மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 340 - 350. Show all posts
Showing posts with label Lessons 340 - 350. Show all posts

21.5.10

வித்தைக் குறைபாடுகள் நீங்கி வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?



---------------------------------------------------------------------
வித்தைக் குறைபாடுகள் நீங்கி வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?

நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில்!

அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு.
(சீர்காழி அருகில் உள்ளது)

கும்பகோணத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்! சீர்காழியில் இருந்து தென்கிழக்கு திசையில், பூம்புகார் செல்லும் சாலையில் பத்துக் கிலோ மீட்டர் தூரம்.

இந்தத் திருக்கோவிலில் உறையும் சிவனாரின் பெயர் ஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பிகையின் பெயர் பிரம்ம வித்யாம்பிகை. புதன் கிரகத்திற்கு இக்கோவிலின் உள்ளே தனி சந்நிதானம் உள்ளது.

அகோரமூர்த்தி, நடராஜர், துர்கை, காளி தேவி, அஷ்டலெட்சுமி ஆகிய வடிவங்களில் உறையும் தெய்வங்களும் இங்கே உள்ளார்கள். பக்தர்கள் வணங்கி மகிழலாம்.

சிதம்பரத்திற்கு முன்பாகவே இத்தலத்தில் நடராஜர் ஹஸ்த நடனம் புரிந்தார் என்பது வரலாறு! அதனால் இத்தலத்திற்கு ஆதி சிதம்பரனார் ஆலயம் என்னும் பெருமையும் உண்டு!

இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

மனிதன் காடுகளை எல்லாம் விறகாக்கி, சமையல் செய்வதற்குப் பயன் படுத்தி அழித்து விட்டதால், காடுகள் மறைந்து விட்டன. இயற்கை எரிவாயு, கேஸ் சிலிண்டர்கள், எரிவாய் அடுப்புக்களை எல்லாம் முன்பே கண்டு பிடித்திருந்தால் பல காடுகள் தப்பித்திருக்கும். இன்றிருக்கும் குளோபல் வார்மிங் அவல மெல்லாம் இருந்திருக்காது.

ஸ்தல விருட்சம் ஆலமரம். வில்வ மரமும், கொன்றை மரமும் உள்ளன. அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்னும் 3 குளங்கள் இங்கே உள்ளன. நீராடி மகிழலாம்.

சிவனாரும், அம்பிகையும் இங்கே மூன்று வடிவங்களில் உள்ளனர். மூன்று ஸ்தல விருட்சங்கள் உள்ளன. மூன்றுவகையான தீர்த்தக்குளங்களும் உள்ளன. அதுதான் இக்கோவிலின் முக்கிய சிறப்பு. அத்துடன் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரு வரிசையில் அமையப்பெற்றுள்ளன என்பதும் கூடுதல் சிறப்பாகும்!

தலவரலாறு:

தல வரலாறு சற்று ரீலாகவும், தலை சுற்றும்படியாகவும் உள்ளது. வரலாற்றை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. ஏன் கேட்க முடியாது என்றால் பதில் சொல்ல ஆளில்லை. ஆகவே ஆராயக்கூடாது. முடிந்தால் நம்ப வேண்டும். இல்லா விட்டால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். கண்டு கொள்ளாமல் விடுவது நமக்குப் பழக்கமான ஒன்று. ஆகவே தகவலுக்காக மட்டும் அதைத் தெரிந்து கொள்வோம்.

அந்த மனநிலையோடு இப்போது மேலே படியுங்கள்!

புதபகவான், சந்திரனுக்கும், தாரணிக்கும் பிறந்தவர். இந்தத் தாரணி குரு பகவானின் மனைவி. சிவனாரும், பிரம்மாவும் இந்த முறையற்ற தொடர்பிற்கு ஆட்சேபம் தெரிவித்து, தாரணியைத் திருப்பி அனுப்பி வைத்தார்களாம். சிறு வயதில் தன் தாய் யாரென்பது தெரியாமல் வளர்ந்த புதபகவான், பின்னால் தகவல் தெரிந்த போது தன் தந்தையார் மீது கடும் கோபம் கொண்டாராம். அத்துடன் தன்னுடைய இழிபிறப்பு அவலம் நீங்க கடும்

தவமிருந்து, சிவனின் ஆசி பெற்று, அவலம் நீங்கி அமைதியுற்றாராம்.
---------------------------------------------------------------------------------------------------
ஆக்க வேலைகளுக்கு அதிபதியான பிரம்மா (the creator of all life) இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் (attained knowledge) அதானால்தான் இங்கே உறையும் அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது.

கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்!

காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்தார்களாம்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நல்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது! அத்துடன் பட்டினத்தார் முக்திபெற்ற ஸ்தலமும் இதுதான். அதை மனதில் கொள்க!
------------------------------------------------------------------------------------------------------
அகோரமூர்த்தி வடிவாக இக்கோவிலில் இருக்கும் சிவனின் கதை! (கதை என்று குறிப்பிட்டு இருப்பதைக் கவனிக்கவும்):

முன்னொரு காலத்தில் மருதுவாசுரன் என்னும் அசுரனை அழிக்க, சிவன் அகோரமூர்த்தி என்னும் தடாலடி வடிவம் எடுத்தாராம். இந்த மருதுவாசன் நல்லபிள்ளையாக பிரம்மாவிடம் வரம் பெற்றவன், பிறகு நம் திரைப்பட
வில்லன்களைப்போல, தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தத் துவங்கினானாம். அவர்கள் சென்று தங்கள் நிலைமையைச் சிவனாரிடம் சொல்லி மூக்கால் அழுக, சிவன் அவர்களைத்
திருவெண்காடு சென்று அங்கே வேற்று உருவில் மறைந்து வாழும்படி பணித்தாராம். அங்கேயும் மருதுவாசனின் ஆட்டம் தொடர, சிவன் தன் நந்தியை அனுப்பி, அவனைச் சாய்த்துவிட்டு வரும்படி பணித்தாராம். நந்தியார்
அந்த அசுரனைத் தோல்வியுறச் செய்து, விரட்டி அடித்துவிட்டு, தேவர்களையும், ரிஷிகளையும் காப்பாற்றினாராம்.

தோல்வியுற்றவன், மீண்டும் கடும்தவம் புரிந்து, அதுவும் சிவனிடமே கடும் தவம் புரிந்து, திரிசூலத்தைப் பெற்றானாம். பெற்றவனுக்கு மீண்டும் புத்தி பேதலிக்க, தன்னைத் தாக்கி நிலைகுலையச் செய்த நந்தியாரை, அத்திரிசூலத்தை வைத்துக் காயப் படுத்தினானாம். கடும் கோபமுற்ற சிவனார், அகோர மூர்த்திவடிவம் எடுத்து, அசுரனை அழித்தாராம்.

அசுரனால் ஏற்பட்ட காய வடுக்கள், இத்தலத்தில் உள்ள நந்தியின் மேல் இன்றும் இருப்பதைக் காணலாம்.

இக்கதையின் சாரம்சம் என்னவென்றால், எதிரிகளால், தொல்லைகளுக்கு உள்ளாகும் பக்தர்கள், இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எதிரிகளின் தொல்லைகள் காணாமல் போய்விடும். அதாவது இருக்காது. எதிரிகளே
இல்லாமல் போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை!
-------------------------------------------------------------------------------------------------------.
பிள்ளை இடுக்கு அம்மன்:

பிள்ளையை எடுக்கிய அம்மன் என்று பொருள் கொள்க! ஒருமுறை திருஞான சம்பந்த சுவாமிகள், இத்தலத்திற்கு வந்தபோது, அப்பகுதி மொத்தமும் சிவனார் வடிவத்தையே கண்ணுற, அவற்றைத் தன் காலடியால், கடந்து, அல்லது தாண்டிச் சென்று கோவிலின் உட்புறம் உறையும், சிவனாரை எப்படி வணங்குவது என்று கலங்கி நிற்க, பெரியநாயகி அம்மன் அவருக்கு உதவ முன் வந்தாராம்.

அம்மையே, அவர்முன் தோன்றி, அவரைப் பிள்ளையாக்கித் தன் இடுப்பில் ஏற்றிக்கொண்டு சென்று சுவாமியைத் தரிசிக்க வைத்தாராம். அதனால் இக்கோவிலில் உறையும் பெரியநாயகி அம்மனுக்கு, பிள்ளை இடுக்கி அம்மன்
என்னும் பெயரும் உண்டு. பிள்ளையை எடுக்கியவடிவில் அம்மனுக்கு இங்கே உருவச்சிலையும் உண்டு. அதுவும் இக்கோவிலின் தல வரலாறு. ஆகவே அதையும், நம்புங்கள். அல்லது நம்பாமல் விடுங்கள். அது உங்கள் விருப்பம்.
-------------------------------------------------------------------------------------------------------
மெய்கண்டாரின் கதை:

அச்சுதகாளப்பர் என்னும் சிவபக்தருக்கு, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தபோது, தனது குருவின் அறிவுரைப்படி, இத்தலத்தில் உறையும் ஸ்வதாரண்யேஸ்வரரை, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பின் பிரார்த்திக்க,
இறையருளால், குழந்தை வரம் பெற்றாராம். அத்துடன் அக்குழந்தைக்கு மெய்கண்டார் என்றும் பெயரிட்டாராம்.

அந்த மெய்கண்டார்தான் பின்னாளில் ’சிவஞானபோதம்’ என்னும் அற்புத நூலை எழுதினாராம்.

இக்கோவிலுக்குச் சென்று பிரார்த்திக்கும் பக்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது இக்கதையின் சாராம்சம்,
--------------------------------------------------------------------------------------------------------
அதுபோல ஒருமுறை துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க, இந்திரன், இத்தலத்தில்தான் பிரார்த்தனை செய்தான் என்னும் உபகதையும் உண்டு. பதிவின் நீளம் கருதி அதைக் கொடுக்கவில்லை
---------------------------------------------------------------------------------------------------------
முக்கியமான செய்திக்கு வருவோம். புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், வித்தைக் குறைவு. அக்குறைபாடு உடையவர்கள், குறிப்பாகக் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. இங்கே வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம்
இருந்து மேற்கூறியவற்றை வைத்து வழிபடலாம்.

புதன்கிழமைகளில், இக்கோவிலில் விஷேச பூஜைகள் உண்டு. வழிபாடுகள் உண்டு. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பிரம்மோத்சவ விழா மாசி மாதம் நடைபெறும்

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத்தகவல்:

Mercury is the lord to bless with good education, knowledge, eloquence, music, astrology, mathematics, sculpture, medicine, scholarship in languages. A temple for Chandra (moon) the father of Mercury is just opposite to the Mercury with Chandra Pushkarani theertha. If mercury is not favourably placed in a horoscope, the native may not have children. Also he/she will have nervous debility and lack of knowledge. They have to propitiate Lord Mercury. இசைக்கலைஞர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது.

வாழ்க வளமுடன்!

18.5.10

அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"

ஜோதிடம் என்ன செய்யும்?

