
ME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!
அடிப்படைத் தேவைகளுக்கு யாரும் அலையக்கூடாது. என் மொழியில் சொன்னால் சிரமப் படக்கூடாது. அது துன்பமானது.
இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றவில்லை! செலவுகளை இழுத்துப் பிடித்தாலும் போதவில்லை. பற்றாக்குறை
இன்றைய மனிதர்கள் இரண்டுவிதமாகப் பிரிந்திருக்கிறார்கள்
1. பணத்திற்கு என்ன செய்வது என்று அலைபவன் அல்லது கவலைப் படுபவன் முதல்வகை
2. பணத்தை வைத்துக் கொண்டு, அதை என்ன செய்வது? எப்படிக் காப்பாற்றுவது? எப்படி அதைப் பெறுக்குவது என்று கவலைப் படுபவன் இரண்டாவது வகை!
மொத்தத்தில் கவலை இல்லாத மனிதனே கிடையாது!
அது என்ன அடிப்படைத் தேவை?
இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு - இதுதான் அடிப்படைத்தேவை. ரோட்டி, கப்டா அவுர் மக்கான்!
------------------------------------------------------
ஒரு படத்தில் நாகேஷ், புரட்சித்தலைவரிடம் சொல்வார்: “ பணம் பத்தும் செய்யும். என்னிடம் பணத்தைக் கொடுத்தால் நான் பதினொன்றைச் செய்வேன்”
”அதென்ன பதினொன்றாவது?”
”பணத்தால் என்ன முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதையும் நான் செய்து தருகிறேன்”
உண்மைதான்! பணத்தை வைத்துக்கொண்டு எதை வேண்டுமென்றாலும் செய்து முடிக்கலாம். வெளியில் செல்ல வேண்டாம். வீடு தேடி அனைவரையும் வரவைக்கலாம்.
பணத்தால் முடியாதவை என்று சில இருக்கின்றன. நல்ல தாயை பணம் கொடுத்து வாங்க முடியாது! அன்பைப், பரிவைப் பணம் கொடுத்து வாங்க முடியாது.தூய காதலைப் பனம் கொடுத்து வாங்க முடியாது.
அதைச் சொன்னால்: “வரட்டு வேதாந்தம் பேசாதீர்கள்.” என்பான் இன்றைய இளைஞன்.
ஆகவே பணம் என்பது சுவாசத்தைப்போல முக்கியமானது. அதை மறுப்பதற்கில்லை. சுவாசமின்றி யாரும் உயிருடன் இருக்க முடியாது. பணத்தேவையும் அப்படிப்பட்டதுதான்!
-------------------------------------------------------
சரி, பணத்திற்கு என்ன செய்வது?
நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமைய வேண்டும்.
அதற்கு ஜாதகத்தில்
1.பத்தாம் வீடு
2.பத்தாம் வீட்டு அதிபதி
3.பத்தில் வந்து அமரும் கிரகம்
4.பத்தாம் வீட்டின் மேல் விழும்பார்வைகள்
5.பத்தாம் அதிபதியின் மேல் விழும் பார்வைகள்
6.அம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதியின் நிலைமை
7.பத்தாம் வீட்டுக்காரகனுடன் கூட்டணி போட்டுள்ள கிரகங்கள்
8.பத்தாம் வீட்டின் அஷ்டகவர்க்கப் பரல்கள்
9.பத்தாம் அதிபதியின் சுய வர்க்கப் பரல்கள்
10. கர்மகாரகன் சனியின் நிலைமை
ஆகியவற்றை அலச வேண்டும். அலசினால் ஒரு முடிவிற்கு வரலாம்.
யாரை வைத்து அலசலாம்.
உங்கள் துணிகளை நீங்களேதான் அலச வேண்டும். வேறு யாரும் வந்து அலசித் தரமாட்டார்கள். அப்படி அலசினாலும் உங்களுக்கு உரிய அக்கறையுடன் அவர்கள் அலச மாட்டார்கள். வாங்குகிற காசுக்கு சும்மா அடித்துப் பிழிந்து போட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.
எப்படி அலச வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன். அழுக்குப்போகத் துவைத்து அலசி, நீங்களே காயப் போடுங்கள்.
அடுத்த பாடம் அதுதான். அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடம். நாளைக் காலை அனைவருக்கும் வரும். பொறுத்திருந்து படியுங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.
----------------------------------------------------------
“வாத்தியார், தலைப்பிற்கான செய்தி எங்கே?
”அது கீழே உள்ளது, படித்துப் பாருங்கள்”
------------------------------------------------------------
நான் கடந்த 25 ஆண்டுகளாக சுதந்திர மனிதன். சுய தொழில் செய்பவன். ஆனால் அதற்கு முன் சுமார் 10 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தவன். அதனால் எனக்கு அதன் அவலங்கள் தெரியும். அதாவது வேலைக்குச் செல்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும். அதை நீங்களும் அறியக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்



ME and MY BOSS
நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!
When I Take a long time to finish, I am slow,
When my boss takes a long time, he is thorough
When I don't do it, I am lazy,
When my boss does not do it, he is busy,
When I do something without being told, I am trying to be smart,
When my boss does the same, he takes the initiative,
When I please my boss, I am apple polishing,
When my boss pleases his boss, he is cooperating,
When I make a mistake, I' am an idiot.
When my boss makes a mistake, he's only human.
When I am out of the office, I am wondering around.
When my boss is out of the office, he's on business.
When I am on a day off sick, I am always sick.
When my boss is a day off sick, he must be very ill.
When I apply for leave, I must be going for an interview
When my boss applies for leave, it's because he's overworked
When I do good, my boss never remembers,
When I do wrong, he never forgets
++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!