மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.12

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

இளம் தம்ப்திகள் ஒரு பழைய வீட்டிற்குக் குடிபோனார்கள். அது மாடி வீடு.

பக்கத்து வீட்டு பெண்மணி, அந்த அதிகாலை நேரத்தில், துணிகளைத் துவைத்து முடித்து, கொடிக் கம்பியில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.

அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி தன் கணவனிடம் சொன்னாள்: “பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே துவைக்க வில்லை. அங்கங்கே  அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை சோப்பை மாற்றினால், துணிகள் பளிச்சிடலாம்"

அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன், அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.

அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

அன்று காலையில், ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும் துணைகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி. அவைகள் சுத்தமாகவும்,  பளிச்சென்றும் இருந்தன!

ஆச்சரியம் மேலிட, தன் கணவனிடம் சொன்னாள்: “இந்த அதிசயத்தைப் பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி, சரியாகத் துவைத்து இருக்கிறாள். அவளுக்கு யார்  சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை!? ”

அவளுடைய் அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான்: “இன்று அதிகாலையில் எழுந்து, நமது வீட்டு ஜன்னலை நான் நன்றாக துடைத்திருக்கிறேன். collins Liquid  போட்டுத் துடைத்திருக்கிறேன்.”

மனைவி வாயடைத்துப்போய் விட்டாள். அவளால் மேற் கொண்டு ஒன்றும் பேச முடியவில்லை.

அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம்!

அன்புடன்
வாத்தியார்
 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.12.12

வாசல் எத்தனை வாசல(டா) !

வாசல் எத்தனை வாசல(டா) !

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்

ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலைவாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில்வாசல்
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல்

வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல்

சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ்வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும்வாசல்

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும்வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒருவாசல்

மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்

ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலைவாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில்வாசல்
(ஆறுமுகன் ... ).

   
பாடியவர்கள்: சூலமங்கலம்' சகோதரிகள்

பழைய படம். படத்தில் சகோதரிகளுடன் சேர்ந்து வயலின் வாசிப்பவர் யாரென்று தெரிகிறதா?


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

27.12.12

கவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே! காலமிருக்குது பின்னே!

கவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே! காலமிருக்குது பின்னே!

இன்றைய கவிதைகள் பகுதியை பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
காடு வெளையட்டும் பொண்ணே!

நாயகி:
சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப்பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்தமுறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பு
உள்ளே மறைஞ்சிருக்கு - அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில்மூழ்கி முத்தை யெடுக்கும்
வழிகாட்டி மரமான
தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் - ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்!

நாயகி:
அட
காடு வெளௌஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே

நாயகி:
மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே - பசி
வந்திடக் காரணமென்ன மச்சான்?

நாயகன்:
அவன்
தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!

நாயகி:
பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

நாயகன்:
தினம்
கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

நாயகி:
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

நாயகன்:
இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது - சேரிக்கும்
இன்பம் திரும்புமடி!

நாயகி:
நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்?

நாயகன்:
நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி!

நாயகி:
அட
காடு வெளௌஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்!
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்!

 - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்




(இந்தப் பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதலில் தான் வேலைபார்த்த ‘ஜனசத்தி’ என்னும் பொதுவுடமைக் கட்சியின் நாளிதழில் எழுதியிருந்தார். திரையுலகிற்கு வந்தபிறகு சிறிது மாற்றம் செய்து புரட்சித் தலைவரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்பட்த்திற்கு எழுதிக்கொடுத்தார். ஆண்டு 1958 படத்தில் இப்பாடலை திரு.T.M.செள்ந்தரராஜனும், நடிகை திருமதி. பானுமதியும் பாடியிருப்பார்கள்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை:

அறிவிப்பு:

நேற்று நான் எழுதிய பதிவிற்கு, நிறைய மின்னஞ்சல்கள்  வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் படித்துவிட்டு,  உங்களில் அதிகமான பேர்கள் சொல்லியுள்ள கருத்தின்படி நடக்கலாம் என்றுள்ளேன். நீங்கள்தான் (மாணவக் கண்மணிகள்) எனக்கு முக்கியம். நல்லதொரு அறிவிப்பை இன்னும் 4 தினங்களில் பதிவில் வெளியிடுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++====
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.12.12

என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!

என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!

என்னதான் எழுதிப் போடட்டுமே
எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே
இணையத்தின் விதியதை உணரட்டுமே
என்னாளும் கலக்கம் கொள்ளட்டுமே!


(புரட்சித்தலைவரின் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்னும் பாடலை கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்)

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்த வெளியில் குளிப்பதற்குச் சமமானது. ஒரு இளம் பெண், அதுவும் அழகான இளம் பெண் திறந்த வெளியில்தினமும் குளித்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அதை விவரிக்க வேண்டியதில்லை.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வகுப்பறையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆறு ஆண்டுகளில் இதுவரை 1277 பதிவுகள வெளிவந்துள்ளன

3,654 தொடர்பாளர்களும், கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களுமாக சுமார்  
5, 000 வாசகர்கள் எனக்குக் கிடைத்துள்ளார்கள். அது மகிழ்ச்சி தரும் விஷ்யம். அதே நேரத்தில் என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் திருட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. அது மகிழ்ச்சி தரும் விஷயமல்ல. திருடுகிறவர்கள் அவற்றைத் தாங்கள் எழுதியதைப் போன்று தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான், என் அரிய நேரத்தைச் செலவழித்து இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலான நேரத்தில்
எழுதுவதை, திருடர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று 2 நிமிடங்களில் copy & paste முறையில் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அதனால் என்ன ஆதாயம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

நமது வகுப்பறைக் கண்மணிகள் பலர் எனக்குத் திருட்டுக்களைச் சுட்டிக் காட்டினார்கள் (முன்பு வந்த, அவர்களுடைய கடிதங்களில் சிலவற்றை, உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.)

