மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.5.09

பஞ்சபூதங்களும் ஜோதிடமும்!

பஞ்சபூதங்களும் ஜோதிடமும்!

பஞ்சபூதங்களுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டா?

உண்டு!

அதைப் பற்றியதுதான் இன்றையப் பாடம். பொறுமையாகப் படியுங்கள்
==================================================================
பூதம் என்றால் நமது மொழியில் அதற்கு வேறு பொருள்

பேய், பிசாசு, பூதம் என்று இல்லாதவற்றைச் சொல்வோம்.

”எங்க ஆத்தா, எனக்கொரு பேயைக் கட்டிவைத்து விட்டார்கள்” என்று
ஆண்களும் “எங்கப்பாரு எனக்கொரு பூதத்தைக் கட்டி வைத்துவிட்டார்; அதோடு
தினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்” என்று பெண்களும் சொல்வதைக்
கேட்டிருக்கிறோம்.

ஆனால் நமக்குப் பயன்படக்கூடியவற்றை எதற்காகப் பூதமாக்கினார்கள்
என்று தெரியவில்லை.

நமது மனக்குமுறல்களுக்குக் காரணமாகும் பூதங்களை அப்படியே வைத்துவிட்டு,
நமக்கு உதவும் பூதங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்

காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் ஆகிய ஐந்தும் தான் அந்தப் பூதங்கள்

நம் முன்னோர்கள் அவற்றைப் பஞ்சபூதங்கள் என்றார்கள்

இவ்வுலகம் காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் எனும் அந்த பஞ்சபூதங்களால்
ஆனது. அவைகள் இல்லையென்றால் எதுவும் இல்லை.

அந்த ஐந்தில் முதல் நான்கை உங்களால் காணவும், உணரவும் முடியும்
அவற்றால்தான் உங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
அவைகள் இல்லையேல் யாரும் இல்லை!

"Pancha Bhoota's" or the five elements viz Air, Fire, Water,
Earth and Space.
The first four factors are known to all, as they can be felt, seen,
tasted and used.

What is meant by space or 'Akasa"? It can be taken, as all the subtle
forms of energy like Electricity, magnetism, Gravity, and other forces
known and unknown, which bring about stability in creation and its
activation.

The zodiacal signs and planets represent these elements and qualities.
The Vedic seers understood this fact and classified the signs and planets
according to their innate nature.
===================================================================
ராசிகள் நெருப்பு, பூமி, காற்று, நீர் என்று நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அந்தந்த ராசிகளுக்கு அதனதன் தன்மைகள் நிறைந்திருக்கும்.

அவற்றைப் பற்றிய விவரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்
=====================================================================
1
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Fiery Signs)
சூரியனும், குருவும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்

2
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Earthly Signs)
செவ்வாய் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

3.
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Airy Signs)
புதன் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

4
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Watery Signs)
சந்திரனும், சுக்கிரனும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்.

The sign Aries, Leo and Sagittarius are fiery in nature
so also are the Sun and Jupiter.

Taurus, Virgo and Capricorn are earthly signs
so also is the planet Mars.

Gemini, Libra and Aquarius are airy signs and
Mercury is also airy planet.

Cancer, Scorpio and Pisces are watery signs and
so are the planets Venus and Moon.
------------------------------------------------------------------------
சனி, ராகு & கேது ஆகியவைகள் ஆகயத்தைக் குறிக்கும்.
அதோடு ஜாதகதனுக்கு உதவும் சக்தியாகவும் விளங்கும்
Saturn, Rahu and Ketu represent the akasa or subtle forces
and Rahu and Ketu are referred as shadowy planets.

1
Persons who are born in fiery signs exhibit Vitality, Command,
and leadership qualities.
They are assertive and independent.
2Those born in Earthly signs indicate stability, Care for material welfare,
learn the art of making wealth, seek power and position.
They are prudent, practical and cautious, reserved, secretive and methodical.
Hence when majority of the planets occupy earthly signs
business is the best option.
Building, Mining, and all slow and laborious jobs requiring time labor
and perseverance go people born in earthly signs.

3
Airy signs are connected with the mind or mental experiences.
They are cheerful, gentle amicable, courteous and refined human beings.
They have good intellect and fertile imagination.
They are idealistic, artistic, good musicians, dancers, inquisitive
and well informed.
These people exert much and suffer nervous troubles.
All professions where mental exertion is more,
then the physical suit them best.
Musicians, accountants, artistes, poets, lawyers, reporters,
newsreaders, lecturers, scientists, aviators and astronaughts
are some of the professions falling in airy signs.

4
The mind of persons born in watery sign is receptive, contemplative,
sensitive, and assimilative.
When majority of the planets are posited in watery signs the native
becomes very sensitive, timid, psychic and often lack energy.
Watery signs favor all employment's connected with Liquids,
Shipping, Breweries, Textile, fisheries, Milk dairies, soft drink
manufacturer's, Medicines, water sellers,
Oil merchants etc come under these signs.
==========================================================================

பிறந்த ஜாதகனுக்கு உள்ள விஷேசத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள
ராசிகளை மேலும் மூன்று விதமாகப் பிரித்துள்ளார்கள்.
யார் பிரித்துள்ளார்கள்?
ஜோதிடத்தை வடிவமைத்த மேதைகள்!
அதற்கு ஆதாரம் உண்டா?
பழைய சுவடிகளில் உள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
எல்லாம் நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில் இதுவரை எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதுதான்

சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs)
என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual.
------------------------------------------------------------------
1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
----------------------------------------------------------------
1
சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு
சில விஷேசத் தன்மைகள் உண்டு.
சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள்
செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள்.
சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள்
பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியானவர்கள்.
துணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும்.
ஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

2
ஸ்திர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள்.
விடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள்.
தனிமையை விரும்புபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பொதுவாக இவர்களுக்கு
அரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைகளும் ஒத்து வரும்.
ஓடிச் சென்று அதிர்ஷ்டத்தைப் பிடித்து இழுத்துவரும் தன்மை எல்லாம்
இவர்களுக்குக் கிடையாது. வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று வெற்றியை
அடைவார்கள்.

