மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 521 - 530. Show all posts
Showing posts with label Lessons 521 - 530. Show all posts

23.4.12

Astrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!


Astrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!

நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.

வரட்டும்.

ஆனால் அதிகம் தொந்தரவு இன்றி,  அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது?

நம் கையில் ஒன்றும் இல்லை.

நோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.

என் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் 2010 ஆம் ஆண்டு  பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52

என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல! வேறு ஒருவருடைய ஜாதகம்!
----------------------------------------------------- ---------------------------

---------------------------------------------------------------------------------
 மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.

மிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.

12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப்
படுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.

ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்!

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: கேள்வி - பதில் பகுதி நாளை வெளிவரும். நடுவில் மாறுதலுக்காக ஒரு அலசல் பாடம். இது மேல் நிலைப் பாடத்திற்காக - மேல் நிலை வகுப்பிற்காக (தனி இணைய தளத்திற்காக) எழுதப்பெற்ற பாடம். வகுப்பறை மாணவர்களுக்கும் பயன் படட்டும் என்று இன்று வலையில் ஏற்றியுள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.4.12

Astrology எது (டா) புத்தாண்டு?


Astrology எது (டா) புத்தாண்டு?

தமிழனைப்போல குழம்பி நிற்பதற்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. எடுத்ததற்கெல்லாம் குழம்பி நிற்பான். அத்தனை அப்பாவி!

சாதாரண விஷயத்திற்குக்கூட் குழம்பி நிற்பான்.

தமிழ்ப் புத்தாண்டு எப்போது? அதுதான் கேள்வி!

தை மாதம் முதல் நாள்தான் தமிழர் திருநாள் அன்றுதான் தமிழனுக்குப் புத்தாண்டு என்று அய்யா சொல்கிறார்.

இல்லை வேத ஆகமங்களின்படி சித்திரை மாதம் முதற் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அம்மா சொல்கின்றார்!

எது உண்மை?

புத்தாண்டை தமிழ்ப்புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு, கன்னடப் புத்தாண்டு என்று வர்ணம் கொடுத்துப் பிரிக்காதீர்கள்.

மற்றவர்களை விட்டுவிடுவோம். ஜோதிடம் கற்கும் நாம் தெளிவாக இருக்க வேண்டாமா?

சனியில் தமிழ்ச்சனி, மலையாளச் சனி என்று தனித்தனியாகவா சனி இருக்கிறது?

கட்டி அனைப்பதிலும், போட்டுத் தள்வதிலும், உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரே சனிதான்!

அதுபோல ஜோதிடம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது!
-------------------------------------------
எப்போது புத்தாண்டு?

சூரியன் ஒரு சுற்றை (ஒரு ஆண்டிற்கான சுற்றை) முடித்து விட்டு அடுத்த சுற்றைத் துவக்கும் நாள்தான் புத்தாண்டு. ஒரு சுற்றை முடிக்க அவருக்கு 365.25 நாட்கள் ஆகின்றன. அதை மனதில் வையுங்கள்.

அடுத்த சுற்றை அவர் எங்கே துவங்குவார்?

சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒவ்வொருமுறையும் மேஷ்ராசியில்தான் அவர் துவங்குவார். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மாதம். 12 ராசிகளை அவர் கடந்து  முடிக்கையில் ஒரு ஆண்டும் முடிந்துவிடும்.

மேஷராசியில்தான் ஜீரோ டிகிரி (பாகை) ஆரம்பம். மீன ராசியின் முடிவில் 360ஆவது பாகை இருக்கும். மேஷத்தில் அவர் காலடி எடுத்துவைக்கும் நாள்தான்  புது நாள். புத்தாண்டின் முதல் நாள். நாளை மாலை (13.4.2012 வெள்ளிக்கிழமை) 7.30 மணி அளவில் அவர் மேஷத்தில் நுழைந்துவிடுகிறார். ஆகவே  நாளை மாலைதான் நமக்குப் புத்தாண்டு!

அனைவரும் புது வருடத்தைக் கொண்டாடுங்கள்!

புத்தாண்டில் உங்களுக்கு எல்லா நலன்களும் கூடிவர உங்களுக்காக பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------
வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆனாலும் வகுப்பிற்கு விடுமுறை இல்லை. பாடங்கள் வரும். பின்னூட்ட்டங்களுக்கான பதிலகள் மட்டுமே தாமதமாகும்.
பொறுத்துக்கொள்ளூங்கள்!

Chart one
Chart Two
 6.30 மணிக்கு மீனத்தில் இருக்கும் சூரியன் (Chart one) 7.30 மணிக்கு மேஷத்திற்கு (chart two) வந்து விடுவதைப் பாருங்கள்.


அந்த நேரத்தில், சூரியனின் அமர்ந்திருக்கும் இடத்தின் பாகைகளைப் பாருங்கள் 0.01:08
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

20.3.12

Astrology நேசம் தரும் பூசம்.

சனீஸ்வரன்


Astrology நேசம் தரும் பூசம்.

பூச சனி நேசம் தரும் என்பது பழைய மொழி.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆக்கிய 3 நட்சத்திரங்களும் சனி பகவானுக்கு உரிய நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு துவக்க திசை சனிதசை ஆகும். அந்த மூன்றில் பூச நட்சத்திரம் சற்று மேனமை யானதாகும்.

சனி பகவான் சூரியனின் மகன். எமதர்மன் சனியின் சகோதரன். சூரியனின் முதல் தாரத்து மகன். அவனுடைய அன்னையின் பெயர் உஷா தேவி.
எப்ப்டியொரு காம்பினேஷன் பாருங்கள். உடல்காரகன், ஆயுள்காரகன், ஆயுளை முடிப்பவன் - என்று என்னவொரு அசத்தலான கூட்டணிக் குடும்பம்
பாருங்கள்.

