மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Numerology. Show all posts
Showing posts with label Numerology. Show all posts

24.3.22

எண் ஏழின் சிறப்புக்கள்:



எண் ஏழின் சிறப்புக்கள்:

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007

2. எழு குன்றுகளின் நகரம் ரோம்

3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்

4. மொத்தம் ஏழு பிறவி

5. ஏழு சொர்க்கம்(குரான்)

6. ஏழு கடல்கள்

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)

8. ஏழு வானங்கள். (Qur'an)

9. ஏழு முனிவர்கள் (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி) 11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு

17. கீழுலகம் ஏழு நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

19. மொத்தம் ஏழு தாதுக்கள்

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு

24. அகப்பொருள் திணைகள் ஏழு

25. புறப்பொருள் திணைகள் ஏழு

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு

27. கடை ஏழு வள்ளல்கள்

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)

29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்

31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு

33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை, பேரிளம் பெண்)
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.19

உங்கள் நடப்பு வாழ்க்கையில் அடுத்த டர்னிங் பாயிண்ட் எப்போது?


உங்கள் நடப்பு வாழ்க்கையில் அடுத்த டர்னிங் பாயிண்ட் எப்போது?

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உண்டாகும் திருப்பு முனைகள்தான் (Turning Point) ஏற்றத்தைக் கொடுக்கும்.

திருப்புமுனைகள் இன்றி ஒரே சீரான வாழ்க்கையில் ஒரு சுவாரசியமும் இருக்காது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையில் அவர் பிறந்து 33 ஆண்டுகள் கழித்துத்தான் திருப்புமுனை அமைந்தது. அதுவும்
அற்புதமாக அமைந்தது. 1943ம் ஆண்டு பண்ணைபுரத்தில் பிறந்த அவருக்கு 1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம்தான்
திருப்புமுனையைக் கொடுத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் அவர் புகழைப்பாடத் துவங்கின!!!!

அதுபோல உங்கள் வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை எப்போது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் பிறந்த தேதியுடன் வாத்தியாருக்கு எழுதுங்கள்

மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Subject Boxல் மறக்காமல் Turning Point என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.14

Numerology: Place of living எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2


Numerology: Place of living

எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2

சென்ற பாடத்தின் தொடர்ச்சி இது!

13.10.2014

நீங்கள் பிறந்த ஊரின் எண்ணும், உங்களுடைய பிறந்த எண்ணும் ஒன்றாக இல்லை என்றால், நீங்கள் பிறந்த ஊரே உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பிறந்த ஊரின் மேல் அபிமானம் அல்லது காதல் இருப்பது இயற்கையானது! அடிக்கடி அல்லது எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம். வயதான காலத்தில், அங்கேயே சென்று தங்கி (செட்டிலாகி) நம் காதலைக் கொண்டு செலுத்தலாம். அதாவது பணி ஓய்வு காலத்தில் அதைச் செய்யலாம். ஆனால் பொருளீட்ட வேண்டிய காலத்தில், அதாவது வயது 21ற்கு மேல் 60 வயதுவரை எண் கணிதப்படி ஒத்துவரும் ஊரில் நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அதற்கு எண் கணிதம் ஒரு மாற்று வழியையும் தந்துள்ளது. அதாவது பிறந்த எண் ஒரு ஊருடன் சரிவராதவர்களுக்கு இரண்டாவது சாஸ்சாக வேறு சில எண்களையும் தந்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நீங்கள் ஒன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 4, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
6 மற்றும் 7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் இரண்டாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 7, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர் சரிப்பட்டுவராது!

நீங்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  5, 6, 7 மற்றும் 9. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
4 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் நான்காம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  1 மற்றும் 6 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஐந்தாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  எதையும் தேட வேண்டாம். உங்களுக்கு எல்லா ஊர்களுமே சரிப்பட்டுவரும்.
ஆனாலும் 2 அல்லது 4ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்களைத் தவிர்ப்பது நல்லது!

நீங்கள் ஆறாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  3, 4, மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஏழாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 2 அல்லது 3. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 9ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் எட்டாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 1, 2 & 4 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 6ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஒன்பதாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  1, 2, 3, அல்லதுr 6. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

Each number has a numerological vibration.
------------------------------------------------------------
இளையராஜாவை எடுத்துக்கொள்வோம்.

