மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.5.20

ஜாதகத்தில் அவரின் பெயர் பாதகாதிபதி!


ஜாதகத்தில் அவரின் பெயர் பாதகாதிபதி!

1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
சர ராசிகளுக்கு 11ஆம் அதிபதி பாதகாதிபதி
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் அதிபதி பாதகாதிபதி
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
உபய ராசிகளுக்கு மூன்றாம் ஆசாமி இல்லை. 7ஆம் அதிபதியே பாதகாதிபதி
-----------------------------------------------------------------
இந்தப் பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறு எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள்

=============================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.5.20

கொரோனாவிற்குப் பிறகு நமது எதிர்காலம்!!!!


கொரோனாவிற்குப் பிறகு நமது எதிர்காலம்!!!!

*வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று*

*கொரானாவுக்கு பிறகு*

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள், அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

🚗 துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் - யு.ஏ.ஈ. ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

🚔 சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர்.

🚌 இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்க உள்ளார்கள்.

💰 எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும்.

💪 வேலை இழந்து வருபவர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான்.

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள்.

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன் பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாக வும் ஆகிவிடுவீர்கள்.

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான்

12. வெளிநாடுகளில் சம்பாதித்து விட்டு வேலை இழந்து ஊர் திரும்பும் சிலரிடம் நல்ல சேமிப்பு இருக்கலாம். அதை அறிந்து சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் முள்ளு செடியும், கள்ளி செடியும் வளர்ந்த வனாந்திரத்தை காட்டி இப்போது இதை வாங்கிப் போடுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் டபுள் விலைக்கு போகும் என்று ரீல் விடுவார்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் ஆனாலும் போட்ட காசில் பாதி கூடக் கிடைக்காது

13. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள்

14. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

15. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள்.

16. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

*17. அவசியம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை  இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காசு கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் நமக்கு பிறகு நமது குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும்.*

18. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

19. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

20. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

21. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

22. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்😊

*ஆக சிக்கனம் தேவை*
--------------------------------------
படித்து உணர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.5.20

ராமேஸ்வரம் கோவிலின் அருமையும் பெருமையும்


ராமேஸ்வரம் கோவிலின் அருமையும் பெருமையும்

புனித ராமேஸ்வரம்

*  16  ஏக்கர் பரப்பளவில், கிழக்கு-மேற்காக 865 அடி, தெற்கு-வடக்காக 657 அடி நீளத்தில் மதில் சுவர்களைக் கொண்டிருக்கும் இக்கோவிலை ஆரம்பகாலத்தில் தீர்த்தப் பெருமைகளுக்குரியதாக மட்டுமே மக்கள் போற்றி வந்துள்ளனர்;

அப்போது ஆலயமாக உருப்பெறவில்லை. ஏனென்றால், இங்கே ஆலயம் அமையுமானால், தீர்த்த நீராலுக்கு அது தடையாகலாம் என்று மன்னர்கள் கருதியிருக்கிறார்கள். பின்னர் ஆட்சி புரிந்த சேதுபதிகள் தீர்த்தங்களை மறைக்காமலும், தீர்த்த நீராடலுக்கு பாதிப்பு வராத வகையிலும் ஆலயத்தை வடிவமைத்து கோபுரங்களைக் கட்டினர்.

*  ஆலயத்தின் முகப்பில் இருக்கும் அனுமனின் திருமேனி வித்தியாசமானது - இடுப்பு வரை மட்டுமே வெளியில் தெரிகிறது. முகம் பெரியதாய் வீங்கி சிவந்தும், கண்களும், வாயும் சிறுத்து அமைந்திருக்கின்றன. சாதிலிங்கக் குழம்பால் பூசப்பட்டிருக்கும். அனுமனின் இவ்வடிவத்தை விஸ்வரூப அம்சமாகக் குறிப்பிடுகின்றனர். இக்கருவறைக்குள் மழைக்காலத்தில் நீர் உயர்ந்தும், மற்ற காலங்களில் நீர் இன்றியும் இருக்கிறது.

*  ராமேஸ்வர ஆலய மூன்றாம் பிராகாரம் உலகப்புகழ் பெற்றது. முத்துராமலிங்க சேதுபதியால் கட்டப்பட்டது. கி.பி.1740 ல் தொடங்கி முப்பது ஆண்டுகள் இப்பிரhகாரம் கட்டும் பணி நடைபெற்றது. கிழக்கு-மேற்கில் 690 அடியும், வடக்கு-தெற்கில் 435 அடியும் கொண்டு பிரமாண்டமாய் விளங்குகிறது. முக்கிய சந்நதிகளைச் சுற்றி, கிழக்கு-மேற்காக 117 அடி, வடக்கு-தெற்காக 172 அடி நீளம் கொண்ட பிராகாரம் 17 அடி அகலத்தில் விசாலமாக விளங்குகிறது. இந்த பிராகாரங்களை உள்ளடக்கிய மூன்றாம் பிராகாரம் நான்காயிரம் அடி சுற்றளவு கொண்டது. இருபுறமும் 23 அடி உயரம் கொண்ட தூண்கள் கம்பீரமாக நிற்கின்றன. தூண்களை ஒட்டி சுமார் முப்பது அடி அகலம், ஐந்து அடி உயரத்தில் நீண்ட திண்ணை அமைந்திருக்கிறது. மொத்தம் 1212 தூண்கள், ஒரே நேர்வரிசையில், ஒன்றையொன்று மறைக்காத வகையில்! ஒவ்வொரு தூணிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள். உப்புக் காற்றால் தூண்கள் பழுதுபட ஆரம்பித்ததால், ரசாயனப் பூச்சு பூசி அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். அவற்றில் இரண்டு தூண்கள் மட்டும் இன்றும், பாரம்பரியத் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிகநீண்ட நடைபாதை (CORRIDORS) எனப் புகழ் பெற்றது. 1973ம் ஆண்டில் இச்சுற்றின் மேற்குப்பகுதியில் தீப்பிடித்து மேல்தளம் சேதமுற்றது. இதன் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு 1975 ல் குடமுழுக்கு நடைபெற்றது.

* மூன்றாம் திருச்சுற்றில் வீற்றிருக்கும் நடராஜ சந்நதி விமானம், நேபாளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. ராமநாதருக்கு அபிஷேகம் செய்த 1,25,000 ருத்திராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டது. முன்பகுதியில் நடராஜர் சிவகாமி அம்மையாரோடு வீற்றிருக்க பின்பகுதியில் பதஞ்சலி தனி சந்நதி கொண்டிருக்கிறார். பதினெண் சித்தர்களில் பதஞ்சலிக்கு உரிய தலம் ராமேஸ்வரம்!

* பிராகாரங்களின் மொத்த நீளம் 3850 அடியாகும். கிழக்கு ராஜ கோபுரம் 126 அடி உயரம், 9 அடுக்கு, 9 கலசங்கள் கொண்டது. மேற்கு ராஜ கோபுரம் 78 அடி உயரம்,  5 அடுக்கு, 5 கலசங்கள் கொண்டது. 1925, 1947 மற்றும் 1975ல் இக்கோயில் கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நிகழ வேண்டும் என்ற நியதி, ராமேஸ்வரம் ஆலயத்திற்கு பொருந்தாமல் போனதாலேயே வட, தென் கோபுரங்கள் மொட்டையாக இருப்பதாய் சொல்லப்படுவதுண்டு.

* ஆலயத்தில் வெள்ளிரதம் உள்பட மொத்தம் 25 வாகனங்கள் உள்ளன.

* தனுஷ்கோடி என்ற முழு ஊரே அழிந்து போகும் படியாக 1964 டிசம்பர் 23 ல் அடித்த புயலால் ராமேஸ்வரம் நகரம் சேதமடைந்தாலும் ராமநாத சுவாமி ஆலயம் சேதமடையவில்லை.

* காசி யாத்திரையை முறையாகத் தொடங்கி அதை நிறைவு செய்யும்வகையில் ராமநாதருக்கும், விசுவநாதருக்கும் அபிஷேகம் செய்ய, கங்கை தீர்த்தத்தோடு வருவோரை மேளதாளங்கள் முழங்க, நடன மாதர்கள் ஆடியபடி மரியாதை தெரிவிக்க, பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது. ஆனால் இன்று வட இந்தியர்கள் நாள்தோறும் கங்கை தீர்த்தத்தைக் கொண்டு வருவதாலும், கங்கையிலிருந்து கொண்டு வரவேண்டிய தீர்த்தத்தை ஆலயத்திற்குள்ளேயே குப்பிகளில் அடைத்து விற்பனை செய்வதாலும் அந்த வழக்கம் தற்போது வழக்கொழிந்து போனது.

* ராமரின் பிரதிஷ்டைக்கான சிவலிங்கத்தை சீதை இங்குள்ள மண்ணைக் கொண்டு செய்ததால், உழவுத் தொழிலும், மண்பாண்டம் தயாரிப்பு போன்ற தொழிலும் ராமேஸ்வரத்தில் இல்லை. அதேபோல, ராமலிங்கத்தின் முகப்பை போலவே செக்கின் முகப்பும் இருப்பதால் இங்கு செக்கு மூலம் எண்ணெய் எடுப்பதில்லை. இத்தொழில்களைச் செய்வது தெய்வ குற்றமாகவே கருதப்படுகிறது!

*  பாரம்பரியமாக இக்கோயிலில் பூஜைகள் செய்பவர்களைத் தவிர ராமலிங்கத்தை தொட்டு பூஜை செய்யும் உரிமை ஸ்ரீ சிருங்கேரி சன்னிதானம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள், ராமபிரானின் குலத் தோன்றலாக கருதப்படும் நேபாள மன்னர் ஆகிய மூவருக்கு மட்டுமே உண்டு.

