மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.2.15

என்ன வேண்டும் ஏழைக்கு?


என்ன வேண்டும் ஏழைக்கு?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திரு. டி எம் எஸ் அவர்கள் பாடிய முருகன் பாடலொன்று நிறைக்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு - மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் - மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை - பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு - ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே! 
உந்தன் வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் - பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!

திரைப்படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: TMS
===============================================



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

27.2.15

நேற்றைய புதிருக்கான சரியான விடை

நேற்றைய புதிருக்கான சரியான விடை

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல் பயணித்திருந்தால்...
.
சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் தப்பி இருப்பார்கள்.

பேருந்து கடந்திருக்கும் என்பதுதான் Key answer
அதை மிகவும் சரியாகச் சொன்னவர்களின் பெயர்கள் கீழே உள்ளது:

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
******Blogger Chandrasekharan said...
Respected Sir,
Avargal irangamal irundhuirundhal, paarai viluvadharkku munbaghavey perundhu andha idathai (Paarai vizhum idathai) Kadandhirukkum.
Whatsapp il parkavillai. En arivirkku ettiyadhu.
Thank You.
2
******Blogger Ananda Kumari Chidambaram said...
அவர்கள் பேருந்தை நிறுத்தி இறங்காமல் இருந்தால் அந்த பாறை விழும்போது அவர்கள் பேருந்து அந்த இடத்தை கடந்திருக்கும். அத்தனை பேரின் உயிரும் பிழைத்திருக்கும்.
3
******Blogger Narasimhan D said...
ivargal 2 perum irangamal irrunthal bus meethu parai velunthu irukkathu
bus antha idathai thandi poi irrukum corracta?
4
******Blogger Bala Murugan said...
அவங்க இறங்கலைனா பஸ் பாறை விழுறதுக்கு முன்னாடியே அந்த இடத்தை தாண்டி இருக்கும்.
- பாலமுருகன்
-------------------------------------------------
5
******Blogger Maripandian Gani said...
இருவரும் இறங்காமல் இருந்திருந்தால் பேருந்து நிற்காமல் சென்றிருக்கும். அந்த பாறை விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
-----------------------------------------------
6
******Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
எனது கணிப்புகள் இரண்டு.
1. அவர்கள் அங்கு இறங்காமல் இருந்திருந்தால் பேருந்து பாறை விழுவதற்கு முன் அந்த இடத்தை கடந்துருக்கும்.
நன்றி
செல்வம்
----------------------------------------------
7
******Blogger Kamatchi Sundaram said...
appadi avargal irangamal irunthal antha bus antha nimadam kadanthu poirukum. andha accident nadanthuirukathu.
.
.-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.2.15

Quiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்!


Quiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்!

ஒரு இளம் தம்பதி...

மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.

ஏனோ, வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.

ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் 
இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன.

ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை...இறங்கிய 
இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர்.

உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின
உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக்கொண்டனர்.

வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...

அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.

இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய 
பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.

ஒருவரும் தப்பவில்லை!

இவர்கள் இருவரைத் தவிர..மற்றவர்கள் பாறைக்கடியில் சமாதி 
ஆகி இருந்தனர்.

குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின.

இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் பதிலை எழுதுங்கள். சரியான விடை நாளை காலையில்!

சரியான பதிலை எழுதினால், அதி புத்திசாலி என்ற பட்டத்துடன் உங்கள் பெயர் வெளியாகும். இது எனக்கு WhatAppல் வந்தது. உங்களுக்கும் வந்திருந்து, அதைப் படித்திருந்தால் போட்டில் கலந்து கொள்ள வேண்டாம்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

25.2.15

Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!


Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே
- கவியரசர் கண்ணதாசன்

புதிர் எண் 78 ற்கான விடை

25.2.2015
--------------------------------------


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

சரியான பதில்:

1.  ஜாதகருக்கு அவருடைய 25வது வயதில் திருமணம் நடைபெற்றது.
2. ஆனால் அது ஒராண்டிற்கு மேல் நிலைக்கவில்லை. விவாகரத்தில் முடிந்துவிட்டது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

மகர லக்கின ஜாதகம்.
லக்கினம் மற்றும் லக்கினாதிபதியை உள்ளடக்கிய கால சர்ப்ப தோஷம்
உள்ள ஜாதகம்.
ஏழாம் வீடு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. ஏழில் செவ்வாயும், ராகுவும். அத்துடன் சனியின் பார்வையும் உள்ளது.
ஆனால் ஏழாம் வீட்டின் மேல் குருவின் பார்வையும் உள்ளது. குருபகவான் தன்னுடைய மகா திசையில் சுக்கிரபுத்தியில் ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார்.
ஏழாம் வீட்டுக்காரன் சந்திரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் 
அமர்ந்துள்ளது கேடாகும். அது கணவன் மனைவிக்குள் பிரிவை 
உண்டாக்கும் அமைப்பு. அதன்படியே நடந்தது.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  9. பேர்கள் மட்டுமே சரியான பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

