மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.10.20

Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?


Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?

ஒரு குழந்தையின் ஜாதகம் கீழே உள்ளது.சுவாதி நட்சத்திம். மீன லக்கினம். மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அதீதமான குறும்பு மற்றும் முரட்டுத்தனம். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 1-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.10.20

வத்தக் குழம்பு புராணம்



வத்தக் குழம்பு புராணம்

வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தமிழரின் பாரம்பரியச் சமையலின் தலைமை மருத்துவ குணம் கொண்ட குழம்பு தான் இந்த வத்தக் குழம்பு.. சுவையிலும் தனித்துவத்தில் இருப்பது இதன் பெரும் சிறப்பு.!

வத்தக்குழம்பின் மகாத்மியங்களை சொல்லத்தான் இப்பதிவே.!

#சுண்டைக்காய்_வத்தல்_குழம்பு, #மணத்தக்காளி, #பிரண்டை, #பூண்டு, #வெண்டை, #எண்ணெய்_கத்திரிக்காய்,  #கொத்தவரங்காய் போன்ற வகைகள் வத்தக்குழம்பிற்கு மிகச் சிறந்த காய்கறி வகைகள்..

வெற்றிலை போட்டு வைக்கும் வத்தல் குழம்பும் உண்டு.. இதில் #டாப்_1_இடம்_சுண்டைக்காய்_வத்தக்குழம்புதான்.! சிவாஜி - பத்மினி போல பர்ஃபெக்ட் ஜோடி.!

முதலில் வத்தக் குழம்பிற்கு வைக்கும் சாதம் முக்கியம்.! குழையவேக்கூடாது..
MN நம்பியார்போல மிக விறைப்பாகவும் அதே நேரம் SV ரங்காராவ்போல கொஞ்சம் பதமாகவும் இருக்கவேண்டும்!

குழம்பை சொத சொதன்னு சோற்றில் ஊற்றாமல் பிரட்டுவதுபோல பட்டும் படாமல் பிசைவது மிகச்சிறந்த முறை ஆகும்.

அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிறகு..வத்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டால்!ஆஹஹாஹா! வத்தக்குழம்பு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.. என் பாட்டி வீட்டில் வைக்கும் வத்தக் குழம்பு எல்லாம் அம்மியில் அரைத்த துவையல் போல ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப் போல மிக கெட்டியாக இருக்கும்..

இதற்கு தொட்டுக் கொள்ள வெறும் சுட்ட அப்பளமே தேவாமிர்தமாக இருக்கும்.!

பூசணிக்காய் பால்கூட்டு, தயிர் பச்சடி, புடலங்காய் பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, இப்படி பருப்பு சேர்த்து செய்யும் எல்லா கூட்டும் வத்தக் குழம்பிற்கு பெஸ்ட் காம்போ.. அவியலும் பிரமாதமாக இருக்கும்..

வேலி பிரண்டையை உரசி என் அம்மா வைக்கும் வத்தக் குழம்பு அருமையான மருத்துவ குணம் கொண்ட ஆரோக்கியமான உணவாகும்.. அதே போல.. மணத்தக்காளி போட்டும் வைப்பார்கள் வயிற்று கோளாறுகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும்..

அல்சர் இருப்பவர்கள் வாரத்தில் இரு முறை சாப்பிடலாம்.. ஒரு முறை கோவை வந்திருந்த போது என் பழைய எம்.டி. சுவாமிநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கொங்கு ஸ்டைல் வதங்கல் கத்திரி வத்தக்குழம்பு சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்! அடர் வயலட்டில் மேனியெங்கும் எண்ணெய் மினுமினுங்க நன்கு எண்ணெயில் வதங்கிய முழு கத்திரிக்காய்கள்.. குலாப் ஜாமூன் போல புளிக்குழம்பில் மூழ்கியிருக்க.. கூடவே சுண்டைக்காய் வத்தலும் போட்டு நான் சொன்ன துவையல் பதத்தில் மேடை(சை)க்கு வந்தது..

சாம்பாருக்கு பிறகு 4முறை வத்தக்குழம்பையே சந்திரமுகி ரஜினி போல ரிபீட்டு கேட்டு கேட்டு வாங்கினேன்.!

அடுத்து வெங்காய வத்தக்குழம்பு.. இதுவும் மருத்துவ குணம் மிக்க அஜீரணத்தை கட்டுப்படுத்தும் குழம்பு இதற்கு வடகம், பொரித்த அப்பளம், சில நேரங்களில் மாங்காய் தொக்கு என பல காம்போக்கள் உண்டு..

பாகற்காய் வத்தக்குழம்பு எனது விருப்ப உணவுகளில் ஒன்று.. கொஞ்சம் இனிப்புள்ள பரங்கிப் பூசணி, கொத்தவரங்காய், அவரை, செள செள, காய் கூட்டுகள் இதற்கு..பக்கா பொருத்தமாக இருக்கும்..

எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும் என்ன காய் போட்டாலும் சுண்டைக்காய் சேர்த்து போடுதல் வத்தக்குழம்பிற்கான லட்சணங்களில் ஒன்று..

இந்த வத்தக்குழம்பில் எல்லாம் இன்னொரு வசதி.. தயிர் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.. ஒரே ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் எப்போதும் விடமாட்டீர்கள்.!

கால மாற்றங்களில் ஓட்டல்களில் செக்கச் செவேலென இன்று ஒரு கிண்ணத்தில் வைத்து தரப்படுவதெல்லாம் வத்தக் குழம்பே அல்ல..

சீகைக்காயை அந்த காலத்தில் கரைப்பார்களே அந்தக் கலரில் இருப்பதே அக்மார்க் வத்தக்குழம்பு.

சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 1ஸ்பூன் விட்டு.. பிசைந்து அதை சுட்ட அப்பளத்துடன் சாப்பிடும் சுகமே சுகம்.!

இன்னொன்று  சொல்ல மறந்துட்டேனே..!

முதல்நாள்_செய்த_வத்தக்குழம்பை_பத்துநாள்_வச்சு_வச்சு_சாப்பிட்டால்_பரமசுகம்...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..!!!

அப்போ நாளைக்கு உங்க வீட்டில் வத்தக் குழம்பு தானே.
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.20

முதுமை என்னும் கொடுமை!!!!


முதுமை என்னும் கொடுமை!!!!

*முதுமை + தனிமை = கொடுமை..!!*

பிள்ளையை, பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி மணமுடித்து வைக்கிறோம்! 

வேறு ஊரில், வேறு மாநிலத்தில், வேறு நாட்டில் வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்!

இங்கு 70 வயதிற்கு மேல் வாழ்ந்த வீட்டிலேயே தனிமை!

இங்குதான் என் மகள் படிப்பாள்! இங்குதான் விளையாடுவாள்!
 
என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்..

என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....

*என்ன சமைப்பது?...*
*என்ன சாப்பிடுவது?...* 
*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*
*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*
*தனிமை... வெறுமை...*

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால் பயணம் ஒரு கொடுமை! 

இரயிலில் லோயர் பர்த் கிடைக்க வில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்!

சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு பெரிய யாத்திரை ஆகிவிடுகிறது!

ஓலாவும், ஊபரும் நமக்கு தேவைப்படும் நேரத்தில், பீக் hour சார்ஜ் போட்டு களைப்படையசெய்கின்றனர்!

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

எஸ்கலேட்டரில் போக மனசு குதித்தாலும் வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!
 
*இவை வேண்டாமென ஒதுங்கி...*

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*
*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*
என்றால்... அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*
*ஏதோ ஒரு ஓட்டலில்...*
*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*
*பிசியாக இருப்பார்கள்...* 

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்!* 

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்!*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பார்கள்...*

*நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...*

*அவர்கள் டைமிற்கு...*
*நம் தூக்க நேரம்...*
*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*
*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.* 

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...* 
*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*
*அவன் டியூஷன் போயிருக்கான்...*
*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில் முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*
*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அவனுக்கு நெருடலாய் இருக்குமோ?

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*
*இந்த அரசியல்களும்...*
*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...* 

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை  இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!* 
*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை!

"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா"

( மனதுக்குள் *ஏதோ...*)
*வாழ்கிறேன்!*

🤔🤭🤫😰😥😓😦😪

இது என் கதை... மட்டுமல்ல!

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

*பகிர்வு*
------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.20

எலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை!!!


எலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை!!!

ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் நண்பர் செந்தில்குமார் போய்க்கொண்டு  இருக்கும் போது ஒரு காட்டுப்பூனை குறுக்கே வந்து இவரோட வாகனத்தை சாய்த்துவிட்டது.. 

இவருடன் வந்தவருக்கு சாதாரண சிராய்ப்பு 

ஆனா நண்ரோட கால், முட்டிக்கு கீழே உடைந்தது அவரே உணர்ந்துவிட்டார்.

உதவிக்கு வந்தவங்க 108 அவசர ஊர்தி தகவல் சொல்ல அடுத்த அரை மணி நேரத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தாச்சு..

அதன் பிறகு எனக்கு தகவல் வந்து அடுத்தநாள் காலையில் கோவை போனேன் திருப்பூர் தங்கவேல் அண்ணாவுடன்..

ஒரு மாவு கட்டை போட்டு படுக்க வச்சு இருந்தாங்க..

முழங்கால் வீக்கம்..

அறுவை சிகிச்சை செய்தால்தான் சரி செய்ய முடியும்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க..

எவ்வளவு ஆகும்னு கேட்ட போது  2 லகரத்தை தாண்விடும்னு மருத்துவ நிர்வாகம் சொன்னவுடன்தான் நண்பருக்கு கால் வலியைவிட 
மனது வலித்திருக்கிறது..!

நடுத்தர குடும்பத்தை சார்ந்தவங்களுக்கு 2 லகரம் என்பது எட்டாக்கனி..!
அவ்வளவு எல்லாம் செலவு செய்ய முடியாதுனு சொல்லிவிட்டார்..

சரி என்ன செய்யலாம்னு யோசித்த போது எங்க ஊர் சத்தியமங்கலலத்திற்கும்
கோபிச்செட்டிபாளையத்திற்க்கும் இடையில் சிங்கிரிபாளையத்தில் எலும்புமுறிவுக்கு வைத்தியர்கள் இருப்பது நினைவு வந்தது..

மச்சினனை விசாரித்தேன்..பிரசாந்த் என்ற இளைஞர் இருக்காப்லங்க,
நல்ல அனுபவம்னு சொன்னார்..

அதோடு மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பகிரியில் அனுப்ப சொல்லி எண் கொடுத்தார்..

அடுத்த நொடியிலேயே அனுப்பினேன்..

