மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.21

எது உங்கள் கையில்?



எது உங்கள் கையில்?

பசியை கொடுத்தவனே உணவையும் கொடுப்பான் வலியை கொடுத்தவனே மீள வழியை கொடுப்பான். 

தேடல் மட்டுமே உன் கையில்.

இன்றைய சிந்தனை 
.................................................................

"தேடல் இல்லா வாழ்க்கை...!"
..........................................................

உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

*"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலை போல திசையறியாது மூழ்கிப் போகும்"*_

படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!, 

அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக் குறிதான் நம் முன் நிற்கும்...

கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடிவரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்...

பெரும்பாலானோர் கற்றுகொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை...

வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசைதான்..

அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை, பெரும்பாலானோருக்கு அது பலமுறை தோல்வியைதான் பரிசளித்திருக்கிறது...

கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதைவிட அபாயகரமாக இருக்கும்.. இரண்டு உலகங்கள்,  அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகதான் இருக்கும்...

*"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லி கொடுக்காத பாடத்தை, ஒரு வருட தேடல் கற்று கொடுத்து விடும்...!*_

முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றிபெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது...

உங்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று சாதித்துக் காட்டவேண்டும். 

தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்த தேடல் மாறிக்கொண்டே  இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்...

*ஆம் நண்பர்களே...!*

⚫ *தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள். வெற்றி உங்களை தழுவும் வரை தேடிக்கொண்டே இருங்கள். வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்...!*
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.4.21

நகைச்சுவை நடிகரும் ஓவியருமான பாண்டு!!!



நகைச்சுவை நடிகரும் ஓவியருமான பாண்டு!!!

அதிமுககொடி இரட்டை இலை உருவான விதம்*

 *பாண்டு இவர் சினிமா நடிகர்மட்டுமல்ல,சிறந்த ஓவியரும் கூட.*

*தமிழ்நாட்டில் ஓவியத் துறையில் phd பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான்.*

*தமிழக அரசின் சுற்றுலாத் துறை* *சின்னத்தை வரைந்து கொடுத்தவர்* *இவர் தான்.*

*நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.*

*அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான்.*

 *இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்த அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார்  எம்.ஜி.ஆர்.(MGR)   கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.*

*அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.*

*இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே.*

 *சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.*

*அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.*

*அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.*

*தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.*
=======================================
Pandu is a Born: (February 19, 1947) Tamil film actor who has appeared in many comedy roles. His brother Idichapuli Selvaraj had also previously appeared in films as a comedian.Native Place Komarapalayam

Career
After finishing his schooling, Pandu entered the College of Arts and Crafts in Chennai and nurtured an interest in creative art. Pandu made his acting debut in Karaiyellam Shenbagapoo joining his brother Idichapuli Selvaraj who had appeared in several films a comedian. He played a supporting role in Agathiyan's Kadhal Kottai portraying Ramasamy who accompanies Ajith Kumar in Rajasthan.

In 2013, he starred in Vellachi, which featured his son Pintu Pandu in a leading role. He designed Tamil Nadu Tourism Logo Umbrella and got prize and appreciation. He designed the Two Leaves Party Logo under the instruction and supervision of AIADMK founder leader MGR

Away from films, in 1975 he started a brass and aluminium business in Chennai called Prapanj Unlimited. He runs it as a family business, with son Prabhu Panju in charge. In 2014, he held an art exhibition alongside another son Panju Pandu.
------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.21

நரிப்பயிறைத் தெரியுமா?


நரிப்பயிறைத் தெரியுமா?

நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள நரிப்பயிறு பற்றிய பதிவு

 நரிப்பயிறு என்று பெயர் கேட்டதுமே நிறைய பேருக்கு எப்படி இருக்கும் என்ற ஆவலும் இதென்ன புதுசா ஒரு பயிறு என்று கேட்பவர்களுக்கும் நாம் அடிக்கடி இதனை சாப்பிட்டு உள்ளோம் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

கடைகளில் விற்பனை 
செய்யப்படும் பாம்பே மிக்சரில் 
பச்சைநிறத்தில் பச்சைப்பயறு போல அளவில் சிறியதாக இருக்கும் 
பயிறுதான் நரிப்பயிறு . 

இதனை ஹிந்தியில் மட்கி என்பார்கள்.

நரிப்பயறு ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

நரிப்பயறு என்பது வறட்சியை தாங்கி வளரும் செடி அதேசமயம் இந்த செடிக்கு பூச்சிக்கொல்லிகள் தெளித்து வளர்க்க வேண்டாம். 

இந்த செடிக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி நிறையவே உண்டு.

ஆகவே இயற்கையான முறையில் வளர்ந்த இந்த நரிப்பயிறு உடலுக்கு மிகவும் நல்லது.

நரிப்பயறில் நார்ச்சத்து , புரதம் , கால்சியம் , பாஸ்பரஸ் , மக்னீசியம் , இரும்புச்சத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

1 கப் நரிப்பயறு 282 கலோரி மதிப்பு உடையது. 

கொழுப்பு அறவே இல்லாத ஒரு பயறு. 40.8 கிராம் அளவுக்கு தான் கார்போஹைட்ரேட் உள்ளது.

இதனை முளைக்க வைத்து உண்ணும் போது மிகவும் நல்லது.

நரிப்பயறை முளைக்க வைத்து சாலட்டாக அல்லது பருப்பு மசியல் போல அல்லது பயறு துவையல் என பல்வேறு விதமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நரிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சோறு ஒரு சிறிய கப் உடன் நரிப்பயிறு மசியல் என உண்ணும் போது வயிறு நிரம்பி விடும்.

அதேசமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

நரிப்பயிறு இப்போது சர்வசாதாரணமாக பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் மளிகை கடைகளிலும் 
நாட்டு மருந்து கடைகளிலும்,
கிராமப்புற பகுதிகளிலும் கிடைக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நரிப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நரிப்பயிறு சர்க்கரை நோயை மட்டும் அல்ல இதயக்கோளாறுகளையும் வரவிடாது.

நெஞ்சில் படிந்துள்ள அதிகப்படியான சளிக் கட்டை 
நீக்கி கபத்தைக் குறைக்கும் அற்புதமான உணவு:*நரிப்பயிறு கஞ்சி:*

*தேவையான பொருட்கள்:*

*நரிப் பயிறு - 150 கிராம்,*
*பால் - 150 மி.லி*
*கற்கண்டு - தேவையான அளவு*

*செய்முறை:*

*முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.*

*ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.*

*அதில் வறுத்து உடைத்துள்ள நரிப்பயிறை போட்டு நன்றாக கொதிக்க வைத்து  காய்ச்சவும்.*

*நன்கு காய்ச்சியவுடன் அதில் பால் மற்றும் கற்கண்டை நன்கு தூளாக்கி  இரண்டையும் நன்கு கலக்கி  ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.*

*பயன்கள்:*

*இந்தக் கஞ்சியை நெஞ்சில் அதிக கபம்(சளி) உடையவர்கள்  தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள உன்னதமான கஞ்சி.*

நெஞ்சில் உள்ள சளிக்கட்டு குறைய:

*வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.*

சுவை மிக்க இனிப்பு நரிப்பயிறு உருண்டை:

நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அறைத்து கொள்ளவும். இதுகூட  நன்கு அறைத்து தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை மாவை சேர்த்து கொள்ளவும்

நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்புச் சக்கரைல பாகு காய்ச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்து கொள்ளவும்.

நரிப்பயிறு,பொட்டுக்கடல மாவு கலவையில் அந்த சர்க்கரைப் பாகை சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, ஒரு கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். 
மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்புறம்
கையில தேங்கா எண்ணயத் தொட்டு கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க ஆரம்பிக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான இனிப்பு நரிப்பயிறு உருண்டைகள்  தயாராகி விட்டது.

இது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்பிட்டவுங்களுக்கு மட்டும்தான் தெரியும்

இந்த நரிப்பயிறு இனிப்பு உருண்டைகளை 2 மாதம் வரைக்கும் வச்சு சாப்பிடலாம்,கெட்டு போகாத தன்மை உடையது.

நரிப்பயிறு படம் மேலே!👇👇💚♥️
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.21

மூன்று வகை மனிதர்கள்!


மூன்று வகை மனிதர்கள்!
.................................................

உலகில் மூவகை நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய பொறுப்பைக்கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒருவகை, அவர்கள் புழுவை விடக் கேவலமானவர்கள்...

மற்றவர்களைப் பற்றி கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக்கொள்பவர் அடுத்த வகை, இவர் தன்நலவாதி. மிருகத்தைப் போன்றவர்...

மிருகங்கள் பொதுவாக எதற்கும் தீங்கு நினைப்பதில்லை. சிங்கம் பசித்திருக்கும்போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது. மற்ற நேரத்தில் அது உங்களை எதிரியாக கூடப் பார்க்காது...

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் அவர்கள் கேட்காமலேயே, தாமாகவே முன் வந்து,அவர்களின் தேவையை அறிந்து உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை...

இவர்கள்தாம் மனிதன் என்ற சொல்வதற்கு அருகதை உள்ளவர்கள்...
ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார்...

அவரது அறைக் கதவு தட்டப்பட்ட போது, சட்டென்று தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். நிறுவனத்தின் முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார்.

பிறகுதான் உள்ளே வந்தவரை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, "சொல் தம்பி, உனக்கு உனக்கு என்ன வேண்டும்...?” என்றார்...

அவரோ!,  மென்சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னார், ஐயா!, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வந்திருக்கிறேன் என்றார்...

மற்றவர்களிடத்தில் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்கு உடைபடுவார்கள்...

*ஆம் நண்பர்களே...!*

🟡 *பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள், தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது. அதிகமான கவலைகள்தான் வந்து சேரும்...!*

🔴 *தன்நலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தாதீர்கள். மரம் உதவுகிறது நிழல் தந்து. புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து, ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட...!!*

⚫ *ஆறறிவு உள்ள மனிதர்களான நாம் இயன்றவரை பிறருக்கு, அவர்கள் கேட்காமலே அவர்களின் தேவை உணர்ந்து உதவி செய்யவேண்டும். நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் நியதி. இயன்றவரை உதவுவோம்...!!!*
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.21

திரைப்படத்தைப் போட்டுக் காட்டிய முதல் தமிழர்!


திரைப்படத்தைப் போட்டுக் காட்டிய முதல் தமிழர்!

தமிழகத்தில் தமிழர்களில் முதல்முறையாக
திரைப்படம் காண்பித்த,  திரைப்பட வெளியீட்டாளர்,
தயாரிப்பாளர், தொழிலதிபர்
கோயம்புத்தூரைச் சேர்ந்த
சாமிக்கண்ணு வின்சென்ட்
பிறந்த தினம் இன்று
( 18 ஏப்ரல்  1883 )

இவர் திருச்சி பொன்மலை ரயில்நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றியவர். 1905 ம் ஆண்டு Dupond என்ற பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) விலைக்கு வந்தது அதை ரூ.2,000 க்கு வாங்கி முதன்முதலாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரிக்கு அருகிலிருந்த ஒரு வெட்டவெளி மைதானத்தில் 1905 ம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு திரைப்படம் காண்பித்தார்.

