மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My Photo
Coimbatore, Tamil Nadu, India
எழுத்து என் தொழில் அல்ல! ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன். 2 வலைப்பதிவுகளில் இதுவரை 1,500ற்கும் மேற்பட்ட பதிவுகளை பல தலைப்புக்களில் எழுதியிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பத்திரிக்கைகள் மூலமாக சுமார் 20,000 வாசகர்களும், வலைப்பதிவுகள் மூலமாக சுமார் 3,000 பின் தொடர்பாளர்களும் இருக்கிறார்கள். இதுவரை ஆறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநி அப்பனின் அருள். ஜோதிடமும் என் தொழில் அல்ல! நான் படித்த, கற்றுணர்ந்த ஜோதிடத்தை வைத்து பலரும் கற்றுக்கொள்ள சுமார் 520 அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். மேல்நிலைப் பாடங்களை எனது தனி இணைய தளம் மூலம் எழுதத்துவங்கியுள்ளேன். எனது தொழில் செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில். தீவிரவாசகன், அது ஒன்றுதான் என்னுடைய தகுதி.அதோடு கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம். எனக்கு நல்ல நேரம் துவங்கும்போது எழுதுவதை நானே நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்!

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

நான் ரெடி! நீங்க ரெடியா?

நான் ரெடி! நீங்க ரெடியா?
டான்ஸ் ஆடறதுக்கு நான் ரெடி. பாட்டுப்பாட நீங்க ரெடியா?

ஆஹா, ஓஹோ, பேஷ்..பேஷ்!

ஆஹா, ஓஹோ, பேஷ்..பேஷ்!
மனதளவில் நான் எப்போதும் சிங்கம்தான்!

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது
ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்!

அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களை ,பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகளை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது! காப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. அதை மனதில் கொள்க!

20.2.12

Astrology எதற்கு(டா) 27 மனைவிகள்?

அருள்மிகும் அண்ணாமலையார்

Astrology எதற்கு(டா) 27 மனைவிகள்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார் கவியரசர் கண்ணதாசன். சரி, மனைவி சரியாக அமைவிட்டால், ஏற்றபடி கிடைக்கா விட்டால், அது யார் கொடுத்த வரம்? அது அவ வரம். அவஸ்தை. அதற்கெல்லாம் யாராவது வரம் கொடுப்பார்களா? அப்படி இருந்தால், அது நாம் வாங்கி வந்த வரம். முன் ஜன்ம பூர்வ புண்ணியப்படி வாங்கிவந்த வரம். பிறக்கும்போதே வாங்கிவந்த வரம். முன் ஜன்மம், பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு (Posting) அல்ல!
--------------------------------------------------------------------------
ஜாதகத்தில் வாங்கிவந்த் வரம் - குறிப்பாக மனைவியைப் பற்றிய செய்திகள் தெரியுமா?

ஏன் தெரியாது? தெரியும்.

நாள் ஒன்றிற்கு 12 லக்கினங்கள். லக்கினத்திற்கு ஏழாம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் டேரா போட்டு உட்கார்ந்து கொண்டாலும், அல்லது தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில்
உட்கார்ந்து கொண்டாலும், நல்ல மனைவி அமைவது கடினம்.
அதுதான் முதல் விதி (First Rule) இன்னும் பல விதிகள் உள்ளன. அதைப்
பற்றி மேல் நிலைப் பாடத்தில் விரிவாக அலசுவோம்.

இப்போது ஒரு புள்ளி விவரம் தருகிறேன். நாள் ஒன்றிற்கு 12 லக்கினங்கள் என்பது தெரியுமல்லவா? அப்படி உள்ள 12 லக்கினங்களில், இரண்டு லக்கினக்காரகளுக்கு மேற்சொன்ன அமைப்பில் - டிஸ்க் சுழற்சியில் - இரண்டு லக்கினக்காரர்களுக்கு மட்டும் ஏழாம் வீட்டுக்காரன் "கட்டிங்" அடித்துவிட்டு, அந்த வீடுகளில் போய் படுத்துக்கொண்டு விடுவான். அதாவது 7th lord in the 12th place from lagna or 7th lord in the 12th place from his own house

சுருக்கமாகச் சொன்னால், 2/12 = 1/6, தினம் பிற்க்கும் குழந்தைகளில் ஆறு பேர்களில் ஒருத்தருக்கு (That is one out of six) நல்ல மண வாழ்க்கை - அதாவது விரும்படியான மண வாழ்க்கை அமையாது. இதை நீங்கள் உங்கள் உறவினர்க்ள அல்லது நண்பர்கள் வட்டத்தில் சோதனை செய்து கொள்ளலாம்

அதுபற்றி பின்னால் (பிறகு ஒரு நாள்) விவரமாகப் பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------
அது என்ன சார், ஒரு மனைவிக்கே திண்டாட்ட்மாக இருக்கும்போது, 27 மனைவிகளா?

ஆமாம், அது பற்றி நாளை பார்ப்போம். இன்று அதைவிட முக்கியமான வேலை உள்ளது. வேலை என்பதைவிட கடமை உள்ளது என்று சொல்லலாம்
--------------------------------------------------------------------------------------------
இன்று சிவராத்திரி

மிகவும் விஷேசமான தினம்

ஒவ்வொரும் தங்கள் ஜ்னம் நட்சத்திரத்தன்று, சிவபெருமானை பிரார்த்தனை செய்ய வேண்டும். வருடத்திற்கு 13 தடவைகள் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும்

365 வகுத்தல் 27 = 13.5 = இரண்டு ஆண்டுகளுக்குள் உங்களுக்கு 27 ஜன்ம நட்சத்திரங்கள் வரும்.

மாதம் ஒருமுறை தங்கள் ஜன்ம நட்ச்த்திரத்தன்று சிவனைப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், குறைந்த அளவு சிவராத்தியன்றாவது சிவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பிரார்த்தனைக்கான பாடல்:


நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

(இன்னும் வரிகள் உள்ளன.முழுப்பாடலையும் தேடிப்பிடித்துப் படியுங்கள்)

இது சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த பாடல். மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில் - செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே அப்படி!

வட இந்தியாவில் சிவராத்திரியை மக்கள் விஷேசமாகக் கொண்டாடுவார்கள். சிவராத்திரியைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்திக் கிடைக்கும் செய்திகளைப் படித்து பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Maha_Shivaratri

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
கீழே உள்ள படங்கள் நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் அனுப்பியுள்ளார்கள். உங்கள் பார்வைக்காக அவற்றை வலை ஏற்றியுள்ளேன்

பெருந்துறைப் பிராட்டியார் உடன் உறை சப்தரிஷீர்வரவர் - ஊற்சவ மூர்த்தியாக அலங்காரத்தில் வலம்வரும் காட்சிகள்! திருவாதிரை உற்சவத்தில் எடுக்கப்பெற்ற படங்கள்

1
2
3
4

----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

19.2.12

வண்ண மயமான செய்திகள்

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை நால்வரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன
படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
1


வண்ண மயமான செய்திகள் 
ஆக்கம்: தேமொழி

'கருப்புப்' பணம் சேர்த்த அதிகாரிகளைப் பற்றி 
அரசு வெளியிட்ட 'வெள்ளை' அறிக்கை
'நீலப்' படமெடுத்த இயக்குனர் கொடுத்த 
'மஞ்சள்' கடுதாசி பற்றிய அறிவிப்பு


'சிவப்பு' விளக்கு வரைவின் மகளின் 
வாழ்க்கை பற்றிய 'பச்சை' பச்சையாய்க் கதை
'காவி' உடை காமலீலை சாமியாருக்கு  
'கறுப்புக்' கொடி காட்டிய மக்களின் கண்டனம் 


வண்ணமயமான செய்திகள் பல கொடுத்து 
மக்களின் மனம் கவரும் பத்திரிக்கையுடன் 
சாயம் வெளுக்காமல் துவைக்க ஒரு 
சலவை சோப்பு இலவச இணைப்பு  
--தேமொழி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
வரை படம்:
வரைந்தவர்: தேமொழி



படத்தைப் பற்றிய செய்தி:

நிழல் போன்ற தோற்றத்தில் உள்ள "சில்லோவெட்" (Silhouette) படத்தை தமிழில் "நிழற்படம்" என நாம் குறிப்பிடுவோம். வெளிர் வண்ண பின்புலத்தில் வெளிக்கோடுகளை மட்டும் கொண்டு உட்புறம் முழுவதும் கருமையாக வண்ணம் பூசப்படும் இந்த ஓவிய முறைக்கு பெயர் வந்த கதையே வேடிக்கையானது.  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரென்ச் நிதியமைச்சரான  "ஏட்யன் டி சில்லோவெட்" (Étienne de Silhouette) என்பவரே இந்த ஓவிய முறைக்கு பெயர் வரக் காரணமாம்.  போர்க்காலத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக அவர் நிர்ணயித்த கண்டிப்பான சிக்கன நடவடிகைகளை பிடிக்காதவர்கள், அவரின் நடவடிக்கைகளை கஞ்சத்தனமானது, கருமித்தனமானது எனக் கேலி பேசினார்கள்.  அதிலிருந்து குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய இதுபோன்ற ஓவியங்களுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டதாம்.  அவர் மிக குறிகிய காலமே பதவி வகித்ததை குறித்தும், அவர் மாளிகையில் இது போன்ற படங்களை சேகரித்து வைத்ததும் மற்ற பிற காரணங்களாக சொல்லப் படுகின்றன.

