மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.10

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

   “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
    தென்றலே உனக்கேது சொந்த வீடு?
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு”


என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக எழுதினார். அவருடைய பாடல்கள்தான் எனக்கு வேதங்கள்.

இந்தப் பாடல்வரிகள்தான் என் எழுத்திற்கு அளவுகோல்!

நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! தீவிர வாசகன். அது மட்டுமே என் தகுதி. எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது.

கமகமக்கும் குனேகா சென்ட்டுடன் வரும் அந்தக்காலக் 'குமுதம்' என்னை வாசிப்பிற்குள் இழுத்துச் சென்றது. 'பகடை பன்னிரெண்டு' என்னும் சித்திரத் தொடரை வாசிக்கத் துவங்கியவன், பிறகு அட்டை முதல் அட்டைவரை வாசிக்கும் ரசிகனானேன்.

நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவன். சிறு வயதிலேயே தமிழின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே எனது வாசிப்புப் பயணம் துவங்கி விட்டது.

தங்கள் எழுத்தால் என்னை மயக்கியவர்களைப் பட்டியல் இட்டால் மாளாது. குமுதம் ஆசிரியர் திரு.S.A.P அண்ணாமலை, உதவி ஆசிரியர்கள்
திருவாளர்கள் ராகி.ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மற்றும்
சரித்திர நாவலாசிரியர் திரு. சாண்டில்யன், கல்கண்டு ஆசிரியர்
தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெகச்சிற்பியன்,
விந்தன், நா.பார்த்தசாரதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று அனைவருடைய எழுத்துக்களும்
எனக்குப் பரீட்சயம்; விருப்பம்.

என்னை கவர்ந்தவர்களில் எழுத்தாளர் கல்கி அவர்களுக்குத் தனி இடம் உண்டு. அவருடைய 'பொன்னியின் செல்வன்' தொகுப்பைக்  ணக்கின்றிப்பலமுறைகள் படித்து மகிழ்ந்திருக்கிறேன். நாயகன் வந்தியத்தேவனுடன் நானும் குதிரையில் பயணித்திருக்கிறேன்.

அது எல்லாம் ஒரு இருபது வருட காலம். அவ்வளவுதான். பிறகு
கவிதைகளில் நாட்டம் கொண்டு பல கவிதை நூல்களைப் படிக்கத் துவங்கினேன். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்
மற்றும் அவருடைய எழுத்துக்கள் எனக்குத் தமிழில் ஒரு புதிய
பரிமாணத்தைக் காட்டின. கவிஞர். வாலி அவர்களின் கவிதைகள், பட்டுக்கோட்டையார், கவிஞர்.வைரமுத்து அவர்களின் கவிதைகள், தொடர்ந்து   செட்டிநாட்டுக்  கவிஞர்கள் திருவாளர்கள்  முனைவர்
அர.சிங்கார வடிவேலன், கவிஞர்.சோம. சிவப்பிரகாசம், ஆத்தங்குடிக்
கவிஞர் அழ.அண்ணாமலை,  கவிஞர் அரு.நாகப்பன், கவித்தென்றல் காசு.மணியன் என்று எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் முங்கி எழுந்தேன். நீந்திக் களித்தேன்.

பிறகு ஆன்மீகத்தின் பக்கம் பார்வை திரும்பியது. வாரியார் சுவாமிகளின் நூல்களும், சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல்களும்,ஓஷோவின் நூல்களும் மனதைப் புரட்டிப் போட்டன.

இடையில் James Hadley Chase, Jefferey Archer போன்ற பிரபலமான ஆங்கில நாவலாசிரியரின் நூல்களை எல்லாம் தேடிப் பிடித்துப் படித்தேன். அவற்றிற்கு இணை அவைதான். வேறு ஒன்றையும் இணையாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்து நடையைக் கொண்டது அவர்களின் ஆக்கங்கள்!

Jefferey Archer ரின் Twist in the tale என்னும் சிறுகதைத் தொகுப்பு அசத்தலாக இருக்கும். தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். சிறுகதை இலக்கணத்திற்கு அந்த நூலை அரிச்சுவடியாகச் சொல்லலாம்.

கதை சொல்லும் உத்தியை இந்த வாசிப்புக்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தன.எப்படி எழுத வேண்டும் என்பதைவிட, எப்படி எழுதக்கூடாது என்பதில் ஒரு பயிற்சி கிடைத்தது. அந்த  மாதிரி  நூல்களையும் படிக்க நேர்ந்தது.

சுவாரசியமாகக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு, முதலில் பலரது நூல்களையும் படிக்க வேண்டும். வாசிப்பின் மூலமே சொல்லும் உத்தி அல்லது எழுதும் உத்தி வசப்படும். எனக்கும் எழுத்து அவ்விதமே வசப்பட்டது. உண்மையைச் சொன்னால் என்னையறியாமல் எழுத்து  எனக்கு வசப்பட்டது. என்னை ஆட்கொண்டது!

இதுவரை 60 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும், சுமார் 100 குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளேன்.

எழுதியவற்றில் 60 சிறுகதைகளைத் தொகுத்து, புத்தக வடிவில் தவழ விட்டிருக்கிறேன். தொடர்ந்து மற்ற ஆக்கங்களும் புத்தகமாக வரும்!

சமீபத்தில் எனது 28 குட்டிக்கதைகளைத் தொகுத்து பத்தகமாக்கியுள்ளேன். கோவைக்கு பெருமை சேர்க்கும் விஜயா பதிப்பகத்தார் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

அந்தப் புத்தகத்தின் முகப்புப் பகுதியையும், பின் பகுதியையும், உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 104 பக்கங்கள் கொண்ட அந்த் நூலின் விலை ரூ.40:00. தனியாக உங்களுக்கு அனுப்பினால் கூரியர் செலவு ரூ25:00 ஆகும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள். எனது ஜோதிட நூல்கள் வெளியாகும்போது அவைகளுடன் அந்த நூலையும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நமது வகுப்பறை
மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் ஜோதிடப் பாடங்களுக்கென
வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.

பின்னூட்டத்தின் மூலம் அவர் இப்படிச் சொல்லியுள்ளார்:

////////ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத 
இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students. ////////

நான் எழுதாததைத் தேடிப்பிடித்து அவர் எழுத வேண்டாம். நான் எழுத உள்ளதற்காகக் காத்திருந்து எழுதவும் வேண்டாம். அது சாத்தியமில்லை. எழுத்திற்கெல்லாம் கட்டுப்பாடு கிடையாது. இருக்கவும் கூடாது.

அவருக்கு ஒரு வேண்டுகோள். அவருக்கு விருப்பமானதை அவர் எழுதலாம். ஜோதிடம் பெரிய கடல். எதை வேண்டுமென்றாலும் அவர் எழுதலாம்.

“காற்றுக்கென்ன வேலி; கடலுக்கென்ன மூடி?” என்று கவியரசர் சொன்னார். அதுபோல ஜோதிடத்திற்கு யாரும் வேலி போடவும் முடியாது. மூடி போடவும் முடியாது. சொந்தம் கொண்டாடவும் 
முடியாது. அது பொதுச் சொத்து.

எழுதுவதை நன்றாக எழுத முடியும் என்றால், யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நம் வகுப்பறையில் இன்றுள்ள 1685 மாணவர்களில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நண்பர் ஆலாசியம் அவர்களுக்கும், 
ஜப்பான் மைனருக்கும் ஆர்வமும், திறமையும் இருக்கிறது. இருவரும் 
வலைப் பதிவைத் துவங்கி எழுதலாம். ஜோதிடம் என்று இல்லை. எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். எழுதுவது உபயோகமாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்!

திருவாளர் ஆனந்த அவர்களின் வலைப்பதிவு வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களைப் போல, தஞ்சை திரு.K.M.R.கிருஷ்ணன் அவர்களைப் போல நானும் அவருடைய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக உள்ளேன்.


அன்புடன்,
வாத்தியார்                                  


வாழ்க வளமுடன்!

30.7.10

கோடிப் பணமும் கொட்டிவைக்க வீடும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோடிப் பணமும் கொட்டிவைக்க வீடும்!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 13

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
--------------------------------------------------------------------
ஆயிரம் பாட்டெழுதி அத்தனைக்கும் பொருளெழுதி
பாயிரமும் எழுதி வந்தேன் - முருகா
உனைப் பார்த்து விட்டேன் பாட்டெதற்கு?

(ஆயிரம்)

கோடிப்பணம் திரட்டி கொட்டிவைக்க வீடுகட்டி
பாடுபட்டு குலைந்தேன் நான் முருகா - உன்னை
பார்த்துவிட்டேன் வீடெதற்கு?

(ஆயிரம்)

ஆவி நிலைக்குமென்று ஆடுகின்ற கோடியில் ஓர்
பாவியென துடிக்கின்றேன் நான் - முருகா
உன்னை பார்த்து விட்டேன் துயர் எதற்கு?

(ஆயிரம்)

வேதங்கள் நான் அறிந்தேன் விளக்கம் கேட்டறிந்தேன்
பாதைகளின் முடிவே ஓம் முருகா - உன்னை
பார்த்து விட்டேன் நூல் எதற்கு?

(ஆயிரம்)

எழுதியவர்: கவிஞர் தமிழ் நம்பி
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
------------------------------------------------
பாடலில் உள்ள சொற்சிலம்பத்தைப் பாருங்கள். எழுதியவர் அருமையாக எழுதியுள்ளார். ஒரு முறை படித்தாலே மனதில் பதிந்துவிடும்படியான ஆக்கம்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.7.10

Doubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 1

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
------------------------------------------------
மின்னஞ்சல் எண் ஒன்று!
கண்ணன் சீதாராமன்,
கத்தார்

   
ஐயா வணக்கம்.

1.ஒருதிசை நடக்கும் பொழுது அதன் புத்தினாதன் வேலை செய்ய மாட்டார் என்பது உண்மையா அதாவது புதன் திசையில் புதன் புத்தியில் புத்தினாதன் வேலை செய்யமாட்டார் மறு புத்தி வந்த உடன்தான் வேலை செய்வார்  என்று கேள்விபட்டது உண்டு. உண்மையா?

உண்மைதான். சுயபுத்தியில் கிரகங்கள் உரிய பலனைத் தராது. சுபகிரகங்கள் நன்மையான பலனைத்தராது. தீயகிரகங்கள் தீய பலனைத் தராது. இரண்டையும் சேர்த்துப்பாருங்கள். நன்மையாகத் தெரியும்:-))))

2. கால சர்பதோசம்  உள்ளவர்கள் அதே காலசர்ப்ப தோஷம் உள்ள பெண்ணை கல்யாணம் செய்தால் நன்று என்பது உண்மையா?  எந்த அளவில் சாத்வீகப்படும் ஐயா இதற்கு வேறு ஏதேனும் விதி விலக்கு உண்டா ஐயா

தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணக்கலாம். அது செவ்வாய் தோஷத்திற்கு மட்டும்தான்.
எனக்குத் தெரிந்தவரை, காலசர்ப்ப தோஷத்திற்கு அதுபோலச் செய்யச் சொல்லி யாரும் கொடிகாட்டவில்லை.

3. ஐந்தாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை ஆகாது என்கின்றனரே ஏன்? இதற்கு  ஜோதிட ரீதியாக காரணம் ஏதேனும் உண்டா?

அதெல்லாம் உண்மையில்லை. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? இப்போது உள்ள கல்விக் கட்டணங்களாலும், விலைவாசியாலும், யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.

இன்றையத் தாரக மந்திரம் இதுதான்:
நாம் இருவர்
நமக்கு இருவர்
எப்போதும்
நாம் நால்வர்!

