Astrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்!
ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. ஒரு ஜாதகத்தில் அக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கும்போது, அந்த ஜாதகனுக்கு அக்கிரகங்களின் குணங்களும் சேர்ந்துகொள்ளும்
ஒருவருடைய ஜாதகத்தில், லக்கின அதிபதியும், லக்கினத்தில் வந்து அமரும் கிரகமும் அல்லது கிரகங்களும், லக்கினத்தைப் பார்க்கும் கிரகமும் அல்லது கிரகங்களும் சேர்ந்து ஜாத்கனின் குணத்தை நிர்ணயம் செய்யும்
மேற்சொன்ன அமைப்பில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகத்தில் மேலோங்கி நிற்கிறதோ, அந்தக் கிரகத்தின் குணமே ஜாதகனுக்கு அதிகமாக இருக்கும்
சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் ஜாதகன் நல்ல குணங்கள் நிரம்பியவனாக, பலராலும் விரும்பப் படுபவனாக இருப்பான். அதற்கு நேர் மாறாக சனி, ராகு அல்லது போன்ற தீய கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஜாதகன் அவனுக்கு மட்டுமே நல்லவனாக இருப்பான்:-)))
1
சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எத்தனை துன்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள்.
2.
சிலர் எப்போதும் அழுது வழிந்துகொண்டே இருப்பார்கள். தங்கள் மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்
3.
சிலர் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு போகும் குணத்துடன் இருப்பார்கள்.
4.
சிலர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் அல்லது வாக்குவாதம் செய்து சண்டையிடும் குணத்துடன் இருப்பார்கள்.
5.
சிலர் அன்பான மனைவி மக்களுடன் கூட எரிச்சலுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.
6
சிலர் அதற்கு மாறாக அன்பில்லாத உற்வுகளுடன் கூட கனிவாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.
7.
சிலருக்கு எல்லா விஷயத்திலும் ரசனையும் ஈடுபாடும் இருக்கும்
8.
சிலருக்கு எதையும் ரசிக்கும் உணர்வோ, லாபம் இல்லாத எதிலும் ஈடுபாடோ இருக்காது
9.
சிலர் முன்பின் தெரியாதவர்களிடம் கூட கலகலப்பாகப் பேசும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்
10
சிலர் நன்றாகத் தெரிந்தவர்களிடம் கூடபேசும் பழக்கமின்றி உம்மன்னா மூஞ்சி ஆசாமியாக இருப்பார்கள்
11.
சிலர் ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களாக, வெள்ளந்தியாக இருப்பார்கள்
12.
சிலர் கள்ளம் கபடு சூது வாது நிறைந்தவர்களாக எதையும் மறைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்
13.
சிலரைப் பார்த்தாலே கவர்ந்திழுப்பவர்களாக இருப்பார்கள். நமக்கே வலியச் சென்று அவர்களிடம் பேசும் ஆசை உண்டாகும்
14.
சிலரைப் பார்த்தலே பயம் உண்டாகும் தோற்றத்தில் இருப்பார்கள். நமக்கு ஒதுங்கிப்பொகும் எண்ணம்தான் உண்டாகும்
15
சிலர் தேவையில்லாத சின்ன விஷயத்திற்குகூட கவலைப் படுபவர்களாக இருப்பார்கள் அல்லது கோபப் படுபவர்களாக இருப்பார்கள்.
16
சிலர் இடியே விழுந்தாலும் கவ்லைப் படாதவர்களாக, எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்
17
சிலர் பரோபகாரிகளாக் யாருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்
18.
சிலர் தாமுண்டு தம் வேலை உண்டு என்று தன்னலம் மட்டுமே உள்ளவர்களாக இருப்பார்கள்
19
சிலர் தர்ம சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள்
20
சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது, அதைச் சேர்ப்பது என்று ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் உடையவர்களாக இருப்பார்கள்
இப்படி எழுதிக்கொண்டே போக்லாம்.
நூற்றுக் கணக்கான குண வேறுபாடுகள் உள்ளன.
எல்லாக் குழந்தைகளும் ஒரு தாயின் வயற்றில்தான் உருவாகின்றன் என்றாலும் முகங்கள் வேறுபடுவதுபோல குணங்களும் வேறுபடும்!
ஏன் ஒரு தாய் வயிற்றிலேயே பிறந்த இரண்டு குழந்தைகளின் குணம் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை
என்ன காரணம்?
