மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.7.16

உங்களுக்கு உபயோகமான தகவல்!!!


உங்களுக்கு உபயோகமான தகவல்!!!

"நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' - இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால் ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.

திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.

ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.

அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.

8695959595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

நல்ல தொடக்கம்! வாழ்த்துக்கள்! !!!

பணமே பிரதானம்!எனும் நாட.டில் இப்படி ஒரு சமூக சேவை செய்வது மிகப்பெரிய சேவை!வாழ்க வளர்க!!
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.16

பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!



பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.

மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சிகளிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.

ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.

வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.

பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரிக் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பல்பாலே.
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.16

சினிமா: எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம்?


சினிமா: எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம்?

எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம் - என்கிறார் நாயகன்? நாயகியின் கண்ணே பேசுகையில் வாய்ச் சொற்கள் எதற்கு? நியாயம்தானே!!!

உங்களுக்காக என் மனம் கவர்ந்த புதுப்படப் பாடல் ஒன்றின் காணொளி ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறேன். பார்த்து ரசியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
படத்தின் பெயர்: சேதுபதி
படம் வெளியான தேதி 19-2-2016

பாடலைப் பாடியவர்கள்: கே.எஸ்.சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
நடிப்பு: விஜய் சேதுபதி, ரெம்யா நம்பீசன்
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
பாடலாக்கம்: கவிஞரின் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
----------------------------------
பாடலின் வரிகள்:

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா…
------------------------------------
Video Clipping of the Song:
Our sincere thanks to the person who uploaded this song in the net!!!



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===============================================

27.7.16

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

இன்று, அசர வைத்த மூவரின் மேடைப் பேச்சுக்களை காணொளி வடிவில் கொடுத்திருக்கிறேன். பார்த்து, கேட்டு இரசியுங்கள்! எல்லாம் சிறு சிறு காணோளிகள்தான். நேரமாகுமே என்ற கவலையின்றிப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
1
முதலில் ஆசிரியர் திரு.அருள் பிரகாஷ் அவர்களின் மேடைப் பேச்சு


2,
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் மேடைப் பேச்சு


3. திரு.பழ.கருப்பையா அவர்களின் மேடைப் பேச்சு!


==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.16

மனவளம்: உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!


மனவளம்: உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்புதான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.16

இரசனை இருந்தால் கவலை காலி ஆயிரும்; வாழ்க்கை ஜாலி ஆயிரும்!

இரசனை இருந்தால் கவலை காலி ஆயிரும்; வாழ்க்கை ஜாலி ஆயிரும்!

கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,   நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்மும் தாத்தா ...

தலைவர் படம்  First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...

தாகம் தணித்த bore well  pipe தண்ணி ..

பத்து ரூவா change  குடுங்கனு,  கடைக்காரன்  மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...

Notebookன்  கடைசிப்பக்கம்...

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup  இல்லா அழகி ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத  பேப்பர் போடும் சிறுவன்..

Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோக்காரர்...

High beam போடாத lorry driver...

ஊசி போடாத doctor..

சில்லறை கேட்காத conductor..

சிரிக்கும்  police...

முறைக்கும் காதலி..

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a / c ..

sunday சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு ...

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ..

எதிர்பாராத முத்தம் ...

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...

water  packet  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆயிரும்
வாழ்க்கை ஜாலி ஆயிரும்
Face fresh ஆயிரும்

...SO...

வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க .. !
====================================
2
இந்த பதிவைப் படித்து தலை சுத்துச்சுன்னா நான் பொறுப்பல்ல..!!!!

உறவுங்கறது ஒரு சங்கிலி...
அது போய்ட்டே இருக்கும்...
இப்போ மலையாள ஆக்டர் மோகன்லால் இருக்கார். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee. மகேந்திரனோட அம்மா. மகேந்திரனோட மனைவியின் தங்கை தான் லதா ரஜினிகாந்த். லதாரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினி தம்பி ரவி. இவர் மகன் அனிருத். Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் பாட்டி நடிகை சாவித்திரி. தாத்தா நடிகர் ஜெமினி கணேசன்.
இப்போ மோகன்லாலுக்கு, ரஜினி என்ன உறவு?...
பாலாஜிக்கு ஜெமினி என்ன முறை?..
யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
எனக்கு சத்தியமா தெரியவில்லை!
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.16

Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (22-7-2016) புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன மறுவருடமே விவாகரத்தும் ஆனது. மீண்டும் நான்காண்டுகளில் மறுமணமும் சிறப்பாக அமைந்தது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி சிம்ம லக்கினக்காரர்.
லக்கினத்தில் யோககாரகன் செவ்வாய் நல்ல நிலைமையில் அமர்ந்துள்ளார்.
திருவோண நட்சத்திரம். சந்திரன், குரு பகவானின் நேரடிப் பார்வையில் உள்ளார்
பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) ராகு
7ம் அதிபதி சனீஷ்வரன் செவ்வாயின் பார்வையுடன் 7ல்
----------------------------------------
ஜாதகிக்கு அவளுடைய 28வது வயதில் திருமணமானது. ராகு திசையில் புத்தி நாதன் செவ்வாய் திருமணத்தை முடித்து வைத்தார். அதே ராகு திசை முடியும் போது ராகு, திருமண வாழ்க்கையை கவிழ்த்து விட்டுப் போய் விட்டார்.

7ம் அதிபதி சனீஷ்வரன் 7ல் இருப்பதாலும், செவ்வாயின் பார்வை சனி மேல் விழுவதாலும், சந்திரனில் இருந்து 4ல் ராகு இருப்பதாலும், சந்திரனுக்கு எட்டில் செவ்வாய் இருப்பதாலும், முதல் திருமணம் நிலைக்கவில்லை.

