
ஜோதிடப் பாடம் - பகுதி 40
இன்று கதை கிடையாது. வெறும் பாடம் மட்டும்தான்.
நேற்று பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் கதையின்
தொடர்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வரும்.
உலகில் அனைவருடைய ஜாதமும் சமம்தான். அவனு
டையது உயர்வானது. இவனுடையது மட்டமானது
என்று எதுவும் கிடையாது. எவனும் கொம்புடன்
பிறக்கவில்லை!
அது எவ்வாறு என்பது அஷ்டவர்க்கம் என்னும்
ஜோதிடப் பாடம் நடத்தும்போது உங்களுக்குத் தெள்ளத்
தெளிவாக விளங்கும். அது சற்றுப் பெரிய பகுதி.
அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்த பிறகு
அந்தப் பகுதிக்கு வருவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.
அஷ்டவர்க்கத்தில், எந்தவொரு ஜாதகத்திற்கும் மொத்த
மதிப்பெண் 337 பரல்கள் தான். ஜனாதிபதி பிரதீபா அம்மை
யாருக்கும் 337 பரல்கள்தான். தஞ்சாவூர்ப் பகுதியில் -
வயல் வரப்புகளில் தினக்கூலியாக வேலை பார்க்கும்
வெள்ளைச்சாமிக்கும் 337 பரல்கள்தான்.
முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
கார் டிரைவருக்கும் 337 பரலகள்தான். நடிகை சிநேகா
விற்கும் 337 பரல்கள்தான். அவருடன் திரைப்
படத்தில் உடன் நடனமாடும் அததனை நடனப்
பெண்களுக்கும் (extra actresses) 337 பரல்கள்தான்.
ஒரு நாயர் கடையில் அமர்ந்து, இரண்டு வாழைக்காய்
பஜ்ஜி, ஒரு மசாலா டீ சாப்பிட்டுவிட்டு, ஒரு சிகரெட்
டைப் பற்ற வைத்து வலித்துக் கொண்டு, "லே
ஜாயேங்கே, லே ஜாயேங்கே என்ற பாட்டைக் கேட்ட
வாறு, முகேஷ் அம்பானியின் டிரைவரால் ஆனந்தமாக
ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியும்.
முகேஷ் அம்பாணியால் முடியுமா?
பிரதிபா அம்மையாருக்கு - ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
- Protocol கள் உணடு
தில்லி கனாட் பிளேஸ் சதுக்கம் பகுதிக்குத் தனியாகச்
சென்று ஒரு ரவுண்ட் அடித்துச் சுற்றி விட்டு, ஒரு சாட்
கடைமுன் நின்று ஒரு பிளேட் பேல்பூரி சாப்பிட்டு விட்டு
வரலாம் என்றால் அரசு இயந்திரங்கள் - அவருடைய
பாதுகாப்பை முன்னிட்டு - அதை அனுமதிக்காது.
வெள்ளைச் சாமிக்கு வேறு விதமான பிரச்சினை இருக்கும்.
தன் மனைவிக்கும், மகளுக்கும், தினசரி இரண்டு வேளை
சூடான அரிசிச் சோற்றிற்கு வழி பண்ணக் கூட வருமானம்
இருக்க்காது. அதற்காக அவன் கவலைப் படமாட்டான்.
இருக்கிற கஞ்சியைப் பகிர்ந்து குடித்து விட்டு, வீட்டு வாசலில்
இருக்கும் வேப்ப மரத்து நிழலில், கயிற்றுக் கட்டிலில்
படுத்து நிம்மதியாகத் தூங்குவான்.
ஒருவனுக்கு இருப்பது இன்னொருவனுக்குக் இருக்காது.
இல்லாதவனுக்குக் கிடைத்தது, பொருள் இருப்பவனுக்குக் கிடைக்காது
அதைத்தான் கண்ணதாசன்,
"பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது" என்றார்.
