மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

2.7.24

Health Tips: அசத்தலான வால்போஸ்டர்


Health Tips: அசத்தலான வால்போஸ்டர்

அவசியம் ஜூம் செய்து பாருங்கள்!




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்




7.4.22

Health Tips உடல் நலம்: தயிரின் மகத்துவம்!





Health Tips உடல் நலம்: தயிரின் மகத்துவம்!

தினமும் கொஞ்சம் தயிர் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்க பெறுகின்றது.

💥 தயிரில் வாழும் பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது. இதனால் 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.

💥 தயிரில் விட்டமின் B-12, கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

💥 தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

💥 தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.

💥 தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.

💥 அசைவ உணவுக்காரர்களால் தயிரை பயன்ப்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால்,சைவர்கள் அசைவம் உண்ணாமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ தயிர்சாதம் 
முழுமையாக உதவுகிறது.🍁

💥 தயிர்சாதத்தை நோயுற்ற காலத்திலும் தொடர்ந்து பயன்ப்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.🍁

💥 தயிர் சாதத்தை  மாங்காய்,எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றின் ஊறுகாய். அப்பளம்,மோர்மிளகு,வத்தக்குழம்பு, சாம்பார், ரசம், Poriyal போன்றவற்றோடு
மாற்றி மாற்றி சாப்பிடும் போது 
பல்வேறு சுவைகளை உணரலாம்.
திராட்சை,மாதுளை,ஆப்பிள்,கொய்யா சேர்த்தும் தயிர்சாதம் தயாரிக்கலாம்.🍁

💥 தயிர்சாதம் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

💥 உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டவர் வாந்தி பேதியில் மரணம்.சிக்கன் சாப்பிட்டவர் மரணம்,
புரோட்டா சாப்பிட்டவர் மரணம்,கேக் சாப்பிட்டகுழந்தைகள் மரணம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், தயிர்சாதம் சாப்பிட்டவர் கவலைக்கிடம் என்று ஒரு செய்தியும்
இதுவரை உலகில் ஒரு மூலையிலும்
வந்ததில்லை இதற்கு காரணம். தயிர் தன்னோடு சேரும் பழைய சாதத்தை கூட அமிர்தமாக மாற்றும் தன்மை
கொண்டது என்பது தான்.🍁
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.3.22

ஆங்கில மருத்துவம் எப்படி செயல்படுகின்றது அவசியம் படியுங்கள்*



ஆங்கில  மருத்துவம்  எப்படி செயல்படுகின்றது அவசியம் படியுங்கள்*

*இத தவறாம படிக்க*

*🎯நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

*🎯உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.*

*🎯ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.*

*🎯கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?*

*🎯பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.*

*🎯சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.*

*🎯கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.*

*🎯ஆங்கில மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்....*

*🎯நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.* 

**அவர்களும் அதற்கு எலிகாய்ச்சல்,  கோழிகாய்ச்சல், பன்றிகாய்ச்சல்,  நாய்காய்ச்சல்  என்று  விதவிதமாக  பேர் வைக்கின்றாா்கள்.* 

**வரும் காலங்களில் சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல் என்று வைப்பார்கள்  போல?*

  **எனவே எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தை புறக்கணியுங்கள்.*

*🍓 ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யோகா , நேட்சுரபதி, ஹோமியோபதி, யுனானி,சித்த மருத்துவம்,இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.*

**நீங்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது மாற்றமே மானுட தத்துவம்*.


குறிப்பு  :-
கார்ப்பரேட் ரசாயன உணவு பொருட்கள் மற்றும் அரசியல் உட்பட மக்கள் தான் நல்லதை முன்னெடுக்க வேண்டும்.....
-----------------------------------
படித்த்தில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.22

தாம்பூலத்தின் மகிமை தெரியுமா?


தாம்பூலத்தின் மகிமை தெரியுமா?

 "வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்"

சமீப காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.
  
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் .... கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ..... முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக .... வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சார சீரழிவும்,அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டே விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது, 

பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலுப் படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.                                     

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே.
--------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.21

நரிப்பயிறைத் தெரியுமா?


நரிப்பயிறைத் தெரியுமா?

நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள நரிப்பயிறு பற்றிய பதிவு

 நரிப்பயிறு என்று பெயர் கேட்டதுமே நிறைய பேருக்கு எப்படி இருக்கும் என்ற ஆவலும் இதென்ன புதுசா ஒரு பயிறு என்று கேட்பவர்களுக்கும் நாம் அடிக்கடி இதனை சாப்பிட்டு உள்ளோம் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

கடைகளில் விற்பனை 
செய்யப்படும் பாம்பே மிக்சரில் 
பச்சைநிறத்தில் பச்சைப்பயறு போல அளவில் சிறியதாக இருக்கும் 
பயிறுதான் நரிப்பயிறு . 

இதனை ஹிந்தியில் மட்கி என்பார்கள்.

நரிப்பயறு ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

நரிப்பயறு என்பது வறட்சியை தாங்கி வளரும் செடி அதேசமயம் இந்த செடிக்கு பூச்சிக்கொல்லிகள் தெளித்து வளர்க்க வேண்டாம். 

இந்த செடிக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி நிறையவே உண்டு.

ஆகவே இயற்கையான முறையில் வளர்ந்த இந்த நரிப்பயிறு உடலுக்கு மிகவும் நல்லது.

நரிப்பயறில் நார்ச்சத்து , புரதம் , கால்சியம் , பாஸ்பரஸ் , மக்னீசியம் , இரும்புச்சத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

1 கப் நரிப்பயறு 282 கலோரி மதிப்பு உடையது. 

கொழுப்பு அறவே இல்லாத ஒரு பயறு. 40.8 கிராம் அளவுக்கு தான் கார்போஹைட்ரேட் உள்ளது.

இதனை முளைக்க வைத்து உண்ணும் போது மிகவும் நல்லது.

நரிப்பயறை முளைக்க வைத்து சாலட்டாக அல்லது பருப்பு மசியல் போல அல்லது பயறு துவையல் என பல்வேறு விதமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நரிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சோறு ஒரு சிறிய கப் உடன் நரிப்பயிறு மசியல் என உண்ணும் போது வயிறு நிரம்பி விடும்.

அதேசமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

நரிப்பயிறு இப்போது சர்வசாதாரணமாக பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் மளிகை கடைகளிலும் 
நாட்டு மருந்து கடைகளிலும்,
கிராமப்புற பகுதிகளிலும் கிடைக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நரிப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நரிப்பயிறு சர்க்கரை நோயை மட்டும் அல்ல இதயக்கோளாறுகளையும் வரவிடாது.

நெஞ்சில் படிந்துள்ள அதிகப்படியான சளிக் கட்டை 
நீக்கி கபத்தைக் குறைக்கும் அற்புதமான உணவு:*நரிப்பயிறு கஞ்சி:*

*தேவையான பொருட்கள்:*

*நரிப் பயிறு - 150 கிராம்,*
*பால் - 150 மி.லி*
*கற்கண்டு - தேவையான அளவு*

*செய்முறை:*

*முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.*

*ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.*

*அதில் வறுத்து உடைத்துள்ள நரிப்பயிறை போட்டு நன்றாக கொதிக்க வைத்து  காய்ச்சவும்.*

*நன்கு காய்ச்சியவுடன் அதில் பால் மற்றும் கற்கண்டை நன்கு தூளாக்கி  இரண்டையும் நன்கு கலக்கி  ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.*

*பயன்கள்:*

*இந்தக் கஞ்சியை நெஞ்சில் அதிக கபம்(சளி) உடையவர்கள்  தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள உன்னதமான கஞ்சி.*

நெஞ்சில் உள்ள சளிக்கட்டு குறைய:

*வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.*

சுவை மிக்க இனிப்பு நரிப்பயிறு உருண்டை:

நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அறைத்து கொள்ளவும். இதுகூட  நன்கு அறைத்து தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை மாவை சேர்த்து கொள்ளவும்

நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்புச் சக்கரைல பாகு காய்ச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்து கொள்ளவும்.

நரிப்பயிறு,பொட்டுக்கடல மாவு கலவையில் அந்த சர்க்கரைப் பாகை சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, ஒரு கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். 
மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்புறம்
கையில தேங்கா எண்ணயத் தொட்டு கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க ஆரம்பிக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான இனிப்பு நரிப்பயிறு உருண்டைகள்  தயாராகி விட்டது.

இது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்பிட்டவுங்களுக்கு மட்டும்தான் தெரியும்

இந்த நரிப்பயிறு இனிப்பு உருண்டைகளை 2 மாதம் வரைக்கும் வச்சு சாப்பிடலாம்,கெட்டு போகாத தன்மை உடையது.

நரிப்பயிறு படம் மேலே!👇👇💚♥️
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.20

கொடிய நோய்க்கு ஒரு நல் மருந்து!



கொடிய நோய்க்கு ஒரு நல் மருந்து!

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்  புற்றுநோய், வாய்புற்றுநோய், குடல்புற்றுநோய் போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்  முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளபட்டு சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் 
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.

இந்த மருந்து நம்ம ஈரோட்டில்உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...

இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்

ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்

நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்

நாம் விரும்பினால் அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்
அதில் காணிக்கை செலுத்தலாம் 

 காலை உணவு மதிய உணவு இலவசமாக வழங்குகிறார்கள் 
அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP
மருத்துவரின்பெயர்
டாக்டர் சிவானந்தம் BSMS
 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள் 
நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்
இங்கு செல்லுங்கள்

அணுக வேண்டிய முகவரி;
அருள் சித்தா கேர்
H.25 ஹவுசிங்யூனிட்
மோலகவுண்டன் பாளையம் பிரிவு பஸ்ஸடாப் 
(கார்மல் ஸ்கூல் அடுத்த ஸ்டாப்)
கொல்லம்பாளையம்
ஈரோடு.638002
பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்
செல்லும்
🦀🦀🦀🦀🦀🦀

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய து*
நோயாளர் பெயர்
ஊர் இவற்றை கீழ்க்கண்ட நம்பரில் வாட்சப்பில் பதிவு செய்து கொள்ளவும் அவர்கள் உங்களுக்கு அப்பாயின்மென்ட் தருவார்கள் தினமும் நூற்று கணக்கான போண் வருவதால் போண்பேசுவதை தவிர்க்கறார்கள்
போணில் ஆலோசனை வழங்குவதில்லை 

PHONE :
☎ முன்பதிவு வாட்சப் நம்பர் 9385941299
📞6382525456

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

frnzz plz pass this msg... to all !

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... 👈👈👈
------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.20

உணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்!!!!


உணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்!!!!

**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**

👽மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

💃சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓நுரையீரல்  & இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🍒வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
🍅கல்லீரல் & மண்ணீரல்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🍓மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

அதாவது நீங்கள் முயன்றால் உணவையே மருந்தாக்கலாம்
-------------------------------------------------------------
படித்ததில் தெளிந்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.20

எலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை!!!


எலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை!!!

ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் நண்பர் செந்தில்குமார் போய்க்கொண்டு  இருக்கும் போது ஒரு காட்டுப்பூனை குறுக்கே வந்து இவரோட வாகனத்தை சாய்த்துவிட்டது.. 

இவருடன் வந்தவருக்கு சாதாரண சிராய்ப்பு 

ஆனா நண்ரோட கால், முட்டிக்கு கீழே உடைந்தது அவரே உணர்ந்துவிட்டார்.

உதவிக்கு வந்தவங்க 108 அவசர ஊர்தி தகவல் சொல்ல அடுத்த அரை மணி நேரத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தாச்சு..

அதன் பிறகு எனக்கு தகவல் வந்து அடுத்தநாள் காலையில் கோவை போனேன் திருப்பூர் தங்கவேல் அண்ணாவுடன்..

ஒரு மாவு கட்டை போட்டு படுக்க வச்சு இருந்தாங்க..

முழங்கால் வீக்கம்..

அறுவை சிகிச்சை செய்தால்தான் சரி செய்ய முடியும்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க..

