மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.13

Astrology: என் கேள்விக்கென்ன பதில்? உன் பார்வைக்கென்ன பொருள்?

 
Astrology: என் கேள்விக்கென்ன பதில்? உன் பார்வைக்கென்ன பொருள்?

Quiz No.33: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்திமூன்று.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (ஆண்டின் கடைசி நாள். அதனால் உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு நடுத்தர வயது ஆண்மகனின்  ஜாதகம். ஒரே ஒரு கேள்விதான்: ஜாதகர் படித்தவரா? அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் எதோடு படிப்பை விட்டவர்? ஜாதகப்படி என்ன காரணம்? அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

30.12.13

Quiz 32 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 32 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி
அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள்.

உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன்
இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்)
சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா
வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

திரைப்படக் கலைஞர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

27.12.13

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் இருக்கையில், வேறு யார் வேண்டும்?

 
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் இருக்கையில், வேறு யார் வேண்டும்?

பக்தி மலர்

இன்று மார்கழி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.
இன்று ஏழுமலையானைப் போற்றிப் பாடுவோம்.
திரு ராஜாஜி அவர்கள் எழுதி, கர்நாடக இசையரசி
திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களால்
பாடப்பெற்று புகழடைந்த பாடல் இது.
1969ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஒலித்தபாடல் இது.
ஆமாம், திருமதி.எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் குரல்
அங்கேயும் ஒலித்து அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.
இந்தப் பாடலில் உள்ள மூன்று பத்திகளுமே மூன்று விதமான
ராகங்களில் ஒலிக்கும். அதையும் கவனியுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this song in the net 




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

26.12.13

Short Story: சிறுகதை: இக்கட்டான சூழ்நிலை


 
Short Story: சிறுகதை: இக்கட்டான சூழ்நிலை

அப்பச்சி - My Father - சொன்ன கதைகள் - பகுதி 6

(எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஆறாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து
விரிவாக்கம் செய்து, எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம். மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் கதைகளில் ஒன்றை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்)

தலைப்பு: இக்கட்டான சூழ்நிலை!

இக்கட்டான சூழ்நிலை என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும்.செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் சிக்கலாக இருக்கும் சூழ்நிலை இக்கட்டான
சூழ்நிலையாகும். அதுபோல சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாத சூழ்நிலையும் இக்கட்டான சூழ்நிலைதான். ஆங்கிலத்தில் அந்த சூழ்நிலையைப் ‘பாட்டில்நெக் சிச்சுவேசன் (Bottle Neck Situation) என்பார்கள். கோலி சோடாவில் அதன் கழுத்தில் இருக்கும் கோலிக் குண்டு, உள்ளேயும் போகாமல் , வெளியேயும் வந்துவிடாமல், அதன் கழுத்திலேயே இருக்கும் அல்லவா அந்த நிலைமை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதுபோன்ற சூழ்நிலை ஒரு இளம் பெண்ணிற்கு ஏற்பட்டது.

என்ன சூழ்நிலை அது?

வாருங்கள் அதை இன்று பார்ப்போம்.

நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. செழிப்பான கிராமம் ஒன்றில் நமது கதையின் நாயகி வசித்துக்கொண்டிருந்தாள். அவள் பெயர் பூவாத்தாள். செடியில் இருந்து பறித்த பூவைப்போன்று அம்சமாக இருப்பாள். வயது 22. செல்வந்தர் வீட்டுப் பெண். வாழ்க்கைப்பட்டு, தற்சமயம் இருக்கும் கிராமத்து வீடும் செல்வந்தர் வீடுதான். அதை வீடு என்று சொல்ல முடியாது. அரண்மனை போன்ற பெரிய மாளிகை.

அவளுடைய மாமனார் பெரிய நாட்டு மருத்துவர். கோட்டா தொந்தரவு இல்லாத காலத்தில் படித்தவர். அனுபவம் மிக்கவர், கைராசிக்காரர்
என்று பெயர் பெற்றவர்.சுற்றியுள்ள எல்லா ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் அவர்தான் மருத்துவர். வேறு ஆள் கிடையாது.அறுவை சிகிச்சையைத் தவிர
மற்ற எல்லாச் சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யக் கூடியவர். அனுபவம் மிக்கவர். வயது 50.

அத்துடன் 50 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்திற்கு சென்றால்தான் வேறு வைத்தியர்கள் கிடைப்பார்கள். மண் ரோடுகள், வாகன வசதிகள்
இல்லாமல், எங்கே சென்றாலும் மாட்டு வண்டிகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

அறிமுகத்தைக் கொடுத்து விட்டேன். இப்போது கதைக்குப் போவோம்

                                  **************************************

பூவாத்தாளுக்குத் தொடையில் பெரிய கட்டி. அது வீங்கி எழுமிச்சம்பழ அளவிற்குப் பெரிதாகி, பழுத்து உடையும் நிலையில் இருக்கிறது. நான்கு
நாட்களாகத் தாங்க முடியாத வலி!.

கணவன் வேறு ஊரில் இல்லை! தனியாக அமர்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்த அவளுடைய தோழி, விசனத்திற்குக் காரணம் கேட்க விவரத்தைச் சொன்னதோடு, தன்னுடைய சேலையை முழங்கால் வரை விலக்கி, அவளுக்கு, அந்தக் கட்டியைக் காட்டவும் செய்தாள்.

தோழி அரண்டு விட்டாள், "என்னடி இவ்வளவு பெரிதாக வீங்கி, உடையும் நிலையில் உள்ளது. சுத்த பைத்தியக் காரியாக இருக்கியே – உன்
மாமனாரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? சொல்லாம அழுதுக்கிட்டிருந்தா சுகமாயிருமா?"

"எப்படியடி காட்டுவேன், அவர் என் மாமனார் ஆயிற்றே?"

"மாமனார் என்று ஏன் நினைக்கிறாய்? வைத்தியர் என்று நினைத்துக் காட்டு! எங்களுக்கு வந்தால் நாங்கள் காட்டி வைத்தியம் பார்த்துக்கொள்ள
மாட்டோமா?"

“நீங்களெல்லாம் காட்டி, மருந்தை வாங்கிக்கொண்டு போய்விடுவீர்கள். நான் வீட்டோடு அல்லவா இருக்கிறேன். அவர் எத்தனை நல்லவராக இருந்தாலும்,  எனக்கு மனசு என்று ஒன்று இருக்கிறதே - எப்படிக் காட்ட முடியும்? காட்டிவிட்டு அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு குறுகுறுக்குமே? அதோடு இந்த கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய பார்வையை எப்படித் தாங்குவேன். உனக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் என்ன செய்வாய்? அதற்கு முதலில் பதில் சொல்லடி!"

தோழி மெளனமாகி விட்டாள்.

அழுதுகொண்டே தொடர்ந்து  பூவாத்தாள் சொன்னாள்:

"எல்லாம் என் தலை எழுத்து. இப்படி ஒரு இக்கட்டு. காட்டினால் மானம் போகும்; காட்டாவிட்டால் பிராணன் போகும்!"

உண்மைதான். இதுதான் இக்கட்டான சூழ்நிலை என்பது. இக்கட்டான சூழ்நிலைக்கு, இந்தக் கதையைத்தான் எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.
இதை அவர்கள் என்னிடம் சொல்லியதில்லை. மற்றவர்களிடம் சொல்லியபோது நான் கேட்டதாகும். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன்

                          ************************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

25.12.13

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்!

