மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 101 - 110. Show all posts
Showing posts with label Lessons 101 - 110. Show all posts

8.9.08

பாடம் எண் 110. கால சர்ப்ப தோஷம் cum யோகம்!

"காலம் எங்கே வந்தது? அதில் சர்ப்பம் எங்கே வந்தது?" போன்ற உபரிக்
கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

ஆயிரத்தெட்டு உபரிக் கேள்விகள் மனதில் வந்தாலும், அதை எல்லாம்
கடாசி விட்டுப் படித்ததனால் ஜோதிடம் எனக்கு ஓரளவிற்குப் பிடிபட்டது.

கண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது
முனிவர்கள் தங்களது ஞானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல்
போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும்.

ராகு & கேது ஆகிய கிரகங்களை அவர்கள் கொடிய சர்ப்பத்திற்கு நிகராக
ஒப்பிட்டு எழுதியும், அந்த இரு கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்
களும் வானத்தில் இருக்கும் நிலையைச் சர்ப்பகாலம் என்றும், அந்தக்
காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை காலசர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்
அல்லது ஜாதகர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்

ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!

Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)

இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத்
தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்!

ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம்
என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.

சாயா கிரகங்களான ராகுவைத் தலைப் பகுதியாகவும், கேதுவை வால்
பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது.

அந்த அமைப்புள்ள ஜாதகர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி - அந்த
தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமான
தாகும். சோகமானதாகும்.

அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
மட்டுமே அது தெரியும்.

லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி
லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
பகுதியும் மோசமானதாக இருக்கும். இந்த மோசமான என்ற சொல்லுக்குள்
எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்!

இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில், வேறு நல்ல யோகங்கள் எதுவும்
இல்லை என்றால், அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை
இருக்காது.பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் ஒதுக்கப்படும்
நிலையில் வாழ்வான்.

ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு
என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும்.

இறைவன் கருணை மிக்கவன். தன் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட
வனை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை!

He will give you withstanding power in any miserable situation!

அதை மனதில் கொள்க!

உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று
உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இந்தத் தோஷம் எத்தனை ஆண்டுகளுக்கு?

இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33 ஆண்டுகள் வரை இந்தத்
தோஷம் உண்டு என்பார்கள். சிலர் அஷ்டகவர்க்கத்தில் லக்கினத்தில்
எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு
என்பார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் 28 பரல்
கள் என்றால், அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு
பிறகு தோஷம் விலகியவுடன் அதுவே யோகமாக மாறி ஜாதகரை உயர்
விற்குக் கொண்டு போகும்.

இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள். நாம் சுதந்திரம்
அடைந்த 1947ஆம் ஆண்டு கூட்டல் அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை
நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு
தான் நாம் அசுர வேகத்தில் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்
கின்றோம்.

எனது அனுபவத்தில் இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக
இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுப் பலன்கள்
1
இந்த தோஷம் லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது
கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை
கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல
சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems)
ஏற்படும்!
2
இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
பிரச்சினைகள் ஏற்படும்!
3
இந்த தோஷம் மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன்
சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும்.
4
இந்த தோஷம் நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து
வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும்.
வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும்.
5
இந்த தோஷம் ஐந்தாம் வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை
வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும்.
6.
இந்த தோஷம் ஆறாம் வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள்
விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும்
7.
இந்த தோஷம் ஏழாம் வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும்.
8.
இந்த தோஷம் எட்டாம் வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன்
சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி
விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும்.
9
இந்த தோஷம் ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன்
பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்
(இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால்
என்ன பாக்கியம் கிடைக்கும்? சொல்லுங்கள்)
10.
இந்த தோஷம் பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது.
அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது.
11.
இந்த தோஷம் பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள்
பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது
நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும்.
12
இந்த தோஷம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க
வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத்
தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து
மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலும் சில விவரங்கள்:
1
கால சர்ப்ப தோஷ ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு
அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம்
முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய
முடியாது.
2
லக்கினத்தில் ராகு இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி
லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற
அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும்,
சோதனைகளும் உண்டாகும்.
3
நான்காம் வீடு அசுபர் வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும். அதுவே சுபர்
வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும்.
4
ஐந்தாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு
புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது
வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும்.
5
ஆறாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து
நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை
பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.

6.
ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன்
சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால்
ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!
7.
ராகு-சனி' அல்லது ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று
இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான
களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை!
8.
கால சார்ப்ப தோஷம் cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும்
செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக
தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப்
பலன். அல்லது எப்பொதும் நான் சொல்வதைப்பொல வாங்கி வந்த வரம்!:-)))

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))

சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த
பிறகே திருமணம் நடைபெறும்.

அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள
பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று
இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு
ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு
உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே
தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள்.

இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு,
பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப்
பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு
ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில்
உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும்.

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின்
திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த
திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை
மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.

ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே
ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு
அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக்
கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம்
உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை
இருவரும் தவிர்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பரிகாரங்கள்:

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற
நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம்
வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஷ்வரம்
என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று
ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது
முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள்
குறையும்.

கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி
லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய)
நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி
என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும்
தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட
வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று
வழிபடுவது அதி முக்கியம். அதையும் மனதில் கொள்க!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு கால சர்ப்ப தோஷ ஜாதகம் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்:

இசையில் ஞானி அவர். அவருடைய ஜாதகம்தான் இது. 1943 ல் பிறந்த
அவர். 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் எவ்வளவு சிரமப்
பட்டார் என்பதும், அதற்குப் பிறகு அந்த தோஷமே அவருக்கு யோகமாக
மாற, தமிழகத்தையே ஒரு கலக்குக் கலக்கி, லட்சக்கணக்கான அபிமானி
களைப் பெற்று ஒரு உன்னத நிலையை அடைந்தார் என்பதையும்
தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தன் நினைவில் வைத்திருக்கும்படியான
அற்புதமான மனிதர் அவர்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கால சர்ப்ப தோஷத்துடன் பிறந்த சில பிரபலங்கள்:

மகாத்மா காந்தி - 2.10.1869
பண்டிட் ஜவஹர்லால் நேரு - 14.11.1889
நெப்போலியன் - 15.8.1769
ஹிட்லர் - 20.4.1889
முசோலினி - 29.7.1883
ராஜிவ் காந்தி - 20.8.1944
ஹர்ஷத் மேத்தா - 29.7.1954
-----------------------------------------------------------------
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி (அவர்தான் சாமி முக்கியம்) மற்றும்
கிரகங்கள் சுயவர்க்கத்தில் பெற்றுள்ள பரல்கள், வீடுகளுக்குக் கிடைத்துள்ள
பரல்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

1.9.08

தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?


தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக அழகானவள். பார்த்தவர்களைத்
திரும்பப் பார்க்க வைக்கும் அழகு.

அழகு என்பது எதற்கு இங்கே வலியுறுத்திச் சொல்லப்படுகிறது?

அப்போதுதான் ஒரு சுவாரசியத்தோடு படிப்பீர்கள். பதிவிற்கு வந்து
செல்கிறவர்களில் எண்பது சதவிகிதம் இளைஞர்கள். அதாவது நாற்பது
வயது வரை உள்ள அனைவரும் இளைஞர்கள் என்று நீங்கள்
ஏற்றுக் கொண்டால்!:-))))

நாற்பதிற்கு மேல்தான் நாய்க்குணம்; அறுபதிற்கு மேல் பேய்க்குணம்
(என்பார்கள்) இந்த என்பார்கள் என்பது நான் தப்பித்துக் கொள்வதற்காக!
அதாவது அந்த வயதுக்காரர்களின் கேள்விக் கணைகளில் இருந்து
விடுபடுவதற்காக!:-))))

கோமதி கதைக்கு வருகிறேன்.

காலம் எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.அவளுடைய வீடு
பொதிகைத் தென்றல் வருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில்
இருந்தது.கோமதி நான்கு பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம்
செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும்
குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகமாக வாழ்ந்து
வந்தான்.

பொழுது போக்கு?

அதுதான் கோமதி இருக்கிறாளே!:-))))

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும்
என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல்,
மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி போன்றவற்றில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில் 20 லிட்டர்
பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு
பாத்திரங்களில் பால்.அதை வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை.அந்தக்
கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள
நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள் வீடுகளில் அவள்தான்
விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும்
காட்டாற்றையும் கடந்து சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால்
அளவிற்குத் தண்ணீர் ஓடும். மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெறுக்
கெடுக்கும். அப்போது ஆற்றைக கடக்க நினைப்பது முடியாத காரியம்.
கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக
நனைத்து விளையாடிக்கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு
கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்துவந்த
கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட காதலால், சம அளவு
தண்ணீர் கலந்து விற்க ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில்
சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து
கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர்
உன்னை நம்பி தங்கள் குழ்ந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி
றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான்
வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம்
சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப்
பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை
வீட்டில் வைக்க யோசனை செய்து தானே அணிந்து கொண்டு திரிவாள்.
ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச்
செய்யும் வலையல்கள் என்று ஒரு நகைக் கடைப் பொம்மை போல் ஆகி
விட்டாள். தாய் வீட்டுச் சீதனம், தான் வாங்கியது என அவள் மேனியில்
ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே
வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில் அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று
சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும்
சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான
முன்னோட்டம் அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக
ஆற்றைக் கடக்க முனைந்தவளை, அவள் பாதி ஆற்றை கடக்கும் முன்பே,
இடுப்பளவு உயர்ந்த ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது. அவள் சுதாகரிக்கும்
முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு
முழுமையாக விளையாட ஆரம்பித்தது.

ஈடு கொடுத்து அவளால் விளையாட முடியவில்லை. அதோடு பயத்தில்
மயங்கி விட்டாள்
--------------------------------------------------------------------
இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில்
மயங்கிக் கிடந்த கோமதி நினைவு திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள்.
ஆற்றில் வெள்ளம் வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய
பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே
இருப்பதை உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப்
போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு
விட்டுப் போன ஆற்றை நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள்
போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட
இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது
அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் எவனோ ஒருவன் அத்தனை
நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய
ஆடைகளைக்கூடச் சரி செய்யும் சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று
குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது
பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள்.
அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்துவரும்
ஓசை கேட்டு. அழுகையுடனேயே திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான்
வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய தோட்டத்துக்
காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின
உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி
விவரித்ததைக் கேட்ட பிள்ளை சொன்னார்.

"சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப்
போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள
முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே - அது பாவச்
செயல் என்று சொன்னேன். கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே
தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல்
விடமாட்டான். உன் கணக்கை இப்போது அவன் தீர்த்திருக்கிறான்.
தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த
உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது.வா போகலாம்!"
----------------------------------------------------------------
இந்தக் கதைக்கும் இன்றைய பாடத்திற்கும் சம்பந்தம்?