* அந்நியப் படையெடுப்புகளுக்கு ஆலயங்கள் தப்பியதில்லை என்பது வரலாறு. அதற்கு ராமேஸ்வரம் கோயிலும் விதிவிலக்கல்ல. டச்சுக்காரர்கள் இவ்வாலயத்தைத் தாக்கி கொள்ளையிட முயல்வதை அறிந்த தாயுமானவர், தன் தவச்சாலையில் இருந்து வெளியேறி இளைஞர்களையும், வீரர்களையும் திரட்டி படைத்தளபதியாய் மாறி அவர்களை எதிர்த்தார். மாலிக்காபூர் படையெடுப்பையும் இவ்வாலயம் எதிர் கொண்டது.

* 1935ம் ஆண்டு ஐந்தாம் ஜார் மன்னரின் முடிசூட்டு  வெள்ளி விழா ஆண்டின்போது ராமேஸ்வரம் கோயில் ஓவியத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

* வைகாசி விசாகத்துடன் முடியும் பத்து நாள் வசந்த விழா, சுக்லசஷ்டியில் தொடங்கி மூன்று நாள் நடைபெறும் ஆனிமாத ராமலிங்க பிரதிஷ்டை விழா, தேய்பிறை அஷ்டமி முதல் பதினேழு நாள் நடைபெறும் ஆடி மாத திருக்கல்யாண உற்சவ விழா, பத்து நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத நவராத்திரி விழா, ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா, பத்து நாட்கள் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா போன்றவற்றோடு சித்திரை பிறப்பு, பெரிய கார்த்திகை, சங்கராந்தி, தைப்பூச தெப்பம், வைகுந்த ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விழாக்களும் கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய வாகன வசதிகளால் ராமேஸ்வர யாத்திரையை ஒரே நாளில் முடித்துவிட்டுத் திரும்பி விடமுடியும். இருப்பினும் சிறப்பு மிக்க ராமேஸ்வர ஆலய விழாக்களில் ஏதாவது ஒன்றை அங்கு தங்கி, கண்டு, ரசித்து அந்நாளில் இறைவனை தரிசித்தால் ராமர் மற்றும் ஈசனின் அருளைப் பெறலாம். எனவே இறையருளை பரிபூரணமாகப் பெறும் வகையில் ராமேஸ்வர யாத்திரை பயணத்தை அமைத்துக் கொள்வது சிறப்பாகும்.
-------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.20

சுஜாதாவின் குதிரை வண்டிக் கதை!!!!


சுஜாதாவின் குதிரை வண்டிக் கதை!!!!

*ஒரு சாதாரணமான சம்பவத்தை இவ்வளவு சாமர்த்தியமாக, சுவாரஸ்யமாக, ஹாஸ்யமாக சஜாதாவைத்தவிர வேறு யாராலும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்*

Sujatha’s beautiful  story ! குதிரை வண்டி 🐎🐎

A story of 1965.....🐎

நாங்கள் பயணிக்கும் ரயில் (meter gauge) திருவாரூரை நெருங்கிக் கொண்டிருக்கும்......

ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவி இஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டை டிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும்.

பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார். மாடு ஏகமாய் உச்சா போவது போல சிலிண்டரிலிருந்து நிறைய சுடுநீர் கொட்டும். ரயில் ஒரு வழியாக ப்ளாட்பாரத்தில் நிற்கும்.

மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு இறங்குவோம். பெரியவர்களுக்கு மட்டும் தான் வாசல் கதவு வழியாக இறங்கும் பாத்யதை உண்டு. லக்கேஜ்கள் எல்லாம் ஜன்னல் வழியாகவே இறக்கப்படும்.

அந்தக் காலத்து கம்பார்ட்மெண்ட் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது. அது Windows டெவலப் ஆகாத காலம்.

லக்கேஜ்கள் ஜன்னல் வழியாக இறக்கப்பட்டதும் என்னைப் போன்ற பொடிசுகளும் ஜன்னல் வழியாகவே இறக்கப்படுவார்கள்.

இதற்காக ரயில் உள்ளே ஒரு Giver இருப்பார். ப்ளாட்பாரத்தில் ஒரு Taker இருப்பார். நம் குடும்பத்தைச் சாராத மூன்றாம் நபர் கூட இந்த Give and take policy ல் இணைவார்.

லக்கேஜ்கள் எண்ணப்படும். கை கால் முளைத்த லக்கேஜ்களுக்கும் Numbering system உண்டு. பித்தளைக் கூஜாவுக்கு நம்பர் கிடையாது. அது Hand luggage.

அப்போதெல்லாம் பயணத்தின் போது படுக்கை கண்டிப்பாக இருக்கும். அதன் உள்ளே தான் துணிமணிகளை சுருக்கம் சுருக்கமாய் அள்ளிப் போட்டு சுருட்டியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு படுக்கப் போட்டிருக்கும் லாண்டரி பேஸ்கட்.

படுக்கையை கயிறு போட்டு கட்டியிருப்பார்கள். யூனியன் ஜேக் கொடி மாதிரி ப்ளஸ், பெருக்கல் இரண்டுமே அதில் இருக்கும்.

ஜெமினி கணேசன் மாதிரி பிஸ்தாக்கள் மட்டும் தான் வலது தோளில் ஹோல்டாலை கோணலாக சாய்த்துக் கொண்டு ரயிலிலிருந்து இறங்குவார்கள். எங்களுக்கு எல்லாம் பவானி ஜமக்காளம் தான் ப்ராப்தி.

இது நாள் வரை அந்த ஹோல்டாலை எப்படி பேக் செய்கிறார்கள் என்றே எனக்கு புரிபடவில்லை. அதை மடிப்பதும் சுருட்டுவதும் ஒரு கலை. ஹோல்டாலுக்குள் நம் ஜட்டி பனியன்கள் எல்லாம் தலையணை அவதாரம் எடுத்திருக்கும் என்று மட்டும் தெரியும்.

அப்பாவும் அம்மாவும் முன்னால் போவார்கள். பின்னால் கோழிக்குஞ்சுகள் மாதிரி நாங்கள். ஒரே வித்தியாசம். கோழிக்குஞ்சுகளுக்கு மண்டையில் முடி இருக்கும். எங்களுக்கு நாட் அலோவ்ட். முடி உச்சவரம்பு சட்டம் அமுலில்
இருந்த காலம் அது.

வெளியே நான்கு குதிரை வண்டிகள் காத்துக் கொண்டு நிற்கும். எங்களைப் பார்த்ததும் ஒரு குதிரை வண்டி முன்னால் வரும். குதிரை வண்டிக்காரர் கையில் இருக்கும் குச்சி முப்பது டிகிரி கோணத்தில் ஏதோ சேட்டிலைட்டை சுட தயாராக இருப்பது போல ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கும்.

“அய்யா.... ஏறுங்கய்யா” என்பார் வண்டிக்காரர். அவரை இனி கோவிந்து என அழைப்போம்.

எங்கே போக வேண்டும் என்று கேட்க மாட்டார். மேட்டு தெரு MGR வீடு என்றால் அந்த சின்ன ஊரில் அனைவருக்கும் தெரியும். எனக்குத் தான் MGR என்றால் என்னவென்று புரியாமல் இருந்தது.

வண்டிக்குக் கீழே பன்னியை கட்டித் தூக்கிப்போகும் வலை மாதிரி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். குதிரைக்குண்டான புல் அதில் தான் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். கோவிந்து குதிரைக்குப் புல் போட்டு நான் பார்த்ததில்லை. ஏதோ statutory requirements க்காக அந்த புல் பேங்கை வைத்திருக்கிறார் என்று தோன்றியது.

அந்த புல்களுக்கு மேல் படுக்கை மற்றும் இதர சாமான்களை வைப்பார் கோவிந்து. இதன் விளைவாக வீட்டுக்குப் போனவுடன் பல புல்லரிக்கும் சம்பவங்கள் நடக்கும்.

வண்டிக்கு உள்ளே ஒரு லோ பட்ஜெட் மெத்தை இருக்கும். இங்கும் புல் தான். மேலே சாக்கு போட்டு மூடியிருப்பார்கள்.

புல் ஒரு சம்பிராதாயத்திற்குத் தான் இருக்கும். கவாஸ்கர் வண்டியில் ஏறினால் There is little amount of grass and it may assist passengers என்று பிட்ச்
ரிப்போர்ட் கொடுத்து விடுவார்.

கோவிந்து எங்களையெல்லாம் கண்ணாலேயே எடை போடுவார். சாக்கில் யார் உட்கார வேண்டும் என்று அவர் சாக்ரடீஸ் மூளை வேலை செய்யும்.

பொதுவாக பெண்களுக்குத்தான் சாக்கு அலாட் ஆகும். ஏனென்றால் இந்த சாக்கு சறுக்காது. அது ஒரு Safe zone.

கால் வைத்து ஏற பின் பக்கம் ஒரு படி இருக்கும். உள்ளங்கை சைஸுக்குத் தான் இருக்கும். ஏகப்பட்ட பேர் கால் வைத்து வைத்து உள்ளங்கை ரேகை முழுக்க அழிந்து போயிருக்கும். கால் வைத்தால் வழுக்கும். வழுக்கை வீழ்வதற்கே என்று பயமுறுத்தும்.

ஒரு வழியாக பெண்கள் முதலில் ஏறுவார்கள். சாக்கு மெத்தையில் உட்காருவது ஒரு கலை. அந்த காலத்து பெண்கள் Table mate மாதிரி. பதினாறு வகைகளில் மடங்குவார்கள். ஒரு குக்கர் கேஸ்கட் அளவே உள்ள வட்டத்துக்குள் கூட கால்களை மடக்கி உட்காரும் அளவுக்கு Flexibility வைத்திருந்தார்கள்.

ஒரு பெண்ணுக்கு எதிரே பொதுவாக இன்னொரு பெண்ணே உட்கார வைக்கப் படுவார். பொதுவாக மாமியாரும் மருமகளும்தான் எதிர் எதிரே உட்காருவார்கள்.

