறேன். அந்த வகையில் வாத்தியாரிடமும் வந்த போது, அவர்கள் வழக்கமான பெருந்தன்மையுடன் வகுப்பறையில் கட்டுரை வெளியிடுகிறேன் என்று ஆதரவளித்தார்கள்.

இக்கட்டுரையைக் கண்ணுறும்  வகுப்பறை நண்பர்கள் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக அளித்து நல்லதொரு கல்விச் சேவையை துவங்க உத‌விக்கரம் நீட்ட வேண்டும் என்ற்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

உதவ முன் வரும் நண்பர்கள் என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
வகுப்பறை மூலமாகக் கிடைக்கும் நன்கொடைகளைப் பற்றிய விவரங்களை வாத்தியார் அனுமதித்தால், நன்கொடயாளர்களும் சம்மதித்தால் அவர்களுடைய பெயர்களுடன் பட்டியல் வெளியிடலாம்.

ஒரு நற்செயலுக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ரூபாய் உங்களுக்கு பத்து ரூபாயாகப் பெருகித் திரும்பக் கிடைக்கும். எனவே தாராளமாக தங்களால் இயன்றதை அளியுங்கள். வாழ்த்துக்களுடனும் நன்றியுடனும் பெற்று கொண்டு  ரசீது அனுப்பித்தருகிறேன். புண்ணியத்தில் அனைவருக்கும் பங்களிக்கவே இந்த வேண்டுகோள்.

என் மின் அஞ்சல் முகவரி: kmrk1949@gmail.com

வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!!
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

Swami Chithbavanawthar
Brahmananda Bhavanam
Samthi, Temple and Classrooms
Inside the classroom, awaiting for repairs
Swami Omkarananda

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.10.12

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2


 
Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2

22.10.2012 அன்று எழுதிய பாடத்தின் தொடர்ச்சி

ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு முதன் முதலில் சொல்லித்தரும் பாடம் இதுதான்:

ஜோதிடர், ஜாதகத்தைப் பார்த்து இப்படி நடக்கலாம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் (He only can indicate what will take place) எந்தப் பலனையும் அறுதியிட்டு இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக் கூடாது. (He should not certainly say what will  happen)

அதைச் சொல்வதற்கும் அல்லது அதை நடத்திக் காட்டுவதற்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நம்மைப் படைத்தவர். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்து 70 அல்லது 75 சதவிகித்மதான் என்ன நடக்கலாம் என்று சொல்லலாம். பூர்வ புண்ணியத்தின் பலனைக் கணிக்கும் அல்லது கணிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.

விதியை அல்லது விதிக்கப் பெற்றதைத் த்டுத்து நிறுத்த முடியுமா? யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவரின் வாக்கையும் மீறி அது நடந்திருக்கும்!

கணவனைப் பிரிந்து வாழ வேண்டும் என்பது அவளுடைய விதி என்றால், அவளுக்குத் திருமணம் நடக்கும். ஆனால் விதி அவளைப் பிரித்துக்கொண்டு வந்து விடும். செல்வம் தொலைந்து போக வேண்டும் என்றால், எவ்வளவுதான் வேலி போட்டுக் காப்பாற்றினாலும், அது தொலைந்து போகும். நிலைக்காது.

பூர்வ புண்ணியத்தால் நடக்க வேண்டிய நல்லது நடக்கும். கெட வேண்டியது கெடும்!

அதனால்தான் சில சமயம் ஜோதிடர் சொல்வது நடக்காமல் பொய்த்துப் போய் விடுகிறது!.

மகேந்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்த சில தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போய்விடும். மகேந்திரப் பொருத்தம் இல்லாத தம்பதியர் சிலருக்கு திருமணமான அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும். இதெல்லாம் ஜோதிட வினோதங்கள்

எத்தனைதான் ஜாதகம் பார்த்து, அதன்படி நடந்தாலும், அல்லது எச்சரிக்கையாக இருந்தாலும் வருவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப் பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம். சேர்க்கும் பாக்கியம் உள்ளவன் சேர்ப்பதில்தான் முனைப்பாக இருப்பான். மற்றது எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான்.

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient to avert it, It will itself be with us (before the thought)

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான். அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power! தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.

ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்!

ஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள். அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்

ஜாதகத்தில் நல்ல தசா புத்தி வருகிறது. நன்மை செய்யும் கோள்சாரக் காலம் வருகிறது என்றால், அதற்க்காக அதிக சந்தோஷப் படவும் வேண்டாம், அதுபோல நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அதற்காக பயந்து போகவும் வேண்டாம்.

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் அல்லது எந்த வருத்தமும் உங்களை அனுகாது.

இதை வலியுறுத்திதான், “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என்று கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதினார்

ஆகவே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ஜோதிடரை சந்தித்து உங்கள் பிரச்சினையைச் சொல்லி, அதற்கான தீர்வைக் கேளுங்கள். என்னுடைய எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று ஒற்றை வரியில் கேட்காதீர்கள்

1.வேலை இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? என்க்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கேளுங்கள்
2.திருமணம் தள்ளிக்கொண்டே போகிறதா? எப்போது திருமணம் நடக்கும் என்று கேளுங்கள்.
3.கடனில் மூழ்கி அவதிப்படுகிறீர்களா? எப்போது கடன் தீரும் என்று கேளுங்கள்
4.குழந்தை இல்லாத கவலையா? எப்போது குழந்தை பிறக்கும் என்று கேளுங்கள்
5.மகனுக்கு படிப்பு ஏறவில்லையா? படிப்பானா? மாட்டானா? என்று கேளுங்கள்
6.வாடகை வீட்டில் அவதிப் படுகிறீகளா? வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறதா என்று கேளுங்கள்.
7. மேல் படிப்பு படிக்கும் ஆசை இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேளுங்கள்
8. வெளிநாட்டில் சென்று வேலை செய்து, பொருள் ஈட்டும் எண்ணம் இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேளுங்கள்
9. வெளி நாட்டில் இருந்தது போதும். சொந்த மண்ணிற்குத் திருப்ப வேண்டும் என்ற எண்ணம இருக்கிறதா? அதற்கான நேரம் எப்போது வரும் என்று கேளுங்கள்
10. நோயால அவதிப்படுகிறீர்களா? நோய் நொடிகள் எப்போது தீரும் என்று கேளுங்கள்.

இப்படிspecific ஆகக் கேளுங்கள். ஜோதிடத்தில் ஞானம் உள்ள ஜோதிடர், இதற்கான பதில்க்ளைச் சொல்லி உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார். நிமமதியை ஏற்படுத்துவார்.