 

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்!

இன்று கிறிஸ்துமஸ் தினம். அனைவருக்கும் வகுப்பறையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!


அன்புடன்
வாத்தியார்

நேற்றைய புதிருக்கான விடை கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.

================================================================================
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிரிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலும் அதன் ஒளி மற்றும் ஒலி வடிவமும் கீழே உள்ளன

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

---------------------------------------------------------
திரைப்படம்: கண்ணே பாப்பா (1969)
பாடியவர்: P.சுசீலா
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
---------------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net



=========================================================
நேற்றையப் புதிரில் உள்ள ஜாதகத்தின் சொந்தக்காரர் பிரபலமான தமிழ் நடிகை. அவரின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஸ்க்ரோல் டவுன்
செய்து பாருங்கள்.

அவ்வாறு பிரபலங்களின் ஜாதகங்களை உங்களுக்கு இதுவரை கொடுத்ததில்லை. சிலர் ஜாதகரின் தேதியை வைத்து விக்கி மஹாராஜாவின்
துணையை நாடுவீர்கள் என்பது தெரியும். அதனால் கொடுப்பதில்லை. ஆனாலும் உங்களுடன் சற்று ஓடிப் பிடித்து விளையாடுவோம் என்றுதான் ஒரு பிரபலமான நடிகையின் ஜாதகத்தை வேண்டுமென்றே நேற்றுக் கொடுத்தேன்.கொடுத்ததுடன் நில்லாமல் அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம் என்ற க்ளூவையும் கொடுத்தேன்.

விக்கியின் துணையில்லாமல் எத்தனை பேர்கள் எழுதுகிறீர்கள் என்று பார்க்க விரும்பினேன். பின்னூட்டம் அனுப்பிய 29 பேர்களின் 25 பேர்கள் விக்கியின் துணையை நாடாமல் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது விசேடமான பாராட்டுக்கள்.

சரியான விடை:

1.ஜாதகி மிகவும் அழகான தோற்றம் உடையவர்
2.இதுவரை திருமணம் ஆகாதவர்.

இந்த 2 விடைகளை எழுதினால் போதும் என்று எதிர்பார்த்துத்தான் ஜாதகத்தை வலையில் ஏற்றினேன்.

திருவாளர்கள் கிருபானந்தன், ரவிச்சந்திரன்,ல.ரகுபதிதோழர், பாண்டியன், ஆகிய 4 பேர்களும் எதிர்பார்த்த சரியான விடையை எழுதியுள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

கலந்து கொண்டவர்களில் 4 பேர்கள். விக்கி மஹராஜாவின் உதவியை நாடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களின் நேர்மைக்குப்
பாராட்டுக்கள். பலர் 2 எதிர்ப்பார்ப்பில் ஒன்றை சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள். அத்துடன் கலந்து கொண்ட
அனைவருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.

ஜாதகி கேரளாவைச் சேர்ந்த திருவல்லா என்னும் ஊரில் 8 நவம்பர் 1984 ஆம் தேதி இரவு 9.55ற்குப் பிறந்தவர். அவரின் படம் கீழே உள்ளது.
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
========================================================

24.12.13

Astrology: அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம். என்ன செய்யலாமென்று சொல்லுங்கள்!

 
Astrology: அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம். என்ன செய்யலாமென்று சொல்லுங்கள்!
Quiz No.31: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பதியொன்று.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். வித்தியாசமான பெண்ணின் ஜாதகம். அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

23.12.13

Astrology:அடடா, அவரா இவர்?

 
Astrology:அடடா, அவரா இவர்?

 Quiz 30 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!


கண்டு பிடித்த பிறகு அடடா, அவரா இவர்? என்று நினைத்துக்கொள்வீர்கள்:

புதிர் தொடர் - பகுதி முப்பது.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



க்ளூ வேண்டுமா?

அரசியல்வாதி. அதிரடியான பேச்சிற்குப் பெயர்போனவர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================

20.12.13

தென்கோடி தென்றல் தரும் ராகங்கள்

தென்கோடி தென்றல் தரும் ராகங்கள்

பக்தி மலர் 

 மாதங்களில் நான் மார்கழி என்றான் அந்த மாயக் கண்ணன். இன்று மார்கழி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. அந்தப் பரந்தாமனின் பகழை ஒரு பாடல் வடிவில் இன்று கொடுத்துள்ளேன். பாடலின் ஆக்கம் கவியரசர் கண்ணதாசன். பாடியவர் திரு.டி.எம்.செளந்தரராஜன். பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் 
----------------------------------------------------
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் 
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே 
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே - எங்கள் 
மதுசூதனன் புகழ் பாடுங்களே 

 (புல்லாங்குழல்) 

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் 
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே 
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் 
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே 

(புல்லாங்குழல்) 

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு 
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் 
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் 
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் 

 (புல்லாங்குழல்) 

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த 
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் 
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் 
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் 

(புல்லாங்குழல்) 
---------------------------------------------
பாடலின் காணொளி:
Our sincere thanks to the person who uploaded this song in the net! 



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===============================================

19.12.13

Astrology.Popcorn Post: தீபிகா படுகோனேயும், சொந்த வீடும்!

 

Astrology.Popcorn Post: தீபிகா படுகோனேயும், சொந்த வீடும்!
Popcorn Post No.47

பாப்கர்ன் சாப்பிட்டு ரெம்ப நாள் அகிவிட்டது. அதனால் இன்று பாப்கர்ன்  பதிவு. கடைசியாக பார்ப் கார்ன் சாப்பிட்டது 12.8.2013 அன்று. நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. சிலர் சார், பார்ப்கார்ன் பதிவுகளைப் போடுங்கள் என்றார்கள். அவர்களை மகிழ்விக்க மீண்டும் பார்ப்கார்ன் பதிவுகள்
-----------------------------------------------------------------------------------
எல்லோருக்கும் பல கனவுகள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலருக்கு மட்டும்தான் அக்கனவுகள் நனவாகும். அதாவது நடக்கும்.

நியாயமான கனவுகள் என்றால் அது நம் முயற்சியாலும், நமக்கு உள்ள ஜாதகப் பலன்களாலும் நடக்கும். நியாயமில்லாத கனவுகள் நடக்காது.

ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்ளக் கனவு காணலாம். ஜாதகத்தில் அதற்குரிய நேரம் வரும்போது, தன்னிச்சையாக நடந்து, அந்தக் கனவு நனவாகிவிடும். ஆனால் அமலா பாலைப் போன்று அல்லது தீபிகா படுகோனேயைப் போன்று ஒரு அழகான பெண்ணை மணந்து கொள்ள ஆசைப் படலாமா? அல்லது கனவுதான் காணலாமா? அது எப்படி நனவாகும். இந்தச் ஜென்மத்தில் அது நடக்காது.

அதுபோல எல்லோருக்கும் ஒரு பொதுவான கனவு உண்டு. அதுதான் சொந்த வீடு வாங்கும் கனவு. எத்தனை நாட்களுக்குத்தான் வாடகை வீட்டில் குடி இருப்பது?