"ஆகா, இல்லாமலா, இன்றைய பாடம் தர்ம ஸ்தானத்தைப் (Ninth House)
பற்றிய பாடம்!

"ஒன்பதாம் வீட்டிற்குப் பாக்கியஸ்தானம் என்றல்லவா பெயர்?"

"இன்னொரு பெயரும் உண்டு. அதைத் தர்ம ஸ்தானம் என்றும் அழைப்பார்கள்!"
---------------------------------------------------------------
ஒன்பதாம் வீட்டிற்கான மேலதிக விபரங்கள்.

இதன் முன் பகுதிக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.
அதைப் படித்திராதவர்கள் அதை முதலில் படித்துவிட்டுப் பிறகு
இந்தப் பகுதிக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது இரண்டாவது பகுதி. முதல் பகுதிக்கான சுட்டி இங்கே
உள்ளது: சுட்டி!

அதைப் படித்துவிட்டீர்களா? சரி மேலே தொடர்ந்து படியுங்கள்!
-----------------------------------------------------------------
இங்கே சொல்லப்படும் நல்ல அமைப்பு என்பது உங்களுக்கெல்லாம்
தெரிந்ததுதான். நல்ல அமைப்பு என்பது ஒரு கிரகம் வலுவாக உச்சம்
அல்லது நட்பு வீடுகளில் அல்லது நல்ல கிரகங்களின் பார்வையுடன்
அமர்ந்திருப்பதாகும்.

அதுபோல கெட்டிருப்பது என்பது நீசம் அல்லது பகை வீடுகளில்
அல்லது சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பெற்று
அமர்வதாகும்.

அதை இரண்டையும் மனதில் அழுத்தமாகக் கொண்டு மேலே படிக்கவும்.

1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன்
பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக
இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்.
ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.

2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத
ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான்.

3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன்
நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும்
இருப்பான்.

4, இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின்
கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

5. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும்
அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்)
அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன்
அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக
இருக்கும்.

6. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம்
பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது
(The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா
விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the
horoscope will be very lucky in all respects.

7. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த
இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம
அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால்
(அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது The ninth lord
and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர்
தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள்
ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத்
திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள்,
கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது,
ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம
காரியங்கள் ஆகும் (இது அதைப்பற்றித் தெரியாத இளைஞர்களுக்காக
விவரிக்கப்பட்டுள்ளது அல்லது எடுத்துச் சொல்லப்பட்டது என்று வைத்துக்
கொள்ளுங்கள்)

8. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து
அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

9. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால்,
ஜாதகன் துரதிர்ஷ்டமானவன்.

10. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின்
பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

11. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு
அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு.

12. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.
வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்
களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன்.
கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன்.

13. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன்
பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக்
குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான்.

14. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே
அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமான
துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

15. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன்
ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன்
ஒரு அரசனைப் போல வாழ்வான்.
(He will be a ruler)

16. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின்
தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம்.

17. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன்
நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு
கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான்.

18. Second lord in the 11th, 11th lord in the ninth and ninth lord in the
second (exchanges), the native will be very lucky. ஆதீதமான பொருள்
சேரும்.

19. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள்
மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான்.

20. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன்
தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக
வாழ்வான்.

21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல்
ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்.

22. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால்,
ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும்.

23. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை
யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்
கூடியவன்.

24. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது
மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத்
துன்பங்கள்தான் ஏற்படும்.

25. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத்
திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர்
களால் புறக்கணிக்கப்படுவான்.

26.ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள்
உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது
ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம்
அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து
மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.

27. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால்,
ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும்.
ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும்.

28. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு
அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக்
குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும்,
முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான்.

29. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன்
இருப்பான் (scholar).

30. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக
அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான்.
அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால்
மேதையாக இருப்பான்.

31. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக
இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன்
நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை
யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின்
பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான்.

32. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும்.
சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள
ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான்.

33.ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை
மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது.

34.ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை
யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும்
ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட
குணமுடையவனாகத்தான் இருப்பான்.

35.ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில்
நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான
பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய
வனாக இருப்பான்.

36.ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால்,
ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான்.

37. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை
சரியில்லாதவனாக ஆகிவிடுவான்.

38. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி,
வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக்
கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான்.

39. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப்
பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.

40. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப்
பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு
அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான்.
மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய
கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும்.

41.ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius
criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு
உடையவனாக இருப்பான்.

42. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல
கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக
இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.

43. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு
மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில்
மகிழ்ச்சி இருக்காது.

44. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது.
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு,
போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும்.

45. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered).
மனநிலை பிரள்பவன்.

46. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல
உறவை ஏற்படுத்தாது.

47. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள்,
வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக்
கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது.

48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப்
பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு
வாழ்வாள்.

49. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித
இன்னல்களுக்கு ஆளாவாள்.

50. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில்
அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது
உண்டாகும் அல்லது நடைபெறும்.
--------------------------------------------------
ஜோதிடம் என்பது கடல். வடமொழியிலும், தமிழிலும் ஜோதிட விதிகளை
எழுதிய விற்பன்னர்கள் சுமார் இரண்டு லட்சங்களுக்கும் மேற்பட்ட விதி
முறைகளை எழுதி வைத்துள்ளனர். சில முக்கியமான விதிகளை மட்டுமே
ஒருவர் தன் மனதில் தக்க வைத்துக் கொள்ள முடியும்

எல்லாவறையும் கற்று பண்டிதன் ஆவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியம்
இல்லாதது. ஒரளவு தெரிந்து கொள்ளலாம். அதுவும் அர்வம், தன் முனைப்பு,
முயற்சி, நேரத்தைச் செலவிட்டுக் கற்றுக்கொள்ளுதல், படித்தவற்றை
திரும்பத் திரும்பப் படித்து மனதில் உருவேற்றுதல், குறிப்பாக involvement
& dedication ஆகியவை இருந்தால்தான் ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி
அடைய முடியும்.

பிறகு, பல ஜாதங்களைப் பார்ப்பதன் மூலமும், பலருடன் உரையாடுவதன்
மூலமும், அனுபவம் பெற்று முழுமை பெறலாம்.

அனுபவம் முக்கியமானது. படித்தல் மட்டும் அல்லது மனதில் வைத்தல்
மட்டும் உதவாது. அதை நினைவில் கொள்ளவும்.

இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி (அவர்தான் சாமி முக்கியம்) மற்றும்
கிரகங்கள் சுயவர்க்கத்தில் பெற்றுள்ள பரல்கள், வீடுகளுக்குக் கிடைத்துள்ள
பரல்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டுக் காலரைத் தூக்கிவிட்டுக்
கொண்டு மகிழ்வதோ அல்லது கவலைப் பட்டுக் கலங்குவதோ வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

தொடர்ந்து படித்து வந்தால், பிறகு ஒரு தினம் உங்களுக்கு ஜோதிடத்தில்
பாண்டித்யம் ஏற்படலாம்.

அதற்கும் உங்கள் ஜாதகத்தில் ஒரு அமைப்பு இருக்க வேண்டும்:-))))))))
---------------------------------------------------------
இது சற்றுப் பெரிய பாடம். இரண்டு வகுப்புக்களுக்கான பாடம். ஸ்கீரின்
ஸைஸில் 17 பக்கங்கள். பாடத்தின் தன்மை கருதி, இரண்டாகப் பிரிக்காமல்
ஒரே பாடமாகக் கொடுத்துள்ளேன். ஆகவே பொறுமையாகப் படிக்கவும்.
மனதில் கொள்ளவும். ஒரே ஸ்ட்ரோக்கில் படித்துவிட்டு, சார் அடுத்தபாடம்
எப்போது என்று கேட்க வேண்டாம்.

அடுத்த பாடம் 8.9.2008 திங்களன்று. நடுவில் முடிந்தால் ஜோதிடத்தைப்
பற்றிய சில விறுவிறுப்பான தகவல்கள் அடங்கிய பதிவு ஒன்றை எழுதலாம்
என்று உள்ளேன்.

இடையில் 3, 4 & 5 ஆம் தேதிகளில் வெளியூர்ப் பயணம் உள்ளது! அந்த
மூன்று தினங்களுக்கும் வகுப்பறைக்கு விடுமுறை!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

25.8.08

எப்போது நல்ல காலம்?


கடவுள் உங்கள் கண்முன்னே தோன்றி (ஒரு பேச்சுக்குத்தான் சாமி!),
"உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால்
என்ன கேட்பீர்கள்? (விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில்
தெரியப்படுத்துங்கள்)

முருகப்பெருமானின் தீவிர பக்தரான வீரபாகுவிடம், முருகன் நேரில்
காட்சி கொடுத்துக் கேட்டபோது, வீரபாகு சொன்னாராம்: "அப்பனே!
என் வாழ்நாள் முழுவதும் உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் வேண்டும்"

"அதைத் தந்தேன்; இன்னொன்றும் தருகிறேன், அடுத்ததைக் கேள்"
என்று முருகப்பெருமான் சொன்னபோது, வீரபாகு அடுத்ததாக என்ன
கேட்டார் தெரியுமா?

"உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத
மனம் வேண்டும்!"
------------------------------------------------------------------------------------
நாம் அப்படிக் கேட்டிருப்போமா என்றால் - நிச்சயம் கேட்டிருக்க மாட்டோம்.

இன்றைய 13% inflation லெவலில் அது சாத்தியமில்லாதது.
அரசு சொல்வது 13%. ஆனால் உண்மையில் 20% இருக்கும்போல் உள்ளது!

சரி, விஷயத்திற்கு வருகிறேன். நம்ம ஆசாமி ஒருவனிடம் - அதாவது
நம்ம காலத்து ஆசாமி ஒருவனிடம் - இன்னும் விளக்கமாகச் சொன்னால்
நமீதாயுகத்து ஆசாமி ஒருவனின் கண்முன்னே இறைவன் தோன்றி,
அதே போன்று சொல்ல, அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?

"ஆண்டவனே, நான் என்னுடைய நூறாவது வயதில், அழகான என்
மனைவியோடு, என்னுடைய ஆயிரம் ஏக்கர் பண்ணைத் தோட்டத்தில்
உள்ள, பத்து மாடி மாளிகையில், சுயமாக படிகளில் கடகடவென்று
நானே ஏறி உச்சி மாடத்திற்குச் சென்று, கண்ணாடி அணியாத என்
கண்களால், கீழே தோட்டத்தில் அமர்ந்து தங்கத்தட்டில் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் என்னுடைய கொள்ளுப் பேரனை, மனங்குளிரப்
பார்த்து மகிழும் பாக்கியம் வேண்டும்."

