மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 831 - 840. Show all posts
Showing posts with label Lessons 831 - 840. Show all posts

21.10.14

Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?


Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?

நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்
துன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு
முக்கியமான பாடல் இது!

நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது
என்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,
நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்
என் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,
கிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.

சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?

பார்க்க வேண்டும்.

நாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல
முழுமையாக முருகனருள் பெற்றவர்களா? முருகனை நேரில் சந்தித்தவர்களா? இல்லையே! நாம் முருக பக்தர்கள் என்பது
மட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.

நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!
Lord Muruga will give us withstanding power. 
தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்!

எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள்
கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள்
என்கிறோம்.

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.

அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும்  சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆதிரை பரணி கார்த்திகை
   ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
   சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
   வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
   பாம்பின் வாய்த் தேரைதானே!

பாடலுக்கான விளக்கம்:

1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.10.14

வானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்!


திருநள்ளாற்றில் உறையும் சனீஷ்வரர்

வானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்!

கிரகங்களில் சனீஷ்வரன் ஒருவனுக்குத்தான் ஈஸ்வர பட்டம். வேறு எந்த கிரகத்திற்கும் அந்தப் பட்டம் கிடையாது! அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும்கூடக் கிடையாது.

சனீஷ்வரனுக்காக யாரும் யோசிக்காதீர்கள்! சனீஷ்வரனுக்காக யாரும் பயப்படாதீர்கள். அவன்தான் நம் ஆயுள்காரகன். அத்துடன் அவன்தான் நமது கர்மகாரகன். நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிப்பவன் அவன்தான்!

நீங்கள் மாவட்ட ஆட்சியாளராக வேண்டுமா? அல்லது அமைச்சராக வேண்டுமா? அல்லது பெரிய தொழிலதிபராக வேண்டுமா? அவன் அருள் இருந்தால்தான் அது நடக்கும். இல்லை என்றால் நடக்காது.

ஒரு ஜாதகன், ஜாதகப்படி மாடு மேய்க்க வேண்டுமென்றால், அவன் மாடுகளைத்தான் மேய்க்க வேண்டும். அவற்றை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக மாடு மேய்ப்பதைக் கேவலமாக நினைக்காதீர்கள். நகரங்களில் அல்லல்படும் ஒரு கணினிப் பொறியாளனைவிட மாடு மேய்ப்பவன் சுகமாக, நிம்மதியாக இருக்கிறான். பால் லிட்டர் ரூ 46:00 ற்கு விற்கிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

ஒருவனுக்கு அற்ப ஆயுளா? அல்லது மத்திம ஆயுளா? அல்லது தீர்க்கமான பூரண ஆயுளா என்பதைத் தீர்மானிப்பவனும் அவன் தான். சிலர் 50 வயதைத் தாண்டு முன்பாகவே, விடை பெறாமலேயே, வானகம், அதாவது போட்டது போட்டபடி உலகைவிட்டுச்  சென்று விடுவார்கள். அதெல்லாம் நிர்ணயிக்கப்பெற்ற ஆயுளின்படிதான் நடந்திருக்கும்!

எனக்கு சனீஷ்வரனை மிகவும் பிடிக்கும். என் ராசி நாதன் அவன் தான். ராசி நாதன் என்பதற்காக அவன் என்னைச் சும்மா விடவில்லை. அவனுடைய மகாதிசையில் என்னைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கிறான். மொத்தம்  19 ஆண்டுகள். அதில் சுயபுத்தி நீங்களாக மீதமுள்ள 16 வருடங்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளேன். என்னை எழுத்தாளனாக்கியதும் அவன்தான் அதே சனி திசையின் பின் பகுதியில்தான் நான் எழுதத் துவங்கினேன். எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், சோதனைகளும், எதிர்கொண்ட துரோகங்களும் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்கள்தான் என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன! எனது சிறுகதைகளில் வருகின்றன!

சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்:

திருநள்ளாறுதான் சனீஷ்வரனுக்கான ஸ்தலம். திருநள்ளாறைப் பற்றியும், சனீஷ்வரனைப் பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சைவமதத்திற்குப் பெரும் தோண்டாற்றினார். அவர்காலத்தில் ஜைனர்கள் எல்லா திசைகளும் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி சைவத்தை மேலோங்கச் செய்தது திருஞானசம்பந்தப் பெருமான்தான் என்றால் அது மிகையல்ல!

மதுரையில் நடந்த விவாதத்தில் ஜைனர்கள் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சைவத்தின் மேன்மையை நிலை நிறுத்தினார் அந்த மகான்.

