மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.16

Astrology - Quiz 102 Answer: தங்கமழையும் பெய்யவில்லை! குயிலும் பாடவில்லை!

Astrology - Quiz 102 Answer: தங்கமழையும் பெய்யவில்லை! குயிலும் பாடவில்லை!

தங்கமழை எப்படிப் பெய்யும்? அது கவிஞர் வைரமுத்துவின் வரி. திரைப்படம் ஒன்றில் நாயகியின் மனநிலையைக் குறிக்க அந்த வரியைப் பயன்
படுத்தினார்! சந்தோஷமான மன நிலைமையில் சாதா மழையே தங்க மழையாகத் தெரியும்! அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
---------------
சரி, அதை விடுங்கள். பாடத்திற்கு வருவோம்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது
 இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு.
 இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail
Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக ஒரு ஜாதகத்தை அலசுவதற்கு நேற்றுக் கொடுத்திருந்தேன்.
-----------------------------------------------------------------------------------


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில
மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ்நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன்
ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப்
பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின்  பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

4-12-13 அன்று இந்தப் பாடம் முன்பே வெளிவந்துள்ளது. இரண்டாண்டுகளில் நிறைய புது முகங்கள் வந்துள்ளதால் அவர்களுக்காக மீண்டும் வலை
ஏற்றினேன். அதை நினவுபடுத்தி ஒரு அன்பர் எழுதியுள்ளார். அவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகும்!