விவாகம் ரத்தாகும் என்பது தான் முக்கியமான பதில்! (key answer)
அதைக் குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற ஒன்பது அன்பர்களின் பெயர்களும் கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
///////Blogger thozhar pandian said...
இலக்கினாதிபதி சனி இலக்கினத்தில் 2ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். 7ம் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 12ல், இலக்கினத்திற்கும், இலக்கினாதிபதிக்கும், 6ம் வீட்டில், மறைந்தார். களத்திரகாரகன் சுக்கிரன் இலக்கினத்திக்கு 3ல் 7ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். சந்திர இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் மாந்தி. 7ம் வீட்டில் பாதகாதிபதி செவ்வாய் நீசம் பெற்று இராகுவுடன் கூட்டணி. 7ம் வீட்டிற்கும், களத்திரகாரகர் மற்றும் குடும்பகாரகருக்கும் சனி பார்வை. ஆனால் அவர் இலக்கினாதிபதியாக இருப்பதால், குரு தசையில் திருமணம் நடந்திருக்கும். சங்கடங்கள் நிறைந்த திருமண வாழ்க்கை. பிரிவில் முடிந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Tuesday, February 24, 2015 5:23:00 AM /////
-------------------------------------------
2
//////Blogger Thavam Mani said...
before 29 marrige he got divioce . 7 th house athipathi moon in oopaya rasiyil nirga many parter, but sani 7m parvai in 7 th place is not good, delay marriage. parter was elder. marriage was done 35 old. that was good.
Tuesday, February 24, 2015 9:33:00 AM /////
--------------------------------------------
3
//////Blogger anand tamil said...
1.ஜாதகருக்கு திருமண‌ம் ஆகிவிட்டது.
2.திருமண‌ வாழ்க்கை சிறப்பாக இல்லை. தோல்வியில் முடியும்.
இருவரும் பிரிந்து வாழ்வர் .
காரணங்கள்:
1.7ம் வீட்டின் மேல் லக்கினாதிபதி சனி மற்றும் குருவின் பார்வை.
களத்திரக்காரன் சுக்கிரனும் , குருவும் லக்கினாதிபதி சனியின் பிடியில். மேலும் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால்
2.7ம் வீட்டின் அதிபதி சந்திரன் 6இல் மறைவு.இது 7ம் வீட்டிற்க்கு 12ம் வீடு. மேலும் சந்திரன் மேல் சுப கிரகங்களின் பார்வை இல்லை.
7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு ஆதிக்கம் .
Tuesday, February 24, 2015 1:15:00 PM ////////
-----------------------------------------------------
4
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
அமுதும் தேனும் எதற்க்கு?” கேள்விக்கு பதில் “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” என்பதுதான்.
1).அன்பருக்கு 34 வயதில் சனி தசை புதன் புத்தியில் திருமணம் நடந்தது.
2).திருமண வாழ்வு துயரத்தில் முடிந்தது. மனைவி,அவரது 43 வது வயதில் இறந்திருப்பார்.சனி தசா-சந் புத்தி-சனி அந்தரம்.
1).மகர லக்னம்.லக்னாதிபதி சனி ஆட்சி,கேதுவுடன் கூட்டணி.7ம் வீடான கடகத்தில் அமர்ந்த நீச்ச செவ்வாய்+ராகு கூட்டணியின் நேரடி பார்வை லக்கினத்தின் மேல்.மகர லக்கின பாதகாதிபதி செவ்வாய். 7ம் பதி சந்திரனோ 6ல் அமர்வு.தன் வீட்டிற்க்கு 12ல் (நோய் ஸ்தானம்).
மூன்றில் அமர்ந்த உச்ச குருவின் 5ம் பார்வையும், அவருடன் கூட்டு சேர்ந்த உச்ச களத்திர காரகன் சுக்கிரனின் அமர்வும் களத்திர ஸ்தானத்தின் மீது லக்னாதி சனியின் பார்வையும் திருமணம் நடத்தியது.
2). குடும்ப ஸ்தான பதி சனி தன் வீட்டிற்கு 12ல் மறைவு.7ல் அமர்ந்த பாதகாதிபதி நீச்ச செவ்வாயின் 8ம் பார்வை. 4 மிட சுக ஸ்தானாத்தில் உச்சம் பெற்ற 8மாதி சூரியன் அமர்வு.7ம் பதி சந்திரன் (தன் வீட்டிற்கு 12மிடமான 6ல் இருந்து) 12மிடத்தை பார்வை செய்கின்றார்.
2மிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
அன்பருக்கு திருமண வாழ்வு பயனின்றி விரயமாகி விட்டது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Tuesday, February 24, 2015 1:26:00 PM ///////
----------------------------------------------
5
Blogger asbvsri said...
Quiz No 78: Answer
ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
ஜாதகர் கால சர்ப யோகத்தில் உள்ளவர். லக்னாதிபதி நல்ல நிலையில் ஆட்சியில் வலுவாக பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளார்.
5 ஆம் அதிபதி சுக்ரன் யோககாரகன், களத்திரகாரகன் ராசியில் உச்சம் – நவாம்சத்தில் ஆட்சி. கேந்திரம் / கோணாதிபதி
3க்கும் 12க்கும் (போகஸ்தானம்) அதிபதி குரு ஆட்சி. அவர் களத்திரஸ்தானத்தை 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஆனால் 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது.
7 ஆம் இடத்தில் செவ்வாய் ராசியில் நீச்சம். ஆனால் நவாம்சத்தில் உச்சம். ராஹு வர்க்கோத்தமம்.
ஜாதகருக்கு கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும்.
ராஹு தசை 15 வயது வரை. பிறகு குரு தசையில் யோககாரகன் சுக்ரன் புக்தியில் 26 வது வயதில் திருமணம் நடந்திருக்கும். இது தவறியிருந்தால் 36 வது வயதில் சனி தசையில் சுக்ர புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
களத்திரஸ்தானாதிபதி சந்த்ரன் 6 ஆம் இடத்தில் – ரோக ஸ்தானம். ஆதலால் மனைவி நோய்வாய்ப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது. ஆதலால் திருமணமாகி சில காலங்களுக்குப்பிறகு சன்யாசி மாதிரி துறவி வாழ்க்கை வாழ வேண்டிய நிலையில் இருந்திருப்பார்.
K R Ananthakrishnan, Chennai
Tuesday, February 24, 2015 3:16:00 PM//////
--------------------------------------------
6
////Blogger Kirupanandan A said...
1) திருமணம் நடந்தது. களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாகி இன்னொரு சுப கிரகமான ஆட்சி பெற்ற குருவுடன் இருக்கிறார்.
2) மிகவும் சண்டை சச்சரவு மிகுந்த திருமண வாழ்க்கை. முடிவில் விவாகரத்தானது. 7ம் அதிபதி 6ல் மறைந்துள்ளார். 7ல் 2 பாப கிரகங்கள். இதில் செவ்வாய் நீசமாகி இருக்கிறார்.
Tuesday, February 24, 2015 8:41:00 PM ///////
