மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.18

நோய்களுக்கான இயற்கை மருந்து!


நோய்களுக்கான இயற்கை மருந்து!

துளசி நீர்!!!!

மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். *ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்….. ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க அதிக பக்ஷம் இன்னும் 3 மாதங்கள் தான் உயிரோடு   இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்*.

 எனது நண்பர்  பில்டர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. *தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை*.

  இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. *வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு*.

சென்ற 2015  ஏப்ரல் மாதம் அந்த அம்மாவிற்கு மருத்துவர் 3 மாதம் கெடு விதித்தார்.

இன்றுவரை அந்த அம்மா ஆரோக்யமாக இருக்காங்க. மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள்  அங்கு இருக்கிறார்கள்.

*புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி*.

*துளசியின் மகத்துவம் பாப்போம்*.

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வைக்க  வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப  நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். *துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட  உண்மை*.

சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம்.

*ஏன்? செம்பு பாத்திரம்*.

 *தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு*. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.
  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர்  கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

*http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197*
 Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

*வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும் தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது*.

*பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா*

Courtesy: https://srinivassharmablog.wordpress.com
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.1.18

வேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி!!!


வேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி!!!

இராணுவத்தினர் காடு-மலைகளில் நீண்டகாலம், தூரம் பயணம் செய்யும் போதும், மலைச்சிகர பயணம் மேற்கொள்வோருக்கும் மிக முக்கியமாக கொடுக்கப்படும் உணவு என்ன தெரியுமா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்!!

அதுதான்.நம்மூர் வேர்க்கடலை மிட்டாய்

வேர்க்கடலையை ஒரு புரத வங்கி என்று சொன்னால் மிகையாகாது.

வெல்லமும் வேர்க்கடலையும் சேர்ந்த பர்பி தமக்குள்ளே ஒரு புரதக்கடலையே வைத்திருக்கிறது.

மிகக்குறைந்த எடையில் பெரிய சக்தியை கொடுப்பதால் தான் ராணுவத்தினரும், மலையேற்ற பயணிகளும் அதை கொண்டுச் செல்கிறார்கள்.

வெறும் புரதம் மட்டுமல்ல, முப்பது விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.

★வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு.

★வேர்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக்கூடிய வைட்டமின் B3, புரதம், லைசின் எனும் அமினோ அமிலம் உள்ளது.

★வேர்க்கடலை உடல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதுகாக்கும். இரத்தம் ஓட்டம் சீராக்கும். நரம்புகள் நன்றாகச் செயல்பட உதவும்.

★வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு #இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

★நீரிழிவு நோயாளிகள் தினமும் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும்.

★புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழிக்க உதவும்.

★பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக_மறதி நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் B3  அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவுப் பொருள் இந்த வேர்க்கடலை.

இப்படிப்பட்ட #வேர்க்கடலையை # வெல்லத்தோடு சேர்த்து நம் வீடுகளில் கடலை உருண்டை, மிட்டாய் செய்வார்கள். இதே முறையில் தான்  எள்ளுருண்டைகளையும் செய்கின்றார்கள். 

வெல்லப்பாகு காய்ச்சி அதில் வறுத்த வேர்க்கடலையை கொட்டி உருண்டை பிடித்தால் அதுவே வேர்க்கடலை உருண்டை.
---------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.1.18

மண் பானைத் தண்ணீரின் மகத்துவம்!!!

மண் பானைத் தண்ணீரின் மகத்துவம்!!!

*மண் பானை தண்ணீர்.!*
**************************

*தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.*

*வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.*

*குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது? தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.*

*எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள். உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்..*

*மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.*

*உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.*

*1. மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.*

*மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும்.*

 *நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் WATER FILTER வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும்,*

*தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.*

*ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு WATER FILTER ஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.*

*2. வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.*

*வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால், வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*

*இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக் கிறார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.*

*3. வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்*

*நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது.*

*ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம்" தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.*

*4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம*்

*செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம்.*

*அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.*

*அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.*

*எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப் படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்? வாழ்வோம் ஆரோக்கியமாக...
--------------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன் 
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.1.18

Astrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா!
பிறப்பு விபரம்: 29-12-1942 - 5:45  PM Amritsar, Punjab

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 15 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (2-2-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Rajesh Khanna
Friday, January 26, 2018 4:49:00 AM
-------------------------------------------------
2
Blogger Sathish Kumar said...
Rajesh Khanna
Date of Birth : 29 – 12 – 1942
Time of Birth : 17 : 45
Place of Birth : Amritsar
Friday, January 26, 2018 8:07:00 AM
-----------------------------------------------
3
Blogger Shruthi Ramanath said...
It's Rajesh khanna sir
Friday, January 26, 2018 9:30:00 AM
-----------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் மறைந்த திரைப்பட நடிகர் திரு ராஜேஷ் கன்னா. "மேரே ச்ப்னம் கி ராணி
கஹி ஆயே ஹி து.."ஆராதனா புகழ். நமது பழைய‌ கால ஹிந்தி மனம் கவர்ந்த பாலிவுட் ஹீரோ.29 டிசம்பர் 1942 மாலை 5 மணி 48 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த ஊர் அமிர்த சரஸ்.
Friday, January 26, 2018 9:47:00 AM
------------------------------------------------
5
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி திரு ராஜேஷ் கண்ணா அவர்கள். அவர் பிறந்தது 29/12/1942 மாலை சுமார் 5:00 மணியளவில்.
நன்றி
Friday, January 26, 2018 9:53:00 AM
---------------------------------------------------
6
Blogger bg said...
Rajesh Khanna Amritsar Punjab born on Dec 29 1942
Friday, January 26, 2018 11:51:00 AM
-----------------------------------------------
7
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: ராஜேஷ் கன்னா,
பிறந்த நாள்: 29/12/1942 @ 17.45 மணி
பிறந்த ஊர்: அம்ரிட்சர், பஞ்சாப், இந்தியா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, January 26, 2018 2:19:00 PM
----------------------------------------------
8
Blogger hari prasath said...
Rajesh Khanna.
Dec-29 1942
Friday, January 26, 2018 2:56:00 PM
--------------------------------------------------
9
Blogger Thanga Mouly said...
Quiz: Actor Rajesh Khanna, DOB: 29 Dec 1942
Friday, January 26, 2018 6:14:00 PM
--------------------------------------------------
10
Blogger venkatesh r said...
புதிருக்கான விடை :
மறைந்த பிரபல முன்னாள் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் திரு. ராஜேஷ் கன்னா அவர்கள் .
பிறந்த தேதி : 29.12.1942
பிறந்த இடம் : அம்ருத்சர் , பஞ்சாப்.
பிறந்த நேரம் : மாலை 5 மணி 45 நிமிடம்
Friday, January 26, 2018 7:24:00 PM
--------------------------------------------------
11
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் :பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள்
பிறந்த நாள் :29/12/1942
பிறந்த இடம் :அம்ரித்சர்,பஞ்சாப்
நேரம் -17:45
நன்றி
Friday, January 26, 2018 7:24:00 PM
------------------------------------------------------
12
Blogger Palani Shanmugam said...
Dear Sir
This is the horoscope of the first and original super star of Indian cinema Shri Rajesh Khanna
S. Palanichamy
Friday, January 26, 2018 9:50:00 PM
------------------------------------------------
13
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to quiz is Rajesh Khanna who was born on December 29th 1942.
Kind Regards
Rajam Anand
Friday, January 26, 2018 11:23:00 PM
-------------------------------------------------
14
Blogger thozhar pandian said...
29 டிசம்பர் 1942 பிறந்த இந்தி திரைப்பட நடிகர் இராஜேஷ் கண்ணா
Saturday, January 27, 2018 1:50:00 AM
-----------------------------------------------------
15
Blogger Ajith M S said...
ராஜேஷ் கண்ணா
Saturday, January 27, 2018 3:29:00 AM
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.1.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? பஞ்சாப்பில் பிறந்தவர். ஆனால் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.1.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!