உங்களுக்கு ராகு திசை அல்லது சனி திசை அல்லது 12ஆம் இடத்தின் திசை நடக்கிறது அது இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் என்று அவர் சொன்னால், அந்த மூன்று ஆண்டுகளை சகித்துக்கொண்டு நிம்மதியோடு அல்லது சந்தோஷத்துடன் இருப்பீர்கள் அல்லவா? அதுதான், அந்த நிம்மதிதான் ஜோதிடத்தின் மூலம் கிடைக்ககூடியது ஆகும்!!!

1. வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருக்கிறது. அதன் எதிர்காலம் என்ன?
2. என் பையன் சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அவன் திரும்ப வ்ருவானா? அல்லது மாட்டானா?

என்பது போன்ற சிக்கலான கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதெல்லாம் கர்ம வினையால் வருவது. அத்ற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது
------------------------------------------------------------------------------------------------
எது எப்ப்டியோ போகட்டும். நீங்கள் எதற்கும் கவலைப் படாத மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  Take it easy என்று எதையும் எடுத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள். அதுதான் இந்த நீண்ட கட்டுரையின் நோக்கம்!

வாழ்க்கை குறுகியது.
நிலை இல்லாதது

சித்தர் பாடல்கள் பல அவற்றைத்தான் வலியுறுத்துகின்றன

உங்களுக்காக் பட்டினத்தார் எழுதிய பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்:

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே!


சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது
சதமல்ல என்றால் நிலையில்லாதது என்று பொருள் .

ஊரும் சதம் அல்ல - உடம்பே சொந்தமில்லை. அது வாடகை வீடு. ஊர் எப்படி சொந்தமாகும்?
உற்றார் சதம் அல்ல - அவனவனுக்கு அவன் குடும்பம மற்றும் அவனுடைய பிரச்சினைகளே பெரியது. நம்மைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஏது?
உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை.
பெண்டீர் சதம் அல்ல - மனைவி நிரந்தரமல்ல
பிள்ளைகளும் சதம் அல்ல, திரும்ணமானவுடன் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க அவர்கள் போய் விடுவார்கள்
சீரும் சதம் அல்ல - சொத்துக்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல.
செல்வம் சதம் அல்ல - செல்வம் எப்போது வேண்டு மென்றாலும் நம்மைவிட்டுப்போகும். அல்லது அதைவிட்டு நாம் போவோம்
தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று எவரும் நிரந்தரமில்லை
நின் தாள் (இறைவனின் பாதங்கள்) சதம் - உன் திருவடிகள் மட்டுமே நிரந்தரமானது காஞ்சி மாநகரில் உறையும் ஏகாம்பரேஸ்வரனே!!!!!!!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.10.12

எதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது?

எதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது?

இன்று விஜயதசமி. துர்கா தேவியை வணங்கும் நாள்!

   "If you lose your wealth, you have lost nothing,
    If you lose your health, you have lost something,
    But if you lose your character, you have lost everything."

தேவி தன் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவள். நமக்கு ஏற்படும் தடைகளை நீக்குபவள். மேற்சொன்ன இழப்புக்கள்  எதுவும் நமக்கு இல்லாமல் செய்யக்கூடியவள். அனைவரும் துர்கையை வணங்குகள்.

தேனினும் இனிய தன் குரலால் திருமதி சுசீலா அவர்கள் பாடியுள்ள துர்கைப் பாடலின் கானொளி வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் கேட்டு
மகிழுங்கள்.

Our sincere thanks to person who up loaded this video clipping!


அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++

Durga Puja festival epitomizes the victory of Good over Evil
அதைப்பற்றி மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள கீழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன்:

http://en.wikipedia.org/wiki/Durga_Puja

மேலதிகத் தகவல்கள்:

The word "Durga" in Sanskrit means a fort, or a place which is difficult to overrun. Another meaning of "Durga" is "Durgatinashini," which literally translates into "the one who eliminates sufferings." Thus, Hindus believe that goddess Durga protects her devotees from the evils of the world and at the same time removes their miseries.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!


23.10.12

Astrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ?

Astrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ?

சரஸ்வதி துதிப் பாடல்!

இன்று சரஸ்வதியைப் பூஜிக்கும் நாள். வணங்கி மகிழும் நாள். உங்களுக்காக, அந்த முண்டாசுக் கவிஞன் இயற்றிய  சரஸ்வதி துதிப் பாடலை வலை ஏற்றியுள்ளேன். நீங்கள் அறிந்த பாடல் என்றாலும், இன்று அப்பாடலைப் படித்து சரஸ்வதி தேவியை ஒருமுறை வணங்குங்கள். எல்லா நலனும் உண்டாகும்
அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)

-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
++++++++++++++++++++++++++++++++++++
Astrology சரஸ்வதி யோகம்! (saraswati Yoga)

இது ஒரு மேன்மையான யோகம்

ஜாதகத்தில், புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும் (புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம்தான்) கேந்திரம் அல்லது திரிகோணங்கள் அல்லது இரண்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் குரு பகவான் தன் சொந்தவீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அல்லது நட்பு வீடுகளிலோ இருக்க வேண்டும். அவவாறான அமைப்பு இருந்தால்  இந்த யோகம் ஜாதகனுக்கு உண்டு

என்ன பலன்?

ஜாதகனுக்கு உயர்கல்வியில் மேன்மை உண்டாகும்.அதிகம் படித்த பண்டிதனாக இருப்பான் (Scholar). கணிதத்தில் கரை காண்பான். புராதன நூல்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.

இந்த யோகம் உடையவனுக்கு சரஸ்வதியின் அருள் இருக்கும்

அருள் இருந்தால் படித்தது மறக்காது. நினைவில் அப்படியே தங்கிவிடும். படிப்பதை விட அது முக்கியம்

ஜோதிடம் கற்றுத் தேர்வதற்கு சரஸ்வதியின் அருள் வேண்டும். இந்த யோகம் ஜாதகத்தில் இல்லா விட்டாலும், சரஸ்வதியின் அருள் இருந்தால் போதும். சரஸ்வதி தேவியை வணங்குங்கள். தேவியின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஜோதிடப் பாடங்களும் மனதில் பதியும்!

ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ? என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு, பரபரப்பு அடைய வேண்டாம். அது சரஸ்வதி தேவியிடம் கிடைக்கும்!!!!
-----------------------------------------------------------------------------------------------------------
நேற்றையப் பாடத்தின் தொடர்ச்சிக்காக ஆவலாக இருப்பீர்கள். இடையில் இரண்டு தினங்கள் பூஜை நாட்களாக வந்து  விட்டது. அத்துடன் 12 மணி நேரம் மின் வெட்டும் உள்ளது. அந்தப் பாடத்தை விவரமாக எழுதிப் பதிவிட வேண்டும். அந்தப் பாடம் 25.10.2012 வியாழக் கிழமையன்று வெளியாகும். அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.10.12

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா?

