மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.18

Astrology: ஜோதிடம்: 28-9-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 28-9-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரான  G.K. வாசன் அவர்களுடைய ஜாதகம்.  2002 - 2014ம் ஆண்டுகளில்
மத்திய அரசில் அமைச்சராகப் பணி புரிந்தவர். பிறப்பு விபரம்:
28-12-1964ம் தேதி பகல் 12:10 மணிக்கு கும்பகோணத்திற்கு
அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோவில் என்ற சிற்றூரில் பிறந்தவர்!!!!

இந்த வாரம் குறைந்த அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 12 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே
கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was President of Tamil Maanila Congress Thiru GK Vasan born on 28/12/1964time

12.10pm at Sundaraperumalkovil Meena lagnam thulam rasi 10th house sun with the aspect of lagna lord Jupiter

makes him political
Friday, September 28, 2018 4:54:00 AM
-------------------------------------------------------------
2
Blogger angr said...
முன்னாள் காங்கிரஸ் தலைவர் Gk.மூப்பனார் அவர்களின் மகனும்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவருமாகிய திரு.G.K.வாசன் அவர்கள் ஜாதகம்.
Friday, September 28, 2018 5:38:00 AM
-------------------------------------------------------
3
Blogger sfpl fab said...
Answer for quiz 28.09.2018
G. K. Vasan, (born December 28, 1964) is a member of the Indian National Congress based in Tamil Nadu, India. He

was educated at the Madras Christian College Higher Secondary School and was later graduated from the New

College. He is the son of a veteran Congress leader,
G. K. Moopanar, who later formed his own political party, the Tamil Maanila Congress. The TMC elected Vasan as

its leader
Date of Birth: 28-Dec-1964
Place of Birth: Tamil Nadu, India
Profession: Politician
Nationality: India
Friday, September 28, 2018 11:12:00 AM
-----------------------------------------------
4
Blogger Mahi said...
Dear sir,
It is G.K.Vasan's horoscope. Date of birth 28.12.1964.
Friday, September 28, 2018 11:16:00 AM
-----------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் திரு ஜி கே வாசன் அவர்களுடையது. பிறந்த தேதி 28 டிசம்பர் 1964. பிற்ந்த நேரம் நண்பகல் கடந்து 7 நிமிடம் 30

வினாடி. பிற்ந்த இடம் கும்பகோண‌ம் என்று எடுத்துக் கொண்டேன்,
குருவின் பார்வை சந்திரன் ,செவ்வாய் மற்றும் சூரியனுக்குக் கிடைத்ததால் அரசாங்க அதிகாரம் கிடைத்தது. லக்கினாதிபதி, 10ம்

அதிபதியான குரு 2ம் இடத்தில் நின்றது வாக்கு, தனம் ஆகிய அனைத்தும் சிறப்புறச் செய்தது.
Friday, September 28, 2018 11:36:00 AM
---------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் ஜி கே வாசன் அவர்கள்
DOB: 28-12-1964
TIME: 12 A.M
PLACE :SUNDHARAPERUMAL KOIL,TANJORE DISTRICT
நன்றி
Friday, September 28, 2018 12:11:00 PM
--------------------------------------------------
7
Blogger glowingguys said...
Good Morning Sir,
Date of Birth : 28th Dec 1964
Person: G K Vasan
Friday, September 28, 2018 12:49:00 PM
--------------------------------------------------------
8
Blogger bg said...
Mr. G K Vasan son of G K Mooppanar born on Dec 28 1964 at Sundaraperumal koil Thanjavur district.
Friday, September 28, 2018 12:59:00 PM
-------------------------------------------------------
9
Blogger ARAVINDHARAJ said...
Name:G. K. Vasan
Date of Birth:28-Dec-1964
Place of Birth:Tamil Nadu, India
Profession: Politician
Friday, September 28, 2018 1:03:00 PM
----------------------------------------------------
10
Blogger thozhar pandian said...
கருப்பையா மூப்பனார் அவர்களின் மகனான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள். பிறந்தது டிசம்பர் 28 1964
Friday, September 28, 2018 9:38:00 PM
--------------------------------------------------------
11
Blogger RAMVIDVISHAL said...
G.K. VASAN
28/12/1964
Friday, September 28, 2018 11:47:00 PM
-----------------------------------------------------------
12
Blogger RAMVIDVISHAL said...
December 28 1964
G K VASAN
Friday, September 28, 2018 11:48:00 PM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 28-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  28-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? பெரிய தலைவரின் மகன். இவரும் தலைவர்தான்’ அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.18

உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!



உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!

வாரியார் விளக்கமாகக் கூறியது!

*வாரியார் சுவாமிகள் கூறிய அறிவுரையில் இருந்து*
👉 *உன் வாழ்க்கையை நீ வாழ்*🙏

*எறும்பு* - பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ *ஆசைப்படவில்லை.*

*நாய்* - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட *பொறாமைப் படவில்லை.*

*யானை* - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு *ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.*

*காகம்* - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட *ஏங்கவில்லை.*

🔴 *அதனதன் வாழ்க்கையை  அது வாழ்கின்றது!!!*

*நீ மட்டும் ஏன்* பொறாமைப் படுகிறாய்.....???

*நீ ஏன்* அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???

*நீ மட்டும் ஏன்* புலம்புகிறாய்......???

*நீ ஏன்* வருந்துகிறாய்......???

*நீ ஏன்* ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???

*உன் வாழ்க்கை விசேஷமானது......!!!*

நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க *முடியாது.....!!!*

நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட *முடியாது......!!!*

நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ *முடியாது....!!!*

ஆகாயம் போல் பூமி *இல்லை.....!!!*

பூமி போல் காற்று *இல்லை .....!!!*

காற்று போல் தீ *இல்லை...!!!*

தீயைப் போல் தண்ணீர் *இல்லை.......!!!*

ஆலமரம் போல் பப்பாளி மரம் *இல்லை.....!!!*

பல்லி போல் புலி *இல்லை......!!!*

தங்கம் போல் தகரம் *இல்லை......!!!*

பலாப் பழம் போல் வாழைப் பழம் *இல்லை......!!!*

கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் *இல்லை......!!!*

துணி போல் கருங்கல் *இல்லை.....!!!*

சிற்பம் போல் சாதாரண கருங்கல் *இல்லை.....!!!*

நாற்காலி போல் கட்டில் *இல்லை.....!!!*

ஒரு மரத்தின் பழங்களிலேயே ஒன்று போல் மற்றொன்று *இல்லை.....!!!*

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே ஒருவர் போல் மற்றொருவர் *இல்லை......!!!*

ஆண் உடல் போல் பெண்ணுடல் *இல்லை.....!!!*

நேற்று போல் இன்று *இல்லை.....!!!*

இன்று போல் நாளை *இல்லை......!!!*

போன நிமிடம் போல் இந்த நிமிடம் *இல்லை.....!!!*

இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் *இல்லை.....!!!*

ஒன்றுபோல் மற்றொன்று *இல்லை.......!!!*

*இத்தனை ஏன் ....*❓

உன் தலைவலி போல் பல்வலி *இல்லை......!!!*

உன்னுடைய கண் போல் காது *இல்லை.....!!!*

*இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!*

அதனால் நீ *தனி* தான்.....!!!

உன் கைரேகை *தனி* தான்......!!!

உன் பசி *தனி* தான்......!!!

உன் தேவை *தனி* தான்.....!!!

உன் பலம் *தனி* தான்.....!!!

உன் பலவீனம் *தனி* தான்......!!!

உன் பிரச்சனை *தனி* தான்......!!!

உனக்குரிய தீர்வும் *தனி* தான்.....!!!

உன் சிந்தனை *தனி* தான்.....!!!

உன் மனது *தனி* தான்.....!!!

உன் எதிர்பார்ப்பு *தனி* தான்......!!!

உன் அனுபவம் *தனி* தான்.....!!!

உன் பயம் *தனி* தான்.....!!!

உன் நம்பிக்கை *தனி* தான்.....!!!

உன் தூக்கம் *தனி* தான்......!!!

உன் மூச்சுக்காற்று *தனி* தான்......!!!