எமதர்மராஜன் ஒரு முறை தன் சகோதரனான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது.(அப்பொழுதே அண்ணன், தம்பி சண்டை இருந்திருக்கிறது.
ஆனால் இந்தச் சண்டை அப்பனின் இருதாரப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ளது)

Shani is a deva and son of Surya and his wife Chhaya, hence also known as Chayyaputra. He is the elder brother of Yama, the Hindu god of death, who in some scriptures corresponds to the deliverance of justice. Interestingly, Surya's two sons Shani and Yama judge. Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death.

http://en.wikipedia.org/wiki/Shani

ஊனமான காலுக்கு நிவாரணம் தேடிப் பல சிவத்தலங்களுக்கும் சனீஸ்வரன் சென்றாராம். இத்தலத்திற்கு அவர் வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துவிட்டாரம். அவர் விழுந்தநாள் திருதியைத் திதியும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த நன்னாளாம்.
அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பிக் கரை சேர்த்ததாம். அச்சமயம் சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருள்பாலித்தாராம். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனதாம். விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது.

பூச நட்சத்திர உலகத்தில் வசித்த பூசமருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர உலகத்திலிருக்கும் சனி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களுடன் அதைச் சேர்ப்பாராம். அந்தத் தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்றாம். இந்தப் பூசமருஙக சித்தர் பித்ருக்கள் உலகத்திற்கும் சென்று வரும் அரிய சக்தியை உடையவராம். காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகின்றாராம். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக நம்பப் படுகிறது.

இதை நீங்களும் நானும் நம்புவது முக்கியமில்லை. நம்பாவிட்டாலும் அது முக்கியமில்லை. இதுதான் தல புராணம்.

உலகம் உருண்டையா,  தட்டையா  என்று தெரியாத காலத்தில் ஆர்யபட்டா எப்படி, கிரக சஞ்சாரங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்தானோ, அவனுக்கு அந்த சித்தி அல்லது ஞானம் எப்படிக் கிடைத்ததோ, அதறகு எது அடிப்படையோ, அதே அடிப்படைதான் இந்த சித்தர்களுக்கும். அதை மனதில் வையுங்கள்

ஆரயபட்டா வாழ்ந்த காலத்தில், கணினி, சாட்டிலைட், டெலஸ்கோப், கோளரங்கங்கள் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை. அதையும் மனதில்
வையுங்கள்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினத்தன்று சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வதோடு, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்று நம்பப்ப்படுகிறது.

உடல் நலக்குறைவு உடையவரகள். கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சென்று சனீஸ்வரரை வழிபட்டு விட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற இரு மனைவியருடன் திருமணக் கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். விநாயகப் பெருமான் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அவரை வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி (விஜயம்) கிடைக்கும் என்பதால் அவர் விஜய விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
 
கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.
-----------------------------------------
நட்சத்திரக்கோவில்கள் - பகுதி எண் 19
பூச நட்சத்திரம்
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்

இறையனாரின் பெயர்: அட்சயபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: அபிவிருத்தி நாயகி
தல விருட்சம்: வில்வமரம்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருக்கோவில் இருக்கும் இடம்:
பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) 30 கிஇலோ மீட்டர் தூரத்தில் விளங்குளம் பிரிவுச் சாலை. அதில் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இத்திருக்கோவிலை அடையலாம். அல்லது புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் சென்றாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.

முகவரி:
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்,
விளங்குளம் - 614 612,
பேராவூரணி தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
திருவிழாக்கள்: மகாசிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை
   
பூச நட்சத்திரத்காரரர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது!
 
பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்க இத்தலத்தில் உறையும் இறைவனை வழிபாடு செய்வது நலம் பயக்கும். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் ஆகியவர்களும் இங்கே வழிபாடு செய்து நலம் பெறலாம்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்த பிறகு பலனைப் பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

19.3.12

Astrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்!



Astrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்!

பூராடம் நூலாடாது என்ற சொல்லடை திருமண வளையத்திற்குள் மிகவும் பிரசித்தம். பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கழுத்தில் நூலாடாது - அதாவது கழுத்தில் தாலி தங்காது என்பார்கள். அதில் உண்மையில்லை. எவனோ வேலை வெட்டியற்றவன் உதிர்த்த சொல்லடை.

பூராட நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் கழுத்தில் என்ன ஆடாது என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா அவன்?

பூராட நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரம். பூராட நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாமே ஆடும். சுக்கிரன் என்றாலே ஆட்டம் பாட்டம்தானே ராசா!
தங்கள் ஆட்டம் பாட்டத்தால் யாரையும் வளைத்துப் போட்டு விடுவார்கள்.

பூராட நட்சத்திரப் பெண்களைக் காதலிக்கும் காதலர்களிடம் கேட்டுப் பாருங்கள் தெரியும்!
-----------------------------------------------------------------------
சித்தர் என்றால் யோகத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர். மரபு நெறியில் நில்லாதவர் என்று பொருள். கடுவெளி என்றால் பறந்த வெளி என்று பொருள்.

முற்காலத்தில் கடுவெளிச் சித்தர் என்ற பெயரில் ஒரு தவயோகி இருந்தார். தனது அனுபவங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். அக்காலத்து மக்களும் அதிசயமாக சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். எதிர்க் கேள்விகள் இல்லாத காலம். சித்தர் என்ற பயத்தாலும் அது இருந்திருக்கலாம்.

