பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி
இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table
பாஸந்தி கிண்ணம் ஒன்று
கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!
கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.
சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.
மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?”
என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.
உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.
சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:
“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”
அதுதான் கவியரசர்!
---------------------------------------------------------------------
பாஸந்தி கிண்ணம் இரண்டு
உன்பாடல் பாதி; என்பாடல் பாதி
ஒன்றாகும்போது கீதம் - இனி
தன்பாதை மாறி உன்பாதை தேடி
வந்தாடும் எந்தன் பாதம்!
- கவிஞர் மு.மேத்தா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா
1
இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய சைக்கிள், ஒரு ரூபாய்க் காற்று இல்லையெனில் பயன்படாது.
முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய செருப்பைக் காலில்தான் அணிகிறோம். முப்பது பைசா குங்குமம் நெற்றிக்குப் போகிறது.
அதுதான் வாழ்க்கை
-----------------------------------
பக்கோடா
2
பாசம், மென்மை, விவேகம், மெல்லிய உணர்வுகள், ரசனை கொண்டவளே முழுமையான பெண்
பக்கோடா
3
இந்தப் பதிவு எண்ணைப் பெறுவதற்கு வாகனத்தின் உரிமையாளர் மூன்று லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்திருக்கிறார். ஆமாம் ஏலத்தில் எடுத்திருக்கிறார். ஏலம் நடந்த இடம் சண்டிகரில் உள்ள வாகனப் பதிவு அலுவலகம். உண்மையான எண் 'CH01-AK-0047'. அதைச் சுருக்கி இப்படி வைத்துள்ளார். இந்தியா முன்னேறவில்லை என்று யார் சொன்னது?
---------------------------------------------------------------------------------
ஃபில்டர் காஃப்பி!
நானும் கிருஷ்ணமூர்த்தியும் திரு ராமநாதனைச் சந்தித்து ஒரு நடிகையின் அவசரத் தேவையைச் சொன்னோம்.
செல்வி தர்மா என்று அவரோடு ரேடியோ நாடகத்தில் நடிப்பதற்காக ஒருவர் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு என் நாடகத்தில் அவரை நடிக்க ஏற்பாடு செய்து தரமுடியுமா என்று ராமநாதனைக் கேட்டேன். ரேடியோ நாடகம் இரவு ஒன்பது மணியளவில் முடிந்துவிட்டபின், அந்த நடிகையை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பாடங்களைக் கொடுத்து, நாளை நடக்கவிருக்கின்ற என் நாடகத்தைச் சிறப்பாக நடத்திவிடலாம் என்று எனக்கொரு நப்பாசை!
ராமநாதன் சொன்னார்:
“நாங்கள் எல்லோரும் இன்று இரவே சென்னை திரும்பி விடுவோம். செல்வி தர்மா உங்கள் நாடகத்தில் நடிக்க சம்மதித்தாலும் அவரைத் தனியாக விட்டு விட்டு, நாங்கள் சென்னை திரும்புவது சரியாக இருக்காதே.”
அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்க்கும்படி நான் ராமநாதனை வேண்டினேன். நாளை நாடகம் முடிந்து பத்திரமாக Ladies Compartmentஇல் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக உத்திரவாதமும் தந்தேன்.
செல்வி தர்மாவிடம் ராமநாதன் என் பொருட்டு பேசினார். எனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார்.
என்னுடைய அவஸ்தையைக் கண்டு அந்தப் பெண்ணின் உள்ளம் இளகியது. இருப்பினும் தனியாக ஸ்ரீரங்கத்தில் தங்கி நாடகத்தில் நடித்துக் கொடுத்துதவித் தனியாக சென்னை திரும்ப வேண்டியது குறித்து சற்று யோசித்தார்,
பிறகு தங்களது குழுவில் சென்னையிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியர் திரு. நடராஜன் என்பவரைத் தனக்குத் துணையாக இருக்கும்படி தர்மாவே வேண்டிக் கேட்டுக்கொள்ள, என்னுடைய நல்லகாலம் நடராஜனும் அதற்குச் சம்மதித்தார். நான் நீண்ட பெருமூச்சைவிட்டு சுயநிலைக்கு வந்தேன்.
செல்வி தர்மா ஸ்ரீரங்கம் வந்து தங்கி, இரவெல்லாம் கண்விழித்துப் பாடம் செய்து, நாடகத்தில் சிறப்பாக நடித்து, நான் கொடுத்த சிறு ஊதியத்தையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.
ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேசனில் நான் வழியனுப்பி வைத்தேன். அப்போது ஆண்டவனிடம் அந்தப் பெண்ணுக்குக்காக வேண்டிக்கொண்டேன். இறைவா! இன்று என் மானம் காத்த இந்தப் பெண்ணுக்கு மகோன்னதமான வாழ்வை நீ அருள வேண்டும்!
மகோன்னதமான வாழ்வை நான் வேண்டிக்கொண்டபடி ஆண்டவன் அந்தப் பெண்ணுக்கு அட்டியின்றி வழங்கினார்.
செல்வி தர்மா என்று அன்று அழைக்கப்பட்ட திருமதி தர்மாம்பாள் தமிழினத்தலைவரின் இருமுறை நாடாண்ட முதல்வரின் வாழ்க்கைத் துணைவியானார்கள்.
தன் மகள் திருமணத்திற்கு கொட்டும் மழையில் என் வீட்டிற்கு வந்து கல்யாணப் பத்திரிக்கை கொடுத்துவிட்டுப் போனார். காலத்தால் ஒரு தமிழ்க் கவிஞனுக்கு ஆற்றிய உதவியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த அம்மையாரை வாழ்வின் உச்சத்திற்கு உயர்த்தினான் ஆண்டவன்.
உள்ளத்தைப் பொறுத்தே உயர்வு என்கிறார் வள்ளுவர்
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு”
இது குறள்; திருமதி தர்மாம்பாள் இதன் பொருள்
- கவிஞர் வாலி (தனது ‘நானும் இந்த நூற்றாண்டும்” என்னும் நூலில்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி
இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table
பாஸந்தி கிண்ணம் ஒன்று
கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!
கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.
சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.
மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?”
என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.
உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.
சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:
“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”
அதுதான் கவியரசர்!
---------------------------------------------------------------------
பாஸந்தி கிண்ணம் இரண்டு
உன்பாடல் பாதி; என்பாடல் பாதி
ஒன்றாகும்போது கீதம் - இனி
தன்பாதை மாறி உன்பாதை தேடி
வந்தாடும் எந்தன் பாதம்!
- கவிஞர் மு.மேத்தா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா
1
இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய சைக்கிள், ஒரு ரூபாய்க் காற்று இல்லையெனில் பயன்படாது.
முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய செருப்பைக் காலில்தான் அணிகிறோம். முப்பது பைசா குங்குமம் நெற்றிக்குப் போகிறது.
அதுதான் வாழ்க்கை
-----------------------------------
பக்கோடா
2
பாசம், மென்மை, விவேகம், மெல்லிய உணர்வுகள், ரசனை கொண்டவளே முழுமையான பெண்
பக்கோடா
3
இந்தப் பதிவு எண்ணைப் பெறுவதற்கு வாகனத்தின் உரிமையாளர் மூன்று லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்திருக்கிறார். ஆமாம் ஏலத்தில் எடுத்திருக்கிறார். ஏலம் நடந்த இடம் சண்டிகரில் உள்ள வாகனப் பதிவு அலுவலகம். உண்மையான எண் 'CH01-AK-0047'. அதைச் சுருக்கி இப்படி வைத்துள்ளார். இந்தியா முன்னேறவில்லை என்று யார் சொன்னது?
---------------------------------------------------------------------------------
ஃபில்டர் காஃப்பி!
நானும் கிருஷ்ணமூர்த்தியும் திரு ராமநாதனைச் சந்தித்து ஒரு நடிகையின் அவசரத் தேவையைச் சொன்னோம்.
செல்வி தர்மா என்று அவரோடு ரேடியோ நாடகத்தில் நடிப்பதற்காக ஒருவர் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு என் நாடகத்தில் அவரை நடிக்க ஏற்பாடு செய்து தரமுடியுமா என்று ராமநாதனைக் கேட்டேன். ரேடியோ நாடகம் இரவு ஒன்பது மணியளவில் முடிந்துவிட்டபின், அந்த நடிகையை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பாடங்களைக் கொடுத்து, நாளை நடக்கவிருக்கின்ற என் நாடகத்தைச் சிறப்பாக நடத்திவிடலாம் என்று எனக்கொரு நப்பாசை!
ராமநாதன் சொன்னார்:
“நாங்கள் எல்லோரும் இன்று இரவே சென்னை திரும்பி விடுவோம். செல்வி தர்மா உங்கள் நாடகத்தில் நடிக்க சம்மதித்தாலும் அவரைத் தனியாக விட்டு விட்டு, நாங்கள் சென்னை திரும்புவது சரியாக இருக்காதே.”
அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்க்கும்படி நான் ராமநாதனை வேண்டினேன். நாளை நாடகம் முடிந்து பத்திரமாக Ladies Compartmentஇல் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக உத்திரவாதமும் தந்தேன்.
செல்வி தர்மாவிடம் ராமநாதன் என் பொருட்டு பேசினார். எனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார்.
என்னுடைய அவஸ்தையைக் கண்டு அந்தப் பெண்ணின் உள்ளம் இளகியது. இருப்பினும் தனியாக ஸ்ரீரங்கத்தில் தங்கி நாடகத்தில் நடித்துக் கொடுத்துதவித் தனியாக சென்னை திரும்ப வேண்டியது குறித்து சற்று யோசித்தார்,
பிறகு தங்களது குழுவில் சென்னையிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியர் திரு. நடராஜன் என்பவரைத் தனக்குத் துணையாக இருக்கும்படி தர்மாவே வேண்டிக் கேட்டுக்கொள்ள, என்னுடைய நல்லகாலம் நடராஜனும் அதற்குச் சம்மதித்தார். நான் நீண்ட பெருமூச்சைவிட்டு சுயநிலைக்கு வந்தேன்.
செல்வி தர்மா ஸ்ரீரங்கம் வந்து தங்கி, இரவெல்லாம் கண்விழித்துப் பாடம் செய்து, நாடகத்தில் சிறப்பாக நடித்து, நான் கொடுத்த சிறு ஊதியத்தையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.
ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேசனில் நான் வழியனுப்பி வைத்தேன். அப்போது ஆண்டவனிடம் அந்தப் பெண்ணுக்குக்காக வேண்டிக்கொண்டேன். இறைவா! இன்று என் மானம் காத்த இந்தப் பெண்ணுக்கு மகோன்னதமான வாழ்வை நீ அருள வேண்டும்!
மகோன்னதமான வாழ்வை நான் வேண்டிக்கொண்டபடி ஆண்டவன் அந்தப் பெண்ணுக்கு அட்டியின்றி வழங்கினார்.
செல்வி தர்மா என்று அன்று அழைக்கப்பட்ட திருமதி தர்மாம்பாள் தமிழினத்தலைவரின் இருமுறை நாடாண்ட முதல்வரின் வாழ்க்கைத் துணைவியானார்கள்.
தன் மகள் திருமணத்திற்கு கொட்டும் மழையில் என் வீட்டிற்கு வந்து கல்யாணப் பத்திரிக்கை கொடுத்துவிட்டுப் போனார். காலத்தால் ஒரு தமிழ்க் கவிஞனுக்கு ஆற்றிய உதவியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த அம்மையாரை வாழ்வின் உச்சத்திற்கு உயர்த்தினான் ஆண்டவன்.
உள்ளத்தைப் பொறுத்தே உயர்வு என்கிறார் வள்ளுவர்
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு”
இது குறள்; திருமதி தர்மாம்பாள் இதன் பொருள்
- கவிஞர் வாலி (தனது ‘நானும் இந்த நூற்றாண்டும்” என்னும் நூலில்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓமப்பொடி
கலக்கலான் காணொளி. ஓமப்பொடிக்காரர்கள் நிச்சயம் இரசிப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புதிர்
பகலில் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிப்பது யார்?
------------------------------------------------------------------------------------
கனவுக் கன்னி படம்?
அது இல்லாமலா?
வழக்கம்போல கீழே உள்ளது!
நட்புடன்
வாத்தி (யார்)
வாழ்க வளமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புதிர்
பகலில் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிப்பது யார்?
------------------------------------------------------------------------------------
கனவுக் கன்னி படம்?
அது இல்லாமலா?
வழக்கம்போல கீழே உள்ளது!
V
V
V
V
V
V
V
V
V
V
V
நடிகை S.D. சுப்புலெட்சுமி அவர்கள் (1938)
முகத்தைச் சுழிக்காதீர்கள். மூத்த குடிமகன்களுக்காக இதைப் போட்டுள்ளேன்.
முகத்தைச் சுழிக்காதீர்கள். மூத்த குடிமகன்களுக்காக இதைப் போட்டுள்ளேன்.
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!
V
V
V
V
V
V
V
V
V
V
V
அனுஷ்கா சர்மா
--------------------------------------------------------------------------------------------நட்புடன்
வாத்தி (யார்)
வாழ்க வளமுடன்!