மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label மனிதநேயம். Show all posts
Showing posts with label மனிதநேயம். Show all posts

13.12.18

விழாக்களின் முக்கியத்துவம் என்ன?


விழாக்களின் முக்கியத்துவம் என்ன?

சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டதுதான் விழாக்கள்!!!!

எங்கும், எதற்கும் செல்லாமல், அரச மரத்தடி பிள்ளையார்களாகவே காலம் கழித்து விடும் மனிதர்கள் நம்மில் அநேகர் உண்டு. வாழ்வின் எல்லைகளை குறுகலாகவும், சிறிதாகவும் அமைத்து, இப்படி சிறை வாழ்க்கையை மேற்கொள்வோர், உண்மையில் இரக்கத்துக்கு உரியவர்கள்.

திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!

ஆனால், இவ்வாறு பழகும் தன்மை பலரிடம் இல்லாமல் போகக் காரணம், எதிலும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் குணமே!
இதுவே, இவர்களை, இருந்த இடத்தை விட்டு நகர விடாமல் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. இப்படி கணக்கு பார்க்கும் குணம் உள்ளோர், 'அவன் என் வீட்டு விசேஷத்தில் அரை மணி நேரம் தான் இருந்தான்; நான் அஞ்சு நிமிஷம் கூட, அதிகமாக இருக்க மாட்டேன்...' என்று எதிர் மறையாக நடந்து கொள்ளவோ, கணக்கு பார்க்கவோ வேண்டியதில்லை.

எதிராளிகளை வெற்றி கொள்வது, கணக்கு பார்த்து நடந்து கொள்வதில் இல்லை; பெருந்தன்மையாக நடப்பதில் தான் உள்ளது.

இரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார்... 'அவன் தான் அப்படி நடந்துகிட்டான்...நம்மாளு ரொம்ப பெருந் தன்மை; எதையுமே வெளிக் காட்டிக்காம, ரொம்ப நேரம் கல்யாண வீட்டில் இருந்தாரு. அது மட்டுமல்ல, சில வேலைகளைத் தானே எடுத்துப் போட்டு செஞ்சாரு... நம்மாளு மாதிரி யாரும் வர மாட்டாங்க...' என்று உச்சி முகர்ந்து சொல்லி விட்டார்.

கேள்விப் பட்ட, 'கணக்கு' மனிதருக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.

ஓர் அழைப்பு என்பதை வெறும் காகிதமாக பார்க்கக் கூடாது; அதை, உணர்வும், உயிர்ப்பும் அடங்கிய இதயமாக பார்க்க வேண்டும்.
விசேஷம் மற்றும் நல்லது, கெட்டதுகள் இதயங்களை ஒன்று சேர்க்கின்றன; பல புதிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பழைய உறவுகளை - நட்புகளை சந்திக்கிற போது, அந்த இடத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

புதிய அறிமுகங்கள், பல வகைகளில் நமக்கு பயன் படுகின்றன. நம் உறவு, நட்பு, ஏன், தொழில் கூட விரிவடைய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கல்லுாரி தாளாளரின் அறிமுகம், வேலை வாய்ப்பிலோ, கல்வி அட்மிஷனிலோ முடிய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மருத்துவரின் அறிமுகம், நல்ல மருத்துவத்திற்கும், அநியாய மருத்துவ பில் வழியே நாம் தீட்டப் படாமல் தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

ஒரு பயணச் சீட்டு ஆய்வாளரின் அறிமுகம், தவிர்க்க முடியாத ஓர் அவசரப் பயணத்தின் போது, ஒரு, 'பர்த்' கிடைப்பதில் கூட முடியலாம்.

வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், நுாலாம்படை உடலில் படிவதைத் தவிர, வேறு என்ன அதிசயம் நிகழ்ந்து விடும்!

'கல்லுாரி விழா; வாப்பா...' என்கிறாள் மகள். 'அடப் போம்மா... செம போரு; அதுங்க அடிக்கிற கூத்தை எவன் பாக்கறது...' என்று மறுக்கிற தந்தை, மிகப் பெரிய தவறை செய்கிறார்.

இவரது இலக்கு கல்லுாரி விழா கலை நிகழ்ச்சிகள் அல்ல; அழைத்த மகளின் அன்பிற்கு செவி சாய்த்து, அவளது உணர்விற்கு மதிப்பு கொடுப்பது தான்!

அவ்விழாவிற்கு போனால், மகளின் தோழிகள் பற்றி அறியலாம்; அவர்களது அப்பாக்கள், அம்மாக்களின் அறிமுகம் பிற் காலத்தில், தன் மகளின் எதிர்கால விஷயத்தில் நம்ப முடியாத நன்மையான முடிவுகளை எடுக்க உதவலாம்.