ஒருமுறை சிவபெருமானைக் காண வேண்டி அவர் கடும் தவம் மேற்கொண்டார். தஞ்சைத் தரணியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடுவெளி என்ற கிராமத்தில் தன் தவத்தை மேற்கொண்டார். அவருடைய தவத்தை மெச்சிய சிவன் அங்கே எழுந்தருளினார். சித்துக்களில் வல்லமைபெற ஆசீர்வதித்தார்.

கதை அத்துடன் முடிந்துவிட்டது.

என்ன சுவாரசியமே இல்லாமல் முடிந்துவிட்டது?

அதற்குப் பிறகுதான் மேட்டர் இருக்கிறது.

தஞ்சையை ஆட்சி செய்த சோழ்மன்னன், சித்தருக்கு அருளிய சிவனாருக்கு அத்தலத்தில் கோவில் ஒன்றைக் கட்டினான். அத்தல சிவன் பஞ்ச பூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் முகமாக அங்கே எழுந்தருளியதால் ஆகாசபுரீஸ்வரர் என்ற் பெயரையும் பெற்றார்

இறையனார் ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகின்றார். மங்களகரமான வாழ்க்கையைத் தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் இங்கே வந்து ஆகாசபுரீஸ்வரரை வழிபடுவதாக நம்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இக்கோவிலில் கடுவெளிச்சித்தரின் சிலை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றதாம். கோவிலின் முன் மண்டபத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டாராம். அதன் காரணமாக இத்தலத்தில் நந்தி பகவான், கோபுரத்திற்கு வெளியே உள்ளார்.

சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம் இது.
--------------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 18
பூராடம் நட்சத்திரம்
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
--------------------------------------------------------
இறைவனின் பெயர்: ஆகாசபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: மங்களாம்பிகை
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
இருக்கும் இடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியில் உள்ள இத்திருக்கோவிலை அடையலாம். மொத்த தூரம் 17 கிலோ மீட்டர்கள் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9-10 மணி வரை, மாலை 5-6 மணி வரை
பூராட ந்ட்சத்திர நாட்களில் காலை 8-1 மணி வரை.
திருவிழாக்கள்: ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம்.

முகவரி:
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்,
கடுவெளி,
திருவையாறு தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
 
பூராட நட்சத்திரக்காரர்கள் என்று இல்லை. அனைவரும் வணங்க வேண்டிய் தலம் இது. ஒருமுறை சென்று வாருங்கள் இறையருளைப் பெற்று வாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

13.3.12

Astrology வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா?

Astrology வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா?

பயிற்சிப்பாடம் (உதாரண ஜாதகத்துடன்)
13.3.2012

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பொதுவாகப் பல ஆண்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. மனைவியும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டினால் நல்லது. வாழ்க்ககை வளம் மிக்கதாக அமையும்.

உண்மைதான்.

மனைவியும் வேலக்குச் சென்றால், வீட்டையும், குழந்தைகளையும் யார் பார்த்துக்கொள்வது?

இந்தக் கேள்விக்குப் பதிலாக வெளிநாட்டவரின் வாழ்க்கையை காட்டுவார்கள். அதில் பல சிக்கல்கள் உள்ளன. அது கண்ணில் படாது. பட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். வேலைக்குச் சென்று சம்பாத்தித்துப் பணத்தை ருசி பார்த்த பெண்ணை, யாரும் வீட்டில் உட்கார வைக்க முடியாது. அது பற்றி விவரமாக எழுதினால் வில்லங்கமாகிவிடும்.

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே

என்று வாழ்க்கையின் நியதிகளை வகுத்துச் சொல்வதற்கு அதாவது, கணவனுக்கு இன்னென்ன கடமைகள், மனைவிக்கு இன்னென்ன கடைமைகள் என்று எடுத்துச் சொல்வதர்கு இன்று யாரும் கிடையாது. சொன்னாலும் கேட்பதற்கு யாருக்கும் பொறுமை கிடையாது.

அதனால் பட்டுத் திருந்த்ட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். மனைவிக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால், அதற்குச் ஜாதகத்தில் அமைப்பு இருக்க வேண்டும். அந்த அமைப்பு இல்லாவிட்டால், தலை கீழாக நின்றாலும் வேலை கிடைக்காது.

அதை ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று பார்ப்போம்

வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைக்க ஜாதகப்படியான அமைப்பு

ஏழாம் வீட்டுக்காரன்தான் 10ஆம் வீட்டில் அமர்ந்தால் அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டாக நல்லஇடத்தில் இருந்தால் - அதாவது கேந்திர  அல்லது திரிகோண வீடுகளில் இருந்தால் வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாள். குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தச் செய்வாள். மேன்மையுறச் செய்வாள்

அதை உதாரணத்துடன் உங்களுக்கு விளக்கிச் சொல்ல ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்

ஜாதகத்தைப் பாருங்கள்.

ரிஷப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சுக்கிரன் ஏழில். லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்திருக்கிறார். லக்கினாதிபத்யுடன், சுகாதிபதி சூரியனும் சேர்ந்து உள்ளார். நான்கில்  கேது இருந்தாலும், அந்த வீட்டுக்காரன் கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.

குருவும் சந்திரனும் சேர்ந்து குருச் சந்திர யோகத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால் சேர்க்கை ஆறில் நிகழ்ந்துள்ளதால் பலன்கள் முழுமையாகக் கிடைக்காது.

