மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

26.11.19

கருப்பு எள்ளின் மகத்துவம்!!!!


கருப்பு எள்ளின் மகத்துவம்!!!!

*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா...*

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே
இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக
அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு

தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிந்தால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..!

முக்கியமாக, எள்ளு சாப்பிடறதால புற்றநோய் வராமல்இருக்குமாம்.
அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது
அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!*
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே
எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை  கடைபிடித்து வருகின்றோம்.

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!*
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது
புற்றுநோயை எதிர்த்து நிற்பதே.

நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!*
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம்.

இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

*காரணம் என்ன..?*
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம்,
வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியிட்டது. அதில் கருப்பு
எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும்,
மூளை செல்களை மறு  உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம்

'Sesamin' தான்.

*Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில்
கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது.

குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள் அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில்,
கருப்பு எள் தான். எள் பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான்
மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை
விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து, வைட்டமின் - A & Bஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல்,
ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்..

*அழுக்குகளை வெளியேற்ற*
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..?
தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன்
சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன்
சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

*உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின்
ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது*.

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள்.

🍀*1. *ஆரோக்கிய இதயம்*
 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது,
அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*🍀2.* *நீரிழிவு*
 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின்
சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு
வருவதைத் தடுக்கும்.

*🍀3.* *வலுவான எலும்புகள்*
 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும்
இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍀*4. *செரிமான பிரச்சனை*
 மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில்
சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு,
செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

*🍀5.* *சுவாசக் கோளாறு*
 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால்,
இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

*🍀6.* *இரத்த அழுத்தம்*
 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது
நல்ல பலனைத் தரும்.

🍀*7. *பளிச் பற்கள்*
 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

*🍀8.* *புற்றுநோய்*
 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை
அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

🍀9. *அழகான சருமம்*
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின்
நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின்
வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

🍀10. *புரோட்டீன்*
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான்.
🍀நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு
ஒரு சிறந்த உணவுப் பொருள்.

இதனை பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே
---------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.18

வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்


வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்

*வெந்நீரின் பயன்கள்*

இதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

*சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?*

காலையில் எழுந்து, வெரும் வயிற்றில்  சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*குறிப்பு:*

 *தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.*

*சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்*

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

✔ 3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ 9 மாதங்களில்    கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!! குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர்  இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. *இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்*

*இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது* கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

*தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.

-டாக்டர் டி. மென்சா-அசரே
--------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.18

ஏலக்காய்களின் மகத்துவம்


ஏலக்காய்களின் மகத்துவம்

ஏலக்காய் (Cardamom )..!

பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும்,

கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.

4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய்.

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென்,
கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

மின்னஞ்சலில் வந்ததை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.7.17

லெக்கிங்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!!!

லெக்கிங்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!!!

லெக்கிங்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா?

பெண்கள் லெக்கிங்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கிங்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா? இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா?

லெக்கிங்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம். ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா?

உடல் சூடாகிறது

இறுக்கமான உடைகள் மற்றும் லெக்கிங்ஸ் அணிவது, சருமத்தில் வறட்சியை உண்டாக்குகிறது. இது சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வியற்வை மூலமாக வெளியேற அனுமதிப்பதில்லை. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.

பாக்டிரியா மற்றும் பூஞ்சைகள்

இறுக்கமான உடைகளை அணிவதால் சில இடங்களில் சிவப்பு கொப்புளங்கள் உண்டாகிறது. கால்களில் உள்ள வேர்கால்கள் அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாக்டிரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன. இரவிலாவது தளர்ச்சியான உடைகளை அணிவது சிறந்தது.

படர்தாமரை

பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடல் சூடு காரணமாக உள்ளது. இறுக்கமான ஆடைகள் அணிவதால் உடல் சூடு வெளியேற முடியாமல் போகிறது. மேலும் அதிகப்படியான வியற்வையும் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் அரிப்பு, உடல் சிவப்பாதல் ஆகியவை உண்டாகிறது.

