மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 491 - 500. Show all posts
Showing posts with label Lessons 491 - 500. Show all posts

20.12.11

Astrology மூட்டை முடிச்சுக்களுடன் கர்மகாரகன் வீடு மாறுகின்றார்!

அருள்மிகு சனீஷ்வரர்

Astrology மூட்டை முடிச்சுக்களுடன் கர்மகாரகன் வீடு மாறுகின்றார்!           

சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
                    
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்னும் பெயருடன் சேர்த்து அழைக்கப்பெறுபவர் சனீஸ்வரன். அதுவே அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தும்.

கர ஆண்டு மார்கழித் திங்கள் 5ஆம் தேதி புதன்கிழமையன்று (21.12. 2011) அதிகாலையில் சனீஸ்வரன் கன்னி ராசியில் இருந்து, தனது உச்ச வீடான துலாம் ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அதாவது தனது மூட்டை முடிச்சுக் களுடன் வீடு மாறுகின்றார்

வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.

கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய  ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்கொண்டிருந்த சிம்ம ராசிக்காரகளும், சென்ற இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த கும்ப ராசிக்காரர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். அவர்களுக்குப்  பூரண நிம்மதி கிடைக்கும்.

அந்தச் சிரமங்களை இனி விருச்சிக ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில் விரயச் சனி - 12ஆம் இடம்), மீன ராசிக்காரர்களும் (அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.

ரிஷப ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), மிதுன ராசிக்காரர்கள் (ஐந்தாம் இடம்), சிம்ம ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) தனுசு ராசிக்கார்கள் (11ஆம் இடம்), கும்ப ராசிக்காரகள் (9ஆம் இடம்) ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள் அவர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்கள் (4ல் சனி), கன்னி ராசிக்கார்கள் (பாதச் சனி - 2ஆம் இடம்), மகர ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் - 10ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்) துலா ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்) ஆகியோர்கள் சிறிதளவு  பாதிக்கப்பெறுவார்கள்.

12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:

1. மேஷம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று  முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

2. ரிஷபம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள் எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும் உண்டாகும்.

3. மிதுனம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும் யோகம்  உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்தனமாகும்.

4. கடகம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல் நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள் ஏற்படலாம்.  கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

5. சிம்மம்: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த, வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக விலகுகிறது. இனி
எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப் பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான
பலன்கள் அதிகரிக்கும்

6. கன்னி: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள். அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில், வாக்குக் கொடுப்பதில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது. அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.

7. துலாம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில் சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி என்று அதற்குப்
பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும். மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.
அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள் உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப்  போவது நல்லது.

8. விருச்சிகம்: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத் தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது. புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் விரும்பும்  பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு அவசியம். நன்மை பயக்கும்.

9. தனுசு: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும். சமூக  அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில் மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்

10. மகரம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் தன்னுடைய உச்ச வீட்டில் இருப்பதால்.  இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமாக இருக்கும்.

11. கும்பம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி நிலவும். வீட்டில்  சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

12. மீனம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம்  இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப் பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள  மனிதராக மாறிவிடுவீர்கள்.

செய்திச் சுருக்கம் (News in brief)

பலனடையப்போகின்றவர்கள்: ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்கள்

குறைந்த அளவு - அதாவது சில்லறைப் பலன்கள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்கள்

பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய 5 ராசிக்கார்ரகள்

ஏழரைச் சனி: கன்னி ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள் - பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
துலாம் ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி
விருச்சிக ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.

அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு. அது மீன
ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
இரண்டாவது முறையாக, முக்கியமான தகவல்களை மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்

மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய
ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும்
கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

17.12.11

Astrology: ஒரு மாணவியின் பொதுநல கோரிக்கையும் - வாத்தியாரின் பதிலும்


Astrology: ஒரு மாணவியின் பொதுநல கோரிக்கையும் - வாத்தியாரின் பதிலும்

from    xxxxxxxxxx@gmail.com
to    classroom2007@gmail.com
date    17 December 2011 05:35
subject    ஆசிரியரிடம் ஒரு கோரிக்கை
  
அய்யா அவர்களுக்கு வணக்கம்.

கொஞ்ச நாளாவே மனசுக்குள் ஒரு விதமான  சங்கடம். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை இல்லை. நீங்களும் பார்க்கின்ற, படிக்கின்ற,  நம் நாட்டு நடப்புக்கள்தான் காரணம்.

ஒரு பக்கம் முல்லைப் பெரியார், மறுபக்கம் கூடங்குளம். ஒரு பக்கம் விலை வாசி உயர்வு , தங்கம் , டாலர் உயர்வு, மறுபக்கம் ரூபாய் மதிப்பு இறங்கு முகம் . எங்கே பார்த்தாலும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு சோர்வோடு , அது எந்த நாடாக இருந்தாலும். யார் கூடவும் ஓட்டமுடியாமல். ஏன் , தமிழ் மக்கள் தங்களுக்குள்ளே ஓட்ட முடியாத, ஒரு மித்த கருத்து இல்லாத வாழ்க்கை நிலை!

கோவைத் தமிழ்மக்களுக்கு சென்னை பிடிக்கவில்லை. சென்னைத் தமிழ் மக்களுக்கு மற்ற ஊர்களைப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லையோ என்னவோ ஓட்டுதல் இல்லை. என்னவென்று புரியாத நிலை. இது ஒரு உதாரணம்தான். ஆக மொத்தம் தமிழர்களுக்குப் பலவிதத்திலும் நிம்மதி இல்லை.

ஒரு தனிக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும், குடும்பப் பொருளாதாரம் வளமாக இல்லை. ஒரு படி மேலே செல்வதற்கும், நாடு விட்டு நாடு செல்வதற்கும் போலித்தனமான சந்தோஷத்தோடு இருக்கின்ற, செல்கின்ற நிலைமை.

என்னைக்கோ ஒரு நாள் நாமும் நம் ஊருக்குப் போய் நன்றாக வாழ்வோம் என்று கனவோடு இருக்கிறோம்.

எதை பத்தியும் கவலைப் படாத ஆட்சியாளர்கள் நம் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவார்களோ என்னும் பயம் மட்டுமே தற்போது மிஞ்சி இருக்கிறது!

எதிர் கட்சிகளும் மக்களைப்பற்றி, மக்களின் மேன்மையைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் கட்சியைப் பற்றியே கவலைப்படும் நிலைமை. ஆட்சியைப் பிடிக்க மாற்றி மாற்றி வேறு கட்சிகளுடன் அணி சேரும் நிலைமை.

எனக்கு தூக்கம் வரமாட்டேன் என்கிறது. மன அழுத்தமாகவும் இருக்கிறது.

இது நம் நாட்டின் தலை எழுத்தா? நாட்டு மக்களின் தலை எழுத்தா? புரியவில்லை!