மனதை நெறிப்படுத்தும்!

Your mind will become like a seasoned wood!

இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு
அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

"விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை" என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன் என்ற முதல்வரி முக்கியம். இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும் சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும் ஏழைவீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழாகாக பிறக்கையில், ஒரு குழந்தை ஏன் உடல் ஊனத்துடன் பிறக்கிறது?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில் செய்த நல் விணைகள், தீவிணைகளுக்குத் தகுந்த மாதிரி இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது.

அல்லாதவனுக்கு வாழ்க்கை அல்லல் படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால் குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால், முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப் பாவத்தைக் கழிக்க அதனுடைய
பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ புண்ணியங்களின்படிதான் என்றால், இங்கே - அதாவது இந்தப் பிறவியில் இறைவனின் பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation

இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன் மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும் 337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில் - அதாவது ஜீவன ஸ்தானத்தில் தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய் இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு (சுக ஸ்தானம்) நன்றாக அமைந்திருக்கும் அவனுக்கு ஒரு ஊறவினர்களோ அல்லது நண்பர்களோ உதவி செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்

ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத் தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை - அதேபோல யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாகவேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும். இருப்பதை வைத்துத்
திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Health இருக்கும் இடத்தி;ல் Wealth இருக்காது. Wealth இருக்கும் இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12
ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில் ஒருவருக்குக்கூட அமையாது!

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத் தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால் Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்
களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச் சொல்வான்.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச் சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை,
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,
அவனுக்கு இங்கே இடமில்லை!"

ஆமாம் எல்லாம் செர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம் இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமதானப் படுத்திக் கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும்

வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை!

கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக் கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும் சிறுவன் நிச்சயாமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப் பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே - சொன்னா, இப்போ வெள்ளி, சனிக்கிழமைகள்ல கோவில் வாசல்ல தாட்டோட உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில் நீயும் தட்டோட உக்கார வேண்டிய திருக்கும்" இப்படியும் சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை
நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும். எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை. அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும் ஒரு காலகட்டம், வரைமுறை உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை, பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை
சீராக இருக்கும். மனது எந்த்ச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும். அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப் பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித்தருவதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

அந்தச் சான்றிதழ் பிறந்த ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும் அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான
சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம் இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும்.

அது தன்னுடைய கோச்சாரத் திலும் (Transit) தசா புக்தியிலும் நல்ல பலன்
களைத் தரும். இல்லை யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும் தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நல்ல கணவன் கிடைப்பான். அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான். உரிய காலத்தில் திருமணமாகும்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப் போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா? மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம் பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து விட்டு தேசம, தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

குறைந்த அளவு ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பரல்கள் இருக்க வேண்டும்?

அட்டவனையைப் பாருங்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும்

அல்லது நல்ல தொழில் அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே பதிவிட்டிருக்கிறேன். பழைய பாடங்களைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

17.5.10

எதற்காகச் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதற்காகச் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும்!

தலைப்பு - நவாம்சம்

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.

நவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.

நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.

Navamsa is the one by ninth divison of a rasi chart. It is the magnified version of a rasi chart

ஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”

அதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா?

சொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.

வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.

சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.

ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.

ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.

அதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன? நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன? என்பதை விவரமாக எழுதியிருக்கிறேன்.

அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்!
-----------------------------------------------------------------
நவாம்சம் என்பதற்கு ஒன்பதாம் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.

Navamsa means "Ninth Division"

கிரகங்களின் வலிமையை அல்லது தன்மையைத் தெரிந்து கொள்வதற்கு நவாம்சச் சக்கரம் பயன்படும். கிரகங்களின் வலிமையை ராசி மற்றும் நவாம்சத்தை கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

இரண்டில் எது முக்கியம்?

இரண்டுமே முக்கியம்!

அப்பா, அம்மா - இருவரில் எவர் முக்கியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இருவருமே முக்கியம்!

ஒரு ஜாதகத்தின் வலிமையை அந்த இரண்டு சக்கரங்களையும் (Charts) வைத்தே தீர்மானிக்க வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
எண் ஜோதிடத்தில் ஒன்பதாம் எண் கடவுளைக் குறிக்கும் அதற்கு அகரங்கள், எழுத்துக்கள் கிடையாது.

அதுபோல ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் மிகவும் முக்கியமானது. அதன் அதிபதிதான் ஜாதகனுக்கு அதிகமான நன்மைகளைச் செய்யக்கூடியவர்.

The 9th house is the house of fortune, luck, and Dharma.

நவாம்சச் சக்கரம் ஜாதகன் வாங்கி வந்துள்ள அதிர்ஷ்டங்களைச் சொல்லும்.

ஒன்பதாம் இடமும், அதன் அதிபதியும், ஜாதகனுக்கு பல நல்ல வாய்ப்புக்களையும், பல அதிர்ஷ்டமான சூழ்நிலைகளையும், பல வெற்றிகளையும் உருவாக்கித் தரும்/தருவார்கள்.

ஜாதகனைத் தர்ம வழிகளில் நடக்க விடுவார்கள். உயர விடுவார்கள். பல உயர்ச்சிகளைத் தருவார்கள்

ஜாதகனுக்கு ஜாதகத்தில் உள்ள தீய கிரகங்களால் ஏற்படும், அவதிகளை எதிர்த்து நிற்பதற்கு ஒன்பதாம் அதிபதி பல உதவிகளைச் செய்வார்

ஒன்பதாம் வீட்டில் அமரும் கிரகத்திற்குச் சொந்தமான வீடும் நலம் பெறும். ஜாதகனுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே நவாம்சச் சக்கரம், அதிர்ஷ்டத்தைச் சொல்லும் சக்கரம்.

ஜாதகன் ஓடி வேற்றி பெறுவானா அல்லது ஒடிந்துபோய் படுத்துக் கொள்வானா’ என்பதை நவாம்சச் சக்கரம் சொல்லும்

நல்ல மனைவி அமையும் கணவன் அல்லது நல்ல கணவன் அமையும் மனைவி என்று தம்பதிகள் அமைந்துள்ள ஒரு குடும்பம் மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பெறுவதைப்போல, நல்ல ராசிச் சக்கரத்தையும் நல்ல நவாம்சச் சக்கரத்தையும் பெற்ற ஜாதகன்தான் ஒரு நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணம் சொன்னால் ராசிச் சக்கரம் ஒரு அலைபேசி (cell phone) என்றால், நவாம்சம் அலைபேசிக்குச் சரியான சிக்னல்களை அனுப்பும் நெட் ஒர்க் எனலாம். ஒரு வீக்கான, அதிகம் டவர்கள் இல்லாத நெட் ஒர்க்குடன் உங்கள் தொலைபேசி இருந்தால், நீங்கள் பல நேரம் தொடர்பு எல்லைக்கு வேளியேதான் இருக்க நேரிடும். வீக்கான நவாம்சம் என்பது வீக்கான செல்போன் நெட் ஒர்க் என்று சொல்லலாம். உங்கள் செல் போன் - அதிக விலையுள்ள லேட்டஸ்ட் செல் போன் என்றாலும் பயன்படாது போய்விடும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராசிச் சக்கரம் = உங்கள் உடல் உருவ அமைப்பு, நீங்கள் செய்யும் செயல்கள், நீங்கள் வாழும் சூழ்நிலைகள் போன்றவற்றைக் காட்டும்

சந்திரனை வைத்து உங்களுடைய மன உலகம், வருவதை நீங்கள் எப்படி மன ரீதியாக ஏற்றுக்கொள்கிறீர்கள் எப்படி அதைக் கையாளுவீர்கள் என்பது தெரியும்

நவாம்சம் உங்களிடம் மறிந்துள்ள சக்திகள், உங்கள் முயற்சிகளுக்கு விதிப்படி என்ன பலன் கிடைக்கும் என்பதெல்லாம் தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவாம்சத்தைப் பயன்படுத்துவதற்கு உரிய எளிய விதிமுறைகள். கிரகங்களின் வலிமையை நவாம்சத்தை வைத்து அறிந்து கொள்ளும் வழிகள்.

1. லக்கினம் அல்லது கிரகங்கள் ராசியில் இருக்கும் இடத்திலேயே நவாம்சத்திலும் இருக்கிறதா என்று பாருங்கள். இரண்டிலும் அது ஒரே இடத்தில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். அப்படி வர்கோத்தம அந்தஸ்து பெறும் லக்கினமும், கிரகங்களும் அதீத வலிமை உடையதாக இருக்கும்.

அவைகள் அதிக வலிமை உடையதாக இருக்கும் They are extremely powerful
பலன்களும் சக்திவாய்ந்ததாக இருக்கும் The result will be extremely powerful
அவைகளுடைய தசா புத்திகளும் சிறப்பாக இருக்கும் Their Dasa/Bukthi periods will most definitely be eventful.
--------------------------------------------------------
2. அதேபோல (ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் உச்சமாகவோ அல்லது ஆட்சி வீட்டிலோ இருக்கும் கிரகமும் வலிமையானதாக இருக்கும். தாங்கள் சம்பந்தப்பட்டுள்ள வீடுகள் அல்லது தங்களுடைய காரகத்திற்கான பலன்களை அவைகள் சிறப்பாகக் கொடுக்கும்!