இது படர்தாமரை வர காரணமாக உள்ளது. படர்தாமரையால் உண்டாகும் அரிப்பு தாங்கமுடியாதது. மேலும் இது பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான உடைகளை அணிவது அதிகமான வியற்வை தேங்க வழிவகுக்கும்.

அரிப்பு

படர்தாமரையை விட கொடுமையானது அரிப்பு தான். இது பூஞ்சைகளினால் உண்டாகிறது. உடல்பயிற்சி மற்றும் ஓடும் போது லெக்கிங்ஸ் அணிவதால் அதிகமான வியற்வை உண்டாகிறது. இதனால் பல தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உடற்பயிற்சி முடிந்ததும், உடையை மாற்றிவிடுவது நல்லது, மேலும் சுத்தமாக குளிப்பது அவசியம். பூஞ்சைக்கு எதிராக செயல்படும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

ஈஸ்ட் தொற்று

அதிகப்படியான பெண்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்ட் சூடாக இருக்கும் இடத்தில் நன்றாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் அணியும் லெக்கிங்ஸ் அது வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது. நாள் முழுவதும் லெக்கிங்ஸ் உடன் இருப்பது தவறானது.

வறட்சியை உண்டாக்குகிறது

லெக்கிங்ஸ் உங்களது உடலின் ஈரப்பதத்தை குறைத்து உடல் அரிப்பு ஏற்பட காரணமாவதுடன், லெக்கிங்ஸில் இருக்கும் தூசிகள் உங்களது தோலை வறட்சியடைய வைக்கிறது. இறந்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வலியை உண்டாக்கும் சிவப்பு புண்களை உண்டாக்குகிறது. லெக்கின்ஸை கழட்டிய உடன் குளிக்க வேண்டியது அவசியம்

உடல் எடையை அதிகரிக்கிறது

லெக்கிங்ஸ் அணிவதால் உடல் அதிகரிக்கிறது. சதைகள் இறுக்கமாகி தோற்றத்தையும் கெடுக்கிறது.

ஆகவே லெக்கிங்ஸ் தேவைதானா என்பதை யோசித்து நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!!!

இந்தப் பதிவு இளம் பெண்களுக்கு மட்டுமில்லை! வீட்டில் இளம் பெண்களுடன் இருக்கும் வயதான அப்பாக்களுக்கும், மாமாக்களுக்கும் (அதாவது மாமனார்களுக்கும்) மற்றும் சகோதரர்களுக்கும்சேர்த்துத்தான்!!!

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.16

Health care: ஒரு வேளை மருந்தில் ஓடிப் போகும் மஞ்சள் காமாலை நோய்!


Health care: ஒரு வேளை மருந்தில் ஓடிப் போகும் மஞ்சள் காமாலை நோய்!

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
***********************
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை ஒருவர் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு நண்பரின் மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காண தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.

அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தார்.

ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது. ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான். சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார். பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன். மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன். அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது. மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும் இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி     விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை வழக்கமான உணவு உண்ணலாம்.

பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர் வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம். பையன் முகத்தில் ஒருத் தெளிவு. மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.

அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரை  தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம் கெங்கராயம்பாளையம் உள்ளது.
==========================================================
2
 *எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்தத் தகப்பனும்* *தன் மகனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை* *இவ்வளவு தெளிவா சொன்னதில்ல...!!!*
*.*
*.*
*பரீட்சையில் நீ எழுதும் ஒவ்வொரு தவறான பதிலும்,* *உன் எதிர்கால வாழ்க்கையில் நடக்கப்போகும் தேனிலவை சுவிட்சர்லாந்திலிருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றும்...!!!*
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.3.16

மருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து!


மருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து!

வெங்காயத்தை எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்னென்ன?

இங்கே கூறியுள்ள மருத்துவம் சின்ன வெங்காயத்தை வைத்து. அதை மனதில் கொள்க!

