மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 161 - 170. Show all posts
Showing posts with label Lessons 161 - 170. Show all posts

4.2.09

இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்

இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்

"இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்"

என்று அசத்தலாகத் துவங்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடலில்
வரும் வரி ஒன்றைத்தான் தலைப்பாக்கியிருக்கிறேன்.

கார் ஒன்றுதான். அது வாங்கும்போது புதுசாக இருக்கிறது. இருபது ஆண்டுகள்
சென்றால், அது பழைய காராகி விடுகிறது.

அதுபோல மனித உடம்பும் இளமையில் புதிய காரைப்போல பளபளப்பாக
இருக்கிறது. வயதாக வயதாக பழசாகி படுத்தி எடுக்கிறது. வராத நோய்கள்
எல்லாம் வந்து வாட்டி எடுக்கிறது. அந்த நிலைப்பாட்டைத்தான் கவியரசர்
'முதுமை' என்று ஒரே சொல்லில் அடக்கி விட்டார்.

சில வண்டிகள் இளமையிலேயும் தகறாறு செய்யும். அப்படிச் செய்தால் அது
ஜாதகக் கோளாறு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
-----------------------------------------------------------------------------------------------------
கேதுவும் சூரியனும் சேர்ந்திருந்தால் கிடைக்கும் பலன்கள் அல்லது நடக்கும் தீமைகள்!

ஆமாம், இருவரும் சேர்ந்திருந்தால் நன்மைகள் அதிகம் இல்லை. தீமைகளே அதிகம்.

ஜாதகத்தில் கேது சூரியனை விடுத்துத் தனித்திருந்தால் சந்தோஷப்படுங்கள்

சூரியன் உடல் காரகன் அதோடு தந்தைக்கும் காரகன். அவனோடு சேரும்
கேது நல்ல ஆரோக்கியமான உடம்பைக் கொடுப்பதில்லை. அதோடு நல்ல
ஆதரவான தந்தையையும் ஜாதகனுக்குக் கொடுப்பதில்லை!

பிறக்கும் அனைவருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரிதான் உள்ளது.
ஆனால் உடல் நலம் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அரண்மனை போன்ற வீடுகளில் இருக்கும் குழந்தைக்குச் சுகாதாரமில்லாத
எந்த இடமும், உணவும் சூழ்நிலையும் ஒத்துக்கொள்வதில்லை. ஜலதோஷம்,
சளி, காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு, வாந்தி, பேதி என்று எதுவேண்டுமென்றாலும்
ஏற்பட்டு அந்தக் குழந்தையைப் பாதிக்கக்கூடும்.

அதே நேரத்தில், சேரிகளிலும், குடிசைகளிலும், சாக்கடை ஒரங்களிலும்
மொத்தமாக சுகாதாரமற்ற சூழலில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும்,
வலுவாகவும் இருக்கும்.

என்ன காரணம்?

some people have a better immune system than others, why?
Diseases are denoted by sixth house and its ruler

நோய்களுக்குக் காரணம், ஆறாம் வீடும் அதன் அதிபதியும்தான் என்கின்றன
பல ஜோதிட நூல்கள். அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். நம்புவோம்.

ஒருவருக்கு சயரோகம் (tuberculosis) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அது ஒட்டிக்கொள்ளூம் நோய் என்கிறது விஞ்ஞானம் (tuberculosis is a
communicable and infectious disease) ஆனால் அந்த நோயாளியுடன் சேர்ந்து
வாழுகின்ற கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அந்த நோய் வருவதில்லை.
அங்கேதான் ஜாதகம் நிற்கும்!

ஒரு வீடும், அதன் அதிபதியும், தீய கிரகங்களால் பார்க்கப் பெற்றால், அந்த
அதிபதிக்கு உரிய உடல் உறுப்பு அல்லது உடல் அப்பகுதி எதுவோ அது
பாதிக்கப்படும் அல்லது அதில் அடிக்கடி நோய் உண்டாகும்.

மேஷ லக்கினக்காரர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவருடைய ஆறாம்
வீடு கன்னி. அதன் அதிபதி புதன். அந்த வீடு தீய கிரகங்களின் பார்வையில்
இருந்தால் ஜாதகனுக்கு ஹெர்னியா வியாதி வந்து அவதியுறுவான்

(இந்த வியாதிக்குச் சரியான தமிழாக்கம் இருந்தால், யாராவது சொல்லுங்களேன்.
குடல் இறக்கம் என்று ஒருமுறை படித்திருக்கிறேன். அந்தப் பெயர் சரிதானா
என்று தெரியவில்லை!)


A hernia occurs when the contents of a body cavity bulge out of the area
where they are normally contained. These contents, usually portions of
intestine or abdominal fatty tissue, are enclosed in the thin membrane
that naturally lines the inside of the cavity. Although the term hernia
can be used for bulges in other areas, it most often is used to describe
hernias of the lower torso - abdominal wall hernias

சிம்மமும், அதன் அதிபதி சூரியனும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் கல்லீரல்
(liver) கோளாறுகள் ஏற்படும்

மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய்.
செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

என்னென்ன வீட்டிற்கு என்னென்ன உறுப்பு, எந்தக் கிரகம் அதன் காவலன்
என்கின்ற விபரத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பயப்படாதீர்கள். மற்றவர்களைப் பயமுறுத்தாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் இறைவன்!

If sixth house gets strong by having a malefic positioned there,
it should be considered good for health!
Strong Saturn in sixth house, shows the ability to face trouble
and fight diseases

ஆறாம் வீட்டு ராகு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைத் தரும் என்பார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
அவை இரண்டும் பாதிப்பிற்குள்ளான மனிதன் சாதனை புரிவதோ
அல்லது வெற்றிகளைப் பெறுவதோ இயலாத செயல்!
--------------------------------------------------------------------
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:

1ஆம் வீடு: தலைப் பகுதி

2ஆம் வீடு: முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு
இடது கண், வாய், நாக்கு,

3ஆம் வீடு: காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய்

4ஆம் வீடு: நுரையீரல், இதயம் (Lungs and Heart)

5ஆம் வீடு இரைப்பை, கணையம் (Stomach,Liver )

6ஆம் வீடு: Small Intestine

7ஆம் வீடு.:உட் பிறப்பு உறுப்புக்கள்,சிறுநீரகம்
Internal Sexual Organs, Kidneys

8.வெளி பிறப்பு உறுப்புக்கள்(ஆண்குறி, பெண்குறி), குதம்
External Sexual Organs, Large Intestine, Anus

9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்

10ஆம் வீடு: தொடைகள், கால்களின் மேற்பகுதி

11ஆம் வீடு: கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை

12ஆம் வீடு: பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்
----------------------------------------------------------------------------------
ஆறாம் வீடு, அதன் அதிபதி என்கின்ற கணக்கின்றி சூரியனுடன் சேர்கின்ற
கேதுவும் அதே வேலையை அதே பலனைச் செய்யக்கூடியவன் ஆவான்.

சூரியன் உடல்காரகன் (Authority for body) அவனுடன் கேது சேர்வது
விரும்பத்தக்கதல்ல!

அவர்கள் இருவரும் சேர்ந்து சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை
என்றால் ஜாதகனுக்கு உடற் கோளாறுகள் ஏற்படும். அது உடலின் எந்தப்
பகுதி என்பது, லக்கினத்தில் இருந்து அவர்கள் அமர்ந்திருக்கும் வீட்டைப்
பொறுத்ததாகும்.

லக்கினத்தில் என்றால் தலையில் கட்டிகள் ஏற்படும், மூளைக்குச் செல்லும்
ரத்த நாளங்களில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்குப் பக்கவாதம் ஏற்படலாம்.
இவ்வாறு தலை சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.

இரண்டில் என்றால் கண்களில் கோளாறு ஏற்படும். கண்ணில் கட்டிகள்,
கண்பார்வைக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நான்கில் என்றால் இருதயக் கோளாறுகள் ஏற்படும்

எட்டில் இருந்தால் மறைவிடங்களில் கட்டிகள் ஏற்படும். சிறுநீரகக் கோளாறுகள்
ஏற்படும்.

இவ்வாறாக அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளில் அவற்றிற்கு உரிய பகுதிகளில்
நோய்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும். அவைகள் என்னென்ன பகுதிகள்
என்பதை முன் வரிகளில் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பதற்கு உகந்த ஒரே இடம் பதினொன்றாம் வீடு.
ஜாதகனின் பின் வாழ்க்கை யோகமாக இருக்கும். செளகரியமாக வாழ்வான்.

இந்த பாதிப்புக்கள் கேது அல்லது சூரியனுடைய Major Dasa or Sub-period
களில் உண்டாகும்.

அஷ்டகவர்கத்தில் அந்த வீடு அதிகப் பரல்களைப் பெற்றிருந்தாலும் அல்லது
சூரியன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருந்தாலும் ஜாதகனுக்கு மேற்கூரிய பாதிப்புக்கள் இருக்காது.

ஆகவே உங்கள் ஜாதகத்தை அலசும் போது பொறுமையாக அலசுங்கள்.
அலசுகிறேன் என்று கிழித்து விடாதீர்கள்:-))))

(தொடரும்)




வாழ்க வளமுடன்!

3.2.09

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..?

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..?

அசத்தலான பாடல் வரிகள் என்றால் சட்டென்று என் கண்முன் வந்து
நிற்பவர்கள் இருவர். அற்புதமான வாழ்க்கைத் தத்துவங்கள் என்றால்
நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்பவர்களும் அந்த இருவரே!
ஒருவர் பட்டினத்தார். இன்னொருவர் கவியரசர் கண்ணதாசன்.

"அடேய், எதற்கு இந்தப் பொருள் குவிப்பு,எதற்கு இந்தப் பொருள் சேர்ப்பு?
இந்தப் பிறவி நிலையில்லாதது. வீடு, வாசல், சொத்து, சுகம், மனைவி, மக்கள்,
வங்கி இருப்பு, வைப்புத்தொகைகள் (Bank Deposits) பங்குப் பத்திரங்கள்
(Share Cetificates),நகை நட்டுக்கள், வைரம், வெள்ளிச் சாமானகள், வாகனங்கள்
ரேசன்கார்டு, வோட்டர்ஸ் கார்டு, இன்கம்டாக்ஸ் பான் கார்டு, பாஸ்போர்ட்
மற்றும் இதுபோன்ற பிற புண்ணாக்குகள் (கழிவுகள், விடுபட்டவைகள்)
அனைத்தையும் போட்டது போட்டபடி ஒரு நாள் நீ போய்ச்சேரப் போகிறாய்.
தெரியுமா? என்றாவது நினைத்துப் பார்த்தாயா? ஒரு துரும்புகூட உன்னுடன்
வராது. ஒரு ஒடிந்து போன ஊசிகூட உன்னுடன் வராது!" என்று வாழ்க்கையின்
அவலத்தை, திடீரென ஆக அது முடிந்துவிடும் கோலத்தை அடித்துச் சொன்னவர்
பட்டினத்தார்.

அவ்வளவு பெரிய விஷயத்தை, ஆறே வார்த்தைகளில் சொன்ன ஞானி அவர்

"காதறுந்த ஊசியும் வராது காணும் கடை வழிக்கே!" என்றார்

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் வாழ்க்கையின் அவலத்தை ஏராளமான
பாடல் வரிகளில் கொட்டிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

"வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!" என்று ஏழே வார்த்தைகளில் சொன்னார் அவர்.

கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்வரிகள் அனைத்துமே அவர் அனுபவித்து
எழுதியதாகும். அதோடு அவர் பட்ட அனுபவங்களை வைத்து எழுதியதாகும்

அவர் சந்திக்காத பெண்களா, அவர் பார்க்காத குடும்பங்களா? அவர் பார்க்காத
மனிதர்களா? அவர் சந்திக்காத துரோகங்களா அல்லது துன்பங்களா? எல்லாவற்றையும்
பார்த்தவர் அவர். அவற்றைப் பாட்டாக்கி விட்டுப் போனவர் அவர்.