அதேபோல (ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அந்தக் கிரகம் வலிமையை இழந்து விடும். அது செல்லாத காசாகிவிடும். அதனால் ஜாதகனுக்கு எந்தப் பலனையும் தர இயலாது. அதே இடத்தில் நீசபங்கம் பெற்றிருந்தால், மேட்டர் தலை கீழாக மாறிவிடும். ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்
--------------------------------------------------------
3. (ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் பரிவர்த்தனையாகியுள்ள கிரகங்கள் வலிமையுடையவையாக மாறிவிடும். ஜாதகனுக்கு நன்மையான பலன்களை அவைகள் கொடுக்கும்
---------------------------------------------------------
4.
ராசி அல்லது நவாம்சத்தில் ஒரு வீட்டின் அதிபதி, ஒரு காரகனின் சேர்க்கையையோ அல்லது பார்வையோ பெற்றால், நல்ல பலன்களைத் தருவார். உதாரனத்திற்கு ஏழாம் வீட்டதிபதி சுக்கிரனின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றால், நல்ல மனைவி அல்லது நல்ல கணவனைத் தருவார்கள். அந்த வழி உறவுகளும் மேன்மை உடையதாக இருக்கும்
------------------------------------------------------------
5.
குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களின் பார்வைகளுக்கும் நவாம்சத்தில் பலன் உண்டு. குருவிற்கு 5, 7,9ஆம் பார்வையும், செவ்வாய்க்கு 4, 7, 8ஆம் பார்வையும், சனிக்கு 3,7,10ஆம் பார்வையும் உண்டு என்பதை மனதில் கொள்ளவும்.
--------------------------------------------------------------
6.
ராகு, கேது போன்ற தீய கிரகங்களால் நவாம்சத்தில் மாறுபட்ட பலன்கள் உண்டாகும். உதாரணத்திற்கு, நவாம்சத்தில் குருவுடன் ராகு சேர்ந்திருந்தால்,
அது ஜாதகனின் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால் ஜாதகன்
தன் குழந்தைகளுடன் கொண்டிருக்கும் அன்பான உறவில் பல கேடுகளை விளைவிக்கும் அல்லது தன் குழந்தைகளைப் பற்றி நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டான்.
-----------------------------------------------------------------
7. நவாம்சத்தின் முக்கிய நோக்கமே அது ஜாதகனின் திருமண வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கு உள்ளதாகும். உரியதாகும். ஜாதகனின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ராசியில் ஏழாம் வீட்டில் தீய கிரகம் இருந்தால் அது நல்லதல்ல. ஆனால் நவாம்சத்தில் ஏழில் தீய கிரகம் இருந்தால் அது மிகவும் தீமையானது. மோசமானது A malefic in 7th in Rasi is bad, but in Navamsa it is worse

நவாம்சத்தில் ஏழாம் அதிபதியோ அல்லது சுக்கிரனோ கெட்டிருந்தால், அது திருமண வாழ்விற்குக் கேடானது.ராசியில் அவைகளின் நிலைமை எப்படியிருந்தாலும், நவாம்சத்தில் மட்டும் கெடக்கூடாது.
-----------------------------------------------------------------
8.
நவாம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறாமல் இருக்கும் கிரகங்கள், அது நவாம்சத்தில் இருக்கும் இடத்தின் அதிபதியால் (Navamsa depositor) உத்வேகம் கொண்டு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும். உதாரணத்திற்கு ராசியின் பத்தாம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் புதனின் வீட்டில் இருந்தால், அது ஜாதகனுக்கு ஆடிட்டர், அல்லது வங்கிகள், அல்லது தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை வாங்கிக் கொடுக்கும் அதேபோல 10ஆம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் செவ்வாயின் வீட்டில் இருந்தால், ஜாதகன் பொறியியல் துறை அல்லது காவல்/ராணுவத்துறையில் வேலை வாங்கிக் கொடுத்து அவனைச் சிறப்படையச் செய்யும். இதே அமைப்புள்ள ஜாதகன் மருத்துவத்துறைக்குப் போனால் பெயர் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவராக விளங்குவான்.
------------------------------------------------------------------------------------------
9.
நவாம்சம்த்தில் ஒரு கிரகத்திற்கு சில சமயம், இரண்டு கிரகங்களின் பார்வைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு ஏழாம் பார்வையாக ஒரு கிரகமும், 3 அல்லது 10ஆம் பார்வையால் சனியோ, அல்லது 4ஆம் , 8ஆம் பார்வையாக செவ்வாயோ அல்லது 5ஆம் அல்லது 9ஆம் பார்வையாக குருவோ - அதாவது அவர்களில் ஒருவரோ பார்க்கக்கூடும். அவற்றில் 7ஆம் இடத்தில் இருந்து நேரடியாகப் பார்க்கும் கிரகத்தின் பார்வைதான், அதிக வலிமையுடையதாக சம்பந்தப் பட்ட கிரகத்திர்கு உதவி செய்யும்!

என்ன தலை சுற்றுகிறதா?
6 அல்லது 10 முறைகள் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். தலை சுற்றல் நின்று விடும்:-)))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவாம்சத்தை வைத்து சில பொதுப்பலன்கள் (கவனிக்கவும் பொதுவான பலன்கள்)

1
நவாம்சத்தில் செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். வயிற்றில் உபாதைகள் ஏற்படும்.
2.
நவாம்சத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகன் தன் இனத்தைவிட்டு, வேறு இனப்பெண்ணை மணந்து கொள்வான். சொந்த உறவுகளோடு அவனுக்குப் பிரச்சினைகள் உண்டாகும்
3.
நவாம்சத்தில் சனியுடன், சந்திரன் சேர்ந்திருந்தால், ஜாதகன் பணத்தின்மேல் மிகுந்த பற்று வைத்திருப்பான்.யாருக்காகவும் ஒரு பைசா செலவழிக்க மாட்டான்.
4.
நவாம்சத்தில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்தால், பெண்களுக்கு மாதவிடாய்,, மற்றும் கர்ப்பப்பைப் பிரச்சினைகள் உண்டாகும். ஆண்களுக்கு ரத்த சம்பந்தமான பபிரச்சினைகள், கோளாறுகள் வரும். கடகத்தில் அல்லது விருச்சிகத்தில் இந்த அமைப்பு இருந்தால், இந்தப் பிரச்சினை நிச்சயம் உண்டாகும்.
5.
நவாம்சத்தில் சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்கும் குரு, ஜாதகனுக்கு நல்ல, ஸ்திரமான செல்வத்தைக் கொடுக்கும். பணப்புழக்கத்தைக் கொடுக்கும். வயதாக வயதாகப் பண இருப்பு அதிகமாகிக் கொண்டே போகும்.
6.
நவாம்சத்தில் சிம்மத்தில் இருக்கும் சனியால் கேடுகள்தான் அதிகம். அந்த இடத்தில் வர்கோத்தமம் (ராசியிலும் சிம்மத்தில்) பெற்றிருந்தால் சனியால் கெடுதல்கள் இருக்காது.
7.
நவாம்சத்தில் மேஷ் ராசியில் சூரியன் இருக்குமானால், ஜாதகனின் தலை இளைமையிலேயே வழுக்கையாகிவிடும். (Sun in Aries Navamsa go bald sooner). சிலருக்கு அகலமான் நெற்றி இருக்கும்
8.
நவாம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் (ரிஷபம் அல்லது துலாம் ராசிகளில்) செவ்வாய் இருந்தால் ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து நல்ல முறையில் அனுபவிப்பவனாக இருப்பான். அங்கே இருக்கும் செவ்வாய் கெட்டிருந்தால், மோசமான ரசனைகளை உடையவானாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் வாழ்க்கையை அனுபவிப்பான்.

அதேபோல செவ்வாயின் நவாம்சத்தில் (மேஷம் அல்லது விருச்சிகத்தில்) இருக்கும் சுக்கிரன் ஜாதகனுக்கு அதீத கோபத்தையும், அதீத உணர்வுகளையும், மூர்க்கத்தனத்தையும் கொடுக்கும் Venus in Mars Navamsa gives an aggressive, emotional outlook to the native.

ராசியில் எப்படி இருந்தாலும், நவாம்சத்தில் செவ்வாயும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை பிரச்சினைக்கு உரியதாகிவிடும். அல்லது அந்த அமைப்பினால் ஜாதகன் தீவிர காதலில் ஈடுபட்டு, இறுதியில் தன் காதலில் தோல்வியச் சந்திப்பான். தேவதாசாக மாறி அலைவான். இந்த அமைப்பில் ஜாதகத்தை உடைய சிலர், தகாத உறவுகளினாலும், கள்ளக் காதல்களினாலும் அவதிப்படுவார்கள்.
-----------------------------------------------------
நவாம்சம் நமது வாங்கி வந்த வரத்தை அளக்கும் தராசு. வெறும் தராசுதான். நமது அதிர்ஷ்டத்தை, நமது விதியை, அளந்து பார்க்க உதவும் தராசு. அதை மனதில் வையுங்கள்

இல்லை இப்படிக் கொள்ளுங்கள் - நவாம்சம் என்பது ஒரு கருவி, ராசிச் சக்கரத்தைப் பிரித்துப் பார்க்க உதவும் கருவி என்று எடுத்துக் கொள்ளுங்கள்

ராசிச் சக்கரத்தை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அதுதான் வண்டி (car). நவாம்சம் அதைப் பிரித்துப் பார்க்க உதவும் Tool Box
+++++++++++++++++++++++++++++++++++++++++++
முடிந்தவரை கொடுத்திருக்கிறேன். போதுமா சாமிகளா?

இந்தப் பாடம் கிடைத்த மறு நிமிடம், தங்கள் ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்டு எழுத வேண்டாம். மலைபோல வரும் கேள்விகளுக் கெல்லாம் பதில் எழுத எனக்கு நேரமில்லை. உங்களைப் போல எனக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.

என் தொழில் ஜோதிடம் அல்ல! ஒரு ஆர்வத்தில் ஜோதிடத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் கற்றது பலருக்கும் பயன்படட்டும் எனும் நோக்கத்தில் எனது அரிய நேரத்தைச் செலவு செய்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் அதை உணர்ந்தால் நல்லது!

உணர்ந்தவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

12.5.10

நோய்க்கான முதல் மருந்து எது?


வைத்தீஸ்வரன் கோவில் படம் ஒன்று!

வைத்தீஸ்வரன் கோவில் படம் இரண்டு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நோய்க்கான முதல் மருந்து எது?

வைத்தீஸ்வரன் கோவில்.

செவ்வாய் கிரகத்திற்கான ஸ்தலம்!

காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில்.

அங்கே உறையும் சிவனாரின் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மனின் பெயர் தையல்நாயகி அம்மன். ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம்.

கோயில் அமைப்பு: நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

செவ்வாயின் நாயகன் தனக்கு ஏற்பட்ட தொழுநோயைப் (Leprosy) போக்கிக்கொள்ள இக்கோவிலில் உறையும் சிவனாரிடம் அடைக்கலம் அடைந்ததாகவும், நோய் நீங்கப்பெற்று உய்வு பெற்றதாகவும் வரலாறு. இறைவனுக்கு இங்கே வைத்தியநாதன் என்று பெயர்வந்ததற்கு முக்கிய காரணமே அந்நிகழ்வுதான்! அதை மனதில் கொள்க!

வரலாற்றை எல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் பதில் சொல்ல ஆளில்லை. ஆகவே அப்படியே நம்ப வேண்டும். அல்லது கடாசிவிட்டு நடையைக் கட்ட வேண்டும். அதை உங்கள் விருப்பம்போல் நீங்கள் செய்துகொள்ளலாம்.

இக்கோவிலில் உறையும் சிவபெருமானை மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே நோய்களால் வாடுபவர்கள், இத்தலத்திற்கு சென்று வரலாம்.

திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு, தன் சகோதரியின் அறிவுரையின் பேரில் இக்கோவில்லுக்குச் சென்று வைத்தியசாமி நாதர் என்னும் பெயர் பெற்ற சிவனாரை வணங்க, அதிசயத் தக்க முறையில் வயிற்றுவலி நீங்கிக் குணம் பெற, அன்றிலிருந்து அவர் இக்கோவிலின் அதீத பக்தரானார் என்பதும் வரலாறு!

இங்கே குமரக் கடவுளுக்கு (அதாங்க, நம்ம வேலனுக்கு) அருமையானதொரு சந்நிதானம் உள்ளது. இங்கே உறையும் வேலனுக்கு செல்வமுத்துக்குமாரசுவாமி என்று பெயர்.