3
உபய ராசிக்காரர்கள் (Persons born in dual signs)
இவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின் பெண்டூலத்தை உதாரணமாகச்
சொல்லலாம்.
ஊசலாடும் தன்மையை உடையவர்கள்.
வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள்.
புத்திசாலிகள். இரக்கமுடையவர்கள். உணர்ச்சிமிக்கவர்கள்.
எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள்.
எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள்.
போராடும் மனப்பான்மை இல்லாதவர்கள்.
எதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள்.
They tend to wander aimlessly and seldom work towards a fixed objective.

Thus the sign ascending in the eastern horizon at the time of the birth
of an individual tells the qualities with which he is born.
He can be trained suitably and given suitable job when
he grows up according to his natural inclination
==============================================================
ராசி/லக்கினத்தைப் பற்றிய உபரித் தகவல்கள்

ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.

1
மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள்
இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
2
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள்
இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

இதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?
ஒற்றைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் ஆண் ராசிகள்.
(அதாவது 1, 3, 5, 7, 9,11 )
இரட்டைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் பெண் ராசிகள்.
(அதாவது 2,4,6,8,10,12 )

ஆண் ராசியில்/லக்கினத்தில் ஆண்தான் பிறக்கவேண்டும்:
பெண் ராசியில்/லக்கினத்தில் பெண்தான் பிறக்கவேண்டுமா?

அப்படியெல்லாம் இல்லை. ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு,
அது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும்.

உதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில்
பிறந்தவர். பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆண்களுக்கு
நிகராகச் செயல்படுபவர். யாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்

பெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள்
மிகுந்திருக்கும். பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

உங்கள் மொழியில் சொன்னால் எதிர்மறையான குணங்களை
உடையவர்களாக இருப்பார்கள்.

சில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும்.
சில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும்

சில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.
சில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும்

இதை விரிவு படுத்தி எழுத நேரமில்லை. சுறுக்கமாகச் சொல்லி
இருக்கிறேன். மீதியை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
================================================================
(தொடரும்)


வாழ்க வளமுடன்!

20.5.09

நீ எங்கே, நான் அங்கே! - பகுதி இரண்டு


நீ எங்கே, நான் அங்கே! - பகுதி இரண்டு

லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

ஒன்று முதல் ஆறு வீடுகளில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டிற்கான
பலனை, இதன் முதற்பகுதியில் எழுதியுள்ளேன்.

இப்போது அதற்கு அடுத்து வரும் வீடுகளுக்கான பலன்களைப் பார்ப்போம்

லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும்.
சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள்.
மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான்.
ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான்.
மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள்
எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள்.

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு
சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான்.
சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும்.
ஒழுக்கக் குறைவு ஏற்படும்.
சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும்,
ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை
உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும்.
ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்
சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை
எடுத்து வளர்க்க நேரிடும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம
ஆயுளை உடையவன்.
வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.
ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.
நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது.
இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை
கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக்
கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும்
ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்
சிறந்த பக்திமானாக விளங்குவான்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்,
நேர்மையாளனாக இருப்பான்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள்
எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான
அமைப்பு இது.
பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட
தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில்
அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான்.
நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான்.
தொழிலில் மேன்மை அடைவான்.
அதிகாரமும், பதவிகளும் தேடிவரும்.
அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும்.
சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள்.
நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான
வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான
தொழிலைச் செய்வான்.
நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும்.
மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த
பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று
இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.

ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன்
இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும்
Gains; Gains: Gains - அவ்வளவுதான்.
ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு
மேற்கூறிய நன்மைகள் இருக்காது.
ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து
கொண்டே இருக்கும்.

எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின்
கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.

வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.
வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய
கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம்
செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி
இல்லாதவனாகவும் இருப்பான்.

அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.
திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும்
வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்

சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன
நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================
(அலசல் தொடரும்)

ஒரு வார காலமாக பல சொந்த வேலைகள் காரணமாக வகுப்பறையில்
கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்.
அதே போல இன்னும் ஒரு வார காலத்திற்கும் அதே சூழ்நிலைதான்
பொறுத்துக் கொள்ளுங்கள்.
ஜூன் ஒன்று முதல் நிலைமை சீராகிவிடும். வகுப்பறையும் சுறுசுறுப்பாக
இயங்கும்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.5.09

நீ எங்கே, நான் அங்கே!

நீ எங்கே, நான் அங்கே!

நீ எங்கே, நான் அங்கே! என்பது ஒரு அற்புதமான நிலைமை.
பொதுவாகக் காதலன் காதலிக்கு இந்த வரிகளைச் சொல்வார்கள்.

நமது வகுப்பறையில் காதலைப்பற்றி பேசினால் நன்றாக இருக்காது

ஆகவே இந்த வரிகளை, நான் நமது லக்கினாதிபதிக்கும் நமக்கும்
உள்ள தொடர்பிற்காக எழுதியதாக வைத்துக் கொள்ளுங்கள்

ஆமாம்! அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நாமும் இருப்போம்!
-----------------------------------------------------------------------------------------------
லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு
நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய்
மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி
வீடு. அது நன்மை பயக்கும்.

இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால்
அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப்
பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம்
வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ
இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம்
மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.

அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில்
கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான
நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக
இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில்
வையுங்கள்.

லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர்
அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.

லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும்
லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை
உடையதாக இருக்கும்

அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான
பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில்
இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.

ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக
இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான்
தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான்.
ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான்.
சொத்துக்களை உடையவனாக இருப்பான்.
பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான்.
வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும்.
மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான்.
உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான்.
தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்
அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.

மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும்
நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர்
மாறான பலன்களே நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக
இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள்
எல்லா இடங்களிலும் எடுபடும்.
தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான்
தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக
இருப்பான்.
செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான்.
மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான்.
அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான்.
எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான்
சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள்
ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக
இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான்.
நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான்
அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும்.
அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும்
ஜாதகன் இருப்பான்
ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான்.
நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான்.
ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத
வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான்.
தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான்.
தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான்.
கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்
சுகவாசியாக இருப்பான்.
வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான்.
இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை
பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான்.
அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு
தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக
இருப்பான்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை
உடையவனாகவும் இருப்பான்.
மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்
சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும்
இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.
எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான்.
பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்
பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்
லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்
நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து
சிறப்பைப் பெறுவார்கள்
சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
-------------------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)



வாழ்க வளமுடன்!