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள நேரத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
=====================================================
முக்கிய வேண்டுகோள்:

மாதம் ஒன்றிற்கு 20 ல் இருந்து 25 பதிவுகள் வரை பதிவு செய்து வருகிறேன். இங்கே சராசரியாக தினமும் 5,000 பேர்கள் வந்து படித்துவிட்டுச் செல்கிறார்கள். அத்தனை பேர்களும் விரும்புகிற மாதிரி அல்லது அத்தனை பேர்களுக்கும் பிடிக்கின்ற மாதிரி பதிவுகளை வெளியிடுவது கடினம்.
5ல் இருந்து 10 சதவிகிதம் பேர்களுக்கு சில பதிவுகள் பிடிக்காமல் போகலாம். அல்லது கருத்து வேறு பாடுகள் ஏற்படலாம். அவர்கள் எல்லாம் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம், நான் மட்டுறுத்தல் செய்வதில்லை. வரும் பின்னூட்டங்களை அப்படியே வெளியிடுவதுடன். அவற்றிற்கு எனது பதில்களையும் எழுதுகிறேன். ஆகவே பதிவுகளைப் படிப்பவர்கள், பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன்

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.11.15

தினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்!


தினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்!       

ரசம் பற்றிய ஒரு அலசல்

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப்
பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம்,
புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி
முதலியன சேர வேண்டும்.

இந்த ஒன்பது பொருட்களும்  ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
புளிரசம்,
எலுமிச்சை
ரசம், மிளகு ரசம்,
அன்னாசிப் பழரசம்,
கொத்துமல்லி ரசம்
என்று பலவிதமான  சுவைகளில் ரசத்தைத்  தயாரித்தாலும் இந்தப்
பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
பல நோய்களைக் குணமாக்கும் மாற்று  மருந்து (Antidote) தான் இந்த
ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது
போக்கிவிடுகிறது. அயல்  நாட்டினர்  உணவு முறையில் சூப்புக்கு
முதலிடம் கொடுத்துள்ளனர்.

இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும்
பசியின்மை, செரியாமை,  வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு,
ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும்
இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம்
பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக்
குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு,
ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள்
அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல்
தடுக்கிறது. மூளைக்கும்  உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
 நரம்புகள் சாந்தடைவதால்  நோய்கள் குணமாகின்றன.
அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும்  மாவுச்சத்தும்
 பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால்,காய்ச்சல்  தணிந்து
சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.  உடல்  சூடு, நாக்கு வறட்சி முதலியன
அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
மாதவிலக்கு  சம்பந்தமான கோளாறுகள்  வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள்  சிறப்பாகச்
செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும்,
நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக்
குணப்படுத்தவும், ரசத்தில் சேரும்  கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது.

கறிவேப்பிலையால்  ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து
 நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக்
கோளாறு, குடல் பூச்சிகள்,  சிறுநீரகத்தில் உள்ள கற்கள்,
 கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.
 இதயத்திற்கு  இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள்
தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில்
புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும்,
‘சி’வைட்டமின்களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல்
கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி,தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை
ரசத்தில் சேரும்  இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.

மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில்
காசம்  முதலியவற்றையும் குணமாக்கி,  குளிர்காய்ச்சலையும்
தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை
முதலியவற்றை ரசத்தில்  சேரும் மிளகு, சக்தி  வாய்ந்த
உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும்,
மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல்
தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில்  குடைச்சல், தலை சுற்றல்
முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான  கோளாறுகளை
நீக்கி வயிற்றைச் சுத்தமாக  வைத்திருக்க  உதவுகிறது.  ரசத்தில்
புளியின்  அளவை மட்டும் மிகக்  குறைவாகச்  சேருங்கள்.

 மழைக்காலத்தில்  உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே
நோய்களைத் தடுத்துவிடுவதால்,  ரசத்தின் உதவியால்
ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக்  காப்பி, டீ
 முதலியவற்றால் வரும்  பித்தம் முதலிய  வற்றையும், தினசரி
 உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே,  ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும்
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

இணையத்தில் படித்தேன். உங்களுக்குப் பயன்படட்டும் என்று பதிவில் ஏற்றியுள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.10.15

புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படல் பெரிதாகத் தெரியும். நீங்கள் பாரப்பதற்கு வசதியாக இருக்கும்
---------------------------------------------------------------------
புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?