இந்த கட்டிடத்தின் படத்தை நிழற்பட முறையில் மைக்ரோசாஃப்ட் வர்டில் (Microsoft Word: Insert =>Shapes=>) வரைந்தேன்.  மேலே பறக்கும் கொடி முதற்கொண்டு அணைத்து வடிவங்களும் மைக்ரோசாஃப்ட் வர்டில் இருந்து எடுத்ததுதான். உலகில் மிகுந்த அதிகாரம் உடைய அதிபர் வாழும் இந்த மாளிகையை அடையாளம் தெரிகிறதா? ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் நிழற் படம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

சிறுகதை: அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். 
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
------------------------------------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"இதோ அம்மா குத்துக் கல்லாட்டம் எதிர்ல‌ இருக்கேன், நா செத்து போய்ட்டேன்னு  அழறியேடா குழந்த.."

அவனை மடியில் போட்டுக் கொண்டு அம்மாவும் கண் கலங்கினாள்.

நேற்று மாலையிலிருந்தே அவன் விடாமல் ஜபம் மாதிரி 'எங்க அம்மா செத்துப்போயிட்டா, எங்க‌ அம்மா செத்துபோயிட்டான்னு' அழத் துவங்கி விட்டான்.

எதனால் அவனுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் மலை முகட்டு மேகம் போல கவிஞ்சுண்டது? யாருக்கும் தெரியவில்லை.

"ஏதாவது கனாக்கண்டயோடா, குழந்தை?"

"எங்க அம்மா செத்துப்போய்ட்டா"

"எதாவது திருஷ்டி கழிச்சுப்போட்ட எலுமிச்சம் பழத்தை, மொளகாய மொதிச்சுப்பிட்டு வந்திருப்பான் மாமி"

மாவு மிஷின்காராள் ஆத்து ஜானகியோட அபிப்ராயம்.

"எங்கம்மா செத்துப் போய்ட்டா"

கீற‌ல் விழுந்த கிராமஃபோன் கணக்கா அதே பல்லவி.

அம்மாவும் உப்பு மிளகாயை எடுத்து வந்து திருஷ்டி கழிக்கிறாள். அம்மாவின் சுற்றும் கையை சுற்றி சுற்றி  மலங்க மலங்கப் பார்த்து முழிக்கிறான்.

"எங்க‌ அம்மா செத்துப்போய்ட்டா..."

வீடே ஸ்தம்பித்து நிலை குலைந்து நிற்கிறது. இரண்டு அண்ணன் மாரும், அக்காவும் கடைகுட்டித் தம்பியின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று துப்புத் துலக்க அவனுடைய எட்டாம் வகுப்புத் தோழர்களை எல்லாம் பேட்டி காண்கிறார்கள்.

முதல் நாள் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.

இரண்டு ஆண்டுகளாக நாடகத்தில் அவனைத்தான் நடுநாயகமாக வைத்து நிகழ்ச்சி நடந்தது.இந்த ஆண்டு அவனுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவனுக்குத் திருப்தியில்லை.அவனை மேடையில் பார்த்த பையன்க‌ள் எல்லாம் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்தது போல கைகொட்டி சிரித்தார்கள். அதில் அவன் கொஞ்சம்  உள்வாங்கிப் போயிருக்கிறான் என்று ஊகிக்க முடிந்தது.

அதற்கும் அம்மாவை மனத்தளவில் அவன் சாக அடித்தத‌ற்கும் என்ன சம்பந்தம்? புதிர் அவிழவில்லை.

"என் மேல இவனுக்கு கொள்ளப் பிரியம். சும்மாவா? அஞ்சு வயசு வரை பால் உறிஞ்ச‌னவனாச்சே!எங்க அக்கா எவ்வளவோ முயற்சிப் பண்ணிப் பாத்தாளே,

இவனைப் பால் மறக்கடிக்க... ஒண்ணும் நடக்கலை.ராத்திரி ஒரு மணிக்கு தூக்கத்திலேயே மோப்பம் பிடிச்சுண்டு நாக்குட்டியாட்டும் வந்து என்னோட
ஒட்டிண்டுடுவன்..... "

அம்மா அந்த 13 வயது குழந்தையை மீண்டும் மடிக் குழந்தையாக பாவித்து உச்சிமோந்தாள்.

"என்னடா பண்ணித்து? எதையாவது பார்த்து பயந்துட்டயா?" அப்பா அக்கறையாக விசாரித்தார்.

காந்தி ஜெயந்தி, பாரதி விழா, விவேகானந்தர் ஜெயந்தி என்று வீட்டில் தங்காமல் சுற்றி வரும் அப்பா, எதற்கும் கலங்காத அப்பா, கண் கலங்கி அவன்
தலையை அன்புடன் தடவி விட்டுக் கொண்டு அவன் காலை எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டார்.அம்மா மடியில் தலையும் அப்பா மடியில் கால்களும்..மீண்டும் மந்திரம் சொல்வது போல,  "எங்க அம்மா செத்துப் போய்ட்டா ..."

அம்மா,அப்பா, அண்ணன்கள், அக்கா, இரும்புக் கடையாத்துப் பையன்கள், இந்தி வாத்தியார் அகத்து மாமியும் பையன்களும், இன்னும் பலரும் சுற்றி நின்று
கவலையோடு பார்க்கின்றனர்.

"எங்க அம்மா செத்துப் போய்ட்டா ..."

"பைத்தியம் பிடிச்சுடுத்துடா தொப்ப கணபதிக்கு..." அவன் தெருப் பையனகள் குசு குசு வென்று பேசுகிறார்கள்.அவன் அம்மா கொடுக்கும் ஊட்டத்தால் 'கொழுக் மொழுக்' என்று இருப்பதால் அவனுக்கு தொப்ப கணபதி என்று 'நிக் நேம்!'

"போங்கடா.. ஓடுங்கடா.. எதையோ பார்த்து பயந்துட்டான் .. பைத்தியம்னு பட்டம் கட்டரேளா.. "

அம்மா குட்டி போட்ட தாய்ப் பூனை போல சீறினாள்.

"பகவானே! சடைஉடையாரே! இதென்ன சோதனை?.."  அம்மா கதறினாள்.

"எங்காத்துப் பக்கம் இப்படி கோட்டி பிடிக்கிற ஹிஸ்டரி ஒன்னும் இல்லை.."
அப்பா முணுமுணுத்தார்.

அம்மாவின் பாம்புச் செவியில் இது விழுந்ததோ இல்லையோ அவள் பொங்கி எழுந்தாள்.

"ஆமாம்! எங்காத்துப் பக்கம் உண்டுதான் அதுக்கு நா என்ன பண்ணமுடியும்? இத்தனை நாள் இல்லாம எங்காத்தை சாட உங்களுக்கு இப்பதான் நேரம்
கிடைச்சதாக்கும்?"

"அதுக்குச் சொல்லலை..."  அப்பா மென்று முழுங்கினார்.

"ஆமாம் நேரும் சீருமா வளர்ந்து,  நல்ல மார்க் வாங்கி, இஸ்கூல் ஃபைனல் பாசாயிட்டு கவர்மென்ட் வேலைக்குப் பரிட்சைக் கொடுத்துட்டு மாமாவாத்துக்குப் போனான் எங்க அண்ணா .. அங்க என்ன நடந்ததோ ஏது நடந்ததோ ஆருக்குத்தெரியும்? வரும்போது இதப் போலத்தான் 'நா தப்பு பண்ணிட்டேன்.. நா தப்புப் பண்ணிட்டேன்'னு ஒரே பொலம்பல்.

என்ன தப்பு பண்ணினான் ஏது தப்புப்பண்ணினான், மாமாவாத்தில் யாரக் கேட்டாலும் சொல்லலை.  பராபரியா காதுல விழுந்தது என்ன‌ன்னா மாமா

பொண்ணுகிட்ட ஒரு ரோஜாப் பூவ நீட்டி 'என்ன உனக்குப் பிடிச்சிருந்தா இத சுப்பிரமணியர் படத்துல வை"ன்னு சொல்லியிருக்கான்..அவள் ஊரைக்கூட்டி
ஒப்பாரி வச்சுப்பிட்டா. மாமா அவனை கைநீட்டியிருப்பாரோ என்னவோ, ஆர் கண்டா..?"செஞ்சது தப்புன்னு" அவன் மனசில வாங்கிண்டுட்டான்.அது அவனை
பிடிச்சு ஆட்டி வச்சுடுத்து. அடங்காம எல்லாரையும் அடிக்க கடிக்க ஆரம்பிச்சுட்டான். கீழ்பாக்கத்துல கொண்டு விட்டுட்டு திரும்பிப் பாக்காம எங்க‌ அப்பா வந்துட்டார்... இன்னமும் அங்க‌தான் இருக்கான்,,இருக்கானோ செத்துப் போயிட்டானோ ஆரு கண்டா...."அம்மா புலம்பினாள் தன் அண்ணனை நினைத்து...

"சரி சரி வருத்தப்படாதே... நாம மனசரிஞ்சு ஒரு பாவமும் பண்ணலை... நம்மை பகவான் கைவிட மாட்டார்... முதல்ல இவனை உள்ளூர்

கோவிலுக்கெல்லாம் கூட்டிண்டு போய் பிரார்த்தனை பண்ணுவோம். கோட்டை மாரியம்மன் கைகண்ட தெய்வம் பாத்துக்கோ.. தரிசன மாத்திரத்தில
சரியாக்கிவிடுவள்..."

அப்பா ஆறுதலாகச் சொன்னார்.

அம்மா சாப்பிட மறுத்து அவனை அணைத்துப் படுத்துக் கொண்டாள்.

சின்ன அண்ணா தன் புலனாய்வு செய்தியுடன் வந்தான்.