ஜாதகத்தின் 36 பாக்கியங்களும் இதில் அடங்கியிருக்கும்.அப்படியொரு
வரனைக் கேட்டான் அந்தக் கில்லாடி. அவன் கேட்கும்போது வயது 25

ஒரு வரம் கேள் என்று சொன்னால் எப்படிக் கேட்பதாம்.
இப்படித்தான் கேட்க முடியும்!:-))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறை வாசகர் ஒருவர் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பினால்
பார்த்துச் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! ஜோதிடத்தைப் படித்தவன்
அவ்வளவுதான். ஆர்வக் கோளாரினால் பதிவில் எழுதிகொண்டிருக்கிறேன்.
அல்லது ஜாதகப்படி எனது கெட்ட நேரத்தினால் பதிவுகளில் எழுதிக்
கொண்டிருக்கிறேன் (போதாத காலம்). அதை இன்னும் சிறப்பாக எழுத
வேண்டும் என்று ஆசை. நிறையப் பேர்களுக்கு அது பயன்படும்.
அதற்கே எனக்கு நேரம் பற்றவில்லை.அதோடு என் சொந்தத் தொழிலையும்
நான் பார்க்க வேண்டும். ஆகவே, மன்னிக்கவும் பார்க்க இயலாது'
என்று பதில் எழுதியிருந்தேன்.

அவர் விடவில்லை. அடுத்தடுத்து ஏழு மின்னஞ்சல்களில் கெஞ்சி
எழுதியிருந்தார். சரி போனால் போகிறது இவர் ஒருவருக்கு மட்டும்
நமது விதுமுறைகளைத் தளர்த்துவோம் என்று எண்ணி, சரி உங்கள்
Horoscope or Full Bith details with one important query அனுப்பி
வையுங்கள் என்று எழுதியிருந்தேன்.

அவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டிருந்தார். அது மேலே அந்தக்
கில்லாடி கேட்ட வரம் போல அவ்வளவு விஷயங்களையும்
உள்ளடக்கியிருந்தது. அந்தக் கேள்வியைக் கீழே கொடுத்துள்ளேன்.

அவருக்கு வயது 28. அதை மனதில் வைத்துக் கொண்டு அவருடைய
கேள்வியைப் படிக்கவும்.

"என் திருமணம், மனைவி, குழந்தைகள், வேலை, வீடு, கார் வாங்கும்
யோகம், ஆயுள் ஆகிய விஷயங்களில் என்னுடைய எதிர்காலம்
எப்படி இருக்கும்?"
------------------------------------------------------------------------------
ஒரே ஒரு கேள்வி கேளுங்கள் என்று சொல்லும்போது கேள்வி எப்படி
இருக்க வேண்டும்?

உதாரணத்திற்கு இரண்டைக் கொடுத்துள்ளேன்.

1. எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு
பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. அடிக்கடி மன நிம்மதி இழந்து
தவிக்கிறேன். இதற்கு என் ஜாதகப்படி என்ன காரணம்?

பதில்: உங்களுக்கு இரண்டில் - வாக்கு ஸ்தானத்தில் ராகு. ஆகவே
மனைவி என்றில்லை , எவருடனும் நீங்கள் வாயைத் திறந்தால்
சண்டையில்தான் போய் முடியும். ஆகவே விவாதங்களைத் தவிருங்கள்!

2. எனக்கு தற்சமயம் வேலையில் பெரும் பிரச்சினையாக உள்ளது.
பிரச்சினைகள் எப்போது குறையும்?

பதில்: உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில்
கோச்சாரச் சனி இருக்கிறார். அவர் இன்னும் பதினான்கு மாதங்கள்
அங்கே இருப்பார். அதுவரை அப்படித்தான் இருக்கும். எச்சரிக்கையாக
இருங்கள். சக ஊழியர்களுடன் மல்லுக் கட்டாதீர்கள். அனுசரித்துப்
போங்கள்.
-------------------------------------------------------------------------------
ஆனால் வேறு சிலரது மின்னஞ்சல்கள் சிம்ப்பிளாக இருக்கும் - ஆனால்
சிக்கலாக இருக்கும். கேள்வியைப் பாருங்கள். "சார், நான் மிகவும்
துன்பத்தில் இருக்கிறேன். எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?"

முதலில் நான் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். மனிதர் துன்பத்தில்
இருக்கிறேன் என்று எழுதியிருக்கிறாரே என்னவிதமான துன்பம்.
அந்தத் துன்பம் எந்த பாவத்தை வைத்து இவருக்கு ஏற்பட்டிருக்கும்.
அதுவும் இந்த வயதில். நான்காம் வீட்டை வைத்தா? அல்லது ஏழாம்
வீட்டை வைத்தா?, அல்லது பத்தாவது வீட்டை வைத்தா? அல்லது
எதை வைத்து?

துன்பம் எதைவைத்து வேண்டுமென்றாலும் ஏற்படலாமில்லையா?

அதை அவர் எழுத மாட்டார். நானே அதையும் NASA வேலை செய்து
கண்டுபிடித்து, அவருக்குத் தீர்வும் சொல்ல வேண்டும்.

எப்படி இருக்கிறது கதை?
---------------------------------------------------------------------------------
சரி, பொதுவாகப் பேசுவோம்!

நல்ல காலம் என்றால் என்ன?

1. வேலையின்றித் தவிப்பவருக்கு வேலை கிடைத்தால் அது நல்ல காலம்!

2. வேலையில் இருப்பவருக்கு, அதை விட பெட்டர் சான்ஸ் (நல்ல
நிறுவனம் அல்லது நல்ல ஊதியம்) கிடைத்தால் அது நல்ல காலம்!

3. திருமணம் ஆகாமல் தள்ளிக்கொண்டே போகிறவருக்குத் திருமணம்
முடிந்தால் அது நல்ல காலம்!

4. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்
களுக்குக் குழந்தை பிறந்தால் அது நல்ல காலம்!

5. குழந்தை இருப்பவருக்கு அது அடிக்கடி நோய்வாய்ப்பட்டுப் படுத்தாமல்
இருந்தால் அது நல்ல காலம்!

6. குடும்பஸ்தர்களுக்கு, வாடகை வீட்டில் குடியிருக்காமல் சொந்த வீடு
வாங்கினால் அல்லது ஃப்ளாட் வாங்கினால் அது நல்ல காலம்.

7. சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு, அந்த வீட்டிற்காக வாங்கிய
கடனைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் அது நல்ல காலம்.

8. கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதை ஜீரோ லெவலுக்கு
கொண்டு வரும் நிலை ஏற்பட்டால் அது நல்ல காலம்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
---------------------------------------------------------------------------------
ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?

நடப்பது எந்தக் கிரகத்தின் திசை, எந்தக் கிரகத்தின் புத்தி என்பதை முதலில்
குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் அந்த தசா நாதனும், அந்த
புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனில் இருக்கக்கூடாது.
அல்லது 1/12 பொஸிசனிலும் இருக்கக்கூடாது. இருந்தால் அந்த திசையில்
அந்த புத்தி நன்மையைச் செய்யாது. இதுதான் குறுக்குவழி ஃபார்முலா!

இதை வைத்து அதாவது இந்த ஃபார்முலாவை வைத்து, அடுத்தடுத்து
வரப்போகும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வாருங்கள், உங்களுக்கு
நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும்.

முன் பதிவில் புலிப்பாணி முனிவரின் தசாபுத்திப் பலன்களைக்
கொடுத்துள்ளேன். அதை வைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு
ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும்,
அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி
நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்
கிடைக்கும்.

ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி
நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால்
நல்ல பலன்கள் கிடைக்காது.

தசாபுக்திதான் முக்கியம். அதற்கடுத்தபடிதான் கோச்சாரப் பலன்கள்.
----------------------------------------------------------------------------------
கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது.
குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம்,
11ஆம் இடம் ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல
பலன்களைத் தருவார்.

1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம்,
10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்
காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.

மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான்
நல்குவார்.

குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல்

"கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும்
ஆளப்பா அகத்திலே களவுபோகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான்
கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட
குற்றமிலாகாந்தாரி மகனும் தானும்
வீளப்பா வீமன் கை கதையினாலே
விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!"
- புலிப்பாணி பாடல்

இந்த ஒரு பாடலே படித்து விளங்கிக் கொள்வதற்கு எவ்வளவு சிரமமாக
இருக்கிறது பாருங்கள். அந்தக் காலத்தில் ஜோதிடம் கற்றவர்கள் எல்லாம்
பாடல்களை வைத்துத்தான் பாடங்களைக் கற்றார்கள். உரை நடைப்பாட
மெல்லாம் இப்போது ஐம்பது ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருக்கின்றன
அதற்கு முன்னால் நஹி சாமி, நஹி!

"குமாரசுவாமியம்" என்னும் தமிழ் ஜோதிட நூல் இன்னும் இதைவிடக்
கடினமான தமிழ்ப் பாடல்களால் எழுதப்பெற்றிருக்கும்.

அதைக் கையில் கொடுத்தால், இன்றைய இளைஞன் ஜோதிடமே வேண்டாம்
என்று ஓடிப்போவிடுவான்.
--------------------------------------------------------------------------------
மிக மிக மோசமான காலம் எது?

மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
மோசமானதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------
மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?

சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!
------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய
எழுதும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மற்றவை அடுத்த வகுப்பில்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20.8.08

ஏழரைச் சனி என்ன செய்யும்?


ஏழரைச் சனி என்ன செய்யும்? என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

நீங்கள் அற்புதமாகக் கார் ஓட்டக்கூடியவர்தான், உங்கள் காரும் புதிதாக
அவ்வளவு சேஃப்டி வசதிகளையும் கொண்ட கார்தான் என்றாலும் எதிரில்
வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அல்லது
பின்னால் வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?

மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.

எல்லைக் காவல் படைகளை ஏ.கே47 உடன் வாசலில் வைத்துத் தடுக்கவும்
முடியாது. நேரம் வந்தால் யார் யாரை எப்படிப் போட வேண்டுமோ அப்படிப்
போட்டு விடுவார்.

விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில்
தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து
(அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக
சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக்
கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா?

உண்டு!

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான்.
அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால்
கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
இருக்கலாம்.

அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!

முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!

அந்திம காலம் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் பின்னூட்டத்தில்
கேளுங்கள் சொல்கிறேன்.

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.

அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good
position.
It level will be according to the strength of the horoscope.

அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?

அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!

இன்றைக்குத் தேதியில் சனி எங்கே இருக்கிறார்?

சைடுபரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளை திறந்தீர்கள் என்றால்
அது அன்றைய தேதியில் உள்ள கிரக நிலைகளைக் காட்டும். அதில் சனி,
இன்றையத் தேதியில் சனி சிம்மத்தின் 16.06 வது பாகையில் உள்ளதை அது
காட்டும். அதுபோல எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும் காட்டும்.

