மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.12

Astrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?


Astrology  பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 9

அவிட்ட நட்சத்திரம்

கோரக்கர் என்னும் பெயரைக்கொண்ட சித்தர் ஆலயங்களுக்கு யாத்திரையாக வந்தபோது, இத்தலத்திற்கு வந்தாராம். வந்தவர் இங்கே உறையும்
சிவபெருமானைத் தரிசித்துவிட்டு, அருகில் இருந்த மடம் ஒன்றில் தங்கினாராம்.

அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் மடங்களும், வீட்டுக்கு வீடு திண்ணைகளும் இருந்தன. வழிப்போக்கர்களும், பயணிகளும் இரவு நேரத்தில் தங்கிச் செல்வார்கள்.

அப்படி மடம் ஒன்றில் தங்கிசென்றபோது கோரக்கர் (என்ன பெயருடா சாமி) ஒரு சோதனைக்கு உள்ளானார். பல பக்தர்கள் முன்பே அங்கு தங்கியிருந்தனர்.
அவர்களோடு ஒரு ஓரமாகப் படுத்திருந்த கோரக்கர் அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழித்தவருக்கு, அதிர்ச்சியாக இருந்தது. அருகில்  ஒரு இளம் பெண் படுத்திருந்தாள். அத்துடன் அவளுடைய சேலைத்தலைப்பு விலகி, இவர் மேற்கிடந்தது. அப்பொழுதெல்லாம் ஒன்பது முளம் சேலை. பெண்கள் ரவிக்கை (Blouse) அணிவதில்லை. அதனால் இறுக்கி முடிந்துகொண்டுதான் படுப்பார்கள். அப்படி இருந்தும் எப்படி விழுந்தது என்று தெரியவில்லை.கோரக்கர் மிகவும் வருத்தமுற்றார்.

அதற்குப் பரிகாரமாக தன் கையை வெட்டிக் கொண்டு விட்டார். பிறகு அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் தினமும்
இருமுறை நீராடி, வெட்டுப்பட்ட கையோடு ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லித்தாயாரையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவனார் அந்தச் சித்தருக்கு அருள்பாலித்தார். சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை என்ற பெயர் உண்டானது. தனது வெட்டுண்ட கையால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பெற்றது. காலப்போக்கில் அது கொருக்கை என்று மாறி விட்டது.

பிரம்மாவிடம் இருந்த வேத நூற்சுவடிகளை அசுரரகள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். அந்த நிகழ்வால், பிரம்மாவினால் இயல்பாக இருக்க முடியவில்லை. படைப்புத் தொழிலையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவர் இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, பாதப்பிரதட்சணம் செய்து தினமும் சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நன்நாளில், சிவன் பிரம்மாவிற்கு ஞானம்  (wisdom) கொடுத்தார். அதனால் பிரம்மா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி முன்போலவே சிறப்பாகச் செயல் புரிந்தார். அதனால் இத்தலநாதன் பிரம்ம  ஞானபுரீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்.

இறைவன் இங்கே சுயம்பு மூர்த்தி. சிவனுக்கும் அம்பிகைக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த  காரியம் நடக்கும் என்பது இங்கே நிலவும் நம்பிக்கை.
     
அருள்மிகு பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை என்னும் கிராமத்தில், பட்டீஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. அந்தப்
பட்டீஸ்வரம்  கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சுவாமியின் பெயர் பிரம்மஞானபுரீஸ்வரர். தாயாரின் பெயர், அதாவது அம்பிகையின் பெயர் புஷ்பவல்லி.  கோவிலின் முன் உள்ள திருக்குளத்தின் பெயர்: சந்திர புஷ்கரிணி. 1000 ஆண்டுகட்கு முற்பட்ட புராதனக்கோவில். கோவிலின் நடை காலை 11 மணி முதல் 1  மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாசிவராத்திரியன்று திருவிழா நடைபெறும்.

மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் நீங்கிச் சுகமடைய இத்தல இறைவனை வழிபாடு செய்வது நல்லது. அத்துடன் கல்வியில்  சிறக்க, திருமணத் தடைகள் நீங்க, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்வதும் நல்லது. அதாவது நன்மை பயக்கும்!

ஆவணிமாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பெளர்ணமியும் சேர்ந்துகொள்ளும். அன்றைய தினம் இங்கே வந்து வழிபடுதல் மேன்மை உடையதாகும்

கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்து, இத்தலத்திற்கு திருப்பணி செய்வது நல்லது. அது புண்ணியக் கணக்கில்  வரும்! பணத்தை மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் புண்ணியத்தையும் சேருங்களேன்!
+++++++++++++++++++++++++++
ஆவணி அவிட்ட நட்சத்திரம் பற்றிய மேலதிகத்தகவல்:



கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி
அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

 சோ  நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற
சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது
உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம்
செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது.
அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.

கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது
எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?

சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா  வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான்
இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து
விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,

இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.

தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம்  நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.

ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ,
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது
எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே
அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து  விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம்  உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.

நன்றி: திருவாளர் சோ.ராமசாமி அவர்கள் மற்றும் சோ அவர்களின் செய்திகளைத் தொகுத்தளித்த திருவாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: மகிழ்ச்சியான செய்தி - வாத்தியார் வெளியூர்ப் பயணம். நாளை ஒருநாள் வகுப்பறைக்கு விடுமுறை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

30.1.12

Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?



Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?

Star Temples - Part 8

தேவயானி என்ற பெயரைப் பார்த்தவுடன், கோடம்பாக்கம் நினைப்போடு நீங்கள் உள்ளே நுழைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!

இது வேறு தேவயானி!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் முன்னொரு காலத்தில் நடந்த கடும் யுத்தத்தில், அசுரர்களில் பலர் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் போய்விட்டார்கள்.

அவர்களுக்கு ஏதய்யா மேல் உலகம் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். எல்லோருக்குமே ஒரு மேல் உலகம் உண்டு. ஒபாமாவுக்கும் உண்டு உங்களுக்கும் உண்டு எழுதும் எனக்கும் உண்டு. அதுதான் இறைவன் இருக்குமிடம். சிவலோகம் அல்லது வைகுண்டம் அல்லது சொர்க்கம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரவர் நோக்கப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றிற்குப் போய்விட்டார்கள். அதாவது மரணமடைந்து விட்டார்கள்.

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சக்திவாய்ந்த மருதசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் இறந்துபோன அத்தனை பேர்களையும் மீண்டும் உயிர் பெறச்செய்தார்.

அந்த மந்திரம் தெரிந்தால், தங்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நினைத்த தேவர்கள் ஒரு ஆசாமியைப் பிடித்தார்கள். அவன் பெயர் கசன். குரு பகவானின் மகன். அவனைச் சரிகட்டி அனுப்பிவைத்தார்கள். மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுவருவதற்காக. அவனும், அசுரகுருவிடம் சென்றான்.
அவனுடைய தந்தை குரு பகவானும் அவனை ஆசிர்வதித்து அசுரலோகத்திற்கு அனுப்பிவைத்தார்.

சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி அவனுக்கு உதவி செய்ய, அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். இதைக் கண்ணுற்ற அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்குப் ஆபத்து வந்துவிடும் என நினைத்து, கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில், சாம்பலைக் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார்.

கசனைக் காணாது கலங்கிய தேவயானி, கசனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொல்லும்படி தன் தந்தையிடம் வேண்டினாள்.

அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு, தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான்.

சுக்கிராச்சாரியார், தன் மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று அவனிடம் கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவருடைய மகள் தேவயானி தனக்கு சகோதரி முறை வேண்டும் என்று கூறி, அவரது வேண்டுகோளைக் கடாசி விட்டு, தேவலோகத்திற்குப் புறப்பட்டான்.

கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை சப்தமலைகளாலும் தேவலோகத்திற்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டாள். பையன் அசுரலோகத்தில், தேவயானியின் அரவணைப்பிலேயே தங்கும்படியாகிவிட்டது.

கசனைக் காணாத குருபகவான், தன் மகனை மீட்டுத்தரும்படி பெருமாளை வேண்டி, தவமிருந்தார். பெருமாள், கருணை கொண்ட பெருமாள், சக்கரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு குருபகவானின் வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த தலத்தில் எழுந்தருளினார்.

அந்தத்தலம்தான் இன்று சித்திரரத வல்லபபெருமாள் கோவில் இருக்கும் இடம்.

சித்திரை நட்சத்திர தலம் அது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமியன்று), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் அவர், சித்தி ரரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.

எனவே அத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.

அத்தல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம்.

கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.  குருபார்க்கக் கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலன் அடையலாம். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிராத்தனை செய்து வலம் வந்தால், பலன் கிடைப்பது நிச்சயம்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தைக் கையில் ஏந்தியபடி இந்தப் பெருமாளை சுற்றி வருவது நல்லது. நன்மையளிக்கும்.

கோவில் இருக்கும் இடம்: குருவித்துறை என்னும் சிறு கிராமம். ரியல் எஸ்டேட்காரர்களின் கையில் சிக்கி தனது அடையாளத்தை இழக்காத சிறு கிராமம்.

மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது.

தில்லியில் வாசம் செய்தவாறு அரசியல்வாதிகள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கும் அன்பர் சுப்பிரமணிய சுவாமியின் சொந்த ஊர்தான் இந்த சோழவந்தான்,

அங்கே செல்ல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன. வசதி உள்ளவர்கள் வாடகை ஊர்திகளில் சென்று வரலாம். குலுக்கல் வண்டி - அதான் நம்ம ஆட்டோ ரிக்ஷா வசதியும் உள்ளது.

பவுர்ணமி நாட்களில் அல்லது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் செல்வது உசிதமானது.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30மணி முதல் - மதியம் 12 மணி வரை. பிறகு மாலை 3மணி முதல் - 6 மணி வரை. விழாக்காலங்களில் இந்த நேரம் மாறுபடும்.
-------------------------------------------------------------
‘Star of Prosperity’ என்று புகழப்படும் சித்திரை நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் பற்றிப் பிறகு பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்

புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம். அதுதான் உசிதமானது. நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி எழுதுகிறேன். சுக்கிராச்சாரியாரின் மருதசஞ்சீவினி மந்திரம், கசனைக் கொன்று, எரித்து சாம்பலை டாஸ்மாக் சரக்கில் சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்த செயல்கள் எல்லாம் நடக்குமா?’ என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கான தலம் குறிவித்துறையில் இரூக்கிறது என்ற தகவலை மட்டும்  எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28.1.12

சொல்லின் செல்வர்

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 6 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள். பங்கேற்றவர்களைப் பாராட்டத் த்யங்காதீர்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------

பொய்யும் புறமும் வேண்டாமே!
ஆக்கம்: ஆலாசியம்.கோ. சிங்கப்பூர்

பொய் சொல்லால் ஆகாதப்பா நம்பி
மெய்க்குப் புறஞ் சொல்லல் ஆகாதப்பா!
கத்தியை கழுத்தில் அழுத்திய போதும்
கத்தி, கத்தி மிரட்டியே நினைக்கொடுங்
கயவர்கள் கூட்டம் சூழ்ந்துக் கடும்
பயம் காட்டிய போதிலும் - கொடும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி
தீயப்புறஞ் சொல்லல் ஆகாதப்பா!

பெட்டி நிறையப் பணம் தந்த போதிலும்
கட்டியணைத்து உச்சி முகர்ந்த போதிலும்
மெச்சியுனை மேனித் தழுவிய போதிலும்
இச்ஜகத்தை எழுதிக் கொடுத்தப் போதிலும்
பிச்சைபுக நேர்ந்திட்டப் பொழுதிலும் -மனம்
இச்சைகொண்டே ஆட்டி வைத்தப் போதிலும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி!
பேய்க்குணப் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!

தாய் தன்னை கொல்வேன் என்றாலும் - நல்
ஆயத்தந்தையை வெட்டி வீழ்த்தவே வந்தாலும்
சேய்தனை கடத்திச் சென்றாலும் - நின்
நேய மனைவியை நெருப்பிலிட துணிந்தாலும்
தாயனத்தகும் வேதமறைதனை வீதியில் எறிந்தாலும்
தூய உண்மையன்றி; வேறுபலக் கேடுறும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பீஇ - அறம்
மாய்க்கும் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!

பொன் பொருள் போனாலும் -புது
மண் மனையும் போனாலும்; இளங்
கன்றோடு பசுவும்; ஏருழும் எருதுகளோடு;
வண்டி, மாடுகளும் போனாலும் - நம்
வாழ்வதே போன தென்று - நின்
வாழும் வகையறியாது வயிறெரிந்து நின்றாலும்
பாழும்பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி!
தாழும் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!

நாளுமிதை மறவாமல்; நான்மறை உண்மையிதை
முருகவேல்கொண்டே உயிரில் எழுதிடப்பா -அருக
முக்கண்ணன் மகன் முருகனுனக்கு; எங்கும்
எக்கணமும்; துணைவரு வானப்பா -அதனாலே
முக்காலமும் தீமையே தரும்; பெருந்தப்பான
பொய்சொல்லல் ஆகாதப்பா நம்பி - விடக்
காயொப்ப புறஞ்சுவைத்தே அரும்பெரும் மானிடப்
பிறப்பே மாண்டிட கூடாதப்பா!


இலக்கியவாதி, பாரதி பித்தர், அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தஞ்சைப் பெரியவர் திரு வெ. கோபாலன்  ஐயாவிற்கு இந்தக் கவிதை சமர்ப்பணம். 
கோபாலன் ஐயா அவர்கள் தனது நூலகத்தில்
கவிதைப் பிறந்த சூழல் நமது தஞ்சாவூரார் திருவாளர் வெ. கோபாலன் ஐயா அவர்களின் வலைப் பதிவில் உலாவரும் போது என்னை வாசித்த இந்த இடத்தில் ஒரு பொறித் தட்டியதால் பிறந்ததிந்த கவிதை. மேலும் திரு கோபாலன் ஐயாவிற்கே இந்தக் கவிதை சமர்ப்பணம்.

“இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.

ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.

உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.”

முழுவதையும் படித்து முடிக்க; முடுக்க வேண்டினால், இங்கே சொடுக்கவும்:
 
http://tamilnaduthyagigal.blogspot.com/2011/08/blog-post_06.html

ஆக்கம்: ஆலாசியம். கோ, சிங்கப்பூர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

சகோதரி தேமொழி வரைந்த வரைபடம்




புதிய முயற்சியாக சகோத்ரி தேமொழி அவர்கள் கணினியில் வரைந்த ஓவியம்

படம் வரைவதற்கு சகோதரி பயன்படுத்திய I' Pad
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
சொல்லின் செல்வர்
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்;படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்பார்கள்.