புரட்டி எடுக்கும் விலைவாசி உயர்வில், உணவுப் பொருட்கள், உடைகள், பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றுடன் வீட்டு வாடகையையும் சேர்த்து எப்படிச் சமாளிப்பது? தொழில் செய்பவர்களுக்கு அது சாத்தியப்படும். ஆனால் வேலைக்குச் செல்பவர்கள் என்ன செய்யவார்கள் சொல்லுங்கள்? பாவம் அவர்கள்! அதுவும் unorganized sectorகளில் வேலைக்குச் செல்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
-----------------------------------------------------------------
ஜாதகப்படி வீடு வாங்கும் அமைப்பு.

1.4காம் வீடு, அதன் அதிபதி, காரகன் செவ்வாய் (Authority for landed properties) ஆகியோர் வலிமையாக இருந்தால், அவர்களின் தசா புத்திகளில் வீட்டை வாங்குவீர்கள்.

2.லக்கினாதிபதி உட்பட மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து, அதாவது அவர்களின் சேர்க்கை மற்றும் பார்வையை வைத்து அந்த வீட்டின் அமைப்பு (Size, look and place) இருக்கும்.

அதாவது நீங்கள் அம்பத்தூரில் வாங்குவீர்களா - அல்லது ஆவடியில் வாங்குவீர்களா - அல்லது திருமுல்லைவாயில், அல்லது திருவள்ளூர் போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதியில் வாங்குவீர்களா? என்பது தெரியும்.

மத்திய சென்னைப் பகுதிகளான தேனாம் பேட்டை, தி.நகர், அண்ணாநகர் போன்றவற்றை நான் குறிப்பிடவில்லை. அவற்றில் நீங்கள் வீடுகளை வாங்குவதென்றால் இன்றையத் தேதியில் கோடிகளில் பணம் வேண்டும். அதற்கு நீங்கள் வெளிநாடுகளில் கை நிறைய டாலர்களில் சம்பாதிக்கின்றவராகவோ, அல்லது இந்திய மண்ணில் ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ அல்லது CMD ஆகவோ பணி செய்கின்றவராக இருக்க வேண்டும். அதுபோன்றவர்கள் எல்லாம் என்னுடைய ப்ளாக் படிப்பார்களா என்றும் தெரியவில்லை. ஆகவே அதை எழுதவில்லை
------------------------------------------------------------------
ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் இங்கே சொல்கிறேன். நான்காம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் ஒன்றாக நான்காம் வீட்டில் டெண்ட் அடித்து அமர்ந்திருப்பதோடு ஒரு சுபக்கிரகத்தின் கடைக் கண்பார்வையும் அவர்களுக்கு கிடைத்தால் ஜாதகன் நிச்சயம் ஒரு வீட்டை வாங்குவான்.

எப்போது வாங்குவான்?

கோள்சாரத்தில் செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் வாங்குவான்
--------------------------------------------------------------------------------------------
இவ்வளவுதானா?

இன்னும் பல அமைப்புக்கள் உள்ளன. என்னென்ன கிரகத்தால் என்னென்ன மாதிரி சொத்துக்கள் அமையும் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். இங்கே அல்ல கேலக்சி2007 வகுப்பில். பொறுத்திருங்கள்.

பாப்கர்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================

18.12.13

Astrology: Quiz result: அடித்த அடியில் துணியைக் கிழிக்காமல் துவைத்தவர்கள்!

 

Astrology: Quiz result: அடித்த அடியில் துணியைக் கிழிக்காமல் துவைத்தவர்கள்!

நேற்றுக் கொடுத்திருந்த புதிருக்கு இதுவரை 24 பேர்கள் பதில் எழுதியிருக்கிறார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
அடித்த அடியில் துணியைக் கிழிக்காமல் துவைத்தவர்கள் மொத்தம் 5 பேர்கள் மட்டுமே! அவர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

சரியான விடை:

ஜாதகி மிகவும் அழகானவர். நன்கு படித்தவர். நல்ல வேலையில் இருப்பவர். ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதாவது ஜாதகிக்குத் திருமணமே நடக்கவில்லை!

The native of the horoscope has no married life. That is the important point

1
1ம் வீடு லக்னத்தில் குரு ஜாதகர் அழகிய தோற்றம் லக்னாதிபதி 12ல் மறைவு அவரால் மற்றவர்களுக்கு லாபம் 2ம் வீடு அதிபதி லக்னத்தில் (2க்கு 12ல்) குடும்பம் இருக்க வாய்பில்லை 5ம் வீடு 6ம் வீடு பரிவர்தனை குழந்தை வாய்ப்பு இல்லை 7ம் வீடு அதிபதி 6ல் மறைவு கல்யாண பாக்யம் இருக்காது நன்றி ஜவஹர் on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
JAWAHAR P
---------------------------------------------------
2
1. லக்னாதிபதி சனி 12ல் மறைவு கேதுவுடன் ஆனால் ஆட்சி. லக்னத்தில் குரு. லக்னத்திற்கு சுக்ரன் பார்வை. நல்ல தோற்றமுடையவர். லக்னத்தில் 27 பரல். 2. 2ம் அதிபதி மற்றும் தனகாரகன் குரு அந்த வீட்டிற்கு 12ல். 2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சனியின் 3ம் பார்வை. 3. 5ம் வீட்டில் செவ்வாய். 5ம் அதிபதி புதன் 6ல் சூரியனுடன் அஸ்தமனம். 5ம் வீடு 6ம் வீட்டிற்கு உரிய புதன் சந்திரன் பரிவர்த்தனை. 4. 7ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்ரன். 7ம் வீட்டிற்கு குரு, செவ்வாய் பார்வை. 7ம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல். 7ம் வீட்டில் 23 பரல். திருமண வாழ்க்கைக்கு கொடுப்பினை இல்லை. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
sellaprasad
---------------------------------------------------
3
ஒன்றில்- சனி வீட்டில் குரு- நல்ல நேர்மையான பன்பான ஜாதகர், லகினாதிபதி ஆட்சியானாலும் லக்கினத்திற்கு பணிரண்டில் மறைவு. அவர் / அவரின் நான் எடுபடாது. இரண்டாம் இடத்தான் குரு தனகாரகன் தனக்கு பணிரண்டில் மறைவு. அதுவும் சனியின் வீட்டில். - பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை ஐந்தாம் வீட்டின் புதன் ஆறில் சூரியனை முழுங்கிய இராகுவுடன் அதில் நண்பனாக இருக்கப்பெற்ற சந்திரன் பாபகர்த்தாரி யோகமுடன் குழந்தை பாக்கியத்தை கெடுத்தான். ஏழாம் வீட்டின் சூரியன் இராகுவால் பாதிப்படைந்து அதற்க்கு பணிரண்டில் காணோம். அங்கு வந்த சுபமான வில்லன் சுக்க்ரன் பாவக காரக நாஸ்தி - திருமணம் நடைபெறாது / பெற்றாலும் வாழ்க்கை இல்லை. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
Thanga raj
--------------------------------------------------------
4
Respected Sir, 1.) Lagnatipathi sani aatchi petru 12-il valuvaga amarndhullar udan kethu. Lagnathil 2-m adhipathy guru avar avaradhu sondha veetirku 12-il.Kastangal niraindha penmanidhan. 2.) 2-m veetirku 12-m adhipathyin paarvai. kudumbam sthanam badippu. Thirumanam nadaipetru irukkadhu  appadi nadandhu irundhalum, kanavari parikoduthu iruppar kaaranam 7-m veetirku 8-m adhipathy avar veetirku 12-il amarvu. 3.) 5m veetirku guru paarvai irundhalum, 6-m adhipathy 5il amarvu kulandhaigal illamal irukkum. 4.) 7-m veetil sukran adhanal kaaragobhava naasthi and sooriyan lagnathirku 6-il and avar veetirku 12-il. Kudumba vaalkai illadha aanmiga maargathil ivargaladhu vaazhkai sendrirukkum. Thank You. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
Chandrasekharan
-----------------------------------------------------------
5
Sir, The native has no married life. Below are the reasons from the horoscope. 1) Except sukran all planets are within raagu& ketu. 2) Lagna lord and seventh lord are in their twelth houses. 2nd lord & 6th lord are also in 12th houses from their houses. 3) Seventh house is aspected by mars. 4) 7th lord is associated with 8th lord and raagu. Also aspected by saturn. The native may suffer from heart diseases and nerves problems. I wish, Guru in lagna and sukran in 7th house balanced the life with standing power. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
Ramasamy
--------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? முக்கியமான காரணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். முழு அலசல் கேலக்கிசி2007 வகுப்பில் இன்று பதிவிட
வுள்ளேன்.




ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் மறைவு. உடன் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டுக்காரன் புதன். அத்துடன் கேடு செய்யும் ராகுவின் கூட்டணி. மேலும் லக்கினாதிபதி சனீஷ்வரன் 12ல் மறைவு. உடன் கேடு செய்யும் கேதுவின் கூட்டணி. அவர்கள் இருவரின் பார்வையும் ஏழாம் வீட்டுக்காரனின் மேல்.அதனால் ஏழாம் வீட்டுக்காரன் முற்றிலுமாகக் கெட்டதுடன் ஜாதகிக்கும் திருமணத்தை நடத்தி வைக்காமல் படுத்துக் கொண்டு விட்டான்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.12.13

Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!





 Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!

Quiz No.29: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி இருபத்தியொன்பது.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்



 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===========================================

16.12.13

Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தியெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------

இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

விளையாட்டு வீரர். பிரபலமானவர். மக்களின் மனம் கவர்ந்தவர். 

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்!
==================================================

13.12.13

வள்ளிக் கணவன் பேரைச் சொன்னால் என்ன ஆகும்?

வள்ளிக் கணவன் பேரைச் சொன்னால் என்ன ஆகும்?

பக்தி மலர்

"வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குளிருதடி” என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலை திருமதி சுதா ராகுநாதன் அவர்கள் இனிமையாகப் பாடியுள்ளார்கள். அதை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
பாடலின் காணொளிக் காட்சி
Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=================================================

12.12.13

செஞ்ச்சுரி அடித்த வீடுகள்!


செஞ்ச்சுரி அடித்த வீடுகள்!

மனிதர்கள்தான் செஞ்ச்சுரி அடிப்பார்களா? செட்டி நாட்டுப் பகுதியில் பல வீடுகளும் செஞ்சுரி அடித்துள்ளன. காரைக்குடி, தேவகோட்டை,ஆத்தங்குடி,  வலையபட்டி, கண்டனூர், கானாடுகாத்தான் என்று மொத்தம் 75 ஊர்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 6,000ற்கும் மேற்பட்ட வீடுகள்உள்ளன. எல்லா வீடுகளுமே நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்றவை. பொக்லைன், ஜே;பிசி இயந்திரங்கள், ஹைடெக் சிமெண்ட், கட்டுமானப்பொருட்கள், ஆர்க்கிடெக்ட்டுகள், மற்றும் பொறியாளர்கள் என்று எந்த வசதியும் இல்லாத காலத்தில் பர்மா தேக்குமரங்களைப் பிரதானமாக(அதாவது உத்திரங் களாகவும் தூண்களாகவும்) வைத்துக் கட்டப்பெற்ற வீடுகள் அவைகள். அதை மனதில் வையுங்கள்.

தற்சமயம் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள், சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. பல வீடுகள் நன்கு பராமரிக்கப்பெற்று வருகின்றன.

எங்கள் வீடு கட்டப்பெற்று 118 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் நல்ல நிலைமையில் உள்ளது. ஊருக்குச் சென்றால் அங்கேதான் தங்குகிறோம்.

எல்லா வீடுகளூமே சராசரியாக 33 செண்ட் நிலத்தில் முழுப்பரப்பளவில் கட்டப்பெற்றவை. கட்டங்கள் 24, 000 சதுர அடிகள் முதல் 40,000 சதுர
அடிகள் வரை பரப்பளவு உள்ளவை.

அவைகள் கட்டப்பெற்ற காலத்தில் ஒரு பவுனின் விலை 13 ரூபாய் மட்டுமே. கொத்தனார் சம்பளம் (தினக்கூலி) 4 அணா. அதாவது 25 பைசாக்கள்.
சித்தாள் எனும் எடுபிடி ஆளின் சம்பளம் அதில் பாதிதான். அதாவது இரண்டனா மட்டுமே!

உங்கள் பார்வைக்காக அந்த வீடுகளில் இரண்டை இன்றையப் பதிவில் கொடுத்துள்ளேன்.

சன் டிவியில், நாதஸ்வரம் சீரியல் பார்க்கிறீர்கள் அல்லவா? அதில் வரும் பெரிய வீடுகள் இரண்டும் செட்டிநாட்டில் உள்ளவைதான்!

அன்புடன்
வாத்தியார்.

====================================================
செட்டிநாட்டு வீடுகள்
Our sincere thanks to the persons who uploaded these video clippings in the net




2 ஆத்தங்குடியில் உள்ள ஒரு வீடு - உங்கள் பார்வைக்கு



====================================================
   “வாத்தி (யார்), முகப்பில் ரஜினியின் படம் எதற்கு?”

   “இன்று அவருக்குப் பிறந்த நாள் சாமிகளா? வாழ்த்துச் சொல்வதற்காகத்தான்!ஒரு வாழ்த்தைச் சொல்லி விடுவோம்!”
Many more Happy return of the day Rajini Kanth!

===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.12.13

Astrology: Check in ஆகிவிட்டீர்களா?

 
Astrology: Check in ஆகிவிட்டீர்களா?

செக் இன் என்பதற்கான அர்த்தமும் முக்கியத்துவமும் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் நண்பர்களை அல்லது உறவினர்களை வழியனுப்ப விமான நிலையங்களுச் செல்கின்றவர்களுக்கும் நன்றாகத்தெரியும்!

சரி, செக் இன்னைப் பற்றி அகராதி என்ன சொல்கிறது? The act or process of reporting that you have arrived at a hotel, an airport, etc. : the act or process of checking in; also : the time when people are allowed to check என்கிறது.

பேருந்துப் பயணம் என்றால், கடைசி நிமிடத்தில்கூடச் சென்று, பேருந்தில் ஏறி, பதிவு செய்யப்பட்ட நமது இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.

விமானப் பயணத்தில் அது சாத்தியமில்லை!

உங்களையும், உங்கள் பெட்டிகள் (Suit cases and other packages) என்று அனைத்தையும் குடைந்துவிட்டு, அனுமதி மறுக்கப்பெற்ற பொருட்கள் உங்களிடம் எதுவுமில்லை என்று தெரிந்த பிறகும், உங்களுடைய சாமான்களின் அளவு அனுமதிக்கப்பெற்ற எடைக்குள்தான் இருக்கின்றன என்று தெரிந்த பிறகும், உங்களுடைய பாஸ்போர்ட், விசா, முதலியவை சரியாக உள்ளனவா என்று பரிசோதித்த பிறகும்தான் உங்களுக்குச் செக்கின்’ சீட்டை வழங்குவார்கள். அதற்குப் பிறகுதான் நீங்கள் பயணத்திற்குத் தகுதியானவர் ஆவீர்கள். அந்த செக்கின் ஸ்லிப்புடன் தான் நீங்கள் உங்களுக்கான விமானத்தில் ஏறிப் பயணிக்க முடியும்.
-----------------------------------------------------------------
நான் சொல்ல வந்த செக்கின் மேட்டர் வேறு!