சில நிமிடங்களிலேயே பிரசாந்திடமிருந்து அழைப்பு வந்தது
"அண்ணா முட்டிக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது,
அதே மாதிரி முலங்கையிலும் ஒரு முறிவு இருக்குங்க ணா..
சரி எண்ணெய் கட்டுக்கு சரியாகுமாங்க பிரசாந்?
அண்ணா முதலில் தப்பை வைத்து ஒரு கட்டு,
அடுத்த பதினைந்தாவது நாளில் ஒரு கட்டு,
அதன் பிறகு மாவு கட்டு,
கடைசியாக முட்டை கட்டு போடும் போது எழுந்து நடந்திடுவாருங்க ..
இதுக்கு மொத்தமா 40 நாட்கள் அவர் ஓய்வில் கை கால் அசைக்காமல் இருக்கனும்
நீவும் போது வலியை பொருத்தக்கனும் என்றார்..
பழையபடி எழுந்து நடக்கவைப்பேனு
எந்த நவீன மருத்துவரும் சொல்லாத போது நாட்டு வைத்தியரின் பேச்சு தைரியம் தந்தது..

என்ன செய்யலாம்ங்க என்று நண்பரை கேட்டோம்..
இந்த 50 நாளில் நா இரண்டு லட்சம் சம்பாதிச்சிட போறதில்லை
அங்கேயே போயிடலாம்னு சொல்லாவிட்டர்..

சரி அப்போ மருத்துவமனையிலிருந்து அங்க அழைத்து வந்துவிடவா என்று வைத்தியரை கேட்டேன்..வந்திடுங்க என்றார்..

ஒரு வாடகை வாகனத்தை பிடித்து சிங்கிரிபாளையம் அருகே காசிபாளையத்தில் இருக்கும் வைத்தியசாலை வந்து சேரும் போது இரவு 10 மணி..

கீழே இறக்கி படுக்க வைத்து முறிந்த எலும்பை சரியாக எடுத்து போட்டு 
கை மற்றும் காலுக்கு தப்பை வைத்து கட்டும் போது 11 மணி ஆகிவிட்டது..

அடுத்த 15 ஆவது நாள் கட்டு மாற்றி போடனும்ங்க என்றார் பிரசாந்..

கோவையிலிருந்து இங்கே வாடகை வாகனம் வச்சு வருவது சிரமம்ங்க
வேறு ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க என்றோம்..

சரிங்க அப்போ நானே கோவையில் உள்ள அவர் வீட்டுக்கு போய் கட்டிவிடுகிறேனு சொல்லிவிட்டார்..

இதுவும் நல்ல யோசனைதான் என்று சம்மதித்துவிட்டோம்..

ஒருமாதம் முழு ஓய்வு அசைவு இல்லாமல்..

கடைசியாக ஐம்பதாவது நாளில் முட்டை கட்டை பிரிக்கும் போது வாக்கர் வைத்து நண்பர் நடந்துவிட்டார்..

அடுத்த நான்காவது நாளில் எனக்கு அழைப்பு "தோழர் எங்க இருக்கீங்க?
தோட்டத்தில்தான் ங்க நாங்க சென்பகபுதூர் வாய்க்காலில் குளிச்சுட்டு இருக்கோம் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே வந்திடுவோம் என்று அதே போல வந்தும் விட்டார்.

ஆனால் நாங்க எதிர்பார்த்தது வாகனத்தில் வருவார் என்று..

ஆனா அவர் வந்ததோ மிதிவண்டியில்..!

தோழர் எப்படி ங்க என்றேன்..இவர் என்னோட நண்பர்
நேற்று இரவு திடீர்னு முடிவு சத்தியமங்கலம் சைக்கிளில் போறதுனு
அண்ணனை கேட்டேன் சரி என்றார்.
காலை நாலு மணிக்கு சைக்கிளை எடுத்தோம்.
ஒன்பது மணிக்கு வாய்க்கால் வந்து ஒரு குளியல் போட்டுட்டு 
11 மணிக்கு உங்க தோட்டமே வந்தாச்சு என்றார் அசால்டாக..!

அது தெரியுது தோழர் கிட்டத்தட்ட 80 கிலோ மீட்டர் வந்திருக்கீங்க
அதுவும் அக்னி வெயிலில்..இன்னும் 80 கி மீ போகனும்.
கால் வலியில்லையா என்றேன்..

சத்தியமா சொல்றேன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து
போல்ட், நட் வைத்திருந்தால் கண்டீப்பா இந்தளவுக்கு என்கால் பழைய நிலைக்கு வந்திருக்காது.."எல்லா புகழும் பிரசாந்துக்கே" என்று மதிய உணவை முடித்து விட்டு மதியம் மூன்று மணிக்கு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு 
கிளம்பியவர்கள் இரவு 10:45 க்கு கோவை வடவள்ளி போய் சேர்ந்துவிட்டதாக தகவல் அனுப்பினார்..

அதிலிருந்து உள்ளூரில் யாருக்காவது அடிபட்டால் உடனே நான் பரிந்துரைப்பது பிரசாந்தைதான்..

இப்போது வரை பத்துக்கு மேற்பட்டவங்களை எண்ணெய் கட்டு மூலமாகவே சரிசெய்துள்ளார்..

கிட்டத்தட்ட பத்து ஆண்டு அனுபவம் என்றாலும் கண்களால் பாத்தாலே
என்ன பிரச்சனையை சொல்லி சரியும் செய்துவிடுகிறார்..

இது இந்த பகுதியில் உள்ள பரம்பரை வைத்தியர்களில் எத்தனை பேர் இப்படி திறமையுடன் இருப்பாங்கனு சொல்ல முடியாது..

நண்பருக்கு மொத்த செலவே 11 ஆயிரம் ரூபாய்தான் எண்ணெய் கட்டு போட்ட வகையில்..

இவ்வளவு குறைந்த தொகை வாங்கினால் எப்படிங்க பிரசாந் என்றேன்..?

அண்ணா மாற்று மருத்துவம் தேடி மக்கள் வர ஆரம்பித்து இருக்காங்க..
அதில் 80 சதவீதம் பேர் வசதி இல்லாதவங்க..அலோபதி அளவுக்கே செலவு வைத்தால் எப்படி அவர்களால் தாங்க முடியும்..

எங்க பரம்பரையே வைத்திய பரம்பரைதான். அதனால பணம் முக்கியம் இல்லைங்க.பழையபடி அவர்கள் எழுந்து நடந்து என்னை வாழ்த்தினாலே போதும் பரம்பரையே செழிக்கும்னு சாதாரணமா முடிச்சுட்டாப்லங்க..

85 வயது மூதாட்டியை கூட எண்ணெய் கட்டு மூலமா எழுந்து நடக்க வச்சு இருக்கார் இந்த இளைஞர்..

அதோடு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிந்து வெளியேவே வந்தாலும் கட்டு மூலம் சரிசெய்துவிடுவதாக உறுதி சொல்கிறார்..

லட்சங்களை வாரி அள்ளும் ஆங்கில மருத்துவர்கள் சொல்லாத உத்திரவாதத்தை சில ஆயிரங்களையே கூலியாக பெறும் இந்த நாட்டுவைத்தியர் உறுதியாக சொல்கிறார்..

அதோடு 250 கிலோ மீட்டர் சுற்றவளவுக்கு எலும்பு முறிவு வைத்தியம் பார்க்க வேண்டும் என்றாலும் நேரிலேயே வந்து பார்ப்பதாகவும் சொல்கிறார் பிரசாந்த்..

அவருடைய விலாசம் மற்றும் தொடர்பு எண்,

Prasanth, 
s/o Selvan ,
mariyamman kovil street, 
karatupalayam road kasipalayam.
Gobichettipalayam (tk) 638454..
Contact:+91 78451 99659..

எளிய மக்கள் பயனுரவே இந்த அனுபவத்தை எழுத்தியுள்ளேன்..
முடிந்தவரை பகிர்ந்து மருத்துவ செலவை எளிதாக்க உதவுங்கள்..

நன்றி..
திருமூர்த்தி ..
சத்திமங்கலம்..
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.10.20

முதல் மரியாதை உருவான கதை!!!!


முதல் மரியாதை உருவான கதை!!!

"எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு..."

என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்தாா் இளையராஜா !

முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் . 

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!

இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது . 

ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர் , நடிகையாகத் தேர்வு செய்தது .

கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள் , இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி ! 

அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு .

திருப்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடையும் , ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு ! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல் கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது . 

காதல் தோல்வியடைந்த இளசுகள் மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக் கெஞ்சுவார்கள் . 

ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் பாரதிராஜாவை அண்ணாந்து  பார்க்க வைத்தது . இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த வரலாற்றுச் சுவடு . 

ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா பட்டபாடு சொல்லி மாளாது !

தஸ்தாவெஸ்கி ! உலகத்தின்  மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் கதையை வைத்து முதல் மரியாதை படத்திற்கான கரு கதாசிரியர் ஆர். செல்வராஜ் மூளையில் உதித்தது . 

இந்த செல்வராஜ் சிறுவயது முதலே பாரதிராஜா , இளையராஜா இவர்களோடு நெருங்கிப் பழகி வந்தவர் . இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவின் அண்ணன் மகன் . `

'குற்றமும் தண்டனையும்', 'கரமசோவ் சகோதரர்கள்’ என்று தஸ்தாவெஸ்கி எழுதிய எல்லாம் இன்றும் கொண்டாடப்படும் ஆகச் சிறந்த படைப்புகள் . 

அரசைக் கடுமையாக எதிர்த்து எழுதக் கூடியவர் தஸ்தாவெஸ்கி . 
அவர் வறுமையில் வாடினாலும் அரசை எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் . 

எனவே அவருக்கு மரண தண்டனையை விதித்து அரசு உத்தரவிட்டது.  

தூக்குமேடைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட இன்னும் மூன்று நாட்களே இருந்தன . அவருடைய எழுத்தை வாசிக்கும் ஆதரவாளர்கள் சிலர் அதிகார மையங்களில் இருந்தனர் . 

எனவே, அரசிடம் 'அவரை ஒருமுறை மன்னித்துவிடலாம்’ என்று  கோரிக்கை வைத்தார்கள் . அது ஏற்கப்படவில்லை . 

பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கெனச் சில விதிமுறைகள் இருந்தன . அதில் முக்கியமானது கைதியின் உடல் எடை குறையக் கூடாது.. எடை குறைந்தால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிடும் . 

அப்படியாக , தூக்கிலிடும் நாளுக்கு முன்பாக தஸ்தாவெஸ்கியின் எடையைப் பார்த்தபோது , அவர் எடை குறைந்திருந்தார் . அதனால் , அவர் தூக்கிலிடப்படவில்லை . பின்னர் , அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலையானார் . 

அதன் பிறகு மீண்டும் அவர் கடனால் கைதாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார் . 