பின்னாளில் 1914 ல் கோவையில் Variety Hall என்ற பெயரில் இவர் தியேட்டர் கட்டினார். Variety Hall  தற்போது  Delite Theatre என்ற பெயரில் இயங்குகிறது. 
-------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்!
https://en.wikipedia.org/wiki/Samikannu_Vincent

Samikannu Vincent (18 April 1883 – 22 April 1942) was a cinema exhibitor turned theatre owner. His first theatre was Variety Hall (now Delite theatre) in Coimbatore in 1914. He was a pioneer in making movies, popular in Madras presidency and contributing to growth of it by buying new equipment from abroad, as well as establishing the concept of modern day theatres that exist today.
Early Days
Samikannu Vincent was born on April 18, 1883. He was born in Coimbatore. He was working in South Indian Railway as a draftsman-clerk. He happened to see some short films exhibited by French film exhibitor named DuPont. Vincent befriended him and by the time when DuPont wanted to return home, Samikannu Vincent raised enough money with difficulty to buy the Frenchman's projector, accessories and films. At the age of 22, he resigned his desk job and set up business as film exhibitor. He travelled to villages to exhibit the films he had. The film "Life of Jesus" became a huge hit in the "tent cinema" where he projected his films. Vincent usually screened his films in a tent, which was erected on a stretch of open land close to a town or village. The “tent cinema” concept became very popular.
Family
Samikannu Vincent had 4 wives with whom he had four sons and two daughters. As per his family members, vincent married 4 wives as each one died in quick succession due to illness. He was lovable father his among all children. He never took his children along for Long trips. one of his son Selvaraj, who studied both at St. Michaels in coimbatore and St. Joseph's College in Tiruchi, stopped with intermediate (Class XII now), because his father wanted them look after his business. According to his family, his father was a good magician, for which he was dubbed evil, and refused communion by the church. “So, he had to perform in front of the church members, to prove that those were only tricks that came from his robe with innumerable pockets” 
Development
Variety Hall ( Delite Theatre) Coimbatore
During 1905, electric carbons were used in motion picture projector. During the same year Samikannu Vincent established his first tent cinema at Madras called Edison's Grand Cinemamegaphone on Esplanade. At that time it was a novelty to watch films in this tent theatre. The electrically lit tent drew large crowds. He travelled with his tent cinema to different parts of the world like Malaysia and Singapore. Aware of the advantages of brick and mortar cinema house, he built one in his home town in 1914 called Variety Hall.
Association with Cinema
In 1933, Pioneer film company Calcutta and Samikannu Vincent co-produced "Valli". Since there was also a similar production was in progress in Bombay, the Calcutta version was named as Valli Thirumanam. It had T.P. Rajalakshmi playing the lead role and went on to become a huge hit. He also later co-produced "Sampoorna Harichandra" and "Subhadra Parinayam". When the historic Central Studios was inaugurated in 1935, Samikannu Vincent joined the team as one of the directors. Besides production he was also involved in equipment distribution and theatre management. He was also known for first introducing talkie equipment for his theatre in Coimbatore beating madras
Other Notable Works
By 1919, he established the first power-driven Rice and Flour Mill in the heart of the town. He managed all this by working as long as nine hours a day, until his sons took over. In 1922, the then Government of Madras gave him permission to supply electric power to the famous Stanes European High School. With the encouragement of Sir C.P. Ramaswamy Aiyer, member of the Governor's Executive Council in charge of the Electricity portfolio, he was given enough support by the government. His application was approved and the licence to set up a power house was granted. The streets of Coimbatore and the residential buildings in the heart of the city had electric lights.
Realising the need for a printing press to produce quality handbills and other materials, he promoted the printing press (around 1916) that was located in a house near his theatre. He expanded the activities of the press by installing additional machinery, types and printing accessories in another building. Called Electric Printing Works, he used the cinema house's electric power plant to run the printing press too and created history of sorts.
Death
Samikannu Vincent died in 22 April 1942.
Association with J. P. Chandrababu
Leading Comedian J. P. Chandrababu married grand daughter of Samikannu Vincent later which ended in Divorce.
Legacy
His birthday is celebrated as Cinema theatre day.
A Tamil Documentary on Vincent's life, Pezhamozi (silent language) was also released. 
-------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.21

எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!


எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!

