மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.10.14

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

Lesson on Numerology 

எண் கணிதப் பாடம்

10.10.2014

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!
--------------------------------------------------------
நேற்று அகண்டவரிசை இணைய இனைப்பு படுத்திவிட்டது.
அதனால்தான் வகுப்பிற்கு வரமுடியவில்லை. நேற்று இரவுதான்
சரியானது. இதை உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன்.
--------------------------------------------------------
இன்றையத் தேதிக்கு, அதாவது 10 அக்டோபர் 2014ற்கு ஒரு சிறப்பு
இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரியாதவர்களுக்குப்
பிறகு நான் சொல்கிறேன்
---------------------------------------------------------
எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை
சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!

வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான்
பாடங்கள் மண்டையில் ஏறும்!

மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக
இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!

நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக்
கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக
இருக்கும், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம்
சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டு
மென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக
அந்தத் தொழில் நடக்கக்கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை
எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன
செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு என்ன
செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை
அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச்
சிறப்பாகச் செய்ய முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி,
புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து
கொண்டு அந்தத் தொழிலை எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை,
பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால்
வேண்டாம் என்று சொல்லி, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில்
வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய
நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை
போட்டுத் தாருங்கள் என்று கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி
அனுப்பிவிட மாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, 
New Jersey அல்லது Boston  என்று எந்த ஊராக இருந்தாலும்,
எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர
வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க
அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா இருக்கிறாரா அல்லது
மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப்
பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும்
என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம். “பார்த்து என்ன ஆகப் போகிறது? இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். பாடத்தை மட்டும் படியுங்கள். மற்ற விருப்பங்கள் உங்கள் சாய்ஸ்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள்
பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச்
சுருக்கி ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.

நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்:
SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும்
சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9

நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர்
என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த
இடமும் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the 
town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa 
Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father of Damarla Venkatadri 
Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official 
use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, 
to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from 
Madraspattinam, a fishing village north of Fort St. George. However,
 it is uncertain whether the name 'Madraspattinam' was in use before 
European influence. 

After the British gained possession of the area in the 17th century, 
the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and 
the British referred to the united town as Madrasapattinam. The state 
government officially changed the name to Chennai in 1996, at a time when 
many Indian cities were being renamed. However, the name Madras 
continues to be occasionally used for the city as well as for places 
named after the city, such as the University of Madras and The Indian 
Institute of Technology, Madras. (தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7

ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர்
இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது.
7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா
என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? இரண்டு எண்கள் உள்ளதே எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான்.
1996ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின்
பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P
----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7
------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம். உலக மனநல தினம். ஊர் பதிவு ஒத்துவரமாதிரி தெரியுது ஜயா :-D

    ReplyDelete
  2. வணக்கம் சார்...

    எந்த எண்னில் பிறந்தாலும்!
    எந்த ஊரில் வசித்தாலும்!
    ஜாதகத்தில் 1,5,9 ம் இடம் கெட்டால்

    தேறாதய்யா தேறாது
    வாழ்க்கை எப்பவும்தேறாது!!!

    ஆசையிருக்கும் தாசில்பன்ன
    அதிர்ஸ்டமிருக்கும் கழுதை மேய்க்க.

    மாறாதய்யா மாறாது
    மனமும் குணமும் மாறாது........

    ReplyDelete
  3. அய்யா, முதற்கண் காலை வணக்கம். நலம் பெற்று விட்டீர்கள் என நம்புகிறோம் !. எங்கள் பிரார்த்தனைகள் என்றும் உங்களுக்கு உண்டு !. பதிவு அருமை !. back to form !

    ReplyDelete
  4. வணக்கம் குரு,

    இந்த பதிவு முன்பே வந்திருந்தாலும் நன்றாக மனதில் பதியும்படி உள்ளது. இன்றைய சிறப்பு ரா.கி. நாராயணன்(R. K. Narayan) அவர்களின் 108வது பிறந்தநாள். சரிதானா என்று நீங்களே சொல்லுங்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  5. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...
    ஊர்களின் எண்கணிதம் சரி...

    அருமையாக இருந்த மதராஸ் =மெட்ராஸ் ஸ்டேட் ..என்று இருந்ததை .சென்னை .என்றும் தமிழ் நாடு ..என்றும் மாற்றி நமது மாநிலத்தை குட்டி சுவராகி விட்டார்கள் ....