Right side click செய்து பிரதி எடுப்பதைச் சாத்தியமில்லாதபடி செய்து வைத்திருக்கிறேன். ஆனால் திருடர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. அந்த வழியாக வந்துதிருடிக்கொண்டு போய் விடுகிறார்கள். நமது வலைப் பதிவை, உறுப்பினர்களுக்கு மட்டும் என்று வரையறுத்துவிடலாம். ஆனால் நூறு பேர்களை மட்டும் தான் உறுப்பினர் ஆக்க முடியும். கூகுள் ஆண்டவர் அதற்கு மட்டும்தான் அனுமதியளிப்பார்.

நம்து வகுப்பறை நண்பர் சித்தூர் முருகேசன் அவர்கள் பூட்டுப் போட்டு வையுங்கள் என்று அறிவுறுத்தினார். வலைத்தளங்களுக்கு எப்படிப் பூட்டுப் போடுவது? ஆகவே மேல்நிலைப் பாடங்களையும், அஷ்டகவர்கப் பாடங்களையும் தனி இணைய தளங்களில் (My own websites) எழுதி வருகிறேன். அங்கேயும் திருடர்கள் நுழைய முடியாதபடி எச்சரிக்கையாக இருக்கிறேன்.
------------------------------------------------------------------
திருட்டைப் பற்றி வந்த வாசகர் கடிதங்களில் சில:

1  
Rajaramarunagiri <...............@gmail.com>
  
12 Apr’ 2012
      
to spvrsubbiah, me
பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர்,
                           அவர்களுக்கு தங்களது வகுப்பறையிலிருந்து சில ஆக்கங்களை ஒரு உத்தமர் திருடிக்கொண்டுபோய் அவரது வலைத்தளத்தில் தான்
உருவாக்கியது போல் மேக்கப் போட்டுள்ளார்.அந்தத் தளத்தின்  முகவரி http://jothidamkarka.blogspot.com/2012/01/blog-post.html இது தாங்களும் சென்று
பாருங்கள்.எல்லாமே பகல்கொள்ளையாக இருக்கிறது. அடுத்தவர் உழைப்பைத் திருடி வெறும் cut&Paste மட்டுமே செய்துள்ளார்.வேண்டுமானாலும் ஒன்று செய்யலாம்
select  செய்யாதவாறு செய்தால் copy யும் செய்யமுடியாது.

Yours Friendly,
Rajaram.AR
-----------------------------------------------------------
2
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடு போகின்றன
திருட்டுக்கள்
    x
Bhuvaneshwar ||| Dharmalingam <.................................@gmail.com>  
11 May’ 2012
      
to me
அன்பரே, வணக்கம்,
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடுபோவதாக நான் எண்ணுகிறேன்.இதோ, உதாரணமாக:  http://www.amanushyam.com/2012/05/blog-post_3461.html .... யதிர்சையாக பார்த்தேன்...... சொல்ல வேண்டும் யென
தோன்றியது......எதையாவது பண்ணி, copy paste பண்ணுவதை தடுங்கள். சில blog களில் இந்த வசதியை நான் பார்த்து இருக்கிறேன். எப்படி என தெரியாது எனக்கு. தெரிந்தால் சொல்லி விடுவேனே........

Best Regards,
Bhuvaneshwar Dharmalingam
------------------------------------------------------------------
3
srinivasan  <........................@yahoo.com>
12/09/2011      
to me
Dear sir,

Today  I had some free time & I am aware that  our classroom lesson is closed for one week. But with Google help  just I was roaming in the web World & observed your lessons are copied by one blog named after AKGUPTA. I have observed even the words are also same Dito of our classroom lessons.Please take care about this fellow.

Thanks & Regards
G.Seenivasan
-------------------------------------------------------------
4
S.Prabhu Navaneethakrishnan <..................................@gmail.com>  
20/04/2011      

Hello Sir,

Hope all is well. I'm one of the student who is following your blog from 2008 and dormant for a while due to work. I happened come across this site in which he copied some of our articles. Though he has some articles of his own, I feel its my responsibility to let you know this. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6484

God Bless you.
S.Prabhu Navaneethakrishnan <................................@gmail.com>
--------------------------------------------------------------  
நான் அவ்வாறு வந்த கடிதங்களுக்கு இப்படிப் பதில் எழுதினேன்:

இணையத்தில் பாதிப்பேர் அடுத்தவர்களுடைய எழுத்துக்களைத் திருடித் தங்களுடையதைப்போலப் பதிவிட்டுக்கொள்கிறார்கள். அற்பர்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எல்லாம் சாத்தியமில்லை. இணையத்தில் எழுதுவது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம். ஒருவர் மட்டுமல்ல. நிறையப் பேர்கள் திருடிப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் துணையோடு போராடலாம். தற்சமயம் அதற்கு நேரமில்லை.நமது மண்ணில் அது சாத்தியமுமில்லை. உங்களின் தகவலுக்கு நன்றி!
-----------------------------------------------------------------
இதுவரை 622 ஜோதிடப் பாடங்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் படிப்பதற்கும் கிடைக்கும், திருடிக்கொண்டு போவதற்கும் கிடைக்கும்.

