மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு 
காரணம் என்ன?

ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி பூர நட்சத்திரக்காரர். ஜாதகிக்கு குழந்தை இல்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, கர்ப்பப்பையில் கோளாறு என்று கூறி விட்டார்கள்.
ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 1-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.8.19

ஏழ்மையிலும் நன்மை!


ஏழ்மையிலும் நன்மை!

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது.

பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.

எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.

அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும்.

அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.

எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.

பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.

அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.

பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்.

இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.

எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.

அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.

நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.

உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.

சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள்.

தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.

நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள்.

"அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.

அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டிருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.

இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.

அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும் மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.

பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும்.

ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.

வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும்.

இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.

விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.

 மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால்.

தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன.

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.

 திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.

சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு.

அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.

 கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது.

பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.

 கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.

 எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.

 ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை.

வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.

 கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை.

இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும்.

அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும்.

ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.

 வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.

 வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.

 அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு.

 அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம்.

அழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள்,

முருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,

பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது.

ஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை !
----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.19

இதுவும் விஷம்தான்!!!!


இதுவும் விஷம்தான்!!!!

அதிக விஷயம்... விஷம்.
-----------------------
சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர்
படுத்தேன்.
குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..
படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

காலையில் நடக்க சொன்னார்கள் நடந்தேன் நேராக நடக்க கூடாது எட்டு போட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன்.

நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்..

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்
பால் வேண்டாம்
ஐஸ் வாட்டர் வேண்டாம்
பாட்டில் ஜீஸ் வேண்டாம்
என்றார்கள்... சரி என்று பழகினேன்..

ஒன்று புரிந்தது.
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,
அதிகமாக தெரிந்தாலும் ஆபத்து என்று.

Over qualification is disqualification
என்று எங்கோ படித்த நினைவு

Too much information will make you to suffer from distinguishing between useful And useless information.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை,
வாழை இலையில் விழுந்த ரசம் போல,
எந்தப் பக்கம் ஓடுது என்றே
தெரியாமல் ஓடுகிறது.

வாழ்க்கை ரசத்தை
குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம்.

இயல்பாக இருங்க.

வாழ்க்கை யாத்திரை
சுகமான நித்திரையோடு
மாத்திரை இல்லாத
யாத்திரையாக வாழ்த்துகள்.
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.8.19

ஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?


ஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

தமிழ்நாடு மின்சார வாரிய செயல் பொறியியலாளரால் அனுப்பப்பட்ட மிகவும் பயனுள்ள தகவல்.

*AC யின் சரியான பயன்பாடு:*

*நாம் தொடர்ந்து**ஏர் கண்டிஷனர்கள்* *பயன்படுத்துகிறோம்.**அதில் சரியான முறையை பின்பற்றுவோம்.*

*பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, அவர்கள் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர்.**இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி ???*

*நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா? 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.* * இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.*

*அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.*

*நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால தீமைகள் பல ஏற்படுகின்றன.*

*பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.*

*இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, அது 5 நட்சத்திர தரத்துடன் இருந்தாலும்கூட,* *தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,*

*ஏசி இயக்க சிறந்த வழி என்ன ?? *
*25 டிகிரிக்கு வெப்பநிலை* *அமைக்கவும்.*
*25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.*
*மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.*

*இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.*

*இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.* *எப்படி ??*

*26 டிகிரியில் ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்றுக்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம். எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.*

*பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.*

*தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.*

பொது ஆர்வத்தில் முன்னனுப்பப்பட்டது
சக்தி மற்றும் சக்தி அமைச்சகம். இந்திய அரசாங்கம்.
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.19

வயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்!!!!


வயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்!!!!

அழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை?

இந்த நிகழ்வு மோடியின் ஆட்சியால் அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.....

இது காலத்தின் கட்டாயம்! ராகுல் பிரதமராக (அடக் கடவுளே! ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... கோச்சுக்காதீங்க! ) இருந்தாலும் இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போதும் நாம் ஒன்றில் அழிந்து ஒன்றில் புதிதாய் பிறந்தே வந்துள்ளோம்.... நம்மை எப்போதும் புதுப்பித்தே வருகிறோம் எந்த ஒரு மாற்றத்திலும்!

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.

டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்!

டெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள,  தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்...

இதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது.

அதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு, ஆடி, மெர்ஸிடஸை முந்திக் கொண்டு மூன்று ரகங்களில் மின் காரை வெளியிட்டு அசத்தினர்...

சும்மா இருப்பார்களா ஜப்பானின் கார் ஜாம்பவான்கள்! தங்களின் பங்காக நிஸ்ஸான் மூலம் நடுத்தர வகை மின் காரை உருவாக்கி விட்டது. ஹோண்டா, டொயோட்டோவும் தயாராக உள்ளது.... கூடவே கொரியாவின் ஹுண்டாய், கியா!

சந்தையில் இன்றைய நிலவரப்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே உலக மார்க்கெட்டை முதலில் பிடிக்கும் என்றும், அடுத்து பிஎம்டபிள்யு, அடுத்து நிஸ்ஸான் என்றும் கணிக்கிறார்கள்..... டெஸ்லா தொடர்ந்து அமெரிக்க மார்க்கெட்டை தக்க வைக்கும்....

சீனாவும் தனக்கான பங்களிப்பான சகாய விலை உதிரி பாகங்கள், பேட்டரிகளைத் தந்து பின்புலத்தில் இயங்கும்!

இனி இந்தியாவில் எப்படி இருக்கும்....?

முதல் மின்காரை ஹுண்டாய் போன வாரம் முதலமைச்சரை வைத்து வெளியிட்டு விட்டு முதல் இந்திய மின் கார் எனும் பெருமையை தட்டிச் சென்று விட்டனர்... ₹35 லட்சமாம்.... அதனாலென்ன? இங்கே வாங்க ஆளிருக்கிறது! HDFC, ICICI EMI இருக்கும் வரை நாம் கவலையே பட வேண்டாம்!

இந்திய கார் ஜாம்பவான் டாடா நிறுவனம் தன் தயாரிப்புடன் ரெடியாக உள்ளது. அதே நேரம் யாருக்கும் வெளியே தெரியாமல் மாருதி சுசுகியும் தன் பங்கிற்கு ஏழைகளுக்கான மாடலை தயார் செய்து விட்டது. அந்த மாடல் மாருதி வேகன் ஆர் மாடலின் இஞ்சினை வெளியே எடுத்து விட்டு புற வடிவை பழையது போல வடிவமைத்துள்ளனர்... வேகன் ஆர் மாடல் மாருதியின் ஃப்ளாக் ஷிப் மாடல்.... அதை சட்டென்று மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....