உங்களுக்கு 60 வயதாகிவிட்டதா? அப்படி என்றால் பதிவை மேற்கொண்டு படியுங்கள். மற்றவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகுங்கள்.
-----------------------------------------------------------------
அறுபது வயதாகி விட்டதல்லாவா? எப்போது வேண்டுமென்றாலும் மிஸ்டர் எமதர்மராஜன் பாசத்தோடு (பாசக் கயிற்றோடு) உங்களைத் தேடி வரலாம். ஆகவே நீங்கள் பயணத்திற்கு தயாராக இருப்பது அவசியம்.

அவன் வந்த பிறகு, முன் ஜாமீன், வாய்தாவெல்லாம் வாங்க முடியாது. அள்ளிக் கொண்டு போய் விடுவான். திரைப்படங்களில் பார்த்திருப்பீர்களே அது போல உஙகளை அள்ளிக் கொண்டு போய் விடுவான்.

1.  சொத்துக்கள் இருந்தால், உங்களுக்குப் பிறகு வீட்டில் மண்டை உடையாமல் இருக்க உயில் எழுதிப் பதிவு செய்து வைத்து விடுவது நல்லது.

2. வங்கி லாக்கர் இருந்தால், அதற்கு நீங்கள் உங்கள் இல்லாளையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கை உள்ள ஒருவரையோ நாமினேட் செய்து வைத்து விடுவது நல்லது.

3. வங்கி வைப்புத்தொகைகள், வங்கி சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றிற்கும் அதே போல ஒருவரை நாமினேட் செய்து வைத்துவிடுவது நல்லது.

4. முக்கியமாக சொத்துப் பத்திரங்கள், லாக்கர் சாவிகள், எல்லாவற்றையும் விட முக்கியமாக ரேசன் கார்டு போன்றவற்றையும் ஒரே இடத்தில் வைத்து அதன் விபரத்தையும் ஒருவரிடம் சொல்லி வைத்து விடுவது நல்லது.

5. நீங்கள் புத்தகங்கள் படிப்பவராகவும், நிறையப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருப்பவராகவும் இருந்தால், உங்களுக்குப் பிறகு அந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் எடைக்குப் போய் விடாமல் இருக்க, அவற்றை எல்லாம் உள்ளூரில் உள்ள நூலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்வது நல்லது.

சரி, போர்டிங் பாஸ் (அதாவது செக்கின் ஸ்லிப்) நமக்கு எப்போது கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள நேர்வழி மற்றும் குறுக்கு வழி ஏதாவது உள்ளதா?

உள்ளது. அதை இங்கே எழுதினால் ஆபத்து! பதிவு முழுமையாகத் திருட்டுப் போகும் ஆபத்து உள்ளது.

ஆகவே Galaxy2007 வகுப்பில் எழுத உள்ளேன். அங்கே பாருங்கள்! அல்லது எனது புத்தகங்களின் முதல் இரண்டு பாகங்கள் இன்னும் இரண்டு மாத
காலத்தில் வெளிவர உள்ளன! அப்போது படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!


அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

10.12.13

Short Story: சிறுகதை: தலைப்பு: சபையறிந்து பேச வேண்டும்!

 
Short Story: சிறுகதை: தலைப்பு: சபையறிந்து பேச வேண்டும்!

(எங்கள் அப்பச்சி - My father - சொன்ன கதைகள் வரிசையில் இது நான்காவது கதை. மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிக்கொடுத்து வெளிவந்த கதையை நீங்கள் அறிந்து கொள்வதற்காக இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்! கதையின் கரு மட்டும் என் தந்தையாருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து,  எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்)

“காற்றினிலே வரும் கீதம்:
கண்கள் பனித்திடும் கீதம்.
கல்லும் கனியும் கீதம்:
காற்றினிலே வரும் கீதம்”

என்று அசத்தலாகத் துவங்கும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, அதாங்க எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை இது. 1945ஆம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த, விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப் பெரும் செல்வந்தர்களில் சின்னைய்யா செட்டியாரும் ஒருவர். அவர் ஊர் இருக்கும் வட்டகையில் மொத்தம் 19 ஊர்கள். அந்தப் பத்தொன்பது ஊர் மக்களும் அறிந்த செல்வந்தர் அவர். கோவில் திருப்பணிகள் என்றால் யோசிக்காமல் கொட்டிக் கொடுப்பார்.

ஊர் மக்கள் ’திருப்பணிச் செம்மல்’ என்று பட்டம் கொடுத்து அவரைச் சிறப்பிக்க முயன்றபோது, மறுத்துவிட்டார். ‘இறைவன் படி அளக்கிறான். அதில் ஒரு பகுதியை நான் திருப்பணிகளுக்குச் செலவழிக்கிறேன். எல்லாம் அவன் அளிக்கும் கொடை. என் பங்காற்றல் ஒன்றுமில்லை” என்று கூறிவிடுவார்.

காவேரி செழிப்பாக ஓடிக்கொண்டிருந்த காலம் அது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் அவருக்கு, ஆறாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இருந்தன.
திருச்சிராப்பப்ள்ளி மாவட்டத்தில், குளித்தளை, தொட்டியம், முசிறி பகுதிகளில் சுமார் நான்காயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இருந்தன. இன்னும் பல ஊர்களில் விவசாய நிலங்கள் இருந்தன. நில உச்சவரம்பு சட்டம் இல்லாத காலம் அது.

அத்துடன் அவருடைய அப்பச்சி காலத்தில் இருந்தே மலேசியாவில் பெரும் வரவு-செலவு.  பினாங்கு, சிரம்பான், கிள்ளாங், கம்பார், ஈப்போ என்று பல ஊர்களில் கொடுக்கல், வாங்கல் தொழில்கள்.  அவற்றை எல்லாம் ஏஜன்ட் செட்டியார்கள் மூலம் நிர்வகித்துக் கொண்டிருந்தார்.

வீட்டில், தங்கம், வெள்ளி, வைரம் என்று ஏராளமான அசையும் சொத்துக்கள்.

அத்தனை பெரிய செல்வந்தருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்தது. அவருக்கு இரண்டே இரண்டு பெண் குழந்தைகள். அந்தப் பெண் மக்களை உரிய வயதில் நல்ல இடங்களில் கட்டிக் கொடுத்துவிட்டார். வம்சத்தின் பெயரைச் சொல்வதற்கும், வம்சம் வளர்வதற்கும், அத்தனை செல்வங்களை கட்டிக் காப்பதற்கும் ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பதுதான் அவருடைய மனதை அரித்துக்கொண்டிருந்த பெரும் மனக்குறை.

அவருக்கும் வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தது.  உறவினர்களின் வற்புறுத்தலால் சுவீகாரம் கொள்வதென முடிவு செய்தார். சுவீகாரத்திற்குப்பின் தன் மூத்தமகள் வழிப் பேர்த்தியையே சுவீகாரம் கொள்ளும் பையனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவது என்றும் முடிவுசெய்தார்.

