மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label திருமலையானைப் பாடியவை. Show all posts
Showing posts with label திருமலையானைப் பாடியவை. Show all posts

16.12.11

பள்ளியெழுந்து எப்போது வருவார்?

 பள்ளியெழுந்து எப்போது வருவார்?

நாளை மார்கழித் திங்கள் துவங்குகிறது. இறையுணர்வு மேலோங்குவதற்காக உள்ள மாதம். அனுதினமும் ஒரு ஐந்து மணித்துளிகளாவது  இறைவனைப் பிரார்த்தனை செய்து அவன் அருளைப் பெறுவோம். இறைப் பாடல்களை மனனம் செய்வோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதப் பாடல் ஒன்றை உங்களுக்காக இன்று வலை ஏற்றியிருக்கிறேன்.
இந்தப் பாடல் தஞ்சாவூர் பெரியவருக்கு சமர்ப்பணம்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
சரி, பள்ளியெழுந்து எப்போது வருவார்?
நீங்கள் அழைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் வருவார்! மனம் உருக பக்தியோடு அழைக்க வேண்டும்!

மனம் உருகவா - அதெப்படி?

அதுதானே கஷ்டம்!
அனுஷ்கா சர்மாவிற்காக உருகுவோம்.
போயஸ் தோட்டத்து வீடுகள் என்றால் உருகுவோம்.
இன்னோவா வாகனத்திற்கு உருகுவோம்.
வேலைபார்க்கும் நிறுவனத்தில் மேலாளர் பதவி கிடைக்க உருகுவோம்.
ஆனால் இறைவனுக்காக உருகுவதா?
கஷ்டம்(டா) சாமி!
-----------------------------------------------------------------------------------------------


                                                       பாடலின் காணொளி வடிவம்
                                                               --------------------------------------------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உன்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? - உன்
தெய்வ முனிவரைக் காப்பத்தற்கென்றே
வருவாயோ நீயே?

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே - கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அநந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

சதங்கு படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாரயாணன் என் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பாரிப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே!


பாடல்: திருப்பாற் கடலில்
திரைப்படம்: ஸ்வாமி ஐயப்பன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: தேவராஜன்
ஆண்டு: 1975





வாழ்க வளமுடன்!

17.12.10

நினைத்தது நடக்குமா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நினைத்தது நடக்குமா?

நடக்கும்.

எப்போது நடக்கும்?

வைகுந்த வாசனை மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் நடக்கும்!

எப்படிச் சொல்கிறீர்கள்?

பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

(திருப்பதி)

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

(திருப்பதி)

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

(திருப்பதி)

பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்.
++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார் அவர்!

எல்லோருக்குமா?

மனம் உருக தன்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு அவர் நடத்தி வைப்பார்.

இன்று வைகுண்ட ஏகாதசி. அவருக்கு உகந்த நாள். இந்த நந்நாளில் அவரைப் பிரார்த்திப்போம்!

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு தெரிய வேண்டுமா? இந்தத் தளத்திற்குச் சென்று பாருங்கள்.



அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!