ஒரு ராசியில் சனீஷ்வரன் 30 மாதங்கள் தங்கிச் செல்வதால் 30 பாகைகள்
வகுத்தல் 30 மாதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு பாகை. சனி பதினாறு பாகையில்
இருக்கிறார் என்றால் சிம்மத்திற்கு அவர் வந்து பதினாறு மாதங்கள் ஆகிவிட்டன
என்பது பொருள். இன்னும் மீதமுள்ள 14 மதங்கள் அங்கே இருந்துவிட்டுப்
பிறகு பெட்டி படுக்கையுடன் அவர் அதற்கு அடுத்த வீடான கன்னி ராசிக்கு
நடையைக் கட்டிவிடுவார்.

இன்றையத் தேதிக்குக் கன்னிராசிக்காரனுக்கு அவர் விரையச் சனி. மாறியவுடன்
ஜென்மச்சனி. சிம்ம ராசிக்காரனுக்கு அவர் இன்றையத் தேதிக்கு ஜென்மச் சனி.
மாறியவுடன் அவர் கழிவுச் சனி. கடக ராசிக்காரனுக்கு அவர் இப்போது கழிவுச்
சனி, மாறியவுடன் அவர்கள்(அதாவது கடக ராசிக்காரர்கள்) ஏழரைச் சனியின்
பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.

ஏழரைச் சனியைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு விவரமாகக் கொடுத்துள்ளேன்
அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள், புரியவில்லை
என்று சொல்லுங்கள், தனியாகக் கச்சேரி வைக்கிறேன் (பாடம் எடுக்கிறேன்)
============================================================

எனது இனிய நண்பரும், சக பதிவருமான வடுவூர் குமார் அவர்கள் நமது வகுப்புக்
கண்மணிகளுக்காக ஒரு வீடியோ க்ளிப்பிங்கைத் தனிப் பதிவாக வலையேற்றி
யிருக்கிறார். அனைவரையும் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அதன் சுட்டி இங்கே உள்ளது!
=============================================================

நன்றி,
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

17.8.08

வர்க்கம் எத்தனை வர்க்கமடி?


வர்க்கம் என்பது இரண்டு விதமாகப் பொருள்படும். வருமானம், தொழில்,
அதிகார உரிமை இவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பெற்ற பிரிவு என்று
ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக்
கிடைக்கும் எண் என்று மறுவிதமாகவும் பொருள் படும்.

மொத்தத்தில் பிரிவுதான் வர்க்கம்.

இன்று ஜோதிடச் சக்கரங்களில் உள்ள பல பிரிவுகளை அல்லது வர்க்கங்களை
உங்களுக்குச் சொல்லித் தரவுள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வானவெளியில் சூரியனைச் சுற்றி, சந்திரன், உட்பட அத்தனை கிரகங்களும்
எந்நேரமும் சுழற்சியில் உள்ளன. பூமியும் சுழற்சியில் உள்ளது. அதனால்
ஒவ்வொரு நிமிடமும் பூமிக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு மாறுபட்டுக்
கொண்டே இருக்கிறது.

அந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளும் மாறுபடுகின்றன.

அதனால்தான் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது மனுஷிக்கும்
நிமிடங்களில் ஜாதகங்கள் வேறுபடுகின்றன.

வானவெளியில் பிரிக்கப்பட்டுள்ள ராசிகளும், நட்சத்திரங்களும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் கால அளவு சரியாக 24 மணி
நேரம் என்று கிடையாது. அவற்றிற்கு - அதாவது நட்சத்திரங்களுக்கு இடையே
உள்ள இடைவெளியை (தூரத்தை) வைத்து நட்சத்திரங்களைச் சந்திரன் கடந்து
செல்லும் கால அளவும் மாறுபடும். சில நட்சத்திரங்களை 23 மணி நேரத்திலும்,
சில நட்சத்திரங்களை 25 மணி நேரத்திலும் கடக்கும்.

முதலில் லக்கினத்தை எடுத்துக் கொள்ளுவோம். லக்கினம் என்பது என்னவென்று
முன்பாடத்தில் சொல்லிக் கொடுத்துள்ளேன். புதியவர்கள் அதைப் படித்து அறிந்து
கொள்ள வேண்டுகிறேன்.

நாள் ஒன்றிற்குப் பன்னிரெண்டு லக்கினங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு லக்கினத்தின் கால அளவு இரண்டு மணி நேரம். அதாவது 24 மணி நேரம்
வகுத்தல் 12 ராசிகள் = 2 மணி நேரத்திற்கு ஒரு ராசி = அந்த ராசியை
நோக்கியவாறு ஜனிக்கும் குழந்தைக்கு, அந்த ராசிதான் லக்கினம்.

சித்திரை மாதம் முதல் தேதியன்று சூரிய உதயம் காலை 6.06 நிமிடங்களில்
ஏற்படும் அந்தத் தேதியில் காலை 6.06 மணி முதல் 8.06 மணிவரை பிறக்கும்
குழந்தைகளுக்கு மேஷ ராசிதான் லக்கினம். அதற்கு அடுத்து, அன்றைய தேதியில்
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்து ரிஷபம், மிதுனம், கடகம்
என்று லக்கினங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டு மணி நேரம் (120 நிமிடங்கள்) வகுத்தல் (மாதத்திற்கு) 30 நாட்கள் என்ற
கணக்கில் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் 4 நிமிடங்கள் குறைந்து கொண்டே
வரும். சித்திரை மாதம் 30ஆம் தேதியன்று மேஷ லக்கினத்தில் பிறப்பு லக்கினம்
4 நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருக்கும். அன்று சூரிய உதய நேரத்திலும்
மாற்றம் இருப்பதால் (அன்று சூரிய உதயம் 5.55) காலை 5.59 வரைதான் மேஷ
லக்கினம். 6.00 மணிக்கு ரிஷப லக்கினம் வந்து விடும்.

வைகாசி மாதம் சூரிய உதயம் காலை 5.53 மணிக்கு. அதை வைத்து இதே
கணக்கில்தான் லக்கினங்கள் குறிக்கப்படும்.

அந்தக் காலத்தில் ஜோதிடன் தன் மண்டையைக் குடைந்து இதைக் கணக்கிடுவான்
இப்போது அந்தக் குடைச்சல்கள் எதுவும் உங்களுக்கு இல்லாமல் கணினி மென்
பொருட்கள் கைகொடுக்கின்றன.

சூரிய உதய அட்டவணையை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். இந்த
அட்டவணை கோட்டு சூட்டுப் போட்டுகொண்டு, கைநிறையச் சம்பளம், பஞ்சப்படி
கள் வாங்கும் அதிகம் படித்த ஒரு விஞ்ஞானி கணித்து எழுதியதல்ல!
பல நூறு வருடங்களுக்கு முன்பு ஜோதிடக் கலை அறிந்த முனிவர்கள் எழுதியது.
இன்றளவும் எந்த விஞ்ஞானியும் இதனுடன் முரண்படவில்லை என்பதே அல்லது
இந்த உதய நேரம் தவறு என்று சொல்லாமல் இருப்பதே ஜோதிடக் கலையின்
மேன்மைக்கு ஒரு சான்று ஆகும். அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

சூரிய உதய அட்டவணையைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன்.
அது முன் பதிவில் ஒருமுறை கொடுத்திருந்தாலும், அதைத் தேடி நீங்கள்
களைப்படைய வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்!
-----------------------------------------------------------------------------------------------
ஒரு லக்கின கட்டத்திற்கு 30 பாகைகள் (degrees)
அதாவது 360 பாகைகள் வகுத்தல் 12 = 30 பாகைகள்
ஒரு லக்கினத்தின் கால அளவு 2 மணி நேரம்.

அப்படியென்றால் ஒரு பாகையின் நேரம் என்ன?

ஸிம்ப்பிள்:
2 x 60 நிமிடங்கள் = 120 நிமிடங்கள் வகுத்தல் 30 பாகைகள் = 4 நிமிடங்கள்

ஆகவே ஒரு டிகிரி மாறினாலும் ஜாதகம் மாறும். பொதுவாக 4 நிமிடங்களுக்கு
ஒரு ஜாதகம் மறுபடும். துல்லியமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ஜாதகம் மாறுபடும்.

ஒரு நிமிடத்தில் என்னய்யா ஆகிவிடப்போகிறது?' என்று கேட்காதீர்கள்.
ஒரு நிமிடத்தில் ரயிலை விட்டவன் கதை தெரியுமல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

ஒரு நிமிடத்தில் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் ஒரு இடத்தில் - அதாவது
ஒரு ஜாதகத்தின் ஒரு ராசியில் அமர்ந்துவிடுவதுண்டு. அந்த ஆசாமி ஒரு நிமிடம்
முன்னதாகப் பிறந்திருந்தால் 6 டிகிரி வித்தியாசத்தில் அதே கிரக அமைப்பில்
பிறந்திருப்பான்.

5 டிகிரிக்குள் இருக்கும் இரண்டு கிரகங்களில் இரண்டாவதாக இருக்கும் கிரகம்
அஸ்தமனமாகி விடும் என்பது தெரியுமல்லவா? அஸ்தமனம் என்பது combust

combust என்பது என்ன? அடிபட்டுப்போவது. வலிமை இழந்து போவது.

அப்படி வலிமை இழக்கும் கிரகம் லக்கினாதிபதியாக இருந்தால் ஜாதகனின்
நிலைமை என்ன ஆகும்?

ஒரு நிமிடம் முன்னால் பிறந்தவன் நன்றாக இருப்பான். அடுத்துப் பிறந்தவன்
நன்றாக இருக்க மாட்டான்.

இரட்டைப் பிறவிகள் (Twin Births) மாறுபடுவது இப்படித்தான்.

ஒரே நிமிடத்திற்குள் ஒரே இடத்தில் இருவர் பிறந்தால் அவர்கள் இணைப்
பிறவிகள் (Parrellel Births). இணைப் பிறவிகளின் ஜாதகமும் வாழ்க்கையும்
ஒரே மாதிரியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
என் உறவினர் ஒருவருக்கு இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த இரண்டு மகன்
களில் ஒருவன் எப்போதுமே ஆரோக்கியமாக இருந்தான். ஒருவன் எப்போதுமே
நோய் வாய்ப்பட்டிருந்தான். அடிக்கடி காய்ச்சல், வலிப்பு, என்று அவதிப்பட்டுக்
கொண்டே இருப்பான்.

இருவருடைய ஜாதகத்திலும் ராசிச் சக்கரமும், அம்சச் சக்கரமும் அச்சு அசலாக
ஒரே மாதிரியாக இருக்கும். பாவச் சக்கரம் மட்டும் மாறி இருக்கும்.

சாதாரண அல்லது அறைகுறை ஜோதிடர்களால் ஒன்றையும் கண்டு பிடித்து
அந்த நிலைப்பாடிற்கான காரணத்தைச் சொல்ல இயலாது.

ஆனால் அறிவும், அனுபமும் உள்ள ஜோதிடர்கள் வியக்கும்படி சொல்லி
விடுவார்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவை யூனியன் ஹை ஸ்கூல் எதிரே
திரு.கிருஷ்ணமூர்த்தி என்ற ஜோதிட வல்லுனர் இருந்தார். அவரிடம்
அன்றைய தேதியில் அதாவது இருவருக்கும் பத்து வயது இருக்கும்போது,
அவர்களுடைய ஜாதககங்களைக் கொண்டுபோய்க் காட்டியபோது, அசத்தலாக
அவரே அதைச் சொன்னார்.