உன் ப்ராரப்தம் *தனி* தான்.....!!!

உன் வலி *தனி* தான்.....!!!

உன் தேடல் *தனி* தான்.....!!!

உன் கேள்வி *தனி* தான்.....!!!

உன் பதில் *தனி* தான்.....!!!

உன் வாழ்க்கைப் பாடம் *தனி* தான்......!!!

உன் வாழ்க்கை *தனி* தான்......!!!
              👌👇👌

உன் வாழ்க்கை *அதிசயமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *ஆச்சரியமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *அபூர்வமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *அர்த்தமுள்ளது தான்.....!!!*

உன் வாழ்க்கை *உத்தமமானது தான்.....!!!*

              👌👍👌

*அதனால்.....*

*இன்றிலிருந்து......*

*இப்பொழுதிலிருந்து.....*

*உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!*

*வாழ்வின் ரசனை தெரியும்.......!!!*

*வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!*

*இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!*

*உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!*

*உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!*

*உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!* 🙏
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.18

காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்?


காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்?

நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி
பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.
நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.
அதற்காகத்தான் இந்தப் பதிவு.
காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.
சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

வாழைக்காய்..
...........................
முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.
வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.
வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும்
பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு..
.................................
செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும்
இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.
பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை
கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி..
.....................
முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து
வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும்.
சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது.
சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய்..
..............................
முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்லை) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது.
இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும்.
கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள்.
அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம்.
காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.


தக்காளி...
....................
தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று
அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும்.
பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில்
சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

பீன்ஸ்...
............
பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான்
நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும்.
நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள்
புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும்.
இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும்.
இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.

அவரைக்காய்...
............................
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான்.
மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய்...
..........................
கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும்.
காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி
குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது.
பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும்.
காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய்...
.................................
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம்.
ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும்.
அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல்.
காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

வெங்காயம்...
.........................
வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது.
பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது.
வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத்
தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

முட்டைக்கோஸ்...
..................................
இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய்
உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து
பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.


பீர்க்கங்காய்...
...........................
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து
வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும்.
சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு...
.............................
சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே
நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும்.
உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய்...
........................
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய்...
..................................
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.

எலுமிச்சம் பழம்..
...............................
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது.
காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.

கொத்துமல்லி, கருவேப்பிலை..
..........................................................
கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும்
பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம்
இருப்பதில்லை.

--------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.18

பூலோக கைலாயம் எது தெரியுமா?


பூலோக கைலாயம் எது தெரியுமா?

கண்டேன், கண்டறியாதன கண்டேன்!

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற  திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு  தலத்தை
அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:

இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை
பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும்
போகிறார்கள்.

அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.

கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட
முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை
அடைந்ததுமே!)

அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு, அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)

இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.
(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு
அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)

பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

மாதர்பிறை = அழகியபிறை
கண்ணி =  நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் = வழிபாட்டிற்குரிய நீர்
பிடி = பெண் யானை;
களிறு = ஆண் யானை
----------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன்
அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த
முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:
அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க
விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு
பெரியவர் அங்கே தோன்றி, “அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச்
செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்” என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர்
திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல
அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும்
சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன;

பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து
நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார்.

இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை” என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “கண்டறியாதன கண்டேன்!” என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

பாடல் : மாதர்பிறை கண்ணியானை
இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்
தலம் : திருவையாறு
இராகம்: செஞ்சுருட்டி .
-----------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.18

இன்றைய சூழ்நிலையில் பிழைக்கும் ரகசியம்!


இன்றைய சூழ்நிலையில் பிழைக்கும் ரகசியம்!

2014-ம் வருடம். அமெரிக்காவில் புளோரிடா  மாகாணத்தை ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி நான்கு புயல்கள் தாக்கின. நாம் தான் ஏதோ ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்பது போல் சூறாவளிக்கு பெயர் வைப்பவர்களாயிற்றே. நான்கு சூறாவளிகளுக்கு முறையே சார்லி, பிரான்செஸ், ஐவன், ஜீன் என்று நாமகரணம் சூட்டப்பட அவையும் பெயர் வைத்த குஷியில் புளோரிடாவை துவைத்து  காயப்போட்டு இஸ்திரி செய்து பீரோவில் மடித்து வைத்துவிட்டு  சென்றன!

முதல் சூறாவளி வந்து சென்ற ஒரு சில வாரங்களில் இரண்டாவது சூறாவளியான பிரான்செஸ் புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் செய்தி தெரிந்ததுதான் தாமதம். மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு கதவை இழுத்து மூடி வீட்டிற்குள் முடங்கினர். வரும் சூறாவளி மூடிய கதவைப் பார்த்து வீட்டில் யாரும் இல்லை போலிருக்கிறது என்று அடுத்த வீட்டுக்கு போய்விடுவது போல!

அதே சமயம் 1,222 மைல்கள் தள்ளி ஆர்கன்ஸா மாநிலத்தில் பெண்டன்வில் என்ற சிறிய ஊரிலுள்ள ஒரு பெரிய கம்பெனியின் மார்க்கெட்டிங் டீம் சுறுசுறுப்படைந்தது. தங்களுடைய புதிய மார்க்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்த சரியான சமயம் இது என்று முடிவு செய்தது. விற்பனை டேட்டாவை அலசி ஆராயும் அவர்கள் டெக்னிக்கின் பெயர் `முன்னறிவிக்கும் தொழில்நுட்பம்’ (Predictive Technology). அந்த கம்பெனியின் பெயர் `வால்மார்ட்’!

முதலில் தாக்கிய சார்லி சூறாவளியின் போது புளோரிடாவில் உள்ள வால்மார்ட் கடைகளில் எவை அதிகம் விற்றன என்ற டேட்டா பெறப்பட்டது. உங்களை கேட்டால்  என்ன சொல்வீர்கள்? என்ன பெரியதாக விற்றிருக்கும், குடை, ஹீட்டர், ரெயின்கோட், டார்ச்லைட் போன்ற சாமான்கள் அதிகம் விற்றிருக்கும் என்று தானே நினைப்பீர்கள். விற்பனை டேட்டாவை ஆய்வு செய்த போது ’ஸ்ட்ராபரி பாப்-டார்ட்ஸ்’ என்கிற ஒரு வித தின்பண்டம் வழக்கத்தை விட ஏழு மடங்கு அதிகம் விற்றது தெரிய வந்தது. அடுத்து அதிகமாக என்ன விற்றிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பீர்! இந்த இரண்டையும் உங்களால் யூகித்திருக்க முடியுமா?

நம் யூகங்கள் தவறாகலாம். ஆனால் டேட்டா பொய் சொல்லாது. சூறாவளி கடக்கும் வரை வீட்டில் தேமே என்று டீவி பார்த்துக்கொண்டு தான் உட்காரவேண்டும் என்று அம்மாக்கள் ஸ்ட்ராப்ரி பாப்-டார்ட்ஸ் வாங்கி அடுக்க, அப்பாக்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் பீர் பாட்டிலை வாங்கி அடுக்கியிருந்தார்கள். டேட்டா மூலம் பெற்ற நுண்ணறிவின்படி புளோரிடாவிலுள்ள அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் லாரி லாரியாக அந்த பொருட்கள் அதிகமாக அனுப்பி வைக்கப்பட சூறாவளியை மிஞ்சும் ஸ்பீடில் மக்கள் மீண்டும் அவைகளை வாங்கி தீர்த்தனர்!