உங்களுடைய கட்டுரைகளை வரிசையாகப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

நம்ம நாட்டின் ஜாதகத்தைக் கொஞ்சம் அலசுங்களேன். நீங்கள் ஏற்கனேவே போட்டு இருக்கும் பதிவைப் படித்து இருக்கிறேன். இருந்தாலும் இப்போது நடக்கிறன்றவற்றைப் பார்த்தால் இது எங்கே போய் முடியுமோ என்ற பயம் வாட்டுகிறது!

தயவு செய்து நாட்டின் ஜாதகத்தை  நீங்கள் கொஞ்சம் அலசி ஆராய்ந்து உங்கள் பதிவில் எழுதுங்கள்!

இந்த நிலைமை மாறுமா? நிம்மதி கிடைக்குமா? ஆட்சியாளர்களின் மனம் மாறுமா? இத்தனை பேர்களின் போராட்டங்கள் வெற்றி பெறுமா? மக்கள் தன்னிறைவு பெறுவார்களா?
 
விவரமாக எழுதுங்கள்.

எனது கோரிக்கை தவறு  என்றால் மன்னிக்கவும். உங்கள் பதிவுகளைப் படிக்கும் உரிமையில், உங்களுக்கு இருக்கும் சமுதாய மற்றும் ஆன்மீக ஜோதிட பற்றைப் பற்றிப் புரிந்தவள் என்ற முறையில் உங்களிடம் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்

இப்படிக்கு
உங்கள் மாணவி
கலை

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் பதில்:

சபாஷ்! அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. உங்களின் பொது நல சிந்தனைக்கும் கோரிக்கைக்கும் நன்றி உரித்தாகுக. நாட்டின் ஜாதகத்தை அலசி எழுதுகிறேன். இரண்டு அல்லது மூன்று தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

15.12.11

Astrology தேவி ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம்!


Astrology  தேவி ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம்!

தேவி என்றால் அரிதாரம் பூசிக்கொண்டு திரைப்படங்களில் தலை காட்டும் தேவியல்ல! உண்மையான தேவி. அன்னை உமையவள் என்பது அவரின் திருப்பெயர்களில் ஒன்று. மதுரைக்காரர்கள் அவரை மீனாட்சி என்பார்கள். காஞ்சியில் காமாட்சி. காசியில் விசாலாட்சி!

சிவபெருமானின் இயக்க ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பிய அன்னை உமையவள், அதுபற்றி இறையனாரிடமே வினவ, அவர் வழக்கம்போல ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். நாம் விளையாடினால், அது வெறும் விளையாட்டு. இறைவன் நிகழ்த்தினால் அது திருவிளையாட்டு. அதற்கு விதிமுறைகள் எல்லாம் கிடையாது. கேள்வி கேட்டால், அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து நம்மை எரித்துவிடும் அபாயமும் உண்டு. ஆகவே கேள்வி கேட்காமல் இப்போது விளையாட்டை மட்டும் பார்ப்போம்.

கட்டணம் எதுவும் கிடையாது. செலவும் இல்லை. ஆகவே இணையத்தில் இலவசமாக மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியோடு இதையும் பார்த்து வைப்போம்.

உமையவள் தன்னை மறந்து இறையனாரின் கண்களைப் பொத்தினார். கண்ணாம்பூச்சி விளையாட்டில் நாம் செய்வதைப்போல தேவியார் இறைவனின் கண்களைத் தன் திருக்கரங்களால் மூடினார். ஒரு நொடிதான் மூடினார். அந்த ஷணத்தில் உலக இயக்கம் நின்று விட்டது. தவறை உணர்ந்த தேவி மன்னிப்புக் கோர இறையனார் வருத்தம் மேலிடச் சொன்னார்:

“என் கண்களை மூடி இந்த பிரபஞ்சத்தை இருளடையச் செய்து விட்டாய். என் கரத்தில் இருக்கும் ஜோதியில் நான் மறையப் போகிறேன்.
நீ பசுவாக உருவெடுத்து அலைந்து திரிந்து, அந்த ஜோதி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து என்னை வந்து சேர்க!” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

பசுவாக மாறிய உமையவள், தன் சகோதரன் திருமாலின் உதவியோடு அந்த ஜோதியைத் தேடி அலைய நேரிட்டது. பூமி எங்கும் வலம் வந்தார். ஒரு திறமையான தொலைகாட்சி இயக்குனர் என்றால் அந்த அலைச்சலை 100 எஃபிசோடுகளாக்கி நம்மைப் பரவசப் படுத்தியிருப்பார், ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் நடக்கவில்லை.

அம்மையின் அலைச்சலைக் கண்டு மனம் கனிந்த சிவன் ஒரு அஸ்த நட்சத்திர நன்னாளில் தன்னுடைய ஜோதியைக் காட்சியாக்கி அருளினார்.
உமையவளும் மனம் மகிழ்ந்து அந்த ஜோதியில் ஐக்கியமானார். ஐக்கியமாதல் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் கேட்கலாம். லால்குடிக்காரர் விரிவாகப் பதில் சொல்வார்.

உமையவளுக்கு, சிவனார் கிருபை (கருணை) செய்த இடம் கோமல் என்ற ஸ்தலம். அந்த ஸ்தலத்தில், அதாவது அந்த இடத்தில் சிவனாருக்காகக் கோவில் எழுப்பப்பெற்றது. சிவனாருக்கு கிருபா குபரேஸ்வரர் என்னும் பெயரும் சூட்டப்பெற்றது. அம்மைக்கு அன்னபூரணி என்னும் பெயரும் சூட்டப்பெற்றது. இதுதான் அக்கோவிலின் தல வரலாறு.

வரலாற்றை எல்லாம் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். அதற்கெல்லாம் ஜோல்னாபை ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்
---------------------------------------------------------------------------------------------------
சந்திரனுக்குரிய மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான ரோகினியைப் பற்றி முன் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்த நட்சத்திரம் அஸ்தம் (Hastham) தசாபுத்திப் பலன்கள் ரோகினிக்கு உள்ளதைப் போலவே இம்மி பிசகாமல் இதற்கும் உண்டு.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் அலங்காரப் பிரியர்கள். கற்பதில் ஆர்வம் உடையவர்கள். தாமாக வலியச் சென்று பிறருடன் பழகுபவர்கள்.
இரசிகத்தன்மை மிகுந்தவர்கள். அகட விகடமாகப் பேசும் தன்மை உடையவர்கள். தங்கள் தாயின் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள்.

Those born in the star Hasta are stable bodied, bear excellent character and warriors. They are givers, independent, famous, interested in the worshiping of god. They are learned, handsome, wealthy, daring, helpful to others and all knowledgeable. interested in music, happy with their relatives and friends, respected by kings (rulers)
-----------------------------------------------------------------------------------------------


அஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் கோமல் என்னும் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோமல் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில் குத்தாலம் என்னும் சிற்றூரில் இருந்து பிரியும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.
குலுக்கல் வண்டி வசதியும் உண்டு (அதாங்க நம்ம ஆட்டோ ரிக்சா)

கோவிலின் பெயர்: அருள்மிகு கிரிபா குபரேஸ்வரர் ஆலயம்
மூலவரின் திருப்பெயர்: கிரிபா குபரேஸ்வரர்
அம்மையின் பெயர்: அன்னபூரணி
தலவிருட்சம்: வில்வ மரம்
காலம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்
உங்களின் தரிசனத்திற்காக கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணிவரை. அதுபோல மாலையில் 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் என்பது சிறப்பு!.
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் கோவில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்!

கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடக்கூடிய திறமையான அன்பர்களுக்காக கோவிலின் முழு முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். வெளி நாட்டில் இருப்பவர்களும், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் தங்கள் ஜென்ம நட்சத்திரத தினத்தன்று, தங்களால் முடிந்த சிறு தொகையைக் கோவிலுக்கு அனுப்பி இறைவனுக்கு அர்ச்சனை, ஆபிஷேகம், ஆராதனை ஆகியவற்றை செய்யலாம். அவர்களுக்காவும்தான் முழு முகவரியைக் கொடுத்துள்ளேன்,

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்
கோமல்-609 805
குத்தாலம் தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்     
தொலைபேசி எண்: +91 95002 84866    


அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் செல்லலாம். திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் அதிக அளவில்  இங்கேவந்து பிரார்த்தனை செய்கிறார்கள். அதையும் மனதில் கொள்க

கிருபா குபரேஸ்வரர் மன்னிக்கும் குணமுடையவர். சித்தர்களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை வணங்க வருவதாக இன்றும் நம்பப்படுகிறது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிரச்சினைகள் தீர இத்தலத்திற்குச் சென்று அப்பனையும் அம்மையையும் வழிபட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும்,

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.12.11

Astrology உள்ளம் கவர் கள்வனின் நட்சத்திரம்!



Astrology உள்ளம் கவர் கள்வனின் நட்சத்திரம்!

என் நண்பர் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டுத் (Boston, USA) திரும்பியவர் சொன்னார்:

“என் மகள் மிகவும் அவதிப்படுகிறாள்”

“ஏன், என்ன பிரச்சினை?”

“பிரச்சினை எல்லாம் அவளுடைய நான்கு வயது மகனைவைத்துத்தான். பயல் படுசுட்டி. அசாத்தியக் குறும்பு. தாங்கமுடியாத குறும்பு. எதை எப்போது கொட்டி மொழுகுவான் என்று தெரியாது. மொத்தத்தில் படு துஷ்டன்!”

நான் இடை மறித்துக் கேட்டேன்: “பையன் ரோஹிணி நட்சத்திரமா?”

தூக்கி வாரிப்போட்டது போல் ஆகிவிட்டது அவருக்கு, ஆதங்கத்துடன் கேட்டார், “எப்படிக் கரெக்டாகச் சொல்கிறீர்கள்?”

“அந்த நட்சத்திரக்காரர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். மாயக் கண்ணன், வெண்ணெய் திருடிக் கள்ளன் - உள்ளம் கவர் கள்வன்
கண்ணனின் நட்சத்திரம் அது!”

“கடைசிவரை அப்படித்தான் இருப்பார்களா?”

“பதினான்கு அல்லது பதினெட்டுவயதுவரை அப்படித்தான் இருப்பார்கள். அதற்குப்பிறகு சூப்பராக மாறிவிடுவார்கள்”

“ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள்” 

“ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பொதுவாக அனைவரும் விரும்புகின்ற தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஊர் சுற்றிகள். இறை
நம்பிக்கை இருக்கும். எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருக்கும்.”

“அவ்வளவுதானா?”

“இன்னும் நிறைய இருக்கிறது. 
Rohini nakshatra is the birth nakshatra of Lord Krishna. Those born in the star Rohini are experts, well-behaved, handsome, good speakers and poets. They are stable minded, respected  and interested in lovemaking. They are of sweet-speech, intelligent, capable and bright. They are long-lived and perform accepted jobs, religious, truthful and help 
those who have helped them. Kings respect them.They respect gods They are able servants of their lords and determined. They are endowed with good looking and wide forehead, handsome, independent, loved by their children, experts, wealthy with respect 
to corns and money, have desire to wear new clothes,suffer from eye diseases and little feared”

“வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் இல்லாமல் இருப்பார்களா?”

“அதெப்படி? இரவு பகலைப் போல இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எந்த நட்சத்திரமும் விதிவிலக்கல்ல! ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு துவக்க திசை சந்திர திசை. அது சந்திரனின் நட்சத்திரம். ஆகவே  ஸ்டார்ட்டிங் திசை சந்திர திசை. அதில் கர்ப்பச்செல் இருப்பு எத்தனை ஆண்டுகள் உள்ளதோ அத்தனை ஆண்டுகளுடன் அடுத்து வரும்  செவ்வாய் மகாதிசையின் ஏழு ஆண்டு களையும் கூட்டிக்கொள்ளூங்கள் ப்ளஸ் அதற்கு அடுத்துவரும்
ராகுதிசையின் சுயபுத்திக்காலமான 2 ஆண்டுகள் 8 மாதங்கள்
12 நாட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அதுவரை நன்றாக
இருப்பார்கள். அதற்குப்பிறகு சுமார் 15 ஆண்டு காலம்  கஷ்டம்தான்.
அது ஒருவருடைய இளமைக்காலம். அதாவது 15 வயது முதல்
30 வயது வரை அல்லது 20 வயது முதல் 35 வயதுவரைஉள்ளகாலம்.
அதில் அவர்கள் பல முட்டுக்கட்டைகளை அவர்கள் சந்திக்க
வேண்டியதாக இருக்கும்”

“அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?”
   
“இருக்கிறது. ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கான திருக்கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ளது. அதன் பெயர் அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில். அந்தக் கோவிலுக்கு தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று சென்று அங்கே உறையும் பெருமாளை மனம் உருக  வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரம்”
---------------------------------------------------------------------------------------
அக்கோவிலைப் பற்றிய மேலதிகத்தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணிவரை; மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணிவரை!
இங்கே உறைந்திருக்கும் இறையனாரின் பெயர் பாண்டவ தூதர்
அம்மைகளின் பெயர்கள்: சத்யபாமா, ருக்மணி
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதணக் கோவில்!
ஆழ்வார்கள் பலரின் பாடல் பெற்ற திருத்தலம் இது.
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, மார்கழித் திங்களில் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகிய காலங்கள் இக்கோவிலின் திருவிழாக்காலமாகும்

கிருஷ்ண பகவான் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். அருள்பாலிக்கின்றார்.

வேறு எந்த வைணவத் தலங்களிலும் காணக்கிடைக்காத சிறப்பம்சம் இது!     

நீர் மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடும் திறமை வாய்ந்த அன்பர்களுக்காக இத்திருக்கோவிலின் முழு முகவரியை அடுத்துக்
கொடுத்துள்ளேன்.
  
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்,
திருப்பாடகம்,
எண். 28, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு,
காஞ்சிபுரம் - 631 502.