---------------------------------------------------
7
/////////Blogger Siva Radjane said...
1. ஜாதகர் திருமணம் ஆனவர்.
2.திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும். மனைவியை பிரிந்தவராய் இருப்பார். 
1.laknaathipathi சனிஸ்வரன் laknaththil amarnthu 7 ம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார். maylum 7 ம் veettiRku guru'vin paarvai. sukkiran ucham. சந்திரன்க்கு 7 ம் அதிபன் 'குரு' ஆட்சி.sevvaai ,sani பார்வை..மற்றும் 7ல் செவ்வாய் ராகு சேர்க்கை ஆகியவற்றால் ஜாதகருக்கு 31 வயதில் குரு thisai ,ராகு புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.
2. 2ம் அதிபன் சனி 2க்கு 12ல் மறைவு. 2ம் விட்டிற்கு செவ்வாயின் 8ம் பார்வை.7ம் அதிபன் சந்திரன் laknathiRku 6ல் ,7க்கு 12ல் மறைவு. 7ல் தீய கிரகங்களான செவ்வாய் ,ராகு கூட்டணி.சந்திரனுக்கு 2ல் செவ்வாய் ,ராகு சேர்க்கை . ஆகையால் ஜாதகரின் திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும்.மனைவியை பிரிந்தவராய் இருப்பார்.
Sivarajan (pondicherry)
Wednesday, February 25, 2015 12:42:00 AM /////
--------------------------------------------------
8
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 78 வணக்கம்.
28/04/1963 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 1.30.35 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:சென்னை)
1. ஜாதகருக்கு திருமணம் 23 வயதில் நடைபெற்றது.
2. 42வயதில் திருமணம் விவாகரத்து எற்பட்டது.
மகர லக்கினத்திற்கு யோககாரகன் புதன்,சுக்கிரன். இந்த ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்.மகர லக்கினத்திற்கு 5 மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன்.
1. லக்கினாதிபதி சனி மகர ராசியில் லக்கினத்திலேயே உள்ளார். லக்கினம் 37 பரல். கேதுவுடன் கூட்டு. துரதிர்ஷ்ட்டம். உடல் நல கேடு. உடல் குறைபாடுகள், வியாதி, ஜாதகரை ஒரு வழி ஆக்கிவிடும்.
2. மகர லக்கினதிற்க்கு ராஜ யோககாரன் செவ்வாய் 7ல் ராகுவுடன் கூட்டு சேர்ந்து இருப்பதால் கெட்டு போய் இருக்கிறார்.
3. ஆரம்ப ராகு தசையில் ஜாதகர் மிகவும் கஷ்ட்டப்ப்ட்டு இருப்பார்.
4. இந்த ஜாதகத்தில் யோககாரனான சுக்கிரன் உச்சம்(4 பரல்) 3ம் வீட்டில் மீன‌ ராசியில். மேலும், குருவுடன் கூட்டு.
5. குருவின்(3 பரல்) 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது உள்ளது.
6. உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வையும், குருவின் 7ம் பார்வையும் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டின் மீது உள்ளது. 9ம் வீட்டின் அதிபதி புதன் மூல திருகோணத்தில் 5ம் வீட்டில் இருக்கிறார்.
7. சந்திர லக்கினதிலிருந்து 7ம் வீடு தனூர் ராசி. அதாவது 12ம் வீடு.அதன் அதிபதி குரு 3வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு.அந்த வீடு சந்திரனிருந்து கேந்திரத்தில் இருப்பதால் அது கஜகேசரி யோகம் பெற்றுள்ளது.
8.மேலும், லக்கினாதிபதி சனியின் 3ம் பார்வை 3ம் வீட்டில் உள்ள சுக்கிரன், குருவின் மீது உள்ளது.
9. குருதசை சுக்கிர புக்தியில் 23 வயதில் திருமணம் நடைபெற்று இருக்கும்.
10. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்து இருப்பதால் அவருக்கு ஒரு பெண் குழந்தை அதே சுக்கிர தசையில் கிடைத்தது.
11. 2ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அதவது அந்த வீட்டிற்க்கு 12ல்.வீட்டின் மீது செவ்வாயின் 8ம் பார்வை உள்ள‌து.அந்த வீட்டில் 30 பரல்கள் உள்ளன.
12. குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தது.காரணம், 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்துள்ளதால் திருமணம் பிரிவில் முடியும். மேலும், சனி, சந்திரனின் 8/6 நிலைமை.
சனி தசையில் சந்திர புக்தியில் 42 வயதில் விவாக ரத்து எற்பட்டது.
13. நவாம்சத்திலும் ராகு 7ம் வீட்டில் உள்ளார்.
14. சூரியனுக்கு 4ம் வீட்டில் ராகு இருப்பதால் ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், பெயர் எல்லம் கிடைக்காமல் போய்விட்டது.
15. 7ல் ராகு இருப்பதால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெண்னினால் அவமானம் எற்படும்., கேதுவின் 7ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும்,திருமணம் பிரிவில் முடியும்.
சந்திரசேகரன் சூரியநாரயணன்
Wednesday, February 25, 2015 12:52:00 AM /////
--------------------------------------------
9
Blogger ravichandran said...
Respected sir,
My answer for our Quiz No. 78:-
1. He has married but delayed marriage.
2. His marriage life was not happy and ended with divorce or other reason.
Reasons for Delayed marriage:
i) Kala sarpa dhosa horoscope as well as seventh house and seventh house lord is affected. seventh house lord is sitting 12th place from its own house.
ii) kalathra karaga as well as yoga karaga Venus is exalted and associated with Jupiter and Jupiter is aspecting seventh house.
iii) Bagyathipathi is in good position and lagna lord is in own house.
Hence, He married but delayed ( after his 36th age) might be Saturn dasa, Venus bhuthi.
Reasons for unhappy married life:
i) Mars and Rahu is in seventh place and kethu aspecting.
ii) Lagna lord and seventh house lord is in 6/8 position as well as both are enemies.
iii) Second house lord is sitting 12th place from its own house and mars is aspecting second house.
iv) In 12th place Manthi is there.
v) From seventh house, eitgth house( i.e. second house) is indicating life partner's life. Here affected. 
Hence, marriage life was not happy and ended with divorce or other reason.
With kind regards,
Ravichandran M
Wednesday, February 25, 2015 1:58:00 AM ///////
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.2.15

Astrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு?


Astrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு?

”அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு?”
என்றொரு பழைய பாடல் - மனதை இதமாக்கும் பாடல் உண்டு. அமுதும் தேனும் என்பதை ஒரு பெண்ணின் துணையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார் கவிஞர். எல்லோருக்கும் அமுதும் தேனும் கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை! பலருக்குக்குக் கிடைக்கிறது. சிலருக்குக் கிடைப்பதில்லை. அதுதான் அவலம். எல்லாம் வாங்கி வந்த வரம்!

Quiz No. 78

புதிர் போட்டி எண்.78 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

24.2.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

                                         
  நவாம்சத்திற்கான அட்டவணை


மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.2.15

கவிதை: எது பெரிது ஐந்தா அல்லது ஆறா?

கவிதை: எது பெரிது ஐந்தா அல்லது ஆறா?

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து
--------------------------------------------------------------------------
“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை  
வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த  
விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த  
புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல்  
ஆசனம்
மயிலின் தோகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே  
நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
--------------------------------------------------------------------
இணையத்தில் படித்தேன். நன்றாக இருந்தது. உங்களுக்கு அறியத்
தந்துள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.2.15

தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்!



தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்! 

 பக்தி மலர்

 இன்றைய பக்தி மலரை மதுரை எஸ்.சோமு அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய மருதமலை மாமணியே என்ற பாடல் நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

 அன்புடன் 
வாத்தியார் 
-----------------------------------------------
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
(மருதமலை)

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
(மருதமலை)

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா
---------------------
திரைப்படம்: தெய்வம்
பாடியவர் : மதுரை சோமு 
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்



Our sincere thanks to the person who uploaded the song in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=============================================

19.2.15

Quiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. பேசப் பேசப் பேச்சு வந்தது!


Quiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. பேசப் பேசப் பேச்சு வந்தது!

புதிர் எண் 77 ற்கான விடை

19.2.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், குழந்தை ஒன்றின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1`. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?

சரியான பதில்:

1. பேச்சுக்குரிய இரண்டாம் வீடு மற்றும் அதன் அதிபதி கெட்டிருந்ததால் 
பேச்சு வரவில்லை.
2. அது துவக்க நிலை. பின்னால் ரிஷப லக்கினத்திற்கு உரிய யோகாரகன் சனீஷ்வரனின் அதீதப் பார்வையால் மெல்ல மெல்ல பேச்சு வந்தது!

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!


ரிஷப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு எட்டில். அதுவும் பாப கர்த்தாரி யோகத்தில்
துவக்க திசையாக ராகு மகா திசை.
இரண்டாம் வீடுதான் பேச்சிற்கு உரிய வீடு. House of speech. ஜாதகத்தில்
2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்கிறது. ஒரு பக்கம் கேது.
மறுபக்கம் செவ்வாய்.
அத்துடன் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு 6ல். அத்துடன் சூரியனோடு அஸ்தனமானதுடன், ராகுவுடன் சேர்க்கை.
அதனால் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.

Small correction
(சந்திர ராசிக்கு இரண்டாம் இடத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டும். அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்கு 
திரிகோணத்தில் இருப்பதுடன், யோககாரகன் சனியின் பார்வையையும் பெறுவது சிறப்பான அம்சமாகும்)

சிக்கல்களுக்கு சந்திர லக்கினத்தையும் பார்க்க வேண்டும். இங்கே
சந்திரன் நின்ற இடத்திற்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் அந்த
வீட்டிற்கு ஒன்பதில் முக்கியமான திரிகோணத்தில்
-----------------------------------------------------------------------
அத்துடன் ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனியின்
நேரடிப் பார்வையில், குரு பகவான் ஐந்தில் அத்துடன் 9ம்
பார்வையாக லக்கினத்தைப் பார்க்கின்றார்.
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல்.
யோககாரகன் சனீஷ்வரனும் லக்கினாதிபதி சுக்கிரனும் கை கோர்த்துக் குழந்தைக்குப் பின்னாளில் பேச்சை வரவைத்தார்கள்.
குழந்தை ராகு திசை சந்திரன் மற்றும் செவ்வாய் புத்தியில் மெல்ல 
மெல்லப் பேசத்துவங்கியவன், தனது பத்தாவது வயதில் குரு மகா 
திசை துவங்கியவுடன் நன்றாகப் பேசினான்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 29. பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  17 பேர்கள் மட்டுமே
சரியான  பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