இந்தச் சொல்லடைவு பொருளற்ற‌ சொற் குவியல்களைப் பற்றி சிறிது அயர்ச்சியுடன் அறிவாளிகள் சொல்லியது.

ஆனாலும் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

சொன்னாலும் துக்கமடா.. சொல்லாவிட்டால் கஷ்டமடா...

வாய்க் கொழுப்பு சில சமயம் சீலையில் வழிந்து விடத்தான் செய்கிறது.

அதற்காக எல்லோரும் மெள‌னம் காத்தால் செயல்பாடுகள் நின்று போகும்.

ஊமைக்கு உளறுவாயன் தேவலை...

தீயினார் சுட்டதைப் 'புண்' என்ற வாசுகியின் கணவ‌ர் நாவினாற் சுட்டதை 'வடு', 'மறையாத வடு' என்று சொல்லிவிட்டார். புண் ஆறினாலும் வடு நினைவு
படுத்திக் கொண்டே இருக்கும்.

'சொல்லின் செல்வர்' என்று ஆஞ்சனேய மூர்த்தியைக் கம்பன் சொல்வார். அதனையே சிலேடையாக்கி '(நான்) சொல்லின் (மற்றவர்) செல்வர்' என்பார் கிவாஜ.  (வாரியாரோ?);   என்ன பொருள்?  'நான் பேசத் துவங்கினால், பேச்சு பிடிக்காமல் மக்க‌ள் கலைந்து செல்வர்' என்று பொருள்படும்.

முன்பு இருமுறை 'இசைவாகப் பேசுவது எப்படி?"என்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றி நான் எழுதியதை ஐயா வெளியிட்டுள்ளார்கள்.

இப்போது எப்படி பேசக் கூடாது என்பதற்கு ஓரிரண்டு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன்.

சுதந்திரப் போராட்டக் காலத் தலைவர்களுக்கு அலங்காரமாகப் பேச வராது.நேரடியாகவும் சுருக்கமாகவும்தான் பேசுவார்கள்.

மேடைப் பேச்சையே ஒரு கலையாக மாற்றியதில் திராவிடக் கட்சிகளுக்கே பெருமை சேர வேண்டும். 'அவர்களே,அவர்களே' என்று  அவர்கள் நீட்டி முழ‌க்கிப் பேசுவது ஆரம்பக் கால கட்டத்தில் ரசிக்கப்பட்டாலும் பின்னர் அந்தப் பாணி சிறிது அயர்வையே கொடுத்தது. இருந்தாலும் கேட்பவர்களைப் பற்றியோ, நேர விரயம் பற்றியோ அக்கறை கொள்ளாமல் இன்றளவும் அப்படியே விளித்து வருகிறார்கள்.

1967 தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெருந்தலைவர் காமராஜர் "படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்று ஒரு கூட்டத்தில் கூறிவிட்டார்.

உண்மையாகவே அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதமே, 'நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து, எதிர்க் கட்சிகளை பிளவு படுத்தி வலு  விழக்கச் செய்து, தான் குறைந்த வாக்குகள் பெற்றும் காங்கிரஸ் அரசோச்சுகிறது. தன்னை விட்டால் மக்களுக்கு வேறு நாதியில்லை என்ற மெத்தனம் கொண்டு  விட்டது'என்பதுதான்.

பெருந் தலைவரின் இந்தப் பேச்சு எதிர்கட்சிகளின் வாதத்தை உறுதி செய்வதாக அமைந்தது. "பாருங்கள். எவ்வளவு அகங்காரம். மக்களிடம் சென்று வாக்குக்
கேட்காமலேயே படுத்துக்கொண்டே வெற்றி பெருவாராம்"என்று பட்டி தொட்டி எல்லாம் குட்டித் தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். இராஜாஜி மேடை
மேடையாக ஏறி "அவர் படுப்பது நிச்சயம்! ஜெயிக்கிற‌துதான்  சந்தேகம்'என்று பேசினார்.'குல்லுகபட்டர்' வாக்கு பலித்தேவிட்டது.

ஆம்!உண்மையாகவே காமராஜர் ஒரு விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சென்று படுக்கும்படி ஆகிவிட்டது.தேர்தலிலும் ஒரு பிரபலம் இல்லாத கல்லூரி  மாணவனிடம் தோற்றுப் போனார் பெருந்தலைவர்.

மகாத்மா காந்திஜியை சர்ச்சிலுக்கு சிறிதும் பிடிக்காது. 'அரை நிர்வாணப் பக்கிரி'என்று மாஹாத்மாவை சர்ச்சில் குறிப்பிட்டுள்ளார். காந்திஜி அதனால் ஒன்றும்  குறைந்துவிடவில்லை. இன்று சர்ச்சிலை விட இங்கிலாந்தில் புகழ் பெற்றவராக நம் அண்ணல் விளங்குகிறார்.ஆனால் சர்ச்சில் அண்ணலைப் பற்றிச் சொன்னது  வடுவாக நம் மனதில் பந்திந்து விட்டது.

அறிஞர் அண்ணாவும் மற்ற திராவிடத் தலைவர்களும், நாடகம், சினிமா மூலம்தான் மக்களிடம் புகழ் பெற்றார்கள்.அதனால் அவர்களை சிறிது ஒழுக்கத்தில்  கொஞ்ச‌ம் 'வீக்' என்பது போல எதிர்கட்சிகள் இரண்டாந் தரவரிசைப் பேச்சாளர்களை விட்டுப் பேச வைப்பார்கள்.

அப்போது நடிகைகளில் பானுமதி புகழோடு இருந்த சமயம்.அண்ணா அவர்களோடு பானுமதியை முடிச்சுப்போட்டு ;கிசு கிசு; மிகவும் பாபுலர்.
அண்ணாவிடமே கேட்கப்பட்டது.அண்ணா சொன்னதாகச்சொல்வார்கள்:

"நானும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல; பானுமதியும் படிதாண்டா பத்தினியல்ல.."

இந்தப் பேச்சு அண்ணவின் மதிப்பைச் சற்றே குறைப்பதாகவே உள்ளது. அவர் அப்ப‌டி சொல்லியிருந்தால் பனுமதியின் கெள‌ரவத்தைக் கணக்கில் எடுக்காமல்  பேசப்பட்ட வார்த்தை.பானுமதி இதற்கு எவ்வாறு எதிர் வினை ஆற்றினார் என்று தெரியவில்லை.

சமீபத்தில் நாம் பார்த்த உதாரணம் வடிவேலு.படங்களில் நம்மையெல்லாம் சிரிக்க வைததவர் நிஜ வாழ்க்கையில் சிரிப்பாகச் சம்பவங்களை எடுத்துக் கொள்ளத்  தெரியாமல், வகை தொகை தெரியாமல் மாட்டிக் கொண்டு திணறுகிறார்.

ஒரு நாள் ந‌ள்ளிரவில் படபிடிப்பு முடிந்து வீடு திரும்புகிறார் வ‌டிவேலு. அவர் வீட்டு அருகினில் விஜயகாந்த் கட்சியினர் அவர்கள் அலுவலகத்தின் முன்னர்
வழியை மறைத்துக் கொண்டு நிற்கின்றனர்.

வழிவிடச் சொல்லி சினத்துடன் கத்துகிறார் வடிவேலு. வார்த்தை தடிக்கிறது. விஜயகாந்தைப்பற்றி ஏக வசனத்தில் பேசி விடுகிறார்.

அன்று பிடித்தது சனியன். வீம்புக்கு என்னமோ செய்வார்களாமே அது போலக் கிளம்பி தேர்தலில் எதிர்பிரசாரம் செய்து, தேர்தல் முடிவு வந்ததும் 
ஓரங் கட்டப்பட்டு பட வாய்ப்பை இழந்து நிற்கிறார் வ‌டிவேலு. சீந்துவாரில்லை.

இது தானய்யா வாய்க்கொழுப்பு சீலையில் வழிவது என்பது.

சரி சரி! மேலும் வளர்த்தினா இங்கேயும் அதுவே ஆகிவிடும்.வரட்டா...?
வாழ்க வளமுடன்!

ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

அடையாளப் பெயர்கள்
This is quite an imaginative effort...

This is an absolute rib-tickler !!  If Parsis can have their name  as per the profession, why can't we have it? (After all, we are not Britishers to have Barber, Cook, Side Bottom, etc...). What is missing is names for new age profession - BPO, Call center... etc.,

Doctor -- Vaidyanathan

Dentist -- Pallavan

Lawyer -- Kesavan

North Indian Lawyer -- Panjabakesan

Financier -- Dhanasekaran

Cardiologist -- Irudhayaraj

Pediatrist -- Kuzhandaisamy

Psychiatrist -- Mano

Sex Therapist -- Kamadevan

Marriage Counselor -- Kalyanasundaram

Ophthalmologist --Kannayiram

ENT Specialist -- Neelakandan

Diabetologist -- Sakkarapani

Nutritionist -- Arogyasamy

Hypnotist -- Sokkalingam

Mentalist -- Budhisikamani

Exorcist -- Maatruboodham

Magician -- Mayandi

Builder -- Sengalvarayan

Painter -- Chitraguptan

Meteorologist -- Kaarmegam

Agriculturist -- Pachaiyappan

Horticulturist -- Pushpavanam

Landscaper -- Bhuminathan

Barber -- Kondaiappan

Beggar -- Pichai

Bartender -- Madhusudhan

Alcoholic -- Kallapiraan

Exhibitionist -- Ambalavaanan

Fiction writer -- Naavalan

Makeup Man -- Singaram

Milk Man -- Paul Raj

Dairy Farmer -- Pasupathi

Dog Groomer -- Naayagan

Snake Charmer -- Nagamurthi

Mountain Climber -- Yezhumalai

Javelin Thrower -- Velayudam

Polevaulter -- Thaandavarayan

Weight Lifter -- Balaraman

Sumo Wrestler -- Gundu Rao

Karate Expert -- Kailaasam

Kick Boxer -- Ethiraj

Batsman -- Dhandiappan

Bowler -- Balaji

Spin Bowler -- Thirupathi

Female Spin Bowler -- Thirupura Sundari

Driver -- Sarathy

Attentive Driver -- Parthasarathy

Author---Ananthamurugan.G

+++++++++++++++++++++++++++++++++++
5

தன்னம்பிக்கையும் அதீத நம்பிக்கையும் (Self confidence and Over confidence)
- ஆக்கம், சுந்தரம், மதுரை

இன்று வகுப்பறையில் இடம் பெற்ற நகைச்சுவை மடலைக் கண்டதும் பள்ளிப் பருவத்தில்  நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் ஒரு பேராசிரியர் கூறிய
கதையை இங்கே பதிவிட விரும்புகிறேன்.

ஒரு தந்தை தனது மகனை ஊரிலேயே கண்டிப்புக்கும் சிறந்த கல்வியை பயிற்றுவிப்பதற்ககும் பெயர் பெற்ற பள்ளியில் சேர்ப்பதற்க்காக அழைத்துச் சென்று தலைமையாசிரியரைச் சந்தித்து தனது மகன் புத்தி கூர்மையான பையன் என்றும் அவனிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் யார் அவன் கருத்துக்கு மாறுபட்ட  கருத்தைக் கூறினாலும் பந்தயம் எவ்வளவு? என்று கேட்டு விடுகிறான், எப்படியாவது அவனை இந்த பழக்கத்தை விடுத்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார்.

தலைமை ஆசிரியரும்,பையனின் தந்தையிடம், கவலையை விடுங்கள், என்னிடம் பையனை ஒப்படைத்து விட்டீர்கள் அல்லவா? நான் பார்த்துக் கொள்கிறேன்,  நீங்கள் அடுத்த முறை என்னைச் சந்திக்கும் பொழுது உங்கள் மகன் இந்தப் பந்தயம் கட்டும் பழக்கத்தையே விட்டுவிட்டான் என்று கூறுவீர்கள் பாருங்கள் என  உறுதி கூறி அனுப்பி வைத்தார்.

ஒரு வாரம் சென்றது, தகப்பனார் குறிப்பிட்ட பையன் உடற்பயிற்சி வகுப்பிற்க்காக மாணவர்களுடன் வரிசையில்  சென்று கொண்டிருப்பதை கண்ட  தலைமையாசிரியர், அவனை அழைத்து தம்பி! உன் தந்தை தானே சென்ற வாரம் உன்னை என்னிடம் உன்னை அழைத்து வந்து பையனுக்கு எதற்கெடுத்தாலும்  பந்தயம் கட்டும் பழக்கம் இருக்கிறது எப்படியாவது என் மகனை நல்வழிப் படுத்துங்கள் என்று கூறினார் என்று கேட்க ,மாணவனும் ஆமாம் ஐயா ! என்றான்.

அதன் பின்னர்,தலைமை ஆசிரியரும் பையனை எச்சரிக்கும் தொனியில், என் கண்டிப்பைப்பற்றி கேள்விப்பட்டிருப்பாய் என நினைக்கிறேன்,ஒழுங்காக படிக்க  வேண்டும் இப்பொழுது வரிசையில் போய் சேர்ந்து கொள் என்றார்.

புத்திசாலி பையனோ, ஐயா! ஒரு சந்தேகம் கேட்கலாமா? என்றான், அதற்கு அவரும், “என்ன சந்தேகம் கேள்” என்றார். பையனோ தன்னுடைய பழக்க
தோஷத்தில், ஐயா உங்கள் முதுகில் வலப்பக்கம் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு மச்சம் உள்ளது தானே என்று கேட்டான்.

அதற்குத் தலைமை ஆசிரியர் மறுக்க, பையனோ சார்! நேற்று உங்களுடைய வீட்டின் பின்புறம் நீங்கள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் பார்த்தேன்.
பந்தயம் 25 ரூபாய், ஒப்புக் கொள்கிறீர்களா?  என்று கேட்டான்.

பையனின் தகப்பனாருக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணிய தலைமை யாசிரியரும் பையனைத் திருத்த சரியான வாய்ப்பு மிகச் சீக்கிரமே அமைந்த
மகிழ்ச்சியில், தம்பீ! இங்கு வேண்டாம், என் அறைக்கு வா நீ கூறுவது போல என் முதுகில் மச்சம் இல்லாத பட்சத்தில்,25 ரூபாயைக் கொடுப்பதுடன் இந்த
பந்தயம் கட்டும் பழக்கத்தையும்  முற்றிலுமாக விட்டுவிட வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றார், பையனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

தனது முதுகைப் பற்றித் தனக்குத் தெரியாதா என்ற இறுமாப்பில் தலைமை ஆசிரியரும் அவருடைய சட்டையைக் கழற்ற அங்கே பையன் கூறியது போல எந்த  மச்சமும் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டு பையனும் வகுப்பறைக்குச் சென்று விட்டான். பையனை திருத்திவிட்டோம் என்ற  மகிழ்ச்சியில் தலைமையாசிரியரும் மாணவனின் தந்தைக்குப் பள்ளியில்  நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, வெற்றிப் பெருமிதத்தில்,  உங்களுடைய மகன்  இனிமேல் யாரிடமும் பந்தயமே கட்ட மாட்டான் என்று கடிதம் எழுதினார்.