இங்கே கோவிலின் உட்புறம் உள்ள சித்த அமிர்ததீர்த்தம் என்னும் குளம் சக்தி வாய்ந்தது என்பது வரலாறு. எண்ணற்ற மகான்கள் நீராடிய பெருமையை உடையது. இராமபிரானே இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்கே நீராடிச் சென்றதாக ஒரு தலவரலாறும் உள்ளது.

வைத்தியத்திற்கு அதிபதியான தன்வந்திரி நாதருக்கும் இங்கே சன்னிதானம் உள்ளது.

கோவிலின் சிற்பங்களிலும், தூண்களிலும் , மண்டபங்களிலும் பல்லவர்காலச் சிற்பக்கலையின் சிறப்பைக் காணலாம்.

இக்கோவில்லுக்கு பக்தர்கள் காலம் காலமாக அளித்த தானங்களாலும், கொடைகளாலும், ஏராளமான செல்வமும், நிலங்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இப்போது அதன் நிலைமை (நிலங்களின் நிலமை - குத்தகைதாரர் களுக்கு வெளிச்சம்) சரியாகத் தெரியவில்லை!

சென்னை மைலாடுதுறை புகைவண்டிப்பாதையில், இக்கோவிலுக்கான நிறுத்தமும், இரயில் நிலையமும் உள்ளது. சிதம்பரத்தில் இருந்தும், மைலாடுதுறையில் இருந்தும் நிறைந்த பேருந்து வசதிகளும் உள்ளன. இந்த ஊரில் ஏராளமான தர்ம சத்திரங்களும் தங்கும் விடுதிகளும் உள்ளன.

இன்னொரு சிறப்பு. ஒரு காலத்தில் நாடி ஜோதிடம் என்னும் ஏட்டு ஜோதிடத்திற்குப் பெயர் பெற்ற ஊர் இது. உங்கள் கட்டைவிரல் ரேகையை மட்டும் கொடுத்தால் போதும். உங்கள் ஜாதகத்தை எழுதிக் கொடுத்து விடுவார்கள். ஓலைச் சுவடிகளை வைத்து அசத்தலாக உங்கள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்திற்கும் பலன்களைச் சொல்லிவிடுவார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஓலைச் சுவடிகளை வைத்திருந்த குடும்பங்களுக்குள் ஏற்பட்ட வாரிசுச் சண்டைகளில் ஓலைச் சுவடிகளையும் பங்கு வைத்துக் கொண்டு விட்டதாகவும், அதனால் முழுமையான பலன்களைச் சொல்ல இப்போது ஆட்கள் இல்லை என்பதும், சென்று, பார்த்து வந்தவர்கள் சொல்லும் குறைபாடு. அதையும் நம்பத்தான் வேண்டியதாக உள்ளது. உண்மையான அனுபவம் வேண்டுபவர்கள் ஒருமுறை சென்று பார்த்துவந்து தங்கள் அனுபவத்தைச் சொல்லலாம்.

சிதம்பரத்தில் இருந்து இந்த ஊரின் தூரம் 22 கிலோ மீட்டர் (தெற்கே)
மைலாடுதுறையில் இருந்து 16 கிலோ மீட்டர் (வடக்கே)
தஞ்சையில் இருந்து 110 கிலோ மீட்டர் (வடக்கே)

கோவிலின் அருகில் ஜடாயு குளம் என்னும் தீர்த்தம் உண்டு. இராமாயண காலத்தில், இராவணனால் கொல்லப்பட்ட ஜாடாயுவின் அந்திம கிரியைகளை இராமரும், அவருடைய சகோதரரும், இத்தலத்தில் செய்ததாகவும். அதன் பொருட்டே இந்தக் குளம் அந்த இடத்தில் உருவாக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது.

மிளகு, உப்பு, நாட்டுச்சர்க்கரை முதலியன இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள கொண்டுவரும் நிவேதனப் பொருட்களாகும். நோய் நீங்கப் பெற்று இத்திருக்கோவிலுக்கு வரும் மக்கள் வெள்ளியில் செய்யப்பெற்ற உடல் உறுப்புக்களை இக்கோவிலில் உள்ள உண்டியல்களில் தானமாகப் போடுவது காலம் காலமாக உள்ள வழக்கம்

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் பாடல்கள் பாடப்பெற்ற தலம் இது!

திருவிழாக்காலம்: கார்த்திகை மாதம், தைமாதம், பங்குனி மாதங்களில் கோவில் விழாக்கோலம் பூணும். ஷஷ்டித் திதி நாட்களில் முத்துக்குமாரசாமி சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் உண்டு.

ஜாதகத்தில் செவ்வாய் வலுவில்லாமல் இருந்து, செவ்வாய் திசையை எதிர்கொள்ள இருப்பவர்கள், இந்த ஸ்தலத்திற்கு ஒரு முறை சென்று வருவது நன்மை பயக்கும். என்ன, தீமைகள் நீங்கி விடுமா? தீமைகள் விலகாவிட்டாலும் அவற்றை எதிகொள்ளும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். அதாவது தாக்குப்பிடிக்கும் சக்தி கிடைக்கும்! அது போதாதா?

எங்கள் பகுதி மக்களுக்கு இக்கோவிலின் மேல் ஆதீத பக்தி உண்டு. சாதாரணமாக ஒரு மாத்திரை அல்லது மருந்தை வீட்டில் இருந்தபடியே உட்கொள்ளும் போதுகூட வைத்தியநாதா’ என்று சொல்லிவிட்டுத்தான் உட்கொள்வார்கள். அதை நான் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ஆகவே நோயில்லாப் பெருவாழ்வு வாழ அனைவரும் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு, நம்பிக்கையோடு சென்று, அங்கே உறையும் இறைவனையும், தேவியையும், செவ்வாய் பகவானையும் வணங்கி வாருங்கள்.

’அந்த’ நம்பிக்கைதான் நோய்க்கான முதல் மருந்து!

ஆமாம், நமக்கு நோய் தீரும் எனும் நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் சிகிச்சை அல்லது முயற்சிதான் நோய்க்கான முதல் மருந்து!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.5.10

அங்கேயும் யுத்தம்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அங்கேயும் யுத்தம்!

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
- கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++
கிரக யுத்தமும், யோக பலன்கள் கிடைக்காமல் போவதற்கான காரணங்களும்!

ஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை அல்லது சிக்கல்களைக் கொடுக்ககூடியது.

Astrology is a deep and complicated science.Difficult to analyze or understand

ஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று தோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான். அவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல்
அதாவது பயன் தராமல் போயிருக்கும்.

இருந்தால் பலன் தரவேண்டும்! ஏன் தரவில்லை?

இருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள் ஜாதகத்திலேயே இருக்கலாம்.

ஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று தெரியவரும்.

அதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக் குறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

முடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்?

இன்றையப் பாடம் அதைப் பற்றியதுதான். அதாவது கிரகங்களின் முடக்கடியைப் பற்றியது.
+++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு உதாரண ஜாதகம் கொடுத்துள்ளேன்.

ஜாதகன் 13.10.2009 அன்று காலை 6:30 மணிக்குச் சென்னையில் பிறந்தான். ஆமாம், அப்படி வைத்துக் கொள்ளுங்கள்

கடகம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளில் 9 கிரகங்களும் அடைபட்டுள்ளன.

லக்கினம் துலாம். லக்கினாதிபதி சுக்கிரன் நீசம். அதுவும் 12ஆம் வீட்டில் மறைவு.
ஆனால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். எப்படி? சுக்கிரன், உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்தைப் பெற்றுள்ளான். அதோடு லாபாதிபதி சூரியனுடன் சேர்ந்திருக்கிறான். சூரியனும் புதனும் சேர்ந்ததால் புத ஆதித்ய யோகமும் உள்ளது.

துலா லக்கினத்திற்கு யோககாரகனான சனியும் அங்கே உள்ளார்.எல்லாம் உள்ளது முழு யோகமா? இல்லை ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் உள்ளதால், முதலில் கிரக யுத்தம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------
கிரகயுத்தம் என்றால் என்ன?

அதை முதலில் பார்ப்போம்!
.......................
இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.
சூரியன், சந்திரன், ராகு & கேது ஆகிய கிரகங்களுக்கு இந்த விதி இல்லை! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள். அதை மனதில் கொள்க!

Planets defeated in the Planetary war. Planetary war occurs when two planets are in conjunction within one degree. The victor is the planet whose longitude is less. The defeated one is the planet whose longitude is more.

A planetary war, or graha yuddha, occurs in a chart when two planets (other than the Sun, Moon, Rahu. and Ketu) are within 1 degree of one another. This is a controversial topic in astrology because there are conflicting methods given, in classic texts, for determining which planet wins the war and what the effects are.
++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகத்தில்:
கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் உள்ளன. அதில் சனியும், சுக்கிரனும் ஒரு பாகைக்கும் குறைவான நிலையில் உரசிக் கொண்டு கிரக யுத்தத்தில் உள்ளன.

சூரியன் 177.16.55
புதன் - 161.43.09
சனி - 155.28.42
சுக்கிரன் - 155.05.38

சுக்கிரன் - சனி இருவரின் யுத்தத்தில், இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை, சுக்கிரன் வெற்றி பெறுவார்.

அதாவது லக்கினாதிபதி வேற்றி பெறுவார். யோககாரகன் சனி தோற்றுவிடுவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்காமல் போவதற்கான கிரக லைப்பாடுகள் அல்லது அமைப்புக்கள் சில உள்ளன. அவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்

1. நீசமான கிரகங்கள்
2. யுத்தத்தில் தோற்ற கிரகங்கள்
3. மறைவிடங்களில் மாட்டிக் கொண்ட கிரகங்கள்
4. பாவ சந்திப்பில் சிக்கிக்கொண்ட கிரகங்கள்
5. வக்கிரம் பெற்ற கிரகங்கள்
6. அஸ்தமனத்தில் அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் கிரகங்கள்
7. ராகு அல்லது கேதுவின் கூட்டணியில் சேர்ந்துள்ள கிரகங்கள்
8. அஷ்டகவர்க்கத்தில் 3ம் அதற்குக் கீழான பரல்களையும் பெற்று வலிமை இழந்து தவிக்கும் கிரகங்கள்
9. 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதியாக நேர்ந்துவிட்ட கிரகங்கள்
-------------------------------------------
1) Debilitated Planets
2) Defeated Planets ( defeated in planetary war )
3) Planets in inimical houses.
4) Planets in Bhava Sandhis
5) Retrograde Planets
6) Combust Planets
7) Planets associated with the North Node
8) Vibala Planets ( planets devoid of strength )
9) Lords of 6, 8 & 9 houses
All these works against yogas
இவைகள் ஜாதகனின் யோகத்திற்கு வேட்டு வைக்கும் நிலைப்பாடுகள் அல்லது அமைப்புக்கள்.
-----------------------------------------------
1. நீசமான கிரகங்கள் (Debilitated Planets) நீசமான கிரகங்கள் நன்மையான பலனைத் தராது. (நவாம்சத்தில் நீசம் கேன்சலாகியுள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்)

2) யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் (Defeated Planets) இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.