பேச வரும் என்பது தான் முக்கியமான பதில்! (key answer)  அதைக்
குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற 17  பேர்களின் பெயரும்
கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
/////Blogger amuthavel murugesan said...
Vanakam iyya,
Answer to Quiz:77
2nd lord is the owner of speech.
Here Budhan is in with Ragu & Suryan.
2nd place & langathipathi is in Pabakarthari yago.
She will speak with help of Guru.
M.Santhi
Wednesday, February 18, 2015 10:38:00 AM/////
--------------------------------------------------------
2
//////Blogger Kamban said...
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2ஆம் இடத்தின் அதிபதி புதன் பரிபூரணமாய் ராகு சூரியனுடம் சேர்ந்து
கெட்டு இருக்கிறார் அதனால் பேச்சு வராது.
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல், பின்னால் 
பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 11:34:00 AM /////
-----------------------------------------------
3
/////Blogger Govindasamy said...
1. வாக்குஸ்தானாதிபதி புதன் லக்கினத்திற்கு ஏழில் இரண்டாமிடத்திற்கு ஆறில் ராகுவுடனும் சூரியனுடனும் இருப்பதால் ராகுதிசையில் பாதிப்பு.
மேலும் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் குருவினது வீட்டில் - பகை வீட்டில்.
2. குழந்தைக்கு குருதிசையில் பேச்சு வந்திருக்கும். குரு திரிகோணத்தில் இருப்பதால் குருபார்வை லக்கினத்தில். நன்மை செய்யும்.
Wednesday, February 18, 2015 11:55:00 AM /////
-----------------------------------------------
4
/////Blogger bala said...
வணக்கம் ஐயா,
2ம் வீடு வாக்கு ஸ்தானம்
1)2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில்.
இரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) புதன், 7ல் உடன் சூரியன்+ உச்சம் பெற்ற ராகு கூட்டு.
இரண்டாம் அதிபன் அந்த வீட்டில் இருந்து 6ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.
காது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் செவ்வாய்+மாந்தி. .ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை.
2)
லக்னாதிபதி 8ல். ஆனால் சுக்கிரன் 8ல் மறைவு இல்லை என்பது விதி.
2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சுக்கிரன் பார்வை. சுக்கிர திசை/புத்தி நேரத்தில் பேச்சு திறன் வரும்.
Wednesday, February 18, 2015 12:01:00 PM /////
-----------------------------------------------
5
/////Blogger murali krishna g said...
அய்யா,
குழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதி புதன் அந்த வீட்டிற்கு
ஆறாம் வீட்டில் இருக்கிறார். வாக்கு ஸ்தானமான மிதுனமும் பாப கத்திரி
யோகத்தில் மாட்டி கொண்டிருக்கிறது.
ராகு தசை முடிந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் குரு தசையில் பேச்சு வந்திருக்கும். குரு பாக்ய ஸ்தானத்தையும் முக்கியமாக
லக்னத்தையும் நோக்குகிறார்.
சரியா அய்யா ?.
Wednesday, February 18, 2015 12:13:00 PM /////
-----------------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 22 நவெம்பெர் 1992 அன்று மாலை 6மணி 4 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துகோண்டேன்
1.இரண்டாம் இடம்,இரண்டாம் இடத்து அதிபதி,பேச்சுக்கான காரகன் ஆகியவர்கள் கெட்டுவிட்டதால் பேச்சு வரவில்லை.
2.பின்னாலும் பேச்சு வராது
விளக்கம்:
1.ரிஷபம் தான் கழுத்து தொண்டைக்கான பாவம். அது லக்கினமாகி
அதிலேயே கேது அமர்ந்தது.புதன் இரண்டாம் இடத்திற்கானவர்,
பேச்சுக்கான காரகர், இவர் 7ல் சென்று அமர்ந்து, தன் விட்டுக்கு ஆறில், சூரியனால் எரிக்கப்பட்டு பலவீனமடைந்தார். மேலும் ராகுவாலும் பாதிக்கப்பட்டார்.
கேது,செவ்வாய்,மாந்தியால் சூழப்பட்டு இரண்டாம் இடத்தினை பாபகர்த்தாரியில் வைத்துவிட்டது.எனவே பேச்சு வரவில்லை.லக்கினாதிபதி 8ல் மறைந்தது.சந்திரன் லக்கினத்திற்கு ஆறில் மறைந்தது. இவையும் காரணம்.
2.மூன்றாம் இடம் காது சம்பந்தமுடையது. அந்த இடத்தில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து காது கேளாமல் செய்தது.மூன்றாம் இடத்திற்கும்
அங்கே அமர்ந்த செவ்வாயுக்கும் சனியின் பார்வை.எனவே செவிப்புலன் மிகவும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளானதால்தான் பேச்சு வரவில்லை.
நவாம்சத்திலும்
இரண்டாம் இடம் சனியால் பாதிப்பு.இரண்டாம் இடத்துக்கார‌ன் 4ல்
அமர்ந்து பரம எதிரியான செவ்வாயாலும், மாந்தியாலும் பாதிப்பு.குரு 
பார்வை லக்கினத்திகு, ராசி சக்கரத்திலும் நவமசத்திலும் இருப்பதால்
இவர் செவிப்புலன் வாய் பேசாதவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு ஓரளவு மழலையாகப் பேச அறிந்திருப்பார். ஆனாலும் சகஜமான பேச்சு வரவில்லை.
Wednesday, February 18, 2015 1:21:00 PM /////
----------------------------------------------------
7
/////Blogger venkatesh r said...
திர் எண் : 77 க்கான அலசல்.
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1. லக்னாதிபதி 8ல் மறைந்து பாபகர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார்.
2. 2ம் அதிபதி புதன் 7ல் வக்கிரமடைந்து ராகுவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
3. 2மிடமான வாக்கு ஸ்தானம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது.
4. உடல் காரகன் சூரியனும் ராகுவின் பிடியில்.
5. பிறக்கும் போது இருந்த‌ ராகு தசை.
மேற்கண்ட காரணங்களால் பேச்சு வரவில்லை.
ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
குரு தசா ஆரம்பித்த பிறகு, பேச்சு வந்திருக்கும்.
1. 2ம் அதிபதி புதன் லக்ன கேந்திரத்தில் 7ல் அமர்வு மற்றும் சுபகர்த்தாரியில் உள்ளார்.
2. லக்னாதிபதி சுக்கிரனின் பார்வை 2மிடத்திற்கு உள்ளது.
குருவின் சுய‌ புக்தியின் முடிவில், கிட்டத்தட்ட 12 வயதில் பேச ஆரம்பத்திருப்பார்.
Wednesday, February 18, 2015 2:06:00 PM /////
-------------------------------------------------
8
Blogger Anantha Kumar said...
வணக்கம் சார் இத்தனை நாட்களாக வகுப்பறைக்கு வெளிய நின்று
பாடங்களை படித்து வந்தேன் இது தான் வகுப்பறைக்கு உள்ளே வந்து
எழுதும் முதல் தேர்வு தவுறுகள் இருந்தால் மன்னிக்கவும் சார்
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1.பேச்சுக்கு உரிய இடம் ஆனா 2ம் இடம் பவகர்த்தியோகத்தில் உள்ளது
2.லக்கனத்தில் நீசமான கேது அமர்ந்து ஜாதகருக்கு தடுமாற்றத்தை
கொடுக்கிறார்
3.2ம் இடத்துக்கும், பேச்சுக்கு உரிய கிரகமான புதன் 7ல் கேந்திரத்தில்
இருந்தாலும் உச்சம் பெற்ற ராகு மற்றும் சூரியனுடன் இணைந்து
அவரும் பாபகிரகம் மாகி தன சுயத்தை இழந்து உள்ளார்
4.மனதுக்கு காரகன் சந்திரன் 6ல் சனிபகவான் பார்வை வாங்கி மறைந்து ஜாதகருக்கு மனதை ஒரு நிலை படுத்த விடாமல் தடுக்கிறார்
5.புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 3ல் நீசம் பெற்று சனிபகவானின்
பார்வை பெற்று மேலும் மாந்தி உடன் கூட்டாக அமைந்து அவரும் தன்னுடைய பலத்தை இழந்துள்ளார்
6.ராசிக்கு இரண்டில் மூன்று பாப கிரகங்கள்( பொதுவாக இரண்டிற்கு