1.
காரில் பயணைக்கும்போது சீட் பெல்ட்டின் முக்கியத்துவம் பற்றிய காணொளி:


2.
தோப்புக்கரணத்தின் மேன்மை பற்றி ஒரு அயல் நாட்டுக்காரர் சொல்கிறார். நம் முன்னோர்கள் சொல்லியதைப் பின்பற்றாத நாம், இதைப் பார்த்த பிறகாவது பின்பற்றலாமே!!!
Super Brain Yoga



3
எத்தனை உயரத்தில் இருந்து எத்தனை முறை உருண்டு விழுந்தாலும், அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அசால்ட்டாக எழுந்து போகிறாரே - அந்தப் பக்குவம் எல்லோருக்கும் இருந்தால் வாழ்க்கை எப்படி கசக்கும்?


4.
தஞ்சை பெருவுடையார் கோவிலைப் பற்றிய சில அசத்தலான செய்திகள்:


அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.1.18

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்!


முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்!

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

2 .3 நாட்கள் மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!
--------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.1.18

நகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்?


நகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
-------------------------------------------------------------------
1
Someone asked an Advocate : What is the difference between Mahabharata and Ramayana??     
Stunning Ans: Mahabharata was a land dispute case and Ramayana was a Kidnapping case!
----------------------------------------------------------------
2
ஏனம்மா... ரொம்ப நேரமா பொங்க பானைய கிண்டிகிட்டே இருக்கியே.. இன்னுமா பொங்கல் வேகல!!."
"பொங்கி வர்றப்ப Selfie எடுக்க ட்ரை பண்ணினேன்...மொபைல் பானைக்குள்ள விழுந்திடிச்சி அதான் தேடிகிட்டே இருக்கேன்"
---------------------------------------------
3
Difference between Talent and God’s gift:
A Teacher can give lecture for 2 hrs on any subject.
-This is talent.
A wife can give lecture for 2 hrs without any subject. 
-This is God’s gift.
-------------------------------------------------
4
நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை:


5  வொடாபோன் நகைச்சுவை:



அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.1.18

பாரதப்போர் எப்படி முடிந்தது?

பாரதப்போர் எப்படி முடிந்தது?

குருஷேத்திரம்..

பதினேழாம் நாள் போர் முடிந்த இரவு..

தனது பாசறைகளைப் பார்வையிட்டவாறே, நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தருமனும், பீமனும், சற்று தொலைவில் தெரிந்த கிருஷ்ணரின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர். எப்போதும், எல்லோருக்கும் முன்பு, அடுத்த கட்ட போர்நிகழ்வுகளை ஆலோசிக்கும் கிருஷ்ணர், இன்று இதுவரை இதுபற்றி எதுவும் பேசவில்லை என்பதும் ஒருபுறம் கலக்கமாகவே இருந்தது தருமனுக்கு.

உள்ளே வரலாமா ? உத்தரவு கேட்டபின் உள்நுழைந்தனர் இருவரும்.

வாருங்கள்.. என்ற கிருஷ்ணரின் குரலில் என்றும் இருக்கும் உற்சாகம் சற்றுக் குறைந்திருப்பது தெரிந்தது தருமனுக்கு.

நாளைய போர் நிகழ்வு பற்றி கேட்டுச் செல்லலாம் என வந்தோம் கிருஷ்ணா.. என்றான் தருமன்.

நாளை பதினெட்டாம் நாள் போர். இதுவே குருஷேத்திரத்தில் இறுதிநாளாக இருக்கும் என எண்ணுகிறேன் நான்.. என இழுத்தார் கிருஷ்ணர்.

இறுதிநாள்தான். ஐயமே இல்லை. துரியோதனனுக்கும், அவனது மொத்தப் படைக்கும் நாளை இறுதிநாள். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறப்போகும் நாள்.. பல் கடித்தான் பீமன்.

நாளை நம் படைக்கு யார் தலைமை தாங்கப் போகிறீர்கள் ? கேட்ட கிருஷ்ணரை, வியப்புடன் பார்த்தான் தருமன்.

யாரா ? அதை நீயல்லவா முடிவு செய்து சொல்லவேண்டும்.. என்றான் தருமன்.

அர்ஜுனனின் பங்கு இப்போரில் கர்ணனைக் கொன்றதோடு முடிந்துவிட்டது.  நகுலனும், சகாதேவனும் நாளைய போருக்கு சரிவர மாட்டார்கள். அண்ணன் தருமர் செல்லுமளவிற்கு அத்தனை அவசியமும் இல்லை. எனவே, துரியோதனனை அழிக்க, நானே தலைமை ஏற்கலாம் என நினைக்கிறேன் கிருஷ்ணா.. என்றான் பீமன்.

தாராளமாக. அதில் தவறேதுமில்லை. அதற்குமுன், நகுலனும், சகாதேவனும் நாளை தலைமையேற்க வேண்டாம் என்பதற்கான காரணம் வேண்டுமே ?.. கேட்டார் கிருஷ்ணர்.

விஷயமறியாதவன் போல் பேசுகிறாயே கண்ணா.. நாளை துரியோதனப் படைக்கு தலைமையேற்பது சல்லியர் என்பது தெரியாதா உனக்கு ? நகுலனும், சகாதேவனும், அவரது மருமகன்களாயிற்றே. அவர்களுடைய கையால் அவர் அழியவேண்டாம் என்பதால்தான், நான் செல்கிறேன் என்கிறேன்.. என்றான் பீமன்.

ஏன் ? உனக்கும் மாமன் முறைதானே சல்லியர் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

இருக்கலாம். எதிரிப்படையில் நிற்கும் எவரையும் நான் உறவாகக் கொள்வதில்லை. அதுவுமின்றி, பீஷ்மர், கர்ணன், துரோணர் போன்ற பெருவீரர்களை எல்லாம் வென்றழித்த நமக்கு, சல்லியர் எம்மாத்திரம் ? எனவேதான், அண்ணன் தருமருக்கு அவ்வாய்ப்பினை தராமல், நானே தலைமை ஏற்க நினைக்கிறேன். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே, சல்லியரை அப்புறப்படுத்திவிட்டு, துரியோதனனைத் தொட எண்ணம். அவனைக் கொல்வது மட்டுமே என் இலட்சியம் என்பதை நீயுமறிவாய் கண்ணா.. என்றான் பீமன் வேகமாக.

அப்படியா ? உன் வீரத்தின் மீது நம்பிக்கை வைப்பது உனக்கு நல்லது. அதே சமயம், எதிரியின் வீரத்தை குறைத்து மதிப்பிடுவது உனக்கு நல்லதல்ல பீமா.. என்றார் கிருஷ்ணர்.

புரியவில்லை கண்ணா.. சல்லியர் அத்தனை பலசாலியா ?.. வேண்டுமென்றே இகழ்ச்சியாகக் கேட்ட பீமனை, புன்சிரிப்போடு பார்த்தார் கிருஷ்ணர்.