ஒருவன் அழகை ஆராதிப்பவ்னாக இருப்பான். அவனுக்குக்
குரங்குபோன்ற மனைவி வந்து சேர்வாள் (தோற்றத்தில்
அல்லது குணத்தில்) ஒருவனுக்கு கிளி போன்ற மனைவி
கிடைப்பாள். அவன் அவளைப் புறக்கணித்து விட்டுக் குரங்கு
போன்ற பெண்ணோடு தொடர்பு வைத்து, மகிழ்ந்து
கொண்டிருப்பான்.
எல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். முன் வினைப் பயன்.
கடவுள் அங்கேதான் தன்னுடைய கைவண்ணத்தைக்
காட்டியுள்ளார். அவருடைய படைப்பில் அனைவரும் சமம்.
ஆகவே மொத்தப் பரல்களும் சமம்.
பிரச்சினைகள், கவலைகள் எல்லோருக்கும் பொதுவானது.
அவை இரண்டும் இல்லாத மனிதனே கிடையாது.
நமக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்குப் பிரச்சினை
இருக்கும்.அம்பானி களுக்கு அது கோடிகளில் இருக்கும்.
பிரச்சினை பிரச்சினைதான்.
எல்லோருக்கும் ஒரு ஜான் வயிறுதான்.
உடலில் ஒன்பது வாசல்கள்தான்
பணம் இருப்பதற்காகத் தட்டில் தங்கத்தை வைத்துச் சாப்பிட முடியாது!
எல்லா உணவும் தொண்டைவரைக்கும் தான். ஐ.ஆர் 20
அரிசியானால் என்ன? பாசுமதி அரிசியானால் என்ன?
ருசி தொண்டை வரைக்கும்தான். அதற்குப் பிறகு
எல்லா உணவும் ஒன்றுதான்.
ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்ன? பாய் விரித்த
படுக்கை என்ன? தூக்கம் வரும்வரைதான் வித்தியாசம்.
துங்கிவிட்டால் எல்லா இடமும் ஒன்றுதான்.
பணக்காரன் பத்து லட்ச ரூபாய்க் காரில் பயணிப்பான்.
ஏழை இருபது லட்ச ரூபாய் பஸ்ஸில் பயணிப்பான்.
பயணம் ஒன்றுதான். இவனுக்காவது பஸ்ஸில்
உடன் 57 பேர்கள் துணையுண்டு. அவனுக்கு அவனே
துணை. அல்லது வண்டி ஓட்டும் டிரைவர் மட்டுமே துணை.
எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.
சந்தோசம் முற்றிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம்
அல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்
ஜாதகத்தில் பணம் இரண்டாம் வீட்டை வைத்து.
சந்தோசம் ஐந்தாம் வீட்டை வைத்து.
ஆகவே ,ஒரு நாள் பாடத்தை மட்டும் படித்து விட்டு, தனியாக
உட்கார்ந்து குழம்பாதீர்கள். மொத்தப் பாடத்தையும் படித்து
விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்
ஆகவே இந்தத் தொடர் முடிந்த பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்
ஜாதகப்படி மொத்தம் 36 பாக்கியங்கள் (12 கட்டங்கள்
x ஒரு கட்டத்திற்கு மூன்று பாக்கியங்கள் = 36 )
18 பாக்கியங்கள்தான் கிடைத்திருக்கும்.
18 கிடைத்திருக்காது. அவை என்னென்ன?
அதுதான் இனி வரப்போகும் பாடம். ஒவ்வொரு
கட்டமாகச் சொல்லித்தரப் போகிறேன்
இன்று லக்கினம் என்னும் முதல் கட்டம் அல்லது
முதல் வீட்டின் பலாபலன்கள்
-----------------------------------------------------------------
முதல் வீடு.
உடம்பில் தலைப் பகுதி எப்படியோ - அப்படித்தான்
ஜாதகத்தின் முதல்வீடு. அது லக்கினம் எனப்படும்.