கடனால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க ...... மூன்று தங்களுக்குள் அவர் ஒரு நாவலை எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றத் தரப்பில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது . 

தஸ்தாவெஸ்கி அப்போது ஓர் உதவியாளர் மட்டும் தேவை என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் . அவருக்கு அன்னா என்கிற இளம்பெண்ணை உதவியாளராக அனுப்பி வைத்தனர் . 

அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியை தொடக்கத்தில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை .  'என்னடா ஒரு கிழவன்கிட்டே வந்து மாட்டிக்கிட்டோமே ..’ என்று நொந்து போனார் இளம்பெண் அன்னா . 

வேறு வேலைக்குச் செல்லவும் முயற்சி செய்துகொண்டிருந்தார் . 
இந்தச் சூழலில் தஸ்தாவெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல .... அந்தப் பெண் டைப் செய்து கொண்டே வந்தார் .

மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப் போகிறது . காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள் . 

குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால் , அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார் . 

அந்த நாவல்தான் `குற்றமும் தண்டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார் ; கடனையும் அடைத்துவிடுகிறார் . 

அதன்பின் , அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது . அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள் . அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள் . 

தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப் போக , அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார் . அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும் . 

ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை . அவள் இல்லாமல் வாழ முடியவில்லை . தஸ்தாவெஸ்கி இறந்து , 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே இருக்கிறாள் . 

இந்த உண்மைச் சம்பவம் கதாசிரியர் ஆர். செல்வராஜ் மனதைப் பாதித்தது . அதுதான் அவருடைய எழுத்தில் `முதல் மரியாதை’ படமாக உருவானது !

அந்த இருவரின் களங்கமில்லா அன்புதான் , `முதல் மரியாதை' படத்தின் அடிநாதம் . அன்பு என்பது உடலால் வருவதல்ல , மனதால் வருவது .  

இந்தக் கதையைச் சொன்னதும்  இயக்குனர் பாரதிராஜாவுக்கு 
ரொம்பவும் பிடித்துப் போய்.விட்டது . 

பாம்குரோவ் ஓட்டலில் வைத்து ஆர்.செல்வராஜிடம் ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து , 'என் வாழ்வும் தாழ்வும் உன் கையில்தான் இருக்கு .... இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்’ என்று சொன்னார் . 

'இது எனக்கு எதுக்கு... நீங்க வீட்டை வேற அடமானம் (அப்போது 
தி.நகரில் உள்ள ஒரு வீட்டை படம் எடுப்பதற்காக பாரதிராஜா அடமானம் 
வைத்திருந்தார்) வெச்சிருக்கீங்க ...... வேண்டாம்’ என மறுத்தார் 
ஆர். செல்வராஜ் .

பிறகு ,  பெங்களூருவில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை ஒதுக்கித் தந்தார் . அறை எண் 46 . 

ஏறக்குறைய 40 நாட்கள் 'முதல் மரியாதை’ படத்தின் திரைக்கதையை எழுதினார் செல்வராஜ் . அவ்வப்போது பாரதிராஜா வருவார் . 

தேவையானதைச் செய்து கொடுத்துவிட்டு , திரும்பிச் செல்வார் ஒருநாள் அவரை அழைத்து 'ஸ்கிரிப்ட் ரெடி.. வாங்க’ என்று அழைத்தார் செல்வராஜ் . 

அன்றே , சென்னையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஸ்கிரிப்ட்டைப் படித்தார் . 

'நட்புக்கும் காதலுக்கும் இடையே நீ ஒரு கப்பல் ஓட்டியிருக்கே ..... இந்தக் கப்பல் கரை தெரியாத கடலில் மிதக்குது.. கதை சூப்பர்... சூப்பர்!' என்று, பாராட்டினார் . 
உடனே , தொலைபேசியில் சித்ரா லட்சுமணனை அழைத்து , படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் . 

கதை பிரமாண்டமாக இருந்தது . ஏற்கனவே சிவாஜிகணேசனை ஒரு படத்திலாவது இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த பாரதிராஜாவே சொன்னார் .... 'நாம சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம் ...’

நடிகர் திலகம் சிவாஜி பொதுவாகவே கதை கேட்காமல் எந்தப் படத்தையும் ஒப்பு கொள்வதில்லை ! அவரிடம் போய் பாரதிராஜா , 'அண்ணே .... இதுதான் படத்தோட ஐடியா , நீங்க நடிச்ச நல்லா இருக்கும்' என்று நான்கு வரியில் படத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார் . 

அப்போது உச்சத்தில் இருந்தார் இயக்குநர் பாரதிராஜா .
அவர் மீது கொண்ட நம்பிக்கையில் நடிகர் திலகமும் ஒப்புக்கொள்கிறார் .

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் என்ற மலைக் கிராமத்தில் படப்பிடிப்பு.. காவிரிக் கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம் . சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் . 

எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர். இயக்குநரும் வந்து சேர்கிறார் . அப்போது நடிகர் திலகம் திரிசூலம் ராஜசேகர் கெட் அப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் . அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு செம மூட் அவுட் ! 

படப்பிடிப்புக் குழுவை விட்டுத் தள்ளி வெகுதூரம் போய் சிகரெட்டை 
எடுத்துப் பற்ற வைக்கிறார். பற்ற வைக்கிறார் ..... கிறார் ..... சிகரெட் 
பாக்கெட் காலியாகிறது .

நடிகர் திலகம் உட்பட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி ! முதல் ஷாட் வைக்க வேண்டிய முகூர்த்த நேரமும் கடந்து விட்டது . நடிகர் திலகம் ஏதோ குழப்பம் என்பதை மட்டும் உணர்கிறார் .

அப்போது உதவி இயக்குநராக இருந்த சித்ரா லட்சுமணனை அழைத்து
 'அந்தக் கருவாயனுக்கு என்ன பிரச்சினையாம் !' எனக் கேட்கச் சொல்கிறார் . 

சித்ராவும் இயக்குநரிடம் போய் அமைதியாக நிற்கிறார் . இயக்குநர் '
பேக்கப்' என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார் . இயக்குநர் சொன்னால் சொன்னதுதான் !

யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா 
வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள் . 

இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி 
கமலாம்மா ஸ்பாட்டிலேயே 'சுடச் சுட' இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார் . 

நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார் . டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல , தகவல் இயக்குனருக்குத் தெரிவிக்கப்படுகிறது .

தட்ட முடியாமல் சாப்பிட வருகிறார். 
நடிகர் திலகம் உட்கார்ந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் உற்சாகமாகி, 'அண்ணே ..... இதான் எனக்கு வேணும் ! இப்படியே இருங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்' என்று சாப்பிட மறந்து படப்பிடிப்புக்குத் தயாராகிறார் இயக்குநர் .

நடிகர் திலகத்திற்கு பேரதிர்ச்சிா! 
மேக் அப் , விக் இல்லாமல் நடிச்சா தன்னோட ரசிகர்கள் எப்படி ஒத்துக்குவாங்க என்று இயக்குநரிடம் எவ்வளவோ சொல்கிறார் . 

'அண்ணே், நான் சொல்றேன் ..நல்லா வரும் வாங்க' , என்று சொல்ல படப்பிடிப்புத் தொடங்குகிறது .

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் சிவாஜி , ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார் . அப்போதுதான் கவனித்தார்கள். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை . தவறு நடந்துவிட்டது . கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது .

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றார் பாரதிராஜா.. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன்’ என வைராக்கியமாக இருக்கும் பாத்திரம் சிவாஜிக்கு. 

‘‘படப்பிடிப்பில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னார் பாரதிராஜா . சிவாஜி ஒரு கணம்  ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார் .

அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள் . அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார்.. 

செருப்பு, அவர் தங்கியிருந்த அறையிலேயே கிடந்தது . அவர் செருப்பே இல்லாமல் நடிப்பதால் அவருடைய காலில் முள்ளோ, கல்லோ தைத்துவிடக் கூடாது என்ற கவனம் பாரதிராஜா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு இருந்தது . 

அவர் நடிக்கப் போகும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைக்கச் சொல்லியிருந்தார்கள் . அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஏன் அந்த இடத்தைப் பெருக்கறீங்க’’ எனக் கேட்டார் . 

‘‘உங்க கால்ல முள் தைச்சுவிடக் கூடாதேன்னுதான்’’ என இழுத்தார் பாரதிராஜா.

‘‘அட யாருப்பா நீங்க ..... பெருக்கறத நிறுத்தச் சொல்லு மொதல்ல . காட்லயும் மேட்லயும் இப்படித்தான் சுத்தமா பெருக்கி வைப்பாங்களா ? இயற்கையா இருந்தாத்தானே சரியா இருக்கும்?’’ எனச் சொல்லிவிட்டார் .

பக்கம் பக்கமாக வசனம் இருக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி .அதுவும் இல்லை ! அண்ணே, இப்படி உட்காருங்க இத மட்டும் சொல்லுங்க என்று பாரதிராஜாவுக்கே உரிய ஸ்டைலில் படப்பிடிப்பு போகிறது.. 

ஒருநாள் , 'அண்ணோ, லைட் போகப்போகுது ..... சீக்கிரம் வாங்க என்கிறார் . அண்ணே , அந்த மரத்துல கை வச்சு நில்லுங்க ... அப்படியே 
திரும்பி நடந்துவாங்க...' 

என இயக்குநர் சொல்ல, 'டேய் நான் சிவாஜிடா... என்ன காட்சி , எதுக்கு நடக்கணும் .... என்ன சிச்சுவேஷன்னு கூட சொல்லாம நடன்னா என்னடா அர்த்தம்' என்று ஒரு கட்டத்தில் பொங்கியிருக்கிறார் . 

ஆனால் அசரவில்லை இயக்குநர் . மொத்தப் படப்பிடிப்பும் இப்படியே நடந்து முடிகிறது .

தேவையில்லாமல் வந்து மாட்டிக்கிட்டேன் என்கிற 
மனநிலையோடு இயக்குநர் சொன்னதை மட்டும் செய்து விட்டு 
வருகிறார் நடிகர் திலகம் . 

அவர் கேரியரில் இதுபோல் நடப்பது இதுதான் முதல் முறை ! இயக்குநர் மீது ஏக வருத்தம் .

சென்னைக்கு வந்து மொத்தப் படத்தையும் எடிட் பண்ணி ஒவ்வொரு ஆர்டிஸ்டாக டப்பிங் பேச வைக்கிறார் இயக்குநர் . எல்லோரும் பேசியாச்சு. நடிகர் திலகம் மட்டும்தான் பாக்கி . 