ஜோதிடம் பொதுவானதுதான். எனக்கு மட்டும் சொந்தமானதில்லை. ஒவ்வொருவரும் பழைய ஜோதிட நூல்களைப் படித்து, தங்கள் சொந்த நடையில் எழுதினால் அல்லது கற்பித்தால் தவறில்லை. அடுத்தவனுடைய ஆக்கத்தை, எழுத்தைக் கூசாமல் திருடுவது எப்படி நியாயம் ஆகும்?

ஜோதிடம் பெரிய கடல். இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாமல் சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுதலாம். ஆனால் இப்படி அநியாயமாகத் திருடிக் கொண்டுபோனால் என்ன செய்வது?

தனி இணையதளங்களான classroom2012 & classroom337 ஆகிய இரண்டிலும், பாடங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த 3 இடங்களிலும் எழுதுவதைச்
சிரமாகக் கருதுகிறேன். நேரம் இனமை, மின்வெட்டு ஆகியவை முக்கியமான காரணங்கள். அத்துடன் எனது வியாபார மற்றும் சொந்த அலுவல்கள் எல்லாம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன

புத்தாண்டில் ஒரு இடத்தில் மட்டுமே எழுத முடியும் என்னும் நிலைமை!
இன்னும் 5 தினங்களில் புது ஆண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டில் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதலாமா? அல்லது வேண்டாமா?

வகுப்பறையை மூடிவிடலாமா?

அல்லது வகுப்பறையில் ஜோதிடத்தைத் தவிர்த்து வேறு எதையாவது எழுதலாமா?

உங்களுடைய மேலான ஆலோசனை வரவேற்கப்படுகிறது?

எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com.

அக்கறை, ஆர்வம்  உள்ளவர்கள் அனைவரும் உங்களுடைய மேலான கருத்துக்களை எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 10









Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 10

ஜோதிடத் தொடர் - பகுதி 10

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் மட்டும்  (கடக ராசி)

இது குரு பகவானின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. ஹஸ்தம்
8. சித்திரை
9. சுவாதி
10. அனுஷம்
11. கேட்டை
12. மூலம்
13. பூராடம்
14. திருவோணம்
15. அவிட்டம்
16. சதயம்
17. உத்திரட்டாதி
18. ரேவதி

ஆகிய 18 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் மூலம், பூராடம், உத்திராடம் (முதல் பாதம் மட்டும்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அவிட்டம் 3 & 4ஆம் பாதங்களுக்கும், சதய நட்சத்திரம், பூரட்டாதி  1,2 & 3ஆம் பாதங்களுக்கும். அவைகள் கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்களுக்கும் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

பூர நட்சத்திரம் பொருந்தாது!

திருவாதிரை, மகம், ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

24.12.12

நகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்!


மாயன்  காலெண்டர்  மேட்டர்  ஊற்றிக்  கொண்டு  விட்டது. பலரும்  (நாமல்ல) எதிர்பார்த்தது போல  உலகத்திற்கு எந்தவிதக் கேடும் நிகழவில்லை.

இந்தியாவிற்கு ஒன்றும் நேராது, இது ஞான பூமி, பல மகான்கள் அவதரித்த பூமி, நமக்கு ஒன்றும் நேராது என்று நான் முன்பே பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். 21.11.2011 அன்று “உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!” என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். அதற்கான சுட்டி (URL)
http://classroom2007.blogspot.in/2011/12/astrology_21.html
படித்துப் பாருங்கள்

மாயன், அவர்கள் கணக்குப்படி ஒரு யுகம் முடிந்து, இன்னொரு யுகம் ஆரம்பிப்பதை அவ்வாறு எழுதியிருக்கலாம். அதைப் புரிந்து கொள்ளாமல், அந்தப் பகுதி மக்களும், ஊடகங்களும் பரவலாகக் கலவரத்தை ஏற்படுத்தி விட்டன!

போகட்டும், நாம் 337 டானிக்கில் தினமும் 10 மிலி லிட்டர் (இரண்டு மூடி அளவு) ஊற்றித் தண்ணீர் கலக்காமல் குடித்துவிட்டு எப்போதும் போல மகிழ்ச்சியோடு இருப்போம் நம் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக இன்றையப் பதிவு நகைச்சுவைப் பதிவாக மலர்கிறது!!!!

அன்புடன்
வாத்தியார்
 -------------------------------------------------------------------------------



 1



 2



 3



 4


 5



 6



 7



 8



 9



 10


11



 12



 13



 14



 15



 16



 17


இவற்றுள் எது நன்றாக உள்ளது?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.12.12

Devotional: படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந்தம்?


Devotional: படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந்தம்?

பக்தி மலர்

படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந்தம்?’ என்று கேட்டால் சம்பந்தம் இருக்கிறது என்கிறது சீர்காழியாரின் பாட்டு. நம் வீட்டுப் படிகளைப் பற்றி அவர் சொல்லவில்லை.