பல கடைகள் தங்கள் விற்பனையை அலசி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்துதான் மார்க்கெட்டிங் உத்திகளை வடிவமைக்கின்றனர். ஆனால் தகவல் சேகரிப்பில், டேட்டா பெறுவதில் வால்மார்ட்டை மிஞ்ச பூலோகத்தில் ஒரு கம்பெனி இல்லை. தங்கள் கடையில் விற்பனையாகும் பொருட்களின் விற்பனை அளவு முதல் வாடிக்கையாளர்களின் பழக்க வழக்கம் வரை வால்மார்ட் அறிந்துகொள்வது போல் வேறெந்த கம்பெனியும் அறிய முயல்வதில்லை. அப்படி அறிந்துகொள்ள தேவையான உள்கட்டமைப்பை அமைத்துக்கொள்வதும் இல்லை.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 3,600 வால்மார்ட் கடைகள். அங்கு வாரம் வந்து பொருள் வாங்குவோர் எண்ணிக்கை 100 மில்லியன். வருடத்திற்கு இல்லை சார், வாரம்தோறும் வருவோர் எண்ணிக்கையை சொல்கிறேன்! ஒரு மாதத்தில் ஏறக்குறைய மொத்த அமெரிக்காவும் வால்மார்ட்டிற்கு ஒரு முறை வந்து வாங்கிச் செல்கிறது. வருவோர் எண்ணிக்கை முதல் அவர்கள் வாங்கும் பொருட்கள், வாங்கும் அளவு முதலியன கலர் வாரியாக, சைஸ் வாரியாக டேட்டா பெறப்பட்டு கடை வாரியாக, ஊர் வாரியாக, மாநிலம் வாரியாக டேபுளேட் செய்யப்பட்டு ஆழமாக ஆய்வு செய்யப்படுகிறது. அமெரிக்க வாசிகளைப் பற்றி வால்மார்ட் அறிந்திருப்பது போல் அதன் அரசாங்கம், மீடியா கூட அறிந்து வைத்திருக்க மாட்டார்கள்!

வாடிக்கையாளர் டேட்டாதான் வால்மார்ட்டின் வேதவாக்கு. இன்று நேற்றல்ல, அவர்கள் ஆரம்பித்த நாள் முதல் டேட்டாவைத் தான் குலதெய்வமாக கும்பிட்டு வருகின்றனர். மற்ற கடைகள் எல்லாம் நினைத்துப் பார்பதற்கு முன்பே பார் கோட், இன்டர்நெட்டின் முன்னோடியான மின்னணு தகவல் பரிமாற்றம், டிரான்ஸ்மிட்டர்கள் என்று அதிநவீன தொழில்நுட்பம் வாங்குவதில் வால்மார்ட் ஒரு டிரென்ட்செட்டர். அந்தக் காலத்திலேயே அதற்கெல்லாம் அவர்கள் செலழித்த தொகை சுமார் நான்கு பில்லியன் டாலர்கள். இத்தனை ஏன், வால்மார்ட் பெண்டன்வில் தலைமையகத்தில் இருக்கும் டெரா டேட்டா மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாவின் அளவு 460 டெராபைட்ஸாம். இது எத்தனை இருக்கும் என்று தானே கேட்கிறீர்கள். இண்டர்னெட்டில் இருக்கும் டேட்டாவை விட இரண்டு மடங்கு!

மற்ற கடைகள் எல்லாம் ‘என்ன நடக்கப் போகிறது என்று காத்திருந்து செயல்படுவோம்’ என்று தொழில் செய்ய வால்மார்ட் மட்டுமே ‘என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே அனுமானித்து அதற்கு ரெடியாய் இருப்போம்’ என்று தன்னை தயார்படுத்திக்கொண்டு அதற்கேற்ப தொழில் செய்கிறது. செக் அவுட் ஏரியா ஸ்கேனர் மூலம் பெறப்படும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் முதல் கையில் வைத்து இயக்கப்படும் வயர்லெஸ் கருவிகள் மூலம் பெறப்படும் இன்வென்ட்ரி டேட்டா வரை அனைத்து தகவல்களும் போர்க்கால அடிப்படையில் சேகரிக்கப்பட்டு போரடிக்காத வகையில் அலசப்பட்டு அவை அனைத்தும் காலகாலத்திற்கு பாதுகாக்கப்படுகிறது. கடையில் எந்த நேரத்தில் எத்தனை கேஷியர்கள் தேவைப்படும் என்பதைக் கூட துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறது வால்மார்ட்!

இத்தனை கட்டமைப்பை, கம்ப்யூட்டர்களை, சாஃப்ட்வேரை எங்கிருந்து எப்படி வாங்கினார்கள் வால்மார்ட்? அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள், கட்டமைப்பின் பெரும்பகுதியை தங்கள் ஊழியர்களைக் கொண்டே வடிவமைத்து தாங்களே தயாரித்து நிர்மானித்தார்கள். ஏன்? அப்பொழுது தானே தனக்கு அசுர பலம் தரும் தகவல் கட்டமைப்பின் ரகசியத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க முடியும்! வால்மார்ட்டிற்கு கம்ப்யூட்டர் பகுதிகளை சப்ளை செய்த தயாரிப்பாளர்கள் முதல் கட்டமைப்பை நிர்மாணித்து நிர்வகிக்கும் ஊழியர்கள் வரை அது செயல்படும் விதங்களையும் ரகசியங்களையும் வெளியில் கூறமுடியாதபடி `வெளிப்படுத்தாமை ஒப்பந்தம்’ மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். தெரியாத்தனமாக தண்ணியடித்து எதையாவது யாராவது உளறிவிட்டால் மனிதர் தொலைந்தார். புளோரிடா புயலே தேவலை என்பது போல் சாத்து சாத்து என்று சாத்தப்படுவார்!

ஒவ்வொரு சிறிய தகவலும் வால்மார்ட்டிற்கு பொக்கிஷம் போல. பெறப்படும் தகவலின் அடிப்படையிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் சேல்ஸ் மீட்டிங்கில் நடத்தப்படுகிறது. அலசி ஆராயப்படும் தகவல் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு வால்மார்ட் கிளைக்கும் அனுப்பப்படுகிறது.

நவீன உலகமே டேட்டாவின் உதவியோடு இயங்குகிறது. டேட்டாவின் உதவியோடு முக்கிய முடிவெடுத்தால் மட்டுமே சரியான திசையில் பயணிக்க முடியும். கடைகள் முதல் கம்பெனிகள் வரை வாடிக்கையாளர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு அவர்கள் தேவைகளை, ஆசைகளை, பயங்களை அவர்கள் அறிந்துகொண்டதைவிட புரிந்துகொண்டால் மட்டுமே பிழைக்கவே முடியும். இதை முழுவதும் உணர்ந்து செழுமையாக செயல்படுத்துகிறது வால்மார்ட்.

`வால்மார்ட்டால் முடியும். நான் ஆஃப்டர் ஆல் வால் சைஸில் கடை வைத்திருப்பவன். வால்மார்ட் செய்வது போல் என்னை செய்ய சொல்கிறாயே. என் கடைக்கு தேவையா இதெல்லாம்’ என்று கேட்க தோன்றினால் உங்களுக்கு வால்மார்ட் பிறந்த கதையை சொல்வது அவசியமாகிறது. வால்மார்ட் ஆரம்பிக்கப்பட்டது பெண்டன்வில் அருகில் உள்ள ராஜர்ஸ் என்ற சின்ன ஊரில். அதன் ஜனத்தொகை 66,000 மட்டுமே. பிறந்த வருடம் 1962. அப்பொழுது என்ன ஜனத்தொகை இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஆம்பூர், கோவில்பட்டி, நாகப்பட்டினம் போன்ற இடங்களை விட சிறிய ஊரில் கடை திறந்து, தகவல் சேகரிப்பில் புரட்சி செய்து, வாடிக்கையாளர்களை தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பொருள் விற்று, படிப்படியாக முன்னேறி, கடல் கடந்து அசுர வளர்ச்சியடைந்து இன்று உலகின் நம்பர் ஒன் கம்பெனியாக திகழ்கிறது வால்மார்ட். நான் சிறிய ஊர், என்னுடையது சின்ன கடை, எனக்கெதற்கு டேட்டா ஆய்வு, என்னால் இதையெல்லாம் செய்யமுடியுமா, இப்படியெல்லாம் வளரமுடியுமா என்று இன்னமும் அசால்ட்டாய் இருந்தால் உங்களை அடித்துக்கொண்டு செல்ல அடுத்த சூறாவளி ஆறு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்க மார்க்கெட் துறைமுகத்தில் எச்சரிக்கை எண் ஏழு ஏற்றப்பட்டுவிட்டது என்பதை உணர்க!