3. மறைவிடங்களில் மாட்டிக் கொண்ட கிரகங்கள் 6,8,12ஆம் வீடுகளில் மாட்டிக் கொண்ட கிரகங்கள் அவைகள் தீய இடங்கள் Planets in Inimical Houses இந்த இடங்களில் உள்ள கிரகம் வலிமை இல்லாமல் இருக்கும் வலிமை இல்லாமல் இருப்பதால் நன்மைகளைச் செய்யாது. அதாவது ஒரு கிரகம் அமரும் 6,8, 12ஆம்
இடத்து அதிபதிகள் வலிமையாக இருந்தால், அதாவது, ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் அந்தத் தீமைகள் கேன்சலாகிவிடும்.

ஜாதகன் நன்மைகளைப் பெறுவான்

4. பாவ சந்திப்பில் அதாவது ராசி சந்திப்பில் இருக்கும் கிரகங்கள் (Borderல் இருக்கும் கிரகங்கள். மேஷம் 30 பாகையில் முடிந்து ரிஷபம் 30.01ல் ஆரம்பிக்கும். 29.95 பாக முதல் 30.5 பாகை வரை உள்ள இடத்தில்
இருக்கும் கிரகம் பாவ சந்திப்பில் உள்ள கிரகம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கிரகத்தை வெறும் பார்வையில் வைத்துக் கொண்டு, பலன் சொல்வது தவறாகி விடும் If you are born on a border between 2 rasis, you will incorporate the energies of both the rasis (Signs)

5. வக்கிரகதியில் உள்ள கிரகங்கள்:
சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது.
தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.

ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும்.

6. அஸ்தமனம் ஆகிவிட்ட கிரகங்கள்.Combust Planets சூரியனுடன் 10 பாகைக்குள் இருக்கும் கிரகங்கள் அச்தமனமாகிவிடும். அஸ்தமனமான கிரகத்தால் ஜாதகனுக்கு பலன் கிடைக்காது.

Planets when they become proximate to the Sun, become combust. Combust planets are weak.

7. ராகுவுடன் 12 பாகைகளுக்குள் சேரும் கிரகமும் மெலிவாக இருக்கும். அதாவது வலிமை இல்லாமல் இருக்கும். அதனால் ஜாதகனுக்கு உரிய நன்மைகளைச் செய்ய முடியாது.

Planets in conjuction with Rahu, is considered weak. Conjuction means the planet should be within 12 degrees of the other planet.

8) 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் தீயவர்களாகிவிடுவார்கள். அந்த இடத்தின் அதிபதியானால், அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள்

The lords of 6, 8 & 12 are malefics by ownership.
The 6th lord brings diseases & problems from enemies,
The 8th lord brings health hazards and
The 12th lord brings uncontrollable expenditure.
===============================================================
இதற்கு மேல் எழுதினால் ஓவர் டோஸ் ஆகிவிடும். ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இவற்றை வைத்து உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசிக் கொள்ளூங்கள்.எனக்கு அனுப்பி, இவற்றை வைத்து பல கேள்விகள் கேட்டு, பதில் அளிக்கும்படி கேட்காதீர்கள்.

உங்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுத்தருவது மட்டுமே என் வேலை! மீனைப் பிடித்து வறுத்து, மசாலாத் தடவி வேளா வேளைக்குத் தருவது என் வேலை அல்ல! அதற்கு உரிய நேரமும் எனக்கு இல்லை.

கடந்த பாடங்களில் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு பாடத்தையும் அனுப்பியவுடன், 10 முதல் 20 வரை மின்னஞ்சல்கள் உடனே எனக்கு வரும். அவைகள் அனைத்துமே, தங்களுடைய ஜாதகத்தை இணைத்து அல்லது
வெறும் பிறந்த நாள், பிறந்த நேரத்தைக் குறிப்பிட்டு, அதில் பாடத்தில் குறிப்பிட்ட சாதகம் அல்லது பாதகம் இருக்கிறதா? எந்த அளவு இருக்கிறது? என்று விதம் விதமான கேள்விகளைக் கொண்டதாக இருக்கும்.

அத்தனை பேர்களுக்கும், அவர்களைத் திருப்திப்படுத்த, அவர்களுடைய ஜாதகத்தை எனது கணினியில் கணித்து, அலசி ஆராய்ந்து பதில் சொல்வது என்பது- அதுவும் ஒவ்வொரு பாடத்திற்கும் பதில் சொல்வது என்பது நடக்கக்
கூடிய காரியமா சொல்லுங்கள்?

ஆகவே யாரும் உங்களுடைய ஜாதகத்தை வைத்துக் கேள்விகளைக் கேட்காதீர்கள். நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளூங்கள். பொறுமையாகப் படித்துக் கொண்டே வந்தால், ஒரு நாள் அனைத்தும் உங்களுக்குப்
பிடிபடும். அப்போது நீங்களே ஒரு ஜோதிட வல்லுனர் ஆகி விடுவீர்கள். உங்களால் பலருக்கும் பலன் சொல்ல முடியும்!

அடியவன் பாடம் நடத்தும் நோக்கமும் அதுதான்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

10.5.10

தலைகீழான விளைவு என்றால் எப்படி இருக்கும்?


------------------------------------------------------------------------
தலைகீழான விளைவு என்றால் எப்படி இருக்கும்?

"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்!"
-கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++
விபரீத ராஜயோகம்

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் அதை விபரீதம் என்போம்.

அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

இன்று அதை விவரித்து எழுதியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------
ராஜயோகம் என்பது அதிகாரம் மற்றும் உயர்வான நிலைக்கு ஜாதகனை உயர்த்தும் யோகம் ஆகும். கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகள் தங்களின் சேர்க்கையால் (கூட்டால்) அல்லது பார்வையால் உருவாக்கிக் கொடுப்பது ராஜயோகம் ஆகும். அதற்குச் சிறந்த உதாரணம் ”தர்மகர்மாதிபதி யோகம்”
9ஆம், 10ஆம் அதிபதிகளின் சேர்க்கையால் அந்த யோகம் ஏற்படும். அவர்களின் பரிவர்த்தனையாலும் அது ஏற்படும். அதனால் ஜாதகனுக்கு அதீத செல்வமும், செல்வாக்கும், பதவியும் அதிகாரமும் கிடைக்கும்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual reception (parivartan), or mutual aspect, the planetary combination as Dharma Karma Adhipati Yoga. As soon as a Raja yoga of this prominence shows up in a chart, it is natural to anticipate obtaining lots of wealth and power.

மேலே குறிப்பிட்டுள்ளது வழக்கமான ராஜ யோகத்திற்கு உதாரணம்! ஆனால் விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்காசர்மா அல்லது பிரியாமணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக் கூத்தாடி, சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்காசர்மா அல்லது பிரியாமணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ் அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?
------------------------------------------------------------------
The vipareeta rajayogas are somewhat different from the normal rajayogas as mentioned above.
These rajayogas are formed due to downfall of someone, based on which the native's fortune is reversed. The

downfall can be of an enemy or a someone near to the native, however the combinations are somewhat different

for both circumstances.

இந்த விபரீதம் என்னும் சொல், மாறுபட்டு வருவதைக் குறிக்கும். The term vipareeta imply reversal of something ஒன்றின் வீழ்ச்சி, அல்லது ஒருவரின் வீழ்ச்சி, உங்களுக்கு சகாயமாகிக் கிடைப்பதுதான் விபரீத ராஜயோகம்.

”அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்பக் காலியாகும்?” என்று கிராமங்களில் கூறுவார்களே, அதை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின்
திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.
---------------------------------------------------------------------------------
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------
கூடுதல் தகவல்கள்.
மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்

the main combinations for Vipareeta raja yoga

1.
Two dusthana planet conjoing in a dusthana. The precondition of a strong VYR of this nature is that the lords should be weak. When this happen the significations of the dusthana suffer and the native gains from it. This mostly happens with the down fall of some of the native's enemies. Moreover the relations indicated by the planets

2. Two dusthana lords strongly placed in a kendra (or trikona) and no other planet conjoin them (in such case there will be transfer of power to the third planet, whereby the karakatwa of the third planet will gain). Here the planets involved should be strongly placed unlike the 1st principle. In this case if the atmakaraka or the lagna has association with VR Yogakaraka, the native will himself gained otherwise the native will rise with rise of others.

3. If the Karaka of duthanas, Saturn is placed in a dusthana-weak (or kendra - strong) as a yogakaraka (Taurus, Libra Lagna). There are other variations of this yoga; a dusthana lord placed in another dusthana will constitute a VRY. The placement of the dusthana lord in their own house can not constitute VRY, That can only if the dusthana lord is conjoined with some other dusthana lord. The dusthana lords placed in their own house are some other yogas!

4.
Vipareeta Rajyoga (VRY) is caused by the conjunction of the lords of Dusthana (evil houses 3rd, 6th, 8th & 12th ). Since the lords of the evil houses conjoin, they end up damaging each other and the native benefits. Thus, VRY implies coming to power/ gains due to the downfall or death of another. This can bring sudden legacies, rapid rise to power and position and other such gains that are basically, not sustainable over a long period of time.

5
The important condition for the fructification of this Rajyoga is that the planets involved should either- (a) be weak by placement in a Dusthana (evil houses 3rd, 6th, 8th & 12th) or in debility in Rasi/Navamsa or (b) be very strong in Kendra/Trikona and simultaneously transfer the power to the Lord of Lagna (or Atmakaraka) by conjunction or aspect. Unless this transfer of the power of the VRY occurs, the native himself may not rise but will benefit due to the rise of another person.

6
The results of the situations of VRY in the two cases is grossly different. In the first case, the native rises due to the death/ downfall of an enemy whereas in the latter situation the native rises after the death/downfall of an ally or friend. The significations of the planets conjoining the VRY maybe destroyed in this process.

7
VRY from Saturn
It is evident from the above that the giver of Vipareeta Rajyoga is Saturn, more so since he is the natural significator of the Dusthana. Thus, VRY can also be caused if Saturn becomes a Yogakaraka (for Taurus & Libra Lagna) and is placed in a Dusthana in debility/weak. However, it is important that other planets should not conjoin this, else their significations could be destroyed.

Source: Varahimihira

வாழ்க வளமுடன்!

5.5.10

நவக்கிரகக் கோவில்கள் - பகுதி இரண்டு!

சந்திர பகவான்

திங்களூர் கோவில்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவக்கிரகக் கோவில்கள் - பகுதி இரண்டு!

நவக்கிரகக் கோவில்கள் வரிசையில் சென்ற வாரம் சூரியனார் கோவிலைப் பற்றி எழுதியிருந்தேன். இந்த வாரம் சந்திரனுக்கு உரிய கோவில் இருக்கும் திங்களூரைப் பற்றி எழுதியுள்ளேன்! படித்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்!.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்திலே உள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள் அவைகள். அதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அவைகள் இடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் குடந்தையில் (தற்போதைய கும்பகோணம்) நிறைய ஜோதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனைப்படியும், ஆகம விதிகளின் படியும், மன்னர்கள் கோவில்களை அமைத்ததாக வரலாறு.

நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது.

அசட்டுக் கேள்விகளைத் தவிர்த்து, நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
திங்களூர்.

சந்திரனுக்காக உள்ள கோவில் இருக்கும் இடம்.

பெயர்ப் பொருத்தம் நன்றாக உள்ளது பாருங்கள். சந்திரனுக்கு உரிய கிழமை திங்கட்கிழமை. உரிய ஊர் திங்களூர். கும்பகோணத்தில் இருந்து தெற்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறு அருகில் உள்ளது இந்த ஸ்தலம். திருவையாற்றில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பச்சை அரிசியும், வெண்மலர்களும், வெண்மை நிறத் துணிமணிகளும் வைத்து வணங்குதற்கு உரிய நிவேதனப் பொருட்களாகும்.

சிவசக்தி தம்பதியர் கைலாசநாதராகவும், பெரிய நாயகியாகவும் கொலு வீற்றிருக்கும் ஸ்தலமாகும். அவர்களுக்குத் தான் கோவிலில் முதலிடம்.. அவர்கள் இன்றி கிரகங்கள் ஏது? அதனால் அவர்களுக்கு முதலிடம் கொடுத்துக் கோவில் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

இக்கோவிலுக்கு சென்று வணங்கி வருபவர்களுக்கு, மன அழுத்தங்களும், துக்கங்களும் குறைந்து சுகமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

பங்குனி மாதப் பெளர்ணமித் திதியன்று சந்திரனின் முழுக்கதிர்களும், இக்கோவிலில் உறையும் சிவனார் மீது விழும்படியாகக் கோவில் அமையப்பெற்றுள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். அது காண்பதற்கு அரிய காட்சியாகும்!

விஷேச காலங்கள்: ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே விஷேசம்தான். பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று சென்று வருவது மிகுந்த பலன் தரும்.

ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பு முக்கியமானதாகும். ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்திருந்தாலும் அல்லது பகைவீட்டில் இருந்தாலும், அல்லது சனி, ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களின் கூட்டணியில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களின் நேரடிப் பார்வையில் இருந்தாலும் அது நன்மையானதல்ல. அந்தக் குறைபாடு உள்ளவர்கள் திங்களூர் சென்று கைலாசநாதரையும், பார்வதி அம்மனையும், சந்திரபகவானையும் ஒரு சேர வணங்கு வருவது அந்தக் குறைபாடுகளைப் போக்கும் என்பது நம்பிக்கை.

நம்பிக்கையோடு சென்று வரலாம். நலம் வென்று வரலாம்!

ஸ்தல வரலாறு:

அப்பூதி அடிகளை அனைவரும் அறிவோம். உபயம். இயக்குனர். A.P.நாகராஜன். அவருடைய திருவருட்செல்வர் திரைப்படத்தில் விரிவான படக் காட்சிகள் உண்டு. அப்பூதி அடிகள் சிறந்த சிவனடியார். 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு, தனது இல்லத்தில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்திற்காக வீட்டுத் தோட்டத்தில் வாழை இலையைக் கொய்து எடுத்துவரச் சென்ற அப்பூதி அடிகளின் மகனை அரவம் ஒன்று தீண்டிவிட பையன் ஸ்பாட் அவுட்! ஆமாம் சிறுவன் இறந்துவிட்டான்.

அப்பூதி அடிகள் இப்படி நடந்துவிட்டதே என்று கண்கலங்கினாலும், மனதைத் திடமாக்கிக் கொண்டு, இறந்த சிறுவனின் உடலை ஒரு பாயில் சுற்றி வீட்டுப் பின்புறம் வைத்துவிட்டு, விருந்திற்கு வரவிருக்கும் நாவுக்கரசரை உபசரிக்கத் தம்மையும், தன் மனைவியையும் தயார் படுத்திக் கொண்டார்.

சிவனின் அருளால், நடந்ததை உணர்ந்த நாவுக்கரசர், சிறுவனின் உடலைக் கைலாச நாதர் கோவிலில் வைத்து, இறைவனைத் தன் பதிகம் ஒன்றைப் பாடி வேண்டிக்கொள்ள சிறுவன் உயிர் பெற்று எழுந்த அதிசயம் அங்கே நிறைவேறியது. பையன் தூக்கம் கலைந்து எழுந்தவனைப்போல எழுந்து நின்றான்.

அந்தப் பதிகத்தை நம்பிக்கையோடு பாடுபவர்களுக்கு, விஷமும் விஷயமில்லாமல் ஆகிவிடும் என்பது இக்கோவில் வரலாறு!

அதுபோல இன்னொரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது. இருந்தாலும் உங்களுடைய தகவலுக்காக அதையும் தந்துள்ளேன்.

தக்‌ஷா பிரஜாபதி என்னும் மன்னன் தன்னுடைய 27 பெண்களையும் சந்திரனுக்கே மணமுடிக்க விரும்பியதாகவும், அவர்களில் ரோஹிணி என்ற பெண்ணை மட்டுமே மணந்துகொள்ள சந்திரன் விருப்பம் தெரிவித்ததாகவும், அதனால் வெகுண்ட மன்னன், சந்திரனுக்குச் சாபமிட, சந்திரன் தன் பொலிவை இழந்தானாம். திங்களூரில் இருந்த கைலாசநாதர் சன்னதியில் சந்திரன் அடைக்கலமாகவிட, சிவனார் சந்திரனின் சாபத்தைப் போக்கி, 15 நாட்கள் படிப்படியாகத் தன் பொலிவை இழந்தாலும், பெளர்ணமியன்று தன் முழுப் பொலிவையும் பெற ஆசீர்வதித்தாராம்.

அதோடு, இங்கே வந்து சந்திரனை வணங்குபவர்களுக்கு, தங்கள் வாழ்வின் குறைகள் நீங்கி, பொலிவைப்பெறவும் ஆசி வழங்கினாராம். தேய்பிறைச் சந்திரன் இருக்கப் பிறந்த ஜாதகர்களுக்கு இந்த ஸ்தலம் ஒரு சிறந்த பரிகாரத்தலமாகும். கதை எப்படியோ போகட்டும். இந்தக் கடைசி வரியை மட்டும் மனதில் வையுங்கள்

வழிபடும் மூறை:

இங்கே உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்ததில் (குளத்தில்) நீராடி, முதலில் கைலாச நாதரையும், பிறகு பெரிய நாயகி அம்மனையும் வணங்கிவிட்டுப் பிறகு சந்திர பகவானை வணங்க வேண்டும். பச்சரிசியுடன் சர்க்கரையைக் கலந்து வைத்து சந்திர பகவானை வணங்குவது நலம். வெள்ளை அரளிப்பூவும், வெண் ஆடைகளும் உரிய நிவேதனப் பொருட்களாகும்.

அதோடு நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்கள் அனைத்தும் நீங்கும்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

4.5.10

Short cut - குறுக்கு வழி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short cut - குறுக்கு வழி!

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
எங்கே மனிதன் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
---கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------
Short cut route to know the outcome of Dasa/Bukthi periods
தசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி

எப்போது தீரும் என் கஷ்டம்?

எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி அதுதான்.

அந்தஸ்து, பொருளாதார மேன்மை, அன்பான குடும்பச்சூழ்நிலை என்று எல்லாவற்றையும் தாண்டி எல்லோருடைய மனதிலும் ஒரு கவலை அல்லது கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.

உதாரணத்திற்குச் சிலருக்குத் தன் குழந்தைகளை வைத்துக் கவலை; சிலருக்குச்
குழந்தை இல்லாத கவலை.

சிலருக்கு வயதாகியும், இன்னும் திருமணமாகவில்லையே எனும் கவலை. சிலருக்கு இளம் வயதிலேயே திருமணமாகியும், கனவு கண்டபடி அல்லது எதிர்பார்த்தபடி மனைவி அமையவில்லையே எனும் கவலை. அல்லது கணவன் அமையவில்லையே எனும் கவலை

சிலருக்கு நல்ல வேலை கிடைத்தும், எதிர்பார்த்த ஏற்றம் இல்லையே எனும் கவலை. சிலருக்கு சரியான/ தகுதியான வேலை கிடைக்காத கவலை.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

காலதேவன் 700 கோடி மக்களுக்கும், அதைவிட அதிக எண்ணிக்கையில் பிரச்சினைகளை உருவாக்கி வைத்துள்ளான். எந்த சூப்பர் கணினி அல்லது சர்வரில் வைத்துக்கொண்டு அதைச் செயல்படுத்துகிறான் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் பல வைரஸ்களை உருவாக்கி அல்லது ஸ்பைவேர்களை உருவாக்கி அதை முடக்க இந்நேரம் முயற்சித்திருக்க மாட்டோமா ?:-))))
--------------------------------------------------------------------------------
பாடத்தின் முதல் பகுதி இங்கே உள்ளது. அதைப் படித்திராதவர்கள், படித்துவிட்டு வந்து, இதைப் படிக்கவும். அதன் தொடர்ச்சிதான் இது!

இரவு, பகல் போல,இன்பமும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியவையாகும்.

எப்போது இன்பம் வரும், எப்போது துன்பம் வரும் என்பதை அறிந்து கொள்ள
ஜாதகத்தில் ஒரு வழியிருக்கிறது. சுலபமான வழி அது.

அடுத்த பாடம் அதுதான் என்று வகுப்பறையில் கூறியிருந்தேன். அதை இப்போது
தருகிறேன்.
---------------------------------------------------------------------------------------
பலன்களைத் தருவதில் தசா/புத்தியின் பங்கு முக்கியமானது.

கோச்சாரப் பலன்களவிட தசாபுத்திப் பலன்களே முக்கியமானது. முதன்மையானது.

தசாபுத்தி வலுவாக இருந்தால், கோச்சாரம் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.

தெருவில் வி.வி.ஐ.பியின் வாகனங்கள் பைலட் வண்டியின் சைரன் ஒலிக்க
வரும்போது நாம் ஒதுங்கிக் கொள்கிறோம் இல்லையா? அப்படி கோச்சாரமும்
ஒதுங்கி வழிவிட்டுவிடும்
-----------------------------------------------------------------------------------
தசாபுத்தி பலன்களைப் பற்றி முன்பு எழுதியுள்ளேன். புலிப்பாணியின் பாடல்கள்
அசத்தலாக இருக்கும். அதை வைத்து, தற்சமயம் நடக்கும் தசா புத்தி, வரப் போகும் தசா புத்தி, அவை எத்தனை காலத்திற்கு இருக்கும், எப்படி இருக்கும் என்று விவரம் அறிந்து கொள்ளலாம். அது நம்பகமானது.

ஒருவருக்கு ராகு தசை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ராகு திசையின் காலம் 18 ஆண்டுகள். அந்தப் பதினெட்டு ஆண்டுகளுமே துயரமானதா? இல்லை.
சனிதிசையின் கால அளவு 19 ஆண்டுகள்.அந்தப் பத்தொன்பது ஆண்டுகளுமே துயரமானதா? இல்லை.