கூட்டுக் குடும்பங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டார்கள். இன்று எல்லாம் சிறு குடும்பங்களே (Micro Families)
சுயநலம் மிகுந்துவிட்டது. பெற்றோர்களைக்கூடக் கவனிக்க பலருக்கும் நேரமில்லை. அதுதான் உண்மை!
கையில் காசை வைத்திருக்கும் பெற்றோர்கள் தப்பிப்பார்கள். இல்லையென்றால் முதியோர் இல்லம்தான்!
--------------------------------
4. தனது ஜாதகத்தை வைத்து கொண்டு தனக்கு வரும் மனைவி மக்களை  எவ்வாறு தெரிந்து கொள்வது ஐயா அதாவது படிப்பு, வேலை, மற்றும் இனம், மொழி என தெரிய வழி வகை உண்டா?

இனம், மொழியை எல்லாமா? சொந்தத்திலா அல்லது அந்நியத்திலா என்பது மட்டுமே தெரியும். எழாம் அதிபதி அல்லது சுக்கிரன், சூரியன் அல்லது சந்திரனோடு தொடர்பு கொண்டிருந்தால் சொந்தத்தில் திருமணம். இல்லையென்றால் அந்நியத்தில் திருமணம். ஏழாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால், வேறு சுபப்பார்வையின்றி இருந்தால், கலப்புத்திருமணம்.

எந்த மொழியில் திட்டினால் என்ன? மனைவி திட்டினால், அழகாகத்தான் இருக்கும். இரசித்துக் கேட்கப் பழகிக் கொள்ளுங்கள்.
  “சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?” என்றார் கவியரசர் கண்ணதாசன். அதையே சற்று மாற்றி இப்படிப் பழகிக்கொள்ள வேண்டியதுதான்: “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

(மக்களைப் பற்றித் தனிபதிவாக பின் ஒருநாள் எழுதுகிறேன். பெரிய பதிவாக எழுத வேண்டும்)

5. உலகில் உள்ள ஜீவா ராசிகளை பஞ்சபூதங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது உண்மைதானே அப்படி இருக்க விதியை மதியால் எப்படி வெல்ல முடியும்?  அதுதான் சொல்லுவார்களே கடினமாக உழைத்தால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பது எப்படி ஐயா உண்மை ஆகும் . அதுதான் ஊழ் வினை உழைக்க விடாதே அப்படியே முயற்சி செய்தாலும் கோவலன் கண்ணகி கதையால் அல்லவா முடிவாகிபோகும் ஐயா மிகவும் அருமையாக கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் பிள்ளையார் பிடிக்கப் போகக் குரங்கு ஆன கதையாக அல்லவா ஆகி விடும் ஐயா
kannan Seetharaman
Qatar.


பஞ்சபூதங்கள்தான் ஆட்சி செய்கின்றன. நீரும், நெருப்பும், காற்றும், மண்ணும் இல்லை என்றால் நீங்கள் ஏது? நான் ஏது? இந்த உலகம்தான் ஏது?

விதியை மதியால் வெல்ல முடியுமா? வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை! வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை
இறைவன் எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர்  கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச் சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த  தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்யவைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி  திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
2
Chittoor.S.Murugesan said...:
சித்தூர் முருகேசன்

    ஐயா,
    சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். இந்தியாவில் நிமிடத்துக்கு 4 குழந்தை பிறக்கிறது. 120 நிமிடத்துக்கு 480 குழந்தைகள் ஒரே லக்னத்தில் ஒரே ஜாதகத்தில் பிறக்கின்றன. ஆனால் 480 சூப்பர் ஸ்டார்களோ, 480 சச்சின் டெண்டுல்கர்களோ இல்லை. இதற்கு காரணம் என்ன?
    (நமக்குனு ஒரு குன்ஸு இருக்குங்கண்ணா . நீங்க அஃபிஷியலா,தியரிட்டிக்கலா எத்தனையோ மேட்டர் சொல்றிங்க இந்த மேட்டர்ல என்ன சொல்றிங்க பார்க்கலாமேனு ஒரு ...இது)

நல்ல கேள்வி சித்தூர் முருகேசன். நீங்கள் தொழில்முறை ஜோதிடர். ஜோதிட ஆய்வாளர். செய்தித்துறையில் இருக்கிறீர்கள். இரண்டு மொழிகளில் பாண்டித்துவம் மிக்கவர். (தமிழ், தெலுங்கு) நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா? நான் என்ன சொல்வேன் என்று பார்க்க இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். சரிதான். உங்களின் ஆர்வம் வாழ்க! வளர்க!

நீங்கள் சொல்லும் (480) குழந்தைகள் எல்லாம் குவியலாக ஒரே ஜாடியில் ஜனிப்பதில்லை. அதாவது ஒரே இடத்தில் பிறப்பதில்லை. இந்தியா எத்தனை பெரிய தேசம். அட்ச ரேகை, தீர்க்க ரேகை, இந்தியப் பொது நேரம், உள்ளூர் நேரம் என்ற கணக்கெல்லாம் எதற்கு இருக்கிறது?

இந்திய நேரப்படி 9:30 மணி என்றால், அந்த நேரத்தில் கான்பூரில் மணி ஒன்பதரை.. கொல்கத்தாவில் மணி பத்து. மும்பையில் மணி  ஒன்பது மட்டுமே. அந்த ஷணத்தில் இந்த 3 ஊர்களிலும் பிறக்கும் குழ்ந்தைகளின் ஜாதகம் மாறுபடாதா?

சென்னைக்கும், கோவைக்கும் 13 நிமிடங்கள் வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த இரு ஊர்களிலும் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் வேறு படாதா?

அட்ச ரேகை, தீர்க்க ரேகைகள்:
சென்னைக்கு: 13.04' N, 80.17' E. .
கோவைக்கு:  11.00' N. 77.00' E

3.17 பாகைகள் வித்தியாசம்தான் 13 நிமிடங்களை வேறுபடுத்துகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மற்ற ஊர்களுக்குத் தெரிந்துகொள்ள இங்கே சுட்டி உள்ளது.

நாடி முறையில் 150 நாடிகள் உள்ளன. அவற்றையும் இரண்டாகப் பிரிக்கலாம். பூர்வ நாடி. உத்திர நாடி. ஆக மொத்தம் 300 பிரிவுகள். அவற்றின் அளவுகள் ஒரே மாதிரியானவை அல்ல! அவற்றை மேலும் பிரித்தால் 8 விநாடிகளுக்கு ஒரு நாடி வரும் (விநாடி என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவும்). சுருக்கமாகச் சொன்னால், எட்டு விநாடிகள் வித்தியாசத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் ஜாதகம்/வாழ்க்கை வெவ்வேறாக இருக்கும்.

(The concept of Cuspal Interlinks Theory is basically the concept of Nadiamsha. In Nadi system  there are 150 nadis and each has been divided into two parts- Purva and Uttara. The prediction for the native born in purva of a naadi is quite different from that of Uttara. In Nadi astrology smallest nadiamsa is of 1 minute 40 seconds and the largest one is of 30'. While in Sub-Sub theory, smallest Sub-Sub arc is of 2' and the largest Sub-Sub arc is of 22.2'. Thus, the division in Cuspal Interlinks Theory is very close to that of Nadiamsha. Since 15" arc of Ascendant rises on the eastern horizon in 1 second change of time. So the Ascendant's arc of 2" (smallest arc in Sub-Sub theory) will rise in approximately 8 seconds. It means the nativity of two individuals, born in the interval of 8 seconds (in case of smallest arc), will be totally different. Like Nadiamsha theory as to with division of a Nadiamsha in purva and uttara, here also the sub-sub arc of Ascendant is divided into two parts - former part and later part. Former part in male sign indicates Male native while later part in male sign indicates Female native. While later part in female sign indicates Male and Former Part in Female sign indicates Female. So, if a male native has to take birth while the smallest arc of ascendant is rising (for example only) in a male sign, he will have to take birth in the former part i.e. up to 4 seconds change of time. This is why, in Sub-Sub Theory , nativity of an individual always tends to be unique to specify uniqueness of native and horoscope prepared is supposed to simulate the destiny of native)
நீங்கள் ஜோதிடர்களை மடக்கும் விதமாக, “அந்த எட்டு வினாடிகளுக்குள், ஒரே மருத்துவமனையில் இரண்டு வெவ்வேறு அறைகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் எப்படி இருக்கும்?” என்று கேட்கலாம்.

அதற்கும் பதில் இருக்கிறது. அந்த ஜாதகங்களுக்கு இணையான ஜாதகங்கள் (parallel horoscopes) என்று பெயர். இருவரது வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கும். இவனும் எட்டாவது வரையே படித்திருப்பான். அவனும் எட்டாவது வரையே படித்திருப்பான். இவனும் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பான். அவனும் கூலித் தொழிலாளியாக வேலைபார்ப்பான். இவனும் 48 வயதில், மனைவி இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு மாண்டு போவான். அவனும் 48 வயதில், மனைவி இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு மாண்டு போவான்.

இணையான ஜாதகங்களின் வாழ்க்கை வேறுபடாதா? ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா?

பூர்வ புண்ணியத்தை வைத்து, சில குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இருக்கும். வாழ்க்கை வசதிகள், குடும்பப் பாசம் போன்றவை வேறு படலாம். அதெல்லாம் பூர்வ புண்ணியக்கணக்கில் வரும். அதைக் கணித்துச் சொல்ல எந்தக் கொம்பனுக்கும் சக்தி கிடையாது. அது தர்ம, கர்மக் கணக்கு.

ஒரே ஷணத்தில் பிறந்த இருவரில் ஒருவன் Citi Bankல் வேலை பார்ப்பான். இன்னொருவன் உள்ளூர் கோ-ஆப்பரேடிவ் வங்கியில் வேலை பார்ப்பான். வாங்கும் சம்பளத்தால் இருவருடைய வாழ்க்கைத் தரமும் வேறுபடும்.

ஒருவன் Times of India நாளிதழில் செய்தி ஆசிரியராக வேலைபார்ப்பான். இன்னொருவன் சிவகாசி போன்ற சிற்றூர்களில் இருந்து வெளியாகும் சிறு நாளிதழில் வேலை பார்ப்பான். ஒருவன் மணி ரத்தினத்திடம் உதவியாளனாக வேலை பார்ப்பான். இன்னொருவன் உப்புமா இயக்குனர் ஒருவரிடம் உதவியாளனாக வேலை பார்ப்பான். இந்த வித்தியாசம் எல்லாம் பூர்வ புண்ணியம் செய்யும் ஜகஜால வேலை.

விளக்கம் போதுமா அன்பரே?

இல்லை என்றால், மீண்டும் வருகிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவிப்பு:

   “வாத்தியார் முன்னதாகவே கேள்வி பதில் வகுப்பைத்
துவங்கிவிட்டாரே” என்று யாரும் நினைக்க வேண்டாம்.
1.8.2010 ஞாயிறன்று வகுப்பறை மாணவர் ஒருவரின்
‘நீங்காத நினைவுகள்’ கட்டுரை வெளியாக உள்ளது,
யாருடையது அது? என்கிறீர்களா? பதிவைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளுங்கள். அதுவரை அது சஸ்பென்சாகவே
இருக்கட்டும்.

சஸ்பென்ஸ் இல்லை யென்றால் வாழ்க்கை சுவைக்காது.

அத்துடன் 2.8.2010 அன்று வாத்தியார் வெளியூர்ப் பயணம். அன்று
வகுப்பிற்கு விடுமுறை. ஆகவேதான் உங்களுடைய ஏமாற்றத்தைத்
தவிர்க்கும் முகமாகக் கேள்வி பதில் வகுப்பு இன்றே துவங்கியுள்ளது. கேள்விகள் நிறைய வந்துள்ளன. ஒவ்வொன்றாக வலயேறும்.
அடுத்த கேள்வி பதில் வகுப்பு 3.8.2010 செவ்வாயன்று.
அனைவரும் பொறுத்திருந்து படிக்கவும்!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28.7.10

Doubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

Doubts: மீண்டும் ஒருமுறை நீங்களும், உங்கள் சந்தேகங்களும் பகுதி!

