--------------------------------------------------------------------------------------------
Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!
புதிய தொடர் - பகுதி 1
ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி
அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.
அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்
----------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”
அதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.
ஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?
பாடலைப் பாருங்கள்
“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு
அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்
சிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே!
.....................புலிப்பாணி முனிவர்
ஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.
தோஷத்தைப் போக்க என்ன வழி?
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்!
இராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!
புதிய தொடர் - பகுதி 1
ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி
அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.
அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்
----------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”
அதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.
ஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?
பாடலைப் பாருங்கள்
“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு
அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்
சிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே!
.....................புலிப்பாணி முனிவர்
ஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.
தோஷத்தைப் போக்க என்ன வழி?
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்!
இராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!