பரந்தாமன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோகசக்திகளைக் கொண்டு அருளுகின்றார். ஆகவே இங்கே அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களுக்கு மிகுந்த நன்மைகள் உண்டாகும். எல்லாம் நம்பிக்கையின் அடைப்படையில்தான் நடக்கின்றது. நம்பிக்கையோடு வழிபடுங்கள். வக்கிரமான கேள்விகளைத் தவிர்க்கவும். புதன்கிழமைகள், சனிக்கிழமைகள், ரோகிணி நட்சத்திரநாட்கள், அஷ்டமி திதிகள், எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது நல்லது.

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக செயல்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து
தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். அதனால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப் படுகின்றார்.  பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள  கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப்பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை  கொண்டு அருளுகின்றார்.  இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி  என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

ரோகிணி நட்சத்திர தேவி, இத்தலத்தில் உறையும் பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாளாம். சந்திரன் தனது 27 நட்சத்திர
தேவியர்களில் முதலில் ஞானசக்தியைக் கொண்ட ரோகிணியையும், அக்னி சக்தியைக் கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே மற்ற
நட்சத்திர தேவிகளையும் மணந்தாராம்.

(அக்காலத்தில் பலதார மணத் தடுப்புச் சட்டம் எல்லாம் இல்லை என்று தெரிகிறது. பல பெண்களை மணந்து கொள்வது தவறில்லை என்றும்
தெரிகிறது. அத்துடன் அக்காலத்துப் பெண்களும் தங்கள் கணவனை
முட்டிக்கு முட்டி தட்டி எடுக்கும் வழிமுறைகளை அறியாதவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது. மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டு காலத்திற்குள் ஏற்பட்டவைதான்
அதையும் மனதில் கொள்க!)

ரோகிணி தேவியார் தனக்கு ஞானசக்தியைக் கொடுத்த பெருமாளை அருவ வடிவில் தினமும் வந்து வணங்குவதாக ஒரு நம்பிக்கை  உள்ளது.அதற்கு ஏதாவது காணொளி (Video) சான்று உள்ளதா என்று அசட்டுத் தனமாகக்
கேட்டுக் கொண்டிருக்காமல், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
புதன், சனிக் கிழமை, அஷ்டமி திதி, மற்றும் 8ஆம் தேதிகளில்
இத்தலத்திற்கு வந்து இங்கே உறையும் பெருமாளை  வழிபடுவது
நன்மை பயக்கும்!

பாண்டவர்கள் கவுரவர்களிடம் தங்கள் நாட்டை இழந்தார்கள். அட்லீஸ்ட் ஆளுக்கொரு வீடுகளையாவது கேட்டுப்பெற விரும்பினார்கள். அவர்களின் பொருட்டு பகவான் கிருஷ்ணர் துரியோதனனிடம் தூது சென்றார், அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை  போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரை சூப்பர் சுப்பராயன் குரூப்பைப் போன்ற பைட்டர்கள் மறைந்திருந்து தாக்கினார்கள். தாக்கியவர்களை துவம்சம் செய்ததுடன் தந்து விஸ்வரூப  தரிசனத்தையும் காட்டினார் பகவான். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூதப் பெருமாள் என்று அழைப்பார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிகொடுப்பது நீங்கள் வேறு எங்கும் காண முடியாத  காட்சியாகும்.

பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பிறகு, ஜனமேஜயர் என்ற மன்னன், வைசம்பாயனர் என்னும் முனிவரிடம் பாரதக்கதையை முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஸ்ரீகிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும்  தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழியை அம்முனிவரிடம் கேட்க, அவரின் அறிவுரையின்படி காஞ்சிபுரம் வந்து இத்திருக்கோவிலில் தவம் செய்து பெருமாளை வணங்க, பெருமாளும் அவருக்காக ஒருமுறை விஸ்வரூப தரிசனம் காட்டி அருள்பாலித்தார்.

Janamejaya was a Kuru king. He was the son of Parikshit and Madravati. He was the grandson of Abhimanyu and the great - grandson of  Arjuna, the valiant warrior hero of the Mahābhārata. He was ascended to the Kuru throne following the death of his father. His significance  comes as the listener of the first narration of the Mahābhārata, narrated by Vaishampayana, pupil of Vyasa. மேலும் படிக்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைக் கிளிக்கிப் படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Janamejaya
--------------------------------------------------------------------  
ரோகிணி நட்சத்திரக்காரர்களே உங்களுக்கான கோவில் இது. உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள், க‌ஷ்டங்கள் நீங்க இத்தலத்திற்கு ஒருமுறை
சென்று அங்கே உறையும் பெருமாளை மனமுருக வழிபடுட்டுவிட்டு வாருங்கள்! பிறகு நடப்பதைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

8.12.11

Astrology பிரம்மனின் நினைப்பு நமக்கு எப்போது வரும்?

நாகலிங்கப் பூ - சிவபூஜைக்குரிய பூ 
Astrology பிரம்மனின் நினைப்பு நமக்கு எப்போது வரும்?

பிரம்மனின் நினைப்பு நமக்கு எப்போது வரும்? ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது நம்மில் பலருக்கும் வரும்!  “பெண்ணுக்குப் பெண்ணே பேராசைகொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று ஒரு அழகான பெண்ணைக் கவியரசர் கண்ணதாசன் தனது பாடல்  வரிகளால் வர்ணிப்பாரே - அந்தமாதிரி அழகான பெண்ணைப் பார்க்கும்போது நமக்கு பிரம்மனின் நினைப்பு வரும்.

வராவிட்டால் நீங்கள் பணம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ள மனிதர். அல்லது உரிமம் காலியாகி வீட்டில் இருக்கும் மனிதர்:-)))

அப்படிப்பட்ட பிரம்மனுக்கு ஒரு முறை தலைக்கனம் வந்துவிட்டது. வரலாமா? வந்துவிட்டது. சிவபெருமானைவிடத் தானே உயர்ந்தவர் என்று கர்வம் வந்துவிட்டது. படைக்கும் தொழிலை நாம்தானே செய்கிறோம் என்று மப்பும் மந்தரமாக இருந்தார். விடுவாரா சிவன்? பிரம்மாவைத் தட்டிவைக்க வேண்டும் என்று அவருடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்துவிட்டாராம். அதற்குப் பிறகுதான் பிரம்மா நான்முகரானாராம்

சிவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளான பிரம்மா, பல இடங்களில் சிவபூஜை செய்து, அதற்கு நிவர்த்தி செய்தாராம். அவ்வாறு பூஜித்த இடங்களில் ‘கீழப்பூங்குடி’ என்ற ஸ்தலமும் ஒன்று. இங்கே உறைந்திருக்கும் சிவனார் பிரம்மனுக்கு அருளியதால், பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பெறுகின்றார். காலம் காலமாக அப்படித்தான் அழைக்கப்பெறுகின்றார்.