அதற்குப் புத்திசாலி மாணவனின் தந்தை பின் வருமாறு பதில் கடிதம் எழுதினார்.

ஐயா,
உங்கள் பள்ளியில் என் பையன் படித்தது போதும். அவனுடைய பந்தயம் கட்டும் பழக்கத்தை நீங்கள் திருத்தியதும் போதும், உங்கள் பள்ளியில் சேர்வதற்கு  முன்பாகவே, அவன்,என்னிடம் சேர்ந்து ஒரு மாதத்திற்குள்ளாக, தலைமை ஆசிரியரின் சட்டையை கழற்றச் செய்து அதையும் அவர் வாயிலாகவே உங்களுக்கு  தெரியப் படுத்துகிறேன். 500 ரூபாய் பந்தயம் என்று கூறியிருந்தான், தற்பொழுது, உங்களால், நான் அவனிடம் 500 ரூபாயை இழக்க வேண்டும் அதனால் என்  மகனுடைய மாற்றுச் சான்றிதழை அனுப்பி வைக்கவும்.
- ஆக்கம், சுந்தரம், மதுரை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.


சின்னமாமா பெரிய மாமா
ஆக்கம்: தனுசு
+++++++++++++++++++++

என் மனைவியையும் மகளையும் ஒரு உறவினரின் வீட்டு கல்யாணத்திற்கு அனுப்பி விட்டு வீட்டில்  தனியாக இருந்தேன். அன்று ஞாயிறு என்பதால், நல்ல  தூக்கத்தை முடித்து விட்டு சோம்பலிலேயே இருந்தேன்.

தனிமையில் இருப்பவர்களுக்கும், தனித்தே இருப்பவர்களுக்கும் சாப்பாடு என்பது பெரிய விசயமே இல்லை. கிடைத்ததை சாப்பிடுவார்கள் கிடைக்கா விட்டாலும்  இருப்பார்கள். இருப்பதை சாப்பிடுவதற்கோ வெளியில் போய் சாப்பிடுவதற்கோ அப்படி ஒரு சோம்பேறித்தனம் உடம்போடு ஒட்டி இருக்கும்.எழுந்து குளிப்பதற்கே மதியம் ஆகிவிடும். இதுதான் பிரமச்சாரி களுக்கும் தனியாக இருப்பவர்களுக்கும் இருக்கு ஒரே ஒற்றுமை. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா  என்ன?

என் மாமாக்கள் இருவரும் திடீரென்று என்னைப் பார்க்கக் கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தனர்!

"வாங்க மாமா வாங்க....வாங்க’ என்று வரவேற்றேன்

“என்னடா.... மாப்பிள்ளை ....எப்பிடி இருக்கிறாய்  சவுக்கியமா...”.பலமாக விசாரித்தனர் இருவரும்

“நல்ல இருக்கிறேன் மாமா...... மாலாவும், மகளும் கல்யாணத்திற்கு போய் இருக்கிறார்கள் .....” வீட்டில் மனைவி இல்லாததை நாசுக்காக சொன்னேன்.

“ஏன்டா.... நீ போகலியா..” நான் போகாததைக் கேட்டனர்

"இல்லை மாமா, கொஞ்சம் வேலை இருந்தது அதான்". மாமா என்பதால் பவ்யமாக பதில் சொன்னேன்.

"சரி  மாமா ரெண்டு பெரும்  டீ சாப்பிடுங்க"  என்று சொல்லி தேநீர் போட்டு எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தேன்.

"இந்தாங்க மாமா டீ குடிங்க" என்று சொன்னவன் தொடர்ந்து சொன்னேன்:

"சரி மாமா நீங்க ரெண்டு பேரும் வெய்யிலில் வந்து இருக்கிறிர்கள். ஒய்வு எடுங்க .மதிய சாப்பாட்டுக்கு நேரமாகிறது. நான் சாப்பாடை ரெடி பண்றேன்"
என்றேன் -  சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்.

"என்னடா மாப்ளை பொண்டாட்டி இல்லாத நேரம் வந்து தொந்திரவு செய்றானுங்க என்று நினைக்கிறியா"

"சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. ஊரிலிருந்து ஒரு வேலையா வந்த நீங்க அப்படியே போகாம என்னை பார்க்கணுமேன்னு  வந்தீங்களே அதுவே  பெரிய விசயம். நீங்க ரெண்டு பேருமே கடை சாப்பாடு சாப்பிடமாட்டீர்கள் அதனாலதான் நானே தயார் பண்ணுகிறேன் என்றேன்"

சாப்பாடு இன்றியே அவர்களை அனுப்பி வைக்க முயற்சி செய்தேன்.

அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்பதால் சமையல் செய்யத் தயாரானேன். 

"சரி மாமா வாங்களேன்  பேசிக்கிட்டே கடைக்கு போய் காய்கறி வாங்கி வருவோம்"

"இல்லடா  மாப்ளே வந்த அசதி அப்பிடியே உடம்புல இருக்கு"

"சரி சரி மாமா, நீங்க ரெண்டு பெரும் ரெஸ்ட் எடுங்க நான் போய் வாங்கி வருகிறேன்" சொல்லிவிட்டு கடைத்தெருவுக்கு கிளம்பினேன்.

நல்ல காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிகொண்டு வியர்க்க வியர்க்க திரும்ப வீடு வந்து சேர்ந்தேன்.

"அட என்ன மாமா சும்மாவே உட்கார்ந்துகிட்டு இருக்கிறீங்க T.V பார்க்க வேண்டியதுதானே"  என்று சொன்னவன் TV யை ஆன் செய்துவிட்டு
சமையலறைக்குள் சென்றேன்.

"TV எல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை சும்மா பேசிக்கிட்டே இருக்கிறோம்" என்றார் இருவரில் பெரியவர்.

"அப்படின்னா இப்படி வாங்க இந்த காய்கறியை வெட்டுங்க. நான் சமைக்கிறேன் "

"இல்லைடா மாப்பிளை வெய்யிலில் வந்தது தலை எல்லாம் வலிக்குது. நாங்க அப்பிடியே சத்த படுத்துக்கிட்டு இருக்கோம்டா " என்று சொல்லி இருவரும்
காலைகளை நீட்டிப் படுத்துக்கொண்டு விட்டார்கள்.

"சரி மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க " நான் சமையல் வேலையைத் துவங்கினேன்.

சமையலில் பெரிய நிபுணத்துவம் இல்லை. இருந்தும் வாங்கி வந்த தயிரில் தண்ணீரை விட்டு மோராக்கினேன், குக்கரில் அரிசியைப் போட்டு சோறாக்கினேன், பீன்சைப் பொரியலாக்கினேன், தக்காளியும் புளியையும் போட்டு ரசமாக்கினேன், பருப்பை வேக வைத்து முருங்கைக்காயை வெட்டிப்போட்டு சாம்பாராக்கினேன். அப்பளம் பொரித்தேன். பழங்களை வெட்டித் தட்டில் வைத்தேன்.

ஒரு வழியாக அனைத்தையும் முடித்து விட்டு,"மாமா வாங்க ரெண்டு பெரும்.சாப்பிடலாம் "என்று அழைத்தேன்.

படுத்திருந்த இருவரும் எழுந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதில் பெரிய மாமா சின்ன மாமாவைப் பார்த்து:

“தம்பி, நாமும் வந்ததிலிருந்து ஒரு வேலையையும் செய்யவில்லை. மாப்பிளை கடைத்தெருவுக்கு கூப்பிட்டான். நாம போகவில்லை. காய்கறி வெட்டக் கூப்பிட்டான் அதுக்கும் போகல்லை, சமையலில் ஒத்தாசைக்குக் கூப்பிட்டான் அதுக்கும் போகல்லை, இப்போது  சாப்பிடக் கூப்பிடுகிறான் .இதற்கும் நாம போகவில்லை என்றால் அவன் கோவித்துக் கொள்வான் வா சாப்பிடப் போகலாம்” என்று எழுந்தார். கூடவே சின்ன மாமாவும் டைனிங் டேபிளை நோக்கி நடந்தார்.

ஊட்டிவிடச் சொல்லாமல் அதுக்காவது எழுந்து வந்தார்களே சாமிகளா!

-தனுசு- 
++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்!

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி நான்கு

பாடல்: அவரவர் வாழ்க்கையில்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலாக் காலம்,
கனவினில் தினம்தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலாக் காலம்,
கனவினில் தினம்தினம் உலா போகும்,

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

காற்றும்கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழைத்துளிகூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்த்துக் கொள்வோம்,
கத்தும் கடலும் கைக்கு எட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இறந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கருவினில் காலையில் ஒளி பெயர்ந்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்

ஐய்ந்தெழுத்து புது மொழியை,
அரிய வைதாள் என் அன்னை,
அண்ணன் தங்கை அனைவருமே
நேசம் கொண்டோம் தமிழ் மன்னை,

நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொர்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்கப் பசி மறந்தோம்,
ஓற்றைக் கண்ணில் அடி பட்டால்,
பத்துக் கண்ணிலும் வலி கண்டோம்

பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை பொல் வேறொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிகப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,
தேவை இன்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

படம்: பாண்டவர் பூமி (2001)
பாடல் வரிகள்: கவிஞர்: சிநேகன்
இசை: பரத்வாஜ்
பாடலைப் பாடியவர்: பரத்வாஜ்
இயக்கம்: சேரன்
நடிப்பு: அருண்குமார், ராஜ்கிரன், ஷமிதா
--------------------------------------------------------------------------------


காணொளி: http://youtu.be/8YMebVMXukQ பாடல் உதவி: http://www.youtube.com/user/tube2eelam அவர்களுக்கு நமது நன்றி உரித்தாகுக!
our sincere thanks to the person who uploaded the song in the net
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

27.1.12

வழிக்குத் துணை!




வழிக்குத் துணை!

வழிக்குத் துணையாக ஊஞ்சல் பாட்டு!

தைப்பூச முருகனைக் கண்டு மகிழ, காரைக்குடிப் பகுதி மக்கள், பாதயாத்திரையாக பழநிக்குச் செல்வது வழக்கம். பயண தூரம் 160 கிலோமீட்டர்கள். பயண காலம் 7 நாட்கள். பயணிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் பேர்கள். சிலர் காவடி எடுத்துக்கொண்டும் செல்வார்கள்.

மாலை நேரத்தில் தாங்கள் செல்லும் வழியில் உள்ள கிராமத்துத் தோட்டம் அல்லது ஊருணிக் கரையில், எடுத்துக் கொண்டு செல்லும் முருக உற்சவ
விக்கிரகத்திற்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். அத்துடன் முருகனைப் பாலகுமாரனாக்கி உஞ்சல் வைத்து ஆட்டி மகிழ்வார்கள். தாலாட்டுப் பாடல்
ஒன்றையும் பாடி மகிழ்வார்கள். அதற்குப் பெயர் ஊஞ்சல் பாட்டு

அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ, இன்று பதிவில் ஏற்றியிருக்கிறேன். பாடலில் உள்ள எதுகை மோனை, சந்தம், சீர், சொல்விளையாட்டு என்று
எல்லாவற்றையும் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------   
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே

ஆழிப் படுக்கை கொண்டோனின்
அருமை மருகா ஆடுகவே
ஊழி தாண்டி நிற்பானின்
உத்தமச் செல்வா ஆடுகவே

வாழும் மனிதர் யாவருக்கும்
வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளும் கவலை ஓடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா ஊஞ்சல் ஆடுகவே

பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்
பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம் பெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

முன்னே பின்னே சென்றாலும்
மூளையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும்
எல்லாம் உன்னைச் சுற்றியதே

குன்றாக் குடியாய் எமைகாக்கும்
குன்றக் குடியின் வேலவனே
கண்ணே மணியே கதிர்வேலா
கவினார் ஊஞ்சல் ஆடுகவே

விண்ணவர் செல்வி தெய்வானை
வேடவர் மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி
மேதகு சேவற் கொடியாட

கொண்டிடுங் காதல் உணர்வோடு
கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்
மாபெரும் அருளுடை வடிவுடனே
பெண்ணின் நல்லார் இருவருடன்
பெருமயில் ஏறி வந்தவனே

கண்ணே தெரியாக் காட்டிடையே
கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
உன்னால் வழியும் தெரிந்துயர
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆறடி நெடிதாம் உருவுடனே
அடியார்பக்தி உறுவேற
பேரருள் கொண்டாய் பெரும்பேடா
பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே

சீரடி வணங்கிட வந்துள்ளோம்
செல்வா அருளைத் தந்திடுவாய்
ஆரிருள் விலகி ஒளிபெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

25.1.12

Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?

Amala Paul from the film Vettai. Thanks to the person who uploaded the image in the net
 கீழே இடைச்சேர்க்கையில் ஐந்து படங்கள் உள்ளன அவற்றையும் பாருங்கள்
-----------------------------------------------------------------
Astrology   ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?

தினமும் தயிர் சாதம் என்றால் எப்படிச் சாப்பிடுவீர்கள்? சைடு டிஷ்சாக எண்ணெய் வாழைக்காய் பொரியல் அல்லது உருளைக்கிழங்கு காரகறி அல்லது மாங்காய் தொக்கு இருந்தால் சாப்பிடலாம். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்றால் சாப்பிடலாம். தினமும் என்றால் எப்படியும் முடியும் சாமி?

தொண்டைக்குப் பிறகு எல்லா உணவும் ஒன்றுதான் என்றாலும், நாக்கு விடாதே ராசா!

நாக்கைக் கட்டுப்படுத்தலாம் என்றால் குரங்கு விடாதே சாமி!

நாக்கோடு சம்பந்தப் பட்ட குரங்கு எது என்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்!

அதனால் எளிய உணவாக இருந்தாலும் விதம் விதமாக இருந்தால்தான் நல்லது.

அதுபோல தினமும் நட்சத்திரக் கோவில்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந் தால், படிக்கும் நீங்கள் கட்டையை எடுத்து என் தலையில் ஒரு போடு போட்டால் என்ன ஆவது?

ஆகவே வாரம் இரண்டு கோவில்கள் அறிமுகமாகும். மற்ற நாட்களில் வேறு தலைப்புக்களில் பாடங்கள். மீண்டும் அடுத்த வாரம் இரண்டு நட்சத்திரக் கோவில்களுக்கான பாடங்கள் வெளியாகும். தங்கள் நட்சத்திரக் கோவிலுக்காகக் காத்திருக்கும் கண்மணிகள் பொறுத்திருக்கவும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?