தொழில் ரகசியம்: சூறாவளியில் தகவல் திரட்டிய வால்மார்ட்*
ஆக்கம்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.18

Astrology: ஜோதிடம்: 21-9-2018ம் தேதி புதிருக்கான விடை!



Astrology: ஜோதிடம்: 21-9-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் பிரபல தொழில் அதிபர் ஜக்மோகன் டால்மியா அவர்களுடையது.
பிறப்பு விபரம்: 30-5-1940ம் தேதி பகல் 12:10 மணிக்கு கல்கத்தா மாநகரில் பிறந்தவர்!!!!

இந்த வாரம் குறைந்த அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 12 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் மறைந்த ஜக்மோகன் டால்மியா அவர்களுடையது.30 மே மாதம் 1940ல் பிறந்தவர்.பிறந்த நேரம் நண்பகல் 12 மணி 10 நிமிடமாகும்.பிறந்த ஊர் கொல்கொத்தா ஆகும்.டால்மியா நிறுவன‌த்தின் பங்குதாரர். கிரிக்கெட் வீரர.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.
10 ,11 அதிபதிகள் பரிவர்தனை, லக்கினாதிபதி 10ல் அமர்ந்து 11 ம் அதிபதியுடன் கூட்டணி, யோககாரகன் செவ்வாய் 11ல் அமர்ந்தது ஆகியவை தொழில் மேன்மை அளித்தன‌.
Friday, September 21, 2018 6:01:00 AM
-----------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Famous Former Cricketer and Cricket Administrator, and
Business man Jagmohan Dalmia born on 30/05/1940 time 12.10 pm at Calcutta,Simma lagna
Lana lord in Tenth house along with his friend Mercury 9th and 10th combination makes
Dharmakarmathipathy yoga and 10 the and 11th lord parivarthai, Saturn is debilation
cancelled due to Jupiter and Saturn has Four paral in astavarga, in navamsa 10 the house
lord and 5th house lord Venus and Jupiter in exaltation.All the above combination makes him

success in his life, thanks sir vazhga valamudan
Friday, September 21, 2018 7:27:00 AM
-----------------------------------------------------
3
Blogger angr said...
பிரபல தொழிலதிபரும் இந்திய மட்டைப்பந்து வாரியத்தின் முன்னாள் தலைவருமாகிய
திரு ஜக்மோகன் டால்மியா அவர்கள் ஜாதகம். தர்ம கர்மாதி இணைவு,லக்கின லாபாதியதிபதி இணைவு

கவனிக்கத்தக்கது
Friday, September 21, 2018 7:45:00 AM
-------------------------------------------------------
4
Blogger Manikandan said...
Jagmohan Dalmiya.. 30th May 1940-Born at Calcutta (Kolkata)
Time Approx: 12.30 pm.
notable yogas...
9+10 house loads together in 11th place. (tharma-karmathi yogam)
Lakna seen by 5th load (jupitor) ..
lagna lord(suriyan) in 10 house.. (best one for business
5th load (jupitor) in 9th place (thirikonam)
Friday, September 21, 2018 9:16:00 AM
------------------------------------------------------------
5
Blogger GOWDA PONNUSAMY said...
JAGMOHAN DALMIYA
President, BCCI
Born 30 May 1940 at 12-20 hrs
Calcutta, British India
Nationality Indian
Occupation Co-owner of M. L. Dalmiya & Co.
Jagmohan Dalmiya (30 May 1940 – 20 September 2015) was an Indian cricket administrator
and businessman from the city of Kolkata. He was the President of the Board of Control for
Cricket in India as well as the Cricket Association of Bengal. He had previously served as
the President of the International Cricket Council.
-Ponnusamy
Friday, September 21, 2018 9:42:00 AM
------------------------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answar for 21.09.2018 quiz
Mr.Jagmohan Dalmiya
30 May 1940
Jagmohan Dalmiya was an Indian cricket administrator and businessman from the city of
Kolkata. He was the President of the Board of Control for Cricket in India as well as the
Cricket Association of Bengal. He had previously served as the President of the
International Cricket Council.
President, BCCI
Friday, September 21, 2018 10:38:00 AM
--------------------------------------------------------
7
Blogger bg said...
Mr. Jagmohan Dalmiya born on May 30 1940 born in Calcatta.
Friday, September 21, 2018 10:43:00 AM
-------------------------------------------------------
8
Blogger glowingguys said...
Good Morning Sir,
Birth date: 30th May 1940
Person Name: Jagmohan Dalmiya
Friday, September 21, 2018 10:58:00 AM
-------------------------------------------------------
9
Blogger csubramoniam said... 
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர்: ஜக் மோகன் டால்மியா
DOB :30/MAY/1940
TIME : 12A.M
PLACE :ULCUTTA
நன்றி
Friday, September 21, 2018 12:25:00 PM
-------------------------------------------------------
10
Blogger ARAVINDHARAJ said...
Name:Jagmohan Dalmiya
Date of Birth:30-May-1940
Place of Birth:Kolkata, West Bengal, India.
Friday, September 21, 2018 12:49:00 PM
----------------------------------------------------------
11
Blogger suresh radhakrishnan said...
Sir, the answer to your quiz is Mr. Jagmohan Dalmia, an Indian Industrialist, Born on 30th May
1940.former president of BCCI and ICC
Friday, September 21, 2018 4:15:00 PM
-------------------------------------------------------
12
Blogger Mahi said...
Dear sir,
It is Jagmohan Dalmia's horoscope. Birth date is 30.05.1940.
Friday, September 21, 2018 10:38:00 PM
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 21-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  21-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? சனீஷ்வரன் நீசம். அனாலும் ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் பிரபல தொழில் அதிபர். வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.18

அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?


அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திடவேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்.

4.முதலில் அனைத்து வீட்டுவேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப்படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்

7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டுவிடுங்கள் ..இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உங்களைப்போலவே ..

8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசைபாடுவதை தவிருங்கள்

9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பனமாதிரியே வந்திருக்கு "

10.எப்படி நீங்கள் சதா வீட்டுவேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்டீர்களோ ..உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்

11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்

12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலைகொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்

13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்துகொள்ளுங்கள்

14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி அனைவருக்கும் பயிற்சி கொடுத்திடுங்கள்!

16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர் ..அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டு தனமாக கத்துவதால் எதும் சீராகப் போவதில்லை

17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாகப் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர் ..எண்ணவும் கூடாது

18.என்ன பிழைப்பு இது? நாலு சுவற்றிற்குள் எல்லோருக்கும் வடித்துக் கொட்டி..இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு ..இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது

19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கைகொள்ள செய்திடும்

20.தேவையில்லாமல் பிரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

21.நறுக் கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

22.அநேகமான நேரங்களில் நயிட்டி அணிவதால் கூடுதலான நயிட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்

23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்

24.நைட்டி இதனை வேலைசெய்திடும்போது மட்டுமே அணியுங்கள் ..மாலைவேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்

26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்கவேண்டாம்

27.கணவருக்கு பிடித்தமாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் ..உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

28.குறிப்பாக உள்ளாடைகள் மீது அதிக கவனத்துடனும் ..சுத்தத்திலும் முக்கிய கவனதுடன் செயல் பட்டிடுங்கள்

29.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதைத் தவிருங்கள்

30.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

31.உங்களுக்கு பிடித்தமாதிரி ஆடை அணிகலன்களை உங்கள்கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள். .உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்கவேண்டாம்

32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

33.கணவரின் தொழில் அல்லது வேலைசெய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்துகொள்ளுங்கள் .
34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிகடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேக கண் கொண்டு பார்க்காதீர்கள்

35.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதும் அதேநேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம்

36.உங்கள் கணவரை ஜெயிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்

37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்கவேண்டாம் ..தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள் ..கொடுத்தபின் புலம்பவேண்டாம்

38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் ..மற்றும் பக்கத்துவீட்டு பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்

39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம் ..

40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் ..வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே  இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்

42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ணவேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே .
44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்துகொள்ளுங்கள் வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்

45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்தமட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்

47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவோடு நிறுத்திக்கொள்ளவது நல்லது ..