எவ்வளவு ஆகும்னு கேட்ட போது  2 லகரத்தை தாண்விடும்னு மருத்துவ நிர்வாகம் சொன்னவுடன்தான் நண்பருக்கு கால் வலியைவிட 
மனது வலித்திருக்கிறது..!

நடுத்தர குடும்பத்தை சார்ந்தவங்களுக்கு 2 லகரம் என்பது எட்டாக்கனி..!
அவ்வளவு எல்லாம் செலவு செய்ய முடியாதுனு சொல்லிவிட்டார்..

சரி என்ன செய்யலாம்னு யோசித்த போது எங்க ஊர் சத்தியமங்கலலத்திற்கும்
கோபிச்செட்டிபாளையத்திற்க்கும் இடையில் சிங்கிரிபாளையத்தில் எலும்புமுறிவுக்கு வைத்தியர்கள் இருப்பது நினைவு வந்தது..

மச்சினனை விசாரித்தேன்..பிரசாந்த் என்ற இளைஞர் இருக்காப்லங்க,
நல்ல அனுபவம்னு சொன்னார்..

அதோடு மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பகிரியில் அனுப்ப சொல்லி எண் கொடுத்தார்..

அடுத்த நொடியிலேயே அனுப்பினேன்..

சில நிமிடங்களிலேயே பிரசாந்திடமிருந்து அழைப்பு வந்தது
"அண்ணா முட்டிக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது,
அதே மாதிரி முலங்கையிலும் ஒரு முறிவு இருக்குங்க ணா..
சரி எண்ணெய் கட்டுக்கு சரியாகுமாங்க பிரசாந்?
அண்ணா முதலில் தப்பை வைத்து ஒரு கட்டு,
அடுத்த பதினைந்தாவது நாளில் ஒரு கட்டு,
அதன் பிறகு மாவு கட்டு,
கடைசியாக முட்டை கட்டு போடும் போது எழுந்து நடந்திடுவாருங்க ..
இதுக்கு மொத்தமா 40 நாட்கள் அவர் ஓய்வில் கை கால் அசைக்காமல் இருக்கனும்
நீவும் போது வலியை பொருத்தக்கனும் என்றார்..
பழையபடி எழுந்து நடக்கவைப்பேனு
எந்த நவீன மருத்துவரும் சொல்லாத போது நாட்டு வைத்தியரின் பேச்சு தைரியம் தந்தது..

என்ன செய்யலாம்ங்க என்று நண்பரை கேட்டோம்..
இந்த 50 நாளில் நா இரண்டு லட்சம் சம்பாதிச்சிட போறதில்லை
அங்கேயே போயிடலாம்னு சொல்லாவிட்டர்..

சரி அப்போ மருத்துவமனையிலிருந்து அங்க அழைத்து வந்துவிடவா என்று வைத்தியரை கேட்டேன்..வந்திடுங்க என்றார்..

ஒரு வாடகை வாகனத்தை பிடித்து சிங்கிரிபாளையம் அருகே காசிபாளையத்தில் இருக்கும் வைத்தியசாலை வந்து சேரும் போது இரவு 10 மணி..

கீழே இறக்கி படுக்க வைத்து முறிந்த எலும்பை சரியாக எடுத்து போட்டு 
கை மற்றும் காலுக்கு தப்பை வைத்து கட்டும் போது 11 மணி ஆகிவிட்டது..

அடுத்த 15 ஆவது நாள் கட்டு மாற்றி போடனும்ங்க என்றார் பிரசாந்..

கோவையிலிருந்து இங்கே வாடகை வாகனம் வச்சு வருவது சிரமம்ங்க
வேறு ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க என்றோம்..

சரிங்க அப்போ நானே கோவையில் உள்ள அவர் வீட்டுக்கு போய் கட்டிவிடுகிறேனு சொல்லிவிட்டார்..

இதுவும் நல்ல யோசனைதான் என்று சம்மதித்துவிட்டோம்..

ஒருமாதம் முழு ஓய்வு அசைவு இல்லாமல்..

கடைசியாக ஐம்பதாவது நாளில் முட்டை கட்டை பிரிக்கும் போது வாக்கர் வைத்து நண்பர் நடந்துவிட்டார்..

அடுத்த நான்காவது நாளில் எனக்கு அழைப்பு "தோழர் எங்க இருக்கீங்க?
தோட்டத்தில்தான் ங்க நாங்க சென்பகபுதூர் வாய்க்காலில் குளிச்சுட்டு இருக்கோம் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே வந்திடுவோம் என்று அதே போல வந்தும் விட்டார்.

ஆனால் நாங்க எதிர்பார்த்தது வாகனத்தில் வருவார் என்று..

ஆனா அவர் வந்ததோ மிதிவண்டியில்..!

தோழர் எப்படி ங்க என்றேன்..இவர் என்னோட நண்பர்
நேற்று இரவு திடீர்னு முடிவு சத்தியமங்கலம் சைக்கிளில் போறதுனு
அண்ணனை கேட்டேன் சரி என்றார்.
காலை நாலு மணிக்கு சைக்கிளை எடுத்தோம்.
ஒன்பது மணிக்கு வாய்க்கால் வந்து ஒரு குளியல் போட்டுட்டு 
11 மணிக்கு உங்க தோட்டமே வந்தாச்சு என்றார் அசால்டாக..!

அது தெரியுது தோழர் கிட்டத்தட்ட 80 கிலோ மீட்டர் வந்திருக்கீங்க
அதுவும் அக்னி வெயிலில்..இன்னும் 80 கி மீ போகனும்.
கால் வலியில்லையா என்றேன்..

சத்தியமா சொல்றேன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து
போல்ட், நட் வைத்திருந்தால் கண்டீப்பா இந்தளவுக்கு என்கால் பழைய நிலைக்கு வந்திருக்காது.."எல்லா புகழும் பிரசாந்துக்கே" என்று மதிய உணவை முடித்து விட்டு மதியம் மூன்று மணிக்கு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு 
கிளம்பியவர்கள் இரவு 10:45 க்கு கோவை வடவள்ளி போய் சேர்ந்துவிட்டதாக தகவல் அனுப்பினார்..