அஷ்டகவர்க்கப் பாடம் எண்.15

உட்தலைப்பு: Key Points in ashtakavarga

ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன? உங்கள் மொழியில் சொன்னால் up & down periods  என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாகனம் செல்லும் வழியில் - அதுவும் திம்பம் போன்ற வனப்பகுதிகளில் நின்று போய் இடக்கு செய்தால் என்ன செய்ய முடியும்?

இரவு நேரம் கும்மிருட்டு. யானைக்காடு. கடந்து செல்லும் சகவண்டிக்காரன் நிறுத்தாமல் போய்க்கொண்டிருப்பான். விடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.

சிலருக்குப் பார்த்தீர்கள் என்றால், தடம் புரண்ட வண்டியைப்போல வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கும். செல்வச் செழிப்போடு இருந்தவன், பணச்சிக்கலுக்கு ஆளாகியிருப்பான். கடன் தொல்லை வாட்டி எடுக்கும். கஷ்டங்கள் கசக்கிப் பிழியும். ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை உண்டாகிவிடும். இன்னோவா காரில் வலம் வந்தவன், ச்ட்டை கசங்க நகரப் பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருப்பான். ஆட்டோவிற்குக் காசில்லாமல் நடராஜா சர்வீசில் சென்று கொண்டிருப்பான். அடையார் பார்க் கேட் ஹோட்டலின் ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், நடைபாதைக் கடைகளில் சாப்பிடத் துவங்குவான்.

புத்திசாலித்தனமாக நடந்திருந்தால், நிலைமை இப்படி ஆகியிருக்காதா?

என்ன சாலித் தனம் இருந்தாலும் விதிவிடாது. கிரகங்கள் விடாது. எல்லாம் கர்மவினைப் பலன்!

விதியைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அய்யன் வள்ளுவர் எழுதிய குறளின் 38ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள் தெரியவரும். அந்த அதிகாரம்தான் பொருட்பாலின் கடைசி அதிகாரம். விளக்க உரையோடு படியுங்கள். அதன் தலைப்பு ஊழ்வினை (Destiny) அற்புதமான அதிகாரம்.
-------------------------------------------------------------------------
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

சனீஷ்வரன்தான் கர்மகாரகன் (Authority for work) அவனால்தான் உங்களுடைய ஜீவனம் நடந்துகொண்டிருக்கும். பூர்வீகச் சொத்தில் அல்லது மனையாட்டி கொண்டுவந்த செல்வத்தில் ஜீவனம் நடத்திக்கொண்டிருப்பவன் கதை எல்லாம் தனிக்கதை. அவனைப்பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். உழைக்கும் வர்க்கத்தின் கதையை, உணர்வுள்ளவனின் கதையை இன்று பார்ப்போம்

திடீரென்று இறக்கங்கள் உண்டானால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். 30 - 40 வயது உள்ளவன் பார்க்க மாட்டான். மனத் தெம்பு விடாது. 40ஐக் கடந்தவன், கண்டிப்பாக கையில் ஜாதகத்தை எடுத்துவிடுவான். அவர்களுக்காகத்தான் இன்றையப் பதிவு.
---------------------------------------------------------------------------
கஷ்டங்கள் எப்போது உங்களை அணைக்கத்துவங்கும்?

சனி மகாதிசை/புத்திகளில் அல்லது கோள்சாரச் சனியின் காலத்தில் (Changed period of transit Saturn) காலத்தில் சனி நம்மை அணைக்கத்துவங்கும். சனீஷ்வரனின் அணைப்பில் சுமார் 19 ஆண்டுகாலம் நான் இருந்திருக்கிறேன். சுகமான அணைப்பு அல்ல அது. அவஸ்தையான அணைப்பு. தேவதையின் அணைப்பு அல்ல அது. பிசாசின் அணைப்பு அது!

கோசாரச் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாறும். ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்குச் செல்லும். சென்ற 21.12.2011 அன்று கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார் சனீஷ்வரன். கன்னி ராசியில் எத்தனை பரல்கள் என்று பாருங்கள். அதைவிட அவர் செல்லும் துலாம் ராசியில் கூடுதலான பரல்கள் இருந்தால் ஏற்றமான பலன்கள்அடுத்துவரும் இரண்டரை ஆண்டு காலத்திற்கு இருக்கும். இருந்த இடத்தைவிட, செல்லும் இடத்தில் குறைவான பரல்கள் இருந்தால், இறக்கமான காலம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இறக்கம் மூன்று அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தால், அதிகமான இறக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

ஒரு உதாரண ஜாதகத்துடன் இதை விளக்கியுள்ளேன். கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


விருச்சிகராசி ஜாதகம். ஏழரைச் சனி காலம் துவங்கி .நடைபெற்றுக் கொண்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க, அஷ்டகவர்க்கத்தை வைத்து இப்போது பலனைப் பார்ப்போம்.

ஜாதகருக்கு சிம்மத்தில் 37 பரல்கள், கன்னியில் 27 பரல்கள், துலாத்தில் 24 பரல்கள், விருச்சிகத்தில் (ராசியில்)  22 பரல்கள்,

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது சிம்ம ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு சிரமங்கள் உண்டாகத்துவங்கின.

பணப் பற்றாக்குறை. அதைவைத்து சொல்ல முடியாத கஷ்டங்கள். அந்தக் கஷ்டங்கள் ஏழரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். அடுத்தடுத்துப் பரல்கள் குறைந்து கொண்டே போவதைப்  பாருங்கள். சனீஷ்வரன் விருச்சிகத்தைக் கடந்து தனுசு ராசிக்குள் நுழைந்த பிறகுதான் அவருடைய பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு பரல்கள் உயர்வான வரிசையில்  இருப்பதைப் பாருங்கள் 27 மற்றும் 31 என்று உயர்வாக இருப்பதைப் பாருங்கள்.

இரண்டரை வருடங்களாகக் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகரின் சிரமங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்குப் பிறகு நல்ல காலம்.

37 பரல்களில் இருந்து ஏழரை ஆண்டுகளுக்குள் 22 பரல்கள் உள்ள நிலைக்கு வந்ததால், சுமார் 15 பரல்கள் குறைவாகிப் போய்விட்டதால், இன்னோவா கார் பயணம் பேருந்துப்  பயணமாகிவிடும். அதற்குப் பிறகு நிலைமை சீராகி. ஒரு மாருதி ஆல்டோ காராவது வாங்கிப் பயணித்து, ஜாதகர் ஒரு பெருமூச்சு விடுவார். சற்று நிம்மதி கொள்வார்.

அதுவரை நமது விசு அய்யர் அவர்கள் சொல்வதைப் போல ஒரு பாடலைச் சுழல  விட வேண்டியதுதான்

“ எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”

---------------------------------------------------
வாத்தியார், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் அமலாபாலின் படம் எதற்காக?

சென்ற மாணவர்மலர் பதிவின் பின்னூட்டத்தில், தொடர்ந்து மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் இரண்டு மூத்த மாணவர்களுக்காக அந்தப்படம். கொஞ்சம் கூலாகட்டுமே என்றுதான்:-)))
---------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.1.12

Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

 Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 7

மிருகசீரிடம்

சொந்த வீடு என்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள (பொதுவான) கனவு. ஒரு வீடு உள்ளவன்கூட இரண்டாவது வீட்டிற்கு ஆசைப்படுவது இயல்பே!
சென்னையில் சிலருக்கு தி.நகரில் சொந்தவீடு இருக்கும். பழைய மகாபலிபுரம் சாலையில் (அதாங்க ஓ.எம்.ஆர் ரோட்டில்) ஒரு பண்ணை வீடும் இருக்கும்.
அப்படி இருக்கும்போதே ஊட்டி அல்லது கொடைக்கானலில் ஒரு சொந்த வீட்டிற்கு அவன் ஆசைப்படுவான்.

கிரகங்களில் ராகு & கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உள்ளது. அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரு சொந்த வீடுதான். ஆனால் செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளன.

அதுபோல நடசத்திரங்களுக்கு சொந்த ராசியாக ஒவ்வொரு ராசி இருக்கும். சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசிகளைப் பங்கிட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களுக்கு ரிஷப ராசியில் இடம். அடுத்த இரண்டு பாதங்களுக்கு மிதுன ராசியில் இடம். ஆகவே மிருகசீரிடத்தில் பிறந்த ஜாதகனுக்கு அவன் பிறந்த பாதத்தை வைத்து ராசிகள் மாறுபடும்.
----------------------------------------------------------------------------------------------
மிருகசீரிடம்

இது நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இது செவ்வாய் கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நட்சத்திரம்.

மிருகசீரிட நட்சத்திரம் தோற்றத்தில் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். சீர்ஷம் அல்லது சிரசு என்றால் தலை. நட்சத்திரத்தின் தலைப் பகுதி மானின் தலையைப் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும். அதனால்தான் அதற்கு - அந்த நட்சத்திரத்திற்கு மிருகசீரிடம் என்ற பெயரைச் சூட்டினார்கள்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பார்கள். காசு, பணம் (செல்வம்) சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்கள். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறரின் மனதறிந்து நடப்பார்கள்.

They are seekers and are powerful investigators and researchers. Highly intelligent their quest will eventually take them to spiritual dimensions of their soul.
-----------------------------------------------------------------------------------------------
அந்த நட்சத்திரத்திற்கான கோவில்:

ஆதிநாராயண பெருமாள் திருக்கோவில், எண்கண் கிராமம், திருவாரூர் மாவட்டம்.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 50 கி.மீ தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. அங்கிருந்து, ஒரு கி.மீ. தூரத்தில் எண்கண் என்ற சிறுகிராமம் உள்ளது. அங்கேதான் ஆதிநாராயண பெருமாளின் திருக்கோவில் உள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருத்தலம்.
சுவாமியின் பெயர்: ஆதிநாராயணப் பெருமாள்
அம்மன்களின் பெயர்: ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்: வன்னி மரம்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: மாலை 5 மணி முதல் - இரவு 7 மணி வரை.

தல வரலாறு:

முற்காலத்தில் வன்னி மரக்காடு என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில், பிருகு முனிவர், பெருமாளின் அருள் வேண்டித் தவம் இருந்தாராம். அப்போது சோழ மன்னன் ஒருவன் (பெயர் தெரியவில்லை) தன் படைகளுடன் பெரும் சப்தம் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட அங்கே வந்தானாம். (அந்தக் காலத்தில் திருவாரூர் பகுதி பெரிய வனாந்திரமாக இருந்திருக்கிறது. அத்துடன் சிங்கம் போன்ற கொடிய வனவிலங்குகளும் இருந்திருக்கின்றன. Mr.KMRK note this point) அந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்ததாம். கோபம் கொண்ட முனிவர், முனிவர்கள் தவம் செய்யும் அந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தன் தவத்தைக் கலைத்த அரசனுக்கு சாபமிட்டுவிட்டார். என்ன சாபம்? சிங்க முகத்துடன் அவன் அலையக் கடவது என்று சாபமிட்டு விட்டாராம்.

வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாட, மனம் இரங்கிய முனிவர், விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினாராம். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தானாம். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தர, பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததாம். அதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப் படுகிறது.

தான் உறைகின்ற கோவில்களில் பெருமாள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி அருள்பாலிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இதுபோன்ற அமைப்பைக் காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையைத் தினமும் இங்கு தரிசிக்கலாம்.

மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. நம்பிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது!

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பதும் இங்கே நிலவுகின்ற நம்பிக்கை.

உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல்நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பெற்றவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் ஆகியோர் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்!

ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று வாருங்கள். வந்த பிறகு ஏற்படும் பலன்களைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------
வாழ்க வளமுடன்!

23.1.12

Astrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்!


Astrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்!

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 6
திருவோணம்

27 நட்சத்திரங்களில், திரு என்னும் அடைச் சொல்லுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம்

திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம். ஆருத்திரனுக்கு (Arudra) உகந்த நட்சத்திரம். ருத்திரன் என்னும் சொல் ஆருத்திரன் ஆகியுள்ளது.
ருத்திரன் என்றால் தீய சக்திகளை அழிப்பவன் என்று பொருள்படும்.  
Rudra means the destroyer of evil forces

திரு என்றால் இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை. a prefix added to holy or auspicious objects etc உதாரணம்: திருக்கோவில், திருவடி, திருமாங்கல்யம். இன்னொன்றும் உண்டு: மதிப்புத் தரும் விதமாக ஒருவரின் பெயருக்கு முன் இடப்படும் அடை. ருத்திர தரிசனத்தைத்தான் நாம் ஆருத்ரா தரிசனம் என்று கொண்டாடுகிறோம்.

அதுபோல திருவோணம் எம்பெருமான் ஸ்ரீஹரியின் (விஷ்ணுவின்) நட்சத்திரம். பகவான் தன் வாமன அவதாரத்தை திருவோண நட்சத்திரத்தன்று காட்டி  மக்களுக்கு அருள் பாலித்தார். பகவான் ஸ்ரீனிவாச பெருமாள் தன் தேவியை நாடி ஏழுமலையில் தன் திருவடியை வைத்ததும் ஒரு திருவோண நந்நாளில்தான் திருமலையில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோத்சவ விழா திருவோண நாளில்தான் நிறைவு செய்யப்ப்டுகிறது.
----------------------------------------------------------------------
இதைக் கேட்டவுடன் திருவோண நட்சத்திரக்காரகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்.

எல்லா நட்சத்திரங்களும் சமமானவைதான். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், உங்களுடைய கர்ம வினைப்படி, ஜாதகப்படிதான் வாழ்க்கை

அமையும். நல்ல நட்சத்திரம் என்பதற்காகக் கிரகங்கள் விட்டு வைக்காது. உரிய பலன்களைக் கொடுத்தே தீரும். நல்லதும் கிடைக்கும். தீமைகளும் உண்டாகும்.
நன்மை தீமைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இரவு பகலைப் போல!

நான் திருவோண நட்சத்திரக்காரன்தான். அதற்காக சனி விட்டு வைக்க வில்லை. தன்னுடைய மகா திசையில் புரட்டி எடுத்துவிட்டுப் போனான். அதற்கு அடுத்து  வந்த புதன் மகா திசையில்தான் நிமிர்ந்து உட்கார முடிந்தது. அதை எல்லாம் பின்னொரு நாள் விவரிக்கிறேன்
---------------------------------------------------------------------
திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பார்கள். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். மற்றவர்களைப்  புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பார்கள். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பார்கள் (இது மட்டும் ஜாதகத்தை  வைத்து மாறுபடும்)

இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலைகளில் தேற்ச்சியுற்றவர்களாக இருப்பார்கள் அல்லது ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். உண்மை யானவர்களாக  இருப்பார்கள். ஸ்திரமான மனதுடையவர்களாக இருப்பார்கள். அதிக நண்பர்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிரிகளைப் பந்தாடிவிடுவார்கள். அறிவு  ஜீவிகளாக இருப்பார்கள். பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

தங்கள் உறவுகளால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே பேச்சுத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.