 
Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா?

தலைப்பில் வாத்தியார் அடிக்கடி டா போட்டு எழுதுகிறாரே ந்ன்று யாரும் நினைக்க வேண்டாம். அது எனக்கு நானே போட்டுக்கொள்வது. அப்போதுதான் ஒரு உற்சாகத்துடன், உங்கள் மொழியில் சொன்னால் ஒரு ‘கிக்’ உடன் எழுத முடிகிறது!

எந்த ஒரு விலை உயர்ந்த சாதனத்தையும் வாங்கும்போது, அதற்கு எத்தனை ஆண்டுகள் உத்திரவாதம் (க்யாரண்டி) இருக்கிறது என்று பார்த்து விட்டுத்தான் வாங்குவோம். அதுதான் வழக்கம். உதாரணத்திற்கு விலை உயர்ந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினாலோ அல்லது கைப்பிடிக்குள் அடங்கும் ஒரு வீடியோ காமெராவை வாங்கினாலோ அல்லது ஒரு மடிக்கணினியை வாங்கினாலோ, ஒன்று அல்லது இரண்டு ஆண்டு அதற்கு செயல் உத்திரவாதம் இருந்தால்தான் வாங்குவோம்

அனால் எல்லாவற்றையும் விட விலை உயர்ந்த அல்லது விலை மதிப்பிட முடியாத நம் உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? அல்லது அதை யாரிடம் கேட்டு வாங்குவது?

இரவில் கண் அயரும்போது, காலையில் எழுந்திருப்போம் எனற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக்கூட சிலர் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அதுவே கடைசி தூக்கமாக இருந்து, காலையில் மனுஷன் எழாமல் போய்விட்டால் என்ன செய்ய முடியும்?

நெடுஞ்சாலையில் பயணிக்கிறவன், செல்லுகின்ற ஊருக்கு இததனை மணி நேரத்தில் போய்ச் சேருவோம் என்று கணக்குப் போட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கின்றான். அவன் நன்றாக வண்டியை ஓட்டினாலும், அந்த வண்டி புதியதுதான், பிரச்சினை எதுவும் செய்யாது என்றாலும், எதிரில் வேகமாக வருகின்ற டிப்பர் லாரிக்காரன் முத்தம் கொடுத்து, அதாவது மோதி, பக்கத்தில் இருக்கும் பள்ளத்திற்குள் அவனையும், அவன் வண்டியையும் தலை குப்புறத் தள்ளிவிட்டுப் போனால் என்ன செய்ய முடியும்? மோதியவன் யார் என்று எழுந்து பார்ப்பதற்கு உயிர் இருக்க வேண்டுமே?

இது போல சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே வாழ்க்கை நிச்சயமற்றது!

என்றைக்கு வேண்டுமென்றாலும் ஆயுள்காரகன் சனீஷ்வரன் போர்டிங் பாஸைப் பைக்குள் திணித்து நம்மை மேலே அனுப்பிவைப்பான். சனி அனுப்பி வைக்கும் போது விசா, இமிக்ரேசன், விமான டிக்கெட் என்று எந்தப் புண்ணாக்கும் கிடையாது. ‘செக்யூரிட்டி செக்’ எல்லாம் கிடையாது. எல்லாம் இலவசம். இலவசம் என்றால் நமக்குப் பிடிக்குமே. ஆகவே மகிழ்ச்சியுடன் போய்ச் சேர வேண்டியதுதான்.

    “நான் என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து வைத்திருக்கிறேன். என்னுடைய ஆயுட்காலம் 80 ஆண்டுகள் என்று தலை சிறந்த ஜோதிடர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்போது 40 வயதுதான் ஆகிறது. இன்னும் நாற்பது ஆண்டு காலம் நான் வாழ்வேன்” என்று சொல்லிக்கொண்டிருப்பவன் கூட சொன்னதற்கு அடுத்த நாளே போய்ச் சேரலாம். ஜோதிடர் என்ன கடவுளா? அவர் சொன்னால் அப்படியே நடப்பதற்கு?

ஜோதிடர்கள் பொருத்தம் பார்த்துக் கொடுத்த எத்தனையோ திருமணங்கள் ஊற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆண்டில் தம்பதியர் இருவரும் ஒரு பெண் மகப்பேறு மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனுச் செய்து விட்டு, அங்கே மன வருத்தத்துடன் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    “என்ன சொல்ல வருகிறீர்கள்? ஜோதிடம் பொய்யா?”

    “ஜோதிடம் பொய்யல்ல! உண்மை.”

அதை முழுதாகக் கற்றுத் தெளிந்தவர்கள்தான் குறைவு.

பல நூற்றாண்டுகளுக்கு, முன் நம் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளால் ஏராளமான ஜோதிட நூல்கள் எழுதப்பெற்றுள்ளன. அவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தன. அவற்றை எல்லாம் பல புண்ணிய ஆத்மாக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூல்களாக்கி வைத்துள்ளாகள். அவற்றுள் முக்கியமான சில நூல்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றுள் ஏராளமான பாடங்கள், தகவல்கள், செய்திகள் பத்மநாப சுவாமி கோவில் சுரங்க அறைக்குள் இருக்கும் தங்கத்தைபோல வைரங்களைப் போல கொட்டிக்கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் முழுமையாகப் படித்து முடித்து மனதில் உள் வாங்கிக் கொள்ள நம் ஆயுள் பத்தாது. உள்வாங்கிக்கொண்ட நம் முன்னோர்கள் எல்லாம், சின்ன வயதிலேயே துவங்கி அவற்றிற்காக, அதைக் கற்றுக்கொள்வதற்க்காகவும் அவற்றை வைத்து நொந்து போன உள்லங்களுக்குப் பலன் சொல்லவும், ஆறுதல் அளிக்கவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்கள்.

அப்படி அர்ப்பணிப்பவர்கள் எல்லாம் இப்போது யாரும் இல்லை.

அந்த நூல்களின் பட்டியல். (எல்லாவ்ற்றையும் குறிப்பிடவில்லை. முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.)