ஜைனர்கள் தங்கள் மதத்தின் முக்கியமான மந்திரம் ஒன்றை ஒரு பனை ஓலையில் எழுதிக் கொடுத்தார்கள். திருஞானசம்பந்தர் தேவாரத்தில்
உள்ள 49ஆவது பாடலை எழுதிக்கொடுத்தார். அது திருநள்ளாற்றில்
உறையும் சிவபெருமானுக்காக உள்ள பதிகம். இரண்டு ஓலைகளையும்
தீயில் இட்டார்கள். அவர்கள் கொடுத்த ஓலை நொடியில் வெந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஞானசம்பந்தர் எழுதிக் கொடுத்த ஓலை அப்படியே மீண்டு வெளியில் வந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை. திருநள்ளாற்றில் உறையும் சிவனாருக்கும் சனீஷ்வரனுக்கும் அத்தனை
சக்தி. அதனால்தான் நாம் திருநள்ளாற்றைப் பக்தியுடன் வணங்கவேண்டும்.

அதே போல நாம் அறியாத இன்னொரு ஸ்தலமும் உள்ளது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு அருகே உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.
சனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.

காலம் யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

காலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். வானம்தான் எனக்குக் கூரை என்று கூறிவிட்டார்.

இன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.

சிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.

சனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா? முடியாதல்லவா? ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், ஆனால் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. பூட்டுக்களும் இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். (யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.

அதுதான் ஆச்சரியமான விஷயம்.

வாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள். அந்த சனீஷ்வரன் கோயிலைப் பற்றிய சில படங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

1

2
3


4
5

6
-------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------

மேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைத் தட்டிப் பாருங்கள்:
URL: http://en.wikipedia.org/wiki/Shani_Shingnapur

20.10.2014 திங்கட்கிழமையன்று வகுப்பறைக்கு விடுமுறை. அன்று வரவேண்டிய பாடம்தான் இன்று வந்துள்ளது. அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.10.14

Quiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!


Quiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!

புதிர் எண் 69ற்கான விடை

16.10.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, ஒரு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

”ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.” என்று கூறியிருந்தேன்.

சரியான பதில்:

1.  ஜாதகிக்குத் திருமணம் ஆனது.
2. அதீதத் தாமதத்துடன் அவருடைய 37வது வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.
3. சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது.

மிகச் சரியான பதிலை ஒருவரும் எழுதவில்லை. ஆனால் ஒட்டிய பதிலை,  தங்களுடைய அலசலை எழுதியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எந்த வயது என்பதை ஒருவரும் எழுதவில்லை. அத்துடன் எழுதியவர்கள் சனி திசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். சனி திசை குரு புத்தி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யாருக்கும் 100 மதிப்பெண்கள் இல்லை. அந்தப் பத்துபேர்களுக்கும் 60 மதிப்பெண்கள் (பொதுவாகக் கொடுத்துள்ளேன்)

தசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை!
இந்த ஜாதகியின் திருமணம் அதீத தாமதம் ஆனதற்குக் காரணம் அடுத்தடுத்து வந்த மகா திசைகள்தான்!

1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் வக்கிரமாகியும் உள்ளார். நீசபங்கமும் ஆகியுள்ளார்
2. அவர், அதாவது குரு பகவான், சனியுடன் சேர்ந்துள்ளார். சனி எட்டாம் அதிபதி. அத்துடன் அவரும் வக்கிரகதியில் உள்ளார்
ஆகவே அந்த இரண்டு கிரகங்களின் திசைகளும் ஜாதகியின் திருமணத்திற்குச் சாதகமாக இல்லை.

அந்த இரண்டு கிரகங்களும் வக்கிரம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டும் விதமாக அட்டவணை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அதை எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை!

ஜாதகியின் 37வது வயதில் சனி திசை, குரு புத்தியில்  ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.

சனி திசை முடிந்து, அடுத்து வந்தது புதன் மகா திசை. புதன் லக்கினாதிபதி. அவர் நல்ல நிலைமையில் லக்கினத்திலேயே உள்ளார். அத்துடன் அவர் ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்க்கிறார். ஆகவே அவருடைய திசையில் ஜாதகியின் வாழ்க்கை திருமண யோகத்துடன் இருக்க வேண்டும். திருமணமும் நடைபெற்றது. அதற்கு உதவும் விதமாக சனி திசையின் கடைசி புத்தியான குரு புத்தியில், அதாவது ஏழாம் வீட்டுக்காரன் குருவின் புத்தியில் (sub period) திருமணத்தைக் குரு பகவான் நடத்திவைத்தார்