முருகப் பெருமான் குடியிருக்கும் திருத்தணி மலைப் படிகளைப் பற்றி அவர் அப்படிச் சொல்கிறார். அவர் சிறந்த முருக பக்தர். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்பிக்கை கொள்வோம். பக்தி மார்க்கத்தின் முதல்படி நம்பிக்கைதான். அவர் பாடியுள்ள 'தணிகை மலைப் படிகளெல்லாம்' என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலைப் பக்திப்  பரவசத்துடன் இன்று வலையேற்றுகிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------
தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும் - திருத்
தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும் -அங்கே
தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்

(தணிகை மலை)

அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்

(தணிகை மலை)

கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி

கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி -அதைக்
காண்பவர்க்கு எந்த நாளும் இல்லையே வீழ்ச்சி

(திருத்தணிகை ... )

விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் -அது
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்

குலுங்கிவரும் தென்றலங்கே ...

குலுங்கிவரும் தென்றலங்கே இசை முழக்கும்
திருக்குமரன் பேர் சொல்லிச்சொல்லி நமை மயக்கும்

(தணிகை மலை)

அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்

(தணிகை மலை).   


பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்



++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.12.12

கவிதை நயம்: சுவைக்காக எதைப் பெறக்கூடாது?

கவிதை நயம்: சுவைக்காக எதைப் பெறக்கூடாது?

கவிதை நயம்:

இன்றைய கவிதை நயம் பகுதியை, கவியரச்ர் கண்ணதாசன் எழுதிய 2 கவிதைகள் அலங்கரிக்கின்றன. உணவில் என்ன் சேர்க்க வேண்டும், என்ன சேர்க்ககூடாது என்பதை அவர் வலியுறுத்தி எழுதியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------------------------

முட்டைப்பட்  டாணி  முளை
முருங்கைக்  கீரைவெங்  காயம்
தட்டைப் பயிறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கில்
கொடியதோர் வாய்வு காணும்
தொட்டுப்பா ராதே! என்றும்
சுவைக்காக நோய் பெறாதே!

2
முளைக்கீரை, மணத்தக் காளி
முருங்கைக்காய், வெள்ளரிக் காய்,
உளிப்பூண்டோ டகத்திக் கீரை,
உயர்ந்த தக்காளி, கோசு,
கனியோடு நெய், பருப்பு,
கத்தரி, வெண்டை, பீட்ரூட்,
நெளிகின்ற புடலை நெல்லி,
நீள்கொத் தவரங்கா யோடு,

பூசணி, சுரை, பற்ங்கி,
பூக்கோசு, பசலைக் கீரை
பேசவோர் விலையில் லாத
பிஞ்சான பிரண்டை, வேலித்
தூசியில் முளைத்த கொவ்வை,
தொண்டங்காய், குப்பைக் கீரை,
ஊசிபோற் கொத்த மல்லி,
உண்ணுவாய் பொதினா வோடு!

- கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.12.12

Astrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே!


Astrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே!

அலசல் பாடம்

தலைப்பு: பங்கு வணிகம்

பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.

ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?

வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அத்ற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.

பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.

இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.

சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.

ஒரு ஜாதகத்தை வைத்து இன்று அதை அலசுவோம்!
-------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள


மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.

பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி

இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.

அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதக்த்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.

உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!

இது மேல் நிலை வகுப்பிற்கான பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

18.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 9

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 9

ஜோதிடத் தொடர் - பகுதி 9

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
புனர்பூச நட்சத்திரம் 1,,2,,3ஆம் பாதங்கள்   (மிதுன ராசி)

இது குரு பகவானின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. ஹஸ்தம்
6. சித்திரை
7. சுவாதி
8. அனுஷம்
9. கேட்டை
10. பூராடம்
11. திருவோணம்
12. அவிட்டம்
13. சதயம்
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (1/12 position to the  rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூசம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

ஆயில்யம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது!

திருவாதிரை, பூசம், மகம், மூலம் ஆகிய 4 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)


அன்புடன்
வாத்தியார்
 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 8


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 8

ஜோதிடத் தொடர் - பகுதி 8

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
திருவாதிரை நட்சத்திரம் (மிதுன ராசி)

இது ராகுவின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. உத்திரம்
7. சித்திரை
8. விசாகம்
9. மூலம்
10. பூராடம்
11. உத்திராடம்
12. அவிட்டம்
13. பூரட்டாதி
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (1/12 position to the rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் திருவாதிரை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு.

புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தாது!

மகம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

14.12.12

என்ன(டா) மணக்கும் அங்கே?

என்ன(டா) மணக்கும் அங்கே?

பக்தி மலர்

தேன் மணக்கும் , பால் மணக்கும், பன்னீர் மணக்கும் மலை என்று பழநிமலையை வியந்து பாடியுள்ளார் சுசீலா அம்மையார். அவர் பாடினால் மணக்காமல் போகுமா? யார் பாடினாலும் மணக்கும் என்றாலும். அவர் தேன் குரலுக்குச் சொந்தக்காரர். ஆகவே அவர் பாடியுள்ளார். நிச்சயம் மணக்கும்!!! கேட்டுப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------
பாடலின் காணொளியைக் கேட்பதற்கு உரிய சுட்டி  (URL) கீழே உள்ளது

http://www.youtube.com/watch?v=VzLRxB8xWKo&playnext=1&list=PL45770567534DB4BA&feature=results_video
-----------------------------------------------------------------------
பாடல் வரிகள்:

தேன் மணக்கும் தேவன் மலை

தேன் மணக்கும் தேவன் மலை
பால் மணக்கும் பாலன் மலை
பன்னீர் மணக்கும் பக்தர் மலை
அது பாலமுருகன் வாழும் பழநிமலை
(தேன் மணக்கும்)

சிவகுரு நாதனின் சிறந்த மலை
செல்வங்கள் நிறைந்திடும் அறிவு மலை
தந்தைக்கு குருவாய் அமர்ந்த மலை
கந்தன் தத்துவம் விளங்கிய சுவாமிமலை
(தேன் மணக்கும்)

சேவலும் மயிலும் ஆடும் மலை
வேலன் சூரனை வென்ற செந்தூர்மலை
திருமணக் காட்சியும் தந்த மலை
அது திருப்பரங்குன்றென்னும் அழகு மலை
(தேன் மணக்கும்)

அடியார்க்கு அருள் தந்த தெய்வ மலை
ஆறுமுகன் வாழும் தணிகைமலை
பாவலர் போற்றிடும் நல்ல மலை
முருகன் பழமாய்க் கனிந்திடும் சோலைமலை
(தேன் மணக்கும்)

தேன் மணக்கும் தேவன் மலை
பால் மணக்கும் பாலன் மலை
பன்னீர் மணக்கும் பக்தர் மலை
அது பாலமுருகன் வாழும் பழநிமலை

பாடலாக்கம்: கனகா கிருஷ்ணன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++   

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.12.12

கவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா?


கவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா?

குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்!
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா?

(உனக்கு)

கூட்டிலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! - காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா

(உனக்கு)

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாமே ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்னை மூடினார்
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக் காரன் யாரு! - நீ துணிவிருந்தா கூறு!
ரொம்ப - எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு!
அவரு - எங்கே போனார் பாரு!


(அவரு)

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை

பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
மானக் கேடாய் ஆனதெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்!


------கவியாக்கம் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++====

12.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 7


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 7
ஜோதிடத் தொடர் - பகுதி 7

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
6. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள் மட்டும் - 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
7. பூசம்
8. உத்திரம்
9. ஹஸ்தம்
10. சுவாதி
11. விசாகம்
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. உத்திராடம்
17. திருவோணம்
18. சதயம்
19. பூரட்டாதி
20. உத்திரட்டாதி
21. ரேவதி
ஆகிய 21 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3,4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (12/2 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம்
( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

ஆயில்யம், மகம், பூரம், ஆகிய மூன்று நட்சத்திரங்களும் பொருந்தாது!
அதுபோல அதுபோல புனர்பூசம் 4ஆம் பாதமும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 6


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 6

ஜோதிடத் தொடர் - பகுதி 6

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
6. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் (ரிஷப ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. பூசம்
7. உத்திரம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. பூரட்டாதி
19. உத்திரட்டாதி
20. ரேவதி
ஆகிய 20 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராடம், மற்றும் உத்திராடம் முதல் பாத நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

அதுபோல புனர்பூசம். ஆயில்யம் ஆகிய 2 நட்சத்திரங்களும் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) உடையவை ஆகும். சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10.12.12

Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?

------------------------------------------------------------------------------------------------------------------------
Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?

அந்தக்காலத்தில், அதாவது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பால்ய விவாகம் நிலவியது. ஒவ்வொரு வீட்டிலும் நிறையக் குழந்தைகள். குடும்பக்கட்டுபாடு என்றால் என்ன என்பதே தெரியாத அல்லது கவலைப் படாத காலம் அது.

தங்கள் குழந்தைகளுக்கு பத்து முதல் 13 வயதிற்குள் திருமணத்தை செய்து வைத்தார்கள். ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் அப்போது கிடையாது. உறவுகளுக்குள்தான் திருமணங்கள். அதனால் கோளாறான ஜாதகங்களை உடைய பெண் குழந்தைகள், பதினைந்து வயது அல்லது பதினாறு வயதிலேயே விதைவையான அவலங்கள் (கதைகள், சம்பவங்கள் எல்லாம்) நிறைய உண்டு. அனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் திருமணங்கள் நடந்தன. வரதட்சினைக் கொடுமைகள் எல்லாம் அப்போது இல்லை.

என் தந்தைக்கு, அவருடைய பதினோறாவது வயதில் திருமணம் ஆனது! அதனால் பால்ய விவாகங்களைப் பற்றி, அவர் சொல்ல கேட்டு, எனக்குப் பலகதைகள் தெரியும்!

பவுன் விலை ( Price of 8 grams of Gold) பதின்மூன்று ரூபாயாக இருந்த காலம் அது! மாதம் ஆறு ரூபாயில் ஒரு தம்பதியர் தங்கள் குடும்பத்தை நடத்தலாம்.

இன்று முடியுமா? நினைத்துப் பாருங்கள்! கோவையில் ஒரு நல்ல ஃபில்டர் காப்பியின் விலை இருபது ரூபாய். ஒரு எலட்ரீஷியன் அல்லது ஒரு கார்பெண்ட்டரின் ஒரு நாள் கூலி 500 முதல் 650 ரூபாய் வரை உள்ளது.