நீயும், அர்ஷூனனும் ஒன்றாக எதிர்த்தால் கூட, சல்லியரை வெல்வது கடினமே பீமா.. என்ற கிருஷ்ணரின் வார்த்தைகள் கேட்டு கோபமுற்றான் பீமன்.

என்ன பிதற்றுகிறாய் கண்ணா.. நேற்று வரை தேரோட்டியாய் களத்தில் வலம் வந்தவர், இன்று தளபதியானவுடன், பிறந்துவிடுமா வீரம் ?.. கேட்ட பீமனை நோக்கிய கிருஷ்ணர்,

கர்ணனுக்குத் தேரோட்டியாவதற்கு முன், சல்லியன் பங்கு கொண்ட போரில், அவரை எதிர்த்த எவராவது உயிர்தப்பி இருக்கிறார்களா பீமா ?.. என்று கேட்டார்.

தருமன் யோசித்தான். ஆம்.. சல்லியனை எதிர்த்த எவரும் உயிரோடில்லை. எதிர்த்தவர்கள் அத்தனை முக்கிய நபர்கள் இல்லை என்பதால் , இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அப்போதுதான் புரிந்தது தருமனுக்கு.

ஏதோ விஷயம் உள்ளது. இல்லையெனில், கிருஷ்ணர் இத்தனை பீடிகை போடமாட்டார் என்பதும் புரிந்தது.

கிருஷ்ணா.. பீமன் தான் செய்த சபதத்தை முடிக்கவேண்டும் என்ற வெறியில் அறியாமல் பேசுகிறான். அவனை மன்னித்தருளி, என்னவென்று தெளிவாய் எடுத்துரைக்கக் கூடாதா ?.. வணங்கியபடியே கேட்டான் தருமன்.

தருமா.. நாளை கௌரவர் படைக்குத் தளபதியாகப் பொறுப்பேற்று வரப்போகும் சல்லியரை எவராலும் வெல்லவே முடியாது என்பதே உண்மை. அவர்முன் கோபத்தோடு எவர் போரிட்டாலும், எதிரியின் ஆற்றல், ஆயிரம் மடங்காகப் பெருகி, அவரையே அடையும் என்பது அவர் கொண்டிருக்கும் வரம். எனவே, அவரை எதிர்த்து எவர் போரிடினும், அவனது ஆற்றலும் அவரையே அடையுமே தவிர, எதிர்த்து நிற்பவர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான், என்ன செய்வதென்று இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறேன்... என்றார் கிருஷ்ணர்.

இப்படி ஓர் வரமா ? சல்லியரிடமா ? இது துரியோதனனுக்குத் தெரியுமா ? எதிர்த்து நிற்கும் எவருமே தப்பமுடியாவிடில், வெல்வதெப்படி ?.. உறைந்துபோய் நின்றான் பீமன்.

கிருஷ்ணா.. உனையன்றி வேறெதுவும் எங்களைக் காத்தருளாது என்பதை முழுமையாய் அறிந்தவன் நான். இத்தனை இன்னல்களைக் கடக்க எங்களோடு துணைநின்று, பேருதவி பலபுரிந்த நீ, இப்போதும் எமைக் காக்கத் தவறமாட்டாய் என்பதையும் அறிவேன். பாண்டவர் படை முழுவதுமே உன்னையே சரணாகதி அடைந்திருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி, என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் உத்தரவிடு கிருஷ்ணா.. என்று கைகள் குவித்து, கருணை மிகுந்த கண்களோடு, யாசிக்கும் தருமனைக் கண்டவுடன், சட்டெனத் தோன்றியது ஓர் முடிவு கிருஷ்ணருக்கு.

எதிரியின் வலிமை அதிகம் என்றறிந்தும் பயப்படாமலும், கோப்படாமலும், ஆத்திரப்படாமலும், பீமன் போல் அவசரப்படாமலும், அடுத்து என்னவென்பதை நிதானமாய் யோசித்து, தன்னை யாசித்து நிற்கும் தருமனே நாளை சல்லியரை எதிர்க்கத் தகுதியானவன் என்பது புரிந்தது கிருஷ்ணருக்கு. பீமனை நோக்கித் திரும்பினார்.

பீமா.. நாளை களத்தில் உன்முன் கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி நிற்கும் சல்லியரைக் கண்டால், என்ன தோன்றும் உனக்கு ?.. கேட்டார் கிருஷ்ணர்.

எதிரில் நிற்பவர் எவராயினும் எதிரியே எனக்கு களத்தில். உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், களத்தில் வந்த கடமையை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அர்ஜூனனுக்கே நீ செய்த உபதேசம் கண்ணா.. என்றான் பீமன்.

மறுக்கவில்லை. ஆனால், அன்றோடு குருஷேத்திரப் போர் முடிந்துவிட்டதா பீமா ?.. கேட்ட கிருஷ்ணருக்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறினான் பீமன்.

ஆனால், அதுதான், அந்த நிகழ்வுதான் நம்மை வெற்றியை நோக்கித் திருப்பியது. இல்லையேல், பீஷ்மரையும், துரோணரையும் அர்ஜூனனால் எதிர்கொண்டிருக்க இயலாது.. என்றான் பீமன்.

ஆம்.. போரில் வெற்றியை நோக்கிப் பயணிக்க, கடமையே முக்கியம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நாளைய போர், வெற்றியை அடையப்போகும் விஷயம் என்பதைவிட, போரை முடிக்கப்போகும் விஷயம் என்று கொள்வதே சிறந்தது.
இரத்த உறவுமுறை கொண்ட உங்களால், ஏதோ ஒரு காரணத்தால், இத்தனை பெரிய யுத்தம் துவங்கப்பட்டது. இதில், கௌரவர், பாண்டவர் என்ற உங்கள் இருவரின் ஆற்றலும், திறமையும், வரங்களும், வீரமும், துணையும், சூழ்ச்சிகளும், இராஜதந்திரங்களும் என இவை எல்லாமே போரை நடத்திச் செல்ல பயன்பட்டனவையே தவிர, போரை முடித்துவைக்க அல்ல.
உங்கள் ஆயுதங்களோ, பழியுணர்ச்சியோ, கோபமோ, பகையோ, ஆத்திரமோ, வருத்தமோ இப்போரை முடிக்கவே விடாது. உறுவுகளுக்கிடையே நடைபெறும் இப்போரை மட்டுமல்ல.. எப்போரையுமே முடிக்க இயலாது. . என்ற கிருஷ்ணரை, குழப்பமாய்ப் பார்த்தான் பீமன்.

அப்படியெனில், நாளை இப்போர் முடிந்துவிடாதா ? பாஞ்சாலியின் சபதமும், நான் கொடுத்த சத்தியமும் நிறைவேறாதா ? நான் கொண்ட பழியணர்ச்சி தீராதா ?.. கோபமாய்க் கேட்டான் பீமன்.

பழியுணர்ச்சி என்பது உள்ளவரை எப்போரும் என்றுமே முடியாது பீமா. அது இருக்கட்டும்.. என்றவர், தருமனின் பக்கம் திரும்பினார்.

தருமா, ஒருவேளை நாளை சல்லியரின் எதிரில் நீ நிறுத்தப்பட்டால், என்ன செய்வாய் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி வரினும், சல்லியர் எனது மாமன்.. என்னிலும் பெரியவர்.. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்.. அவரை வணங்குவேன்.. அவரை வெல்ல, அவரின் ஆசி கேட்டு நிற்பேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போரிடுவேன்.. என்றான் தருமன்.