அன்புடன்,
வாத்தியார்
=====================================================================
1
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
அம்மனிக்கு திருமணம்!!!
சனி திசையில் நடந்திருக்கும்.
அதேசனிதிசையில்
பிரிவினையும் நடந்திருக்கும்.
புதனும்,சுக்கிரனும் கைகொடுப்பார்கள்./////
-------------------------------------------------------
2
/////Blogger valli rajan said...
Dear Guruji,
1.Guru is neecham but it become neechabanga raja yogam because it is with lord eight lord. eight lord in its own house. 
2.Venus in 12 house but has jupiter aspect.
3.Strong Lagna lord and it's view on 7th house.
4.Guru view on 2nd house.
5.Guru in its own house and form gajakesari yogam in navamsa.
6.Venus is also well placed in navamsa.
Definitely there is marriage, it should have been on saturn dasa mercury sub period./////
-----------------------------------------------------
3
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Here is my quick analysis.
Definitly Married: 
1. Laknathipathi Budha in laknam and looks 7th house.
2. 7th lord Guru is in 8th house and neecham, but in own house in navamsam
3. Sukra is in 12th house, but its own house.
Mariage is delayed due to Guru in 8th house with Sani and Sun looks at it. She married in the mid sani dasa, Sani dasa/Chandra Budhi/////
-------------------------------------------------------
4
/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
மிதுன லக்ன ஜாதகிக்கு, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். அவருக்கு தீயவர்கள் பார்வை இல்லை. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் திரிகோணத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் 10ம் பார்வையை பெறுகிறது. அதனால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமணம் தாமதமாகும்.
ஏழாம் அதிபதியான குரு நீச்சம் அடைந்திருந்தாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க ராஜ யோகமாகி விடுகிறது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தையும் ஏற்படுத்துகிறது. நவாம்சத்திலும் குரு மீனத்தில் ஆட்சி பெற்று சந்திரன் சேர்க்கை பெற்றுள்ளது.
இத்துடன் செவ்வாயும் சுக்கிரனும் 6 மற்றும் 5ம் வீடுகளுக்கு அதிபதிகளாகி பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று இருக்கும். அதிலும் யோக்காரகனான சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறது. எனவே ஜாதகிக்கு 1989 ல் அவருடைய 28 வது வயதில் சனி திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.//////
---------------------------------------------------------
5
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
கொடுக்கப் பட்டுள்ள புதிருக்கான விடை:
ஜாதகிக்கு திருமணம் தனது 31வது வயதில் சனி தசை சூரியன் புத்தியில் நடந்திருக்க வேண்டும்.
அலசல்:
1) மிதுன லக்கினத்தில் லக்கினாதிபதியும், சுகாதிபதியுமான புதன் சுப பலத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். லக்கினமும்,4 மற்றும் 7ம் இடமும் சுப பலம் பெற்றுள்ளன.
2) குடும்பாதிபதி சந்திரன் பூர்வபுன்னிய ஸ்தானத்தில் அமர்வு, ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சம்.
சுக்கிரனுக்கு 12மிடம் மறைவு இல்லை என்பது ஜோதிட விதி.
3) ஏழாமதிபதி குரு எட்டில் மறைவுடன் நீச்சமடைகிறார். ஆயினும் எட்டாம் அதிபதி சனியுடன் கூட்டு ஆனதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.
சனி,குரு இருவருமே உத்திராடம் நட்சத்திரத்தில்.குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன்,ஆட்சி பெற்ற சனியின் நட்சத்திரமான பூசத்தில்.
நட்சத்திர பரிவர்த்த்னையால் 8ம் இடம் கெடவில்லை.
ஆக, திருமணத்தை குறிப்பிடும் 2,4,7,8 மற்றும் 12ம் இடங்கள் சுப பலம் பெற்றுள்ளதால் திருமணம் கட்டாயமாக நடந்திருக்க வேண்டும்,
நன்றியுடன்,
-பொன்னுசாமி./////
--------------------------------------------------------
6
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
புதிர் போட்டி வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு முதலில் நன்றி.
ஜாதகிக்கு இருதார யோகம் அமைப்பு உள்ளது. காரணம் இரண்டில் சூரியன், எட்டில் சனி, பன்னிரண்டில் மாந்தி மற்றும் காலத்திற காரகன் சுக்கிரன். இருப்பினும் எட்டில் அமர்ந்த குரு பகவான் இரண்டாம் வீட்டையும், பனிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். எனவே 28 வயதில் சனி திசையில் சுக்கிர புக்தியில் கோட்சார குரு 9இல் இருந்தபோது திருமணம் நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்/////
--------------------------------------------------------
7
////Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. Lagna lord mercury in power aspects 7th place.
2. Marriage karaka venus in 12th place, but own place.
3. 2nd lord in 5th place Lakshmi sthanam.
4. Jupiter 7th lord in 8th aspects 2nd. but neecham. join with sani. 8th lord in 8th.
5. Sani made the marriage late.
The Person got married late.////
------------------------------------------------------
8
////Blogger Narayanan V said...
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும், லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது, களத்திரகாரகன் 12ம் வீட்டில், அதுவும் மாந்தியுடன். ஆயினும் லக்னாதிபதி புதன் நேராக 7ம் இடத்தை பார்பதால், அவர் புக்தியில் கல்யாணம் ஆகி இருக்கும்.
V.Narayanan, pondicherry/////
-------------------------------------------------------
9
////Blogger Radha Sridhar said...
வணக்கம். 7ம் வீட்டை லக்கினதிலேயே ஆட்சி புரியும் சுப கிரகம் புதன் பார்க்கிறார். நன்மை.
7ம் அதிபன் 8ல் நீச பங்கம் அடைந்துள்ளார். அங்கு சனி ஆட்சி அதனால். சுக்கிரன் 12ல் மாந்திஉடன் அமர்ந்தாலும், குரு பார்வை, சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுவதால் தோஷம் நிவர்த்தி.
குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், நிவர்த்தி.
ஆதலின் தாமதமாக திருமணம் நடக்கும். குடும்பம் அமையும்.
அன்புடன்////
-------------------------------------------------------
10
Blogger Kirupanandan A said...
தாமதமாக 30 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர். 7ம் அதிபதி 8ல் நீசமாகி மறைவு. ஆயினும் நீச பங்கமாகியிருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் ஆட்சியானதால் திருமணம் உண்டு. அடுத்து லக்கினாதிபதி புதன் ஆட்சியாகி 7ம் இடத்தைப் பார்க்கிறார்./////
-----------------------------------------------------
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.10.14

Astrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா?


Astrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா?

Quiz No.69

புதிர் போட்டி எண்.69 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

15.10.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே! அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.






ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.10.14

Numerology: Place of living எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2


Numerology: Place of living

எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2

சென்ற பாடத்தின் தொடர்ச்சி இது!

13.10.2014

நீங்கள் பிறந்த ஊரின் எண்ணும், உங்களுடைய பிறந்த எண்ணும் ஒன்றாக இல்லை என்றால், நீங்கள் பிறந்த ஊரே உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பிறந்த ஊரின் மேல் அபிமானம் அல்லது காதல் இருப்பது இயற்கையானது! அடிக்கடி அல்லது எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம். வயதான காலத்தில், அங்கேயே சென்று தங்கி (செட்டிலாகி) நம் காதலைக் கொண்டு செலுத்தலாம். அதாவது பணி ஓய்வு காலத்தில் அதைச் செய்யலாம். ஆனால் பொருளீட்ட வேண்டிய காலத்தில், அதாவது வயது 21ற்கு மேல் 60 வயதுவரை எண் கணிதப்படி ஒத்துவரும் ஊரில் நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அதற்கு எண் கணிதம் ஒரு மாற்று வழியையும் தந்துள்ளது. அதாவது பிறந்த எண் ஒரு ஊருடன் சரிவராதவர்களுக்கு இரண்டாவது சாஸ்சாக வேறு சில எண்களையும் தந்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நீங்கள் ஒன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 4, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
6 மற்றும் 7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் இரண்டாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 7, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர் சரிப்பட்டுவராது!

நீங்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  5, 6, 7 மற்றும் 9. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
4 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் நான்காம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  1 மற்றும் 6 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஐந்தாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  எதையும் தேட வேண்டாம். உங்களுக்கு எல்லா ஊர்களுமே சரிப்பட்டுவரும்.
ஆனாலும் 2 அல்லது 4ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்களைத் தவிர்ப்பது நல்லது!

நீங்கள் ஆறாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  3, 4, மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஏழாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 2 அல்லது 3. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 9ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் எட்டாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 1, 2 & 4 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 6ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஒன்பதாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  1, 2, 3, அல்லதுr 6. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

Each number has a numerological vibration.
------------------------------------------------------------
இளையராஜாவை எடுத்துக்கொள்வோம்.