அவர் எந்த மீட்டரில் பேச வேண்டும் என்று இயக்குநர் ட்ராக் பேசி வைத்திருக்கிறார் . அண்ணன் வந்து அதை மட்டும் பேசிக் கொடுத்தால் போதும் என்று தகவல் போகிறது அன்னை இல்லத்துக்கு .

நடிகர் திலகம் இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிகிறது . சமாதானம் செய்து அழைத்து வருகிறார்கள் . 

மொத்தப் படத்தையும் பார்க்க மறுத்து விட்டு , அவர் பேச வேண்டிய ரீலை மட்டும் போடச் சொல்லி டப்பிங்கை முடித்துக் கொடுக்கிறார்

சிவாஜி், ராதா , வடிவுக்கரசி , சத்யராஜ் , ரஞ்சனி , தீபன் , வீராசாமி , அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள் . 

படத்தின் உச்சபட்சக் காட்சி . அன்று படப்பிடிப்பில் 92 பேர் . காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் , பாரதிராஜாவின் திரையுலக குருவான புட்டண்ணா கனகல் மறைந்துவிட்டதாகச் செய்தி . பதறிப் போய் விட்டார் பாரதிராஜா . 

‘‘நான் உடனே அவருடைய மறைவுக்குப் போயாக வேண்டும்’’ எனக் கதறுகிறார் . ‘‘இவ்வளவு கலைஞர்களைக் காக்க வைப்பது சரியில்லை . நாம் இன்னொரு நாள் அவருடைய வீட்டுக்குப் போய் வருவோம்’’ எனச் செல்வராஜ் போன்றவர்கள் சொல்லியும், பாரதிராஜா கிளம்பிப் போய் விட்டார்.

‘முதல் மரியாதை’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பிப்போன பாரதிராஜா , பாதி வழியில் என்ன நினைத்தாரோ ...... மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார் . அவர் கண்ணீர் நிற்கவில்லை . 

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து , சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அவருடைய குருவுக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தார்கள் . இங்கே படப்பிடிப்பு நடத்த அவர் மனம் கேட்கவில்லை . 

எல்லோரும் ஒருவழியாக அவரைத் தேற்றினார்கள் . ஒருவழியாக அந்த ஷெட்யூல் முடிந்ததும் , கதாசிரியர் செல்வராஜும் பாரதிராஜாவும் புட்டண்ணாவின் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தார்கள் .

இப்படியாக , படப்பிடிப்பு ஆரம்பித்த 100 ஆவது நாளில் படம் ரெடியாகிவிட்டது . இசையமைப்புக்காகப் படத்தை இளையராஜாவிடம் போட்டுக் காட்டினார்கள் . 

அவர் பார்த்துவிட்டு, `படம் நல்லாயில்ல... இதைத் தூக்கிப் போடச் சொல்லு . தீபன் , ரஞ்சனியை வைத்து வேறு கதையை பாரதிராஜாவைப் பண்ணச் சொல்லு . ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்காரு . இந்தப் படம் வந்தா மேலும் கஷ்டப்படுவார்’ என்று சொல்லிவிட்டார் கதாசிரியர் செல்வராஜிடம் .

இயக்குனர் பாரதிராஜாவுக்குப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. 

கதாசிரியர் செல்வராஜிடம், 'இளையராஜா என்ன சொல்றார்.. பேசாமல் ரீ-ரெக்கார்டிங் பண்ணச் சொல்லு’ என்று சொன்னார் பாரதிராஜா . 

ரெக்கார்டிங் முடிந்ததும் ,'பாரதி ... நாம பேசினபடி அவருக்கு என்ன சம்பளமோ அதைக் கொடுத்துடுவோம்’ என்று சொன்னார் செல்வராஜ் . 

அவரும் பணத்தை எடுத்து , கையில் கொடுத்து இளையராஜாவிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் . பணத்தை எடுத்துக்கொண்டு போனார் செல்வராஜ் . 

`என்ன...’ என்று கேட்டார் இளையராஜா . `பாரதி.. பேமென்ட் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்’ என்றார் செல்வராஜ் . 

'எனக்கு வேண்டாம்... எப்படியும் இந்தப் படம் ஓடாது . அவர் மறுபடியும் கஷ்டப்படுவார் . திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார் . அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு...’ என்றார் . 

`யோசித்துப் பாருங்கள்...’ என்று சொல்லியும், `முடியவே முடியாது’ என்று , பணத்தை வாங்க இளையராஜா மறுத்துவிட்டார் .

பிறகு , படத்தைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார்கள் ... அவர் படம் பார்த்து , முடித்ததும் , 'இந்தக் குதிரை அதிர்ஷ்டத்தில்கூட ஜெயிக்காது’ என்று சொன்னார் . 

ஆனாலும், பாரதிராஜா பயப்படவில்லை .... சோர்ந்து போகவில்லை . இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் .   

அப்போது , சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் `சுபாஷினி தியேட்டர்'  இருந்தது . 

அந்த தியேட்டரில் படத்தைப் போட்டு , படத்தில் பணியாற்றிய மற்றும் நெருக்கமான நண்பர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் படம் பார்க்க அழைத்தார்கள் . 

அவர்களது கையில் ஒரு பேப்பரைக் கொடுத்துவிட்டார்கள் . படம் பார்த்து முடித்துவிட்டு, அவரவர் கருத்துகளை அதில் எழுத வேண்டும். பெயர் அவசியமில்லை என்று சொல்லப்பட்டது . 

படத்தைப் பார்த்த பல பெண்கள் `சூப்பர்... பிரமாதம்’ என்று எழுதி விட்டனர் . இப்படியாக , இரண்டு மூன்று முறை வெவ்வேறு ஆட்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள் .

இதன்பின் , படத்தின் மீது பாரதிராஜாவுக்கு மிகப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது . 

செல்வராஜும் பாரதிராஜாவும் தாஜ் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . பிறகு, பரிமாறுபவரை அழைத்து பில் கொண்டு வரச் சொன்னார்கள். அவர், `ஏற்கெனவே பணம் கட்டி விட்டார்கள் சார்’ என்றார் . 

யார் என்று தேடினால் , அத்தானி பாபு என்கிற கோயம்புத்தூர் விநியோகஸ்தர் . இவர்களுக்காகப் பணம் செலுத்தியிருந்தார் . அவர் படம் பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் பிடித்திருந்தது . 

அவர் பாரதிராஜாவிடம் , `முதல் மரியாதை படத்தை நான் வாங்கிக்கிறேன் சார்’ என்று சொன்னார் . பிறகு , ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது .

படம் மகத்தான வெற்றியடைந்ததும் ‘‘ஏம்பா ... எனக்குக் கொடுக்க இருந்த சம்பளத்தைக் கொடுங்கப்பா’’ என இளையராஜா பாரதிராஜாவிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார் . 

பாரதிராஜாவோ, ‘‘எப்ப வேணாம்னு சொல்லிட்டியோ, அதோட விட்டுடு... உனக்குச் சம்பளம் தரவே மாட்டேன்’’ என ஒற்றைக்காலில் நின்றுவிட்டார் . 

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு ?” என விசாரித்தார்கள் . 

அன்றைய தேதியில் 25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறார் .

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள் . அவர்கள் கேட்டது , ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட் . 

பாரதிராஜா இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த விலை சொன்னார் . 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது . இலாபம் கோடிகளில் கொட்டியது. 

படம் எடுக்கப்பட்ட கதையே சுவாரசியம் தானே?
--------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.10.20