அதற்குப் பிற்கு (அதாவது 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு) பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும் பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

இப்போது தலைகீழ் மாற்றம். படிப்பு, வேலை வாய்ப்பு, தோது (வரதட்சினை) குடும்பத்தின் சமூக அந்தஸ்து (Status) என்று பல காரணங்களால் திரும்ணங்கள் தள்ளிக்கொண்டே போகின்றன. தாமதமாகிக் கொண்டே போகின்றன. இரு பாலருக்கும் அது பொருந்தும். சராசரியாக 28 வயதிற்கு மேல்தான் திருமணங்கள் இப்போது  நடைபெறுகின்றன. சிலருக்கு 30 அல்லது 32 வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கிறது.

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சில, 36 வயதாகியும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் அதே எண்ணிக்கை உடைய பெண்களிடம் இருந்து வரும். 36 வயது என்னும் போது, பெண்ணின் வசந்தகாலத்தில் 23 வருடங்கள் காலியாகியிருக்கும். 13 வருடங்களே பாக்கியிருக்கும். ஆண்களும் 18 வயதிற்கு மேல் 36 வ்யதிற்கு மேல், இடையில் சென்ற 18 வருடங்களில் தங்களது வாலிப சேட்டைகளால், பல தீய பழக்கங்களுக்கு (என்ன பழக்கங்கள் என்று எழுத்தில் எழுத முடியாது)  ஆளாகியிருப்பார்கள். சிலர் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களுடைய ஒழுக்கத்திற்குத் தலை வண்க்கிவிட்டு மேலே தொடர்வோம்!.

மிகவும் தாமதமான திருமணம் என்பதெல்லாம் ஒரு திரைப்படத்தை இடைவேளைக்குப் (interval) பிற்கு சென்று பார்ப்பதைப் போன்றது

ஆகவே, வேலை, கிடைக்கின்ற சம்பளம், ஸ்ரீதனம் என்று எந்தக் கருமத்தையும் பார்க்காமல் உரிய காலத்தில், அட்லீஸ்ட் 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் உத்தமம்

இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்!
-----------------------------------------------------
பெரும்பாலும் இன்று அனைவரும் ஜாதகம் பார்த்துத்தான் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும்போது, தங்கள் பெண்ணிற்கு அல்லது பையனுக்கு பத்துப் பொருத்தங்கள், தோஷம், தசா சந்திப்பு போன்ற விஷ்யங்களை மட்டுமே பார்ப்பார்கள். பொருந்தவில்லை என்றால் பொருத்தமான வரனைத் தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். அப்படி அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

ஆனால் ஒன்றை மட்டும் பார்க்க மறந்து விடுவார்கள். அதாவது தங்கள் பையனுக்கோ அல்லது பெண்ணிற்கோ திருமண யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை மட்டும் பார்க்கத் தவறிவிடுவார்கள்.

திருமண பாக்கியம் இல்லாத (Horoscope with denial of marriage) ஜாதகத்திற்கு நீங்கள் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து முயன்றாலும், திருமணம் ஆகாது. திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் பலர் உள்ளார்கள். வாலிபம் காலாவதியாகி, தலை முடியெல்லாம் கொட்டிப்பொய் 50ஐத் தொடும் வயதில் உள்ள முதிர் இளைஞர்களையும் எனக்குத் தெரியும்!

அதுபோன்று, திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் 1940ஆம் ஆண்டு பிறந்தவர். கடைசிவரை திருமணமே ஆகவில்லை. ஜாதகரும் தற்சம்யம் உலகில் இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஜாதகருக்கு திருமணத்திற்கான டிக்கெட் கிடைக்கவில்லை! களத்திரகாரகன் சுக்கிரன் பாராமுகமாக இருந்துவிட்டான். ஆனால் மேலே செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. சனீஷ்வரன் எப்போதுமே பாராமுகமாக இருக்கமாட்டான். டிக்கெட்டைக் கொடுத்துவிடுவான்!

கீழே ஜாதகம் உள்ளது: பாருங்கள்:


கன்னி லக்கின ஜாதகர். மிருகசீரிஷ நட்சத்திரம். லக்கினத்திற்கு ஏழில் அந்த வீட்டின் அதிபதி இருக்கிறார். உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் இருக்கிறார். அத்துடன் அவர் களத்திரகாரகர். காரகர் வீட்டில் இருந்தால் பாவநாசம் என்பார்கள். அதை எல்லாம் விட முக்கியமாக கேது அங்கே காண்ட்ராக்ட் போட்டு குடியிருக்கிறார். அவர் அந்த வீட்டின் பாக்கியங்களைக் கெடுத்து வைத்தார். உடன் இருந்தே கெடுத்து வைத்தார்

நாம் நமது அஷ்டகவர்க்கப் பாடத்திற்கு வருவோம்.

ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்

சராசரி எண்ணான 28ல் பாதி மதிப்பெண்தான் பெற்றுள்ளார்கள். அதாவது பாதிக்கிணற்றை மட்டும் தாண்டினால் என்ன ஆகுமோ அது நடந்துள்ளது

இது அஷ்டகவர்க்கப் பாட வகுப்பில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று இங்கே வலை ஏற்றியுள்ளேன். இன்னும் 5 அல்லது 6 மாத காலத்தில் அஷ்டகவர்க்கப்பாடங்கள் புத்தக வடிவில் வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7.12.12

வருவது வரட்டும்!


வருவது வரட்டும்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானுக்காக இசைக்கப் பெற்ற ஒரு சிறந்த பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கென்ன முருகா ... வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே!