சரி, எங்கும் வராமல், இவர் சேமிக்கும் நேரத்தை, நல்ல படியாக பயன் படுத்தினாரா என்றால், இல்லை. வெட்டியான முறையில் இவர் போக்கிய பொழுதை, மகளுக்கென அளித்திருந்தால், வட்டியும், முதலுமாய் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது தானே!

எந்த விழாக்களையும், விழாக்களாக பார்க்காதீர்கள்; வீழ்ந்து விடாமல் இருக்க உதவும் வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
விழாக்கள் எனில் கலந்து கொள்ளக் காரணங்கள் தேட வேண்டுமே தவிர, அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடக் கூடாது!
-----------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.12.18

நாமும் நமது குறைகளும்!


நாமும் நமது குறைகளும்!

1. மாற்றுத் தீர்வு சொல்லத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே குறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை இருக்கிறது._*

2. வீட்டுக்கு யாரும் வந்திடாதீங்க. தொல்லை பண்ணாதீங்க என்று நாம நினைக்கிற அளவில் தான் உறவுகள் இருக்காங்க. மனசோடு ஒட்டி எந்த உறவும் இல்லை.

3. வாழ்க்கையை பலமாக்குவது மகிழ்ச்சி. வாழ்க்கையை பலவீனம் ஆக்குவது சந்தேகம்.

4. உனக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்து ஏங்கினால் தாழ்வு மனப்பான்மை வரும். கீழே உள்ளவர்களைப் பார்த்தால் தலைக்கனம் வரும். உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள், நீங்கள் உங்கள் தனித் தன்மையோடு இருங்கள் தன்னம்பிக்கை வரும்.

5. இந்த உலகில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. கவலை இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே அனுபவித்தவர் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்று அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.*

6. ஒரே ஒரு சந்தோஷம் என்னன்னா யாருமே சந்தோசமா இல்ல . இது தான் பலரின் உள் மனம்.*

7. அவமானங்களை சகித்துக் கொள்வதும், தோல்விகளை ஏற்றுக் கொள்வதுமே, நமக்கான முதல் வெற்றி.

8. நல்ல உறவினர்களுக்குள் எந்த விதமான வாக்குறுதிகளும் நிபந்தனைகளும் தேவை இல்லை. அவர்களுக்குள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே போதும்.

9. பதட்டம் உங்களுக்கு வந்தால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் அதே பதட்டம் வரும்,  வரணும், பயப்படணும்  என நினைப்பதால் எந்தப் பயனும் இல்லை.

10. ஆடம்பர வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நாம் விரும்பும் வாழ்க்கை அந்தந்த வயதில் தான் முடியும். படிப்பு, வேலை, திருமணம் சரியான வயதில் சரியான முடிவு எடுக்க வேண்டும்!!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.18

இதுவல்லவா மனிதநேயம்!


இதுவல்லவா மனிதநேயம்!

போப்பாண்டவரை சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது அறிஞர் அண்ணாவுக்கு.

அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார். போப்பாண்டவர் சொன்னார், அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா என்று கேட்டார் அண்ணா.

கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகளிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்கு சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காக போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார். அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

 நாஞ்சிலாரை சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தன் அறிஞர் அண்ணா.

சென்னை கண்ணிமாரா நூலகத்தில் படித்து கொண்டிருந்தார் அண்ணா. நூலகத்தை மூடவேண்டும் வெளியே போக முடியுமா என்று கேட்டார்கள். அண்ணா சொன்னார், நீங்கள் வெளியே பூட்டிவிட்டு செல்லுங்கள். நான் படித்துவிட்டு உள்ளேயே தூங்கிவிடுகிறேன் என்று சொன்னார் அண்ணா. காலையில் நூலகம் திறந்த பொழுதும் படித்து கொண்டிருந்தார் அண்ணா. "உறங்கி கிடந்த தமிழர்களின் உணர்வுகளை  தட்டியெழுப்ப உறங்காமல் படித்தவர், வார்த்தைகளுக்கு சலங்கை கட்டி நடனமாட விட்டவர், கரகரத்த குரலில் சங்கநாதமிட்ட" அறிஞர் அண்ணா.

"எல்லோரும் கொண்டாடுவோம்,
அண்ணாவின் பேரறிவை,
ஆற்றல்மிகு சொல்லழகை,
சொன்னால் முடிந்திடுமோ,
சொல்வதென்றால் இயன்றிடுமோ"
- கோ. கிருஷ்ணமூர்த்தி

மேலதிகத் தகவலுக்கு:
https://en.wikipedia.org/wiki/Mohan_Ranade


------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!