11.5.09

தலை' யைப் பற்றிய தகவல்கள்

தலை' யைப் பற்றிய தகவல்கள்

தலை' என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவிற்கு வருவது ரசிகர்கள் மாய்ந்து
மாய்ந்து சொல்லும் தலைகளான அஜீத் அல்லது விஜய்!

பதிவு அவர்களைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் பதிவை விட்டு
விலகவும்.

இது அவர்களைவிட முக்கியமான தலையைப் பற்றிய பதிவு
=====================================================
ஜோதிடத்தில் தலை என்று தலைப் பகுதியான லக்கினத்தைக் குறிப்பிடுவார்கள்
எண் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுபோல, பன்னிரெண்டு வீடுகள்
அடங்கிய ஜாதகத்திற்கு லக்கினமே பிரதானமானது. அதுதான் தலைப் பகுதி

லக்கினத்தைப் பற்றிய பாடம் விரிவாக நடத்தப்படவுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன் லக்கினத்தைப் பற்றி, நான்கு பதிவுகளில் எழுதிய
செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படித்தால்தான் அல்லது
தெரிந்து கொண்டால்தான் அடுத்து எழுதுவது விளங்கும். ஆகவே அவற்றைத்
தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

அனைவரையும் பொறுமையாகப் படித்து அவற்றை உள் வாங்கிக் கொள்ள
வேண்டுகிறேன்.

அதைத் தொடர்ந்து, லக்கினத்தைப் பற்றி விரிவாக எழுத உள்ளதைப் படியுங்கள்
===================================================
லக்னம் என்றால் என்ன?

வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர்
தரப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை அதற்குப் பெயர்கள் உண்டு

வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி என்பது கணக்கு.
ஆரம்ப ராசி மேஷம்தான்.

சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி. சூரியன் அந்த ராசியில்
தான் உதிக்கும். வைகாசி மாதம் ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம்
மிதுனம் ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசி மாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம், மார்கழி மாதம்
தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம் பங்குனி மாதம் மீனம் என்று
ஒரு சுற்று முடிந்து விடும்.

ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று மறுபடியும் மேஷத்தில்
தான் ஆரம்பமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் எந்த மாதம்
பிறந்தவர் என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில்
இருந்தால் அந்த ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.

ஆனால் லக்கினம் என்பது வேறு!.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை
எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!

லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில்
குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events
at any given time of the day with reference to the time of sunrise

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்
படுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்

லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.
அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்
கொள்வார்கள்

சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து வரும் 2 மணி நேரம்
வரை உள்ள காலத்தில் பிறந்த குழந்தையின் லக்கினம் மேஷம்தான்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த ராசி வரிசையில்
லக்கினங்கள் அமையும்

ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி
நேரம் வரை தான் மேஷ லக்கினம் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப
லக்கினக் குழந்தையாகும்.

இந்த வித்தியாசம் ஏன்?

ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு = 24 மணிகள்
வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்

ஆகவே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகையைத் தாண்டி
வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில் 15 பாகைகளைக் கடந்து விடும்
ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள் அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்

இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகை வீதம்
360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு
அது எந்தப் பாகையில் பிறந்ததோ அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம்
ஆகும்.

உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச் செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய
ஆளூமையைச் சொல்ல முடியும்.

அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக Heroவா? அல்லது
Villainனா? என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா
அல்லது வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்!

அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம்
பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளிமங்கனா, சமூகத்தோடு ஒத்துப்
போகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா
என்று சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா.
ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால்
நயன்தாராவா அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்) என்று சொல்வதெல்லாம்
லக்கினத்தை வைத்துத்தான்

எல்லாவற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே
முதலில் லக்கினம் என்பது என்ன என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.
அதன் பலா பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில் சொல்லிக்
கொடுக்கப்படும்!
-----------------------------------------------------
லக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல் பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய
கூகுள் ஆண்டவர் சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக
லக்கினத்தைப்பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கான
சுட்டியைக் கொடுத்துள்ளேன்!

http://en.wikipedia.org/wiki/Ascendant

Written on 20.3.2007

இப்போது லக்கினத்தின் அடுத்த பகுதி!

1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி
(Owner of the lagna or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு
(திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
10ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும் வீடுகள்)

2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!

3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு 12ம் வீடு ஆகிய வீடுகளில்
மறைந்து விடக்கூடாது! These places are inimical places (தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு
அமர்ந்து விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன - வரிசையாக அவைகளும்
சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion by seeing a single rule. The houses
are to be judged by various factors which will be taught one by one

4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் -
house of lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது.
அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.

5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12th house லக்கினத்தில்
வந்து அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம் வீடான
கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி
விடும். அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன்படாது
You should not jump to any conclusion by seeing a single rule. The houses are
to be judged by various factors which will be taught one by one

6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு
அமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of the 12th associated together in
any place in the horoscope will not confer any auspicious things to the native

7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example - சிம்மலக்கின
ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.

8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope

9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த
இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.

10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில்
சந்திரன் இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி
அழகாக இருப்பாள்.

11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும்
அழகான தோற்றத்தை கொடுப்பான்

சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும். அதனால்தான்
அவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்
சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள்
தாராளமாகக் கிடைக்கின்றன். நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை!
வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே சாமி:-))))

நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்
கண்டுபிடிக்க முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?

12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான
திறமையைக் கொடுப்பான்

13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான
சிறப்பு உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள்
எல்லாம் நாயகர்கள்தான் (உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்கள்)
=============================================
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும்
சிம்ம லக்கினம்தான்..ஹி.ஹி:-))
திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா? மனதளவில் நானும்
ஹீரோதான்..ஹி.ஹி:-))
----------------------------------------------------------------------------------
14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த
லக்கினங்களின் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்

15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள்.
அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். அவர்கள்
நிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாகக்
குடம் வழங்கப் பெற்றுள்ளது.

பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம். கும்ப லக்கினப்
பெண்களை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக
ஈர்த்து விடக்கூடியவர்கள். They will attract or mix with any people
or any Society easily

17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம்
- திரு.ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம்
போன்றவர்கள்)

18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில்
ஈடுபடுபவர்கள். உதாரணம் - கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி,
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள். அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்

19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள்
(அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக்
கூடியவர்கள். ரசனை உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்

20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய் அதிபதி அதனால்
போராடிப் பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும்
பயப்பட மாட்டர்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில்
பரிணமிப்பவர்கள் இவர்கள்தான்.

21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதியானதால், இயற்கையாகவே
சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance,
stock market, Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!

22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் உரியவர்,
அவர் பலமாக இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
உடல் நலமும் நன்றாக இருக்கும்

23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது
ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.

24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய
கிரகமானால் வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும்

25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில் லக்கினத்தின் மூலம் உள்ள
குறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ
ராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.

ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும்
கொம்பைக் கொடுக்கவில்லயே?"

நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை இறைவன் Strengthஐ
கழுதைக்குக் கால்களில் கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத்
தெரியும் கேட்டுப்பார்"

அதற்குப் பெயர் சமப்படுத்தும் முறை!(Balancing Theory) Wealth இருக்கிறவனுக்கு
Health இருக்காது. Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது. பயில்வானாக
இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு
உடல் பலம் மறுக்கப்பட்டிருக்கும்.

பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான். அவர்களுடைய கார்
டிரைவருக்கும் 337தான். கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் தன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டுமானலும் போவான்.
ஆனால் அவர்கள் Security இல்லாமல் எங்கும் செல்ல முடியாது

....................Written on 21.3.2007
========================================================
நீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்தவீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.
அந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட இடத்தின் பெயர்தான் ஜாதகம்.

வட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி
அந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு என்பார்கள்.
ஆங்கிலத்தில்,They will say them as houses.

உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது. அதுதான் தலைமைச்
செயலகம்.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
மொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று
எல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால் எப்படிச்
சாப்பிட முடியும்?

இன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்!

முதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தோற்றம், குணம்,
வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.

எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு
எதிர்வீடான கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.

அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப
லக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின்
கூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்

சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின்
அதிபதி சனி. ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்

சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள் இருக்கும் துறையில்
நாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes)

சிம்ம லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு
மென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்

சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.

ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது
லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட
தோற்றம் அவர்களுக்கு இருக்காது.

நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்

சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று கேட்பவர்களுக்கு
ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல் என்னும் சொல். சூரியன்
லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய
இடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று
அமர்ந்து விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்து விடுவதையும் குறிக்கும்.

சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள்
அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற
முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை
யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு.
சிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும்
அதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும்
உள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்வார்கள்

சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும் அதிபதியும்
(அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்)
சிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்
அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை
இருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில்
செவ்வாய் வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.

சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக்
கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும். கும்ப லக்கினக்காரர்கள்
நல்லவர்களாக இருப்பார்கள் கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.

கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவளாக
இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத்
திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.

கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும்
சாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார்.

அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப
லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ்
வீடும், 12ம் வீடுமாகிய விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது
கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே - விரையாதிபதியும்
(Lord for the losses) அவனே!

ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or great failure என்கின்ற
இரண்டு பலன்களில் ஒரு பலன் தான் வாழ்க்கையில் அமையும்!
..........Written on 17.10.2007
=====================================================
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள்
அறிதல் அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று
தெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்
தலா ஒரு வீடுதான்.

மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி
ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள்
பெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.
அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச்
சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக
இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இதெல்லாம் பொது விதி!.

1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள
வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக
இருப்பான். if Lagna is hemmed between benefic planets,the native will be
fortunate.

2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால்
அல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம்.
வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள்
எதையும் போராடித்தான் பெற வேண்டும்.

இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும்
என்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள்
வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,
அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.

இந்த விதி தலையான விதியாகும்.

இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது
பொருந்தும்.

இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி,
பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம்
வீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி
அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம்
ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார்
போலத்தான் இருக்கும்.

If the said house is surrounded by good planets, the results
of the said house will be good and on the contrary,
if it is surrounded by bad or melefic planets, the results of
the said houses will be bad.

ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்
கொண்டு அலச வேண்டும்.

அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்

1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்
நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.

2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக
வாழ்வான்.

3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்
அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்
ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.

4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்
(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்
பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
...........Written on 21.11.2007

ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.
ஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்!

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

இந்தப் பதிவு வலை ஏற்றப்பட்ட நேரத்தைக் கவனியுங்கள்.
எல்லாம் உங்களுக்காகத்தான்!
அதோடு இன்னொன்றையும் கவனியுங்கள். இது ஜோதிடப் பாடத்தின்
200 வது பதிவு.

வாழ்க வளமுடன்!

8.5.09

நந்தலாலா பாட்டு - நியூ வெர்சன்!

நந்தலாலா பாட்டு - நியூ வெர்சன்!

காந்தி நோட்டினிலே நந்தலாலா - எங்கள்
காலம் நடக்குதையே நந்தலாலா

(காந்தி)

பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா - பந்த
பாசம் இல்லையே நந்தலாலா

(காந்தி)

தேடிய பொருளிலெல்லாம் நந்தலாலா - ஒரு
திருப்தி இல்லையே நந்தலாலா
தேடுதலை விடுவதற்கு நந்தலாலா - மனம்
தேறுதல் கொள்வதில்லை நந்தலாலா

(காந்தி)

காசைப் பார்த்தால் நந்தலாலா - நின்னைக்
காணும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
ஆசையை விடுவதற்கு நந்தலாலா - வேண்டிய
அறிவு இல்லையே நந்தலாலா!

(காந்தி)

வாழும் வகை அறியோம் நந்தலாலா - நல்ல
வாழ்க்கை முறை தெரியோம் நந்தலாலா
பாழும் மனதை வசப்படுத்த நந்தலாலா - ஏன்
பக்குவம் நீ தரவில்லை நந்தலாலா!