ரொனோவும் தன் பங்கிற்கு நிஸ்ஸானின் பட்டறையில் லேபிள் மட்டும் மாற்றி தனது வாடிக்கையாளரை திருப்தி படுத்த தயாராகி விட்டது!

தவிரவும் மகிந்திரா, உலக அளவில் அதிக எண்ணிக்கை கார்களை தயாரிக்கும் கம்பெனி, தனது சீன தொழிற்சாலையில் மின் காரை வடிவமைத்து விட்டது...

மத்திய அரசின் வரி விலக்கிற்காகவே காத்திருந்தன அனைத்து நிறுவனங்களும்... மின் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% லிருந்து 5% த்திற்கு குறைத்ததும், இந்த நிறுவனங்கள், தங்களுக்குள் யார் முதலில் மின் காரை சந்தைக்குக் கொண்டு வரப் போகிறோம் எனும் போட்டிக்குத் தயாராகி விட்டது!

இனி உங்கள் பழைய கார்கள் கதி என்ன?

2025 இல் மின்கார்கள் சந்தையில் முழு வீச்சில் இயங்கும்....

பழைய கார்களை மின் கார்களாக மாற்றும் ஒர்க்ஷாப்கள் அதிகரிக்கும். ஆனால் இதற்கு அரசு அனுமதி தருமா எனத் தெரியவில்லை. அப்படி மாற்ற முடியவில்லை என்றால் பேரிச்சம் பழம் அல்லது எள்ளும் தண்ணியும்தான்....

மின் கார்கள் விலை சுமார் ₹10 லட்சத்திலிருந்து (விலை குறைந்த மாருதி மாடல் ஒரு சார்ஜிங்கில் 165 கிமி) ₹35 லட்ச நிஸ்ஸான், ரெனோ, ஃபோக்ஸ்வேகன், டொயோட்டோ, (265 கிமி) அடுத்து ஒரு கோடி வரை பிஎம்டபிள்யு, ஆடி (400 கிமி) என தோராய விலை இருக்கும்....

மின்காருக்கான லித்தியம் அயர்ன் பேட்டரிகளே இனி 30 வருடங்களுக்கான பரபரப்பு சந்தையாக விளங்கப் போகிறது. கிட்டத்தட்ட வீட்டு இன்வெர்ட்டர் பிசினஸ் போல. வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்... அதே போல சார்ஜர்கள் (ஜிஎஸ்டியை இதற்கும் 5% ஆக குறைத்துள்ளனர்). சார்ஜர் மார்க்கெட் ஏசி ஸ்டெபிலைசர் மார்க்கெட் போலவே. பல கம்பெனிகள் இதில் இறங்க வாய்ப்புள்ளது.

பயண வழியில் நாம் தேடும் பெட்ரோல் பங்க், பங்க்சர் கடை போல மின் சார்ஜர் கடைகள் நிறைய ஹைவேக்களில் பார்க்கலாம்.... சின்ன வியாபாரம்தான்.... ஒரு மணி நேர சார்ஜுக்கு ₹500 வரை வாங்கலாம்.... வண்டிகள் நிறுத்த நிறைய இடம் தேவைப்படும்.... அங்கே ஒரு மணி நேரத்தை செலவு செய்ய சிறிய ஷாப்கள் அல்லது பானி பூரி ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட்கள், தவிர்க்கவே முடியாமல் வழக்கம் போல இந்தி பேசும் பீகார் மற்றும் பெங்காலி பையன்களும், சகாயமான சம்பளத்தில்!....

அரசு பெட்ரோலிய இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவணி இருப்பை ஏற்றிக் கொண்டு, தனது ஜிடிபியை உயர்த்திக் காட்டும்....

மின் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சூரிய சக்தி. அதை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும்... தண்ணீரில்லாத மானாவாரி நிலங்களில் சோலார் பேனல் தோட்டங்களை வழியுங்கும் இனி காணலாம்.... வீட்டு மாடிகளில் சோலார் செல்களால் நிரப்பப் படும்... பெட்ரோல் போல மின்சார விலையும் உயரும். ஆனால் கட்டுக்குள் இருக்கும்.... வீட்டில் காற்றாலைகளால் மின் உற்பத்தி பெருகும்! சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா? எங்க வீட்டு சார்ஜர் வேலை செய்யலை' எனும் மத்திய வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் இதிலும் தொடரும்).

நேற்றைய தினம் என் காரை சர்வீசுக்கு விட்டேன். பில் ₹27000 வந்தது....

2025 இல் இதே கார் சர்வீசுக்கு வரும்போது டிசி மோட்டாரின் கார்பனை மட்டும் மாற்ற ₹500 செலவு மட்டுமே என எண்ணும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது!

அமெரிக்காவில் டெஸ்லா கம்பெனி வாசலில் ஒரு வாசகத்தை வைத்துள்ளார்கள்!

"இந்தியாவின் பழம்பெரும் புராண இதிகாசங்களே காந்தம் பற்றிய எனது ஆராய்ச்சியை ஊக்குவித்தது! அவைகளில் இல்லாத தொழில் நுட்பமே இல்லை. இன்னொரு ஜென்மம் என்று இருந்து நான் பிறக்க நேரிட்டால், இந்தியாவில் பிறக்கவே விரும்புகிறேன்!
     - நிகோலஸ் டெஸ்லா!"

இனி எங்க ஆட்சிதான்!

- டிமிட்த் பெட்கோவ்ஸ்கி எனும் எலக்ரிகல் பொறியாளன்
----------------------------------------------------------------





படித்து அதிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.19

Astrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, "ஜாதகி கேட்டை நட்சத்திரக்காரர். மிகவும் அழகானவர். முதுகலைப் பட்டதாரி. ஜாதகிக்கு அவரது 27 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மணமுறிவு ஏற்பட்டது. விவாகத்தை ரத்து செய்துவிட்டு தன் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். திருமண வாழ்க்கை அவலமாக முடிந்ததற்கு என்ன காரணம்?"  என்று  கேட்டிருந்தேன்.