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக"

என்று எழுதியவர் அவர். என்னவொரு உற்சாகம், மற்றும் உத்வேகம் மிகுந்த
பாடல் வரிகள் பாருங்கள்

"நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி, நடந்த இளம் தென்றலே!"

என்று இயற்கை அன்னைக்கே தலைவாரி விட்டவர் அவர்

"வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்"

என்று படைத்தவனின் பெருமையைச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்

"ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....."

என்று பெண்மையின் சிறப்பைச் சொன்னவர் அவர்

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
நான் காணும் பொருள் எல்லாம் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் எல்லாம் நானாக வேண்டும்"

என்று காதலின் சிறப்பைச் சொன்னவர் அவர்.

"ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.."

என்று பெண்ணின் தவிப்பை, ஏக்கத்தைச் சொல்லிவிட்டுப்போனவர் அவர்

"கல் எல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா"

என்று பெண்ணால் கிடைக்கும் சுவையை, பெண்ணைத் தவிர வேறெங்கும்
கிடைக்காத சுவையைச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!

"அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்"

என்று மயங்கி நிற்கும் மனிதனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப்போனவர் அவர்

"முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்"

என்று மொத்த வாழ்க்கையும் ஆறு வரிகளில் சொன்னவர் அவர்.

இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி
சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்

எதற்காகச் சொன்னேன்?

மனிதனுக்கு வேண்டியது ஞானம். ஞானம் இல்லாத வாழ்க்கை சலித்துவிடும்
இன்பம், துன்பம் இரண்டையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்
வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சலிப்பின்றி இருக்கும். அந்தப் பக்குவ
நிலைதான் ஞானம்.

ஒரு புதுக்கவிஞன் எழுதினான்:

"அனைக்க ஒரு அன்பில்லாத மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத தொழில்
ஆனாலும்
உலகம் ஏனோ இன்னும் கசக்கவில்லை!"

அதுதான் ஞானம்!

அந்த ஞானத்தைத் தருவது கேது!

சிலருக்குச் சின்ன வயதிலேயே அவர் ஞானத்தைத் தருவார்.
சிலருக்கு நடு வயதில் தருவார்
சிலருக்கு வயதான பிறகு தருவார்
சிலருக்குக் கட்டையில் போகிற வயதில் தருவார்.

சிலருக்குத் தராமல் விட்டு விடுவார். அவனுக்கு அது carry forward ஆகும்
அதாவது அடுத்த பிறவியில் கிடைக்கும். சும்மா கிடைக்காது. Right from the
birth அடித்துத் துவைக்கப்பட்டுக் கிடைக்கும். கிடைக்கும். கிடைத்துக் கொண்டே
இருக்கும்!!!!!!!!!!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------
கேதுவைப் பற்றிய பாடம்

முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க
வழி காட்டுபவர் கேது. இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய
அனைத்தையும் அனுபவிக்க முடியமா என்று தெரியவில்லை.ஆகவே
இன்னுமொரு பிறவியிருந்தால் நல்லது என்று நினைப்பவர்கள்
கேதுவை வணங்க வேண்டாம்.

உங்கள் வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர் கேது. பாதையில் பல
தடைகளை உண்டாக்கி, உங்களுக்கு பல மனக்கவலையை ஏற்படுத்தி,
பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர்
அவர். முன் ஜன்மப் பாவச் சுமைகளைப் போக்க உதவுபவர் அவர்.

கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். அவருடைய திசா புத்திகளில்
விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அனேகமாக அது நெருப்பு சம்பந்தப்பட்ட
விபத்தாக இருக்கும்.

நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம் கணக்காக
வைத்திருக்கும் கணக்கப் பிள்ளை அவர்.

சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும் கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச்
செய்யக்கூடியவர்.

கேது ராகுவைப் போன்றவர். பல செயல்களில் அவரை ஒத்திருப்பார்.

சொந்த வீடு இல்லாதவர். இருக்கின்ற வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வார்.
ராகு சனியைப் போல செயல் படக்கூடியவர் என்றால், கேது செவ்வாயைப்
போல செயல்படக்கூடியவர்.

பல சமயங்களில் கேது, செவ்வாயின் எதிர்மறையான செயல்களைப் போல
தீயவற்றைச் செய்யக்கூடியவர் (Ketu in certain way resembles Mars. But
many times,activates only the negative side of Mars)

கேது, சூரியன், மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், வான வெளியில்
ஒரே பாகைக்கு வரும்போது சந்திரகிரணம் நிகழும்.

இன்றைய விஞ்ஞானம் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு
முன்பே, எந்தவித உபகரணங்களும் இன்றி இதை நம் முன்னோர்கள் கணித்து
எழுதிவைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி
பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும்.

The two imaginary nodes (சாயாக் கிரகங்கள்) Rahu and Ketu are the mysterious
forces and show in the birth chart both karmic and spiritual influences.

Like Rahu, Ketu is also not a real luminary and therefore doesn't rule any
zodiac sign. (சொந்த வீடு இல்லாமல் போனது)
========================================================
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

1ல்
லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2ல்
இரண்டில் கேது!

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)
படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.

குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்
மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3ல்
மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4ல்
நான்கில் கேது

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு
உகந்தது அல்ல!

நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.

ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.

சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------
5
ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.

இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6
ஆறில் கேது

ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.

வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

----------------------------------------------------------------------------------------
7
ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்

இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8
எட்டில் கேது

ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்

சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்

சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன்
சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.

சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் கேது

ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,
பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.

சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி
விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
--------------------------------------------------------------------------------
10
பத்தில் கேது

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services,
time and/or effort to support a socially beneficial cause, with a defined objective
and with no financial or material reward to the donor. In a more general sense,
activity intended to promote good or improve human quality of life.

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.

திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
This is the best place for professional enhancement.
---------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் கேது

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்

பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.

ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்

பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.

சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்

சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
---------------------------------------------------------------------------------------
இங்கே எழுதப்பெற்றுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்டவர்களுக்கு
அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களினால் இவைகள் கூடலாம்
அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம். அதைக் கவனத்தில்
கொள்ளவும்!

அலசல் தொடரும்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும் இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

30.1.09

ஏமாற்று வேலை!


ஏமாற்று வேலை!

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும்தான் அதிகமான தோஷங்களை ஏற்படுத்துவார்கள்.

ஒரு ஜாதகனுக்குக் களத்திர தோஷம் அல்லது புத்திர தோஷம் இருக்கிறதா என்று
தெரிந்து கொள்ள, ஜாதகத்தில் அவர்கள் குடியிருக்கும் இடத்தைப் பார்த்தால் போதும்.

5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.
4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.

ராகு அல்லது கேது அமர்ந்திருக்கும் வீட்டிற்கு அதிபதியான கிரகம் வலிமையாக
இருந்தால் தோஷம் அடிபட்டுவிடும். வலிமையாக இல்லாவிட்டால் தோஷம் உண்டு.

அதென்ன சார் தோஷம்? சற்று எளிமைப் படுத்திச் சொல்லுங்கள்!

சொன்னால் போயிற்று!

களத்திரம் = திருமணம்
புத்திரம் = குழந்தைப்பேறு

திருமணம் தாமதமாவது அதாவது தள்ளிக்கொண்டே போகிறதென்றால், உரிய
காலத்தில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதன் பின்னணியில் அவர்கள்
இருவரில் ஒருவர் இருப்பார்.

ஒரு பெண் மலர்ந்து வாசத்தை அள்ளித்தரும் காலம் எத்தனை ஆண்டுகள்?

36 ஆண்டுகள்

மலர்வதற்கு முன் அவள் குழந்தையாக இருக்கும் காலம் 13 அல்லது 14 ஆண்டுகள்

ஆக மொத்தம் 50 ஆண்டுகள்

அதோடு அவளுடைய பருவம் காலாவதியாகிவிடும். (expire ஆகிவிடும்)

பருவம் காலாவதியான பெண்ணை recondition செய்து பழைய நிலைக்கு - பார்ப்பவரை
மயங்க வைக்கும் நிலைக்குக் கொண்டுவர எந்தக் கொம்பனாலும் முடியாது.

போனது போனதுதான்.

விஷயம் அதுவல்ல!

ஒரு பெண்ணிற்கு அவள் மலந்து வாசம் வீசுகின்ற காலத்தில், உரிய நேரத்தில்
திருமணம் செய்து வைப்பதுதானே நல்லது

"அழகென்னும் விருந்தொன்று பரிமாறினேன்
பரிமாறும் நேரத்தில் சற்றுப் பசியாறினேன்"

என்று தன்னை மலராகவும், வந்த கணவனை வண்டாகவும் நினைத்து அவளால்
பாட முடியும். கணவனுக்குப் பரிமாறினவள் தன் பசியையும் போக்கிக் கொண்டதைச்
சொல்லும் அழகைப் பாருங்கள்.

திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும்!

ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம்
நடைபெற வேண்டும். (அந்த 36ல் 2/3 பங்கை அவள் பசியாறுவதற்குக் கொடுங்கள்
சாமிகளா)


அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை
பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும்!

அந்தத் தாமதம் தோஷம் எனப்படும்.

அதீத தோஷமென்றால் என்ன ஆகும்?

அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி,
இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும்

திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு!

தோஷத்திற்கு என்ன பரிகாரம்?

பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்.

ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது!

காசைவைத்துப் பரிகாரம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை!

இன்று அவ்வளவுதான்!

பாடத்தின் தலைப்பு: விடுபட்டவை.
---------------------------------------------------------------------------------------
வாத்தியார் சொந்த வேலையாக நான்கு நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
இருப்பதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை!
---------------------------------------------------------------------------------------
மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

29.1.09

அதிர வைத்த இளம் சந்நியாசி - பகுதி 2


அதிர வைத்த இளம் சந்நியாசி - பகுதி 2

முதல் பகுதிக்கான சுட்டி இங்கே உள்ளது. அதைப் படித்திராதவர்களை, அதைப்
படித்துவிட்டு இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளகிறேன்!
--------------------------------------------------------------------------------------
அரண்மனை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன்,
சுவாமிகளின் வரவை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான்
அல்லவா மன்னன்?

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், இளம் துறவியை ஏற்றிக்கொண்டு
வந்த பல்லக்கும் வந்து சேர்ந்தது.

இளம் துறவி பல்லக்கில் இருந்து இறங்கியவுடன், பட்டத்து யானையின் மூலம்,
பெரிய மலர்மாலை ஒன்று அவருக்கு அணிவிக்கப்பெற்றது.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றை மன்னன் செய்தான்.

ஆமாம், திடீரென்று துறவியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து
வணங்கினான்.

மன்னனே காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்த அங்கிருந்த தேவியர்கள்
முதலிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் விழுந்து வணங்கினார்கள்.

முதன் மந்திரி முதல் யானைப்பாகன் வரை அங்கிருந்த மற்றவர்களும்
விழுந்து வணங்கினார்கள்.

முதலில் அதிர்ந்து போய்விட்ட துறவி, சற்று சுதாகரித்துக் கொண்டு, "நமச்சிவாய"
என்று சொல்லி அனைவரையும் வாழ்த்தினார்

மன்னன் எழுந்து வழிகாட்ட, துறவியார் அரண்மனைக்குள் நுழைந்தார். உடன் அரச
குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டர்கள். முதல் மந்திரியும், அரண்மனைத் தலைமைக்
காவலரும் உள்ளே சென்றார்கள். வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!

பிரதான அரங்கத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பெற்று, ஒரே ஒரு சிம்மாசானம்
மட்டும் போடப்பட்டிருந்தது.

துறவியாரை, அதில் அமரும்படி கேட்டுக்கொண்டான் மன்னன்.

அவர் அமர்ந்தவுடன், அவர் அருகில், அவருடைய காலடி அருகே, தரையில்,
அதாவது ரத்தினக்கம்பளத்தின் மீது மன்னன் அமர்ந்து கொண்டான்.