(காந்தி)

==================
வாழ்க வளமுடன்!

5.5.09

வீரபாகு கேட்ட வரம்

என் நண்பரும், 'மல்லிகை மகள்' என்னும் பெருமைக்குரிய மாத இதழின்
ஆசிரியருமான திரு.ம.கா.சிவஞானம் அவர்கள் புத்தம் புதிய ஆன்மிக
மாத இதழ் ஒன்றை இந்த மாதம் முதல் வெளியிடத் துவங்கியுள்ளார்.

அதன் பெயர் "சுபவரம்" முதல் இதழ் இந்த மாதம் முதல் தேதியன்று
வெளியாகியுள்ளது. எல்லா Book Stall களிலும் கிடைக்கும்

இதழ் அசத்தலாக இருக்கிறது. அனைவரும் வாங்கிப்படித்து மகிழுங்கள்
--------------------------------------------------------------------------------------------
அதன் முதல் இதழில், கீழே எழுதியுள்ள எனது ஞானக் கதை
வெளியாகியுள்ளது.

அதேபோல நமது சக பதிவர். திரு ஓம்கார் சுவாமி அவர்களின்
இரண்டு சிறப்புக்கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

அவை என்னவென்கிறீர்களா?

எல்லாவற்றையும் இங்கேயே சொல்லிவிட்டால், புத்தகம் விற்க வேண்டாமா?

ஆகவே ஸ்டாலில் வாங்கிப் படியுங்கள்
===================================================
முக்கியமான செய்தி கதைக்குப் பிறகு உள்ளது.

===========================================
அடியேன் எழுதிய அந்தக் கதை உங்கள் பார்வைக்காக!

வீரபாகு கேட்ட வரம்

உண்மையான பக்திக்கு முருகப் பெருமானின் முதன்மைப் பக்தரான
வீரபாகுவை உதாரணமாகக் கொள்ளலாம்.

ஒருமுறை தன்னை நினைத்து, மனம் உருகிப் பிரார்த்தனை செய்த
வீரபாகுவின் முன்பு முருகப்பெருமான் காட்சி கொடுத்தார்.

இறைவனை நேரில் கண்ட வீரபாகு, அளவிட முடியாத பரவசம்
அடைந்ததோடு, இறைவனின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
வணங்கியவர், இறைவனின் பொற்பாதங்களைப் பற்றிய நிலையில்
எழ மனமில்லாமல் அப்படியே கிடந்தார்.

தன் பக்தன் வீரபாகுவை எழச்செய்த முருகன், அவனுடைய பக்தியின்
தன்மையைச் சோதிக்க எண்ணிக் கேட்டார்

"வீரபாகு, என்ன வேண்டும் உனக்கு? கேள்,தருகிறேன்!"

"அய்யனே, உமதருளால் நான் மன நிறைவோடு இருக்கிறேன். எனக்கு
ஒன்றும் வேண்டாம். கேட்டுப் பெறும் நிலையில் எதுவும் இல்லை!
உங்கள் அருளாசி ஒன்று போதும்!" இது வீரபாகு.

விடுவாரா முருகன்? விடவில்லை!

"நான் காட்சி கொடுத்தால், ஏதாவது தந்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம்.
ஆகவே உனக்கு வரம் ஒன்றைத் தந்துவிட்டேன். என்ன வேண்டுமோ
அதை நீயே நிறைவு செய்து கொள்"

திகைத்துவிட்டார் வீரபாகு. காட்சி கொடுத்தவர் இப்போது கொடுத்திருப்பது
ப்ளாங் செக். எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளலாம்.
என்ன செய்தார் வீரபாகு?

"அய்யனே, என் வாழ் நாள் முழுவதும் உன்னைத் தொழுகின்ற பாக்கியம்
வேண்டும்."

பெருமான் விடவில்லை. "சரி, அது முதல் வரம். உன் எண்ணப்படி அதை
அளித்துவிட்டேன். இரண்டாவதாக உனக்கு, ஒரு வரம் தர விரும்புகிறேன்.
என்ன வேண்டும் கேள்?"

ஒன்றும் வேண்டாம், இருப்பதுபோதும் என்று வீரபாகு சொல்ல, முருகப்
பெருமான் வற்புறுத்தி மீண்டும் ஒரு வரத்தைத் தந்து, அதை நிறைவு செய்து
கொள்ளும்படி கட்டளையிட்டார்.

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.

வீரபாகு, மின்னலாக யோசித்தார். விட்டால் ஆண்டவன், வரிசையாக
வரங்களாகத் தந்து, கடையில் இவ்வுலக இச்சைகளுக்கு ஆளாக
நேரிட்டுவிடுமோ, என்று சிந்தித்தவர், இறைவன் கொடுத்த இரண்டாவது
ப்ளாங் செக்கை - அதாவது வரத்தை அசத்தலாக நிறைவு செய்தார்.

அதற்குப் பிறகு அவரைச் சோதிக்க நினைத்து வந்த முருகனால் மூன்றாவது
வரத்தைக் கொடுக்க முடியாதபடி இரண்டாவது வரம் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

அப்படி எதைக் கேட்டிருப்பார் வீரபாகு?

எதைக் கேட்டு, அந்த வரத்தை அப்படி நிறைவு செய்திருப்பார் வீரபாகு?
யோசித்துப் பார்த்து விடையைச் சொல்லுங்கள்

விடையைத் தெரிந்துகொள்ள scroll down செய்து பாருங்கள்!
-----------------------------------------------------------------
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

விடை:

"உன்னைத் தொழுகின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத
மனதைக் கொடுங்கள் பெருமானே!"

அதுதான் வீரபாகு கேட்ட இரண்டாவது வரம். இறைவனைத் தொழுகின்ற
பாக்கியம் தவிர வேறு சிந்தனையில்லாத நிலை என்பது எவ்வளவு
உயர்ந்த நிலை! அதுதான் உண்மையான பக்தி!
==================================================
முக்கியமான செய்தி:

வாத்தியார் மூன்று தினங்கள் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு மூன்று
நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு, புதிய பாடத்துடன் 11.5.2009
திங்களன்று துவங்கும்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4.5.09

சொர்க்கம் எங்கே?

சொர்க்கம் எங்கே?