அதோடு இருபத்தியோரு வயதுவரை அப்படித்தான் இருக்கும் என்றும்
சொன்னார். அதற்குப் பரிகாரம் ஏதாவது உண்டா என்று கேட்டபொது,
பரிகாரம் ஒன்றும் இல்லை. இருவரும் தனித்தனி இடங்களில் வளர்ந்தால்
உபாதைகள் குறையும் என்றார். அதன்படி ஒருவனை அவனுடைய பாட்டி
வீட்டில் விட்டு வைத்தார்கள்.

ஆனால் அவர் சொல்லியபடி 21வது வயதில் இயற்கையாகவே அதற்குத்
தீர்வு கிடைத்தது.

வேறு என்ன? நோய்வாய்ப்பாடுச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த பையன்
இறந்துபோய் விட்டான். அந்த இரட்டையர்களில் ஒருவன் மட்டுமே
இப்போது உள்ளான்.
----------------------------------------------------------------------------------------------------
நான்கு நிமிடங்களில் லக்கின பாவங்கள் மாறுபடுவதையும், ஒரு பாகையில்
(degree) கிரகங்கள் உரசிக்கொள்வதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

ஆகவே இரண்டு மணி நேரத்திற்குப் பொதுவான ராசிச் சக்கரத்தை மட்டும்
அல்லது ராசிக் கட்டங்களை மட்டும் எப்படிப் பலன் சொல்வது?

அந்த இரண்டு மணி நேரத்தில் பிறந்த அனைவருக்குமே ஒரே பலனா?

இல்லையே!

ஆகவே ஒவ்வொருவருடைய ராசிச் சக்கரங்களையும் அக்கு வேறாக ஆணி
வேறாகப் பிரித்துப் போட்டுப் பார்க்க உதவுவதுதான் வர்க்கங்கள் என்னும்
உபகட்டங்கள் (divisional charts)

எதற்காகப் பிரித்துப் போட்டுப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பார்த்தால்தான் உண்மையான நிலவரம் தெரியும். உண்மையான பலன்
தெரியவரும்.

அதாவது தங்கத்தை உரசிப் பார்ப்பதைப்போல! 24 காரெட்டா, 22 காரெட்டா
அல்லது பதினெட்டு காரெட்டா என்று தெரியுமல்லவா - அதைப்போல!

ராசியை ஒன்பது பிரிவாகப் பிரித்து, நவாம்சச் சக்கரமாக முன் பதிவில் பாடம்
நடத்தினேன். நிறையப் பேருக்கு அது புரியவில்லை.

ஒரு பெரிய ஊர் இருக்கிறது. அதை அப்படியே படத்தில் பார்த்தால் என்ன
தெரியும்? உதாரணத்திற்கு சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்.

சென்னையை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றாகக் காட்டினால்
உங்களுக்கு முழு விவரம் தெரியவரும் அல்லவா?

1. பாரீஸ் கார்னர் பகுதி (வட சென்னை)
2. மெரினா, கோட்டை பகுதிகள் (கிழக்குப் பகுதி)
3. அண்ணாசாலைப் பகுதி (மத்திய பகுதி)
4. நுங்கம் பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகள்,
5. மீனம்பாக்கம், தாம்பரம் பகுதிகள், (தென் பகுதி)
6. அடையாறு, கோட்டுர்புரம் பகுதிகள்,
7. வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகள்
8. தி.நகர், சைதைப்பகுதிகள்
9. தேனாம் பேட்டை, போயஸ் கார்டன்பகுதிகள்

இப்படிப் பிரித்துக் காட்டி, ஒருவருக்கு எந்தப் பகுதியில் பெரிய வீடு
அல்லது சொத்து இருக்கிறது என்று சொல்லும் போதே அவருடைய ஸ்டேட்டஸ்
தெரிய வந்துவிடும். அதுபோல ஒரு ஜாதகத்தின் ஸ்டேட்டசைப் பார்க்க
உதவுவதுதான் நவாம்சம்.

அந்த இடங்களில் உள்ள நிலத்தின் விலை ஒரே மாதிரியாகவா இருக்கிறது
அம்பத்தூரில் சென்ட் ( 40அடிக்கு x 60 அடி உள்ள ஒரு கிரவுண்டிற்கு 5.5
சென்ட்டுகள்) பத்து லட்சம் என்றால் அடையாறில் ஒருகோடியும்,
அண்ணா சாலையில் ஐந்து கோடியும் (உத்தேசமான மதிப்புதான்)
இருக்குமல்லவா?

அதுபோல ஒரு இடத்தின் அதிபதி அந்தவீட்டின் எந்த நவாம்சப் பகுதியில்
இருக்கிறானோ அதை வைத்துத்தான் அவருடைய மதிப்பும் ஜாதகனுக்கு
அவர் தரும் பலனும்!

அண்ணாசாலையில், ஒரு எக்கரில், அதுவும் ஜெமினி மேம்பாலம் அருகே
ஒருவனுக்குச் சொத்து இருந்தால் அவன் இன்றைய தேதியில் எவ்வளவு பெரிய
செல்வந்தன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதுபோல ஒன்பதிற்கு உரியவன் நவாம்சத்தில் ஏழாம் வீட்டில் லக்கினாதிபதி
லாபதியோடு சேர்ந்து அமர்ந்திருந்தால், ஜாதகன் வெளிநாடு சென்று அல்லது
வெளி நாட்டு வியாபாரத்தால் (Exports) கொடிக்கணக்கில் பொருள் ஈட்டுவான்
(இதை ஒரு உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன்)

இது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவுவதே உபகட்டங்கள்
அல்லது வர்க்கங்கள் (divisional charts) எனப்படும்

இப்போதாவது புரிந்ததா சுவாமிகளா?
--------------------------------------------------------------------------------------------------
ஒரு பத்து ஏக்கர் நிலத்தை எப்படி வேண்டுமென்றாலும் பிரித்து ஸைட்
போடலாமில்லையா? அதுபோல ஒரு ஜாதகத்தைப் பலவாறாகப் பிரித்துப்
பார்ப்பதுதான் உபகட்டங்கள் (divisional charts)

அந்த divisional Charts எத்தனை வகைப்படும். எந்த அளவில் பிரிக்கப்
படுகிறது. எதெது எதற்காகப் பிரிக்கப் படுகிறது. அதன் பயன் என்ன
என்பதுதான் இன்றையப் பாடம்!
--------------------------------------------------------------------------------------------------------
நவாம்சச் சக்கரம்
Rasi divided by nine parts.
முன் பாடத்தில் சொல்லப்பட்டுவிட்டது.
-------------------------------------------------------------------------------------------
மற்ற வர்க்கங்கள்

(The Varga charts, also known as the divisional charts, are a unique method
employed by the ancient seers to study various aspects of life.
Each rasi of 30 degrees is further subdivided and by employing a series
rules new additional charts are made. There are 16 divisional charts and they
are studied to analyze the finer conditions, strengths and effects of the planets.
These charts are also employed to study certain specific aspects of life like
spouse, children, parents etc. The following are the varga divisions.)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
Rashi or the Lagna chart as it is of 30 degrees to study all aspects of life.

ராசிச் சக்கரம் 30 டிகிரிகள் கொண்ட 12 கட்டங்களாக ஜாதகத்தைப் பிரிப்பது.
எல்லாப் பொதுப்பலன்களையும் பார்ப்பதற்காக உள்ளதாகும் இது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
Hora Chart (one-half of a sign or raasi) is the varga to study wealth.

ஒவ்வொரு ராசியையும் இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது.
(செல்வ நிலையைப் பார்ப்பதற்காக உள்ளது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Drekkana Chart (one-third of a sign or raasi) is the varga to study siblings.

ஒவ்வொரு ராசியையும் மூன்று சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(உடன் பிறப்புக்களை அறிந்து கொள்ள உதவுவது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Chaturthamsha Chart (one-fourth of a sign or raasi) is the varga to
study destiny and house.

ஒவ்வொரு ராசியையும் நான்கு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(விதியின் போக்கைப் பார்ப்பதற்கு உதவுவது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
Saptamsha Chart (one-seventh of a sign or raasi) is the varga to study
progeny.

ஒவ்வொரு ராசியையும் ஏழு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(குழந்தைப் பேற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
Navamsha Chart (one-ninth of a sign or raasi) is the varga for spouse
and many other things.

ஒவ்வொரு ராசியையும் ஒன்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவுவதோடு,
மேலும் பல அறிய தகவல்களைத் தருவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
Dashamsha Chart (one-tenth of a sign or raasi) is the varga to study
ones profession.

ஒவ்வொரு ராசியையும் பத்து சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய தொழில், வேலை, வியாபாரம் மொத்தத்தில் ஜீவனத்திற்
கான வழியைத் தெரிந்து கொள்ள உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.
Dwadashamsha Chart (one-twelfth of a sign or raasi) is the varga
to study parents.

ஒவ்வொரு ராசியையும் பன்னிரெண்டு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய பெற்றோர்களைப் பற்றிய அறிய உதவும் கட்டம் இது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.
Shodashamsha Chart (one-sixteenth of a sign or raasi) is the varga
to study conveyance.

ஒவ்வொரு ராசியையும் பதினாறு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(வண்டி, வாகனங்கள், இதர செளகரியங்களை அறிய உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.
Vimshamsha Chart (one-twentieth of a sign or raasi) is the varga to
study spiritual progress.

ஒவ்வொரு ராசியையும் இருபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய பக்தி நெறி அல்லது அது இல்லாமையை அறிந்து கொள்ள
உதவும் கட்டம் இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.
Chaturvimshamsha Chart (one-twenty fourth of a sign or raasi) is to
study knowledge.

ஒவ்வொரு ராசியையும் இருபத்திநான்கு சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது.(அறிவு, ஞானத்தின் தன்மையை அறிய உதவுவது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Saptavimshamsha Chart (one-twenty seventh of a sign or raasi) is to
study the strength.

ஒவ்வொரு ராசியையும் இருபத்தியேழு சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது. ஜாதகரின் பொது வலிமையை அறிய உதவுவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
13.
Trimshamsha Chart (one-thirtieth of a sign or raasi) is foor assertaining
misfortunes and nature.

ஒவ்வொரு ராசியையும் முப்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகரின் துரதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ள உதவுவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
14.
Khavedamsha Chart (one-fortieth of a sign or raasi) is for auspicious &
inauspicious effects.

ஒவ்வொரு ராசியையும் நாற்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகத்தில் உள்ள நல்ல விளைவுகளையும், தீய விளைவுகளையும் அறிய
உதவுவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
15.
Akshavedamsha Chart (one-forty fifth of a sign or raasi) is for all areas
of life.

ஒவ்வொரு ராசியையும் நாற்பதைதைந்து சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது. வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் பொதுவாக அறிந்து
கொள்ள உதவுவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16.
Shashtyamsha Chart (one-sixtieth of a sign or raasi) is for all general
effects.