கதவு திறந்து மன்னிக்கு அவனை அடையாளம் தெரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. தெரிந்ததும் திடுக்கிட்டாள் திணறி எச்சில் விழுங்கி 'நீங்களா? எப்ப வந்தேள்?"
"இப்பதான், நேர வரேன், அப்பா எப்படி இருக்கா?"
"அம்மா, அம்மா யார் வந்திருக்கா பாருங்கோ."
"யாருடி?"
"பரத்"
"பரத்தா?"
யாரு? பரத்தா?"
“என்னது? பரத்தா!" மூலைக்கு மூலை ஆச்சர்யக் குரல்கள் ஒலித்தன.
ரேடியோ நிறுத்தப்பட்டது. பிள்ளைகளின் படிப்பு ரத்து செய்யப்பட்டது.
அம்மா, பெரிய அண்ணா, அண்ணா, அக்கா, மன்னிகள் குழந்தைகள் எல்லோரும் ஹாலில் ஒரு அரை வட்ட விரோத விழாப் போல் வந்து சேர்ந்துகொண்டு, அவனைச் சுற்றிப் பார்வை வியூகம் அமைத்தார்கள்
சின்ன மன்னிதான் "வா பரத்" என்றாள். எப்படி மாறிவிட்டாள்! எங்கே அந்த அழகான மணப்பெண்?
"என்னடா, எங்கே வந்தே?" அம்மா
"அப்பாவைப் பார்க்க வந்தேம்மா எப்படி இருக்கார்?"
"இத்தனை நாளா இல்லாம இப்ப வந்தாயா? ஏன் என்னைப் பார்க்க வரக்கூடாதா? எத்தனை வருஷமாச்சு!"
"அப்பா உடம்பு ரொம்ப மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்"
"ஏண்டா, எந்த மூஞ்சியை வெச்சுண்டு விசாரிக்கறே! துப்புக் கெட்டவனே ! ஒரு கடுதாசி உண்டா? இப்ப திடீர்னு எதுக்காக வந்ததிக்கறே? எதுக்காகடா?"
"இல்லைம்மா, அம்பி அய்யர் சொன்னதைப் பார்த்தா அப்பாவை ஒரு வேளை இனிமே பார்க்க முடியாம போய்டுமோன்னு பயம் வந்துடுத்து.”
"பார்த்து இப்ப என்ன கிழிக்கப் போற?'
"ஏன்னா ? வந்தவரை...''
"சும்மாருடி! இது எங்க குடும்ப விஷயம். ப்ராடிகல் சன் வந்திருக்கான்" என்றார் அண்ணன்
"ஏண்டா, பார்க்க என்ன தகுதி இருக்கு உனக்கு?"
"ஏன் பார்க்கக் கூடாதா?" என்றான் விரோதமாக
"ஏய் பசங்களா எல்லோரும் உள்ள போங்கோ."
"மகன்ங்கிற தகுதிதான் அண்ணா ."
"மகன்! ஆஹா! பெரிசா வந்துட்டான். எத்தனை நாள் அவருக்கு சோறு போட்டே?."
"இதையெல்லாம் அப்புறம் பேசலாம். எனக்கு அப்பாவை பார்க்கணும், அவ்வளவுதான்"
"கூடாது. முடியாது. இந்த வீட்டில நுழையறதுக்கு உனக்கு அருகதை இல்லை. அப்படியே வெளில போ"
"இந்த வீடு உன்னுதா அண்ணா?"
"பார்த்தியாம்மா. வந்த உடனே என்ன கேள்வி கேக்கறான் ?
"எட்டு வருஷமா ஏண்டா வரலை? அதுக்கு பதில் சொல்"
"இந்த வீடு இன்னும் நம் அப்பாதுதானே, இதில் நுழைய எனக்கு உரிமை இருக்கு"
"இவன் அப்பாவைப் பார்க்க வரலைம்மா. கிழவன் மண்டையைப் போட்டுறப் போறார்னு சொத்தில் பங்கு வந்திருக்கான்"
"ஏண்டா கடன்காரா! எப்படி நீ வரப்போகும்? -பெத்த தாயார்க்கு ஒரு லெட்டர் போட்டியா?"
"அதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறது எல்லோருக்கும் தெரியுமே"
"தெரியும் பேப்பர்ல சந்தி சிரிச்சுதே..."
"சொத்துக்குத்தாம்மா வந்திருக்கான்..."
"இதோ பார் ஸ்ரீதர். அனாவசியமா சண்டைக்கு காலைப் பிராண்டாதே! எனக்கு சொத்தும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். அப்பாவைப் பார்க்க அனுமதிச்சாப் போறும். எங்க படுத்திண்டிருக்கார்?"
"அப்படியே சுபாவம் மாறாம இருக்கான்."
'இருந்துட்டுப் போறேன். முட்டாத்தனமாக நடந்துக்காதீங்கோ என்ன சொன்னாலும் ஏசினாலும் நான் அப்பாவைப் பார்த்துட்டுத் தான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறேன். அனாவசியத் துக்கு இந்த இடத்தில் சண்டையோ மூர்க்கத்தனமோ வேண்டாம். ஒரு நண்பன், இல்லை பார்வையாளனா நினைச்சுக் கங்கோ...... . எங்கே அவர்?"
"உன்னை இப்ப அவர் பார்த்தா அடையாளம் கண்டுப்பார்னு நினைக்கிறயா?"
"ஏன்? மயக்கமா?"
"இல்லை . மூஞ்சில காறித் துப்புவார்."
'துப்பமாட்டார். நிச்சயம் என்னை அவருக்கு ஞாபகம் இருக்கும். எட்டு யுகமானாலும் ஞாபகமிருக்கும்!"
"கிழத்துக்கு நேத்திக்கு நடந்தது இன்னிக்கு நினைவில்லை.....ஞாபகம் இருக்குமாம்!"
"சரிம்மா; இவனோட என்ன ரோதனை? கல்லுளி மங்கன் மாதிரி போகமாட்டான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு......கூடப் பிறந்த தோஷத்துக்காக காட்டிட்டு வீட்டை விட்டு விரட்டிடலாம். ஏய் சின்னி , வாடி இங்கே. இது யார் தெரியுமா... சி...த்... தப்...பா... அழகான சித்தப்பா, அழைச்சுண்டு போய் தாத்தா ரூமை காட்டு"
சின்னியின் பின் மௌனமாக நடந்தான். மாடிப்படி ஏறித் திரும்பும்போது அத்தனை கண்களும் அவனைக் குத்தித் துளைப்பதை உணர்ந்தான்
எட்டு வருஷமாக விட்டுப்போன உறவு, ஒரு கடிதமில்லை விசாரிப்பில்லை கல்யாண அழைப்பில்லை எங்கே இருக்கிறான் என்கிற சங்கதி இல்லை. சினிமா என்றோ, டிராமா என்றோ கல்கத்தா என்றோ, காசி என்றோ, பணக்காரன் என்றோ கடனில் முழ்கிவிட்டான் என்றோ, பொண்டாட்டி ஓடிப்போய் கிறிஸ்துவப் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறான் என்றோ கேள்விப்பட்டிருப்பார்கள்......எட்டு வருஷ வெட்டுக்குப் பிறகு வதந்திகளிலிருந்து வடிவெடுத்திருக்கிறான். எப்படி ஒட்டுவார்கள்?
