மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.19

பீஷ்மர் சொன்ன மந்திரங்கள்!!!


பீஷ்மர் சொன்ன மந்திரங்கள்!!!

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்.*

*மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் முடிந்தவுடன், அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்த பீஷ்மரிடம்  பாண்டவர்களை
அழைத்துச் சென்ற கிருஷ்ணர், அவரிடம் உயிர்கள் பிறவிச்
சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை  எடுத்துரைக்க வேண்டினார்.*

*அதை ஏற்ற பீஷ்மர்  நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன்  அவரை முழு நம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல செளபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாகக் கிடைக்கும் " என்று உபதேசித்தார்*.

*யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக  இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்* 🙏" என்றார்.

*அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.*

*தினமும்  ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.*

🎍 *ஓம் கேசவாய நமஹ* ‼

🎍 *ஓம் சங்கர்ஷனாய நமஹ* ‼

🎍 *ஓம் நாராயணாய. நமஹ* ‼

🎍 *ஓம் கேசவாய நமஹ* ‼

🎍 *ஓம் சங்கர்ஷனாய  நமஹ* ‼

🎍 *ஓம் நாராயணாய. நமஹ* ‼

🎍 *ஓம் வாசுதேவாய. நமஹ* ‼

🎍 *ஓம் மாதவாய. நமஹ* ‼

🎍 *ஓம்  ப்ரத்யும்னாய. நமஹ* ‼

🎍 *ஓம் கோவிந்தாய. நமஹ* ‼

🎍 *ஓம் அனிருத்தாய. நமஹ* ‼

🎍 *ஓம் விஷ்ணவே நமஹ* ‼

🎍  *ஓம் புருஷோத்தமாய. நமஹ* ‼

🎍 *ஓம் மதுசூதனாய. நமஹ* ‼

🎍 *ஓம் அதோக்ஷஜாய. நமஹ* ‼

🎍 *ஓம்  த்ரிவிக்ரமாய. நமஹ* ‼

🎍 *ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய  நமஹ* ‼

🎍 *ஓம் வாமனாய. நமஹ* ‼

🎍 *ஓம் அச்சுதாய. நமஹ* ‼

🎍 *ஓம் ஸ்ரீதராய. நமஹ* ‼

🎍 *ஓம் ஜனார்தனாய நமஹ* ‼

🎍 *ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ* :

🎍 *ஓம் உபேந்த்ராய. நமஹ* ‼

🎍 *ஓம் பத்மநாபாய. நமஹ* ‼

🎍 *ஓம் ஹரயே நமஹ* ‼

🎍 *ஓம் தாமோதராய. நமஹ* ‼

🎍 *ஓம் ஸ்ரீ  கிருஷ்ணாய நமஹ* ‼

🎍 *ஓம் நமோ நாராயணா* ‼

------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.12.19

முதல் தரிசனம் யாருக்கு?


முதல் தரிசனம் யாருக்கு?

*திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு..?*.

"முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?"

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம். அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க. சடக்குன்னு
அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!

கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;

இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு! எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.

வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.

அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?

அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன; காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!

இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத்
துடியாய்த் துடிக்க...

அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு!
- யாரப்பா அது?

ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர, எல்லாரும் வழிவிட்டு
ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!

பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து
நிற்க...மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!

பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை
அப்பன் முதலில் விழிக்கின்றான்!

இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம்
நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.

கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!

உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"!
அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...

கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!

*"ஸ்ரீ மலையப்பன் திருவடிகளே சரணம்*.
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.12.19

Astrology: Quiz: புதிர்: 27-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

Astrology: Quiz: புதிர்: 27-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான்." ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து ஜாதகர் விசாக நட்சத்திரக்காரர். தன்னுடைய மரணம் எப்போது நிகழலாம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பி தன்னுடைய 65வது வயதில் ஒரு பெரிய ஜோதிடரைச் சந்தித்துப் பேசினார். ஜோதிடர் உங்களுக்கு இப்போது மரணம் நிகழாது. உங்களுடைய ஜாதகம் நீண்ட ஆயுள் ஜாதகம். இன்னும் 20 ஆண்டு காலம்  வரை உங்கள் ஆயுள் நீடிக்கும் என்றார். அவர் சொன்னபடிதான் நடந்தது. நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் ரிஷப லக்கினக்காரர். 2 மற்றும் 7ம் இடங்கள்தான் மாரக ஸ்தானம். அந்த இடங்களின் அதிபதிகளான புதனும், செவ்வாயும் 12ல் அமர்ந்திருக்கிறார்கள். லக்கினாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று 11ல் அமர்ந்திருப்பதாலும், ஆயுள்காரகன் சனீஷ்வரன் சச யோக அமைப்பில் கேந்திர ஸ்தானமான 10ம் வீட்டில் (சொந்த வீடு) வலுவாக
அமர்ந்திருப்பதாலும் நீண்ட ஆயுள் ஜாதகம் இது.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 3-1-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே !!! ரிஷிப லக்கினம் ஸ்திர ராசி ,அதிபதி உச்சம் குரு வீட்டில் ,கூடவே குரு நேரடி பார்வை லகினத்தின் அதிபதி மீதி ,அதேபோல் 9-அம் பார்வையாக லகினத்தை குரு பார்க்கிறார் . லக்கனம் வலுப்பெற்று உள்ளது .அதேபோல் 8-க்கு உடையவன் குரு 5-இல் சுக்கிரன் பார்வை ,சந்திரன் 6-இல் மறந்தாலும் லக்கனம் வலு பெற்று உள்ளது அதுவே நீண்ட ஆயுள் காரணம் .
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, December 27, 2019 8:25:00 AM
-----------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில் :
1. ஜாதகர் ரிஷப லக்கினம் , விசாக நக்ஷத்திரம், துலா ராசி ராசி ஜாதகரின் நீண்ட ஆயுளிற்கான காரணங்கள்
2. பொதுவாக நீண்ட ஆயுளிற்கு எட்டாம் இடத்தையும் , ஆயுள் காரகன் சனியின் நிலையையும் பார்க்க வேண்டும்.
3. இவறின் எட்டாம் இடத்து அதிபதி குரு , லக்கின அதிபதியின் அதாவது உச்ச சுக்கிரனின் பாரவையோடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. நன்றாக உள்ளது.
4. மேலும் எட்டாம் இடத்து அதிபதி குரு நவாம்சத்திலும் உச்ச நிலையில் நன்றாக உள்ளார்.
5. ஆயுள் காரகன் சனி தனது சொந்த வீட்டில் பத்தாம் இடத்தில் நன்றாக பலமாக உள்ளார். மேலும் சனி நவாம்ச கட்டத்திலும் எட்டில் ஆயுள் ஸ்தானத்தில் பலமாக உள்ளார். இதுதான் ஜாதகரின் நீண்ட ஆயுளிற்கான காரணங்களாகும்.
6. இதனால் ஜாதகர் தனது சந்திரா தசை வரை தனது ஆயுளை
85 வயது வரை கழித்தார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, December 27, 2019 9:45:00 AM
------------------------------------------------
3
Blogger adithan said...
வணக்கம் ஐயா, 1) லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் 2) 8ம் அதிபதி குரு திரி கோணத்தில் அமர்ந்து, லக்னாதிபதியை, தன் பார்வையில் வைத்துள்ளார். 3) காரகன் சனி, 8ம் இடத்திற்கு மூன்றில் ஆட்சி பெற்றுள்ளார்.அவர் ரிஷப லக்ன யோககாரகர்.4) கர்ம காரகன் பார்வையில் உள்ள சூரிய தசை வரை ஆயுள் பலன் சொல்லிவிட்டார்.நன்றி.
Friday, December 27, 2019 11:40:00 AM
-----------------------------------------------
4
Blogger Muthuganesan said...
Sir,
My detailed prediction is given below
1 - Vrichiga lagnam, lagnathipathi in 11th house / uccham
2 - Jupiter/guru in 5th house, looking at 9th house(5th vision), 11th house(7th vision) and 1st house lagnam (9th vision)
3 - Lagnam /labasthanam / bakyasthanam are getting guru's sight, so all the 3 are benefited
4 - Laganam & Lagnathipathi are strong
5 - Ayul karakan sani is in 10 house at his own house which is very good.
6 - So the ascendant will have long blessed life
7 - Thisa of marakaathipathi Chandran (Moon) in 6th house and the thisa comes at 74 year on 19/02/2015.
8 - Marakathipathy is full moon (Pournami) which is a suba graham so, marakathipathy might have given death to this ascendant at the age of 84 years between 23/03/2018 to 09/06/2018 which is the period of Chandra thisai (marakathipathi) Guru pukthi (Astamathipathi) and Sani andaram(Ayulkarakan)
Please correct me if my prediction is wrong.
With Reagrds
Muthuganesh
8825958041
Friday, December 27, 2019 2:46:00 PM
----------------------------------------------
5
Blogger C Jeevanantham said...
Dear Sir,
The horoscope person lagna lord sukiran is uccham in 11th place. And Saturn in own place. Mars is in own place. Besides, Sun is uccham.
Since most of the planets are in own or uccham, the native live long life.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, December 27, 2019 5:44:00 PM
---------------------------------------------
6
Blogger Krishna said...
குருவிற்கு தாழ் பணிந்து வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
1) லக்னாதிபதியும் ராசிக்கு எட்டாம் அதிபதியுமான சுக்ரன் உச்சம் பெற்று, குருவின் பார்வையில் அமைந்திருப்பது
2) குருவின் பார்வையில் லக்கினம் இருப்பது
3) ரிஷப லக்கினத்திற்கும் எட்டாம் அதிபதி, தன்னுடைய எட்டாம் வீட்டிற்கு பெரும் கேந்திர வீடான (10-ல்), ஐந்தாம் வீட்டில். குரு சுபராதலால், திரிகோண வீட்டில் அமர்ந்தது பலம்.
4) நவாம்சத்தில் எட்டாம் வீட்டு அதிபதி குரு பகவான் உச்சம் வாங்கியது.
5) ஆயுள் காரகனும், ரிஷப லக்கினத்திற்கு ஒரே யோகாதிபதியுமான சனீஸ்வர பகவான், அவரது திரிகோண வீடான கும்பத்தில் ஆட்சி பலத்தில் அமர்ந்தது.
6) சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்ராபௌர்ணமியில் பிறந்து, ஜாதகம் சூரிய சந்திர பகவானின் (மதி, கதி) வலிமையை பெற்றது.
7) நவாம்சத்தில் சந்திரன் உச்சம், சூரியன் ஆட்சி, குரு உச்சம் என ஆயுள் தீர்க்கம் பெற்ற ஜாதகம்.
நன்றி ஐயா!
Friday, December 27, 2019 6:16:00 PM
-----------------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
எட்டாம் அதிபதியான குரு 5ல் அமர்ந்தது.ஆயுள் காரகன் 10ல் அமர்ந்து ஆட்சி பெற்றது லக்னாதிபதி சுக்ரன் 11ல் உச்சம் பெற்று 8ம் அதிபதி குரு பார்வை பெற்றது
Saturday, December 28, 2019 8:45:00 PM
---------------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
ரிசப லக்கினம், துலா ராசி ஜாதகர்.
அவரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
லக்கினாதிபதி சுக்கிரன், 11ல் உச்சமடைந்து அட்டமாதிபதி குருவின் நேர் பார்வையிலுள்ளார்.
குருவின் 9ம் பார்வை லக்கினத்தின் மேலுள்ளது.
ஆயுள் காரகன் சனி 10மிடமான கும்ப ராசியில் தன் மூலத்திரிகோணத்திலுள்ளார்.
ஜாதகரின் நீண்ட ஆயுளுக்கு மேற்கண்ட கிரகங்களின் நிலையே காரணம்.
Saturday, December 28, 2019 10:08:00 PM
----------------------------------------------------------
9
Blogger seethalrajan said...
லக்கின அதிபதி உச்சம், அஷ்டாமதிபதி சுபர்ஆகி திரிகோணம் ஏறி உச்சனனின் பார்வையில், சனி ஆட்சியில் 10ல் பலமாக உள்ளார். ஆக லக்கினம்,அஷ்டம அதிபதி, ஆயுள்காரகன் பலம் பெற்றாதால் நீண்ட ஆயுள். நன்றி.
Sunday, December 29, 2019 12:44:00 AM
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.19