ஒரு திசையைக் கையில் எடுத்துக்கொண்டு விரிவாகப் பார்ப்போம்.

சனி தசை - 19 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
இம்மூன்றும் தீய கிரகங்களின் தசை/புத்திகள் ஆகும்.
இந்த மூன்றில் ஒன்றையாவது மனிதன் தன் வாழ்வில் கடந்துதான் ஆகவேண்டும்
சிலருக்கு இரண்டைக் கடக்கும்படி அமைந்துவிடும்.

மாதிரிக்கு சனி தசையையே கையில் எடுத்துக்கொள்வோம்
அதன் கால அளவு 19 ஆண்டுகள்.
அதில் உட்பிரிவான புக்திகள், மற்றும் புக்திகளின் உட்பிரிவான அந்தரங்கள் உண்டு
Majaor Dasa > Sub period > Divisions in the sub - period > Total 81 different antara periods
இந்த 81 (9X9) அந்தரகாலமும் நமது ஜாதகத்தில் உள்ள அதனதன் நாதனின் வலுவை
வைத்து மாறுபட்ட பலன்களை உடையதாக இருக்கும்.
கிரகங்களின் வலுவை அதனதன் சுயவர்க்கப்பரல்களை வைத்து எழுதிக்கொள்ளூங்கள்.
எழுதிக்கொண்டீர்களா?
இப்போது பாருங்கள்
பரல்கள் 5ம் அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால் அந்த காலகட்டம் (That period)
நன்றாக இருக்கும். 4 இருந்தால் சராசரியாக இருக்கும். 3 அல்லது அதற்குக் கீழாக இருந்தால்
நன்றாக இருக்காது. உங்கள் மொழியில் சொன்னால் மோசமான விளைவுகளை உடையதாக இருக்கும்

7 or 8 Paralkal -Excellent
6. Better
5. Good
4. Medium
3. Bad
2 & 1 Worst
என்று வைத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
இந்த அந்தர காலத்தை வைத்து துல்லியமாக உங்களுக்கு நல்ல நேரம் எப்போது? கெட்ட நேரம் எப்போது என்று யாரையும் கேட்காமலேயே உங்களுக்கு நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சனி தசையின் 19 ஆண்டு காலமும் ஒரே மாதிரி இருக்காது. அதன் உட் பிரிவிற்குத் தகுந்தது போல மாறுதல்களான பலன்களைத் தரக்கூடியது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.மற்ற தசைகளுக்கும் இந்தக் கணக்கின்படியே அல்லது இந்த methodன் படியே பலன்களை அறிந்து கொள்ளுங்கள்

நன்றாகப் புரிந்ததா?
நன்றாகப் பிடிபட்டதா?
ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்

.
நான் எனது சொந்த மற்றும் வியாபார அலுவல்களுக்கு இடையே பாடங்களை நடத்திக்கொண்டிருக்கிறேன். அதை மனதில் கொள்க!நான் முழுநேர ஜோதிடனுமல்ல; முழு நேர எழுத்தாளனுமல்ல. அதையும் மனதில் கொள்க!
----------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

இது மீள் பதிவா? என்று இரண்டொருவர் கேட்டுள்ளனர். மீள் பதிவல்ல! மின்னஞ்சல் பாடங்களில் நடத்தியதைத் தொடர்ந்து வகுப்பறையில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி ஆறு பாடங்களைப்
பதிவிட்டுள்ளேன். இது 7வது பாடம். இன்னும் ஆறு பாடங்கள் இருக்கின்றன.

வகுப்பறையில், மின்னஞ்சல் வகுப்பில் உள்ளதைப்போல இரண்டு மடங்கு எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டுத்தான் இதை வகுப்பறையில் பதிவிட்டுவருகிறேன். இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்காது. காரணம் நேரமின்மை. இனி பதிவுகள் அனைத்தும் வகுப்பறையிலேயே வரும்.

வாழ்க வளமுடன்!

3.5.10

Back Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Back Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை!

"எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்
நான்வாழ யார் பாடுவார்?"
---கவியரசர் கண்ணதாசன்

பத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல் Tenth House - A glance with Ashtakavarga

நீங்கள் நன்றாக வாழ்வதற்கு நவக்கிரகங்கள் பாடும் பாட்டுத்தான் முக்கியம். லக்கினாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி ஆகியவர்கள்தான் இனிமையாக, நம் மனம் மகிழப்பாடுவார்கள்.

1. லக்கினாதிபதி (1st Lord)
2. பூர்வ புண்ணியாதிபதி (5th Lord)
3. பாக்கியாதிபதி (9th Lord - Lord for Gains)
4. லாபாதிபதி (11th Lord - Lord for Profit)

ஆகியோர்கள் ஜாதகத்தில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நன்றாக இருந்தால், ஜாதகனும் நன்றாக இருப்பான்!

Lagna lord, fifth lord, ninth lord & eleventh lord ஆகியோர்கள் பாடினால் வாழ்க்கை முழுவதும் மகிச்சியாக இருக்கும்.

ஆனால் அஷ்டகவர்க்கத்தை எழுதிய முனிவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். ist house, 9th house, 10th house & 11th house ஆகிய வீடுகள் நன்றாக இருந்தால் போதும் என்கிறார்கள். நன்றாக இருப்பது என்பது என்ன?

அந்த வீடுகள் நான்கிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும். இருந்தால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். மூடி வைத்துவிடலாம். ஜாதகன் எல்லா நலன்களையும் பெற்று, வசதியாக வாழ்வான். அவன் காதில் எப்போதும் இளையராஜாவின் அசத்தலான பின்னணி இசை (BGM) ஒலித்துக் கொண்டிருக்கும். சின்னக்குயில் சித்ரா அல்லது சாதனா சர்க்கத்தின் ”லல லல லல் லல்லா” ஒலித்துக் கொண்டு இருக்கும்.

அப்படி இல்லையென்றால் ‘அசதி’ அதிகமாக இருக்கும். அசதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். நான் எதற்காக அதை விவரிக்க வேண்டும்?

சின்ன வயதில் உன் வாழ்க்கையைப் பார்க்காதே, நாற்பது வயதில் பார்; வாழ்க்கையின் அர்த்தம் பிடிபடும் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.

90% மனிதர்கள் அந்த 40வது வயதில் தங்கள் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுத்துவிடுவார்கள். அதற்குக் காரணம், அடிக்கடி எட்டிப் பார்க்கும் அசதி!
++++++++++++++++++++++++++++++++++++
வேறு ஒரு கோணத்தில் பார்த்தீர்கள் என்றால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பணம்தான் பலருக்கும் பிரச்சினை யாக இருக்கிறது.

அதீத பணம் இருந்தால், 75% பிரச்சினைகளைத் தட்டி எறிந்து விடலாம். அதுவும் சொந்தப் பணமாக இருந்தால் மட்டுமே, யாரையும் கேட்காமல் அப்படிச் செய்ய முடியும்.

சொந்தப் பணத்திற்கு இரண்டு வழிதான் உண்டு. ஒன்று நல்ல வேலையில் இருக்க வேண்டும். அல்லது நல்ல தொழில்/நல்ல வியாபாரம் அமைந்திருக்க வேண்டும்

தில்லி செளத் ப்ளாக்கில் உள்துறை அமைச்சகத்தில் பெரிய வேலை அல்லது இந்தியன் ரயில்வேயில் Joint Secretary லெவலில் வேலை அல்லது அம்பானி, டாட்டாக்களிடம் பொறுப்பான வேலை என்றால் எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள்.

நோக்கியா செல் போன்களுக்கு நீங்கள்தான் தேசிய விநியோகஸ்தர் அல்லது இங்கிலாந்தின் லீவர் கம்பெனி அல்லது அல்லது ஜப்பானின் மிட்சுபிஷி கம்பெனிக்கு நீங்கள்தான் இந்திய விநியோகஸ்தர் என்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்?

ப்ளாக் படிப்பதற்கும், ஜோதிடப் பாடம் படிப்பதற்கும் நேரம் இருக்குமா? அல்லது இந்த வாத்தியாரைத்தான் தெரியவருமா?:-))))
----------------------------------------------------------------------------
ஜாதகனின் உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றிற்கான இடம் பத்தாம் வீடு. Tenth house is the house of profession

அது நன்றாக இருந்தால் நல்ல வேலை, படித்து முடித்தவுடன் வேலை, வேலையில் அடுத்தடுத்து உயர்வு, கைநிறைய வருமானம் என்று எல்லாம் கிடைக்கும். எல்லாம் அம்சமாக இருக்கும்.

பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, கர்மகாரகன் சனி அமர்ந்திருக்கும் வீடு ஆகியவற்றில் 30ம் அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்களும் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால்?

திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வதைப் போல (பாடலில் என்ன குறை இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி குறைத்துக் கொண்டு கொடுங்கள்) அந்த மூன்று வீடுகளில் எங்கெங்கே குறைகள் இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி குறைவாகத்தான் பலன்கள் கிடைக்கும்.

அதேபோல, அந்த வீடுகளில், ஏதாவது ஒரு வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தாலும், பத்தாம் வீட்டு அதிபதி, கர்மகாரகன் சனி ஆகிய இருவரும் தங்கள் சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சரி எப்போது கிடைக்கும்?

அங்கேதான் சிக்கல்!

அந்தந்த கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும்.

உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் இருந்தால். அது முடியும்வரை தாமதப்படும். அது எப்போது முடியும்? லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கின்றனவோ, அந்த எண்ணிக்கையில் உள்ள வயது வந்தவுடன் தோஷம் காலாவதியாகும். பொதுவாக 30 வயதிற்கு மேல் தோஷமே யோகமாக மாறும். அப்போது இரட்டிப்பாகக் கிடைக்கும்.

வேலைக்குச் சேருகின்ற வயதில் ஏழரைச் சனி துவங்கிவிட்டால், ஏழரைச் சனி முடிந்த பிறகுதான் அது நடக்கும். அதுவரை சனி உங்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் எனோதானோவென்று பிடிக்காத வேலைகளில் இருக்க நேரிடும். சனியின் பிடியிலிருந்து தப்பித்த பிறகுதான் அம்சமான வேலைகளில் சேர முடியும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். வேலை கிடைக்கும். ஆனால் தகுதிக்குக் குறைவான வேலைகளே கிடைக்கும். வருமானமும், வேலை பார்க்கும் சூழ்நிலையும் திருப்திகரமாக இருக்காது.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

லக்கினாதிபதி, இரண்டாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி ஆகிய மூவரும் தங்கள் சுயவர்க்கததில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடனும் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். அவர்களுக்காக அந்த வேலை கிடைக்கும்.

இளையராஜாவின் மகன் என்பதற்காக யுவன்சங்கர் ராஜாவிற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கிறதல்லவா? அதுபோல அந்த மூவருக்காக நல்ல வேலை அல்லது தொழில் கிடைக்கும்.