ஒவ்வொரு ராசியையும் ஆறுபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகருக்கு ஏற்பட இருக்கும் பொது விளைவுகளை அறிந்து கொள்ள
உதவுவது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பதினாறு வர்க்க கட்டங்களிலும் நவாம்சம் மட்டுமே அதி
முக்கியமானது.

மற்றவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே கொடுத்துள்ளேன்.

நவாம்சம் என்பது வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல, ஒருவரின் ஜாகத்தில்
உள்ள கிரகங்களின் வலிமைகளையும்.அல்லது வலிமையின்மைகளையும்
அதனால் ஏற்பட இருக்கும் பலாபலன்களையும் தெள்ளத் தெளிவாகக்
காட்டுவதாகும்.

ஜாதகத்தின் ராசியில் பலவீனமாக உள்ள கிரகம், அம்சத்தில் பலத்தோடு
இருக்கலாம். அதுபோல ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில்
நீசமாகி இருக்கலாம். அம்சத்தைப் பார்க்கும்போதுதான் ஒரு கிரகத்தின்
உண்மையான வலிமை தெரிய வரும். ஆகவே ராசியைவிட அம்சம் அதிக
முக்கியமானதாகும்.

இன்றையக் குழந்தைப் பிறப்பு விகிதத்தில் இரண்டு மணி நேரத்தில்
எத்தனையோ குழந்தைகள் பிறக்கலாம். அவ்வளவு பேருக்கும் ராசிச் சக்கரம்
ஒன்றாக இருந்தாலும் அம்சம், மற்றும் பாவச்சக்கரங்கள் பல விதமாக
வேறுபடும். அதன்படி அந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
பிறந்தவர்கள் அனைவருக்கும் தலை எழுத்தும், விதியும் வேறுபடும்.
அதை அறிந்து கொள்ள உதவுவதுதான் இந்தச் சக்கரங்கள்.

நீங்கள் பிறந்த நேரம் சரியாகக் குறிக்கப்பட்டிருந்தால்தான், இந்தச் சக்கரங்களின்
படியான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால் இல்லை.

பார்த்துச்சொல்பவனின் கணிப்புக்கள் பொய்யாகிவிடும்.

ஜோதிடம் பொய்யல்ல!

The lagna, hora, drekkana, navamsa, dwadasamsa and trimamsa ஆகிய ஆறு
பிரிவுகளில் உள்ள சக்கரங்களை மட்டும் நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டால்
போதும். மற்றவற்றைச் சாய்சில் விட்டுவிடலாம்.ஸீரியசாக ஜோதிடம் படிப்பவர்கள்
மட்டும் படிக்கலாம்.

பலன் சொல்வதற்கு ராசி மற்றும் அம்சம் ஆகிய இரண்டும் போதும்

பின் எதற்காக எழுதினீர்கள்?

கூடுதுறையார் மாதிரி மிகவும் ஆர்வமுள்ளவர்களின் வருத்தத்திற்கு ஆளாகக்
கூடாது என்பதற்காக அறியத் தந்துள்ளேன்.

All these, except the navamsa are only for information and not for serious
study!

இந்த வர்க்கக் கட்டங்களையெல்லாம் எப்படித் தயாரிப்பது அல்லது எப்படி
எழுதுவது?

அன்பர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்த மென்பொருள் - சைடுபாரில்
உள்ளது. அது உங்களுக்கு, சில வினாடிகளுக்குள் அடித்துக் கொடுத்துவிடும்!

பலன் எப்படிப் பார்ப்பது?

முன் பாடத்தில் சொல்லியுள்ள அதே விதிமுறைகள்தான் அத்தனை
கட்டங்களுக்கும்!

Placement, association, aspect என்று அதே ஜடைபோட்டு, பூவைத்து, பொட்டு
வைக்கும் வேலைதான்.

முயன்று பாருங்கள். சந்தேகமிருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

இன்றைய பாடம் எழுதித் தட்டச்சிட அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டு
விட்டது. பொறுமையோடு, செய்வன திருந்தச் செய்' என்ற முதுமொழிக்கிணங்க
எழுதியுள்ளேன். ஸ்கிரீன் சைசில் மொத்தம் 14 பக்கங்கள்.

இரண்டு பகுதிகளாக தனித்தனியாக இரண்டு தினங்களில் பதிவிடலாம் என்று
நினைத்தேன். ஆனால் பாடத்தின் தன்மை கருதி ஒரே பதிவாகக் கொடுத்துள்ளேன்

ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஒரே ஒட்டத்தில் படித்துவிட்டு, சார், அடுத்த பாடம்
எப்பொது என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இதை முழுமையாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்.

அடுத்த பாடம் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தானாக நடக்கும்!

நன்றி,
வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்.
=========================================================




Rotation of Planets and rotation time for planets






வாழ்க வளமுடன்!

12.8.08

பலாப்பழமும், ஜோதிடமும்!

சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலம். மன்னர் ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தது.
தண்டோராக்காரன் மேடை ஒன்றில் நின்று கத்திக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தவுடன் ஏதோ முக்கிய அறிவிப்பாக இருந்து தொலைக்கப்போகிறது
என்று கூட்டம் கூடிவிட்டது.

ஐந்தாவது முறையாக எல்லோருக்கும் கேட்கும்படி அவன் உரத்த குரலில் சொன்னான்.

"நமது மன்னர் மன்னருக்கு, என்ன பழம் மிகவும் பிடிக்குமோ அதைக் கொண்டுவந்து
கொடுப்பவருக்கு, ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கிடைக்கும்"

கூட்டத்திலிருந்து இதைக்கேட்ட ஒருவன்," மன்னருக்கு என்ன பழம் பிடிக்கும் என்று
நமக்கு எப்படியப்பா தெரியும்?"என்றான்.

அருகில் இருந்தவன் உடனே கேட்டான்,"நீ என்ன ஊருக்குப் புதுசா?"

"ஏன் கேட்கிறாய்?"

"மன்னர் மன்னன் என்று சொல்வதை வைத்தே நீ தெரிந்து கொள்ள வேண்டாமா?
நமது மன்னன் ஒரு சரியான கோமாளிப் பண்டாரம். வேலை வெட்டி இல்லாத பயல்
அவன் அறிவிப்பும், சொறிவிப்பும் எப்படி இருக்கும்? போய் உருப்படுகிற வழியைப்
பார்" என்று சொல்லிவிட்டு, அவன் போய்விட்டான்.

கேட்டவனுக்கு நைப்பாசை. அடுத்த நாளே, அதிகாலையில், ஊகமாகக் கையில் ஒரு
பழத்தோடு அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே அவனுக்கு முன்னால்
இரண்டு பேர்கள் வரிசையில் காத்திருந்தார்கள். இவனும் போய் நின்றான். அதற்குப்
பின்னால் நான்கைந்து பேர்கள் வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள்.

சூரிய உதயத்தில் இருந்து சரியாகப் பத்தாவது நாழிகையில் (அதாவது காலை மணி
பத்து அளவில்) அரண்மனையின் வாசல் கதவு திறக்கப்பட்டது.

முதன் மந்திரியார் வந்து எச்சரித்துவிட்டுப்போனார்.

"நீங்கள் கொண்டுவந்திருக்கும் பழத்தைப் பார்த்து - மன்னர் மன்னர், அது தனக்கு
மிகவும் பிடித்த பழம்தான் என்று ஒப்புக்கொண்டால், பரிசுப் பணம் கிடைக்கும்.
இல்லையென்றால் மன்னர் என்ன சொல்வாரோ அது நடக்கும். ஆகவே துணிச்சல்
உள்ளவர்கள் மட்டும் உள்ளே வாருங்கள்!"

நம்ம ஆள் மிகவும் தைரியமானவன். என்ன ஆகிவிடப்போகிறது பார்த்துவிடலாம்
என்று தைரியமாக நின்றான்.

வரிசையில் முதலில் நின்ற மூன்று நபர்களை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

வரிசைப்படி முதலில் வந்த ஆசாமி, சபையின் நடுவில் நின்று, தான் கொண்டு
வந்திருந்த பழத்தைத் தன் சட்டைப் பையில் இருந்து எடுத்துக் காட்டினான்.

அது நாவல் பழம்!

மன்னர் மன்னன், அது தனக்கு மிகவும் பிடித்த பழம் அல்ல, என்று கூறி, அதை
அப்படியே கொட்டையோடு விழுங்க உத்தரவிட்டார். அவனும் வாயில் போட்டு
அந்தப் பழத்தை விழுங்கி விட்டு ஏமாற்றத்தோடு நகர்ந்தான்.

அடுத்தவன் கொண்டுவந்திருந்தது கறுப்புத் திராட்சை. மன்னர் மன்னன் இல்லை
என்று தலையசைக்க அவனுக்கும் அதே கதி.

மூன்றாவதாக இருந்த நம்ம ஆள் கொண்டுவந்திருந்தது. பெரிய கொய்யாப்பழம்.
பழநியில் கிடைக்குமே அதுபோன்ற பெரிய கொய்யாப்பழம். சபையில் இருந்தவர்கள்
எல்லாம் திகைத்துப்போய் இருந்தார்கள் - என்ன நடக்கப்போகிறதோவென்று!

ஒரு வேளை, மன்னர் தனக்கு மிகவும் பிடித்தபழம் இதுவல்ல என்று கூறி, அப்படியே
விழுங்கு என்று சொன்னால் இவன் என்ன செய்வான்? எல்லோரும் ஆவலோடு
மன்னரின் முகத்தைப் பார்த்தார்கள்.

மன்னர் சொன்னார்." எனக்குப் பிடித்த பழம்தான் இது. ஆனால் மிகவும் பிடித்த பழம்
அல்ல! ஆகவே இதை நீ அப்படியே விழுங்க வேண்டும் இல்லை என்றால் தவறான
பழத்தோடு வந்ததால் பத்துக் கசையடி வாங்கிக்கொள்ள வேண்டும். எது விருப்பமோ
அதைச் செய்!"

சபையில் இருந்த அத்தனை பேரும் சட்டென்று அவன் பக்கம் திரும்பி,
பரிதாபத்தோடு அவனைப் பார்த்தார்கள்.

ஆனால் அவனோ கவலைப்பாடாமல், "ஹஹ், ஹஹ், ஹா" என்று வாய்விட்டுப்
பலமாச் சிரிக்க ஆரம்பித்தான்.

மன்னர் மன்னனுக்குக் கடுங்கோபமாகி விட்டது.

"நிறுத்து. எதற்குச் சிரிக்கிறாய் இப்போது?"

நம்ம ஆள் உடனே பவ்வியமாகப் பதில் சொன்னான்."மன்னர் மன்னா, மன்னிக்கவும்
நான் வெளியே, வாசலில் எனக்குப் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தவனை
நினைத்தேன் உடனே சிரிப்பு வந்துவிட்டது."

"சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?"

"அவன் கொண்டுவந்திருக்கும் பழத்தை நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது. அந்தப்
பழம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழமில்லை என்றால் அவன் கதி என்னவாகும்
என்று நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது."