They will be financially successful and lead a materially comfortable life. Their organizational and leadership skills are well developed, and they may do  well in business. They will make a good manager or project leader. They also like to spend a lot of time working for charitable organizations. They need  to be careful with their finances or they may bankrupt themselves. Careers that will suits them: Engineering, management related jobs, charitable and  social institutions etc. They will be happiest if they could work for charitable or social work organizations.
---------------------------------------------------------------------
திருவோண நட்சத்திரத்திற்கான கோவில்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் கிராமம், காவேரிப்பாக்கம் வட்டம்

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்னும்
கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் குடிகொண்டுள்ளார்.

வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 4 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் எனக் கேட்டுச் செல்வது நல்லது!

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை, மாலை 4.30மணி முதல் - இரவு 7.30 மணி வரை

ஸ்தல வரலாறு:

ஒருமுறை புண்டரீக மகரிஷி, பெருமாள் கோவில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் ஸ்தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர்  வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை  மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு  கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து, ரிஷியே ! ”உங்களால் திருப்பாற்கடல்  சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும்  இங்கு காண்பித்த தால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்”, என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால்  (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். அவருடன், அலர்மேலுமங்கை தாயார் அருள் அங்கே அருள் பாலிக்கின்றார்.

சிறப்பம்சம்:

சந்திரபகவான், சாபமொன்றினால், இருளடைந்து இருந்தார். அதனால், அவரது மனைவியரில் ஒருத்தியான, திருவோண நட்சத்திரதேவி மிகவும் வருத்தமுற்றாள். இத்தலத்தின் பெருமையை அறிந்த அவள், இங்குள்ள பெருமாளை வேண்டித் தவமிருந்தாள். அவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவரது தோஷத்தைப் போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர ஸ்தலமானது.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அல்லது மூன்றாம் பிறைநாளிலோ இத்தலப் பெருமாளுக்கு அபிஷேக
ஆராதனை செய்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். வேண்டியது கிடைக்கும். வேண்டியது கிடைத்தால் தொல்லைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வி அறிவு
வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், அந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது நன்மை பயக்கும்!

ஒருமுறை சென்று வாருங்கள். உரிய பலனைப் பெற்று வாருங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------




வாழ்க வளமுடன்!

22.1.12

இயற்கையான உணவு எது?


எது இயற்கையான உணவு?
ஆக்கம்: கே முத்துராம கிருஷ்ணன், லால்குடி

உணவு பற்றிய என் கட்டுரையை இந்த வாரமும் தொடர்கிறேன்.

அசைவ உணவை சமைக்காமல் சாப்பிட முடியாது என்று சென்ற பதிவில் கூறியிருந்தேன்.அதற்கு ஜப்பான் மைனர்வாள் எதிர்வினை ஆற்றியிருந்தார்.

ஜப்பானில் குதிரை மாமிசம் உட்பட பல மாமிச வகைகளைப் பச்சையாகவே உண்கின்ற‌னராம். இது எனக்குப் புதிய செய்தியே!உண்மையாகவே ஜப்பானியருக்கு ஜீரண உருப்புக்கள் மிகவும் வலுவுள்ளதாக இருத்தல் வேண்டும்.

கடுகு, முழுதாக விழுங்கப்பட்ட பருப்பு, தக்காளியின் தோல் ஆகியவை வடிவம் மாறாமல் நம் உடலில் இருந்து வெளியேறி விடுகின்றன.அந்த அளவுதான் நமது வயிற்றில் ஊறுகின்ற செரிமான திரவத்தின் வலிமை.அப்படியிருக்கும் போது சமைக்காத அசைவம் எப்ப‌டி ஜப்பானியருக்கு செரிமானம் ஆகிறது என்பது வியப்புக்கு உரியதே! அந்தப் பழக்கத்தால் ஜப்பானியருக்கு சீரண உறுப்புக்களில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆய்வு நடத்தினாலே நமக்கு சரியான ஒரு முடிவு தெரியவரும்.

மனிதனின் இயற்கை உணவு என்ன?

சிங்கம் புலிக்கு இயற்கையான உணவு மான், மாடு, ஆடு போன்ற‌ தாவர உணவு உண்ணும் சாதுவான விலங்கினங்களே.மான், ஆடு, மாடு போன்ற
மிருக இனம் மறந்தும் அசைவம் உண்பதில்லை.இது போல மனிதனுக்கு எது இயற்கையான உணவு?

ஒரு பார்வை என்னவெனில், எந்த உணவை ஓர் உயிரினம் சமைக்காமல் உண்ண முடியுமோ அதுவே அந்த  உயிரினத்தின் இயற்கை உணவு.

அந்தக் கருத்துப்படி இந்திய அளவிலாவது அசைவம் சமைக்காமல் பச்சையாக மனிதன் உண்பது இல்லை. எனவே இந்திய மக்களுக்கு அசைவம் இயற்கை உணவு ஆகாது. அதேசமயம், சூரியன் என்ற பிரமாண்ட அடுப்பில் இயற்கையாகச் சமைக்கப்பட்ட எல்லா வகைப் பழங்கள், பல காய்கனிகளை மனிதன் சமைக்காமலே உண்ண முடியும். எனவே காய்கனிகள், சில கொட்டைகள், ஆகியவையே இந்திய‌ மனிதனின் இயற்கை உணவு.தானிய வகைகள் கூட இரண்டாம் இடத்தைத்தான் பிடிக்கின்றன.ஏனேனில் தானியங்கள் வேகவைக்கப்பட வேண்டும்.

வங்காளத்தில் பிராமணர்கள் உட்பட அனைவரும் மீன் சாப்பிடுபவர்கள்தான்.

ஒவ்வொரு பிராமணர் வீட்டுப் பின்புறமும் சிறிய குட்டையில் மீன் வளர்க்கப்படும். மடி ஆசாரம் பார்க்கும் மூதாட்டிகள், மீன்களை மடியாகத் தானே பிடித்துவந்து (மற்ற‌வர்கள் பிடித்தால் மீன் தீட்டாகிவிடுமாம்) சமைத்து உண்பார்களாம்.மற்ற வட மாநிலங்களிலும் எல்லா இனத்தாரும் அசைவம் சாப்பிடுவது சகஜமப்பா!

சுவாமி விவேகானந்தர் அசைவம்தான்.(இதைச் சொல்வதால் சுவாமிஜிக்கு நான் இழுக்குத் தேடித் தருகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
யாரலும் மாசுபடுத்த முடியாத ஞான சூரியன் அவர்.) தேசாச்சாரம், குலாச்சாரம் ஆகியவற்றால் அவருக்கு அசைவப் பழக்கம் இருந்தது.

சுவாமிஜி அமெரிக்கா செல்லுமுன் பாரதம் முழுதும் திக்விஜயம் செய்தாரல்லவா? அப்போது அவர் ஒரு தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறார்.
அவர் தீவிர சைவ உணவுப்பற்றாளர்.சுவாமிஜியோ இந்திய மக்கள் ஆங்கிலேயரால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சத்தால் வாடி வதங்கிக் கிடப்பதை நாடு முழுதும் கண்ணுற்று வருந்தித் திரும்பியிருந்த நேரம்.

ஆம்!இங்கிலாந்தில் உள்ள நூற்பு/நெசவு ஆலைகள் இயங்குவதற்காக‌ இந்தியாவில் உணவுப் பயிர்களை நிறுத்தி, பருத்தியும், சாயத்திற்காக அவுரியும் பயிரிடச் சொல்லி விவசாயிகளை நிர்பந்தப்படுத்தியதால் இந்தியாவில் செயற்கை உணவுப்பஞ்சம் ஆங்கில அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை நேரடியாகவே சுவாமிஜி கண்டும் கேட்டும் உணர்ந்து அதற்கு மாற்றாக மக்கள் அசைவமோ,சைவமோ ஏதோ ஒன்றை உண்டு புஜ வலிமை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சமயம், அந்தத் தலைமை ஆசிரியருடன்  விவாதம் நடத்துகிறார்.

தலைமை ஆசிரியர்:  "மனிதனின் குடல் அமைப்பு பசுவுடையதைப் போல நீளமானது. எல்லா சைவ உணவு உட்கொள்ளும் விலங்கினங்களுக்கும் குடலின் நீளம் அதனுடைய உடலின் உயரத்தினைப் (நீளத்தினைப்)போல் 5,6 பங்கு நீளமுடையதாக இருக்கும். மனிதனுக்கும் அதுபோல நீளமான குடல் இருப்பதால் மனிதனும் பசுவைப் போல‌ சைவ உணவுதான் உண்ண‌ வேண்டும்"

சுவாமிஜி:"அப்போது மனிதனும் பசுவைப் போல புல் வெளியில் சென்று வயிறாற புல்லை மேய்ந்து விட்டு வரலாமே?! பட்டினி பஞ்சம் என்று அல்லல் ஏன் பட வேண்டும்?"

த.. ஆ: "நாம் உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் நம் குணம் அமையும். மிருகக் கொழுப்பினை உண்டால் மிருகத்தைப் போன்ற மனோ நிலை/அறிவுதான் உண்டாகும்."

சு..ஜி:"உங்கள் வாதப்படியே கத்தரிக்காய் உண்டால் கத்தரிக்காய் மன‌மும், அறிவும் வரும்!முட்டைக்கோஸ் உண்டால் அதனுடைய மனமும், அறிவும் உண்டாகும் அல்லவா? எனக்கு கத்தரிக்காய் அறிவைக்காட்டிலும் ஆட்டின் அறிவு இருந்தாலே நல்லது என்று தோன்றுகிறது."

பல இலட்சம் யூதர்களை கொடூரமாகக் கொன்ற சர்வாதிகாரி ஹிட்லர் சுத்த சைவர்! சைவ உணவு அவருக்கு சாந்தியான மனத்தினை அளிக்கவில்லை.இதனை ஒரு 'எக்ஸெப்ஷ'னாகக் கொள்ளலாம்.

அதேபோல அபூர்வமான ஒரு ராட்சச மரம் உள்ளதாம். அது தன்னுடைய அழகான நிறமுடைய மலராலும், மணத்தாலும் பறவைக் கூட்டத்தை கவர்ந்து இழுத்து தன் கிளைகளில் அவை அமர்ந்தவுடன் அப்படியே மடக்கிப் பிடித்து ரத்தததினை உறிஞ்சிக் குடிக்குமாம்!

நகர்ந்து வந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனிதன்,விலங்குகளை கிளைகளால் தூக்கி விழுங்கும் மரங்கள் கூட உள்ளனவாம்.

அசைவம் சாப்பிடும் தாவரங்கள்! வியப்பாக இல்லை?!

மேற்கண்ட விவாதம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அசைவத்தை விட சைவ உண‌வே மனிதனுக்கு ஏற்றது.

அசைவமாக உள்ள மிருகங்கள் ஏன் சைவ உணவு உண்ணும் மாடு, ஆடு, மான் போன்ற‌ விலங்குகளையே அடித்து உண்ணுகின்றன? ஏன் ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தின் சதையை உண்பதில்லை?

அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களுக்கு உடலில் புரோட்டின் உற்பத்திக்கான‌ அமினோ அமிலங்கள் தானாகச் சுரப்பதில்லை. எனவே தங்கள் புரோட்டின் தேவைக்காக சைவ உணவு உண்ணும் விலங்குகளை அடித்துத் தின்கின்றன.

மனிதனுக்கும், மாட்டிற்கும், ஆட்டிற்கும் 22 அமினோ அமிலங்களில் 13 அமிலங்கள் அவர் அவர் உடலிலேயே உற்பத்தி ஆகிவிடுகின்றன‌.மீதம் உள்ள 9 அமிலங்களைத்தான் வெளியில் இருந்து பெற வேண்டும்.எல்லா வகைப் பருப்புக்களும் மனிதன் எடுத்துக்கொண்டால் மிகவும் அவசியமான அமினோ அமிலங்கள் கிடைத்துவிடும்.அதற்கும் மேல் மாட்டுப் பாலும், முட்டையும் போதுமானது.அதற்கு மேல் உயிர்வதை செய்யப்பட வேண்டுவது இல்லை.

எல்லோரும் சைவமாக மாறிவிட்டால் உணவுத் தட்டுப்பாடு வந்துவிடும் என்று கூறுவது ஒரு வெற்று வாதமே!

வர்த்தக ரீதியில் கொல்லப்படுவதற்காகவே வளர்க்கப்படும் பன்றி, ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் தாவர உணவு, மனிதனுக்குத் திருப்பி விடப்பட்டால் உலகின் எந்தப்பகுதியிலுமே உணவுப்பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.

அசைவ உணவில் நாக்கு ருசி கண்டுவிட்டபின் அதனை விட முடியாமல்தான் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

'அஹிம்சோ பரமோ தர்மஹ' என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.
-------------------------------------
"'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற‌
செய்யாமை செய்யாமை நன்று"

என்பார் ஐயன் திருவள்ளுவர்.

2
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
----------------------------------------

ஆட்டினைக் கொல்லும் போது பாவ உணர்ச்சி ஏற்படுகிறது.அதனை ஈடுகட்டவே அதனை ஒரு காளிக்கோ, முனியப்பனுக்கோ, கருப்பண்ணசாமிக்கோ படைத்துவிட்டு  பிரசாதமாக உண்கின்றனர்.

ஓர் ஆப்பிரஹாமிக் மதத்திலும் அராபிய மந்திரம் சொல்லி ஆட்டின் கழுத்தை அறுத்துவிட்டால் பாவம் போய்விடும்!

"என்னதான் சொல்ல வருகிறீர் சுருக்கமாகச் சொல்லி முடியும் அய்யா!"என்று சுனாமி சுவாமிகள் சத்தம் போடுகிறார். சீக்கிரம் பிரவசனத்தை முடிக்கிறேன்.

இந்தப் பரந்த உலகம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. பல விலங்கினங்களும் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த பல உயிரனங்கள் இப்போது மனிதனின் பேராசையாலும், அறியாமையாலும் அழிந்து விட்டன. இயற்கைச் சம நிலையைப் பாதுக்காக்கும் காரணத்திற்காகவாவ‌து  விலங்குகளைக் கொல்லாமை, தாவரங்களை அழிக்காமை ஆகியவற்றைக் கைக் கொள்ள வேண்டும்.