19 அன்பர்கள் சரியான விடையையோடு ஒத்து வரும்படியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கேது
கொடிபிடிக்கும் ஜாதகம் என்று கண்டு பிடித்து எழுதியவர்கள் மூவர். அவர்களுடைய பதிலுக்கு +++++++ என்ற குறியிட்டு அடையாளப்
படுத்தியுள்ளேன். அவர்களுக்கு விசேடமான பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
1
//////Blogger Srinivasa Rajulu.M said...
தாமதத் திருமணம்; ஆனால் நீடிக்காத திருமண வாழ்க்கை
1) களத்திர மற்றும் சயனபோக அதிபதி மற்றும் காரகன் ஆகிய சுக்கிரன் ராசியிலும் அம்ஸத்திலும் மறைவிடத்தில் இருக்கிறான்.
2) பாபிகளின் பார்வை மற்றும் இருப்பு களத்திர ஸ்தானத்தில் அமைந்தது.
3) இருப்பினும், நீசனானாலும் குருவின் பார்வை இருந்ததால் குருதசை முடிவில் (தாமதத்) திருமணம் நடந்தது.
குடும்ப-சுக ஸ்தானாதிபதி நீசம்; மறைந்துவிட்ட எட்டாம் அதிபன் புதன் மற்றும் எட்டாம் இடத்தில் செவ்வாயின் பார்வை உள்ளதால் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிந்தது. சயனபோக அதிபதியும் மறைந்ததால் தங்க மழை இல்லை!
Friday, January 29, 2016 10:02:00 AM ///////
----------------------------------------------------
2
/////Blogger Jaya Prakash said...
viruchikkka lagnam....lanatipathi sevvai raaguvodu serkai...7aam athipathi sukranae kalathirakaaraganaagi 7kku 12l maraivu...thirumana vaazhvu nimmathi illai...thanga mazhaiyum illai..kuyilum paadavillai...5 aam athipathium neecham..9aaam athipathi raagu saaram..raagu dasai,gurudasai,sanidasai,bhudhn dadsai,kethudasai,sukra dasai...ena athu atduthu yogam illa dasaikall...thirumana vaazhvu sugapadaatha jathagaththukku nalla utharaanam
Friday, January 29, 2016 10:20:00 AM /////
----------------------------------------------------------
3
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்..........
ஜாதகிக்கு விருச்சகலக்னம். செவ்வாய்+ வில்லன்ராகுவுடன்!
7ஆம் இடத்தில்.கேடிகள் சூரி+கேதுவும்
7ஆம்அதிபதி 6ல். 7ஆம்இடத்திற்கு12ல்(சுக்கிரன் சுகபடவில்லை)
2ஆம்இடத்திற்கும்,7ஆம்இடத்திற்கும் யுனிவர்சல்கேடி சனியின் லேசர்பார்வை
அம்மனிக்கு30வயதுக்குமேல். ரத்தமழை+கன்னீர்மழை பெய்திருக்கும்
bye.......
Friday, January 29, 2016 10:24:00 AM/////
-----------------------------------------------------
4
//////Blogger KJ said...
Sir,
Native will not be having good Marriage life. Possibility of separation after Marriage.
Because, Kethu sits in Seventh house and Ragu in Lagnam. Karaga Sukran with 8th house owner in sixth even though Vibareeth Raja Yoga is there. 
Thanks,
Sathishkumar GS
Friday, January 29, 2016 2:11:00 PM /////
--------------------------------------------------
5
/////Blogger venkat said...
உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்,இந்த புதிர் தாங்கள் முன்பே அலசியதுதான்,http://classroom2007.blogspot.in/2013/12/astrology.html
Friday, January 29, 2016 7:13:00 PM /////
--------------------------------------------------
6
//////Blogger selvaspk said...
அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா? 
தமிழில் குயில் பாடியதா? 
அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா? 
I am not clear on question. But I guess you ask about marriage life, wealth of the person.
Marriage
1. 7th house on strong kalathira dosam with all natural malefic aspects (Saturn, Mars, sun, Raghu). With 10 lord with kethu, Venus sitting on 12th from 7th house, debilitated Jupiter, Mars and confirms MARRIAGE DENIAL. Though Jupiter aspects, not strong enough getting a marriage, she should have decided to go on public service.
2. She should be a govt servant, possibly police or military official making her shine among all her peers or male coworkers. Debilitated mars with aspect of Saturn make her stubborn and disciplined nature. Keen intelligence planet Kethu in 7th with Sun the lord of 10th house & bakyathipathi getting jupiter saturn and mars aspects notes she is incorruptible, go high positions on carrier with commanding superior position.
3. Monetary wise, she should be good. Debilitated Mars and Jupiter and aspect of strong Saturn on 2nd house from lagna, moon, navamsa denotes continuous and surplus flow of money through her job. She may even be doing charitable works for social welfare.
Friday, January 29, 2016 10:07:00 PM //////
-------------------------------------------------
7
//////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு வணக்கங்கள்,
முதலாவதாக, time extension தந்ததிற்கு மிக்க நன்றி. போனவாரத்தான் கேள்விக்கு பதிலெழுதியபின் upload பண்ணவந்தபோது உங்கள் விடை காத்திருந்தது.
இந்த வாரத்தான் கேள்விக்கு பிறந்த திகதி கணிக்க முடியவில்லை, எனினும்...........
செவ்வாய் லக்கினத்தில், சொந்த வீடும் கூட, ஆனால் அம்சத்தில் செவ்வாய் நீசம். லக்கினத்தில் ராகுவும் கூட.
சனி அம்சத்தில் உச்சம். சனியும் குருவும் பரிவரத்தனை யோகம் ராசியில்.
சூரியனும் கேதுவும் ஒன்றுசேர்ந்திருப்பது நல்லதல்ல, அதுமட்டுமல்லாமல் 7ம் வீட்டிலும். 7ம் வீட்டதிபதியாகிய சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்துவிட்டார், மற்றையது பாபகர்த்தரி யோகத்திலும் இருக்கின்றார். செவ்வாயும் சனியும் 7ம் வீட்டை 7ம் பார்வையாகவும் 3ம் பார்வையாகவும் பார்க்கின்றார்கள். 7ம் வீட்டில் கேதுவும் கூட.
குரு 7ம் வீட்டை, 5ம் பார்வையாக பாரத்தாலும், சனி 10ம் பார்வையாக குருவை பார்க்கின்றது. ஆகவே குருவின் பார்வையாலும் நன்மையில்லை.
மொத்தமாக ஜாதகி ராகு தசையில் திருமணம் செய்து, ராகு திசையிலே முடிந்திருக்கலாம். 5ல் சனியிருப்பதனால் பிள்ளைகளாலும் பலனில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Saturday, January 30, 2016 4:32:00 AM/////
--------------------------------------------------
8
++++++++++//////Blogger kmr.krishnan said...
'முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை;பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்பது போலத்தான் இந்த ஜாதகம் உள்ளது.
ஜாதகி 1 ஜூன் 1937; மாலை 6 மணி 33 நிமிடம்,50 வினாடிக்குப் பிறந்தவர்.
பிறந்த் இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1.ஏழாம் அதிபன் சுக்ரன் ஆறில் மறைந்து எட்டாம் அதிபன் புதனுடன் தன் வீட்டிற்கு 12ல் நின்றது திருமண வாழ்வுக்குப் பெரிய பாதகம்.
2. ஏழாம் வீடு சனி, செவ்வாய், ராகுவால் பார்க்கப்பட்டும், சூரியன் கேதுவால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதால் மண வாழ்க்கைக்கு பாதிப்பு.
3. கேது கொடிபிடித்துச் செல்லும் சர்ப தோஷம்.
4.ராசி நவாம்சம் இரண்டிலும் ஏழாம் இடத்திற்குக் குருவின் பார்வை என்பதே ஒரு ஆறுதலான செய்தி.ஆனாலும் வலிமையற்ற குரு.
கால சர்பதோஷத்தால் 30 வயதுவரை திருமணம் ஆகவில்லை. பின்னர் சனிதசா வந்துவிட்டது.
இவர் திருமணம் ஆகாமல் காலத்தைக்கழித்தார் என்று கணிக்கிறேன்.
Saturday, January 30, 2016 12:26:00 PM//////
----------------------------------------------
9
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR, THE ABOVE LADY LOSE HER HUSBAND IN EARLY AGE BECAUSE FIRST,
1. THE LAGANA LORD IS IN 6TH PLACE 
2. THE 2ND LORD GURU IS IN NEECHAM AND THE 7TH LORD IS IN 6TH PLACE WITH 8TH LORD BUDHAN 
3. THE MANGALA STHANAM 8TH LORD BUDHAN IS IN 6TH PLACE WITH 12TH LORD
4. IN NAVAMASA 7TH LORD IS IN 12TH PLACE AND RAGU IS IN SECOND PLACE
5. IN NAVAMASA THE 12TH LORD MARS IS IN 8TH PLACE 
SO THESE INDICATION TO SHOW US HER FIRST MARRIAGE LIFE END EARLY BUT THE SECOND MARIAGE HOPE IS THERE IN RASI 7TH AND 11TH LORD IN CONJUCTION INDICATES HER SECOND MARRIAGE
Saturday, January 30, 2016 12:47:00 PM /////
-----------------------------------------------
10
/////Blogger Mrs Anpalagan N said...
குயில் கூவி என்ன, தங்க மழை பெய்தென்ன? காதும் அவுட்டாகி, கண்ணும் அவுட்டாகினால், எதுவும் உபயோகமில்லை! 
லக்கினாதிபதி ராகுவுடன் லக்கினத்தில்! எழில் சூரியனும் கேதுவும். 
ஏழாம் அதிபதி வெள்ளி, ஆறில்! கூடவே எட்டாம் அதிபதியுடன்! 
ஏழுக்கு வியாழ பார்வை உண்டென்பதால் திருமணமாகி இருக்கும். ஆனால் அது திருப்தியை தரவோ, நீடித்திருக்கவோ வழியில்லாத கிரக நிலைகள்.
Saturday, January 30, 2016 1:37:00 PM//////
------------------------------------------------
11
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Viruchiga lagna jathagi
Lagnathipathi - Sevai lagnathil + raagu vudan kootani (Sevvai balam izhandhu ullar - Navamsathil neecham)
Thirumana vaazhkai patri paarpathrku 2 + 7 aam idam paarka pada vendum
7 aam idathu athipathi sukran antha veetiruku 12 il ullar + 8aam athipathi budhan udan kootani (lagnathiruku 6il)
3 aam idathil amarndha neecha guru (Navamsathil - sama veetil ullar) 5 aam paarvaiaaga 7aam idathai paarkirar + 7 aam veetiruku saniswaranin 3 aam paarvaiyum ullathu + 7 aam & 8 aam veetin mel sevvai yin paarvai um ullathu
Neecha guru aanalum, guru dasayil jaathagiku thirumanathai nadathi veithaar
lagnathirku 6 aam idathil 7+8 athipathi kootaniyinal jathagi kanavarai pirinthu vaazhvar (Husband would have died or divorced her)