48.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது ..மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்

49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால்தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்கமுடியாத நம்பிகை மறக்கவேண்டாம்

50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டும்

51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அது எச்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே

52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்துகொள்ளுங்கள் அஃது தேவைஇல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க்க உதவும்

53.கணவரின் வெளிநாடு பயணங்கள் ..கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் ..அது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்

55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவாருங்கள் அதுவே நல்லது

56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் ..ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்

58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்கவேண்டாம்

59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை

60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒருபோதுமே மறக்கவேண்டாம்

62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை ..உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை ..தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்

63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் ..சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்

64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்

65.மொத்தத்தில் நீங்கள் தாயக ..தோழியாக ..மனைவியாக ..பல பல யாக இருப்பதைவிட ..சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்

பயற்சி யாளருக்குப்பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும் ...life  எளிமையாகும் ..இனிமையாகும். அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.

வாழ்க வளமுடன்...
--------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.18

இதுவல்லவா மனிதநேயம்!


இதுவல்லவா மனிதநேயம்!

போப்பாண்டவரை சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது அறிஞர் அண்ணாவுக்கு.

அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார். போப்பாண்டவர் சொன்னார், அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா என்று கேட்டார் அண்ணா.

கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகளிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்கு சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காக போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார். அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

 நாஞ்சிலாரை சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தன் அறிஞர் அண்ணா.

சென்னை கண்ணிமாரா நூலகத்தில் படித்து கொண்டிருந்தார் அண்ணா. நூலகத்தை மூடவேண்டும் வெளியே போக முடியுமா என்று கேட்டார்கள். அண்ணா சொன்னார், நீங்கள் வெளியே பூட்டிவிட்டு செல்லுங்கள். நான் படித்துவிட்டு உள்ளேயே தூங்கிவிடுகிறேன் என்று சொன்னார் அண்ணா. காலையில் நூலகம் திறந்த பொழுதும் படித்து கொண்டிருந்தார் அண்ணா. "உறங்கி கிடந்த தமிழர்களின் உணர்வுகளை  தட்டியெழுப்ப உறங்காமல் படித்தவர், வார்த்தைகளுக்கு சலங்கை கட்டி நடனமாட விட்டவர், கரகரத்த குரலில் சங்கநாதமிட்ட" அறிஞர் அண்ணா.

"எல்லோரும் கொண்டாடுவோம்,
அண்ணாவின் பேரறிவை,
ஆற்றல்மிகு சொல்லழகை,
சொன்னால் முடிந்திடுமோ,
சொல்வதென்றால் இயன்றிடுமோ"
- கோ. கிருஷ்ணமூர்த்தி

மேலதிகத் தகவலுக்கு:
https://en.wikipedia.org/wiki/Mohan_Ranade


------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.9.18

ஒரே நேரத்தில் எத்தனை வேலைகளைச் செய்ய முடியும்?


ஒரே நேரத்தில் எத்தனை வேலைகளைச் செய்ய முடியும்?

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்......!!

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!!

யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!!

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது , நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!!

அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!!

அரசன் அந்த நெசவாளியிடம்
"இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!!

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!! குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது......

‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!!

‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!!
இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!! இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!!

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!!

‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.....!!

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது.
 அதன் தொல்லையை சமாளிக்க, இந்த மணியை ஒலித்தால்போதும், ஓடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.....!!

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.....!!

நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது.......!! அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்.....அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்......!!!

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்.....? உள்ளே வரலாம்தானே?" எனக் கேட்டான் அரசன்.....!!

அதற்கு நெசவாளி சொன்னான்:
 "அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது....!! ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.....!!! என்னிடம் பாடம் கேட்கும்போது, அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......!!!

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா...?? என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....!!!

நெசவாளி சொன்னான்:

‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்....,!! வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...!!!

ஒருவன் விரும்பினால் ,

ஒரே நேரத்தில் ,

கற்றுக்கொள்ளவும்  ,

கற்றுத் தரவும் ,

வேலை செய்யவும் ,

வீட்டை கவனிக்கவும்

முடியும் என்பதற்கு  இந்த நெசவாளி தான் சாட்சி....!!

நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... !!

தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....!!

உழைப்பே உயர்வினை தரும்.....!!

அதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்.

படித்ததில் மிகவும் பிடித்த கதை...!!
------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.18

மறுபடியும் சுஜாதா



மறுபடியும்  சுஜாதா

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்!.

சுஜாதா சார்!  கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள்  கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை.

*கணிப்பொறி, கேன்டீன்  இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்*’’.

##################

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

*இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை. ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி
பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து
கொண்ட மனைவி  ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்*

##################

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல்  நூல்கள் -இப்படி.
ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.  திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?

-வி.மகேஸ்வரன், காரைக்குடி.

*திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை*

##################

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ 
பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

*சிவனே என்றிராமல்  இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற  பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள்
கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்  உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன*்.

#################

தற்போதைய  பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

*கி.வா.ஜ.,  குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர்  காலங்களில்
பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள்  நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன*.

#########((########

லால்குடி ஜெயராமனுக்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
-வி.அம்பிகை, சென்னை.

*உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம்
பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்*.

##################

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? -ஆவடி த.தரணிதரன், சென்னை.

*சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது  பகுதியில் உதவுவதுண்டு*.

##################

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா?  உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.

*உண்டு.  எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை  வெண்பா எழுதினேன். அது*

*பத்து பவுன் தங்கம்* *பளிச்சென்ற* *கல்வளையல்*
*முத்திலே  சின்னதாய்* *மூக்குத்தி - மத்தபடி*
*பாண்டு வைத்து* *ஊர்கோலம் பாட்டு* *இவைதவிர*
*வேண்டாம்  வரதட் சிணை*

##################

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? 
-ந.வந்தியக்குமாரன், சென்னை.

*இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில  தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும்
என்று நம்மால் அவதானிக்க முடிகிறது.  கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக
அளவில்  கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்*

################

காதல்  கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? -ராஜசுதா, சேலம்.

*சரிதான்... துப்பறியும் கதை  எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா*?

#################

ஊழல் பெருச்சாளிகள்  எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.

*பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்*

-#################

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? -எஸ்.ஏ.கேசவன், இனாம்
மணியாச்சி.

*‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை
சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக்  கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.*

``~~~~^^^^^^^^^^^^^^^^^^^

தினமும் பூண்டு சாப்பிட்டால்  இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

*தொடர்ந்து அதன் நாற்றத்தைச்  சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.*
~~~~~~~~~~~~~~~~~

இடமிருந்து  வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப்  போல் வேறு ஏதாவது? -த.முரளிதரன், சென்னை.

*தேருவருதே’, ‘மோருபோருமோ* *தமிழில் ஒரு *முழுக்குறள் *வெண்பாவே இப்படி *இருக்கிறது. ‘நீவாத *மாதவா தாமோக
*ராகமோ தாவாத* *மாதவா நீ*
~~~~~~~~~~~~~~~~~

அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? -ஆடுதுறை  கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.

*‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்*
--------------------------------------------------------------
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.18

Astrology: ஜோதிடம்: 14-9-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 14-9-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் ஆச்சார்யா ஒஷோ ரஜினீஷ் அவர்களுடைய ஜாதகம்.
பிறப்பு விபரம்: 11-12-1931ம் தேதி மாலை 5:45 மணிக்கு மத்தியப் பிரதேசத்திலுள்ள குச்வாடா என்னும் ஊரில் பிறந்தவர்!!!!