அவருடைய அன்பு மனைவி சிகப்பி ஆச்சி அவர்களும்  சுவீகாரத்தில் மிகவும் விருப்பத்தோடு இருந்தார்கள். முதலில் நல்ல பையன் கிடைக்க வேண்டுமே என்று தேடுதலைத் தவிர்த்துக்கொண்டே வந்த சின்னைய்யா செட்டியாரும், இனி நாளைக் கடத்தாமல், அதற்கு முயற்சி செய்வோம் என்று களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். தெரிந்த இடங்களில் எல்லாம் விசாரிக்கத் துவங்கினார்.

செட்டியாரின் நெருங்கிய நண்பரான கருப்பையா செட்டியார், ஒரு நாள், ஒரு நல்ல தகவலோடு வந்தார்.

தங்கள் வட்டகையில் உள்ள ஊர் ஒன்றில் பத்தாம் வகுப்புவரை படித்த 17 வயது இளைஞன் ஒருவன் இருப்பதாகவும், நல்ல அம்சத்தோடு இருக்கிறான் என்றும், அவனுடைய பெற்றோர்களிடம் பேசி விட்டதாகவும், போய்ப் பார்த்துப் பிடித்துப்போனால், அவனையே கூட்டிக் கொள்ளலாம் என்று சொன்னார். சொன்னது மட்டும் இல்லாமல், அடுத்துவந்த மூகூர்த்தநாளில், சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

முதலில் நாம் பார்ப்போம், பிறகு மற்றவர்களை அழைத்துக்கொண்டு செல்வோம் என்று முடிவு செய்த சின்னய்யா செட்டியார், தன் நண்பர் கருப்பையா செட்டியாரைக் கூட்டிகொண்டு அந்த ஊருக்குப்  புறப்பட்டுச் சென்றார்.

பையனின் வீட்டில் செட்டியாரைத் தடபுடலாக வரவேற்றார்கள்.

பையன் நல்ல சிவந்த நிறம், லட்சணமாக இருந்தான்.  செட்டியாருக்கு மிகவும் மகிழ்ச்சி.

அழகாய் இருந்தால் போதுமா? அறிவாக, கெட்டிக்காரத்தனமாக இருப்பது அல்லவா அதைவிட முக்கியம். அதைத் தெரிந்து கொள்ள விரும்பிய சின்னய்யா செட்டியார் இப்படிச் சொன்னார்.

“தம்பியுடைய கையெழுத்தைப் பார்க்க வேண்டும். தாளும் பேனாவும் கொண்டு வந்து கொடுங்கள்” என்றார்.

எழுதும் சாய்வு மேஜை, தாள், பேனா எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தன.

”தம்பி, எழுதுங்கள்!” என்றார்.

பையன் உடனே பிள்ளையார் சுழி, சிவமயம் என்று தாளில் எழுதியிருக்க வேண்டும்.  அதைச் செய்யாமல் அவன் இப்படிக் கேட்டான்:

“என்ன எழுத?”

செட்டியார் உடனே, ”பிள்ளையார் சுழி, சிவமயம் போடுங்கள்!” என்றார்.

உடனே அவன் அதைச் செய்திருக்க வேண்டாமா?

செய்யாமல், அதாவது அதை எழுதாமல் அவன் திரும்பவும் கேட்டான்.

”உனா, சிவமயம் தானே?”

செட்டியாருக்குச் ‘ச்சீ’ என்றாகி விட்டது.

பிள்ளையார் சுழி, சிவமயம் கூட எழுதத் தெரியவில்லை. அத்துடன் அதை உனா, சிவமயமா என்று மக்குத்தனமாக வேறு கேட்கின்றான். இவன் வந்தா நமது சொத்துக்களை காப்பாற்றப் போகிறான்? என்று மனதிற்குள் மின்னலாக நினைத்தவர், சட்டென்று எழுந்துவிட்டார். அத்துடன், தன் நண்பரைப் பார்த்துக் கண்ணால் சைகை செய்துவிட்டு,  அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்.

உடன் எழுந்த கருப்பையா செட்டியார், பையனின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு, சின்னய்யா செட்டியாரைப் பின் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்தார்

வீட்டிற்கு அருகில் நின்றிருந்த காரில், அவருடன் ஏறி அமர்ந்த சின்னைய்யா செட்டியார் கார் புறப்பட்டவுடன் சொன்னார். “பிள்ளையார் சுழி சிவமயம் கூடத் தெரியாத தோசிப் பயல். இவனைக் கூட்டிக்கொண்டு வந்து நாம் என்ன செய்வது? வேறு இடம் பார்ப்போம் என்றுதான் எழுந்து வந்துவிட்டேன்.”

பிள்ளையார் சுழி, சிவமயம் என்று எழுதிவிட்டுத்தான் எதையுமே எழுதத் தொடங்குவது நகரத்தார்களின் வழக்கம்.  அதைப் பழகிக் கொள்ளாத ஓரு நகரத்தார் இளைஞனின் வாழ்க்கை எப்படித் திசைமாறிப் போனது,  எவ்வளவு பெரிய வாய்ப்பை அவன் இழந்து விட்டான் என்பதற்கு இதை எடுத்துக் காட்டாக எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.

”வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், உனா, சிவமயம் தானே என்று கேட்டான் பாரு அதுதான் கோளாறு. அங்கேதான் அடி விழுந்தது.
ஆகவே எதையும் சபை அறிந்து பேச வேண்டும்!” என்று முத்தாய்ப்பாக வேறு எங்கள் அப்பச்சி சொல்வார்கள்
 =========================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===============================================================

9.12.13

Astrology: Quiz.27. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.27. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தியேழு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

திரைப்பட நட்சத்திரம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

6.12.13

சுடர் திங்கள் சடையானைப் பற்றி சூலமங்கலம் சகோதரிகள் பாடியது




சுடர் திங்கள் சடையானைப் பற்றி சூலமங்கலம் சகோதரிகள் பாடியது 

பக்தி மலர் 

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய திருவாசகப் பதிகங்கள் சில இந்த வார பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன், 
வாத்தியார் 
------------------------------------ ---------------------------
பாடலின் காணொளி வடிவம்!
Our sincere thanks to the person who uploaded this song in the net! 



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=================================================

5.12.13

நகைச்சுவைக் கதை: கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!

 

நகைச்சுவைக் கதை:  கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!

செக்கு என்றால் என்னவென்று தெரியுமா?

தெரியாதா?

இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதுதான். ஆகவே செக்கின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்!.



எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் எல்லோருமே செக்கில்தான் எண்ணெய் வாங்குவார்கள். நல்லெண்ணெய். (எள் எண்ணெய்) அப்போது (1957ல்) ஒரு லிட்டர் எண்ணெயின் விலை ஒரு ரூபாய்தான்

ஒரு ஜாடி 18 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மொத்தமாக வாங்கினால் செக்கு வைத்திருப்பவரே தங்கள் வேலையாளின் மூலம் வீட்டிற்கே கொண்டுவந்து ஜாடி நிறைய ஊற்றிவிட்டுப் போவார். நுரை பொங்க பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.வீட்டில் சமையலுக்கு மட்டுமல்ல, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும் அதே நல்லெண்ணய்தான்!