ஏழாம் அதிபதி சனீஷ்வரன் குரு பகவான் வீட்டில் இருப்பதாலும், அவரை உச்சமான குரு வலிமையாகப் பார்ப்பதாலும்,  ஜாதகிக்கு மீண்டும் திருமணம் ஆனது. கோச்சார குருபகவான் அதை நடத்தி வைத்தார்

குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள். இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்கு மறுபடியும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் ஒன்பது பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒருவர் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார். அந்த அன்பர் பெயர் திருவாளர்.எம்.ஸ்ரீஇனிவாச ராஜூலு! அவருக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்: அவருடைய விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

1
******////////Blogger Srinivasa Rajulu.M said...
அம்மணி 1966-நவம்பர் 18 நள்ளிரவில் (பிறந்த ஊரைப் பொறுத்து, அது 19-ஆம் தேதி ஆகவும் இருக்கலாம்) திருவோண தினத்தில் பிறந்தவர்.
பத்து வயதில் வந்த ராஹு தசை நல்ல தசை. சுமார் 23 வயதில் சுக்கிர புத்தியில் காதல் திருமணம் (லக்னாதிபனுடன் சேர்ந்த களத்திர காரகனைப் பார்க்கும் செவ்வாயினால்). குரு பார்வையும் திருமணத்திற்கு உதவியது.
ஆனால் ஏழில் நிற்கும் வக்கிர சனியும், அவரைப் பார்க்கும் செவ்வாயும் திருமண வாழ்வை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இன்னொரு காரணம் மாங்கல்ய ஸ்தானாதிபதி பன்னிரண்டில் - உச்சமானாலும் - மறைந்துவிட்டது என்பதால்.
ஏழாம் இடத்தில் இருக்கும் சனியை, இயற்கையில் பாவியான செவ்வாய் பார்ப்பதால் மறுமணத்திற்கு இடமுண்டு. லக்ன மாந்தியாலும், லக்னத்தில் அமர்ந்த செவ்வாயாலும் கோபமும் பிடிவாதமும் மிகுந்திருக்கும் - அது அவ்வப்போது திருமண வாழ்வில் பிரச்சினைகள் கொடுக்கும்.
குடும்ப ஸ்தானாதிபதி மூன்றில் மறைவு. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை - இவையெல்லாம் அமைதியான வாழ்விற்கு அனுகூலமாக இல்லை.//////
Friday, July 22, 2016 10:51:00 AM //////

,அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



இது ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

உப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக (write in detail) எழுதுங்கள்

சரியான விடை. 24-7-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.16

நேற்றைய திரைப்பாடல் புதிருக்கான விடைகள்!

நேற்றைய திரைப்பாடல் புதிருக்கான விடைகள்!

1. இந்தப் பாடல் இடம் பெற்ற இந்தி மொழிப் படத்தின் பெயர் என்ன? பாடலைப் பாடியவரின் பெயர் என்ன?
பதில் படம் woh kaun thi
பாடலைப் பாடியவரின் பெயர்: லதா மங்கேஷ்கர்

2.அந்தப் படத்தின் கதையை அப்படியே தமிழிலும் எடுத்து ஒரு ஹிட்டான படத்தைக் கொடுத்தார்கள். அந்தத் தமிழ்ப் படத்தின் பெயர் என்ன? பாடல் என்ன? அதைப் பாடியவரின் பெயர் என்ன? அந்தப் பாடலை அற்புதமாக மெட்டிற்குத் தகுந்தாற்போல தமிழில் எழுதிக் கொடுத்த கவிஞரின் பெயர் என்ன? இசையமைத்தவரின் பெயர் என்ன?
தமிழில் வந்த படத்தின் பெயர்: ”யார் நீ”
பாடல்: பொன் மேனி தழுவாமல்
பாடியவரின் பெயர்: திருமதி பி.சுசீலா
கவிஞரின் பெயர்: கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்தவரின் பெயர்: வேதா

3. இதுதான் முக்கியமான கேள்வி: இந்தக் கிளிப்பிங்கில், பாடலைப் பாடும் பாடகியின் பெயர் என்ன?
Smt.Vibhavari Apte Joshiji
----------------------------------------------------------
போட்டியில் எட்டுப்பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மிகச்சரியான விடைகளை 4 பேர்கள் எழுதியுள்ளார்கள். மற்றும் 4 பேர்கள் முக்கால் வாசி விடைகளை எழுதியுள்ளார்கள். கலந்து கொண்டு பதில் எழுதிய அந்த எட்டுப் பேர்களுக்கும் பாராட்டுக்கள். மற்றும் நன்றி உரித்தாகுக!
மிகச் சரியான விடைகளை எழுதிய
1. சந்திரசேகரன் சூர்யநாராயணன்
2. ராமராவ்
3. வெங்கடேஷ்
4. எம்.திருமால்
ஆகியோருக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்
அவர்களுடைய பின்னூட்ட்டங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------
1.
/////Chandrasekaran Suryanarayanan Said:
Hindi picture: Woh Kaun Thi (1964) 2. Singer: Lata Mangeshkar 3. Actor: Manoj Kumar, Sahana  4. Tamil Movie Name: Yaar Nee (10th April 1966) 5. Tamil song: பொன் மேனி தழுவாமலே பெண் என்னும் அறியாமல் போக வேண்டுமா . 6. பாடியவர்: பி சுசிலீலா 7. இசை அமைப்பாளர் : வேதா 8. எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன் 9. பட தயாரிப்பாளர் : பி வீரப்பா /////

அருமை. பாராட்டுக்கள்!!!!
---------------------------------
2
******Ramarao said...
1. இந்தி மொழிப் படத்தின் பெயர்: Woh kaun Thi ?
பாடலைப் பாடியவர் பெயர்: லதா மங்கேஷ்கர்
2. தமிழ்ப் படத்தின் பெயர்: யார் நீ ?
பாடியவர்: பி.சுசீலா
பாடலை எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: வேதா
3. பாடகி பெயர்: Vibhavari Apte Joshi
Wednesday, July 20, 2016 6:00:00 AM Delete
Blogger Chandrasekaran Suryanarayana said...
1. Hindi picture: Woh Kaun Thi (1964)
2. Singer: Lata Mangeshkar
3. Actor: Manoj Kumar, Sahana
4. Tamil Movie Name: Yaar Nee (10th April 1966)
5. Tamil song: பொன் மேனி தழுவாமலே பெண் என்னும் அறியாமல் போக வேண்டுமா .
6. பாடியவர்: பி சுசிலா
7. இசை அமைப்பாளர் : வேதா
8. எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்
9. பட தயாரிப்பாளர் : பி வீரப்பா//////