இந்த வாரம் குறைந்த அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 12 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் ஓஷொ என்று அழைக்கப்பட்ட ஆசார்ய ரஜ்னீஷ் அவர்களுடையது.
11 டிசம்பர் 1931ல் மாலை 5 மணி 45 நிமிடங்களுக்கு குச் வாடா என்றமத்திய பிரதேச மாநில ராய்சென் மாவட்டத்தில் பிறந்தவர்.
Friday, September 14, 2018 5:25:00 AM
-------------------------------------------------------------
2
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
14-9-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் ஓஷோ என்று அழைக்கப்பட்ட பகவான் ரஜ்னீஷ் ஆவார். பிறந்த தேதி 11-12-1931. மாலை 5.40 மணி. பிறந்த ஊர் போபால் அருகில் உள்ள இமாலியா என்ற கிராமம்.
அ.நடராஜன்
சிதம்பரம்
Friday, September 14, 2018 7:10:00 AM
-------------------------------------------------------------
3
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Famous Philosopher Rajneesh Osho born on 11/12/1931 time 5.45 at Kuchwada Madhya Pradesh
Friday, September 14, 2018 7:25:00 AM
------------------------------------------------------------------
4
Blogger angr said...
ஓஸோ” என்று அன்புடன் அழைக்கப்பெற்ற மறைந்த இந்திய தத்துவ ஞானி ஆச்சாரிய ரஜ்னீ
சுவாமிகள் ஜாதகம்.குறிப்பாக நிலவு+காரி+வெள்ளி யின் எட்டாமிட சேர்க்கை கவனிக்கத்தக்கது
Friday, September 14, 2018 7:54:00 AM
-----------------------------------------------------
5
Blogger Mahi said...
Dear sir,
The answer is Osho(Rajneesh)'s horoscope. Date of birth is 11-12-1931.
Friday, September 14, 2018 10:09:00 AM
----------------------------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answar for quiz14.08.2018
Mr Rajneesh, also known as Acharya Rajneesh, Bhagwan Shree Rajneesh, and latterly as Osho, was an Indian godman and leader of the Rajneesh movement. During his lifetime he was viewed as a controversial new religious movement leader and mystic. Wikipedia
Born: 11 December 1931, Raisen district
Died: 19 January 1990, Pune
Full name: Chandra Mohan Jain
Albums: Kundalini Meditation, Gourishankar Meditation, MORE
Parents: Saraswati Jain, Babulal
Friday, September 14, 2018 10:19:00 AM
----------------------------------------------------------------
7
Blogger bg said...
Osho Rajneesh born on december 11 1931 at Kuchwada, Madhya pradesh.
Friday, September 14, 2018 11:18:00 AM
-----------------------------------------------------
8
Blogger glowingguys said...
11th Dec 1931
Bhagwan Shree Rajneesh (Osho)
Friday, September 14, 2018 12:36:00 PM
------------------------------------------------------
9
Blogger venkatesh r said...
"ஓஷோ" என்று அழைக்கப்பட்ட ரஜினீஷ் சந்திர மோகன் ஜெயின் அவர்களின் ஜாதகம்.
பிறப்பு : டிசம்பர் 11 1931.
இடம் : குச்வாடா, பரேலி தாலுக்கா, ரெய்சன் (மா),மத்திய பிரதேசம்.
நேரம் : மாலை 5 மணி 30 நிமிடம்.
Friday, September 14, 2018 3:44:00 PM
-------------------------------------------------------
10
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is guru Rajnesh who was born on the 11th of December 1931 in Raisen District in India.
Kind Regards
Rajam Anand
Friday, September 14, 2018 6:22:00 PM
-------------------------------------------------------
11
Blogger thozhar pandian said...
11 டிசம்பர் 1931 பிறந்த திரு.இரஜனீஷ் அவர்கள்
Friday, September 14, 2018 9:43:00 PM
--------------------------------------------------------------
12
Blogger RAMVIDVISHAL said...
Acharya Rajneesh
DOB 11/12/1931
Saturday, September 15, 2018 3:28:00 AM
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 14-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  14-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? 5ல் கேது இருந்தால் ஒன்று அரசன் அல்லது சந்நியாசி. இவர் அரசனைப் போல வாழ்ந்த சந்நியாசி, இந்தியர். ஆனால் அகில உலகப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.18

மனிதக்குரங்கிடம் நடத்தப்பெற்ற விசாரணை!


மனிதக்குரங்கிடம் நடத்தப்பெற்ற விசாரணை!

வனப்பகுதியொன்றில் வாழ்ந்த மனிதக்குரங்கு ஒன்றை மற்றொரு வனப்பகுதிக்கு மாற்ற பத்துபேர்கொண்ட மனிதக்குழு
ஒரு பேருந்தில் அந்த மனிதக்குரங்கையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளாகி
மனித குரங்கைத் தவிர ஓட்டுநர் உட்பட அனைவரும் மரணமடைந்தனர்

விபத்துபற்றி காவல்துறை அதிகாரிகள் மனிதக்குரங்கிடம் விசாரணை நடத்தினர்

அப்போது முதல் கேள்வியாக..?

எத்தனை மணிக்கு விபத்து நடந்ததெனக் கேட்க..!

மேலே தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தில் கைவைத்து ஏழரை மணிக்கு என்றது அந்த மனிதக்குரங்கு

இரண்டாவது கேள்வியாக..?

உன்னோடு பயணித்த மனிதர்களெல்லாம் அப்போது என்ன செய்தனர் என்ற கேள்விக்கு ..?

அனைவரும் உறங்கினர் என குறட்டையும் விட்டு சைகை மூலம் செய்துகாட்டியது

மூன்றாவது கேள்வியாக.?

பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாரென்ற கேள்விக்கு..?

அவரும் உறங்கிவிட்டாரெனச் சொன்னது அந்த மனிதக்குரங்கு

கடுப்பாகிப்போன காவல்துறை அதிகாரிகள், அதெல்லாம் சரி, அவையெல்லாம் நடக்கும்போது, நீ என்ன செய்துகொண்டிருந்தாய் எனக் கேட்டனர்

அதற்கு மனிதக்குரங்கு என்ன சொன்னது ..?

நான்தான் அந்தப் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தேன் எனச் சொன்னதும் அதிகாரிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்

இப்படித்தான் உறவுகளே ..?

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையென்னும் அழகிய பயணத்தில், பேருந்துபோன்ற மனதை, குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு
குறட்டைவிட்டு உறங்குகின்றனர். குரங்குகளிடம் சிக்கிக்கொண்ட பேருந்து போன்ற மனம், தட்டுத்தடுமாறி, இறுதியாக
எங்காவது மோதி விபத்துக்குள்ளாகி அனைவருக்கும் மரணத்தை ஏற்படுத்துகிறது

ஆக தவறு எங்கிருக்கிறது என்பதை மட்டும் சரியாக உணர்ந்தோமேயானால், வாழ்க்கைப் பயணம் அழகியலே!
நானும் என் மனதினை இதுபோலவே குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, பலமுறை தடுமாறி வீழ்ந்ததுண்டு என்பதையும்
இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்

எனவே அலைபாயும் மனதினை இறைவன்டத்தில் ஒப்படைத்து நாம்  செயல்பட்டால் நம் வாழ்வில் எந்த வித விபத்து இன்றி,அவன் அருளால்,அவன் வழிகாட்டுதலால் அவனை அடையலாம் என்பதே உண்மை!!!!!

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.18

ஓஷோவும் ஸ்ரீ கோரக்கநாதரும்!!!!!


ஓஷோவும் ஸ்ரீ கோரக்கநாதரும்!!!!!


Die O Yogi Die என்ற தனது புத்தகத்தில் ஓஷோ விவரித்து எழுதியது!!!!!

ஸ்ரீ கோரக்கநாதர் என்றும் கோரக்க சித்தர் என்றும் அழைக்கப்படும் அந்த மாபெரும் ஞானியின் நூல் ஒன்றினைப் பற்றிப் பேச வரும் ஓஷோ எவ்வளவு விறுவிறுப்பாகத் தனது உரையைத் தொடங்கி இருக்கிறார் பாருங்கள்

'வானத்தைப் போல விரிந்து கிடக்கும் இந்து மதத்தின் பரப்பில், அதிக பட்சம் ஒளி வீசும் நட்சத்திரங்களில் பன்னிரண்டு பேரைக் குறிப்பிடச் சொன்னால் நீங்கள் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்..???' என்று சுமித்ரனந்தன் பண்ட என்ற இந்திக் கவிஞர் ஓஷோவைக் கேட்கிறார்.