மற்ற அனைவரும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.அந்தக் காட்சியைக்
கண்ணுற்ற நமது துறவியாருக்குச் சற்று அச்சமாக இருந்தது. ஆனாலும் அதை
வெளிக்காட்டாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

பின்னே இருக்காதா? அரசனுக்கு 50 வயது. துறவிக்கோ இருபத்தியோரு வயதுதான்
அதோடு பதவியில் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம். எல்லாம் விதியின்
விளையாட்டுப்போலும் என்று துறவி மனதில் நினத்துக் கொண்டார்.

உண்மை தெரிந்தால் தலை போகுமா? அல்லது கால் போகுமா? என்று தெரியாத
சூழ்நிலை. நடப்பது நடக்கட்டும் என்று தனது நாடகத்தைத் தொடர்ந்தார்.

மன்னன்தான் முதலில் பேசினான்.

"சுவாமி உங்களுக்குப் பாதபூஜை செய்ய விரும்புகிறோம். உத்தரவு கொடுங்கள்."
என்றான்.

சுவாமிகள் கண்களினாலேயே சம்மதத்தைத் தெரிவித்தார்.

மன்னன் கையை உயர்த்த, தூரத்தில் நின்று கொண்டிருந்த இரு தாதிப்பெண்கள்
பெரிய வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக்குடத்தில் தண்ணீர், இன்னொரு தாம்பாளத்தில்,
பூஜைப் பொருட்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்கள்.

தேவியர் இருவரும் அருகில் வர, அவர்கள் துணையுடன், மன்னன் துறவிக்குப்
பாத பூஜையைச் செய்து முடித்தான். அதோடு விழுந்தும் வணங்கினான்.

துறவியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. இத்தனை சின்ன
வயதில் முகத்தில் இப்படி ஒரு அருளா?

எல்லாவற்றையும் கொடுத்த இறைவன் இந்த நிர்மலமான முகத்தை மட்டும் நமக்கு
ஏன் தரவில்லை? அப்படி நினைத்த மாத்திரத்திலேயே மன்னன் கண்களில் நீர்
கோர்த்துக் கொண்டு கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. அதைக் கவனித்த தேவியர்கள்
இருவருமே உணர்ச்சி வசப்பட்டார்கள்.

சூழ்நிலையின் இருக்கத்தைக் குறைக்க விரும்பிய துறவியார், அருகில் தாம்பாளத்தில்
இருந்த மலர்மாலை ஒன்றை எடுத்து, மன்னனுக்கு அணிவித்து, ஆசீர்வதித்தார்.

மீண்டும் தரையில் துறவியின் எதிரே அமர்ந்து கொண்ட மன்னன், தன் அரச, மற்றும்
குடும்ப வரலாறுகளை பொறுமையாகச் சொன்னான். அதைவிடப் பொறுமையாகத்
துறவியும் காது கொடுத்துக் கேட்டார்.

இறுதியில் மன்னன் தன் பிரச்சினைகளைச் சொல்லி, அதற்குத் தங்களுடைய மேலான
யோசனைகளைச் சொல்லுங்கள் என்று துறவியைக் கேட்டுக் கொண்டான்.

துறவி நறுக்குத் தெரித்தார்ப்போல பேசினார்.

"உங்கள் துன்பங்களைக் கூட்டிக் கழித்தால் இரண்டு சொல்லில் அடக்கிவிடலாம்.
ஒன்று கோபம், இன்னொன்று படபடப்பு, இல்லையா?" என்று கேட்டார்.

"ஆகா, அவையிரண்டும்தான் தலையாய பிரச்சினைகள்" என்று மன்னன் பதில்
சொன்னான்.

துறவி அவற்றிற்குப் பதில் சொன்னார்.

முதலில் அவனுடைய மனைவிகள் இருவரையும் தனித்தனி மாளிகைகளில் தங்கும்படி
செய்ய வேண்டும் என்றார். அதோடு ஒவ்வொரு தேவியின் குழந்தைகளும்,
அவர்களுடனே தங்கும்படியாகச் செய்ய வேண்டும் என்றார். மன்னன் மாதத்தில் முதல்
பதினைந்து நாட்கள் மூத்தவள் வீட்டிலும், அடுத்த பதினைந்து நாட்கள் இளையவள்
வீட்டிலும் தங்கி வருவது நல்லது என்றார். மன்னனும் அது நல்ல தீர்வு என்று சொல்லி
மகிழ்ந்தான். பிரச்சினைகள் பாதியாகக் குறைந்து விடுமல்லவா?

இன்பம், துன்பம் ஆகிய இரண்டையுமே அவைகள் வந்து சேரும் கணத்தில் ஏற்றுக்
கொள்ளாமல், ஒரு நாழிகை கழித்தே (அதாவது 24 நிமிடங்கள் கழித்தே) மனதிற்குள்
கொண்டு செல்ல வேண்டும் என்றார். அதாவது சட்டென்று react செய்யக்கூடாது
எனும் பொருள்படத் துறவியார் சொன்னார்.

இன்பம் வந்தால் உடனே துள்ளிக் குதிக்காதே! துன்பம் வந்தால் உடனே கோபப்பட்டு
மற்றவர்களைப்ப் பிறாண்டதே! என்பதை மன்னனுக்குப் புரியும் வண்ணம் இரண்டு
குட்டிக் கதைகள் மூலமாகப் பாடம் நடத்தினார். மன்னன் மகிழ்ந்து விட்டான்.

அப்படிச் செய்தால் கோபம் வராது என்பதை மன்னன் உணர்ந்தான்.

அடுத்து படபடப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் துறவி சொன்னார்.

மன்னனாக இருப்பதால், பல சோதனைகளைத் தாங்கும்போது படப்படப்பு ஏற்படுவது
இயற்கை என்றும், அந்தமாதிரி நேரங்களில், ஆறு குவளைகள் தண்ணீரை அடுத்துத்துக்
குடித்துவிட்டு, சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

ஆறு குவளைகள் நீரைக்குடித்தால் என்ன ஆகும்?
வயிறு முட்டிப்போகும்.
அதோடு மஞ்சத்தில் ஓய்வெடுத்தால் என்ன ஆகும்?
தூக்கம் வரும்.
தூக்கம் வந்தால் என்ன ஆகும்?
படபடப்புப் போய்விடாதா?
அது பாட்டி வைத்தியம்.
அதை அறிந்திராத மன்னன் ஆகா அற்புதமான தீர்வு என்று தனக்குள் சொல்லி
மகிழ்ந்தான்.
--------------------------------------------------------------------------------------------
துறவிக்குச் சிற்றுண்டியாகச் சர்க்கரைபொங்கலும், வெண்பொங்கலும் வழங்கப்
பெற்றது. அதுவும் தங்கத் தட்டுக்களில் வழங்கப்பெற்றது.

துறவியும் கிடைத்ததை மண்டிவைக்காமல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு மட்டும்
சுவைத்து உண்டார்.

மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. துறவியும், "மன்னா நான் புறப்படுகிறேன்.
இறையருள் இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி எழுந்துவிட்டார்.

மன்னனும் கெஞ்சி ஒருவாரம் இங்கே தங்கிச் செல்லும்படி வேண்டிக் கொண்டான்

ஒருவாரம் தங்கினால் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த துறவி,
சற்று நிதானித்துப் பதில் சொன்னார்.

தான் எங்கேயும் தங்குவதில்லை என்றும், ஊருணிக்கரைகளில் உள்ள மண்டபங்களில்
மட்டுமே தங்கி ஓய்வெடுப்பது வழக்கம் என்றும் சொன்னார். ஒரு ஊரில் ஒரு
நாளைக்கு மேல் தங்குவதில்லை என்றும் சொன்னார். தன்னுடைய சீடர்கள் இருவர்
காத்துக் கொண்டிடுப்பார்கள் என்றும் சொன்னார்

அரை மனதுடன் அதற்குச் சம்மதித்த மன்னன், சமிக்கை செய்ய, தேவியரில்
மூத்தவள் எழுந்து விரைந்து சென்று ஒரு தங்கத் தாம்பாளத்தைத் தூக்க முடியாமல்
தூக்கிக் கொண்டு வந்தாள். அது நிறையப் பொற்காசுகளும், வைர ஆபரணங்களும்
இருந்தன. இன்றைய மதிப்பில் அவைகள் பத்துக் கோடிகளுக்குத் தேறும்.

அதைக் கையில் வாங்கிய மன்னன், துறவியிடம் நீட்டி, "இந்த எளியவனின்
காணிக்கையாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

துறவி புன்னகைத்து மறுத்துவிட்டார்.

"நான் முற்றும் துறந்த துறவி. எனக்கெதற்கு இதெல்லாம்? ஏழை மக்களுக்குக்
கொடுங்கள். எனக்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும் அது மனித நேயம் மட்டுமே!"

மன்னன் விடவில்லை,"என் அரண்மனைக்கு வந்து விட்டு நீங்கள் வெறும் கையுடன்
போகக்கூடாது. வேறு என்ன வேண்டும் கேளுங்கள். ஆசிரமம் அமைப்பதற்கு நூறு
வேலி இடம் தரட்டுமா?" என்றான்.

"ஆசிரமம் என்னை ஒரு இடத்தில் முடக்கிவிடும். அதுவும் வேண்டாம். ஏதாவது
அவசியம் தர வேண்டும் என்று நினைத்தால், அந்த மாம்பழத்தில் இரண்டைக்
கொடுங்கள். அதுபோதும்!"

அதிர்ந்துவிட்ட மன்னன். இரண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தான். துறவி
முகமலர்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இதுவரை இங்கு வந்தவர்களில் இவரைவிட எளிமையானவர் எவரும் இல்லை என்பதை
உணர்ந்த மன்னன், அந்த எளிமையை வணங்கும் முகமாக அவரை மீண்டும் ஒருமுறை
விழுந்து வணங்கிவிட்டுச் சொன்னான்.

"சுவாமி, இப்போதுதான் எனக்கு ஞானம் வந்ததுள்ளது. ஆசையும்,
உடைமைகளும்தான்
அத்தனை துன்பங்களுக்கும் காரணம்."

புன்னகைத்த இளம் துறவி புறப்பட்டுவிட்டார். பல்லக்குத் தூக்கிகள் அவரை ஏற்றிக்
கொண்டு போய், புறப்பட்ட இடத்தில் இறக்கிவிட்டுத் திரும்பி வந்து விட்டார்கள்

மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்ற மன்னன், முதன் மந்திரியைப் பாராட்டி, அவரிடம்
ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினான்.
--------------------------------------------------------------------------------------
அன்று மாலை சூரிய அஸ்தமனமாகி மூன்று நாழிகைகள் கழித்து, சற்று இருட்டிய
நேரத்தில், முதன் மந்திரி, முத்தழகன் வீட்டிற்கு வந்தார்.

ஐந்து மணித்துளிகள் அவன் தந்தையுடன் பேசிவிட்டு, மகிழ்ச்சியுடன் முத்தழகன்
இருந்த அறைக்குள் வந்தார்.

மரியாதை நிமித்தமாக எழுந்த முத்தழகனைக் கட்டித் தழுவி, பாராட்டினார்.

"அற்புதமாக நடித்தாய். என்னுடைய எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்தாய். இந்தா
இதை வைத்துக்கொள்" என்று சொல்லி மன்னர் கொடுத்த ஆயிரம் பொற்காசுகள்
அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தார்.

அதில் என்ன இருக்கும் என்றுணர்ந்த முத்தழகன் சொன்னான்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம்"

மந்திரிக்கு ஆச்சரியமாகி விட்டது. "மன்னர் கொடுத்தை நீ வேண்டாம் என்று
சொன்னதற்கு என்ன காரணம் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு
வேளை அவ்வளவு பணம் இருந்தால் ஆபத்து என்று நினைத்து நீ வேண்டாம்
என்று சொல்லியிருக்கலாம். இதை ஏன் வேண்டாம் என்கிறாய்? இதை நான்
அல்லவா உவந்து கொடுக்கிறேன்" என்று கேட்டார்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

மந்திரிக்குக் கோபம் வந்துவிட்டது."அட, புரியாதவனே, எதற்கு இதை வேண்டாம்
என்கிறாய்? அதைச் சொல்!"