"அம்மா, அப்பா! என்ன நடந்துருக்குன்னு கேளுங்கோ! இவன் நடிச்சதைப்பார்த்து பையன்கள் எல்லாம் கோட்டாளி பண்ணி சிரிச்சுருக்கா.. அதுல மனசொடிஞ்சு போயி மேடையோரமா நின்னு இருக்கான்.. அப்போ தலைமை தாங்க‌ வந்த டி இ ஓ தன் கதையைச்சொல்லியிருக்கார். 'பையன்கள் எல்லாம் தங்கள் பாடத்தை அன்றைக்கு அன்றே படித்து எப்போதும் பரிட்சைக்குத் தயாராக இருக்கணும். பரிட்சை சமயத்தில் ஏதாவது தடங்கல் வந்தால் கூட எப்போதும் தயாராக இருந்தால் நன்றாக எழுதிவிடமுடியும். என்னுடைய இறுதித்தேர்வு சமயம் என் அம்மா இறந்துவிட்டாள்.நான் முன்னரே படித்து வைத்து இருந்ததால் அம்மாவின் உடல் வீட்டில் இருக்க நான் பரிட்சை எழுதினேன். பரிட்சை முடிந்து வந்து அம்மாவுக்குக் கொள்ளி வைத்தேன். பரிட்சை முடிவுகள் வந்த போது நான் மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கியிருந்தேன் ...' இப்படி பேசியிருக்கார். இவன் அதை தன் அம்மா செத்துவிட்டதாக மனதில் வாங்கிக் கொண்டு விட்டான் என்று தோணறது...."  சின்ன அண்ணா விளக்கினான்.

"ஏண்டா அப்படிதானே...? அண்ணா சொல்றபடி டி இ ஓ வோட அம்மாதானே செத்துப் போய்ட்டா..? உங்க அம்மா இங்க இருக்கா பாரு..."

எல்லோரும் அவனுடைய பல்லவிக்கு அநுபல்லவி பாட ஆரம்பித்தார்கள்.

அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிய ஆரம்பித்தது. அம்மா உயிருடன் இருப்பது தெரிந்தது.

புலம்புவது குறைந்தது. ஆனால் மெளனம் அவனை ஆட்கொண்டது.

மறு நாள் "யாரும் வரவேண்டாம் நான் மட்டும் அவனை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று அப்பா கிளம்பினார்.

குதிரை வண்டி ஸ்டாண்டுக்கு அவனை அழைத்துப் போகும் போது, எதிரில் அச்சிரா நரசிம்மைய்யர் வந்தார். அப்பாவின் நெடுநாளைய செள‌ராஷ்டிரா நண்பர்.

"சார் வசந்தா ஹால்ல ஒரு சக்தி உபாசகர் வந்துருக்காருங்கோ சார். நம்ப மஹாஜனமெல்லாம் அங்கதான் நிக்குது. நிங்களும் பையனை அங்க கூட்டிப்
போகுது சார் சரியாய்ப் போடும்" என்று செள்ராஷ்ட்ர தமிழில் கூறினார்.

"சரி.. சரி.."அப்பா கூறிக் கொண்டே வண்டியில் அவனை ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார்.

கோட்டை மாரியம்மன் விபூதியை வாங்கி அவன் தலையில் அப்பா கொட்டினார்.

"எல்லாம் சரியாப் போச்சு... எல்லாம் சரியாப் போச்சு.. You are alright; you are perfectly normal" என்று சொல்லிக் கொண்டே அபிஷேகத் தீர்த்தத்தை எடுத்து அவன் முகத்தில் அடித்தார்.

தன் கணீர் குரலில் "உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா " என்ற பாரதி பாடலை குரல் எடுத்துப்பாடினார்.

அவனுக்கு அப்போதே எல்லாம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்துவிட்டான்.

ஆனாலும் வழக்கம் போல பேச வரவில்லை.

அங்கிருந்து வசந்தா ஹால் அருகில்தான். அங்கே அழைத்து சென்றார்.

அங்குள்ள தனி அறையில் அந்த சக்தி உபாசகர் தாடி , பெரிய ஒரு ரூபாய் பொட்டு,ஜடாமுடி எல்லாவற்றுடனும் மாந்திரிகர்களுக்கு உண்டான 'கெட் அப்'புடன் அமர்ந்து இருந்தார். குங்குமச் சிவப்பு ஆடை.

ஓரிருவர் அவர் முன்னால் பவ்யமாக அமர்ந்து இருந்தனர்.அதில் உள்ளூர் பிரமுகர் ஒருவடைய மனைவி ஒருவர். அந்த அம்மாளை அவனுக்குத் தெரியும்.

அவனை உள்ளே நடப்பதை பார்க்கும் படியுள்ள ஒரு ஜன்னல் அருகில் உட்கார வைத்துவிட்டு, அப்பா பூ ப‌ழம் வாங்கப் போனார்.

அப்போதுதான் அந்த நிகழ்ச்சி உள்ளே நடந்தது. அவன் அதிர்ச்சி அடைந்தான். அங்கிருந்து சாலைக்கு ஓடினான் அப்பாவை பூக்கடையில் பிடித்தான்.

"வாங்கோ அப்பா ஆத்துக்குப்போவோம்.."

"என்னடா, தெளிவா பேசரயே... அந்த சக்தி உபாசகரைப் பார்த்துட்டு...."

"வேண்டாம் வேண்டாம் ... போவோம் வாங்கோ... எனக்கு ஒண்ணும் இல்லை... அம்மா ஆத்துல கவலையோட காத்துண்டு இருப்பாப்பா.. சீக்கிரம் போகலாம்..வாங்கோ..."

"டேய்!உனக்கு நன்னா தெளிஞ்சுடுத்துடா... அம்மா உயிரோடு இருக்கா புரிஞ்சுதோன்னோ?"

"ஆமாம் , ஆமாம் அம்மா சாகலை.நான் தான் டி இ ஓ அம்மாவை நம்ப அம்மாவோட போட்டு குழப்பிண்டுட்டேன்."

அப்பாவும் மகனும் அகம் திரும்பினார்கள். நடந்ததயெல்லாம் கேட்டு எல்லோரும் ஆனந்தப்பட்டார்கள்.அம்மா பால் பாயசம் செய்தாள்

"அந்த சக்தி உபாசகர் ரூமுக்குள் என்னடா செய்தார்?"

வீட்டிலும், தெருவிலும், பள்ளியிலும் எல்லோரும் கேட்கத் துவங்கினார்கள்.

அது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவனுடன் அதுவும் சேர்ந்து அழிவதையே அவன் விரும்புகிறான்.யாரிடமும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டான்.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


Ten steps to success
By. G.Ananthamurugan

1. Self-Belief:
Success is begins in the mind. One has to be a believer, first, if one wishes to be an achiever. Never under-estimate yourself. You have no idea how often can you surprise yourself. So to begin with, let's get in the belief, "I Can."


2. Clarity of Vision:
There is no point running around without knowing where one wants to reach. you must get your job cut out. Greatest achievers in the  world have been visionaries. Know exactly what you are best at and give it your best shot.


3. Setting the Right Goals:
The goals should be realistic .The goals should be achievable ,and yet challenging enough - neither too easy nor too difficult -something in  the middle.


4. Be focused:
If the sun's rays are focused on a piece of paper with a lens, the intensity of the concentrated energy burns the paper. Focus on your  objective will enhance the intensity of the effects of your efforts.


5. No Short Cuts to Success:
There are no short cuts to success. Divide your overall goals into smaller targets. Divide your monthly plans into weekly and weekly plans  into daily plans and see how simple can things be.


6. Take Risks:
Without any risk no progress is possible. Life comes to a stable standstill. People who take chances are the people who get ahead in life.  The only way to reduce risk is to take risks.


7. Take the Initiative:
People who take the initiative make the most of their lives. Proactive people do not wait for success to happen; rather they make it happen.  As they say, 'JUST DO IT'.


8. Never Hesitate to Struggle:
No one has ever climbed a mountain just by looking at it. Struggle, hard struggle, is a key to success.


9. Own Responsibility:
Failure to hit the bull's eye is never the fault of the target. People, who own complete responsibility of their lives, are the people who  make the most of it.


10. Never Give Up:
Many people who failed in life, where those who did not realize how close they were to success when they gave up. Success demands extra-ordinary amount of perseverance. Never, never, give up.  
- G.Ananthamurugan
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5

Humour
By S.Sabari Narayanan., Chennai


1
A couple is sitting on the porch sipping wine. The wife says, "I love you."
The husband says, "Is that you or the wine talking?"
The wife replies, "It's me, talking to the wine."


2
An elderly woman called 911 on her cell phone to report that her car had been broken in to. She is hysterical as she explains her situation to the dispatcher: "They've stolen the stereo, the steering wheel, the brake pedal and even the accelerator!" she cried.
The dispatcher said, "Stay calm. An officer is on the way."
A few minutes later, the officer radios in. "Disregard." He says. "She got in the back-seat by mistake."


3
After drinking, Men talk unnecessarily, Become emotional,
Drive badly, Stop thinking, Fight for nothing
Women can do all these without drinking!


4
Q. Where can men over 50 find younger sexy women who are interest in them?
A. Try a bookstore under fiction!
Q. How can you increase the heart rate of your 50+ year old husband?
A. Tell him you're pregnant!


5
"Always be nice to your children because they are the ones who
will choose your OLD AGE HOME."
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18.2.12

Cinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்தால் பூவா'விற்கு என்னடா பண்ணுவது?

படத்தின் நாயகனும் நாயகியும்
Cinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்தால் பூவா'விற்கு என்ன (டா) பண்ணுவது?

காதல் வயப்பட்டவர்களுக்கு, தங்களின் காதல் கிறக்கத்தில் எதுவும் கண்ணில் படாது. விளங்காது. ஆகவே கேள்விகளை மறந்துவிட்டு காதலை மட்டும் பார்ப்போம். காதல் கிறக்கத்தில் நாயகனும், நாயகியும் பாடும் பாடல் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப்பாடல் - எண் ஏழு

படம்: காதலில் விழுந்தேன்

பாடல்: உனக்கென நான் எனக்கென நீ

Video Link: http://youtu.be/WAkcJkectWs
Our Sincere thanks to the person who uploaded the video clipping in the net


உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே


உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே


இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்


புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்


நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே


நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே


மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே


அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்


உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்


இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?


பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)
-------------------------------------
படம்: காதலில் விழுந்தேன் (2008)
நடிப்பு: நகுல், சுனேனா, ஹரிராஜ், சம்பத், லிவிங்ஸ்டன்
இசை: விஜய் ஆண்டனி
பாடலாக்கம்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ரம்யா & விஜய் ஆன்ட்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இந்தப் பாடல் உலகப்புகழ்பெற்ற பாட்கி ரிஹன்னாவின் unfaithful (என்ன தலைப்புடா சாமி) என்னும் பாடலின் இசையைத் தழுவி எடுக்கப் பெற்றதாகும்.அதையும் கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள் .அதற்கான சுட்டியும் கீழே உள்ளது
Video clipping http://youtube/rp4UwPZfRis
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net


ரிஹன்னாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டிகள்.
http://en.wikipedia.org/wiki/Unfaithful_(song)#Music_and_lyrics
http://en.wikipedia.org/wiki/Rihanna

-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

17.2.12

Devotional சிற்றாடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்



Devotional சிற்றாடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று இன்று வகுப்பறையின் பக்தி அரங்கத்தை நிறைக்கிறது. கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
__________________________________
பாடல்: சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்

பல்லவி:
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடைஉடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)


அனுபல்லவி:
பெண்அவளின் கண்அழகைப் பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)


சரணம்:
மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணம் எல்லாம் நிறைவாள்


பின்னல்சடை போட்டுப் பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

பாடியது: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பாடலாக்கம்: அவரின் மைத்துனர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
சிந்துபைரவி ராகம்

கானொளி : http://youtu.be/bEH4G1A8P8I
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

16.2.12

Humour - கலக்கல் காமெடி நிகழ்ச்சிகள்!

திருமதி ரேவதி சங்கரன்
Humour கலக்கல் காமெடி நிகழ்ச்சிகள்!

கல்க்கும் காமெடி நிகழ்ச்சிகளில் இரண்டை இன்று பதிவிட்டிருக்கிறேன். 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடலை கர்நாடக இசையில் பாடினால் எப்படி  இருக்கும்? பாடிக்காட்டி அசத்தியிருக்கிறார் திருமதி ரேவதி சங்கரன் அவர்கள். கேட்டு மகிழுங்கள். அடுத்து தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் பிரபல மேடைக் கலைஞர் முத்து முருகன் அவர்கள் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சி (Comedy show) ஒன்றையும் வலை ஏற்றியுள்ளேன். அதையும் பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
முதலில் ரேவதி சங்கரன் அவர்களின் நிகழ்ச்சி (குறுகிய வடிவம்)



2.இரண்டாவதாக ரேவதி சங்கரன் அவர்களின் நிகழ்ச்சி (சற்று நெடிய வடிவம்)


3.திருவாளர் முத்து முருகன் (டர்பன், சவுத் ஆப்ரிக்கா) அவர்களின் காமெடி நிகழ்ச்சி



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

15.2.12

Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

ஸ்ரீவரதராஜப் பெருமாள்

திருக்கோவிலின் முகப்புத் தோற்றம்
Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 11
கேட்டை நட்சத்திரம்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
-----------------------------------
ஆழ்வார்களில் முதன்மையானவர் ராமானுஜர். சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த அவர், சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர்.
1,017 ஆம் ஆண்டுமுதல் 1,137ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். வாழ்ந்தவர் என்று சொல்வதைவிட, வாழ்ந்த காலத்தில் பெருமாளுக்கு சேவைகள் செய்தவர்.

திருவரங்கம்  சென்று அங்கேயே தங்கி ரங்கநாதருக்கு சேவை செய்தவர். மக்களின் பார்வை வைணவத்தின் மேல் விழும்படியாக பல பாசுரங்களை இயற்றியவர்

அவர் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு அரசனுக்கு நிகரான புகழைப் பெற்றிருந்தார். அவருடைய குரு பெரிய நம்பிகளும் சீடர் கூரத்தாழ்வாரும் அவருடனேயே தங்கியிருந்தனர்

ராமானுஜர் புகழ் பெற்று விளங்குவதைப் பொறுக்காத சோழ மன்னன் ஒருவன், அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படி தனது படை வீர்ரர்களை அனுப்பினானாம். புகைப்படங்கள், செய்தித்தாள்கள் இல்லாத காலம், ராமானுஜரை அடையாளம் தெரியாது. ஆகவே வந்தவர்களிடம் தன் குருநாதர் மாட்டக்கூடாது என்று நினைத்த ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு, சோழப் படையினரிடம் சென்று நான்தான் ராமானுஜர் என்று சொல்லி, அவர்களுடன் சென்றாராம. அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் (என்ன பெயருடா சாமி!) சென்றார்களாம்.

பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும்படி மன்னன் சொல்ல, சென்றவர்கள் மறுக்க, இருவரின் கண்களையும் பறிக்கும்படி கூறித் தண்டனை கொடுத்துவிட்டானாம் அந்தச் சோழ மன்னன். கூரத்தாழ்வார், தன் கண்களைத் தானே குத்திக்கொண்டு பார்வை இழந்தாராம் சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினார்களாம்.

பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்துகொண்டு வந்து தங்கிய தலம்தான் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றது. பெரிய நம்பிகளுக்கு வயது 105. வயதான காலத்தில் கண்களை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானாராம். அவர்மீது கருணை கொண்ட வரதராஜப்பெருமாள், அவருக்குக் கண்பார்வை அளித்துக் காட்சி கொடுத்ததோடு, அவருக்கு வைகுண்டப் பிராப்யதியையும் வழங்கி அருள்பாலித்தாராம்.

பசுபதி கோவில் என்னும் அத்தலத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்தான் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்!

அக்கோவிலில் பெரியநம்பிகளுக்குத் தனி சன்னிதானம் உள்ளது

பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவராம். அன்றைய தினம் கோவிலில் அவரது திருநட்சத்திர விழா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் அவருக்குப் பூஜை உண்டு.

கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க அவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை, அதிரசம், வடை நைவேத்யம் முதலியவற்றுடன் அந்த வழிபாட்டை அவருக்குச் செய்கின்றனர்.

மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை அங்கே நிலவுகிறது. அந்த எண்ணெய் கோயிலில் கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்ளலாம்!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்திலுள்ளது பசுபதிகோவில். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 9 மணிவரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை.

வரதராஜ பெருமாள் மட்டுமின்றி பெருந்தேவி தாயாரும் அங்கே அருள் பாலிக்கின்றார்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்து பலனைப் பாருங்கள்

கல்யாண்ச் சந்தையில் விலை போகாத 4 நட்சத்திரங்களில் கேட்டையும் ஒன்று. மக்களின் முட்டாள் தனம் அது! நட்சத்திரங்கள் எல்லாம் சமமானவையே! ஒரு கேடும் வரப்போவதில்லை. ஜாதகத்தின் எழாம் வீடு, லக்கினம், அதன் அதிபதிகள், காரகர்கள் போன்ற மற்ற அம்சங்கள்தான் முக்கியம். அதை எல்லாம் யார் கேட்கிறார்கள்? தங்களுக்கு என்று வரும்போது கேட்க மாட்டார்கள்.

கேட்டை நட்சத்திரத்திற்கு மட்டும் ஒரு சின்ன குறைபாடு உண்டு. சந்திரன் நீசமாகியிருப்பான். கேட்டை நட்சத்திர ஜாதகர்களுக்கு லக்கினத்தை வைத்துப் பலன்கள் வித்தியாசப்படும். அவற்றை வேறு ஒரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

14.2.12

Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?



Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 10
ஆயில்ய நட்சத்திரம்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
-------------------------------------------
துர்வாச முனிவர் என்றால் நமக்கு அவருடைய கோபமும், சகுந்தலைக்கு அவர் கொடுத்த சாபமும்தான் நினைவிற்கு வரும்.

சகுந்தலையின் காவியததை எழுதிய மாபெரும் கவிஞன் காளிதாசன், அந்த நிகழ்வை விவரிக்கின்றான்.

அதாவது சகுந்தலை தன் காதலன் துஷ்யந்தனைப் பற்றிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தாளாம். அந்த நேரத்தில் அங்கே வந்த முனிவரை அவள் கண்டு
கொள்ளவில்லையாம். உடனே பிடி சாபம் என்று சாபமிட்டுவிட்டார் துர்வாசர். அவளது காதலன் அவளை மறந்து விடுவான் என்பதே சாபம்

சகுந்தலை விடுவாளா? முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பைப் பெற்று அந்த சாபத்திற்கு விமோசனம் தேடியதுடன், தன் காதலனைச் சேர்ந்தாளாம்.

அந்தக் காலத்தில் காளிதாசன் எழுதிய காதல் கதை அது.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காளிதாசர். அதை மனதில் வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்
-------------------------------------------------------
வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்திலும் துர்வாசர் காணப்படுகின்றார்.

மகாபாரத்த்திலும் அவர் வருகிறார். குந்திக்கு அதர்வ மந்திரத்தை போதித்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது.

அவ்விரண்டு நிகழ்வுகளுமே வெவ்வேறு யுகங்களில் நடைபெற்றன.

சத்ய யுகம், த்ரேதா யுகம், துவபார யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு பிரிவுகளாகச் சொல்லப்படுகின்றன. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்தது.
மகாபாரதம் துவபார யுகத்தில் நிகழ்ந்தது. காளிதாசர் நம் யுகத்து ஆசாமி.

குழப்பம் என்ன்வென்றால், துர்வாசர் எப்படி மூன்று யுகங்களிலும் தலை காட்ட முடியும்?

அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது.