பதில்:

கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் சேர்க்கை. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபக்கம் சனி மறுபக்கம் செவ்வாய். 7ம் அதிபதி சனீஷ்வரன் 12ல் (விரையத்தில்) களத்திரகாரகன்
சுக்கிரனும் 12ல். 12ம் அதிபதி புதனும் 12ல். அனைத்தும் திருமண வாழ்க்கைக்கு எதிரான அமைப்பு. இந்தக் காரணங்களால் திருமணம் நிலைக்கவில்லை!!!1

இந்தப் புதிரில் 12  அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 30-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger Santhanam Salem said...
சுக்கிரன் (களத்திரகாரகன்) சனீஸ்வரன் (7 மற்றும் 8ம் வீட்டு அதிபதி) மறைவு இடமான 12ம் வீட்டில் மற்றும் சேர்க்கை // 2ம் வீட்டு அதிபதி 2க்கு விரைய ஸ்தானமான லக்கனத்தில் // சந்திரன் (லக்கினாதிபதி) ராகு சேர்க்கை // சந்திரன் (லக்கினாதிபதி) ராகு மீது செவ்வாய் பார்வை // சந்திரன் (லக்கினாதிபதி) நீசம் // 2ம் வீட்டின் மீது சனீஸ்வரன் (7 மற்றும்
8ம் வீட்டு அதிபதி) பார்வை // இவ்வளவு பாதக அமைப்பு போதாதா?
2ம் வீட்டின் மீது பார்வை கொண்ட குரு பகவான் மட்டுமே குடும்ப அமைப்பை உருவாக்கினார் santhanam salem
Friday, August 23, 2019 10:02:00 AM
---------------------------------------------------
2
Blogger kumaran said...
வணக்கம் ஐயா . பெண்ணை குறிக்க கூடிய கிரகம் சுக்கிரன் அதேபோல் காலா புருஷனுக்கு 7-அம் இட அதிபதி

களத்திர காரகன் சுக்கிரன் , இந்த பெண் ஜாதகத்தில் மந்தன் உடன் சேர்க்கை பெற்று உள்ளார் . கேது விருக்கு 2-அம வீட்டில் உள்ளார் , கேது தடை , கேடு , breakup , போற்றவற்றிக்கு காரகன் , அதேபோல் கடக லக்னிம் லக்கனத்தில்
சூர்யன் பகை கொண்டு உள்ளார் , லகினநாதன் சந்திரன் லகினத்திற்கு 5-அம வீடு புத்திர , பூர்வ இடம் இல் நீச்சம் ஆகி உள்ளார் அதனால் இவர்க்கு சந்ததி ,குழைந்து , என்பது இல்லாமல் போகும் என்பதை குறிக்கின்றது கூடவே ராகு
சேர்க்கை பெற்று உள்ளார் ராகு, சந்திரன் இரண்டு பகை கிரகம் . மற்றும் கணவர் குறிக்க கூடிய கிரகம் செவ்வாய் சிம்மத்தில் பகை பெற்று குடும்பஸ்தஹணம் இல் உள்ளார் இந்த சேர்க்கை இந்த ஜாதகத்திற்கு பிரிவினை குடுத்து உள்ளது .அதேபோல் லகினத்துக்கு 12-இல் சுக்கிரன் மறைவு பெற்று -அம மறைவு அதிபதி தசை நடந்து கொண்டு உள்ளது .இதுவே இதற்கு காரணம் . அதேபோல் லகினத்துக்கு 7-அம அதிபதி சனி 12-இல் மறைவு பெற்று உள்ளார்.படுக்கை இடம் சரி இல்லாத நிலைமை . இதுவே பிரிவிற்கு காரணம் ஆகி உள்ளது..
Friday, August 23, 2019 11:07:00 AM
--------------------------------------------------------
3
Blogger ezhil said...
sukran thasai guru pudthi + elarai sani nadapil vivakarathu nadandu irukum.
sukran sani yai guru parkirar, 2 idathaiyum sevai, guru parkirar thirumanam nadathivaithu irupar.
amsathilum sukran sani servai. chandiran + RAGU this all would have made the girls mind to think in wrong way resulting divorce. guruvum sevaiyum yogathipathi. second marriage will be good life.
i dont have tamil font
Friday, August 23, 2019 12:19:00 PM
------------------------------------------------
4
Blogger seethalrajan said...
வாதியருக்கு வணக்கம். உங்கள் உடல் நிலை சரியானது மிகவும் மகிழ்ச்சி.
கொடுக்கப்பட்டு உள்ள ஜாதகத்தில் கடக லக்கினம், லக்கின அதிபதி நீசம், ராகு கூட்டு வேறு, அது நல்ல பலன் இல்லை. பாக்கிய அதிபதி குரு 8ல் மறைவு, 7ம் அதிபதி 12ல், கூடவே சுக்ர தசை 10 வயது முதல் 30 வரை. சுக்கிரனும் சனி,
12ம் அதிபதி கூட்டு, எல்லாம் சேர்ந்து திருமணம் கெடுத்து விட்டனர்.
சந்திரனுக்கும் 7ம் அதிபதி சுக்கிரன் 8ல் மறைவு. அதுவும் கேடானது. 2ம் விட்டு மேல் சனியின் பார்வை. நன்றி.
Friday, August 23, 2019 4:18:00 PM
-------------------------------------------
5
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி நீசமாகியுள்ளார்
2 . ஏழாம்அதிபதி சனி லக்கினத்திற்கு பனிரெண்டில் மேலும் ஏழாம் இடத்திற்கு ஆறில் காரகன் சுக்கிரன் பனிரெண்டில்
3 .செய்வாய் இரண்டில் ௪.சனியும் சுக்ரனும் சேர்த்திருப்பது குடும்ப வாழ்க்கைக்கு நல்லதல்ல
4 .இரண்டாமதிபதி சூரியன் இரண்டிற்கு பனிரெண்டில்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, August 23, 2019 5:20:00 PM
-----------------------------------------------------
6
Blogger Unknown said...
Guru aspect Mars which is in 2nd position.
Saturn together with venus, which is pathagathi as well as 11th lord. So divorce happend
Saturday, August 24, 2019 8:19:00 AM
--------------------------------------------
7
Blogger P. CHANDRASEKARA AZAD said...
தங்கள் புதிருக்கான பதில்
ஜாதகியின் திருமண வாழ்வு கேட்டு போனதற்கான காரணங்கள்
1 . ஜாதகி கடக லக்கினம் , சிம்ம ராசி , கேட்டை நக்ஷத்திரம் .
திருமண வாழ்வு சிறப்பாக அமைய இரண்டாம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும் பார்க்க வேண்டும் .
முதலில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி சூரியன் ராசியாதிபதி இரண்டிற்கு பனிரெண்டாம் இடத்தில் நின்று திருமண வாழ்வை விரயம் செய்தது. மேலும் களத்திர ஸ்தான அதிபதி சனியும் , களத்திர காரகன் சுக்கிரனும் லக்கினத்திற்கு பனிரெண்டில் அமர்ந்து திருமண வாழ்வை இல்லாமல் செய்தது. மற்றும் கேதுவின் மூன்றாம் பார்வையால்