மருமகளுக்குத் தான் பிரச்சினை. கால் மாமியார் மேல் படாமல் உட்கார வேண்டும். வாஸ்து புத்தர் மாதிரி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு
உட்கார வேண்டும். அடுத்து பாட்டி ஏறுவார். பாட்டி நிறைய மடி பார்ப்பார். ஆனால் உடம்பு தான் மடியாது. கஷ்டப்பட்டு உட்காருவார். பாட்டி மீது எல்லோரும் படுவார்கள். வேறு வழியில்லை. அரை மணி நேரத்துக்கு
மடி விலக்கு கொள்கையை அமுல் படுத்துவார் பாட்டி.

வண்டிக்கு மத்தியில் ஜன்னல் இருக்கும். ஏழு இஞ்ச் ஸ்க்ரீன் செல்போன் சைஸுக்குத்தான் இருக்கும் அந்த ஜன்னல்.

அதன் வழியாகப் பார்த்தால் கும்பகோணம் பாத்திரக்கடை என்ற கடையின் பெயர்ப் பலகை முழுதாகத் தெரியாது. எந்த கோணத்தில் பார்த்தாலும் கோணம் மட்டும் தான் தெரியும்.

குதிரை பாட்டுக்கு ஒரு ப்ளாஸ்டிக் ஸ்டூல் மாதிரி ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும். வண்டியின் உள்ளே ஆட்கள் ஏறியதும் குதிரையின் கால்களுக்கு லோட் டிரான்ஸ்பர் ஆகும். கால்கள் உதறும். சில சமயம்
வண்டி முன்னால் கூட போக ஆரம்பிக்கும்.

இதைத் தவிர்க்க வண்டியைக் கையினால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு Hand brake போட்டுக் கொண்டு நிற்பார் கோவிந்து.

“ஏண்டா... அந்த குதிரையை கெட்டியா பிடிச்சிக்கோடா” என்று அலறுவார் பாட்டி.

பாட்டி எல்லோரையும் வாடா போடா என்று தான் கூப்பிடுவார். எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் டா தான். அவருக்கு அந்த Civil liberty உண்டு.

இரண்டு சுமாரான பையன்களை பின்னால் உட்கார வைப்பார் கோவிந்து. குறுக்காக ஒரு கம்பியைப் போடுவார். Location sealed என்று அதற்கு அர்த்தம்.

பின்னால் உட்காருவதில் ஒரு செளகரியம் உண்டு. காலைக் கீழே தொங்கப் போட்டுக் கொள்ளலாம். வேடிக்கை பார்க்கலாம். பிற்காலத்து ஃபிகர்களுக்கு டாட்டா காட்டலாம்.

தெருவோரத்து மரங்களும் ஓட்டு வீடுகளும் ரிவர்ஸில் போவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும்.பின்னால் ஆட்கள் ஏறியவுடன் வண்டி பின்நோக்கிச் சாயும்.

இந்த சமயத்தில் தான் ‘டேய் கடன்காரா’ என்ற திட்டு பாட்டியிடமிருந்து கிளம்பும். பாவம். இவ்வளவுக்கும் கோவிந்துவுக்கு எந்த கடனும் இருக்காது. அவனால் எந்த பேங்குக்கும் NPA ஏறியதில்லை.

கோவிந்து ஒரு ரவுண்டு அடித்து பின்னால் வருவார். கொஞ்சம் உள்ளே போங்க... தம்பி காலை இப்படி நீட்டு என்று சில Balancing acts செய்வார்.

பிறகு அப்பா முன்னால் ஏறி உட்காருவார். முன்னால் உட்காருவது மிகவும் கடினம். அப்பாவின் ஒரு தொடை வண்டிக்குள்ளும் இன்னொரு தொடை முன்னால் இருக்கும் சட்டத்தின் மீதும் இருக்கும். அப்பா தொடை
நடுங்கியாக வந்து கொண்டிருப்பார்.

அப்பா பக்கத்தில் என்னைத் தூக்கி வைப்பார்கள். முன் இருக்கை. வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

எனக்குப் வலது பக்கத்தில் கோவிந்து உட்காருவார்.

“தம்பீ... நகந்து உட்காரு. காலை கீழே போடு” என்பார்.

காலை கீழே போட்டதும் தான் நமக்கு பிரச்சினை ஆரம்பிக்கும். குதிரைக்கு வால் நீளமாக இருக்கும். அதில் முடிவில்லாமல் முடி இருக்கும்.

திரெளபதி மாதிரி குதிரையும் ஏதோ சபதம் செய்திருக்க வேண்டும். முடியை முடியாமல் தொங்கப் போட்டுக் கொண்டே வரும். அந்த முடி நம் காலில் பட்டு கிச்சுக்கிச்சு மூட்டும். சில சமயம் குத்தும்.

குதிரையின் வால் முடியில் இயற்கையிலேயே முள் உண்டா என்று நமக்கு சந்தேகம் வரும்.

முதலில் வண்டி பர்ஸ்ட் கியரில் மெதுவாகத் தான் போகும். திடீரென்று கோவிந்து தன்னை மறப்பார். குச்சி எடுத்து குதிரையை அடிப்பார்.

வடிவேலு இருந்திருந்தால் “நல்லாத்தானே போயிகிட்டு இருக்கு... ஏன்?” என்று கேட்டிருப்பார்.

குதிரை வேகம் எடுக்க ஆரம்பிக்கும். வண்டிக்குள் உட்கார்ந்திருப்பவர்கள் மண்டை பக்கத்து கூரையில் டங் டங்கென்று அடித்துக்கொள்ளும்.

முன்னால் உட்கார்ந்திருக்கும் எனக்கு சறுக்கு மரத்தில் கீழே போவது போல ஒரு ஃபீலிங் வரும்.

இப்போது குதிரை தன் வாலை உயர்த்தும். அது என் தொடையை நோக்கி வாலை நகர்த்தும். அந்த அவுட் கோயிங் வால் ஏகமாய் என் தொடையில் உராசி தொடையெங்கும் கீறல் விழும். தொடை வால் பேப்பர் ஆகியிருக்கும்.

கொஞ்ச நேரத்தில் தான் க்ளைமாக்ஸ் வரும். குதிரை ரன்னிங் மோடிலேயே பச்சை லட்டுகளை உதிர்க்க ஆரம்பிக்கும்.

Equal distribution of wealth என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்வதை குதிரை செய்து காட்டும். தெருவெங்கும் லட்டுகளை பரவலாக போட்டுக் கொண்டே போகும்.

தனக்கு கோவிந்து புல்லை போட்டிருக்கிறான் என்பதை நிரூபித்து அநியாயத்திற்கு எஜமான விசுவாசத்தை காட்டும்.

திடீரென்று குதிரை வேகத்தைக் குறைக்கும். ஒரு இடத்தில் நின்றே விடும்.

கோவிந்து குதிரையிடம் ஏதோ பேசிப் பார்ப்பார். அது நகராது. பதினைந்து நாள் முன்னாலேயே ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருக்குமா எனத் தெரியாது.

வாரைப் பிடித்து இழுப்பார். அடிப்பார். குதிரை நகராது. தியானம் பரமானந்தம் என்று நின்று கொண்டிருக்கும்.

திடீரென்று அதுவே நகர ஆரம்பிக்கும். மறுபடியும் வேகம் பிடிக்கும்.

பத்து நிமிடத்தில் எங்கள் வீட்டு வாசலில் நிற்கும். கோவிந்து அதற்கு ரூட் எப்படி சொன்னார்? அது எப்படி வந்தது?

கூகுளாலேயே கண்டு பிடிக்க முடியாத புதிர் இது.

அதன் மண்டைக்குள் ஓவர்சீயர் வீட்டுக்கு Navigation implant ஆகியிருக்கிறது.

வீட்டுக்குள் லக்கேஜ்களையும் கோவிந்துதான் கொண்டு வந்து வைப்பார்.

அப்பா பணம் கொடுப்பார். கண்டிப்பாக ஒரு ரூபாய்குள்தான் இருக்கும்
 
எங்கள் அடுத்த 🐎குதிரை சவாரிக்கும் இதே கோவிந்துதான் தவறாமல் வருவார்.....🐎🐎

(பயணங்கள் நிச்சயமாக முடிவதில்லை)...

“சுஜாதா”
========================================================
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.5.20

Astrology: ஜோதிடம். ஹீரோவும் வில்லனும்!!!!

Astrology: ஜோதிடம். ஹீரோவும் வில்லனும்!!!!  

“சார், நான் ரிஷப லக்கினக்காரன்.சுக்கிரன் எனக்கு லக்கினாதிபதி.அத்துடன் அவனே ஆறாம் இடத்திற்கும் அதிபதி.அவன் என்னுடைய ஜாதகத்தில் 12ல்இருக்கிறான். அதாவது விரையத்தில் மறைந்து விட்டான்.ஆனால் நவாம்சத்தில் அவன் உச்சம் பெற்றுள்ளான்.அவன் எனக்கு ஹீரோவா? அல்லது வில்லனா?”

“இரண்டும்தான்.இரண்டு இடங்களுக்கு அதிபதி என்னும்போது, அவன் இரண்டையுமே செய்வான்.”

“விளங்கவில்லையே  சார்! ஒன்று ஹீரோ என்று சொல்லுங்கள்.அல்லது வில்லன் என்று சொல்லுங்கள்.ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்கும்”

“உங்கள் வீட்டிற்கு நீங்கள் பிள்ளை. உங்கள் மாமனார் வீட்டிற்கு நீங்கள் மாப்பிள்ளை.அதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையா? அல்லது   இரண்டுமே உண்மையா?”