எதிரியிடம் சரணாகதியா ? இது நமக்குக் கேவலம் அண்ணா.. கொதித்தான் பீமன்.

தருமா.. சற்று முன்பு என்னிடம் சரணாகதி என்றாயே.. என் உத்தரவு கேட்டு நின்றாயே.. என் உத்தரவு இதுதான். நாளை சல்லியரை எதிர்க்கப் போவது நீதான். அதேசமயம், சல்லியரை மனதால் சரணாகதி அடைய உன்னால் இயலுமா ? களத்தில் எதிரிமேல் கருணை கொண்ட விழிடளோடு களமாட இயலுமா ? எதிரியின் அஸ்திரங்களுக்கு பதிலாக எய்யும் உனது அஸ்திரங்களை, சிறிது கூட கோபப்படாமல், சிரித்தபடியே எய்ய முடியுமா ? சுருக்கமாய்க் கேட்கிறேன்.. என்னைக் கண்டால் உன் மனதில் தோன்றும், அன்பும், கருணையும், சல்லியரைக் களத்தில் காணும்போது வெளிப்படுத்த இயலுமா ?.. கேட்ட கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தைகளையும், மனதிற்குள் ஆழமாய் அசைபோட்டான் தருமன்.

சல்லியரின் முன் கோபத்தோடு போரிடும் எவரின் ஆற்றலும், ஆயிரம் மடங்காய்ப் பெருகி, சல்லியனை அடையும் என்பதால், கோபமே படாமல், கருணையோடு களமாடச் சொல்கிறான் கிருஷ்ணன். எதிரியின் வலிமையைக் கூட்டாமல், பகையுணர்ச்சியைக் கூட்டாமல், கருணையையும் அன்பையும் கூட்டி, செயலிழக்கச் செய்யச் சொல்கிறான் கிருல்ணன் என்பது தெளிவாகப் புரிந்தது.

முடியும் கிருஷ்ணா.. என்னால் முடியும். உன்னிடம் அடைவது போலவே, சல்லியரிடமும் என்னால் சனணாகதி அடைய இயலும் கிருஷ்ணா.. உறுதியாகச் சொன்னான் தருமன்.

இது சாத்தியமே இல்லை அண்ணா.. பீமன் இடைமறித்தான்.

சாத்தியம். இது சாத்தியம். தூணிலும், துரும்பிலும், பரந்தாமன் என்றபின், எதிரே நிற்கும் எதிரியிலும் பரந்தாமன். சல்லியரில் என்னால் கிருஷ்ணனனைக் காண இயலும். அதனால், இது சாத்தியம்.. என்றான் தருமன்.

நல்லது தருமா. குருஷேத்திரப் போர் நாளை நிச்சயம் முடிந்துவிடும். இதை முடிக்கப்போவது, பாண்டவரின் வீரமோ, கிருஷ்ணனனின் துணையோ அல்ல. இப்போரினை முடிக்கப்போவது உறவுகளுக்கிடையேயான அன்பு. அது வெளிப்பட வாய்ப்பின்றி தனை மறைத்தே நிற்கும். தனது இருப்பினை அது வெளிப்படுத்த ஆரம்பித்தவுடன், எதிர்த்து நிற்கும் எப்பகையும், எப்போரும் முடிந்துவிடும்.

மண்ணாசையால், பொன்னாசையால், அதிகார போதையால், அகம்பாவத்தால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு போரும், காலம் காலமாய் தொடர, கர்ணன் போன்ற துணையும், பீஷ்மர் , துரோணர் போன்ற வீரமும், சகுனி போன்ற சூழ்ச்சியும், என் போன்ற தந்திரங்களும் துணைக்கு இருக்கலாம். ஆனால், அப்போரினை முடிவுக்கு கொண்டுவர, பெரும் சக்தியான சல்லியருக்கு எதிராக நீ காட்டப்போகும் அன்பு ஒன்றாலேயே முடியும்..

என்ற கிருஷ்ணரின் வார்த்தைகளில் இருந்த உண்மை என்னவென்பது, மறுநாள் போர் முடிந்தபின்தான் பீமனுக்கும் புரிந்தது.

உங்களுக்கும் புரியும்.. எல்லோருக்கும் புரியவேண்டும்..மகாபாரதம் வெறும் இதிகாசமோ, வீரகாவியமோ அல்ல.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் போராட்டம். இறுதியில், அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்பது எல்லோருக்கும் புரியவேண்டும்.

பாரதம்.. மதத்தின் அடையாளமல்ல..மனிதனின் அடையாளம்.
--------------------------------------------------------------
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.1.18

Astrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தன்னுடைய அற்புதக் குரலால் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல பிண்ணனிப் பாடகி இசையரசி M.S. சுப்புலெட்சுமி  அவர்கள்
பிறந்த தேதி 16-09-1916 காலை 8.50 மணி மதுரை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 20 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (26-1-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger thozhar pandian said...
செப்டம்பர் 16 1916 பிறந்த பிரபல பாடகி பாரத இரத்னா எம்.சுப்புலட்சுமி அவர்கள். ஜாதகத்தையும் க்ளூவையும் பார்த்தவுடன் அவராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
Friday, January 19, 2018 4:48:00 AM
---------------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous singer Bharatha Ratna M.S.Subbulakshmi,was born on 16.09.1916 on 8.50am at madurai.
Friday, January 19, 2018 6:02:00 AM
-------------------------------------------------------------------
3
Blogger Maheswari Bala said...
M.S.Subbulakshmi
September 16,1916
Time of birth:08:50:00
Place of birth:madurai
Longitude:78 E 7
Latitude:9 N 55
Friday, January 19, 2018 6:46:00 AM
---------------------------------------------
4
Blogger bala said...
Vanakkam Iyya,
Paadagi M.S.Subbulakshmi avargal :)
https://en.wikipedia.org/wiki/M._S._Subbulakshmi
Friday, January 19, 2018 7:05:00 AM
-----------------------------------------------------
5
Blogger angr said...
கர்னாடக இசையரசி திருமதி MS.சுப்புலட்சுமி
Friday, January 19, 2018 8:14:00 AM
-------------------------------------------------------
6
Blogger GOWDA PONNUSAMY said...
Ayya vanakkangal!
Native is Smt.M. S. Subbulakshmi
Madurai Shanmukhavadivu Subbulakshmi (Tamil: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, M.S., was a renowned Carnatic vocalist. She is the first Indian musician to receive the Ramon Magsaysay award.
Date of Birth: 16-Sep-1916 at 9-00 hrs
Place of Birth: Madurai, Tamil Nadu, India
Date of Death: 11-Dec-2004
Profession: Singer
Nationality: India
Regards,
- Ponnusamy.
Friday, January 19, 2018 9:05:00 AM
--------------------------------------------------------
7
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: எம் ஸ் சுப்புலக்ஷ்மி
பிறந்த நாள்: 16/09/1916 @ 08.50 AM
பிறந்த ஊர்: மதுரை
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, January 19, 2018 9:13:00 AM
-----------------------------------------------------
8
Blogger Suresh said...
Name: M. S. Subbulakshmi
Date of Birth: Saturday, September 16, 1916
Time of Birth: 08:50:00
Place of Birth: Madurai
Friday, January 19, 2018 9:19:00 AM
--------------------------------------------------
9
Blogger Shruthi Ramanath said...
Sir its the great singer MS SUBBULAKSHMI
Friday, January 19, 2018 10:59:00 AM
---------------------------------------------------
10
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வார புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் இசைக்காகவே பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, January 19, 2018 11:00:00 AM
-------------------------------------------------------
11
Blogger venkatesh r said...
புதிருக்கான விடை :
M.S. சுப்புலட்சுமி அம்மா அவர்கள்.
பிறந்த நாள் 16.09.1916. 8.45 AM (appx)
இடம் : மதுரை, பிரிட்டிஷ் இந்தியா .
Friday, January 19, 2018 11:54:00 AM
-------------------------------------------------
12
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள். பிறந்த தேதி 16-9-1916. மதுரை நேரம் காலை 8மணி 50 நிமிடம்.
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா”
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, January 19, 2018 12:43:00 PM
-------------------------------------------------------
13
Blogger bg said...
M S Subbulakshmi
Sep 16 1916
Friday, January 19, 2018 1:08:00 PM
------------------------------------------------
14
Blogger Thanga Mouly said...
புதிர் ஜாதகம், பிரபல கர்நாட இசைப் பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுடையது. பிறந்த திகதி:16 SEP 1916; மதுரை
Friday, January 19, 2018 1:23:00 PM
------------------------------------------------
15
Blogger suresh radhakrishnan said...
guru ji, the answer is thirumadhi M S Subbulakshmi.. DOB 16/sept/1916
Friday, January 19, 2018 2:00:00 PM
--------------------------------------------------
16
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரியவர் :மிஸ் சுப்புலட்சுமி அவர்கள்
பிறந்த நாள் :16 /9 /1916
இடம் மதுரை
நேரம் காலை 8 .30
நன்றி மீண்டும் அடுத்த புதிர் போட்டிக்கு ஆவலுடன்
நன்றி
Friday, January 19, 2018 3:53:00 PM
---------------------------------------------------
17
Blogger hemvasu said...
THIS CHART IS of Late M S SUBBULAKASHMI ,great karnatic musician.Born on 19 June 1916 at Madurai.
Friday, January 19, 2018 8:24:00 PM
-----------------------------------------------------
18
Blogger Rajam Anand said...
Dear Sir
Answer to the quiz is Shrimathy M S Subbulakshmi who was born on the 16th of September 1916 in Madurai.
Kind Regards
Rajam Anand
Friday, January 19, 2018 8:50:00 PM
----------------------------------------------------
19
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல கர்நாடக இசை பாடகர் M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள். இவர் பிறந்தது 16/09/1916 காலை சுமார் 8:50 மணியளவில்.
Friday, January 19, 2018 9:48:00 PM
---------------------------------------------------
20
Blogger ravichandran said...
Respected Sir,
My answer for yesterdays quiz:
The native of the horosocpe is Shrimathi M.S. Subbulaksmi, Famous Singer
Born on: 16.09.1916 at Madurai. Time: 10:00
With kind regards,
Ravi-avn
Saturday, January 20, 2018 1:13:00 AM
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.1.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 12-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  19-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? தமிழ் நாட்டில் பிறந்தவர். பெண்மணி. அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.1.18

நீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காணவேண்டிய 3 காணொளிகளை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------
1


2

3
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.1.18

நம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது?

நம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது?

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...?

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை வைத்துவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா, தங்கைகளுக்கு, அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...

♥யாராவது செல்போன் (சாதாரண 1100)  வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...

♥10ல் குறைந்தபட்சம் 8 வீடுகளில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன்  சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...

♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்...

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட  சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...
------------------------------------------------
உண்மை. படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.1.18

நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?


நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக  இருக்கிறீர்களா?

மனவளக் கட்டுரை

நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக  இருக்கிறோமா?

நம் பிள்ளைகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா? 

"எனக்கென்ன குறைச்சல், சென்னைக்கு மிக அருகில் ஒரு வீடு வாங்கிட்டேன்.  கார் வெச்சிருக்கேன்.  கிரெடிட் கார்டு இருக்கு. பிள்ளைகள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறார்கள். வாரம் முழுக்க உழைச்சிட்டு, களைப்பு தீர்றதுக்கு வாரக் கடைசியில் ஜாலியா இருக்கேன். வாழ்க்கை ஹேப்பியா போகுது. வேறென்ன வேணும் ?"

*ஆனால், மகிழ்ச்சி என்பது இதுதானா?*

பெர்ஷியக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி சொல்கிறார், *"உங்கள் இதயத்திலிருந்து விஷயங்களைச் செய்யும்போது, உங்களுக்குள் ஒரு நதி நகர்வதை உணர்வீர்கள். அதன் பெயர் மகிழ்ச்சி"* என விளக்குகிறார்.

இளமை ஒளிர்கிறவரை எல்லாம் சூப்பராகத் தெரியும். குழந்தை குட்டிகளைக் கரையேற்றி, குடும்பச் சுமைகளை ஒவ்வொன்றாகத் தளர்த்தி 'அப்பாடா' என்று உட்காரும்போது, முடிந்துவிட்ட வாழ்க்கை ஒரு சூன்யத்தில் நம்மை நிறுத்தியிருக்கும். நரை கூடிக் கிழப் பருவம் எய்தும்போது 'என்னத்த வாழ்ந்துட்டோம்' என்ற எண்ணம் வராதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 'நமக்காகவும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ' என மனம் அடித்துக்கொள்ளும். ஏனென்றால், இங்கு யாருமே தன்னுடைய வாழ்வை வாழ்வதே இல்லை._

உலகச் சமூகங்கள் பலவும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை, தனிமனித மகிழ்ச்சி குறித்த ஆழ்ந்த புரிதலோடு வாழ்கின்றன. ஆனால், அது சுயநலமான வாழ்க்கை முறை என நாம் குறை கூறுகிறோம்.

*இந்தியப் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதற்காகத் தம்மையே அழித்துக்கொள்கின்றனர்.அதுமட்டுமே பொதுநலன் எனும் மாயக்கற்பனையிலும் உழல்கின்றனர். 'காலம் முழுக்க உனக்காகக் கஷ்டப்பட்டேன்' என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் இறுதிக்காலப் புலம்பலாக இருக்கிறது.*உடல், பொருள், ஆவி அனைத்தையும் உருக்கி ஏன் கரைகிறீர்கள் எனில், அவர்களிடம் இருக்கும் ஒரே பதில், 'பிள்ளைகளை நல்லா வளர்க்கணும்ல' என்பதே!

*ஒரு தம்பதியரை எனக்குத் தெரியும்.* திருமணமான 40 ஆண்டுகளில் அவர்கள் எங்கேயும் வெளியே சென்றதில்லை. நடுத்தர வர்க்கத்தினர். மாதச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகிறவர்கள். அந்த மனிதர் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் அத்தனை ஆண்டுக் காலமும் குருவி சேர்ப்பது போலப் பணத்தைச் சேர்த்து, தன் இரண்டு பிள்ளைகளுக்காகவும் இரண்டு வீடுகளைக் கட்டினார். கடன்களை வாங்கி வாழ்நாள் முழுவதும் அடைத்தார். அவரது கஷ்டம் பிள்ளைகளுக்குத் தெரியாது. தாம் வசதியானவர்கள் என்ற மனநிலையோடுதான் அவர்கள் வளர்ந்தனர். அவர்கள் கேட்ட எல்லாமும் ஒரே கோரிக்கையில் நிறைவேற்றப்பட்டன. படிக்க வைத்து, மணமுடித்து, வரதட்சணை வாங்கிக்கொடுத்து, வீடுகளை ஒப்படைத்து, வங்கிச் சேமிப்பைத் துடைத்தழித்து வெறும் மனிதர்களாக நிற்கின்றனர். மகனுக்குக் கட்டிக்கொடுத்த வீட்டில் இவர்களும் தங்கி இருக்கின்றனர்.
*தன் சந்தோஷங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்து கொள்வதுதான் வாழ்க்கையா?*

நிறைய சம்பாதித்து, நிறைய செலவழித்து, நிறைய கடன்பட்டு, நிறைய துயருறுதல் வாழ்க்கையாக இருக்கும்போது அதற்கிடையே அன்பு, மகிழ்ச்சி எங்கே மலரும்?