இது புராணக்கதை. இதையெல்லாம் நம்ப வேண்டும். அல்லது ஒதுங்கிவிட வேண்டும். இரண்டையும் செய்யாமல் ஆராயத்துவங்கினால், அரசு மருத்துவமனையில் சேர்ந்து நீங்கள் சிகிச்சை செய்துகொள்ள வேண்டி நிலை ஏற்படும்:-)))))
--------------------------------------------------------------------------------------------------
இன்று பெருமை வாய்ந்த அத்திருக்கோவிலைப் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்!

ஏன் பார்க்க வேண்டும்?

நட்சத்திரக் கோவில்கள் வரிசையில், முதலில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய கோவிலைப் பார்த்தோம். அடுத்து உத்திர நட்சத்திரத்திற்கு உரிய கோவிலைப் பார்த்தோம். இரண்டுமே சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். அதாவது சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரங்கள். ஒரு கிரகத்தின் ஆதிக்கத்தில் 3 நட்சத்திரங்கள் இருக்கும். இரண்டைத்தானே பார்த்திருக்கிறோம். மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். அந்த நட்சத்திரத்திற்கான கோவில் இந்தக் கீழப்பூங்குடி ‘அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில்’. அதை இன்று பார்ப்போம்!

அங்கே உறையும் சிவனாரின் பெயர்: பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்)         
அம்பிகையின் பெயர்: பிரம்மவித்யாம்பிகை (மீனாட்சி)
தல விருட்சம்: கடம்ப மரம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.
இருக்கும் இடம்: கீழப்பூங்குடி கிராமம், சிவகங்கை மாவட்டம்          
கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்: சித்திரையில் திருக்கல்யாணம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், மார்கழி திருவாதிரை, கூடாரவல்லி நோன்பு, தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம்.    
நடராஜருக்குத் தனியாக சந்நதிஉள்ளது. அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடனமாடுவதற்குத் தயாரான நிலையில் அவர் இருப்பது, பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும். தவராமல் அதையும் பார்த்துவிட்டு வாருங்கள்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கோவிலுக்கு நூறு அல்லது இருநூறு என்று கட்டணம் செலுத்த விரும்புகிறவர்கள்    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் என்ற பெயருக்கே அனுப்பலாம். அஞ்சல் முகவரி: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- 630 552, சிவகங்கை மாவட்டம்.    

சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் பாதையில் பன்னிரெண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து வழியில் உள்ள ஒக்கூர் கிராமத்தின் அருகில் பிரியும் பாதையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் கீழப்பூங்குடியை அடையலாம். குலுக்கல் வண்டி..அதாங்க ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் வாடகைக் கார்கள் கிடைக்கும். பேருந்துகளும் உள்ளன.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் அழகான தோற்றத்தையும், உடல்பலத்தையும் உடையவர்கள். துணிச்சலான ஆசாமிகள். கலைகளில் விருப்பம் உடையவர்கள். பேச்சில் தேன் கலந்திருக்கும். எல்லாம் அந்த நட்சத்திரத்தின் மகிமை. அவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்க இந்தத் திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வரலாம். நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவுவதற்கும் மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தலத்தில் வழிபடலாம்
   
ஒருமுறை சென்று வாருங்கள். பலனைப் பெற்று வாருங்கள்

அன்புடன்
வாத்தியார்             

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

7.12.11

Astrology திருமணத்தடை நீங்க எங்கே மனுக்கொடுக்க வேண்டும்?


 Astrology  திருமணத்தடை நீங்க எங்கே மனுக்கொடுக்க வேண்டும்?

அந்தக் காலத்தில் பெண்ணிற்கு 18 வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தை செய்து வைத்துவிடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. படிப்பு, மேற்படிப்பு வேலை, பொருளாதார மேம்பாடு என்று பல காரணங்களால் பலருக்கும் திருமணம் தள்ளிக்கொண்டே போகின்றது    .

அதிலும் பெண்களுக்குத் தள்ளிக்கொண்டே போவது வருந்தற்குரியது. ஒரு பெண் 12 வயதில் பூப்படைகிறாள் என்றால், அவளுடைய வசந்தகாலம் 36 ஆண்டுகள். 48 வயதுவரை அவள் இனிமையான மணவாழ்விற்கு உகந்தவள். 18 வயதில் மணமுடித்தால் 30 ஆண்டுகாலம் அவளுடைய உரிமம் (License) செல்லத்தக்கதாக இருக்கும். 32 வயதில் மணம் முடித்தால் 20 ஆண்டு காலம் வீணாகக் கழிந்து அவளுடைய உரிமக் கணக்கில் 16 ஆண்டுகள் மட்டுமே பாக்கி இருக்கும்.

இந்தக் கணக்கை எல்லாம் யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

தங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவதிலும், வங்கி இருப்பை உயர்த்துவதிலும், சொந்த வீடு வாங்குவதிலும், வாகனம் வாங்குவதிலும், தினமும் சரவணபவனில் வடை, பொங்கல், நெய்ரோஸ்ட் என்று வெட்டுவதிலுமே எல்லோரும் குறியாக இருக்கிறார்கள். இரண்டொரு பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் மணவாழ்க்கை குறித்துக் கவலைப் பட்டாலும், பெண் அதற்கு இசைவதில்லை. சில இடங்களில் சொல்லமுடியாத தவிப்பில் பெண் இருந்தாலும், பெற்றோர் கண்களில் அது படுவதில்லை.

எது எப்படி இருந்தாலும். திருமணம் ஆக வேண்டிய சூழ்நிலையில் அல்லது விருப்பத்தில் இருப்பவர்கள், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் மாங்கல்யேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, அங்கே உறையும் நாதரின் தாள் பணிந்து மனுக் கொடுத்துவிட்டு வந்தால் திருமணம் உடனே கூடிவரும்.

அத்துடன் திரும்பும் வழியில் லால்குடிக்குச் சென்று, வாத்தியார் பெயரைச் சொன்னால். கே முத்துராமகிருஷ்ணர் வீட்டில் உங்களுக்கு அமுது படைத்து, கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். மோர்க்குழம்பு, வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி என்று வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டுப் பேருந்தைப் பிடிக்கலாம்.

திருமண கோரிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டுமா?

யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். குறிப்பாக உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம் அது. அந்த நட்சத்திரக்காரர் களுக்கான கோவில் அது! அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் என்பது அதன் பெயர்

எங்கே உள்ளது?

திருச்சி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அத்திருத்தலம்.

மூலவரின் பெயர்: மாங்கல்யேஸ்வரர். (சுயம்பு மூர்த்தி என்பது சிறப்பு)
அம்பிகையின் பெயர்: மங்களாம்பிகை
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்:     இடையாற்று மங்கலம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட புராதணக் கோவில்! பங்குனி உத்திரத்தில் கோவில் களை கட்டி திருவிழாக் கோலத்தில் இருக்கும்

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் உங்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
கோவிலின் அஞ்சல் முகவரி: அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம் - 621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
    
மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். பல ரிஷிகளின் திருமணத்தை அவர் முன்னின்று நடத்தியவர். தனது தவ வலிமையால் அவர் இன்றும் அக்கோவிலில் ஈசனின் தாள் பணிந்து அங்கேயே உறைகின்றார் என்று நம்பப்படுகின்றது. மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்துபவர். தவவலிமை மிக்கவர். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன என்பதை மனதில் கொள்க!          
    