அருமை நண்பரே! சரியான விடைகள். பாராட்டுக்கள்!
---------------------------------------------
3
/////Blogger arumuga nainar said...
Dear Sir,
1) இந்தப் பாடல் இடம் பெற்ற இந்தி மொழிப் படத்தின் பெயர்
Movie name : who kaun thi
2) Singer Name : Lata Mangeshkar
3) Tamil movie Name :Yaar Nee (jaishankar & j.jayalalithaa)
4) Song " Naane Varuven
5) Singer : P.Suseela
6) Lyrics : Kannadasan
7) Music : Vedha/////

எல்லாம் சரிதான். இப்போது இந்தப் பாடலைப் பாடிய பாடகியின் பெயரை நீங்கள் எழுதவில்லை.
-------------------------------------------------
4
******////Blogger venkatesh r said...
படம் : யார் நீ?
வருடம் :1966
குரல் : சுசீலா
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ஹிந்தி : லக் ஜா கலே.
அசல் பாடகர்: லதா மங்கேஷ்கர்.
படத்தில் உள்ளவர் : விபாவரி ஆப்தே ஜோஷி. நல்ல குரல் வளம். ஆனால் அவ்வளவு பிரபலமாகவில்லை.
என்ன மெலடி ஐயா!
கண்ணதாசனின் வரிகள் அருமை!
பாடல் வரிகள் இங்கே!
----------------------------------------
பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ ....

இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
உறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா
நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ ....

இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
உறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா
நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ .....

மழை மேகமே
என் தீபமே
என் காதல் தெய்வமே
மழை மேகமே
என் தீபமே
என் காதல் தெய்வமே
மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே
நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவே
நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ....

பகிர்ந்தமைக்கு நன்றி!
கூகுள் ஆண்டவருக்கும் நன்றி!//////

அருமை. தமிழ்ப் பாடலின் முழு வரிகளையும் கொடுத்த மேன்மைக்கு நன்றி!
---------------------------------------------
5
Blogger Chocks said...
Ayya,,, This song from the Hindi Movie, "Woh Koun Thi". (Who was she?). Sung by Latha manheshkar. The tamil film should be "Yaar Nee?". Jai shankar & Jaya lalitha.//////

எல்லாம் சரிதான். இப்போது இந்தப் பாடலைப் பாடிய பாடகியின் பெயரை நீங்கள் எழுதவில்லை.
--------------------------------------------------
6
Blogger Rajam Anand said...
Dear Vathiyar Iyah
Greetings!
Found the answer using Google and You tube –
1. Name of the film – Who Kaun THi
2. 2. Name of the Tamil Film – Yaar Nee
3. Name of the person who sang the song – Pooja Yadev.
Kind Regards
Rajam Anand/////

பாடகியின் பெயர் தவறு சகோதரி!
------------------------------------------
7
Blogger rishikesav said...
https://www.youtube.com/watch?v=DOks2BzWm2k
----------------------------------------
8
////Blogger Thirumal Muthusamy said...
Sir,
Good Morning.
The results are as follows:
Lag Ja Gale Ke Pir Yeh Haseen Raat Ho Na Ho - Lata
Film: Woh Koun Thi (1964)
Stars: Manoj Kumar & Sadhana
M. Thirumal
Pavalathanur
Blogger Thirumal Muthusamy said...
Sir,
Missing Answers:
The film was remade into Tamil as Yaar Nee? by Sathyam (1966) with Jaishankar and J.Jayalalithaa (who later became Chief Minister of Tamil Nadu).Now she is a chief minister.
M. Thirumal
Pavalathanur
Blogger Thirumal Muthusamy said...
அய்யா
பொன்மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமலே - பாடியவர் சுசிலா -
இசை வேதா - படம் யார் நீ - ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா .
எம்.திருமால்
பவளத்தானூர்
Blogger Thirumal Muthusamy said...
sir,
Missing results: 
Smt.Vibhavariben Apte Joshiji
kannadasan
M.Thirumal
pavalathanur//////

அருமை. பாராட்டுக்கள்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

ஐயோ பாவம், ஆணின் வலிகள்!


ஐயோ பாவம், ஆணின் வலிகள்!

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது...

"டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரியுதா?"

ப்ளஸ்1 போகும்போது....

"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங். இல்லேன்னா ஏதாவது ஒர்க்ஷாப்தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...

" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல.. 2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்... ச்சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்... ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு. உசிரோட இருந்து பிரயோஜனமில்ல. அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.

" பொட்டை புள்ளைன்னா பரவால்ல. கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம். நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும். வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும். எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்.. எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து.. இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக்கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு... உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும் சமாளித்து....கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ.. சீக்கிரம்  ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."

இங்கேதான் தொடங்குகிறது.. ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...திருமணம் நடந்து மனைவியிடம் அன்பாக நடந்து கொண்டால் "அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்" என்று குடும்பத்தினரிடமும் அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்...." ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு... இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்  தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்" என்று பெண்டாட்டியிடமிருந்து  புறப்படும்  ஒரு உத்தரவு....

வேலை இடத்தில் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது. வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் . பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும் என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல், மனைவி பேச்சையும் தட்ட முடியாமல் இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து இரண்டுபக்கமும் கெட்ட பெயர்  வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து, அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில் 'சிடுமூஞ்சி'யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும். குடும்பத்தில் விசேஷம் என்றால் மனைவிமக்களுக்கு நல்லதாய் தேடித்தேடிக் துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிளை தனக்கு 'பை ஒன் கெட் டூ' என டிஸ்கௌன்ட்டிற்கு அலைவான். தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்  நல்லபடியாக செய்து.. உறவு நட்பில் வரும்.... கல்யாணம் கருமாதிக்கு மொய்யெழத பொய்சொல்லிக் கடன் வாங்கி,, வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?

"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல... இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக ஒரு வீடு வாங்கினாலோ? கார் வாங்கினாலோ? அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்... "ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க.. எனக்கும் வாச்சுதே ஒன்னு...  அரைக்காசுக்கு பொறாத மனுசன்... எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.." என்கிற பிலாக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்...'பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'
கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... 'பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா? எப்பப்  பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து அதை பார்க்கும் நிலை வந்தால் பெண்களுக்கு அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.
'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா? என்னால முடியாது பீ மூத்திரம் வழிக்க...உந்தம்பிய பாக்கச் சொல்லு..'