பசு காப்பாற்றியதா அல்லது காப்பாற்றவில்லையா? விபரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்
---------------------------------------------------------------------------------------------
புற்றுநோய்லிருந்து என்னை காப்பாற்றிய பசு :
written by Amit Vaidhya
________________________________________
நான் அமித் வைத்யா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்று என்னுடைய
27 வயதிலேயே தொழில் ரீதியில் மிக உயர்த நிலையை அடைந்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்தவன் .சுறுசுறுப்பான வாழ்க்கையானாலும் ஆரோக்யமான வாழ்க்கை அல்ல. வயதுக்கு மீறிய சாதனை செய்தவன் .

"என்னுடைய கனவுகளெல்லாம் என்னுடைய தந்தை இறந்த சில மாதங்களுக்கு பின்னர் எனக்கு முதல் நிலை புற்றுநோய் தாக்கி உள்ளது என்று கண்டுபிடித்ததற்கு பின்னால் தகர்ந்தது". நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

சிலமாதம் ஓரளவு உடல் நிலை சரியாக இருந்தது. ஆனால் தீடீர் என்று என்னுடைய அம்மாவுக்கும் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக சில நாட்களில் உயிர் இழந்தார். அதற்கு பிறகு எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவ ஆரமித்தது. குடலில் பரவிய அது வேகமாக என்னுடைய நுரையீரலையும் பதம் பார்த்தது.

ஒரே பிள்ளையான நான் தனிமையாக உணர்ந்தேன்.

மருந்துகளையும் மாத்திரைகளையும் என்னுடைய உடல் ஏற்க மறுக்கிறது என்றும் நான் இன்னும் சிறுது நாட்களில் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். முதலில் அச்சப்பட்ட நான் பின்பு என்னுடைய பெற்றோர்களை பார்க்க போகிறோம் என்று தேற்றிக்கொண்டேன். என்னுடைய மரணதிற்கான ஏற்பாடுகளை நானே செய்தேன்.

இறப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்களை சந்திக்கும் ஆவலில் இந்தியாவிற்கு கிளம்பினேன். உடல் இருக்கும் நிலையில் இந்திய மண்ணில் என்னுடைய கால் படுமா என்று தெரியவில்லை. வந்து சேர்ந்தேன்.

உறவினர்கள் என்னுடைய நிலைமையை நினைத்து வருந்தினார்கள். அவர்களில் ஒருவர் மாற்று மருத்துவம் ஒன்று புற்றுநோய்க்கு குஜராத்தில் உள்ளதாகவும் செலவே இல்லாததாகவும் சொன்னார்.

இறப்பின் விளிம்பில் இருக்கும் நான் சரி பார்போம் என்று அங்கு சென்றேன். யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசும் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் அடங்கிய பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டது..கீமோ தேரோபியில் அத்தனை சுவையையும் இழந்த நான் நம்பிக்கையோடு அதை அருந்தினேன். சிலநாட்களில் என்னுடைய புற்றுநோய் பரவாமல் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொன்னது.

40 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை தொடர முடிவு செய்தேன். அங்கே ஒரு விவசாயி எனக்கு தன்னுடைய வீட்டில் சிறிய அறையைக் கொடுத்தார். கூடவே அன்பையும் கொடுத்தார். சில நாட்களில் என்னுடைய புற்றுநோய் குறைந்து இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் சிறிது நடக்க துவங்கினேன் பின்னர் நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது, நடந்த நான் ஓடத்துவங்கினேன், என்னுடைய இருண்ட வாழ்கையில் மகிழ்ச்சியை உணரத் துவங்கினேன். 18 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் எனக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகியது.

மரணத்திற்கான ஏற்பாடுகளை செய்த நான் வாழ்வதற்காக ஏற்பாடுகளை துவங்கினேன்.

தற்போது "ஹீலிங் வைத்யா" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் பாதிக்க பட்டவர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருகின்றேன். நான் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. எனக்கு இந்தியா நிறையக் கொடுத்துள்ளதை உணர்ந்துள்ளேன். அதே நேரத்தில் இந்திய மக்கள் இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன்..

தற்போது புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.....
புனித புற்றுநோய் --- புற்றுநோயிலிருந்து என்னை காப்பாற்றிய பசு
மேலும் படிக்க : www.healingvaidya.org
http://www.live4todayamit.com/press.html.  
============================================
மேலதிகத் தகவலுக்கு இதையும் க்ளிக்கிப் படியுங்கள்:
http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_panchakavya.html
=================================================================
Please share this msg. Maybe useful to someone

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!