Classical Vedic Texts
1. Brihat Parashara Hora Shastra (the "bible" of Vedic astrology)
   written by Sage Parashara (father of Veda Vyaasa, the compiler of Mahabharata)
2. Phaladeepika (the second most important "bible" in Vedic astrology)
   written by Mantreswara was a 16th-century Hindu astrologer
3. Uttara Kalamrita
   written by Kalidasa
4. Saravali (two volumes)
   written by Kalyana Varma, belonged to the 10th century
5. Bhrigu Sutram and
6. Bhrigu Samhita
   Both written by Maharishi Bhrigu was one of the seven great sages, the Saptarshis, 

   in  ancient India,
6. Brihat Jataka
    written by Varahamihira, an Indian astronomer, mathematician, and astrologer 

    who    lived in Ujjain.He is considered to be one of the nine jewels (Navaratnas) 
    of the court of legendary ruler Vikramaditya (thought to be the Gupta emperor  
    Chandragupta II Vikramaditya) Period 505 - 587 
7. Sri Sarwathachintamani (two volumes)
    written by Acharya Venkatesa in the 13th century.
8. Jataka Parijata (3 Vol)
   written by Acharya Venkatesa in the 13th century.
9. Kalaprakasika
   The standard book on the election (mahoortha) system : with original text in  

    Devanagari   and English translation
    by N.P. Subramania Iyer.

10. குமாரசுவாமீயம்
11. புலிப்பாணி ஜோதிடம்
12. கேரள மணிகண்ட ஜோதிடம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் ஏராளமான புத்தகக் கடைகள் உள்ளன. எல்லாவிதமான ஜோதிட நூல்களும் அங்கே கிடைக்கும். பணத்தைத் தூக்கிப்போட்டு அவைகளை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.

வாங்குவாதா முக்கியம்?

படிக்க வேண்டுமே? படிப்பத்ற்கு நேரம் வேண்டுமே? நேரம் இருந்து படித்தாலும் படிப்பது புரிய வேண்டுமே? அதாவது விளங்க வேண்டுமே? விளங்கினாலும் மண்டைக்குள் ஏற வேண்டுமே? ஏறினாலும் நினைவில் அவைகள் தங்க வேண்டுமே?

அதுதான் கஷ்டம்!!!!

பழைய ஜோதிட நூல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். புரிகிறதா பாருங்கள்:

திதிமன்முன்கோவாய் வேனேரைந்து முபசயமுஞ்
   சென்றது முன்புடனன் றந்தாள் சேயுமணன் றிபுச்சேய்
நவமும்வியமாறேழுநளின நுநீராந்த
   நாட்கிறையுமாம் வேளொன்ன் றந்தணநோய்நடையுன்
தவமுளண்னோய் பொனடைத்தம்பியுங் கட்கணியாய்த்
   தருகேந்த்ரபண பரமுமிதிற்றனையரிவது
மவமுனின் மாலுடனகமுமாறுளணவனு
   மைந்திலதெட்டி துவுமெட்டேழிந்துவுமக்கிறைக்கே!

                 - புத்தகத்தின் பெயர் குமாரசுவாமியம் -  75வது பாடல்
தலைப்பு அட்டவர்க்கப் படல்ம் - ரவி மதி அட்டவர்க்கம்


அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் (நன்றாகக் கவனியுங்கள் இரண்டு கிரகங்கள்) சுய அஷ்டகவர்க்கம் போடுவத்றகான வழி முறையைப் பற்றிய தகவல்கள் எட்டே வரியில் கூறப்பட்டுள்ளன. உங்களுக்குத் தெரிந்த தமிழ்ப் பண்டிதர் அல்லது பேராசியரிடம் கொடுத்து இதற்குப் பொருள் கேளுங்கள். சொன்னார் என்றால் எனக்குத் தகவல் சொல்லுங்கள். அவரைப் பாராட்டி நம் வகுப்பறையில் ஒரு தனிப்பதிவு போட்டு விடுகிறேன்!

இதற்கெல்லாம் இன்றையத் தமிழில், அதாவது நமக்குத் தெரிந்த தமிழில் விளக்கம் சொன்னால்தானே புரியும். சிலர் பொருள் எழுதியுள்ளார்கள். அதெல்லாம் நேரடியான பொருள். நேரான மொழிபெயர்ப்பு. அதனால் இப்போது அவற்றைப் படிப்பவர்கள் சற்று புரிந்து கொள்வார்கள். இன்னும் ஜனரஞ்சகமான தமிழில் அவற்றை எழுதுவதற்கு யாராவது முன் வர வேண்டும்.

எனக்கு அந்தப் பிரச்சினை எல்லாம் ஏற்படவில்லை. நான் படிதததெல்லாம் ஆங்கில நூல்கள். சனியை பாடலின் எதுகை மோனைக்காக நீலவன், முடவன், காரிமைந்தன் என்று எல்லாம் சொல்லாமல் ஒரே ஒரு வார்த்தையைத்தான் அந்த நூல்களில் பயன் படுத்துவார்கள். Saturn அவ்வள்வுதான். அதனால் நான் தப்பித்தேன். ஜோதிடமும் ஒரளவிற்கு எனக்குப் பிடிபட்டது.

ஜோதிடத்தில் கரை கண்டவன் எவனுமில்லை. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டும். ஜோதிடம் பெரிய கடல். அந்தக் கடலில் நான் எவ்வளவு தூரம் பயணித்திருப்பேன். எத்தனை இடங்களைப் பார்த்திருப்பேன்  என்று எப்படிக் கணக்கிட்டுச் சொல்ல முடியும்? ஆகவேதான் அந்த ஓரளவு.

இப்போது ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் குடும்ப ஜோதிடம் போன்ற நான்கைந்து தமிழ் ஜோதிட நூல்களைப் படித்துவிட்டு ஜோதிடர் வேலையைச் செய்யத் துவங்கி விடுகிறார்கள்.

தசா புத்தியைக் கணித்தும், கோள்சாரத்தை வைத்தும் பலன் சொல்வதும் எளிது. நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத்தான் ஜோதிடத்தில் ஆழந்த ஞானமும் (அறிவும்) அனுபவமும் வேண்டும். எல்லோருக்கும் அது அமையாது!

என்க்கு, வாரத்திற்கு, இரண்டு அல்லது மூன்று மின்னஞ்சல்கள் வரும். “ஐயா, எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். தெரிந்ததை வைத்து ஜோதிடர் தொழிலை முழு நேரத்தொழிலாகவோ அல்லது பகுதி நேரத் தொழிலாகவோ நான் செய்யலாமா? எனக்கு அதில் வருமானம் கிடைக்குமா? தயவு செய்து என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று அதில் கேட்டிருப்பார்கள்

எப்படி இருக்கிறது கதை?

படிப்பது வேறு. படித்ததை வைத்துத் தொழில் செய்வது வேறு!

படிப்பதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். , பெயர்ப் பலகையை வாசலில் மாட்டித் தொழில் செய்வது அப்படியா?