அதிலிருந்து உள்ளூரில் யாருக்காவது அடிபட்டால் உடனே நான் பரிந்துரைப்பது பிரசாந்தைதான்..

இப்போது வரை பத்துக்கு மேற்பட்டவங்களை எண்ணெய் கட்டு மூலமாகவே சரிசெய்துள்ளார்..

கிட்டத்தட்ட பத்து ஆண்டு அனுபவம் என்றாலும் கண்களால் பாத்தாலே
என்ன பிரச்சனையை சொல்லி சரியும் செய்துவிடுகிறார்..

இது இந்த பகுதியில் உள்ள பரம்பரை வைத்தியர்களில் எத்தனை பேர் இப்படி திறமையுடன் இருப்பாங்கனு சொல்ல முடியாது..

நண்பருக்கு மொத்த செலவே 11 ஆயிரம் ரூபாய்தான் எண்ணெய் கட்டு போட்ட வகையில்..

இவ்வளவு குறைந்த தொகை வாங்கினால் எப்படிங்க பிரசாந் என்றேன்..?

அண்ணா மாற்று மருத்துவம் தேடி மக்கள் வர ஆரம்பித்து இருக்காங்க..
அதில் 80 சதவீதம் பேர் வசதி இல்லாதவங்க..அலோபதி அளவுக்கே செலவு வைத்தால் எப்படி அவர்களால் தாங்க முடியும்..

எங்க பரம்பரையே வைத்திய பரம்பரைதான். அதனால பணம் முக்கியம் இல்லைங்க.பழையபடி அவர்கள் எழுந்து நடந்து என்னை வாழ்த்தினாலே போதும் பரம்பரையே செழிக்கும்னு சாதாரணமா முடிச்சுட்டாப்லங்க..

85 வயது மூதாட்டியை கூட எண்ணெய் கட்டு மூலமா எழுந்து நடக்க வச்சு இருக்கார் இந்த இளைஞர்..

அதோடு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிந்து வெளியேவே வந்தாலும் கட்டு மூலம் சரிசெய்துவிடுவதாக உறுதி சொல்கிறார்..

லட்சங்களை வாரி அள்ளும் ஆங்கில மருத்துவர்கள் சொல்லாத உத்திரவாதத்தை சில ஆயிரங்களையே கூலியாக பெறும் இந்த நாட்டுவைத்தியர் உறுதியாக சொல்கிறார்..

அதோடு 250 கிலோ மீட்டர் சுற்றவளவுக்கு எலும்பு முறிவு வைத்தியம் பார்க்க வேண்டும் என்றாலும் நேரிலேயே வந்து பார்ப்பதாகவும் சொல்கிறார் பிரசாந்த்..

அவருடைய விலாசம் மற்றும் தொடர்பு எண்,

Prasanth, 
s/o Selvan ,
mariyamman kovil street, 
karatupalayam road kasipalayam.
Gobichettipalayam (tk) 638454..
Contact:+91 78451 99659..

எளிய மக்கள் பயனுரவே இந்த அனுபவத்தை எழுத்தியுள்ளேன்..
முடிந்தவரை பகிர்ந்து மருத்துவ செலவை எளிதாக்க உதவுங்கள்..

நன்றி..
திருமூர்த்தி ..
சத்திமங்கலம்..
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.20

என்ன குறியீடு சாமி அது?



என்ன குறியீடு சாமி அது?

*🌈நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்,,,*🍁

🌈இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.

🌈அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

🌈அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

🌈ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். 

🌈இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.

🌈இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

🌈நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள்.

🌈இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

🌈இந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.

🌈ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்),சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்),ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர். 

🌈இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது,அதாவது செயலற்று போகிறது.

🌈"ஆயில்யம்” என்றால் “பிண்ணிக்கொள்வது” அல்லது “தழுவிக்கொள்வது” என்று பொருள்படும்.

🌈இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும்.

🌈எனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.



-----------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.20

ஒர் எச்சரிக்கை பதிவு*👇👇


ஒர் எச்சரிக்கை பதிவு*👇👇

கடந்த புதன்கிழமை... இரவு ஒன்பது மணி அளவில் காரில் வரும்பொழுது ஆதிரங்கம் அருகில் வெள்ளெருக்கு செடி பார்த்தேன்..
அதன் பூக்கள் எனக்கு தேவைப்பட்டதால் பூக்களைப் பறித்துக் கொண்டேன் எருக்கம் பால்  ஒரு துளி விரல்களில் பட்டிருந்தது... துடைத்து விட்டேன்..

வீட்டுக்கு வந்து சுமார் அரை மணிநேரம் கழித்த பிறகு எதேச்சையாக எனது விரல் கண்களில் பட லேசாக எரிந்தது..

அலர்ஜியாக இருக்குமோ என்ற நினைப்பில் அந்த விரலால் மேலும் கண்களை தேய்க்க எரிச்சல் அதிகரித்தது..

ஒரு கட்டத்தில் ஏதோ விபரீதமாக நடந்து கொண்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது அப்போதுதான் எனக்கு எருக்கம்பால் கையில் பட்டது நினைவுக்கு வந்தது.

கண்கள் சிவந்தது.. தண்ணீரில் அலசினேன் எரிச்சல் குறைந்தது...

உடன் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினாலும்.. கொ ரோனா காலத்தில் திருத்துறைப்பூண்டியில் மருத்துவரைப் பார்ப்பது கடினம் என்பதால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்..

காலை மூன்று மணிக்கு எழுந்த போது.. வலது கண்ணில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன்... பார்வை .. மங்கியது ..

அதிர்ந்தேன்.. முகம் பார்க்கும் கண்ணாடியில் இடது கண்ணை மறைத்தபடி வலது கண்ணால் பார்த்தால் எனது உருவம் தெரியவில்லை..

பார்வை இழந்து விட்டது என்ற நினைப்பே எனக்கு கலக்கத்தை கொடுத்தது.. உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன்..