    மெட்ராஸ் என்ற சொல்லில் ....என்று இருப்பது ...ஆண் எழுத்து நல்ல வளர்ச்சி உண்டாக கூடியது .மேலும் சுக்கிரனுடிய ஆதிக்கம் ...
    மெட்ராஸ் ஸ்டேட் .எனும்போது ..32 எண் வரும் புதன் ஆதிக்கம் தெய்வீகமானது ...

    இப்போ தமிழ் நாடு எனும்போது கடைசியில் * u * எழுத்து வருகிறது .இது மிகவும் கெடுதல் தரக்கூடியது .மக்களிடம் ஒழுக்க குறைவு ..தவறான பழக்க வழ்கக்கங்கள் வரும் ..
    .
    தற்போது பெங்களூர் என்று இருந்ததை பெங்களுரு என மாற்றி இருக்கிறார்கள் ..பல விஒதமன இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்
    ...
    மொத்ததிதில் ஓட்டை வீட்டில் குடி இருக்கிறோம் நம் தலை எழுத்து ...
    ஆதங்கம் ....

    ReplyDelete
  6. புதிதாக எழுதப்பட்டு இருந்தாலும், பழைய பாடத்தின் சாயல்தான்.தெளிவாகவும் சட்டென மனதில் பதியும் வண்ணமும் உள்ளது.

    10 அக்டோபர் வருடந்தோறும் உலக மன நல நாளாகக் கொணடாடப்படுகிறது.
    மால்குடி டேஸ் ஆர்கே நாராயணன் அவர்களின் பிறந்த நாளாகும்.

    இது இல்லாமல் எண்ணற்ற‌ வரலாற்றுச் செய்திகள் அக்டோபர் 10ல் நடந்துள்ளன.விக்கி மஹராஜாவைக் கேட்டால் சொல்லுவார்.

    ReplyDelete
  7. அருமையான பாடம்...
    அழகாகச் சொல்லியிருக்கீங்க...
    தொடருங்கள் ஐயா...

    ReplyDelete
  8. 1. Each number can be counted against each planet
    2. Each planet has its friends and enemies
    3. Each planet posses its own positiveness and negativeness
    4. Each person name will sum up to a number which will relate #1,#2,#3.

    Now,
    4. Moon on Natal chart says my Raasi, the Nakshatra lord
    5. Lagna - Lagna lord
    6. Surya - Suryan amarum nakshatra lord

    Questions:
    1. When I count number on my name, should it be complete name or just initials?
    2. If we count on last Name/initials, how come it will be good to count only city name (shouldnt we count country into it as country can be said equivalent to Last Name)?
    3. On your next analysis, if you can relate the logical relation between the Disa/Bukthi - and #5,6,7 relation and how one can identify the correlations, it would be great!

    I will try to get in typing in Tamil in future.

    ReplyDelete
  9. //////Blogger ravanan s said...
    வாத்தியார் அவர்களுக்கு வணக்கம். உலக மனநல தினம். ஊர் பதிவு ஒத்துவரமாதிரி தெரியுது ஜயா :-D//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    எந்த எண்னில் பிறந்தாலும்!
    எந்த ஊரில் வசித்தாலும்!
    ஜாதகத்தில் 1,5,9 ம் இடம் கெட்டால்
    தேறாதய்யா தேறாது
    வாழ்க்கை எப்பவும்தேறாது!!!
    ஆசையிருக்கும் தாசில்பண்ண
    அதிர்ஸ்டமிருக்கும் கழுதை மேய்க்க.
    மாறாதய்யா மாறாது
    மனமும் குணமும் மாறாது......../////

    அதுவும் உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger Thirumal Muthusamy said...
    மிக அருமை////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger murali krishna g said...
    அய்யா, முதற்கண் காலை வணக்கம். நலம் பெற்று விட்டீர்கள் என நம்புகிறோம் !. எங்கள் பிரார்த்தனைகள் என்றும் உங்களுக்கு உண்டு !. பதிவு அருமை !. back to form !/////

    உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    இந்த பதிவு முன்பே வந்திருந்தாலும் நன்றாக மனதில் பதியும்படி உள்ளது. இன்றைய சிறப்பு ரா.கி. நாராயணன்(R. K. Narayan) அவர்களின் 108வது பிறந்தநாள். சரிதானா என்று நீங்களே சொல்லுங்கள்.
    நன்றி
    செல்வம்/////

    நீங்கள் சொல்வது சரிதான். பின்னூட்டத்தில் நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் கிருஷ்ணன் அவர்கள் ஆர்.கே நாராயணனைப் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்கள். அதையும் பாருங்கள்! நன்றி!