அவர்களும் நல்லபடியாக இல்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டு உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜோதிடத்தைப் பொய் என்று சொல்லி விட்டு நீங்களும் செளகரியமாக இருக்கலாம்.

நல்ல வேலை, வேலையில் உயர்வு அல்லது திடீர் சரிவு, இடமாற்றம், வேலை மாற்றம் என்று வேலை சம்பந்தப் பட்ட அனைத்திற்குமே கர்மகாரகன் சனிதான் அதிகாரி. காரகன். உங்கள் மொழியில் சொன்னால் Authority.

அவன் தயவின்றி ஒன்றும் நடக்காது. ஒரே பகலில் உங்களை நாடே திருப்பிப்பார்க்கும்படியும் செய்ய அவனால் முடியும். அதேபோல நொந்துபோகும்படி ஒருவரைக் கீழே தள்ளி விட்டுப்போகவும் அவனால் முடியும். எந்தச் சிபாரிசும் அவனிடம் எடுபடாது.

கீழே உள்ள உதாரண ஜாதகத்தைப் பாருங்கள் தன் கோச்சாரத்தில் 32 பரல்கள் உள்ள தனுசுவிற்கு வந்தபோது, அந்த 2.5 ஆண்டு காலத்தில் ஜாதகனை உயர்விற்குக் கொண்டு போன சனி, இடம் மாறி அடுத்துள்ள மகரத்திற்கு வந்தபோது, பிடித்துத்தள்ளி பதவியில் இறக்கம் கொடுத்த தொடு, தண்ணியில்லாக் காட்டிற்கு மாற்றிவிட்டும் போனானாம். அங்கே 19 பரல்கள்தான் உள்ளன.



சனியின் சுற்றில் ஒவ்வொரு 2.5 ஆண்டுகளுக்கும் இந்தப் பரல்கள் கணக்கின்படி உங்களுக்கு வரக்கூடிய உயர்வு, தாழ்வுகளை நீங்களே அறிந்து கொள்ளலாம். அது முக்கியமான படிப்பினை. ஆகவே நினைவில் வைத்து அதன்படி செயல்படுங்கள். shareகள், இடம் வாங்குதல், வைப்புநிதி முதலீடு போன்றவற்றில் கவனமாக இருக்க இந்த விதி (rule) பயன்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து வரும் 2.5 ஆண்டுகள் நமக்கு நன்றாக இல்லை எனும்போது, பங்குச் சந்தையில் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டாமல் இருக்கலாம் இல்லையா?
-------------------------------------------------------------------------------------
சிலர் படிப்பு, அறிவு என்று எதுவும் இல்லாமல் நல்ல வருமானத்துடன் இருக்கிறார்களே- அவர்களுக்கும் இந்த அஷ்டகவர்க்கக் கணக்குத்தானா?

அவர்களுக்கு வேறு ஒரு கணக்கு இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா பல உதவிகளை வாரி வழங்குகிறதே - அந்தக் கணக்கு.

அவர்கள் ஜாதகங்களில் யோகங்கள் இருக்கும். ராஜ யோகங்கள் இருக்கும். இந்த அஷ்டகவர்க்கக் கணக்கை யெல்லாம் மீறி அவர்களுக்குப் பதவிகள் கிடைக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்!

யோகங்கள் என்னென்ன?

மொத்தம் 200க்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடங்கள் இனிமேல்தான் வரவுள்ளன.

இருக்கிற 200 மூட்டை அரிசியையும் ஒரே நாளில் சமைத்து உங்களுக்குப் பறிமாற முடியுமா? ஆகவே பொறுத்திருந்து அவற்றைப் படியுங்கள்.

இந்தப் பாடம் பற்றிய மேல் விவரங்களுக்கு என்னைக் குடைந்து கேள்விகள் கேட்காமல் பத்தாம் வீட்டைப் பற்றிய பழைய பாடங்களையும், சனியைப் பற்றிய பழைய பாடங்களையும் படியுங்கள். அதைத் தேடி எடுப்பதற்கு கீழே உள்ள சுட்டியைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள். அது நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான கூடுதுறையாரின் கைவண்ணம். அவருக்கு அவருடைய பதிவிலேயே ஒரு தாங்க்ஸைச் சொல்லிவிடுங்கள். Please click here for the link!

பரிகாரம்?

சனிக்கிழமைகளில், காலை நேரத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி சனீஷ்வரனை வழிபடுங்கள்.

கிரகங்களுக்கு, ஜாதிமதங்கள் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் வழிபடலாம். ஆசானுக்கும் ஜாதி மதங்கள் கிடையாது.எல்லோரும் சீடர்களே!:-))))

எங்கே சென்று வழிபட வேண்டும்?

இருக்கும் இடத்திலேயே வழி படலாம். ஒட்டோவாவிலும், டொரொன்டோவிலும், சிகாகோவிலும், நியூஜெர்சியிலும் ஏது சனீஸ்வரன் கோவில்? வீட்டிலிருந்தே வழிபடலாம். இணையத்தில் திருநள்ளாறு சனீஸ்வரனின் படமும், வழிபாட்டுப் பாடலும் கிடைக்கும். வாணிஜெயராமின் பாடல் ஒலிப் பேழையும் இருக்கிறது. அதை அவரவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.

பாடத்தைப் பற்றிய உங்களுடைய feedback வேண்டும். ஒருவரி எழுதுங்கள். அனைவரும் எழுதுங்கள். தனி மடல் வேண்டாம். பதிவில் பின்னூட்ட வசதி உள்ளது அதைப்பயன் படுத்தி எழுங்கள்.

Okayயா?

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

28.4.10

நவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று!


---------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று!

நமது வகுப்பறைக்கு வரும் வாசக அன்பர் ஒருவர், நவக்கிரகக் கோவில்கலைப் பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

இந்தவாரம், துவக்கப்பகுதி. சூரியனுக்கு உரிய கோவிலைப் பற்றி இன்று எழுதியுள்ளேன். வாரம் ஒரு கோவில். இதன் அடுத்த பகுதி அடுத்தவாரம் வரும். பொறுத்திருந்து படியுங்கள்.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்திலே உள்ளன.

ஏன் தஞ்சை மாவட்டத்திலேயே உள்ளன?

சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள் அவைகள். அதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அவைகள் இடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் குடந்தையில் (தற்போதைய கும்பகோணம்) நிறைய ஜோதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனைப்படியும், ஆகம விதிகளின் படியும், மன்னர்கள் கோவில்களை அமைத்ததாக வரலாறு.

நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது.

அசட்டுக் கேள்விகளைத் தவிர்த்து, நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
சூரியனார் கோவில்

நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான சூரியனுக்கான கோவில்

குலோத்துங்க சோழனால், 1100ஆம் ஆண்டு கட்டப்பெற்றது.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருமங்கலக்குடி என்னும் கிராமத்தின் அருகில் உள்ளது.

ஸ்தல மூர்த்தியின் பெயர் ஸ்ரீசூரியநாராயணமூர்த்தி. உடன் ஸ்ரீஉஷா தேவியும், ஸ்ரீபிரத்யுஷ தேவியும் உள்ளார்கள். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி இருக்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.

கோவிலுக்குள் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் கருவறைகள் உள்ளன. (அவர்கள் இல்லாமல் கோவில் ஏது?) கோள்தீர்த்த விநாயகருக்கும் கருவறை உள்ளது.

சூரிய பகவான், உடல்காரகன் (உடல் ஆரோக்கியத்திற்கு அதிபதி) வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் அதிபதி.

யார், யார் போகலாம்?

யார் வேண்டுமென்றாலும் போகலாம். போய் வரலாம். இறைவனையும், கோள்களையும் வணங்கக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

ஜாதகத்தில் சூரியன் நீசமடைந்திருந்தாலும், சூரியனுடைய திசை நடைபெற்றாலும், அல்லது அடிக்கடி உடற்கோளாறுகள் ஏற்பட்டாலும், அவர்கள் தவறாமல் ஒருமுறையாவது போய் வரவேண்டும். அதுபோல கோச்சாரத்தில் ஜன்மச் சனி, அஷ்டமச்சனி நடைபெறும் காலங்களில் ஜாதகர் சென்று வரலாம். சனியின் தாக்கங்களைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை சூரியபகவான் கொடுப்பார்.

கோதுமை, செந்தாமரை மலர் (சிவப்புத் தாமரை மலர்) மற்றும் எருக்கம்பூ ஆகியவைகள் இங்கே பூஜைக்கு உகந்தவையாகும்

கோவிலின் கருவறையும், அர்த்தமண்டபமும், கருங்கற்களால் கட்டப்பெற்றதாகும். சூரியக் கதிர்கள் முழு வீச்சில் கோவிலுக்குள் வரும்படி கோவில் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரமும் உள்ளது.

சூர்ய புஷ்கரணி என்னும் ஸ்தல தீர்த்தமும் அருகில் உள்ளது. அதாவது ஊருணியும் உள்ளது. ராஜகோபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. பக்தர்கள் இங்கே புனித நீராடலாம்.

கோவிலின் பலிபீடத்திற்கு அருகே குதிரை வாகனமும் உள்ளது. அது சூரியனுக்கான வாகனம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இங்கே செல்பவர்கள் முதலில் கோள்தீர்த்த விநாயகரை முதலில் வணங்கிவிட்டுப் பிறகு சூரிய பகவானை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

கோவிலின் விழாக்காலங்கள்

தை மாதம் சப்தமி திதி. ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமை. விஜயதசமி ஆகிய தினங்களில் கோவில் விழாக்கோலத்துடன் இருக்கும்.

சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே அந்த தினத்தில் செல்வது சிறப்பாக இருக்கும். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை. மாலை 4:00 மணி முதல் 8:00 மணிவரை

கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம். மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம். பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.

நம்பிக்கை உள்ளவர்கள் சென்று வரலாம். நலன்களைப் பெற்று வரலாம்!

மேலதிகத் தகவல்கள்:

சூரியனார் கோவிலில் மற்ற கிரஹ‌ங்கள் 8க்கும் சன்னதிகள் உள்ளன. 9 கிரஹங்கள், வினாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய சன்னதிகள் 12க்கும் அர்ச்ச‌னை செய்ய 12 தேங்காய் உள்ள தட்டு வாங்கச் சொல்லியும் அதற்கு உண்டான அர்ச்சனைச் சீட்டு, தட்சணை எல்லாம் சேர்த்து இன்ரையத் தேதிக்கு ரூ500/= வரை செலவாகும். தேவையான அளவு கையில் பணத்தோடு செல்ல வெண்டும். திருமங்கலக்குடி திருமண தாமதத்தை நிவர்த்தி செய்ய தரிசிக்க வேண்டிய தலம்

சூரிய பகவானுக்கு நேர் எதிராக குரு பகவான் உள்ளார். அதாவது இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையில். சூரிய பகவான் பூஜைக்கு அடுத்து குருவுக்கும் பூஜை நடத்தப்படும். இது மற்ற கோவில்களில் கிடைக்காத சிறப்பு!
------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!