மறு நாள் புதுமனை புகுவிழா.. இப்படி ஆகிவிட்டது... எல்லோரும் உற்சாகமாக இருக்கும்போது எனக்கு ஒரு கண் பார்வை தெரியவில்லை என்பதை எப்படிச் சொல்வது..

பொழுது விடிந்த பிறகு

அருகே இருந்த டூவீலரில் பதிவு எண்ணை படிக்க முடியவில்லை...

காலை பதினோரு மணிக்கு திருத்துறைப்பூண்டி கண் மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன்.. பரிசோதித்துவிட்டு கண்ணின் கருவிழி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.. கசக்கி போட்ட காகிதம் போல இருக்கிறது என்றார்.....

வலது கண்ணால் எதிரே இருக்கும் எழுத்துக்களை படிக்கச் சொன்னார்..எனக்கு எழுத்துக்கள் இருப்பதே தெரியவில்லை என்றேன்..
பார்வை தற்காலிகமாக போயிருக்கிறது

பயப்பட வேண்டாம் 10நாளில் பார்வை திரும்பி விடும் என்றார் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்... அடிக்கடி போட்டேன்..
இரண்டு நாளில் 100% பார்வை திரும்பியது...

எருக்கன் செடியின் பால் விரல்களில் பட்டு கண்ணில் வைத்ததற்கு இந்த நிலை என்றால்... 

நேரடியாக கண்ணில் பட்டு  இருந்தால்பார்வை இழப்பு தவிர்க்க இயலாது போயிருக்கும்

ஆசிரியர்கள் தங்கள் பள்ளிச் சிறுவர்களை எருக்கஞ்செடி பக்கம் செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

எருக்கன் செடியின் பால் பற்றி எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

கே பாலசுப்பிரமணியன்.
திருத்துறைபூண்டி

இல்லாதவனுக்கும் இழந்தவருக்குமே தெரியும்

இழந்த ஒன்றின் அருமை...

*இனிய காலை வணக்கம்...இந்த நாள் இனிதாகட்டும்
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.20

தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!


தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!

🔔BREAKING NEWS*

*🔷🔶கோவையில் நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என  தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா  தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால்  தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.*

*🔷🔶கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.*

*🔷🔶ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு கம்பெனிகள், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் பணிகளை துவங்கியது. நகைக்கடைகள், நகைப்பட்டறைகளை சேர்ந்தவர்களும் தங்களின் பணிகளை துவங்கினர்.*

*🔷🔶இந்நிலையில், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.*

*🔷🔶இதில், கோவையில் செயல்பட்டும் வரும் தங்க நகைக்கடை ஒன்றில் 58 பேர், மற்றொரு கடையில் 48 பேர், துடியலூர் அருகே செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர் உள்பட 25க்கும் அதிகமானவர்கள், செல்வபுரத்தில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.*

*🔷🔶தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள செல்வபுரம், தெலுங்குவீதி, பெரியகடை வீதி, ராஜவீதி உள்பட பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.*

*🔷🔶கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர்  கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக கோவையில் நகைக்கடைகள், நகைப்பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில் கொரோனா  பரவி வருகிறது.*

*🔷🔶இதனால் தங்க நகைகள் மூலம் கொரோனா பரவுகிறதோ என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு எழுந்துள்ளது.  இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-*

*🔷🔶தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் 10 நாட்கள் வரை கொரோனா கிருமி உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.*

*🔷🔶இதனால் நகைக்கடைகள், பட்டறைகளில் நகையை அனைவரும் தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்புள்ளது.*

*🔷🔶தவிர பட்டறைகளில் நெருக்கமான இடங்களில் அதிகளவிலானோர் பணிபுரிவதால் நோய்த்தொற்று ஏற்படும் இடங்களாக மாறியுள்ளன.*

*🔷🔶திருமணங்கள் உள்பட விசேஷங்களுக்கு நகைகள், துணிகள் எடுப்பதற்காக அருகிலுள்ள திருப்பூர், ஈரோடு உள்பட மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு அதிகளவில் வருகின்றனர். இதன் முலம் அதிகளவு பரவும் வாய்ப்புள்ளது.*

*🔷🔶இதனை தவிர்க்க நகை, துணிக்கடைகள் உள்பட எந்த ஒரு பெரிய கடைகளாக இருந்தாலும் பொதுமக்களை அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது. பொது மக்களை கட்டாயம் கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும்.*

*🔷🔶2 மணி நேரத்துக்கு ஒருமுறை கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரையில் கடைகளில் அதிகளவில் ஆட்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.*

*🔷🔶பொதுமக்களும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே செல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.*
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.20

காது எதற்கு இருக்கிறது - சொல்லுங்கள் பார்க்கலாம்!!!!


காது எதற்கு இருக்கிறது - சொல்லுங்கள் பார்க்கலாம்!!!!

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.!

ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது     
#நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும்  சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

#ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்?  மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

#பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

#ஆனால் மனிதனால் அது முடியும், அவன்  வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா"  திரவத்தினால் தான். 

#ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,

#காது கேட்பதற்கும்  காக்லியா திரவம்  உதவுகிறது,  ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் நம் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

 #10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,

 #முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

#காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?

#அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே நம்மைக் கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.

#அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.
இறைவனின் படைப்பில் அற்புதமே இது.......... அதுமட்டுமல்ல தினமும் காலையில் தோப்புக்கரணம் போடுவது மிகவும் காதுகளுக்கு நல்லது....
----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.20

கடவுளின் அமிர்தம் எது?


கடவுளின் அமிர்தம் எது?

பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது .

இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

ஆனால் இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது.

இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.

பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் அதுதான் பெருங்காயம்.

இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும் தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால் அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும் பெருங்காய டப்பா.

பெருங்காயத்தைப் பற்றி  இந்த தகவல் உங்களுக்கு உபயோகப் படலாம். அதற்காகத்தான் பதிவிட்டேன்

படத்தில் இருப்பது பெருங்காயச் செடி.

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.20

உங்களுக்கு 65 வயது ஆகிவிட்டதா? ஆமாம் என்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!!



உங்களுக்கு 65 வயது ஆகிவிட்டதா? ஆமாம் என்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!!

