மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label தத்துவப் பாடல்கள். Show all posts
Showing posts with label தத்துவப் பாடல்கள். Show all posts

8.10.13

என்ன பாட்டுடா சாமி!!!!

 

முக்கிய அறிவிப்பு:

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இன்று வரவேண்டிய புதிர் பகுதி, ஒரு நாள் தள்ளிவைக்கப் பெற்றிருக்கிறது. அது நாளை காலை வெளியாகும். அனைவரும் பொறுத்தருள்க!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------------------

என்ன பாட்டுடா சாமி!!!! 

சில பாடல்களைக் கேட்கும்போது, அவை நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். பாடலின்  தாக்கம் அன்று முழுவதும் நம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.

அப்படித் தாக்கம் நிறைந்த தத்துவப் பாடல் ஒன்றை, உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன். கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடல், குணா என்னும் திரைப்படத்தில் வந்ததாகும். 5.11.1991ல்  வந்த படம். சுமார் 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாடல் புதிதாகவே உள்ளது. கேட்கக்
கேட்கப் புதிதாகவே உள்ளது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!

பாடலை உயர்த்திப் பிடிப்பது திருவாளர் இளையராஜா அவர்களின் வளமான குரல் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

பாடலைக் கேட்டுப் பாருங்கள். வரிக்கு வரி கேளுங்கள். என்னவொரு அற்புதமான வரிகள்.அற்புதமான பாடல்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------
பாடலின் வரி வடிவம் கீழேற் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒலி, மற்றும் ஒளி வடிவமும் உள்ளது.

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு - ஞானப் பெண்ணே
சக்கையாக போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

(அப்பன் என்றும் அம்மை என்றும் .)..

குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூட்டம்தான்
விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா

தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

(அப்பன் என்றும் ...)
++++++++++++++++++++++++++++++++++++++++++
 Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.8.13

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2

 

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2

புதிய தொடர் - பகுதி இரண்டு

ஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது! ஒவ்வொரு  சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று ஏராளமான பாடல்கள் இருக்கின்றன!

இன்றைய வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்
-------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் இருந்த தர்மம், நியாயம் எல்லாம் காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதுபோல நன்றி, விசுவாசம் எல்லாம் இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது.

ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கலாமா? அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நன்றியோடு இருக்க வேண்டாமா?  உதவி செய்தவர் உறவினர் ஆக இருக்கட்டும் அல்லது நண்பராக இருக்கட்டும் அல்லது மூன்றாவது மனிதராக இருக்கட்டும், செய்த நன்றியை நாம் மறக்கலாமா?

அது பொருள் உதவி அல்லது உடல் உழைப்பால் செய்த உதவி என்று எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும் உதவி உதவிதானே?

படிப்பதற்கு உதவி செய்தவர், அல்லது வேலை கிடைப்பதற்கு உதவி செய்தவர் அல்லது நமக்கு வேண்டிய ஊருக்கு இடமாற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர் அல்லது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தவர் என்று நூற்றுக் கணக்கான விதங்களில் உதவி கிடைத்திருக்கலாம். அது சின்ன உதவியோ அல்லது பெரிய உதவியோ - அளவு முக்கியமில்லை. உதவி உதவிதானே? மறப்பது எப்படி நியாயம்?

”என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொண்ட மகற்கு”


என்று வள்ளுவப் பருந்தகை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே - படித்திருக்கிறோம் அல்லவா? அதனால் நாம் நன்றி உணர்வோடு இருப்பது முக்கியமில்லையா?

ஏறிவந்த ஏணியை மறக்கலாமா? இன்று சிலர் ஏறிவந்த ஏணியை, ஏறியபிறகு. எட்டி உதைத்துவிட்டுச் செல்லும் வேலையையும் செய்கிறார்கள்.

அதைக் கவியரசரும் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்திருக்கிறார். பல நன்றி கெட்டவர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஒரு பாடலில் அதை அழகாகப் பதிவு செய்தும் இருக்கிறார். அந்தப் பாடலை இன்று பார்ப்போம். சில நன்றி கெட்டவர்களால் நாம் நொந்து போயிருக்கும் போது ஆறுதல் தருவதாக இருக்கும் அந்தப் பாடல்!

மனிதர்களின் உள் மனதை அப்படியே இரண்டே வரிகளில் இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறார்:

”பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......”


குழந்தைப் பருவத்தில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை, ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாயகன் பாடுவதைப் போன்ற சூழலில் இப்படி எழுதுகிறார்

”பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ”


அத்துடன் விட்டாரா? குழந்தையின் மனப்பாங்கை அப்படியே அசத்தலாகவும் சொல்கிறார்!

”ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ”


நன்றிகெட்ட மக்களைப் பற்றி அழுத்தமாக இரண்டு வரிகளில் இப்படி சொல்கிறார்:

”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா”


வழக்கம்போல. ஒரு தீர்வையும் சொல்கிறார் அவர். நன்றி கெட்டவர்களை மறந்து விட்டு நாம் நிம்மதியாக இருப்பதற்கு இதைத்தான் செய்ய வேண்டுமாம்!

”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா”


அதெப்படி பிள்ளையாய் இருக்க முடியும் என்று கேட்காதீர்கள் - எத்தனை வயதானால் என்ன? ஒரு குழந்தையின் மனதோடு, குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார். பாடல் குழந்தைக்குச் சொல்வது போல நமக்குச் சொல்லப்பட்ட பாடல் அதை மனதில் வையுங்கள்.

முழுப்பாடலையும் ஒலி, ஒளியுடன் கேட்க வேண்டுமா? இந்த சுட்டியில் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.8.13

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள்

 

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள்

புதிய தொடர் - பகுதி ஒன்று

ஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது! ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று  ஏராளமான பாடல்கள் இருக்கின்றன!

இன்றையப் பொருளாதாரச் சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு  பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்
-------------------------------------------------------------------------------------
ஒரு பெண், தன் குழந்தையைப் பறிகொடுத்ததும் மாளாத துயரத்தில் சிக்கித் தவிப்பாள். கடவுள் வரமாகக் கொடுத்த தூக்கமும் மறதியும், போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய துயரத்தைப் போக்கி விடும். ஒரு ஆண்டு கழிந்து, தன் குழந்தையின் மறைவு தினத்தன்று அதை எண்ணி மீண்டும் துயரத்திற்கு ஆளாவாள். மீண்டும் தூக்கமும் மறதியும் அவளுடைய மனக்காயங்களுக்கு மருந்து போட்டு அவளைக் குணப்படுத்தும்.

ஆனால் ஐந்தறிவு உள்ள பிராணிகள், பறி கொடுத்த அன்று வேண்டுமென்றால் துக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைமோதும். ஆனால் இரண்டொரு நாட்களில் அதை அவைகள் அறவே மறந்துவிடும். சிந்திக்கும் தன்மையும் நினைவில் வைத்துக்கொள்ளும் மேன்மையும் அவற்றிற்குக் கிடையாது.

அந்த நிலைப்பாட்டைக் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளில் இப்படிச் சொல்வார்

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..


மனிதனுக்கு ஏற்படும் துன்பம் எல்லாம் பாழாய்ப் போன மனதினால்தான் என்று அடித்துச் சொல்லுவார் அவர்! விளங்கும்படி எடுத்துச் சொல்வார் அவர்

காசில்லாமல் தவிக்கும் மனிதனை அவனுடைய உறவுகளும் நேசிக்காது. உதவி செய்ய முன்வராது என்பதை அதே பாடலில் இப்படிச் சொல்வார்:

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..


உடன்பிறப்புக்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை இப்படி சுட்டிக்காட்டுகின்றார்:

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..


சரி, இதற்கெல்லாம் தீர்வு என்ன? அவர் ஒரு மாபெரும் கவிஞர். நல்ல தீர்வைச் சொல்லாமல் எந்தப் பாடலையும் அவர் நிறைவு  செய்ததில்லை. இந்தப் பிரச்சினைக்கும் அவர்  ஒரு அருமையான தீர்வைச் சொல்கிறார்:

பதைக்கும் நெஞ்சினை அனைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா..!!!!!!


ஆமாம்! உன் நிலைமை தெரிந்து உனக்குக் கை கொடுத்து, உன்னை அனைக்கும் எவருமே உனக்கு உடன் பிறப்பு தானடா! உனக்கு உறவுதானடா என்று ஆறுதலாய்ப் பாட்டை முடிக்கின்றார். உண்மைதான். நமக்குக் கை கொடுக்கும், நமக்குத் தோள்கொடுக்கும்  அனைவருமே நம் உடன் பிறந்தவர்கள்தான். அதை நினைவில் வைப்போம்! மனதில் கொள்வோம்!

முழுப்பாடலும் வேண்டுமா? வாத்தியாரின் புதிய தளம் இங்கே உள்ளது. அங்கே சென்று பாருங்கள்:

அதற்கான சுட்டி: http://kaviarasarkannadasan.blogspot.in/2013/08/blog-post_21.html

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++