அவருடைய பிறந்த தேதி: 2.6.1943

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja

அவருடைய இயற்பெயர்: ஞானதேசிகன் (Gnanadesikan)
மாற்றி வைத்துக்கொண்ட பெயர்: Ilaiyaraaja
GNANADESIKAN = 3+5+1+5+1+4+5+3+1+2+1+5 = 36 = 9
ILAIYARAAJA = 1+2+1+1+1+1+2+1+1+1+1 = 13 = 4

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 5ஆம் எண் மட்டுமே ஒத்துவராது. மற்ற எண்கள் எல்லாம் ராசியானதே! அவருக்குப் பிறந்த ஊர், வசிக்கும் ஊர், வீட்டில் வைத்த பெயர், அவர் மாற்றி வைத்துக்கொண்ட பெயர் என்று அனைத்துமே வசப்பட்டுள்ளது! அதாவது ராசியாக உள்ளது! ஜாதகத்தில் அவருக்கு மகா புருஷ யோகம் உள்ளது. அதனால் அவருக்கு எல்லாமும் வசப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளார்
---------------------------------------------------------
எண்கணிதத்தைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

ஜோதிடம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை!

மருத்துவத்தில் Allopathy, Homeopathy, Ayurveda, Acupuncture போன்று பல பிரிவுகள் இருப்பதைப்போல, பல சிகிச்சைமுறைகள் இருப்பதைப்போல ஜோதிடத்தில் பல பிரிவுகளில் இந்த எண் கணிதமும் ஒன்று. விருப்பமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அல்லது நம் வகுப்பறை ஜோதிடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

அது உங்கள் சாய்ஸ்!

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.10.14

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

Lesson on Numerology 

எண் கணிதப் பாடம்

10.10.2014

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!
--------------------------------------------------------
நேற்று அகண்டவரிசை இணைய இனைப்பு படுத்திவிட்டது.
அதனால்தான் வகுப்பிற்கு வரமுடியவில்லை. நேற்று இரவுதான்
சரியானது. இதை உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன்.
--------------------------------------------------------
இன்றையத் தேதிக்கு, அதாவது 10 அக்டோபர் 2014ற்கு ஒரு சிறப்பு
இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரியாதவர்களுக்குப்
பிறகு நான் சொல்கிறேன்
---------------------------------------------------------
எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை
சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!

வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான்
பாடங்கள் மண்டையில் ஏறும்!

மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக
இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!

நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக்
கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக
இருக்கும், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம்
சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டு
மென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக
அந்தத் தொழில் நடக்கக்கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை
எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன
செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு என்ன
செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை
அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச்
சிறப்பாகச் செய்ய முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி,
புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து
கொண்டு அந்தத் தொழிலை எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை,
பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால்
வேண்டாம் என்று சொல்லி, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில்
வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய
நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை
போட்டுத் தாருங்கள் என்று கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி
அனுப்பிவிட மாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, 
New Jersey அல்லது Boston  என்று எந்த ஊராக இருந்தாலும்,
எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர
வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க
அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா இருக்கிறாரா அல்லது
மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப்
பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும்
என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம். “பார்த்து என்ன ஆகப் போகிறது? இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். பாடத்தை மட்டும் படியுங்கள். மற்ற விருப்பங்கள் உங்கள் சாய்ஸ்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள்
பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச்
சுருக்கி ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.

நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்:
SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும்
சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9

நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர்
என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த
இடமும் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the 
town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa 
Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father of Damarla Venkatadri 
Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official 
use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, 
to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from 
Madraspattinam, a fishing village north of Fort St. George. However,
 it is uncertain whether the name 'Madraspattinam' was in use before 
European influence. 

After the British gained possession of the area in the 17th century, 
the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and 
the British referred to the united town as Madrasapattinam. The state 
government officially changed the name to Chennai in 1996, at a time when 
many Indian cities were being renamed. However, the name Madras 
continues to be occasionally used for the city as well as for places 
named after the city, such as the University of Madras and The Indian 
Institute of Technology, Madras. (தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7

ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர்
இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது.
7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா
என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? இரண்டு எண்கள் உள்ளதே எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான்.
1996ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின்
பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P
----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7
------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.7.13

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2

 
Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2

சென்ற பாடத்தின் தொடர்ச்சி இது!

நீங்கள் பிறந்த ஊரின் எண்ணும், உங்களுடைய பிறந்த எண்ணும் ஒன்றாக இல்லை என்றால், நீங்கள் பிறந்த ஊரே உங்களுக்கு அதிர்ஷ்டம்
தரக்கூடியதாக இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பிறந்த ஊரின் மேல் அபிமானம் அல்லது காதல் இருப்பது இயற்கையானது! அடிக்கடி அல்லது எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம்.
வயதான காலத்தில், அங்கேயே சென்று தங்கி (செட்டிலாகி) நம் காதலைக் கொண்டு செலுத்தலாம். அதாவது பணி ஓய்வு காலத்தில் அதைச்
செய்யலாம். ஆனால் பொருளீட்ட வேண்டிய காலத்தில், அதாவது வயது 21ற்கு மேல் 60 வயதுவரை எண் கணிதப்படி ஒத்துவரும் ஊரில் நாம் இருக்க
வேண்டும். அப்படி இருந்தால் அது நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அதற்கு எண் கணிதம் ஒரு மாற்று வழியையும் தந்துள்ளது. அதாவது பிறந்த எண் ஒரு ஊருடன் சரிவராதவர்களுக்கு இரண்டாவது சாஸ்சாக வேறு
சில எண்களையும் தந்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நீங்கள் ஒன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 4, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
6 மற்றும் 7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் இரண்டாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 7, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர் சரிப்பட்டுவராது!