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே
(எனக்கென்ன முருகா ... )

நடக்கட்டும் குமரா ... உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு
என்னை படைத்தவன் உன்னை ... மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு
(எனக்கென்ன முருகா ... )

ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல்
நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல்
(எனக்கென்ன முருகா ... )

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே!
தருபவை தானே அதனாலே!

'பத்மஸ்ரீ' T.M. செளந்தரராஜன் அவ்ர்கள் பாடிய பாடல் இது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.12.12

கவிதைச் சோலை: இருட்டிற்கு எதைத் தந்தாள்?

கவிதைச் சோலை: இருட்டிற்கு எதைத் தந்தாள்?

முல்லைக்கு முறுவல் தந்தாள்
    முகிலுக்குக் கூந்தல் தந்தாள்
வில்லுக்குப் புருவம் தந்தாள்
    வேலுக்கு விழிகள் தந்தாள்
சொல்லுக்குச் செந்தேன் தந்தாள்
    சுனைநீர்க்குக் குளிர்ச்சி தந்தாள்
அல்லிக்குச் செவ்வாய் தந்தாள்
    அழகுக்கே அழகு தந்தாள்!


நடைதந்தாள் அன்னத்திற்கு
    நகைதந்தாள் எனக்கு; நன்னூல்
இடைதந்தாள் கொடிக்கு, நல்யாழ்
    இசைதந்தாள் எனக்கு; தக்க
விடைதந்தாள் பிறர்க்கு; மையல்
    விழிதந்தாள் எனக்கு மேலும்
மடல்தந்தாள் படிப்பதற்கு
    மலர்தந்தாள் நுகர்வதற்கு!


மிரட்டிக்கொண் டிருந்த காளை
    மாட்டினை விரைந்து நான்போய்
விரட்டிக்கொண் டிருந்தேன் வந்தாள்
    விழிகளால் பிடித்தேன் காதல்
திருட்டுக்குத் தேதி தந்தாள்
    சேல்விழி பாதி தந்தாள்
இருட்டுக்குச் சேலை தந்தாள்
    இளமைக்கு வேலை தந்தாள்!

          - உவமைக் கவிஞர் சுரதா
---------------------------------------------
2

இதல்லவா உண்மையான நட்பு! 
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5

ஜோதிடத் தொடர் - பகுதி 5

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
5. ரோஹிணி நட்சத்திரம் (ரிஷப ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.

இது சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் இங்கே (ரிஷபத்தில்) உச்சம் அடைவார். இந்த நடசத்திரத்திற்குப் பெரும்பாலான நட்சத்திரங்கள் பொருந்தும். விவரம் கீழே தந்துள்ளேன்!

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. ஆயில்யம்
7. உத்திரம்
8. சித்திரை
9. விசாகம்
10. அனுஷம்
11. கேட்டை
12. மூலம்
13. பூராடம்
14. உத்திராடம்
15. அவிட்டம்
16. பூரட்டாதி
17. உத்திரட்டாதி
18. ரேவதி
ஆகிய 18 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராட நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ரோஹிணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு உத்தமமான பொருத்தம் ஆகும்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பூசம் (இது மட்டும் மத்திம பொருத்தம்) அதாவது சராசரி - average . சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
தேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ளது 

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 4

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 4

ஜோதிடத் தொடர் - பகுதி 4

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
4. கார்த்திகை நட்சத்திரம் 2, 3, மற்றும் 4ஆம் பாதங்கள் (ரிஷப ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.

இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்குக் குறிப்பிட்டுள்ள் பாதங்களுக்கு,

1. அஸ்விணி
2. மிருகசீரிஷம்
3. பூசம்
4. ஆயில்யம்
5. மகம்
6 ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. கேட்டை
10. மூலம்
11. சதயம்
12. ரேவதி
ஆகிய 12 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சுவாதி துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம
நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூல நட்சத்திரத்திர்ற்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம்
ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி நட்சத்திற்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு
ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம பொருத்தம் ஆகும் அதாவது  சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

சித்திரை, பூராடம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் உத்தமம் பொருந்தும்
மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி) பொருந்தாது. மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு  செய்யலாம்!

1. பரணி
2. திருவாதிரை
3. பூரம்
4. திருவோணம்
5. அவிட்டம்
6. உத்திரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
தேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ளது

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

3.12.12

Astrology என்ன (டா) செய்யும் ராகு?

சோமஸ்கந்தர் - திருநாகேஷ்வரம்
Astrology என்ன (டா) செய்யும் ராகு?

எல்லா நாளிதழ்களிலும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியைப் பற்றி நான்கு கால செய்தியைப் போட்டு, ந்ம்மைக் கவலைப்பட வைத்திருக்கிறார்கள்.

யாரும் கவலைப் பட வேண்டாம். நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்கொள்வான் என்று மன தைரியத்துடன் இருங்கள்

அது என்ன பெயர்ச்சி?

கோள்சாரத்தில் (transit of planets) ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் மாறுகிறார்கள். உங்கள் மொழியில் சொன்னால் transfer ஆகிப் போகிறார்கள். மாற்றல் உத்தரவு தேவையில்லாத ஆசாமிகள் அவர்கள்.

ராகு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise) கேது ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise)

2.12.2012 அன்று இடம் மாறும் அவர்கள், அந்த இடத்தில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருப்பார்கள். 21.6.2014 வரை அங்கே இருப்பார்கள். அவர்களின் இடம் மாற்றத்தில் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் உண்டாகும்.