அவருடைய பிறந்த தேதி: 2.6.1943

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja

அவருடைய இயற்பெயர்: ஞானதேசிகன் (Gnanadesikan)
மாற்றி வைத்துக்கொண்ட பெயர்: Ilaiyaraaja
GNANADESIKAN = 3+5+1+5+1+4+5+3+1+2+1+5 = 36 = 9
ILAIYARAAJA = 1+2+1+1+1+1+2+1+1+1+1 = 13 = 4

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 5ஆம் எண் மட்டுமே ஒத்துவராது. மற்ற எண்கள் எல்லாம் ராசியானதே! அவருக்குப் பிறந்த ஊர், வசிக்கும் ஊர், வீட்டில் வைத்த பெயர், அவர் மாற்றி வைத்துக்கொண்ட பெயர் என்று அனைத்துமே வசப்பட்டுள்ளது! அதாவது ராசியாக உள்ளது! ஜாதகத்தில் அவருக்கு மகா புருஷ யோகம் உள்ளது. அதனால் அவருக்கு எல்லாமும் வசப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளார்
---------------------------------------------------------
எண்கணிதத்தைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

ஜோதிடம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை!

மருத்துவத்தில் Allopathy, Homeopathy, Ayurveda, Acupuncture போன்று பல பிரிவுகள் இருப்பதைப்போல, பல சிகிச்சைமுறைகள் இருப்பதைப்போல ஜோதிடத்தில் பல பிரிவுகளில் இந்த எண் கணிதமும் ஒன்று. விருப்பமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அல்லது நம் வகுப்பறை ஜோதிடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

அது உங்கள் சாய்ஸ்!

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.10.14

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

Lesson on Numerology 

எண் கணிதப் பாடம்

10.10.2014

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!
--------------------------------------------------------
நேற்று அகண்டவரிசை இணைய இனைப்பு படுத்திவிட்டது.
அதனால்தான் வகுப்பிற்கு வரமுடியவில்லை. நேற்று இரவுதான்
சரியானது. இதை உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன்.
--------------------------------------------------------
இன்றையத் தேதிக்கு, அதாவது 10 அக்டோபர் 2014ற்கு ஒரு சிறப்பு
இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரியாதவர்களுக்குப்
பிறகு நான் சொல்கிறேன்
---------------------------------------------------------
எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை
சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!

வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான்
பாடங்கள் மண்டையில் ஏறும்!

மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக
இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!

நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக்
கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக
இருக்கும், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம்
சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டு
மென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக
அந்தத் தொழில் நடக்கக்கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை
எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன
செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு என்ன
செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை
அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச்
சிறப்பாகச் செய்ய முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி,
புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து
கொண்டு அந்தத் தொழிலை எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை,
பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால்
வேண்டாம் என்று சொல்லி, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில்
வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய
நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை
போட்டுத் தாருங்கள் என்று கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி
அனுப்பிவிட மாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, 
New Jersey அல்லது Boston  என்று எந்த ஊராக இருந்தாலும்,
எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர
வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க
அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா இருக்கிறாரா அல்லது
மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப்
பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும்
என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம். “பார்த்து என்ன ஆகப் போகிறது? இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். பாடத்தை மட்டும் படியுங்கள். மற்ற விருப்பங்கள் உங்கள் சாய்ஸ்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள்
பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச்
சுருக்கி ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.

நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்:
SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும்
சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9

நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர்
என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த
இடமும் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the 
town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa 
Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father of Damarla Venkatadri 
Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official 
use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, 
to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from 
Madraspattinam, a fishing village north of Fort St. George. However,
 it is uncertain whether the name 'Madraspattinam' was in use before 
European influence. 

After the British gained possession of the area in the 17th century, 
the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and 
the British referred to the united town as Madrasapattinam. The state 
government officially changed the name to Chennai in 1996, at a time when 
many Indian cities were being renamed. However, the name Madras 
continues to be occasionally used for the city as well as for places 
named after the city, such as the University of Madras and The Indian 
Institute of Technology, Madras. (தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7

ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர்
இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது.
7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா
என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? இரண்டு எண்கள் உள்ளதே எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான்.
1996ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின்
பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P
----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7
------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.9.14

Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!


Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!

Popcorn Post 55

29.9.2014

குருவைப் போலவே சந்திரனும் சுபக் கிரகம். அத்துடன் நம் நட்சத்திரம்
மற்றும் ராசிக்கு அதிபதி சந்திரன். அவருடைய மகா திசை பல
விதங்களிலும் நன்மையானதாக இருக்கும்.