Astrology: Quiz: புதிர்: என் கேள்விக்கென்ன பதில் - நீண்ட ஆயுளுக்கென்ன வழி?



Astrology: Quiz: புதிர்: என் கேள்விக்கென்ன பதில் - 
நீண்ட ஆயுளுக்கென்ன வழி?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. விசாக நட்சத்திரக்காரர். தன்னுடைய மரணம் எப்போது நிகழலாம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பி தன்னுடைய 65வது வயதில் ஒரு பெரிய ஜோதிடரைச் சந்தித்துப் பேசினார். ஜோதிடர் உங்களுக்கு இப்போது மரணம் நிகழாது. உங்களுடைய ஜாதகம் நீண்ட ஆயுள் ஜாதகம். இன்னும் 20 ஆண்டு காலம்  வரை உங்கள் ஆயுள் நீடிக்கும் என்றார். அவர் சொன்னபடிதான் நடந்தது. நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை ----12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.19

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. 2500 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வீட்டைப் பற்றி ஒருவர் விவரிக்கிறார். பார்த்து மகிழுங்கள்!



2. இறைவனைப் பற்றி அற்புதமாகப் பேசுகிறார் ஒரு அன்பர். கேட்டு மகிழுங்கள்!



3. ஆண் ஒரு சக்தி: பெண் ஒரு சக்தி. அருமையாக விவரித்துப் பேசுகிறார் அன்பர் கோபிநாத், கேட்டு மகிழுங்கள்



4. உன்னைப் பாதுகாக்கக்கூடியது எது? விடையளிக்கிறார் ஒரு அன்பர். கேட்டு மகிழுங்கள்!



அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.12.19

உண்மைக்கும் பொய்க்கும் என்ன வேறுபாடு?


உண்மைக்கும் பொய்க்கும் என்ன வேறுபாடு?

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.

சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.

பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை.

மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

செலவு* " போக மீதியை சேமிக்காதே.

சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

விழுதல் என்பது " *வேதனை* ".

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *சாதனை*".
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.12.19

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!


வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு.

ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்..

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. எதுவுமே இங்கு தேவையில்லை.

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்..

*ஞாயிறன்று* இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.

*திங்களன்று* சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

*செவ்வாயன்று* விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

*புதனன்று* விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.

*வியாழனன்று* விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

*வெள்ளியன்று* விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.

*சனிக்கிழமை* விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்..ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்..நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்..பிறரை ஏமாற்றியிருந்தால்.. ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்..இந்த
ஸ்தலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.

*இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம்.* இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர்.. நவரத்தினங்களில் வைரமும்..
*ராசிகளில் சிம்மமும்..*  தேவர்களில் இந்திரனும்..
மிருகங்களில் கஸ்தூரி பூனையும்.. *இலைகளில் வில்வமும்..
*  பாணங்களில் பாசுபதாஸ்திரமும் *சக்திகளில் உமாதேவியும்* 
பூக்களில் தாமரையும்  *குருக்களில் வியாழ பகவானும்*..
முனிவர்களில் அகத்தியரும்.. *பிள்ளைகளில் பகீரதனும்..* எப்படி உயர்ந்ததோ  அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது...

*இதற்கு புன்னைவனம் சீரரசை*  என்றும் பெயருண்டு.

*இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில்
லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்...*

*ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து
காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும்..*

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு...

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம்
கன்னிகா தானம் செய்த பாக்கியம் கிடைக்கும்...

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.

*சங்கரனாகிய சிவனும்* *நாராயணனாகிய திருமாலும்* *இணைந்திருக்கும் சங்கர நாராயணர்* *கோயில் தான் அது.*

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

*வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.*

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.

ஓம் நமசிவாய!!!!
--------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.19

26-12-2019 அன்று ஏற்பட உள்ள கோள்சார அமைப்பு!!!!!


26-12-2019 அன்று ஏற்பட உள்ள கோள்சார அமைப்பு!!!!!

#டிசம்பர்_மாதத்தில் வரும் #கிரக_சேர்க்கை
அமைப்பும்,  #பாதுகாப்பு எச்சரிக்கையும்...

தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள் . இந்தகோள்சார அமைப்பு *25.12.19,     26.12.19,  27.12.19* ஆகிய மூன்று நாட்கள் நடைபெற போகிறது.

#தனுசு_ராசியில்
சூரியன், சந்திரன், குரு,
சனி, புதன், கேது
ஆகிய கிரகங்கள் ஒன்றாக இணைந்து #ராகுவின்_பார்வையை_பெறுகிறார்கள்.

இந்த அமைப்பு #நெருப்புக்கும்,  #காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும் கோள்சார கிரக சேர்க்கை.

1482 ஆம் வருடம் வந்த இது போன்ற கோள்சார அமைப்பு மிகப்பெறும் சாம்ராஜ்யங்களையே காணாமல் போகச்செய்துள்ளது. மனிதர்களின் மனநிலையும் புத்தியையும் வெகுவாக பாதித்துள்ளது.

இதைப் போன்ற கிரக சேர்க்கை அமைப்பில் தான் கண்ணெதிரே #தனுஷ்கோடி 1964 ம் வருடம் டிசம்பர் 25 ஆம் தேதியில் முற்றிலும் அழிந்து போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#சுனாமி_பேரழிவு வந்தது கூட இதைப் போன்ற ஒரு டிசம்பர் 26 ல் தான்..

ஆத்மகாரகனான #சூரியன்,
மனோகாரகனான #சந்திரன்,
ஞானகாரகனான #கேது,
பாக்கியகாரகரான #குரு,
புத்தி காரகனான #புதன்,
ஆயுள் காரகனான #சனி
இவர்கள் அனைவரும் ஒரே ராசியில் அசுப கிரகமான #ராகுவின் பார்வையில் ஒரு நீள்வட்டப்பாதையில் இயங்கும் போது, இந்த கிரகச் சேர்க்கையினால் இவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒன்றன் மேல் ஒன்று படும் பொழுது, ராகுவின் கதிர் வீச்சும் இவர்கள் அனைவரின் மீதும் படிகிறது.

இது மிகப்பெரும் போராட்டமான அமைப்பாகும். இந்த மூன்று நாட்களும் #பன்னிரெண்டு_ராசியினரும்
பதட்டம்,
கோபம்,
ரத்த அழுத்தம்,
சோம்பல்,
மனச்சோர்வு, 
இனம்புரியாத கலவரம்,
எல்லாச் செயல்களிலும் தாமதம்,
மறதி மிகவும் அதிகமாதல்,
என்னவென்று தெரியாத அளவிற்கு காலில் அதிக வலி ஏற்பட்டு அமைதியை கெடுக்கும் சூழ்நிலை என்று இந்த மூன்று நாட்கள் இருக்கும்.

இதில் #தனுசு ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும்.

#கன்னி ராசியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு காலில் இனம் புரியாத மிகுந்த வலி ஏற்படும்

#மகர ராசியினருக்கு மனதில் சிந்தனைகள் மாறுபடும் .எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அனைத்திலும் சந்தேகங்களும், கருத்து வேறுபாடுகளுக்கும் ஆளாகி, சண்டை சச்சரவுகளில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

மிகவும் அதிகமான பாதிப்பிற்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகும் ராசி #தனுசு ராசியினர் மட்டுமே.