மீண்டும் ஒருமுறை உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம் என்று உள்ளேன். ஆகவே உங்களது   சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

மின்னஞ்சலின் Subject பெட்டியில் Doubts in Lessons என்று மறக்காமல் குறிப்பிடவும்.

ஒரு மின்னஞ்சலில் அதிகபட்சமாக நான்கு கேள்விகள் கேட்கலாம். அதற்கும் மேலாகக் கேள்விகளை  வைத்திருப்பவர்கள் மற்றொரு மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள்.

1. பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள்

2. முழுப் பாடத்தையே சந்தேகமாகக் கேட்டு மீண்டும் அதே பாடத்தை எழுத வைக்காதீர்கள்.

3. வகுப்பறைப் பதிவேட்டில் உள்ளவர்கள் (Follower's List)  மட்டுமே வகுப்பறை மாணவர்கள். அவர்கள் மட்டுமே கேள்விகள் கேட்கலாம். மின்னஞ்சலில் இதைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் உங்களின் லிங்கைக்
கொடுக்கவும். தேவையில்லாமல் உள்ளே நுழைபவர்களை வடிகட்ட, இது தேவைப்படுகிறது.

4. பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டும் கேளுங்கள். உங்கள் சொந்த ஜாதகத்தின் பலனை அறிந்து கொள்ளும்  முகமாகக் கேள்விகள்
கேட்பதைத் தவிர்க்கவும். உங்கள் கேள்வி மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். சொந்தக் கதை, சோகக் கதைகளுக்கெல்லாம், பின்னால்
தனியாக வகுப்பு வைக்க உள்ளேன். கச்சேரியை  அப்போது வைத்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------
புது முகங்களுக்கு, பழைய பாடங்களில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சிலருக்கு அத்தனை பாடங்களையும்  சரியாகப் படிக்காததால்
சந்தேகங்கள். சிலருக்குப் படித்தும் சந்தேகங்கள். உங்கள்
சந்தேகங்களை முன்பு ஒரு முறை தீர்த்து வைத்தேன். ஆகவே
படித்தும் சந்தேகம் உள்ளவர்கள் மட்டும் சந்தேகங்களை எழுதுங்கள்.
பாடத்தை முழுவதுமாகப் படித்திராதவர்கள் அவற்றைப் படிக்கவும்.

24.12.2009 - 2.2.2010 வரை மொத்தம் 24 பதிவுகளில், வந்த கேள்விகளுக்கான பதில்களை எழுதினேன். 100 மாணவர்கள், 100 மின்னஞ்சல்கள், 300 ற்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்

Side Bar ல் முன்பு நடத்தப்பெற்ற கேள்வி - பதில் வகுப்பின் சுட்டிகள் உள்ளன.  Doubts - Lessons 1 - 30 என்று  இருக்கும். அதைக்
கிளிக்கிப் பார்த்து உங்கள் சந்தேகத்தை இதற்கு முன்பே யாராவது கேட்டு, வாத்தியார்பதிலையும் கொடுத்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் கேட்கப்படாத கேள்வி என்றால்,  நீங்கள்
இப்போது கேட்கலாம்.
-------------------------------------------------
இப்போது ஒரு குட்டிக் கதை:
இரண்டு இளைஞர்கள் தேவாலத்திற்குச் சென்றார்கள். இருவரில் ஒருவன் ஈடுபாட்டுடன் சென்றவன்.

அடுத்தவன், நண்பனின் வற்புறுத்தலுக்காகச் சென்றான்.

பாதிரியார் அருமையாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். துவங்கி 2 மணி நேரமாகியும், உற்சாகமாக உரை  நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வற்புறுத்தலுக்காகச் சென்றவன் புகை வண்டி ஆசாமி (அதாவது  
chain smoker) அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.தன்
நண்பனிடம் கிசுகிசுத்தான்:

“டேய் மெல்ல எழுந்து போய், ஒரு தம் அடித்து விட்டு வருகிறேன்”

”அதெல்லாம் கூடாது. சும்மா உட்கார், எழுந்து சென்றால், பாதிரியாரின் கண்ணில் படும்.”

”அப்படியென்றால், இங்கேயே சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிடவா?”

”அதெல்லாம், கூடாது. கொன்று விடுவேன். பாதியார் பார்த்தால் கோபம் கொள்வார்!”

”கோபம் கொண்டால் அவர் எப்படிப் பாதிரியாராக இருக்க முடியும்? நீ எழுந்து அவரையே கேள். இல்லையென்றால் நான் எழுந்து கேட்கிறேன்”

அவனுடைய நச்சரிப்புத் தாங்காமல், கூட்டிக்கொண்டு போன நண்பன், எழுந்து நின்று கேட்டான், “Father,  பிரார்த்தனையின் போது, புகை பிடிக்கலாமா?”

பாதிரியார் பதில் சொன்னார், “இல்லை, கூடாது!”

நம்ம ஆள் சொன்னான், உனக்குக் கேட்கத் தெரியவில்லை. நான் கேட்கிறேன் பார் என்று கிசுகிசுத்தவன், எழுந்து  நின்று, கணீரென்ற குரலில் கேட்டான். “Father, புகைபிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா?”

“செய்யலாம். இறைவனைப் பிரார்த்திப்பதற்கு எதுவும் தடையில்லை!”
---------------------------------------------------------------------
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?

”அகடவிகட சாமர்த்தியம் எப்படி இருக்கும் என்பதற்காக இதைச் சொன்னேன்”

”அது சரி, வகுப்பறையில், எதற்காகச் சொன்னீர்கள்?

”சந்தேகத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாரே, வாத்தியார் என்று தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை,  பொதுச் சந்தேகம் போல தோற்ற மளிக்கும்படி யாரும் கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்”
---------------------------------------------------------------------
அடுத்து வரும் ஆகஸ்ட் திங்கள் முழுவதும் சந்தேகங்கள் தீர்க்கப்படும். அரசில் குறை கேட்கும் மாதம் என்று நடத்துவார்களே. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

தினமும், இரண்டு அல்லது மூன்று சந்தேகங்களுக்கு (பதில்களின் அளவைப் பொறுத்து) பதில்  அளிக்கப்படும்.ஆகவே எழுதிவிட்டு, அதற்கு அடுத்த நாளே பதில் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

வரிசைப்படி வரும்.

எங்கே பார்க்கலாம்....முதல் மூன்று கேள்விகள் யாருடையதென்று!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

27.7.10

மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் சுட்டி இங்கே!
------------------------------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொது விதிகள். ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம். ஆகவே யாரும் குழம்ப வேண்டாம்.

18. எட்டில் கேது இருக்க, அவர் மீது சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், ஒன்றும் பிரச்சினை இல்லை. செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை தற்கொலையில் முடியலாம்

19. லக்கினத்திற்கு 2ல் எட்டாம் அதிபதி இருக்க (அதாவது தன் வீட்டை நோக்கி இருக்க) லக்கினத்தில் சனியும், 3ல் கேது அல்லது ராகு இருக்கப் பிறந்த ஜாதகனின் முடிவு வலியுடையதாக இருக்கும்.(pain killer உபயோகித்து வலியைப் போக்க முடியாது)

20. மேஷ லக்கினத்திற்கு லக்கினாதிபதியும், எட்டாம் இடத்து அதிபதியும் ஒருவனே. அதாவது செவ்வாய் அந்த இரண்டு இடங்களுக்கும் அதிபதியாவார். அவர் அந்த ஜாதகத்தின் 12ஆம் வீட்டில், சூரியனுடன் (அஸ்தமனமாகி) இருந்தால், ஜாதகனின் மரணம் வலியுடையதாக இருக்கும்.

வலி என்பது, ஜாதகன் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து, சிகிச்சையளைத்தும் பயனளிக்காமல் இறந்து போகும் நிலைமை. இந்த விபத்து என்பது வாகன விபத்து, தீ விபத்து அல்லது கலவரங்களில் கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு போன்று எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை மனதில் கொள்க! இது வலி என்று கூறப்படும் அனைத்திற்கும் பொதுவானதாகும்.

21. எட்டாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருக்க - அதாவது 7ல் இருக்க, அவருடன் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் மரணம் வலி உடையதாக இருக்கும்.

மரணத்தைப் பொறுத்தவரை, வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவை தவிர மற்ற அனைத்துக் கிரகங்களுமே தீயவைகள்தான். அதிலும், செவ்வாய், ராகு, கேது ஆகியவைகள் முதல் நிலைத் தீயவர்கள். உங்கள் மொழியில் சொன்னால்  Number one rascals!!

22. துலா லக்கின ஜாதகத்திற்கு 1 & 8ஆம் வீடுகளுக்கு உரியவர் சுக்கிரன். அவர் ஜாதகத்தில் எந்த இடத்திலாவது பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தால், மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.

23. எட்டாம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்து, எட்டாம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதோடு, எட்டாம் அதிபதி சனியின் பார்வை பெற்றிருந்தால், மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.

24. பொதுவாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் வீடு அல்லது வீட்டுக்காரனால் ஜாதகனுக்கு நன்மை கிடைக்காது. எட்டாம் வீட்டிற்கும் அது பொருந்தும்.

25. ராகு, செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்களும் 5ல் இருக்க அல்லது 5ஐப் பார்க்க, எட்டாம் அதிபதி நீசமாகி இருந்தால் ஜாதகன் விபத்தில் இறக்க நேரிடும்.

26. 3 & 6ஆம் வீட்டுக்காரர்கள் இருவரும் எட்டில் ஒன்றாக இருக்க, சனி & செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஆயுதத்தால் மரணம்.

27. எட்டாம் வீடு, எட்டாம் அதிபதி, சந்திரன் ஆகிய மூவரும் ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகனின்
மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.

28. எட்டாம் வீடு, எட்டாம் வீட்டுக்காரன் ஆகியவைகள், செவ்வாய், ராகு அல்லது கேதுவால் பாதிப்பிற்குள்ளாகி இருந்தால் மரணம் வலியுடையதாக இருக்கும்

29. சூரியனும், செவ்வாயும் பரிவத்தனையாகி, எட்டாம் அதிபருக்குக் கேந்திரத்தில் இருந்தால், ஜாதகனின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும்.

30. லக்கினாதிபதியும், எட்டாம் அதிபதியும் வலுவிலந்து இருப்பதோடு, ஆறாம் அதிபருடன் செவ்வாய் ஒன்றாக இருந்தால் ஜாதகன் யுத்தத்தில் அல்லது தெருச்சண்டையில் இறக்க நேரிடும். ஆயுதத்தால் கொல்லப்படுவன் அல்லது அடித்துக் கொல்லப்படுவான்.

31. லக்கினாதிபதி & எட்டாம் அதிபதி இருவரும் நீசம் பெற்றிருந்தால், ஜாதகனின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும் அல்லது வலி உடையதாக இருக்கும்.

32. 1ல் சனி, 7ல் ராகுவும் நீசம் பெற்ற சந்திரனும் இருக்க அமைந்துள்ள ஜாதகனின் மரணம் வலி உடையதாக இருக்கும்.

33. லக்கினத்தில் சனி தனித்திருக்க (அதாவது சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையின்றி இருக்கும் நிலைமை) சூரியன், ராகு, சந்திரன் ஆகிய மூவரும் ஒன்றாக இருந்தால் ஜாதகன் ஆயுதத்தால் கொல்லப்படுவான்.

34. சந்திரன் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் இருக்க, லக்கினாதிபதி, சனி அல்லது மாந்தி அல்லது ராகுவுடன் கூட்டாக இருக்கும் நிலைமையும் இயற்கைக்கு மாறான மரணத்தையே கொடுக்கும்.