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான், பழிதான், தூசனயும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.
ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள் அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்
 ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
 ஒரு ஆணுக்கு எந்தக் பெருமையும் இல்லை. எந்தப்புகழும் இல்லை. புகழ் வேண்டாம்,  பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்

"நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு.. இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி.. என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் பதினாறு வயது வரைதான் அதன்பிறகு அவன் சாகும்வரையிலும் "கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்."

எல்லா ஆண்களுமே இப்படித்தான் என்று நான் அடாவடி பேசவில்லை. பெருவாரியா நல்ல ஆண்களின் நிலைதான் இது! குடிகார்கள், பொறுப்பற்றவர்களும் இருக்கிறார்கள். நான் பேசியது பொறுப்புள்ள நல்ல ஆண்களைப் பற்றித்தான்.!

விதிவிலக்குகள் ஆண்களிலும், பெண்களிலும் இருபாலரிடத்தும் உண்டு!
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.16

Quiz: புதிர்: திரைப்படப் பாடலை வைத்து ஒரு புதிர். காட்டுங்கள் உங்கள் திறமையை!


Quiz: புதிர்: திரைப்படப் பாடலை வைத்து ஒரு புதிர். காட்டுங்கள் உங்கள் திறமையை!

கீழே ஒரு பாடலின் காணொளியைக் கொடுத்துள்ளேன்.



காணொளியை நன்றாகப் பாருங்கள். பாடலையும் கேளுங்கள். மொழி புரியாவிட்டாலும் பாடலின் மெட்டு உங்களுக்குப் பழக்கமானதுதான்!.

சரி கேள்விகளுக்கு வருகிறேன்.

1. இந்தப் பாடல் இடம் பெற்ற இந்தி மொழிப் படத்தின் பெயர் என்ன? பாடலைப் பாடியவரின் பெயர் என்ன?

2.அந்தப் படத்தின் கதையை அப்படியே தமிழிலும் எடுத்து ஒரு ஹிட்டான படத்தைக் கொடுத்தார்கள். அந்தத் தமிழ்ப் படத்தின் பெயர் என்ன? பாடல் என்ன? அதைப் பாடியவரின் பெயர் என்ன? அந்தப் பாடலை அற்புதமாக மெட்டிற்குத் தகுந்தாற்போல தமிழில் எழுதிக் கொடுத்த கவிஞரின் பெயர் என்ன? இசையமைத்தவரின் பெயர் என்ன?

3. இதுதான் முக்கியமான கேள்வி: இந்தக் கிளிப்பிங்கில், பாடலைப் பாடும் பாடகியின் பெயர் என்ன?

எனக்கு பாடல் மட்டுமே வாட்ஸப்பில் வந்தது. அதை வைத்து, இன்றைய தொழில் நுட்பம், மற்றும் இணைய வசதி, கூகுள் ஆண்டவர், ஆகியவற்றின் உதவியுடன் மேலே உள்ள கேள்விகள் அனைத்திற்கும் விடைகளை நானே கண்டுபிடித்தேன்.

ஆகவே உங்களுக்கும் சிரமம் ஒன்றும் இருக்காது. நீங்களும் கண்டு பிடிக்கலாம். எங்கே உங்கள் திறமையைக் காட்டுங்கள் பார்க்கலாம்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------
கண்மணி: “வாத்தி (யார்) இதையெல்லாம் யார் கேட்டார்கள்? ஜோதிடப் புதிர் எங்கே வாத்தியார்?”
வாத்தியார்: 22-7-2016 வெள்ளிக்கிழமையன்று வெளிவரும் கண்ணா!!!!
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.16

நாம் அறிய வேண்டிய கேள்விகளும் அருமையான பதில்களும்!


நாம் அறிய வேண்டிய கேள்விகளும் அருமையான பதில்களும்!

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர். கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய " பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா "
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....

✒எது இதமானது?

தர்மம்.

✒நஞ்சு எது?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

✒மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?

பற்றுதல்.

✒கள்வர்கள் யார்?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

✒எதிரி யார்?

சோம்பல்.

✒எல்லோரும் பயப்படுவது எதற்கு?

இறப்புக்கு.

✒குருடனை விட குருடன் யார்?

ஆசைகள்
உள்ளவன்.

✒சூரன் யார்?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

✒மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல்
இருப்பது.

✒எது துக்கம்?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

✒உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

✒தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?

இளமை, செல்வம், ஆயுள் ஆகியன.

✒சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?

நல்லவர்கள்.

✒எது சுகமானது?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

✒எது இன்பம் தரும்?

நல்ல மனதுடையோர்களின்சிநேகிதம்.

✒எது மரணத்துக்கு இணையானது?

அசட்டுத்தனம்.

✒விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம்?

காலமறிந்து செய்யும் உதவி.

✒இறக்கும் வரை உறுத்துவது எது?

ரகசியமாகச் செய்த பாவம்.

✒எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?

துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள். நன்றி கெட்டவர்கள்
ஆகியோர்!

✒சாது என்பவர் யார்?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

✒உலகத்தை யாரால் வெல்ல முடியும்?

✨சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

✒யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

✨எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

✒செவிடன் யார்?

✨ நல்லதைக்
கேட்காதவன்.

✒ஊமை யார்?

✨சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

✒நண்பன் யார்?

✨பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

✒யாரை விபத்துகள் அணுகாது?

✨ மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
=============================================================
முதிர்ச்சியைப் பற்றி ஆதிசங்கரர் சொன்னது:

1. Maturity is *when you stop trying to change others, ...instead focus on changing yourself.*

2. Maturity is when you  *accept people as they are.*

3. Maturity is when you *understand everyone is right in their own perspective.*

4. Maturity is when you *learn to "let go".*

5. Maturity is when you are  able to *drop "expectations" from a relationship and give for the sake of giving.*

6. Maturity is when you *understand whatever you do, you do for your own peace.*

7. Maturity is when you *stop proving to the world, how intelligent you are.*

8. Maturity is when you *don't seek approval from others.*

9. Maturity is when you *stop comparing with others.*

10. Maturity is when you *are at peace with yourself.*

11. Maturity is when you *are able to differentiate between "need" and "want" and are able to let go of your wants.*

*& last but most meaningful !*

12. You gain Maturity when you *stop attaching "happiness" to material things !!*

_*Wishing all a happy matured life. 😊*_
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.16

முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது?

முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது?

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் எப்படி கிடைத்தது....?

முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை ?

பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும் , அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்....

பாண்டவர்களும் அதையே செய்ய திட்டமிடும் போது

அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்....

விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்....

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்....

மிருகங்கள் இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்...

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்...

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது....

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்....

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்..ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது..

அதுமற்றவர்கள்கண்களுக்குதெரியவில்லை..

சகாதேவனுக்குமட்டும்தெரிகிறது....

கிருஷ்ணரும் மிகக் களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்...

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா . எல்லோரும்விறகைச் சுமந்துவந்தார்கள்...அவர்கள் களைப்பாவது நியாயம்...உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய் என்று கேட்கிறான்...

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது....

சகாதேவனை தனியே அழைத்துச் செல்லும் அவர் கேட்க ,சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்....

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்...இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்....

தனக்குத்தெரிந்த விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார்.

சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்....

ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் மிகவும் வற்புறுத்திக்கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை மட்டும் சொல்கிறான்...

மனம் வருந்தும் அவர் , தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார்.

அதன்காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல் பங்கேற்கிறார்....

சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே விடை.... பாரத்த்தில் கண்ணன் மாயாவி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.7.16

இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் அதிசயம்!!

இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் அதிசயம்!

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!! மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில் காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது. 1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669) 2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067) 3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410) 4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798) 5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455) 6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694) 7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559) 8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174) கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.7.16

கடவுளே வாத்தியாராக வந்தால் எப்படி இருக்கும்?


கடவுளே வாத்தியாராக வந்தால் எப்படி இருக்கும்?

ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜை

நமக்கு, ‘அ, ஆ’ எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு; அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம். கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம் செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா… அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்; அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார். மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும் பணத்துடன் கிளம்பிச் சென்ற போது, வழியில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்னுமிடத்தில், மந்திர ஒலி கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, குருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். அவரிடம், தன்னை சீடராக ஏற்று உபதேசமளிக்கும்படி வேண்டினார், மாணிக்கவாசகர்.

குருவும் அவருக்கு தீட்சை அளித்தார். சற்று நேரத்தில் குரு மறைந்து போக, ‘சிவபெருமானே குருவாக வந்து, தனக்கு உபதேசம் அளித்துள்ளார்…’ என புரிந்து, உள்ளம் உருகி பாடினார்; அதுவே, திருவாசகம்.

குதிரை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை, சிவாலய பணிக்கு செலவிட்டார்.

இதையறிந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார். பக்தனின் பெருமையை உலகிற்கு உணர்த்த, நரிகளை, பரிகளாக்கி, அதை, மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான். ஆனால், அன்று இரவில், அக்குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டித்தான்.

அப்போது, வைகையில் வெள்ளம் வரச் செய்தார் சிவன். ஊருக்குள் வெள்ளம் வந்து விடும் என பயந்த மன்னர், ஆற்றங்கரையை உயர்த்த, வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரும்படி உத்தரவிட்டார். வந்தி எனும் முதிய சிவபக்தைக்காக, கூலியாளாக வந்து வேலை செய்தார், சிவபெருமான்.

ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியில் களைத்து தூங்குவது போன்று பாவனை செய்தார், எம்பெருமான். அங்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்குபவரைப் பார்த்ததும், அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி, உலகில் உள்ள எல்லா உயிர்களின் மீதும் விழ, வந்திருப்பது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட மன்னர், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டார்.

பக்தருக்காக, கடவுள் அடி வாங்கியுள்ளார் என்றால், அது மாணிக்க வாசகருக்காகத் தான்!

திருப் பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்கவாசகருக்கு சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில் சிவனுக்கே உற்சவம் நடக்கும். இங்கே மாணிக்கவாசகருக்குத் தான் உற்சவம் நடக்கிறது. இதை, பக்தோற்ஸவம் (பக்தனுக்கு நடத்தும் விழா) என்பர். ஆனி மகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும்.

பக்தியுள்ளவர்களுக்கு சோதனை வருவது இயற்கை; இறைவன் அதிலிருந்து விடுதலை தருவான் என்ற நம்பிக்கையோடு, அதைத் தாங்கும் பக்குவத்தைப் பெற்று விட்டால், இறைநிலையையே அடைந்து விடலாம் என்பதற்கு, மாணிக்கவாசகரின் வரலாறு உதாரணம்.
========================================================================
மாணிக்கவாசகர் வழிபட்ட கோயிலின் தல புராணம்:
http://shaivam.org/siddhanta/sp/spt_t_tirupperunturai.htm
========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.16

பிறந்த வீடு என்னும் சொர்க்கம்!

பிறந்த வீடு என்னும் சொர்க்கம்!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கைபெண்களை...புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்_பெண்களை.
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.7.16

முயன்றால் முன்னுக்கு வரலாம் !!!!


முயன்றால் முன்னுக்கு வரலாம்:

22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை!

பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்.

பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு மணி நேர பயண தூரத்துல இருக்கிற மாதிரி நிலம் தேடுனேன். அப்படி 2001-ம் வருஷம் கிடைச்சதுதான் இந்த நிலம். எங்க வீட்டுல இருந்து 50 கிலோ மீட்டர் தூரம்தான். மொத்தம் மூணே முக்கால் ஏக்கர். பக்கத்துலேயே ரெண்டே கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சிருக்கேன். மொத்தம் ஆறு ஏக்கர். இதுல, நாலு ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, சவுண்டல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களைப் போட்டிருக்கேன். ஒண்ணே கால் ஏக்கர்ல ஏ.டி.டீ-43 நெல் இருக்கு. மீதி இடங்கள்ல கிணறு, மாட்டுக் கொட்டகை, பாதை எல்லாம் இருக்கு.

பயிற்சிக்குப் பிறகு பண்ணை!

பால் பண்ணை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டதால ‘கே.வி.கே’வில் மாடு, கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு... ஆரம்பத்துல ஆறு கலப்பின மாடுகளை வாங்கினேன். அவை மூலமா, தினமும் 20 லிட்டர் வரை பால் கிடைச்சது. தனியார் பால் பண்ணைக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதோட, இயற்கை முறையில பசுந்தீவனங்கள், காய்கறி, சோளம், சாமை, தினைனு சாகுபடியும் செய்துட்டு இருந்தேன். சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஒரு கட்டத்துல சிறுதானிய விவசாயத்துல கவனம் போனதால மாடுகளை சரியா கவனிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, இப்போ மறுபடியும் பால் உற்பத்தியில முழுகவனத்தையும் திசை திருப்பியிருக்கேன்.