2 aam idathu athipathi neecham petru + 2 aam idathirku saniswaranin 10aam paarvai um ullathu - Ithanal kudumba vaazhkai nandraga irukaathu...
Chandra lagnathil irundhu 2 aam idathirku uriyavanum guru bhagavan thaan. 
Avar neecham petru 12il(chandra lagnathirku) poi irundhadhum jathagiyin thirumana vaazhkai nandraga illai enbayathai solgirathu.
Nandri,
Bala
Saturday, January 30, 2016 2:03:00 PM //////
---------------------------------------------
12
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இப்பெண்ணிற்கு ஏழாமிடதில் சூரியன், கேது சேர்க்கை, சனி பார்வை, ராகு பார்வை, செவ்வாய் பார்வை, கலத்திர காரகனும் ஏழுக்குடையவனுமாகிய சுக்கிரன் மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனுடன் ஆறில் மறைந்து விதவை தோசம் இருந்தாலும் ஏழாமிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.ஆனாலும் இவர் கணவரை பிரிந்தோ அல்லது இழந்தோ அல்லது விவாகரத்து பெற்றோ இருப்பார்.
நன்றி
செல்வம்
Saturday, January 30, 2016 2:35:00 PM//////
--------------------------------------------
13
//////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா வணக்கம் 30/01/2016
ஜோதிட புதிர் -102. கால தாமத திருமணம் - திருமண வாழ்க்கை சுகமில்லை. 
ஜாதகி விருச்சிக லக்னம், கும்ப ராசி.
லக்னாதிபதி செவ்வாய் (வக்ரம்) & நவாம்சத்தில் நீசம்.
லக்னத்தில் ராகு உச்சம். 7ல் கேது நீசம். மாந்தி தவிர்த்து எல்லா கோள்களும் ராகு - கேதுவுக்குள் இருப்பதால் சர்ப்ப தோஷம்.
தனம் / பூர்வபுண்ணிய காரகன் குரு ராசியில் நீசம் & நவாம்சத்தில் குரு+மாந்தி சேர்க்கை.
களத்திரகாரகன் & களத்திர ஸ்தானதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு 12 ல் விரயத்தில். 
அச்டமாதிபதி & லாபாதிபதி புதன் 12ல் விரயத்தில். 
7ம் அதிபதி சுக்கிரன் நின்ற வீட்டிற்க்கு 2ல் நீச கேது. 
செவ்வாயும் சுக்கிரனும் 6/8 ஸ்தானத்தில், மேலும் 7 & 8ம் அதிபதிக்கு பாபகர்தாரி யோக அமைப்பு இருப்பதாலும் திருமண தடை & கால தாமத திருமண அமைப்பை காட்டுகிறது.
4ம் அதிபதி சனி 5ல் இருப்பதும் குரு நீசம் பெற்றதால் சுகம் குறைவு & இல்லறம் சிறப்பாக அமையவில்லை.
களத்திர & ஆயுள் ஸ்தானதிபதி 6ல் மறைவு பெறுவதும் சனி,செவ்வாய் பார்வை 7, 8 க்கு கிடைப்பதும் திருமண வாழ்வை சிறக்க செய்யவில்லை. 
குரு திசை ராகு புத்தியில் திருமணம் நடந்தது . ஜாதகியின் கணவருக்கு ஆயுள் பலம் சிறப்பாக இல்லாதலால் குரு திசை நிறைவில் இல்லற வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் நடந்தது. (மாங்கல்ய ஸ்தானம் பலம் இல்லை) பின்னர் சனி திசை பிற்பகுதியில் ஓரளவு வாழ்க்கை பாதை சீரானது என்றாலும் ஜாதகியின் அடுத்தடுத்த திருமணங்கள் தோல்வியில் தான் முடிந்திருக்க வேண்டும்.
அன்புடன் 
சோமசுந்தரம் பழனியப்பன், மஸ்கட் 
Saturday, January 30, 2016 3:42:00 PM /////
----------------------------------------------
14
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ஜாதகி .லக்னம் விருசிகம் .
லக்னத்தில் லக்னாதிபதி உடன் உச்சமாக ராஹு ...அடுத்து கேது 7ல் ஆஹா கடிகார சுற்றில் கேது கோடி பிடிக்க எல்லா கிரகங்களும் உள்ளடங்கி **விலோமா *** யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம்.
அலசியாச்சு ..அய்யா ..ஏற்கெனெவே பாடம் 461 ல் மாதிரி ஜாதகம் எண் 21.
திருமணம் ஆகி விதவை ..பொருளாதார ரீதியாக பரவா இல்லாமல் இருக்கும் ஏனென்றால் 11ல் ஜிகஜாண்டிக் வில்லன் மாந்தி .
Saturday, January 30, 2016 4:23:00 PM //////
---------------------------------------------------
15
++++++++++///////Blogger venkatesh r said...
அம்மணியின் திருமண வாழ்வில் புயல் வீசியது. 
அலசல்:
கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் வக்கிரகதியில் ராகுவுடன் சேர்ந்து நவாம்சத்தில் நீசம் அடைந்து வலுவிழந்துள்ளார். தனாதிபதியும் குடும்ப ஸ்தானாதிபதியுமான குரு பகவான் 3மிடத்தில் வக்கிரகதியுடன் நீசமடைந்து விட்டார்.களத்திராதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிர பகவான் ஆறில் அட்டமாதிபதி புதனுடன் சேர்ந்து மறைந்து விட்டார். தவிர அபகர்த்தாரியின் பிடியில் உள்ளார். களத்திர ஸ்தானத்தில் சூரியன் மற்றும் கேதுவின் கூட்டணி வேறு. சனி பகவான் தன் 3ம் தனிப்பார்வயில் 7மிடத்தை பார்க்கிறார். இவ்வளவு கெட்ட பலன்கள் இருந்தும், குரு பகவானின் 5ம் தனிப்பார்வை 7ம் இடத்தில் விழுகிற ஒரே காரணத்தினால் அம்மணிக்கு குரு தசையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்த சில வருடங்களில் சனி தசையில் கணவரை இழந்து தனிமரமானார்.
Saturday, January 30, 2016 6:33:00 PM//////
-----------------------------------------------------
16
///////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
க்விஸ் 102க்கான அலசல்.
திருமண வாழ்வு நோயாளிக் கணவனால் சோகத்தில் முடிந்திருக்கும்!
கேது பகவான் கொடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம்!
மகர லக்கின ஜாதகம்.லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவுடன் கூட்டணி. 7மிடத்தில் அமர்ந்த சூரியன் மற்றும் கேதுவின் பார்வையால் கெட்டுள்ளார்.செவ்வாய் 6மிடத்துக்கும் அதிபதியாக, வில்லனுமாகி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.மூர்க்கத்தனம் மிகுந்தவராயிருப்பார்
2,5 க்கான அதிபதி குரு பகவான் 3ல் மறைந்து,நீச்சம் பெற்று கெட்டுள்ளதால் குடும்பவாழ்க்கை இல்லை. 3ம் பதி சனியும் 5ம் பதி குருவும் பகை பெற்ற பரிவர்த்தனை.
7மிட அதிபதி சுக்கிரன், 8ம் பதி புதனுடன் சேர்க்கை பெற்று 6மிடத்தில் அமர்வு.
களத்திராதிபதி சுக்கிரன் 6ல் மறைந்ததால் கணவன் நோயாளியாகி, சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல் மறைந்ததால், ஜாதகி கணவனை இழந்திருப்பார்.
பாக்கியாதிபதி சந்திரன், பாதகாதிபதியாகி லக்கினத்திற்க்கு 4ல் பகை வீட்டில் அமர்ந்து திக் பலம் பெற்றாலும், தன் வீட்டிற்க்கு 8ல் அமர்ந்ததால் பலம் இழந்துவிட்டார்.தேய்பிறைச் சந்திரன் பாவியாகிறார்.
கும்ப ராசிக்கு 7ம் பதி சூரியன்,ராசிக்கு 4ல் அமர்ந்தாலும், கேதுவின் சேர்க்கையால் கிரகண தோஷம் அடைந்து, லக்கினத்திற்க்கு 7மிட மாகி களத்திர தோஷமளித்துள்ளது.
எந்த கிரகமும் நண்மை செய்யும் அமைப்பில் இல்லாதது துரதிர்ஷ்டமே!!!.
மொத்தத்தில் “தங்க மழை பெய்தும் நிலைக்கவில்லை - தமிழில் குயில் பாடவுமில்லை”.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Saturday, January 30, 2016 8:22:00 PM//////
----------------------------------------------------
17
///////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் . இது ஏற்கனவே 03/12/2013ல் கேட்கப்பட்ட கேள்வி (QUIZ-26)
கேள்வியில் மாற்றத்துடன் கேள்வி கேட்கப்பட்டுள்ளது .ஜாதகி 02/06/1937ல் 6.30.35 மணிக்கு பிறந்தவர்.
பதில்: 1. தங்க மழை பெய்யவில்லை . 
2. குயில் பாடவில்லை 
3. திருமண வாழ்வு அதிருப்தியுடன் துவங்கி கடைசியில் சோகத்தில் முடிந்தது.
1. விருச்சிக இலக்கின ஜாதகி. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் அமர்ந்திருக்கிறார். யோககாரகர்கள் குரு நீசம் (3ம் இடம்), சந்திரன் (4ம் இடம்).
2. கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடிபிடித்து செல்கிறது.7ல் கேது சூரியனுடன் கூட்டு சூரிய சண்டாள யோகம். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். ஜாதகி கோபக்காரர்.
3. லக்கினாதிபதி செவ்வாய் நவாம்சத்தில் நீசம் (கடகத்தில் உள்ளார்) . சுக்கிரன் பாபகர்த்தாரி தோஷம். குயில் பாட வேண்டும் என்றால் செவ்வாய், சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் .
4. 7ம் வீட்டிற்குரிய சுக்கிரன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டார்.அது 6ம் வீடு. அயனம் சயனம் போகம் இல்லாமல் செய்து விட்டார்.8ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து கணவர் இல்லாமல் செய்து விட்டார்.
5. 2ம் அதிபதி குரு மகர ராசியில் நீசம் - குடும்ப வாழ்கையில்லாமல் செய்து விட்டார் . 
6. பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்க்கு 8ல் அமர்ந்து ஜாதகியன் பாக்கியத்தை கெடுத்து விட்டார் .
7. திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது. சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார். 
8. தங்க மழைக்கு 2ம் வீடு, 5ம் வீடு , 11ம் வீடு நன்றாக இருக்க வேண்டும். 2ம் வீடு நீசம், (36 பரல்) 11ம் வீட்டின்மீது சனியின் பார்வை (33 பரல்) 11ல் மாந்தி, 5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் (25 பரல்)
சந்திரசேகரன் சூரியநாரயணன்
Saturday, January 30, 2016 11:42:00 PM////// 
-------------------------------------------------
18
//////Blogger Dallas Kannan said...
Respected Sir
Sorry for the late response.
1. She is married because of Guru's look and Sukra in its own place in Navamsa.
2. Late marriage because of Sani's look and Kethu in 7th house, kalasrabha dosam and Sukra and Budha in Papakarthari yogam.
Marraied life is not that great because of the 2nd point.
Sunday, January 31, 2016 9:12:00 AM /////
-----------------------------------------------
19
++++++++++//////trmprakaash@gmail.com said...
ayya, thirumanam guru paarvai 7m veettilnmel padhivadhaal nadandhirukkum. aanaal nilaithirukkaadhu. kaaranam, 7m athibathy matrum kalathira kaaragar Sukkiran 7rkku 12il, 8m athibathiyudan. matrum lagnam, lagnathbathy and 7m veedu raahu -kethuvin pidiyil. kethu kodi pidithu sellum avayogam.Thanks. Mu.Prakaash.
Sunday, January 31, 2016 4:59:00 PM//////
========================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.1.16