இப்படிப் பல அமைப்புக்கள் இருக்கின்றன. தொடர்ந்து இன்னும் இரண்டு கட்டுரைகள் எழுதலாம். அடியவன் முக்கியமானவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன். நமது லெவலுக்கு இது போதும். அதாவது நமக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது என்னும் நிலைமை மட்டுமே. நம்மில் யாரும் ஜோதிடராக ஆகப் போவதில்லை. அதுதான் நமது லெவல். ஆகவே இது போதும்.

இல்லை, மேலும் தெரிந்து கொள்ளப் பிடிவாதமாக இருப்பவர்களும், அல்லது விருப்பமுள்ளவர்களும், ஜெய்மானி (ஜெய்மினி) ஜோதிட நூலைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம்.
--------------------------------------------------------------------------------
கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மத் தொழில். காசு வாங்கிக் கொண்டு இவற்றைச் செய்யக்கூடாது என்பது மரபு. தர்மம். அந்தக் காலத்தில் இதைச் செய்தவர்களுக்கு எல்லாம், மன்னர்கள் மானியம் அளித்தார்கள். அதாவது வயிற்றுப்பாட்டிற்கு உதவித் தொகை அளித்தார்கள். வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். ஆகவே அவர்களால் அதைத் தர்மமாகச் செய்ய முடிந்தது.

“கிரகத்தைவைத்துக் காசு பார்க்கும் தொழிலைச் செய்யாதே - அது உகந்த தொழிலல்ல” என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.

இன்று அந்த மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழிலாகும். தர்மதேவனும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றான். ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறான்? இது கலியுகம். இப்படித்தான் நடக்கும் என்பது விதி. பகவான் கிருஷ்ணரே சொல்லியிருக்கிறார். “கலியுகத்தில் நான்கு பேருக்கு மூன்று பேர்கள் அயோக்கியர்களாக இருப்பார்கள்”

கலி முற்ற முற்ற அந்த அளவும் மாறுபடும். தற்சமயம் எட்டு பேர்களுக்கு ஒருவர்தான் நல்லவர்.

இன்று மன்னர்கள் இல்லை. அரசும் இந்தத் தொழில் செய்பவர்களுக்கு உதவுவதில்லை. ஆகவே பணமின்றி இத்தொழிலை யாரும் இலவசமாகச் செய்ய முடியாது. தங்கள் வயிற்றுப் பாட்டிற்கும் வாழ்க்கைக்கும் 
தேவையான அளவில் பொருள் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால் 
அளவிற்கு அதிகமாக, வருகிறவனை அவதிப்படுத்தியோ
அல்லது நிர்ப்பந்தப் படுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ அல்லது ஏமாற்றியோ பொருள் சேர்ப்பது முடிவில் நன்மையளிக்காது. 

இதை அவர்கள் உணரவேண்டும்

சரி, அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லையா? உண்டு. அதைப் பகவான் சொல்ல வில்லை.

ஞானிகளுக்கு அது தெரியும். தர்மத்தின் விதிகளையும், கர்மவினைகளின் விளைவுகளையும் அவர்கள் அறிவார்கள். முடிந்தவரை, நாமும் தர்மத்தின் படியே நடப்போமாக!

எட்டாம் வீடைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!

பொறுமையாகப் படித்துவந்த உங்கள் அனைவருக்கும் நன்றி!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26.7.10

மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 பறவையின் அப்பாவித்தனத்தோடு இருக்கும் நம்மை நோக்கிக் 
காலன் வரும் காட்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!
கவியரசர் கண்ணதாசன் “பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும்
ஒருவிதம்” என்று பாடி வைத்தார். அதை நான் சற்று மாற்றி, “மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!” என்று தலைப்பிட்டு, மரணத்தை  வகைப்படுத்தி எழுதியுள்ளேன்.

மரணம் என்றால் ஒன்றுதானே? அதில் வகைப்படுத்த என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள், பதிவை விட்டு விலகவும்.

இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தார். ஜுல்ஃபிகர் அலி புட்டோவும், சதாம் ஹூசெய்னும், அவர்கள் நாட்டின் அதிபராக இருந்த காலத்தில் நினைத்துப்பார்த்திருக்காத வகையில், தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்தார்கள்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி. கருப்பின மக்களின் தந்தை மார்ட்டின் லூதர் கிங், அன்னை இந்திரா காந்தி, ஜான் எஃப் கென்னடி ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்கள்.

ராஜீவ் காந்தி, பெனாஸிர் புட்டோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் வெடிகுண்டிற்கு இரையானார்கள்.

பொதுமக்களில் பலர், கார், இரயில், விமான விபத்தில் இறக்கிறார்கள். சிகிச்சையின்போது இறக்கிறார்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

  “ உடலுக்கு ஒன்பது வாசல்
     மனதிற்கு எண்பது வாசல்”
என்பது கவிஞனின் வாக்கு

மரணத்திற்கோ எண்ணிக்கை இல்லாத வாசல்கள்.
அவற்றில் சிலவற்றை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------
செவ்வாய், ராகு & கேது ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு மரணத்தைத் திடீர் என்று கொடுக்கும். அகால மரணம் என்று சொல்லலாம். இவற்றில் ராகுவின் பங்கு அதீதமானது.

அஸ்தமனத் திதிகள், குறிப்பாக அமாவாசைத் திதி நன்மையானதல்ல. ஜாதகன் பிறந்த வீட்டில் ஜாதகனுடன் வறுமையும் நுழைந்துவிடும். பல திரதிர்ஷ்டங்களையும் கூடவே கூட்டிக்கொண்டுவரும். அந்தத் திதியில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் இடம் வலுவாக இல்லையென்றால், அது அவளைச் சீக்கிரம் விதவையாக்கிவிடும்.
A lady born in this Tithi is said to become a widow early in her married life! (இது பொது விதி)
--------------------------------------------------------------------------------------
மரணம் வரும் வழி!

முதல் நிலை மாரக ஸ்தான அதிபதியின் வீடான ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்களும், அதைப் பார்க்கும் கிரகங்களும், ஜாதகனுக்கு வித்தியாசமான முறையில் மரணத்தை ஏற்படுத்துவதில் வல்லமை பெற்றவை.

எச்சரிக்கை: கொடுக்கப் பெற்றுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். அதை மனதில் கொள்க!

1. சந்திரன் எட்டில் இருப்பதுடன், சனியின் நேரடிப் பார்வையையும் பெற்றால், ஜாதகன் அறுவை சிகிச்சையின்போது உயிரைவிட நேரிடும்.

2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.

3. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக எட்டாம் வீடு, அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மலை உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து இறக்க நேரிடும். அல்லது இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி இறக்க நேரிடும்.

4. தேய்பிறைச் சந்திரன் 6 அல்லது 8ல் இருக்க, ஜாதகனின் 4 & 10 ஆம் வீடுகளில் பாவக்கிரகங்கள் இருந்தால், ஜாதகன் எதிரிகளின் சூழ்ச்சியால் இறக்க நேரிடும். அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான்.

5. சூரியன், சந்திரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் ஏழில் இருக்க, சனி லக்கினத்திலும், செவ்வாய் விரையத்திலும் இருந்தால் ஜாதகன் வெளி தேசங்களில் இறக்க நேரிடும். அல்லது தூர தேசங்களுக்குப் போகும்போது இறக்க நேரிடும்.

6. புதனும், சுக்கிரனும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன் தூக்கத்திலேயே இறந்து போவான் (அடடே, இது நன்றாக இருக்கிறதே!)

7. புதனும் சனியும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன், அரச தண்டனையால் இறக்க நேரிடும்.

8. சந்திரனும் புதனும் 6 அல்லது 8ஆம் வீட்டில் ஜாதகனின் மரணம் விஷத்தால் (poison) ஏற்படும்.

9. சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக 8ல் இருந்தால் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

10. செவ்வாய் 12லும், சனி 8லும் இருந்தாலும், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

11. சந்திரன் 12ல், சனி 8ல் இருந்தாலும் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

12. ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

13. ஆறாம் வீட்டில் ராகுவும் நான்காம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் திடீர் என இறக்க நேரிடும். அதாவது திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற நிகழ்வுகளில் இறக்க நேரிடும்.

14. அந்த இடத்தில் ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தாலும், அதே முடிவுதான்!

15. எட்டாம் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாவக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலி உடையதாக இருக்கும். அது புற்றுநோய் போன்ற கொடிய நோயாக இருக்கலாம் அல்லது விபத்தாக இருக்கலாம். அல்லது, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களால் ஏற்படலாம்.

16. எட்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலியில்லாததாகவும்,இயற்கையானதாகவும், அமைதியனதாகவும் இருக்கும்.

17. எட்டில் சந்திரன் இருக்க, எட்டாம் வீட்டில் இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால் (அதாவது எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தல்)  ஜாதகன் நீரில் மூழ்கி இறக்க நேரிடும்.

(இன்னும் உள்ளது. தொடரும்)

உங்களின் பொறுமை, பதிவின் நீளம், எனது தட்டச்சும் நேரம் ஆகியவற்றின் காரணமாக இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு அவற்றில் உள்ள கிரக அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடலாம். ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்,
வாத்தியார்.


வாழ்க வளமுடன்!

25.7.10

எதை நினைவில் வைக்கச் சொன்னார் வாத்தியார்?

--------------------------------------------------------------------------------------
எதை நினைவில் வைக்கச் சொன்னார் வாத்தியார்?

நமது வகுப்பறை மணமகன்கள் பெஞ்ச் மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி எழுதிய மலரும் நினைவு இது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றுகிறேன்.

நமது மாணவர்களுக்கு எழுத்தாற்றல் இருப்பதில் எனக்குப் பெருமையே! மகிழ்ச்சியே! உங்கள் ஆக்கங்களை  அனுப்பலாம். சுவையாகவும், சுவாரசியமாகவும் இருப்பவைகள் ஒவ்வொரு ஞாயிறன்றும் உங்கள் பெயருடன் (புகைப்படம் அனுப்பினால் - புகைப்படத்துடன்) நம் வகுப்பில் பதிவிடப்பெறும்.

over to posting
-----------------------------------------------------
நீங்காத நினைவுகளுள் இதுவும் ஒன்று!
----------------------------------------------------
எழுதியவர்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர்

அன்னைத் தமிழையும், எனக்கு பாடம் சொல்லித் தந்த (தரும்) ஆசிரியர்களையும் வணங்கிக் கொள்கிறேன்.

 1985 வருடம், நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்
அன்றொரு நாள் மதிய உணவிற்குப் பிறகு பள்ளி மணி ஒலித்தது பெரும்பாலான மாணவர்கள் நாங்கள் அனைவரும் வகுப்பறையில் இருந்தோம். என் நண்பன் சரவணன் வேகமாக வகுப்பினுள்
நுழைந்தான், அதுவரை முதல் வரிசை பெஞ்சில் கதை
பேசிக்கொண்டிருந்த, நானும், எனது நண்பர்கள் பூனைக் கண்ணன் (மன்னிக்கணும், எனது நெருங்கிய நண்பன்  அவனை அப்படித்தான் கூப்பிடுவேன், அவன் பெயர் சிலம்பு வார்த்த துறவியின் பெயர்,
ஆம் அந்த அழகான பெயர், இளங்கோவே தான்), செல்வக்குமார்,
கருப்பையா, மற்றும் யூனூஸ் நாங்கள் அனைவரும் சட்டென்று
பேச்சை நிறுத்தினோம்

காரணம் சரவணன் வந்த வேகத்தைப் பார்த்தால் ஜோசப்
வாத்தியார் தான் வகுப்பறைக்கு வந்து கொண்டிருப்பார் போலும்
என்று எங்களுக்குத் தோன்றிற்று. அவர் தான் எங்களது தமிழாசிரியர்,
இருந்தும்அவரை பெரும்பாலும் எங்களுக்குள் தமிழையா! என்று
சொல்லிக் கொள்வதில்லை. காரணம், அவர் இடைநிலை
ஆசிரியராக இருந்து  கொண்டே தொலைதூரக் கல்வி மூலம்
பட்டம் பெற்று தமிழாசிரி யரானார்  ஆகவே, அதற்கு  முன்பே ஜோசப் வாத்தியார் என்றே அழைத்து வந்ததே காரணமாக இருந்தது.