பகவானே, எல்லாம் காலக்கோளாறு என்று நினைத்துக் கொள்வேன்.

எடுத்தவுடன் இயக்குனர் சங்கர்போல வரவேண்டும் என்று முயற்சி செய்தால் எப்படி? சங்கர் துவக்க காலத்தில் எத்தனை பேர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுப்வம் பெற்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதுபோல,  ஜோதிடர் ஒருவரிடம் நான்கு அல்லது ஐந்து ஆண்டு காலம் உதவியாளராக இருந்து பணி செய்திருந்தால் மட்டுமே  ஜோதிட ஞானமும், அனுபவமும் கிடைக்கும்

கற்பதைவிட, அனுபவ அறிவு முக்கியம். நிறைய ஜாதகங்களைப் பார்த்திருக்க வேண்டும். நிறையப் பேர்களிடம் உரையாடியிருக்க வேண்டும். எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நிறைய உதாரண ஜாதகங்களை சேர்த்து வைத்தி ருக்கிறேன்.என்னை அறியாமலேயே சேர்த்து வைத்திருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு அவைகள் உதவுகின்றன!

சிலர் சிலருக்குப் பலன் சொல்லும்போது சில சமயம் அது தவறாகப் போய்விடும். அதற்கு ஜோதிடர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு ஒரு வலுவான காரணமும் இருக்கும்.

என்ன காரணம் அது?

அடுத்த பதிவில் அதை விவரமாகப் பார்ப்போம்

(தொடரும்)

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.10.12

கவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்


Devotional: அதுதான் என் முதல் வேலை!

பக்தி மலர்
இன்றைய பக்திமலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு  மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------
முருகா உனக்கு புகழ்மாலை
சூட்டுவதே தினம் முதல்வேலை

கந்தா உன் திருவடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு

பாதத்தில் வைத்திட மனம்உண்டு
பூஜையை ஏற்பாய் நீவந்து

(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம்உன் அருள்தானே

காலமும் துணையை நீதானே
கருணையைப் பொழிவ துன்விழிதானே

(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்

தோன்றிட நீதரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி

(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

முருகா முருகா முருகா.

----------------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this video clipping!




+++++++++++++++++++++++++++++++++++  


கவிதைச் சோலை:  நடுங்காத நெஞ்சம்

தும்பிக்கை போனபின் யானையைப் பூனையும்
    துரத்திடும் தன்மை யேபோல்
       துணிவிலாக் கோழையைச் சிறுவரும் கைகொட்டிச்
    சூழ்கின்ற அவல மேபோல்
நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்
    நலிவுறும் என்ன அஞ்சி
       நடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற
    நாளைஎன் காலம் என்றே!
வம்புக்குச் சொக்கனை வளையாடும் கைகளில்
    வளைக்கின்ற வண்ண மயிலே!
       மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

                   - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

18.10.12

Astrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்


Astrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

அலசல் பாடம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக் கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வள்வோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும் - அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன  செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

   “I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

   “எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆக்வே குழந்தையின்மை  சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டர்ர் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன்

விரையாதிபதி குருவுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.

அது மோசமான இடமாகும் (It is the most malefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?

இது மேல்நிலை வகுப்பிற்காக  (classroom2012) எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.
மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் பின்னால் புத்தகமாக வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------
இடைச்சேர்க்கை:

இரண்டு அன்பர்கள் அஷ்டகவர்க்கம் அவசியமில்லையா? அதைக் கொடுக்கவில்லையே நீங்கள் என்று கேட்டுள்ளார்கள்.

அவர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


சர்வாஷ்டகவர்க்கத்தில் ஐந்தாம் வீட்டிற்கு 26 பரல்கள்
காரகன் குரு இருக்கும் இடத்திற்கு 23 பரல்கள்
வீட்டுக்காரன் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 29 பரல்கள் (சாராசரிக்கும் மேலாக ஒரு பரல் கூடுதலாக இருந்தாலும் கேதுவின் சேர்க்கையால் அதற்கு பலன் இல்லை. அதை விடுத்தாலும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் குறைவான பரல்களே உள்ளன)

சரி சுயவர்க்கத்தைப் பாருங்கள்:

குருவிற்கு 3 பரல்கள் மட்டுமே
செவ்வாய்க்கு நான்கு பரல்கள் மட்டுமே
லக்கினாதிபதி சந்திரனுக்கு 2 பரல்கள் மட்டுமே (அவன் முக்கியமில்லையா?)

சில காரணங்களுக்காக பிறந்த தேதி, மற்றும் பிறந்த நேரம்,, ஊரைக் கொடுக்கவில்லை. நம் நண்பர் திருவாளர் ஆன்ந்த அவர்கள் சொல்வதைபோல  அட்டவணையை வைத்து அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்கள் மின்னஞ்சல் கொடுங்கள். அதை அனுப்பி  வைக்கிறேன். அதாவது அறியத் தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்

18.10.2012
2:00 PM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.10.12

Astrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்!



 Astrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்!

17.10.2012

மேஷ லக்கினம்.

லக்கின வரிசையில் இதுதான் முதல் லக்கினம். இதன் அதிபதி செவ்வாய். பிரதான கிரகமான, அதாவது ராஜ கிரகமான சூரியனுக்கு இது உச்சவீடாகும்!.

1
ல்க்க்கின அதிபதி செவ்வாய் மகர வீட்டில் உச்சம்பெறுவார். அதிபதி உச்சம் பெற்றாலும் அல்ல்து கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஜாதகத்திற்கு அது சிறப்பைத்தரும். ஜாதகனுக்கு உயர்வைத் தரும். ஜாதகன் செயல் வீரனாக இருப்பான்.

2
ல்க்கினத்தில் சூரியன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு பல மேன்மைகளைத் தரும். மதிப்பு, மரியாதை, கெள்ரவம் அந்தஸ்து என்று அனைத்தையும் அது பெற்றுத்தரும்!.

3
மேஷ லக்கினத்தில் சந்திரன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வழங்கும். ஜாதகனுக்குப் பெண்களை வசீகரிக்கும் தன்மையைக் கொடுக்கும்.