*ஆனால் இவை எதற்கும் நாம் பயப்படத்தேவை இல்லை. ஏனென்றால் 25.12.19 மார்கழி 9 புதன் கிழமை #ஆஞ்சநேயர்_ஜெயந்தி. அன்று #அமாவாசை. #காலை 11.59 க்கு #சூரிய_கிரகணம் ஆரம்பம். 26.12.19 வியாழன் காலை 10.27 வரை #அமாவாசை உள்ளது.  27.12.19 வெள்ளிக்கிழமை #சந்திரதரிசனம் மிகவும் விசேஷம்.  அன்று இரவு சந்திரனை பார்ப்பது #அபரிதமான #விசேஷம்.

மிகவும் அதி பயங்கரமான மூன்று நாட்களில் கடவுள் நமக்காகவே #அமாவாசை #அனுமன்_ஜெயந்தி, #விசேஷமான 
#சந்திர_சரிசனம் போன்ற அற்புதமான நாட்களாகவும் தந்துள்ளார்.

#கடவுள் இருப்பது* உண்மைதானே!! 

இந்த கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பை நாம் தடுத்துவிடலாம்.  அதற்கு இப்பொழுது இருந்தே நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒரு #தர்ப்பைப்புல்லை எடுத்து ஒரு #காப்பர் பாத்திரத்தில் போட்டு வைத்து அதில் நீர் ஊற்றி தினமும் குடிநீராகக் குடிக்கவேண்டும்.

இது அந்த சமயத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் அறவே நீக்கிவிடும்.

இப்பொழுது இருந்தே #சுண்டல்_கடலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பலம் பெறும்.

#பாலில் சிறிது #ஏலக்காயும்_குங்குமப்பூவும் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் குடித்து விட்டு படுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் இப்பொழுது இருந்தே செய்துவர இந்த மோசமான கிரகச் சேர்கையில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முடிந்த வரை #அரிசியில்_கஞ்சி செய்து அதில் #சின்னவெங்காயம் பச்சையாக நறுக்கிபோட்டு குடித்து வர,  வாரத்தில் ஒருநாளாவது அது வியாழக்கிழமையாக இருந்தால் இன்னும் சிறப்பு.

இது உடம்பிற்கும் மனதிற்கும் மிகவும் நல்லது...

ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கிரக சேர்க்கை எல்லா மனிதர்களையும் கண்டிப்பாக பாதிக்கும்...அந்த பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள மேற்கண்ட பாதுகாப்பு முறையை கைக்கொண்டு நலம் பெறுவோம்...🌈


-----------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.19

Astrology: Quiz: புதிர்: Quiz 20-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: Quiz 20-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, திருவோண நட்சத்திரக்காரர். வீட்டில் உள்ள பெரியவர்கள் படித்து
வாத்தியார் வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால் ஜாதகர்
படித்துப் பட்டம் பெற்று வக்கீல் வேலை பார்க்கத்துவங்கினார். அதில் வெற்றியும் பெற்றார். நீதித்துறை அவருக்குப் பிடித்துப்போய் விட்டது.
அந்தத்துறையும் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டது. ஜாதகப்படி
அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மகர லக்கினக்காரர். பத்தாம் வீட்டுக்காரர் சுக்கிரன். 6ம் வீட்டில் இருக்கிறார். 6ம் வீடு வழக்குகளுக்கான வீடு, The 10th Lord Venus is in the 6th representing litigation. நீதிமான் குரு பகவானின் பார்வை 10ம் வீட்டின் மேல்
தீர்க்கமாக விழுகிறதையும் கவனியுங்கள்!!!! ஆகவே வக்கீல் வேலையில் வெற்றி அடைந்தார்!!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 27-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே !!! கொடுக்க பட்டுள்ள ஜாதகத்தில் மகர லக்கனம் அதிபதி 2-இல் மூல திரிகோணத்தில் ஆட்சி பெற்று வலுவாக உள்ளார் .சனி நீதிமான் அவரே 1-க்கு 2-க்கு உடையவர் 2-அம் இடம் வாக்குஸ்தானம் ,வருமானம் ,அதேபோல் நவாம்சத்தில் மகர லக்கினம் வரதககோமம் பெற்று சனி மிக பலமாக உள்ளார் .மகரம் குறிக்க கூடிய இடம் நீதி அவரே சனி நீதிமான் என்பதால் அவர்க்கு அந்த தொழில் பிடித்து விட்டது .காரணம் சந்திரன் மனோகாரகன் இஷ்டம் ,ஆசைகள் அவரே 7-க்கு உடையவர் லகினதை தன்னோடு அதிகத்தில் வைத்து உள்ளார் .அதேபோல்
சனி 3-அம் பார்வையாக குரு -யை பார்க்கிறார் .குரு நீதி வழங்கும் இடம்
 ,6-அம் இடம் சிறைச்சாலை சம்பந்தம் ,எதிரி ,அங்கே சூரியன் ,ராகு, புதன் ,சுக்கிரன் முக்கூட்டு கிரக அமைபு .புதன் 6-இல் நல்ல பேச்சு திறமை
கொண்டு அவரை வழிநடத்தி சஞ்சித கர்மாவை அனுபவிக்க அவர் இப்பிறப்பில் வக்கீலாக உள்ளார். அதேபோல் ஏன் வாத்தியார் வேலையில் அவர் சேரவில்லை என்றல் 5-க்கு உடையவர் 6-இல் மறைவு பெற்று இருப்பதால் அவர்க்கு வாத்தியார் வேலை சரி பட விலை .. காரணம் குரு உபதேசம் பகை வீட்டில் உள்ளார் ..
நன்றி நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, December 20, 2019 8:43:00 AM
-------------------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
மகர லக்கின , திருவோண நக்ஷத்திர மகர ராசி ஜாதகர் வக்கீல் படிப்பை
படித்து அதே துறையிலேயே இருந்ததற்கு காரணங்கள்
1 லக்கினம் அதிபதி ராசி அதிபதி சனி ஆவார். சனி யானவர் இரண்டாம் இடத்தில் சொந்த வீட்டில் உள்ளார். மேலும் வர்கோத்தம லக்கினம் , நவாம்சத்திலும் சனி சொந்த வீட்டில் உள்ளார்.
2 படிப்பு ஸ்தானமாகிய நான்காம் இடத்தில் குரு உள்ளார். இவர்
தன்னுடைய நேரடி பார்வையில் பத்தாம் இடத்தை வைத்து உள்ளார்.
3 . பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் ஆறாம் இடத்தில் சூரியன்
மற்றும் புத்தி காரகன் புதன் ( சொந்த வீட்டில் ) சுக்கிரனுடன் இணைந்து அவருக்கு பிடித்த வேலையை பார்க்க செய்தார். மேலும் பத்தாம் அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்திலும் பத்தில் அமர்ந்து நல்ல பலன்களை தந்தார்.
4 ஜாதகர் ராகு தசையில் தன் வக்கீல் படிப்பை முடித்து தனக்கு பிடித்த
வக்கீல் வேலையை செய்தார். இதற்கு சொந்த வீட்டில் உள்ள புதன்
மற்றும் பத்தாம் அதிபதி சுக்கிரனும் உதவினார். ஏனென்றால் லக்கின
அதிபதி சனிக்கு புதன் சுக்கிரன் சுப கிரகங்களாகும்.
இவர்கள் ராகுவுடன் கூட்டணியில் உள்ளனர்
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, December 20, 2019 12:29:00 PM
------------------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 28 ஜூன் 1964 மாலை 7 மணி 53 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகரின் வேலைக்கான இடத்தின் அதிபதி, 10ம் அதிபதி, சுக்ரன்
6ம் இடத்தில் சென்று அமர்ந்தார். அதனால் ஜாதகருக்கு வேலை
வழக்கு , வியாஜ்ஜியம் ஆகியவை நடைபெறும் நீதிமன்றத்தில்
அமைந்தது.
படிப்பிற்கான காரகன் மற்றும் 6ம் இடத்தின் அதிபதி புதன் மிதுனத்தில்
தன் வீட்டிலேயே அமர்ந்தது வக்கீல் படிப்பைக் கொடுத்தது.
எட்டாம் இடத்துகான அதிபதி சூரியன் 6ம் இடத்தில் அமர்ந்ததால்
ராஜ யோக பலன்கள் கொடுத்தது.எனவே வக்கீல் தொழில் நல்ல
புகழையும் பணத்தையும் கொடுத்தது.ராகு போன்ற கிரகங்கள் 6ல்
மறைவதும் நன்மையே.பொருள் கூடும்.
லக்கினாதிபதியும் இரண்டாம் இடத்திற்கு அதிபதியான சனைச்சரன் 2ம் இடத்திலேயே அமர்ந்தது வாக்கின் ஆற்றலைக் கொடுத்தது.
Friday, December 20, 2019 12:59:00 PM
-----------------------------------------------------------------
4
Blogger V Narayanan, Puducherry said...
10ம் வீட்டை குரு பார்க்கிறரே அது ஒன்று போதுமே வக்கீல் வேலைக்கு.
வெ. நாராயணன்
புதுச்சேரி
Friday, December 20, 2019 3:35:00 PM
-------------------------------------------------------
5
Blogger Krishna said...
குருவிற்கு தாழ் பணிந்து வணக்கத்தை தெரிவிக்கிறேன். தாங்கள் கற்று கொண்ட வித்தையை மற்றவர்களுக்கும் தெரியும்படி பாடம் நடத்தி வருகிறீர்கள். தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்றவர்களால் தான் எங்களை போன்ற இணையதள மாணவர்கள் ஜோதிடத்தை அறிய முடிகிறது. பல
மாதங்களாக  உங்கள் blog -யை படித்து வந்தாலும், இம்முறை ஜோதிட புதிருக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். ஏதேனும் தவறு