விசயத்திற்கு வருவோம்.

திடீர் என்று முதல் பெஞ்சில் அமைதி!.. இல்லை, அது நெருப்பாய்ப்
பரவி முழு வகுப்பையும் வசப்படுத்திக் கொண்டது. அமைதியின்
அர்த்தம் தெரியாது, பின்பு அமர்ந்து இருந்த மாணவர்களும்,
வகுப்பறையின் இடதுபுறம்  அமர்ந்து இருந்த மாணவிகளும்
வருவது யாரென்று வாயில்க் கதவைப் பார்க்க..'குபீர்' என்று
சிரிப்பொலி வகுப்பறையில் எழும்பி, அமைதித் தீயை அப்படியே
அணைத்தது,

காரணம்  வகுப்பினுள் நுழைந்தவர் எங்கள் பள்ளியின் பியூன்
வேதாச்சலம் தான், அவர் எப்போது வந்தாலும்,  யானை  வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று சித்தனாதன் விபூதி வாசனை தான் முந்திக்கொண்டு வரும்.இப்போதும் அப்படியே, முந்திக்கொண்டு
நுழைந்தது. வழக்கம் போல அவரது தொந்தி, பிந்திக் கொண்டது.
இருந்தும் அது, அதாவது அவரின் பெரியத் தொந்தி  அவரை முந்திக்
கொண்டு தானே வந்தது.

வருகைப் பதிவேடை வைக்க வந்த அவரும் திடுக்கிட்டார்,
என்ன இது நுழையும் போது மயான அமைதியாய்  இருந்தது
இப்போது திடீர் என்று சிரிப்பொலி?.... சிவ! சிவா! என்ன ஆச்சு
தம்பிகளா? என்ன சிரிக்கிறீர்கள்என்று அவரும் சேர்ந்து சிரித்து
விட்டு வருகைப் பதிவேட்டை ஆசிரியரின் மேசையில் வைத்து
விட்டுத் திரும்பினார். ஆனால், என் நண்பன் சரவணன் மட்டும்
சிரிக்கவில்லை என்பதை நான் பார்த்துக் கொண்டிருந்த
மாத்திரத்தில் எனது மனம் சொல்லிற்று ஆசிரியரும் அவரின்
பின்பு வருவாரோ! என்று, எனது நினைப்பு நிஜமானது. இம்முறை மூக்குபொடிக்காரம்  மணியோசையாய் முந்தி வந்து துழைத்தது.                                                     

உள்ளே நுழைந்தது தான் தாமதம் ஆசிரியரின் கண்கள் வீசிய
வலையில் சிக்கிய மீன், எனது சக மாணவன்  குமார். நீ, நீ...
எழுந்திரு என்று மாப்பிள்ளை பெஞ்சை நோக்கி கையை
நீட்டிக் கொண்டு முன்னேறினார்

தமிழாசிரியர், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் ஒருவரை
ஒருவர்ப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து.... எங்கே
குமார் தாமதித்தால்  நம்மை எழுப்பிவிடுவாரோ என்று,
பயந்து குமாரின் அருகில் இருந்த மதர்பாவா விரைந்து
உன்னைத்தான், உன்னைத்தான் என்று வேகமாக தனது
அருகில் இருந்த குமாரை எழுப்பினான்.

மேகத்தினுள் இருந்து வெளிப்படும் நிலவைப் போல்  குமாரும்
காற்றுக்கும் நோகாமல் கன்னத்திற்கும் நோகாமல் எழுந்தான்,
கண்கள் திருத் திருவென விழித்தது, அவன் பார்த்தப் பார்வையில்
அவன் தனக்குத் தானே கூறிய,செய்தி மட்டும் அவனை நோக்கி
பின்புறமாக திரும்பிப்  பார்த்த எங்கள் அனைவருக்கும் புரிந்தது,
"நான் இன்று  செத்தேன்,,,,,, என்று.

குறில், குறில், குறிலுக்கு எத்தனை மாத்திரை? என்று கேட்டார்
ஆசிரியர்,  அனைவருக்கும்  அது தெரிந்ததே, அவனுக்கும் அது
தெரிந்ததே என்று  நானும் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன்,
ஆனால் அவன் திரு திரு  என்று விழித்துக் கொண்டு தயவு செய்து
என்னைக் காப்பாற்றுங்கள்    என்பதைப் போல் எங்களைப் பார்க்கிறான்,
இதில் "மலைக்கள்ளனும்,  மம்பட்டியானும்" நாங்கள் தானே (பிறர்நலன் கருதிகள் (அ) அதிகப்பிரசங்கிகள்), உடனே ஆசிரியருக்கு பின்புறமாக இருக்கும்            நாங்கள் (நானும் இளங்கோவும்) ஒருவிரலை  உயர்த்தி காண்பித்தோம், குமாரும் உடனே ஒரு மாத்திரை என்றான்.

அரை மாத்திரைப் பொழுதுதான் (அரை வினாடி) ஆகியிருக்கும் 
பளார்!  பளார்!! என்ற சப்தம்,

"தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், காண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்".


கம்பர், இராமபிரான் சிவதனுசை உடைத்த அழகை, வேகத்தை,
திறத்தை, அருமையானதொரு பாடல் மூலம் படம்  பிடித்துக்
காட்டுவார். அதாவது, இராமனுக்கு அதெல்லாம்  சும்மா...
என்பதாக கூறுவார்.. அதையே   நான் இங்கு  கூறுவது முறையாகாது,
அதனால் அதை இப்படிக் கூறுவேன்....

அரை மாத்திரை என்று,
அறைந்த  பதிலோடு....
தொடர்ந்த தொரு சத்தம்;
பளார்! பளாரென்று....
 
இமைக்க மூடிய இமைகள்
எழுந்துச் சுருங்கும் முன்னே,
 
இடியாய் தொடங்கி
மின்னலாய் இறங்கியது
அறையொன்று!
அவன் கன்னம் சிவக்க!


 இடியை முந்திய மின்னலாய், காற்று கூட நோகச் செய்யாது
இருந்த கன்னத்தில் பளார்! பளாரென்று  ஆசிரியரின் அறை விழுந்தது... அவனின் சிவந்தக் கன்னம், வடிந்தக் கண்ணீர், வகுப்பில் பலரையும்  குழப்பியுள்ளது ?!?!?!....... என்பது மட்டும் அனைவரின் பார்வையும்,
எனக்கு விளக்கியது.ஆமாம், விடையைச் சரியாக தானே சொன்னான்!,
பிறகு என் இந்த அறை.. யாருக்குத் தெரியும்?, அது  அவரைத்தான் கேட்கவேண்டும்.

 அடி வாங்கியக் குமார் அப்படியே நிற்க. ஆசிரியர் மட்டும், அடுத்து
அடுத்து என்று வரிசையாகத் தொடர்ந்தார்.. தொடர்ந்து கேட்க,
ஒரு மாத்திரை    என்பது தவறு என்பதை குமார் வாங்கிய அறை
சொல்லிற்று.  என்பதுபோல,  அடுத்தடுத்து எழுந்த மதர்பாவா,
திருஞானம்,  வரிசையாக  அரை மாத்திரை , இரண்டு மாத்திரை
என்றும் கூற,  தொடர்ந்து சாமிநாதன், ரோஸ்விக்டர் என்று கேள்வி
மட்டும் நகர்ந்தது... பதில் சொல்ல வழியில்லாமல்  விழித்தார்கள்.

அப்படியே கேள்வி மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து, மணப்பொண்ணு பெஞ்சுக்கு சென்றது. அங்கும் மட்டும் என்ன?  அதே நிலைதான் கடைசியாக அகத்தியரின் தங்கை அம்பிகாவிடம் (அவள்தான் 
வகுப்பில் மிகவும் குட்டையாக இருப்பாள்) சென்றது. நல்ல 
வேளை, நாங்கள் வைத்த பெயரைக் காப்பாற்றி விட்டாள். 
தைரியமாக ஒரு மாத்திரை  என்றாள்.

உம்ம்ம்ம்.... பார் இவள் சரியாகச் சொல்லிவிட்டாள்..... ஆசிரியர்
மீண்டும் குமாரை நோக்கி நகர்ந்தார், குமார்  அறை வாங்கிய
தனது இடது கன்னத்தை தனது இடது உள்ளங்கையால் மூடிக்
கொண்டே அவரை கவனித்தான்.

இப்போது சொல்... குறிலுக்கு எத்தனை மாத்திரை?.... குறிலுக்கு
ஒருமாத்திரை! (குமாரும் ஆசிரியரும் சேர்ந்தே கூறினார்கள்)
குறிலுக்கு ஒரு மாத்திரை...இனிமேல் மறப்பாய்? ஆசிரியர்.
இல்லை மறக்க மாட்டேன் என்றான் குமார்....


ஆசிரியரும் மீண்டும் சத்தமாகக் கூறினார்..  “ யாரும் மறக்கக் கூடாது”....

நல்ல வேளை, குமார் "அதுதானே இது" நான் சொன்ன பதில் என்று
சொல்லி அதற்கு மேலும் ஆசிரியர், வேறு  ஒரு கஷ்டமானக்
கேள்வியை கேட்டு (அடிப்பது என்று முடிவானப் பிறகு யார்
தடுத்து அது நிற்கும்?) அதுக்கும்அடிவாங்காமல் விட்டானே.

இதைப் போல நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் போது வேறொரு
தமிழாசிரியரிடமிருந்து எல்லோரும் அடிவாங்கிய நேரத்தில்
எனக்கு மட்டும் கிடைக்காமல் ஆசிரியரே ஒரு காரணத்தை கூறி தவிர்த்துவிட்டார். சில நேரங்களில் இப்படித்தான், அது ஆசிரியரைப் பொறுத்தும், ஆசிரியருக்கு

மாணவர் மீது உள்ள அலாதிப் பிரியத்தைப் பொறுத்தும்
தண்டனையும், பாராட்டும் வேறுபாடும். நம் வாத்தியார் அவர்களின் வகுப்பறையிலே நாம் பார்க்கலாம். சில மாணவர்கள் பின்னூட்டம் வந்தவுடனே ஆசிரியரின்   பதிலும் வரும். அதுவும் இது போல் அல்ல,
அதற்கு ஒரு சிறு வேறுபாடு  உண்டு அந்த மாணவர்கள் மிகுந்த
வேலைப்  பழுக்கு இடையில்   பின்னூட்டம் இடுபவர்கள் ஆதலால்
அவர்களை காக்க வைக்க   வேண்டாம் என்ற நல்ல  எண்ணத்தில்
தான் அப்படி செய்வார்.

சரி இப்போது சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறேன்.

அதன் பிறகு ஆசிரியர் வகுப்பில் இல்லாத போது அதை சொல்லிச்
சொல்லி  நாங்கள் அனைவரும்  குமாரோடு சேர்ந்து  பல முறை சிரித்த
துண்டு.  இன்றும் பல நேரங்களில் எனது பள்ளித் தோழர்களைப்
பார்க்கும் போது சொல்லிச் சிரிப்பது உண்டு.