4
மேஷ லக்கினத்தில் லக்கினாதிபதி செவ்வாய் அமர்ந்திருந்தால், ஜாதகன் நல்ல நிர்வாகத் திறமையைப் பெற்றிருப்பான். ஆளுமை இருக்கும். அதாவது யாரையும் கட்டி மேயக்கும் திறமை இருக்கும். ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருப்பான். வெற்றிகரமான வாழ்க்கை அமையும்

5
மேஷத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பல்ல. புதன் இந்த லக்கினத்திற்கு மூன்று மட்டும் ஆறாம அதிபதி அதை நினைவில் வையுங்கள். ஜாதகனின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். எதிரிகள் ஏற்படுவார்கள். சிலர் கல்மனதுக்காரர்களாகவும் பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவர் களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் சாஸ்திரங்களிலும், ஜோதிடத்திலும் ஆர்வம் உடையவர்களாவும், அவற்றில் அறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள். முன்னோர்களின் சொத்துக்கள் தங்காது. சிலர் அவற்றை எல்லாம் அடித்துத்தூள் கிளப்பிவிடுவார்கள். அதாவது அழித்து விடுவார்கள்

6
மேஷத்தில் குரு வந்து அமர்ந்தால், ஜாதகன் இறைப்பற்று உடையவனாகவும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவனாகவும் இருப்பான். கல்வியாளனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு செல்வம் அதுவாக வந்து சேரும். எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல நிலையை அடைவான். விசுவாசம் மிக்கவனாக இருப்பான் பெருந்தன்மை மிக்கவனாக இருப்பான். பொது மக்களுக்குப் பாடுபடுபவ்னாக இருப்பான். பொது சேவையில் அதிகம் நாட்டம் உடையவனாக இருப்பான்
.
7
மேஷத்தில் சுக்கிரன் வந்து அமர்ந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், வண்டி வாகன வசதிகளை உடையவனாகவும் இருப்பான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். நல்ல உறவினர்களைக் கொண்டவனாக இருப்பான். அதிகம் பயணிப்பவனாக இருப்பான். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சிலருக்குக் கொடுக்கல் வாங்கலில் விவகாரம் உண்டாகலாம்.

8
மேஷத்தில் சனி வந்து அம்ர்வது நல்லதல்ல. சனிக்கு இந்த இடம் நீச வீடாகும். அதை மனதில் வையுங்கள். வாழ்க்கை துன்பங்களூம் ச்சொகங்களும் நிறைந்ததாக இருக்கும். முயற்சிகள் எல்லாம் தோல்வியடையலாம். சிலருக்கு அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் வீணாகலாம். மனைவியுடன் சுமூகமான உறவு இருக்காது. முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன அல்லது கொடுத்துவிட்டுப்போன சொத்துக்களை எல்லாம் இழக்க நேரிடும். உறவினர்களுடன் அடிக்கடி உரசல்கள் ஏற்படும்.
ஜாதகனுக்கு விசுவாசமில்லாத தன்மை உண்டாகும்.

9
ராகு அல்லது கேது வந்து மேஷத்தில் அமர்வதோடு, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாமலிருந்தால், ஜாதகனுக்கு பல நன்மைகள் உண்டாகும். மரியாதை சமூக அந்தஸ்து உண்டாகும். சிலர் ராணுவம் அல்லது காவல்துறையில் பணி செய்து உயர் பதவிக்கு வந்து விடுவார்கள். தைரியமும், எவரையும் வழி நடத்தும் மேன்மையும் ஜாதகனிடம் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். அதற்கு மாறாக வந்தமரும் ராகு அல்லது கேது, வேறு தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றால், மேற் சொன்னவை எதுவும் நடக்காது. அதற்கு மாறாகவே அனைத்தும் நடக்கும். அதாவது எதிரான பலன்களே கிடைக்கும்.

10.
கிரகங்கள் மேஷ லக்கினத்தில் வந்து அமர்வதால் உண்டாகும் பொதுப் பலன்களை சொல்லியுள்ளேன். வந்து அமராவிட்டாலும், வேறு இடத்தில் இருந்து அவர்கள் தங்கள் பார்வையை இந்த லக்கினத்தின் மேல் செலுத்தினாலும், அதாவது வைத்திருந்தாலும் அதே பலன்கள் உண்டாகும்.

11.
அதேபோல மேஷ் லக்கினாதிபதியான செவ்வாயுடன் கூட்டணி போடும் கிரகங்களை வைத்தும், அல்லது செவ்வாயுடன் பார்வையில் இருக்கும் கிரகங்களை வைத்தும் இந்த லக்கினக்காரகளின் குணங்கள் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள்!

12
மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. சூரியன் ஐந்திற்கு (பூர்வபுண்ணியத்திற்கு) உரியவன். குரு பாக்கிய ஸ்தானத்திற்கு உரியவன் சனி 10 & 11ஆம் இடத்திற்கு உரியவன். ஆகவே இவர்கள் நால்வரால் இந்த லக்கினம் மேன்மை அடையும். புதன் ஆறிற்கு உரியவன் ஆதலால் அவனுடைய தொடர்பால் பெரிய நன்மை கிடையாது

இது எல்லாமுமே பொதுப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.10.12

Astrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்!

 Astrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்!

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. ஒரு ஜாதகத்தில்
அக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கும்போது, அந்த ஜாதகனுக்கு அக்கிரகங்களின் குணங்களும் சேர்ந்துகொள்ளும்

ஒருவருடைய ஜாதகத்தில், லக்கின அதிபதியும், லக்கினத்தில் வந்து அமரும் கிரகமும் அல்லது கிரகங்களும், லக்கினத்தைப் பார்க்கும் கிரகமும் அல்லது கிரகங்களும் சேர்ந்து ஜாத்கனின் குணத்தை நிர்ணயம் செய்யும்

மேற்சொன்ன அமைப்பில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகத்தில் மேலோங்கி நிற்கிறதோ, அந்தக் கிரகத்தின் குணமே ஜாதகனுக்கு அதிகமாக இருக்கும்

சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் ஜாதகன் நல்ல குணங்கள் நிரம்பியவனாக, பலராலும் விரும்பப் படுபவனாக இருப்பான். அதற்கு நேர் மாறாக சனி, ராகு அல்லது போன்ற தீய கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஜாதகன் அவனுக்கு மட்டுமே நல்லவனாக இருப்பான்:-)))

1
சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எத்தனை துன்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள்.

2.
சிலர் எப்போதும் அழுது வழிந்துகொண்டே இருப்பார்கள். தங்கள் மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்

3.
சிலர் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு போகும் குணத்துடன் இருப்பார்கள்.

4.
சிலர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் அல்லது வாக்குவாதம் செய்து சண்டையிடும் குணத்துடன் இருப்பார்கள்.

5.
சிலர் அன்பான மனைவி மக்களுடன் கூட எரிச்சலுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.

6
சிலர் அதற்கு மாறாக அன்பில்லாத உற்வுகளுடன் கூட கனிவாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.