“இரண்டுமே உண்மைதான்”

“அப்படித்தான் அதுவும்.உங்கள் லக்கினத்திற்கு அவன் ஹீரோ.   ஆறாம் வீட்டுக் காரியங்களுக்கு அவன் வில்லன். இரண்டு வீட்டு வேலைகளையுமே அவன் கச்சிதமாகச் செய்வான். ஹீரோ என்பதால் வில்லன் வேலையை விட்டுக் கொடுக்க மாட்டான்.இது எல்லாக் கிரகங்களுக்கும் பொதுவான குணம்.”

“சரி, எப்போதுசெய்வான்?”

“தனது மகாதிசை, மற்றும் புத்திகளில் செய்வான்”

“ஒரே தசாபுத்தியில் அவன் இரண்டு வேலைகளையும் எப்படிச் செய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்?அடுத்து எனக்கு சுக்கிரபுத்தி வரவுள்ளது. அந்த புத்தியில் அவன் நன்மையைச் செய்வானா அல்லது தீமையைச் செய்வானா என்று எப்படித் தெரிந்து கொள்வது”

“இங்கே கோள்ச்சாரம் உங்களுக்கு உதவும்.கோளாசாரச் சுக்கிரன் அல்லது சம்பந்தப்பட்ட கிரகத்தின் அன்றைய இருப்பிடம் (by placement) மற்றும் பார்வை (aspect) எந்த வீட்டின் மேல் விழுகிறதோ அந்த வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இன்றையத் தேதியில் சுக்கிரன் கோச்சாரப்படி எங்கே இருக்கிறான் என்று படத்துடன் கீழே கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள். இன்றையச் சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லக்கினத்தைப் பார்க்கிறான். இப்போது அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் அது நன்மையானதாக இருக்கும். இப்படித்தான் பார்க்க வேண்டும்.விளக்கம் போதுமா?”



“இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற வேலையாக இருக்கிறதே! குறுக்குவழி இல்லையா?”

“இருக்கிறது. அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தியுள்ளேன். அதில் சொல்லித் தந்துள்ளேன்.”

---------------------------------------------------------------------
1. மேஷ லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே மூன்றாம் இடத்திற்கும் அதிபதி
2. ரிஷப லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லக்கினாதிபதியும் ஆவான்.
3. மிதுன லக்கினத்திற்கு வில்லன்செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
4. கடக லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
5. சிம்ம லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் (7th Lord) ஆவான்.
6. கன்னி லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும் (5th Lord) ஆவான்.
7. துலா லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே மூன்றாம் வீட்டிற்கு அதிபதியும் (3rd Lord) ஆவான்.
8. விருச்சிக லக்கினத்தற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லக்கினத்திற்கும் அதிபதி ஆவான்.
9. தனுசு லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
10. மகர லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
11. கும்ப லக்கினத்திற்கு வில்லன் சந்திரன் (6th Lord)
12. மீன லக்கினத்திற்கு வில்லன் சூரியன் (6th Lord)
-----------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=====================================================

21.5.20

*அப்புசாமியும் கொரோனாவும்...*


*அப்புசாமியும் கொரோனாவும்...*

*((இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது* நன்றாக இருக்கும் இரண்டு நிமிடம் ஒதுக்கி படித்து பாருங்கள்))

"சீதே.. சீதே.. சித்த வந்து பாரேன்.." என அபய குரல் கொடுத்து அலறினார் அப்புசாமி தாத்தா.

"இங்க வாசல்ல வந்து பாரு.. இந்த கார்ப்பரேஷன் காரா எதயோ ஓட்றாடீ கெயவீ.." என்றார்.

"இதோ பாருப்பா.. இது ஓண்ணும் கமல் வூடு இல்ல.. உம்பாட்டுக்கு ஏதேதோ ஒட்றே.." என்றவரிடம், "சாமீ.. நா இன்னா செய்ய ?!.. ஆபீஸ்ல ஒட்ட சொன்னத செய்யறேன்.." என்றான்.

"இந்த நேரம் பாத்து இந்த ரசகுண்டு கடங்காரனோ, பீமா ராவோ இல்ல.. எல்லாம் லாக் டவ்னுக்கு பயந்து ஆத்துக்குள்ளயே கடக்கானுங்க.." என புலம்பினார் அப்புசாமி தாத்தா.

"ஒய் யூ ஆர் ஷவுட்டிங்..?!" என்றபடியே சீதா பாட்டி ப்ரஸன்னமானாள். "யாருப்பா நீங்க..?! வாட் இஸ் திஸ்..?!" என்றாள்.

"கொரோனா நோட்டீஸ் மா.. உங்க வூட்ல விடாம தும்மல் சத்தம் கேக்குதுன்னு ஆபீஸ்ல ரிப்போட் ஆய்கிதும்மா.. அத்தொட்டுதான் தனிம நோட்டீஸ ஒட்டின்கிறோம்மா.." என்றான்.

"சரி.. இப்ப வாட் வீ  ஷுட் டூ..?!" என்ற சீதா பாட்டியிடம், "ஆஸ்பத்திரிலேந்து ஆளு வரும்மா.." என்றான்.

"ஓ காட்..! எனக்கு வேற ஜூம் ஆப்ல 'பாட்டிகள் முன்னேற்ற கழக' மீட்டிங் இருக்கே.. நீங்களே இத பாருங்கோ.." என உள்ளே பாய்ந்தாள்.

சரக்கென ஒரு ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து விண்வெளி வீரர் போல நாலுபேர் இறங்கினர்.

"சார்.. யாருக்கு இங்க தும்மல், சளி..?" என்றதும், "ஏன்..? எனக்குத்தான்..!" என தொடர்ந்து நாலைந்து முறை 'அஸ்க்'கினார் அப்புசாமி தாத்தா. நால்வரும் நாலா பக்கம் ஓடினர்.

"அவர பிடிப்பா.. ட்ரைவர்..!" என ஒருவர் கூவ,  அப்புசாமியை அலேக்காக மடக்கிப் பிடித்தனர்.

"வுடுய்யா.. வுடுய்யா.." என திமிறினார். மீண்டும் கஜேந்திர மோக்ஷ யானை போல "சீதே.. அடி சீதே.." என்று பிளிறினார்.

"ஒய் ஆர் யூ ஸ்கீரிமிங்..?" என்றபடி சீதா பாட்டி வந்தாள்.

"வாட் இஸ் ஹேப்பனிங்..? யாருப்பா நீங்க..?" என்றவளிடம், "மேடம்.. தாத்தாக்கு பயங்கர கொரோனா அறிகுறி இருக்கு.. இவர டெஸ்ட் பண்ணி க்வாரண்டைன் பண்ணணும்.. அதுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாம்ண.. ஏக கலாட்டா பண்றார்.." என்றார் ஒருவர்.

"ஓகே..ஓகே.. இவாளோட போய் கோ-ஆப்ரேட் பண்ணுங்கோ.." என்றதும், "அடிப் பாவீ.. இது உனக்கு அடுக்குமோ.. என்ன இப்பிடி பிடிச்சுத் தறயே..! எனக்கு ஓண்ணுமில்லடீ கியவீ.. நா கோயம்பேடு கூட போகல்லியே.. ஒரு வேள டில்லி ரிட்டர்ன்னு நெனச்சானா..?! தெரிலயே எழவு..! சரி இருய்யா வரேன்.." என ஒரு மிடுக்குடன் வேன் ஏறினார் அப்புசாமி தாத்தா.
-------------------------------------------------------------------------------
கட் பண்ணா, வீட்டுக்குள்ள 'பாமுக' லைவ் மீட்டிங் ஆரம்பம்.

"குட் நூன்.. எல்லாரும் வந்தாச்சா..? ஸ்டார்ட் பண்ணலாமா..?" என சீதா பாட்டி கூவ.. பங்கஜம், அம்புஜம், மீனா, ராஜி, அபி பாட்டி, நங்கை தங்கம் மாமி உள்ளிட்ட எல்லாரும் ஆஜர்.

"கோமதியும், ஸ்ரீமதியும், எச்சுமி பாட்டியும் இன்னும் வரல..!" என்று பங்கஜம் கூவினாள்.

"டோண்ட் ஷவுட் ஐ ஸே..! நார்மலாவே பேசுங்கோ.." என மாடரேட் பண்ணினாள் சீதா பாட்டி.

"வம்ப அள்ளிப் போடுங்கோ.." என அம்புஜம் அலறினாள்.

ராஜி தான் ஆரம்பித்தாள், "நீ பீலா ராஜேஷ் காஸ்ட்யூம கவனிச்சியோ..?! கோவிட் நியூஸயே ட்ரண்டிங் ஆக்கிட்டா பாத்தேளா..?!" என்று.

"பாவம் அந்த மினிஸ்டர் நன்னா தானே பண்ணிண்டு இருந்தர்.. ஏன் இப்பல்லாம் காணமே..?!" என்றாள் பங்கஜம்.

"நம்ம சி.எம். கூட நன்னாவே ஹேண்டில் பண்றார்.. மீடியா கேக்கற கொணஷ்ட கேள்விக்கெல்லாம் சிரிச்ச முகமா சமாளிக்கறாரே..!" என நங்கை தங்கம் மாமி புகழ்ந்தாள்.

"அதெல்லாம் சரி.. நம்ம பி.எம். கூட என்ன சொல்வாரோன்னு எல்லாரும் பீதில இருக்கச்சே.. 'மித்ரோ'ன்னோ, 'மேரே தேஷ் வாசியோ'ன்னோ ஆரம்பிக்காம 'ஸாத்தியோ'ன்னு ஆரம்பிச்சுட்டாரே..! பாக்கிய நிம்மி மாமி சொல்வான்னாரே பாக்கணும்..!" என்றாள் லேட்டா ஜாயின் பண்ண எச்சுமி பாட்டி.

உடனே நங்கை தங்கம் மாமி "யாரு நம்ம மத்யமர் நிம்மி சுரேஷா..?! அவோ கூட ரீஸண்டா  மத்யமர்ல ஜெம்மினாளே..?! நன்னா ஆச்சு.." என்றாள்.