ஆனால் அன்று அனைவரும் சிரிக்க, அடியை வாங்கிய
அந்த குமார்... சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும்,  அதை விரும்பாத அப் பெண்ணின்  உறவினர்கள்,
சிலரும் சேர்ந்து அவனை   அடித்தே கொன்றுவிட்டதாகவும் அது
நடந்து சில வருடங்களுக்கு பின்பு கேள்வியுற்று மிகவும்
வருந்தினேன். அதோடு,அந்த அவலம் நடந்து சில மாதங்களில்
அப்பெண்ணும்  இறந்து  விட்டதாகவும் கேள்வியுற்றேன்.
 தமிழாசிரியர் மறக்கக் கூடாது என்ற அந்த நிகழ்வு மனதிற்குள்
பல நேரங்களில் சிரிப்பொலியை எழுப்பினாலும், குமாரின்
வாழ்வுக்கு வந்த  அந்த சோகமான முடிவு  இன்றும்  நீரு பூத்த
நெருப்பாய் என் நெஞ்சில் அனல் கக்கிக் கொண்டுத்தான் இருக்கிறது.....

நீங்காத நினைவுகளுள் இதுவும் ஒன்று.

நன்றிகள்,
அன்புடன் உங்கள் நண்பன்,
ஆலாசியம் கோ.

23/07/2010. Singapore.
--------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

24.7.10

தீவினை எப்போது அகலும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தீவினை எப்போது அகலும்?

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 12

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
----------------------------------------------
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே -தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே ...

செந்தமிழ் அருள் ஞான தேசிகனை - ஞான
தேசிகனை .....தேசிகனை ......ஆஆ.......
செந்தமிழ் அருள் ஞான தேசிகனை - ஞான
செந்தில் கந்தனை வானவர் காவலனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே......

சந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை...
சந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை
சமரச சன்மார்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க நெறிதனை மறந்தனை
அந்தகம் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகம் வரும்பொது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவணபவ குஹனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே........

பாடல் ஆக்கம்: கவிஞர் கே.டி. சந்தானம்
பாடியவர்: டி.எம்.எஸ்.
படம்: அம்பிகாபதி

பாடலின் ஒலி வடிவத்தை இங்கே அழுத்திக் கேட்கலாம்!

------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23.7.10

அடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

அன்பிற்கு உரியவர்களே, கீழ்க்கண்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:-

1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact "RED SOCIETY"
    99402 - 17816. They will help that children for their studies.

2. There is a Website: www.friendstosupport.org Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.

3. Engineering Students can register inwww.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped children..! Contact:- 9842062501 & 9894067506

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact : 045420-240668,245732, "Helping Hands are Better than Praying Lips"


6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into near by any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7.By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.

-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.   "TREES DO IT FOR FREE" "Respect them and Save them"

9. Special phone number for Eye bank and Eye donation 044 - 28281919 and 044 - 28271616 (Sankara Nethralaya Eye Bank)  For More information about how to donate eyes plz visit these sites. . .
  http://www.kannoli.com/eyebank.html
  http://ruraleye.org/

10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. Contact: 99167 - 37471

11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your home in India and food gets     wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke - Child helpline. They will come and collect the food .Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN.
-- P.Dinesh Kumar

--------------------------------------------------------------------------
நம் வகுப்பறை மாணவர் பாலமுருகன் இதை அனுப்பியிருந்தார் அவருக்கு உங்கள் சார்பில் நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று வாத்தியார் அவசர வேலையாக வெளியூர்ப் பயணம், அத்துடன் ஊருக்குப் புறப்படும் முன்பாக வாத்தியாரின் அகல வரிசை இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. தகறாறு மட்டும் செய்தது. அதனால் வழக்கம்போல பதிவின் மூலம் உங்களிடம் சொல்லி விட்டுச் செல்ல முடியவில்லை! மன்னிக்கவும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21.7.10

உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூல் நயம்:  உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!

இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள் என்று சொல்வதைப் போல,  வள்ளுவரின் திருக்குறளை நயந்து எழுதும் நூல்கள் எல்லாம் ஒப்பற்ற நூல்கள்தான்.

வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, சிறந்த நூல் ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில்  உவகை கொள்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள மகிழ்விப்பதாக அமையும் தன்மையைக் குறிக்கும் சொல் நயம்  என்னும் சொல். artistic beauty, literary beauty, merit என்று ஆங்கிலத்தில் வகைப் படுத்துவதை தமிழில் ஒரு சொல்லால் விளங்க வைத்துவிடலாம். அதுதான் செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பு.

இந்திய வருவாய்த் துறையில் பணி புரியும்  உயர் அதிகாரி திரு. சி. இராஜேந்திரன் அவர்களால் எழுதப்பெற்ற ‘திருக்குறள் உவமை நயம்’
என்னும் ஒப்பற்ற நூல், படிப்பவர்களின் மனதில் படிக்கும்போது
ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.

நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்

புத்தகத்தைப் பிரித்தவுடன் 'முகவுரை' பகுதியில் தன்னுரையாக திரு. சி. இராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!

    “ஓர்  இனத்திற்குப் பண்பாடும், நாகரிகமும்தான் ஆணிவேர்
போன்றவை. ஆணிவேர் ஆழமாகச் சென்றால்தான் ஒரு மரம் 
நிலைபெற்று  நிற்கும். அதன்  கிளைகளும் பல திசைகளில் பரவி, 
தளிர்த்து,  இலைவிட்டு, பூத்து, காய்த்து, கனி தந்து  பயனுள்ளதாய் 
விளங்க முடியும். வேர்களை மறந்த மரங்களுக்கு வாழ்க்கையில்லை.

  நமது முன்னோர்கள், அவர்கள் உணர்ந்து எழுதி வைத்து விட்டுச் சென்ற அரிய, ஏற்புடைய கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்கள்தான் நமது பண்பாட்டையும், நாகரிகத்தையும்  நமக்கு  உணர்த்துபவை. 
அவற்றை  மறந்து ஓர் இனத்திற்கு வளமான வாழ்க்கை இல்லை.
நாம் நமது இலக்கியங்களில் ஆழக் கால் ஊன்றி அதிலுள்ள
கருத்துக்களை  உள்வாங்கி செயல்பட்டால்தான், நமக்கும்,
மற்றவர்களுக்கும் பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும்”

புத்தகம் பிறந்த கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?

அறத்துப்பாலில் 22ம் பொருட்பாலில் 56ம் இன்பத்துப்பாலில் 19ம் ஆக மொத்தம் 97 அதிகாரங்களில் உள்ள உவமைகள், நயமாக, விளக்கங்களுடன் எடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன!

எனக்குப் பிடித்த நிலையாமை அதிகாரத்தில் உள்ள உவமைகளை நூல் ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறாரா என்றுதான் முதலில் தேடிப் படித்தேன். அதில் 4 குறள்களின் உவமை நயம் சிறப்பாக எடுத்துச்
சொல்லப்பெற்றிருக்கிறது.

  “கூத்தாட்டு அவைக்குழாத் தற்று பெருஞ்செல்வம்
   போக்கும் அதுவிளித் தற்று”

                            - குறள் எண் 332

கூத்தாட்டுக் களத்துக்கு ஒவ்வொன்றாய் வரும் மக்கள் கூட்டம் போல் செல்வம் சிறிது சிறிதாக வரும். ஆனால் போகும்போது கூத்தாட்டுக் களத்திலிருந்து கூத்து முடிந்ததும் செல்லும் பெரும் மக்கள் கூட்டத்தைப் போல சிறுகச் சிறுகச் சேர்த்த பெருஞ்செல்வம் விரைந்து ஒரேயடியாகச் சென்றுவிடும்.

தமிழ் - இயல், இசை, நாடகம் - என மூன்று வகைப்படும். கூத்து என்பது நாடகத்தமிழ். கூத்தின் மூலம்  மக்களுக்கு நல்ல பல கருத்துக்களையும், நமது பண்பாட்டையும், கலைஞர்கள் விளக்கிக் கொண்டிருந்த காலம்  அது.......என்று தொடர்கிறது நூலாசிரியரின் விளக்கம்.

    “பீலிபெய் சாகடும் அச்சிறும் அப்பண்டம்
     சால மிகுத்துப் பெயின்
- குறள் 475 (வலி அறிதல் அதிகாரம்)

மயிலறகே  ஆனாலும் வண்டி தாங்கும் அளவிற்கு ஏற்றாமல்
அளவிற்கு மிஞ்சி ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும்
என்று வள்ளுவப் பெருந்தகை மயிலிறகை வைத்து  உவமையாகச் 
சொன்ன  இந்தக் குறள்  மட்டும் பள்ளிப் பாடத்தில் படித்ததினால்
பலருக்கும் தெரியும். வேறு இரண்டு உவமை நயங்களைச்
சொல்லுங்கள் என்றால் பலரும் விழி பிதுங்க விழிப்பார்கள்.

ஆகவே இந்த நூலில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள உவமை நயங்களை எல்லாம் படித்து அனுபவிக்கும் போது வள்ளுவரின் மேன்மை மேலும் பளிச்சிடுகிறது.

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும்  என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.

ஒரு உயர் அதிகாரிக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்தாலும், எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பது  திகைப்பிற்கு உரிய விஷயம். ஆர்வம் இருந்தால் போதும் என்று பதில் சொல்லாமல் ஒரு இரண்டு பக்கங்கள்  எழுதிப் பாருங்கள், அப்போது தெரியும் நன்றாக எழுதுவது என்பது வரம் என்று!

வள்ளுவரின் உவமை நயங்களை, நயம்பட தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்த நூல் 288 பக்கங்களைக் கொண்டது. சிறந்த முறையில் அச்சிடப்பெற்றுள்ளது.  

Nightingale Binding  என்னும் முறையில்  பக்கங்கள்படிப்பதற்கு வசதியாகக் கட்டமைத்துக் கொடுக்கப் பெற்றுள்ளது. நூலின் வடிவமைப்பைப் பார்க்கும்போது அதன்  விலை குறைவுதான்.  விலை ரூ. 125:00 மட்டுமே

நூலில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முத்துக்கள். எல்லாவற்றையும் எடுத்து எழுத நான் விரும்பினாலும்  பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது! அதேபோல மிகவும்

அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக் குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும். ஒரு புத்தக விமர்சனத்தில் அதைச் செய்வதும் சரியல்ல!

ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள்.அதுதான் நூலைச் சிறப்பாக  எழுதிய திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றிக்  கடனுமாகும்.

பதிப்பாளர்களின் முகவரி:

கவிதா பப்ளிகேஷன்
8, மாசிலாமணி தெரு,
பாண்டி பஜார், தி. நகர்
சென்னை - 600017

தொலைபேசி எண்: 24364243, 24322177


நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

20.7.10

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

  “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்”


என்று எழுதினார் வள்ளுவர் பெருந்தகை!

எந்தப் பொருளின் மீதும் பற்று வைக்காதே! அப்படி வைக்காமல் இருந்தால் அந்தப் பொருளினால் உனக்கு ஒரு துன்பமும் வராது என்பது அதன் பொருள்.

பாழும் மனம் கேட்குமா? கேட்காது.

அழகான பெண்ணைப் பார்த்தால் ஏக்கம். அமெரிக்க டாலரின் மீது ஏக்கம். அடையாரில் உள்ள வீடுகளின் மேல் ஏக்கம். அமைச்சர் பதவியின் மேல் ஏக்கம். ரோல்ஸ்ராய்ஸ் காரின் மீது ஏக்கம். அம்பானியின் செல்வாக்கைப் பார்த்து ஏக்கம். சரவணபவன் சாப்பாட்டின் மேல் ஒரு தாக்கம். தலைப்பாக்கட்டி பிரியாணி மேல் ஒரு தாக்கம். சீவாஸ் ரீகல் விஸ்கியின்மேல் ஒரு தாக்கம். ஃபில்டர் காப்பியின் மேல் ஒரு தாக்கம். வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டின் மேல் ஒரு தாக்கம். இப்படி ஏக்கத்தையும், தாக்கத்தையும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.

அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் சொன்னார் “எதன் மீதும் ஆசை வைக்காதே; பற்று வைக்காதே!”

கிடைக்காததன் மேல் ஆசை வைக்காதீர்கள்.“கிட்டாதாயின் வெட்டன மற!” என்று அவ்வையார் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.

ஜோதிடப் பாடம் படிக்கும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: நீண்ட ஆயுளின் மேல் யாரும் ஆசை வைக்காதீர்கள். பூரண அயுளைப் பெற்று வாழ்வது முக்கியமில்லை. இருக்கும்வரை நன்றாக (ஆரோக்கியமாக) இருந்துவிட்டு, நடை, உடையுடன் இருக்கும்போதே மரணத்தைத் தழுவுவதுதான் முக்கியம். உங்கள் மொழியில் சொன்னால், உயிர் வாழும் கடைசி நொடிவரை அடுத்தவன் தயவில்லாமல் வாழவேண்டும். அதுதான் நிறைவான வாழ்க்கை.

அது நம் கையில் இல்லை என்றாலும், கிடைக்கத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.

வலி இல்லாமல் பத்து நிமிடங்களுக்குள் மரணம் ஏற்பட வேண்டும். மரணம் ஏற்படும் வரை, நாம் நடை, உடையுடன் இருக்க வேண்டும்.

வயதானவர்கள் இருக்கும் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அல்லது ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்று பாருங்கள். படுத்தால், உட்கார்ந்தால் தானாக எதுவும் செய்ய முடியாத நிலையில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள் .கழிப்பறைக்குக்கூட அவர்களால் சுதந்திரமாகச் சென்று திரும்பமுடியாது. Bed Pan, Diaper, walking stick, walker போன்ற சாதனங்களை நம்பி அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. அத்துடன் அவர்களை வைத்துப் பராமரிப்பவர்கள் சலிப்படையாமல் இருக்க வேண்டும்.

வயதானவர்களின் அவலநிலை பற்றிய ஏராளமான கதைகள் என்னிடம் இருக்கின்றன. ஒன்றே ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நிலைமை பிடிபடும்.

ஒரு தாய் இருந்தார். வயது 85. நன்றாக இருந்தவரை தன்னைத்தானே அவர் பார்த்துக்கொண்டார். கணவர் இறந்து 10 ஆண்டுகள் வரை அவர் தன் வீட்டில் தனியாகவே இருந்தார். மூன்று மகன்கள். யார் வீட்டிற்கும் போய் இருக்க அவருக்கு விருப்பமில்லை. அவரைக் கொண்டு போய் வைத்துப் பராமரிக்க அவருடைய மருமகள் மூன்று பேருக்கும் விருப்பமில்லை. பேரன்கள் இருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்களும் கண்டு கொள்ளவில்லை. தள்ளாத மூப்பு வந்தது. உடன் இணைப்பாக இயலாமையும் வந்தது.

வீட்டு உறுப்பினர்கள், பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்தார்கள். முடிவெடுத்தார்கள். தாயாரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள். அவர் நொந்து போய் விட்டார். நடைக்கம்பியின் (walker) உதவியால் வாழ்க்கை மேலும் ஒராண்டு ஓடியது. பிறகு அந்த அம்மையாரால், அடிக்கடி எழமுடியாத நிலைமை. நம்பர் ஒன் & நம்பர் டூ வெல்லாம் தனது படுக்கையிலேயே கழித்துவிடும் நிலைமை.

முதியோர் இல்ல ஊழியர்கள் ஆரம்பத்தில் சுத்தம் செய்தவர்கள், பிறகு ஒரு நாள் தாக்குப் பிடிக்காமல், “ஏய் கிழவி, இனிமேல் இதெல்லாம் வரும் சமயத்தில் எங்களிடம் சொல். நாங்கள் பேன் (pan) வைக்கிறோம்” என்றார்கள்.அதெல்லாம் சில சமயம் சொல்லாமல் வருமல்லவா?

அந்த ஊழியர்களிடம், அன்பே உருவான அந்தத்தாய், அடிவாங்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்தமுறை, தன் மூத்த மகன் தன்னைப் பார்க்க வந்திருந்தபோது, கதறி அழுதார்:

 “டேய் கண்ணா, நான் சின்னபிள்ளையாக இருந்தபோது செல்லமாக வளர்ந்தவள். என் அப்பச்சி என்னைப் போற்றி ஓவியமாக வளர்த்தார். என் கணவரும் உத்தமமானவர். என்னை ராணி மாதிரி வைத்திருந்தார். அவர்கள் இருவரும் இருந்தவரை, என் மீது ஒரு துரும்புகூடப் பட்ட தில்லை. இங்கே என்னை அடிக்கிறார்களாடா!  என்னால் இனிமேல் இங்கே இருக்க முடியாதுடா! ஒன்று என்னை உன்னுடன் கூட்டிக்
கொண்டு போ அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்து விட்டுப்போ!”

வந்த மகன் அந்த இரண்டையும் செய்யவில்லை. அங்கே இருந்த ஊழியர்களிடம் ஆளுக்கு ஐநூறு கொடுத்து அடிக்காமல் பார்த்துக் கொள்ளூம்படி சொல்லிவிட்டுப்போனார். தன் தாயாரையும் சமாதானம் செய்துவிட்டுப் போனார்.

அதற்குப் பிறகு என்ன ஆயிற்று?

மன உளைச்சலில் அடுத்து வந்த இரண்டாவது மாதமே அந்த அன்புத்தாய் இறந்து போனார்.

   “எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
      எங்கே மனிதன் இல்லையோ, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”


என்று தன்னைப் படைத்த இறைவன் திருவடிக்கே சென்று விட்டார்,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு முக்கியமான பலன் உண்டு. எட்டாம் வீட்டின் முக்கியமான பலன் ஆயுளை நிர்ணயம் செய்வதற்கு உரிய வீடு அதுதான்.

அந்த வீட்டின் தன்மை, அதாவது அது சுபக்கிரகத்தின் வீடா, அதன் அதிபதி ஜாதகத்தில் எங்கே போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அந்த வீட்டின் மேல் விழும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் என்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அதே போல 3ஆம் வீடு, அதன் அதிபதி, ஆயுள்காரகன் சனீஷ்வரன் ஆகியவற்றின் நிலைப்பாடுகளும் முக்கியம். ஜாதகத்தில் சனி, எட்டாம் அதிபதி, லக்கின அதிபதி ஆகிய மூவருக்கும் உள்ள தொடர்பு நிலையும் முக்கியம்.

ஜோதிடத்தில் ஆயுள் சம்பந்தப் பட்ட முக்கிய வீடுகள் மற்றும் அவற்றின் தன்மைகளை அல்லது வலிமையைப் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்டவாறு பார்க்க வேண்டும்.
ஏழாம் அதிபதி
ஏழாம் வீட்டில் உள்ள கிரகங்கள்
ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்
லக்கினாதிபதி
லக்கினத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்
லக்கினாதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்
இரண்டாம் வீட்டதிபதி
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்
இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்

எட்டாம் வீடு மரணத்தையும் அழிவுகளையும் (death & destruction) சுட்டிக்காட்டும் இடமாகும். மரணத்தை ஏற்படுத்துவதில், ஏழாம் அதிபதி, இரண்டாம் அதிபதி, மாரக அதிபதி மற்றும் சனீஷ்வரனின் ஆகியோரின் பங்கு இருக்கும். ஆகவே இந்த நால்வரின் தசா புத்திக் காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு, ஜாதகத்தை நன்கு அலசுவது அவசியமாகும்.

ஒருவரின் ஆயுளை எப்படிக் கணித்துத் தெரிந்து கொள்வது? மிகவும் அசாத்தியமான வேலை அது. ஜோதிடத்தில் மிகவும் சிரமமான பகுதி அதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் ஜாதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும் (பொதுவிதி)

1. லக்கின அதிபதி ஆட்சி அல்லது உச்ச பலம் பெற்றிருத்தல்.
2. எட்டாம் வீட்டில் சனி அல்லது குரு இருப்பது.
3. லக்கினமும், சந்திரராசியும் சுபகிரகங்களின் சேர்க்கை பெற்றிருப்பது.
4. லக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திர வீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருக்கும் நிலைமை.
5. லக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கு அதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருத்தல் அல்லது லக்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ தன் பார்வையில் வைத்திருக்கும் நிலைப்பாடு.
7. சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருப்பது.
8. குரு அல்லது சனி எட்டாம் வீட்டையோ பார்க்கும் நிலைப்பாடு.
9. சனி அல்லது எட்டாம் வீட்டதிபதி ஒரு உச்சமான கிரகத்துடன் சேர்ந்திருந்தால் தீர்க்கமான ஆயுள்
10. லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோண வீட்டில் இருப்பதுடன், ஜாதகத்தில் தீய கிரகங்கள் 6 & 12ஆம் வீட்டில் இருந்தால் தீர்க்கமான ஆயுள்
11. லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோண வீட்டில் இருப்பதுடன், குரு அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தால் தீர்க்கமான ஆயுள்.
12. லக்கினாதிபதியும், எட்டாம் இடத்ததிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் எட்டாம் இடம் அல்லது 11ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள்.
13. ஜாதகத்தில் சனி, லக்னாதிபதி அல்லது எட்டாம் அதிபதியுடன் கூட்டாகச் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத்
தீர்க்கமான ஆயுள்.
14. எட்டாம் அதிபதி ஆட்சி பலம் பெற்றிருப்பதுடன், எட்டாம் வீட்டில் சனி இருக்கும் அமைப்பு ஜதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும்.
15. லக்கினாதிபதி வலிமையாக இருப்பதுடன், குரு உச்சம் பெற்றிருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள்.

இன்னும் நிறைய அமைப்புக்கள் உள்ளன. நான் முக்கியமானவற்றையே குறிப்பிட்டுள்ளேன். நம் லெவலுக்கு இது போதும்!

சுருக்கமாக:
லக்கினாதிபதியும், சுபக்கிரகங்களும் (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன்) ஆகியவைகள் கேந்திர வீடுகளில்   1, 4, 7, 10 இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள்.
அவைகளே 2, 5, 8, 11 ஆம் வீடுகளில் இருந்தால் மத்திம ஆயுள்.
அவைகளே 3, 6, 9, 12 ஆம் வீடுகளில் இருந்தால் குறைவான ஆயுள்.

இவைகள் அனைத்துமே பொதுவிதிகள். ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் வைத்து ஆயுளை நிர்ணயிக்க வேண்டும்.

இதைப் போல பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நான் கொடுத்துள்ளேன். முழுவதையும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் படிக்கலாம். ஆயுளைப் பற்றி  விரிவாக அவற்றில் உள்ளது.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

பாடம் மேலும் உள்ளது. அவைகள் தொடர்ந்து வரும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
எட்டாம் வீட்டைப் பற்றிய மேலதிகத் தகவல்:
எட்டாம் வீட்டிற்கான வேலைகள்:
Diseases,
Death
Finances through unfair means,
internal sex organs,
longevity,
mental pain,
obstacles,
mode of death,
imprisonment,
worries and
It also indicates body parts as scrotum, pelvis, seminal vesicles, external genitalia, etc.



வாழ்க வளமுடன்!

19.7.10

அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா!

கவியரசர் கண்ணதாசன் இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள், வழக்கம்போல, காலை 9:30 மணிக்கு தன் அலுவலுக்குச் சென்றார். அதாவது திரைப்படம் ஒன்றிற்கு பாடல் புனையச் சென்றார்.