இருந்தால் என்னை திருத்தி கொள்ளும் படி பணிவுடன் வேண்டுகிறேன்.
வழக்கறிஞராக வேண்டுமெனில், சனியும், குருவும் ஏதேனும் ஒருவகையில் வாக்கு ஸ்தானத்திலோ, பத்தாம் வீட்டிற்க்கோ சம்மந்தம் கொள்ள வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் ஜாதகத்தில், சனீஸ்வராக பகவான் லக்கினாதிபதியாகி, வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதோடு,
தனது மூன்றாம் பார்வையாக நான்காம் வீட்டில் இருக்கும் குரு பகவானை
பார்க்கிறார். குரு பகவான் தனது நண்பரின் வீட்டில் இருப்பதோடு அல்லாமல், தனது ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டை பார்க்கிறார். மேலும் மேஷத்தில் இருக்கும் குரு நிச்சயமாக பரணி நட்சத்திர சாரம் வாங்கி இருக்க வேண்டும். ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் பத்தாம் வீட்டுக்கு திரிகோண வீடான ஆறாம்வீட்டில், ஆட்சி பெற்ற புதனோடு  இருக்கிறார். தர்ம கர்மாதி பதிகளோடு சேர்ந்த ராகு பகவன் ஆறாம் வீட்டில் உடன் இருந்து செய்யும் பலனை விருத்தி செய்ய கடமை பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கு குரு பகவான் திசையே வழக்கறிஞர் தொழிலில் ஈடுபாடு காட்ட வைத்திருக்கும். வெற்றியையும் கொடுத்திருக்கும். பத்தாம் அதிபதி சுக்கிர பகவான் நவாம்சத்தில் ஆட்சி பெற்று இருப்பது தொழில் விருத்தி அடைவார்
என்பதற்கு சான்று. லக்கினத்திற்கு யோகர்களான சனீஸ்வர பகவான், புதன் பகவான் மற்றும் சுக்கிர பகவான் பத்தாம் வீட்டுக்கு திரிகோண வீடுகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி அய்யா!
Friday, December 20, 2019 6:47:00 PM Delete
----------------------------------------------------------
6
Blogger Gowda Ponnusamy said...
ஜாதகர் மகர லக்கினம் ராசிக்கார ஜூன் 28, 1964 அன்று இரவு 8-00 மணியளவில் பிறந்தவர்.
லக்கினாதிபதி சனி தனது மூலத்திரிகோணவீடான கும்பத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார்.2ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று மாந்தியுடன் கூட்டணி போட்டு அமந்த சனி பொய்யை மெய்யாக்கும், மெய்யை பொய்யாக்கும் வல்லமை படைத்தவர். நீதி நேர்மைக்கு காரகனான சனி அவரை நீதி துறையில் சாதிக்க வைத்துள்ளது.41 வயதில் ஆரம்பித்த சனி மஹா தசை தொடர்ந்து வரும் புதன் (கேது மற்றும் சுக்கிரன்) மஹா தசைகள் வாழ்க்கையின் உச்சிக்கே உயர்த்தி விடும்.
அன்புடன்
-பொன்னுசாமி.
Friday, December 20, 2019 8:23:00 PM
--------------------------------------------------
7
Blogger Jayakumar said...
Good Day sir,
Simple aga sonnal, neethiman in second house sir. shortcut :)
Saturday, December 21, 2019 4:04:00 PM
--------------------------------------------------------
8
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)6ம் அதிபதி, வலுப்பெற்று, 6ல் ஆட்சி. உடன் 10ம் அதிபதி சுக்ரன். எனவே ஜீவனத்துக்கு தொழில்தான். உடன் அரசாங்கத்தை குறிக்கும் சூரியன் எனவே அரசாங்கம் சம்பந்தபட்ட வேலை 2)10ம் இடத்தை பார்க்கும் குரு, நீதித்துறைக்கு காரகர். 3) லக்னம், 5,11ம் அதிபதி வர்கோத்தமம். தன ஸ்தானஅதிபதி சனி, 2ல்ஆட்சி பெற்று,தன காரகன்  குருவை பார்வையில் வைத்திருக்கிறார். குரு 10ம் இடத்தை பார்த்து, தொழில் மூலம் நல்ல வருமானத்தை கொடுத்தார்.லாபாதிபதி செவ்வாய், கேந்திரத்தில் அமர்ந்து,
11ம் இடமான சொந்த வீட்டைப் பார்ப்பதால் அதீத வருமானம்.
4) 10ம் அதிபருடன் ராகு சேர்க்கையினால், நீதி துறையில் வக்கீல் வேலை
என நினைக்கிறேன். ராகுவின் குணத்தில்
திரித்து கூறுவதும் ஒரு குணமே. நன்றி.
Saturday, December 21, 2019 10:21:00 PM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.12.19

Astrology: Quiz: புதிர்: நீதிக்கே துணிந்து நின்றார் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தார்!!!!


Astrology: Quiz: புதிர்: நீதிக்கே துணிந்து நின்றார் நினைத்ததெல்லாம் 
ஜெயித்து வந்தார்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். வீட்டில் உள்ள பெரியவர்கள் படித்து வாத்தியார் வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால் ஜாதகர் படித்துப் பட்டம் பெற்று வக்கீல் வேலை பார்க்கத்துவங்கினார். அதில் வெற்றியும் பெற்றார். நீதித்துறை அவருக்குப் பிடித்துப்போய் விட்டது. அந்தத்துறையும் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டது.

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை ----12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.12.19

*இசை ரசிகர்களுக்கு உன்னத விருந்து .*


*இசை ரசிகர்களுக்கு உன்னத விருந்து .*

*காலத்தை வென்று இன்றும் இனிமை தரும் பாடல் .*

 *M.G.R. B.சரோஜாதேவி  உடல்மொழியால் வெளிப்படுத்திய காதல் சுவை அற்புதம் .*
 *கவிஞரின் கற்பனை வரிகள் , K.V.மஹாதேவனின் துடிப்பான இசையில் உயிர்பெற்று துள்ளி குதிக்கிறது .*
 *காட்சி அமைப்பு உள்ளிட்ட அனைத்தும் அருமை*
 *கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான பாடல்*

படம் : *தாய் சொல்லைத் தட்டாதே*
தீபாவளி வெளியீடு :  *7.நவம்பர் 1961*
நடிப்பு : *M.G.R*    *B.சரோஜாதேவி* 

பாடல் : *பட்டுச் சேலை காத்தாட*
பாடலாசிரியர் : *கவியரசு* *கண்ணதாசன்*
பாடியவர் : *டி.எம்.சௌந்தர்ராஜன்* *P.சுசீலா*
இசை : *K.V.மஹாதேவன்*
ஒளிப்பதிவு : C.V.மூர்த்தி
இயக்கம் :  M.A .திருமுகம்
தயாரிப்பு : தேவர்பில்ம்ஸ்

*பாடல் :*
பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே - என்னை
காதல் வலையில் அடைத்தவளே!

 *அரும்பு மீசை துள்ளி வர*
 *அழகுப் புன்னகை அள்ளி வர*
 *குறும்புப் பார்வை பார்த்தவரே* *- என்னைக்*
 *கூட்டுக் கிளியாய் அடைத்தவரே!*

கையில் எடுத்தால் துவண்டு விடும்!
கன்னம் இரண்டும் சிவந்து விடும்!
சின்ன இடையே சித்திரமே!
*சிரிக்கும் காதல் நித்திலமே!*

 *நிமிர்ந்து நடக்கும் நடையழகு...!*
 *நெருங்கிப் பழகும் கலையழகு...!*
 *அமைதி நிறையும் முகத்தழகு...!*
 *யாவும் உங்கள் தனியழகு...!*

உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே!
*மங்கை உந்தன் திருமுகமே!*

 *காசு பணங்கள் கேட்கவில்லை!*
 *ஜாதி மதங்கள் பார்க்கவில்லை!*
 *தாவி வந்தது என் மனமே - இனி*
 *தாழ்வும் வாழ்வும் உன் வசமே!*

பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே - என்னை
காதல் வலையில் அடைத்தவளே!

 🌈 *பாடலும் காட்சியும்* 👇



===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.12.19

உலகத்திற்கான பொதுமொழி எது?


உலகத்திற்கான பொதுமொழி எது?

மௌனம்..

மெளனம், ஒட்டு மொத்த உலகத்திற்கானப் பொது மொழி. ஓசை
எழுப்பாத ஒரு மொழி. பேசாமல் அமைதி  காப்பது மெளனத்தின்
ஒரு வகை. பேசக்கூடாத இடத்திலும், பேசத் தேவையில்லாத
இடத்திலும் இந்த "மெளனம்" நமக்கு  மிகவும் அவசியம்.

இரண்டாவது, "பூரணமான மெளனம்" என்பது வாயால் பேசாமலும்,
மனதால் எண்ணாமலும் இருப்பதே.  இப்படிப்பட்ட மௌனம்
ஆழமான ஒரு வகை தியானம். யோகா, மற்றும் தியான வகுப்புகளில்,
இது போன்ற மெளனம்  கடைப்பிடிக்கப் படுகிறது.

மூன்றாவது "பரிபூரண மெளனம்" ஐம் புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைதியாவதே பரிபூரண  மெளனம். இது தவம் செய்பவர்கள் கடைப்பிடிக்கும் மெளனம்.

நம் பேச்சால், ஒருவர் மனம் புண்படும் நிலை ஏற்படும் என்றால்,
அப்பொழுது மெளனமே சாலச் சிறந்தது. ஏதாவது ஒரு சமயத்தில் பொய்யுரைக்க வேண்டிய நிலை வந்தால் அதைத் தவிர்க்க
மெளனத்தைக் கையில் எடுக்கலாம்.

மெளனம் அமைதிக்கான ஆரம்பம்.

இந்த வார்த்தைக்கு, பல  அர்த்தங்கள் உள்ளன.