"இன்று ஒரு நாளில் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். ஒரு உண்மையான
துறவிக்கு உள்ள மதிப்பைத் தெரிந்து கொண்டேன். எத்தனைபேர்கள் காலில்
விழுகிறார்கள்? எத்தனை உள்ளங்களில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது? எத்தனை
கண்களில்
நீர் சுரக்கிறது? எத்தனை உள்ளங்களில் அமைதி குடிகொள்கிறது?
எல்லாவற்றையும்
தெரிந்துகொண்டேன். அதில் ஒரு மகத்துவம் இருக்கிறது.
அது என்ன என்பதை
முழுதாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இன்று முதல்
நான் துறவியாகி விட்டேன்.
இந்தப் பாழாய்ப்போன பணத்தைக் காட்டி என் மனதைக்
கெடுக்க முயற்சிக்காதீர்கள்
(Don't try to pollute my mind by giving this money!)

"............................."

"மன்னனுக்குச் சொல்லியதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன். இதை ஏழை
மக்களுக்குக் கொடுத்து அவர்களுடைய பசியை நிரந்தரமாகப் போக்குங்கள்.
நீங்கள் இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் பயனில்லாது போகும். ஆகவே
நீங்கள் செல்லலாம்" என்று சொன்னவன் தரையில் அமர்ந்து தியானம் செய்ய
ஆரம்பித்துவிட்டான்.

மந்திரிக்கு சம்மட்டியால் அடித்தைப் போன்று ஆகிவிட்டது. திகைத்துப்போய்
விட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்லமுடியவில்லை. செய்யவும் இயலவில்லை.

அங்கிருந்து கிளம்பித் தலைநகருக்குத் திரும்பினார்.

ஒரு உண்மையான துறவியை உருவாக்கிய மகிழ்ச்சி மட்டும் அவருடைய
உள் மனதில் நீண்ட நாட்கள் குடிகொண்டது!
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு ஞானம் பிறக்கிறது என்றால், அதன் பின்னணியில் கேது இருப்பார்.
அவர்தான் ஞானகாரகன். ஞானம் ஒருவனுக்கு எந்த வயதில் வேண்டுமென்றாலும்
வரலாம். அல்லது வராமலும் போகலாம்.

ஞானத்தைப் பெற்று ஒருவன் ஞானியாகி விட்டால், இந்த வாழ்வியல் துன்பங்கள்
அவனை ஒன்றும் செய்யாது. அவன் எந்த பாதிப்பிற்கும் உள்ளாக மாட்டான்.
அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும்.

ஒரே நாளில் அந்த இளைஞனுக்கு ஞானம் கிடைத்தது பாருங்கள், அதுவும்
கொடுப்பினைக் கணக்கில்தான் வரும்!!!!!!

நமக்கு எப்போது ஞானம் வரும் என்கிறீர்களா? வாருங்கள், கேதுவைப் பற்றிய
பாடத்தைப் படிப்போம். ஒழுங்காகப் படித்தால் உங்களுக்கே அது தெரியவரும்!
பாடம் அடுத்தவாரம் முதல் துவங்குகிறது!
------------------------------------------------------------------------------------
நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28.1.09

அதிரவைத்த இளம் சந்நியாசி!

அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய நாடு நன்றாக இருந்தது. அவனது ஆட்சியில் நாட்டு மக்களும்
நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை
நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று
குழந்தைகள். நித்தமும் அரண்மனையில் சண்டைகள். சச்சரவுகள்.

வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில்
ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத் தினமும் துவைத்துக்
காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம் விளைவிப்பவர்களை அல்லது
குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி
மக்களை தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி.
தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான். அனைத்தும் அவனை
அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை. செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் குறிப்பிட்டு, அழுகாத
குறையாக தன்னுடைய மனக்குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா என்று இளம் துறவி
ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால், எல்லாப்
பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை
என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும் சொன்னார். அதோடு அந்த
இளம் துறவி தற்சமயம் பல்லவ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும்
செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே
புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச்
சொன்னான். முதன்மந்திரியும், நான்கு வீரர்கள் துணையுடன், உடனே
புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,
அரசர்களைவிடத்தான் மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச்
சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய வேலை என்றும்
சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான் முக்கியம் கொடுப்பதில்லை என்றும்
சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்க
வில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால் நடைப் பயணம் மேற்கொண்டிருப்ப
தாகவும், திரும்பும் வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார்.
அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும் கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில்
பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு
தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற
பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி
சமாளிக்க வேண்டியது என்ற முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம்
ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு வாரங்கள் கழித்து
அரசன் நினைவு படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்
சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச் சொல்லி மேலும் ஒருமாத காலத்தை
ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி
விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து தினங்களுக்குள்
அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை
நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில் சிலரது மூளை
அற்புதமாக
வேலை செய்யும். மந்திரியின் மூளையும் அப்படியொரு வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு வந்து நிறுத்திட
மந்திரி
முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும் முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள்
எதுவும் இல்லாததால் போலியான ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினால்
யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத் தேடி, மந்திரி
பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக இருந்த
பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக் கிடைத்தான்.

மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட
முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி,
என்
கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான் பார்த்துக்
கொள்கிறேன்"


முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன்
மந்திரியை எதிர்கொள்வது எப்படி?

------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப்
பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப்பெற்றது.
அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப்
பெற்றது. பட்டையாக விபூதி பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு என்னென்ன பதில்கள்
அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத
கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின் பெயரை
மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது. மொத்தமாகப் பயிற்சி அளிக்கப்
பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில்
அவன் உட்கார வைக்கப்பட்டான். அரண்மனை பல்லக்கு ஒன்று அனுப்பட்டது.
அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத்
தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக
இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல் மலர்களால் அலங்கரிகப்
பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று
கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர் நோக்கிக் காத்துக்
கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

அடுத்த பதிவில் அது தெரிய வரும்!

(தொடரும்)
----------------------------------------------------------------------------
"வாத்தியாரே, இந்தக் கதைக்கும் பாடத்திற்கும் உள்ள தொடர்பு?"

"அடுத்த Topic கேதுவைப்பற்றியது. அதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கதை!
---------------------------------------------------------------------------
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26.1.09

இதாவது கிடைத்ததே!

நினைப்பது எல்லாம் கிடைக்குமா? கிடைக்காது. அது முகேஷ் அம்பானியாக
இருந்தலும் சரி அல்லது பில்கேட்ஸாக இருந்தலும் சரி, நினைத்தது அனைத்தும்
கிடைக்காது அல்லது நடக்காது

சரி கொஞ்சமாவது கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பணிகளைச் செவ்வனே செய்யுங்கள் போதும். அதாவது கல்லை
எறியுங்கள், மாங்காய் விழுந்தாலும் சரி, விழுகாவிட்டலும் சரி. முயற்சியை
விடாதீர்கள். பத்து கல்லிற்கு ஒரு மாங்காயாவது விழுகாதா?

அவனுக்கு மட்டும் மூன்று கல்லிற்கு மூன்று மாங்காய் கிடைக்கிறது. எனக்கு
ஏன் கிடைக்கவில்லை? என்று கேட்காதீர்கள்

அவரவர் ஜாதகப் பலன் அது!

இதாவது கிடைத்ததே என்று நினையுங்கள். திருப்திப்படுங்கள். மகிழ்ச்சிக்கான
மந்திரம் அதுதான்!
--------------------------------------------------------------------------------
Rahu / Mercury - The Rahu / Mercury association shows an understanding
of skills and information are being developed. This native will feel convinced
that if they study, get as many facts as possible and develop their skills
accordingly, there will be an ultimate answer. This leads to more and more
frustration. as there is always another fact or skill to learn. What is being
developed is the realization that the best use for our mind is as a tool that
doubts all mental concepts as being ultimate. Rahu's exhaustion of skills
and information leads the mind to Jnana Yoga, recognizing each incorrect
attachment to the thinking process.

This allows us to separate truth from fiction.

புதனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:

1ல்

+++++ஜாதகன் சுறுசுறுப்பானவன். கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா
என்றால் வெட்டி எடுத்து piece போட்டு pack செய்து கட்டிக் கொண்டு வந்து
விடுவான்.

விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது
விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்
-------------------------------------------------------------------------------
2ல்

ஜாதகன் எதையும் முடிக்க முடியாது. விட்டு, விட்டுத் தொடர வேண்டும்.
உதாரணத்திற்குப் புதிதாக வீடு கட்டுகிறான் என்றால் எட்டு மாதங்களில்
முடிக்க வேண்டிய வேலை. நான்கு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும்.

குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. கணவன் மனைவி இருவரில்
ஒருவருக்குத் துரோகம் அல்லது வஞ்சகத்தால் பெரும் துன்பம் ஏற்படும்
-------------------------------------------------------------------------------
3ல்

தொழில் அல்லது வேலை காரணமாக ஜாதகன் பெட்டி படுக்கையோடு
ஊர் ஊராக அலைய நேரிடும். சமயங்களில் அவனும், அவன் குடும்பத்தினரும்
ஒரே ஊரில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது அந்த இருவருடைய
தசா புத்திகளில் நடக்கும்.

ஜாதகனுக்குப் பெண்களால் தொல்லை ஏற்படும். பெண்கள் என்ன அவர்களாகவா
வந்து இவனைத் தொல்லை செய்யப்போகிறார்கள்? இல்லை. ஜாதகன் பெண்கள்
விஷயத்தில் பல தவறுகளைச் செய்வான். செய்துவிட்டு முழிப்பான். விழிகள்
பிதுங்கும்!
----------------------------------------------------------------------------------
4ல்

+++++ஜாதகன் உயரிய கல்வியாளனாகத் திகழ்வான். அத்துறையில் பெரும் புகழ்
பெறுவான் .தொழில் வீடான பத்தாம் வீடும் நன்றாக இருந்தால், ஜாதகன்
வணிகம் செய்து, பெரும்பொருள் ஈட்டுவான். செல்வம் சேரும்.
---------------------------------------------------------------------------------
5ல்

இந்த அமைப்பு நல்லதல்ல. ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு தாமதமாகும்.
சிலருக்குக் குழந்தைகள் இல்லாமலும் போகும்.

ஜாதகன் நுண்ணறிவு உள்ளவனாகத் திகழ்வான்.
---------------------------------------------------------------------------------
6ல்

ஜாதகனுக்கு விநோதமான நோய்கள் உண்டாகும். தோல் நோய்கள், மற்றும்
நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------
7ல்

ஜாதகன் அதீதக் காம இச்சை உடையவனாக இருப்பான். காம இச்சை
இருக்கலாம். அதீத இச்சைகள் இருந்தால் என்ன ஆகும்? அதற்கு உரிய
விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

மனைவி வழி உறவுகளுடன் மோதல் உண்டாகும். இந்த அமைப்புள்ள
ஜாதகர் கூட்டாக எந்த வேலையைச் செய்தாலும், கடைசியில் அது
விவகாரத்தில்தான் முடியும். வம்பு, வழக்கில்தான் முடியும்.
எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
------------------------------------------------------------------------------
8ல்

ஜாதகன் பல துரோகங்களையும், வஞ்சகங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு 50 வயதிற்குள் கண்டம் ஏற்படலாம். இறைவழிபாடு அவசியம்!
-----------------------------------------------------------------------------
9ல்

++++++ஜாதகர் சகலகலா வல்லவர். சகல வித்தைகளிலும் நிபுணராக இருப்பார்.
சமநோக்கு உடையவர்.