இப்போது மன்னர் மன்னனே ஆர்வமாகி, அவனைப் பார்த்துக் கேட்டார்," என்ன
பழம் அது?"

நம்ம ஆள் உரக்கச் சொன்னான்,"பலாப்பழம் மன்னா!"

சபை மொத்தமும் கொல்'லென்று சிரிப்பில் அதிர்ந்து விட்டது. அடக்க முடியாமல்
அததனை பேர்களும் சிரித்து விட்டார்கள் - அரசனைத் தவிர!
---------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே எதற்காக இந்தக் கதை? தலைப்புப்படி பலாப்பழம் வந்துவிட்டது!
ஜோதிடத்திற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

"நவாம்சத்தைப் பற்றிய முன் பாடத்திற்கே எல்லோரும் அயர்ந்து விட்டீர்களே -
அடுத்த பாடத்தை நினைத்தேன். அடுத்த பாடத்தை எப்படி நீங்கள் எதிர்
கொள்ளப் போகிறீர்களோ என்று நினைத்தேன். எனக்கு உடனே இந்தக் கதைதான்
ஞாபகத்திற்கு வந்தது!"

"அவ்வளவு கஷ்டமா அந்தப் பாடம்?"

"ஆமாம், நீங்கள் பிடிக்கவில்லை என்றால் அங்கே பலாப்பழத்தோடு நிற்பவன்
கதிதான் என்கதியும்!"

"சரி, பதிவைப் போடுங்கள் பார்ப்போம்!"

"பதிவு வெள்ளிக்கிழமையன்று!"
-------------------------------------------------------------------------------------------------------------------
பலாப்பழம் பார்க்க முரடாக இருக்கும். உரித்தால் உள்ளே இனிப்பான பல
சுளைகள் இருக்கும். ஜோதிடமும் அப்படித்தான். உரிக்காமல் அப்படியே
திங்க (திண்ண) முடியாது. பிரித்து, ஆழ்ந்து படிக்காமல் ஜோதிடத்தைத் தெரிந்து
கொள்ள முடியாது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10.8.08

அம்சம் பெண்ணிற்கு மட்டுமல்ல ஜாதகத்திற்கும் உண்டு!


ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அம்சமாக இருக்கிறாள் என்று சொன்னால்
அவள் எல்லா லட்சணங்களும் பொருந்திப் பார்க்க ரம்மியமாக இருக்கிறாள்
என்று பொருள். அது போல ஒரு வீட்டைப் பார்த்து வீடு அம்சமாக இருக்கிறது
என்று சொன்னாலும் அதுதான் அர்த்தம்!

அம்சம்' என்ற தமிழ்ச் சொல்லை இப்படி வகைப் படுத்தலாம்.
1. பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம் (aspect of an affair, idea,
plan etc)
2. எடுத்துக்கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை (a typical of noticeable)
3. ஒருவர் அல்லது ஒன்றின் அமைப்பிற்கு வேண்டிய அளவான லட்சணம். கச்சிதம்
(compactness)

ஒரு பெண்ணையும் அம்சமாக இருக்கிறாள் என்று சொல்லலாம் அல்லது ஒரு
வீட்டையும் அம்சமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இதே அம்சம் ஜாதகத்திற்கும் உண்டு. அதுதான் நவாம்சம். அதாவது ஒன்பது
கிரகங்களின் அம்சம். கிரகங்களுக்கு ஏது அம்சம் (லட்சணம்) என்று குறுக்குக்
கேள்வி கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

நவக்கிரகங்கள் அம்சமாக இருக்கின்றனவா அல்லது இல்லையா என்று தெரிந்து
கொள்ள உதவுவதுதான் நவாம்சச் சக்கரம்


உங்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்கிறேன். ஒரு நடிகையை அல்லது
நடிகரை ஒப்பனையுடன் (மேக்கப்புடன்) பார்க்கும்போது ஒருவிதமாகக் காட்சி
அளிப்பார்கள், அவர்களையே ஒப்பனை எதுவுமின்றிப் பார்க்கும் போது
உண்மையான தோற்றம் கிடைக்கும்.

ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலுவை ராசியில் பார்ப்பதற்கும், அம்சத்தில்
பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு மேற்கூறிய உதாரணத்தில் உள்ளது போலத்தான்
இருக்கும்.

ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில் நீசம் பெற்று இருக்கலாம்
அல்லது ராசியில் நீசம் பெற்று இருக்கும் கிரகம் அம்சத்தில் ஆட்சி பலம் பெற்று
இருக்கலாம்

ஏன் இந்த வேறு பாடு? எப்படி இந்த வேறு பாடு என்பதுதான் இன்றைய பாடம்!
-------------------------------------------------------------------------------------
ராசிச் சக்கரத்திற்கும் (Rasi Chart) அம்ச சக்கரத்திற்கும் (Navamsa Chart) என்ன
வித்தியாசம்?

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்
அதன்
எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.

(It is magnified version of Rasi Chart)

ஒரு முழு வட்டம் வகுத்தல் 12 ராசிகள் = 360 வகுத்தல் 12 = 30 பாகைகள்
அல்லது 30 டிகிரிகள். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை மீண்டும் ஒன்பது பாகங்களகப் பிரிக்கும் போது, 30 வகுத்தல் 9 = 3.33
பாகைகள் என்பது ஒரு பகுதி. இதைப்போல ஒவ்வொரு ராசியையும் பிரித்தால்
மொத்தம் 108 பகுதிகள் வரும். அதை அட்டவணையாகக் கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------------------------------------
அட்டவணை
இந்த அட்டவணை முக்கியமானது. உங்களுக்குச் சுலபமாக நவாம்சத்தைப்
புரிய வைப்பது.
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவரது ராசியில் மேஷத்தில் செவ்வாய் இருக்கிறது என்றால், அது அந்த
ராசியின் எந்தப் பாகையில் இருக்கிறதோ - அது அந்த ராசியின் எந்தப் பகுதியில்
வருகிறதோ, அதுதான் அந்தக் கிரகத்தின் அம்சம்.

என்ன தலை சுற்றுகிறதா? இந்தப் பகுதியை ஒரு தகவலுக்காக அல்லது
அறிதலுக்காக
மட்டும் நீங்கள் படித்தால் போதும். பிரித்துக் கணக்கிட்டுப்
பார்க்கும் வேலையை
நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதை இப்பொது உள்ள ஜாதகம்
கணிக்கும் மென்பொருட்கள்
கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து கொடுத்துவிடும்.


அம்சத்தின் பயன்பாட்டை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால் போதும்!

ராசியில் ஒரு நிலையில் உள்ள கிரகம், அம்சத்தில் வேறுபட்ட - நல்ல அல்லது
தீய நிலையில் இருக்கலாம். அதுதான் அம்சத்தில் தெரிய வரும்!

வேறு பட்டால் என்ன ஆகும்? இது சரியான கேள்வி!

வேறுபட்டால் உரிய பலனை விட அதிகமான பலன் கிடைக்கலாம் அல்லது
உரியபலனும் கிடைக்காமல் போகலாம்.


உதாரணத்திற்கு நடிகர் ரஜினி அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள். அவருடைய ஜாதகத்தில் இரண்டில் சனி. இரண்டில் சனி என்றால்
கையில் காசு தங்காது என்பது பொதுப்பலன். சரி, ரஜினியிடம் இல்லாத காசா?
அல்லது சேர்ந்திருக்காத பணமா? அதற்குக் காரணம் இரண்டிற்கு உரிய
அதிபதி
புதன் அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார் பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் ரஜினி அவர்களின் ஜாதகம்;

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே ராசியை மட்டும் பார்த்துப் பலன் சொன்னால் 'தாவு' தீர்ந்துவிடும்.
அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதை மனதில் வையுங்கள்.

ராசியில் கிரகங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அம்சத்திலும் வலுவாக
இல்லாவிட்டால், அவற்றிடமிருந்து எந்த நன்மைகளையும் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே கிரகங்களின் பலம் அறியவும், பலன்களை அறியவும் நவாம்சம்
முக்கியமாகும். மனைவியின் நிலையை அல்லது கணவனின் நிலையை அறிய
நவாம்சம் முக்கியமானதாகும்.

1. இராசி அதிபதியும் (Owner of the rasi) நவாம்ச அதிபதியும் இயற்கை
நட்பென்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்
2. இராசி அதிபதியும் (Owner of the rasi) நவாம்ச அதிபதியும் சமம் என்றால்
மத்தியமான பலன்கள் (average) கிடைக்கும்.
3. இராசி அதிபர் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருந்து,
அம்சத்தில் அவர் பகை வீட்டில் இருந்தால் மத்தியமான பலன்களையே
கொடுப்பார். பகை என்றால் சில அமைப்புக்களில் எதிர்மாறான பலன்களே
கிடைக்கும்.
4. ராசி ரீதியாகக் கெட்டிருக்கும் கிரகம், அம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில்
இருந்தால், கெட்ட பலன்கள் ஏற்படாமல் தடுத்துவிடுவார். அல்லது கெட்ட
பலன்களைத்தர மாட்டார்.

ராசி ரீதியாக ஒருவருக்கு அல்லது ஒருத்திக்குச் செவ்வாய் தோஷமிருந்து
அம்சத்தில் செவ்வாய் சுபக் கிரகத்தின் இடத்தில் இருந்தால் செவ்வாய்
தோஷம் இல்லை. ரத்தாகிவிடும். இந்த விதி எல்லாக் கிரகங்களுக்கும் பொருந்தும்!

ராசி ரீதியாக ஏழாம் வீட்டிற்கு உரியவன், அம்சத்தில் பாவி வீட்டில் இருந்தால்
அல்லது பகை வீட்டில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத்
திருமணமாவதில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படும். இதே விதி மற்ற
வீடுகளுக்கும் பொருந்தும். உதாரணம் குழந்தை பிறுப்பு, வேலை கிடைப்பது
போன்றவற்றையும் சொல்லலாம்!
-----------------------------------------------------------------------------------------
ராசியில் இருந்து அம்சம் எப்படிக் கணக்கிடப் படுகிறது, பலன்கள் எப்படிக்
கணக்கிடப்படுகிறது என்பதை உங்களுக்கு அறியத்தரும் முகமாக
ஒரு ஜாதகத்தைக்
கொடுத்து விளக்கியுள்ளேன்.

முதலில் ஜாதகத்தைப் பாருங்கள். பிறகு விளக்கங்களைப் பாருங்கள்.
இந்த ஜாதகம் என் உறவினர் ஒருவரின் ஜாதகம். என் சேமிப்புக் கிடங்கில்
இருந்து
எடுக்கப்பெற்றது.

(Print out taken on 27.1.2002. It is also mentioned in the bottom of the page.Please note it!)
------------------------------------------------------------------------------------------------------------
Horoscope:



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை
இப்போது பார்ப்போம்.