3 புத்தகங்களை அச்சில் ஏற்றுவதற்கு முயன்று கொண்டிருக்கிறேன். பணிச்சுமை.நேரமின்மை. ஆகவே மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. எளிய ஆங்கிலம்தான் அப்படியே படிக்க வேண்டுகிறேன்

A study in the United States says more than 51% of elderly people fall due to climbing stairs.

 Every year there are 20,000 deaths in the US due to climbing stairs.
 Experts advise that after 65 years of age do NOT do the following 10 actions:

 * 1.  Climbing up the stairs*

 * 2.  Turn too fast / turn around *

 * 3.  Bend over your feet *

 * 4.  Wearing pants while standing *

 * 5.  Sit ups *

 * 6.  Turning the waist left and right *

 * 7.  Step backward*

 * 8.  Bend to lift heavy items *

 * 9.  Suddenly stood up leaving the bed *

 * 10.  Straining / tweezing too hard *

 Share with many people: a movement which annually causes 20,000 people to die in the US.

 After 65 years old  try not to do these 10 actions.

  * THERE ARE 4 KINDS OF SIMPLE KNOWLEDGE *

 1. Food choking.
 2. Wrong pillow.
 3. Leg cramps.
 4. Tingling feet.

 This is knowledge that can help people and themselves.

 How to help as follows:

 1. * SUGGESTION FOR CHOKING ON FOOD *
 You only need to "raise your hands”.
 By raising your hands above your head, the food stuck in your throat will go down by itself.

 2. * WRONG PILLOWS *
  Sometimes when you wake up, you find yourself with a wrong pillow, which is causing pain in the neck.  What to do when the pillow is wrong?  When you feel the pillow is wrong, you only need to lift your feet, then pull your toes and massage in a clockwise or counterclockwise direction.

 3. * FEET CRAMPS *
  When cramping your left leg, raise your right hand high, when having cramp in your right leg, raise your left hand high, it will immediately feel better.

 4. * FOOTNOTES *
  When the left foot is tingling, swing your right palm with all your strength, when the right foot is tingling, swing your left palm with all your strength.

 Don't just save this info.  Please share.  Who knows you can save someone else.

 May be useful..

 * info for pre elderly * 😊
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.20

தேசத் தந்தை தினமும எத்தனை கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார் தெரியுமா?


தேசத் தந்தை தினமும எத்தனை கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார் தெரியுமா?

*மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்.!!*

காந்தியின் ஹெல்த் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அறிக்கை. அதன் சுவாரஸ்யமான சில துளிகள் இங்கே…

காந்தி மிகத் தீவிரமான நேச்சுரோபதி. அதாவது இயற்கை வைத்திய ஆர்வலர் என்கிறார் மருத்துவர் வி.கே.பால். 1939ம் ஆண்டு - அதாவது இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு - எடுத்த மருத்துவப் பரிசோதனையின் படி 46.7 கிலோ இருந்திருக்கிறார்.

காந்தி என்றதும் கையில் தடியுடன் நூறு பேர் பின் தொடர குடு குடுவென்று ஓடும் ஒரு கறுப்பு - வெள்ளை வீடியோ தான் நமக்கு நினைவுக்கு வரும். இப்படி ஓடி ஓடி அவர் இந்தியா முழுதும் 79 ஆயிரம் கிலோ மீட்டர்கள் சுற்றியுள்ளாராம். இது, உலகையே இரண்டு முறை சுற்றி வருவதற்குச் சமம்! ஐந்தரை அடி உயரம் இருந்த மகாத்மாவின் பி.எம்.ஐ 17.1 ஆக இருந்திருக்கிறது. இப்போதைய அளவு கோலின் படி இது போதாமையான ஒல்லியான உடல்வாகு.

ஓயாத அலைச்சல், அரசியல் அழுத்தங்கள் ஆகியவையே அகிம்சைக்கு பி.பியை எகிற வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். 1939 ம் ஆண்டின் ரத்தப் பரிசோதனைகள் படி ரத்தத்தில் சர்க்கரை அளவும் சற்று குறைவாக இருந்துள்ளது. சமச்சீரான உணவுகள், இயற்கையான சிகிச்சைகள், அசாதாரணமான நடை, டீ, காபி, ஆல்கஹால், புகையிலை போன்றவற்றைச் சீண்டாமல் இருந்தது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவரை முதுமையிலும் ஃபிட்டாக வைத்திருந்திருக்கிறது.

காந்தியின் இதயம் இந்தியாவுக்காகத் துடித்தது என்று நமக்குத் தெரியும். ஆனால், அது இறக்கும் வரைக்கும் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறது. 1927ம் ஆண்டிலேயே அவருக்கு பி.பி அதிகமாக இருந்திருக்கிறது. 1939ல் 220/110 என்ற விகிதத்துக்கு எகிறியிருக்கிறது.

மூன்று முறை அவரை மலேரியா தாக்கியிருக்கிறது. மூலத்துக்கான அறுவை சிகிச்சையும், அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். திசுக்கள் அழற்சியும் அவரைப் படுத்தியிருக்கின்றன. ஆட்டுப்பாலும், நிலக்கடலையும் அவரின் ஃபேவரைட் என்று உலகுக்கே தெரியும். ஆனால், இதனால் அவர் உடலில் கொழுப்புச்சத்து எகிறி மரணம் வரை கூட சென்று வந்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தன் வாழ்நாளின் கடைசி நாற்பது வருடங்களில் தினசரி 18 கிலோமீட்டர் நடந்திருக்கிறார் மகாத்மா.

*பகிர்வு*

படித்ததில் பிடித்தது!!!!
--------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.20

கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?


கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?

"டாக்டர்.. டாக்டர்.. நான் கரோனாவிலிருந்து தப்பிக்க எல்லா முயற்சி யும் பண்ணறேன்.. இருந்தாலும் பயமாருக்கு..."

