மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.7.16

இரசனை இருந்தால் கவலை காலி ஆயிரும்; வாழ்க்கை ஜாலி ஆயிரும்!

இரசனை இருந்தால் கவலை காலி ஆயிரும்; வாழ்க்கை ஜாலி ஆயிரும்!

கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,   நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்மும் தாத்தா ...

தலைவர் படம்  First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...

தாகம் தணித்த bore well  pipe தண்ணி ..

பத்து ரூவா change  குடுங்கனு,  கடைக்காரன்  மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...

Notebookன்  கடைசிப்பக்கம்...

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup  இல்லா அழகி ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத  பேப்பர் போடும் சிறுவன்..

Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோக்காரர்...

High beam போடாத lorry driver...

ஊசி போடாத doctor..

சில்லறை கேட்காத conductor..

சிரிக்கும்  police...

முறைக்கும் காதலி..

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a / c ..

sunday சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு ...

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ..

எதிர்பாராத முத்தம் ...

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...

water  packet  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆயிரும்
வாழ்க்கை ஜாலி ஆயிரும்
Face fresh ஆயிரும்

...SO...

வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க .. !
====================================
2
இந்த பதிவைப் படித்து தலை சுத்துச்சுன்னா நான் பொறுப்பல்ல..!!!!

உறவுங்கறது ஒரு சங்கிலி...
அது போய்ட்டே இருக்கும்...
இப்போ மலையாள ஆக்டர் மோகன்லால் இருக்கார். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee. மகேந்திரனோட அம்மா. மகேந்திரனோட மனைவியின் தங்கை தான் லதா ரஜினிகாந்த். லதாரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினி தம்பி ரவி. இவர் மகன் அனிருத். Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் பாட்டி நடிகை சாவித்திரி. தாத்தா நடிகர் ஜெமினி கணேசன்.
இப்போ மோகன்லாலுக்கு, ரஜினி என்ன உறவு?...
பாலாஜிக்கு ஜெமினி என்ன முறை?..
யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
எனக்கு சத்தியமா தெரியவில்லை!
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம் குருவே,வாழ்க குருவே!
    கலக்கீட்டீங்கய்யா செமத்தயா!
    படிக்கப் படிக்க சிரிப்பு!நெசமாவே எங்கவலயெல்லாமே மறந்தேனே!
    அதுலயும் ரெண்டாவது ஜோக்
    அதிமதுரம்யா! சும்மாச்சும்மா படிச்சேன்
    கொஞ்ச நேரம்னாலும் என்னயே தெரியாம எங்த உலகத்துலயோ இருந்துட்டு சிரிச்சிருந்தேனே!
    ஆஹா, அக்கணத்தைத் தந்த வாத்தியாரே, ஒங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்!!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,உண்மையான பதிவு.வெறுக்க வைக்கும் விசயங்களையே மனதில் போட்டு உழட்டுவதைவிட,வாழ்கையின் சின்ன,சின்ன சந்தோஷங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் கவலையும் பறந்துவிடும் மேலும் எதிர்மறை எண்ணங்களும் தோன்றாது எனநினைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. Ippaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.. Super sir

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,வாழ்க குருவே!
    கலக்கீட்டீங்கய்யா செமத்தயா!
    படிக்கப் படிக்க சிரிப்பு!நெசமாவே எங்கவலயெல்லாமே மறந்தேனே!
    அதுலயும் ரெண்டாவது ஜோக்
    அதிமதுரம்யா! சும்மாச்சும்மா படிச்சேன்
    கொஞ்ச நேரம்னாலும் என்னயே தெரியாம எங்த உலகத்துலயோ இருந்துட்டு சிரிச்சிருந்தேனே!
    ஆஹா, அக்கணத்தைத் தந்த வாத்தியாரே, ஒங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்!!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  5. ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,உண்மையான பதிவு.வெறுக்க வைக்கும் விசயங்களையே மனதில் போட்டு உழட்டுவதைவிட,வாழ்கையின் சின்ன,சின்ன சந்தோஷங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் கவலையும் பறந்துவிடும் மேலும் எதிர்மறை எண்ணங்களும் தோன்றாது எனநினைக்கிறேன்.நன்றி./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு ஆதித்தன்!

    ReplyDelete
  6. ///////Blogger jay kumar said...
    Ippaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.. Super sir//////

    நல்லது. நன்றி ஜெய்குமார்!

    ReplyDelete
  7. இந்த அவசர உலகத்தில் நாம் எவ்வளவு நல்ல வைகளை கவனிக்காமல் ரசிக்காமல் கடந்து செல்கிறோம் என்பது புரிந்தது.
    நன்று ஐயா..

    ReplyDelete
  8. ////////இந்த பதிவைப் படித்து தலை சுத்துச்சுன்னா நான் பொறுப்பல்ல..!!!!////////


    தலை சுத்துச்சு ஐயா!!!!!!!!!!, தலை சுத்துச்சு !!!!!!!!


    SANTHANAM SALEM

    ReplyDelete
  9. ////Blogger Sakthi Balan said...
    இந்த அவசர உலகத்தில் நாம் எவ்வளவு நல்ல வைகளை கவனிக்காமல் ரசிக்காமல் கடந்து செல்கிறோம் என்பது புரிந்தது.
    நன்று ஐயா..////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger Senthil J said...
    ////////இந்த பதிவைப் படித்து தலை சுத்துச்சுன்னா நான் பொறுப்பல்ல..!!!!////////
    தலை சுத்துச்சு ஐயா!!!!!!!!!!, தலை சுத்துச்சு !!!!!!!!
    SANTHANAM SALEM//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com