காலகட்டங்களை மற்ந்து விட்டு சொல்லப்படும் செய்திகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
--------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த புதுக் கதைக்கு வருகிறேன்

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் சிவபூஜை செய்துவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆசாமி ஒருவன் துர்வாசரின்
நடையைப் பார்த்து, " நடையா, இது நடையா, நண்டின் நடையல்லவா தெரிகின்றது" என்று கேலி செய்து பாட்டுப்பாடியதுடன், அவரைப் போல நடந்தும் காட்டினானானம். துர்வாசர் எசப்பாட்டு (எதிர்வினைப் பாட்டு) பாடாமல், அவனை அக்கணமே நண்டாகும்படி சபித்து விட்டாராம்.

அவன் தன் செயலுக்கு வருந்தி, மன்னிப்புக் கேட்டு வேண்டினானாம்.

அவர் அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று அங்கு உறையும் சிவனாரைப் பூஜித்து சாப விமோசனம் பெறச் சொன்னாராம, துர்வாசரின்
அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றானாம் அவன். சிவனின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை
இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் அவர் கற்கடேஸ்வரர் என்னும் பெயர் பெற்றார் உள்ளூர் வாசிகள் சிரமப்பட்டு கற்கடேசுவரர் திருக்கோவில் என்று சொல்லாமல் சிம்ப்பிளாக நண்டுக்கோவில் என்று சொல்கிறார்கள்

அந்தக் கோவில்தான் ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் கோவில். அதாவது அந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்.
---------------------------------------------------------
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இறைவனின் பெயர்: கற்கடேஸ்வரர்
அம்மனின் பெயர்: அருமருந்துநாயகி
தல விருட்சம் : நங்கை மரம்
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
காலம்: சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஆலயம்
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்:: திருந்துதேவன்குடி, தஞ்சை மாவட்டம்
சிவராத்திரி, மற்றும் திருக்கார்த்திகை நாட்களில் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

முகவரி:
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்,
திருந்துதேவன்குடி - 612 105.
வேப்பத்தூர் போஸ்ட்,
திருவிடைமருதூர் தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம்.

பிணி நீக்கும் சிவன என்று பெயர் பெற்றவர் இங்கே உறையும் சிவனார். ஆகவே பிணி உள்ள மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தலத்திற்குச் சென்று வழிபடலாம். இவரைப் பிணி நீக்கும் சிவன் என்று சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ.,
தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து குலுக்கல் வண்டி (ஆட்டோ) வசதியும் உண்டு.

வடமொழியில் ஆயில்ய நட்சத்திரத்தின் பெயர் அஷ்லேஷா

இத்திருக்கோவிலுக்கு அருகில் உள்ள மற்ற கோவில்கள். போகிறது போகிறீர்கள் அவற்றையும் பார்த்துவிட்டு வாருங்களேன்.

ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருவிடைமருதூர்
திருமங்களக்குடிக் கோவில்,
சூரியனார் திருக்கோவில்
திருவிசை நல்லூர் திருக்கோவில்
சரபேஸ்வரர் திருக்கோவில் திருப்புவனம்

ஒருமுறை சென்று வாருங்கள். பலனை வந்து பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

13.2.12

Astrology வாங்கியதும், வாங்க மறந்ததும்!



Astrology வாங்கியதும், வாங்க மறந்ததும்!

பயிற்சிப்பாடம்

பணம் இருப்பவர்களில் சிலர் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை! அதீத பணம் இருந்தால் அது வைத்திருப்பவனைச் சும்மா இருக்க விடாது.

    "ஒரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதீத, தேவைக்கு மேலே பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்"  என்ற் திரைப்பட வசனம் ஒன்று உண்டு. அது உணமை.

அதீத பணம் வைத்திருப்பவன் அதைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டியதிருக்கும். வங்கியில் போட்டு வைத்தால், அது பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அங்கே வட்டி குறைவு. இன்றைய நிலையில் பண வீக்கத்தைவிட (inflation) வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணம் வளரும் விகிதம் குறைவு.

Definition of 'Inflation' The rate at which the general level of prices for goods and services is rising, and, subsequently, purchasing power is falling. பணப்பபுழக்க விகிதம் Statistically determined measure of the rise in price levels and therefore the decline in the value of money. The inflation rate shows the percentage change in price levels over a given period (month, year).

ஆகவே அதைச் செய்வதற்குத் தயங்குவான். பணம் பல மடங்கு பெருக வேண்டும் என்று ஆசைப் படுவான். இடம், நிலம் அல்லது வீடுகளை வாங்கிப்போட ஆசைப்படுவான்.

வசதிக்குத் தகுந்தாற்போல இரண்டு அல்லது நான்கு மனை இடத்தில் உள்ள பெரிய வீட்டை வாங்குவான். தி.நகர், வடபழநி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் வாங்குவதற்கு ஆசைப்படுவான். செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் போன்ற ஊர்களின் புறநகர்ப் பகுதிகளில் 4 ஏக்கர் அல்லது 8 ஏக்கர் இடத்தை வாங்கிப்போட ஆசைப்படுவான்.

அப்படிப்போட்டவர்களின் கதையை, அவர்கள் வாங்கிய சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடராக எழுதி பெரிய புத்தகமாகப் போடலாம் அந்தஆளவிற்கு என்னிடம் கதைகள் உள்ளன. அப்படிச் செய்து மேன்மை அடைந்த இண்டு பேர்களை நீங்கள் காட்டினால், சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நான்கு பேர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.

அதற்கெல்லாம் காரணம் என்ன?

எல்லாம் வாங்கி வந்த வரம்!

இருப்பது போதும். வருவது போதும் என்று உங்களால் ஏன் இருக்க முடியவில்லை?

முப்பது ஆண்டுகள் மாங்கு மாங்கென்று துபாயில் குப்பை கொட்டியவன் என்ன சாதித்திருப்பான் என்று பார்த்தால், சென்னை திருவான்மியூர், அடையாறில் போன்ற பகுதிகளில் இரண்டு வீடுகளை வாங்கியிருப்பான். காரைக்குடி அல்லது புதுக்கோட்டையில் ஒரு வீட்டை வாங்கியிருப்பான். மனைவியை, குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு, இளமையை, இனிமையைத் தொலைத் திருப்பான். வளைக்கரங்களின் அணைப்பைத் தொலைத்திருப்பான், அவள் கைச் சாப்பாட்டைத் தொலைத்திருப்பான். தொலைத்ததெல்லாம் கணக்கில் வராது. அதுதான் அவலம்!

வாங்கியதெல்லாம் கணக்கில் வரும். வாங்க மறந்தது அல்லது வாங்க விடுபட்டதெல்லாம் (அவனுடைய) கணக்கில் வராது!

தினத்தந்தி, மக்கள் தொலைக்காட்சி, பூப்போன்ற சாதம், கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைப்பூ உசிலி, அம்பிகா அப்பளம், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய், பாஸந்தி, காராச்சேவு, ஃபில்டர் காப்பி,  மாலை நேரத்தில் கோவில் வளாகத்தில் வீசும் காற்று, மல்லிகைப்பூ பிடறியை மறைக்க பேசும் கண்களை உடைய பெண்கள் என்று வாழ்க்கையின் பல சுவைகளை இழந்திருப்பான்.


இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள். தங்களின் வ்றுமையான குடும்பச் சூழலை மாற்றியமைப்பதற்காகச் சென்ற தியாக மனப்பான்மை உள்ளவர்களும் இருக்கிறார்கள். தியாக உள்ளங்களுக்கு புறச் சுகங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.

அப்படிப் பலவற்றைத் தொலைத்து வாங்கிய சொத்துக்களை பிறகு பார்ப்போம். சிலருக்கு வம்சா வழியில் வந்த சொத்துக்களும் பிரச்சினைகளை உண்டாக்கும். தந்தையார் தான் உயிரோடு இருக்கும்போதே பிரித்துக்கொடுக்க மாட்டார். பிரித்துக்கொடுத்தால் பசங்க தன்னைத் திராட்டில் விட்டு விடுவார்கள் என்று பிரித்துக்கொடுக்க மாட்டார். புத்திசாலித் தந்தை உயில் எழுதிவைத்துவிட்டுப்போவார். சில அசமந்தங்கள் அதையும் செய்யாது.

டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்பா மேலே போன பத்தாம் நாள் காரியம் செய்வதற்குள்ளேயே சண்டை வலுத்து அடிதடிவரை போன குடும்பங்களை எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் ஆசைதான் காரணம்
--------------------------------------------------------
அசையாத சொத்துக்களின் (immovable properties) நிலைமை என்ன?

அசையாத சொத்துக்கள் இல்லாதவர்களைப் பற்றிக் கவலை இல்லை,
இன்று உலகில் பாதிப் பேர்கள் உறவுகளைத் தவிர வேறு சொத்துக்கள் இல்லாதவர்கள்.சொந்த வீடு, நில புலம் இல்லாதவர்கள். அதனால் கவலை இருந்தாலும், அவற்றை வைத்துப் பிரச்சினை இல்லாதவர்கள். அதே நேரம் கொடுத்து வைத்தவர்கள்

  "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
    அதனின் அதனின் இலன்" 

எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.

என்று சொல்லி வைத்துள்ளார் பொய்யாமொழிப் புலவர்.

அவர் சொல்லிவைத்துள்ளார் என்பதற்காகச் சராசரி மனிதனால் பற்றில்லாமல் இருக்க முடியாது. தங்களுடைய சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது கவலைப் படாமல் இருக்க முடியாது .பட்டினத்தார் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமென்றால் அது சாத்தியப்படலாம்.

சிக்கல் வருவது எல்லாம் நம் கையிலா இருக்கிறது. அது விதிக்கப்பட்டது. அப்படி வரும்போது, அந்தச் சிக்கல் தீருமா? அல்லது தீராதா? எப்போது தீரும் என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.