"அய்யோ..! நம்ம எஃப்.எம். நிர்மலா சீதாராமன் மாமிய சொன்னேன்.." என்றாள் எச்சுமி பாட்டி.

'ஓ'வென எல்லோரும் கூவினர். "ப்ளீஸ்.. ஒன் பை ஒன்னா பேசுங்கோ.." என்றாள் சீதா பாட்டி.

அபி பாட்டியோ தன் பங்குக்கு "இந்த எஃப்.பீல போனா சங்கீதக் காராளும் புதுசா கத்துக்கறவாளுமா பாடியே கொல்றா..! டிக்டாக்கெல்லாம் நாகர்கோயில் கடங்காரனால ஆஃப் ஆயிடுத்துகள்.. நாம யூஸ் பண்ற இந்த ஜூம் ஆப்ப கூட மத்யமர் சந்திரசேகரன் சார் சைனீஸ் ப்ராடக்ட்ன்னு அப்ஜக்ட் பண்ணுவர்" என்றாள்.

"ஓகே.. ஓகே.. நம்ம சிட்டியே கோவிட்ல அலறிண்டு இருக்கு.. ஹாஸ்பிடல் போன இந்த மனுஷன பத்தி நீயூஸே இல்ல.. ஸோ லெட்ஸ் வைண்ட் அப் நௌ.." என்றாள் சீதா பாட்டி.

"என்ன பேசவே விடல..!" என மீனா அங்கலாய்த்தாள். "சரி.. குய்க்கா சொல்லு" என்றாள் சீதா பாட்டி.

"என்னத்த சொல்ல.. டி.வில கூட அழறத்துக்கு இப்போ சீரியல் கூட இல்ல.. ஒரே தெலுங்கு படத்த தமிழ்ல டப்பி போடறான்.. இல்ல ஜெயம் ரவி, சூர்யா படத்தயே ரிபீட் பண்றான் கடங்காரன்.." என்றாள் மீனா.

"இந்த கமலஹாசனும் ஏதோ ஒளறிட்டு வசவு வாங்கிக் கட்டிண்டது.. அப்பறமா டாஸ்மாக் கேஸ போட்டு தப்பிச்சிருக்கு தத்தி.." என்றாள் அம்புஜம்.

"மத்யமர்ல அட்மின் சங்கர் சார் என்ன போட்டாலுமே லைக்கும், கமண்ட்ஸும் ச்சும்மா பிச்சிண்டு போறத நம்ம ராம்ஜீ கூட மென்ஷன் பண்ணாரே.." என்றாள் சீதா பாட்டி.

"இப்ப கூட மத்யமர்ல ராதா, ஸ்ரீராம், அகிலா, ராதை ஸாய்ராம் எல்லாரும் கலக்கறா.." என்றாள் பங்கஜம்.

"ஓகே.. எல்லார்க்கும் பை.. சீ யூ ஆல்.." என சீதா பாட்டியும் ஜூமை விட்டு பையினாள்..

திடீரென வாசலில் ஓரே ரகளை.

"யம்மா.. இந்தூட்டு ஐய்யா ஓடியாந்துட்டாரும்மா" என ஒரு ஆம்ஸ்ட்ராங் கூவினான்.

சீதா பாட்டி, "வாட் இஸ் திஸ்..? எங்க இருக்கேள்..? வெளிய வாங்கோ.. ஐ வில் ஹேண்டில் திஸ்" என்றதும், "சீதே.. சீதே.. காப்பாத்துடீ.. அங்க போனா மூக்க நோண்ட்றான், நாக்க நோண்ட்றான்.. பயம்மா இருக்குடீ.. மாஸ்க்குல பொடி போட கூட ஓட்டை  போடக் கூடாதாம்.. நான் என்ன சானிடைசர தீர்த்தம் மாதிரி குடிச்ச முட்டாளா..?!" என்றார் அப்புசாமி தாத்தா.

"ஐய்யா டெஸ்ட் ரிஜல்ட்ட வாங்காதய்க்கு வண்ட்டார்மா.. ஐய்யாக்கு கொரோனா கிரோனா ஒண்ணுமில்லன்னு வந்துகிதும்மா.. ஆனாலும் 30 நாளைக்கு ஐய்யாவ தனியா இருக்க சொல்லுங்கம்மா.. நான் வர்றேன்.. பக்கத்துத் தெருவில எனக்கு பாத பூச கீதும்மா..!" என்றான் அவன்.

"ரொம்ப தேங்க்ஸ்ப்பா.. அவர நான் பாத்துக்கறேன்.. பை.. பை.." என்றாள் சீதா பாட்டி.

"ஹலோ..! மரியாதயா உங்கம்மா எனக்காக வாசல்ல நின்னுண்டே தூங்கற மாதிரி ஒரு ரூம தந்தாளே.. அதுல 30 டேஸ்  நீங்க இருங்கோ" என்றதும், "அநியாயம் பண்ணாதடீ கெயவீ.. வெர்ஜின் தாத்தா சாபம் உன்ன சும்மா விடாதுடீ" என்றார் அப்புசாமி தாத்தா.

"ஷட் அப்.. நீங்க மூக்கு பொடி தீர்ந்ததும் என்னோட 'தாஸநாதி ஸ்நான பௌடர' ஸ்னஃப்பா யூஸ் பண்ணி தீத்ததால தானே இந்த பீரங்கித் தும்மல் போட்டு மாட்னேள்.. நானும் யூ ஸஃபர்ன்னு விட்டுட்டேன்.. டோண்ட் டூ திஸ் அகய்ன்.." என்றாள் சீதா பாட்டி.

"சீதே ஒழிக..! சீதே ஒழிக..!" என்றபடியே வாசல் ரூமை நோக்கி நகர்ந்தார் அப்புசாமி தாத்தா.
😊svsபடித்ததில் பிடித்தது ........அதனால் பகிர்வு sVs...pdkt... எண்ணம் போல் வாழ்வு:::
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.5.20

அன்றாடம் காய்ச்சிக் கூட்டம் யார் தெரியுமா?

அன்றாடம் காய்ச்சிக் கூட்டம் யார் தெரியுமா?

*உலகத்துலயே மிகப்பெரிய 'அன்னாடம் காய்ச்சிக் கூட்டம்' ன்னா... சந்தேகமில்லாம அமெரிக்காகாரன் தான்.*

'சேமிப்பு' ன்றது மருந்துக்குக் கூட கிடையாது. சேர்ந்த மாதிரி ரெண்டு மாசம் கூட அவங்களால வேலையில்லாம சமாளிக்க முடியாது. 90-கள்ள, உலகம் முழுக்க  ஒரு பொருளாதார தேக்கம் வந்தப்போ, அமெரிக்கால நிறைய பேர வேலைய விட்டுத் தூக்குனாங்க. அதுல ஏகப்பட்ட பேர் தற்கொலை பண்ணிட்டான்.

ரெண்டு வருஷம் முன்ன, இங்க நம்ம ஊரு பல் டாக்டர்ட்ட ஒரு நாலுபல்லு வேல பாத்ததுக்கு... 17 ஆயிரம் செலவாச்சு. அதே ட்ரீட்மெண்டுக்கு சென்னையில கேக்கும் போது, 60 ஆயிரம் சொன்னாங்க. அமெரிக்கால இருக்குற சொந்தக்காரப் பொண்ணுட்ட பேசும் போது, அதே ட்ரீட்மெண்டுக்கு அங்க எவ்ளோ ஆகும்னு கேட்டா... பல் டாக்டர்ட்ட பேசிட்டு, அடுத்த நாள் கூப்ட்டு... 21/2 to 3 லட்சம் வரைக்கும் ஆகும்னுது. மேலும், அமெரிக்கால இருக்குற நம்மாளுங்க... எந்தப் பெரிய வைத்தியமும் அங்க பண்ணிக்க மாட்டாங்களாம். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரியான சமாச்சாரங்கள் இருக்குறதால, அந்த பூர்வக்குடிங்க தப்பிச்சுட்டு திரியுது. இல்லன்னா... அனேகம் பேர் செத்து சுடுகாட்டுக்கு போயிருப்பான். அந்தளவுக்கு, மருத்துவ செலவு மட்டுமே அவ்ளோ காஸ்ட்லியாம்.

மத்தபடி... வீடு, கலர் கலரான காருக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இருக்காது. பூராமே லோனு, கிரெடிட் கார்டு தான். காய்கறி மார்க்கெட்ல, தினமும் சரக்கடிக்குற லோடுமேனுக்கு, வாரம் பூரா அட்வான்ஸ் குடுத்துட்டு... வார கடேசில சம்பளம் குடுக்கும் போது மொத்த அட்வான்சையும் புடிச்சுக்குவான். லோடுமேன் கைல பணத்தக் குடுத்துட்டு திருப்பி வாங்குற வேலை எல்லாம் கனவுலயும் நடக்காது. அமெரிக்க ஹைடெக் கூலிகளும்... அதே மானங்கெட்ட பொழப்பு தான் பொழைக்குறாங்க. அவங்களுக்கு நேர் மாறானவங்க நம்மாளுங்க. தயிர் சோத்துக்கு, மட்டை ஊறுகா வரைக்கும் நம்ம அண்ணாச்சிக் கடைலயே வாங்கி பேக்பண்ணிக் கொண்டு போயிடுறாங்க. பாரம்பர்யமாவே நம்ம ஆளுங்களுக்கு சேமிப்பு பழக்கம் இருக்குறதால தான், அங்க இருக்குற நம்ம ஆளுங்க டாப் லெவல்ல இருக்காங்க.