ராசி வாரியாக அதைப் பார்ப்போம்:

1. மேஷ ராசி: நன்மையும் தீமையும் சரி சமமாகக் கலந்த கலவையான பலன்

2. ரிஷப ராசி. இதுவரை பிடித்திருந்தவர்கள் விட்டு விலகிப் போவதால் இனி எல்லாமுமே நல்லதாக நடக்கும்

3. மிதுன ராசி இன்றைய நிலவரப்படி அது (கேதுவிற்கு) 11ஆம் இடம். பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும். வேலையில் தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும்

4. கடக ராசி. பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும்.

5. சிம்ம ராசி. ராசிக்கு மூன்றில் ராகு வருகிறார். அது மறைவிடம். இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமுமே யோகமான பலன்கள்தான். வளம் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

6. கன்னி ராசி. ராசிக்கு இரண்டில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத்துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்

7. துலாம் ராசி. ராசிக்கு ஒன்றில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத் துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்

8. விருச்சிக ராசி. இதுவரை பிடித்து அமுக்கி வைத்திருந்த ராகு விட்டு விலகிப் போவதால் இனி நல்லகாலம்தான். பெரும்பாலும் நன்மையான பலன்களாகவே நடைபெறும்.

9. தனுசு ராசி. இன்றையப் பெய்ர்ச்சிப்படி அது ராகுவிற்கு (from thanusu) பதினொன்றாம் இடம். யோகமான பலன்களே நடைபெறும்

10. மகர ராசி. ராகு 10ல், கேது 4ல். நல்ல அமைப்பு இல்லை. இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். நம்ம ஆள் - அதாங்க ராசி நாதன் சனீஷ்வரனின் சேர்க்க, மற்றும் பார்வையில் அவர்கள் இருப்பதால், அவர் பார்த்துக் கொள்வார்.

11. கும்ப ராசி. கேது 3ல். உபத்திரவம் இருக்காது. உற்சாகமே அதிகமாக இருக்கும். எதையும் துணிச்சலாகச் செய்வீர்கள். பணவரவுகள் இருக்கும்.

12. மீன ராசி. எட்டில் ராகு. முன்பாகவே அஷ்டமச்சனியும் அங்கே உள்ளார். ஆகவே கைக்காசெல்லாம் கரைந்து போகும் (2ல் இருக்கும் கேது அதைச் செய்வார்)

இவை எல்லாமுமே பொதுப் பலன்கள்தான்!

நல்ல தசா புத்திகள் நடப்பவர்களை, இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. தசாபுத்திகள்தான் முக்கியம். கோளசாரத்திற்கு இரண்டாம் இடம்தான். ஆகவே உங்கள் ஜாதகப்படி தற்சமயம் உங்களுக்கு நல்ல தசா புத்திகள் நட்ந்தால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மற்ற எதுவும் உங்களைப் பாதிக்காது.

அதுபோல துலாம் ராசியிலும், மேஷராசியிலும் சர்வாஷ்டகப்பரல்களின்படி 30ம் அத்ற்கு மேற்பட்ட பரல்களும் உடையவர்களையும் இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. அதையும் கவனத்தில் கொள்க

சனியின் சுற்றிலும் அதுதான் அஷ்டகவர்க்க விதி. சனி வரும் இடத்தில் 30 பரல்களோ அல்லது மேலாகவோ இருந்தால் சனியின் பாதிப்பு எதுவும் இருக்காது. அந்த இடம் 30 பரல்களுடன் இருப்பதால், அது வலிமையான இடம். அங்கே தீய கிரகங்களின் ஆட்டம் செல்லாது. அவைகள் அடக்கி வாசிக்கும். அதையும் மனதில் கொள்க!!!!!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------
மேலதிகத் தகவல்

Naganatha Swami temple - Rahu stalam (தகவல்: விக்கி மஹாராஜா)
கும்பகோண்த்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஸ்தலம் உள்ளது


Naganatha Swami (Naga in Tamil/Sanskrit means Snake and Natha means God) is a temple dedicated to Lord Shiva. An important feature of Naganatha Swami temple is that of Rahu bhagawan (one of the nine celestial bodies) sannathi. It is the 29th in the series of Tevara Stalams located south of the river Kaveri. Here milk abhishekam is performed daily during Rahukaalam. At this time, the milk that is poured on the statue turns blue when it passes over the body and once again to white after it reaches the floor. This wonder is watched by many daily during the Raahu Kaalam. This is also the only place wherein one can view Rahu bhagawan with his consorts. The mythological serpents Aadi Seshan, Dakshan and Kaarkotakan worshipped Shiva here. Nala worshipped Shiva here too. Gautama Maharishi, Parashara and Bhageerata are also associated with this temple.


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30.11.12

காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!







 
காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும்  கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.11.12

இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!


 இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!

”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' என்று பாடினான் ஸ்ரீரங்கத்துக் கவிஞன்.

”மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிச்சோலை மரமாவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்” என்று பாடல்
எழுதினான் இன்னொரு கவிஞன்

ஆனால் நமது கவியரசர், கடவுளைக் கல்லென்று சொல்பவர்களைச் சாடிச் சொல்கிறார்:

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

அதோடு விட்டாரா? அதற்கும் மேலே சொல்கின்றார்:

”பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!”

முழுக்கவிதையையும் நீங்கள் அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------
கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!


தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!