"சித்தப்பாவா நீ" என்றாள் சின்னி.
"ஆமாம்".
மெதுவாக அந்த மாடி அறையை அணுகினார்கள்
"எந்த ஊர்?'
"ஏதோ ஊரு"
"சித்தி வரலியா"
"இல்லை"
'செத்துப் போய்ட்டாளா?"
"இல்லை"
"என்ன வேலை பண்றேள்?"
"அலையறேன்"
"எதுக்கு?"
“ஜெயிலுக்குப் போயிருந்தேன்னு சொன்னாளே, அந்த சித்தப்பாவா, நீ?"
"ஏய் சின்னி! பேசாம ரூமைக் காட்டிட்டு திரும்பி வா..."
சின்னி கதவைத் திறந்து, "உள்ள போங்கோ. தாத்தா தூங்கிண்டிருப்பார்” என்று சொல்லிவிட்டு விலகினாள்,
உள்ளே டெட்டால் வாசனையடித்தது. ஏறக்குறைய இருட்பாக, சைபர் வாட் நியான் ஒளியில் தரையில் ஒரு போர்வைக் குவியல் தெரிந்தது
சுவரில் தடவி விளக்குப்போட்டு அதை அணுகினான். குனிந்து மெல்ல விலக்கினான். அதிர்ந்து போனான்,
'மை காட்! இது அப்பா இல்லை. நான் பார்த்த அப்பா பாதி! சுருங்கிப் போய்விட்டார். கண்கள் இருட்டுப் பொத்துகளாக மூடி, கன்னங்கள் ஒட்டிப்போய், கை நரம்புகளும் மார்பு எலும்புகளும் தெரிய......பிராணன் ?
"அப்பா" பதில் இல்லை.
சற்று நேரம் அவரைப் பார்த்துக் கொண்டு அழுதான். மன வெளிச்சத்தில் சட் சட் என்று அந்த மனிதரின் ஞாபக பிம்பங்கள் மாறின.
"அப்பா, அப்பா..."
படுக்கையருகில் உட்கார்ந்து நெற்றியைத் தொட்டான். சூடு அந்த கையெலும்பை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டது.
"அப்பா..."
சட்டென்று கனவுச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்றவர் போல் சிலிர்த்துக் கண் விழித்தார்.
"யாரு?"
"நான்தாம்பா, பரத் வந்திருக்கேன்"
மெல்லத் தலை நகர்த்தி அவனைப் பார்த்தார்.
'பரத்தா?... பரத்தா?... என் மூணாவது பையனா?"
"ஆமாம்ப்பா ஆமாம்"
"நீதானா!" என்ன கிணற்றுக் குரல் அது! எட்டு வருஷத்துக்கு முந்தைய ஒலி முழக்கம் எங்கே...?
"நான் தாம்பா.."
'சௌக்கியமா இருக்கியா?"
"இருக்கேம்பா!"
"ரொம்ப நாளா காணோம்..."
"வந்துட்டேம்பா!"
"தெரியும். நீ வருவேன்னு தெரியும் சாப்பிட்டியா?'
"இல்லப்பா"
"சாப்ட்டுறு. ராட்சசிகள்ளாம் அப்புறம் இல்லைன்னுடுவா. மூணு ராட்சசி.....நாலு ராட்சசி"
"என்னப்பா உனக்கு உடம்பு..."
"களைப்புப்பா! அலுப்பு... போறும் நிஜமாவே பரத்தா...?' அந்தக் கரம் சிரமப்பட்டு மேல் வந்து அவன் தலை மயிரைக் கலைத்து, "பரத் உனக்குத்தான்... உனக்குத்தான் சரியாவே எதும் செய்யலை..." கிழவரின் கண்கள் கலங்கின
"அதெல்லாம் இல்லப்பா"
"என்னைப் பாரு சீக்கிரம் செத்துப் போய்டுவேனா? சீக்கிரம் போய்ட்டா தேவலாம்..."
"இல்லப்பா, தேவலையாய்டும்"
'உன்னைப்பத்திதான் சதா நினைப்பு"
"எனக்கும்ப்பா"
"கிட்ட வா" கிழவர் மெல்ல, யோசித்து யோசித்து, மிக மெலிந்த குரலில் பேசினார்.
"இந்த ரூமைப் பாரு சுடுகொடு மாதிரி இல்லை என்னை இதில் போட்டு அடைச்சுட்டு எல்லாரும் கீழயே இருக்கா அஞ்சு நிமிஷம் பேச ஆளில்லை. நாக்கு செத்துப் போச்சு. ஆரஞ்சுப்பழம் வாங்கிக் கொடுனு ஒரு வாரமா சொல்லிண்டிருக்கேன். இங்க வேற யாரும் இல்லையே...?
"இல்லைப்பா!"
"பழம் எல்லாம் கீழே வெச்சிண்டிருக்கா. அவாளே சாப்படறா..... உங்கம்மா, மூத்த ராட்சசி, என்னை வந்து பார்த்து மூணு நாளாச்சு, எல்லாரும் காத்திண்டிருக்கா பரத்..."
"அதெல்லாம் இல்லைப்பா, சரியாய்டும்".
"ஆரஞ்சுப்பழம் வாங்கித் தரயா"
'தரேன்ப்பா "
"இத பார் மருந்து.. இதில் விஷம் கலந்திருக்கா, குடிக்கமாட்டேன்"
"அப்படி எல்லாம் செய்யமாட்டாப்பா."
"எல்லாரும் காத்துண்டிருக்கா.. நீ எந்த ஊர்ல இருக்கே?"
"ஏதோ ஊர்ப்பா. ஸ்திரமா எதும் இல்லை ."
வீட்டில் இருக்கயா?
"இல்லை, ரூம்ல..."
எனக்கு இடம் இருக்குமா, என்னை அழைச்சுண்டு போறியா?"
"சரிப்பா"
"இப்ப போகலாமா"
"இல்லை, நாளைக்கு கார்த்தலை..."
"இப்பவே போகவேண்டாமா?'
"தூங்கிட்டு நாளைக்கு கார்த்தலை போகலாம்."
"என்னை இந்த சுடுகாட்டில் இருந்து அழைச்சுண்டு போயிடறியா?"
"சரிப்பா"
அவர் முகத்தில் சாந்தம் தெரிந்தது
"நீ பேசு"
அவர் முன் சாய்ந்து "அப்பா” என்றான் தலையைக் கோதிவிட்டு
*அப்பா நானும் நீயும் கிரிக்கெட் ஆடுவோமே, ஞாபகம் இருக்கா ?"
ஞாபகம் புன்னகையாக மலர்ந்தது
"ரெண்டுபேரும் ஒரே டீம்ல மாட்ச் ஆடியிருக்கோம். நீ பத்தொம்பது அடுச்சுட்டு ரன் அவுட் ஆயிட்டே. எனக்கு ஏற்ப உன்னால ஓட முடியலே. ஸாரிப்பா, அது ராங்கால், அது என் தப்பு...."
"சொல்லு..."
"சின்ன - வயசில அய்யன் வாய்க்கால்ல நீஞ்ச கத்துக் குடுத்தியே. தொபுக்கடீர்னு தள்ளிவிட்டுட்டு மூச்சுத் திணற வெப்பியே; அப்புறம் கொய்யாக்கா அடிச்சு சாப்பிடுவோமே அம்மாவுக்குத் தெரியாம உனக்கு பர்க்லி சிகரெட் வாங்கிண்டு வருவேனே. ரெண்டு பேரும் கவட்டை கட்டி குருவி அடிப்பமே எவ்வளவு தூரம் ட்ரெக்கிங்... போவோம்... பாண தீர்த்தத்தில் பாறைல படுத்துண்டு நட்சத்திரத்துக்கு எல்லாம் புதுசா பேர் வெப்பியே! சுள்ளி பத்த வெச்சு சட்டில சமைப்பமே..."