'இந்து மத வானம் ஏகப்பட்ட நட்சத்திரங்களால் ஜொலிப்பது இதில் யாரை விடுவது, யாரைச் சேர்ப்பது..??? இந்தப் பட்டியலைக் கொடுப்பது மிகவும் சிரமமான வேலை ' என்று கூறி விட்டு நீண்ட நேரம் சிந்தித்த பின்னர் ஓஷோ இவர்களைச் சொன்னாராம்

'கிருஷ்ணா, பதஞ்சலி, புத்தர், மகாவீரர், நாகர்ஜுனர், ஆதிசங்கரர்,  கோரக்கநாதர், கபீர், குருநானக், மீரா, ராமகிருஷ்ணர், ஜே .கிருஷ்ணமூர்த்தி.'

சுமித்ரனந்தன் பண்ட விடவில்லை

'ஏன் ஸ்ரீ ராமரை விட்டு விட்டீரகள்...???' என்று கேட்கிறார்.

'பன்னிரண்டு பேரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நான் நிறையப் பேரை விட வேண்டியதாக இருந்தது அதனால் அசலான, சுயமான பங்களிப்புச் செய்தவர்களையே பட்டியலிட்டேன் ஸ்ரீராமர், கிருஷ்ணரைக் காட்டிலும் சுயமான பங்களிப்பு இந்து மதத்திற்குச் செய்யவில்லை அதனாலேயே இந்துக்கள் கிருஷ்ணரையே பூரண அவதாரம் என்று கருதுகிறார்கள், ராமரை அல்ல' என்கிறார் ஓஷோ
.
'சரி ஏழே பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் இதில் யார் யாரைச் சொல்வீர்கள்..???'என்று கேட்கிறார் அந்த இந்திக் கவிஞர்

ஓஷோ இந்த இரண்டாவது பட்டியலைக் கொடுக்கிறார்

'கிருஷ்ணா, பதஞ்சலி, புத்தர், மகாவீரர், சங்கரர், கோரக்கநாதர், கபீர்'

கவிஞர் இதற்குச் சும்மா தலையாட்டி விடவில்லை 'பன்னிரண்டு பேரில் ஐந்து பேரை விட்டிருக்கிறீர்களே அதற்கு ஏன் என்று காரணங்கள் சொல்ல முடியுமா...???'

அதற்கு ஓஷோ சொன்ன பதிலில்தான்

ஓஷோவின் ஆழமான சிந்தனையின் அற்புதங்கள் நமக்குப் புரிகிறது

'நாகார்ஜுனர் புத்தருக்குள் அடங்கி விடுகிறார். புத்தர் விதை என்றால் நாகார்ஜுனர் அது முளைத்து வந்த மரம் புத்தர் கங்கை நதியின் மூலம் என்றால் நாகர்ஜுனர் அதனுடைய பல புண்ணிய படித்துறைகளில் ஒன்றே எதனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் நிலையில் மரத்தை விட விதையை வைத்துக் கொள்வதே சிறப்பு விதையிலிருந்து இன்னுமே பல மரங்கள் முளைத்துத் தழைத்து வளரும். கிருஷ்ணமூர்த்தியும் புத்தருக்குள் அடக்கம். கிருஷ்ணமூர்த்தி புத்தரின் இன்றைய பதிப்பு. 'உனக்கு நீயே ஒளியாக இரு ' என்ற புத்தரின் பழைய சூத்திரத்திற்கு இன்றைய மொழியில் இருக்கும் விரிவுரை. ராமகிருஷ்ணரை எளிதாக கிருஷ்ணரில் அடக்கி விடலாம். மீராவையும், குருநானக்கையும் கபீரில் கரைத்து விடலாம். அவர்கள் இருவரும் கபீரின் இரண்டு கிளைகளே ஆவர். கபீரின் ஆண் அம்சம் குருநானக்கின் வெளிப்பட்டத்தைப் போல அவரது பெண் அம்சம் மீராவாய் ஆனது
இப்படித்தான் நான் ஏழு பேர்ப் பட்டியலைச் சொன்னேன்' என்கிறார் ஓஷோ
.
'சரி, இந்த ஏழு பேரை ஐந்து பேராகச் சுருக்குங்கள்!' என்கிறார் பண்ட

ஓஷோ அதற்கும் விடை அளிக்கிறார்

'கோரக்கநாதர் மூலவேர் அதனால் கபீரை அவருள் அடக்கலாம். அதே போல் சங்கரரைக் கண்ணனுக்குள் கண்டு விடலாம் .'

'இன்னும் நான்கு பேராக ஆக்கினால்...???'

'மகாவீரரையும் புத்தருக்குள் தரிசித்து விடலாம். எனவே இறுதியாக எஞ்சியது நான்கு பேர்' என்கிறார் ஓஷோ
.
'சரி மூன்று பேராக.....'

'அது இனி நடக்கவே நடக்காது கவிஞரே !' என்கிறார் ஓஷோ. 'இவர்கள் நான்கு பேரும் நான்கு திசைகளைப் போல கால, வெளியின் நான்கு பரிமாணங்களைப் போல தெய்வம் ஒன்றாக இருந்தாலும் அதற்குக் கரங்கள் நான்கு இந்த நான்கு பேரில் யாரை விட்டு விட்டாலும் அது தெய்வத்தின் நான்கு கரங்களில் ஒன்றை வெட்டுவதாகும். அதனை நான் செய்யத் தயாராக இல்லை.
இதுவரை உடைகளைக் களையச் சொன்னீர்கள். செய்ய முடிந்தது. இப்போது அங்கங்களையே வெட்டச் சொல்கிறீர்கள்.
அந்த வன்முறைக்கு நான் ஒப்ப மாட்டேன் !' என்று கூறி விடுகிறார் ஓஷோ

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, புத்த பகவான், பதஞ்சலி முனிவர், கோரக்கநாதர் என்று, எல்லையற்ற இந்திய ஞானிகளின் சாராம்சத்தை எல்லாம் இந்த நான்கு மகா ஞானிகளிடம் தரிசிக்க முடியும் என்று கூறும் ஓஷோ

கோரக்க சித்தரைப் பற்றித் தனது கடைசி நாட்களில் உரை நிகழ்த்தியதின் வடிவமே இந்தப் புத்தகம். முடிந்தால் தேடிப் பிடித்துப் படியுங்கள்!!!!

படித்ததில் வியந்தது.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.18

மனம் திருந்திய திருடன்!


மனம் திருந்திய திருடன்!

இரவு நேரம். அந்தத் துறவி வந்து சேர்ந்த இடம் திருவொற்றியூர். பகலெல்லாம்  வெகு தூரம் நடந்து வந்திருந்தார். களைப்பும் உறக்கமும் சேர்ந்துகொள்ள கண்ணில்பட்ட ஒரு வீட்டுத்  திண்ணையில் ஏறினார். ஜில்லென்றிருந்த கட்டாந்தரையில் படுத்தார். அப்படியே உறங்கிப் போனார்.

நள்ளிரவானது. தெருவின் இருபுறமும் நோட்டமிட்டபடி மெள்ள எட்டுவைத்து ஒருவன் வந்தான். துறவி  படுத்திருந்த திண்ணைக்கருகே நின்றான். உச்சி முதல் உள்ளங்கால்வரை அவரைப் பார்த்தான்.  அவரிடம் மூட்டை முடிச்சு ஒன்றும் இல்லை. அணிந்திருந்த வேட்டியையும், தலைக்குவைத்துப்  படுத்திருந்த மேல் துண்டையும் தவிர உடைகள்கூட ஏதுமில்லை. `இடுப்பில் ஏதாவது  வைத்திருப்பாரோ...’ என்று யோசித்தபடி நெருங்கிய அந்த ஆளின் கண்ணில் அது பட்டது... நிலவொளியில், துறவியின் காதில் மின்னிக்கொண்டிருந்த கடுக்கண்.

அவன், அவரை நெருங்கினான்.