எப்படி தூங்க வேண்டும்?

எப்படி தூங்க வேண்டும்?

என்ன தூங்குவதற்குக் கூட விதிமுறைகள் உள்ளனவா? இல்லாமலா! அவசியம் படியுங்கள்!
------------------------------------------------------------------------

1) பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

2) வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்? ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.1.16

Astrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் பாட வேண்டும்!!


Astrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் 
பாட வேண்டும்!!

ஜோதிடப் புதிர் 102

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்

கேள்வி இதுதான்: அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா? தமிழில் குயில் பாடியதா? அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா? ஜாதகத்தை நன்றாக அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் பதிலை சும்மா, காசை சுண்டிப்போட்டுப் பார்த்து எழுதாமல், காரணங்களுடன் எழுதுங்கள்!

அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பதில் எழுத 2 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. பதில்கள் 31-1-2016 ஞாயிற்றுக்கிழமை 
காலையில் வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.1.16

மாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?


மாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க? 
---------------------------------------------------------------

ஹலோ! ஐசிசி பேங்கா?

● ஆமாங்க!

■ நான் சின்ராசு பேசறேங்க!

● சொல்லுங்க!

■ நான் வண்டிக்கு இந்த மாசம் டியூ கட்டலைங்க!

● பரவால்லைங்க! மழை வெள்ளம் வந்ததால பைன் எல்லாம் போட மாட்டோம்.
அடுத்த மாசம் சேத்து கட்டலாம்னு SMS வந்திருக்குமே!

■ வந்ததாலதான் கூப்பிட்டேன். அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?

● வண்டியை வந்து நாங்களே எடுத்துக்குவோம்!

■ அதை இப்போவே வந்து செய்ய முடியுமுங்களா....?  ஏன்னா வண்டி பத்தடி தண்ணிக்குள்ள நிக்குது...!
============================================================
2
நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கிறேன்... எனக்கு படிக்கவே பிடிக்கல பா....
உயிரியல் டீச்சர் செல் என்றால் உடலின் அடிப்படை மூலக்கூறு னு சொல்றாங்க....
இயற்பியல் டீச்சர் செல் என்றால் பேட்டரி னு சொல் றாங்க....
பொருளாதாரவியல் டீச்சர்  செல் என்றால் பொருள்களை விற்பது னு சொல்றாங்க.....
வரலாறு டீச்சர் செல் என்றால் சிறை னு சொல்றாங்க....
தமிழ் டீச்சர் செல் என்றால் போன்னு சொல்றாங்க...
அதையே நீங்க அலை பேசி னு சொல்றீங்க...
அட போங்கப்பா....
எது சரி னு குழப்பமா இருக்கு பா....எங்க நீங்க சொல்லுங்க பாப்போம்.....😇😇
-------------------------------------------------------------
3
குட்டி கதை

செருப்புகடைக்கு ஒருவர் சென்றார்.
பணியாளர் அவரை வரவேற்ரு அழைத்து, செருப்பை எடுத்துக்காட்டினார்..
அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்..
அவருக்கு சங்கடமாக இருந்தது.. நானே போட்டு பார்க்கிறேன் என்றார்.. பணியாளர் விடவில்லை..
அவரே அவருக்கு உதவினார்..
அவர் பெருந்தன்மையாக சொன்னார் " அய்யா.. நானும் மனிதன்..நீங்களும் மனிதன்.. என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி
இருக்கிறது "
பணியாளர் சிரித்தபடி சொன்னார் " இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களை
தொடமாட்டேன்.. அது என் சுய மரியாதை,,,, கடைக்குள் நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்த மாட்டேன்.. இது
என் தொழில் மரியாதை💪
செய்யும் தொழிலே தெய்வம்.
===============================================================
4
(ஐந்து)-ன் அம்சங்கள்

1.பஞ்ச கண்ணியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம்,சாதிக்காய், தக்கோலம்.
3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி, மயில்.
8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம்,வாரம்.
12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.
17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம்,முழங்கை.
18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம
==================================================
5
🎉இது சாப்பாட்டு தத்துவம்🎉

🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊

🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊

🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊

🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!🎊

🎊பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!🎊

🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊

🎊தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊

🎊தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க
முடியாது!!🎊

🎊தன்னம்பிக்கைச்  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!🎊

🎊வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது... வெந்தபின் தான் தெரியும்...🎊

🎊 வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...நட்பு என்ற சட்னி வேண்டும்.. 🎊

🎉படித்ததில்  ருசித்தது🎉
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.1.16

நகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்கக்கூடாது.


நகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்கக்கூடாது.

சிரிக்க மட்டும். வேறு விவகாரம் வேண்டாம்!
---------------------------------------------------
SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
CUSTOMER : தோசை வேணும்.
SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?
CUSTOMER : வெங்காய தோசை.
SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
CUSTOMER : சின்ன வெங்காயம்.
SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
CUSTOMER : நாட்டு வெங்காயம்.
SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
CUSTOMER : சின்னதா நறுக்குனது.
SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
CUSTOMER : அதிகமா.
SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
CUSTOMER : அறுத்துட்டே போடு.
SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?
CUSTOMER : சிவப்பு.
SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?
CUSTOMER : அதிகமா உள்ளது.
SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?
CUSTOMER : உரம் போடாதது.
SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?
CUSTOMER : கழுவிட்டு போடு.
SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?
CUSTOMER : நல்லா வேகணும்.
SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?
CUSTOMER : நெய்.
SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?
CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.
SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.(சாப்பிட்ட பிறகு)
SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.
CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?
SERVER : கேஷ்
CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?
SERVER : நோட்டா தாங்க.
CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா?
SERVER : புதியது.
CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?
SERVER : காந்தி படம் போட்டது.
CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?
SERVER : கண்ணாடி போட்டது.
CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?
SERVER : சாதா கண்ணாடி.
CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?
SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல
கட்டிக்கிறேன்.
CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது.
Recd from Mr.Anandamurugan, through whatsapp
 😄😜😉
-----------------------
2
Superb👍👍👍
Doctor: Which soap do you use?
Patient: K. P. Namboodiri's soap.
Doctor: Paste?
Patient: K. P. Namboodiri's paste
Doctor: Shampoo?
Patient: - K. P. Namboodiri's shampoo.
Doctor: Is K.P. Namboodiri an international brand?
Patient: No. K. P. Namboodiri is my Roommate !
------------------------------------------
3
Ø  A bookseller conducting a market survey asked a woman – “Which book has helped you most in your life?”
The woman replied – “My husband’s cheque book !!”
---------------------------------------------
4
Ø A prospective husband in a book store “Do you have a book called, ‘Husband – the Master of the House’?
Sales Girl : “Sir, Fiction and Comics are on the 1st floor!”.
---------------------------------------------------------
5
Ø Someone asked an old man : “Even after 70 years, you still call your wife "Darling, Honey, Love". What’s the secret?
Old man: I forgot her name and I’m scared to ask her.
----------------------------------------------------------------------
6
Ø A man in Hell asked Devil: Can I make a call to my Wife ?
After making call,  he asked how much to pay.
Devil : Nothing.
Hell to hell is Free.
-----------------------------------------------------
7