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் இனிமையாகப் பழகுவார்கள். நன்றி மறவாதவர்கள். வாக்கு நாணயம் மிக்கவர்கள். இறை நம்பிக்கை மிக்கவர்கள். உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்

ஒருமுறை சென்று வாருங்கள். பலனைக் கண்டு வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

6.12.11

Astrology பெயரிலேயே ’கிக்’ உள்ள ஊர்!


Astrology பெயரிலேயே ’கிக்’ உள்ள ஊர்!

நட்சத்திரக் கோவில்கள் என்ற இந்தத் தொடரில் முதல் நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளேன். எம்பெருமான் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் அது!

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாம் இயற்கையாகவே முருகப்பெருமானின் அருளைப் பெற்றவர்கள்.

நட்சத்திர வரிசையில் இது மூன்றாவது நட்சத்திரம். கிரகங்களில் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு சூரிய திசைதான் முதல் திசை.

ஆக்கபூர்வமான வயதில் அதாவது 20ல் இருந்து 45 வயதிற்குள் இவர்களுக்கு ராகு மகா திசை வந்து படுத்தி எடுக்கும். அடிப்படை ஜாதகம் நன்றாக இருப்பவர்கள் மட்டும் அதிலிருந்து தப்பிக்கலாம். மற்றவர்கள் தப்பிக்க முடியாது. என்ன கஷ்டமென்றாலும் தாங்கிக்கொண்டு, கடந்து வர வேண்டியதிருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் மனக் குறைகள் நீங்கி மன அமைதிபெற தங்கள் நட்சத்திரதினத்தன்று, தங்கள் நட்சத்திரத்திற்கான கோவிலுக்குச் சென்று அங்கு உறைகின்ற சிவனாரை மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையோடு சென்று வாருங்கள். உங்கள் நட்சத்திரத்திற்கான கோவிலைப் பற்றி இன்று  பதிவிட்டுள்ளேன்
-------------------------------------------------------------------------------------
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உருவெடுத்து மேற்கு நோக்கி அருள் பாலிக்கும் முக்கிய ஸ்தலமான அருள்மிகு காத்ரா சுந்தரேஸ்வரர்
திருக்கோவில்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்கான கோவில்!

எங்கே இருக்கிறது அது?

மயிலாடுதுறையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. அக்கோவில். அக்கோவில் இருக்கும் ஊருக்கு
கஞ்சா நகரம் என்று பெயர்.

பெயரைப் பார்த்தவுடன் பெயரே ‘கிக்’காக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அங்கே உறையும் சிவனாரும் உங்களை ஈர்க்கும் வண்ணம் முறுக்கோடுதான் இருப்பார். அதாவது அவரும் ‘கிக்’ காகத்தான் இருப்பார்.

கஞ்சாச் செடிகள் எல்லாம் மலைப் பிரதேசங்களில்தான் விளையும். இந்த ஊருக்கும் அந்த செடிக்கும் சம்பந்தமில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் என்ற பெயருடைய நாயனார் அவதரித்து வாழ்ந்த ஊர்     இது. கஞ்சாற நாயனார் நகரம் என்ற பெயர் மருவி கஞ்சா நகரம் என்றாகிவிட்டது. வேறொன்றுமில்லை. கஞ்சா என்ற சொல்லிற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
முழு முகவரி: அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம் போஸ்ட்-609 304 தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

பத்மாசுரன் மற்றும் சிங்கமுகன் போன்ற அசுரர்களால் பாதிக்கப்பெற்ற முனிவர்களும், தேவர்களும் தங்களைக் காப்பாற்றி உதவும்படி அன்னை
உமையவளிடம் முறையிட்டனர். அவர்களது குறைபோக்க அன்னையும் சிவனிடம் மனுக்கொடுத்தார். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகத்துடன் தவமிருந்த நேரம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் வெளிவந்தன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் என்னும் பெயரை உடைய முருகப் பெருமான் அவதரித்தார்.

இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப் பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது.

காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. அதனால் இத்திருத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.

புராணங்கள் எல்லாம் உங்களின் பரிசோதனைகளுக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவற்றை ஆராய்ந்து கொண்டிருக்காமல், நம்பிக்கையோடு
படியுங்கள். அல்லது படிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை.

ஒருமுறை சென்றுவாருங்கள்! பலனைப் பெற்று வாருங்கள்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

5.12.11

Astrology உங்களுடைய கோவிலை உங்களுக்குத் தெரியுமா?

Astrology உங்களுடைய கோவிலை உங்களுக்குத் தெரியுமா?

உங்களுடைய கோவிலை உங்களுக்குத் தெரியுமா? - பகுதி 1

“என்ன சார்? முதலில் நான் இறை நம்பிக்கையே இல்லாத ஆசாமி! எனக்குக் கோவிலா? யார் கட்டினார்கள்? என் மாமனாரா?” என்று கேட்க நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்! இது உங்களுக்கான பதிவு அல்ல! மற்றவர்கள் தொடரவும்!

Everything is Eshwara! எல்லாமே ஈஸ்வரன் என்பார் தயானந்த சரஸ்வதி சுவாமிஜி அவர்கள்.

“You can not separate the creator from the creation. Both are one and the same" என்றும் சொல்வார் அவர்.

உலகில் படைக்கப்பெற்றவற்றில் இருந்து படைத்தவனைப் பிரிக்க முடியாது என்பார்.

பிரிக்க முடிந்தால், படைத்தவனுக்கு, அவன் படைத்தவற்றிற்கான மூலப் பொருட்கள் (Raw materials) எங்கே இருந்து கிடைத்தன என்று கேட்பான் அஞ்ஞானி.



ஒரு சின்ன தோட்டத்தில் மலர்கின்ற விதம் விதமான பூக்களுக்கு எங்கே இருந்து மூலப் பொருட்கள் கிடைக்கின்றன? நிறம் எங்கே இருந்து கிடைக்கிறதோ - வாசம் எங்கே இருந்து கிடைக்கிறதோ - அதுதான் அடிப்படை! அதுதான் இறைச் செயல். அதுதான் இறைவன்!

அதைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக ஒரு பாடலின் நடுவே இரண்டே வரிகளில் சொல்லிவிட்டுப் போனார்


                        "வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
                               சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்"


    “முழுப் பாடலையும் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்காக பாடல் வரிகளைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

அருணகியார் வேறு விதமாகச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

                  - அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...................................................................................
இதில் கரு என்ற சொல்லைக் கவனிக்கவும். கரு என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியுமல்லவா? தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளும் காலம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள்
முருகப்பெருமானும் அவ்ருடைய தீவிர பக்தர் அருணகிரியாரும்
----------------------------------------------------------
நீங்கள் இப்பூமியில் பிறக்கும்போது உங்களுக்குத் தேவையான அனைத்துமே பூமியில் தயாராக உள்ளன. சுவாசிக்கக் காற்று, வசிக்க இடம், அணைக்க ஒரு தாய், புசிக்கப் பால், சற்று வளர்ந்த பிறகு உண்ண உணவு (நவதானியங்கள், காய்கறிகள், பழங்கள், உங்களுக்குப் பால்வழங்கப் பசுக்கள்) என்று எல்லாமே தயாராக உள்ளன.