7.
சிலருக்கு எல்லா விஷயத்திலும் ரசனையும் ஈடுபாடும் இருக்கும்

8.
சிலருக்கு எதையும் ரசிக்கும் உணர்வோ, லாபம் இல்லாத எதிலும் ஈடுபாடோ இருக்காது

9.
சிலர் முன்பின் தெரியாதவர்களிடம் கூட கலகலப்பாகப் பேசும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்

10
சிலர் நன்றாகத் தெரிந்தவர்களிடம் கூடபேசும் பழக்கமின்றி உம்மன்னா மூஞ்சி ஆசாமியாக இருப்பார்கள்

11.
சிலர் ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களாக, வெள்ளந்தியாக இருப்பார்கள்

12.
சிலர் கள்ளம் கபடு சூது வாது நிறைந்தவர்களாக எதையும் மறைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்

13.
சிலரைப் பார்த்தாலே கவர்ந்திழுப்பவர்களாக இருப்பார்கள். நமக்கே வலியச் சென்று அவர்களிடம் பேசும் ஆசை உண்டாகும்

14.
சிலரைப் பார்த்தலே பயம் உண்டாகும் தோற்றத்தில் இருப்பார்கள். நமக்கு ஒதுங்கிப்பொகும் எண்ணம்தான் உண்டாகும்

15
சிலர் தேவையில்லாத சின்ன விஷயத்திற்குகூட கவலைப் படுபவர்களாக இருப்பார்கள் அல்லது கோபப் படுபவர்களாக இருப்பார்கள்.

16
சிலர் இடியே விழுந்தாலும் கவ்லைப் படாதவர்களாக, எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்

17
சிலர் பரோபகாரிகளாக் யாருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்

18.
சிலர் தாமுண்டு தம் வேலை உண்டு என்று தன்னலம் மட்டுமே உள்ளவர்களாக இருப்பார்கள்

19
சிலர் தர்ம சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள்

20
சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது, அதைச் சேர்ப்பது என்று ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் உடையவர்களாக இருப்பார்கள்

இப்படி எழுதிக்கொண்டே போக்லாம்.

நூற்றுக் கணக்கான குண வேறுபாடுகள் உள்ளன.

எல்லாக் குழந்தைகளும் ஒரு தாயின் வயற்றில்தான் உருவாகின்றன் என்றாலும் முகங்கள் வேறுபடுவதுபோல குணங்களும் வேறுபடும்!
ஏன் ஒரு தாய் வயிற்றிலேயே பிறந்த இரண்டு குழந்தைகளின் குணம் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை

என்ன காரணம்?

பதிவின் துவக்கத்தில் உள்ள முதல் எட்டு வரிகளைப் படியுங்கள்! அதுதான் காரணம்

லக்கினத்தைவைத்துத்தான் குணம் அமையும் என்றாலும், 3, 6 8 மற்றும்; 12ஆம் வீடுகளைவைத்தும் சில குணாதிசய்ங்கள் சேர்ந்து கொள்ளும்

எந்தக் குணமும் அடுத்தவர்களைப் பாதிக்காத அளவில் இருப்பது முக்கியம்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

பாடம் தொடரும்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.10.12

Astrology பிறவிக் குணம் எப்படியடா போகும்?


Astrology பிறவிக் குண்ம் எப்படியடா போகும்?

Post dated 15.10.2012


ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்? என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக் கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான் நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல் மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில்  சொன்னால் அந்த ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார், மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம் வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர் நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார் சுற்று முற்றும் பார்த்தார். அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்: “இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்  இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து  கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள். திரும்பி  வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார், "பாகற்காயில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள், "இல்லை ஐயா, எப்போதும் போல அது கசப்பாகத்தான்  இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில் சொன்னார். "எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம் போகவில்லை அல்லவா? அதுபோலத்தான்  எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது. அதைப் பிறவிக் குணம் என்பார்கள். அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்
எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல  காமுகன் என்றும் காமுகன்தான். எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும் அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள்
என்று சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம் என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.
எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

உங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Benefic planets such as Jupiter, Venus, Mercury and the luminous Moon do very well in first house. However, the presence of the malefics such as Rahu, Ketu,  Saturn and Mars can create very difficult situations in life. Strongly afflicted, it  produces difficult birth or even infant mortality. It can also cause psychological,  emotional and physical disorders.

லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும் கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப் பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரும்போது  மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள் கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

லக்கினங்களைப் பற்றித் தொடர்ந்து அலசுவோம்.

நாளை, முதலில் மேஷ லக்கினம்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.10.12

Devotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா!


Devotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை, முருகனின் பெருமை சொல்லும் பிரபலமான பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------

    ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
    கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது    என்று   நாணித்தான்
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
    என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
    உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
    நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

    சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
    சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
    முருகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
    உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?

    ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
    முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
    எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
    என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
    சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
    தண்டபாணித் தெய்வமே

    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
    பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

    கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
    கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
    கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
    உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
    தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு

    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
    ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ


    திரைப்படம்: திருவிளையாடல்
    பாடியவர்: K B. சுந்தராம்பாள்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

-----------------------------------
இந்தப் பாடலை 12 வயதுக் குழந்தை ஒன்று Airtel Super Singer Junior நிகழ்ச்சியில் அசத்தலாகப் பாடியது காணொளி வடிவில் கீழே உள்ளது. கேட்டு மகிழுங்கள். குழந்தையின் பெயர் செல்வி.யாழினி
our sincere thanks to the person who uploaded the song in the net


 

செல்வி யாழினி    


 நிகழ்ச்சியைக் கேட்ட பிரபலங்கள் எல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெயவ அருள் இருக்கிறது. அதனால்தான் இத்தனை கடினமான பாடாலை அனாயசமாகப் பாடியது என்றார்கள். உண்மைதான். பழநியப்பன் அருள் இருந்தால் யார்தான்  சூப்பராகப் பாட முடியாது?
-----------------------------------------------------------------------------------

 ஒவ்வொரு சொல்லிலும் தெயவ மணம் கமழும் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலைக் கேட்க வேண்டுமா?
அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்
http://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8
Pazham Neeyappa - Thiruvilayadal - K.B. Sundarambal

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

11.10.12

Astrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்?

Astrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்?

பேராசிரியர் பாடத்தைத் துவங்கினார்

அவருடைய கையில் ஒரு கண்ணாடி டம்ளர். அதாவது குவளை. தண்ணீரால் அது நிரப்பப்பெற்றிருந்தது.

பேராசியர் டம்ளரை உயர்த்திப் பிடித்தவர், கேட்டார்:

   “இந்தக் குவ்ளையை இப்ப்டியே சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருந்தால் என்ன ஆகும்?”