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - சகல விதங்களிலும் நன்மைகள் எல்லாம் கிடைக்க
வில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம்.
அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின்
அளவு மாறுபடும். ஜாதகத்தில் சந்திர பகவான் ஆட்சி அல்லது
உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா
புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று சந்திர மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு சந்திர மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
சந்திர புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம்  3,600 நாட்கள் (10 ஆண்டுகள்) வரும். அப்போது சந்திரன்
உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி சந்திர மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும்  சுயபுத்தி, குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி,  ஆகியவைகள் (சுமார் 5 ஆண்டு காலம்) நன்றாக இருக்கும். எப்போது
நன்றாக இருக்கும்? அந்த 4 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

சந்திர மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம்
கீழே கொடுத்துள்ளேன்!


உதாரணத்திற்கு சந்திர மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய
புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

சொல்லவே சந்திர திசை வருஷம் பத்தில்
    சுகமுடைய சந்திர புத்தி மாதம்பத்து
நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்
    நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
    சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!

நிதி சேரும் என்றிருக்கிறதே - அது போதாதா நமக்கு!  எல்லா
வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.9.14

Astrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை!


Astrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை!

Popcorn Post 54

22.9.2014

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களில்
முதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய
பார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள்.
அவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால்,
அவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று
நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய
ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும்.
ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த
நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்
தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம்
என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான்
நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு
ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்
ஒன்றும் ஆகாது.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்
களுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்
களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
குரு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 5,760  நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு
பகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு
சரியாக இருக்கும்.

சரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும்  குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி,
சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்)
நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து
நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற
அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

குரு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

















உதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன்
சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

தானென்ற வியாழதிசை ஒருபத்தாறு
    தன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
    நன்றாக அதன் பலனை நவிலக் கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
    குறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
    மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்

லாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும்
என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

17.9.14

Astrology: Popcorn Post: சள்ளையான சனி மகா திசை!


Astrology: Popcorn Post: சள்ளையான சனி மகா திசை!

Popcorn Post 53

17.9.2014

சள்ளை என்றால் தொல்லை என்று பொருள்படும். ஆகவே தொல்லைகள் நிறைந்த சனி திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தொல்லைகளுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியாத தொல்லைகளா? ஆகவே சொல்லவில்லை!

அதீத தீய கிரகங்கள் மூன்றில், சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றியும், நேற்றையப் பதிவில் ராகு மகா திசையைப் பற்றியும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்று சனி திசையைப் பற்றிப் பார்ப்போம்.

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் சனி புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6840 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது சனி திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி சனி திசையில் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் புதன் புத்தி, சுக்கிர புத்தி,குரு புத்தி, (மொத்தம் 8 ஆண்டுகள், 8 மாதங்கள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

சனி மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!


















உதாரணத்திற்கு சனி மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு
    கெடியான வருஷமது பத்தொன்பதாகும்
கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று 
    கேடான நாளதுவும் மூன்றதாகும்
பாளப்பா பாவையரும் பாலன்தானும்
    பாங்கான வருஷம் மூன்றில் சாவதாகும்
ஆளப்பா அலைச்சது மெத்தவுண்டாம்
   அளவில்லா தனச் சேதமாகுந்தானே

சாவதாகும் என்றால் பயப்படவேண்டாம். சில சமயங்களில் ’செத்துப் பிழைத்தேன்’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.9.14

Astrology: Popcorn Post: ரகளையான ராகு மகா திசை!


Astrology: Popcorn Post: ரகளையான ராகு மகா திசை!

Popcorn Post 51

16.9.2014

ரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே
தகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள்
நீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில்
தகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்!

சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றிப் பார்த்தோம்

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு
ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்
ஒன்றும் ஆகாது.

இன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்!

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்து
விட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும்
ராகு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா
என்றால், அதில் வரும் குரு புத்தி,  புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம்
8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக
இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது
திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது
ஊற்றிக் கொண்டு விடும்!

ராகு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!


உதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

காணவே ராகுதிசை வருஷம்பதினெட்டு
    கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி
தோணவே மாதமது முப்பத்திரெண்டு
    துகையான நாளதுவும் பனிரெண்டாகும்
யேனவே சத்துருவால் நிபந்தனையோடும்
    யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழாம்
போனவே பழம்பொருளும் சேதமாகும்
    பெலமான நோயதுவும் கூடிக்கொல்லும்

கொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் படுத்து
பவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று
சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!