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகச் சொன்னான்.
தந்தை மகன் இருவருக்கும் இருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பு, சிநேகிதம் கையோடு கை அழுத்திய பலப்பரீட்சை,
நீண்ட நீண்ட நடைப் பயணங்கள், பறவைக் குரல்கள், மண் வெளியில் தியாகராஜர், துரத்தல், ஓட்டம், பிடிப்பு, ரகசியப்பரிவர்த்தனை, நிறுத்தி உட்காரவைத்து மரத்தடியில் அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்...
"பரத்" என்று அவன் கையைப் பிடித்தார். "நானும் நீயும் ஒண்ணு..."
'அப்பா! எல்டொராடோவைப் பத்தி சொல்லுவியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டு தான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்னு காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா"
"நானும்தான் அதையே தேடினேன்" என்றார்
"அப்பா உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப் போச்சு. ரொம்ப நாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே! இன்னிவரைக்கும்...சொன்னதில்லையே!"
"அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் உறவுல பிளவு வந்துடுத்து....... அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து..."
"நீ என்னைப் பார்த்து, நான் உன்னை பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம், என் மனசுல உன்ன பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சு போயி நாம் ரெண்டு பேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சுட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்து போயி, நான் விலகிப் போய், ஊர் ஊரா அலைஞ்சு...உறவு விட்டுப்போயி,கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு போய்......வேண்டாம்பா......
அதையெல்லாம் அழிச்சுடலாம்பா ......சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்....."
அப்பா தலையை ஆட்டினார். "அதுவும் இருக்கட்டும்" என்றார்.
'பரத் கிட்ட வா.."
அவன் வந்தான். "நாளைக்கு கார்த்தால என்னை அழைச்சுண்டு போறியா அந்த இடத்துக்கு-"
"சரிப்பா ."
"எத்தனை மணிக்கு வண்டி?"
"சீக்கிரமே கிளம்பிடலாம்பா.."
"என்னால நடக்க முடியாது..."
"உன்னை அப்படியே தூக்கித் தோள்மேல வெச்சுண்டு போயிடறேம்பா..நீ என்னைத் தூக்கிண்டு போவியே அது மாதிரி....."
"எனக்குத் தேவலை ஆய்டுமா?"
"நிச்சயம் ஆயிடும்பா"
"தேவலையானதும் கண்ணாடி மாத்திக்கொடு. என்ன?"
'சரிப்பா"
"ஒரு சின்ன டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்துடு"
"சரிப்பா"
"ஹெமிங்வேயோட கிலிமஞ்சாரோ படிச்சுக்காட்டு"
"சரிப்பா"
'மார்க்கஸ் அரேலியஸ், திருவாசகம், அப்புறம் பவிஷ்ய புராணம், டாஸ்டாயவ்ஸ்கி, கோஸ்லர், ரஸ்ஸல்....."
'எல்லா,.."
"இதோ பாரு, அந்த தடி ரெண்டு வேஷ்டி, ரெண்டு பனியன், அதான் என்னுது. செருப்பு கூடக் கிடையாது. இப்பவே எடுத்துண்டுடு".
'நான் வாங்கித்தரேம்பா."
"நிறைய நடக்கணும்" அவர் முகத்தில் இப்போது தேஜஸ் தெரிந்தது. உதட்டில் புன்னகையுடன் அவனை மிக அருகி அழைத்து கண் சிமிட்டலுடன், 'பரத் உங்கிட்ட ஒரு ரகசிய சொல்லணும். அவா ஒருத்தருக்கும் தெரியாது."
"என்னப்பா?"
சொன்னார்
ராத்திரி முழுவதும் அவர் அருகிலேயே உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணி சுமாருக்கு அப்பா இறந்து போயிருந்ததை உணர்ந்தான். தூக்கம் போலத்தான் படுத்திருந்தார். உதட்டில் புன்னகை ஸ்திரமாக இருந்தது.
பரத் ஓரத்தில் ஒதுங்கி நிற்க, ஒவ்வொருவராக வந்து ஆர்ப்பாட்டமாக அழுதார்கள். அதன்பின் சுரத்துக் குறைந்து அழுதார்கள். அதன் பின் மௌனமாக...
"வந்தான், முடிச்சுட்டான்! இவனைப் பார்த்த அதிர்ச்சியிலே உயிர் போய்டுத்து !!. எதுக்காக இப்படி திடீர்னு வரணும்?'
"அண்ணா ஒரு விஷயம். தனியா வாயேன்"
"என்ன?"
"போறதுக்கு முன்னால அப்பா எங்கிட்ட சொன்னார். வீட்டையும் நிலத்தையும் என் பேரில் எழுதி வெச்சிருக்கறதா..... காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த அட்ரஸ்க்கு எழுது. எல்லாத்தையும் மாத்தி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேன்..."
"பரத், எங்க போற ?'
திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
=====================================
இந்தச் சிறுகதையை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. நான் அவ்வளவு எமோஷனலான ஆள் இல்லை. சட்ரென்று கலங்குவது, உணர்ச்சி வசப்படுவது.....இதெல்லாம் அதிகம் கிடையாது.
இருந்தும் ஒவ்வொரு முறை இதைப் படிக்கும் போதும் நிறையவே கண் கலங்கியிருக்கிறேன். அதுதான் சுஜாதாவின் எழுத்தின் சக்தி
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.4.21