மேற்பட்ட கிரங்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தை பாதிக்கவே
செய்யும் ஆனால் இந்த விதி வெற்றி ஸ்தனமான 11ம் இடத்திருக்கு பொருந்தாது
7.மேலும் உச்சம் ராகு பாப கிரங்களுடன் சேர்ந்து திசையை நடத்துவதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை
பேச்சு வரும் ஆனால் சரளமாக வராது திக்கி திக்கி தான் பேசுவார்
காரணங்கள்
1.லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி 7ல் சுபகர்த்தியோகத்தில் கேந்திரத்தில் இருப்பது (8ம் வீட்டில் சுக்கிரன், 6ம் வீட்டில் சந்திரன்)
2.ராசிக்கு 2ம் வீடும் சுபகர்த்தியோகத்தில் உள்ளது சார் (3ம் வீட்டில் சுக்கிரன், 1ம் வீட்டில் சந்திரன்)
சார் எனக்கு தெரிந்த அளவு எக்ஸாம் எழுதிருக்கேன் பேப்பரா திருத்தி மார்க் எவ்வோளோனு சொல்லுங்க சார் :-)
Wednesday, February 18, 2015 2:48:00 PM ////
-----------------------------------------------
9
////Blogger anand tamil said...
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
காரணம் :
2ம் வீட்டிற்க்கு அதிபதி புதன் 2ம் வீட்டிற்க்கு 6இல் மறைந்தது .
சுக்கிரன் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டு அதிபதி. சுக்கிரன் 8இல் மறைந்து 2ம் வீட்டை பார்த்தார்
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
பேச்சு வரும் . காரணம் புதன் பூர்வ புண்ணிய அதிபதி . புதன், 4ம் வீட்டு அதிபதி சூரியன் மற்றும் குருவின் பார்வை லக்கினத்தில் பதிவதாலும் .
சுக்கிரன் லக்கினாதிபதியாகவும் இருந்து 2ம் வீட்டை பார்ப்பதாலும்
Wednesday, February 18, 2015 5:48:00 PM /////
------------------------------------------------
10
//////Blogger Raja Sekaran said...
லக்னத்தில் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் உள்ளது. வாக்கு ஸ்தானாதிபதியான புதன் ஏழாமிடத்தில் ராகு மற்றும் சுகஸ்தான அதிபதியான சூரியனுடன் உள்ளார். நடப்பது ராகு திசை. லகனாதிபதியான சுக்கிரன் எட்டாமிடத்தில் மறைந்து உள்ளார். எனவே பேச்சு வரவில்லை. ஆனால் லக்னத்தை குரு பார்ப்பதால், அடுத்து வரக்கூடிய குரு திசையில் கண்டிப்பாக பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 6:38:00 PM /////
------------------------------------------------
11
////Blogger Regunathan Srinivasan said...
அன்புள்ள அய்யா ,
லக்னம் ரிஷபம்.லக்னாதிபதி 8 இல் மறைவு.வாக்கு ஸ்தானம் என்பது 2 ஆம் இடம்.2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் 7 ஆம் இடத்தில உள்ளார்.பிறப்பில்
பேச்சு இல்லை என்றாலும் பின்னாளில் பேச்சு வந்திருக்க வேண்டும்.
குரு திசையில் புதன் புத்தியில் பேச்சு வந்திருக்க வேண்டும் . மேற்கொண்டு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை...மற்றவர்களின் பதிலுக்காக மேலும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன்
S . ரகுநாதன்
Wednesday, February 18, 2015 7:00:00 PM /////
---------------------------------------------------------
12
/////Blogger Kirupanandan A said...
இதற்கு 2ம் இடம் (வாக்குஸ்தானம்) மற்றும் புதன் இவர்கள் கெடக்கூடாது. இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியுமான புதன் பாப கிரகங்களுக்கிடையில்
இருப்பதுதான் காரணம். இது தவிர 2ம் இடம் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
புதன் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் பின்னாளில் பேச்சு வர வாய்ப்புள்ளது.
Wednesday, February 18, 2015 7:15:00 PM ///////
-----------------------------------------------------------
13
/////Blogger vignesh.t Kumar said...
VIGNESH : 2 am idam pavakarthi yogathil, oru pakam kethu matroru pakam sevvai 
lagnathipathi and rasi adhipathi 8 l maraivu , idhu ellam serthu vai pesa mudiyadha
 padi seidhadhu , may be SUKIRAN ( lagnadhipathi) arulal , 
pesa vaipundu
Wednesday, February 18, 2015 8:25:00 PM /////
-------------------------------------------------
14
/////Blogger Chandrasekharan said...
Respected Sir Vanakkam,
1.) 2-m adhibathy Budhan 7-il irundhalum, Avar veetirku 6-il ullar. Idhudhan pechuvaradhadarkku migaperiya karanamaga enakku thondrugiradhu. 
Kethuvin paarvaiyaiveru petrullar.
Budhanukku idam alitha Chevvai neesam. 
Lagnadhipathy 8-il amarvu.
Astamadhipathy Guru 5-il amarndhu 9-m paarvayaga lagnathai parkiraar.
Pechu kandippaga varum aanal 100% fluencyyaga varuvadhu kadinam.
Ennudaya lagnamum rishabam, sukran 8-il and budhan 8-il.. Bhavathil budhan 7-il ullar.. adhanaldhan naan pala nerangalil Fluencyyaga pesuvadhu 
illai. stammeringaga pesugiraen. 
Pechu sariyaga illai endral velai kidaikkadhu, mana sangadangal endru ellam nadakkum. Stammering irukkuravanukkudhan andha vedhanai 
puriyum...
Kuzhandhaiku Nandraga pesa varavendum endru Iraivanai Manamaara Vendugiraen.
Thank You.
Wednesday, February 18, 2015 9:20:00 PM /////
------------------------------------------------
15
//////Blogger Ravichandran said...
Ayya,
1. The reason for not getting speech is Second house owner(Bhudhan) in 6th house 
from 2nd house. Moreover is joined with Neecha Rahu and 
Combust with Sun as well
2. He will get speech after his Rahu Desa completes. After completing Neecha Rahu 
Dasa, he will get speech.
Your Student,
Trichy Ravi
Wednesday, February 18, 2015 9:58:00 PM /////
---------------------------------------------
16
//////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
ஜாதகர் ரிஷப லக்கனம்
துலாம் ராசி
லக்கன அதிபதி சுக்கிரன்
1. 2ஆம் வீடான வாக்கு ஸ்தான அதிபதி பூரனமாக கெட்டுள்ளார்
2. ஜாதகருக்கு பேச்சு வரும்
1. 2ஆம் வீடான வாக்குஸ்தான அதிபதி புதன் சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து கிரக யுத்ததில் உள்ளார்
புதன் தன் வீட்டிற்கு 6ம் வீட்டில் உள்ளார் அதுவும் சாதகமாக இல்லை
வாக்குஸ்யான அதிபதி புதனிற்கு சுப கிரக பார்வைகள் இல்லை இதுவும்
ஒரு கரனம்
வாக்குஷ்தான அதிபதி புதனிற்கு நிச்சமான கேதுவின் பார்வையும்
விழுவதும் ஒரு குறை 2ஆம் வீட்டிற்கு லக்கின அதிபதி பார்வை
பெருவதால் பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 10:17:00 PM /////
-----------------------------------------------
17
/////Blogger KJ said...
Sir,
1. Second house in paaba karthari yogam. Also this house owner sits 6th from second house with Ragu and Suriyan. So he cannot talk.
2. He will be able to speak in future. Second house owner in Suba karthari yogam. 
In upcoming Guru dasa he will able to speak. Also Lagnathypathy aspects second house. 
Thanks,
Sathishkumar GS
Wednesday, February 18, 2015 10:44:00 PM //////
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.2.15