கேள்வி கேட்கப்படும் நேரத்தில், 'மௌனம்' "சம்மதம்"
நாம் நேசித்த சில உறவுகளைப் பிரியும்  போது, 'மௌனம்'
"துன்பம்"
இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின்
போது 'மௌனம்' "நம்பிக்கை"
நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில், 'மௌனம்' "சித்ரவதை"
நாம், தோல்வி கண்டு, வெற்றிக்கு வழிதேடும் போது, 'மௌனம்'
"பொறுமை"
நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் 'மௌனம்', "அடக்கம்"
திருமணக் கோலத்தில் உள்ள அமைதியின் போது, 'மௌனம்', "வெட்கம்"
தவறுதலாக, தவறு செய்த போது, 'மௌனம்', "பயம்"
ஆசைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் போது, 'மௌனம்', "எதிர்பார்ப்பு"
கோபத்தைக் குறைக்காமல் அடக்கும் போது 'மௌனம்', "ரத்தக்கொதிப்பு"
இலக்கை அடைய நினைத்து, ஒருமுகப்படுத்தும் போது, 'மௌனம்', "சக்தி"
தீவிரமாகப் போராடும் போது, 'மௌனம்', "வலிமை"
பிடிக்காத விஷயங்களை, ஒத்துக்கொள்ளாத போது, 'மௌனம்', "எதிர்ப்பு"
கல்யாண வீட்டில் கால் இடறி விழுந்த பின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது, 'மௌனம்', "அவமானம்".
நம்மை விட்டுப் பிரிந்தவர்களை, பாசத்தோடு நினைக்கும் போது, 'மௌனம்', "துக்கம்...!"
நம் குடி கெடுத்தவர்களை, பழிவாங்க நினைக்கும் போது, 'மௌனம்', "ஆத்திரம்."
கற்ற வித்தையைக் கையாளும் போது, 'மௌனம்', *"ஆனந்தம்."*
அயர்ந்த வேளையில், அமைதியான அந்த 'மௌனம்' "உறக்கம்."
உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க, உடலோ, அசையாமல் அயர்ந்திருக்க, அண்டை அயலார் சூழ்த்திருக்க, 'மௌனம்' "மரணம்...!"

வார்த்தைகள் இல்லாத புத்தகம் 'மௌனம்'. ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.
"மௌனம் என்பது வெளிச்சம்" நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.
"மௌனம் என்பது இருட்டு" எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம்.
"மௌனம் என்பது மூடி"! 
இதைத் தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம்.
"மௌனம் என்பது போதி மரம்" 
இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும்.
"மௌனம் என்பது தவம்" இதில் ஆழ்ந்தால் அமைதி  நிச்சயம்.
'மௌனம் என்பது வரம்' நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு 
சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும்.
இதழ்களை இறுக மூடி, நாம் நமக்குள் இறங்குவோம்!

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் உங்கள் பேச்சு, மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது...
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.12.19

இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா?


இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா?

தெரிந்து கொள்வோம்‼

33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!

🏵 9 ராஜ கோபுரங்கள்,

🏵 80 விமானங்கள்,

🏵 12 பெரிய மதில்கள்,

🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,

🏵 15 தீர்த்தக்கிணறுகள்,

🏵 3 நந்தவனங்கள்,

🏵3 பெரிய பிரகாரங்கள்,

🏵 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

🏵 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,

🏵 86 விநாயகர் சிலைகள்,

🏵 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*

தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.❗

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.🙏

ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.🙏

திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது❗
அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

*கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).
கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்

இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.19

Astrology: Quiz: புதிர்: 13-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 13-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான்." ஒரு சகோதரியின் ஜாதகத்தைக் கொடுத்து ஜாதகி உத்திர நட்சத்திரக்காரர். 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. ஜாதகத்தைப் பார்த்த பெரிய ஜோதிடர் ஒருவர், இது திருமணம் மறுக்கப்
பெற்ற ஜாதகம். ஆகவே திருமணமாகக் கூடிய வாய்ப்பு சுத்தமாக
இல்லை என்று கூறிவிட்டார். அது போலவே அவருக்கு கடைசிவரை திருமணமாகவில்லை. திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்”
என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகி ரிஷப லக்கினக்காரர். உத்திர நட்சத்திரம். திருமண பாக்கியத்திற்கு உரிய எல்லா வீடுகளுமே  கெட்டுப்போய் உள்ளன, லக்கினத்திற்கு 7ம் வீட்டில் சனி வக்கிர நிலைமையில் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனுக்கும் சனீஷ்வரனால் அதே நிலைப்பாடுதான்,
பூர்வ புண்ணியாதிபதி (5th Lord) புதன் 12ம் வீட்டில் போய் அமர்ந்துள்ளார்,
2ம்  வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) விரையாதிபதி செவ்வாயின்
ஆதிக்கம். மேலும் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி  இருக்கிறார்,
ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். இக்காரணங்களால் அந்த
சகோதரிக்கு திருமணம் கூடிவரவில்லை. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 20-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் அய்யா , ரிஷப லக்கனம் லகினத்தின் அதிபதி சுக்கிரன் லகினத்தில் கூடவே சனி பார்வை லகினத்துக்கு ,2-அம் இடம் குடும்பஸ்தானம் செவ்வாய் ,தீவிர மாந்தி கூடவே ,2-க்கு உடையவன் புதன் 12-இல் பகை கிரகம் கூடவே சூரியன் ,கேது .2-அம இடம் பாதிப்பு ,7-அம இடம் சனி 7-க்கு உடையவன் 2-இல் மாந்தி உடன் கணவன் குறிக்கும் செவ்வாய் பலம் இழந்து உள்ளால் .12-அம் இடம் கட்டில் சுகம் அங்கே சுட்டு எரிக்கும் சூரியன் , கேது ,புதன் ஒருவருக்கும் பகை கட்டில் சுகம் என்பது இலலாம போய் விட்டது .இதுவே அவருக்கு திருமணம் கை கூடாமல் போய் விடத்துக்கு காரணம் .
நன்றி நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, December 13, 2019 8:31:00 AM
----------------------------------------------------------------
2
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகி மே மாதம் 10ம் தேதியில் காலை 08-15 மணியளவில் பிற்ந்தவர்.
ரிஷப ல்க்கினம். கன்னி ராசி. லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அம்ர்ந்துள்ளார்.2 - 12 ம் பதிகள் செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை.குடும்ப வாழ்க்கையை குறிக்கும் 2ம் வீட்டில் செவ்வாய். சந்திரனுக்கு 2ம் வீட்டில் ராகு. குடும்ப வாழ்வு அமைவது கடினம்.லக்கினத்திற்க்கு 7ல் சனி பகை வீட்டில். ராசிக்கு 7ம் அதிபதி குரு ராசிக்கு 12ல் மறைவு.7ம் வீட்டிற்க்கோ 7ம் அதிபதிக்கோ சுபர் பார்வை இல்லை.திருமணம் வாய்ப்பில்லை.
ஜாதகி இருப்பு திசை சூரி 2வ + சந் 10வ + செவ் 6வ + ராகு 18வ + குரு 16வ = 52.
ஆக 52 வயது வரை யோகமற்ற தசா புத்திகள் நடைபெற்றதால் திருமணம் அமையவில்லை.திருமண பருவ கால்த்தில் 18 வயது முதல் அட்டமாதிபதி குருவின் சாரம் பெற்ற ராகு தசையும் அடுத்து வந்த அட்டமாதிபதி குருவின் தசையும் திருமணம் நடத்த அனுமதிக்கவில்லை.
-பொன்னுசாமி.
Friday, December 13, 2019 4:53:00 PM
------------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
௧.லக்கினாதிபதி சுக்கிரன் ஒன்றில் அது கேந்திர வீடு தன ஏழாம் பார்வையால் களத்திர வீட்டை பார்க்கிறார் காரகன் பாவ நாசம்
2 ஏழுக்குரிய செவ்வாய் அந்த இடத்திற்கு எட்டில் மறைந்துள்ளார் மேலும் மாந்தியுடன் எழில் சனி
3 .இரண்டுக்குரிய புதன் லக்கினத்திற்கு 12 இல் மறைந்துள்ளார்
4 .பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தின் மேல் செவ்வாயின் பார்வை வேறு
ஆகவே திருமணம் மறுக்க பெற்றது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, December 13, 2019 6:08:00 PM
------------------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகி 10 மே மாதம் 1957ல் காலை 7 மணி 18 நிமிடத்திற்குப் பிறந்தவ்ர்.
பிறந்த இடன் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்
1.7ம் இடத்தில் சனைச்சரன்.
2. 7ம் டத்துக்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் இடத்தில் அமர்ந்து மாந்தியுடன் கூட்டணி.
3.7ம் இடத்து அதிபன் செவ்வாயும் சனைச்சரனும் 6க்ஷ் 8 க்காக நிற்பது.
4. திருமணத்திகான காரகன் சுக்கிரன், செவ்வாய் சூரியன் கேதுவால் சூழப்பட்டுள்ளது.
5.லக்கினமும் கேது சூரியன், செவ்வாயால் சூழப்பட்டுள்ளது.
6.லக்கினாதிபதி சுக்கிரன் மேலும் காரகன் சுக்கிரன் சூரியனால் அஸ்தங்கதம்.
7. குடுமப ஸ்தான அதிபதி புதன் மற்றும் குழந்தை ஸ்தான அதிபதியும் ஆன புதன் சூரியனால் அஸ்தங்கதம்.
8.அஷ்டவர்கத்தில் 7ம் இடத்திற்கு 23 பரல் மட்டுமே
9. பாவ பல அட்டவணையில் 7 ம் இடத்திற்குக் கடைசி 12வது ரேங்க்.
10..திருமண வயதான 19 வயதில் ராகு தசா துவங்கி 18 ஆண்டுகல் 37 வயதுவரை.
11 குருதசா 8ம் இடத்தின் அதிபதியின் தசா 16 ஆண்டுகல் உதவி செய்யவில்லை.
Saturday, December 14, 2019 3:05:00 PM
----------------------------------------------------------
5
Blogger Ram Venkat said...
வணக்கம்.
விருசப லக்கினம், கன்னி ராசி ஜாதகி. கடுமையான செவ்வாய்
தோசமுள்ள ஜாதகம்.
அவருக்கு 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. திருமணம்
ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அமர்ந்தாலும், கத்திரியின் பிடியில் சிக்கி வலுவிழந்துள்ளார்.
2) யோகாதிபதி சனி ஏழில் அமர்ந்து வக்கிர கதியிலுள்ளார். அவரின் நேர் பார்வையில் சுக்கிரன் மற்றும் 10ம் தனிப்பார்வயில் வக்கிர குரு உள்ளனர்.
3) குடும்பாதிபதி புதன் 12ல் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.
12ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையில் உள்ளார்.
4) ஜாதகிக்கு 19 வயதில் ஆரம்பித்த ராகு தசை 36 வயது வரை நடந்துள்ளது. அதன் பின் வந்த வக்கிர குரு தசையும் சாதகமாக அமையவில்லை.
தசாபுக்திகள் சரியாக அமையாத காரணத்தால், கோச்சார கிரக பலன்களும் கிட்டவில்லை. தவிர சந்திரனும் குருவும் 1, 12 நிலையிலுள்ளனர். மேற்கண்ட காரணங்களால், 40 வயதாகியும் ஜாதகிக்கு திருமணம் கூடி வரவில்லை.
Saturday, December 14, 2019 8:47:00 PM
--------------------------------------------------------------
6
Blogger adithan said...
வணக்கம் ஐயா, 1) லக்னம், லக்னாதிபதி பாப கர்த்தாரி யோகத்தில்
2) 2ம் அதிபதியும், 12ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனதால், குடும்ப
ஸ்தானம் வலுவிழந்து. மேலும் 2இல் மாந்தி.3) 7ம் இடம்-கர்த்தாரி
யோகத்தில் மாட்டிய லக்னாதிபதி பார்வை.7ல் யோக காரகன் சனி
இருந்தும் பயனில்லை.4)7ம் அதிபதி செவ்வாய் 2ல்.அவர்
பரிவர்த்தனையால் பலமாகி, 12ம் அதிபதியின் அசுப பலனை கொடுக்கிறார்.
5) பெண்களுக்கு 8ம் வீட்டையும் பார்க்க வேண்டும். கெட்டுப்போன செவ்வாயின் நேரடி பார்வை 8இடத்திற்கு.5) சந்திர லக்னத்தை வைத்து பார்த்தாலும் 7ம் இடத்திற்க்கு,8ம் அதிபதி செவ்வாய் பார்வையினால்,அசுபமான லக்னாதிபதி சந்திரன் பார்வை.2ல் ராகு,
7ம் அதிபதி குரு 12ல், 8ல் கேது மற்றும் 12ம்அதிபதி
சூரியன். ஆகவே திருமணத்திற்கு எல்லா வழியும் அடைபட்ட ஜாதகம் நன்றி.
Saturday, December 14, 2019 10:17:00 PM
-------------------------------------------------------------------
7
Blogger Sridhar said...
My comments
1) லக்னாதிபதி பாபகர்தாரி யோகம்
2) செவ்வாய் 2 - தோஷம்
3) களதிற ஸ்தானம் - சனி. சனி பார்வையில் லக்னாதிபதி
திருமணம் கடினம்
Sunday, December 15, 2019 3:39:00 PM
-----------------------------------------------------------------
8
Blogger seethalrajan said...
கொடுக்கப்பட்ட ஜாதகத்தில்
1. களத்திர ஸ்னத்தில் சனி
2. 2ம் வீட்டில் செவ்வாய்
3. ராசிக்கு 7ம் அதிபதி குருவிற்கு சனியின் 10ம் பார்வை.
4. ராசிக்கு 2ல் ராகு
5. லக்கினத்திற்கு பாப கர்த்தரி
6. மேலும் 19 முதல் 37 வயது வரை ராகு தசை. ராகு நன்மை செய்யும் இடத்தில் இல்லை. ராகுவிற்கு சுபர் சம்மந்தம் இல்லை. தனக்கு ஆகாத சூரியன் பார்வையில் ராகு. இவை அனைத்தும் திருமணம் ஆகாதற்கு காரணம். நன்றி.
Sunday, December 15, 2019 8:49:00 PM
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.12.19