கைகொடுத்த வங்கிக்கடன்!

பால் விற்பனைனு மட்டும் நின்னுடாம மதிப்புக் கூட்டல் செய்து கூடுதல் லாபம் பாக்கணும்னு முடிவு பண்ணி... வங்கியில 35 லட்ச ரூபாய் கடன் வாங்கி, பால் பண்ணையை விரிவுபடுத்தினேன். கிணறு வெட்டி, நிலத்தைச் சரிபடுத்தினேன். அதோட, தார்பார்க்கர், சாஹிவால், சிந்தினு நாட்டு மாடுகளையும், பால் மதிப்புக் கூட்டல் இயந்திரங்களையும் வாங்கினேன். இப்போ மொத்தம் 22 மாடுகள் இருக்கு. பால் பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடியப் போகுது. இப்ப, தினமும் 150 லிட்டர்ல இருந்து
180 லிட்டர் வரை பால் கிடைக்குது.

இயற்கைப்பாலுக்கு கூடுதல் ருசி!

இயற்கை விவசாயத்தில் விளைந்த தீவனங்களை மட்டுமே சாப்பிடுற நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல திக்கா, ருசியா இருக்கும். இந்த பாலுக்கு பிராண்ட் பெயர் பதிவு செஞ்சு, சிறுதொழிலுக்கான சான்றையும் வாங்கி பாக்கெட்ல அடைச்சு சென்னையில இருக்கிற பசுமை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு இருக்கு. மீதமுள்ள பால்ல ஆர்டரைப் பொறுத்து பனீர், வெண்ணெய், நெய் தயாரிச்சு விற்பனை செய்றேன். அப்படியும் பால் மீதமானா தனியார் பண்ணைகளுக்கு ஊத்திடுவேன்” என்ற ஹரிபிரசாத், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பற்றிச் சொன்னார்.

அட்சயப் பாத்திரம்!

“பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சிலசமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. சாணம், சிறுநீரை விற்பனை செய்றேன். பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். யாகத்துக்கான வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றேன். தார்பார்க்கர் மாட்டுச்சாண வறட்டி யாகத்துக்கு நல்லதுங்கிறதால எப்பவும் ஆர்டர் இருந்துகிட்டே இருக்கு. ஒரு லிட்டர் சிறுநீரை எட்டு ரூபாய்னும், ஒரு வறட்டியை மூணு ரூபாய்னும் விற்பனை செய்றேன்.

‘இப்ப என்கிட்ட மொத்தம் 22 மாடுகள் இருக்கு. இதன் மூலமா மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்குது. இதுல, பசுமை அங்காடிக்கு லிட்டர் 55 ரூபாய் விலையில தினமும் 50 லிட்டர் கொடுக்கிறேன். மாசத்துக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. நெய், பனீர், வெண்ணெய் விற்பனை மூலமா சராசரியா மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தனியார் பண்ணைக்குக் கொடுக்கிற பால் மூலமா மாசத்துக்கு 34 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. சிறுநீர், சாணம், பஞ்சகவ்யா, வறட்டி, கோழி முட்டை, வாத்து முட்டை விற்பனை மூலமா மாசத்துக்கு சராசரியா 33 ஆயிரம் ரூபாய் வருது. ஆக மொத்தம் மாசம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்ச ரூபாய் லாபமா நிக்குது. அதுல, கடனுக்கான தவணைத் தொகையா மாசம் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. மீதி 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது. வங்கிக் கடனை அடைச்சப் பிறகு, மாசம் ஒரு லட்சம் சொளையா கைக்கு கிடைக்கும்’’ என்ற ஹரிபிரசாத், மாடுகளுக்கான நோய் மேலாண்மை பற்றியும் பேசினார்.

தீவனத்தோடு மருந்து!

“மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய்னு சீசனுக்கு தகுந்தாப்புல நோய்கள் வரும். அந்தந்த சீசனுக்குத் தகுந்த மாதிரி நோய் வர்றதுக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா நோய்த்தாக்குதலைத் தவிர்த்துடலாம். அதுபோக, மடிவீக்க நோய்தான் பெரும் பிரச்னை. அது எப்ப வரும்னே தெரியாது. அதுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கண்டிப்பா அவசியம். நாங்க பெரும்பாலும் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கிட்டத்தான் ஆலோசனை கேட்டுக்குவோம். அது போக, எங்க மாடுகளுக்கு... வாரத்துல ஒரு நாள் தீவனத்தோட வேப்பிலை; ஒரு நாளைக்கு பூண்டு; ஒரு நாளைக்கு மஞ்சள்னு கொடுத்துடுவோம். அதுனால பெருசா நோய் தொந்தரவு இல்லாம ஆரோக்கியமா இருக்கு.

பண்ணையில இருக்கிற வாத்துகள் மாட்டு ஈ, உண்ணிகளையெல்லாம் பிடிச்சு தின்னுடுது. அதனால பாதி பிரச்னை சரியாகிடுது. பொதுவா, மாடுகளை தினமும் குளிப்பாட்டணும். ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியா கவனமா பார்க்கணும். சில மாடுக தீவனம் எடுக்காம இருக்கும். சில மாடுக சோர்வா இருக்கும். அந்த மாடுகளுக்கு என்ன பிரச்னைனு பாத்து அதை சரி செய்யணும். ஆகமொத்தம் முறையா செய்தால் பால் பண்ணை நிச்சயமா லாபம் கொழிக்கும் தொழில்ங்கிறதுல சந்தேகமேயில்லை” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஹரிபிரசாத்.

தொடர்புக்கு,
ஹரிபிரசாத்,
செல்போன்: 99406-69714.

வெண்ணெய்க்கு தார்பார்க்கர்!

வெண்ணெய் எடுக்க தார்பார்க்கர் மாட்டுப்பாலை மட்டுமே பயன்படுத்தும் ஹரிபிரசாத், ‘‘பழைய கால முறைப்படி பானையில வெச்சு கடைஞ்சி வெண்ணெய் எடுக்கிறேன். 25 லிட்டர் பாலுக்கு 5 கிலோ வெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ வெண்ணெய் 700 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. 5 கிலோவுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். விசேஷ நாட்கள்ல வெண்ணெய் ஆர்டர் அதிகமாக வரும்’’ என்கிறார்.

