மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.12.19

Astrology: Quiz: புதிர்: 6-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 6-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார். அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கேட்டை நட்சத்திரக்காரர். ராசியும் அதுவே. 9ம் அதிபதி - பாக்கியாதிபதி - சந்திரன் லக்கினத்திலேயே உள்ளார், 9th Lord in the Lagna will confer huge wealth. அதீதமான பண வரவிற்கு அதுவே காரணம். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 10ம் வீட்டில் (தொழில் ஸ்தானத்தில்) உடன் குரு பகவான். தொழில் மேன்மைக்கு அதுவே காரணம். அவர் தொழில் செய்து பணம் ஈட்டுவதற்கு இந்த அமைப்பே உதவியது. அத்துடன் குரு பகவான் தன்னுடைய விசேட பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அத் அவருடைய சொந்த வீடு மட்டுமல்ல, தன ஸ்தானமும் ஆகும். செல்வம் சேர்ந்தமைக்கு இந்த அமைப்பும் காரணமாகும்

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 13-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே .. விருச்சிக லக்கனம் ,லகினத்தின் அதிபதி 10-இல் தொழில் ஸ்தானம் அமர்ந்து கூடவே 2-க்கு உடையவன் சேர்க்கை பெற்று உள்ளார் .11-அம் அதிபதி லக்கனத்தில் திக் பலம் பெற்று கூடவே சந்திரன் சேர்க்கை பணபரம் அணைத்து இடம் நல்ல நிலையில் உள்ளது ..ஆகவே ஜாதகர் தொழில் நல்ல நிலைமையில் உள்ளது .கூடவே காரகன் சனி ஆட்சி வீட்டில் 3-இல் பலமாக உள்ளார் ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898..
Friday, December 06, 2019 8:43:00 AM
---------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி தொழில் ஸ்தானமாகிய பத்தில்
2 .வியாபாரத்திற்கும் பதினொன்றிக்கு உரிய புதன் லக்னத்தில் குறைந்த முயற்சிநிறைந்த லாபம்
3 .தனகாரகன் குருவின் நேரடி பார்வையில் இரண்டாம் இடம்
4 பத்தில் கேது பல தொழில் புரியும் யோகம்
5 .பாக்கியாதிபதி சந்திரன் லக்கினத்தில் லக்கினத்தில் இரண்டு சுப கிரகங்கள்
6 .வெற்றிக்கான மூன்றாம் இடத்தில கர்மகாரகன் சனி ஆட்சி பலத்துடன்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, December 06, 2019 3:08:00 PM
------------------------------------------------------
3
Blogger Ram Venkat said...
வணக்கம்.
விருச்சிக லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர். காலாமிர்த யோகமுள்ள ஜாதகம்.
அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதி செவ்வாய் (சுய பரல் 5)கர்ம ஸ்தானமான 10ல் தனாதிபதியும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுமான குரு பகவானுடன் (சுய பரல் 5) கை கோர்த்து வலுவாக‌ அமர்ந்துள்ளார்.
2) 10ம் அதிபதி சூரியன் 12ல் நீசமடைந்து மறைந்தாலும், சுபகத்திரி யோகத்திலுள்ளார்.
3) பாக்கியாதிபதி சந்திரன் லக்கினத்தில் அமர்ந்து, லாபாதிபதி புதனுடன் கூட்டணீயிலுள்ளார்.
4) ஜாதகருக்கு 29 வயதிற்கு மேல் (லக்கின பரல் 29) கஜகேசரி போன்ற பல ராஜ யோகங்கள் செயல்படத் தொடங்கின.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்.
Friday, December 06, 2019 9:41:00 PM
--------------------------------------------------
4
Blogger classroom2007 said...
வணக்கம்
01.11.1932 ஆம் தேதி காலை 08.14. மணிக்கு விருச்சிக லக்கினம், விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகர். (எடுத்து கொண்ட இடம் - சென்னை)
விருச்சிக ராசிக்கு குரு யோகக்காரர்.
பலம்: செவ்வாய் (5 பரல்), குரு (5 பரல்), புதன் (5 பரல்), சனி (5 பரல்) சந்திரன் ( 5 பரல்), சுக்கிரன் (6 பரல்)
அஷ்டவர்க்க பலன்: செல்வம் கொழிக்கும் -
10ம் வீடு (34 பரல்), 11ம் வீடு (36 பரல்) 12ம் வீடு (19 பரல்)
சிறந்த யோகங்கள் :
1. லஷ்மி யோகம்: பொருளாதார உயர்வு , அதிர்ஷ்டம் , பாராட்டு
2. அமல யோகம்: நீண்ட காலத்திற்கு மதிப்பு , மரியாதை , எல்லா வசதிகளையும் பெறுவது.
