மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Mini Stories. Show all posts
Showing posts with label Mini Stories. Show all posts

15.9.14

Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!



Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு இடத்தில் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.

அவரை அழைத்துண்டு செல்ல  ஒரு குதிரைக்காரன் சென்றிருந்தான். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.'என்னப்பா பண்ணலாம்?’னு கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப்  பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு.

‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்வளவுதான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது குருவிற்கு!!

நீதி : மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்வது நம்மைத்தான் முட்டாளாக்கும் !!!
-------------------------------------------------------
வாட்ஸ் அப்பில் வந்தது. எனது நடையில் எழுதி, உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.6.14

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான பதிவு இது!

 

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான பதிவு இது!

இன்றையப் பதிவு சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு மட்டும்! உம்மண்ணா மூஞ்சிகள், அதாவது எப்போதும் சீரியசாக இருக்கும் அன்பர்கள் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் தொடரவும்!
----------------------------------------------
ஒரு நாடு வளமாக இருந்தது. நாட்டின் மன்னரும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆட்சியில் அதுதான் முக்கியம்.

ஒரு நாள் மன்னருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. உடனே தன்னுடைய பிரதான அமைச்சரை அழைத்தார். அவரும் என்னவோ எதோ என்று ஓட்டமும் நடையுமாக உடனே வந்து சேர்ந்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாட்டில் முட்டாள்களும் இருப்பார்கள் அல்லவா?” என்று அவரிடம் மன்னர் கேட்டார்.

அமைச்சர் பதில் சொன்னார், "ஆம் மன்னா, அதில் என்ன சந்தேகம்? புத்திசாலிகளுடன் முட்டாள்களையும் கொண்டதுதான் உலகம்”

“அப்படியென்றால் நம் நாட்டிலுள்ள முட்டாள்களில் அதி முட்டாள்களான ஐந்து பேர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்”

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. அதி புத்திசாலிகளைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னால், ஏதாவது போட்டிவைத்து, அதில் வெற்றி பெறும் ஐவரைக் கொண்டு வந்து விடலாம். முட்டாள்களைக் கொண்டுவரச் சொன்னால் என்ன செய்வது? என்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்

ஆனாலும் என்ன செய்வது? மன்னரின் விருப்பமாயிற்றே, அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்று, அதற்கு ஒப்புக்கொண்டு, “சரி மன்னா!” என்றார்.

ஒரு மாதகாலம் நாடு முழுவதும் பயணம் செய்து, இரண்டு பேர்களை மட்டும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து அரசர் முன் நிறுத்தினார் அமைச்சர்.

அவரைப் பார்த்த உடன்,” என்ன அமைச்சரே இது?” என்றார் மன்னர்.

”இல்லை, மன்னா! நடந்ததைச் சொல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

“சரி, சொல்லுங்கள்” என்றார் மன்னர்.

”மன்னா, நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்து கொண்டு, தன் துணி மூட்டையைத் தன் தலை மேல் வைத்தவாறு, பயணம் செய்து கொண்டிருந்தான். ஏனப்பா அவ்வாறு செய்கிறாய் என்று கேட்டபோது, என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு அதிகச் சுமையால் வலிக்கக்கூடாது அல்லவா? அதற்காகத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது பெரிய முட்டாள்!.” என்று விளக்கமாகச் சொன்னார் அமைச்சர்.

“சரி, அடுத்து?”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரை மேல் வளர்ந்த புல்லை மேய்வதற்காக, தன் எருமை மாட்டைக் கூறையின் மேல் இழுத்து ஏற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான். இவன் தான் நம் நாட்டின் நான்காவது பெரிய முட்டாள்”

“மிக்க மகிழ்ச்சி அமைச்சரே.மிக்க மகிழ்ச்சி. எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் உங்கள் ஒப்புதலுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதை எல்லாம் விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் அலைந்து கொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்”

மன்னரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு,” அடுத்து?” என்றார்.

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கும்போது, அதைக் கவனிக்காமல், முட்டாள்களைத் தேடிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்று அதிரடியாகச் சொன்னார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிப் போய்விட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

அரசன் புத்திசாலியானதால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்.” என்று அமைச்சரின் கூற்றை ஒப்புக் கொண்டார்.

“சரி, முதலாவது முட்டாள் எங்கே?”

அமைச்சர் சொன்னார்: “ மன்னா, அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு, வலைப் பதிவுகளே கதி என்று வாழ்ந்து கொண்டிருப்பதோடு, இந்த மொக்கையான கதைக்கு வந்து, நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று ஆர்வத்துடன் தேடிப் படித்துக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதலாவது முட்டாள்!”
--------------------------------------------------------------
”அட சாமி (வாத்தி) கடைசியில் என்னையே முட்டாளாக்கி விட்டீர்களே?”