40 வயதைக் கடந்தவர்கள் அசைவத்தால் ஏற்படும் நோய்களைப் படித்து அறிந்து, உடல் நலம் கருதியாவது சைவத்துக்கு மாற வேண்டும்.

வணிக ரீதியில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வரும் கோழி, ஆடு போன்றவை இயற்கைக்கு மாறாக அடைபட்டுக் கிடந்து வருவதால் அவற்றின்
உடலில் ஆரோகியமான சுரப்பிகள் இல்லை. நம் உடலுக்குக்கேடு விளைவிக்கும் சுரத்தல்களுடன் அவை வருகின்றன‌.

நம் நாட்டில் ஆடுகள் எந்த விதமான மருத்துவ சோதனையும் இன்றி நாற்சந்தியில் வெட்டப்படுகின்றன.அவை நோயுள்ளவையாக இருக்கலாம்.
ஒரு ஆடு வெட்டப்படுவதைப்பார்த்துக் கொண்டே உயிர்வதை பயத்தில் இருக்கும் மற்றொரு ஆடு வெட்டப்படுகிறது. அந்த இரண்டாவது ஆட்டின் உடல் முழுதும் பலவித 'டாக்ஸின்' பரவி விடும்.

கூடிய வரை சைவம் அதிகமாக உண்ணுங்கள். அசைவத்திற்கு முன்னரும் பின்னரும் நிறைய காய்கனி, கீரை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கு எது ஏற்கிறது, எது ஏற்கவில்லை என்பதை அறிந்து கொண்டு நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் நூறாண்டு வாழ்க‌!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி) 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மனிதனின்  மூன்றாம் கண்
ஆக்கம்: தனுசு
 ----------------------------------------
மாயமில்லை மந்திரமில்லை
மகாஜனங்களே!
ஜக்கம்மா சத்தியமா
சொல்வதெல்லாம் உண்மையம்மா!

இணையம் என்றொரு உலகம்
இது மேலோகமல்ல
நாமிருக்கும் பூலோகமுமல்ல
அதுஒரு மந்திர உலகம் .

இறை வாழும் வீட்டுக்கு ஒரு வாசல்
நாம் வாழும் கூட்டுக்கு  இரு வாசல்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது  வாசல்
உலக தொடர்புக்கு - இந்த
இணையம்  மட்டுமே வாசல்

இதை தொட்டவருக்கு
தூறும்  ஏழாம்அறிவு.
தொடாதவற்கு
வரும் குறை அறிவு.

ஆணும் பெண்ணும் கலந்த கலப்பினம்
கூடுமிடம்  கூத்தாண்டவர்.
ஆணும் பெண்ணும் சகலமும்  அறிய  
தேடுமிடம் கூகுள் ஆண்டவர்.

மங்காத்தா பார்க்க வேண்டுமா
மங்காத்தா ஆட வேண்டுமா
மாரியாத்தா  தரிசனம் வேண்டுமா
மாரி மழை நிலவரம் வேண்டுமா.

ஜெகத்தாரோடு சேர வேண்டுமா?
ஜகன்னாத   ஹோரா வேண்டுமா?
ஜாமத்து "தணிக்கை" வேண்டுமா?
ஜகன்மோகினிகளே வேண்டுமா?

தாயா? தாரமா? தாய்க்குப்பின் தாரமா?
தகவல்களும் கிடைக்கும் தரமா.
தயிரா? வடையா? தயிர்வடையா?
இங்கு தயாரா இருக்கு செய்முறை சரியாய் .

அந்த இந்திரலோகத்தில்
இந்திரனுக்கு மட்டுமே தெரியும்
ரம்பையின் செய்திகள்!
இந்த மந்திரலோகத்தில்
யாவருக்கும் தெரிந்துவிடும்
ரம்பாவின்  செய்திகள்!

உலகை உருட்டி உள்ளங்கையில்  திரட்டி
வராது வந்த மாமணியே
விலைவாசி உயர்வும்  உன்னாலே.
விடலைகள் வீணாவதும் உன்னாலே.  

கண்ணுக்கு தெரியா மறைபொருளே
வித்தை செய்யும் மென்பொருளே
தொழில் நுட்ப உலகின் அணுகுண்டே -உன்
ஆட்டத்தை நல் ஆற்றலுக்கு மட்டுமே அளித்திடு

-தனுசு-  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                   
 3

சிறந்த நிர்வாகியாக இருக்க என்ன தகுதி வேண்டும்?
ஆக்கம்: தேமொழி
-----------------------------------------
[முன் குறிப்பு:
இது நூறு விழுக்காடு உண்மைக்கதை.  உண்மையைத்தவிர வேறு எதையும் உரைக்கவில்லை என்ற உறுதிமொழியைக் கொடுக்கிறேன்.  அத்துடன் இதைப்
படித்து நடைமுறைப் படுத்த நினைத்தால் அது உங்கள் சொந்த விருப்பம், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறேன்.]

நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.  ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள  விரும்புபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பு.  சேரும் மாணவர்களுக்கோ படித்து தகுதியை வளர்த்துக் கொள்ள ஆசை.  ஆனால் அதற்காக வேலையையும்   விடமுடியாத சூழ்நிலை.  அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கூட்டத்தை சேர்ந்தவர்களுக்காக, மீசை நனையாமல் கூழ் குடிப்பதற்கென்று  வடிவமைக்கப் பட்ட சிறப்பு "உறிஞ்சு குழல்" வகுப்பு.  அனைவரின் வசதியையையும்  உத்தேசித்து பணி முடிந்து வந்த பின் மாலை வேலைகளில் வகுப்பு மூன்று மணி நேரம் தொடர்ந்து நடக்கும்.  வகுப்பு ஆசிரியர்களும் நகரில் உள்ள பெரிய நிறுவனங்களில் மேலதிகாரி களாக இருப்பார்கள், அதுதான் அவர்களின்  மிக… மிக… முக்கியத் தகுதி.

அந்த ஆசிரியர்கள் தாங்கள் செயல்முறையில் அறிந்தவற்றையும் இணைத்து உதாரணங்களுடன் பாடத்தை நடத்துவதால் வெறும் "ஏட்டுச் சுரைக்காய்" போல் இல்லாமல் வகுப்பு உற்சாகமாகப் போகும்.  மாணவர்களும் கல்வி கற்கும் ஆர்வத்தில் உள்ளவர்களாதாலால் தவறாமல் வந்துவிடுவார்கள்.  ஆனால் வேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரத்தை வகுப்பில் செலவழிப் பதால் அனைவரும் அலுத்து சலித்து விளக்கெண்ணை குடித்தவர்கள் போல் அமர்ந்திருப்போம்.  சின்ன  வயதில் பெற்றோர்கள் செலவழித்த பொழுது கல்லூரியில் வகுப்புக்கு மட்டம் போட்டவர்கள், திரைப்படத்திற்கு சென்றவர்கள் எல்லோரும், சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் பொழுது தவறாமல் வகுப்புக்கு வருவது காலம் செய்த கோலம்.  முதுநிலை வகுப்பென்பதால் மாணவர்களின் எண்ணிக்கை  இருபதுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

அன்று நடந்த வகுப்பை எடுத்தவர் மிகப்பெருமை வாய்ந்த பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  அத்துடன் நாட்டின் மிகப்பிரபலமான
நிறுவனத்தின் உயர் அதிகாரியாகவும் இருப்பவர்.  அதாவது பேரன்பிற்குரிய நம் அப்துல் கலாம் ஐயா போன்று என வைத்துக் கொள்ளுங்கள்.  அவர்
வகுப்பில் இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல.  வகுப்பிற்கு பதிவு செய்யும் நாளில் அடித்துப் பிடித்து செய்துவிட வேண்டும்.  இல்லாவிட்டால் அந்த
வகுப்பிற்காக காத்திருந்து ஒரு ஆண்டு விரயமாகிவிடும்.  அவரைப் பற்றிய இந்த நீண்ட முன்னுரை அவர் மேன்மையை, முக்கியத்துவத்தை தெரிந்து
கொள்வதற்காக கொடுக்கப்பட்டது.  அவரது பெருமை தெரிந்தால்தானே அவர் சொன்ன கருத்து எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

இப்பொழுது வகுப்பிற்கு போவோம். வகுப்பு ஆரம்பித்து சிறிது நேர பாடத்திற்கு பிறகு ஆசிரியர் ஃப்ராங்க் (இது அவர் முழுப் பெயர் அல்ல) கேட்டார்.

"சிறந்த நிர்வாகியாக இருக்க ஒருவருக்கு  என்ன தகுதி வேண்டும், எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்.  முதல் வரிசையில் இருப்பவரில் இருந்து
ஆரம்பிக்கலாம், எங்கே நீங்கள் சொல்லுங்கள்,  என்ன தகுதி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று முதல் மாணவரிடம் கேட்டார்.

"தன்னம்பிக்கை"

ஃப்ராங்க் இல்லை என்று தலை அசைத்து அடுத்தவரைப் பார்த்தார்.  இதற்குள் நாங்கள் சிறந்த நிர்வாகியின் தகுதி என பொதுவாக வழக்கில் உள்ள
தகுதிகளையோ  அல்லது இதுவரை பாடத்தில் படித்ததையோ மனதில் தேர்வு செய்து கொண்டோம்.

"வழிகாட்டி செல்லும் திறன்"
"இல்லை, அடுத்து?"

"அனுசரித்துப் போகும் குணம்"
"ம்ஹூம்"

"வசீகரிக்கும் குணம்"
"அதிகாரம் செலுத்தும் திறமை"
"பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் பண்பு"
"முடிவெடுக்கும் திறமை"
"நிறைய பணம்"
"எதற்கும் கலங்காத மனம்"
"நிர்வாகயியல்  பட்டம்"
"சிரித்த முகம்"
"மோசமான சூழ்நிலையிலும் பொறுப்பேற்பது"
"எதிர்த்து நிற்கும் குணம்"
"பொறுமை"
"புத்திசாலித்தனம்"
"திறமையான ஊழியர்களை திருப்தியுடன் வைத்துக் கொள்வது"
"ஊழியர்களை மனிதர்களாக மதிப்பது"
"தகுதியற்றவர்களை வெளியேற்றுவது'

வரிசையாக நாங்களும் சொல்லிக்கொண்டே போனோம்.

ஃப்ராங்க்கோ "ஆமாம் சாமி" என்பதற்கு எதிர்ப்பதமாக "இல்லை சாமி"யாகிப் போனார்.   இதைப் படிக்கும் நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தகுதியை இங்கே
சொல்லுங்கள்.  நிச்சயம் அந்த பதிலும் சரியான பதிலாக இருக்காது.  வகுப்பில் உள்ள அனைவரும் ஒரு சுற்று பதில் சொல்லியாகிவிட்டது.   ஃப்ராங்க்ற்கு
திருப்தியில்லை.

"உங்களுக்கு யோசிக்க மேலும் அவகாசம் வேண்டுமா?"
"ஆமாம்"
"சரி, பத்து மணித்துளிகள் எடுத்துக் கொள்ளுங்கள்"

எங்களை தனியே விட்டுவிட்டு ஃப்ராங்க் வெளியில் சென்று அறைக்கு வெளியே தாழ்வாரத்தின் கைப்பிடியைப் பிடித்தவாறு வானத்தை வெறித்து நோக்கினார். 

எளிதான பதில் கூட தெரியாத இந்தக் கூட்டம் எப்படி நிர்வாகயியலில் தேறப் போகிறது என நினைத்தாரா, இல்லை அவர் சரியாக பாடம் நடத்தவில்லை எனதன்னையே நொந்து கொண்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.  நானும் நம் கணித நூல்களில் விடைப்பக்கம் இருக்குமே அதுபோல அந்த புத்தகத் திலும்  கடைசியில் ஏதாவது இருக்குமா எனத் தேடிப்பார்த்தேன்.  அந்தக் கவைக்குதவாத புத்தகத்தில் அப்படி ஒன்றையும் காணோம்.  சில மாணவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  வகுப்பில் மடிக்கணினி, இணைய இணைப்பு, கைபேசி இல்லாத காலம் என்பதால் கூகிளில் தேடி பதில் கண்டுபிடிக்க முடியாத நிலை.

மீண்டும் உள்ளே வந்த ஃப்ராங்க் இப்பொழுது இந்தக் கோடியில் இருந்து ஆரம்பித்தார்.  நாங்களும் பதில்களை மாற்றி சொன்னோம், ஆனால் அடுத்தவர்கள்

சொன்ன பதில்களின் மறுசுழற்சிதான்.  ஃப்ராங்க் வெறுப்பேறி பாதியிலேயே நிறுத்தச் சொன்னார்.

"உங்களால் சரியான பதில் சொல்ல முடியாது எனப் புரிகிறது.  நேரத்தை வீணடிப்பானேன், உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன்," என்றவர் தான் கொண்டு

வந்த கோப்பிலிருந்து ஒரு செய்தித்தாளின் சில நகல்களை உருவினார்.  வரிசைக்கு ஒன்றாக ஒரு நகல் கொடுத்தார்.

அது ஞாயிறன்று வரும் செய்தித்தாளின் கேலிச் சித்திரங்கள் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டது.  'ப்லான்டி' (Blondie) என்ற நகைச்சுவை சித்திரக் கதை

அதில் சித்தரிக்கப் பட்டிருந்தது.  கதைப்படி ப்லான்டியின் கணவன் 'டேக்வுட்  பம்ஸ்டட்' (Dagwood Bumstead)  ஒரு சாப்பாட்டுராமன், சோம்பேறி, தூங்குமூஞ்சி
பெரும்பாலான கதைகளில் அவன் சோஃபாவில் படுத்து தூங்கியவாறுதான் இருப்பான் (இந்த விளக்கம், அந்தக் கதைகளைப் படிக்காத யாராவது ஓரிருவர்
இருந்தால் அவர்களுக்காக கொடுக்கப் பட்டது).

அவர் கொடுத்த நகலில் இருந்த கதையும் அது போல ஒன்றுதான்.  வீட்டில் மனைவி, மகன், மகள் என ஒவ்வொருவரும் வந்து டேக்வுட்டிடம் உதவி
கேட்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வேலையைக் கொடுப்பார்கள்.  நம் கதாநாயகனோ, இதோ செய்கிறேன் ...இதோ செய்கிறேன் என்று படுத்தே கிடப்பான். 