மனிதனால் உருவாக்கப்பெற்றது டாஸ்மாக் சரக்கு மட்டும்தான். ஆனால் அதற்குத் தேவையான அதன் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் முன்பாகவே பூமியில் கிடைக்கின்றன.

ஆனால் சரக்கடித்துவிட்டு, அவன் அதிகமாகச் சாடுவது, தனக்கு எல்லாம் கொடுத்த இறைவனைத்தான்

இறைவன் கருணையே வடிவானவர். அதையெல்லாம் அவர் கண்டு கொள்ள மாட்டார்.
--------------------------------------------------------------------
சரி, கதைத்தது போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

ஈஸ்வரன் எங்கும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். உங்கள் நெஞ்சிலும் இருக்கிறார். நீங்கள் விரும்பும் பெண்ணின் கண்களிலும் இருக்கிறார். ஆகவே அவரை எங்கே இருந்து வேண்டு மென்றாலும் வணங்கலாம்.

மேட்டர் அதுவல்ல!

நம்முடைய வீட்டில் வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, சாப்பிடும் கூடம், குளியல் அறை, கழிப்பறை என்று தனித்தனியாகக் கட்டி வைத்திருக்கிறோம். அல்லது பிரித்து வைத்திருக்கிறோம். நம் வீடுதானே என்பதற்காக எல்லா இடத்திலும் நின்று உச்சா போக முடியாது. அதற்கென்று உள்ள இடத்தில்தான் போக வேண்டும்.

இறைவனை வணங்குவதற்கு, மனதை ஒருமுகப் படுத்தி வணங்குவதற்காக நம் முன்னோர்கள் ஊருக்கு ஊர் ஏராளமான கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும், உங்களுக்கென்று ஒரு கோவில் இருக்கிறது. உங்களுக்கென்று சொந்த வீடு அல்லது குடக்கூலிக்குக் குடியிருக்கும் வீடு இருப்பதைப் போல உங்களுக்கென்று ஒரு கோவில் இருக்கிறது.

எதன் அடிப்படையில் அது இருக்கிறது.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அது இருக்கிறது.

ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம்

நட்சத்திரங்களின் அடிப்படையில் அவற்றை வரிசைப் படுத்தி எழுதினால், ஒரு சுவாரசியம் இருக்காது. முதலில் அஸ்விணி நட்சத்திரத்திற்கான கோவிலைப் பற்றி எழுதினால், அடுத்து உள்ள பரணி நட்சத்திரக்காரன் மட்டும் ஆர்வமாக இருப்பான் - நாளை நமது நட்சத்திரத்திற்காக கோவில் வரும் என்று.

திருவோண நட்சத்திரக்காரன் நமது நட்சத்திரம் 22ஆவது நட்சத்திரம். ஆகவே அடுத்துவரும் 20 நட்சத்திரங்களைப் பற்றிக் கவலையில்லாமல் இருப்போம் என்று சும்மா இருப்பான்.

ஆகவே வரிசைப்படி எழுதப்போவது இல்லை!

வாரம் இரண்டு அல்லது மூன்று நட்சத்திரங்களுக்கான கோவில்களை உங்களுக்கு அறிமுகப் படுத்த உள்ளேன். முதல் அறிமுகம் நாளை!

எந்த நட்சத்திரத்திற்கானது அது?

அது சஸ்பென்ஸ்...நாளைவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------
அந்தப் பாடலின் முழுமையான வரிகள்:

இறைவன்.. இறைவன்.. இறைவன்..
வருவான்.. வருவான்.. வருவான்..

இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

(இறைவன்)

வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

அன்பு என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு
பாசம் என்பது வீடு

(இறைவன்)

உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன்
கண்கள் எனும் வாசலை தந்து வைத்தவன்
கன்ணில் வரும் பாதையைக் காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான்

கண்கள் அவனை காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க
கைகள் அவனை வணங்க

(இறைவன்)


படம் : சாந்தி நிலையம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வனாதன்
--------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

11.11.11

Astrology: கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மேன்மைக்குரிய மருத்துவர்!

-------------------------------------------------------------------------------------
Astrology: கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மேன்மைக்குரிய மருத்துவர்!

ஆன்மீகம் cum ஜோதிடக் கட்டுரை

கிழக்குக் கடற்கரைச் சாலை என்றால் தெரியுமல்லவா? தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்!

East Coast Road (ECR) (Tamil: கிழக்கு கடற்கரை சாலை) is a two lane highway in Tamil Nadu, India, built along the coast of the Bay of  Bengal connecting Chennai to Cuddalore via Puducherry. Presently, the East Coast Road has been extended up to Thoothukudi via Chidambaram, Karaikal, Nagore, Nagapattinam, Thiruthuraipoondi, Muthupet, Adiram pattinam, Meemisal, Thondi, Ramnad. The total length of the road is 690 km from Chennai to Thoothukudi, but as of now work has almost completed till Ramnad, remaining 200 km work on pending.

அந்தப் பெருமை மிகும் கிழக்குக் கடற்கரைச் சாலையின் துவக்கத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஃபீஸ் கிடையாது. செலவில்லை. மருந்து விபூதிதான்! அவர் பெயர் அருள்மிகு மருந்தீஸ்வரர். அருள்மிகு என்று போட்டுவிட்டேன். ஆகவே அபத்தமான கேள்விகளுக்கெல்லாம்  இடமில்லை. மீறி அபத்தமாகக் கேட்க விரும்புவர்கள் இடத்தைக் காலி செய்யவும். உங்களுக்கான பதிவு அல்ல இது. இறை நம்பிக்கை  உள்ளவர்களுக்கான பதிவு இது.

மருந்தீஸ்வரர் கோவில் என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? திருவான் மியூர் என்றால் அனைவருக்கும் தெரியும். சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் - தூரத்தில் இருக்கிறது திருவான்மியூர். வங்கக் கடலை ஒட்டியிருக்கும் திருவான்மியூரில் உள்ள மிகப் பெரிய சிவாலயம் மருந்தீஸ்வரர் கோவில். நோய்களைத் தீர்ப்பதற்கென்றே  சிவனார் அவதாரம் எடுத்த கோவில் இது. எந்த நோயையும் போக்கக்கூடிய வலிமை உடையவர் இங்கே உறையும் சிவபெருமான்.அகத்திய
முனிவர் மருந்துகளைப் பற்றியும் மூலிகைகளைப் பற்றியும் சிவனிடம் பாடம் எடுத்துக்கொண்ட ஸ்தலம் இது. அத்துடன் மட்டுமா?  இராமயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கே வந்து சிவனை வழிபெற்றுச் சென்றதாக வரலாறு கூறுகிறது. (அதற்குச் சான்று கேட்டு  என்னை யாரும் பிறாண்ட வேண்டாம். விக்கி மகராஜாவின் தகவல் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்)

வால்மீகி வந்து சென்றதால், திருவால்மீகியூர் என்று பெயர் பெற்ற இவ்வூர் காலப் போக்கில் சொல்வழக்கில் மருவி திருவான்மியூர் என்றாகியதாம்.