சமயத்தில் தீர்ந்துபோய் அவசரத்திற்கு இரண்டு அல்லது மூன்று
லிட்டர்கள் எண்ணெய் வேண்டுமென்றால் நாம்தான் போய் வாங்கிக்
கொண்டு வர வேண்டும். நான் பலமுறை செக்கடிக்குப் போயிருக்கிறேன். போகும்போது, அங்கே சற்று நேரம் நின்று அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்.பாவம் செக்கு மாடுகள். ஒரே வட்டத்திற்குள் திரும்பத் திரும்ப சுற்றிகொண்டிருக்க வேண்டியதுதான். அதனால்தான் அந்தக்
காலத்தில் பெரியவர்கள், தங்கள் வீட்டில் உள்ள பெண்டாட்டிதாசர்களை, “செக்கு மாடாட்டம் பெண்டாட்டியையே சுற்றி வந்து கொண்டிருக்கிறான்” என்று கடிந்து கொள்வார்கள்.

இப்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையின் விலை ரூ.240:00. 56 ஆண்டுகளில் 240 மடங்கு விலை ஏறியுள்ளது.கடலை எண்ணெய், சன் ப்ளவர் ஆயில், ரிபைண்ட்ஆயில், பாமாயில் எல்லாம் பின்னால் வந்தவை. அதை நினைவில் வையுங்கள்.
---------------------------------------------------
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. சண்முகம் செட்டியார் பள்ளிக்கூடம் ஒன்றில் கணக்கு  வாத்தியாராகப் பணி செய்து கொண்டிருந்தார். அத்துடன் தமிழ் அறிவும் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியம்வரை புரட்டி எடுத்துவிடுவார்.

அதிகாலையில் எழுந்தவர், காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, ஆச்சி போட்டுக்கொடுத்த சீனூஸ் ஃபில்டர் காப்பியைச் சாப்பிட்டு விட்டு, அன்றைய நாளிதழில் மூழ்கியிருந்தார்.

ஆச்சி வந்து தோள்களைத் தொட்டவுடன்தான் தன்னிலைக்கு வந்து நிமிர்ந்து பார்த்தார்.

”எண்ணெய் தீர்ந்து போச்சு, சானா ஊரணி செக்கடிக்குப் போயி எண்ணெய் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னதோடு, ஒரு தூக்குப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்தார்.

“நான் போகமுடியாது. வேணும்னா நீ போய் வாங்கிக்கிட்டு வா”

“ஏன் போக முடியாது? பக்கத்திலதானே இருக்கு”

”எங்க பள்ளிக்கூடத்துப் பயலுக எவனாவது பார்த்தான்னா நாளைக்கே ஒரு புது பட்டப்பெயரை வைத்துவிடுவான்கள்!”

”இப்பவே உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில நாலு பெயர் இருக்காம்ல. அதோட ஒன்னு கூடுனா தப்பில்லை. போய் வாங்கிட்டு வாங்க! வாங்கிட்டு வந்தாத்தான் பூரி மசால். உங்களுக்குப் பிரியமான பலகாரம். இல்லைன்னா கோதுமை தோசைதான். யோசித்து முடிவு பண்ணுங்க!”

சொல்லிவிட்டு ஆச்சி வளவு நடைக்குள் போய்விட்டார்கள்.

வேண்டா வெறுப்பாக கிளம்பிய செட்டியார், பத்து நிமிட நடையில் செக்கடிக்கு வந்து சேர்ந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரி மசால்ன்னா ருசித்துச் சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு ஆசை தீர பகலில் ஒரு மணி நேரம் தூங்கலாம்!

அவர் அங்கே வந்தபோது செக்கின் உரிமையாளர் உலகநாதன் செக்கில் அரைத்துக்கொண்டிருந்தார்.

இவரைப் பார்த்தவுடன். அந்த வேலையை விட்டுவிட்டு, முன்புறம் இருந்த அறைக்கு வந்தார். அதை அறை என்று சொல்ல முடியாது. 10 x 6 ல் கூறை வேய்ந்த இடம். ஒரு நீண்ட பெஞ்ச். அதன் மீது எவர்சில்வரிலான
எண்ணெய் டிரம். மற்றும் சிறிய கல்லாப்பெட்டி. முன்புறம் மூங்கில் தட்டியிலான தடுப்பு.

”என்ன அப்பச்சி வேண்டும்?” என்று கேட்டார்

“இந்தப் பாத்திரம் என்ன அளவு பிடிக்குமோ அந்த அளவு எண்ணெய் ஊற்றப்பா” என்றார்

“நான்கு லிட்டர் பிடிக்கும் அப்பச்சி” என்று சொல்லிக்கொண்டே, கனத்த குரலில்,கையைத் தட்டியவாறு ”இந்தா...இந்தா... ஓடுறா” என்று குரல் கொடுத்தார்

உடனே ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் உட்புறம் மாடு ஓடும் சத்தம் கேட்டது.

செட்டியார் ஆரவத்துடன் கேட்டார்: “இப்போது என்ன செய்தாய்? உள்ளே மாடு ஓடும் சத்தம் கேட்கிறதே?”

”அப்பச்சி, மாட்டை வைத்து எண்ணெய் ஆட்டும் வேலையை நான்தான் செய்ய வேண்டும். அதே போல இங்கே வியாபாரத்தையும் நானேதான் கவனிக்க வேண்டும். தனித்தனியாக ஆட்களைப் போடுவதற்கெல்லாம் வசதி பத்தாது. ஆகவே இரண்டு வேலைகளையும் நானேதான் செய்கிறேன். நான் இங்கே வந்தால் மாடு நின்று விடும். அதனால் குரல் கொடுத்தால், நான் இருப்பதாக நினைத்துக்கொண்டு மாடு ஒட்டம் எடுக்கும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளும் நடக்கும்”

“மாடு ஓடுகிறது என்று எப்படித் தெரியும்?”

”அதுதான் அதன் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டியிருக்கிறேனே. அந்த சப்தத்தில் இருந்து தெரியும்”

”கெட்டிக்காரனப்பா நீ...உன்னைப்போல எல்லோரும் பாடுபட்டால், இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானாக மாறிவிடும்”  என்று பாராட்டியவர், அவனிடம் எண்ணையை வாங்கிக்கொண்டு அதற்கு உரிய காசையும் கொடுத்துவிட்டுத் திரும்பி வீட்டை நோக்கி நடக்க எத்தனித்தார்.

அவன் காசை வாங்கி எண்ணிச் சரிபார்த்துக் கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு, படலின் கதவைத் திறந்து கொண்டு, செக்கு இருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றான்.

அதற்குள் சட்டென்று திரும்பி வந்த செட்டியார், அவனிடம் சொன்னார்: “உலகநாதா, ஒரு சந்தேகம் கெட்கலாமா?” என்றவர் தொடர்ந்து கேட்டார்:
“மாடு ஓடினாலும் மணிச் சத்தம் கேட்கும். நின்று கொண்டே கழுத்தை ஆட்டினாலும் மணிச் சத்தம் கேட்கும். மாடு ஓட்டம் எடுக்காமல் நின்று கொண்டே கழுத்தை அசைத்து, ஓசை எழுப்பி, உன்னை ஏமாற்றினால், அது
உனக்கு எப்படித் தெரியும்?”

வகுப்பில் ஏமாற்று வேலை செய்யும் பல பையன்களைப் பார்த்த அனுபவத் தில் அவர் அப்படிக் கேட்டார்

“மாடு அப்படி எல்லாம் செய்யாது அப்பச்சி!” என்று அவன் பதில் உரைத்தான். இவர் விடவில்லை.