Astrology: quiz number.77 பேசடா, வாய் திறந்து பேசு!

Astrology: quiz number.77 பேசடா, வாய் திறந்து பேசு!

Quiz No. 77

18.2.2015

புதிர் போட்டி எண்.77 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு நான்கு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

மேலே உள்ள ஜாதகம் ஒரு குழந்தையின் ஜாதகம். அதாவது ஜாதகம் பரிசீலனைக்கு வந்த போது ஒரு குழந்தையின் ஜாதகம். குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. பெற்றவர்களுக்கு அதீதக் கவலை. இருக்காதா பின்னே? பல மருத்துவர்களிடமும் காட்டிவிட்டார்கள். அப்போதும் பேச்சு வரவில்லை.

1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?

குழந்தையின் ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.2.15

Health Tips: ஆரோக்கியத்துக்கான யோசனைகள். அவசியம் படியுங்கள்!



Health Tips: ஆரோக்கியத்துக்கான யோசனைகள். அவசியம் படியுங்கள்!

காய்கறிகள் என்பது மிகவும் சத்தானது என்பது நம் அனைவருக்குமே
தெரிந்த ஒன்றே. நம் உடலில் உள்ள கூடுதலான கலோரிகளை
அது எரிக்கும்.

அதனால் நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் ஆற்றல் திறன்களாக
மாறும். நாம் உண்ணும் உணவு ஆற்றல் திறனாக மாறுவதே
மெட்டபாலிசம்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்க வைக்க பல சைவ உணவுகள்
உள்ளது. மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான
உணவுகள் உடல் எடையை குறைக்கவும் உதவும். எவ்வளவுக்கு
எவ்வளவு காய்கறிக் உண்ணுவதை அதிகரிக்கிறீர்களோ அந்தளவுக்கு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடலாம்.

பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில்
கிடைக்கும் இந்திய உணவுகள்!!!

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சைவ உணவுகளை சாலட் அல்லது சூப்புகளாக பயன்படுத்தலாம். உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க
உதவும்

முதன்மையான அந்த 10 உணவுகள் எவை என உங்களுக்கு தெரியுமா? - அஸ்பாரகஸ், பீன்ஸ், ப்ராக்கோலி, செலரி, வெள்ளரிக்காய், பூண்டு,
காரமான மிளகு, கீரை மற்றும் தக்காளி. மெட்டபாலிசத்தை அதிகரிக்க
உதவும் இந்த சைவ உணவுகள் அதிகமான கால்சியத்தையும்
குறைவான கொலஸ்ட்ரால் அளவையும் கொண்டுள்ளது.

மேலும் இரத்த கொதிப்பு மற்றும் இதய நோய்களுக்கு எதிராக போராடி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி,
சரும பாதிப்புக்களை சீர் செய்யவும் உதவுகிறது. இதுப்போக கிரீன் டீ
மற்றும் ஆளி விதைகளும் கூட மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்
முக்கியமான உணவுகளாகும்.

வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும்
மற்றும் அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த
சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள்

சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம்
போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது.
அதிக  அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.

மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும்
தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் வைட்டமின் ஏ  மற்றும் வைட்டமின் கே கூட நிறைந்துள்ளன. இது
தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக
உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை
குணப்படுத்தும். வெங்காயத்தாள் க்யூயர்சிடின்

போன்ற பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக
இருக்கின்றது.

வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.இந்த காய்கறி
களிலுள்ள  வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,
உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள
பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போ
ஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான
வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள்’ கண் நோய் மற்றும்
மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள்
உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால்
உண்டாகும் இதய  நோய் அபாயத்தைக் குறைக்கும்��

எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும்
புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ,
மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?!

ட்ரை இட்!

* உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள்

எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான்
சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம்
வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள். ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்ற பசி உணர்வு
விரட்டப்படும்... மனதில் இருந்தும்!

* எக்ஸர்சைஸ் வேண்டாம்

ட்ரெட் மில், அப்டமன், ஜிம், ஏரோபிக்ஸ் எதையும் கட்டாயத்தின் பேரில் செய்தால், நீண்ட நாள் தொடர முடியாது. ‘வொர்க் அவுட்’ என்பது
அலுப்பாக இருந்தால், செய்ய வேண்டாம். அப்படியென்றால் சேர்ந்துள்ள கலோரிகளை எப்படிக் கரைப்பது..? சைக்ளிங் செல்லலாம், காரைக்
கழுவலாம், தோட்ட வேலை பார்க்கலாம், ஃபிரிஸ்பீ விளையாடலாம், குழந்தைகளின் காஸ்ட்லி உடைகளை மட்டும் கையால் துவைக்கலாம்... இப்படி ஏதாவது ஒன்றை சுவீகரித்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள்
செய்தால் போதும்!

* ‘வாக்’ செல்லலாம் ஜாலியாக

எதுவுமே செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘வாக்’ செல்லச் சொன்னால் எப்படி என்கிறீர்களா..?! இப்படிச் செய்து பாருங்கள்..!
அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவர்கள், முந்தைய நிறுத்தத்தில்
இறங்கி நடந்து செல்வதோடு, வீடும் திரும்பும்போதும் அப்படியே
செய்யலாம்;

அலுவலகத்தில் காரை கடைசியாக பார்க் செய்துவிட்டு, நடந்து போகும் தூரத்தை அதிகரித்தால் போதும்.