1.
சூரியன்
116.5 பாகையில் கடக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 3ம் பாதம்
ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன்
அம்சம் = 116.5 கழித்தல் முன் சென்ற 3 ராசிகளின் 90 பாகைகள் போக மீதி
26.5 பாகைகள். 26.5 வகுத்தல் 3.33 = 8 வது பகுதி.
அதாவது கடகத்தின் 8வது பகுதி. கடகத்தின்
எட்டாவது பகுதி கும்பச் சனியின் வீடு (அட்டவணையில் உள்ளது. பார்க்கவும்)
சூரியன் ராசியில் தன் நட்பு வீடான கடகத்தின் வீட்டில் இருந்தாலும் அம்சத்தில்
பகை வீடான சனியின் வீட்டில் உள்ளார்.

ஐந்தாம் வீட்டிற்குரிய சூரியன் ராசியில் அந்த வீட்டிற்கு 12ல் மறைந்துவிட்டாலும்
அம்சத்தில் ஐந்தாம் வீட்டை அதன் 7ம் இடத்தில் இருந்து அற்புதமாகப் பார்ப்பதால்
ராசியில் இருந்த குறை போய்விடுகிறது. அதனால் ஐந்தாம் வீட்டிற்குரிய பலன்களை
எல்லாம் அவர் வழங்கிவிடுவார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
2.
சந்திரன்
46.1 பாகையில் ரிஷப ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 2ம் பாதம்
ராசி நாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன்
அம்சம் = 46.1 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக மீதி
16.1 பாகைகள் 16.1 வகுத்தல் 3.33 = ரிஷபத்தின் 5வது பகுதி.
சுக்கிரனின் பகுதியில் உள்ளார்.
(அட்டவணையில் உள்ளது)
ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் வலுவாக உள்ளார்.
அதுவும் உச்சம் பெற்றுள்ளார்.

இந்த ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் உச்சம் பெற்று, 2ம் இடத்தில்
அதுவும் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்று அட்டகாசமாக
அமர்ந்திருப்பதால் ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு உரிய பலன்களை வாரி வழங்கி உள்ளார்
ஜாதகருக்கு நல்ல அன்பான தாய். அதோடு சுக ஸ்தானத்திற்கு அதிபதியும் அவரே
என்பதால் ஜாதகருக்கு நல்ல வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஜாதகர் அமெரிக்காவில் மிகவும் வசதியாக சொந்த வீடு, வாகன வசதிகளோடு
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
---------------------------------------------------------------------------------------------------------------------
3.
செவ்வாய்
136.38 பாகையில் சிம்ம ராசியில்
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரம் 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சூரியன். நட்சத்திர நாதன் சுக்கிரன்.
அம்சம் = 136.38 கழித்தல் முன் சென்ற நான்கு ராசிகளின் 120 பாகைகள் போக
மீதி 16.38 பாகைகள்
16.38 வகுத்தல் 3.33 = சிம்மத்தின் 5வது பகுதி. சூரியனின் அம்சத்தில்
சிம்மத்திலேயே உள்ளார்.

அதாவது ராசியிலும், அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமும், திரிகோணமும்
பெற்றுள்ளார். மிகவும் சிறப்பான அமைப்பாகும் இது!
லக்கினாதிபதிக்கு இந்த அமைப்புக் கிடைப்பதற்குத் தவம் இருந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய வரம். வாங்கிவந்த வரம் இது!
ஜாதகர் நல்ல தோற்றத்துடன், யாரையும் கவரும் விதமாகப் பொலிவுடன் இருப்பார்.
உண்மையைப் பேசுவார். அதுவும் அடித்துப் பேசுவார். ஆதென்டிக்காகப் பேசுவார்.
ஸ்டாண்டிங் பவர் உள்ளவர். உறவினர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் லக்கினாதிபதியின் இந்த நிலைப்பாடுதான் காரணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
4.
புதன்.
111.1 பாகையில் கடக ராசியில் 1 உள்ளது
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 2ம் பாதம்
அமர்ந்திருக்கும் கடக ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன்.
அம்சம் = 111.1 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக
மீதி 21.1 பாகைகள். 21.1 வகுத்தல் 3.33 = கடகத்தின் 7வது பகுதி.
சனியின் அம்சத்தில் மகரத்தில் உள்ளார்.
ராசியில் பகை வீட்டில். ஆனால் அம்சத்தில் சமம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்

ஜாதகரின் மூன்று, ஆறு ஆகிய தீங்கிடங்களுக்கு உரியவர். ஆறாம் இடத்திற்குப்
பதினொன்றில் அமர்ந்திருப்பதையும், அம்சத்தில் சமன் பெற்று இருப்பதையும்
கவனியுங்கள். ஜாதகருக்கு நோய், கடன் என்று இதுவரை எந்தத் தொல்லையும்
ஏற்பட்டதில்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5.
குரு
322.19 பாகையில் கும்ப ராசியில் உள்ளது
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரட்டாதி 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சனி. நட்சத்திர நாதன் குரு (சுய நட்சத்திரம்)
அம்சம் = 322.19 கழித்தல் முன் சென்ற பத்து ராசிகளின் 300 பாகைகள் போக
மீதி 22.19 பாகைகள்.
22.19 வகுத்தல் 3.33 = கும்பத்தின் 7வது பகுதி. செவ்வாயின் அம்சத்தில் மேஷத்தில்
உள்ளார். ராசியில் இருக்கும் இடம் சம வீடு.ஆனால் அம்சத்தில் நட்பு வீடு.

பாக்கிய் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு திரிகோணம் பெற்று லக்கினத்தில்
நட்பு வீட்டில் இருப்பதைக் கவனிக்கவும். அவரே விரையத்திற்கு அதிபதியும்
ஆவார். ஜாதகருக்கு ஒரு விரையம் ஏற்பட்டாலும், தன் திரிகோண அமைப்பால்
அதைச் சரி செய்து விடும் வல்லமையுடன் பாக்கியாதிபதி குரு உள்ளார்.

லக்கினாதிபதியும், பாக்கியாதிபதியும் திரிகோண பதவி பெற்றுத் திகழ்கிறார்கள்.
ஜாதகத்தின் மேன்மைக்கு வேறு என்ன வேண்டும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
6.
சுக்கிரன்
93.43 பாகையில் கடக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூசம் 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சந்திரன். நட்சத்திரநாதன் சனி
அம்சம் = 93.43 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக
மீதி 3.43 பாகைகள்.
3.43 வகுத்தல் 3.33 = கடகத்தின் 2வது பகுதி சூரியனின் சிம்ம வீடு.
சுக்கிரனிற்கு இரண்டுமெ பகை வீடுகள்தான். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!

இரண்டு ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் நான்கிலும், அம்சத்தில் ஐந்திலும் அமர்ந்து
கேந்திர ஆதிபத்யம் பெற்றதால் நல்ல கணவரையும், குடும்பவாழ்க்கையையும்
ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.

அதோடு அம்சத்தில் லக்கினாதிபது செவ்வாயுடன் கூட்டணி போட்டுள்ளதால் குடும்ப
வாழ்க்கையில் பல ஏற்றங்களையும் கொடுத்துள்ளான். மேலும் கொடுப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
7.
சனி
80.12 பாகையில் சனி மிதுன ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் புனர்பூசம் 1ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் புதன். நட்சத்திர நாதன் குரு
அம்சம் = 80.12 கழித்தல் முன் சென்ற இரண்டு ராசிகளின் 60 பாகைகள் போக
மீதி 20.12 பாகைகள்
20.12 வகுத்தல் 3.33 = மிதுனத்தின் 7 வது பகுதி. அது செவ்வாயின் வீடான மேஷம்.
அட்டவணையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.ராசியில் நட்பு வீட்டில்
இருக்கும் சனி அம்சத்தில் நீசமாக இருக்கிறார் (மேஷத்தில் சனி நீசமல்லவா?)

என்ன பலன் சொல்வீர்கள்? 10 ஆம் இடத்திற்குரிய சனி ஆறாம் வீட்டிலும்,
அம்சத்தில் நீசமாகியிருந்தால் ஜாதகருக்கு வேலை எப்படிக் கிடைக்கும். ஜாதகர்
படித்திருந்தும் வேலை இல்லாமல் இருக்கிறார்.( ஜாதகர் பெண்மணி. அதனால்
தற்சமயம் வேலை இல்லையென்றால் பரவாயில்லை. கணவர் சம்பாத்தியம் போதாதா?)
ஜாதகருக்கு குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. குரு அம்சத்தில் சனியோடு
சேர்ந்திருப்பதால் ஜாதகருக்குக் கூடிய விரைவில் வேலை கிடைக்கும்!)
-------------------------------------------------------------------------------------------------------------------
8.
ராகு
232.33 பாகைகளில் விருச்சிக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் கேட்டை 2ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் புதன்.
அம்சம் = 232.33 கழித்தல் முன் சென்ற ஏழு ராசிகளின் 210 பாகைகள் போக
மீதி 22.33 பாகைகள்
22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சனியின் மகர அம்சம்
ராசியில் உச்சம் பெற்ற ராகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது.

அதனால் உச்சம் பெற்ற பலனை அவரால் ஜாதகருக்கு அளிக்க முடியவில்லை!
ஜாதகர் ராகு திசையில் சில ஆண்டுகள் சிரமங்களை அனுபவித்தார். அதை
நான் அறிவேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
9
கேது
52.33 பாகைகளில் ரிஷப ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 4ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன்.
அம்சம் = 52.33 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக
மீதி 22.33 பாகைகள்
22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சந்திரனின் அம்சம்.
கடகம். ராசியில் நீசம் பெற்ற கேகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது.
நீசத்தன்மை குறைந்துள்ளது.

நாலில் உள்ள கேது அவ்வப்போது சில சுகக் கேடுகளை ஏற்படுத்தும்.
ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. (ஜாதகர் சொல்லக் கேள்வி)
------------------------------------------------------------------------------------------------------------------------------
10.
லக்கினம்.
3.12 பாகைகளில் மேஷ ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் அஸ்விணி 1ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசி நாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் கேது.
இங்கே கழிக்கும் வேலை இல்லை. ராசியின் முதல் அம்சமான செவ்வாயின் அம்சம்
ராசியும் அம்சமும் ஒரே இடம். ஆட்சி பலத்துடன், வர்கோத்தம பலனும் பெற்றுள்ளார்.
ஜாதகத்தின் லக்கினம் படு ஸ்திரம் (very strong) ஜாதகத்தின் மேன்மைக்கு
முதன்மையான காரணம் இதுதான்!
------------------------------------------------------------------------------------------
ராசியிலிருந்து அம்சம் எப்படிப் பிரிபடுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக
விவரித்து
எழுதியுள்ளேன். அதோடு பலன் அறிவது எப்படி என்றும் குறிப்பாகச்
சொல்லியுள்ளேன்.


இன்றைய பாடம் அனைவருக்கும் புரியும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன்!

கடைசிப் பெஞ்சுக் கண்மணிகள் என்ன சொல்வார்களோ தெரியவில்லை!

பார்க்கலாம்!

இதற்கு முன் நடத்திய பாடத்தின் (9ஆம் வீடு) மீதிப்பகுதி அடுத்த வகுப்பில் நடத்தப்படும்.

ஒரு மாறுதலுக்காக நடுவில் இதை - அதாவது அம்சத்தின் சிறப்பைப் பாடமாக நடத்தினேன்

உங்கள் புரிதலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!