சொர்க்கம் மதுவிலே' என்று கவியரசர் பாடலைச் சொல்ல வருகிறேன்
என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

நமீதாவைப் பற்றிச் சொல்ல வருகிறேன் என்பவர்களும் ஜூட் விடவும்

இது வேறு ஒரு சொர்க்கத்தைப் பற்றிய கட்டுரை!
=================================================
"அப்பா....."

"என்னடா செல்லம்?"

"கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"

"ஏனடி செல்லம், கடவுளைத் தேடுகிறாய்?"

"கடவுளை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது அப்பா!"

"நீ நன்றாகப் படிக்க வேண்டும். டீச்சர் கொடுக்கும் ஹோம் ஒர்க்கையெல்லாம்
ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பா, அம்மா பேச்சைத் தட்டக்கூடாது.
காலையிலும் மாலையிலும் தவறாமல் பிரேயர் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் நீ நல்ல பெண்ணாகிவிடுவாய். நல்ல பெண்ணாகி
விட்டால் கடவுளே உன்னைப் பார்க்க வருவார்"

"சரி, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார்?"

"கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்!"

"சொர்க்கம் எங்கே இருக்கிறது?"

அப்பா வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டினார். குழந்தை
விடவில்லை. தொடர்ந்து கேட்டது:

"சொர்க்கத்திற்கு எப்படிப் போக வேண்டும்? ஏரோப்பிளேனில் போக வேண்டுமா?"

"நாமாகப் போக முடியாது. கடவுள் அழைப்பு அனுப்புவார் அப்போதுதான்
போக முடியும்"

அப்பா ஒருவழியாகச் சமாளித்தார்.

குழந்தைவிடவில்லை. நச்சரிப்புத் தொடர்ந்தது.

"சொர்க்கத்தை யாரப்பா உருவாக்கினார்கள்? (who created heaven?)"

"கடவுள்தான் உருவாக்கினார்"

"சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் எங்கே அப்பா இருந்தார்?"

அப்பாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு கோபமும் பொத்துக் கொண்டு
வந்துவிட்டது.

"அதையெல்லாம் பெரியவளானால் நீயே தெரிந்து கொள்வாய்! இப்போது
போய் விளையாடு, போ! என்று அனுப்பிவைத்துவிட்டார்.

ஐந்து நிமிடம் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று
உணர்வு மேலிடப் பேச ஆரம்பித்தது.

"அப்பா நான் கண்டு பிடித்துவிட்டேன். நரகம் இருப்பதாகச் சொல்லுவீர்கள்
அல்லவா? சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் அங்கேதான்
இருந்திருக்க வேண்டும்."

அப்பா அசடு வழிய, வேறு வழி தெரியாமல் பதில் சொன்னார்.

"ஆமாம், அங்கேதான் இருந்திருப்பார்"

"நரகத்தை உருவாக்கியவர் யாரப்பா?"

"அதையும் கடவுள்தான் உருவாக்கினார்!"

"நரகத்தை உருவாக்கியது தவறில்லையா? ஏனப்பா கடவுள்கூட தவறுகளைச்
செய்வாரா?"

"சில சமயம் செய்வார்" என்று சொல்லித் தன் குழந்தையை அனுப்பிவைத்த
தந்தை தனக்குள் முனுமுனுத்துக் கொண்டார்

"கடவுள் செய்த முதல் தவறு உலகத்தைப் படைத்தது. இரண்டாவது தவறு
பெண்ணைப்படைத்தது. மூன்றாவது தவறு பெண்ணைக் கண்டு ஆணைச்
சொக்கவைத்து, அவளை மணந்து கொள்ள வைத்தது. நான்காவது தவறு
அவள் மூலம் குழந்தைகளைப் பெற்று பந்தம் பாசம் என்று மனிதனை
ஒரு வலைக்குள் பிடித்துப்போட்டது."
=======================================================
அதில் உண்மை இல்லை.

மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.

சொர்க்கம் நரகம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை.

கடவுள் இருப்பது மட்டும் உண்மை!

அவரைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர்.
earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !"

(உருவாய் என்றால் உருவமுள்ளவனாகவும், அருவாய் என்றால் உருவமற்ற
நிலையை உடையவனாகவும் என்று பொருள்!)
===============================================
என்னை எழுதவைப்பவரும் அவர்தான்;
உங்களைப் படிக்கவைப்பவரும் அவர்தான்:-))))

இது உண்மையா?

இல்லை! இதுவும் தவறு.

நம் செயல்களுக்கு அவர் பொறுப்பில்லை!
அதுபோல நமது பாவ, புண்ணியங்களுக்கும் அவர் பொறுப்பில்லை!

நல்ல செயல்களைச் செய்து பிறவிக்கடனைக் கழியுங்கள்
இல்லையென்றால் மீண்டும் மீண்டும் பிறந்து அவதிப்பட நேரிடும்!

வாழ்க வளமுடன்!

3.5.09

வயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)

வயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்!
மற்றவர்கள் பதிவை விட்டு விலகவும்

வகுப்பறை என்பதற்காக
வயது வந்தவர்களுக்கான பதிவைப் போடக்கூடாதா என்ன?

வயது வந்தவர்கள் scroll down செய்து பார்க்கும் படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


தேர்தல் வருகிறது.
தவறாமல் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்
அடுத்த அரசைத் தேர்வு செய்து
வளம் மிக்க நமது நாட்டைக் காப்பதும் நமது பொறுப்புத்தான்
ஆகவே தகுதியானவர்களுக்கே உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்
தவறாமல் பதிவு செய்யுங்கள்

வாழ்க பாரதம். வளர்க அதன் பெருமை!
==============================
இறக்குமதிச் சரக்கு.
மின்னஞ்சலில் வந்தது.
மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது

வாழ்க வளமுடன்!

1.5.09

சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?

சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?

வகுப்பறைப் பதிவிற்கு ஏராளமான புதியவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்
மகிழ்ச்சி.

இதுவரை சுமார் 200 பதிவுகளை எழுதியுள்ளேன். அதையெல்லாம்
ஒவ்வொன்றாகப் படித்துவிட்டுப் பிறகு தற்சமயம் நடத்தும் பாடங்களைப்
படித்தால் அவை விளங்கும். இல்லையென்றால் ஒன்றும் புரியாது.

ஆரம்பப் பள்ளியில் படிக்காத ஒருவனை, எடுத்தவுடன் உயர்நிலைப் பள்ளியில்
படிக்கவிட்டால் எப்படியிருக்கும்?