ஏழாம் அதிபதி செவ்வாய் 12 ஆம் அதிபதியும் ஆவார். அவர் பத்தாம் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார் சனியின் கும்ப வீட்டில் செவ்வாய் . செவ்வாயின் மேஷ வீட்டில்  சனி

ஜாதகனுக்கு வேலைக்குச் செல்லும் மனைவி கிடைத்தாள். அத்துடன். 10 & 12 ஆம் இடப் பரிவர்த்தனையால், வெளி நாட்டில் இருவருக்கும் வேலை கிடைத்தது. செல்வம் (பொருள்)  சேர்க்கும் வாய்ப்பும் கிடைத்தது

12ல் உள்ள 10ஆம் அதிபதியால் வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இதுபோல் ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தாலோ அல்லது ஒன்பதாம் அதிபதியுடன் கூட்டாக இருந்தாலோ மனைவி வரும்போதே எல்லா பாக்கியங்களுடன் (செல்வத்துடன்)  வருவாள். ஏழாம் வீட்டுக்காரனுக்கு அது உயர்ந்த அமைப்பாகும்

வேறு என்னென்ன அமைப்பிற்கு என்னென்ன மாதிரி மனைவி கிடைப்பாள். அல்லது பெண்ணாக இருந்தால் எந்த மாதிரிக் கணவன் கிடைப்பான் என்பதற்கெல்லாம் ஜாதக விவரங்கள் உள்ளன. அது மேல் நிலைப் பாடம். அதில் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12.3.12

Astrology பொன் காய்க்கும் மரம்!



Astrology பொன் காய்க்கும் மரம்!

பொன்காய்க்கும் மரமா? என்னய்யா சொல்கிறீர்கள் என்று அவசரப்படுபவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் பதிவில் உள்ள செய்திகளைப் பொறுமையாகப் படிக்கவும். படித்து முடித்துவிட்டு ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். புராணங்களை நம்ப வேண்டும். அவ்வளவுதான்! கேள்வி கேட்க ஆரம்பித்தால் எல்லாப் புராணங்களுமே செல்லாமல் போய்விடும்; சொல்லாமல் போய்விடும்!

நம்பிக்கையின் அடிப்படையில்தான் எல்லாமும் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன!

இரவு படுக்கின்றோம். காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் படுக்கிறோம். எழுவோம் என்பதற்கு என்ன உத்திரவாதம் (guaranty) இருக்கிறது?
ஆம்னி பஸ்ஸில் பயணிக்கிறோம். முன்பின் தெரியாத ஓட்டுனர். பயணிக்கின்ற ஊருக்குப் போய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் பயணிக்கிறோம். அதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? அந்த உத்திரவாதத்தை யார் உங்களுக்குக் கொடுக்க முடியும்?

ஏழு நாளில் சிவப்பழகு என்கிறான். நம்பிக்கையோடு பணம் கொடுத்து, கண்ட க்ரீமை எல்லாம் வாங்கிப் பூசிக்கொள்கிறோம். மேனி சிவப்பாக
மாறியிருக்கிறதா? நம்பிக்கையை விடாமல் மேலும் மேலும் பூசுகிறோம். அந்த நம்பிக்கையில் ஒரு பகுதியையாவது புராணங்களின் மேல் வையுங்கள்!

பல விஷயங்கள் நம்பிக்கையில் அடிப்படையில்தான் நடந்து கொண்டிடருக்கின்றன!
----------------------------------------------------
சோழ மன்னன் ஒருவனுக்கு திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லை. சிவபக்தனான அவன், தனக்கு பின் சிவசேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தினான், அகத்திய முனிவரைச் சந்தித்துத் தன் மனக்குறையைச் சொல்லி அழுதான். திருவரங்குளம் சென்று, அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறி, அவனை அனுப்பி வைத்தார்.

மன்னனும் அத்தலம் சென்று சிவலிங்கத்தைத் தேடி அலைந்தான். அப்பகுதியில்தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவலை மன்னன் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினார்கள். மன்னன் அந்த இடத்திற்குச் சென்று பூமியில் தோண்டிப் பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கமும் தென்பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்து மன்னனுக்கு அருள் புரிந்தார். அந்த இடத்தில் அந்த மன்னன் எழுப்பிய கோயில்தான்  அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்.

ஒரு பூர நட்சத்திர நன்நாளில்தான் அந்த நிகழ்ச்சி நடந்ததாம். அதனால் அது பூர நட்சத்திரக் கோவிலாகக் கொண்டாடப்படுகிறது.

இறைவனின் அருளால் கோயிலைக் கட்டிய மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து அவனை மகிழ்வித்தது.

பூரதீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் (அடடா, அப்படி ஒரு உலகம் உள்ளதா?) உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக
தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உள்ளதாம். (அங்கே தண்ணீர்ப்
பிரச்சினையே இருக்காது போல் உள்ளது)

அந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். பூரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு சென்று வழிபட்டு
நன்மையடையலாம்!

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பொற்பனை மரம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம். அதிலிருந்து காய்த்த பொற்பழங்கள் மூலம் பணம் பெற்று  இக்கோவில் கட்டப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

(அப்படியொரு மரம் நம் வீடுகளிலும் இருந்தால் எப்படி இருக்கும்? ரோல்ஸ் ராய்ஸ் கார்தான். பெட்ரோல்? வீட்டிலே பங்க் ஒன்றை வைத்துக்கொண்டு
விடமாட்டோமா?)

ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல் ஸ்தூபி ஒன்று மட்டும் உள்ளது. பதினோராம் நூற்றாண்டில் சோழர்களும், பாண்டியர்களும்
போட்டிபோட்டுக் கொண்டு செய்த திருப்பணியில் உருவான கோயிலாம் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹரதீர்த்தம் என
அழைக்கப்படுகிறதாம். இத்தலத்தின் பெயரும் திருவரங்குளம் ஆனதாம்!
------------------------------------------
நட்சத்திரக்கோவில் பகுதி - 17
பூர நட்சத்திரத்திற்கான கோவில்
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
-----------------------------------------
இறைவனின் பெயர்: ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
அம்பிகையின் பெயர்:  பிரஹன்நாயகி (பெரியநாயகி)
தல விருட்சம: மகிழமரம்
தீர்த்தம்: ஹர தீர்த்தம்
கோவில் இருக்கும் இடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7ஆவது கிலோ மீட்டரில் திருவரங்குள நாதர் கோவில் உள்ளது.
கோவிலின் நடை திரந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணிவரை. மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை.
திருவிழாக்கள்: ஆடிப்பூரம் அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகிய நன்நாட்கள்
சிறப்பு: இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
திருவரங்குளம்- 622 303
புதுக்கோட்டை மாவட்டம்.
 
சிவனது மூல ஸ்தானத்திற்கு பின்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள்,  ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர், நால்வர் சன்னதிகளும் உள்ளன.
 
பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப் பட்டவர் போன்றோர்கள் இக்கோவிலில் உறையும் அம்பிகையை வழிபடுவது ந்ன்மை பயக்கும்

சென்று வாருங்கள். வந்தபின் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்!

அன்புடன் 
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

6.3.12

Astrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம்!




Astrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம்!

மகரிஷிகளுக்குக் குறைவில்லாத நாடு நம் நாடு. எத்தனையோ மகரிஷிகள் தோன்றி, வாழ்ந்து, இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மிருகண்ட மகரிஷி (என்ன பெயருடா சாமி!), அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருக்கும் தலத்தில் இறைவனுக்குப் பெரும் பொருட் செலவில் யாகம் ஒன்றை நடத்தினாராம். யாகத்திற்குத் தேவையான பொருட்களை மக்களும் வழங்கலாம் என்றாராம். மக்கள் ஒன்று சேர்ந்து தங்கம் கலந்த பட்டாடைகள் மூன்றை நெய்து அளித்தனர். ஒன்று இறைவனுக்கு, ஒன்று மிருகண்ட மகரிஷிக்கு, இன்னொன்று தங்கள் மன்னனுக்கு என்றார்கள்.

யாகத்தின் நிறைவில், இறைவனுக்காகக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கென்று கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போடப்பெற்ற பட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், தெரியும் என்றார் மகரிஷி. மக்கள் ஆச்சர்யத்துடன் கோவிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாககுண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படைந்தார்கள். அவை எப்படி இங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி கேட்டனர்.

மகரிஷி மக்களிடம் சொன்னார்: "அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ர அக்னியும் ஒரு வகை. அந்த அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது"

அதன் காரணமாகவே இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகக் கொண்டாடப் படுகிறது!

குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜ சோழன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பெற்றது. இன்று நல்லாடை எனறு அறியப்படும் இந்த ஊர், முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப் பெற்றுள்ளார்.

அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத் திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளன!

கோவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
-------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 16
பரணி நட்சத்திர கோவில்
நட்சத்திர வரிசையில் இது இரண்டாவது நட்சத்திரம்.
சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோவில்:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
நல்லாடை கிராமம். நாகபட்டினம் மாவட்டம்
------------------------------------
சுவாமியின் பெயர்: அக்னீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: சுந்தரநாயகி
தல விருட்சம் : வன்னி, வில்வம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது.
தூரம் 15 கிலோ மீட்டர்கள்

முகவரி:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,
நல்லாடை-609 306
தரங்கம்பாடி தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

திருவிழாக்கள்: ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம்.

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலித்தவாறு அமர்ந்திருப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தாலரிரண்டு மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆகிவிட்டதாம்

பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள்  நீங்க இத்தல இறைவனை வழிபடலாம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க, மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கே உறைகின்ற இறைவனை வழிபட்டுப் பயனடையலாம்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

5.3.12

Astrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை!



Astrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை!

காலபைரவர், அதாங்க காலதேவன், ஒரு பூரட்டாதி நட்சத்திர நன்நாளில்தான் ஏழு கிழமைகளைப் படைத்தாராம். அவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இன்று அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருக்கும் இடம் என்று கோவிலின் தலபுராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜகடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனராம். எல்லாம் நம்பிக்கைதான். அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து ஃபேஸ் புக்கில் போட முடியுமா என்ன?

இறையனார் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும்  அம்பாள் காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடனைச் செய்ய விரும்புகிறவர்கள் செய்யலாம்.

ஜாதகத்தில் மதிகாரனாகிய சந்திரனுக்கும், வித்யாகாரனாகிய புதனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை பெற்று வலம்வர, பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது நன்மை தரும்!

கல்விக்குரிய ஸ்தலம் இது. கல்வியறிவு என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது தர்மனின் தம்பி சகாதேவனைத்தான். மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். அவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் அவனைத் தேடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென அவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை.

ஆனால், கிருஷ்ணர் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.

கிருஷ்ணர் எப்படி அமாவாசையை ஒரு நாள் முந்தச் செய்தார் என்பத்ற்கு சுவாரசியமான கதையொன்று உண்டு. யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, அமாவாசைக்கு முதல் நாள், கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார். திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:

"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"

கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"

"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.

கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"

அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து.
-----------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் பகுதி 15
பூரட்டாதி நட்சத்திரத்திற்கான கோவில்
பூரட்டாதி நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 25ஆவ்து நட்சத்திரம்
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
----------------------------------------
சுவாமியின் பெயர்: திருவானேஷ்வர்
அம்பிகையின் பெயர்: காமாட்சி அம்மன்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்றால்,
அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருக்கோவில் உள்ளது
மாதம் தோறும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது

முகவரி
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
ரங்கநாதபுரம் போஸ்ட்- 613 104
திருக்காட்டுப்பள்ளி வழி,
திருவையாறு தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.
கோவில் ந்சடை திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜாதக தோஷங்கள், மற்றும் க்‌ஷ்டங்கள் நீங்க இத்தலத்திற்குச் சென்று அங்கு உறைகின்ற இறைவனை வழிபட்டு விட்டு வரலாம். இசையில் ஞானம்பெற விரும்புகிறவர்களும் இத்தலத்து இறைவனை வழிபடலாம். நல்ல பலன் கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

1.3.12

Astorology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்



Astrology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்

அலசல் பாடம்
1.3.2012

சுவாமி விவேகானந்தா அவர்கள் spiritual gaint of India என்ற பெரும் புகழைப் பெற்றவர்  இந்தியாவில் எத்தனையோ மகான்கள் தோன்றி/அவதரித்து, வாழ்ந்து, இறையடி சேர்ந்துள்ளார்கள். யாருக்கும் அந்தப் புகழ் கிடைக்கவில்லை. உலக மக்களால் நன்கு அறியப்பெற்றவர் ஒருவர் உண்டு என்றால், அது விவேகானந்தர் மட்டுமே!

1893 ஆம் ஆண்டு மதங்களுக்காக நடைபெற்ற மாபெரும் உலக மாநாட்டில் கலந்துகொண்டு, இந்து மதத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் அவர்.

அவரைப் பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவல்ல!

இன்று அந்த மகானின் ஜாதகத்தை அலசுவோம்!

விவேகானந்தரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் விக்கி காமாட்சி அக்காவிடம் உள்ளது. கேட்டு வாங்கிப் படியுங்கள். அதற்கான தொடர்பு சுட்டி
http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda
-----------------------------------
பிறப்பு விவரம்
12.1.1863ல் காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தவர்
தனுசு லக்கினம்
ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசிக்காரர்
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 4 வருடம் 5 மாதங்கள் 1 நாள்

இயற்பெயர்: நரேந்திரநாத த்த்தா
ராமகிருஷ்ண மடங்களின் நிறுவனர்
ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் , ஜனன யோகம் என்று பல தலைப்புக்களில் அரிய நூல்களை எழுதியுள்ளார்.
1902ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் தேதி - தனது 39ஆம் வயதில் அவர் முக்தியடைந்தார்
-----------------------------------------------------------------------


தனுசு லக்கினம் + லக்கினத்தில் சூரியன்
2ல் புதன் + சுக்கிரன்
5ல் செவ்வாய்
6ல் கேது
10ல் சனி & சந்திரன்
11ல் குரு
12ல் ராகு

ல்க்கினாதிபதி குரு 11ல்
பாக்கியஸ்தான அதிபதி சூரியன் 1ல் (திரிகோணத்தில்)
பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் தன் ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்
கர்மகாரகன் சனி, பத்தாம் வீட்டில் கொடிபிடித்துக்கொண்டு உள்ளார்


1
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் (11ல் அமர்ந்தால்) செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.If lagna lord is placed in the eleventh, the native will get maximum benefits for all his efforts பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை அவர் சர்வ சாதாரணமாக நிறைவேற்றி விட்டுப்போனார் fulfillment of his mission towards his birth. 

2
பாக்கிய ஸ்தான (9ஆம் வீட்டு அதிபதி) லக்கினத்தில் அமர்ந்தால் எல்லா பாக்கியங்களும், பெருமைகளும், புகழும் ஜாதகனைத் தேடி வரும். If the lord of gains is in the lagna, the native will get all the gains in his life

3
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகன் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவான். சாதனைகள் செய்வான்.செயல்களை முடிக்கும் உத்வேகம் (killing instinct) இருக்கும்

4
லக்கினத்தில் சூரியன் அமர்ந்ததால், நல்ல உடற்கட்டையும், தோற்றத்தையும், உடல் வலிமையையும் கொடுத்தான். சூரியன் அரசகிரகம், லக்கினத்தில் அமர்ந்த அவன் சுவாமிஜிக்கு மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்கினான். Sun in lagna blessed him with good physical vitality, will-power, honour & dignity.

5.
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகனை ஒரு நாளாவது சிறையில் இருக்கும்படி செய்துவிடுவான் என்பார்கள். சாதாரண பிறவிகளுக்கு வேண்டு மென்றால் அது மெய்ப்படலாம். ஆனால் 10 ஆம் இடத்து சனி, ஜாதகனை அவன் நுழையும் துறையில் உச்சத்திற்குக் கொண்டுபோய் விடுவார். விவேகானந்தர் வாழ்க்கையில் அதைச் செயல் படுத்திக்காட்டினான் சனீஷ்வரன். ஆன்மீகத்தில் நுழைந்து உலகப் புகழ்பெறும்படி செய்ததில் சனீஷ்வரனுக்கும் பங்கு உண்டு!

6.
சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு& கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும். சுவாமிஜிக்கு சூரியனுக்கு இரண்டில், சுக்கிரனும், புதனும் உள்ளார்கள். அந்த யோகத்தினால் அவர் அனைவரையும் நேசிக்கும் மனதைப் பெற்றார். உண்மைக்கு மட்டும் துணை போனார். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்.