Astrology: Quiz: புதிர்: இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா ; நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா !!!!!


Astrology: Quiz: புதிர்: இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா ;
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா !!!!!

ஒரு சகோதரியின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திர நட்சத்திரக்காரர். 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. ஜாதகத்தைப் பார்த்த பெரிய ஜோதிடர் ஒருவர், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே திருமணமாகக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று கூறிவிட்டார். அது போலவே அவருக்கு கடைசிவரை திருமணமாகவில்லை.

திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை ----12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.12.19

சிவபெருமானே உட்கார்ந்து ஓலைச்சுவடியில் எழுதிய சிவபுராணம்!


சிவபெருமானே உட்கார்ந்து ஓலைச்சுவடியில் எழுதிய சிவபுராணம்!

நமச்சிவாய வாழ்க!

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி  மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள்  கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது  பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள்,  மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில்
இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 *சிறப்பு - 1* நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14. *சிறப்பு - 3*  அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.

15. *சிறப்பு -4* அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என  அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று
தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து
ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
"புல்லாகி,  பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி,   பறவையாய் ,
பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை
நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே
போகலாம்.

முதல் திருப்பதிகமான சிவபுராணத்தில் *நமச்சிவாய வாழ்க!* என
ஆரம்பித்து *அம்மை எனக்கு அருளியவாறு ஆர்  பெறுவார் அச்சோவே!*
என முடித்திருப்பார் மணிவாசகப் பெருமான். சிவமும் சக்தியும்தான் திருவாசகம்.

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்
சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*

திருச்சிற்றம்பலம்

*மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி*
--------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.12.19

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர்!!!!



உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர்!!!!

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே' உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்.... படியுங்கள் !

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston(உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

 மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
 “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.

இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

 ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று.......
--------------------------------------------------------------
Hard Work Never Fail
Soichiro Honda (本田 宗一郎 Honda Sōichirō, 17 November 1906 – 5 August 1991) was a Japanese engineer and industrialist.[1] In 1948, he established Honda Motor Co., Ltd. and oversaw its expansion from a wooden shack manufacturing bicycle motors to a multinational automobile and motorcycle manufacturer.
மேலதிகத் தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Soichiro_Honda
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.12.19

எவை நல்ல விஷயம்?

எவை நல்ல விஷயம்?

நான் தொலைகாட்சிகள் பார்ப்பதை நிறுத்தி மூன்று வருடங்களாகி விட்டது.

முப்பது வருடமாக இடைவிடாமல் படித்து வந்த ஜூனியர் விகடன்,
ஆனந்த விகடன்,தின மலர்,தினகரன்  மற்றும் குமுதம் படிப்பதையும்
நிறுத்தி விட்டேன்.

இது ஏதோ தற்சயலாக நடந்தது தான்.அனால் இவை எல்லாவற்றையும் நிறுத்திய பின் நாடு திடீர் என  அமைதி பூங்காவாக திகழ்கிறது.எதிர்மறை எண்ணங்கள் குறைகின்றன."நல்ல நேரம்" நிறைய கிடைக்கிறது.பிடித்த சரித்திர புத்தகங்களை தேடி படிக்க முடிகிறது.தேவைப்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல பல விஷயங்களை கூகுள் செய்து படித்து, பார்த்து ரசிக்க முடிகிறது.

டிவி ஒரு idiot box என்று சொன்ன மகானை தேடி கொண்டு இருக்கிறேன்
நான்  மாலை போடுவதற்கு.

டிவி தான் ,  நீங்கள் என்ன நினைக்க வேண்டும்,என்ன பார்க்க வேண்டும்  என்பதை முடிவு செய்கிறது.அவைகளும் வியாபாரிகளே.விளம்பர இடைவேளை என்பது வெளியில் தெரியும் விளம்பரங்கள்.செய்தி என்ற போர்வையில் தனக்கு வேண்டப்பட்ட கட்சிக்கு மறைமுகமாக  ஜால்ரா
தட்டும் ஊடகங்கள் தமிழகத்தில் பெருத்து விட்டது.எல்லாமே இன்று underground dealing  தான். நமக்கு புரிய சில வருடங்கள் ஆகும்.அவ்வளவு தான்

எவ்வளவோ நல்ல விஷயங்கள் facebook, whatsapp களினால் தெரிவிக்கபடுகிறது.ஆனால்,தமிழ் டிவி மற்றும் பத்திரிக்கைகள் எதுவும் அதை ஒளிபரப்புவது இல்லை.  எதற்கும் உதவாத விவாதங்களை நடத்தி கொண்டு அரசியல்வாதிகளுக்கு விளம்பர இடைவேளை கொடுத்து
கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் யாருக்குமே தெரியாத  மனுஷ்ய புத்திரன்,சீமான்,தமிழன் பிரசன்னா,ஜகத் கஸ்பர், பியுஸ்,ஜோதி மணி
மற்றும் நமது  சிரிப்பு அருணன்  போன்றோரை விவாதம் என்ற பெயரில்
அமர வைத்து யார் லூசு என்று தரக்குறைவாய் திட்டி பட்டிமன்றம் நடத்தி  பிரபல படுத்தி பின்  பணமுடிப்பு கொடுத்து அனுப்பும் டிவி சேனல்கள் முட்டாள்களா? பார்க்கும் நாம் முட்டாள்களா?   இதில் ஒரு முக்கிய கட்சி சார்பாக ஒரே மாநிலத்தில் ஐந்தாறு டிவி சேனல்கள் வேறு. கலாசார சீர்கேடான,அரை வேக்காட்டு  சீரியல்கள்,தமிழர்களை இன்னும்
முட்டாள்கள் என்றே அந்த சேனல்கள்   நினைத்து வருவது வெட்க கேடு.தமிழன் தன்பெருமைகளை மறந்து வருகிறான்.நம் திருக்குறள் உலகங்கும் செல்லும்.ஆனால் நாம் இங்கு சீரியலில் மூழ்கி கிடப்போம்.இன்றைய தமிழ்நாடு, உண்மையான தமிழ்நாடா?