அசையாத சொத்துக்களுக்கு அதிபதி 4ஆம் வீட்டுக்காரன். அவன் ஆறாம் வீட்டில் குடியிருந்தாலோ, அதாவது அமர்ந்திருந்தாலோ, அல்லது ஜாதகத்தில் நீசமாகியிருந்தாலோ. அசையாத சொத்துக்கள் கிடைப்பது சிக்கலாகிவிடும்

ஒரு உதாரண ஜாதகம் கொடுத்துள்ளேன். பாருங்கள்.



1. 4ஆம் அதிபதி சனி நீசம்.
2. 2ஆம் அதிபதி குரு ஆறில்
3. லாபாதிபதி புதன் நீசம். கேதுவோடு கூட்டு! லாப ஸ்தானத்தில் ராகு
4. சுக்கிரன் எட்டில்

இந்த அமைப்புக்களால், சொத்துக்களை வைத்து ஜாதகனுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். வம்பு, வழக்கு எதிரிகள் என்று பல அவஸ்தைகளைச் ஜாதகன் சந்திக்க வேண்டியதாயிற்று.

இதுபோன்ற அமைப்பு இருந்தால் சொத்தும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என்று சும்மா இருக்க வேண்டியதுதான்

இருக்க முடியுமா?

விதி இருக்க விடாது!

அதுதான் விதி. விதிப்படிதான் வாழ்க்கை!

ஜாதகப்படி சொத்து கிடைக்கும் என்றால் கிடைக்கும்
ஜாதகப்படி சொத்து கிடைக்காது என்றால் கிடைக்காது
ஜாதகப்படி சொத்து நிலைக்கும் என்றால் நிலைக்கும்
ஜாதகப்படி சொத்து நிலைக்காது என்றால் நிலைக்காது

இறைவழிபாடு ஒன்றுதான் சற்று நிம்மதியைத் தரும். கூடுதலாக மகிழ்ச்சியைத் தரும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.2.12

Magazine பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்தடா சாமி!

தில்லி உமா அக்காவிற்கான இரட்டையர்கள் படம்
---------------------------------------------------------------------------------------------
மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 6 கண்மணிகளின் 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++



பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்தடா சாமி!


1
மண் ஆசை 
ஆக்கம்: தனுசு
++++++++++++++++++++++++++++++++++
விளைநிலங்கள் எனும் நில மகள்
புலம் பெயர்ந்து
விண்ணுக்கு சென்றுவிட்டாள்
பொன்மகள் என்ற அடைமொழியோடு.

நன்செய் நிலமும் நலிந்துவிட்டது
புன்செய் நிலமும் பொசுங்கி விட்டது -
இவை யாவும்
பணம்செய் நிலமாய் மாறிவிட்டது.

நெல்லுக்கும் இடமில்லை
கரும்புக்கும் களமில்லை
வாழைக்கும் காலமில்லை-நடக்கும்
வழிதடதிற்கும் வழியில்லை.

மாந்தோப்பும் மறைந்து விட்டது
தென்னந்தோப்பும் தொலைந்து விட்டது
புளியந்தோப்பும் புதைந்துவிட்டது
பூந்தோட்டதிற்கும் பூமாலை போட்டாகிவிட்டது.

கரிசல் மண்ணும் கால்கோடி
களி மண்ணும் முக்கால் கோடி
வெறும் மண்ணும் பலகோடி
கருங்கல் இடமும் நிறைக்கும் கோடி

ஏறுமலை ஏறு என வீறு கொண்டு ஏறுவது
விளைநிலத்தின் நிலையில்லா விலைகளா?- மண்
பித்துகொண்டு அலையும்
பணம் கொண்ட மனங்களின் கொலை வெறியா?.

காலடியில்கிடக்கும் மண் மீது
ஆசைஏனடா மனிதா - நீ
ஊரை சுருட்டி உயிலாக்கி கொண்டாலும்
இறுதியில் இருக்கப்போவது
இலவச மண்ணில்தான்.
-தனுசு- 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ராதையும் கிருஷ்ணரும்
ஓவியம் ஆக்கம் தேமொழி

தேமொழி அவர்கள் தன் பதினம் வயதில் தீட்டிய ஓவியங்களில் ஒன்று.  ஒரு மாத நாட்காட்டியில் உள்ள ஓவியம் ஒன்றினைப் பார்த்து அவர் வரைந்தது.  வாட்டர் கலரில் வாஷ் டிராயிங் போல் இல்லாமல் ஆயில் பெயிண்ட்டிங் எஃபெக்ட் வருவது போல வரைவது அவருக்குப்  பிடித்த முறை. அதன்படியே வரைந்துள்ளார். வரைந்து வண்ணம் தீட்ட உபயோகித்து HB  pencil, Water colours, Round Brushes (probably size numbers 0 to 5), and Sketch Pens  (camel products of http://www.camlin.com )


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

ஜெய்ப்பூர் நகரம்

ஏன் சிரித்தார்கள்?

தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். திருமதி.S. உமா, தில்லி

ஜெய்ப்பூருக்கு முதன்முதலில் கிளம்பும்போது அங்கு மொழிப்பிரச்சனை ஏற்படும் என முதலில் நான் கனவில் கூட நினைக்கவில்லை.  சரி நாம்தான் ஹிந்தி படித்திருக்கிறோமோ, எழுதப்படிக்கத் தெரியும், பேசவும் இரண்டொரு மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.  ரயிலில் ஏறியதுமே நான் நினைத்தது தவறு எனப்புரிந்தது.  அவர்கள் ஹிந்தியில் கேட்பது அவ்வளவு எளிதாகப்புரியவில்லை.  இரண்டு மூன்று முறை 'என்ன?  என்ன?' என்று கேட்டபின்பே புரிந்தது.

திரும்ப பதில் பேசுவதிலும் சிரமமிருந்தது.

ஜெய்ப்பூர் போனதும் பிரச்சனை அதிகமாகவே இருந்தது.  ராஜஸ்தானிகள் பேசும்போது அவர்கள் மொழியும் கலந்து பேசுவதால் தலையும் புரியாது, வாலும் புரியாது.  வீட்டில் சித்தப்பா குடும்பத்தினருடன் தமிழில்தான் உரையாடல்.  வேலையில்  ஆங்கிலம், ஹிந்தி என்று கலந்துகட்டி அடித்ததால் ஆறு மாதங்களில் ஓரளவு சமாளிக்கும் அளவு தேறியிருந்தேன்.  ஆனாலும் இன்றுவரை நிறைய வார்த்தைகள் புரியாது.

வேலையில் சேர்ந்து எட்டு மாதங்களிலேயே அதைவிட இன்னொரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே மாறினேன்.  சித்தப்பா பெண்கள் இருவரும் பார்ட்டி கேட்டதால் சினிமா போகலாம் என முடிவு செய்தோம்.  'ஜுட்வா' (judwah) என்ற
ஹிந்திப்படத்திற்குப்போகலாம் என முடிவானது.  டிக்கெட் வாங்கிவிட்டு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.  அப்போது என் கவனம் அங்கே ஒட்டியிருந்த போஸ்டரின் பக்கம் சென்றது.  சல்மான்கான் இரண்டு வேறு வேறு கெட் - அப்புகளில் இருந்தார்.  நான் சும்மா இருக்காமல் தங்கைகளிடம் 'இந்த படத்தில் சல்மான்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் போல' என்றேன்.  அவ்வளவுதான் எல்லாரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.  எதற்கு என்று புரியவில்லை.

அவர்களும் நிறுத்தும் வழியாய் இல்லை.  நானும் பொறுமையை இழந்து 'இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு சிரிக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு என் பெரிய தங்கை சொன்ன பதில்

"உமாக்கா, ஜுட்வா என்றால் இரட்டைப்பிறவி என்று அர்த்தம்"

- S. உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

குழந்தைகளின் உலகமே தனி!
ஆக்கம்: By K.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

ஒவ்வொன்றையும் ஆய்ந்து,பார்த்து அறிந்து, தொட்டு, சுவைத்து,கேட்டு அறியும் குட்டி விஞ்ஞானிகள்தான் குழந்தைகள். மலர்கள் மொட்டு அவிழ்வதுபோல அவர்களுக்கு இந்த உலகத்தின் ஆச்சரியங்களும், இந்த உலகத்திற்குக் குழந்தைகளும் மலர்கிறார்கள்.

 இந்த உலகம் கண்கள் விரிய முக மலர்ச்சியுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பதிலுக்குக் குழந்தைகளும் உலகத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்றன.

'உள்ள நிறைவினில் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ...?' கள்ளம் அறியாத குழந்தைகள் உள்ள நிறைவுடன் வளைய வரும்.
உலகாயதம் என்ற நஞ்சு கலவாத தேன் போன்றவர்கள் குழந்தைகள்.
போலியான முகத் திரையயோ, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடமோ குழந்தைகளிடம் இல்லை.

ஒரு குழந்தை துள்ளி விளையாடும் இடத்தில் எல்லா உயிர்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.8 வயதுவரை இந்த நிலை தொடர்கிறது.

அவர்களுடைய சிந்தனை ஓட்டத்தை யாராலும் கணிக்க முடியாது. நாம் அவர்களிடம் எதிபார்ப்பது ஒற்றைப் பாதை சிந்தனையே. வீட்டிலும், பள்ளியிலும்  நாம் போட்டு வைத்துள்ள சட்டகத்தில் அவர்கள் அடங்க வேண்டும்/பொருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.
அதற்குள் தங்களை பொருத்திக் கொள்ள முடியாத குழந்தைகளை மன நிலைக் குறைபாடு உள்ளவர்கள் என்று நாமே முத்திரை குத்துகிறோம்.

அமெரிக்காவில் வித்தியாசமாகப் பள்ளிகள் இருக்கும் என்று ஒரு நினைப்பு இங்கு உள்ளது.அப்படி அல்ல. அங்கேயும் 'நான் சொன்னபடி புரிந்துகொள்' என்ற ஆசிரியர்கள் உண்டு என்பதை அறிந்தேன்.