சென்றடைந்த இடம் மிகவும் பிரபலமான ஸ்டுடியோவின் ஒலியரங்கம். அதாவது ரெகார்டிங் தியேட்டர். முன்புறம் இருந்த ஹாலில், இசை யமைப்பாளர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்,
ஒரு ஷோபாவில் நீட்டிப் படுத்து, நல்ல நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.
வேறு எவரையும் காணோம். இவரை வரச் சொல்லியிருந்த அவர்
அதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தன் காருக்கே திரும்பினார் கவியரசர். அவரைக் கண்டு ஓடிவந்த எம்.எஸ்.வியின் உதவியாளர் கவியரசரின் காதில் மெல்லக் கிசுகிசுத்தார்  “அண்ணே, இரவு முழுவதும் ஒரு படத்திற்குப் பின்னணி இசை சேர்க்கும் வேலை. அது முடிவதற்குக் காலை ஆறு மணியாகிவிட்டது. அனைவரையும் வீட்டிற்குச் சென்றுவிட்டு பகல் பன்னிரெண்டு மணிக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலைவர் இங்கேயே படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டார்,,,”

  “அதனாலென்ன பரவாயில்லை!” என்று சொன்ன கவியரசர், காரின் டாஷ்போர்டில் இருந்த நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து, அதில் இரண்டு வரிகளை எழுதி, “இதை விஸ்வநாதன் எழுந்த பிறகு கொடுத்து இதற்கு டியூன் போடச் சொல்லு, நான் ஒரு மணிக்கு மீண்டும் வருகிறேன். மீதி வரிகளை அப்போது எழுதித் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, எம்.எஸ்.வி எழுந்தவுடன், சீட்டு அவரிடம் சேர்க்கப்பட்டது.

சீட்டைப் பார்த்த எம்.எஸ்.வி புன்னகைத்தார்.

“அட, இது கூட நன்றாக இருக்கிறதே!” என்று சொன்னவர், அதற்கே அன்று மெட்டைப் போட்டு வைத்தார். கவியரசர் திரும்பி வந்தவுடன், அந்த வரிகளை வைத்தே பாடல் முழுமையாக எழுதப்பெற்று, பாடலும் பதிவானது. பிறகு படம் வெளியானவுடன், அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

கவியரசர் விளையாட்டாக எழுதிக் கொடுத்து, பிறகு பிரபலமான அந்த வரிகள் இதுதான்:

  “அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...
      அகப்பட்டவன் நான் அல்லவா”


முழுப் பாடலையும் தெரிந்து கொள்ள விரும்புவோர் இங்கே அழுத்தி அதைத் தெரிந்து கொள்ளலாம்.
----------------------------------------------------------------------------------
நாம் விரும்பிப் பிறக்கவில்லை. நம் பிறப்பும் நம்மைக்கேட்டு அரங்கேற்றப் படவில்லை. மற்றவர்களைப் பார்க்கும்போது, நம் பிறவியில் உள்ள, நம் வாழ்க்கையில் உள்ள அவலங்கள், கஷ்ட நஷ்டங்கள் நமக்குத்  தெரிகின்றன.

“என்ன நினைத்து என்னைப் படைத்தான் ஆண்டவன் என்பவனே” என்று பாடும் நிலைமையில்தான் பலரின் வாழ்க்கை இருக்கிறது.

கவியரசரின் பாடல் வரிகளை, நாம் இப்படிச் சற்று மாற்றி எழுதினால், நம் வாழ்க்கைக்குச் சரியாக இருக்கும்

“அவனுக்கென்ன எழுதி விட்டான்
   அகப்பட்டவன் நான் அல்லவா?”


ஆமாம், நம் தலை எழுத்தைக் காலன் எழுதி வைத்து விட்டுப் போய்விட்டான். அல்லது எழுதி நம்மை இங்கே அனுப்பிவிட்டான். அகப்பட்டுக்கொண்டு அல்லாடுவது நாமல்லவா?

மனிதர்களில் முழுமையான சந்தோஷத்துடன் இருப்பவர்கள், முழுமையான திருப்தியுடன் இருப்பவர்கள் எவருமே இல்லை. இருந்தால் அவர்கள் ஞானிகள் லிஸ்ட்டிற்குச் சென்று விடுவார்கள். எலும்பும் சதையும், அல்லாடும் இதயமும் கொண்ட மனிதர்களாக இருக்க முடியாது.

ஞானிகள் கூட பூரண ஆயுளுடன் வாழ்ந்தவர்கள் கிடையாது. மத்திம வயதில் புட்டுக் கொண்டவர்களே அதிகம். பூரண ஆயுளுடன் வாழ்ந்த ஞானிகள் சிலரைக்கூட மரணம் சந்தோஷமாகத் தழுவியதில்லை. ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார் போன்ற சில மகான்கள் கூட இறுதிக் காலத்தில் புற்று நோய் வந்து சிலமாதங்கள் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்ட பிறகுதான் இயற்கை எய்தினார்கள்.

மரணமும், மரணம் வரும் வழியும், மரணம் பயன்படுத்தும் ஆயுதமும் யாரையும் விட்டு வைப்பதில்லை. யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்!
+++++++++++++++++++++++++++++++
மத்திம ஆயுள்

முன்பே எழுதியுள்ளேன். மத்திம ஆயுள் என்பது 32ற்கு மேல், 60 - 64 வயதுவரை உயிரோடு இருக்கும் அமைப்பு. எனது உறவினர்களில் சிலர் (மொத்தம் ஆறு பேர்கள்) 40  - 50 வயதிற்குள் இறந்திருக்கிறார்கள்.  40 - 50 வயது காலக்கட்டம் என்பது ஒரு கண்டம்தான்.

ஐம்பதைத் தாண்டிவிட்டால், வண்டி சுலபமாக அறுபதுவரை ஓடிவிடும். அதற்குப் பிறகு மக்கர் பண்ணலாம். அது வாங்கி வந்த வரம் கணக்கில் வரும்.

1. எட்டாம் வீட்டில் வீட்டில் சனியைத் தவிர பாபகிரகங்கள் இருந்தால், அதுவும் சுபக் கிரகங்களின் பார்வை இன்றி இருந்தால் மத்திம ஆயுள்

2. ஆறு, மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தால் மத்திம ஆயுள்தான்.

3. லக்கினத்தில் சந்திரன் இருந்து கூட்டாக பாப கிரகங்கள் இருந்தால் அந்த அமைப்பு மத்திம ஆயுளையே கொடுக்கும்.

4. லக்கினத்தில் செவ்வாய் இருந்து, அத்துடன் சுபக்கிரகத்தின் பார்வை இன்றி இருப்பதுடன், 6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும் மத்திம ஆயுளையே கொடுக்கும்

5. லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை இல்லா விட்டாலும் மத்திம ஆயுள்தான்.

6. எட்டாம் அதிபதி கேந்திரத்தில் இருக்க, உடல்காரகன் சூரியனும், ஆயுள்காரகன் சனியும் கூட்டாக 3ஆம் வீடு அல்லது ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

7. லக்கினாதிபதி பலமின்றி இருப்பதுடன், 6, 8, 12 ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, லக்கின அதிபதியுடன் ஒரு தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

8. சனியும், குருவும் பலமின்றி இருந்து, ஜாதகத்தில் 6, 8, 12 ஆம் வீடுகளிலும், கேந்திரங்களிலும், பாவ கிரகங்கள் குடியிருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

9. சனி ஆறாம் வீட்டிலும், பாவ கிரகங்கள் எட்டாம் வீட்டிலும் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு மத்திம வயதையே கொடுக்கும்.

10.  2, 3, 4, 5, 8 & 11 ஆகிய ஆறு வீடுகளில் தீய கிரகங்கள் குடியிருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு மத்திம ஆயுளையே கொடுக்கும். (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று மட்டுமே நவக்கிரகங்களில் சுபக்கிரகங்கள். ஆயுளைப் பொறுத்தவரை மற்ற ஆறும்  அசுபர்களே!)

11. லக்கினம், மற்றும் சந்திர ராசி எந்த கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையும் இன்றி இருப்பதுடன். எட்டாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை என்றால் அது ஜாதகனுக்கு மத்திம வயதையே கொடுக்கும்.

இவை எல்லாமே பொது விதிகள். லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவற்றின் மொத்த பலன்களை வைத்து (அஷ்டகவர்க்கம் மூலம் அது தெரியும்) இது மாறுபடும். ஆகவே பொது விதிகளை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்.

மத்திம வயதிற்கு இன்னும் சில விதிகள் உள்ளன. நான் முக்கியமான வற்றையே உங்களுக்குத் தந்துள்ளேன். விவரமாக அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற
நூல்களைப் படிக்கலாம். படித்துப் பயன் பெறலாம்.

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

17.7.10

சொல்லச் சொல்ல இனிக்குதடா!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்லச் சொல்ல இனிக்குதடா!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 11
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
----------------------------------------------
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
   உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
   உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
   முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
   கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
   உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
   உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
   அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
   அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
(சொல்லச் சொல்ல)

படம் : கந்தன் கருணை
இசை : K.V. மகாதேவன்
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: P.சுசீலா
---------------------------------------------------------------------
பாடலின் ஒலி வடிவம்: இங்கே அழுத்தவும்!

--------------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

16.7.10

சுண்டல் பதிவு!

----------------------------------------------------------------------------------------
 நகைச்சுவை: சுண்டல் பதிவு!

வாத்தியார் வெளியூர்ப்பயணம். அதனால் இன்றும் நாளையும் வகுப்பிற்கு விடுமுறை! அடுத்த வகுப்பு  சனிக்கிழமையன்று.

உள்ளே வந்ததிற்கு சும்மா போக வேண்டாம். பாத்திரத்தில் சுண்டல் வைத்திருக்கிறேன். ஆளுக்கு ஒரு தொன்னை  எழுத்துக்கொண்டு செல்லுங்கள்

அன்புடன்
வாத்தி (யார்)
------------------------------------------------------------------------
எச்சரிக்கை:

இது நகைச்சுவைக் கணக்கில் வரும். ஆகவே உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!
------------------------------------------------------------------------
1
“உலகமயமாக்கல் என்றால் என்ன? (what is Globalization?)”

“ஒரு குடைக்குள் உலகத்தைக் கொண்டு வருவது! அதாவது ஒரு அமைப்பிற்குள் உலக மக்கள் அனைவரையும்  ஒன்று சேர்ப்பது. வெவ்வேறு நாடுகளின் அரசுகளை, நிறுவனங்களை, மக்களை ஒருங்கிணைப்பது என்று
வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில் நுட்ப வசதி அதைச் சாத்தியப்படுத்தும். உலகப் பொருளாதராமும், உலக வளர்ச்சியும் பரவலாக இருக்கும் அதுவே அதன் பிரதான நன்மை!”

“உலகமயமாக்கலுக்குப் புரியும்படியாக ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியுமா?”

“இளவரசி டயானாவின் மரணம்!”

“டயானாவின் மரணமா - எப்படி?”

“An English princess with an Egyptian boyfriend crashes in a French tunnel, driving a German car with a Dutch engine, driven by a Belgian who was high on Scottish whiskey, followed closely by Italian Paparazzi, on Japanese motorcycles, treated by an American doctor,using Brazilian medicines! And this is sent to you by an  Indian, using Bill Gates' technology, which he got from the Japanese. And you are probably reading this on one of the IBM clones that use Chinese-made chips, and Korean made monitors, assembled by Bangladeshi workers in a Singapore plant, transported by trucks driven by Pakistanis, hijacked by Indonesians and finally sold to you by a Chinese!”
-------------------------------------------------------------------------





2
இருவரும் மாரக அதிபதிகளின் 
தசாபுத்தியைச் சோதித்துப் பார்க்கிறார்கள்!


3

திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்காக வந்துள்ள புதுக்கெடிகாரம்


4
வேறொன்றுமில்லை, சிக்கன நடவடிக்கை!
-----------------------------------------------------------------------------------
5
விற்பனைப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் 
------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!