அறுபது வருட திராவிட நாத்திக அசிங்க  அரசியல் நம் நாயன்மார்களையும்,ஆழ்வார்களையும் மறக்க அடிக்க முயன்று கொண்டிருக்கிறது.நல்ல விஷயங்களை, அது குரான் ஆகட்டும்
அல்லது பைபிள் ஆகட்டும் அல்லது தேவார,திரு வாசக மாகட்டும்
இன்றைய தமிழர்கள் எத்தனை பேர் தேடி  படிக்கிறார்கள்? படித்தால்,
டிவி சீரியல் பார்க்க மனம் ஒப்பாது.

மீடியா காரர்களிடம் போட்டி மனப்பான்மை வேறு .வியாபார போட்டி .
இன்று ஆழ்குழாய் குழியில் விழும் குழந்தைகளை லைவ் டெலிகாஸ்ட் செய்ய போட்டி போடும் மீடியா அந்த குழந்தை இறந்த பின் அது போல் தமிழ்நாடு எங்கும் இருக்கும் ஆழ்குழாய்  குழிகளை தேடி  மூட எந்த வித முயற்சியும் தன சேனல் மூலம் செய்ய முயல்வதில்லை.பரபரப்பு ஒன்றே போதுமானது.மீடியா மேதாவிகளுக்கு என்றுமே இறந்தால் தான் நற்செய்தி.சாவும் சாதிக்கு சாதி வித்தியாசபடுத்த படுகிறது.

sensational news அதிகம் பார்த்து மனித மனம் இன்று பரபர என தான்  அலைகிறது.இதுவும் ஒரு மனோ வியாதி தான்.ஒரு வித பயத்தையும் உருவாக்குகிறது.

நீங்கள் உண்ணும் உணவு என்னவோ அதை போல் தான் உங்கள் நடத்தை,குணம் எல்லாம்  அமையும் என்பதை போல் நீங்கள் பார்க்கும்
வக்கிர டிவி செய்திகள் உங்கள் குணத்தை ஒரு நாள் கெடுக்கவும் செய்யும்.பொறுப்பு கேட்ட மீடியா தான் இன்று நம்மை ஆள்கிறது.
தயவுசெய்து அதை தவிருங்கள்.வாழ்க்கை இனிப்பாகும்.அமைதி ஆகும்.சொந்தமாக சிந்திபீர்கள்.

எல்லாவற்றையும் Exaggerate செய்து காட்டும்  மன நிலை ஊடக
நபர்களுக்கு கை வந்த கலை.அவர்கள் பெண்களை என்றுமே ஒரு போக பொருளாக தான் காட்டி வருகிறார்கள்.சில செய்தி பத்திரிக்கைகளில் கற்பழிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு கொடுக்க  படுவதில்லை.

அடுத்த பிரச்சினை, பிரபலமாக ஆக , சில பைத்தியங்கள் வேறு.....
மேடையில் ஏதோதோ உளறி கொட்ட வேண்டியது. அது உடனே
sensational news........சமீபத்தில் கூட ராஜீவ் விவகாரம்.கேட்டவுடன்
தலை சுற்றியது........கொல்வது இங்கு வீரமா?

வீட்டில் நூலகங்கள் வையுங்கள்.தினமும் ஒரு மணி நேரமாவது
நல்ல புத்தகங்களை தேடி  படியுங்கள்.

முடிந்தால் தொலைகாட்சியை மார்வாடி கடையில் அடமானம் வைத்து
நல்ல புத்தகங்களை வாங்கி  படியுங்கள். முக்கிய செய்திகளை இன்று ரேடியோவிலோ அல்லது இன்டர்நெட் மூலமாகவோ  தேவை ஆன
அளவு அறிந்து  கொள்ளுங்கள்.அது நமக்கு போதுமானது.

நிறைய நேரம் இருந்தால், அநாதை  குழந்தைகளுக்கு உதவுங்கள்.கல்வி கொடுங்கள்.உணவு கொடுங்கள்.இறைவனின் பொற்பாதங்களில் நேரத்தை செலவிடுங்கள்.
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.12.19

Astrology: Quiz: புதிர்: 6-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 6-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார். அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கேட்டை நட்சத்திரக்காரர். ராசியும் அதுவே. 9ம் அதிபதி - பாக்கியாதிபதி - சந்திரன் லக்கினத்திலேயே உள்ளார், 9th Lord in the Lagna will confer huge wealth. அதீதமான பண வரவிற்கு அதுவே காரணம். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 10ம் வீட்டில் (தொழில் ஸ்தானத்தில்) உடன் குரு பகவான். தொழில் மேன்மைக்கு அதுவே காரணம். அவர் தொழில் செய்து பணம் ஈட்டுவதற்கு இந்த அமைப்பே உதவியது. அத்துடன் குரு பகவான் தன்னுடைய விசேட பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அத் அவருடைய சொந்த வீடு மட்டுமல்ல, தன ஸ்தானமும் ஆகும். செல்வம் சேர்ந்தமைக்கு இந்த அமைப்பும் காரணமாகும்