7.
அதுபோல சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு & கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.சுவாமிஜியின் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் குரு பகவான் உள்ளார். அதன் காரணமாக அதீத புத்திசாலித்தனம், புகழ், செல்வம் எல்லாம் அவருக்குக் கிடைத்தது அல்லது அமைந்தது. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

8.
குருவும் செவ்வாயும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் ஏழில் அமர்ந்து இருந்தாலும் அதற்குப் பெயர் - அந்த மைப்பிற்குப் பெயர் குரு மங்கள யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய். அவருக்கு ஏழில் துலாமில் குரு பகவான். அந்த அமைப்பு ஜாதகருக்கு தர்ம சிந்தனை, அற்ச் செயல்கள், எதையும் முனைப்போடு செய்யும் ஆற்றல் ஆகியவற்றைக் கொடுத்தன

9.
தவ யோகம் அல்லது தவ வாழ்க்கை: சுக்கிரன், கேது, சனி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் இருக்கும் அமைப்பிற்குப் பெயர் தவ யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் அநத அமைப்பு உள்ளது. அதானல் சுவாமிஜியின் வாழ்க்கை சுய நலமில்லாத தியாக வாழ்க்கையாக அமைந்த்து. மக்களின் மேன்மைக்காக - அவர்களை நல் வ்ழியில் செலுத்துவதற்காக பாடுபட்டார். இறைப் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்டார்.

10.
பத்தாம் வீட்டிற்குரிய புதன் இரண்டில் வந்து அமர்ந்தது. இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வந்தமர்ந்த புதன் அவருக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுத்தான். எவரையும் கிறங்க அடிக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்த்து.

11.
பன்னிரெண்டில் அமர்ந்த ராகுவால் அவர் தேசம் முழுவதும் பயணித்தார். பல உலக நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பை ராகு வழங்கினான்.

12.
இரண்டாம் வீட்டுக்காரன் சனி பத்தில் அமர்ந்தான். அது இரண்டிற்கு ஒன்பதாம் வீடு. அவருடைய வாழ்க்கை லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் படியாக அமைந்த்து. இறைப்பணியுடன், மனித நேய சேவையையும் அவர் செய்தார்.

13.
சாது யோகம் என்ற சந்நியாச யோகம். மாந்திக்கு மூன்றிலும் ஆறிலும் சுபக்கிரக்ங்கள் இருக்கும் அமைப்பு. இங்கே மாந்திக்கு மூன்றில் குருவும், ஆறில் சுக்கிரனும் இருப்பதைப் பாருங்கள். ஜாதகன் துறவறம் பூணும் அமைப்பு. சுவாமிஜியும் முழுத் துறவியாக வாழ்ந்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.

14.
ராஜ யோகம். கேந்திர அல்லது கோண அதிபதிகள் இருவர், சேர்க்கை, அல்லது பரிவர்த்தனை அல்லது பார்வையால் ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் அப்படி உள்ளனர். குரு ஒன்று மற்றும் நான்காம் வீடுகளுக்கு அதிபதி. செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி. ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில். ராஜ யோகத்தைக் கொடுத்தார்கள்

ராஜ யோகம் என்றால் பென்ஸ் காரில் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் காரில் போவதா? இல்லை! எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது. சாதனைகளைச் செய்வது. அதுதான் ராஜ யோகம்

15. ராஜ சம்பந்த யோகம். ஆத்ம் காரகன் சூரியனும், மனகாரகன் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் சூரியனுக்குப் பத்தில் சந்திரன். சந்திரனுக்கு நான்கில் சூரியன். பலன்: பல அரசர்களின் நட்புக் கிடைக்கும் அமைப்பு. சுவாமிஜிக்கு பரோடா மன்னர், ராமநாதபுரம் ராஜா போன்றவர்களின் நட்பு தேடி வந்த்து.

சுவாமிஜி முக்தி அடைந்தார் என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டேன். அவதார புருஷர்களுக்கெல்லாம் மரணம் கிடையாது. ஆகவே அவருடைய ஆயுள் ஸ்தானத்தைப் பற்றி நான் எழுதவில்லை.ஆனால் உங்களுடைய குறுகுறுப்பைப் போக்குவத்ற்காக அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தியை இப்ப்திவின் கடைசியில் கொடுத்துள்ளேன்
-----------------------------------------
சுவாமி ஜாதகத்தைப் பற்றி அஷ்டகவர்க்கம் என்ன சொல்கிறது.
(நமக்குப் பிடித்த, நாம் புகுந்து விளையாடக்கூடிய பகுதி)
அதையும் பார்ப்போம்!



கிரகங்களின் சுயவர்க்கம்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சனி - 5 பரல்கள்

சூரியன் 5 பரல்களுடன் உள்ளார். சந்திரனும் 5 பரல்களுடன் உள்ளார். இந்த அரச கிரகங்கள் இரண்டுமே வலுவாக உள்ளன. சுவாமிஜிக்கு நல்ல தாய் தந்தையர் கிடைத்தனர். செல்வந்த்ர் வீட்டில் பிறந்தார். அன்பான் தாய். சிறுவயது வாழ்க்கை அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது. நல்ல உடற்கட்டையும், தெளிவான மனதையும் அந்த இரண்டு கிரகங்களும் வழங்கின. Sun is the authority for body and Moon is the authority for Mind

அது போல அதி முக்கிய கிரகங்களான குரு 7 பரல்களுடனும், சனி 5 பரல்கள் உள்ளார்கள். புதன், சுக்கிரன், இருவரும் 4 பரல்களுடன் சராசரியாக் உள்ளார்கள். செவ்வாயைத் தவிர மற்ற அத்த்னை கிரகங்களும் நல்ல நிலைமையில் உள்ளன.

கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளின் மொத்த பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 1,5,9,4,7,10 = 24+21+21+27+27+31 = 151
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 2 = 169
18 பரல்கள் குறைவாக உள்ளன
--------------------------------
மறைவிடங்களில் (தீய விடுகள்) உள்ள பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 3,6,8,12 = 30+35+32+31 = 128
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 3 = 112
16 பரல்கள் அதிகமாக உள்ளன

தீய வீடுகளில் பரல்கள் அதிகமாக இருந்தால், சாதாரணப் பிறவியாக இருந்தால், சரக்கடித்துவிட்டு டாஸ்மாக் கடை வாசலில் விழுந்து கிடப்பான்.
உயர் பிறவிகள் ஞானிகளாகி விடுவார்கள். துறவிகளாகி விடுவார்கள். சுவாமிஜி துறவியானார்.
-----------------------------------
சராசரி எண்ணான 28 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகள்:
3ல் - 30 பரல்கள்
6ல் - 35 பரல்கள்
8ல் - 32 பரல்கள்
12ல் - 31 பரல்கள்

10ல் - 31 பரல்கள்
11ல் - 33 பரல்கள்

குடும்ப வாழ்க்கைக்கு உரிய 2, 5, 9 ஆம் வீடுகளில் 25, 21, 21 (மூன்றுமே பரல்கள் குறைவாக உள்ளன) மனைவி எப்படியிருந்தாலும் பரவாயில்லை. வ்ருகிறவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் குடும்ப வாழ்க்கை. அதனால் 7ஆம் வீட்டை இக்கண்க்கில் சேர்க்கவில்லை.

அவரை மகான் ஆக்க வேண்டிய, துறவியாக்க வேண்டிய கட்டாயம் காலதேவனுக்கு இருந்ததால், ஜாதகமும் அவ்வாறே ஆமைந்தது. லெளகீக வாழ்க்கைக்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் அடிபட்டுப்போய் விட்டன, ஞான வாழ்க்கைக்கு, யோக வாழ்க்கைக்கு, சந்நியாச வாழ்க்கைக்கு உரிய அம்சங்களே ஜாதகத்தில் மேலோங்கி இருக்கிறது / இருந்திருக்கின்றது.

அவரும் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டுப் போயிருக்கின்றார்.

தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை, அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.
----------------------------------------------------
குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக் கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது. கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்

நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப் போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி முக்தி கிடைக்கும்?

சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

கற்றுக்கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்

Death of Swamiji


His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac.
(பஞ்சாங்கம்) Three days before his death he pointed out the spot for this cremation—the one at which a temple in his memory stands today. He had remarked to several persons that he would not live to be forty.


On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda, a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math.


Vivekananda died at ten minutes past nine p.m. on 4 July 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi. Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes.The doctors remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra — the aperture in the crown of the head — must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had fulfilled his own prophecy of not living to be forty years old.
---------------------------------------------

வாழ்க வளமுடன்!

29.2.12

Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!



Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!

ஒரு காலத்தில தென்காசிக்கு அருகில் உள்ள திருமலைக் கோவில் என்னும் திருக்கோவிலில் ஒரு வேல் மட்டும்தான் இருந்ததாம்.. பூவன்பட்டர் என்ற பெயரை உடைய அர்ச்சகர் ஒருவர் அவ்வேலுக்கு நித்திய பூஜை செய்து வந்தாராம். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவில் வந்து, "இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் அருகில் உள்ள கோட்டைத் திரடு என்னும் கிராமத்தில் சிலை வடிவிலலுள்ளேன். எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியைத் தோண்டினால் நான் கிடைப்பேன். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக" என்று உத்தரவிட்டாராம்.

அந்தப் பகுதியில் அப்போது இருந்த சிற்றரசனுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தாராம்.

பிற்காலத்தில், பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள். கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினர்களாம். இக்கோவிலில் 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், கந்த கோட்டப் பித்ருக்கள் உறையும் தேவ படிக்கட்டுக்கள் என்கிறார்கள். ஆகவே முன்னோருக்கு இங்கே சென்று தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆகவே நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு, சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசலுக்குப் பிறகுகூட பார்ப்பதற்குச் சிலை அழகாக இருந்தது. கிராமத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம். நெல்லை மாவட்ட கிராமங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அது திருமலை முருகனின் பெயர். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.

பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.

சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்புச் செய்தி!

இக்கோயிலில் திருப்பணி நடந்த காலத்தில், கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டனவாம். கனமான பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறுகள் மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டனவாம். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டாம். தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்போது, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட் படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையைக் கொடுத்து உருண்டு வரும் தூணைத் தடுத்து நிறுத்துவாராம்.  மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனைகளை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார் என்பார்கள். மேலும், வாழைமட்டைகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்துச் சென்று கொடுத்துத் திருப்பணிக்கு உதவியுள்ளார். அவருக்கு அக்கோவிலில் சிலை இருக்கிறது.

சிவகாமி அம்மையார், இக்கோவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு அருகில் உள்ள அச்சன்புதூரில் வசித்து வந்தாராம். அவரது கணவரின் பெயர்
கங்கைமுத்து தேவர் அத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் வேண்டினார் சிவகாமி அம்மையார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது.

அவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அதை ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தாராம்.

 மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தாராம் அந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பெற்றார்.
------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 14
விசாக நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 16ஆவ்து நட்சத்திரம்
வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். 
அருள்மிகு திருமலைக் கோவில்
விசாக நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்
-----------------------------
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி கிராமம் - 627 807,
செங்கோட்டை தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவிழாக்கள்:  சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.
இறைவனின் பெயர்: முத்துக்குமாரசுவாமி
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
செங்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.
 
விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கேட்பதைக் கொடுப்பார் முருகப்
பெருமான். அந்த நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!