Ø Husband to wife,
"Today is a fine day"
Next day he says : Today is a fine day. Again next day, he says same thing.
Today is a fine day. Finally after a week, the wife can’t take it and asks her husband – since last one week, you are saying this “Today is a fine 

day’. I am fed up. What’s the matter?
Husband : Last week when we had an argument, you said, “I will  leave you one fine day.”
I was just trying to remind you……

Have a laugh, laughter is the best medicine..
Joke time.....📢📢📢📢📢
---------------------------------
8
Argument between British and Indian.
British: we spoiled ur mother land for 200 yrs "hahaha"

India:- "hahaha"
we r spoiling your mother tongue daily "hahahahahaha"
.................................
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.1.16

இன்று குடியரசு தினம்!


குடியரசு தினம் என்றால் என்ன?

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக்
கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம்
என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு - அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு -குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது.மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்?பள்ளியில் ஆசிரியர்களா?வீட்டில்  பெற்றோர்களா? சுதந்திரப் போராட் வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.

தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட
பிரம்மசாரி,வேலு நாச்சியார் ........இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல்,அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய
வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி..... இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்? ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும்.


இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள்
இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?

நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று  உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது?

அப்போது மன்னர்கள் பலர்ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன்எவ்வழி மக்கள் அவ்வழி என்றே
வாழ்ந்தார்கள்.

ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும்பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய   தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல்
சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம். மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப்
போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.

ஜெய்ஹிந்த் !!!
----------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.1.16

அரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா?


அரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா?

அரச கிரகம் என்றால் உடனே சூரியன் என்று8 சொல்லிவிடுவீர்கள்.  சரி அரச கனி என்றால் எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
எலுமிச்சம் பழத்தைத்தான் அரச கனி என்று சொல்லுவார்கள்.

அதன் சிறப்பைக் கீழே கொடுத்துள்ளேன்:

இந்து மத சமய பூஜைகளில் எலுமிச்சைக்குத்தான்  முதலிடம்!

🎾எலுமிச்சை - இதை தேவகனி, இராஜகனி என்றும் கூறுவார்கள்.

எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ  இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citruslimon) என்னும் அறிவியல்
பெயர் கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இதுபுளிப்புச் சுவை.

🎾இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

 🎾இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு
ஆக்கப்பட்டு வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும்
சுருக்கங்கள் மறைகின்றன.

🎾பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

🎾தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள்,  மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.

🎾முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை
அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண் போல பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால்
மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது. உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய
உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.

🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

விளக்கம் போதுமா?

அன்புடன்,
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.1.16

இன்று தைப்பூசம்!

இன்று தைப்பூசம்!

தை மாதத்தில் பொங்கலுக்கு இணையாக இன்னொரு விசேட நாள் இருக்கிறது என்றால் அது தைப்பூச தினம்தான்! ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் நடைப் பயணமாக பழநிக்குச் செல்லும் நாள் இது. இன்னன்நாளில் நாமும் முருகப் பெருமானை நினைத்து, வழிபட்டு அவனருளைப் பெறுவோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக முருகனைப் பாடிய சில பாடல்களை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் குவலயத்தோர் வழிபடட்டும் என்று சிறப்பாகத் தன் வசனத்தில் எழுதிப் படங்களிலும்
அதைச் சிறப்பாகக் காட்டியவர் திரு.ஏ.பி.நாகராஜன்.

எல்லா இடங்களிலும் குன்றில் உறையும் குமரன், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் மட்டும் கடலோரத்தில் குடிகொண்டுள்ளார்.

சூரனைவென்று தேவர்களைக் காத்தகுமரன், இன்றும் இன்முகத்துடன் அங்கே நின்று, தன் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திருச்செந்தூர் சண்முகநாதனைச் சிறப்பித்துப் பாடிய  பாடல்களை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவிட்டுள்ளேன்!

பாடலைப் பாருங்கள்:
-------------------------------------------------
"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலர்கள் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா!

படம்: தெய்வம் - வருடம் 1972

"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - அவனைத் தேடித்தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" என்று

பாடலைத் துவங்கியவர், கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் - தலையா கடல் அலையா? என்று வியந்ததோடு, குழந்தைகள், பெரியவர் என்று

அனைவரையும் அங்கே வரவழைக்கும் செயல் குமரனுக்கு மட்டுமே தெரிந்த கலை!" என்று சொன்னது இந்தப்பாடலின் சிறப்பாகும்.

நம்பியவர் வந்தால், நெஞ்சுருகி நின்றால், முருகன் வந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்று முத்தாய்ப்பாய்ப் பாடலை முடித்தது கவியரசருக்கே

கைவந்த கலை என்றால் அது மிகையல்ல!
---------------------------------------------
மற்றுமொரு பாடல்:

செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்

(செந்தூர்)

என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா,
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா!

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா?
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா?"

படம்: சாந்தி - வருடம்.1965
-------------------------
மேலும் ஒரு பாடல்:

இந்தப் பாடலை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். என்னதொரு சொல் விளையாட்டு என்று கண்டு கூறுங்கள்!

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா

(காவ..)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா

(காவ..)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

(காவ..)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!

திருப்பதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ"

படம்: மனிதனும் தெய்வமாகலாம் - வருடம் 1975

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா - குமரா நீயிருக்கும் இடம் தானடா" என்று கோவிலுக்கு ஒரு புது

விளக்கம் சொல்லிப் பாடலைத் துவக்கியவர், "நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும், ஏன் எங்கும் உன்முகம் தான் தெரியுது  சண்முகா"

என்று சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு.

புவியைக் காப்பவனே, உன் திருவடிகளை நாங்கள் தாங்குவோம் என்று முத்தாய்ப்பான வரிகளில் சொன்னது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!!!

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.1.16

புதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்!

புதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்!

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகிக்கு திருமணம் மறுக்கப்படவில்லை. தாமதமாக திருமணம் நடைபெற்றது,

ஜாதகி மிதுன லக்கினக்காரர். 7ம் வீட்டுக்காரர் குரு பகவானின் பார்வை 7ம் வீட்டின் மேள் தீர்க்கமாக உள்ளது. அதனால் அவர் திருமணத்தை தனது மகாதிசை, சுக்கிர புத்தியில் நடத்தி வைத்தார்.