நாமெல்லாம் வெள்ளிக் கிழமைன்னா... பசங்க வேலைக்கு கிளம்பும் போதே, "இன்னைக்கு சாயங்காலம் வரும் போது மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு, பிரசாதம் வாங்கிட்டு வாடா" ன்னு, சொல்லி அனுப்புவோம். பிரசாதம் வாங்கிட்டு வர்றானோ இல்லையோ... அம்மா சொன்னதுக்காக, ஒரேவொரு கோட்டரோட, வீடு வந்து சேருவான். ஆனா அதுங்க... வெள்ளிக்கிழம காலைல வேலைக்குக் கிளம்பும் போதே, 'பார்ட்டி டிரெஸ்' ன்னு சொல்லி ஒரு ஜட்டி, பனியன மஞ்சப்பையில சுத்திக் கொண்டு போயிரும். சாயங்காலம், ஆபீஸ் பாத்ரூம்ல அப்டியே துணிய மாத்திட்டுப் போய் பாருக்குள்ள பூந்ததுன்னா... ஞாயித்துக் கிழம நடுஜாமத்துல, ஒரு பத்திருபது உருப்படிகள ஒன்னா JCB-ல வழிச்சுத் தூக்கி டிப்பர்ல போட்டு... ஒவ்வொரு வீடா கொண்டாந்து தூக்கி விட்டுட்டுப் போவாங்க. மிகப் பெரிய நிறுவனங்கள்ள வேலை பாக்குற அமெரிக்கனும் சரி, நம்மவூருல சனிக்கிழமை சம்பளம் வாங்குற தண்ணிவண்டி கொத்தனாரும் சரி... ரெண்டுபேரு பொழப்பும் ஒன்னு தான்.

திங்கக்கிழம காலைல, அரை டீ-க்கு... டீ-கடக்காரன்ட்ட, 'ஆத்தா அம்மா'ன்ற வார்த்தைய கேட்டுட்டு நிப்பான்

சரி விஷயத்துக்கு வருவோம். இப்ப அங்க அத்தனாயிரம் பேர் செத்துட்டு இருக்கான்... ஆனா இந்த பயலுவ, லாக்டவுன கேன்சல் பண்ணனும்னு போராட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க. சரி இங்கயாவது மனிதாபிமானம் இருக்கு, ஆளாளுக்கு போட்டி போட்டு, தேடிக் கொண்டு போய் சாப்பாடு குடுக்குறாங்க. அங்க, அவனவன் பொழப்பே நாறிட்டு கிடக்கு.  பீரோ நிறைய சரக்கு பாட்டில் தான் அடுக்கி வெச்சிருப்பான். பெரும்பாலும் ரெடிமேட் புட் தான். பூராம் காலி ஆயிருக்கும். சுட்டுப் போட்டாலும் சமைக்க வராது. அங்க எவனும் அன்னதானமும் பண்ண மாட்டான். போராடாம என்ன செய்வான் ? உலகத்துலயே, காஸ்டலியான ஹைடெக் பிச்சக்காரன்னா... அது அமெரிக்கன் தான் !!!
பகிர்வு
-----------------------------------------------------
படித்து அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.20

வியக்கவைக்கும் கிணறு!!!


வியக்கவைக்கும் கிணறு!!!

சுவஸ்திக கிணறு..... கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிக் காலத்தில் சுவஸ்திக வடிவில் இக்கிணறு வெட்டப்பட்டது என்றும், தந்தி வருமனின் பட்டப் பெயரின் ஒன்றான மார்பிடுகு பெருங்கிணறு என பெயரிடப்பட்டிருந்தது என்றும் இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது என தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கிணறு உள்ளது என்று வைத்த போர்டில் வாசித்தோம்.

மேலும் நாலு மூலை கேணி என்றும் இக்கிணற்றில் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் குளிக்கும்போது எதிரில் இருக்கும் படிக்கட்டுகளில் குளிப்பவர்கள் தெரியாத அளவிற்கு கல்தூண்களால் ஆன மறைவு கற்களை கொண்டு அமைந்துள்ளது. மாமியார் குளித்தால் மருமகளுக்கு தெரியாது, மருமகள் குளித்தால் மாமியாருக்கு தெரியாது என்பதால் இதற்கு மாமியார்-மருமகள் குளம் என்று பெயர் பெற்றதாக கிராம மக்களால் காலம் காலமாக அழைக்கபட்டு வருகிறது.

இக்கிணற்றை தாங்கள் காணவேண்டுமெனில் திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் 108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ளது.

இந்த கோவிலின் ஒரு தேர் திருவிழாவிற்கு பெஸ்ட் போட்டோகிராபி டுடே ஆசிரியர் பழனிக்குமார் போட்டோ வாக் சென்றிருந்தபோது, இக்கிணற்றை முழுவதுமாக படமெடுக்க முயன்றபோது, அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாத காரணத்தால் முடியவில்லை. அருகிலிருந்த நாற்பதடி உயர தண்ணீர் டேங்க் மேலேறி, பலமான காற்று வீசினாலும், ரிஸ்க் எடுத்து, பதிவு செய்த காட்சிதான் நீங்கள் பார்ப்பது.


----------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.20

கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்


கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்

பொய்மானைத்  தேடிப்
      புறம்போன ராமனுக்கும்
தெய்வம் எனும்பெயரைச்
     சேர்த்துவைத்த தேனடியோ?
தெய்வம் எனும்பெயரைச்
     சேர்த்துவைத்த தேனெனிலோ
தெய்வமே தர்மத்தைத்
      தேடுவதாம் என்பதனால்!

கற்புடையாள் சீதையவள்
      கனலாக மாறாமல்
காட்டிடையே கண்ணீரில்
     கரைந்ததுவும் ஏனடியோ?
காட்டிடையே கண்ணீரில்
     கரைந்ததுவும் ஏனெனிலோ
பாட்டிடையே கம்பனுக்கு
     பலபொருள்கள் தேர்வதற்கே!

சூதாடும் நேரத்தில்
     துணைக்குவராக் கண்ணனவன்
போராடும் பாரதத்தில்
      பொங்கிவந்த தேனடியோ?
போராடும் நேரத்தில்
     பொங்கிவந்த தேனெனிலோ
யாரோடு கூட்டணிஎன்(று)
     அன்றுவரை அறியானால்!

அகலிகையின் கணவனுக்கே
     ஐயந்தீர் ராமபிரான்
அகந்தெளித்த சீதையின்பால்
     ஐயமுற்ற தேனடியோ?
அகந்தெளித்த சீதையின்பால்
     ஐயமுற்ற தேனெனிலோ
பரந்தெரித்த ராமனுக்கும்
     இகந்தெரியாக் காரணத்தால்!

மாதவியாள் மார்பிருந்து
      மயங்கிவிட்ட கோவலினின்
பேதலித்த புத்திக்குப்
      பின்னணிதான் என்னடியோ?
பேதலித்து புத்திக்குப்
      பின்னணிதான் என்னவென்றால்
பேர்தரித்த வணிகனெனும்
     பிறப்பாய்ப் பிறந்ததனால்!

காரியங்கள் அத்தனைக்கும்
      காரணங்கள் உள்ளவெனக்
காட்டிவிட்ட வேதமெல்லாம்
      கண்மறைந்த தேனடியோ?
காட்டிவிட்ட வேதமெல்லாம்
      கண்மறைந்த தேனனெனிலோ?
காட்டியதை பொய்யென்று
     கண்டுகொண்ட காரணந்தான்

அவ்வளவும் உண்மையென்று
      ஆர்ப்பரிக்கும் மக்களிடை
இவ்வளவு ஐயங்கள்
       எனக்கெழுந்த தேனடியோ?
இவ்வளவு ஐயங்கள்
       எனக்கெழுந்த தேனெனிலோ?
கையளவு கல்வியில்நீ
        கவிபாடும் காரணம்தான்!
-------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.5.20

நீங்களும் நானும் நமது உடல் நலமும்!!!!


நீங்களும் நானும் நமது உடல் நலமும்!!!!

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!!!
Post by Dr ரம்யா

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???* தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿
--------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.5.20

அழியாத பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.


அழியாத பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.

*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த 
ஊரடங்கு.*

*1. மக்களே  நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். 
இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.*

*2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள்.*

*3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை  ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் 
போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.*

*4. நகைக் கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களைத் தொட்டு உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.*

*5. திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த  நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம்.* 

*6. பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய  இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.*

*7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம்  விதித்த BS 4 வாகனங்கள் நிறைய  உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount  என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை 
ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் 
நீங்கள் ஏமாற வேண்டாம்.*

*8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப்போய் விடாது.*

*9. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள்.  அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி 
விடாதீர்கள்.*

*10. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா  செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.*

*11.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து* *இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.* *விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.*

*இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.*

*ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர் ன் பாடல் வரிகள்  இன்னும் வருடத்திற்கு நமக்குத் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.*

*சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.*

*கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் ஜாக்கிரதை.  விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் 
என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும்  கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.*

*பகிர்வு*
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.5.20

மரங்களை வெட்டினால் என்ன ஆகும்?


மரங்களை வெட்டினால் என்ன ஆகும்?