Astrology: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!!


Astrology: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரக்காரர். வீட்டாரின் கட்டாயப்படி ஜாதகர் கனரக வாகனங்களை வைத்து தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டினார். பத்தாம் வீட்டுக்காரன் சந்திரனின் பார்வை 9ம் வீட்டிலுள்ள சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். அது பாக்கிய ஸ்தானம். அத்துடன் சுக்கிரன் லக்கினத்திற்கு அதிபதி. மேலும் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகன். லக்கின அதிபதியும் தொழில்காரகனும் கூட்டணி சேர்ந்தால் பலனுக்குக் கேட்கவா வேண்டும். அதுதான் வீட்டார்கள் அவருடைய ஜாதகத்தை வைத்து குடும்பத் தொழிலான வாகனத் தொழிலுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனது. ஆரம்பத்தில் பாதி மனதுடன் அவர் ஈடுபட்டாலும், போகப் போக சூழ்நிலை காரணமாக அவர் அதில் முழு ஈடுபாடு கொள்ளும்படி ஆகிவிட்டது

ஆனால் அவர் உள் மனதில் இருந்த ஜோதிட ஆசை - அதாவது ஜோதிடம் கற்றுக் கொண்டு ஜோதிடராகும் ஆசை  கடைசிவரை நிறைவேறவில்லைகேள்வி இதுதான் - அவருடைய ஜோதிட ஆசை நிறைவேறாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அதை மட்டும் அலசி பதில் சொல்லுங்கள்!!!!! 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

பதில்: ஜாதகர் துலா லக்கினக்காரர். புதன் தான் ஜோதிடக் கலைக்குக் காரகன். அன்பரின் ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டில் அமர்ந்து வலுவிழந்துவிட்டார். (Mercury is the karaka for Astrology and in his horoscope Mercury is placed in the adverse 8th. Success in Astrology is not indicated ) ஜாதகரின் ஜோதிடர் கனவு நிறைவேறாமல் போனதற்கு அதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


===========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.21

Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!



Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சதய நட்சத்திரக்காரர். ஜாதகத்தில் ராஜ யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல யோகங்கள் உள்ளன. அத்துடன் பத்தாம் வீட்டதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் ஜாககருக்கு அவர் செய்யும் வேலையில் தொடர்ந்து பல ஏற்றங்களைக் கொடுப்பார் என்பது ஜோதிட விதி. (If the lord of the 10th is powerful and is in lagna, the native will be successful in profession or business) ஆனால் ஜாதகருக்கு அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தாரே தவிர எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை

அடுத்து வந்த புதன் திசையில் சொந்தத் தொழிலைச் செய்யத்துவங்கி பெரும் பொருள் குவித்தார் என்பது தனிக்கதைஅந்தக்கதை நமக்கு வேண்டாம். துவக்கத்தில், அதாவது அவருடைய 46வது வயது வரை ஏன் அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையவில்லை

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!