சிலர் ஆன்மீகம் இறைவழிபாடு என்று புது வழியில் இறங்கித் தீவிர
பக்திமான் ஆகிவிடுவார்கள்.
-----------------------------------------------------------------------------
10ல்

+++++++++ஜாதகர் கலைத்திறமை மிக்கவர். பயிலும் கலையில் முதன்மை
பெற்றுத் திகழ்வார். திரப்படத்துறையில் இருப்பவர்களுக்கு, இந்த அமைப்பு
இருந்தால், சினிமாவின் எந்தப் பிரிவில் இருந்தாலும், அந்தப் பிரிவில்
உச்ச நிலைக்குச் சென்று, பணம், புகழ், மதிப்பு என்று அனைத்தையும்
பெறுவார்கள்! காதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று புகழ்பெற
இந்த அமைப்பு மிக, மிக அவசியம்.
-----------------------------------------------------------------------------
11ல்

+++++ ஜாதகர் சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார். செல்வந்தராக
இருப்பார். அல்லது செல்வந்தர் நிலைக்கு உயர்வார். பலரும் விரும்பும்
வண்ணம் அவரது வாழ்க்கை சிறந்து விளங்கும்.
----------------------------------------------------------------------------
12ல்

ஜாத்கர் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும். சொந்தத் தொழில் செய்தால்
தெருவிற்கு வர வேண்டியதாகிவிடும். பல வழிகளிலும் விரையம் ஏற்படும்.
விரையம் என்றால் என்ன வென்று தெரியும் அல்லவா? Losses!
எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!
----------------------------------------------------------------------------
Rahu / Sun - The Rahu / Sun association will show a native who projects
the power of the Sun and thus may appear very confident, yet there is
usually stress and fear beneath the surface revolving around a lack of
confidence. Much of their bravado and dramatic expression is an over
compensation for this fear. The true nature of Self is being developed in
this native, thus a large ego can be seen in less evolved types as well
as a personality, which over estimates in own importance to others.

Over time, a person with this placement becomes more realistic about their
own importance and greater understanding of themselves beyond the level
of personality.

சூரியனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:

1.

லக்கினத்தில் இருந்தால்:
The native will be successful in all the ventures he undertakes!
ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான்.
லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு,
கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.
.................................................................................................................
2

ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான
காலத்தில் ஏற்படும்.
..................................................................................................................
3.

ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச்
ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.
................................................................................................................
4

அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய்
வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம்
இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும்
................................................................................................................
5.

ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு
மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால்
நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்
................................................................................................................
6

ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும்
ஏற்படும்.
.................................................................................................................

7.

ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார்.
சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.
.................................................................................................................
8

ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது
பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம்
ஏற்படலாம்.

அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்
................................................................................................................
9.

ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப்
பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்
................................................................................................................
10

ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார்
சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்
----------------------------------------------------------------------------------------------
11

ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார்.
சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்
..................................................................................................................
12.

ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது
தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம்
செல்ல நேரிடும்.
--------------------------------------------------------------------------------
Sun and Mercury are united (Budha-Aditya Yog) in Kendra, and well supported
by Jupiter/Saturn or both in 1-5-9 combination or 1-5 combination makes
Native read and follow ancient Sciences leading to Spiritual Progress.
Here, Mercury makes Native read, experience and gain Knowledge.

Sun and Saturn in Kendra, above said situation makes Native believe in
Karma followed by complete worship to God (In general reading, this is
Daridrya (Poverty) Yoga). This is a Bramhachari Yog.

Sun with Rahu is a very Powerful Combination in Spiritual Field. If placed
in Kendra, this combination surely gives interest in Spirituality to the native.
------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய முக்கிய செய்திகள்:

ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக்
கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி
விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது?
கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார்.

நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும்
பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்)
உச்ச வீடு: விருச்சிகம்
நீச வீடு: ரிஷபம்.
------------------------------------------------------------------------------
ராகுவின் மகா தசைப் பலன்:

ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்)
ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்)
ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்)

இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம்
ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார்.

மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்)
நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார்.
ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார்.

ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில்
ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார்.
அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும்.
மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம்
இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே
திசை ஆரம்பித்துவிடும்

அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன்
நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும்,
அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out
அல்லது college Drop out ஆகிவிடுவான்
..................................................................................................................
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும்.
மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம்
இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது
சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து
28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும்.

இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது
திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும்

அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது
வாட்டிவிடும்
----------------------------------------------------------------------------------------
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது
அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால்
ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க
இயலாமல் அவதியுறுவான்.
----------------------------------------
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு
மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை.

அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும்
ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும்

பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.

இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
உண்மை நிலை!
-----------------------------------------------------------------------------------------------
ராகுவின் கோச்சார பலன்கள்:

3ல் இருக்கும் போது (அந்தப் பதினெட்டு மாதங்களில்) சுகம், காரிய சித்தி
ஏற்படும்

6ல் இருக்கும்போது, வெற்றி, உடல் உபாதைகள் நிவர்த்தி, பகை வெல்தல்
போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

11ல் தனலாபம், சுகம், போகம்

மற்ற இடங்களில் அவர் வலம் வந்து தங்கும் காலங்களில் நன்மை இருக்காது!
-------------------------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!

நன்றி, வணக்கம் மற்றும் அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.1.09

அட, சண்டாளா!

சண்டாளன் என்பதற்கு அகராதியைப் பார்த்தால் இப்படிப் பதில் இருக்கிறது:

அது வசைச் சொல். பெரும் பாதகம் செய்பவன். சிறிதளவுகூட இரக்கம்
இல்லாதவன்.a term of abuse.one who commits heinous crime; cruel person

அப்படிப்பட்ட தீயவன் யாருக்காவது நன்மை செய்வானா?

செய்வான் என்கிறது ஜோதிடம்.

அதுவும் சில யோகங்களைக் கொடுப்பானாம்

அதற்குப் பெயர் ஒன்றையும் சூட்டி மகிழ்ந்திருக்கிறது ஜோதிடக்கலை!

அதற்குப் பெயர்: குரு சண்டாள யோகம்!

அதானே பார்த்தேன். குருவோடு சேர்ந்தவுடன் அவனுக்கும் நல்ல பெயர்
எடுக்கும் ஆசை வந்துவிடுமோ என்னவோ? யார் கண்டது?

சானியா மிர்சாவுடன் சேர்ந்தால் நமக்கும் டென்னிஸ் ஆட்டத்தில் ஆர்வம்
பிறக்காதா என்ன? சானியாவுடன் மாதத்தில் ஒரு நாளாவது மட்டையைத்
தூக்கிக் கொண்டு ஆடிப்பார்த்துவிட மாட்டோமா என்ன?

This yoga is formed when Jupiter is in conjunction with or is aspected
by Rahu or Ketu

The native is prone to act immorally and perform many misdeeds.
However the results are not as frightening as they are made out to be.
Different results are obtained for the combination in different houses
however if benefic planets are present with this combination or this
combination is aspected by benefic planets the results are auspicious
as the inauspiciousness decreases.

ஆமாம் தீமைகள் குறைவதால் நன்மை என்கிறார்கள். சரி ஏற்றுக் கொள்வோம்
அதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்!

In different houses this combination gives different results as follows

1
ராகு குரு கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகனுக்கு colic pains ஏற்படும்

அது என்ன காலிக் பெயின்?

COLIC, Pain Abdomen

A severe paroxysmal pain in the abdomen, due to spasm, obstruction,
or distention of some one of the hollow viscera.
{Hepatic colic}, the severe pain produced by the passage of a gallstone
from the liver or gall bladder through the bile duct.
{Intestinal colic}, or {Ordinary colic}, pain due to distention of the
intestines by gas.
{Lead colic}, {Painter's colic}, a violent form of intestinal colic, associated
with obstinate constipation, produced by chronic lead poisoning.
{Renal colic}, the severe pain produced by the passage of a calculus
from the kidney through the ureter.
{Wind colic}. See {Intestinal colic}, above.
------------------------------------------------------------------------------------
2

இந்தக் கூட்டணி ஒன்பதில் இருக்க மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும்
இருக்கப் பிறந்த ஜாதகன், சட்டப்படி பிறந்த குழந்தையாக இருக்க மாட்டான்
The native may be an illegitimate child.

அடப்பாவமே!
------------------------------------------------------------------------------------
3.

நான்கில் ராகுவும் குருவும் கூட்டாக இருந்து, அவர்கள் மேல் ஒரு சுபக்கிரகத்தின்
பார்வை விழுந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பக்தியில் திளைப்பவனாக
இருப்பான். சிலர் நீதித்துறைக்குச் சென்று புகழ் பெறுவார்கள்.
-----------------------------------------------------------------------------------------
4.

லக்கினம் சுபக்கிரகத்தின் வீடாக இருந்து, அதை சந்திரனும் இருக்க, இந்த ராகு,
குரு கூட்டணி 5 அல்லது 9ஆம் வீடுகளில் அமையப்பெற்றால், ஜாதகன் சிறந்த
கல்வியாளனாகவும், செல்வந்தனாகவும், மக்களால் மதிக்கப்பெறுபவானவும்
இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------
5.

மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால்,
ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான்.
பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில்
எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான்.
(இருக்காதா பின்னே? எல்லாம் பணம் படுத்தும் பாடு தம்பி, பாடு!)
------------------------------------------------------------------------------------
6.

அந்த அமைப்பு 3ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மிகவும் துணிச்சலானவன்.
அதோடு அந்த அமைப்பை செவ்வாய் பார்வை இட்டால், அபரிதமான
துணிச்சல் இருக்கும். எதற்கும் பயப்படமாட்டான். சர்வதேசத் துணிச்சல் என்று
வைத்துக்கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------
7.

அதே அமைப்பு 6ல் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் புரிந்து
கொள்ளச் சிரமமானவன். தான் பிறந்த மதத்தையே இழிவாகப் பேசக்கூடியவன்.
எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பைப் பேசாமல், அவற்றில் உள்ள சில
ஒவ்வாத நியதிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதை மட்டுமே
குறையாகப் பேசிக்கொண்டு திரிவான்.
-----------------------------------------------------------------------------------
8

பொதுவாக இந்த யோகம் நல்லதொரு யோகமாகக் கொண்டாடப் படுவதில்லை
ஜாதகனுக்கு பல விரோதிகள் இருப்பார்கள். எப்போது வேண்டுமென்றாலும்
அவர்கள் அவனைக் கவிழ்ப்பார்கள்.ஜாதகன் முறையற்ற சிந்தனைகளை
உடையவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------
9

இந்த அமைப்பில் ராகு குருவின் வலிமையைக் குறைப்பான். குரு அதீதமான
சுபக்கிரகம், அவன் அதீதமான அசுபக்கிரகமான ராகுவுடன் சேர்ந்தால் என்ன
ஆகும்? கிராமங்களில் சொல்வார்களே, எதோடு சேர்ந்த எதோ ஒன்று எதையோ
தின்றது என்பார்களே, அதுதான் நடக்கும்.

அந்த எதோ எதோ என்னவென்று தெரிகிறதா? தெரியாதவர்களுக்கு மட்டும்
அடுத்த வரியில் அதைச் சொல்லியிருக்கிறேன். மற்றவர்கள் அந்த வரியைப்
படிக்காமல் தாண்டிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பன்றியோடு சேர்ந்த பசுவும், 'அதைத்' தின்னும்!
--------------------------------------------------------------------------------
10

சிலர் சொல்வார்கள் இந்த அமைப்பு நன்மை செய்யும் என்று. நடைமுறையில்
அது இல்லை. ராகுவின் கோரத்தைக் குரு குறைப்பான் என்பார்கள்.யாரும்
யாரையும் மாற்ற முடியாது.