3. பாச யோகம் : நிறைய பணம் வரும். தலைவருக்கும் தகுதியும் உண்டு
4. வசுமதி யோகம்: கடின உழைப்பு நிறைய சம்பாதிப்பு சமுதாயத்தில் நல்ல மதிப்பு
5. நீச்ச பங்க ராஜ யோகம்: அரச போக வாழ்க்கை பெருமையும் அதிகாரமும் தானே வந்து அடையும்.
6. வசை யோகம்: வளமும் சந்தோஷமும் அதிகரிக்கும். பிறரால் நேசிக்கப்படுவீர்கள்
7. சங்க யோகம் - குரு -செவ்வாய் சேர்ந்து இருப்பது - வெற்றி , உயர்ந்த பதவி, நினைத்ததை சாதிப்பது
2ம் வீட்டு அதிபதி குரு 10ம் வீட்டில் லக்கினாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து 5ம் பார்வையால் 2ம் வீட்டை பார்ப்பதால் பணம் வருமானத்திற்கு எந்த குறையும் வராது (குரு யோகக்காரர்).
5ம் வீட்டு அதிபதியும் குருவே. ஆகையால் நிறைய அதிர்ஷ்டம் , நிறைய ஆதாயம்.
(Speculative Gains) (குரு யோகக்காரர்).
11ம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்தில் அமர்ந்து லக்கினாதிபதி செவ்வாயின் 4ம் பார்வையால் பலமாக உள்ளார். (ஷட் பலம் புதன் 135%)
10ம் வீட்டு அதிபதி 12ல் அமர்ந்தால் வெளி நாட்டில் தொழில்
ஜாதகர் வெளி நாட்டில் சிறந்த டாக்டர் ஆக பணி புரிபவர்
செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்து யோகக்காரர் குரு உடன் சேர்ந்து இருப்பது உங்களது வசதியான வாழ்க்கை உங்களது சிறுவயது முதலே ஆரம்பமாகி விட்டது. (ஷட் பலம் செவ்வாய் 183%)
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, December 07, 2019 9:23:00 AM
-------------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 1 நவெம்பர் 1932ல் காலை 8 மணி 20 நிமிடங்கள் 30 வினாடி போல பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
லக்கினாதிபதி செவ்வாய் 10ம் இடத்தில் கேந்திரம் ஏறியது
தன பூர்வ புண ஸ்தான அதிபதி குரு 10 இடத்தில் கேந்திரம் ஏறி தன ஸ்தானத்தையே பார்த்தது.
7ம் அஹிபன் சுக்கிரன் 11 லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் ஆனது. 5ம் இடத்தினைப் பார்த்தது.
9ம் அதிபதியும் 11ம் அதிபதியுமான சந்திரன் மற்றும் புதன் லக்கினத்திலேயே வந்து அமர்ந்தது.
நீசமான சந்திரன் மற்றும் சுக்கிரன் இரண்டும் நீச பங்கம் ஆனது. கஜ கேசரி யோகம் அமைந்தது,
19 வயதில் துவங்கி 39 வயதுவரை சுக்கிர தசா நடந்தது. நல்ல் உடல் வலு இருக்கும் போது சுக்கிர தசாவும் நடந்து, தன ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைத்தது பணம் கொட்டக் காரணமாக அமைந்தது.
அஷ்ட வர்கத்தில் அனைத்து கிரகங்களும் சுய வர்க்கம் 5க்கு மேல். சூரியன் மட்டும் 4. பரல். சர்வ அஷ்ட வர்கத்தில் 9ம் இடம் 29, 10 இடம் 34, 11ம் இடம் 35 பரல். விரயத்திற்கு 19 பரல் மட்டுமே. எனவே வரவு கூட. செலவு குறைவான ஜாதகம்.
இவையெல்லாம் அவருடைய அதிர்ஷ்டத்திற்குக்காரணம்.
Saturday, December 07, 2019 10:26:00 AM
--------------------------------------------------------
6
Blogger Shanmugasundaram said...
வணக்கம் ஐயா ஜாதகர் பிறந்தது 01/11/1932 8.15am. பாக்கியாதிபதியும் லாபாதிபதியும் லக்னத்தில் அமர்ந்து ஜாதகன் தொட்டதெல்லாம் அதிர்ஷ்டமாக அமைந்தது.மேலும் லக்னாதிபதியும் தன பஞ்சமாதிபதியும் பத்தில் அமர்ந்து ஜாதகனை மிகப்பெரிய தொழிலதிபர் ஆக்கியது. பத்தாம் அதிபதி சூரியன் நீச்சம் ஆனால் ஜாதகர் திருதியை திதியில் பிறந்ததால் சிம்மமும் மகரமும் சூன்ய ராசியாகும்.சூன்யாதிபதி சூரியன் நீசமாகி மிகப்பெரிய ராஜ யோகமாக அமைந்தது.