ஜாதகர் கடக லக்கினக்காரர். அந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு 19 ஆண்டுகள் சனி மகா திசை காலமாகும். அதாவது அவர் வேலை பார்த்த நாட்களில் நடந்தது. சனி மகா திசை காலமாகும். சனீஷ்வரன் இந்த ஜாதகத்திற்கு 7 மற்றும் 8ம் வீடுகளுக்கு உரியவன். லக்கினாதிபதி சந்திரன் எட்டாம் வீட்டில். அதுவும் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை யோகத்தில். சனீஷ்வரன் எட்டாம் வீட்டிற்கு உரிய கஷ்டங்களையே பலனாகக் கொடுத்தார். அதற்கு முன் நடந்த குரு திசையின் கடைசி ஆண்டுகளும் அவருக்கு சாதமாக இருக்கவில்லை. குரு ஆறாம் இடத்திற்கு உரியவர். மேலும் கேதுவின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டுள்ளார்

ஜாதகரின் மத்திம வயதுக்காலம் ஏற்றங்கள் இன்றி கழிந்ததற்கு மேலே குறிப்பிட்டுள்ளதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.21

Astrology: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்?


Astrology: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கேட்டை  நட்சத்திரக்காரர். நல்ல மனிதர். ஆனால் ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே (26 வயதில்) இறைவனடி சேர்ந்து விட்டார். அல்ப ஆயுளில் அவர் போய்ச் சேர்ந்தமைக்கு என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கடுமையான மாரக திசை நடந்ததுதான் காரணம். ஜாதகர்  இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார். 2ம் வீடும், 7ம் வீடும் மாரக ஸ்தானங்கள் என்பது தெரியும். அதில் 2ம் வீடுதான் 7ம் வீட்டை விட அதீதமான வலிமை உடையது. ஏழாம் வீட்டதிபதி சுக்கிரன் 2ம் வீட்டில் வந்து அமர்ந்திருப்பதைப் பாருங்கள்

சுக்கிர மகா திசையில் குரு புக்தி நடக்கும்போது ஜாதகர் ஒரு விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே மாண்டு போனார். தசா நாதனும் புக்தி நாதனும் அஷ்டம சஷ்டமத்தில் (8/6 Position) இருப்பதைப் பாருங்கள்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.21

Astrology: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?



Astrology: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திரக்காரர். அவரின் 25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும் கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர் வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார்.

கேள்வி இதுதான் இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்னஜாதகத்தை அலசுவோம் வாருங்கள். 

ஜாதகி ரிஷப லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரன் 12ல். விரைய ஸ்தானத்தில். உடன் 4ம் அதிபதி சூரியனும், 7 & 12ற்குரிய செவ்வாயும் கூட்டாக உள்ளார்கள். அத்துடன் சூரியனுடன் மோதி சுக்கிரனும் செவ்வாயும் அஸ்தமணமாகியுள்ளார்கள். லக்கினாதிபதி 12ல் விரையத்தில் அமர்ந்ததால் ஜாதகியின் வாழ்க்கை இளமையில் அவருக்குப் பயன்படும்படி உருப்படியாக இல்லாமல் போய்விட்டது. ஆனால் 5ல் திரிகோணத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான் தன் மகா திசை துவங்கியவுடன் ஜாதகிக்கு நல்வழியைக் காட்டி நல்வழிப்படுத்தினார். 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.4.21

வலிகளே நல்ல வழிகாட்டி...!


வலிகளே நல்ல வழிகாட்டி...!

வலிகளை ஏற்றுக்கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காணமுடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும்தான்...

வலி வந்தபோதுதான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டதுதான் இந்த வாழ்க்கை...

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும்போதுதான் அழகான உடற்கட்டைப் பெறமுடிகிறது...

இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக்கொள்ளும்போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்...

'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்...

*'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகிவிடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்த துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிக்காட்டியும் கூட...!*

வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழிகாட்டும்...

நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம் 
தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது...

வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...

*ஆம் நண்பர்களே...!*

*அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்...!*

*நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத்தான் ஆகவேண்டும்...!!*

*வலிகளையும், இடையுறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்...!!!*
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.21

தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் கதை!


தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் கதை!

*படித்ததில் பிடித்தது*

*தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் சுட்ட கதை.*

*ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்ச்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.*

*அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"*  *ன்னு சொன்னார்.*

*மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* 

*ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.* 

*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*

*ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*

*அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிக்கும் ன்னு.*

*ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*

*ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*

 *ராஜாவுக்கு சந்தோஷம்.*
*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*

 *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*

*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.*

*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*
*வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னு ட்டார்.*

*ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்.*

*மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*

*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு....  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*

 *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*

*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*
*எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*

 *குருடன் சொன்னான்.*
 *ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம் ன்னும் பிரிச்சேன்.*

 *ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*

*இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*
*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார்.*

 *ராஜா பார்த்தார்.*
 *கூப்புடுங்கடா  அந்த கபோதிய.*
 *குருடன் வந்தான்.*
 *ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜா வோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*

*குருடன் சொன்னான்.*
 *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*

 *ராஜாவுக்கு ஒரே குஷி.*
*சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*

 *குருடனும் போய்ட்டான்.*

*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.*

*டேய்.!!*
*நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய

ிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார்.*

 *குருடன் அமைதியா இருந்தான்.*
 *பதிலே பேசல.*

*ராஜா திரும்ப கேட்டார்.*

*குருடன் அமைதியா  சொன்னான்.*

 *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*

 *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான்.*

 *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*

*ராஜா...*
*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.*

 *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*

 *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*
 *ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன்.*

 *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.*
 *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன்.*

*ஆக....  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விசயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*  
*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*
*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*

*அந்த குருடனிடம் இருந்த மதிநுட்பம்  தேவையான நிலைமைல தான் இப்ப நாம இருக்கோம்.*

*தெளிவான முடிவெடுத்து வாக்களிப்போம்.👍*
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் கதை!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!