Donkey is always a donkey: It will not become a horse!
--------------------------------------------------------------------------------
11

குரு குழந்தை பாக்கியத்திற்கான கிரகம், அவனுடன் சேரும் ராகு
ஜாதகனின் 5ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பது
தாமதமாகும். சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகும். சிலரது
மனைவி அடிக்கடி கருச் சிதைவுகளுக்கு உள்ளாவாள்.

அதைவிடக் கொடுமை, சிலருக்கு சற்று ஊனமான குழந்தை பிறக்கலாம்
--------------------------------------------------------------------------------
12.

இதே அமைப்பு 3ல் இருந்தாலும், நான்காம் வீட்டதிபதி நான்கைத் தனது
பார்வையால் பார்க்காவிட்டாலும், ஜாதகனின் கல்வி பாதியில் நின்று போகும்.
நல்ல அறிவும் திறமையும் அவனிடம் இருந்தாலும் முறையான கல்வியை
அவன் பெற முடியாது
---------------------------------------------------------------------------
13

இதே அமைப்பு ஏழில் இருந்தால், திருமண வாழ்வு சோகமாகிவிடும். சிலரது
திருமணம் விவாகரத்தில் முடியும். இந்த அமைப்புள்ளவர்கள் கலப்புத் திருமணம்
செய்தவர்களாக இருந்தால் தப்பித்துவிடுவார்கள்.

ஏழாம் அதிபனுடன் ராகு சேர்ந்தாலும் கலப்புத் திருமணம்தான்!
-----------------------------------------------------------------------------
14.

இந்தக் கூட்டணி அசத்தலாக வேலை செய்யும் இடம் பத்தாம் வீடு.
ஜாதகன் தொழில் செய்தாலும் அல்லது வேலையில் இருந்தாலும் அவன்
சர்வ அதிகாரம் மிகுந்தவனாக இருப்பான். அது நல்ல வழியில் வந்த
அதிகாரமாக இருக்காது. குறுக்கு வழியில் வந்த (சைடு டிராக்கில்)
அதிகாரமாக இருக்கும். தன் தொழிலுக்கு அல்லது வேலைக்கு வேண்டிய
அத்தனை ஜிகினா வேலகளையும் செய்வதில் ஜாதகன் திறமைசாலியாக
இருப்பான். அதை ராகு அவனுக்கு உகந்து வழங்குவார். உயர்வான நிலைக்குச்
ஜாதகன் செல்வான். ராகு அதைத்தன் தாசா புத்திகளில் செய்வார்.

சைடு டிராக் வேலை என்பது காரியம் நடப்பதற்காக தன் முதலாளி அல்லது
அலுவலக நிர்வாகிக்கு, கால் பிடித்துவிடுவதில் இருந்து கூஜா தூக்குவது வரை
அத்தனை வேலைகளையும் செய்வது.

பதிவில் எழுத முடியாத சில வேலைகளையும் ஜாதகன் செய்து எப்படியோ
அடித்துப் பிடித்து மேன்மைக்கு வந்து விடுவான்.

எப்படியோ நன்றாக இருந்தால் நல்லதுதான். நம்மைப் பாதிக்காதவரை சரிதான்
என்று அவன் உடன் இருப்பவர்கள் நினைப்பார்கள்
-------------------------------------------------------------------------------------
1.ல் நன்மை இல்லை (திருமண வாழ்வில் சிக்கல்)

2.ல் நன்மை (வசதிகள், மனைவியால் செல்வம்)

3.ல் பாதி நன்மை (The native will marry a foreign lady) வெளி நாட்டில்
வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்

4.ல் பாதி நன்மை. ஏமாற்று வேலைகளின் மூலம் பணம் வரும். சொத்துக்கள் சேரும்

5.ல் தீமை.குழந்தை பாக்கியம் பாதிப்படையும். இறைவழிபாடு மட்டுமே பரிகாரம்

6.ல் தீமை. ஜாதகன் அறிவில்லாதவனாக இருப்பான்

7.ல் தீமை. ஜாதகனுக்கு 33 வயதிற்கு மேல் திருமணம் நடைபெறும். ஜாதகன்
அந்த வயதிற்குள் பல ஆட்டங்களைப் போட்டுவிடுவான்.
என்ன ஆட்டமா? காமக் களியாட்டம்தான் சுவாமி!

8.ல் தீமை. ஜாதகனுக்கு, உடலில் பல கோளாறுகள் உண்டாகும். பல மருத்துவர்
களுக்கு அவன் வேண்டப்பட்ட நோயாளியாக இருப்பான்.

9.ல் பாதி நன்மை, ஜாதகருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும். தர்மமில்லாத
வழிகளில் பொருள் ஈட்டலும், வாழ்க்கையும் நடக்கும்

10.ல் நன்மை. ஜாதகர் பல தொழில்களைக் செய்வார். வசதியாக வாழ்வார்

11.ல் முழு நன்மை. ஜாதகன் பலருக்கும் ஆசானாக, வித்வானாக அல்லது
வாத்தியாராக இருப்பார். செல்வாக்கு, சொத்து என்று எல்லாம் உடையவராக
விளங்குவார்

12ல் முழு நன்மை. சுகபோகங்கள் நிறைந்தவர். சாதனைகளைப் படைக்கக்கூடியவர்
நாட்டாமையைப் போல வாழ்வார். எந்தப் பிரச்சினையும் தன்னை அணுகாமல்
திறமையாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார்.
==============================================================
இங்கே சொல்லப்படுள்ளவைகள் அனைத்துமே பொதுப்பலன்கள்.
தனிப்பட்டவர்களுக்கு அவர்களின் ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களை
வைத்து இந்தப் பலன்கள் கூடலாம்; குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம்
அதைக் கவனத்தில் கொள்க!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

21.1.09

சிலருக்கு மட்டும் வெற்றி எளிதாகக் கிடைப்பது ஏன்?


சிலருக்கு மட்டும் வெற்றி எளிதாகக் கிடைப்பது ஏன்?

வெற்றி எனும் மூன்றெழுத்துச் சொல்லை விரும்பாத மனிதர் எவரேனும் உண்டா?

அத்தனை மாந்தர்களும் ஆசைப்பட்டுத் தேடுவதும், ஏங்குவதும் வெற்றிக்குத்தான்

எல்லோருக்கும் வெற்றி எளிதில் கிடைக்கிறதா?

இல்லை!

சிலருக்கு மட்டுமே வெற்றி எளிதாகக் கிடைக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது மகன் பிரபுவிற்கும்,
இயக்குனர் S.A சந்திரசேகரன் அவர்களின் மகன் விஜய்க்கும், இயக்குனர்
கஸ்தூரி ராஜா அவர்க்ளின் வின் மகன் தனுஷிற்கும் கிடைத்த வெற்றி,
எளிதான வெற்றி அல்லது துவக்க வெற்றி அனைவரும் கிடைக்குமா?

கிடைக்காது.

திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்களின் பிள்ளைகளாக அவர்கள்
பிறந்ததே, அவர்கள் வெற்றியை எளிதாக எட்டிப் பிடித்ததற்குக் காரணம்.

பண்ணைபுரத்துக்காரர் இசைஞானி இளையராஜா அவர்களையும், அல்லி
நகரத்துக்காரர் பாரதிராஜா அவர்களையும் வெற்றி தேவதை அவளாக
வந்து தழுவவில்லை. அவர்கள் இருவரும் கடும் முயற்சிகள் செய்து அவளைத்
தேடிப் பிடித்தார்கள். அவர்கள் தேடிய விதத்தை அல்லது தேடும்போது பட்ட
சிரமங்களைச் சொன்னால் அதைவைத்தே இரண்டு திரைப்படங்களை எடுக்கலாம்
-------------------------------------------------------------------------------------
புத்தியும் (அறிவும்) வாய்ப்பும் சந்திக்கையில் கிடைப்பது வெற்றி
புத்திக்கு ஒவ்வாதவைகளும், இயல்பு வாழ்க்கையும் (state of being real)
சந்திக்கும் போது கிடைப்பது தோல்வி!

"Success is when Skill meets Opportunity.
Failure is when Fantasy meets Reality."
- Brokins

சரி, எல்லோருக்கும் புத்தி இருக்கிறது. அந்த புத்தியை ஒழுங்காக வேலை
செய்ய விதி விடுகிறதா? மீறி வேலை செய்தாலும் வாய்ப்புக்கள் கிடைக்கிறதா?
வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அது் வெற்றியில் முடிகிறதா?

எல்லாம் ஜாதகப் பலன்! அதுதான் கொடுப்பினை எனப்படும்!

தட்டிவிட்டுப் போவதில் அல்லது கவிழ்த்துவிட்டுப்போவதில் ராகுவிற்கு
இணை ராகுதான். எந்த ஒரு ஜாதகனுக்கு ராகுவின் இம்சை இல்லாமல்
இருக்காது.

ஆனால் அவர் தனியாக இருந்து இம்சித்தால் பரவாயில்லை. வேறு ஒரு
கிரகத்துடன் சேர்ந்து கூட்டாக இம்சிப்பதுதான் பொறுக்க முடியாததாகிவிடும்

கதைத்தது போதும், பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்
-------------------------------------------------------------------------------------
இன்று மனகாரகன் சந்திரனுடன் ராகு சேர்வதால் ஏற்படும் பலன்களைப்
பார்ப்போம்:

மனம் ஏன் கட்டுப்படுவதில்லை?

"கண்போன போக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையை மறந்து போகலாமா"

என்ற அசத்தலான வரிகளுடன் துவங்கும் அற்புதமான பாடல் ஒன்று
உள்ளது. அனைவரும் அறிந்த பாடல் அது. கவிஞர் வாலியின் மகுடத்தில்
மேலும் ஒரு வைரத்தைச் சேர்த்த பாடல் அது!

பாடலைக் கேட்டுக் கிறங்கும் ஒவ்வொரு மனிதனும் அதன்படிதான்
நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவான்.

மனதைக் கட்டிவைத்து விட்டு, உலக நியதிகளின்படி இனிமேல் நடக்க
வேண்டும் என்று மனதில் சூல் கொள்வான்.

நடக்க முடியுமா? முடியாது!

எத்தனை நாட்களுக்கு அந்த வரிகள் மனதில் நிற்கும்?

கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை
நாட்களுக்கு
வரும்?

அதிக பட்சம் இரண்டு நாட்களுக்கு வரும்! அப்புறம் பழைய கதைதான்!

ஏன் அப்படி?

சிலரைத் தவிர, பலருக்கும் மனகாரகன் வலிமை இல்லாமல் இருப்பான்.
மனகாரகன் சந்திரன் வலிமை இல்லாமல் இருந்தால் மனதைக் கட்டுப்
படுத்துவது எப்படி சாத்தியம் ஆகும்?

தடிமனான தாம்புக் கயிற்றை வைத்து மாட்டைக் கட்டலாம். இரட்டை நூலை
(Twine Thread) வைத்து மாட்டைக் கட்ட முடியுமா?

மனகாரகன் சந்திரன், ஜாதகத்தில் நீச மடைந்திருந்தாலும் அல்லது பகை
வீடுகளில் இருந்தாலும், அல்லது தன் சுயவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக்
குறைவான பரல்களுடன் இருந்தாலும் அவன் வலிமையாக இல்லை என்று பொருள்.

அதோடு, சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன்
சந்திரன் சேர்ந்து இருந்தாலும் அல்லது அஸ்தமணம் அடைந்திருந்தாலும்
வலிமை இல்லை!

அதிலும் சந்திரனுடனான ராகுவின் சேர்க்கை, ஜாதகனுக்கு அதிகமான மனப்
போராட்டங்களை ஏற்படுத்தக்கூடியது!

அதனால் என்ன ஆகும்?

அவன்பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
அவன்சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
அவன்கைப் பொருட்கள் காணாமல் போகும்
அவன்மன நிம்மதி மாயமாகிப் போகும்!

எல்லோருக்கும் இது பொதுவானதா?

இல்லை, சிலருக்கு விதிவிலக்கு உண்டு!

யார் அவர்கள்?