களத்திரகாரகன் சுக்கிரன் 12ம் வீட்டில்போய் அமர்ந்து கொண்டதும், அஷ்டமாதிபதி சனீஷ்வரனின் பார்வை 7ம் வீட்டின் மேல் விழுவதும், திருமணம் தாமதமானதற்குக் காரணம்.

அத்துடன் சந்திர ராசிக்கு 7ம் வீட்டுக்காரன் செவ்வாய், சந்திரனுக்கு எட்டில், தாமதத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

குருவின் பார்வையால், திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

கலந்துகொண்டவர்களில் 25 பேர்கள் திருமணம் நடக்கும் என்று சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களில் ஒரு சிலர்தான், தாமதத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்

கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் அடியவனின் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்


----------------------------------------------------------
1
/////Blogger Mrs Anpalagan N said...
திருமண யோகம் உள்ள ஜாதகம். 89 இல் ஆரம்பித்த குரு தசையில் நடந்திருக்கும். புதிர்களுக்கு பதில் எழுதிப் பழக்கம் குறைவாகையால், அடுத்தடுத்த புதிர்களில் அதிகம் எழுத முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.////
-----------------------------------------------------------------------
2
/////Blogger slmsanuma said...
அய்யா வணக்கம்
உடல் நலம் தேறி மீண்டும் களத்திற்கு வந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி
புதிர் போட்டியும் மீண்டும் களத்திற்கு வந்தது கண்டும் மிக மகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு மீண்டும்//மீண்டு வந்தால் (வருமா?) வருமே அப்படிப்பட்ட மகிழ்ச்சி
அம்மணி பிறந்த தேதி 1.9.68
காரகன் சுக்கிரன் அஸ்தங்கதம் // ஆனால் 4 பரல்கள்
பாவகத்தின் மீது சனீஸ்வரன், குரு, செவ்வாய், புதன் ஆகிய கிரக பார்வை
பாவகத்தின் பரல்கள் 26
பாவகத்தின் மீது பாவக அதிபதி குரு பார்வை // சிறப்பு
பாவக அதிபதி குரு 5 பரல்களுடன் // செவ்வாய் பார்வை
பாவக அதிபதி குரு பாவகத்திற்கு 9மிடம் // லக்கினத்திற்கு 3மிடம்
காரகன் சுக்கிரன் மட்டுமே ஆதரிக்கவில்லை
காரகன் சுக்கிரன் பாவகத்திற்கு 6மிடம் // லக்கினத்திற்கு 12மிடம்
எனவே குரு திசையில் செவ்வாய் புத்தியில் அம்மணிக்கு திருமணம் ஆயிற்று.
அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகம்
உங்களிடம் தேர்வு எழுதி நீண்ட நாட்கள் ஆனதால் பதட்டம் // நேரம் அதிகம் ஆனது
நன்றி
சந்தானம் சேலம்//////
-------------------------------------------------
3
Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அன்புள்ள வாத்தியாருக்கு,
Quiz 101 க்கான பதில்.
அம்மணி பிறந்த நேரம் 7 Jun 1968 காலை 7:30
திருமணம் ஆனது. குரு திசையில். ஆனால் சுகப்படவில்லை.
மிதுன லக்கினம், துலா ராசி,
1). 7ம் இடத்திற்கு குரு பார்வையும், 7ம் அதிபதி குருவிற்கு சுக்கிரன் கேந்திரத்தில் (10ல்) அமர்ந்ததால் திருமணம் குரு திசையின் ஆரம்பத்திலேயே (23 வயதிற்குள்) நடை பெற்றது. கோள்சாரமும் அதற்க்கு கை கொடுத்தது.
2). பொதுவாகவே மிதுன, கன்னி, தனுசு, மீனம் லக்கின காரர்களுக்கு திருமண வாழ்வு அவ்வளவு திருப்திகரமாக இருந்ததில்லை என்பதற்கு இது உதாரண ஜாதகம்.
3). அம்மணியின் பிறந்த கரணம் விஷ்தி கரணம் அதை மேலும் உறுதி செய்துவிட்டது. விஷ்தி கரணம் தம்பதியினரிடையே ஒற்றுமையின்மையும், பிரிந்து வாழும் சூழ்நிலையும் காட்டுகிறது. அதை 2ம் இடத்தில் குறைவாக உள்ள அஷ்ட வர்க்க பரலும் உறுதி செய்கிறது. 7ம் இடத்திற்கு செவ்வாயின் பார்வையும், சந்திரனுக்கு 8ல் செவ்வாய்(செவ்வாய் தோஷம்) உள்ளதும் கவனிக்க தக்கது.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.///////
----------------------------------------------------
4
/////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 7th Lord guru is in 9th house from its house.
2. guru aspects 7th place.
Definitely there is marriage.
But Saturn and mars aspecting 7th house further venus in 12th house, there could be various troubles in marriage life.
As you said earlier, in navamsa saturn in lagna and mars in 7th house this will delay the marriage.
There could be delay and trouble in marriage but no denial in marriage./////
---------------------------------------------------------------------------
5
/////Blogger sundar said...
Jupiter 7th lord aspecting 7th place and lagna lord bhuthan also aspecting 7th place.two
good planets seeing 7th place.and karaga sukran is in ownhouse.so definitely marraige will
happen..since sukran is surrounded by Fire planets sun and mars.intial delay or some struggle
will happen before marraige.////////
-----------------------------------
6
/////Blogger karthi said...
Ezhukkudaya Guru 3m veetilirunthu 5 parvayaga 7m edathai parppathal intha jathakikku kandippaga Thirumanam Guru thasaiyil nadanthirukkum.///////
---------------------------------------
7
Blogger kmr.krishnan said...
1. ஜாதகி 7 ஜூன் 1968 அன்று காலை 7 மணி 28 நிமிடங்களுக்குப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
2ஏழாம் இடத்திற்கு சனியின் பார்வை, செவ்வாயின் பார்வை. இவை திருமணத்தடை ஏற்படுத்தும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து சூரியனால் அஸ்தங்கதம்.
4. 6ம் அதிபனான செவ்வாய் சுக்கிரன் சம்பந்தம் பெற்று 12ல் மறைந்து சூரியனாலும் அஸ்தங்கதம்.
மேற்கண்டவை திருமண பந்தத்திற்கு ஒவ்வாதவை.ஆனால்
1.குருவின் பார்வை 7ம் இடத்தின் மேல்.
2. லக்கினாதிபதி புதனின் பார்வையும் 7ம் இடத்தின் மேல்.
3. குருவின் பார்வை 9ம் இடத்திற்கும் கிடைப்பதால்,
திருமணம மறுக்கப்படவில்லை என்று முடிவு செய்கிறேன்.
21 வயதில் துவங்கிய குருதசா சாதகமாக அமைந்தது.
குரு தசாகுரு புக்தியில் 1991ல் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு.//////
------------------------------------------------
8
/////////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
மிக்க மகிழ்ச்சி மீன்டும் புதிர் பகுதி இடம்பெருவது.
ஜாதகி மிதுன லக்கணம்
அதிபதி புதன் ராசி துலாம்
லக்கண அதிபதி லக்கனத்தில் இருப்பது நல்லது.
1. திருமணம் ஆனவர்.
2.திருமணம் பிரிவில் முடிந்தது
காரணம்: 1
7ம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்கு 9ம் இடமான திரிகோணம் பெற்றுள்ளார். அத்துடன் 2ம் வீட்டு அதிபதி சந்திரனும் திரிகோணம் பெற்று வலுவாக உள்ளார். இந்த அமைப்புகளால் ஜாதகிக்கு திருமணம் நடந்து முடிந்ததை காட்டுகிறது
காரணம்: 2
2ம் வீட்டின் மேல் வில்லன் செவ்வாயின் 3ம்பார்வை விழுகிறது. மற்றும் 7ம் வீட்டிற்கும் 8ம் அதிபதி சனி மற்றும் 6ம் அதிபதி செவ்வாயின் பார்வையும் உள்ளது.அத்துடன் சுக்கிரன் 12ல் மறைவு. இதன் காரனமாக மணவாழ்க்கை பிரிவில் முடிந்தது.
காரணம்: 3
அயன சயன போகத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் அமர்ந்து அம்மனியின் திருமண வாழ்க்கைக்கு வேட்டு வைத்தார்கள். ///////
-----------------------------------------------
9
/////Blogger amuthavel murugesan said...
ஜோதிடப் புதிர் 101
திருமண யோகம் உள்ள ஜாதகம்.
1. சர்ப தோஷம் உள்ள ஜாதகம்.
2. குருவின் 5 ஆம் பார்வை 7 ஆம் இடத்தின் மேல்
3. செவ்வாயின் 8ஆம் பார்வை 7 ஆம் இடத்தின் மேல்(செவ்வாய் பெண்களுக்கு திருமண விஷயத்தில் குருவை போல் செயல்படுவார்)
4. குரு திசையில் கண்டிப்பாக திருமணம் நடைபெற்று இருக்கும்.
மு.சாந்தி/////
-------------------------------------------------------------
10
////////Blogger Sakthivel K said...
வணக்கம் சார். வாழ்கநலமுடன்.......
மிதுனலக்னம் லக்னாதிபதி புதன் ஆட்சி !
2ஆம் அதிபதி 5ல்.வலிமை (வர்க்கோத்மம்)
7ஆம் வீட்டிற்க்கு குரு பார்வை
திருமணம் நடந்திருக்கும் !!!////////
-------------------------------------
11
////////Blogger venkatesh r said...
வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம். வழக்கம் போல் ஜோதிடப் புதிர் போட்டி தொடங்கியதிற்கு நன்றி.
புதிர் எண் 101க்கான அலசல்:
அம்மணிக்கு திருமணம் 26 வயதில் குரு தசை, புதன் புத்தியில் நடைபெற்றது்
1. லக்கினாதிபதி புதன் லக்கினத்திலேயே வலுவாக அமர்ந்து களத்திர ஸ்தானத்தை தன் பார்வையில் வைத்துள்ளார்.
2.களத்திராதிபதி குரு 3ல் அமர்ந்தாலும் தன் 5ம் தனிப்பார்வையால் 7மிடத்தை பார்க்கறார்.
3.குடும்ப ஸ்தானம் சுபகத்தாரி யோகத்திலும் அதன் அதிபதி சந்திரன் 5லும் அமர்ந்து வலுவாக உள்ளன.
4.பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து பாபக்கிரக கூட்டணியில் வலுவிழந்து விட்டார்.