ஆகவே புதிதாக வருகிறவர்கள், முன்பு நடத்தப்பட்டுள்ள பாடங்களைப்
படிக்கவும். அடிப்படைப் பாடங்கள் தெரியாமல், இப்போது எழுதுவதைப்
புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

நான் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கின்ற காலத்தில், எனக்குச் சொல்லித்
தரவெல்லாம் யாரும் இல்லை. 3 வருட காலங்கள், எனது ஓய்வு நேரத்தில்
பல போராட்டங்களுடன் ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டேன்.

அதற்குப் பல நூல்கள் உதவின.தொடர்ந்து பல சஞ்சிகைகளைப் படித்து வந்தேன்.

முழுத் தெளிவு பிறக்க 10 வருட காலம் ஆயிற்று.

நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல! படிப்பதும் எழுதுவதும் எனது
ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு.(Hobby) ஜோதிடத்தை வைத்து, இதுவரை
ஒரு பைசாக்கூட சம்பாதித்ததில்லை. கற்றுக்கொள்ள நிறையச்
செலவழித்திருக்கிறேன்.

நேரம், பணம் இரண்டையும் நிறையச் செலவழித்திருக்கிறேன்.

நான் கற்றது மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்றுதான் பதிவில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பயிற்சிப் படிப்பிற்காக நிறைய ஜாதகங்களைச் சேர்த்துவைத்திருக்கிறேன்.
என்னிடம் 500ற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் உள்ளன. அத்தனையும் என்
உறவினர்கள் மற்றும் நணபர்களிடம் கேட்டுப் பெற்றதாகும். அத்துடன்
25 ஆண்டுகால ஜோதிட மாத இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளேன்.
அதில் நூற்றுக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்கள் உள்ளன.

அவற்றையெல்லாம் வைத்து ஒரு ஆய்வு செய்யலாம் என்றால் நேரம் இல்லை.
பொருள் ஈட்டல் என்னும் எனது தொழில் குறுக்கே வந்து நிற்கும்.
Marketing of all counts of cotton and synthetic yarn எனது தொழில்

ஜோதிடம் என்பது கடல். அதில் இன்றும், அதாவது இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும், நானும் ஒரு மாணவன்தான்.

ஜோதிடத்தை எந்தக் கொம்பனாலும் முழுமையாகக் கற்றுத் தேறமுடியாது.

அதற்கு ஆயுள் பற்றாது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு ஒவ்வொரு பதிவிற்கும் வரும் பின்னூட்டங்களைத் தவிர்த்து
(That is apart from the comments to my postings) நிறையத் தனி மின்னஞ்
சல்கள் (personal mails) வருகின்றன.

சராசரியாக நாள் ஒன்றிற்குப் 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.

அவற்றை எழுதுபவர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து, என்னைப் பதில்
எழுதச் சொல்லியிருப்பார்கள். பிறப்பு விவரம் முழுமையாக இருக்காது.
அஷ்டகவர்க்கம் இருக்காது. அதையெல்லாம் நான் சரி செய்ய வேண்டும்

அத்துடன் ஒரு ஜாதகத்தைப் பார்த்து, ஒரு கேள்விக்குப் பதில் சொல்வ
தென்றால் சராசரியாக 20 முதல் 30 நிமிட நேரம் ஆகும். அத்தனை
மின்னஞ்சல்களுக்கும் எப்படிப் பதில் எழுதுவது?

இருந்தாலும் கேள்விகளின் தன்மையைப் பொறுத்துப் பலருக்கும் பதில்
எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உடன் பதில் எழுத முடியாதபடி, சில கேள்விகள் இருக்கும்.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகப் பட்டியல் இட்டுள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிகமாக வரும் கேள்வி:

"ஐயா, என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?"

எதிர்காலம் என்பது விளையாட்டா? ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடிய
கேள்வியா என்ன?

இப்படிக்கேட்டுவிட்டு, அதற்குச் சிலர் உடன் சிறு குறிப்பும் எழுதியிருப்பார்கள்

"நல்ல வேலை எப்போது கிடைக்கும். அதில் முன்னேற்றம் இருக்குமா?
எனது திருமணம் எப்போது நடைபெறும்? வரவிருக்கும் மனைவி எப்படி
இருப்பாள். சொந்தத்தில் திருமணமா? அல்லது வெளியில் திருமணமா?
காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமா?
குழந்தை பாக்கியம் எப்படி? சொந்த வீடு, வாகனங்களை எப்போது
வாங்குவேன்."

இதற்குக் குறைந்தது மூன்று மணி நேரம் ஜாகத்தை ஆய்ந்து, பத்துப்
பக்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்

நடக்கிற காரியமா?

ஒரு கேள்வியை வைத்துத்தான் ஒரு ஜாதகத்தை அலச முடியும்.
அலசுவதன் மூலம்தான் துல்லியமான விடை கிடைக்கும்

Accurate analysis depends a lot on your questions.
Questions asked intelligently can yield accurate analysis and prediction.

ஒரு கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, 36 கேள்விகளை உள்ளடக்கிய
எதிர்காலம்' எனும் கேள்வியைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது?

If one asks: What is my future?
That question can lead us nowhere.

ஒவ்வொரு வீட்டிற்கும் 3 இலாக்காக்கள். 12 வீடுகளுக்கும் சேர்த்து
மொத்தம் 36 இலாக்காக்கள். அத்தனை இலாக்களையும் உள்ளடக்கியது
தான் வாழ்க்கை. அதை ஒரே வரியில் எதிர்காலமாக்கியும், ஒரே வரியில்
கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படலாம். பதில் சொல்வது
மிகவும் சிரமம்.

ஒருவருக்கு 25 வயது. இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்றால் முதலில்
ஆயுளைக் கணித்து, அவர் உயிரோடு இருக்கும் ஆண்டுகளைத் தெரிந்து
கொண்டு, அவருடைய முழு ஜாதகத்தையும் - அதாவது வீடுகளின்
தன்மையையும் எதிர் கொள்ளவிருக்கும் தசா புத்திகள், கோச்சாரங்கள்
அத்தனையையும் குறிப்பெடுத்துக்கொண்டு வருடம் வாரியாகப் பலன்
எழுதித் தரவேண்டும்.