    ReplyDelete
  14. ///Blogger kamal said...
    World Mental Health Day////

    தகவலுக்கு நன்றி நண்பரே! அனைவரும் மன நலத்துடன் வாழ்வதற்கு இறைவனைப் பிரார்த்திப்போம்!

    ReplyDelete
  15. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...
    ஊர்களின் எண்கணிதம் சரி...
    அருமையாக இருந்த மதராஸ் =மெட்ராஸ் ஸ்டேட் ..என்று இருந்ததை .சென்னை .என்றும் தமிழ் நாடு ..என்றும் மாற்றி நமது மாநிலத்தை குட்டி சுவராகி விட்டார்கள் ....
    மெட்ராஸ் என்ற சொல்லில் ....என்று இருப்பது ...ஆண் எழுத்து நல்ல வளர்ச்சி உண்டாக கூடியது .மேலும் சுக்கிரனுடிய ஆதிக்கம் ...
    மெட்ராஸ் ஸ்டேட் .எனும்போது ..32 எண் வரும் புதன் ஆதிக்கம் தெய்வீகமானது ...
    இப்போ தமிழ் நாடு எனும்போது கடைசியில் * u * எழுத்து வருகிறது .இது மிகவும் கெடுதல் தரக்கூடியது .மக்களிடம் ஒழுக்க குறைவு ..தவறான பழக்க வழ்கக்கங்கள் வரும் ...
    தற்போது பெங்களூர் என்று இருந்ததை பெங்களுரு என மாற்றி இருக்கிறார்கள் ..பல விஒதமன இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்
    ...
    மொத்ததிதில் ஓட்டை வீட்டில் குடி இருக்கிறோம் நம் தலை எழுத்து ...
    ஆதங்கம் ....//////

    கவலை எதற்கு? நம்முடைய பாரத பூமி, புண்ணிய பூமி! பல மகான்கள் அவதரித்த பூமி. பல சித்தர்கள் அவதரித்த பூமி! எல்லாம் ஒரு நாள் சரியாகும். நம்பிக்கையோடு பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Manikandan said...
    Nalla Thodakkam.... Nandri ayya/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    புதிதாக எழுதப்பட்டு இருந்தாலும், பழைய பாடத்தின் சாயல்தான்.தெளிவாகவும் சட்டென மனதில் பதியும் வண்ணமும் உள்ளது.
    10 அக்டோபர் வருடந்தோறும் உலக மன நல நாளாகக் கொணடாடப்படுகிறது.
    மால்குடி டேஸ் ஆர்கே நாராயணன் அவர்களின் பிறந்த நாளாகும்.
    இது இல்லாமல் எண்ணற்ற‌ வரலாற்றுச் செய்திகள் அக்டோபர் 10ல் நடந்துள்ளன.விக்கி மஹராஜாவைக் கேட்டால் சொல்லுவார்./////

    உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  18. ////Blogger சே. குமார் said...
    அருமையான பாடம்...
    அழகாகச் சொல்லியிருக்கீங்க...
    தொடருங்கள் ஐயா.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger futureimpact said...
    1. Each number can be counted against each planet
    2. Each planet has its friends and enemies
    3. Each planet posses its own positiveness and negativeness
    4. Each person name will sum up to a number which will relate #1,#2,#3.
    Now,
    4. Moon on Natal chart says my Raasi, the Nakshatra lord
    5. Lagna - Lagna lord
    6. Surya - Suryan amarum nakshatra lord
    Questions:
    1. When I count number on my name, should it be complete name or just initials?
    2. If we count on last Name/initials, how come it will be good to count only city name (shouldnt we count country into it as country can be said equivalent to Last Name)?
    3. On your next analysis, if you can relate the logical relation between the Disa/Bukthi - and #5,6,7 relation and how one can identify the correlations, it would be great!
    I will try to get in typing in Tamil in future.//////

    பெயருடன் இன்ஷியலையும் சேர்த்துத்தான் கணக்கிட வேண்டும் நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com