Astrology: Quiz: புதிர்: 23-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 23-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து. உத்திராட நட்சத்திம். துலா லக்கினக்காரர். ஜாதகரின் ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள் ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஒரே மாதிரி சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: துலா லக்கினம் ஏழாம் அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் - தன் சொந்த வீட்டில் ராஜாவைப் போல இருக்கிறார். ஆனால் கடுமையான பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார். ஒரு பக்கம் சூரியன். மறுபக்கம் ராகு. ஜாதகருக்கு திருமணத்திற்கு பெண் தேடும் படலத்தின் போது ராகு திசை துவங்கி இருந்தது. ராகு சூரியனின் நட்சத்திரமான கார்த்திகையில் இருக்கிறார், துலா லக்கினத்திற்கு அது பாதகமான அமைப்பு. மேலும் ராகுவின் மேல் சனியின் பார்வை. அது கேடானது. சந்திர லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டுக் காரனான புதன் ராசி மற்றும் நவாம்சத்தில் சனியுடன் இருப்பதும் நன்மையான அமைப்பு அல்ல, இக்காரணங்களால் பெண் கிடைப்பது தள்ளிக் கொண்டே போக கடைசியில் ஜாதகருக்குத் திருமணமே நடைபெறவில்லை. அவற்றை மட்டும் இங்கே குறிபே பிட்டுள்ளேன், 
.
இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 30-10-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
1
Sridhar
7 ஆம் அதிபதி செவ்வாய், சொந்த வீட்டில். ஆனால் சனி மற்றும் ராகுவிற்கு நடுவில். பாபகர்தாரி யோகம் 7இல் செவ்வாய், செவ்வாய் தோஷம் லக்னத்தில் maandhi. குடும்ப அமைப்பை கெடுக்கும் சுப கிரகங்கள் தீயவர் பார்வையில் (குரு செவ்வாய் பார்வை, சந்திரன் சனி பார்வை) குடும்ப ஸ்தானத்தில் கேது 12இல் சனி பார்வை மேற்கூறிய காரணங்களால் திருமணம் நடக்கவில்லை
-------------------------------------------------
2
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
DOB 12/04/1966 20:17 hrs assumed at Chennai One of the strong reason could be Mars dosa. Mars being 2nd and 7th lord placed in Aries 7th house from lagna. Mars is in vargothamam as well in Aries amsam (Ashwini nakshatra 1st pada) Mars is the marakathipathi for Thula lagna looking 7th paarvai over lagna and 8th paarvai over second house Saturn who gave house to lagnathipahi also kalathira karagan sitting in 6th place with Mercury who is neesam in Meena lagna. 11th house owner also got spoiled in that house.
-------------------------------------------------------
3
Ram Venkat commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
வணக்கம். துலா இலக்கினம், தனுசு ராசி ஜாதகர். ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள் அவருக்கு திருமணம் ஆகாது என்று ஒரே மாதிரி சொன்னார்கள். அதற்கு என்ன காரணம்? ஜாதகருக்கு கடுமையான களத்திர தோசம். 1) குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திராதிபதியுமான செவ்வாய் 7ல் அமர்வு மற்றும் வர்கோத்தமம். ஆனால் பாப கர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார். செவ்வாயின் சுய பரல் 2 மற்றும் 7மிடத்தின் பரல் 23 மட்டும். 2) இரண்டாமிடத்தில் கேது பகவான் நங்கூரமிட்டுள்ளார். செவ்வாயின் 8ம் பார்வை மற்றும் 8மிட ராகுவின் பார்வையில் குடும்ப ஸ்தானமும் வலுவிழந்துள்ளது. 3) சயன சுக ஸ்தானமான 12மிடமும் (பரல் 20) 6மிடத்தில் அமர்ந்துள்ள‌ சனி மற்றும் சூரியனின் நேரடி பார்வையில் கெட்டுள்ளது. 4) சந்திர ராசியில் இருந்து 7மிடமான மிதுனத்தில் (பரல் 22) 6ம் அதிபதி குரு அமர்ந்துள்ளார். அவரின் 9ம் தனிப்பார்வையில் களத்திர காரகன் சுக்கிரன் உள்ளார். 5) ஜாதகருக்கு 23 வயதில் ஆரம்பித்த அஷ்டம ராகு தசை கிட்டத்தட்ட 40 வயது வரை நடந்துள்ளது. மேற்கண்ட காரணங்கள் மற்றும் இலக்கினம், ராசியில் இருந்து 7மிடமான களத்திரம் கடுமையாக பாதிக்கபட்ட காரணத்தால் ஜாதகருக்கு திருமணம் பாக்கியம் கிட்டவில்லை.
---------------------------------------------------------
4
P. CHANDRASEKARA AZAD commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
வணக்கம் தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில் துலா லக்கினம், உத்திராட நக்ஷத்திர தனுசு ராசி ஜாதகருக்கு திருமணம் ஆகாத நிலைக்கான காரணங்கள் திருமணம் பற்றிய நிலை அறிய ஜாதகரின் இரண்டாம் இடம், ஏழாம் இடம், மற்றும் லக்கினம் , லக்கின அதிபதி நிலையை பார்க்க வேண்டும். ஜாதகரின் லக்கினத்திலேயே மாந்தி அமர்ந்து உள்ளது . இது மன குழப்பத்தை குறிக்கும் நிலை ஆகும். மேலும் லக்கின அதிபதி சுக்கிரன் தனக்கு உகந்து சனியின் வீட்டில் இருந்தாலும் , எட்டாம் இடத்தில் உள்ள ராகு வின் சாரத்தில் அதாவது சுக்கிரன் சதய நக்ஷத்திரத்தில் கும்ப ராசியில் உள்ளது. பகை கிரகமும் இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியான செவ்வாய் எழில் சூரியனின் சாரத்தில் அதாவது பாதகாதிபதியும் ஆறாம் இடத்தில் உள்ள சூரியனின் சாரத்தில் அமர்ந்து திருமண நிகழ்வை தர இயலாத நிலையில் உள்ளார். ஜாதகருக்கு திருமண வயதில் வந்த எட்டாம் இடத்தில் அமர்ந்த ராகு தசையில் திருமண அமைப்பை தர இயலவில்லை. பின்னர் வந்த மூன்று மற்றும் ஆறாம் இடத்து அதிபதியும் மற்றொரு பகை கிரகமான குருவும் ஜாதகருக்கு திருமணம் நடத்தி வைக்க இயலவில்லை நன்றி இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத் கைபேசி: 8879885399
---------------------------------------------------------------
5
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
ஜாதகர் 12 ஏப்ரல் 1966 அன்று காலை 8 மணி 22 நிமிடங்கள் 30 நொடி போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன். சென்ற புதிர் போலவே 7ம் அதிபதி கேந்திராதிபத்ய தோஷம் கொண்டார்.7ம் இடம் சூரியன் சனி ராகுவால் சூழப்பட்டு பாபகர்தாரியில் மாட்டிக்கொண்டது. லக்கினத்திலேயே மாந்தி. அஷ்ட வர்கத்தில் 7ம் இடத்திற்கு 23 பரல் மட்டுமே. 7ம் அதிபதிக்கு 2 பரல் மட்டுமே. படுக்கை சுகத்தைத்தரும் 12 இடத்திற்கு 20 பரல் மட்டுமே. இக்காரணங்களால் ஜாதகருக்குத் திருமண பாக்கியமே இல்லாமல் போனது.
-----------------------------------------------------------------
6
K. Ravi commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
ஆசானே லக்னம், இரண்டாம் வீடு, மற்றும் ஏழாம் வீடு கெட்டிருக்கிறது. ஏழாம் வீட்டில் செவ்வாய் வர்கோத்தமம் பெற்று உச்சத்தில் உள்ளது. மேலும் பாபகர்த்தாரி யோகம். இரண்டாம் வீட்டு அதிபதியும் அவரே. லக்னத்தில் மாந்தி. மேலும் ஏழாம் வீட்டிற்கு பன்னிரண்டில் சனி. இவையெல்லாம் சேர்ந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கைக்கு தடையை ஏற்படுத்தி உள்ளது. கெ.ரவி
----------------------------------------------------------------
7
க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம். (tamilselvanabr@gmail.com) commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
ஐயா, வணக்கம்! ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன? பதில்: 1. ஏழாம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில், 6ஆம் வீட்டில் சூரியனிடம் அஸ்தமமான நீச புதன் மற்றும் சனி 8ஆம் வீட்டில் ராகு 2. ஏழாம் வீட்டில் செவ்வாய் ஆட்சியில் அமர்ந்து லக்னத்தில் உள்ள மாந்தியுடன் கூட்டு சேர்ந்து ஜாதகனின் திருமணத்தை கெடுத்தார். 3. நவாம்சத்தில் வர்கொத்தமம் பெற்ற செவ்வாய் குருவின் பார்வையை ஏற்கவில்லை.
----------------------------------------------------------------------------------------
8
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி சுக்கிரன் ஐந்தில் 2 .இரண்டில் கேது (குடும்பைஸ்தானம் ) 3 .இரண்டு ஏழுக்குரிய செவ்வாய் கேந்திரத்தில் மேலும் பாபா கர்ததாரி ல் கடுமையாக பாதிக்க பட்டுள்ளார் 4 .லக்கினத்தின் மேல் ஆறாம் அதிபதி குருவின் பார்வை வேறு 5 .மேலும் இரண்டு ஏழின் மேல் எந்த சுப கிரஹங்களின் பார்வையும் இல்லை நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
----------------------------------------------------------------------------
9
Jeyalaxmi commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
. . 23/10/20 புதிருக்கு பதில். ஜாதகர் உத்திராடம் நட்சத்திரம். விருச்சிக ராசி. துவா லக்னம். லக்னாதிபதியும் களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்தாரி யோகத்தில் இருக்கிறார். ஆறுக்குடையவரான குருவின் பார்வை பெறுகிறார்.ஏழில் செவ்வாய் ஆட்சி பெற்று வர்கோத்தமம் ஆனதும் எட்டில் ராகு இருந்து சனி பார்வை பெற்றதும் செவ்வாய் ராகு கேது சுப பலம் பெறாமல் ராகு தசை வாலிப வயதில் இருந்து நாற்பது வயது வரை பின்னர் துலாம் லக்னத்திற்கு ஆகாதவரான குரு ஆறுக்குடையவராகி தசை நடத்தியதும் திருமண தடைக்கு காரணமாகும்
-------------------------------------------------------------------
10
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?"
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 2 7 8 ஆம் இடங்கள் பாதிப்பு. 2 7 ஆம் அதிபதி செவ்வாய் அஸ்தங்கம். லக்னங்களுக்கு 5 ஆம் அதிபதி 6 ல் மறைந்து சூரியனுடன் பாபத்துவம். ராசிக்கு 5ல் செவ்வாய் அஸ்தங்கம்.3 12 ஆம் இடங்களுக்கு கடுமையான சனியின் பார்வை.
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.10.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது.உத்திராட நட்சத்திம். துலா லக்கினக்காரர். ஜாதகரின் ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள் ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஒரே மாதிரி சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 25-10-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.10.20

உங்கள் வீட்டிற்கு புது முகவரி வரப்போகிறது - தெரியுமா?


உங்கள் வீட்டிற்கு புது முகவரி வரப்போகிறது - தெரியுமா?

நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!

வேலையை துவங்கியது அஞ்சல் துறை!

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை,

6 இலக்க எண் மட்டுமே..

மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல் 

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் எண்  கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் எண் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் துறை

தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு

3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு

6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் எண் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஈ-லொகேஷன்

கூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் 
தனித்தனியாக ஈ-லொகேஷன், 

ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் என்ன லாபம்..?

இப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.

பயன்பாடு

இந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும்.

சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும்.

மேப் மை இந்தியா

இப்போது நீங்கள் ஒருவரின் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும் என்றால் மேப் மை இந்தியா தளத்தில் 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.

முதற்கட்டம்

இத்திட்டத்தை முதல் கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில்
2 பகுதிகள்

அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக்-ஐ உருவாக்கப்பட்டு வருகிறது.

உதாரணம்: இந்த டிஜிட்டல் டேக் ABD55F உங்கள் விலாசத்தை முழுமையாக வாங்கிக்கொண்டு சேமிப்பது மட்டும் அல்லாமல் பூமி அச்சுகூற்களையும் சேமித்து வைத்திருக்கும்.

மத்திய அரசு திட்டங்கள்

இத்தகைய முயற்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை
சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க 
மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டும் அல்லாமல்
பல பினாமி சொத்துகள், அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.

எளிமையான முறை..

இந்தியா போன்ற  நாடுகளில் நெருக்கமான வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப் மை இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்

இத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழுவிபரங்களை

மேப் மை இந்தியா 

மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்பு,

அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே 

இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் படியே தற்போது முதற்கட்ட சோதனை முயற்சிகள் டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் மேற்கொண்டு வரப்படுகிறது.

இந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால், மேப் மை இந்தியாவின் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.20

உங்கள் வங்கிக் கணக்கின் மூலம் உங்களுக்கு காப்பீடு உண்டு - தெரியுமா?


உங்கள் வங்கிக் கணக்கின் மூலம் உங்களுக்கு காப்பீடு உண்டு - தெரியுமா?

வங்கிக் கணக்கு இருந்தாலே ரூ.10 லட்சம் காப்பீடு!
By ஜெ.சரவணன் saravanan.j@hindutamil.co.in

வாழ்க்கை மேலும் மேலும் நிச்சயமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் எல்லோருக்குமே காப்பீடு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. திடீர் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகளை நிதி நெருக்கடி ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் காப்பீடு தேவை. காப்பீட்டின் அவசியத்தை அறிந்தவர்கள் காப்பீடு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் நமக்கு என்ன ஆகிவிடப்போகிறது, பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பார்கள். எதுவும் ஆகவில்லை என்றால் கட்டிய பிரீமியம் வீண்தானே என்றும் சிலர் நினைப்பதுண்டு. ஆனால், வங்கிக் கணக்கு இருந்தாலே காப்பீடு வசதி கிடைக்கும் விஷயம் பற்றி தெரியுமா?