*" என்னெல்லாம் பண்றீங்க"*

"யோகா
+
வாக்கிங்
+
😋லெமன் வாட்டர்
+
மஞ்சள் பொடி கலந்து சூடான பால் சாப்பிட றேன்
+
ச்யவன்பிராஷ் லேகியம்
எடுத்துக்கறேன்
+
முளைகட்டிய தான்யங்கள்
(Sprouts)
+
இஞ்சி
+
கொஞ்சம் பாதாம்
+
அத்திப்பழம் உலர்ந்தது
(காபூல்அத்திப்பழம் பேமஸ்..அது தான்.. டாக்டர்)
+
துபாய் பேரீச்சை
+
கொஞ்சம் dry fruits
எல்லாம் சாப்பிடறேன்
+
கப சுர குடிநீர் குடிக்கறேன்
+
வாயிலே ரெண்டு மிளகு,
லவங்கம்
அடக்கி வைச்சுக்கறேன்
+
மூக்கில ரெண்டு சொட்டு எண்ணெய்
விட்டுக்கறேன்
+
மஞ்சள் பொடி ,உப்பு கலந்து வெதுவெதுப்பான
ஜலத்தில தொண்டை வரைக்கும் படறா மாதிரி
gogle பண்ணறேன்..
+
ஓமம் எல்லாம் போட்டு
ஆவி பிடிக்கறேன்..
+
நாள் பூரா வென்னீர் தான் குடிக்கறேன்
+
பதஞ்சலி நீம்+துளசி மாத்திரை
+கிலோய்(அம்ருதவல்லி) மாத்திரை
எல்லாம் சாப்பிட்டேன்..
கைவசம் வைச்சும் இருக்கேன்..
+
ஹோமியோபதி ல
சொன்னாங்கன்னு
ஆர்சனிக் எல்போ+
கேம்ஃபர் மாத்திரை மாசத்துக்கு 5 நாள்
சாப்பிட்டேன்
+அல்லோபதிலே Hcqc+
Eginthryl+iverameqtin
ஒரு கோர்ஸ் எடுத்து ண்டேன்
+
அப்பறம்..
எப்பவும் முக கவசம்
+
கழுத்தில ஸ்கார்ஃப்
+
சேனிடைசர்லே
ஒரு நாளைக்கு 50தடவையாவது
கை கழுவுவேன்..
+
சாமான்லாம் door delivery தான்
+
Paytm ல தான் பேமெண்ட் எல்லாம்
+
💁♀️வேலைக்காரி கிடையாது.. நான் தான்
பாத்திரம் தேய்க்கிறேன்..
+
வீட்டு வேலை எல்லாம் செய்யறேன்
+
Daily தோய்த்த துணி தான் போட்டுக்குவேன்.. பார்ட்டி, function, எதுக்கும்
போறதில்லை...
+
சாமி கும்பிடறேன்
கை தட்டி, பஜனை பண்ணி சாம்பிராணி போட்டு எல்லாம் பண்றேன்..
+
*கரோனா தேவிக்கு* என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..
ஒரு பாபா கொடுத்த தாயத்து கூட கட்டிக்கிட்டேன்..
+
ஹெல்த் இன்சூரன்ஸும்
டேர்ம் இன்சூரன்ஸும்
எடுத்து வைச்சுண்டிருக்கேன்..
🤔டாக்டர்.. கொஞ்சம் சொல்லுங்க..வேற ஏதாவது விட்டு போச்சா..பண்ணறதுக்கு
🤔
👨🏻⚕️
டாக்டர்:-"போதும்.. போதும்.. 
ஹிரண்ய கசிபு போல
ஆயிட்டீங்க... 
😀உங்களே கரோனா என்ன எமனே எதுவும் பண்ணமுடியாது.. பகவானே இன்னொரு அவதாரம் எடுக்கணும் உன்னை கொண்டு போக..🤭
😂😂😂😂😂
--------------------------------------------------
படித்து ரசித்தது: பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.7.20

கொரோனா வைரஸை ஒழிக்க வீட்டு மருந்து!

கொரோனா வைரஸை ஒழிக்க வீட்டு மருந்து!

கோவை E S I  மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

           *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது.

நாட்டு மருந்து கடைகள் எல்லாம் மூடி இருக்கே,  கபசுரம் கிடைக்கலையே,? நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம்.!!!

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது.

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை.

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

         *இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும்.

 மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

 உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

        *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.இந்த அஞ்சறைப் பெட்டியை அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை  தீர்மானித்தவர் தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு, சித்தர்களின் தலைவர் அகத்தியர்!!!அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன்? என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

        *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள்.

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

      *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

     *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

       வாழ்க வையகம் 💐 அனைவரும் வாழ்க வளமுடன் 💐💐
-----------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.5.20

நீங்களும் நானும் நமது உடல் நலமும்!!!!


நீங்களும் நானும் நமது உடல் நலமும்!!!!

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!!!
Post by Dr ரம்யா

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???* தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿
--------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.20

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?

*தர்ம நெறி *

*அசைவம் சாப்பிடலாமா?*
*ஓஷோ அவர்களின் விளக்கம்*
 
இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                           

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .

*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*

உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*
------------
1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*

2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*

மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?

அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.

*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*
------------------ --------------
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.

இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...

பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...

7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.

ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. *உடலால் மனித பிறவி சைவம்.*
*உயிரால் மனித பிறவி சைவம்.*
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*

*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*

என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.20

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

மருத்துவர் இளங்கோவன் 30 ஆண்டுகள் கால நண்பர். தர்மபுரிக்கு முதன் முதலாக வந்த காலத்திலிருந்து, நன்மையிலும் தீமையிலும் பங்கேற்றவர். தே.மு.தி.கவின் மாநில அவைத்தலைவராக இருக்கிறார்.

ஒரு நாள் (26.11.2019) அதிகாலை ஒரு மணி அளவில், சென்னையை நோக்கி அவரும், அவருடைய நண்பர் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர். சங்கரும் இன்னோவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, முன் இருக்கையில் மருத்துவர் சங்கர் அமர்ந்திருந்தார். நடுவில் இருக்கும் இருக்கையில் மருத்துவர் இளங்கோவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். 

அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருக்கும் சுங்கச்சாவடி முன்பாக நிதானமான போது, பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று காரின் பின்புறத்தில் இடித்தது. இடித்த வேகத்தில் படித்துக்கொண்டிருந்த இளங்கோவன் புரண்டு விழுந்தார். அவர் உடனடியாக எழுந்து, வண்டிக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகளைப் பார்த்தார். லாரி ஓட்டுனரிடம் சண்டையிட்டது மட்டுமல்லாமல், இழப்பீடு குறித்துப் பேசி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

மீண்டும் இன்னோவா வாகனத்திலேயே சென்னையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வண்டி புறப்பட்டவுடன் இளங்கோவன் "தலை கொஞ்சம்  வலிக்கிறது. சிடி ஸ்கேன் செய்து பார்த்து விடலாமா?" என்று கேட்டார்.

மருத்துவர் சங்கர் 'சரி' என்றுச் சொல்லி சிறிதுத் தொலைவில் இருந்த சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இளங்கோவன் காரிலிருந்து இறங்கி சிடி ஸ்கேன் அறைக்கு நடந்து  சென்றார்.

சிடி ஸ்கேனில் மண்டைக்குள், மூளையைச் சுற்றி சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. உடனே மருத்துவர் சங்கர் சென்னையில் இருக்கும் அவருக்குத் தெரிந்த மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரைத் தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுவரச் சொன்னார்.

அப்பொழுது இளங்கோவனுக்கு கொஞ்சம் வாந்தி வந்தது. லேசாகத் தலைச் சுற்றுவது போல இருந்தது. எனவே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். வண்டி போகப் போக இளங்கோவனுக்கு மயக்கம் அதிகமானது. மருத்துவமனையை நெருங்கும்போது முழு நினைவையும் இழந்தார். சிம்ஸ் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் வாயிலிலேயே காத்திருந்த மூளை நரம்பியல் மருத்துவர் சூரியபிரபு  நோயாளியை உடனடியாக அறுவை அரங்கத்துக்கு மாற்றச் செய்தார்.

எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் நேரடியாக கொண்டுச் செல்லப்பட்ட நோயாளிக்கு, தலையில் இருக்கும் மயிரை அகற்றுவது கூட அறுவை அரங்கிலேயே செய்யப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சைத் தொடங்கியது. மண்டை ஓட்டிற்குள் மூளையைச் சுற்றி இருந்த 300 மில்லி ரத்தம் அகற்றப்பட்டது. ரத்தக் கசிவு காரணமாக இருந்த ரத்தக்குழாய் கண்டறியப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது. மிகப் பெரிய ஆபத்திலிருந்து மருத்துவர் இளங்கோவன் தப்பினார்.

அவருடன் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத்துவர் சங்கர் இல்லாமலிருந்தால், சவிதா மருத்துவமனையிலிருந்து சிம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஏதேனும் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டிருந்தால், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சூரிய பிரபு அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வராமலிருந்தால், அறுவை அரங்கம் வேறு ஒரு அறுவை சிகிச்சை காரணமாக உடனடியாகக் கிடைக்காமல் இருந்தால்..... இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தாலும் விளைவு விபரீதமாக இருந்திருக்கும். சரியான நேரத்தில் ஆபத்து கண்டறியப்பட்டு, மிகச் சரியான நேரத்தில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நடந்த விபத்து மிகச்சிறிய விபத்து. யாருக்கும் பெரிய வெளிக்காயம் கிடையாது. விபத்துக்குப் பின்னர் வாகனம் உடனடியாக ஒட்டப்பட்டது. இந்தச் சிறிய விபத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அளவுக்கான காயத்தை ஏற்படுத்தியதன் காரணம், ஏற்பட்ட காயம் தலைக்காயம் என்பது தான்.

சீட் பெல்ட் அணிவது உயிர் காக்கும் என்பதற்காகத்தான் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  வளர்ந்த நாடுகளில், காரில் இருக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். குழந்தையாக இருந்தால், குழந்தைக்கான சீட் பெல்ட் உள்ள இருக்கையில் இருக்க வைக்க வேண்டியது கட்டாயம். நம் நாட்டில் ஓட்டுனரும், ஓட்டுனருக்கு அருகில் இருப்பவரும் சீட் பெல்ட் அணிவது மட்டுமே கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இளங்கோவன் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்து இருந்தால் இந்த விபத்தினால் சிறு காயம் கூட ஏற்பட்டிருக்காது.

அவர் சீட் பெல்ட் அணியாமல் படுத்து இருந்ததுதான் ஆபத்தை ஏற்படுத்தியது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கச் செயலாளராக இருந்த அறிவுச்செல்வன் இதேபோல பின்னிருக்கையில் படுத்திருந்த காரணத்தினால்தான் சிறிய விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தர்மபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆனந்தகுமார், பின் இருக்கையில் படுத்துக் கொண்டு பயணம் செய்த போது, இதேபோல பின்னால் வந்த வாகனம் மோதி, கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்து சில ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார்.

இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது உலகத்திலேயே மிக ஆபத்தானது. சாலை அமைப்புகள், குறியீடுகள் ஆகியவற்றில் மிகப்பெரிய தவறுகள் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன்.
ஆனால் சாலைப் பயணமில்லாமல் இந்த நூற்றாண்டில் வாழவே முடியாது.

முடிந்தவரை சாலைப் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற, கவனத்துடனும் பொறுமையுடனும் செல்வது அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். இரயில் பயணம், சாலைப் பயணத்தை ஒப்பிடும்போது பலமடங்கு பாதுகாப்பானது.

எல்லாவற்றையும்விட, வாகனத்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். படுத்துக்கொண்டு போவது எந்த விதத்திலும் பாதுகாப்பில்லாதது.

தலைக் காயங்கள் சில மணித்துளிகளிலேயே மரணம் தரக்கூடியவை. இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவது தற்கொலை முயற்சி என்றே கருதப்பட வேண்டும்.

https://www.youtube.com/watch?v=y3InF19dzlM
https://www.youtube.com/watch?v=s-ARAkG3oPE

ஆக்கம்:
மருத்துவர் இரா. செந்தில்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்
27.11.2019, இரவு. 9.00 மணி
-------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!