உலகப் புகழ்பெற்ற நடிகரான *ஜாக்கிசான், தன் மரணத்திற்குப் பின் தன்னுடைய பெருமதிப்புள்ள சொத்துகளை அறப்பணிகளுக்குக் கொடுக்கப்போவதாக அறிவித்தார்.* உங்கள் மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? * “என் மகன் திறமையானவராக இருந்தால் அவருக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதிப்பார். திறமையற்றவர் எனில், நான் சம்பாதித்ததையும் அழிக்கவே செய்வார்.’’ எத்தகைய மேன்மையான புரிதல் !

கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகன், சொத்துகள் தரப்படாததால் தன் உழைப்பில் முன்னேறும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.
அவர் சாதாரண வேலை பார்த்துக்கொண்டு சாமானியராக வாழக் கூடாதா என்ன? டாக்டர் பிள்ளை டாக்டராகவும், வங்கி ஊழியரின் வாரிசு வங்கி ஊழியராகவும், அரசியல்வாதியின் குழந்தை அரசியல்வாதியாகவும், நடிகர் மகன் நடிகராகவும்தான் ஆக வேண்டுமா?

*நாம் நம் குழந்தைகளுக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தைக் கற்பிக்கவே இல்லை.* எளிமை எனும் நல்வாழ்க்கைக்கான தத்துவத்தை, பிழைக்கத் தெரியாதவர்களுக்கான வழி என  ஒதுக்குகிறோம்.*எளிமையை ஏழ்மையோடு சேர்த்துக் குழப்பிக்கொள்கிறோம்.* சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்குமான வேறுபாட்டை மறந்தோம். *கேட்டபோதெல்லாம் டிரஸ் வாங்கித் தராத பெற்றோரை, குழந்தைகள் கருமியாகப் பார்க்கின்றனர் எனில் அது யார் தவறு?*

நம் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்ப்போம். வீடா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா என்ற சந்தேகமே வந்துவிடும்.

*'சொந்த வீடு இல்லேன்னா வாழ முடியாது', 'சோஃபா இல்லேன்னா உட்கார முடியாது', 'டிவி  இல்லேன்னா பொழுது போகாது', 'கார் இல்லேன்னா பக்கத்துத் தெருவுக்குக்கூடப் போக முடியாது', 'தினமும் ஒரு டிரஸ் போடலேன்னா மரியாதை கிடைக்காது', 'காஸ்மெட்டிக்ஸ் இல்லேன்னா அழகு வராது', 'காஸ்ட்லி சிகிச்சை இல்லேன்னா ஆரோக்கியம் வராது', 'செல்போன் இல்லேன்னா வாழவே முடியாது' என இப்படியான முடியாதுகள் நம் மூச்சைப் பிடித்து இறுக்குகின்றன.*

உண்மை என்னவென்றால், நாம் இன்று வாங்கிக் குவிக்கும் பொருள்களில் 90 சதவிகிதப் பொருள்கள் இல்லாமலேயே நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். நம் முன்னோர்கள் கற்பித்த எளிமையையும் சிக்கனத்தையும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும் !

வாழ்வில் எளிமையையும் எளிய விஷயங்களையும் கற்கும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் அத்தகைய மகிழ்ச்சிக்குத்தான் ஏங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுடன் எப்படி வாழ்கின்றனர்  என்பதுதான் முக்கியமே தவிர, எவ்வளவு சம்பாதித்தனர் என்பது ஒரு பொருட்டே அன்று.

*நான் வாழ ஒரு வீடு வேண்டும் என நினைத்தால் அது தேவை. வீடுகள் வேண்டுமென நினைத்தால் அது ஆசை. அந்த வீடும் வாழ்நாள் கடனில்தான் கிடைக்கும் என்றால், அது தேவையில்லை என்றே அர்த்தம்.* ஆயுள் முடிகிறவரை கட்டுகிற கடனை, குழந்தையின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகள், அனுபவங்களுக்குச் செலவிடுங்கள். *கடனில் வீட்டை வாங்கிவிட்டு எங்கேயும் வெளியில் போக முடியாமல் குழந்தைகளைச் சொந்த வீட்டுச் சிறையில் அடைக்காதீர்கள்.* குழந்தைகளுக்கு சரியாக வாழக் கற்றுக் கொடுத்து, தன் காலில் நிற்க வழி விட்டு, மறுபடியும் கிடைக்கவே கிடைக்காத இந்த வாழ்வை நாமும்  வாழ்வோம்.
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.1.18

ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!


ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!

சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1
--------------------------------------------
இந்த நாட்கள் எல்லாம் விழாவாகக் கொண்டாடப்படுவதை ஏதோ ஒரு சடங்கு அல்லது பழக்கம்  என்று  நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்..

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னால் மிகப்பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள்...!

Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு சொல்லித்தருகிறோம்!!!!!!!....

என்றைக்காவது ஒரு compass கருவியை வைத்து சூரியன் உதிக்கின்றபோது பரிசோதனை செய்து பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இருக்காது!!!.
--------------------------------------------
நமது கல்வியை வறையறுத்த ஆங்கிலேயர்கள், நம்மிடம் இருந்த முறையான  அறிவியலைக் கடாசிவிட்டு  அவர்களுக்குத் தெரிந்ததை பாடமாக தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் அதைத்தான் இன்றுவரை கடை பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
--------------------------------------------
ஆமாம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் மிகத் துள்ளியமாகக் கிழக்கில் உதிக்கும்....

பிறகு சிறிது சிறிதாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட தினத்தில்  மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போய்விட்டு மறுபடியும் கிழக்கிற்கு வருகின்ற நாள்தான் கணக்குப்படி ஒரு ஆண்டு ஆகும்..!!!!
--------------------------------------------
சரி... அதற்கும் தமிழ் மாதத்திற்கும்  என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?
--------------------------------------------
சூரியன் சரியாக கிழக்கில் இருந்து தன் நகர்வைத் துவங்குகின்ற  நாள்தான் #சித்திரை1.., அதாவது தமிழ் புத்தாண்டு...!!!
(In science it is called Equinox)

பிறகு extreme வடகிழக்கு point தான் ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்கிற்கு வருவது ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு - தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாகக் கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்....."தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்
-------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.1.18

வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!


வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும், வாத்தியாரின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.1.18

Astrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தன்னுடைய அற்புதக் குரலால் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல பிண்ணனிப் பாடகர் திரு. மொஹமத் ரபி (Mohammad Rafi) அவர்கள்
பிறந்த தேதி 24-12-1924 காலை 3.30 மணி கோட்லா நகரம் (பஞ்சாப்)

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 13 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (19-1-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

1
/////Blogger Thanga Mouly said...
புதிர் : ஜாதகத்திற்கு உரியவர் பிரபல பின்னணிப் பாடகர் முஹம்மத் ராபி; Mohammad Rafi- DOB: 24 Dec 1924
Friday, January 12, 2018 5:34:00 AM
-------------------------------------------------
2
////Blogger Maheswari Bala said...
Mohammed rafi (singer)
December 24 1924 Wednesday 
Time:3:30:00
Latitude:31 N 37
Longitude:74 E 42
Friday, January 12, 2018 5:37:00 AM 
------------------------------------------------------
3
//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous play back Singer Mohammed Rafiq was born on 24/12/1924 on 3.30am at Kotla Sultan Singh Punjab,Anusham nakshtra viruchaga rasi thulam lagna,Sasa yoga gave him name and fame for him
Friday, January 12, 2018 7:49:00 AM 
-----------------------------------------------------
4
Blogger RAMVIDVISHAL said...
Hindi film singer Mohammed Rafi
Friday, January 12, 2018 8:43:00 AM 
---------------------------------------------------------
5
////Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர் மொகம்மது ரபி (Mohammad Rafi)
பிறந்த நாள்: 24/12 /1924 @ 3.30 மணி
பிறந்த ஊர்: கோட்லா, சுல்தான்சிங்க், பஞ்சாப்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருழ்ணன்
Friday, January 12, 2018 10:05:00 AM
--------------------------------------------------------
6
////Blogger GOWDA PONNUSAMY said...
Ayya vanakkangal!
Native is Shri.Mohammed Rafi. A great singer.
Born on 24-12-1924 at 3-30 am.
Place Amritsar, Punjab.
Regards,
Ponnusamy.
Friday, January 12, 2018 12:14:00 PM 
---------------------------------------------------
7
/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் தன் அற்புதக் குரலால் பல கோடி இதயங்களைக் கொள்ளைகொண்ட இந்தி பாடகர் முகம்மது ரஃபி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, January 12, 2018 2:15:00 PM
---------------------------------------------------
8
/////Blogger kmr.krishnan said...
ஜாதகர் இந்தி திரைப் பாடகர் மறைந்த முகமது ரஃபி அவர்கள். பிறந்ததேதி 24 டிசம்பர் 1924. பிறந்த ஊர்; அமிர்தசரஸ்(பஞ்சாப்).பிறந்த நேரம் அதிகாலை 3 மணி 27 நிமிடங்கள் 15 வினாடிகள்.
11ம் வீட்டதிபதி மூன்றாம் இடத்தில் இருப்பதாலும், 10ம் வீட்டதிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து தன ஸ்தானத்தில் நின்றதாலும் வாய்ப்பாட்டினால் வருமானம்.
(இவருக்கு அடுத்தநாள் பிறந்தவ்ர் பாரத ரதனா அடல்பிகாரி வாஜ்பாய். இவர் அனுஷம் அவர் கேட்டை. ஜாதக அமைப்பு ஒன்றுபோல் உள்ளதால் குழம்பி விடாமல், பஞ்சாபில் பிறந்தவர் என்பதை வைத்துக் கண்டுபிடித்தேன்.)
Friday, January 12, 2018 2:16:00 PM
-------------------------------------------------------
9
////Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் முகமது ரஃபி
நாள் :24 டிசம்பர் 1924
நேரம் : காலை 3 .30 மணி
இடம் : கோட்லா பஞ்சாப்
நன்றி
Friday, January 12, 2018 3:34:00 PM
------------------------------------------------------
10
/////Blogger Rajam Anand said...
அன்புமிக்க வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
புதிரின் விடை
முகமது ராவி (Rafi) அவர் பிறந்த திகதி 24-12-1924.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Friday, January 12, 2018 3:55:00 PM
----------------------------------------------------
11
////Blogger Sathish Kumar said...
Mohammed Rafi
Date of Birth : 24 – 12 – 1924
Time of Birth : 03 : 30
Place of Birth : Kotla Suntan Singh
Friday, January 12, 2018 8:52:00 PM 
-----------------------------------------------
12
////Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பின்னணி பாடகர் திரு முகமத் ரபி அவர்கள்.அவர் பிறந்தது 24/12/1924 அதிகாலை சுமார் 5:45 மணியளவில்
Friday, January 12, 2018 10:02:00 PM
-----------------------------------------------------------
13
Blogger thozhar pandian said...
புகழ் பெற்ற பாடகர் முகமது ரஃபி. பிறந்த நாள் 24 டிசம்பர் 1924
Friday, January 12, 2018 11:06:00 PM
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.1.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 12-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  12-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? பஞ்சாப்பில் பிறந்தவர். அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.1.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!

1. பேராசிரியர் திரு. மோகனசுந்தரம் அவர்களின் அசத்தல் உரை:


2. பேராசிரியர் திரு. அருள் பிரகாஷ் அவர்களின் மனதைத் தொடும் உரை!


3. திரு.சுஜித்குமார் அவர்களின் உரை:



அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.1.18

ஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தான முதல்வர்!


ஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தான முதல்வர்!

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார்.

சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார்.
முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர்
அறையிலேயே இருப்பார். ’

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’
என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா
வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர்.

மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.

அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது
புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது.
பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய
சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா
தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே.
எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர்
ஆபிசுக்கு போன் போடுடா.கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம்
கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு
என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா
இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல்
 ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா
இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு
பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்?
என்றார்கள்.

நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்.
உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான்
நாம் பேசியிருப்பது முதல்வர் காமராசர் என புரிகிறது.
முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா
நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள
முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார்

காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா.
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரை வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார்.
காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு
நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் ரிஞ்சுகிட்டேன்..
எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு
உத்தரவு போட்டிருக்ககூடாது.

‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான்
செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை.

அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி
’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான்
தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை
மக்களுக்காகவே இருந்தார்....

இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு...
--------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.1.18

ஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்!!!


ஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்!!!

சக்கரபாணி திருக்கோயில்
கும்பகோணம்

மூலவர்:       சக்கரபாணி
 தாயார்:       விஜயவல்லி தாயார்
தீர்த்தம்        சக்கர படிதுறை
                       காவிரி ஆறு   

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

கோவில் உள்ளே உள்ள தீர்த்தம் அமிர்தபுஷ்கரணி தீர்த்தம் காசியை விட மகிமை கூடியது

 ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

பிரம்மாவும், அக்னி மற்றும் மார்க்கண்டேயர் இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர்.                       

தல சிறப்பு: 

இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.  கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. 

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். .

வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.

சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில்.

இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.
அவரின் எநிரே கருட பகவான்.

உட்பிரகாரத்தில்  விநாயகர் சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார். யோக நரசிம்மர் மற்றும்
வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

தல வரலாறு:   

ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்க பாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது.

 பிரம்மன் ஸ்ரீசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.
இந்த சக்கரம் சூரியனை விட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான். தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான். உடனே சக்கரம் அவனது ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிகொண்டது.

சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்ற வனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான். வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீசக்கரராஜன் அருட்காட்சி தத்தார்.
சூரியனின் கர்வத்தை அடக்கி சூரியனுக்கு ஒளி கொடுத்தார். . இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியன். 

கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோஷங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும்.
.
சுதர்சனம்

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான். இதன் சிறப்பைச் சொல்லும்போது, ‘எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி’ என்பார்கள் பெரியோர். ‘ஆதிமூலமே’ என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்தச் சக்கரத்தாழ்வார் தான். சினங்கொண்ட துர்வாசரால் ஏவப்பூட்ட பூதத்தை வீழ்த்தி, மன்னன் அம்பரீஷன் நினைக்கும் முன்பே, துர்வாசரையும் துரத்திச் சென்றவர் இந்த சுதர்சனர். சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள்…உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர் ஸ்ரீசுதர்சனர். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.

ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-

ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||    

மூர்த்தியை, ‘ஷோடசாயுத ஸ்தோத்திரம்’ சொல்லி வழிபடுவது மிகச்சிறந்த பலனைத் தரும். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். இதைப் போன்றே, ஸ்ரீகூர நாராயண ஜீயர் அருளிய சுதர்சன சதகமும் விசேஷமானது.

செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும்.

 இக்கோயிலை பக்தியுடன் பிரதட்சணம் செய்தால் திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி இருப்பதால் பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வஅர்ச்சனையும் செய்யப்படுகிறது

சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்தால் மிகுந்த நலன் தரும்.

திருவிழா:   
 மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருடசேவை நடக்கும். அட்சய திருதியை அன்றும், ரத சப்தமி அன்றும் திருக்கல்யாணம் நடத்தப்படும். வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.1.18

Cinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி!!!


Cinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி!!!

அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.

இன்றைய நாயகிகள்  நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, என நம்பர் ஒன் நடிகைகள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஒரே உருவெடுத்து கதாநாயகியாக இன்று நடிக்க வந்தாலும் ஒருவரைப் பற்றி பிரமிக்காமல் இருக்க முடியாது.அவர் தான் கன்னடத்துப் பெண்மணி, அபிநய சரஸ்வதி என்று அன்புடன் எல்லோராலும் அழைக்கப்படும் பைரப்பா சரோஜாதேவி.

காதல் நாயகனிடம் ஒரு கெஞ்சல் மொழி,
பாசத்துக்குரிய தந்தையிடம்  ஒரு கொஞ்சல் மொழி,
அன்பானவர்களிடம் ஒரு கிள்ளை மொழி என தத்தைக் கிளிக்கே வித்தை கற்றுத் தந்தவர் இவர். எந்தக் கோணத்திலும் இவர் பார்வைக்கு மிகவும் அழகானவர். பெரும்பாலான டைரக்டர்கள் கேமராவை இவருக்குப் பின் வைத்து முன்னால் நடந்து போகச் சொல்வார்கள். ஆனால் இவருடைய ஒப்பனைதான்  சற்று
ஒவராக இருக்கும்.

திரையில் இவருக்கு கிடைத்த பாடல்கள் -  காதல் பாடல்களாகட்டும் சரி,  அல்லது சோலோ பாடல்களாகட்டும் இவருடைய சாதனை வீச்சை அதிகரிக்கவே செய்தன.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்,
உன்னை ஒன்று கேட்பேன்,
லவ் பேர்ட்ஸ் என்று பட்டியலிட ஆரம்பித்தால், நூறு பாடல்களுக்கு மேல் இவர் பெயரைச் சொல்லி வரிசைகட்டி நிற்கும்.

 திரை உலகில் கதாநாயகனாக ஜொலித்த அன்றைய ஜாம்பவான்கள் பலர் இவருடைய கடைக்கண் காதல் பார்வைக்கு சொக்கித்தான் போனார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நடிகர்கள் தான் இப்படி எனில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என இவருக்கு காதல் விசிறிகளாக இருந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

 இவர் காலத்தில் நடிகை சாவித்திரி மார்க்கெட் கொடிகட்டிப் பறந்தாலும், மயிரிழையில் அவரை ஓவர்டேக் செய்து விட்டார் அபிநய சரஸ்வதி. சாவித்திரி பல சிக்கல்களை சந்தித்து சிரமத்திற்குள்ளாகி தவறான முடிவுகளால் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டதால் சரோஜாதேவி அவரை ஓவர்டேக் செய்தார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு நாடோடி மன்னன் தொடங்கி அரச கட்டளை படம் வரை எல்லோரையும் விட கச்சிதமாகப் பொருந்தியது சரோஜாதேவி மட்டுமே. எம் ஜி ஆர் அவர்கள் தனது நாடோடி மன்னன் படத்திற்காக சாதாரண நடிகையாக இருந்த அவரை ஒப்பந்தம் செய்ததும், எம்ஜிஆருடன் இவர் நடிக்கிறார் என்ற செய்தி மின்னல் வேகத்தில் பரவி, ஒவர் நைட்டில் ஒன்றல்ல இரண்டல்ல ,முப்பது படங்களில் ஒப்பந்தமானார் சரோஜாதேவி.

அதுதான் எம் ஜி ஆரின் முகராசி, கைராசி. அது போல் நடிகர் திலகத்திற்கு பாகப்பிரிவினை தொடங்கி ஆலயமணி, புதிய பறவை, பாலும் பழமும் என எத்தனை படங்கள்.ஜெமினியோடு கல்யாணப் பரிசு முதல் பணமா பாசமா வரை பல படங்கள். எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு,இப்படி ஒரு ஸ்ட்ராங் பவுண்டேஷன் இவரைத் தவிர வேறு எந்த நடிகைகளுக்கும் கிடைக்கவில்லை.

இதனால் பல நடிகைகளுக்கு இவர் மீது பொறாமை கூட இருந்தது. சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா போன்ற தமிழ் திரை உலகில் நடிகைகளான இவர்கள் நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும், அப்போது கொடி கட்டிப் பறந்த நாட்டியப் போராளி பத்மினியையே தங்களுடைய நளினமான பாவனைகளாலும், நடிப்பாலும் மிரட்டியவர்கள்.

அறுபதுகளை தமிழ்த் திரை உலகை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டவர் சரோஜாதேவி.  இரண்டு மகன்கள் இருந்தும் எந்த டி.வி. பேட்டியிலும் அவர்களைக் காட்டியதே இல்லை. ஒரு காலத்தில் இவருடைய கால்ஷீட்டிற்காக வரிசை கட்டி நின்ற படாதிபதிகள் ஏராளம். அந்த மகத்தான பெருமை  நடிகை சரோஜாதேவிக்குப் பின் வேறு யாருக்கும் எந்த நடிகைக்கும் இவர் அளவு மேடை கிடைத்ததில்லை.

ஹொன்னப்ப பாகவதரால் அடையாளம் காணப்பட்டு தன் சிறந்த பங்களிப்பை தமிழ் திரை உலகிற்கு அளித்த அந்த மகத்தான நடிகை சரோஜாதேவி இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்.
-----------------------------------------
7-1-1938 ல் பெங்களூரில் பிறந்தவர் திருமதி சரோஜா தேவி (தற்போது 80 வயது நிறைவு பெற்றவர்)

Saroja Devi was born in Bangalore, Her father Bhairappa worked for the police department, and her mother Rudramma was a homemaker.She was their fourth daughter. Her grandfather, Mayanna Gowda wanted her to be given away for adoption, but her father refused to do so. Bhairappa asked her to learn dancing, and encouraged her to take up acting as a career. A young Saroja Devi was accompanied often by her father to studios and he would patiently tie on her salangais and massage her swollen feet after her dancing stints. Her mother gave her a strict dress code: no swimsuits and no sleeveless blouses, which she followed for rest of her career.She was first spotted by BR Krishnamurthy when she was singing at a function at the age of 13 but she declined the film offer.
---------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!