1. லக்கினத்தின் அதிபதி யார்?
2. அவர் எங்கே சென்று அமர்ந்திருக்கிறார்.
3. லக்கினத்தின் பெயர் என்ன? அதனுடைய இயற்கைத் தன்மை என்ன?
4. லக்கினத்தில் வேறு எந்த கிரகம் வந்து குடியிருக்கிறது?
5. தனியாகக் குடியிருக்கிறதா? அல்லது வேறு
நல்ல/அல்லது தீயகிரகத்துடன் சேர்ந்து குடியிருக்கிறதா?
6. லக்கினம் எந்தெந்த கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது?
7.லக்கினநாதன் நட்பு, உச்சம் பெற்று மேன்மை
அடைந்துள்ளாரா? அல்லது பகை நீசம் அடைந்து
கெட்டுப் போய் உள்ளாரா?
8.நவாம்சத்தில் லக்கினநாதன் ராசியில் உள்ளபடியான
வலுவுடன்தான் இருக்கிறாரா? அல்லது அங்கே
வலுவிழந்து இருக்கிறாரா?
9. லக்கினநாதனுக்கு திரிகோணம், கேந்திரம் ஆகிய
இடங்களில் அமரும் பாக்கியம் கிடைத்துள்ளதா?
அல்லது இல்லையா?
10. ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய மறைவிடங்
களுக்குரிய (தீய) கிரகங்களுடன் லக்கினாதிபதிக்கு
சேர்க்கை ஏற்பட்டுள்ளதா?
11. லக்கினாதிபதிக்கு அஸ்தமன சோகம் (combust)
ஏற்பட்டுள்ளதா?
12. லக்கினாதிபதியின் திசை நடை பெறுகிறதா?
அல்ல்து எப்போது அது வரும்?
13. லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளன?
14. லக்கினாதிபதி தனது ஆதிபத்தியமாகத் தனித்து
எத்தனை பரல்களுடன் உள்ளார்?
15. லக்கினத்திற்கு அதிபதியான கிரகம் natural benefic planetஆ
அல்லது malefic planet ஆ?
16. லக்கினாதிபதி - பொதுவில் - எதற்குக் காரகன் (authority)?
17.லக்கினத்திற்குரிய செயல் பாடுகள் என்னென்ன?
இப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய விடையைக் கண்டுபிடித்
தால்தான் லக்கினம் எப்படி உள்ளது என்று தெரிய வரும்.
அதேபோல 16 கேள்விகள் x 12 வீடுகள் = மொத்தம்
192 கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான் ஒருவரின்
ஜாதகம் முழுமையாகத் தெரிய வரும்.
அதைத் தெரிந்து சொல்ல குறைந்தது இரண்டு மணி
நேரமாமவது ஆகும் அப்படியெல்லாம் பார்த்துப் பலன்
சொல்ல இப்போது எந்த ஜோதிடருக்குப் பொறுமை
யிருக்கிறது. ஆகவே நீங்கள் கேட்கும் ஒன்று அல்லது
இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு
உங்களை ஒட்டி வீட்டு விடுவார்
அந்தப் பலன்களும் சரியாக நடக்கவேண்டுமென்றால்
அடுத்துள்ள இரண்டு முக்கியம்
1. உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பெற்றிருக்க வேண்டும்
2. அந்த ஜோதிடன் திறமை மிக்கவனாகவும், நல்ல
ஜோதிட அறிவு பெற்றவனாகவும் இருக்க வேண்டும்
அதைவிட முக்கியம், அந்த ஜோதிடனுக்கு, அவன்
ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன்
சொன்னது பலிக்கும். இல்லையென்றால் ஊத்திக் கொண்டு
விடும் (அவன் சொன்னது நடக்காது)
(பாடம் நாளையும் தொடரும்)
பதிவின் நீளம் கருதி, வகுப்பு இன்று இத்துடன் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------
I want feed back. Please send your views about the lesson