குடும்ப ஸ்தான அதிபதி பார்க்க பட்டு குடும்ப வாழ்வை மேலும் காலி செய்தது. மேலும் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த

செவ்வாயை சனி மூன்றாம் பார்வையால் இன்னும் கடின படுத்தியது.
2 ஒன்பதாம் இடத்து அதிபதி அதாவது பாக்கிய ஸ்தான அதிபதி குரு ஒன்பதாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து திருமண பாக்கியத்தை குறைத்தது. மேலும் ஒன்பதாம் வீடு அதிபதியுடன் மாந்தி வேறு அமர்ந்து பாக்கியத்தை இன்னும்
குறைத்தது. இதே நிலை நவாம்ச கட்டத்திலும் அதாவது குருவுடன் மாந்தி அமர்ந்து இருந்து பாக்கிய ஸ்தானத்தை காலி செய்தது.
3 ஐந்தாம் வீட்டில் நீச சந்திரனுடன் அமர்ந்த ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் விட்டு வைக்க வில்லை. காலி செய்தது.
நவாம்ச கட்டத்திலும் இதே நிலையே அதாவது ஐந்தில் ராகு நின்று இன்னும் நிலைமையை மோசமா மாக்கியது.
4 திருமண யோகத்திற்கு குடும்ப வாழ்விற்கு காரணமான குரு களத்திரகாரகன் சுக்கிரன் , களத்திர கார அதிபதி சனி இவை எல்லாம் லக்கினத்திற்கு எட்டு, பனிரெண்டில் மறைந்து குடும்ப வாழ்வை சிதைத்தது.
5 மேலும் லக்கினத்தில் அமர்ந்த சூரியன் முன் கோபத்தை தூண்டி முதல் திருமணத்தை விவகாரத்தில் முடிய செய்தார்.
ஆனால் குரு பார்வை பெற்ற இரண்டாம் இடத்து செவ்வாயால் இரண்டாம் திருமணம் சாத்தியம் ஆனது.
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, August 24, 2019 9:23:00 AM
---------------------------------------------------------
8
Blogger Shanmugasundaram said...
Good morning Sir.The lady was born on 30.06.1974 5.30am place covai.Kettai nakshtra 4th padam Viruchaga rasi  kadaga lagnam.Lagna lord moon is in neecham with rahu.Seventh house lord saturn is in 12th place with twelfth lord.moreover venus also placed in twelfth house. Marriage was happened during venus dasa mercury bukthi in the same bukthi divorce happened due to the above planetary position.thanks sir vazhga valamudan
Saturday, August 24, 2019 9:40:00 AM
-------------------------------------------------------------
9
Blogger kmr.krishnan said...
ஜாதகி 30 Jஉல்ய் 1974 காலை 5 மணி 31 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்
7ம் இடத்திற்குரிய சனைச்சரன் 12ல் மறைவு. அதுபோலவே களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைவு. குடும்ப ஸ்தனதிபதி சூரியன் தன் வீட்டிற்கு 12ல் மறைவு. 5ம் இடத்தில் சந்திரனும் ராகுவும் ஜாதகி சற்றே மனக்கவலை அடைபவர் என்பதைக் காட்டுகிறது.லக்கினம் சூரியனாலும், வாக்கு ஸ்தானம் செவ்வாயாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் ஜாதகி பேச்சில் தீப்
பொறி பறக்கும்.சுக்கிர தசா புதன் புக்தியில் திருமணம் . இருவருமே 12ல் மறைந்ததால் அந்த தசா புக்தி முடியும் முன்னரே விவாக ரத்து வந்தது.லக்கினம் இருபக்கமும் சனி செவ்வாயால் சூழப்பட்டுள்ளது.
kmrk1949@gmail.com
Saturday, August 24, 2019 2:48:00 PM
---------------------------------------------------------------------
10
Blogger Thanga Mouly said...
ஜாதகிக்கு லக்கினாதிபதி நீசமடைந்து ராகுவுடன் கூட்டணி அடைந்துள்ளார். குடும்பஸ்தன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தாலும் அவருக்கு விரயத்தில் அஸ்தமனம் அடைந்துள்ளது. 7ம் மற்றும் 8ம் அதிபதி சனி, களஸ்திர காரகன் சுக்கிரன் உடன் இணைவு மற்றும் விரயத்தில் அமர்வு திருமண
வாழ்க்கையை தொடர வாய்ப்பளிக்கவில்லை.
மனோகாரகன் லக்கினாதிபதியாகி அவர் முற்றிலும் பாதிப்பு பெற்றது ஜாதகி விவாகத்தினை வெறுப்புடன் ரத்துச் செய்வதத்திற்கு காரணம் என்பது எனது மேலோட்டமான கருத்து.
Saturday, August 24, 2019 5:05:00 PM
----------------------------------------------------
11
Blogger jaga.gm said...
7th GOD SANI IN 12TH PLACE
2ND GOD SURIYAN IS IN 12TH PLACE OF HIS OWN HOUSE
2ND GOD SURIYAN NEESAM IN NAVAMSAM
ALSO GURU IS IN 8TH PLACE NOT ABLE TO HELP
SO DIVORCE HAPPENED
Saturday, August 24, 2019 9:38:00 PM
-------------------------------------------------
12
Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு
அன்பு வணக்கங்கள். புதிரிற்கு பதில் வருமாறு
ஜாதகி 30 ஜுலை 1974ல் பிறந்துள்ளார்.
அவரது திருமணம் சுக்கிர (களஸ்திரஸ்தானாதிபதி/விரயஸ்தானாதிபதி) தசையிலும் புதன் புத்தியிலும் நடந்துள்ளது.
களஸ்திரஸ்தானாதிபதியும், 7ம் அதிபதியும் விரயஸ்தானத்தில்.
புத்திரஸ்தானத்தில் நீச சந்திரன் ராகுவுடன் கூடி
குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்
ராசிக்கு 8ல் சனி – இதுவே கல்யாண பிரிவிற்கு காரணமாகும்
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, August 25, 2019 2:47:00 AM
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன?

ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி கேட்டை நட்சத்திரக்காரர். மிகவும் அழகானவர். முதுகலைப் பட்டதாரி. ஜாதகிக்கு அவரது 27 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மணமுறிவு ஏற்பட்டது. விவாகத்தை ரத்து செய்துவிட்டு தன் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். திருமண வாழ்க்கை அவலமாக முடிந்ததற்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 25-8-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.19

அம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை!!!!