தீராத நோயால் அல்லது நோய்களால் வருந்துபவர்கள் ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து வந்தால்
நோய்கள் தீர்ந்து முற்றிலும் குணமடைவீர்கள். நம்பிக்கைதான் இதில் முக்கியம். வருமுன் காக்க நினைப்பவர்களும் சென்று வரலாம்.

வரும் முன் எப்படித் தெரியும்? வரவிருக்கும் அல்லது எதிர்கொள்ள விருக்கும் ஆறாம் இடத்து நாதனின் திசைதான் அதற்கு அடையாளம்!

1,200 ஆண்டுகளுக்கு முன்பு (ஏழாம் நூற்றாண்டில்) சோழர்கள் காலத்தில் கட்டப்பெற்ற இத்திருக்கோவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் போன்ற மகான்களால் பாடப் பெற்ற ஸ்தலம் இது.

நாம் பெருமையாக நினைக்கும் சென்னையின் வரலாறு வெறும் 400 ஆண்டுகள்தான். கிழக்கிந்தியக் கம்பெனிக்காரன் வந்து சென்னப்ப
நாயக்கரின் பிரம்மாண்டமான நிலங்களை வளைத்துப்போட்ட பகுதிதான் இன்றைய சென்னை. ஆனால் இக்கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனும்போது அதன் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், பெருமையையும் நீங்கள் அனைவரும் உணரவேண்டும்!

“சார், சென்றவாரம் வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி எழுதினீர்கள். இந்த வாரம் மருந்தீஸ்வரர் கோவிலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். இரண்டில்
எதற்குச் செல்வது நல்லது?”

“அது உங்கள் வங்கி இருப்பைப் பொருத்தது. இருப்பு அதிகமாக இருந்தால் இரண்டு திருத்தலங்களுக்கும் சென்று வரலாம். இல்லையென்றால்
நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வரலாம். அதற்கும் வழியில்லை என்றால் சிவன் ஒன்றும் கோவித்துக் கொள்ளமாட்டார். இருக்கும் வீட்டுத் திண்ணையில் இருந்தே அவரை வணங்கி மகிழலாம். திண்ணை இல்லாத வீடு. அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் வீட்டுப் பால்கனியில் இருந்தே வழிபடலாம். எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! அதனால்தான் அவருக்கு Almighty என்று பெயர். இல்லை என்றால் வெறும் Mighty ஆகிப் போயிருப்பார்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

9.11.11

Astrology ஜோல்னாபை ஆசாமியா நீங்கள்?

-----------------------------------------------------------------------------------

Astrology  ஜோல்னாபை ஆசாமியா நீங்கள்?

ஜோல்னா பை ஆசாமியா நீங்கள்? ஆமாவா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பக்கம் இது!
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பகுதி இரண்டு!

“சார், அஷ்டகவர்க்கம் எப்படிப் போடுவது என்று சொல்லுங்கள்!”

“நீங்கள் எதற்காக அதைக் கணக்கிட்டுப் போட வேண்டும்? உங்கள் ஜாதகத்திற்கு நீங்களே தரையில் உட்கார்ந்து, கையால் போடுவது என்றால் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு கிரகத்திற்கு எட்டு அட்டவணை x  7 கிரகங்கள் = மொத்தம் 56 அட்டவணைகள் போட வேண்டும். தவறில்லாமல் கவனத்துடன் போட வேண்டும். பிற்கு அவற்றைக் கூட்டி மொத்த அட்டவணை ஒன்றையும் போட வேண்டும். அந்தச் சிரமம் இல்லாமல் கணினி ஜாதகத்தில் அது எல்லாம் இருக்கும். உங்களுக்கு நொடியில் கிடைத்துவிடும். ஆகவே அதைச் செய்யுங்கள்”

“சரி, கணினியில் எப்படிப்போடுவது?”

“ஜகந்நாதா ஹோரா” என்னும் மென்பொருளை ஒரு புண்ணியவான் இலவசமாக இணைத்தில் தருகின்றார். நமக்குத்தான் (தமிழர்களுக்கு) இலவசம் என்றால் மண், பெண், பொன் ஆகிய மூன்றையும்விட அதிகமாகப் பிடிக்குமே! அதைத்தரவிறக்கம் செய்து, உள்ளீடு செய்துகொள்ளுங்கள் (That is download the software from the net and install it in your computer)

அதற்கான சுட்டி:


அதில் மெனு பாரில் Data என்னும் மெனு இருக்கும் அதிக் கிளிக்கினால் கீழே உள்ளது போன்ற சிறு பெட்டிவரும். அதில் உங்களுடைய பிறப்பு விவரங் களைக் கொடுத்து ஓக்கே பட்டனை அமுக்குங்கள்.





அவ்வளவுதான். முகப்பில் உங்கள் ஜாதகத்தின் முழுவிவரம் இருக்கும். அதை ஒரு பெயர் கொடுத்து உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் அஷ்டகவர்க்கம் இருக்கும்

அஷ்டகவர்க்கம் தனியாகப் பெரிதாக பிரதி எடுக்கும்படி வேண்டுமென்றால், மீண்டும் மெனு பாரைப் பாருங்கள். அதில் strength என்னும் option இருக்கும். அதைக் க்ளிக்கி வரும் விண்டோவில் கீழ் பகுதியில் உள்ள ashtkavarga என்னும் option கிளிக்கினால் உங்களுக்கு முழுக் கட்டங்களும், அதாவது சர்வாஷ்டக வர்க்கம் + கிரகங்களின் சுயவர்க்கக் கட்டங்கள் அனைத்தும் கீழே இருப்பதைப் போல கிடைக்கும்.

 -----------------------------------------------------------------------------------
விளக்கம் போதுமா?

விரல் சூப்பும் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்று சொல்லிக் கொடுத்துள்ளேன். இப்போதும் புரியவில்லை என்றால், இரண்டுதான் வழி உள்ளது. ஒன்று  உங்கள் தோழியிடம் கொடுத்து இந்தப் பக்கத்தைப் படிக்கச் சொல்லுங்கள். அவர் உதவுவார். தோழி இல்லை ஜோல்னா பை ஆசாமி என்றால், எங்காவது சென்ட்டரில் ரூ.25 ஐக் கொடுத்து உங்கள் ஜாதகத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------
   “சார்,  ஹி.ஹி..எங்கள் லெவலே வேறு. ஒரு அறிவிற்காக (knowledge) எப்படிப்போடுவது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஆகவே அதைச் சொல்லித்தாருங்கள்”

   “ஆகா, அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தும்போது, அதுதான் முதல் பாடம். பொறுத்திருங்கள்”
------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

------------------------------------
வாழ்க வளமுடன்!