2 வது வகுப்புப் படிக்கும் மாணவர்களிடம் வித்தியாசமானதைக் காணும் பயிற்சி அளிக்கப்படுகிறது.(Odd man out)

ஒரு மனிதன், ஒரு நாய்,ஒரு பன்றி ஆகியவற்றின் படங்கள் உள்ள தாள் ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் கொடுக்கப் பட்டது. 'இவற்றில் எது வித்தியாசமானது' என்று ஆசிரியை கேட்கிறார். ஆசிரியையின் எதிர்பார்ப்பு குழந்தைகள் மனிதனைச் சொல்ல வேண்டும்; ஏனெனில் மற்ற இரண்டும் மிருகங்கள். ஒரு பையன் பன்றியைச் சொல்கிறான்.

காரண்ம் கேட்டதற்கு இப்படிச் சொன்னான்:'நாயும் மனிதனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பன்றியை அதுபோல ஒரு 'பெட்' ஆகப் பெரும் பான்மையோர் வைத்துக்கொள்வதில்லை. அதனால் இந்த மூவரில் பன்றியே
வித்தியாசமானது."

இதில் என்ன தவறு? இப்படிச் சொல்வதும் ஒரு கோணம்தானே?

ஆனால் அந்தப் பையனுக்கு 'கோணப் பார்வை' என்று பெயர் கிடைத்தது.

இன்னொரு பையன் பசுமாட்டைப்பற்றி 4 வரிகள் எழுதச் சொன்னால் இவ்வாறு எழுதினான்: "பசுவிற்கு 4 காலுண்டு.இரண்டு கொம்பு உண்டு. கிட்டப்போனால் முட்டிவிடும்."

தனக்குத் தெரிந்ததை சொந்தமாக தனக்குத் தெரிந்த மொழியில் எழுதினான் சிறுவன்.

ஆசிரியர் எதிர்பார்த்ததோ,"பசு ஒரு சாதுவான பிராணி. அது நமக்குப் பாலைத் தருகிறது. பால் நமது உடல்/எலும்பு வளர்ச்சிக்கு அவசியமாகிறது'

பையனுக்கு வித்தியாசமான மூளை என்று பட்டம் கட்டப்பட்டான்.
********************************************************
இது நான் தஞ்சையில் ஒரு பள்ளியினுடன் தொடர்பில் இருந்த போது நடந்த சம்பவம்.

ஒரு சிறுவன் பிராமண வகுப்பைச் சார்ந்தவன்.வீட்டில் அவர்கள் வழக்கப்படி அசைவம் சமையல் முற்றிலும் விலக்கப்பட்ட சூழல். நல்ல‌ சூடிக்கையான பையன்.அவனால் சும்மா ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது.

ஒரு நாள் வகுப்பறையின் மூலையில் பெரிய கூட்டம். ஆசிரியை சத்தம் கொடுக்காமல் சிறார்களின் பின்னால் நின்று என்ன‌ என்று க‌வனித்துள்ளர்.
ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் இரண்டு தங்கமீன்கள் வளைய வருகின்றன. அதனை மாணவர்கள் ஆர்வமுடன் போய் போய் பார்க்கின்றனர்.அதனை அவர்களுக்குக் காட்டுபவன் அந்த அந்தணச் சிறுவன்.

ஆசிரியை தன் இருப்பைக் காட்டிக் கொண்டு விசாரணையைத் துவக்குகிறார்.

அந்த 'மீனவ நண்பனை'விசாரிக்கிறார். அவன் அந்த மீன் பற்றிய எல்லாத் தகவல்களையும் சொல்கிறான். அந்த மீனின் அறிவியல் பெயர், அதன் உணவு முறை,அது கிடைக்கும்  கடலின் பெயர், அது இருக்கும் இடத்தில் அமைதியும்
நல்லெண்ணமும் இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கை, தன் வகுப்பறையில் எல்லோருக்கும் நட்பு வளர்ந்து ,அனைவரின் மதிப்பெண்களும் உயர‌ வேண்டும் என்று தான் எடுத்துள்ள முன் முயற்சி .. என்று ஆர்வத்துடன் ஆசிரியைக்குப் பாடம்  நடத்துகிறான் அந்த மாணவன்.

ஆசிரியர்களுடைய ஒரு மனோபாவம் என்னவெனில், அவர்களுக்கு மற்றவர்கள் விவரமாகப் பேசினால் பிடிக்காது. (நம்ம வாத்தியார் ஐயா மட்டும்தான் எக்ஸெப்ஷன்.)

பையன் வகுப்பின் அமைதிக்கும், கட்டுக் கோப்புக்கும் சவால் விடுகிறான் என்று சத்தம் போட்டார் ஆசிரியை. அந்த மீன்களை அவன் கதறக் கதறக் கேட்காமல் ஜன்னல் வழியே வெளியில் கொட்டினார்.அவற்றினை நாயும், காகமும் வந்து கவ்விப் போவதைப் பார்த்துக் கேவிக் கேவி அழுதான் சிறுவன்.

அதன் பின்னர் அந்தப் பையன் படிப்பில் காட்டிய ஆர்வம் குறைந்தது. அவனுடைய ஊக்கம் தூக்கத்தைத் தழுவியது. வீட்டுக்கு அவன் மீன் வளர்த்த செய்தி சொல்லப்பட்டது.

"ஒரு பிராமணனாப் பொறந்துட்டு இப்படிச் செய்யலாமாடா? நம்ம குல மானமே போச்சுடா"என்று அப்பா அவனை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கினார்.

அவனால் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தவறாகச் சொல்கிறேன்.

இந்தச் சமூகத்தால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே சரி.

வீட்டிலும் பள்ளியிலும் மட்டம் தட்டப்பட்டு உதவாக்கரை என்று பெயர் எடுத்தான்.அப்படியே ஆகியும் விட்டான்.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.

"இன்பம் எனச் சில கதைகள் -- எனக்கு
ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் -- கெட்ட‌
தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சிலகதைகள்
என் பருவம் என்றன் விருப்பம் -- எனும்
இவற்றினுக்கு இணங்க என்னுளம் அறிந்தே
அன்பொடு அவள் சொல்லிவருவாள்; -- அதில
அற்புதமுண் டாய்ப் பரவசம் அடைவேன்."

"கண்ணன் என் தாய்" பாரதியின் பாடலில் கண்டுள்ளபடி தாயோ, ஆசிரியையோ அல்லது இருவருமோ அமைந்து விட்டால் குழந்தையின் மன‌வளர்ச்சி சும்மா 'ஜெட்' வேகம் பிடிக்கும்.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. !

நன்றி வணக்கம்! வாழ்க வளமுடன்!

ஆக்கியோன்: கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

கீழே உள்ள கானொளியும் அவர் அனுப்பியதுதான். அதையும் பாருங்கள்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
தண்ணீர்மலை முருகன் கோவிலின் நுழைவாயில்
தண்ணீர் மலையானே, தங்கமயில் ஏறி வருவாய் நீயே!
கவிதை ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்

விநாயகர் காப்பு!

ஆனை முகத்தோனே ஆறுமுகனுக்கு மூத்தோனே  
வினைதீர்க்கும் நாயகனே வேத முதல்வனே 
சுனைக் கடிகமலமலர் பூத்தக் கற்பகமே 
நினைச் சரணமென்று பணிகிறேன்!

வெண்பா!

தண்ணீர்மலை உறையும் முருகா! -நாங்கள்
வேண்டும் வரம்தர வேண்டும் இறைவா! 
வெள்ளை மனம்வேண்டும் முருகா! -வீணான  
தொல்லை தரும் இருள் நீங்கவே - சிறு 
பிள்ளை குணமது வேண்டும் முருகா! -நெஞ்சில் 
கள்ளமில்லா எண்ணமதை நாளும் பெறவே 
உள்ளன்போடு தொழுகிறோம் முருகா! -உணர்வில் 
உயிரில் உறைந்திடுவாய் குமரா! (1)

சத்தியத்தின் திருவுருவே முருகா! -சலிப்பில்லா
சத்திய மனம் தருவாய் சக்திகுமரா!
சங்கடம் தீர்ப்பவனே முருகா! -ஒப்பில்லா
சங்கரனின் புத்திரனே முத்தமிழ் குமரா!
சரவணப் பொய்கையிலே உதித்தவனே முருகா! 
சரணகோஷம் பாடிப்பணிகின்றோம் தலைவா! -சிவ
சக்தியின் மைந்தனே முருகா! -அளவிலா
சக்தியைத் தருபவனே சுவாமிநாதா!(2)

கருணையில்லையோ? என்மேல் உனக்கு கனிவுமில்லையோ?
கருத்தநாயகியின் கணவனேத் தொந்திபெருத்த நாதனின்சோதரனே!
வறுத்து எடுக்குதையா! வறுமையது -எனையாவரும்
வெறுத்து ஒதுக்கிடவே; நொறுக்கியே போட்டதையா! 
தடுத்து நிறுத்துமையா! எந்தன் தரித்திரியம் போய்விடவே 
விடுத்து எழுந்திடேன் நிந்தன் பாதமலர்தனையே! 
பொறுக்க முடியலையே முருகா! நீயுமின்னும் 
பொறுப்பதேனோ? எனைக்காக்க மறுப்பதேனோ?(3)   

நோய்தீர்ப்பாய் முருகா! மனப் பேயால் -வந்த
நோய்தீர்ப்பாய் முருகா! காணும் யாவிலும்
மெய்யதையே கண்டுணரும் வழியதைக் கூறாயோ!
ஐய! தேனினும் இனியனே தென்பழனி முருகனே
மெய்யா! ஊனிளுரைந்து உயிரில் கலந்தோனோ! 
பொய்யர்தம் பொய்யுரையை பொறுக்கும் மனமதை 
மையல் கொள்ளச் செய்வாயே மயில்வாகனனே!
தையல் நாயகியின் புதல்வனே!(4)