அம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை!!!!

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!
முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்!

பூஜா என்ற  இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து
கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று  இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான்
வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம்
செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.

இந்தப்  பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்....

“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை
தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு
செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன்.
காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும்.

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான
மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை,
தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும்
முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு
மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே
தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக
வளருங்கள்.” என்றார்
------------------------------------
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.19

கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!


கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!

முப்படைகளுக்கும் தனித்தனி தளபதி !

*தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த  காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார்.

நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில்
ஏதோ சிந்தனை அலைப்பாயக் கவலையோடு இருந்தாராம்...

*பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்திகளைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், " என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது...? என்னும்
தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .

*"எப்பவுமே கலகலப்பா இருப்பிங்க...இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?

*நேரு விரக்தியோடு, " நம்ம இராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்தநாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ்!  திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார்.
கிருஷ்ணமேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..." என்றாராம். 

* " இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்கணும்...யாரைக் கழற்றி விட்டுவிடலாம் என்று நெனைக்கிறீங்க...? என்று கேட்டார் தலைவர்.

*"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும் ..." என்றார் நேரு.

*கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். " நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவுகற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள் 'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தளவாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே
நீங்க இங்கே பண்ண வேண்டிய மத்ததையெல்லாம் பண்ணிவிடலாம்!!!! ”

*வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, " திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.? என்று கேட்டார்...

*பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். " இப்பதிம்மையா இந்தியாவின் மொத்த இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே
மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்டும் முடியாது...

*ஏகத்துக்கு தளபதியா இருந்துநாட்டாமை பண்ணின ஒருத்தர்  ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார் வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர்

பேசப்பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...

" Kamaraj... Fantastic Kamaraj...! What a burte common sense ! "

*தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார்.

*அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்.

*புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச் படித்தவர் அவர்.

சொன்னவர் :- திரு.S. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.

*நன்றியுடன் ஆதார நூல்; "ஆகட்டும் -- பார்க்கலாம் "- திரு.வீரபாண்டியன்.
பக்கம் எண் : 111&112.
===========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.8.19

மிகச் சிறந்த பரிகாரம் எது?


மிகச் சிறந்த பரிகாரம் எது?

பரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே....
பொய் விளக்கு வேண்டாம்:-

(நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் – ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல்)

தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.

இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.

              இருப்பினும்.....

ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு இது …

இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:

அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள் …

முதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா?

இன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி,ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது?

உண்மையான பசு நெய் கொண்டு ,ஏற்றப்படும் விளக்கின் ஒளி,ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும் .அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.

ஆனால் இந்தமாதிரி,தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் ,நமது உடம்பே உருகி விடும்போல் இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதை கவனியுங்கள்.

முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணை, நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். .பின்னர் கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளில் இருந்து “வெண்ணை” வாங்கி காய்ச்சி, உருக்கி , அதில் இருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள், பின்னர் கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு ஏற்றினார்கள்.. நாள்பட பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற “நெய்யினைக்” கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்பொழுது ,நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை.. கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகள் கொள்ளையடிக்க நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து பொய் விளக்கை வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டு போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்கு செல்வதே பாவங்களை தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவ செயல்களை செய்ய வேண்டாம்.

                    நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…

மேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்..
                பொய் விளக்கேற்றி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!!!
                      ஏமாற்றுபவர்களுக்கும் நமக்கும் என்ன  வேறுபாடு?
     
          - சித்தர்களின் குரல்
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.19

Short Story: சிறுகதை: ☆சபலம்*


Short Story: சிறுகதை: ☆சபலம்*

ஒரு சிறுகதை...

மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.

“என்ன மிஸ்டர் கோபால், உங்க வயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.?

“உண்மைதான் சார்.”

“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.? எனக்கு வியப்பா இருக்கு.”

“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”

“ஓ.. அப்படியா.? எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு."

“பரவாயில்லை சார். நான் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”

அந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான். “ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”

“ஓகே. தேங்க் யூ..”

“ம்ம்ம்.. வெல்கம்.”
-----------------------------------------------------------------
எனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன. ஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...?

தலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.

எனக்கு குப்பென வியர்த்தது...! பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் போய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.

வீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.

“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க.? என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.

'சொல்லிவிடலாமா இவளிடம்.?'

“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”

“எதுக்கு.?"

“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”

'என்னாச்சு இவருக்கு.?' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.

"ம்ம்.. சொல்லுங்க.”

“இப்படி உக்காரு." என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.

“ஏதுங்க இது.? கடன் வாங்கினிங்களா,.?"

நான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.

“யாரு தவற விட்ட பணம் இது.?"

“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”

அவள் அமைதியாக இருந்தாள்.

“சுபா ஏதாவது பேசேன்.”

“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”

“சுபா என்ன சொல்ற.? கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”

“உங்க சபல புத்திக்கு கடவுளை பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.

“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”

“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.?” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”

“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.?" என நான் குரலை உயர்த்த...

சுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.

“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.

“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.

நான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத்திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி  பணப்பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபசரித்தார்.

“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.

“அப்படியா..?" என்று யோசித்தவர்

“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா...? ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது.? நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு..." என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...

என் கண்ணில் கண்ணீர் வந்தது... அந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.19

Astrology: Quiz: புதிர்: 16-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 16-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்
கொடுத்து, ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது
வயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார். அவருடைய ஆசை அல்லது விருப்பம் நிறைவேறுமா?” என்று கேட்டிருந்தேன்.

பதில்:

சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 2ல். ஒன்பதாம் வீடுதான் வெளிநாட்டு பயணங்களுக்கு உரியது. அதன் அமைப்பைப் பொறுத்து
ஜாதகன் அல்லது ஜாதகி வெளிநாடு சென்று படிக்க, வேலை பார்க்க,
அங்கே குடியுரிமை பெற்று தங்கி வசிக்க என்று எல்லாம் சாத்தியப்படும்.
இந்த ஜாதகிக்கு வரவிருந்த கேது மகா திசையின் நாயகன் கேது ஐந்தில் -
தனுசுவில். அதன் அதிபதி குரு பகவான் துலா ராசியில் அமர்ந்து கொண்டு தனது நேரடிப்பார்வையில் ஒன்பதாம் வீட்டை வைத்துக்கொண்டுள்ளார்.
கேது, ஜாதகப்படி செவ்வாய்க்குரிய பலாபலன்களையும் தரக்கூடியது.ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து விருச்சிக
ராசியில் வலுவாக உள்ளார். அது ஜல ராசி. ஆகவே ஜாதகிக்கு வெளி நாடு சென்று படிக்கும் ஆசை கைகூடியது.

இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 23-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில் :
ஜாதகியின் வெளி நாடு படிப்பு ஆசை நிறைவேறியதா ?
1 . சிம்ம லக்கின ஜாதகிக்கு படிப்பு ஸ்தான அதிபதி செவ்வாய் சொந்த வீட்டில் பலமுடன் இருந்ததால் அவரின் 22

வயதிலேயே நல்ல மதிப்பெண் வுடன் தேர்ச்சி பெற்றார் . ஏனென்றால் படிப்பு ஸ்தான அதிபதி சந்திர மங்கள யோகம்

பெற்று சொந்த வீட்டில் உள்ளது.
2 மேல் படிப்பு ஸ்தானத்தை அதாவது ஐந்தாம் இடத்து அதிபதி குரு மூன்றாம் இடத்தில் அதாவது வெற்றி ஸ்தானத்தில்

அமர்ந்து அவரின் மேல் படிப்பு வெளி நாட்டில் அமைய உதவினார். ஏனென்றால் குரு சுக்கிரன் வீட்டில் அமர்ந்து

உள்ளார். சுக்கிரன் வெளி நாட்டு செல்ல உதவும் கிரகமாகும்.
3 இந்த வெளி நாடு படிப்பு புதன் தசை ஆரம்பித்து கேது தசையில் வெற்றி கரமாக நிறைவு பெற்றது . ஏனெனில் கேது

குருவின் வீட்டில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அவரின் மேல் படிப்பை வெற்றிகரமாக அமையும் படி செய்து முடித்தார்.
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
MOB : 8879885399
Friday, August 16, 2019 8:09:00 AM
--------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .வெளிநாடு செல்லும் யோகத்திற்கான இடங்கள் ஒன்பதும் பனிரெண்டாம் இடங்கள்
2 .ஒன்பதாம் அதிபதி செய்வாய் ஒன்பதிற்கு எட்டில் அமர்ந்துள்ளார்
3 .எனினும் பனிரெண்டுக்கு உரிய சந்திரன் நல்ல நிலையில் யோககாரகன் செவிவயடன் அமர்ந்துள்ளார்
4 ..மேலும் குருவின் பார்வை ஒன்பதாம் வீட்டின்மேல் உள்ளதாலும்
புதன் புதஆதித்ய யோகத்துடன் உள்ளதாலும் வெளிநாட்டு யோகத்தை ஜாதகருக்கு அளிக்கிறது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, August 16, 2019 4:28:00 PM
-------------------------------------------------
3
Blogger Santhanam Salem said...
நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது, நம்முடைய ஜாதகத்தின் 4-ம் இடம் தான். அந்த வீட்டிற்கு

பன்னிரண்டாம் வீடான 3-ம் இடம் தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப் பயணத்தைப் பற்றி சொல்வது

ஒன்பதாம் இடம் ஆகும். அதன் அடிப் படையில் 3, 9, 12 ஆகிய இடத்தைக் குறிக்கின்ற கிரகங்களின் திசாபுத்தியையும்,

அதன் காலத்தையும் வைத்து தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்.
பயணம், இடப்பெயர்ச்சி அல்லது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுவது நீர் கிரகமான சந்திரன் ஆகும்.

வெளிநாட்டவரையும், வேறு மொழி பேசுபவரையும், வேறு மதத்தவர்களையும் குறிக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும்.

அதே போல் ஜீவனகாரகன் குரு, கர்மகாரகன் சனி. இவர் அனைவரும் தான் வெளிநாட்டு பயணத்தை முடிவு செய்யும்

கிரகங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்றிருந்தாலோ அல்லது பரிவர்த்தனை

யோகம் பெற்றிருந்தாலோ, அந்த நபர் வெளிநாடு செல்வார். ஒருவர் வெளிநாடு செல்வதற்கு இந்த ஜாதக அமைப்பும்

வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு, 9 அல்லது 12-ம் இடத்திற்கான அதிபதிகள், நீர் தத்துவ ராசிகளான கடகம்,

விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நின்றால், அந்த ஜாதகர் நிச்சயம் கடல் கடந்து வெளிநாடு செல்வார்.
9, 12 வீட்டின் அதிபதியுடன் சந்திரன் அல்லது குரு அல்லது சனி சம்பந்தம் பெற்றால் வெளிநாடு வாய்ப்பு அதிகம்.
நிலையில் காலசர்ப்ப அனைத்து கிரகங்கள் இருந்தாலும், வெளிநாட்டு யோகம் உண்டு.
ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்று 4ம் இடத்தில உள்ளதால் ஜாதகர் மேற்படிப்பிற்கு

வெளிநாடு சென்றார்.
Saturday, August 17, 2019 10:08:00 AM
---------------------------------------------
4
Blogger Lokes said...
பிறப்பு 23/09/1982, 4:00 AM, சென்னை.
சனியின் இணைவை பெற்றாலும், கல்விக்குரிய காரகன் புதனே தசநாதன் ஆகி உச்சம்பெற்று தன் அதிநட்பு கிரகமான

சூரியனுடன் அசத்தமனம் ஆகாமல் இணைந்து ஏழாம் பார்வையால் அயல்நாட்டை குறிக்கும் 12 ஆம் வீட்டிற்கு 9 ஆம்

வீடாகிய எட்டாம் வீட்டை பார்க்கிறார். மேலும் புதன் நீரைக் குறிக்கும் சந்திரனின் சாரம் வாங்கி, அந்த சந்திரனே கடல்

கடக்கும் யோகத்தை குறிக்கும் 12 ஆம் அதிபதியாகி, அவர் கல்விக்குரிய 4 ஆம் வீட்டில் ஆட்சி பலம் பெற்ற

செவ்வாயுடன் இணைந்து நீசபங்கம் அடைந்ததோடு திக்பலமுமாகி அதிவலுவுடன் இருக்கிறார். 4 ஆம் வீடு, அதன்

அதிபதி செவ்வாய், சந்திரன், கல்விகாரகன் புதன் இப்படி எல்லாம் வலுவாகி அதை அனுபவிக்க லக்கினாதிபதியும்