“நான் ஒன்றும் தப்பவில்லை. நானும் இந்தக் கதையை இணையத்தில் படித்து, முதல் முட்டாள் என்ற பட்டத்தோடுதான் இங்கே வந்துள்ளேன். மேலும் வெட்டித்தனமாக அதைத் தட்டச்சு செய்து வலையில் ஏற்றியிருக்கிறேன்.”
----------------------------------------------------------------
என்ன கதை நன்றாக உள்ளதா?
=========================================
முக்கிய அறிவிப்பு:

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆனால் வகுப்பறைக்கு விடுமுறை இல்லை. இல்லை. இல்லை. இன்று ஒரு பதிவு வெளியானதைப் போல நாளையும் ஒரு பதிவு உண்டு. அனைவரும் வகுப்பறைக்கு வந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூகுள் ஆண்டவரின் auto post வசதியால் அது சாத்தியப்படுகிறது. அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அவ்வப்போது நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்!

உங்களுடைய பின்னூட்டங்களும், அவற்றிற்கான வாத்தியாரின் பதில்களும் 25.6 2014 புதன்கிழமை காலையில் வெளியாகும். பொறுத்துக்கொள்ளவும்

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

27.11.13

Short Story: சிறுகதை - போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!


கதையின் தலைப்பு: போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 3

எங்கள் அப்பச்சி (My Father) சட்டென்று கதைகள் சொல்வதில் வல்லவர். சில கதைகள் அவர் மற்றவர்களுக்குச் சொல்லும்போது கேட்டதாக இருக்கும். இந்தக் கதை அப்படிக் கேட்டகதைதான்.  இது மூன்றாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து,  எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்.

ஒரு மாத இதழுக்காக எழுதியவற்றில் ஒரு கதையை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் செழிப்பாக இருந்தான். அவனுடைய நாடும் செழிப்பாக இருந்தது. ஆனால் மன்னனின் மனம் மட்டும் வறண்டுபோய்க் கிடந்தது. உள் மனதில், வெளியே சொல்ல முடியாத கவலை ஒன்று அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

என்ன கவலை?

அதை இப்போதே சொல்லி விட்டால் கதையின் சஸ்பென்ஸ் போய்விடும். ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

மன்னன் படு கஞ்சன். எல்லாவற்றையும் சேர்த்து வைப்பான்; பூட்டி வைப்பான். அதோடு கோபக்காரன்.

ஒரு நாள், வெளி தேசத்தில் இருந்து குதிரை வியாபாரியொருவன் மன்னனைப் பார்க்க வந்தான்.

வந்தவன் சும்மா வரவில்லை. மன்னன் தலையில் கட்டிவிட்டு, நல்ல வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போவோம் என்று பத்து  வெள்ளைக் குதிரைகளையும் கொண்டு வந்திருந்தான். வந்தவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அரசனைப் பூலோக இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளினான். நம் நாயகன் அதற்கெல்லாம் மசிபவனா என்ன? மசியவில்லை.

கடைசியில் வியாபாரி வந்த விஷயத்தைச் சொல்லிக் குதிரைகளைப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டான். மன்னனும் போய்ப்  பார்த்தான். அவனுடன் அவனுடைய கஞ்சத்தனமும் உடன் சென்று பார்த்தது.

பத்துக் குதிரைகளுமே நன்றாகத்தான் இருந்தன.

வியாபாரி ஒரு குதிரையின் விலை ஆயிரம் ரூபாய் என்றான். ஒரு மூட்டை அரிசி இரண்டு பணம் விற்ற காலம் அது!

கெளரவம் கருதி ஒரே ஒரு குதிரையை மட்டும் வாங்கிக் கொள்ள முடிவு செய்த மன்னன், “ஒரு குதிரை போதும். இருப்பதில் நல்ல குதிரையாக ஒரு குதிரையை நீயே காட்டு என்றான்!”

அவனும் காட்டினான். மன்னன் குதிரையின் காலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பினான்.

திரும்பியவன், தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, விற்பனைக்கு வந்திருக்கும் குதிரைகளில், நல்ல குதிரையாக ஒரு குதிரையைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினான்.

மந்திரி சட்டென்று யோசித்தவர், நாம் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று எண்ணியவர், மெதுவாகச் சொன்னார்:

“மன்னர்மன்னா, நமது நகரச் சிவன் கோவில் வாசலில், இரண்டு கண்களும் தெரியாத ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். அவனுக்குக் கண்பார்வை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பறிபோனது. பெரிய ஞானி அவன். அவனுடைய பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது. அவனை அழைத்து வந்து, குதிரைகளைப் பார்க்கச் சொன்னால், அவன் நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பான்.”

மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல், ஆட்களை அனுப்பி, அவனை அழைத்துவரச் செய்தான்.

வந்தவன், 5 நாழிகை நேரம் குதிரைகளைப் பரிசோதித்துவிட்டு, மன்னனை அழைத்து, இருப்பதில் இதுதான் உயர்வான குதிரை என்று சொல்லி ஒரு குதிரையைக் காட்டினான்.

வியாபாரி சொல்லி, மன்னன் அடையாளப் படுத்தி வைத்திருந்த குதிரைதான் அந்தக் குதிரை!

மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம்.

“எப்படிச் சொல்கிறாய்?”

“எல்லாக் குதிரைகளுக்கும் பைகளில் கொள்ளைப் போட்டு வாயில் கட்டிவிடச் சொன்னேன். அம்சமுள்ள குதிரை நிதானமாகத்தான் திங்கும். மேலும் அதன் சுவாசமும் சீராக இருக்கும். இன்னொன்று அதன் உடம்பில் இருந்து அதிக துர்நாற்றம் வீசாது. இதுபோன்று குதிரைக்கென்று உரிய சில லட்சணங்களை வைத்து அதைத் தெரிவு செய்தேன்”

மன்னனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தன்னுடைய முதன் மந்திரியை அழைத்து, அந்த ஞானிக்குப் பரிசு வழங்கி, அனுப்பிவைக்கும்படி சொன்னான்.

என்ன பரிசு?

தினமும் ஒருவேளை உணவு. அதிகாலை உணவு. உங்கள் மொழியில் சொன்னால் ப்ரேக்ஃபாஸ்ட். அவனுக்கு அடையாள  லட்சினை (Identity Card) வழங்கப் பெற்றது. அரசானையிடப்பெற்று, அதன் நகலும் (Copy palm leaf) வழங்கப் பெற்றது.

கோவிலுக்கு அருகில் இருந்த வேதவிற்பன்னர்கள் விடுதியில், அவனுக்கு அனுதினமும் காலைப் பலகாரம் வழங்கப்பெற்றது.

கதையின் நீளத்தையும், உங்கள் பொறுமையையும் கருதி, கதை இனிச் சுருக்கமாகச் சொல்லப்படவுள்ளது. விவரிப்புக்கள் இருக்காது.

                                      ********************************
இதேபோன்று அடுத்தமாதம் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அது ஒரு வைர வியாபாரியை வைத்து. அதிலும், தன் திறமையைக் காட்டி மன்னனை அசத்தினான் அந்தப் பிச்சைக்கார ஞானி.

மன்னனின் உத்தரவின் பேரில், அவனுக்கு அடுத்து ஒரு பரிசும் கிடைத்தது.

ஆமாம் அடுத்த வேளை உணவு. மதிய உணவு. அதே விடுதியில். அதற்கான உத்தரவையும் மன்னன் பிறப்பித்தான்

ஒருமாதம் சென்றது.

தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முடிவைத் தேடும் முகமாக, அந்தப் பிச்சைக்கார ஞானியை அழைத்து வரச் செய்த மன்னன், தன்னுடைய பிரத்தியேக அறையில் அவனை அமரச் செய்து, அவனுடன், பேசலுற்றான்.

“நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்கப்போகிறேன். அது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. உனக்குப் பதில் தெரிந்தால் சொல்லு. இல்லையென்றால் அதை நீ உடனே மறந்து விட வேண்டும்”

“உத்தரவு மன்னா!” என்று பதில் சொன்னான் அவன். வேறு என்ன சொல்ல முடியும்?

”உனக்கு ஜோதிடம் தெரியுமா?”

”தெரியும் மன்னா!”

“என் பிறப்பைப் பற்றி நாட்டில் சிலர் கேவலமாகப் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அரசல் புரசலாக என் காதில் விழுந்தது. அது பற்றி உன் கருத்து என்ன? என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து, அதைப் பற்றி நீ சொல்ல முடியுமா?”

“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே என்னால் சொல்ல முடியும்!”

மன்னனுக்குப் பயங்கர அதிர்ச்சி!

“ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணாதியங்களில் ஒன்றுகூட உங்களுக்கு இல்லை. அதைவைத்துச் சொல்கிறேன். உங்கள் பிறப்பில் கோளாறு இருக்கிறது. உங்கள் தந்தை உயிரோடு இல்லாததால், உங்கள் தாயாரைக் கேளுங்கள். சும்மா மேம்போக்காகக் கேட்காதீர்கள். மிரட்டிக் கேளுங்கள். உண்மை தெரியவரும்”

அதிர்ந்துபோன மன்னன், உடனே அதைச் செய்தான்

முதலில் உண்மையைச் சொல்ல மறுத்த மன்னனுடைய அன்புத் தாயார், தன் மகன், தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி  மிரட்டிக் கேட்டவுடன், கண்களில் நீரோடு உண்மையைச் சொல்லி முடித்தாள்.

தனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டு காலம் குழந்தைப் பேறு இல்லாமலிருந் ததையும், வேறு ஒரு ஆடவனுடன் கூடி, குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொண்ட கதையையும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னாள். அவனுடைய உண்மையான தந்தை தங்களுடைய அரண்மனையில் முன்பு வேலைபார்த்த சிப்பாய் என்றும் சொன்னாள். எல்லாவற்றையும் போட்டு உடைத்தாள்.

கலங்கிப்போன மன்னன், தன்னிலைக்கு வர இரண்டு நாழிகை நேரம் பிடித்தது

தன்னிலைக்கு வந்த மன்னன், திரும்பவும் வந்து அந்த ஞானியிடம் பேசலுற்றான்.

“ நீ சொல்வது உண்மைதான். என் தாயை விசாரித்துவிட்டேன். இப்போது சொல். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?”

“நானோ கண் தெரியாதவன். என் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவன். கோவில் வாசலில் அமர்ந்து, என்னைப் படைத்த ஆண்டவன் திருவடிகளில் விழுந்து, என்னை உய்வித்து, அவனுடன் என்னைச் சேர்த்துக் கொள்ளூம்படி மன்றாடிக்கொண்டிருப்பவன். கிடைக்கும் உணவையே உண்டு கொண்டிருந் தவன். வெய்யிலோ மழையோ, கோவில் வாசலிலேயே படுத்து உறங்குபவன்.
என்னுடைய மேன்மையை, இரண்டு முறைகள் உங்களுக்கு உணரவைத்திருக் கிறேன். அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, இவ்வளவு பெரிய அரண்மனையில் எங்காவது ஒரு ஓரத்தில் தங்கிக் கொள்ள என்னை அனுமதித்திருக்க வேண்டும். செய்தீர்களா? முதலில் ஒருவேளை உணவிற்கு வழி செய்தீர்கள். அடுத்த சந்தர்ப்பத்தில்
எனக்கு இரண்டாவது வேளை உணவிற்கும் உத்தரவு கொடுத்தீர்கள். உண்மையான அரச வாரிசென்றால் இந்த நீச குணமெல்லாம் இருக்காது. அதைவைத்துத்தான் சொன்னேன்!”

மன்னன் அதிர்ந்து விட்டான். அத்துடன் அரண்மனையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவனைத் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தான்.

நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள். நல்ல  உயரிய குணம் உடையவர்களாகவே இருப்பார்கள்

இதைத்தான் அவ்வையார் தனது மூதுரைப் பாடலில் இவ்வாறு அருமையாகச் சொன்னார்:

    “அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
     நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
     கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
     சுட்டாலும் வெண்மை தரும்


பொருள்:  நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் குணம் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது
=============================================================
கதை எப்படி இருந்தது.? பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================================

31.12.12

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

இளம் தம்ப்திகள் ஒரு பழைய வீட்டிற்குக் குடிபோனார்கள். அது மாடி வீடு.

பக்கத்து வீட்டு பெண்மணி, அந்த அதிகாலை நேரத்தில், துணிகளைத் துவைத்து முடித்து, கொடிக் கம்பியில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.

அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி தன் கணவனிடம் சொன்னாள்: “பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே துவைக்க வில்லை. அங்கங்கே  அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை சோப்பை மாற்றினால், துணிகள் பளிச்சிடலாம்"

அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன், அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.

அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

அன்று காலையில், ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும் துணைகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி. அவைகள் சுத்தமாகவும்,  பளிச்சென்றும் இருந்தன!

ஆச்சரியம் மேலிட, தன் கணவனிடம் சொன்னாள்: “இந்த அதிசயத்தைப் பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி, சரியாகத் துவைத்து இருக்கிறாள். அவளுக்கு யார்  சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை!? ”

அவளுடைய் அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான்: “இன்று அதிகாலையில் எழுந்து, நமது வீட்டு ஜன்னலை நான் நன்றாக துடைத்திருக்கிறேன். collins Liquid  போட்டுத் துடைத்திருக்கிறேன்.”

மனைவி வாயடைத்துப்போய் விட்டாள். அவளால் மேற் கொண்டு ஒன்றும் பேச முடியவில்லை.

அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம்!

அன்புடன்
வாத்தியார்
 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!