   “நத்திங்” (ஒன்றும் ஆகாது) என்று கோரசாகப் பதில் வந்தது

   “ஓக்கே” என்று சொன்னவர் தொடர்ந்து கேட்டார்: “சரி, இதையே நான் ஒரு மணி நேரம் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: “உங்கள் கை வலிக்கத் துவங்கும்!”

“நீ சொல்வது சரி!” என்ற பேராசிரியர், தொடர்ந்து கேட்டார்....: “அதே வேலையை ஒரு நாள் முழுக்கச் செய்தால் என்ன ஆகும்?”

“கைச் சதையில் அதீதமான அழுத்தமும், வலியும் உண்டாகும். உங்கள் கையில் நடுக்கம் ஏற்படலாம். உங்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிருக்கும்” என்று இன்னொருவன் எழுந்து சொல்ல வகுப்பில் அனைவரும் சிரிக்கத் துவங்கினார்கள்

“எக்ஸலெண்ட்” என்று ஒப்புக்கொண்ட பேராசிரியர் அடுத்துக் கேட்டார்: “இது ந்டக்கும்போது, அதாவது இதைச் செய்யும்போது டம்ளரின் எடையில் மாற்றம் ஏற்படுமா?”

“இல்லை” என்று அனைவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள்

“பிறகு, அதாவது எடையில் மாற்றம் இல்லை என்னும் நிலையில், கையில் ஏற்படும் வலிக்கும், கைச் சதையில் ஏற்படும் அழுத்ததிற்கும் என்ன காரணம்?

("Then what caused the arm ache & the muscle stress?")

சரியான பதிலைச் சொல்லத் தெரியாமல் அனைவரும் மெளனமாக இருந்தார்கள்

அடுத்துப் பேராசிரியர் கேட்டார்: “சரி இப்போது வலியில் இருந்து விடுபட வேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டும்?”

சட்டென்று ஒருவன் எழுந்து பதில் சொன்னான்: “டம்ளரைக் கீழே வைத்து விடுங்கள்”

“அதுதான் சரியான முடிவு” என்று சொன்னவர், தொடர்ந்து பேசினார்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அப்படித்தான் கையாள வேண்டும். பிரச்சினைகளுக்கும் அதைத்தான் தீர்வாகக் கொள்ள வேண்டும்.. பிரச்சினைகளைச் சில நிமிடங்கள் மனதிற்குள் வைத்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அதையே தொடர்ந்து மனதிற்குள் வைத்திருந்தீர்கள் என்றால அது மனதிற்குக் கடுமையான வலியைக் கொடுக்கத் துவங்கி விடும்! உங்களால் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும்! உங்களை அது முடக்கிப் போட்டுவிடும்

உண்மையில் நம்மால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. அதற்குரிய நேரமும், காலமும் வரும்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம். அப்போது அதைத் தீர்வுக்குக் கொண்டு வரலாம் என்று தற்காலிகமாக அதைக் கீழே வைத்துவிட வேண்டும். அதாவது ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்

ஆகவே கையில் எந்தக் குவளையையும் தாங்கிக் பிடித்துகொண்டிருக்காமல் கீழே வைத்து விட்டு, ஒவ்வொரு நாளையும் புதிதாகத் துவங்குங்கள்!
-------------------------------------------------------------
   “வாத்தி (யார்)  எதற்காக இந்தக் கதை ?”

    “ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். ஜோதிடத்தில் ஒரு ஒவ்வாத விதியைப் (rule) படித்து விட்டு, அதை உங்கள் ஜாதகத்துடன் இணைத்துப் பார்ப்பதுடன் அல்லாம்ல கவலைப்பட வேறு துவங்கி விடுகிறீர்கள். அதைப் பற்றிய தெளிவு பிறக்க என்ன செய்யலாம், யாரைக் கேட்கலாம் என்று குழம்ப வேறு ஆரம்பித்துவிடுகிறீர்கள். அவ்வாறு செய்யாதீர்கள். Put the rules down. படித்தவற்றைக் கீழே வைத்து விடுங்கள். அல்லது அதைக் குறித்துவைத்துக் கொண்டு, அடுத்து வரும் கேள்வி பதில் வகுப்பின்போது (session) அதைக் கேட்டுத் தெளிவு பெறலாம் என்று முடிவு செய்து விட்டு நிம்மதியாக இருங்கள்.”
------------------------------------------------------------
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கதை. கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.10.12

Astrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!


Astrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!

Popcorn Post No.28
பாப்கார்ன் பதிவுகள் - எண்.28


தேதி 10.10.2012 புதன் கிழமை
-----------------------------
கிரக உறவுகள்

கிரகங்களில் சில ஒன்றிற்கொன்று நட்பாக இருக்கும். அல்லது பகையாக இருக்கும் அல்லது சமம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும். அது நன்றாக - அதாவது தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருப்பது நல்லது. ஜாதகத்தில் பலனை அலசும்போது அது உதவும்!

கிரகங்கள் உச்சம்பெற்று இருக்கும் நிலை உன்னதமானது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்

1. சூரியன் மேஷத்தில் உச்சம். அது செவ்வாயின் வீடு. நட்பு வீடு
2. புதன் கன்னியில் உச்சம். அது அவருக்கு சொந்த வீடு.
3. குரு கடகத்தில் உச்சம் அது சந்திரனின் வீடு. நட்பு வீடு
4. சனி துலாமில் உச்சம் அது சுக்கிரனின் வீடு. நட்பு வீடு
---------------------------------------------------
5. சந்திரன் ரிஷபத்தில் உச்சம். ஆனால் அது நட்பு வீடல்ல சம வீடு
6. செவ்வாய் மகரத்தில் உச்சம். அது சனியின் வீடு அது செவ்வாய்க்கு நட்பு வீடல்ல சம வீடு
7. சுக்கிரன் மீனத்தில் உச்சம் அது குருவின் வீடு. சுக்கிரனுக்கு அது நட்பு வீடல்ல சம வீடு
-----------------------------------------------------
8 & 9 ராகுவும், கேதுவும் உச்சம் பெறுவது விருச்சிகத்தில். ஆனால் அது பகை வீடு!
(பகை வீட்டில் எப்படி உச்சம் என்று யாரும் கேட்க வேண்டாம். பதில் சொல்ல அதை வகுத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை)
-----------------------------------------------------------
உங்கள் வசதிக்காக, கிரகங்கள் ஒன்றிற்கொன்று உள்ள உறவை அட்டவணைப் படுத்திக் கொடுத்துள்ளேன். அதை மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்





அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!