ஒவ்வொருவராக பொறுத்திருந்து பார்த்து விட்டு பிறகு அவர்களே தங்கள் வேலையை முடித்துக் கொள்வார்கள்.  அதே கதையின் சுட்டி கிடைக்க வில்லை,

ஆனால் அதே போன்ற மற்றொரு கதையின் சுட்டி இங்கே:
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQu-FUSADX7Gsfw7s1EZLnrfBNlwnP2kyXBAHNxMCBXAwcnMcQZ 

அதைப் படித்துவிட்டு நாங்கள் குழப்பத்துடன் ஃப்ராங்க்கின் முகத்தைப் பார்த்தோம்.  அவர் சிரித்தவாரே எங்களிடம் சொன்னார், "இப்பொழுது புரிகிறதா சிறந்த நிர்வாகியாக, மற்றவர்களை வேலை வாங்குவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று?  நீங்கள் ஒரு "சோம்பேறி"யாக இருக்க வேண்டும்.  இந்த ஆளிடம் சொல்வதற்கு நானே செய்துவிடலாம் என நினைப்பவர்கள் அடுத்தவர்களை வேலை வாங்கும் தகுதி இல்லாதவர்கள்."

[பின் குறிப்பு: எதற்கும் நான் முதலில் கொடுத்த எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்களேன்]

செயல்முறை பகுதி/உதவி:
அடுத்தவரை வேலை வாங்க சில யுக்திகள்:
(1)
இது சிங்கப்பூரின் "ஒலி" பண்பலை  வானொலியில் கேட்டது, நிகழ்ச்சி தொகுப்பாளார்கள் எனக்குப் பிடித்த பி. என். பாலாவும் மற்றொரு பெண்மணியும் என நினைக்கிறேன்.  ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதால் சரியாக நினைவில்லை.  வீட்டில் உங்களுக்கு கணவர் கைவேலை களில் உதவியாகஇருப்பாரா? என்பதைப் பற்றிய நேயர்களின் கருத்து நிகழ்ச்சி.  அதில் ஒரு பெண்மணி நிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம்  கூறியது.

"எங்க வீட்டுக்காரர் எனக்கு நல்லா உதவி செய்வாருங்க"

"அட, அப்படியாம்மா ...நீங்க கொடுத்து வச்சவங்கதான்.  எப்படி செய்வார், என்னென்ன உதவி செய்வார் ...இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்"

"அதுவாங்க,  அது வந்து… அவருக்கு எல்லா வேலையையும் அழகா, நறுவிசா செய்யனுங்க.  அவரும் எது செஞ்சாலும் நல்லா நேர்த்தியா செய்வாரு. 

எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தெரியாதுங்க.  ஏதோ கசா முசான்னு காரியத்த பண்ணி முடிச்சுடுவேன்.  அதப் பார்க்க அவருக்குப் பொறுக்காது.  சரி நீ சும்மா இரு, நானே செஞ்சு தரேன்னு சொல்லிட்டு, அவரே செஞ்சு முடிச்சிடுவாரு".


(2)
இந்த யுக்தி என் தம்பி என் அம்மாவிடம் உப்பயோகித்தது.  இப்பொழுது மனைவியிடம் இது செல்லுபடியாகவில்லை என நினைக்கிறேன்.  அதாவது ஒரு வேலை கொடுத்தால், செய்வதற்கு முன், கேள்வி மேல் கேள்வியாக ஒரு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு உயிரை எடுக்கவேண்டும்.

"தம்பி, காய்காரம்மா வரல, சைக்கிள எடுத்திட்டு சீக்கிரமா கொஞ்சம் கடைக்குப் போய் இந்த லிஸ்ட்ல இருக்கிறத வாங்கிட்டு வாயேன்"

"ஏன் சைகிள்ளதான் போகனுமா, என் டூ வீலர்ல போகக் கூடாதா?"

நீ எதுலயோ போய்க்க, ஆனா சீக்கிரமா வா, பாத்து வாங்கு... பழசு, பூச்சி இருக்கிறதெல்லாம் வாங்கிட்டு வராத"

"ஏன், அதையும் லிஸ்ட் மேலேயே எழுதிடுங்களேன், கடைக்காரன் பாத்துட்டு நல்லா காயா தருவான்ல, எனக்கு எப்படி பாத்து வாங்கறதுன்னு தெரியாது"

"அவங்கள நம்ப வேண்டாம், ஃப்ரெஷா இருக்கான்னு நீயே பாரு.  அப்படியே சின்ன வெங்காயம் நல்லா இல்லன்னா கைய வீசிக்கிட்டு வந்திடாத, பெரிய

வெங்காயமாவது வாங்கிட்டு வா?

"பெரிய வெங்காயம்னா என்ன அளவு?

"அதே அளவுதான், இது ஒரு கிலோன்ன அதுவும் ஒரு கிலோதான்.  சீக்கிரம் போ, சமைக்க நேரம்  ஆவுதுல்ல"

"ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போகவா? அதுக்குள்ள இந்த கேம் முடிஞ்சுடும்."

"நீ பத்து நிமிஷம்னா எவ்வளவு நேரம் எடுதுப்பேன்னு எனக்குத் தெரியும்,  உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு, என் புத்தியத்தான் சொல்லனும், தொண்ட
தண்ணி வத்தினதுதான் மிச்சம், நான் வேலைக்காரிய அனுப்பிக்கிறேன்"

-ஆக்கம்: தேமொழி 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4

எவன் நீந்திக் கரை ஏறுவான்?
ஆக்கம்: ஆலாசியம் கோ. சிங்கப்பூர்

பக்தனில் நான்கு வகை அதில் எந்த வகை நீ என்று கூறு?

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தவர்.

கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இவைகள் தெய்வப் புலவர் எழுதிய உலகப் பொதுமறை... என்னைப் போன்ற பெரும்பாலோர் இதைப் படித்தும்; இன்னும் சிலரோ இவற்றை அறிந்தும்; மிகச் சிலரோ இவற்றை உணந்தும் இருப்பார்கள்.

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,"

என்கிறார் மாணிக்க வாசகனார்.... அப்படிப் பிறந்து பெரிதும் முயன்று "அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற அவ்வை வாக்கிகிற்கு இணங்க அறிய மானிடப் பிறப்பை பெற்ற மானிடர்களாகிய....

நாம் கொண்டுவத நியதி (கர்மம்) என்னவோ?
நமது கடமை எதுவோ?
நமது லட்சியம் என்னவோ?

கர்மத்தை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனுபவிக்க வேண்டும் அது நியதி...

நமது கடமைகளாவன... மகனாய் (மாணவனாய்), கணவனாய், தந்தையாய் இப்படி பல வேசங்கள் கொண்டாலும் ஒரு மனிதனாய் நமக்கு இருக்கும் கடமைகள் யாவன?...

எத்தனையோப் பிறவிகளைக் கடந்து வந்தோம் இப்போது விடுதலைக்கு தகுதியான பிறவியில் இருக்கிறோம்... கர்மத்தை அனுபவித்துக் கொண்டே, கடமைகளைச் செய்து கொண்டே....

"மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்"

விடுதலை சிந்தனையையும் விதைக்கின்றோமா?

ஒவ்வொரு மனிதனும் நான் விடுதலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்திலே தான் தெரிந்தோ தெரியாமலோ, அவற்றை உணர்ந்தோ உணராமலோ பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றோம்...

நான் விடுதலைப் பெறவேண்டும் ஆமாம், அந்த நான் எங்கே? அது எப்படி இருக்கிறது... நான் நானாகத்தானே இருக்கிறேன் அது எப்படி விடுதலைப் பெற முடியும், அது என்ன விடுதலை... நான் சுதந்திரமாகத் தானே இருக்கிறேன்! என்றால் அது அல்ல என்கிறார்கள் மகான்கள்...

நான் என்பது அந்தப் பேரொளியின் மிகச் சிறிய அணுவினும் சிறிய ஒருத் துளியே! அது போட்டுக் கழட்டும் சட்டையைப் போன்றதே இந்த உடல்...

அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேரவேண்டும். அப்படி சென்று சேர்வதே விடுதலை/ வீடுபேறு / மோட்சம் / முக்தி என்று பலவாறு சொல்கிறார்கள்...

இதை தான் வள்ளுவர் "பிறவிப் பெருங்கடல் நீந்துவார்" என்றார்...

சரி, இப்போது விசயத்திற்கு வருவோம்.... "பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டும்"  அதற்கு எல்லாம் வல்ல இறைவனையே மனத்தாலும் சிந்தனையாலும் கனிந்து கசிந்துருகிப் போற்றி அவனின் அருளால் அவன் தாள் பணிந்து அவனோடு கலப்பது என்பதே... அப்படி அது நிகழ ஒருவிநாடிப் போதுமாம்....
அந்த பேருண்மையோடு கலக்கும் ஒருவினாடி பொழுது வரத்தான் எத்தனை கோடிப் பிறவிகளோ? அல்லது இப்பிறவி தானோ? யார் அறிவார் அவனை அன்றி...

இருந்தும் ஒலிம்பிக்கிலே ஓடப்போகும் யாவரும் தான் தான் அந்த தங்க பதக்கத்தைப் பெறப் போகிறேன் என்ற முழு நம்பிக்கையிலேத் தான் போகிறார்கள்... அதிலே எவன் அனைவரையும் விட அதிகமாக முயல்கிறானோ அவனுக்கு ஆண்டவன் அருளோடு அது வழங்கப் படுகிறது.... ஆமாம், தடுக்கி விழாமல் ஓடுவது என்னமோ அவன் கையில் இல்லையல்லவா!...

தடுக்கி விழச் செய்வது என்னவோ ஆண்டவன் செயல் அல்ல... இருந்தும் விழாமல் தாங்கிப் பிடிப்பது அவனின் அருளால் அல்லவா!

"கேளுங்கள் தரப்பட்டு தட்டுங்கள் திறக்கப் படும்" என்றார் ஏசு பெருமான்.

சரி இன்னும் விசயத்திற்கு வரவில்லை....

இறைவழிபாடு நாம் பெரும்பாலோரும் செய்கிறோம்.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோரிக்கை... அது அவரவர் தேவைக்குத் தகுந்த மாதிரி... அதிலே தவறொன்றும் இல்லை... என்ன நியாயமான ஆசைக்கு, தனக்குத் தகுதி இருக்கிறது நான் தானே சரியான ஆள் என்று அவனிடம் உரிமையோடு கேட்பதும், அவனிடம் பணிந்து, மரியாதையாகவும், கொஞ்சி கெஞ்சிக் காதல் கடிதமெல்லாம் எழுதியும் கேட்பதும் ஒருவகை...

அதிலே இன்னொரு பரிதாபமான ஒரு முறை இன்று பலரும் செய்வது.... அவனையே ஒரு வியாபாரியாக்குவது... ஒரு இடைத்தரகராக்குவது.... இது எப்படி என்றால் பெரும்பாலும் தனக்குத் தகுதி இல்லை என்று முழுமையாக நம்புபவர்களே இதைச் செய்கிறார்கள்... அந்தக் கூத்தை எல்லாம் நாம் யாவரும் அறிந்ததே!

வழிபடுபவர்களின் வேண்டுதலைப் பொறுத்து அதாவது அவர்கள் வேண்டும் பொருளைப் பொறுத்து நான்கு வகையாக பிரித்து கூறுகிறார்...பகவத் கீதையிலே பகவான் கிருஷ்ணர். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிநோர்ஜூந |
ஆர்தோ ஜிஜ்ஞாஸூரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||
(கீதா 7:16)

பரதகுலச்செம்மலே அர்ஜுன!... உலகியல் பொருட்களைப் பெறவேண்டி வழிபடுபவன், துன்பமடைந்தவன்,எனது பேருண்மையை அறிய ஆவலுடையவன், மேலும் மெஞ்ஞானம் பெற்றவன் ஆகிய நான்குவிதமான: நற்செயல்களைச் செய்கின்றவர்களாவான பக்தியுடைய மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள்....

(இந்த மேற்கூறிய நால்வரில் நாமும் அடங்க வேண்டுமென்றால் அதற்கு முதன்மைத் தகுதி எனச் சொல்லப் படுவது "நற்செயல்கள்" இதை கொள்ளாது இந்த அடிப்படைத் தகுதி இல்லாது நமது மனு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடியாகும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்...
அப்படிஎன்றால் பக்தி வியாபாரிகளின் கதி, அதாவது பகவானிடம் பேரம் பேசுபவர்களின் கதி? அதோகதி தான் என்பதை நான் சொல்லாமல் யாவரும் உணரலாம்).

'ஸூக்ருதிந' என்ற சொல்லுக்குப் பொருள்?
முந்தையப் பிறவிகளில் நற்செயல்கள் செய்து,

(மனிதப் பிறவியே நற்கதி தான் அதில் நாம் அனுபவிக்கும் தீய / நல்லக் கருமங்களை அதனால் விளையும் பலனை அனுபத்துக் கொண்டு போகிறோம்... இங்கே கவனம் தேவை என்னவென்றால் இதை சமாளிக்க போருக்க முடியாமல் தீவினையை மீண்டும் இப்பிறவியிலே செய்யாமல் இருப்பதே உத்தமம்)   

எவர்களுடைய இயல்பு சீர்திருத்தி நற்கர்மப் போக்குடையதாக ஆகிவிட்டதோ....

முந்தய மனப்பதிவுகளின் ப்ரபாவத்தினால் அல்லது மகான்களின் இணக்கத்தினால், எவர்கள் இப்பிறவியிலும் பகவானின் ஆணைப்படி நற்செயல்களையே செய்கிறார்களோ
(எங்கும், இயற்கையில் இருக்கிறான், நமக்குள்ளும் இருக்கிறான் அங்கிருந்து பிறக்கிறது ஆணை)
அவர்களே 'ஸூக்ருதிந' (நற்செயல் புரிவோர்) என்கிறார் பகவான்.

மேற்கூரியக் காரணத்தால் பகவானிடம் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் மேற்கூறிய நான்கு வகையினர்களும் இந்த 'ஸூக்ருதிந' என்பவர்களே...

நால் வகையினர்....

'அர்தாத்தீ' => மனைவி, மக்கள், செல்வம், மதிப்பு, பெருமை, புகழ், சுவர்க்க சுகம்
(இது விவாதத்திற்கு உரியது என்பதைவிட நடைமுறையில் தவறான விளக்கத்தில் புரிந்துக் கொள்ளப் படுகிறது)
முதலிய இஹலோக, பரலோக போகங்களில் ஏதாவது ஒன்றிலோ, பலவற்றிலோ விருப்பம் உள்ள மனிதன் அந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, பகவான் ஒருவரையே முழுமையாக நம்பி மிகவும் சிரத்தையுடன், பகவான் நிச்சயம் நமது ஆசையைப் பூர்த்தி செய்வார் என்று முழு நம்பிக்கையுடன் அவனைத் தொழுபவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.... இதற்கு உதாரணமாக பெரியவர்கள் கூறுவது.. விபீசனனையும், சுக்ரீவனனையும்...