1 வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மீது ஒவ்வொரு வங்கியும் காப்பீடு வழங்குகிறது. வங்கிக் கணக்கு மூலம் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய இரண்டு காப்பீடு திட்டங்கள் 2015லிருந்தே நடைமுறையில் உள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கிடைக்கலாம்.

2 பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கானது. பிரீமியம் வருடத்துக்கு ரூ.330. பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கானது. பிரீமியம் வருடத்துக்கு ரூ.12. இந்த பிரீமியம் தொகை வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துக்கொள்வார்கள்.

3 விபத்து ஏற்படும்போது கண்பார்வை, கை, கால் ஆகியவற்றை நிரந்தரமாக இழந்தால் இந்தத் திட்டங்களில் ரூ.2 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும். ஒரு கண், ஒரு கால், ஒரு கை போன்றவை இழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும்.

4 மேலும் இந்தத் திட்டங்களில் ரூபே கார்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும். விசா, மாஸ்டர் கார்டு போன்றவற்றுக்கு அதற்கு ஏற்ப கிளெய்ம் தொகை மாறுபடும். பயனாளியின் வங்கிக் கணக்கின் சேமிப்பு, பணப்பரிவர்த்தனை ஆகியவற்றைப் பொறுத்தும் காப்பீட்டுத் தொகை மாறும். குறிப்பாக ஒரு நபருக்கு பல டெபிட், கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் ஒரே ஒரு கார்டில் மட்டுமே கிளெய்ம் கிடைக்கும். அந்த கார்டு செயல்பாட்டில் இருப்பது அவசியம்.

5 இயற்கையாகவோ தற்கொலை காரணமாகவோ மரணம் ஏற்பட்டால் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திலும், விபத்தால் மரணம் ஏற்பட்டால், பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்திலும் க்ளெய்ம் கோரலாம்.

6 இந்தக் காப்பீட்டு திட்டங்களில் கிளெய்ம் பெற முதலில் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். க்ளெய்ம் பெறுவதற்கான விண்ணப்பம், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை மரணம் அல்லது விபத்து நடந்த 90 நாட்களுக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்த்து வங்கிகள் காப்பீடு நிறுவனங்களுக்குத் தங்கள் பரிந்துரைகளை அனுப்பும். பின்னர் கிளெய்ம் தரப்படும்.

7 காப்பீடு பெறுவதற்கு விபத்து எனில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் மருத்துவ சான்றுகளும், மரணம் எனில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். இந்த ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நபரின் நாமினி வங்கியை அணுக வேண்டும்.

வங்கிக் கணக்கில் கிடைக்கும் இந்தக் காப்பீடு வசதிகளைப் பற்றி வங்கியாளர்களிடம் அனைவரும் கேட்டுத் தெரிந்துகொண்டால் ஆபத்துக் காலங்களில் கைகொடுக்கும்.
-----------------------------------------
Your ATM card can provide you insurance up to Rs 10 lakh: 5 ...www.financialexpress.com › yo...
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.20

அறியாமை சுகமும் ஆன்மீக சுகமும்!!!



அறியாமை சுகமும் ஆன்மீக சுகமும்!!!

மூட்டைகளை உதறாமல் மூலவனை சுமக்க முடியாது🙏

கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர்.அவர், 'எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.

ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.  இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி.

''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை. அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி.   சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.  

ஆண்டுகள் ஓடின!

ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி!

''எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல். 
சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ''சரி... இப்பவாவது புறப்படேன்!'' என்றார். 

''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துடும்!'' என்று விவரித்தார் நம்ம ஆள்! 

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சந்நியாசி வந்தார்.
''எனக்கு ஆசையே இல்லை...''- வழக்கம்போல் கேட்டது குரல்!
''இப்போதாவது வருகிறாயா?''- இது சந்நியாசி. 
''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி. 

ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.

கடையில் இருந்தவர், ''சாமி... எங்க அப்பாதான் அவரு. 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்... நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...''- கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன். 

இதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன?''

''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''

''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.

அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார். உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது. ''அடேய்... என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார். 

''சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க. கடையை சரியா பூட்டாமே போயிட றாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!''- இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.

பிறகு அவர் சொன்னார் ''அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்?''

இன்றைக்கு ஆலயங்களைத் தேடிப் போகிற அன்பர்கள், முதலில்... அறியாமை சுகத்திலிருந்து விடுபட வேண்டும்... 
பிறகு, ஆன்மிக சுகத்தை அடையாளம் காண வேண்டும்!

இந்த கதை நமக்கும் பொருந்துமோ...🤔
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.20

ஆவலுடன் எதிபார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்!!!


நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிபார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

அன்புள்ள மாணவக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் ஜோதிடத் தொகுப்பு புத்தக வரிசையில் அடுத்த புத்தகம் அச்சாகப் போகின்றது. பக்கங்களை வடிவமைக்கும் வேலைகள் முடிந்து விட்டது. 1.11.2020 தேதிக்குள் வெளிவந்துவிடும். அதாவது அச்சாகி வந்துவிடும்

தனி இணைய தளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்த பாடங்கள் நீங்கள் படிப்பதற்கு ஏதுவாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.

அதன் விபரம்
புத்தகத்தின் தலைப்பு: வகுப்பறை ஜோதிடம் தொகுதி 3
உள்ளடக்கம்:  அஷ்டகவர்க்கப் பாடங்கள்

Lessons on Ashtakavarga

அஷ்டகவர்க்கம் தெரிந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம்

வாத்தியார் அடிக்கடி சொல்லும் அம்பானிக்கும் 337 பரல்கள் உங்களுக்கும் 337 பரல்கள் – நினைவிருக்கிறதா?

பக்கங்கள்: 224
அளவு : 1/8 டெமி
விலை: அச்சாகி வந்தவுடன் தெரியவரும்  (Digital Printing)

குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் அச்சாகப் போகிறது. டிஜிட்டல் பிரிண்டிங்கில் அந்த வசதி உண்டு. முன்பு போல 1,000 பிரதிகள் அடித்து சுமக்க வேண்டாம். 50 பிரதிகள் வேண்டுமென்றாலும் அடித்துத் தருவார்கள். என்ன அச்சுக்கூலி இரண்டு மடங்காகும்

காரணம் முன்பு போல் புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போது இல்லை! குறைந்துவிட்டது. வாட்ஸப் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கம்

ஆகவே உங்கள் பிரதிக்கு நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

பதிப்பகத்தாரின் விலாசம்: 
Umayal Pathippagam
572- B Cross Cut Road
Ner North Coimbatore Fly Over
Coimbatore - 641 012
Phone No: 97877 71225
umayalpathippagam@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
=================================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.10.20

Astrology: Quiz: புதிர்: 16-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!



Astrology: Quiz: புதிர்: 16-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து அன்பர் அனுஷ நட்சத்திம். மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே  ஊற்றிக் கொண்டுவிட்டன. அதாவது பிரச்சினைகள் உண்டாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஜாதகப்படி அத்தோல்விகளுக்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகருக்கு கடுமையான கேந்திராதிபதி தோஷம். 7ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டது. 7ம் வீட்டில் குரு பகவான் சொந்த வீட்டில் கேந்திராதிபதி தோஷத்துடன் உள்ளார். அவரால் 7ம் வீட்டிற்குரிய பலன்கள் அடிபட்டுப் போய் விட்டன. இரண்டு முறைகள் திருமணம் நடந்தும் இரண்டு திருமணங்களுமே கெட்டுப் போனதற்கு அதுவே காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 11 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 23-10-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Sridhar commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

களத்திர காரகன் சுக்கிரன் 8 இல் மறைவு 1 மற்றும் 4 ஆம் அதிபதி புதன் 8 இல் மறைவு குடும்ப ஸ்தானதில் மாந்தி நவாம்சத்தில் செவ்வாய் பார்வையில் சுக்ரன் மற்றும் புதன் மேற்கூறிய காரணங்களால் திருமண முறிவு ஏற்பட்டது
--------------------------------------------------------------------------------------
2
Rajam Anand commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள் ஜாதகர் 20-02-1949ல் பிறந்துள்ளார். ஜாதகரின் 7ம் வீட்டில் 7ம் அதிபதி வக்கிர நிலையுள் இருந்து மிதுன லக்கினமாகி கேந்திராதிபதி தோசத்தை பெற்று பலனிளந்த நிலையிலுள்ளார். ஆகவேதான் முதலாம் திருமணம் விவாகரத்துள் முடிந்தது. அட்டமாதிபதியின் வீட்டில் களஸ்திரானாதிபதி லக்னாதிபதியுடன் சேர்ந்துள்ளார். 2ம் கல்யாணத்தை நடத்துவருமான 11ம் வீட்டதிபதி செவ்வாயின் பார்வையில். எல்லாம் சிக்கலில். ஆகவேதான் இரண்டாம் திருமணமும் விவாகரத்துள் முடிந்தது. அன்புடன் ராஜம் ஆனந்த்
-----------------------------------------------------------------------------
3
arun commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

வணக்கம் ஐயா, 7ஆம் அதிபதி, 7ஆம் பாவத்தில் இருந்தாலும் , திரிகோணத்தில்  ராகுவின் சேர்க்கை . திருமண வாழ்க்கை தொல்லை, பிரச்சனை. இரண்டாம்  பாவம் குடும்ப அமைப்பை குறிக்கும். அதன் அதிபதி சந்திரன், ராகுவின் சேர்க்கை (பிருகு நந்தி நாடி முறையில்).ராகுவின் பார்வை குரு பெற்று சந்திரன் மீது விழச்செய்வார். 7ஆம் மற்றும் 2ஆம் அதிபதி ராகுவின் கட்டுப்பாட்டில். முதல் திருமணம் நிலைக்கவில்லை . இங்கே சூரியன், சனி பரிவர்த்தனை. சூரியன் தனது சிம்ம வீட்டில் இருந்து, குரு மீது பார்வை. இரண்டாம் திருமணம் குறிக்கும் 11ஆம் பாவம் , அதன் அதிபதி செவ்வாய் 9இல்.  ஆகையால் இரண்டாம் திருமணம் வாய்ப்பும்  வந்தது. இருந்தும் கேதுவின் திரிகோணத்தில் பார்வை பெற்று செவ்வாய் 12க்கு உடைய சுக்கிரனும்,லக்கினாதிபதி புதன் 8இல். திருமண காலம் நடக்கும் போது சுக்கிர திசை , 5கும் 12கும் உடைய சுக்கிரன் 8இல் இருந்து தனது திசை நடத்துகிறார். திருமண வாழ்க்கை பிரிவினை, வம்பு,வழக்கு  தந்தது. இரண்டு முறை திருமணம் நடந்தும் நிலைக்கவில்லை. நன்றி ஐயா.
----------------------------------------------------------------
4
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