அவர் மூச்சு சீராக வந்துகொண்டிருந்தது. அவர் உறங்குகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், அவருடைய காதிலிருந்து ஒரு கடுக்கணை மெள்ளக் கழற்றினான். அவன் காதில் கைவைத்தவுடனேயே  துறவி விழித்துக்கொண்டார். அவன் திருட வந்தவன் என்பதும் அவருக்குப் புரிந்தது. ஆனாலும்  கண்களைத் திறக்காமல், அசையாமல் அப்படியே படுத்திருந்தார். அவன் ஒரு கடுக்கணைக்  கழற்றிவிட்டான். ஒருக்களித்துப் படுத்திருந்த துறவி, அவன் இன்னொரு கடுக்கணையும் கழற்றுவதற்குத் தோதாக மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்தார்.

அவன் ஆடிப் போனான். அவர்  விழித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான். ``என்னப்பா அப்படியே நின்னுட்டே... ஒரு
கடுக்கணைவெச்சுக்கிட்டு என்ன செய்வே? இன்னொண்ணையும் கழட்டு!’’ அவன் பொத்தென்று  துறவியின் காலில் விழுந்தான். ``என்னை மன்னிச்சுடுங்கய்யா...’’

``நீ ஏம்ப்பா என்கிட்ட மன்னிப்புக்  கேட்கணும். என் மேலதான் தப்பு. எல்லாத்தையும் துறந்ததுக்கு அப்புறம் இந்தக் கடுக்கண் மட்டும் எனக்கு எதுக்கு? அதை ரொம்ப அழகா எனக்கு உணர்த்திட்டே. நீயே இதை வெச்சுக்கோ’’ இன்னொரு  கடுக்கணையும் அவனிடம் கொடுத்தார்.

அவன் ``இனிமேல் திருடமாட்டேன்’’ என்று அவரிடம்  சொல்லிவிட்டு திரும்பிப் போனான். ஒருவனின் தவறை நாசூக்காக உணர்த்திய அந்தத் துறவி வேறு  யாருமல்ல. `வள்ளலார்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமிகள்தான் அவர்.. அப்படி ஒரு குணமும் மனமும்  வாய்த்திருந்ததால்தான் அவர் இன்றளவும் போற்றப்படுகிறார்!!!!

படித்ததில்_பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.18

*எங்கே? எங்கே? எங்கே? எங்கே?*

*எங்கே? எங்கே? எங்கே? எங்கே?*

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மொரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல்துலக்க ஆலங்குச்சி எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம்பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞாண் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள் எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?

குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து எங்கே?

கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்கள் எங்கே ?

தாய்ப்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?

மங்கலங்கள் தந்த மஞ்சள்பை  எங்கே ?

மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பை எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?

சுத்தமான நீர் எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழுஆயுள் நமக்கு எங்கே?

*"சிந்திக்க நமக்கு"**"நேரம்தான்எங்கே?"* *எங்கே???"*

*"இத்தனையும் தொலைத்துவிட்டு"* *"நாம் செல்கின்றஅவசரப்பயணம் தான்"* *எங்கே?"*

25 வருடங்களுக்கு முன்
.
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..!
"நாகரீகப் போர்வை போர்த்தி நாசமாய் போனோம்..!
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
இன்று என்னதான் உலகம் நவீனமயம் ஆனாலும்
தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...!
=============================================
படித்ததில் பிடித்தது.
🌞🌞
😭😭😭😭😭
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.9.18

Astrology: ஜோதிடம்: 7-9-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 7-9-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்களுடைய ஜாதகம்.
பிறப்பு விபரம்: 7-10-1952ம் தேதி காலை 9:30 மணிக்கு St.Petersburg நகரில் பிறந்தவர்!!!!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  15 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் ர‌ஷியாவின் அதிபர் விளாமிடிர் புடின் அவர்களுடையது. லெனிகிராடில் 7 அக்டோபர் 1952ல் காலை 9 மணி 30 நிமிடத்திற்குப் பிறந்தவர்.
Friday, September 07, 2018 5:57:00 AM
----------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Prisedent of Russia Mr.Vladimir Putin born on 07/10/1952 9.30am at Saint Petersburg
Friday, September 07, 2018 7:13:00 AM
---------------------------------------------------------
3
Blogger angr said...
தற்போதைய இரசிய அதிபர் திரு விளாடிமீர் புதின் அவர்கள் ஜாதஹம்
Friday, September 07, 2018 7:22:00 AM
--------------------------------------------------------------
4
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
7-9-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் ருஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ( Vladimir Putin ) ஆவார். பிறந்த தேதி 7-10-1952. காலை 10.25 மணி. பிறந்த ஊர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ருஷ்யா.
அ.நடராஜன்
சிதம்பரம்
Friday, September 07, 2018 7:35:00 AM
----------------------------------------------------------
5
Blogger Mahi said...
Dear sir,
Today's quiz answer is Viladimir Putin, President of Russia. Birth date:07-10-1952.
Friday, September 07, 2018 9:20:00 AM
------------------------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answar quiz 07.09.2018
Mr.Vladimir Putin
Russian President
Image result for Vladimir Putin
Vladimir Vladimirovich Putin is a Russian politician and former intelligence officer serving as President of Russia since 2012, previously holding the position from 2000 until 2008. Wikipedia
Born: 7 October 1952 (age 65 years), Saint Petersburg, Russia 8.10am nearly
Nationality: Russian
Spouse: Lyudmila Putina (m. 1983–2014)
Previous offices: Prime Minister of Russia (2008–2012), MORE
Children: Yekaterina Putina, Mariya Putina
Friday, September 07, 2018 10:10:00 AM
------------------------------------------------------------
7
Blogger bg said...
Vladimir Putin born on october 7 1952 President of Russia.
Friday, September 07, 2018 10:42:00 AM Delete
Blogger glowingguys said...
Birth Date: 7.10.1952
Birth time: probably morning 10.30AM
World Famous Russian President Vladimir Putin
Friday, September 07, 2018 11:28:00 AM
--------------------------------------------------------------
8
Blogger glowingguys said...
Birth Date: 7.10.1952
Birth time: probably morning 10.30AM
World Famous Russian President Vladimir Putin
Friday, September 07, 2018 11:28:00 AM
--------------------------------------------------------------
9
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Vladimir Putin
DoB: 7th October 1952 @ 09.30 AM
Place: Saint Petersburg, Russia
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, September 07, 2018 11:36:00 AM
------------------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரியவர்
ரஷ்ய அதிபர் விளாதிர்மின் புதின் அவர்கள்
DOB :7/10/1952
TIME:9:30A.M
PLACE :ST.PETERSBURG
நன்றி
Friday, September 07, 2018 11:38:00 AM
------------------------------------------------------------
11
Blogger சங்கரராம் நாராயணன் said...
விளாடிமிர் புடின்
பிறந்த தேதி : 07-10-1952
Friday, September 07, 2018 12:19:00 PM
-------------------------------------------------------------
12
Blogger ARAVINDHARAJ said...
Name:Vladimir Putin
Date of Birth:07-Oct-1952
Place of Birth:Saint Petersburg,
Northwestern Federal District,Russia
Profession:Politician.
Friday, September 07, 2018 1:06:00 PM
------------------------------------------------------------
13
Blogger suresh radhakrishnan said...
The answer to the question is Mr. Vladimir put in the president of Russia born on 7th Oct 1952
Friday, September 07, 2018 3:48:00 PM
--------------------------------------------------------
14
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is President of Russia Vladimir Putin who was born on the 7th of October 1952 in Saint Petersburg, Russia.
Kind Regards
Rajam Anand
Friday, September 07, 2018 8:43:00 PM
----------------------------------------------------------------
15
Blogger ponnusamy gowda said...
VLADMIR PUTIN
Vladimir Vladimirovich Putin (Russian: Влади́мир Влади́мирович Пу́тин; IPA: [vɫɐˈdʲimʲɪr vɫɐˈdʲimʲɪrəvʲɪtɕ ˈputʲɪn] ( listen); born 7 October 1952) is a Russian politician who has been the President of Russia since 7 May 2012. Putin previously served as President from 2000 to 2008 and as Prime Minister of Russia from 1999 to 2000, and again from 2008 to 2012
Date of Birth: 07-Oct-1952 at 11-20 hrs.
Place of Birth: Saint Petersburg, Northwestern Federal District, Russia
Profession: Politician
-Ponnusamy
Friday, September 07, 2018 9:01:00 PM
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!