நீங்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  5, 6, 7 மற்றும் 9. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
4 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் நான்காம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  1 மற்றும் 6 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஐந்தாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  எதையும் தேட வேண்டாம். உங்களுக்கு எல்லா ஊர்களுமே சரிப்பட்டுவரும்.
ஆனாலும் 2 அல்லது 4ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்களைத் தவிர்ப்பது நல்லது!

நீங்கள் ஆறாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  3, 4, மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஏழாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 2 அல்லது 3. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 9ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் எட்டாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 1, 2 & 4 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 6ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஒன்பதாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  1, 2, 3, அல்லதுr 6. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

Each number has a numerological vibration.
------------------------------------------------------------
இளையராஜாவை எடுத்துக்கொள்வோம்.

அவருடைய பிறந்த தேதி: 2.6.1943

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja

அவருடைய இயற்பெயர்: ஞானதேசிகன் (Gnanadesikan)
மாற்றி வைத்துக்கொண்ட பெயர்: Ilaiyaraaja
GNANADESIKAN = 3+5+1+5+1+4+5+3+1+2+1+5 = 36 = 9
ILAIYARAAJA = 1+2+1+1+1+1+2+1+1+1+1 = 13 = 4

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 5ஆம் எண் மட்டுமே ஒத்துவராது. மற்ற எண்கள் எல்லாம் ராசியானதே! அவருக்குப் பிறந்த ஊர், வசிக்கும்
ஊர், வீட்டில் வைத்த பெயர், அவர் மாற்றி வைத்துக்கொண்ட பெயர் என்று அனைத்துமே வசப்பட்டுள்ளது! அதாவது ராசியாக உள்ளது! ஜாதகத்தில்
அவருக்கு மகா புருஷ யோகம் உள்ளது. அதனால் அவருக்கு எல்லாமும் வசப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளார்
---------------------------------------------------------
எண்கணிதத்தைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

ஜோதிடம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை!

மருத்துவத்தில் Allopathy, Homeopathy, Ayurveda, Acupuncture போன்று பல பிரிவுகள் இருப்பதைப்போல, பல சிகிச்சைமுறைகள் இருப்பதைப்போல
ஜோதிடத்தில் பல பிரிவுகளில் இந்த எண் கணிதமும் ஒன்று. விருப்பமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அல்லது நம் வகுப்பறை ஜோதிடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

அது உங்கள் சாய்ஸ்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு நாளை ஒரு நாள் விடுமுறை. அடுத்த வகுப்பு 4.7.2013 வியாழனன்று!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.6.13

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!
வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான் பாடங்கள் மண்டையில் ஏறும்!
மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!
நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக் கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக இருக்கும்,
மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம் சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டுமென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக அந்தத் தொழில் நடக்கக் கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம்  பெறுவதற்கு என்ன செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்ய
முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி, புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து கொண்டு அந்தத் தொழிலை எப்படிச்
சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லி,
வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில் வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை போட்டுத் தாருங்கள் என்று  கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி அனுப்பிவிடமாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, New Jersy அல்லது Bostan  என்று எந்த ஊராக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா  இருக்கிறாரா அல்லது மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப் பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும் என்பதை மட்டும்
இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம்.

“பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள் பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச் சுருக்கி
ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.


நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்: SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும் சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9


நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர் என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த இடமும்
அவருக்குச் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father ofDamarla Venkatadri Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from Madraspattinam, a fishing village north of Fort St. George. However, it is uncertain whether the name 'Madraspattinam' was in use before European influence.

After the British gained possession of the area in the 17th century, the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and the British referred to the united town as Madrasapattinam. The state government officially changed the name to Chennai in 1996, at a time when many Indian cities were being renamed. However, the name Madras continues to be occasionally used for the city as well as for places named after the city, such as the University of Madras and The Indian Institute of Technology, Madras.(தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7


ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர் இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது. 7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான். 1996ஆம் அண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின் பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P

----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7

------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன்.
.
பொறுத்திருங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!