பாக்யாதிபதியும் வலுப்பெற்று, புதன் தசையும் அமைந்ததால் கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.
Saturday, August 17, 2019 1:18:00 PM
-----------------------------------------------------
5
Blogger classroom2007 said...
வணக்கம்.
23.09.1982 ஆம் தேதி காலை 4.03 மணிக்கு சிம்ம லக்கினம், விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்

இந்த ஜாதகி. (இடம்: சென்னை), லக்கினம்: சிம்மம்
யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய், - யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி, - ராஜயோகத்தை கொடுப்பவர்

- செவ்வாய்
சிம்ம லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண

வீட்டிற்கும் உரியவன்) புதன் 2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஆகவே அவர்கள் மூவரும் ஜாதகத்தில்

வலிமையுடன் இருப்பது முக்கியம்.
புதன் (7 பரல்), செவ்வாய் (3 பரல்), சுக்கிரன் (4 பரல்), உடல் வலிமை (சூரியன் - 4 பரல்) - மனவலிமை (சந்திரன்- 5

பரல்) ஜாதகத்தில் உள்ளன
சிம்ம லக்கினகாரர்கள் அஞ்சா நெஞ்சமும், வீரமும் உடையவர்
லக்கினாதிபதி சூரியன் 2ல் உச்சமான புதனுடன் (7 பரல்) சேர்ந்து 6ம் வீட்டு அதிபதி சனியுடன் கூட்டு.
இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம், அறிவாளியும் சுகவாசியும் ஆவீர்கள்
இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும், ஆற்றல் இருக்கும். பணம்

சம்பாதிக்கக்கூடியவர் . சேர்த்துவைக்கக் கூடியவர் . குடும்ப வாழ்க்கை இன்பகரமானது.
ஜாதகத்தில் சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 2-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகர் இறைவழிபாடு இறைபக்தி

உடையவர். சேர்ந்திருப்பது ஓரளவிற்கு செல்வத்தைக் கொடுக்கும்.
இரண்டில் சனி (4 பரல்) இருந்தால் - இரண்டு விவாகம் கையில் காசு தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும்.. நிதி

பிரச்சனை அனுபவிக்க நேரிடும். சனி வர்க்கோத்தமம்.
10ம் வீட்டு (31 பரல்) அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் உள்ள படியால் கடின உழைப்பினால் முன்னுக்கு வருபவர் .சுய

தொழில் செய்பவர்.
சிம்ம லக்கினத்திற்கு ரிஷப ராசியில் இருக்கும் சுக்கிரன் தீமைகளையே செய்வான். 32 வயதில் சுக்கிர தசை (3 & 10ம்

வீட்டு அதிபதி தசை ) ஆரம்பம் (2014 -2034)
4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 4ல் சந்திரனுடன் சேர்ந்து சனியின் 3ம் பார்வையில் உள்ளார். மேற்கொண்டு கல்வி படிப்பிற்கு

வெளி நாடு செல்ல வாய்ப்பில்லை
9ம் வீட்டு பாக்யஸ்தான அதிபதி செவ்வாய் 4ல் அமர்ந்து 7ம் பார்வையால் 10ம் வீட்டை பார்க்கிறார். செவ்வாய் ராஜ

யோகத்தை கொடுக்க கூடியவர் . சனியின் 3ம் பார்வை 4ல் உள்ள செவ்வாயின் மீதும், சந்திரனின் மீதும் உள்ளது,
12ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் விருச்சிக ராசியில் நீசம். வெகு தூரத்திற்கு சென்று தனியாக வசிக்க நேரிடும்.

கவலைகள், மன உலைச்சல்கள் வரக்கூடும்.
25 வயதில் கேது தசை ஆரம்பம் (2007-2014),
32 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் (2014 -2034)
அவருடைய ஆசை நிறைவேற வாய்ப்பில்லை .
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, August 18, 2019 2:09:00 AM
-----------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
ஜாதகி 23 செப்டம்பர் 1982 காலை 4 மணி 3 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்

கொண்டேன்.
12ம் அதிபதி சந்திரன் 4ம் இடத்திற்கு வந்து அமர்ந்து 4ம் இடத்திற்கான செவ்வாயுடன் நின்றதாலும்,
9ம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும்,இவர் படிக்கும் காலத்தில் புத தசா நடந்து வந்ததாலும்,புதன் உச்சத்தில்

இருப்பதாலும் இவர் கட்டாயம் வெளிநாடு சென்று மேல் படிப்பு படித்திருப்பார். பெரும்பாலும் அங்கேயே வேலையும்

கிடைத்திருக்கும்.
Sunday, August 18, 2019 5:04:00 AM
===================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா?

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா?

ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது வயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார்.

அவருடைய ஆசை அல்லது விருப்பம் நிறைவேறுமா?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 18-8-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.19

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!


வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் 
வாத்தியாரின் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!!!!
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை


கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை

கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்குப் பேச்சாளராகச் சென்றார்.  அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல,
அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !!
இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே  *“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.
_________

ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ. 'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார்.

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார், *'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
__________

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.
___________

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

பாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, *"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல்
வானைப் பிளந்தது.
____________

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,
கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு,
கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.
____________

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.
கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று!!

அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? -
ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

கிவாஜ - *இன்னிக்கு வேணாமே!* *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..

அந்தப் பெண் சொன்னாள் - *பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*

ஒரு தடவை அவருக்கு போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...

அதற்கு அவரின் கமெண்ட்: *"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது...பிஞ்சும் இருக்கிறது...*
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.19

ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!


ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!

ஆறுதல்_பாடல்களுக்கு_அமரகவி #கண்ணதாசன் .

"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ"

என்ற பாட்டு மூலமாக எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.

பிறருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு படவுலகில் நுழைந்தவர் கவியரசு அவர்கள்.கன்னியின் காதலி படத்தில்

"கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே "

என்ற பாடலின் மூலம் அடி எடுத்து வைத்தார் கவியரசு அவர்கள்.
காதல், வீரம், சோகம், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என ஐயாயிரத்திற்கு மேல் பாடல்கள் இயற்றி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகளை பாடலாக வடித்தவர்.

"மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"

இந்த பாட்டு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனயோ கோடி பேரை ஆறுதலடையச் செய்திருக்கும் என்பதே உண்மை.

 வாழ்க்கைச் சிக்கலின் குழப்பத்தில் மயங்கி கிடந்த போது இந்தப் பாடல்தான் என் உயிரை மீட்டுத் தந்தது என்கிறார் இவர் சமகாலத்து கவிஞர் வாலி .

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமமூர்த்தி பிரிந்த போது, விஸ்வநாதனால் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை.