அதை அந்தக் காலத்தில் இருந்த ஜோதிடர்கள் ஒரு வார காலம் அல்லது
பத்து நாட்கள் அமர்ந்து பலன்களை ஒரு 40 பக்க புத்தகமாக எழுதிக்
கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை. அத்தனை விவரம் தெரிந்த
ஜோதிடர்களும் இப்போது அரிது. சத்தியமாக எனக்கு அந்த அளவிற்கு
ஜோதிட அறிவும் இல்லை. பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை!

ஆகவே கேள்வி கேட்பவர்கள். ஒரே ஒரு நேரடிக் கேள்வியை மட்டும்
கேளுங்கள். Please ask only one straight question.

Just read the description of the houses and think can such a question
can be answered. Please do not confuse Astrology with Fortune telling
and abuse this science.

A good question would be;I want to change my Job?
When will there be fruitful conditions for this career change.
Will i benefit from This career change?
This question sets the astrologer mind to onething and the native is benefitted.

மாதிரிக் கேள்விகள்:

1. நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னுடைய கஷ்டம் எப்போது
தீரும்?
2. எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. எனக்கு எப்போது
திருமணம் நடக்கும்?
3. நான் ஆரோக்கியமாக இல்லை. நோய்கள் படுத்துகின்றன. எனது
உடல்நிலை எப்போது சீராகும்?
4. இப்பொது இருக்கும் வேலை பிடிக்கவில்லை. நல்ல வேலை
எப்போது கிடைக்கும்?
5. வெளி நாடு சென்று பொருள் ஈட்ட ஆசைப் படுகிறேன். எனக்கு
கடல் கடக்கும் யோகம் உள்ளதா?
6. சொந்தமாக வீடு வாங்க ஆசைப் படுகிறேன் எப்போது அது
நிறைவேறும்?
7. எனக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை.
எப்போது குழந்தைச் செல்வம் கிடைக்கும்?
8. பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் உள்ளன. அது கிடைக்குமா?
கிடைக்காதா?
9. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை இல்லை.
அவள் என்னுடன் இசைந்து வாழ்வாளா அல்லது மாட்டாளா?
10. நான் செய்யும் வேலைகளுக்கு உகந்த அங்கீகாரம்
கிடைப்பதில்லை. ஏன் அப்படி?
11. வேலையை உதறிவிட்டுத் தொழில் துவங்க விரும்புகிறேன்.
செய்யலாமா?
12. எப்போதும் மன நிம்மதியின்றி அவதிப்படுகிறேன். நிம்மதியான
சூழ்நிலை எப்போது ஏற்படும்?
===========================================================
நிறைய மின்னஞ்சல்கள் காதல் திருமணம் குறித்து வருகிறது.

"ஐயா நான் ஒருவரை 2 ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் இருவருடைய ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். திருமணம்
செய்து கொள்ளலாமா? பொருத்தமாக இருக்கிறதா?"

காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகம் எதற்கு?
இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு, அவனை வேண்டாம் என்று சொன்னால்
அவன் சும்மா விட்டுவிடுவானா? என்னென்ன பிரச்சினைகளைக்
கிளப்புவானோ - யாருக்குத் தெரியும்?

ஆகவே பயந்த சுபாவம் என்றால் காதலிக்காதே!
துணிச்சல் இருந்தால் மட்டுமே காதலில் இறங்கு!
காதலில் இறங்கிவிட்டால் ஜாதகத்தைப் பார்க்காதே!
வருவது வரட்டும் என்று அவனை அல்லது அவளைத் திருமணம் செய்துகொள்
காதலித்தவளைக் கைப் பிடிப்பதுவரை நம் செயல், மற்றதெல்லாம்
விதிப்படி அல்லது விதித்தபடி நடக்கட்டும் என்று விட்டுவிடு.
---------------------------------------------------------------------------------------------------
இது இளம் பெண்களுக்கு மட்டும்:

ஆண்களில் பாதிப்பேர் சந்தர்ப்பவாதிகள். சுய நலவாதிகள்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.
காதலிக்கும்போது ஆடவன் ஒரு முகத்தை மட்டுமே உங்களுக்குக்
காட்டுவான்.

திருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய இரண்டாவது முகம்
தெரிய வரும்.

75% காதல் உடல் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படும்.

ஆகவே ஒருவன் உங்களை விரும்புவதாகக் கூறினால் உடனே
வழிந்து ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அவனைப் பற்றி முழுமையாக
விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திரும்ணத்திற்கு ஒப்புக்
கொள்ளாதீர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால்,
போராடி அவர்களை ஒப்புக் கொள்ள வையுங்கள்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாகட்டும் அல்லது பெற்றோர்களுக்குத்
தெரியாத காதல் திருமணமாகட்டும், இரண்டிலுமே பிரச்சினைகள் உண்டு.

நாள் ஒன்றிற்குப் 12 லக்கினங்கள். பிறக்கும் 12 விதமான லக்கினங்களை
உடைய குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு திருமண வாழ்வில்
சிக்கல் இருக்கும்.

அதாவது சராசரியாக 6 பேர்களில் ஒருவருடைய திருமண வாழ்வு
மகிழ்ச்சியாக இல்லாமல் போய்விடும். இது ஒரு random கணக்குதான்.

சனி ஏழில் அமர்ந்தாலும், (அந்தப் பன்னிரெண்டு பேர்களில் ஒருவருக்கு
ஏழில் அமையும்) அல்லது ஏழாம் அதிபதி 12ல் அமர்ந்தாலும், அல்லது 6ற்குரிய
வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு
பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம்
எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால்
நிலைமை மாறியிருக்கலாம். ஆகவே அப்படி அமைப்புள்ளவர்கள்,
தங்கள் ஜாதகத்தைப் பல கோணங்களிலும் ஆய்வு செய்யாமல் என்னைப் பிறாண்டாதீர்கள். தற்காப்புக்காகத்தான் அந்தப் பெரும்பாலும் என்னும்
சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறேன்.

அப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஜாதகம் உங்களுடையதாகக்
கூட இருக்கலாம். அதனால்தான் பெற்றோர்களுடைய சம்மதத்தை வாங்கிக்
கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். சிக்கலில் நிச்சயம் அவர்கள்
கை கொடுப்பார்கள்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!