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார். ஆசிரியர்கள் அவரை மரமண்டை ... பேசாம போய் மரக்கடையிலேயே உக்காரு என்றும் திட்டுவார்கள். பள்ளிக் காலம் முடிந்து ஆளுக்கு ஒரு திசையில் சென்றுவிட்டோம். நமது நண்பர் தனது தந்தையின் மரக்கடையிலேயே பொறுப்பெடுத்துக் கொண்டார். பின்னர் ஆறேழு வருடங்கள் கழித்து அவரை ஒரு முறை சந்திக்கும் போது சொந்த அத்தை மகளை திருமணம் எல்லாம் முடித்து கைக் குழந்தையுடன் இருந்தார். 28 வயதுக்குள் தனி வீடு, சொந்தமாக ஒரு புதிய மரக்கடை, கார், வேலையாட்கள், வெளிநாட்டுப் பயணம் என சகல வசதிகளுடன் இருந்தார். யார் வாழ்க்கையில் உருப்படமாட்டார், மரமண்டை என்று இகழப்பட்டாரோ அவரே எங்கள் அனைவரையும் விட உச்சத்தில் இருந்தார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளியில் மீண்டும் அவரை சந்தித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை. ஆள், மிகவும் தளர்ந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வித மன நோயாளியைப் போல இருந்தார். ஆதரவாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மிகச் சிறிய வயதிலேயே திருமணம் முடித்த காரணத்தால் பிள்ளைகள் எல்லாம் இப்போதே பெரியவர்களாக இருந்தார்கள். ஆனால், குடும்பம் பல வேறு சிக்கல்களில். ஐந்து வருடம் முன்பு சிறுநீரக கோளாறில் மனைவி இறந்து விட்டார். மூத்த மகன் கல்லூரியில் படிக்கும் போது சாலை விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். இரண்டாம் மகனுக்கு பிறவியிலேயே கொஞ்சம் மன நல கோளாறு, மகள் அமெரிக்க மாப்பிளைக்கு மணமுடிக்கப் பட்டு, இரண்டே வருடத்தில் விவாகரத்தை பெற்று வீட்டில் குழந்தையுடன் இருக்கிறார். இப்போது நண்பரோ, கோடிகளின் அதிபதி என்றாலும் ஜாதக புத்தகத்தை கையில் தூக்கிக் கொண்டு கோவில் கோவிலாக பரிகார பூஜைகள் செய்து வருகிறார்.

எங்கள் சந்திப்பில் அவரைப் பற்றிய பல விஷயங்கள் பேசிய பின் என்னை பற்றிய பேச்சு வந்தது. ஒரு கால கட்டத்தில் மனதுக்கு ஒவ்வாத வேலையை விட்டு விலகியதை பற்றி பேசியதும், அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரவி, இந்த மரக்கடை தொழில் எனக்கும் ரொம்ப நாளாகவே பிடிக்கவில்லை. கடை முழுசும் மரங்கள் வெட்டி வெட்டி அடுக்கி இருக்கிறதை பார்க்கும் போது எல்லாம் ஒரு பிணக்குவியலுக்கு நடுவே இருக்கிறதை போலவே தோணும். ஆனாலும், எனக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாதே... இத்தனை மரத்தை வெட்டி அழிச்சி வயிறு வளர்த்த பாவமோ என்னவோ என் குடும்பம் இப்படி சீரழிஞ்சி கிடக்கு என்று அழுது விட்டார். அவரை ஆறுதல் படுத்தவே சில மணி நேரம் ஆனது. பின்னர், அருகில் இருந்த இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்குப் போனோம். மிகச் சிறிய வயதில் இருந்தே எல்லாவற்றையும் வியாபாரமாகவே பார்த்துப் பழகிய அவருக்கு என்ன சொல்வது என்று யோசித்தேன். மரம் என்னும் உயிர்களை வெட்டி வெட்டி அதையே வியாபாரமாக பார்த்த காரணத்தாலேயே குடும்பம் பல இன்னல்களில் இருப்பதாக உணரும் மனிதர் எந்த கோவில் போய் எப்படி பாவங்களை தொலைக்க முடியும். மனதின் பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே முடிவையும் தேட வேண்டும். எனவே நண்பருக்கு மர நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்றை ஆரம்பிக்கச் சொல்லி அறிவுறுத்தினேன். உற்பத்தி செலவு என்னவோ அதை தாண்டி பெரிய லாபம் இல்லாமல் அனைவருக்கும் மரகன்றுகளை கொடுங்கள் என்றேன். என்னுடைய இந்த கருத்து அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதி சொன்னார். எதோ என் மூலமாக ஒரு தெய்வ வாக்கு கிடைத்த சந்தோசத்தில் அவர் என்னை பிரிந்து சென்றார். விரைவில் அவர் மூலமாகவும் இந்த இயற்கைக்கு சில நன்மைகள் நடக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நண்பரைப் பற்றி மறந்தாலும் அவரின் வேதனைகளின் ஊற்றாக இருந்த மரம் வெட்டி செய்யும்  வியாபாரம் அத்தனை பாவமானதாக இருக்குமா என்று வழக்கம் போல கூகுளை அலசினேன். எனக்கு கிடைத்த பதில்கள் .....

பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்:-
அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,
ஆல மரம்= வம்சம் அழியும்
இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்
ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்
உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம்
ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்)
எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்
புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்
வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்
பனைமரம்= வம்சம் அழியும்
தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்
புங்க மரம் = தீராத நோய் வரும்
... ... ...
ஆக மொத்தம் எந்த மரத்தை வெட்டினாலும் பாவம் நிச்சயமாம். இதை படிக்கும் போது நண்பர் காளிமுத்து தங்களாச்சேரி கிராமத்தில் சாலை ஓரங்களில் இருந்த பனை மரங்களை விழுங்கிய சில குடும்பங்களில் நிகழ்ந்த துர்மரணங்கள் பற்றி சொன்ன செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று கருதத் தோணுகிறது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி கூட இது போன்ற சில மர முழுங்கிகளைப் பற்றி பேசி உள்ளார். அவர்களின் குடும்பங்களும் நாசமானது தெரிந்ததே. இப்படி சில நூறு மரங்களை வெட்டி சாய்த்து வயிறு வளர்த்தவர்கள் நிலையே இப்படி என்றால் சாலையோரங்களில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மரங்களை அழிக்கும் திட்டங்களை இடுபவர்கள் என்ன நிலைக்குப் போவார்கள். வாழ்வின் தேவைகளுக்காக   மரங்களை வெட்டுவதற்கும், அதையே வியாபாரமாகச் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மரங்களை வெட்டினால் பாவம் வரும் என்று சொல்வது எல்லாம் உண்மையோ, பொய்யோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு செவ்விந்திய பழமொழிஎன்ன என்றால் "உயிர் வாழ்விற்காக இயற்கையில் இருந்து நீங்கள் ஒன்றைப் பெறலாம்... ஆனால், உங்கள் குழந்தைகள் உயிர் வாழ அங்கே இயற்கையை மிச்சம் வையுங்கள். ஏன் என்றால் இயற்கை என்பது அடுத்த தலைமுறைகளுக்கான சொத்து. அதை அனுபவிக்க மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது... அழிக்க அல்ல".  எந்த சிந்தனையும் இல்லாமல் இயற்கையின் மீது மனிதர்கள்  பேராசை கொண்டு நடத்தும் வெறியாட்டம், அடுத்த தலைமுறையை   சவக்குழிகளில் நிரந்தரமாக தள்ளிவிடும்.
----------------------------------------------------------
படித்து அதிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.5.20

எது சிவத்தொண்டு?



எது சிவத்தொண்டு?

1) பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார்  ஆனார்.
2) பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார்  ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)
3) மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.
4) சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
5) சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
6) சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.
7) சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
8) குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
9) ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
10)  ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
ஆக…… சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த  கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.

ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.
அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்—-அவரே சிவனடியார்.
எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்….ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு
ரொம்ப பிடிக்கும்.
சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர்
பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.
ஆக….. சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.
சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே  வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லும் சொல்இன்மை யறிந்து. சிவசிவ ,
------------------------------------------------------
2
""பிறப்புக்கு முன்னாலும்; இறப்புக்குப் பின்னாலும்; பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் இறைவா! உன்னை நான் வணங்குகிறேன்.
மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு; காற்றால் லைக்கழிக்கப்படுவதுபோல்;மண்ணில் விழுந்த நானும் அலைக்கழிக்கப்படுகிறேன்.
எனக்கு வரும் துன்பங்கள் யாவும் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல.
அப்படியே நான் உண்டாக்கியிருந்தால் ;
அது பூர்வஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால்
என்மீது கருணை வைத்து எடுத்துக் கொண்டுவிடு.
நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன்.அப்படியே இருந்திருக்கலாம்; என் அறியாமையை மன்னித்துவிடு. நல்லது என்று நான் நினைத்து செய்வதெல்லாம் தீமையாக முடியும் என்றால்; அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது.
என் அறிவு சிறியது உன் ஆட்சிபீடம் பெரியது. அகந்தை; ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால்; இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும் ""என இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.''''... கண்ணதாசன்
... அர்த்தமுள்ள இந்து மதம்
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.5.20

கல்யாண மோர் என்றால் என்ன ?


கல்யாண மோர் என்றால் என்ன ?

குறிப்பாக தஞ்சாவூர் - கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். 
பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.

கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு  செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார். "கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்" என்று.

சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். "மோரு பலே ஜோரு" என்று சொல்லி, தாம்பூலம்  வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.

-திருக்கோடிக்காவல் வைத்தியநாதன்!!!!
-------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.5.20

சனீஸ்வரனின் அருமையும் பெருமையும்!!


சனீஸ்வரனின் அருமையும் பெருமையும்!!

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான்.

அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.

அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.

எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.

சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.

பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.

எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா. விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.

ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.

ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாழிகை கடந்தது. சிவபெருமான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.

சனீஸ்வரனை நோக்கி, பார்த்தாயா சனீஸ்வரா. உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே? என்றார்.

இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள் என்றார்.

சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.

ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.

இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.

எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.

சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன்.

ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.

என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.

அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.

சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.

இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,

அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.

ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார். பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து

மங்குசனி,
தங்குசனி,
பொங்குசனி

என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.5.20

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!

1. இந்த 5 நட்சத்திர Hotel சமையற்காரர் (Chef) சொல்வதைக் கேளுங்கள். அதை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்



2. இந்த மூதாட்டி சொல்வதைக் கேளுங்கள்



அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.5.20

கல்லணையின் வரலாறு!!!!!


கல்லணையின் வரலாறு!!!!!

கரிகாலன் கட்டியக் கல்லணை ... !

கல்லணைப் பற்றிய ஒரு சிறு எளிய அறிமுகம்.