அந்த இருவர் கூட்டணியின் மீது குரு அல்லது சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின்
பார்வை பட்டாலும் அல்லது அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் வீடு சர்வாஷ்டக
வர்கத்தில் 30ம் அதற்கு மேலும் பரல்களைப் பெற்று விளங்கினாலும் அவர்களுக்குப்
பாதிப்பு இருக்காது!

சர்வாஷ்டகவர்கத்தையும், அஷ்டகவர்கத்தையும் சரியாகப் பார்க்காமல் அல்லது
அவை இல்லாத ஜாதகங்களுக்கு ஒரு ஜோதிடர் பலன் சொன்னால் அது சமயங்களில்
அவர் காலைவாரி விட்டுவிடும். அவர் சொன்னது பலிக்காமல் போய்விடும்!
===============================================================
Rahu/Ketu tends to bring about very sudden turn of events and can cause
a very rapid rise to power, glory and fame followed by a matching fall in the end!

ராமலிங்க ராஜூவிற்கு நடந்ததை நினைத்துக் கொள்ளுங்கள்!

Another peculiarity of these planets is their "pushing' effect! Any planet
that is conjunct with these planets loses its qualities and energies almost completely.
That effect is particularly seen during the dasha periods of these planets.
The lack of energy, motivation and direction are unmistakable. This is often seen
in combust (conjunction with sun) planets to some extent!
---------------------------------------------------------------------------
1ல்

லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல! ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு,
அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும்.
Rahu in the first house will gives unpleasant influences
-----------------------------------------------------------------------------
2ல்

ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும்.
கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர்
உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.
--------------------------------------------------------------------------------
3ல்
ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார்.
சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்.
ஜாதகரை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக
அவருக்கு வேண்டும்.

சிலர் 'அந்த' நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு
விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும்
இந்த அமைப்பினால்தான்.

உடனே இந்த அமைப்புள்ள பெண்களின் மேல் சந்தேகம் கொண்டு விடாதீர்கள்
சாமிகளா!

சில பெண்கள் இந்த அமைப்பு இருந்தும், பல்லைக் கடித்துக் கொண்டு,
கட்டியவனுடனேயே இருப்பார்கள். அதற்கு பெண்களுக்கென்றுள்ள விஷேச
அமைப்புக்கள் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும். அந்த அமைப்பு
இல்லாவிட்டால்தான் பிரச்சினை!

ஏன் இதைக்குறிப்பிடுகிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, பெண்கள்
கனிவாக நடத்தப்பட வேண்டியவர்கள்.
-------------------------------------------------------------------------------------------
4ல்

ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அவ்வளவுதான். இதைப் பற்றி விரிவாக எழுத
விருப்பமில்லை! அன்னையரைக் குறைகூறி எழுத எனக்கு மனம் வரவில்லை!
அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
-------------------------------------------------------------------------------
5ல்

ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான்
சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம்.

The native will be more inclined to mystic sciences.This combination will give
unfocused intelligence.There could be mental confusion at times and even mental
problems like depression etc.
--------------------------------------------------------------------------------
6ல்

******ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு
வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர்
உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது
பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர்
ஜாதகனுக்குப் படியளப்பார்கள்.

சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்
-------------------------------------------------------------------------------
7ல்

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள்
மிகுந்தவராக இருப்பார். (இருக்கட்டுமே சாமி. அடுத்தவனுக்கு உபத்திரவம்
இல்லாமல் இருந்தால் சரி)

பிற நாடுகளில் வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.(அப்படியென்றால் டபுள்
ஓக்கே! அங்கேயும் போய் சிற்றின்பங்களை அனுபவிக்கட்டும். பேரின்பங்களைச்
சொல்லிக் கழுத்தறுக்கும் ஆட்கள் அங்கே இருக்க மாட்டார்கள்:-))))
--------------------------------------------------------------------------------
8ல்

வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை
இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்
மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான்
அதிகத் துன்பங்கள் ஏற்படும்
-------------------------------------------------------------------------------
9ல்
********ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும்.
அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்
(அப்பாடா சாமி! ஒரு இடத்திலாவது இந்தக் கூட்டணி நன்மை செய்கிறதே!)
-------------------------------------------------------------------------------
10ல்
இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும்.
சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது
தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை
அவர் இழக்க நேரிடும்

Rahu in the 10th house (house of careers) gives good influences, especially
with foreign affairs.10th house career with foreign matters (ambassador, travel
agent, foreign guide, and even spying) would flourish with a strong rahu
influence.

This Rahu gives excellent research abilities, speculation, working with medicines,
lawyers, and those which are erratic or cruel nature (slaughter houses,
hides and skins, and perhaps sewage plants, foul smelling locations or positions)
-------------------------------------------------------------------------------
11ல்
ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின்
தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை
கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும்.
------------------------------------------------------------------------------
12ல்
ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன
அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்!

ஒன்றும் பயப்படாதீர்கள்.ஞானி பட்டம் உங்களுக்குத்தான்:-)))))
-------------------------------------------------------------------------------
Moon/rahu combination has been accepted as an undesirable
combination against mental stability and happiness in life, But there
are some instances where moon/rahu combination have given good
results.It is because, this combination is aspected by benefic planets
or by strong lagna lord or by strong 5th lord or by strong 11th lord!
-------------------------------------------------------------------------------
டிஸ்கி: சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில்
உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது
குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

மற்றவை நாளை!

(அலசல் தொடரும்)

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

19.1.09

கவிஞர் சொன்ன கட்டில் வரி!



கவிஞர் சொன்ன கட்டில் வரி!

"வாத்தியாரே ஒரு கேள்வி...!"

"கேட்டு விடு ராசா, என்ன தயக்கம்?"

"காதல் உணர்வு யாருக்கு அதிகமாக இருக்கும்?"

"வாத்தியாரிடம் கேட்கும் கேள்வியா இது?"

"நீங்கள்தான் பிரம்பில்லாமல் பாடம் நடத்தும் வாத்தியார் என்று டிஸ்கி
போட்டிருக்கிறீர்களே! உங்களிடம் கேட்காமல் யாரிடம் கேட்பதாம்?
பிகு பண்ணாமல் சொல்லுங்கள்!"

"சுக்கிரன் நன்றாக அமைந்தவர்களுக்குத்தான் மெல்லிய உணர்வுகள்
இருக்கும்! மெல்லிய உணர்வுகள் இருப்பவர்களுக்குத்தான் காதல்
உணர்வு
மிகுந்திருக்கும்!"


"ஏன் அய்யா வறுத்து எடுக்கிறீர்கள்? சுக்கிரன் நன்றாக அமைவது என்றால்
என்ன? அதை முதலில் சொல்லுங்கள்!"

"சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கவேண்டும் அல்லது உச்சம் பெற்றிருக்க
வேண்டும். அல்லது ஜாதகத்தில் திரிகோண இடங்களில் அல்லது கேந்திரங்களில்
இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!"

"எனக்கு சுக்கிரனுடன் ராகுவும் சேர்ந்து இருக்கிறான்.அதற்கு எப்படிக் கணக்குப்
பண்ணுவது? நீங்களே சொல்லித்தாருங்கள்!"

"ஆகா, சொல்லித் தந்தால் போயிற்று!"
===============================================================
சந்திரனைக் கண்ட அல்லியென காதலி துள்ளி வந்து நிற்கிறாள். நாணத்தால் அவள்
முகம் சிவந்து இருக்கிறது!

அவளின் அழகில் மயங்கிய காதலன், கிறங்கிப் பாடுகிறான்

"கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளைத் தமிழில்

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி"


உந்தன் கிள்ளை மொழியிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்?
துள்ளித் துள்ளிவரும் நடையில்

மனம் மெல்லத் துடிப்பதும் ஏன்?

உன்னைக் காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ! வாராயோ!"


என்னவொரு நயம் பாருங்கள். அவளுடைய தமிழ் கொஞ்சுகின்ற
பிள்ளைத் தமிழாம். அவளுடைய மொழி கிள்ளை மொழியாம்.
நடை துள்ளிவரும் மானின் நடையாம். அவள், அவன் மனதைக் கேட்டு
வாங்காமல் கொள்ளை அடிகின்றாளாம். கொள்ளை அடித்தவளின்
கரங்களுக்குச் சென்ற மனம் அவளுடைய ஸ்பரிசத்தால் அதாவது
அவளுடைய மென்மையான விரல்கள் பட்டதால் துடிக்கிறதாம்.

அவள் விட்டாளா? அதெப்படி விடுவாள்? காதல் மயக்கம் தலைக்கேற
அவளும் பாடுகின்றாள்

"புன்னைமரத் தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்

பொன்னிநதிக் கரையோரம் மன்னன் நினைவில்

கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன்.


உந்தன் செல்ல மொழியிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்?

துள்ளித் துள்ளிவரும் நடையில்

மனம் மெல்லத் துடிப்பதும் ஏன்?

உன்னைக் காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ! வாராயோ!"


அடடா, என்னவொரு அற்புதமான, இயைந்த பதில் பாருங்கள்
புன்னை மரத் தோப்போரம் அவனுக்காக அவள் காத்திருந்தாளாம்
அந்தப் புன்னை மரமும் பொன்னி நதிக் கரையோரம் இருந்ததாம்.
அவன் முன்பு சொன்ன குயில் பாட்டைச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்து
கொண்டிருந்தாளாம். அதோடு மட்டுமா? மன்னன் அவன் நினைவில்
அந்தக் கன்னி, கண் இமைகள் மூடாமல் காத்து இருந்தாளாம்.

அவனைக் கண்டவுடன், அவன் செல்ல மொழியைக் கேட்பதற்காக
மானைப் போலத் துள்ளி வந்தாளாம்!.

இது சுக்கிரன் தனித்து, நல்ல நிலைமையில் உள்ள காதலர்களுக்கான பாடல்!

சரி, வாருங்கள். அடுத்த பாட்டைப் பார்ப்போம்!

"கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில்வரி
போடப் போறேன்டா வரியைக் கட்டிவிட்டு கட்டிப்புடிடா

கட்டில்வரி முத்தம்தான்டா
வரியே மிச்சமின்றிக் கட்டிப்புடிடா"


எந்த முன்னோட்டமும், வெட்கமும், விவேகமும் இல்லாத காதல் இந்தக் காதல்!

காதலி நேரடியாகவே, ஏன் அதிரடியாகவே அழைப்பு விடுகிறார். புன்னை மரம்
குயில் பாட்டு, கண் இமைகள் போன்று எந்த மெல்லிய உணர்வுகளும் இல்லாத
புண்ணாக்குக் காதல் இந்தக் காதல்.

மாட்டுக் கொட்டிலில், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்ற
தீவனங்களைத்
தொட்டியில் கலக்கி வைத்து விட்டு,
மாட்டை அவிழ்த்து விட்டால், மாடு வந்து
மூச்சிரைக்க
அதைக் குடித்துப் பசியாறுமே, அந்த வகையிலான காதல் இது!


அதற்கு அடுத்துத் தொடர்ந்து வரும் வரிகளைப் பதிவில் எழுத முடியாது.

"எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்.......அதைக் கண்டுபிடித்து...................
அந்த இடத்தில்..........என்று பாட்டு தலை தெறிக்கும் வேகத்தில் போகும்!

வகுப்பிற்குப் பெண் வாசகிகளும் வருகிறார்கள். ஆகவே எழுத முடியாது!

பாடலின் முழு வரிகளும் தேவைப்படுபவர்கள், கூகுள் ஆண்டவரிடம் கேட்டு
பெறலாம்! புன்னகையோடு அதைத் தருவார் அவர் :-)))))

இது சுக்கிரனுடன் ராகு சேர்வதால் ஏற்படும் உணர்வில் காதல் வயப்படுபவர்கள்
பாடும் பாடல்! அந்த மாதிரி உணர்வு உள்ளவர்கள் விரும்பும் பாடல்

கவிஞர்களுக்கு எல்லாக் காதலுமே கைவந்த கலை. சூழ்நிலையைச் சொன்னால்
பாட்டை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். இரண்டாவது பாடலில், கவிஞர் ஒரு
அதிகப் படியான தகவலையும் தந்துள்ளார். அது கட்டிலுக்கான வரி. அதை
அவ்வப்போது மிச்சம் வைக்காமல் செலுத்தினால் போதும் என்கிறார்!