(இந்தக் கதை மாந்தர்களின் வாழ்வைப் போன்றது எனக் கொள்ளுங்களேன்)

இக்கால மக்கள் நம்மில் பலரும்; இவ்வகை அதிலும் நமது அரசியல் வாதிகள் தான் இதிலே முன்னிலை.... ஆனால் அவர்களின் மனு தள்ளுபடியாகாது இருக்க வேண்டும்?!!...

அதற்கு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.. ஆனால்... எங்கே உணர்கிறார்கள்!

'ஆர்த்த' => உடலிலோ மனதிலோ ஏற்படும் வேதனையாலோ, ஆபத்து, எதிரிகளின் மேல் உள்ள பயம், நோய், அவமானம், திருட்டு பயம், கொள்ளையடித்துக் கொலை செய்பவர்களால் பயம், கொடிய விலங்குகளிடம் ஏற்பட்ட பயம் என்று இன்னும் பல மனத் துயரங்களில் இருந்து விடுபட மிகவும், சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும், தகுதியுடனும் (நற்செயல்கள் செய்பவராக இருப்பது) இருந்து வேண்டிப் பெறுவது...

(இதற்கு உதாரணம்: திவாரகையில் வசிப்பவனே, கோவிந்தா! கிருஷ்ணா! வாசுதேவா என்று அபயக் குரல் கொடுத்து அவனையே முழுமையாக நம்பி, சிரத்தனையுடன்.... முழுமையாக நம்பி ஆமாம் அதனால் தான் அவள் தனது இரு கரங்களையும் தனது ஆடையைப் பற்றிப் பிடிக்காமல் விடுத்து தனது தலைக்கு மேலே கைகளை உயர்த்தி! மகாகவி சொல்வான்...

ஹரி ஹரி என்றாள் - கண்ணா
அபயம் அபயம் உனக்கபயம் என்றாள்
----------------------------------------------------
---------------------------------------------------
ஐயநின் பதமலே சரண்
ஹரஹரி! ஹரிஹரி! ஹரிஎன்றாள்..

அந்த அளவிற்கு முழு நபிக்கையுடன் அவனை சரணடைய வேண்டுமாம்.)

'ஜிஜ்ஞாஸூ' => அவனது பேருண்மையை அறிய ஆவலுடைய பக்தன். இவன் மேற்கூறிய மனைவி-மக்கள், செல்வம், வீடு முதலிய பொருட்களையும், அதற்கு அடுத்துக் கூறிய பயம், தோல்வி, வேதனை என்பன எல்லாவற்றையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாமல்... பரமாத்மாவை உண்மையாக அறிய வேண்டும் என்ற இந்த ஒரே ஒரு விருப்போடு, ஒருமித்த மனத்துடன், பகவானிடம் பக்தி செலுத்தி எப்படி சிரத்தையும், முழு நம்பிக்கையுடன் கூடிய அன்பை செலுத்தி அவனை... அந்தப் பேருண்மையை அறிய முயல்பவர்களே இந்த 'ஜிஜ்ஞாஸூ' என்னும் மூன்றாம் வகையினர் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா!...

‘ஞானியான’ பக்தன் => எவர்கள் பரமாத்மாவை அடைந்துவிட்டார்களோ! எவர்களுடைய நோக்கில் பரமாத்மா மட்டுமே காணப்படுகிறாரோ, பரமாத்மாவைத் தவிர வேறெதுவும் இல்லையோ, இவ்வாறு பரமாத்மாவை அடைந்த பிறகு… 

(பேரொளியில் கலத்தல் அத்வைதம், அருகில் அமர்தல் பாதமலராதல் துவைதம் / அருகில் அமர்தல் என்பது விவாதித்த ஒன்று அத்வைதி அதில் இங்கே சற்று வேறுபடுகிறான்... காரணம் அதற்கு உருவம் தந்துப் பொருள் என்றுக் கொண்டால்?! அது ஒரு இடத்திலே இருப்பதாக கொண்டால்?!... ஆதி அந்தம் இல்லாத எங்கும் பரவி இருக்கும் பரமாத்மா அருகில் அமர்வது என்பது அவர்தம் கருத்து வேறுபடுவதால்!)

இங்கே தான் தெய்வம், கடவுள், இறைவன் என்றக் கருத்து பேசப் படவேண்டும்!...

(எங்கெங்கு காணினும் சக்தியடா! ஆமாம், எங்கும் சக்தியை நிறைத்து அந்த தெய்வ சக்தியால் பிரபஞ்சத்தை இயக்குகிறான்.... அவனே அனைத்து உயிருக்குள்ளும் ஆன்மாவாக இருக்கிறான்... அதாவது உள்ளே கிடப்பவன்... உள்ளக் கிடப்பில் ஒரு சிறு இடத்தில் உறங்கிக் கிடப்பவன் அவனை காண உள்ளேக் கடந்து செல்லவேண்டும்... உள்கட ...உள்கட... அவனே அந்தக் கடவுள்.... அவன் வேறெங்கும் இருக்கும் அவனே நம்முள்ளும் இருக்கும் கடவுள்.... மனம் என்னும் திரை மறைத்து இருக்கும் அந்த ஆத்மாவை காண, மனம் என்னும் திரை விலக வேண்டும் / இப்படியும் கொள்ளலாம்... மனம் என்னும் கண்ணாடி தெளிவாக இருந்தால் ஆத்மா தனது சுயத்தை வெளிப்படுத்தும் என்று... இவைகள் வேதாந்தம் கூறுவதாக நமது இளைஞர் தளபதி விவேகானந்தர் கூறுகிறார்).

சரி, அப்படி என்றால் இறைவன் தான் யார்? அவன்தான் இந்த பிரபஞ்சத்தை தனது யோகசித்தியால் தனது ஒருதுளியாக தன்னில் ஒரு இடத்திலே தாங்கியுள்ளான் என்று கீதையிலே கிருஷ்ணர் கூறுகிறார்.....

இதப் பிரபஞ்சமே ஒரு துளி தானாம்... அப்படிஎன்றால் அவன் எவ்வளவுப் பெரியவன்.... அது தான் ஆதி அந்தம் இல்லாதவனாயிற்றே....

இதைதான் நமது 'விசு ஐயர்' அவர்கள் பலநேரங்களில் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்... உண்மையில் இது ஒரு பெரிய கட்டுரையாக விரித்து விளக்க வேண்டியதும்.. அதற்கு முன்பே சில அடிப்படை 'அகர' 'ககர' வரிசைகளைப் படிப்பவருக்கே அது புரியும் என்று நினைத்து எங்கே எப்படி ஆரம்பிப்பது அல்லது எப்போது ஆரம்பிப்பது என்றே அமைதி காக்கிறார் என்றே நம்புகிறேன்).

சரி, விசயத்திற்கு வருவோம்....
அடைந்தப் பிறகு...எவர்களுடைய எல்லா ஆசைகளும் இல்லாமல்; எஞ்சி நில்லாமல் சென்றுவிட்டதோ, அப்படிப்பட்ட நிலையில் எவர்கள் இயல்பாகவே பரமாத்மாவை வழிபடுகிறார்களோ! அவர்கள் இந்தவகை ஞானிகள்… 
(ஜீவன் முக்தி பெற்றவர்கள் / அழைப்பிற்காகக் காத்திருப்பவர்கள்)

இவர்களில் உதாரணம் நாரதர், பீஷ்மர்...  பிரகலாதன்…

(பிரகலாதன் இவன் கருவிலே ஞானம் பெற்றவனாம் / இது சமீப அறிவியல் இப்பொது தான் ஒத்துக் கொள்கிறது, கருவில் இருக்கும் குழந்தை தாயினை உணரமுடிகிறது என்று)

நமது நாயன்மார்களும், ஆழ்வார்களும்..... இன்னும் சொன்னால், நமது நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஷேசாஷ்திரி சுவாமிகள், ரமண  மகரிஷி, மகாத்மா காந்தி என்று பட்டியலிடலாம்....

பகவான் கூறிய இந்த நான்குப் பிரிவுகளில் முதலாமவனை விட இரண்டாமவனும் அவர்களைவிட மூன்றாமவனும் இவர்கள் மூவரையும் விட நான்காமவனான ஞானியே சிறந்தவன்...

ஆம், வேதாந்தக் கருத்துப்படி அவனே ஜீவன் முக்தன் அவனே பிறவியென்னும் பிறவிப் பெருங்கடலைக் கடந்தவன்.

ஆக, இறைவனைப் பற்றிய அறிவு படித்தமையால் நாமும் முக்தி பெற்றுவிடுவோமா? என்றால்..

கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

'கடவுளையும், எல்லாம் அறிந்த அவரது தன்மையையும் பற்றி நாம் அறிந்தவற்றின் தொகுப்பே வேதங்கள்' நான் 'வேதங்களைத் துறக்கிறேன்' என்பது  வேதாந்த தத்துவத்தின் கடைசி வார்த்தை என்பர்... மதப் பிரிவுகளும், சடங்குகளும், நூல்களும், மனிதன் தன உண்மை இயல்பை உணர்ந்துக் கொள்வதற்கு உதவுகின்றன. அதன் பிறகு அவைகள் அவனுக்கு தேவையற்றவைகளாகின்றன என்பார்.

'மாறாத ஒன்றை அறிய உதவுவதே உண்மையானக் கல்வி, படிப்பாலோ, நம்பிக்கையாலோ, ஆராய்ச்சியாலோ, அதைப் பெற முடியாது; அது உணர்வு கடந்த நிலையிலும், சமாதி நிலையிலும் பெறக் கூடிய ஒன்றாம். அந்த நிலையை ஒருவன் அடையும் பொது அவன் சகுனக் கடவுள் நிலையை (தெய்வம்) நிலையை அடைகிறான்; நானும் என்பிதாவும் ஒன்றே; தனிப் பரம்பொருளான பிரமத்துடன் (இறைவனுடன்) தான் ஒன்றி இருப்பதை அவன் அறிகிறான். சகுனக் கடவுள் ஆகிறான் என்பார் சுவாமி விவேகானதர்.

இங்கே நாம் தெரிந்து, அறிந்து, உணர்ந்து.....

'நான்' என்னும் ஆன்மாவை விடுதலை செய்ய வேண்டியதே மனித பிறவியின் லட்சியம்....

(லட்சியம் ஒருபக்கம் இருக்கட்டும்... அதற்கு முன்பாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் அல்லது எந்த வகையில் இருக்கிறோம்...

முதலாம் நிலை.... நாற்பதுக்குலாகவாது முற்றுப் பெறவேண்டும்... இரண்டாவது அறுபதுக் குள்ளாகவாவது முற்றுப் பெற வேண்டும்.... அடுத்த இரண்டும் ஆயுளுக்குள் நிச்சயம் நிகழும்...

பேரொளியில் கலக்கும் ஒரே ஒரு முதல் வினாடி வெகு தூரம் இல்லை... என்று இறைவனின் மேல் உள்ள பிரேமையுடன், முழு நம்பிக்கையுடன் முயன்றால் விடுதலை உறுதியே....)

நமது நிலையும், தேவையும் அறிந்து... தகுதியை உயர்த்தி அந்த உயரிய லட்சியத்தை நோக்கி முயலுவோம்...

“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தேத் தீருவேன்” என்றார் திலகர்.

அவரும் அந்த கீதையின் சாரத்தை ஒரே வரியில் கொண்டு வந்தே அதை நாட்டு விடுதலைக்கும் கூறி இருப்பார் போலும். ஆக அதன் உண்மையான அர்த்தம் இந்த ஆன்ம விடுதலையே...

(பாரதியின் வரிசையில் முதலில் வருவது நாட்டு விடுதலை, அடுத்ததாக பெண்களின் விடுதலை, இவைகள் சாத்தியம் என்ற பிறகு ஆன்ம விடுதலை சாத்தியம் அப்படி சாத்தியம் ஆனபோது அதை இந்தியா இந்த உலகிற்கு அளிக்கும் என்று உறுதியுடன் விவேகானந்தரை போலவே பாரதி கூறுகிறான்...)

பிறந்தோம்; மடிந்தோம் என்றில்லாமல், அல்லது இந்த நால் வகையிலே முதல் இரண்டு வகைக்குள்ளேயே இருந்துக் கொண்டு. உலகாயதப் பொருள்களையே வேண்டிப் பெற்று... மீண்டும் மீண்டும் புது உடல் எடுத்து அவதியுற்று பிறவி என்னும் பெருங்கடலில் தத்தளித்து தவிப்பதை விடுத்து.

பேரானந்தம் என்னும் அந்த பேரொளியில் கலப்பதே லட்சியம் என்பதால் அதனை நோக்கியே முன்னேறுவோம்... 

பிறக்கும் போதே ஞானிகள் அல்ல...
வளரும் போதும் ஞானிகள் அல்ல....

சாதாரண மனிதர்கள் நாம். வாழும் போதே இந்த உடல் மடியும் முன்னமே,
இந்த உடல் இனியும் விடுதலைக்கு உதவாது என்று இந்த உடலை கலட்டி எறிந்து விட்டு வேறு ஒரு உடலை ஆன்மா தேர்ந்தெடுக்கும் முன்பே விழித்துக் கொள்வோம்... 

அன்பினால் உருகி; அவனின் அன்பை மட்டுமே வேண்டி; அந்த அன்பாய், அன்பென்னும் பேரொளியில் கலக்க; அவனின் தாள் பணிவோம்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மாணிக்கவாசகனாரின் இந்த அற்புத திருவாசகத்தை நமது இசைஞானியின் சிம்பொனி இசையில் காணொளியாக கேட்டு இன்புறுங்கள்.

http://www.youtube.com/watch?list=PLEFBA9AF1D81C1387&feature=player_detailpage&v=lrkSN8pwby8

http://www.youtube.com/watch?list=PLEFBA9AF1D81C1387&feature=player_detailpage&v=fr8mTh6jEwU

நன்றி வணக்கம்.

அன்புடன்,
ஆலாசியம் கோ. சிங்கப்பூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5




பெப்பர் ஸ்ப்ரே...

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே..அப்படினா...என்ன.! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ

"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'. ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொன்னால் போலீஸ் வந்து அவர்களை அள்ளிக் கொள்ளும்! "அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' காவல்துறை வழங்கி வருகிறது. இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபது முறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.

முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காவல்துறைக்கு வந்திருக்கின்றன.

இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" .

இந்த பெப்பர் ஸ்ப்ரே காவல் துறை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது. இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள்,பெண்கள் என அனைவரும் பயன் பெறலாம்..

அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத்துல இருந்து தப்பிக்க இது ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.

மேலும் தொடர்புக்கு:
துரைப்பாக்கம் சரகம்,
காவல்துறை உதவி ஆணையர்
அலுவலகம்,
போன்-044--234527

மின்னஞ்சலில் வந்தது. அனுப்பியவர் Ananthamurugan.G
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!