பதிவின் துவக்கத்தில் உள்ள முதல் எட்டு வரிகளைப் படியுங்கள்! அதுதான் காரணம்
லக்கினத்தைவைத்துத்தான் குணம் அமையும் என்றாலும், 3, 6 8 மற்றும்; 12ஆம் வீடுகளைவைத்தும் சில குணாதிசய்ங்கள் சேர்ந்து கொள்ளும்
எந்தக் குணமும் அடுத்தவர்களைப் பாதிக்காத அளவில் இருப்பது முக்கியம்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்
பாடம் தொடரும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. ஒரு ஜாதகத்தில் அக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கும்போது, அந்த ஜாதகனுக்கு அக்கிரகங்களின் குணங்களும் சேர்ந்துகொள்ளும்
ஒருவருடைய ஜாதகத்தில், லக்கின அதிபதியும், லக்கினத்தில் வந்து அமரும் கிரகமும் அல்லது கிரகங்களும், லக்கினத்தைப் பார்க்கும் கிரகமும் அல்லது கிரகங்களும் சேர்ந்து ஜாத்கனின் குணத்தை நிர்ணயம் செய்யும்
மேற்சொன்ன அமைப்பில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகத்தில் மேலோங்கி நிற்கிறதோ, அந்தக் கிரகத்தின் குணமே ஜாதகனுக்கு அதிகமாக இருக்கும்
சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் ஜாதகன் நல்ல குணங்கள் நிரம்பியவனாக, பலராலும் விரும்பப் படுபவனாக இருப்பான். அதற்கு நேர் மாறாக சனி, ராகு அல்லது போன்ற தீய கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஜாதகன் அவனுக்கு மட்டுமே நல்லவனாக இருப்பான்:-)))
1
சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எத்தனை துன்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள்.
2.
சிலர் எப்போதும் அழுது வழிந்துகொண்டே இருப்பார்கள். தங்கள் மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்
3.
சிலர் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு போகும் குணத்துடன் இருப்பார்கள்.
4.
சிலர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் அல்லது வாக்குவாதம் செய்து சண்டையிடும் குணத்துடன் இருப்பார்கள்.
5.
சிலர் அன்பான மனைவி மக்களுடன் கூட எரிச்சலுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.
6
சிலர் அதற்கு மாறாக அன்பில்லாத உற்வுகளுடன் கூட கனிவாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.
7.
சிலருக்கு எல்லா விஷயத்திலும் ரசனையும் ஈடுபாடும் இருக்கும்
8.
சிலருக்கு எதையும் ரசிக்கும் உணர்வோ, லாபம் இல்லாத எதிலும் ஈடுபாடோ இருக்காது
9.
சிலர் முன்பின் தெரியாதவர்களிடம் கூட கலகலப்பாகப் பேசும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்
10
சிலர் நன்றாகத் தெரிந்தவர்களிடம் கூடபேசும் பழக்கமின்றி உம்மன்னா மூஞ்சி ஆசாமியாக இருப்பார்கள்
11.
சிலர் ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களாக, வெள்ளந்தியாக இருப்பார்கள்
12.
சிலர் கள்ளம் கபடு சூது வாது நிறைந்தவர்களாக எதையும் மறைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்
13.
சிலரைப் பார்த்தாலே கவர்ந்திழுப்பவர்களாக இருப்பார்கள். நமக்கே வலியச் சென்று அவர்களிடம் பேசும் ஆசை உண்டாகும்
14.
சிலரைப் பார்த்தலே பயம் உண்டாகும் தோற்றத்தில் இருப்பார்கள். நமக்கு ஒதுங்கிப்பொகும் எண்ணம்தான் உண்டாகும்
15
சிலர் தேவையில்லாத சின்ன விஷயத்திற்குகூட கவலைப் படுபவர்களாக இருப்பார்கள் அல்லது கோபப் படுபவர்களாக இருப்பார்கள்.
16
சிலர் இடியே விழுந்தாலும் கவ்லைப் படாதவர்களாக, எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்
17
சிலர் பரோபகாரிகளாக் யாருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்
18.
சிலர் தாமுண்டு தம் வேலை உண்டு என்று தன்னலம் மட்டுமே உள்ளவர்களாக இருப்பார்கள்
19
சிலர் தர்ம சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள்
20
சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது, அதைச் சேர்ப்பது என்று ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் உடையவர்களாக இருப்பார்கள்
இப்படி எழுதிக்கொண்டே போக்லாம்.
நூற்றுக் கணக்கான குண வேறுபாடுகள் உள்ளன.
எல்லாக் குழந்தைகளும் ஒரு தாயின் வயற்றில்தான் உருவாகின்றன் என்றாலும் முகங்கள் வேறுபடுவதுபோல குணங்களும் வேறுபடும்!
ஏன் ஒரு தாய் வயிற்றிலேயே பிறந்த இரண்டு குழந்தைகளின் குணம் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை
என்ன காரணம்?
பதிவின் துவக்கத்தில் உள்ள முதல் எட்டு வரிகளைப் படியுங்கள்! அதுதான் காரணம்
லக்கினத்தைவைத்துத்தான் குணம் அமையும் என்றாலும், 3, 6 8 மற்றும்; 12ஆம் வீடுகளைவைத்தும் சில குணாதிசய்ங்கள் சேர்ந்து கொள்ளும்
எந்தக் குணமும் அடுத்தவர்களைப் பாதிக்காத அளவில் இருப்பது முக்கியம்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்
பாடம் தொடரும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!