கர்நாடகமாநிலத்தில் பிரம்மகிரி குன்றுப் பகுதியில் தலைக்காவிரி என்னும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து  சுமார் 4400 அடி உயரத்தில் காவிரியாறு உற்பத்தியாகிறது.. 384 கி.மீ பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூர் பகுதியை அடைகிறது.. நீலகிரியில் உற்பத்தி ஆகும் பவானி ஆறு, இப்போதைய மேட்டூருக்குத்  தெற்கே காவிரியுடன் கலக்கிறது.. கோவை மாவட்டத்து நொய்யல் ஆறும், மூனாறு பகுதி அமராவதி ஆறும் காவிரியில் கலக்கின்றன... இப்போ அகன்ற காவிரியாகி ஒரு மகா சமுத்திரமாக உருவெடுத்து திருச்சியை நோக்கி பயணிக்கிறது காவேரி .

திருச்சிக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் எலமனூறு அருகே, முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப்  பிரிகிறது. சற்று உயர்ந்த காவிரியும், தாழ்ந்த கொள்ளிடமும் மீண்டும் இணைய முயற்சிக்கும் ஓர் இடம்..

அந்த இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

 திருச்சிக்கு கிழக்கே 15 கி.மீ தூரமுள்ள கரிகாலன் அணை கட்டிய இடம்..

மழைக் காலத்தில்  காவிரி தனது வடகரையை உடைத்து கொள்ளிடத்தில் பாய்ந்ததால் ஏற்படும் அபரிமிதமான வெள்ளப்பெருக்கினால்  இப்பகுதியைச் சுற்றியுள்ள விவாசாய நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்..  இந்தப் பேரழிவைத் தடுப்பதற்காகவே கரிகாலன் காவிரியின் குறுக்கே கரை எழுப்பத் தீர்மானித்தார்..

கரைகளை உயர்த்தி வலுப்படுத்தவேண்டும். ஆற்றின் குறுக்கே தடுப்பும் கட்ட வேண்டும்.

அப்போதுதான் மிக வேகமாக வரும் நீரின் வேகத்தை குறைத்து. அபரிதமான நீரை தடுப்பணையின் மேல் வழிந்தோட செய்து, நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளப் பெருக்கும் ஏற்படாது.

அந்த மகா சமுத்திரம் போன்ற காவிரி ஆற்றின் குறுக்கே எதைக்கொண்டு தடுப்பு எழுப்புவது.? சாத்தியமான முயற்சியா..?

1800 ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தான் கரிகாலன் .

எப்படி சாத்தியமாயிற்று..? அந்த சாதனை எப்படி நமக்குத் தெரியவந்தது..?  வழக்கம்போல் அதைச்சொல்வதற்கும் ஒரு ஆங்கிலேயர்தானே நமக்கு வேண்டும் .

வந்தார் ...ஆர்தர் காட்டன்.. மிகச்சிறந்த நீர்ப்பாசன பொறியியல் அறிஞர்.

1829 ம் ஆண்டு.. அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியின் நீர்ப் பாசனத்  தலைமைப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்...முதல் முறையாகக் கல்லணைக்கு வருகிறார்..

கி.பி. 1777 இல் மெக்கன்சி கையெழுத்து ஆவணங்களில் இவ்விடம்

 " அணைக்கட்டி ' என்று குறிக்கப்பட்டிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தார் காட்டன்.

அது என்ன அணைக்கட்டி..?  அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இப்பகுதியை ஆய்வு செய்கிறார்.  12 அடி ஆழ குழி தோண்டி பார்க்கும் போதுதான் நீருக்குள் இருக்கும் அந்த கட்டுமான ரகசியம் அவருக்குத் தெரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே, 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட பாறைக் கற்களால் கட்டப்பட்ட தடுப்புச்சுவரைக் கண்டார்..

காவிரி ஆற்றின் நீர் தடுக்கப்பட்டதையும், தேவைப்படும் பொழுது மதகுகளின் வழியே பாசனத்திற்கு வெளிவிடப்பட்டதையும் அறிந்தார்..

இது எவ்வாறு சாத்தியம்..? தண்ணீரின் குறுக்கே கற்கள் அணை  எப்படி..? இதன் அடித்தளம் எவ்வாறு இருக்கும்.? இதை எப்படி அமைத்தார்கள்.? எப்போது ? பல ஆண்டுகள் ஆய்வு நடத்தினார்..

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழர்களின் பொறியியல் அறிவு வெளிவந்தது.. உலக பொறியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது..

ஆர்தர் வெளியிட்ட கல்லணையின் கட்டுமான இரகசியம் இதுதான்...

நாம் கடற்கரையில் நின்றிருப்போம்.. அலையடித்த நீர் நமது பாதங்களை தழுவும். அப்போது ஏற்படும். மணல் அரிப்பின் காரணமாக நமது பாதம் சற்று மண்ணில் புதையும்.. சற்று நேரம் இதே நிலை நீடித்தால், நமது பாதங்கள் ஒரு நிலைத்தன்மை பெற்று விடும். நமது பாதங்களை வெளியே எடுப்பதற்கு சற்று சிரமம் நேரும்.. இதுதான் கல்லணையின் மூலத் தொழில் நுட்பம்...

பெரிய பாறைக்கற்களை கொண்டு வந்து  நீருக்குள் போட்டார்கள்.. அது நீருக்குள் மூழ்கி தரைத்தளத்தை தொட்டு மண் அரிப்பின் காரணமாய் இன்னும் அமுங்கி ஒரு பலமான நிலைத்தன்மை பெறும்..பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒட்டுப்பசை கொண்ட ஒரு வித களிமண்ணைத் தடவி அடுத்த பாறை.. இதே முறையில் அடுத்தடுத்த கற்கள்.. மணற் பகுதியான அடிப்பகுதி இப்போது கருங்கற்களால் ஆன அஸ்திவாரமாகிவிட்டது..( நீரை வெளியேற்றி, மணல் பகுதியில் ஆழமாய் குழி வெட்டி, கம்பி ஜல்லி மணல் சிமெண்ட் கொண்டு பில்லர் போட்டுத்தான் இப்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறோம்)

தொடர்ச்சியாய் கல்லின் மேல் கற்கள் போடப்பட்டு ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமாய் தடுப்பணை எழுந்தது.. இவ்வமைப்பை முழுதும் ஆராய்ந்த ஆர்தர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் வார்த்தை..

  " The. Grand Anaicut. "

மகத்தான அணை.

இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான தமிழனின் பொறியியல் திறன் வெளியுலகத்திற்கு தெரியவந்தது..

சர் .ஆர்தர் காட்டன் இவ்வாறு எழுதுகிறார்.

ஆழம் காண இயலாத மணற்படுகைகளில் நீருக்குள் எப்படி அடித்தளம் அமைப்பது என்பதை கல்லணை அமைப்பைப் பார்ந்து கற்றுக்கொண்டேன். இம்மகத்தான செயல் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பழமையான தொழில்நுட்பத்தில்தான் 1874 ம் ஆண்டு கோதாவரியின் குறுக்கே நான் தடுப்பணை ஒன்று கட்டினேன்.

அதன்பிறகு, கரிகாலன் கட்டிய அதே கல்லணையின் மேல், சில மாற்றங்கள்.. நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர், மதகுககள் , கல்தூண்கள்  அமைக்கப்பட்டன..

1840 ஆம் ஆண்டு இன்று நாம் காணும் 32 அடி அகல பாலம் கட்டப்பட்டது.

தமிழகரசும் கரிகாலனுக்கு மணிமண்டபம், உருவச்சிலை எடுத்து பெருமிதமும் கொண்டது.

மழைக்  காலங்களில் தண்ணீரை தேக்க, பாசனத்திற்குத்  தண்ணீர் திறப்பு என்று கல்லணை இன்றும் தன் பணியைத்  திறம்படச் செய்கிறது..

எல்லாவற்றுக்கும் முன்னோடி என்றுமே தமிழன்தான் என்பதற்கு மேலும் ஒரு சான்றுதான் கல்லணை..

ஆக்கம்: அன்புடன்.. மா.மாரிராஜன்.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.5.20

ஆண்டிகள் கட்டிய மடம்!!!


ஆண்டிகள் கட்டிய மடம்!!!

ஆண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

🌺 பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

🌺 கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.

🌺 அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

🌺 ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

🌺 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

🌺 எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

🌺 திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

🌺 இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது

🌺 திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா

1. #மௌனசுவாமி

2. #காசிசுவாமி

3. #ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்

4. #ஸ்ரீவள்ளிநாயகசுவாமி

5. #தேசியமூர்த்திசுவாமி.
எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!

🌺 தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும்  நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.

🌺 இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே #மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்

#நான்காவதாக,
ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து  சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

#ஐந்தாவதாக,
ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு  என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது  ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. 

அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.

ஆக்கம் #மகிழ்ச்சியுடன்_மகிழ்மித்ரா
--------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.20

நம் மக்களின் அனுபவ அறிவு!!!!!


நம் மக்களின் அனுபவ அறிவு!!!!!

அனுபவ அறிவு

ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

.'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை

*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து புரோட்டின், கலோரி, விட்டமின் பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,

*'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;*
*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*
*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*
*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்* என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு? லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா,

'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

பியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

*வயிறு உப்புசமா இருக்காமாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.*

*ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.*

*'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.*

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

*பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!'*

சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க

பித்தக் கிறுகிறுப்புக்க முருங்கைக்காய் சூப்,

மூட்டு வலிக்க முடக்கத் தான் அடை,

மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,

குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,

வயசுப் பெண் சோகைக்கு கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்க வாழைத்தண்டுப் பச்சடி’

என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையு சில நேரம் மருந்துகள்;பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

வாட்சப்பிலும் முகநூலிலும் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிருங்கள்
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்.
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!