5.அம்மணிக்கு 20 வயது வரை ராகு தசை நடந்துள்ளது. அதற்கு பிறகு வந்த குரு தசை, புதன் புத்தியில் 26 வயதில் திருமணம் இனிதே நடந்தேறியது.//////
-------------------------
12
/////Blogger hamaragana said...
Anbunan vathiyaar ayya vanakkam
(Sorry my system under repair so aim using iPad No Tamil fond)
Chandran varkothamam,Sani varkothamam ..
Laknathpathi Pathan ..lakanathil..
7th house under kuru parvai ..also kuru house..
After 21year married Surely
--------------------------------------
13
//////Blogger daya nidhi said...
kaala thamadhamaga thirumanam nadanthadhu.
1)7 am veetirku SEVVAI,SANI parvai. 7 am adhipathi guruvirkum sevvai parvai thurumana thaamatham
7 kkuriya guru than veetai parpathal 7 am veedu valuvanathu
2) kalathira karagan sukran rasiyil maraidhalum amsathil natpu petrullaar.
3) navamsathil 7am veetil sevai iruppadhu,adhai sani parvai seivathu kodumai endralum, guru 7 am veetai parthu thirumanathai nadathinar
4) 7 am athipathi guru ashtavargathil 26 paral enralum , suyavargathi 5 paral iruppadhal thirumanam ok.
thanks,
S.DAYANIDHI, AVIYANUR///////
--------------------------------------
14
/////Blogger VM. Soosai Antony said...
ஐயா வணக்கம்,
மீண்டும் இந்த புதிரை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி.
திருமணம் நடைபெறும். ஏனெனில் 7க்குரிய குருவின் பார்வை 7ல் விழுகிறது. லக்னாதிபதி புதனின் பார்வையும் 7ல் விழுகிறது.
சனியின் பார்வை விழுந்தாலும். குருபார்க்க கோடி நன்மையல்லவா?
சுக்கிரன் 12ல் மறைந்து செவ்வாயுடன் இருப்பதால் கணவரை பிரியும் நிலை உருவாகலாம். நவாம்சத்தில் லக்னத்தில் சனீஸ்வரர், இதுவும் ஒரு காரணம். 5க்குரியவனும், களத்திர காரகனுமான சுக்கிரன் மீது சனியின் பார்வையுள்ளது. குழந்தை பாக்கியம் குறைவுதான். குருவின் திசையில் திருமணம் நடந்திருக்கும்.
வணக்கம் ஐயா
வ.ம.சூ. அந்தோணி//////
---------------------------
15
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.101:
1. She got married before her age of 30. (Born on 7th June 1968 at 8:00am)
Reasons:
1. Seventh house and its authority is not affected as well as Jupiter is aspecting its
own house as 5th aspect.
2. Logna lord also is in lagna.
3. Second house and its authority is not affected.
4. In Jupiter Dasa marriage had happened.
With kind regards,
Ravi-avn//////
--------------------------------
16
//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
லக்கினாதிபதி ஆட்சி யில் பலமாக உள்ளார்
2ஆம் அதிபதி கோணத்தில்,
7ஆம் அதிபதி குரு பகவான் தன் வீட்டை பார்க்கிறார் ,
அம்சத்திலும் 7 ஆம் இடத்துக்கு குரு பார்வை உள்ளது
ஆகையால் திருமணம் உண்டு
சுக்கிரன் மறைவு,
8,9 க்கு அதிபதி சனி அம்சத்தில் லக்கினத்தில் ,
அம்சத்தில் 7ல் செவ்வாய், சனி பகவானின் பார்வை
ஆகையால் தாமத திருமணம்.
நன்றி ஐயா
கண்ணன்//////
--------------------------------------
17
/////Blogger KJ said...
Sir,
Native could get late marriage. But Marriage life s good.
Lagnathypathy aspects seventh house and Seventh house owner aspects seventh house.//////
------------------------------------------------
18
////Blogger selvaspk said...
அம்மணிக்கு திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
-Yes, she is married.
அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகமா? அல்லது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா?
- lagna lord, 7th lord, 4th house (hemmed between benefics), 12 the house lord in 12th house indicates marriage.
- chevvai dosam with Saturn aspecting combusted Mars with Venus indicates married to an older spouse.
- Married during Jupiter-Mercury dasa at age of 25-27////
----------------------------------------------------
19
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
அம்மணிக்கு திருமணம் நடைபெற்றது.
ஒரு பெண் குழந்தையும் உண்டு.
1. 2ம் வீட்டு அதிபதி சந்திரன் 5 ம் வீட்டில் திரிகோணத்தில் -2ம் வீடு பலமாக உள்ளது
2. 7ம் வீட்டு அதிபதி 3 ல் அமர்ந்து 5 ம் பார்வையால் 7 ம்வீட்டை பார்க்கிறார்,மேலும்
7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தைப் பார்க்கிறார்.
3. 6ம் வீட்டு அதிபதி 12ல் அமர்ந்து 4 ம் பார்வையால் 7ம் வீட்டு அதிபதியையும்,8ம் பார்வையால் 7ம் வீட்டையும் பார்ப்பதால் தடங்கல் எற்படும்.
ஆகாயத்தில் பறந்து கொண்டு இருக்கும் பொழுது இதை எழுதுகிறேன்.
மன்னிக்கவும் தவறு இருந்தால்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்////////
---------------------------------------------
20
/////Blogger bala said...
Vanakkam iyya,
Puthir poti meendum thodangiyatharku mikka magizhchi...
nadigar Ajith vasanathil la sollanum endral "vaathiyar is back" :-)
Puthirukaana vidai..
Mithuna lagna jaathagi.. laganathipathi budhan lagnathil plus villan maandi
Thirumanathirku 7 aam idam.... 7&10 athipathi guru bhagavan...
Guru bhagavan 3aam idathil amarnthu (7 aam veetirku 9il) 7 aam idathaiyum, bhagya sthanathayum, laaba sthanathayum paarkirar
Guru bhagavan mel 6aam athipathi sevai yin paarvaiyum ullathu... 7 aam idathirku sevai+sani+guru+budhan paarvai ullathu...
Sani bhagavan intha jathagathirku 8&9aam athipathi aavar..
Thirumana vayathil athavathu ammaniku 22 vayathil irundhu guru dasa aarambam... Guru dasa vil thirumanam nadai petru irukum... guru dasa sani or budhan buthiyil nadai petru irukum..
Nandri,
Bala///////
-------------------------------------
2`1
///////Blogger rukmani said...
Marriage is sure, bcoz, Guru is the seventh house lord and again lord for marriage for girls, so his 5th aspect on 7th house makes it flourish.//////
------------------------------------------------
22
////////Blogger seenivasan said...
Dear sir,
Yes she is married and the reasons are as below
1.7th lord Jupiter is in 9th place from 7th place which is the house of husband.
2.Lagna lord bhudan is in its own place and keeping a view on 7th place
3.Second place lord moon is sitting in 5 th place & this may be love marriage.
4.12 th place lord also sitting in 12 th place and gives the benefit of ayna syna benefit.//////
-----------------------------------------
23
//////Blogger Ravichandran said...
Ayya,
Marriage would have happened and married life also will be good The following are reasons:
a. Guru is looking 7th house by 5th look
b. Neechbanga Raja yoga is there in this horoscope. 12th house owner(Sukran) is sitting in 12th house along with 6th house owner(Chevvai) and 3rd house owner(Suriyan)
c. Suriyan is not combusting Sukran. Because Sukran is traversing 19th degree and Suriyan is traversing in 22nd degree.
Your Student,
Trichy Ravi//////
--------------------------------------------
24
//////Blogger vanikumaran said...
தாமதமாக திருமணம் நடைபெறும்
பாக்யாதிபதி சனி வர்கோத்தமம்
குடும்பாதிபதி சந்திரன் வர்கோத்தமம்
எழாம் அதிபதி குரு எழாம் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார் நவாம்சத்திலும் குரு எழாம் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார்//////
------------------------------------------
25
///////Blogger murali krishna g said...
அய்யா ,
மிதுன லக்னம் !. லக்னத்தில் புதன் ஆட்சி பெற்று 7-ம் இடத்தை பார்வை இடுகிறார் !. 3-ல் குரு இருந்து 5-ம் பார்வை ஆக 7-ம் இடத்தை பார்கிறார் !. அதனால் நிச்சயம் திருமணம் உண்டு !. ஆனால் , சனியும் செவ்வாயும் 10-ம் பார்வை ஆகவும், 8-ம் பார்வை ஆகவும் 7-ம் இடத்தை பார்ப்பதால் காதல் அல்லது கலப்பு திருமணம் தாமதமாக நடந்திருக்கும். அப்படி நடந்து இருந்தாலும் அந்த திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நீடிக்காது. காரணம் குரு சனி செவ்வாய் பார்வை 7-ம் இடத்துக்கு கிடைபதாலும் சுக்ரன் சஷ்டஷ்டகத்தில் இருபதாலும் !.//////
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