The following reasons to mention Lagnathipathy in 8th place Sukran in 8th place Kudumba stanathipathy Chandran neesam Maandi in 2nd place 7th athipathi guru in 7th place so 1st marriage spoiled are the permanent spoiling reasons for family life. Because guru looking 11th place rahu/lagnam/9th place 2 marriages happened. Bhuthan sukran jointly means 2nd marriage Kethu dasa also once of the reason (23 to 30 years) for conflict in family life Sukran in 8th place subsequent dasa are the main reason (30 to 50 years)
-------------------------------------------------------------------------
5
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி புதன் எட்டில் மறைவு காரகன் சுக்கிரனுடன் ௨.இரண்டில் மாந்தி 3.மேலும் விரயாதிபதி சுக்கிரனின் பார்வை இரண்டாம் வீட்டின் மேல் ஜாதிக்கரின் திருமண முறிவிற்கு இரண்டில் அமர்ந்த மாந்தி யே காரணமாக இருக்கும் நன்றி , தங்களின் பதிலை ஆவலுடன்
-----------------------------------------------------------------------------
6
udhay commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

two main reason 1. kendradhipati dosha 2. Mandhi in 2nd house
-------------------------------------------------------------
7
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

ஜாதகர் 20 ஆகஸ்டு 1949 அன்று பிற்பகல் 3 மணி 25 நிமிடங்கள் போலப் பிற்ந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன். 1.லக்கினாதிபதி புதன் எட்டில் மறைந்தது. 2. களத்திரகாரகன் சுக்கிரகன் எட்டில் மறைந்தது. 3. சூரியன், சனி பரிவர்தனை இது தைன்ய பரிவர்தனை எனப்படும் மோசமான தீய விளைவுகளைத்தரும் பரிவர்தனை.செவ்வாய் சனி எதிர் எதிர் நின்றது.பகையைக்கிளப்பும் அமைப்பு. 4. குடுமபஸ்தானத்தில் மாந்தி. 5. 7ம் வீட்டில் 7ம் வீட்டுக்காரனே அமர்வது அவ்வளவு சிலாக்கியமில்லை. 6.12ம் இடம் என்னும் படுக்கை இன்ப ஸ்தானத்திற்கு சனி செவ்வாய் இருவர் பார்வையும். 7.3,7,11 ஆகிய இடங்கள் திருமணத்திற்குப் பார்க்க வேண்டிய இடங்கள்.11ல் ராகுவும், 3ல் சனியும் அமர்ந்துள்ளனர். 8.ந‌வாம்சத்தில் லக்கினத்திலேயே 8ம் வீட்டுக்காரன் சனி. 7ம் இடத்தில் சூரியன் ,குரு மாந்தி.ராசி நவாம்சம் இரண்டிலும் சூரியனும் சனியும் எதிர் எதிர் நின்றது. 9.ஜாதகரின் திருமண வயதான் 21முதல் 28 வரை கேதுதசா நடந்தது. இவையெல்லாம் ஜாதகருடைய இரண்டு திருமணங்களையும் செல்லாமல் ஆக்கியது.
------------------------------------------------------------------
8
Anbumani commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

லக்னாதிபதி 1st house lord புதன் 8 இல் மறைந்து விட்டார்,மேலும் குடும்ப அதிபதி 2nd house lord moon 6 இல் நீசம் அடைந்து மறைந்து விட்டார்,மேலும் மாந்தி 2 இல் இருப்பது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி பிரித்து வைத்து விட்டார்.5 ஆம் இடத்தில் கேது மற்றும் 5 ஆம் அதிபதி 8 இல் மறைந்து emotional and feelings... பாதிக்க பட்டு இருப்பதால் கருத்து வேறுபாடு வர காரணமாக அமைந்தது எனலாம்...
---------------------------------------------------------------------
9
C Jeevanantham commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

Dear Sir, 1. Maandhi in second place (family place) 2. 2nd lord neecham. 3. Sukiran in 8th hidden. So his marriage did not stand for long time.
-----------------------------------------------------------------------
10
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 7 ஆம் அதிபதி குரு 7ல் ஆட்சி மற்றும் வர்கோத்தமம். பாப கிரகங்களின் தொடர்பு இல்லை. கேந்திராதிபத்ய தோஷம் மற்றும் பாதகாதிபதி வலு. ராசிக்கு 7 ஆம் இடத்திற்கு சனி செவ்வாய் பார்வை.
-------------------------------------------------------------------
11
P. CHANDRASEKARA AZAD commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??"

வணக்கம் கடந்த இரண்டு வாரங்களாக திருமண விவாகரத்து சம்பந்தமான கேள்விகளே வருகிறது. தலைவருக்கு என ஆயிற்று ? தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் மிதுன லக்கின, அனுஷ நக்ஷத்திர விருச்சிக ராசி ஜாதகர் திருமண வாழ்வை நிலைக்க செய்வது, ஜாதகரின் ஏழு, இரண்டு மற்றும் பனிரெண்டாம் இடங்களாகும். இவரின் ஏழாம் இடத்தில் மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி குரு ஏழாம் இடத்தில் அதாவது களத்திர ஸ்தானத்திலேயே அமர்ந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்து உள்ளார். மேலும் இவர் வர்கோத்தம மாக உள்ளதால் ஜாதகரின் திருமணம் நிலைக்க வில்லை. மேலும் லக்கின அதிபதி புதன் எட்டில் , பனிரெண்டாம் வீடு அதிபதி சுக்கிரனுடன் மறைந்து உள்ளார். மேலும் இரண்டாம் வீடு அதிபதி சந்திரன் ஆறில் மறைந்து திருமண வாழ்வை நிலைக்க நீடிக்க செய்யவில்லை. இரண்டாம் இடத்தில் இருந்த மாந்தி அதற்கு துணை போனது. மேலும் பாக்கிய அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியு மான சனி பகை வீடான சிம்மத்தில் சூரியன் வீட்டில் அமர்ந்து சூரியன் மற்றும் செவ்வாய் போன்ற பகை கிரகங்களால் பார்க்க படுவதால் திருமண வாழ்வு நீடிக்க செய்ய இயலவில்லை . நன்றி இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத் கைபேசி: 8879885399
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.10.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அனுஷ நட்சத்திம். மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே  ஊற்றிக் கொண்டுவிட்டன. அதாவது பிரச்சினைகள் உண்டாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஜாதகப்படி அத்தோல்விகளுக்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.10.20

இதைப் படியுங்கள் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்!!!!!

இதைப் படியுங்கள் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்!!!!!

*படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.*

இறைவன் படைப்பில் நீ எதற்காக பூலோகத்திற்கு வந்தாயோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது ! 

பயம் கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள் ! 

கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும் ! படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உன்னை காப்பாற்ற முடியாது ! 

கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை ! 

ஆனால் கட்டுமஸ்தான உடல்  பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார் ! 

புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு ! பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் ! 

அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும் !

தென்னமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, திண்ணையிலிருந்து விழுந்து போனவனும் உண்டு.

 அமைதியும் ஆனந்தமும் பெற்று வாழ்க!  இறைவா நன்றி .
====================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.10.20

என் வாயில் இருப்பது சனிதான்!


என் வாயில் இருப்பது சனிதான்!

ஒருநாள் ரேசன் கடையிலிருந்து பத்து கிலோ பச்சரிசி வாங்கி வரச் சொன்னாள் மனைவி.  வாங்கி வந்ததும் அதை ஒரு பெரிய அண்டாவில் போட்டு மொத்தத்தையும் இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு அலசச் சொன்னாள்.

அலசிக் கொடுத்தேன்.  ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு,  "நீங்க அரிசிய தூக்கிட்டு மொட்டை மாடிக்கு வாங்க"னு சொன்னா.  போனேன்.  போர்வையை விரித்து அதில் அரிசியை தட்டி காயப் போட்டோம்.  

"ஏங்க கீழே போய் ஒரு நாக்காலியும் சின்னதா ஒரு குச்சியும் எடுத்துட்டு வாங்க" என்றாள்.  எடுத்து வந்து கொடுத்தேன்.  மொட்டை மாடியின் ஒரு மூலையில் கொஞ்சமாய் விழுந்திருந்த வேப்பமர நிழலில் நாற்காலியைப் போட்டு "உக்காருங்க "  என்றாள்.  உட்கார்ந்தேன்.  குச்சியைக் கையில் கொடுத்து "காக்கா குருவி அரிசிய கொத்தி தின்றாம பாத்துக்குங்க "  என்று சொல்லிவிட்டு கீழே போய்விட்டாள்.

விதியை நொந்துகொண்டு தேமே என்று உட்கார்ந்திருந்தேன்.  நிழலுக்கேற்றபடி நாற்காலி நகன்று கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு காலை உணவும் பதினோரு மணிக்கு ஒரு லெமன் ஜூஸும் ஒன்றரை மணிக்கு மதிய உணவும் நாலு மணிக்கு தேநீரும் என்னைத் தேடி வந்தன.  அதே போல் அடுத்த நாளும் நானும் அரிசியும் காய்ந்தோம்.

அடுத்த நாள் சாயந்திரம் "அரிசியை ரைஸ்மில்லில் கொடுத்து திரித்து வாருங்கள் " என்றாள்.  திரித்து வந்ததும் அதில் பாதியை பெரிய இரும்பு வடச்சட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்துக் கொண்டாள்.  மீதி மாவை  பச்சையாகவே ஒரு தூக்குவாளியில் வைத்தாள்.

மறுநாள் வறுத்த மாவில் கொஞ்சம் எடுத்து இட்லி சட்டியில் வைத்து புட்டு செய்தாள்.  அதற்கடுத்த நாள் வறுத்த மாவில் சுடுதண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து இடியாப்பம் சுட்டாள்.  பிழிய முடியாத கடைசி மாவை கொழுக்கட்டையாய் அவித்தாள்.

மூன்றாம் நாள் பச்சை மாவில் கொஞ்சம் எடுத்து ஊறவைத்து அரைத்த உளுந்து மாவை கலந்து பாதியை கொஞ்சம் கெட்டியாகவும் மீதியை சிறிதே இளக்கமாகவும் ஆக்கிக் கொண்டாள்.  கெட்டியான மாவை இட்லியாகவும்,  இளக்கமான மாவை தோசையாகவும் சுட்டெடுத்தாள்.