பலே பனீர்!

மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கு முறையாகப் பயிற்சி எடுத்திருக்கும் ஹரிபிரசாத், ‘‘பனீர் தயாரிக்க அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. பால்ல எலுமிச்சைச்சாறை விட்டா, கால் மணி நேரத்துல பால் புளிச்சுடும். 5 லிட்டர் பாலுக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிஞ்சு விடலாம். புளிச்சு கெட்டியான பாலை, வடிகட்டி பனீர் தயாரிக்கிற கருவியில போட்டு இடியாப்பம் பிழியிற மாதிரி பிழிஞ்சா, தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சு கட்டியான பனீர் கிடைக்கும். அதை அப்படியே பாக்கெட் பண்ணிக் கொடுத்திடலாம். ஒரு கிலோ பனீர் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவை. ஒரு கிலோ பனீர் 400 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்கிறார்.

கைசெலவுக்கு முட்டை!

சில ரக கோழிகளையும் வளர்க்கிறார் ஹரிபிரசாத். அவற்றைப் பற்றி பேசும்போது, ‘‘எங்க பண்ணையில 150 நாட்டுக்கோழிகள் இருக்கு. கிரிராஜா, வனராஜா ரகக் கோழிகளைத்தான் வளர்க்கிறேன்.

இதுகளுக்காக தனியா கொட்டகை கிடையாது. அப்பப்ப தீவனம் கொடுக்கிறது, தடுப்பூசிகள் போடுறதோட சரி.

காலையில கிளம்பி தோட்டம் முழுக்க மேய்ஞ்சுட்டு, சாயங்கால நேரத்துல அதுகளா அடைஞ்சுக்கும். அடைக்கு வெக்கிறது போக மீதி முட்டைகளை மட்டும் விற்பனை செய்றோம். கோழிகளை விற்பதில்லை. அதேமாதிரி வாத்துகள் மூலமா கிடைக்கிற முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். இந்த முட்டை வருமானம் கைசெலவுக்கு சரியா இருக்குது’’ என்று குஷியாகச் சொல்கிறார்.

நன்றி: பசுமை விகடன்!

முயன்றால் முன்னுக்கு வரலாம். எல்லாம் சாத்தியம் என்பதற்கு, இக்கட்டுரையின் நாயகர் ஹரி பிரசாத் அவர்களே உதாரணம்!
------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.7.16

செவ்வாய்க்கிழமை என்ன செய்ய வேண்டும்?



செவ்வாய்க்கிழமை என்ன செய்ய வேண்டும்?

பழநிமலை முருகன் ஸ்ரீபாலதண்டாயுதபாணி சிலையின் பெருமைகள்:

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.

10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்குப்பின்தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார்.

11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

14.அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

15.போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகதலிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

18.பழனியில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா
ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..

இன்று செவ்வாய்க்கிழமை. முருகனுக்கு உகந்தநாள். இன்று இருக்கும் இடத்தில் இருந்து முருகனை நினைத்து வழிபடுங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும்!

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.7.16

குட்டிக்கதை: நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?


குட்டிக்கதை: நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?

ஒரு குரு இருந்தார்.  அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர்.  அவருடைய  குரு குலத்தில்  பல மாணவர்கள் தங்கி வில் வித்தை பயின்று வந்தார்கள்.  அதில் ஒரு மாணவன் மிகச் சிறப்பாக சகல வித்தைகளையும்  கற்றுத்  தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். இதையெல்லாம் கேட்கக் கேட்க அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.  அது கற்றுக் கொடுத்த  குருவையே அலட்சியமாக நினைக்க வைத்தது.  அவனுக்குள் ஒரு தீய  எண்ணம் வேர்விட்டது.

"இனியும்  நான்  ஏன் பொறுத்திருக்க வேண்டும்?  குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது  எனக்கும் தெரியுமே! இன்னும் கூட அதிகமாகக் கற்றுக் கொள்ள எனக்கு  இளமையும்,  வயதும் இருக்கிறது.  இனி நான்தான்  குரு.  பழைய குருவை விரட்டுவேன். நானே குரு ஆவேன்" என்று எண்ணி  ஒரு  ஆலோசனை செய்தான்.  மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு  குருவின் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று சத்தமிட்டான். "கிழட்டு  குருவே வெளியே வாரும்.  இனி நீரல்ல, நான்தான்  குரு.  உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன்.  தைரியம் இருந்தால் மோதிப் பாரும்.  இல்லை என்றால்  இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்" என்றான்.
 
குரு இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.  வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததில்  கொஞ்சம் நிலை குலைந்து போனார். ஆனாலும் உறுதியான  குரலில் சொன்னார் . " போட்டி துவங்கலாம் ". துவங்கியது.

முதலில்  குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி  எய்தார். அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது.  சிஷ்யனும் அதே போல்  ஒரு  அம்பை எய்ய அது  இரண்டு காய்களை வீழ்த்தியது.  சிஷ்யனின் ஆதரவாளர்கள்  கைதட்டி  ஆர்ப்பரித்தனர்.

அடுத்து  குரு இரண்டு  அம்புகளை ஒன்றாக விடுத்தார்.  அதில் சரியாக  ஒரு  இலையும்,  ஒரு காயும் விழுந்தன.  சீடன்  அலட்சியமாக மூன்று அம்புகளை  ஒன்றாய்  எய்ய  அது  ஒரு இலையையும் ,  ஒரு காயையும் ,  ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது.  சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது. குரு இப்போது தரையைப் பார்த்து  தலைகுனிந்தபடி வானத்தை நோக்கி அம்பு விட்டார்.  அது குறிபார்த்து  எய்ததுபோல் விண்ணில் பறந்து கொண்டிருந்த  ஒரு பறவையின்  மார்பில் தைத்து அதைக் கீழே விழ வைத்தது.

சிஷ்யனின்  கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியே  அவனும்    தலையைக் குனிந்தவாறே   ஒரு  அம்பை  எய்தான். அவனது  அம்போ இரண்டு பறவைகளை ஒன்றாக  வீழ்த்தியது.  சிஷ்யனின் கூட்டம்  கூத்தாடியது. மரியாதை
1இல்லாமல் குருவின்  அருகே வந்து அவரை சுற்றி நின்று கைதட்டியது.

மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர்.  குரு  அவமானப் படுத்தப்படுவதை அவர்களால்  தாங்கிக்கொள்ள முடியவில்லை.  குரு வில்லையும் , அம்பையும் கீழே போட்டுத் தரையில் மண்டியிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

குரு தோல்வியை  ஒப்புக் கொண்டு விட்டாரோ?

எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்.

திடீரென்று குரு கண்ணைத் திறந்து வானத்தை  ஏறிட்டுப் பார்த்தார்.  அவர் பார்த்த மாத்திரத்திலேயே வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த சில பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.  இப்போது சீடனின் முகம்  இருண்டது .

"குருவிடம்  இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே " .

மனதுக்குள் மிரண்டாலும் அவனும்  அவரைப் போலவே மண்டியிட்டு வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான்.  ஒன்று கூட விழவில்லை.  பதற்றமாக மீண்டும் பார்த்தான்.  அப்போதும் எதுவும் விழவில்லை.  மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான் .  திடீரென  எழுந்து குருவின்  பாதங்களில்  விழுந்து அழுதான்.  "குருவே!  எப்போதுமே நீங்கள் மட்டுமே  பெரியவர்.

என்னை  மன்னிப்பீர்களா?" என்றான். குரு  அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

" நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள் நான் பார்க்கும்போது விழவில்லையே. ஏன் குருவே?

குரு சொன்னார்

" தாழ்மை வந்தால்தான்  மேன்மை வரும்.  அகந்தை வந்தால்  அழிவுதான் வரும் " "ஆம்  குருவே,  நான் பாவி.  ஒன்றும்  அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்.

குரு சொன்னார், " இப்போது மேலே பார்" பார்த்தான்.  பறந்து கொண்டிருந்த  ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.
செல்லமே!  மேன்மைக்கு ஏதுவான தாழ்மையை இந்த நாளில் ஆண்டவரிடம்  வேண்டிப் பெற்றுக்   கொள்வோமா?

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் ".
============================================================
படித்ததில் பிடித்தது. அறியத்தந்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.7.16

Week end posts: நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

Week end posts: நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. அவனிருக்கையில் நமக்கென்ன குறை!



2. இதுதான் மத நல்லிணக்கம்! கடப்பா (ஆந்திர மாநிலத்தில்) கிடைத்த காணொளி!



3. தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்!



நன்றாக இருந்தன. உங்களுக்குஅறியத் தந்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
============================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.7.16

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்?

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்?

*_சிற்றின்பம்_*
 - (இது  நிலையற்றது)
*_பேரின்பம்_*
 - ( இது நிலையானது)
இந்த இரண்டிற்கும் உள்ள  வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்

1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால்
ஈர்க்கப் பட்டால் பேரின்பம்.

2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை
ஆராதித்தால் பேரின்பம்.

3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

5. நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

6. அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

7. செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

8. செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

9. புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

10. இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி
அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

11. நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

12. உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

13. இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

14. எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

15. பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

16. பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

17. சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

18. பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

19. அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

20. அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

21. அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

22. பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

23. முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

24. இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

25. உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

26. புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

27. மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

28. மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

29. மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.

30. வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

31. பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

32. அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

33. தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.

34. ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.

35. துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

36. ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப் படுவது பேரின்பம்.

37. உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

38. பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

39. இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.

40. அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.

41. பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

42. சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.

43. பற்றுக் கொள்வது சிற்றின்பம். பற்றற்று இருப்பது பேரின்பம்.

44. மாறுவது, தாவுவது சிற்றின்பம். மாறாதது நிலைத்தது பேரின்பம்.

45. நிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.

46. உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம் இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்

47. இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்
இல்லறத்தில் இருந்து கொண்டு பரம் பொருளை ( சிவபெருமானை ) நினைத்து வாழ்வது *_பேரின்பம்_*.
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.7.16

ஆலயம் எதற்கு என்று கேட்டதற்கு என்ன சொன்னார் சுவாமி விவேகானந்தர்.....?


ஆலயம் எதற்கு என்று கேட்டதற்கு என்ன சொன்னார் சுவாமி விவேகானந்தர்.....?

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன்,
அவனிடம்
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா ? என்று....
அவன் ஓடிப் போய்
ஒரு சோம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.
சுவாமி கேட்டார்
நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான்
அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல,
ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?
அதுதான் ஆலயம்..!
ஆனாலும்
செம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!
=============================
*சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!*

1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

4. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.
=========================================================
3
முடியாது *என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.*

முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.*

*எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகி விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா.?*
_பொறுங்கள்…_
*இன்னும் சில வழிகள் இருக்கின்றன* _தேடுங்கள்_

*மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காதே.
*மாற்ற முடிந்ததை*  மாற்றாமல் விடாதே!.
*மாற்றக்கூடியது எது,*
*மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.*

*வேலைகளை ஒத்திப் போடுபவன்,*
வெற்றிகளை ஒத்திப் போடுகிறான்;
*விதைப்பதை ஒத்திப் போடுபவன்,*
விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.

ஆரம்பித்தால் *அரை வெற்றி,*
தொடர்ந்தால் *முக்கால் வெற்றி,*
முடிந்தால் *முழு வெற்றி.*

_*லட்சியம்,*_
 _*திட்டம்*_
_*உழைப்பு,*_
_*விடா முயற்சி*_
 _இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்._

*தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல.*
_உழைத்தது சரியில்லை என்று தான் பொருள்._

முடியும் *என்பது தன்னம்பிக்கை*
முடியுமா *என்பது அவநம்பிக்கை.*
முடியாது *என்பது மூட நம்பிக்கை*
========================================================
படித்து ரசித்து பகிர்ந்தேன் .....
அன்புடன்
வாத்தியார்
=======================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.7.16

கவியரசரின் அசாத்தியத் திறமை!


கவியரசரின் அசாத்தியத் திறமை!

"மருத மலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.

இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.

அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்"....

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்ற வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..

கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து ",ஐயா ,என்னை விட்டுறுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார் குன்னக்குடி வைத்தியநாதன்!
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!