வெற்றியைத் தடுக்கும் வில்லன்கள்


வெற்றியைத் தடுக்கும் வில்லன்கள்
--------------------------------
நேற்று வெளியான புதிர்போட்டிக்கான முடிவுகள் நாளை வெளிவரும்.
பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒரு நாள் அதிகமான 
அவகாசம் கொடுக்கப்பெறுகிறது!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
🌺🌺🌺வெற்றியை தடுக்கும்-ஐந்து வில்லன்கள்.

🌺ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே!
என்கிறார்கள்.

🌺அதென்ன ஆட்டிட்யூட்? தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி
எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது… இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.

🌺சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு
முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல்
தடுமாறுவதும் உண்டு.

🌺இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது? நல்ல ஆ்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால்,
நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்.

🌺 நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும்.
நாம்தான் ஜெயிப்போம்!

அந்த 5 வில்லன்கள்:

ஊக்கமின்மை,
மாற்றம்,
பிரச்னைகள்,
பயம் மற்றும்
தோல்வி.

🌺இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள்

என்னென்ன என்று பார்ப்போம்.

🌺💪1. ஊக்கமின்மை:
*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய
வைத்துக்கொள்ளுங்கள்.
*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப்
பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.
*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும்,
முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

🌺💪2. மாற்றம்:
* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.
* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.
* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.

🌺💪3. பிரச்னைகள்:
*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று
அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.
*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக்
கண்டுபிடியுங்கள்.
*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.

🌺💪4. பயம்:
* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன்.
அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.
*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.
* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.

🌺💪5. தோல்வி:
* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.
*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.
* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால்
முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்

வாழ்த்துக்கள்..💐💐💐💐 🌺🌺
================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.1.16

Astrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழிவோம் வாருங்கள்!

Astrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழிவோம் வாருங்கள்!

ஜோதிடப் புதிர் 101

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஜோதிடப் புதிர் பகுதியைத் துவங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாரம் ஒரு புதிர் வெளியாகும். அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்:

கேள்வி இதுதான்: அம்மணிக்கு திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகமா? அல்லது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா?

உங்கள் பதிலை சும்மா, காசை சுண்டிப்போட்டுப் பார்த்து எழுதாமல், காரணங்களுடன் எழுதவும்



அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.1.16

அவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.

அவசியம் படியுங்கள்  உங்களுக்கு பயன் தரலாம்.

அர்த்த_சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்.

ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும்
போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும்
போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய
மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு
செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி
உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும்
பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி
இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,

எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு,
நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம்
போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை
உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு
தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே
உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி
இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன்
எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும்
வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி,  தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய
வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு
இடத்திற்க்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்திலன் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற
வித்தைகள் வீணாகும்.

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை
இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும்
துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில்
பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல்
நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின்
நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது

பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி
பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி
எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு
ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை
விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க
வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம்,
அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

ஆயிரம் புதிய புத்தகம் கம்ப்யூட்டர் கற்று கொடுக்கலாம் . வாழ்க்கையை பழைய

புத்தகம் தான் கற்று கொடுக்கும் .
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!