நீங்கள் (மணமான வாசகர்கள்) ஒழுங்காக வரியைச் செலுத்துகிறீர்களா?

விளக்கம் போதுமா?

கதைத்தது போதும்! வாருங்கள், பாடத்தைப் பார்ப்போம்!
===============================================================
ராகுவைப் பற்றிய பாடம் - பகுதி 5

உட் தலைப்பு: ராகுவும் சுக்கிரனும் (Rahu and Venus)

இதற்கு முன் பதிவைப் படித்திராதவர்களை, அதைப் படித்துவிட்டு வந்து இதைப்
படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!

அதன் சுட்டி இங்கே உள்ளது!

ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் உண்டாகும் பலா பலன்கள்!

ராகுவும், சுக்கிரனும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த வீட்டில் இருந்தாலும் நல்லதல்ல!
அது பொதுப்பலன். வேறு சுபக்கிரககங்களின், அல்லது யோகாரகனின் பார்வை
அவர்கள் இருக்கும் வீட்டின் மேல் விழுந்தால் விதிவிலக்கு உண்டு.
இல்லையென்றால் இல்லை!

அவ்வாறு சேர்ந்திருக்கும் இருவராலும் ஜாதகனுக்கு பிரச்சினைக்குரிய நோய்கள்
உண்டாகும். சிலருக்குப் பாலியல் நோய்கள் வரலாம். சிலருக்கு புற்று நோய்
உண்டாகலாம்.
------------------------------------------------------------------------------
1ல்
லக்கினத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

Rahu and Venus together is a good combination for material wealth.
Makes a person able to deal with anybody in society in a sort of free way.
As Venus is love in general, it shows an attraction for foreign partners,
unusual partners, or partners from a different background.
This combination is quite strong in Taurus for both Rahu and Venus -
can give rise to strong urges for comforts and luxury.
One could become a slave to one's desires here - potentially.

ஜாதகன் 'அந்த' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருப்பான். 'அந்த'
விஷயம் என்னவென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகனுக்கு
இரவு பகல் என்று கணக்குக் கிடையாது. எப்போதும் அதன் நினைவாகவே
அலைவான் அல்லது இருப்பான்.

சிலருக்கு அதனால் டன்டனக்காதான். வேறேன்ன? பாலியல் நோய்தான்.
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டல்லவா? அந்த அதீத ஈடுபாட்டிற்கு
அதுதான் விலை!

அளவோடு இருந்தால் அந்த சீக்கு வராது. ஆனால் கூட்டாளிகள் இருவரும்
அதாவது லக்கினத்தில் இருக்கும் ராகுவும் சுக்கிரனும் விடமாட்டார்கள்.

இதே அமைப்புடைய ஜாதகி படு கவர்ச்சியாக இருப்பாள். பலரையும்
திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சியுடன் இருப்பாள். அலங்காரமாக
இருப்பாள்.பார்க்கிறவனைச் சொக்க வைப்பாள்.

அழகு வேறு; கவர்ச்சி வேறு!
பெண் அழகாக இருக்கலாம்; கவர்ச்சியாக இருக்கலாமா?
அதுவும் பலரைச் சாய்க்கும் அளவிற்கு கவர்ச்சியாக இருக்கலாமா?

கவர்ச்சிக்கு வரிந்து கட்டிக்கொண்டு வர நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!:-))))
-----------------------------------------------------------------------
2ல்
******இரண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The native will marry a good wife.Health and wealth are indicated in a
large measure!

இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். ஜாதகனின் குடும்ப வாழ்க்கை சுகமாக
இருக்கும். ஜாதகனோ அல்லது ஜாதகியோ யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப
வாழ்க்கையில் சம்போகத்தைப் பிரதானமாக நடத்தி எப்பொதும் மகிழ்வுடன்
இருப்பார்கள். பேச்சாற்றல் நிறைந்திருக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.
இந்த வீட்டில் அந்த இருவராலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது.
-----------------------------------------------------------------------------
3
மூன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The mental quality is good, but the health will be poor lacking in vitality. Rahu's
association will enhance the bad effects

இளம் வயதிலேயே ஜாதகனுக்குப் பல தீய பழக்கங்கள் ஏற்படும்.
பீடி, சிகரெட்டில் இருந்து கஞ்சாவரை, ஒன்றையும் ஜாதகன் விட்டு
வைத்திருக்க மாட்டான். தெனாவட்டாக இருப்பான்.
சைட் அடிப்பதில் இருந்து சைடில் ஒதுங்குவதுவரை அத்தனை
வேலைகளையும் ஜாதகன் செய்வான். ஆசைப்பட்டதை அடைய
வெட்கமின்றி, தன் வயதைவிடக் குறைந்த வயதுடைய
பெண்ணின் காலில் விழுவதற்குக்கூட ஜாதகன் தயங்க மாட்டான்.

ஜாதகன் ஊர் சுற்றி. பெண்ணாக இருந்தால் வீடு தங்க மாட்டாள்.
அவளுக்குப் பல சிநேகிதங்கள் கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே
என்பாள். அவளைக் கட்டுப்படுத்துவது கடினம்.
-------------------------------------------------------------------------
4
******நான்கில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

This is a favourable place for this combination

ஜாதகனுக்கு எல்லா வசதிகளும் வந்து சேரும். எல்லா சுகங்களும்
கிடைக்கும். அந்த எல்லாம் என்பதில் பெண் சுகமும் அடக்கம்!
பெண்ணின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருந்தால், எல்லா
வசதிகளும் அவளைத் தேடிவரும். கோலமிட்டுக் கொண்டாடி
அவள் காலடியில் விழுந்து கிடக்க நல்லதொரு துணைவனும்
அவளுக்குக் கிடைப்பான்.
-------------------------------------------------------------------------
5
******ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

உழைக்காமல் கிடைக்கின்ற செல்வம் ஜாதகனைத் தேடிவரும்.
பல வழிகளிலும் ஜாதகனுக்குப் பணவரவுகள் இருக்கும். சீட்டாட்டம்,
குதிரை ரேஸ், லாட்டரிச் சீட்டு. பங்கு வணிகம் என்று அவன் எதைத்
தொட்டாலும் பணம் கொட்டும்.

Rahu with Venus in 5th house gives more contact with opposite sex.

இந்த அமைப்பினர்கள் காதலிக்கவென்றே பிறந்தவர்கள்.
பலர் காதலில் சிக்குண்டு கிடப்பார்கள். பெண்ணிடம் சுலபமாக
மயங்கி விடுவார்கள். ஜாதகியாக இருந்தால் ஆணிடம் தன்னைச்
சுலபமாகப் பறி கொடுத்துவிடுவாள்!

ஆகவே இந்த அமைப்பு உடையவர்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்! குறிப்பாகப் பெண்கள்!
-------------------------------------------------------------------------------
6.
ஆறில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The natives personal life will be scandalous!

எப்போதும் மாற்று இனத்தினரின் ஸ்பரிசத்திற்காக ஏங்குபவர்கள்.
ஸ்பரிசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அதேபோல புணர்ச்சிக்கும்
இந்த ஜாதகர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும்
கிடையாது. இரத்த சோகை, இரத்தப் புற்று நோய் போன்ற நோய்கள்
உண்டாகும் அபாயமும் உண்டு!
----------------------------------------------------------------------
7
ஏழில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

venus + rahu indicates extra marital / hidden affairs.
Conjunction of Venus and Rahu also makes native marry a foreign person.
Also 2/12 or 12/2 positions between Rahu and Venus make person marry
with a foreign Person.

Astrologically Venus is known as the goddess of love. In a male horoscope
Venus represents his to be wife. Rahu multiplies it to the extreme level.

But desires, pleasure and true love are three different things. Each plays
a role in human life and with minute observation one can really deduce
their level of intensity in a human life. Rahu and Venus combination ends
in a sudden love marriage, provided Mars is set free from afflictions.

Rahu and Ketu are karmic planets. They play decisive role in shaping
the destiny of one’s conjugal life Rahu-Ketu axis along with certain
combinations definitely cause problems in marriage. The nature and
extent could be different, but affliction of conjugal life is a mortal
certainly. Venus is Karaka for marriage. Hence, Venus in conjunction
with Rahu or Ketu will definitely create marital problems.

எல்லைமீறி நடப்பவர்கள்.வீட்டிற்கு அடங்காதவர்கள்.இந்த அமைப்புள்ள
பலருக்குக் காதல் திருமணம் நடைபெறும். வயது வித்தியாசம் பார்க்க
மாட்டார்கள்,ஜாதி, மதம், இனம் பார்க்க மாட்டார்கள். எதிர்ப்புக்களையும்
மீறி, காதல் மணம் புரிவார்கள். சிலர் சமூகக் கோட்பாடுகளை மதிக்க
மாட்டார்கள். தங்கள் வழியே சரி என்று நடப்பார்கள்!
------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The native will meet many emotional disappointments in life because of
this combination

அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும். விஷக்கடிகள் உண்டாகும்.
Food Poison போன்றவற்றால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும்.
சிலரை மாடு முட்டலாம்.சிலருக்கு வாகனங்களால் விபத்து ஏற்படும்.

பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். ஆடவராக இருந்தாலும் சரி,
மகளிராக இருந்தாலும் சரி, பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும்.

எச்சரிக்கையாக இருந்தால், அதிக பாதிப்புக்கள் இன்றித் தப்பிக்கலாம்.
------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர்கள். வெளிநாடுகளுக்கு
அடிக்கடி சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளி
நாடுகளில் தங்கி பொருள் ஈட்டும் யோகமும் கிடைக்கும்.

பல துன்பங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
10
**********பத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

ஜாதகன் இடைத்தரகர் வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவான். உயர்ந்த
வசதிகளோடு வாழ்க்கை மகிழ்வுடையதாக இருக்கும். வண்டி, வாகனங்கள்
விற்பனை அல்லது அவற்றைக் கொண்டு சிலர் தொழில் செய்து மேன்மை
அடைவார்கள். சிலருக்கு மனைவியால் யோகம் உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The native will be of wandering nature!

ஜாதகன் ரகசிய உறவுகளை உடையவர். ஜாதகனே பல ரகசிய உறவுகளை
ஏற்படுத்திக் கொள்வான். அதிலேயே திளைப்பார். பிற மதத்துப்
பெண்களோடும் உறவுகள் இருக்கும். எல்லையைக் கடந்த, வரம்புகளைக்
கடந்த என்று பல வகைகளிலும் ஜாதகர் ரகசிய உறவுகளை ஏற்படுத்திக்
கொள்வான்
---------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஜாதகன் எந்த வழியில்
தன் செல்வம், சக்தி, நேரம் ஆகியவற்றைத் தொலைப்பான் எனக் காட்டும்.
இந்த அமைப்பு உள்ள ஜாதகனின் செல்வம் ரகசிய வழிகளில் தொலையும்.
அல்லது அவனே முன் நின்று தொலைப்பான்

எல்லவித சுக போகங்களையும் ஜாதகர் அனுபவிப்பான். ஜாதகன் தன்
இச்சைகளை ரகசியமாகத் தீர்த்துக் கொள்வான். அது எந்தவிதமான
இச்சையாகவும் இருக்கலாம்!
--------------------------------------------------------------------------
அலசல் தொடரும். குறிப்பிடப்பட்டுள்ளவைகள் எல்லாமே பொதுப்பலன்கள்
தனி்ப்பட்ட ஜாதகங்களுக்கு அதன் அமைப்பை வைத்து இவைகள் மாறுபடலாம்
ஆகவே யாரும் குதிக்கவும் வேண்டாம்; குழம்பவும் வேண்டாம்!

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!