Saturday, December 07, 2019 11:47:00 AM
---------------------------------------------------------
7
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
ஜாதகர் விருச்சிக லக்கினம் , விருச்சிக ராசி அமைந்த ஜாதகர், இவரின் தொழில் மேன்மைக்கான காரணங்கள்
1 பொதுவாக தொழில் மேன்மைக்கு பத்தாம் மற்றும் பதினொன்றாம் இடத்தையும் , இரண்டாம் இடத்தையும் , லக்கின அதிபதி நிலையையும் பார்க்க வேண்டும்
2 . இவற்றின் லக்கின அதிபதி ராசி அதிபதியான செவ்வாய் இரண்டாம் இடத்து அதிபதியுடன் அதாவது குருவுடன் சேர்க்கை பெற்று பத்தாம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் உள்ளார்.
3 மேலும் இரண்டாம் இடத்து அதிபதி குரு தனது ஐந்தாம் பார்வையால் தன் இரண்டாம் இடத்தை சுபமாக வைத்து உள்ளார். . இது ஒரு சுப அமைப்பு ஆகும்.
4 மேலும் பதினொன்றாம் இடத்து அதிபதி அசுப கிரகமாக விருச்சிக்காக லக்கினத்திற்கு இருந்தாலும் , லக்கினத்திலேயே அமர்ந்து தொழிலில் சிறக்க வைத்தார்.
5 . தொழில் ஸ்தான அதிபதி புதன் மேலும் பதினொன்றாம் இடத்திற்கு மூன்றில் அமர்ந்து பல வெற்றிகளை பெற செய்தார்.
6 லக்கின அதிபதி செவ்வாய் ராசி கட்டத்தில் குருவுடன் சேர்ந்தும் , நவாம்சத்தில் சொந்த வீட்டிலும் அமர்ந்து பல நன்மைகளை செய்தார். மேலும் பத்தாம் இடத்து அதிபதி சூரியன் பனிரெண்டில் நீசமாக உள்ளதால் இவரால் வேலையில் சிறப்பாக செயல்பட இயலவில்லை.
7 ஆனால் பதினொன்று, இரண்டு மற்றும் பத்தாம் இடத்தின் சுப தன்மை (அமர்ந்த கிரகங்கள்) பல நன்மைகளை செய்து தொடர் வெற்றிகளை தொழிலில் அடைய செய்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, December 07, 2019 11:55:00 AM
------------------------------------------------------
8
Blogger seethalrajan said...
வணக்கம், இந்த ஜாதகத்தில் லானதிபதியும் யோகதிபதியும் அதாவது குருவும், செவ்வாயும் அதினர்ப்பு வீட்டில் 10ல் இருப்பது முக்கிய காரணம். மேலும் சுக்கிரன் 11ல் (சூரியனுக்கு 12ல் ஆதலால் நீச்சம் இல்லை) லாப மழை கொட்டும். நன்றி.
Saturday, December 07, 2019 6:11:00 PM
----------------------------------------------
9
Blogger guru said...
அய்யா,
ஜாதகர் பிறந்த தேதி :1 - Nov - 1932.
ஜாதகரின் தொழில் மேன்மைக்கும் செல்வ செழிப்பிற்கும் காரணங்கள்:
1 . விருச்சிக லக்கினாதிபதி செவ்வாய் 10 -இல் திக் பலம். கூடவே குரு சேர்க்கை. லக்கினத்திற்கு லக்கினாதிபதி 4 - ஆம் பார்வை. நவாம்சத்தில் ஆட்சி. 10 -ஆம் வீடு சூரியனின் வீடு. நிர்வாகம் மற்றும் தலைமை பொறுப்பிற்கு உகந்த நிலை.
2 . கர்மா காரகன் சனி ஆட்சி. 10 ஆம் அதிபதி சூரியனுக்கு சனி பார்வை. சூரியன் நின்ற வீட்டதிபதி சுக்கிரன் 11 -இல் நீச்ச பங்கம்.
லக்கினமும், 10 - ஆம் இடமும், செவ்வாயும், சனியும் மிகுந்த பலம் பெற்று இருக்கிறது. தொழில் வெற்றிக்கு உகந்த நிலை.
3 . தனாதிபதி குரு கேந்திரம் பெற்றதும் , லாபாதிபதி புதன் லக்கின கேந்திரம் பெற்றதும், சுக்கிரன் லாபத்தில் உச்சம் பெற்றதும் , பண வரவையும் லாபத்தையும் உயர்த்தி கொண்டே செல்லும் அமைப்பு.
4 . சந்திரன் லக்கின கேந்திரத்தில் நீச்ச பங்கம். ராகு விற்கு யோகாதிபதி குரு பார்வை.
ஆக ஜாதகருக்கு வந்த அனைத்து தசைகளும் யோகத்தையே தந்து தொடர் வெற்றிகளை அளித்து இருக்கிறது.
Sunday, December 08, 2019 6:43:00 PM
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com