👍 பழைய 🍚 சாதத்துல இவ்வளவு      விஷயமா?

🍴உணவே மருந்து 💊
💊 மருந்தே உணவு

💻 திரைப்படங்களில் 🌇 கிராமத்து சீன் 🔄

👸 கதாநாயகி பித்தளைத் தூக்கில் 🍚 பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் 👨 கதாநாயகனுக்குத்தருவாள்.

💦 நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.

👉 இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. 😨

☝ஆனால் முதல் நாள் 🍚 சோற்றில் 🚰 நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் ☝ இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு ✳

☝ தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 👍
'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக
வைத்திருக்கிறதாம்!

⏩ கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, 😨 நோய்
எதிர்ப்பு சக்தி 💪 அபரிமிதமாக பெருகுகிறதாம்.

👉 அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

👉 பழைய சாதத்தின் நன்மைகள் சில 👍

1. ⛅ "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால்,
உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 😃😀😄

2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 😄😀😃

3. ☀ மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு
குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 😄😀😃

4. ☝ அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, 😡 மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 😄😃😀

5. ☝ இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் 😱 இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்,  உடல்
எடையும்  குறையும். 😄😃😀

6. ✅ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு
அதிகமான 💪 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை
செய்ய உதவியாக  இருக்கிறது.
😀😃😄

7. 😩 அலர்ஜி, 😫 அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 😄😃😀

8. 🔥 அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ❗ ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. ✅ எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. 💪 ஆரோக்கியமாக அதே சமயம் 👸 👨 இளமையாகவும் இருக்கலாம்.
                         
🅰 🅱 🆎 🅾 பொது நலம் கருதி  வெளியிடுவோர்
இயற்கை மருத்துவ நலம் விரும்புவர் சங்கம்.
=======================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.2.15

வாருங்கள், சிரித்து வைப்போம்!


வாருங்கள், சிரித்து வைப்போம்!

GRANDMA  IN  COURT.. Brilliant:-

Lawyers should never ask grandmas a question if they aren’t prepared
 for the answer!

In a trial, a small-town prosecuting attorney called his first witness, an elderly grandmother to the stand.

He approached her and asked; 

"Mrs. Jones, do you know me?"

She responded, "Why, yes, I do know you, Mr. Williams. I've known you since
 you were a young boy, and frankly, you're a  big disappointment to me.. 
You lie, cheat on your wife, manipulate  people and talk about them behind
 their backs. You think you're a  big shot when you haven't the brains to realize
 you never will  amount to anything more than a two-bit paper pusher.
 Yes, I know  you.."

The lawyer was stunned!  Not knowing what else to do, he pointed across the room
 and asked,  - 

"Mrs. Jones, do you know the defense attorney (the opponent's lawyer)?"

She again replied, "Why, yes, I do. I've known Mr. Bradley since he was a youngster.
 He's lazy, bigoted, and has a drinking problem. He can't build a normal relationship
 with anyone  and his law practice is one of the worst in the state. Not to  mention
 he cheated on his wife with three different women. One of  them was your wife. .
.Yes I know him."   

The defense attorney almost died.

The judge asked both lawyers to approach the bench and in a quiet  voice said: 

"If either of you rascals asks her if she knows me,  I'll send you to jail for
 contempt of court! 😜😋

----------------------------------
2
One day a Professor was talking about marriage in the class.

Professor: What kind of Wife would you like Pappu?

Pappu: I would want a wife like the moon.

Professor: Wow !!! What a choice... So you want her to be Cool & Calm like the moon?

Pappu: No, no...

Professor: Oh, so you want her to be Round and white?

Pappu: No, no...

Professor: Oh, so you want her to be Fair and Beautiful like the moon?

Pappu: No, no... I want her to be Exactly like The MOON. Just Arrive at Night and Disappear in the Morning.

Professor fainted...
--------------------------
3

5 star hotel chef calls his wife and asks:  enna dinner?

Wife : Steamed fine long grain white rice hand-picked in the emerald green lap of the Vindhyas, accompanied by a golden lentil spicy soup that was gently simmered with the choiciest handpicked southern spices and  the smouldering tang of organic tamarind

Husband : apdina ?

Wife : Sorum rasamum
----------------------------
4
The best jokes heard in 2014

🔴Wife : Shall I prepare Sambhar or Rasam today . 
Husband : First make it, we will name it later 

🔴A frustrated husband in front of his laptop:
dear google, please do not behave like my wife...
Please allow me to complete my sentence before you start guessing & suggesting
---------------------------
🔴A married man's prayer; 
Dear God, u gave me childhood, u took it away
U gave me youth, u took it away. 
U gave me a wife.......... Its been years now, 
just reminding u......
---------------------------------
🔴A man brings his best buddy home for dinner unannounced at 5:30 after work.
His wife begins screaming at him and his friend just sits and listens in.
"My hair & makeup are not done, the house is a mess, the dishes are not done, I'm still in my pajamas and I can't be bothered with cooking tonight  ! Why the hell did you bring him home for?"

Husband answers "Because he's thinking of getting married"
--------------------------------------
🔴Husband: I found Aladin's lamp today. 
Wife: wow, what did u ask for darling?? 
Husband: I asked him to increase your brain ten times.. 
Wife: oh..jaan..luv u so much.. Did he do that?? 
Husband: He laughed and said multiplication doesn't apply on zero.
------------------------------------------ 
 🔴Employee: Sir You are like a lion in the office! What about at home??

Boss: I am a lion at home too, But Goddess Durga sits on the lion there !
------------------------------------------- 
 🔴A man gifted his wife a diamond necklace for their anniversary and wife didn't speak to him for 6 months. 
Was the necklace FAKE? 
Nooooo! That was the deal :)
--------------------------------------------- 
 🔴A couple was having dinner at a fancy restaurant. As the food was served, the husband said, "the food looks delicious, let's eat."
 Wife: honey.....you say prayer before eating at home.
 Husband: that's at home sweetheart......here the chef knows how to cook.
-------------------------------------------
🔴Best Slogan on a 
MAN's T-Shirt : 

"Please Do Not Disturb me, I am Married and already very Disturbed"
------------------------------------------
எது நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!