இதற்கிடையே சிறிது பச்சை மாவில் வெல்லம் ஏலக்காய் தூளெல்லாம் போட்டு புரோட்டா மாவு பதத்தில் பிசைந்து ஒரு பாத்திரத்தில் வண்டு கட்டி வைத்துக் கொண்டாள்.  இரண்டு நாள் கழித்து அதிரசம் சுட்டாள்.
இன்னொரு நாள் சிறிது பச்சை மாவில் ஓமம் உப்பு கலந்து முருக்கு சுட்டாள்.

ஹைலைட்டாக ஒருநாள் அரிசி மாவை கரைத்து அதில் சீனி ஏலக்காய் பொடி மற்றும் மாம்பழ எசென்ஸ் கலந்து கஞ்சி போல் காய்ச்சி ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறிய பின் சதுரமாக கட் செய்து தந்தாள்.  "என்ன இது " என்றேன்.  "வட்டிலாப்பம் "  என்றாள். நல்லாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள் அதே போல் கொஞ்சம் மாவில் சீரகம் உப்பு போட்டு கஞ்சியாய் காய்ச்சி ஒரு பழைய சேலையையும் டீஸ்பூன் ஒன்றையும் கொடுத்து "மொட்டை மாடிக்குப் போய் கூல் வடாம் ஊற்றுங்கள் "  என்றாள்.  நல்லவேளை காவலுக்கு நிற்கச் சொல்லவில்லை.

ஒரு அரிசி  மாவில் இப்படியே கிட்டத்தட்ட இருபது நாட்களை ஓட்டினாள்.  ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தினமும் அரிசி மாவு அயிட்டம்தானா என கடுப்பாகவும் இருந்தது.

ஒருநாள் கேட்டேன்.  "ஏண்டி.... ஒரே மாவை வச்சுக்கிட்டு நீ எத்தனை டகாலக்கடி வேலை காட்றே.  கோதுமை  மைதா  ரவை என்று ஏதாவது வெரைட்டியா போட்டா என்ன... ?"

"நீங்களும் ஒரே மனுசன்தான்.   ஒவ்வொரு நாளும் எத்தனை விதமா லொள்ளு பண்றீங்க..!  நாங்க சமாளிக்கல...!?  நாங்க என்ன வெரைட்டியா தேடுறோம்...!? "

என் வாயில் சனி இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாக,  வாயடைத்துக் கொண்டேன் நான்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.20

என்ன குறியீடு சாமி அது?



என்ன குறியீடு சாமி அது?

*🌈நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்,,,*🍁

🌈இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.

🌈அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

🌈அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

🌈ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். 

🌈இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.

🌈இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

🌈நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள்.

🌈இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

🌈இந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.

🌈ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்),சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்),ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர். 

🌈இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது,அதாவது செயலற்று போகிறது.

🌈"ஆயில்யம்” என்றால் “பிண்ணிக்கொள்வது” அல்லது “தழுவிக்கொள்வது” என்று பொருள்படும்.

🌈இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும்.

🌈எனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.



-----------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.10.20

தியானத்திற்கு ரமண மகரிஷி சொன்ன விளக்கம்!!!!


தியானத்திற்கு ரமண மகரிஷி சொன்ன விளக்கம்!!!!

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். 

அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். 

*தியானம் என்றால் என்ன?*

சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச்  சொன்னார்.

சிறுவனிடம், *"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.*

அதே மாதிரி.....

*எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.* புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.

சுற்றியுள்ளோருக்குக்கோ ஒரே குழப்பம். 

சிறுவன் *மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.* 

சிறுவனை சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் *'ம்'* சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய, பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய *'ம்'* சொல்வதாக இல்லை. 

தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. 

சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி  எப்படா இந்தத் தாத்தா *'ம்'* சொல்லுவார் என்று காத்திருந்தான். 

சுற்றியுள்ளவர்களுக்கும் என்ன தான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் *'ம்'* சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

ரமணர் புன்னகைத்தபடி.....

*"இரண்டு 'ம்' - களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும், என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்,  அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்..... புரிந்ததா இப்போ?"* என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.

ரமணர் சொன்ன அந்த.....

*இரண்டு 'ம்' கள்*

*வாழ்வு'ம்',*

*சாவு'ம்'*.....

இந்த இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே, ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள..... *முதிரும் காலமே வேறுபடுகிறது.*
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.20

Astrology: Quiz: புதிர்: 9-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 9-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அம்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகி சுவாதி நட்சத்திம். ரிஷப லக்கினக்காரர். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் ஜாதகியின் முதல் கல்யாணம் நிலைக்காது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இரண்டாவது திருமணம் தான் நிலைக்கும் என்று சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது, ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகியின் லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் விரையத்தில் உடன் 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாயும் உள்ளார்கள், கூடவே 4ம் அதிபதி சூரியனும் உள்ளார்.செவ்வாயும், சுக்கிரனும் சூரியனின் பிடியில் சிக்கி அஸ்தமணமாகிவிட்டார்கள். கோச்சார சனி சந்திரனுக்கு 7ல் மேஷத்தில் இவை எல்லாமுமாகச் சேர்ந்து முதல் கல்யாணத்தில் பிரச்சினைகளை உண்டு பண்ணி அதை நிலைபெறச் செய்யாமல் விட்டுவிட்டன, முதல் திருமணம் கெட்டுவிட்டது, உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டு விட்டது. அடுத்து வந்த குரு மகா திசையில் மீண்டும் அம்மணிக்குத் திருமணம் நடைபெற்று வாழ்க்கை சீரானது. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 16-10-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Rajam Anand commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள் ஜாதகர் 20-04-1981 பிறந்துள்ளார். அவரது களஸ்திரகாரனும், களஸ்திரானதிபதியும் 12ல் மறைந்து விட்டார்கள். ஆகவேதான் முதலாம் திருமணம் உடைந்துவிட்டது. இரண்டாம் திருமணத்திற்கு காரணம் 11ம் வீட்டிற்காரனான குரு கன்னியில் அமர்ந்து தனது வீட்டைப்பார்க்கின்றார். ஆகவே 11ம் வீடு வலுவாக உள்ளது. இதுதான் இரண்டாம் திருமணத்திற்கு காரணமாகும். அன்புடன் ராஜம் ஆனந்த்
2
Anbumani commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

வணக்கம் ஐயா, லக்கின அதிபதி சுக்கிரன் மற்றும் 7 ஆம் அதிபதி 12ல் மறைவு ஆகவே இந்த நிலை என்று நினைக்கிறேன்... நவம்சம் ல் லக்னம் 2,7 ஆம் வீடுகள் நல்ல நிலையில் இருப்பதால் இரண்டாவது திருமணம் அமைந்தது..

3
Ram Venkat commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

வணக்கம். ரிஷப லக்னம், துலாம் ராசி ஜாதகி. ஜாதகியின் முதல் கல்யாணம் நிலைக்காது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இரண்டாவது திருமணம் தான் நிலைக்கும் என்று சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது, ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? 1) இலக்கினாதிபதியும், களத்திர காரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து வலுவிழந்துள்ளார். 2) களத்திராதிபதி செவ்வாயும் 12ல் மறைவு.செவ்வாயின் 8ம் பார்வை களத்தின் ஸ்தானத்தில் விழுகிறது. 3) தவிர,ஜாதகியின் முதல் திருமணம் அட்டமாதிபதி குரு தசையில் நடந்தது. மேற்கண்ட காரணங்களால் ஜாதியின் முதல் திருமணம் நிலைக்கவில்லை.

4
P. CHANDRASEKARA AZAD commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

வணக்கம் தாங்கள் கேட்டு இருந்த ஜாதகியின் முதல் திருமண முறிவிற்கான காரணங்கள் ஸ்வாதி நக்ஷத்திர ரிஷப லக்கின துலா ராசி ஜாதகியின் திருமண வாழ்விற்கு ஜாதகியின் இரண்டாம் இடம், ஏழாம் இடம், மற்றும் லக்கின அதிபதியின் நிலையை பார்க்க வேண்டும். இவரின் இரண்டாம் இடத்து அதிபதி புதன் வர்கோத்தமாக ஜாதகியின் பதினொன்றாம் வீட்டில் நீசம் அடைந்து உள்ளார்... மேலும் ஏழாம் இடத்து அதிபதி செவ்வாய் பனிரெண்டில் லக்கின அதிபதி சுக்கிரனோடு அமர்ந்து திருமண விரயத்தை செய்தார்.. இவரின் முதல் திருமணம் பாக்கிய அதிபதி சனியின் தசையில் சுக்கிரன் புக்தியில் நடந்தது. பின்னர் வந்த ஆறாம் இடத்தில் ராகுவின் நக்ஷத்திரத்தில் ( சாரத்தில் ) அமர்ந்த மூன்றாம் அதிபதி சந்திரனின் புக்தியில் திருமண முறிவு உண்டானது. பின்னர் வந்த சனி தசை யின் குரு புக்தியில் இரண்டாம் திருமணம் நடந்தது. ஏனென்றால் ஜாதகியின் இரண்டாம் இடத்து அதிபதி புதன் வர்கோத்தமமாக பதினொன்றில் நீசமாக இருந்தாலும் ஐந்தில் அமர்ந்த குருவின் பார்வை பெற்று இரண்டாம் திருமணத்தால் சுப வாழ்வு அமைய செய்தார். ஏனென்றால் ஜாதகியின் இரண்டாம் இடத்து அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகியின் இரண்டாம் திருமணத்தை நடக்க செய்தார். இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத் கைபேசி : 8879885399

5
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

ஐயா , கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி விரயத்தில் விரயாதிபதி செவ்வாயுடன் 2 . குடும்பஸ்தானதிபதி புதன் நீசமாகியுள்ளார் செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டின் மீது இந்த காரணங்களினால் ஜாதகிக்கு முதல் திருமணம் நிலைக்க வாய்ப்பில்லை 3. ஐந்தாம் வீட்டில் யோககாரகன் சனியுடன் லாபாதிபதி குரு அமர்ந்து இரண்டாம் அதிபதி புதனை தன் பார்வையால் மேம்படுத்தி இரண்டாம் திருமணத்தை நிலைக்க வைத்துள்ளார் தங்களின் பதிலை ஆவலுடன் நன்றி
6
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

7ம் இடத்துகாரன் 6,8,12 வீட்டுக்காரனுடன் தொடர்பு கொண்டால் , இரண்டாம் திருமணம் உண்டு. இந்த ஜாதகத்தில் 7ம் இடத்துக்காரன் 6ம் இடத்துக்காரனுடன் இணைந்து பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறது.

7
C Jeevanantham commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?"

Dear Sir, The given horoscope's 7th lord mars in 12th. 2. Saturn aspect 7th. 3. Lagna lord in 12th. Since 7th lord in 12th and saturn's aspect, the person's first marriage was affected. Thanking you,
=========================================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!