தொடர்ந்து கேட்டார்

“செய்யாது என்று எப்படிச் சொல்கிறாய்?”

“இல்லை அப்பச்சி. மாடுகளோடு எனக்கு 20 வருஷ பழக்கம் உண்டு. அவைகள் அப்படிச் செய்யாது!”

“அதைத்தான் எப்படி என்று கேட்கிறேன்”

”மாடு உங்களைப் போல படிக்கவில்லை. படித்தால்தான் புத்தி அந்தமாதிரி கோண வேலைகளைச் செய்யும். அதானால்தான் சொல்கிறேன்”

செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செட்டியார் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்
                                =============================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================

4.12.13

Astrology: அவன் கொடிபிடித்தால் என்ன ஆகும்?

 
Astrology: அவன் கொடிபிடித்தால் என்ன ஆகும்?

அவன் கொடிபிடித்தால் கலகம்தான். அதாவது கேது கொடிபிடித்தால், கொடி பிடித்து முன் நடந்தால், ஜாதகனின் வாழ்க்கையில் கலக்கம்தான். துயரம்தான்.

உடனே பயந்துவிடாதீர்கள். மூன்று சுபக்கிரகங்களும் ஜாதகத்தில் வலிமையோடு இருந்தால், ஜாதகனின் துயரங்களைக் குறைப்பார்கள். தாக்குப் பிடிக்கும் சக்தியைக் (with standing power) கொடுப்பார்கள்
----------------------------------


நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகம் கேது கொடிபிடிக்கும் ஜாதகம். அத்துடன் அது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்தார்?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தியாக் கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்க வில்லை. பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.
-----------------------------------------------------
நேற்றைய புதிருக்குப் பலரும்  கேது கொடிபிடிக்கும் ஜாதகம் அது என்பதைக் கவனித்துப் பதில் எழுதியிருக்கிறார்கள். நன்றாக அலசியிருக்கிறார்கள். மொத்தம் 26 அன்பர்கள் மற்றும் அன்பிகள் (அன்பருக்குப் பெண்பால் அன்பிகள் - சரிதானா?) கலந்து கொண்டு தங்கள் பதிலை எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அவற்றில் ஓரளவிற்கு நெருங்கி வந்து சிறப்பாகப் பதில் எழுதியவர்களின் பெயர்களை (அவர்கள் எழுதிய முக்கியமான வரிகளுடன் கீழே கொடுத்துள்ளேன்) படித்துப் பாருங்கள். அவர்கள் 11 பேர்களுக்கும் எனது விஷேசப் பாராட்டுகள்

1. Keven: கேது கொடி பிடித்து செல்கிறார். துறவை / இழப்பைக்குறிக்கிறது.

2. KJ: 2. Suriyan and kethu at 7th house is not favour for marraige life. Though because of Guru's 5th aspect to 7th house, She got married and that ends in divorce or...

3.Janani Murugesan: 3. 2 & 5 க்குடைய குரு 3ல் நீசம், சனி ஐந்தாம் வீட்டில் அதனால் குடும்பம் குழந்தை போன்றவை இவருக்கு அமையாமல் போய் விட்டது.

4. Palani Shanmugam: குரு ஐந்தாம் பார்வையாகவும், சனி 5இல் இருந்து களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். 7ஆம் வீட்டு அதிபதி அந்த இடத்துக்கு 12இல் இருப்பதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருந்திருக்காது. 6இல் களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் மறைந்து விட்டதாலும் 7க்கு எட்டாமிடத்தில் குரு நீச்சம் பெற்று விட்டதாலும் கணவருக்கு ஆயுள் குறைவு.

5.Venkatesh.T: ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் அதற்கு 12ல். சுக்கிரனுக்கு 8ல் களத்திர காரகன் ராகுவுடன் இருப்பது கடுமையான களத்திர தோஷம். அதை தவிர 7ல் கேது இருப்பதால் ஜாதகி கணவனை இழந்தவர்.

6. Ravichandran: 3. Married and her husband died.(Widow)

7.Dr.Mohan, Brunei  Difficulty in marriage life

8.Trichy Ravi: her husband must be expired due to 7th house owner(Sukran) sitting in 12th house(Virayam) from 7th house.

9. Mahendran.D: சூரியன் + புதன் சேர்க்கை செவ்வாயின் வீட்டில் அமர்வதால் விதவையாவாள்.

10. Radha Sridhar: கேது கோடி பிடிக்க, கால சர்ப்ப தோஷம். பெரிய குறை. இரண்டாம் வீட்டதிபதி குரு நீசம். நல்ல குடும்ப வாழ்க்கை அமைவது சிரமம். ஏழாம் வீடு சூரியன் ,கேது உள்ளதால் திருமணம் ஆகாது. குழந்தை இருக்காது. ஏழாம் வீட்டதிபதி 6ல் அஷ்டமாதிபதியுடன் சேர்க்கை.

11. Hamaragana: 2மிட உள்ள குரு 3மிடத்தில் நீசமாகி போனார். ஆகவே குடும்பம் இல்லை. 5மிடம் மீனம் சனி -குரு பரிவர்த்தனை .சிறப்பாக இருந்தாலும் பிறர் குழந்தைகளை தன குழந்தைகளாக பாவிக்கும் நிலை..7மிடம் ரிஷபம் சூரியன்+கேது கூட்டணி -3ம் பார்வையாக சனி வேறு நேசம் பெற்ற குரு பார்த்தாலும் ..3 பாவிகள் செவ்வாய்,ராஹு,&சனி இவர்கள் 3 பேரின் பார்வை ஆகவே திருமணம் என்பது இந்த பெண்ணின் வாழகைய்ல் ஒரு கனவுதான் ஒரு ஆறுதலான விஷயம்.7இல் சூரியனுடன் கேது இருப்பதால் துறவி போன்று சமூக சேவை மனப்பாங்குடன் இருப்பார்
-----------------------------------------------------------
இந்த ஜாதகம் முதலிலேயே நமது வகுப்பறையில், அலசல் பாடங்கள் பகுதியில் நான் வெளியிட்டதுதான். வெளியானது நினைவில் இல்லாமல் எனது கிடங்கில் இருந்து அதை எடுத்து உங்களுக்கு நேற்று நான் கொடுத்திருந்தேன். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே நமது மாணவர் திலகம் ஒருவர் (திருவாளர் சக்தி கருப்பையா, மதுரை) அதைச் சுட்டிக் காட்டினார். அது தவறுதான். இனி அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்

முன்பு வந்த பதிவிற்கான சுட்டி  (URL) clickக்கி அதையும் பாருங்கள்

தேதி: 13.8.2012
பதிவின் தலைப்பு: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்

http://classroom2007.blogspot.in/2012/09/astrology_13.html

நேற்றையப் பாடத்தை ரிவிசன் பாடக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================================

3.12.13

Astrology: Quiz No.26: அடித்துத் துவைத்து அலசுவோம் வாருங்கள்!

 
Astrology: Quiz No.26: அடித்துத் துவைத்து அலசுவோம் வாருங்கள்!

அலசல் புதிர்:தொடர் - பகுதி இருபத்தியாறு!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

சரியான விடையும், உங்கள் அனைவரின் பின்னூட்டமும் நாளை காலையில் வெளியாகும். அனைவருக்கும் வாய்ப்புக்கொடுக்க வேண்டுமல்லவா? அதனால் பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

2.12.13

Astrology: Quiz.25. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.25. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தைந்து.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================================