வேலை வேண்டும்; வேலையா! ஏதாவதொரு 
வேலை வேண்டும் முருகையா! -நாங்கள்
தங்கவோர் வீடுவேண்டும் வேலையா! தங்கவேலையா!
அங்கமெல்லாம் மின்னவே தங்கவைர நகைவேண்டும்
தங்கமான வேலையா! வைரவேலையா! -உந்தன்
மயில்மேய நன்புஞ்சைக் காடுவேண்டும் கதிர்வேலையா! 
மயிலோடுவந்த சேவல்கூவ கேணிமேடுவேண்டும் கந்தையா!   
மயிலேரிவந்தேநீ வாழ்த்தவேண்டும் சுப்பையா!(5)

இல்லறம் நல்லறமாம் முருகா! -அந்த 
நல்லறம் எனக்குமின்னும் வாய்க்கவில்லையே -திருக்குமரா!
சொல்லறம் கொண்டிங்குனைப் பணிகின்றேன் -நீயெனக்கு
நல்லதைச் செய்வாயென நம்பியுனை போற்றுகின்றேன் 
கள்ளமில்லா நல்லோனை கடமைத்தவறா வல்லோனை
உள்ளமெல்லாம் நினைத்தவிர வேறொன்றை நினையாதானை
நல்கணவனை யான்பெற்றிடவே -எல்லையிலா நினது
நல்கருணை பொழிவாய் தேவதேவனே!(6)

பிள்ளையொன்று வேண்டிநின்றோம் முருகா! -நீயும்
பேசாமல் இருப்பதேன் முத்துக்குமரா
கிள்ளைமொழி  கேட்டிடவேங்கும் நெஞ்சம் -எந்தன்  
சொல்லை நீயும்கேளா மலிருப்பதேனோ? கந்தா!
கொள்ளை இன்பம் கோடிப்பணமிவை -எல்லையில்லா 
பிள்ளையன்பு முத்தத்திற்கு ஈடாகுமோ? நாதா!  
சொல்லித்தான் தெரியுமோ? முருகா! -உந்தன்
பிள்ளைநான் படும்பாடறியாயோ! சிவபாலா! (7)

பாராமுகமேனோ? ஆராமுதனே! ஆறுமுகனே! -பதில்
கூறாயோ! நினது திருவாய் மலர்ந்தே!
தீராயோ! ஏழையென் பாவங்களை வேரோடுப்பிடிங்கி 
ஆரத்தழுவாயோ! உயிர்கசிய ஊனுருக்கி பணிகின்றேன் 
தாராயோ! எனதொப்புள்க் கொடிமுல்லை துயர்போக்கி 
பார்த்தாயோ! பாவிநான் படும்பாட்டை -அன்புக்கடலே 
அருள்வாயோ! அற்பமான வாழ்வதையும் ஆனந்தமாக்க
உதறுவாயோ! இறுகப்பிடித்தேனின் மலர்ப்பாதத்தை.(8)

ஆணவம் போக்கவேண்டும் முருகா! -வாழ்வில்
ஆனந்தம் பூக்கவேண்டும் ஆறுமுகா! - கொடும்
அகந்தையை அழிக்கவேண்டும் முருகா! -மனதில்
அகமாயையை நீக்கவேண்டும் மாயோன் மருகா! 
கர்வம் களையவேண்டும் முருகா! -இப்பிறப்பில்
கர்மவினை யாவும்கரைந்தோட வேண்டும் கந்தா!
சர்வமும் நீயானாய் முருகா! -அந்த 
சர்வேசன் செல்லமான சிவகுமரா!(9)

ஊனமதை போக்குவாய் முருகா -மனயீன
ஊனமதை போக்குவாய், கோபமும்; குரோதமும் 
தானென்ற அகந்தையும்; தகமையில்லா ஆணவமும்;
வீணான ஆசையும்; வேண்டாத மோகமும் 
தானாகப்போகவே தயைசெய்வாய் எந்தையே! ஞானவேலா!
தேனான பாடல்களை தினந்தோறும் வார்த்திடவே
கானமழையில் நாளும் நானுனை நனைத்திடவே 
ஞானமதை எனக்கருள்வாய் ஞானக்கடலே!(10)

எங்கும் நிறைந்தவனே முருகா! இங்கில்லாமல் போவாயோ!
சங்கடத்தில் மூழ்கித் தவிக்கின்றேன் -நான்வலம்புரி
சங்கெடுத்தூதி அழைகின்றேன்நின் சங்குப்பூக் காதில்விழவில்லையோ?
அங்கமெல்லாம் சிலிர்க்கவே ஆறுமுகனுனை நினைகின்றேன் 
தங்கமயிலேறி வாராயோ! வெகுதூரம் சென்றுமறைவாயோ?
பொங்கிப் பெருகும் துக்கத்தால் நெஞ்சடைத்து நிற்கின்றேன்
கங்கையெனப்பெருகும் கண்ணீரால் நின்தங்கப்பாதம் நனைக்கின்றேன்
தயங்காமல் வந்தென்னைக்காவாய் பெம்மானே!(11) 

கனவா இல்லை நினைவா கந்தையா! 
கணநேரம் கண்டக் காட்சியது முருகையா!
மனமது உன்னினைவில் மஞ்சத்தில் படுத்திருந்தேன் 
மணக்கோல உன்படத்தில் மல்லிகைப் பூக்கக்கண்டேன் 
மணம்பரப்பும் மல்லிகைவாசம் என்னுயிர்வரை வீசகொண்டேன் 
நினது கோளவிழிகள் அசையக்கண்டேன் -நினதிருக்கர
ஞானவேலது பறந்தெனைவலம் வந்துனை அடையக்கண்டேன்
தேனான அனுபவமது தேனினுமினியனே!(12)

ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்
---------------------------------
வாத்தியாரின் அடிக்குறிப்பு:

வெண்பா என்றால் நாலடிதானே வரும் என்று நினைப்பவர்கள், கீழே உள்ள தளத்தைப் பாருங்கள். அதில்வெண்பாவிற்கு உரிய இலக்கணத்தை விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆலாசியம் எழுதிய வெண்பா பஃறொடை வெண்பா என்ற பிரிவில் வரும். 5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.


எனக்குத் தெரியாதா கவிதை எழுத? என்று சொல்லி, நமது லால்குடிக்காரரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியுள்ளார்

இந்தக்கவிதை ஒரு சம்ஸ்கிருதக் கவிதையாம். கவிஞர் பெயர் தெரியவில்லையாம். ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தவர் பே நா அப்புசாமி. தமிழில் எழுதியவர். கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

"உந்தன் கல் இதயம்"
==================

உன் கண்களை 
லில்லிபூவின் நீலத்தில் படைத்தான்
உன் எழில் முகத்தை 
அன்றலர்ந்த தாமரையாற் செய்தான்
உன் பற்களை 
வெண்மை பளிரீடும் மல்லியால் செதுக்கினான் 
உன் அதரத்தை 
புத்தம் புதிய துளிர் இலைகளால் ஆக்கினான்
உன் கரங்களை 
சம்பக மலரின் இதழ்களால் உருவமைத்தான்


அது எப்படி, என் அன்பே!
அவன்,(அதுதான் உன்னைப் ப‌டைத்தவன்)
உன் இதயத்தை மட்டும் கல்லால் சமைத்தான்?
- கே.முத்துராமகிருஷ்ணன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
7

நகைச்சுவை







ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பொறியாளராக இருக்கும் நம் நாயகன், ஒரு பெண்ணை மணந்துகொண்டார். சுமாரான அழகு உள்ளவள். அத்துடன் குணக்கேடானவள். இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பிறகு ஓய்ந்து போன நமது நாயகன் மாமனாருக்கு கோபத்துடன் மின்னஞ்சல் அனுப்பினான்.

Your product not meeting my requirement
உங்களுடைய தயாரிப்பு என்னுடைய தேவைகளுக்குப் பொருந்திவரவில்லை!

உடனே மாமனாரிடம் இருந்து பதில் வந்தது:

Warranty expired.Manufacturer not responsible
வாரன்ட்டி பிரீயட் முடிந்து விட்டது தயாரிப்பாளர் அதற்குப் பொறுப்பில்லை

Sent by G.அனந்தமுருகன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

11.2.12

Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!





Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!

கதாநாயகி இந்தக் குதிகுதித்தால் பாடல் எப்படி விளங்கும்? அதாவது மண்டைக்குள் போகும். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால்தான் பாடல் வரிகளும், இசையும், அத்துடன் யுவனின் அதிரடி டண்டனக்கா டக்கா தாளமும் நமக்குப் பிடிபடும். இல்லையென்றால் நோ சான்ஸ்

முதல் தடவை பார்க்கும்போது தமன்னா மட்டும்தான் தெரிகிறார். 100 கோடி ரூபாய்கள் லாட்டரியில் விழுந்தது போல அவர் அந்த்க் குதி குதிக்கிறார்.
அவர் குதிக்கும் அழகு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாடலுடன் சேர்ந்து நாமும் பூமிக்குள் போய்விடுகிறோம்.

அதனால் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்பது உத்தமம். அதாவது நல்லது

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஆறு

பாடல்: 
    "அடடா மழைடா அட மழைடா
         அழகா சிரிச்சா புயல் மழைடா"

காணொளி
http://youtu.be/e22QxrZ86Oc
Our sincere thanks to person who uploaded the video clipping



பாடல் வரிகள்: 

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா


மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு


மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா


பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு


என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு


தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே


உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்


பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு


போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா


பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு


குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு 
--------------------------------
படம்: பையா (2010)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல்நம்பியார், சந்தவி
பாடலாக்கம்: கவிஞர். நா. முத்துக்குமார்
நடிப்பு: தமன்னா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!