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 13-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே .. விருச்சிக லக்கனம் ,லகினத்தின் அதிபதி 10-இல் தொழில் ஸ்தானம் அமர்ந்து கூடவே 2-க்கு உடையவன் சேர்க்கை பெற்று உள்ளார் .11-அம் அதிபதி லக்கனத்தில் திக் பலம் பெற்று கூடவே சந்திரன் சேர்க்கை பணபரம் அணைத்து இடம் நல்ல நிலையில் உள்ளது ..ஆகவே ஜாதகர் தொழில் நல்ல நிலைமையில் உள்ளது .கூடவே காரகன் சனி ஆட்சி வீட்டில் 3-இல் பலமாக உள்ளார் ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898..
Friday, December 06, 2019 8:43:00 AM
---------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி தொழில் ஸ்தானமாகிய பத்தில்
2 .வியாபாரத்திற்கும் பதினொன்றிக்கு உரிய புதன் லக்னத்தில் குறைந்த முயற்சிநிறைந்த லாபம்
3 .தனகாரகன் குருவின் நேரடி பார்வையில் இரண்டாம் இடம்
4 பத்தில் கேது பல தொழில் புரியும் யோகம்
5 .பாக்கியாதிபதி சந்திரன் லக்கினத்தில் லக்கினத்தில் இரண்டு சுப கிரகங்கள்
6 .வெற்றிக்கான மூன்றாம் இடத்தில கர்மகாரகன் சனி ஆட்சி பலத்துடன்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, December 06, 2019 3:08:00 PM
------------------------------------------------------
3
Blogger Ram Venkat said...
வணக்கம்.
விருச்சிக லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர். காலாமிர்த யோகமுள்ள ஜாதகம்.
அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதி செவ்வாய் (சுய பரல் 5)கர்ம ஸ்தானமான 10ல் தனாதிபதியும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுமான குரு பகவானுடன் (சுய பரல் 5) கை கோர்த்து வலுவாக‌ அமர்ந்துள்ளார்.
2) 10ம் அதிபதி சூரியன் 12ல் நீசமடைந்து மறைந்தாலும், சுபகத்திரி யோகத்திலுள்ளார்.
3) பாக்கியாதிபதி சந்திரன் லக்கினத்தில் அமர்ந்து, லாபாதிபதி புதனுடன் கூட்டணீயிலுள்ளார்.
4) ஜாதகருக்கு 29 வயதிற்கு மேல் (லக்கின பரல் 29) கஜகேசரி போன்ற பல ராஜ யோகங்கள் செயல்படத் தொடங்கின.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்.
Friday, December 06, 2019 9:41:00 PM
--------------------------------------------------
4
Blogger classroom2007 said...
வணக்கம்
01.11.1932 ஆம் தேதி காலை 08.14. மணிக்கு விருச்சிக லக்கினம், விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகர். (எடுத்து கொண்ட இடம் - சென்னை)
விருச்சிக ராசிக்கு குரு யோகக்காரர்.
பலம்: செவ்வாய் (5 பரல்), குரு (5 பரல்), புதன் (5 பரல்), சனி (5 பரல்) சந்திரன் ( 5 பரல்), சுக்கிரன் (6 பரல்)
அஷ்டவர்க்க பலன்: செல்வம் கொழிக்கும் -
10ம் வீடு (34 பரல்), 11ம் வீடு (36 பரல்) 12ம் வீடு (19 பரல்)
சிறந்த யோகங்கள் :
1. லஷ்மி யோகம்: பொருளாதார உயர்வு , அதிர்ஷ்டம் , பாராட்டு
2. அமல யோகம்: நீண்ட காலத்திற்கு மதிப்பு , மரியாதை , எல்லா வசதிகளையும் பெறுவது.
3. பாச யோகம் : நிறைய பணம் வரும். தலைவருக்கும் தகுதியும் உண்டு
4. வசுமதி யோகம்: கடின உழைப்பு நிறைய சம்பாதிப்பு சமுதாயத்தில் நல்ல மதிப்பு
5. நீச்ச பங்க ராஜ யோகம்: அரச போக வாழ்க்கை பெருமையும் அதிகாரமும் தானே வந்து அடையும்.
6. வசை யோகம்: வளமும் சந்தோஷமும் அதிகரிக்கும். பிறரால் நேசிக்கப்படுவீர்கள்
7. சங்க யோகம் - குரு -செவ்வாய் சேர்ந்து இருப்பது - வெற்றி , உயர்ந்த பதவி, நினைத்ததை சாதிப்பது
2ம் வீட்டு அதிபதி குரு 10ம் வீட்டில் லக்கினாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து 5ம் பார்வையால் 2ம் வீட்டை பார்ப்பதால் பணம் வருமானத்திற்கு எந்த குறையும் வராது (குரு யோகக்காரர்).
5ம் வீட்டு அதிபதியும் குருவே. ஆகையால் நிறைய அதிர்ஷ்டம் , நிறைய ஆதாயம்.
(Speculative Gains) (குரு யோகக்காரர்).
11ம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்தில் அமர்ந்து லக்கினாதிபதி செவ்வாயின் 4ம் பார்வையால் பலமாக உள்ளார். (ஷட் பலம் புதன் 135%)
10ம் வீட்டு அதிபதி 12ல் அமர்ந்தால் வெளி நாட்டில் தொழில்
ஜாதகர் வெளி நாட்டில் சிறந்த டாக்டர் ஆக பணி புரிபவர்
செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்து யோகக்காரர் குரு உடன் சேர்ந்து இருப்பது உங்களது வசதியான வாழ்க்கை உங்களது சிறுவயது முதலே ஆரம்பமாகி விட்டது. (ஷட் பலம் செவ்வாய் 183%)
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, December 07, 2019 9:23:00 AM
-------------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 1 நவெம்பர் 1932ல் காலை 8 மணி 20 நிமிடங்கள் 30 வினாடி போல பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
லக்கினாதிபதி செவ்வாய் 10ம் இடத்தில் கேந்திரம் ஏறியது
தன பூர்வ புண ஸ்தான அதிபதி குரு 10 இடத்தில் கேந்திரம் ஏறி தன ஸ்தானத்தையே பார்த்தது.
7ம் அஹிபன் சுக்கிரன் 11 லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் ஆனது. 5ம் இடத்தினைப் பார்த்தது.
9ம் அதிபதியும் 11ம் அதிபதியுமான சந்திரன் மற்றும் புதன் லக்கினத்திலேயே வந்து அமர்ந்தது.
நீசமான சந்திரன் மற்றும் சுக்கிரன் இரண்டும் நீச பங்கம் ஆனது. கஜ கேசரி யோகம் அமைந்தது,
19 வயதில் துவங்கி 39 வயதுவரை சுக்கிர தசா நடந்தது. நல்ல் உடல் வலு இருக்கும் போது சுக்கிர தசாவும் நடந்து, தன ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைத்தது பணம் கொட்டக் காரணமாக அமைந்தது.
அஷ்ட வர்கத்தில் அனைத்து கிரகங்களும் சுய வர்க்கம் 5க்கு மேல். சூரியன் மட்டும் 4. பரல். சர்வ அஷ்ட வர்கத்தில் 9ம் இடம் 29, 10 இடம் 34, 11ம் இடம் 35 பரல். விரயத்திற்கு 19 பரல் மட்டுமே. எனவே வரவு கூட. செலவு குறைவான ஜாதகம்.
இவையெல்லாம் அவருடைய அதிர்ஷ்டத்திற்குக்காரணம்.
Saturday, December 07, 2019 10:26:00 AM
--------------------------------------------------------
6
Blogger Shanmugasundaram said...
வணக்கம் ஐயா ஜாதகர் பிறந்தது 01/11/1932 8.15am. பாக்கியாதிபதியும் லாபாதிபதியும் லக்னத்தில் அமர்ந்து ஜாதகன் தொட்டதெல்லாம் அதிர்ஷ்டமாக அமைந்தது.மேலும் லக்னாதிபதியும் தன பஞ்சமாதிபதியும் பத்தில் அமர்ந்து ஜாதகனை மிகப்பெரிய தொழிலதிபர் ஆக்கியது. பத்தாம் அதிபதி சூரியன் நீச்சம் ஆனால் ஜாதகர் திருதியை திதியில் பிறந்ததால் சிம்மமும் மகரமும் சூன்ய ராசியாகும்.சூன்யாதிபதி சூரியன் நீசமாகி மிகப்பெரிய ராஜ யோகமாக அமைந்தது.
Saturday, December 07, 2019 11:47:00 AM
---------------------------------------------------------
7
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
ஜாதகர் விருச்சிக லக்கினம் , விருச்சிக ராசி அமைந்த ஜாதகர், இவரின் தொழில் மேன்மைக்கான காரணங்கள்
1 பொதுவாக தொழில் மேன்மைக்கு பத்தாம் மற்றும் பதினொன்றாம் இடத்தையும் , இரண்டாம் இடத்தையும் , லக்கின அதிபதி நிலையையும் பார்க்க வேண்டும்
2 . இவற்றின் லக்கின அதிபதி ராசி அதிபதியான செவ்வாய் இரண்டாம் இடத்து அதிபதியுடன் அதாவது குருவுடன் சேர்க்கை பெற்று பத்தாம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் உள்ளார்.
3 மேலும் இரண்டாம் இடத்து அதிபதி குரு தனது ஐந்தாம் பார்வையால் தன் இரண்டாம் இடத்தை சுபமாக வைத்து உள்ளார். . இது ஒரு சுப அமைப்பு ஆகும்.
4 மேலும் பதினொன்றாம் இடத்து அதிபதி அசுப கிரகமாக விருச்சிக்காக லக்கினத்திற்கு இருந்தாலும் , லக்கினத்திலேயே அமர்ந்து தொழிலில் சிறக்க வைத்தார்.
5 . தொழில் ஸ்தான அதிபதி புதன் மேலும் பதினொன்றாம் இடத்திற்கு மூன்றில் அமர்ந்து பல வெற்றிகளை பெற செய்தார்.
6 லக்கின அதிபதி செவ்வாய் ராசி கட்டத்தில் குருவுடன் சேர்ந்தும் , நவாம்சத்தில் சொந்த வீட்டிலும் அமர்ந்து பல நன்மைகளை செய்தார். மேலும் பத்தாம் இடத்து அதிபதி சூரியன் பனிரெண்டில் நீசமாக உள்ளதால் இவரால் வேலையில் சிறப்பாக செயல்பட இயலவில்லை.
7 ஆனால் பதினொன்று, இரண்டு மற்றும் பத்தாம் இடத்தின் சுப தன்மை (அமர்ந்த கிரகங்கள்) பல நன்மைகளை செய்து தொடர் வெற்றிகளை தொழிலில் அடைய செய்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, December 07, 2019 11:55:00 AM
------------------------------------------------------
8
Blogger seethalrajan said...
வணக்கம், இந்த ஜாதகத்தில் லானதிபதியும் யோகதிபதியும் அதாவது குருவும், செவ்வாயும் அதினர்ப்பு வீட்டில் 10ல் இருப்பது முக்கிய காரணம். மேலும் சுக்கிரன் 11ல் (சூரியனுக்கு 12ல் ஆதலால் நீச்சம் இல்லை) லாப மழை கொட்டும். நன்றி.
Saturday, December 07, 2019 6:11:00 PM
----------------------------------------------
9
Blogger guru said...
அய்யா,
ஜாதகர் பிறந்த தேதி :1 - Nov - 1932.
ஜாதகரின் தொழில் மேன்மைக்கும் செல்வ செழிப்பிற்கும் காரணங்கள்:
1 . விருச்சிக லக்கினாதிபதி செவ்வாய் 10 -இல் திக் பலம். கூடவே குரு சேர்க்கை. லக்கினத்திற்கு லக்கினாதிபதி 4 - ஆம் பார்வை. நவாம்சத்தில் ஆட்சி. 10 -ஆம் வீடு சூரியனின் வீடு. நிர்வாகம் மற்றும் தலைமை பொறுப்பிற்கு உகந்த நிலை.
2 . கர்மா காரகன் சனி ஆட்சி. 10 ஆம் அதிபதி சூரியனுக்கு சனி பார்வை. சூரியன் நின்ற வீட்டதிபதி சுக்கிரன் 11 -இல் நீச்ச பங்கம்.
லக்கினமும், 10 - ஆம் இடமும், செவ்வாயும், சனியும் மிகுந்த பலம் பெற்று இருக்கிறது. தொழில் வெற்றிக்கு உகந்த நிலை.
3 . தனாதிபதி குரு கேந்திரம் பெற்றதும் , லாபாதிபதி புதன் லக்கின கேந்திரம் பெற்றதும், சுக்கிரன் லாபத்தில் உச்சம் பெற்றதும் , பண வரவையும் லாபத்தையும் உயர்த்தி கொண்டே செல்லும் அமைப்பு.
4 . சந்திரன் லக்கின கேந்திரத்தில் நீச்ச பங்கம். ராகு விற்கு யோகாதிபதி குரு பார்வை.
ஆக ஜாதகருக்கு வந்த அனைத்து தசைகளும் யோகத்தையே தந்து தொடர் வெற்றிகளை அளித்து இருக்கிறது.
Sunday, December 08, 2019 6:43:00 PM
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.12.19

Astrology: Quiz: புதிர்: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!


Astrology: Quiz: புதிர்: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்.

அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 9-12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.12.19

கார்த்திகை மாதத்தின் சிறப்பு என்ன?


கார்த்திகை மாதத்தின் சிறப்பு என்ன?

கார்த்திகை மாதத்தின் சிறப்பையும், இந்த மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வ வழிபாடுகள் பற்றிய 51 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

5. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

6. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

7. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

8. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

9. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

10. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

11. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

12. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

13. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

14. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

15. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

16. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

17. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன்
வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

18. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

19. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

20. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

21. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

22. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

23. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

24. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

25. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

26. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

27. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

28. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய
பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன
அமைதி உண்டாகும்.

31. தீபத் திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

32. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.

33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.

35. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

36. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

37. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயர்வாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

38. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம்  ட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

39. திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.

40. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!

41. குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!

42. கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும்
பெயர் வைக்கலாம்.

43. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.

44. கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.

45. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

46. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

47. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.

48. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

49. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

50. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

51. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

தொகுப்பு: நாச்சியாபுரம் சேதுராமன் லெட்சுமணன்.
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================================\
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!