அன்று ஒரு பாடல் எழுதுவதற்காக கவியரசரும் விஸ்வநாதனும் அமர்கிறார்கள். காதல் பிரிவை தாங்க முடியாத காதலி பாடும் பாடல், இது தான் சூழல்.

" தம்பி, நீ ட்யூன் போடுகிறாயா? நான் வார்த்தை தரட்டுமா?"

கவியரசர் கேட்கிறார்.

"நீங்க வார்த்தை கொடுங்கண்ணே"

சிறிது யோசனைக்குப் பின் கவியரசர் சொல்கிறார்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?"

வார்த்தைகளை கேட்டதும் விசுவநாதன் கவிஞரை நிமிர்ந்து பார்க்கிறார். தனக்கென்றே சொல்லப்பட்டது போல அவர் பார்வையை உணர்ந்து கொண்ட கவிஞர் மெளனமாக சிரித்தபடியே தலையசைத்து மேலே தொடர்கிறார்.

 ராமமூர்த்தி பிரிந்த துயருக்கு அது ஆறுதலாக இருந்தது. கவியரசர் எதையும் திட்டமிட்டுப் பாடுவதில்லை. சூழலைப் பொருத்து அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளைப் பாடலாகக் கொண்டு வருகிறார்.

 "மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்"

என்ற பாடலைக் கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை. ஏன், கவியரசரே ஒரு கணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். நல்ல மனைவியைப் பெற்றவர்கள் ஆனந்தமும், வாய்க்கப் பெறாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதலும் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கவிஞருக்கு கடிதம் எழுதி வாழ்த்தியது மட்டுமின்றி நன்றியும் தெரிவித்தனர்.

மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஏழை ஒருவர் , மகன் அவ்வாறில்லாமல் தீய வழியில் செல்கிறான் என்றறிந்து அந்த ஏழை தந்தை படும் வேதனையை சூழலாகக் கொண்டு பாடல் பாடுகிறார்

"வளர்த்த கடா முட்ட வந்தால்
வச்ச செடி முள்ளானால்
போன ஜென்மப்பாவமடி அம்மாளு "

இதைப் பாடும் போது திரு.டி.எம்.எஸ் அவர்களால் பாட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு சூழல் டி.எம்.எஸ் வாழ்விலேயே அப்போது சம்பவித்திருந்தது.

1962 தேர்தலில் தனது நண்பரின் வெற்றிக்காக கவிஞர் பெரும் முயற்சி செய்தார். இதில் நண்பர் தோற்றதை கவிஞரால் தாங்க முடியவில்லை.

 அப்போது பலே பாண்டியா படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் எழுத வேண்டி வந்தது. வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சியைப் பிரதிபலித்தார் கவிஞர்.

"யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியலை "

என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.

கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.19

வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!


வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!

அருமையான செய்யுள் !

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன!
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே"*

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்
சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)
வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்
ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை
இங்கார் - - - - - - (இங்கு + ஆர்)  இப்பூலகில் யார்
சுமந்திருப்பார் இச்சரக்கை ---  அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
மங்காத ---- குறைவில்லாத
சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)
தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்
ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்
செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்

 வெண்மையான உடல் சுருங்கி போனால்  வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்  ஆவது ஒன்றுமில்லை
 இப்பூலகில் யார் அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
 குறைவில்லாத வைகுந்தம்  அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)  நீ கொடுத்துவிட்டால்
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும் அனைத்து  செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
 இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்
------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.19

Astrology: Quiz: புதிர்: 9-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 9-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன? அது எப்போது சரியாகும்? அல்லது நிவர்த்தியாகும்?

பதில்:

தனுசு லக்கின ஜாதகம். சந்திரன் தான் மனகாரகன். மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவர்தான். சந்திரன் எட்டில் அதுவும் தேய்பிறை அவதாரத்துடன். தேய்பிறைச் சந்திரன் தீயதாகும். அத்துடன் அவருடன் கேது கூட்டாக உள்ளார். அதுவும் இல்லாமல் கேது மகா திசை நடப்பு. இந்த அமைப்புக்கள்தான் ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தங்களுக்குக் காரணம். 30 வயதாகும் போது அவருக்கு சுக்கிர மகாதிசை துவங்கும். சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கிறார். லக்கினத்தில் இருக்கும் லக்கினாதிபதி குருவின் பார்வையால் சுக்கிரன் பல நன்மைகளை வாரி வழங்குவார். அந்த கால கட்டத்தில் எல்லாம் நிவர்த்தியாகிவிடும்

இந்தப் புதிரில் 4 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 16-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
Blogger V Narayanan, Puducherry said...
கேள்விக்கு பதில் இருக்கட்டும்.
வாத்தியாரை full form ல் பார்ப்பது, இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை தருகிறது.
வெ. நாராயணன்
புதுச்சேரி
Friday, August 09, 2019 10:39:00 AM

உங்களின் மேலான அன்பிற்கு நன்றி நண்பரே!!!!!
----------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 8 ஆகஸ்டு 1972 மாலை 4 மணி 46 நிமிடங்கள் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ஜாதகருக்கு 10 ஆம் அதி பதி எட்டாம் இடத்தில் அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதமும் அடைந்ததால்
இவருக்கு வேலை மாறுதல் அதிகம் இருக்கலாம். அல்லது மனத்திற்குப்பிடித்த வேலை இல்லாமல் இருக்கலாம். சுய வர்கத்தில் சனீஸ்வரனுக்கு 7 பரல் கிடைத்து ஓரளவு வலிமை பெற்றதால் வேலை என்று எப்போதும் ஒன்று இருக்கும்.
தற்சமயம் சுக்கிரதசா புதன் புக்தி 30 ஆகஸ்டு 2020 வரை உள்ளது. இது கொஞ்சம் நல்ல நேரம் தான். அதன் பின்னர் வரும் கேது புக்தியில் 30 அக்டோபர் 2021ல் அலுவலகத்தில் சண்டையிட்டு வெளியேறுவார்.
அடுத்துவரும் சூரியதசா 6 வருடங்கள் நன்றாக இருக்க வாய்ப்பு. ஏனெனில் அது 9ம் இடத்தவனின் தசா. அதற்கு அடுத்துவரும் சந்திரதசா 10 ஆண்டுகள் பாதிப்பலன் கொடுக்கும். எப்படியாயினும் இவருக்கு சந்தோஷம் வேலையில் கிடைக்கவே கிடைக்காது. மனோகாரகன், 10ம் அதிபன் 5ம் அதிபன் செவ்வாய் ஆகியோர் அஸ்தங்கம் அடைந்ததால் மன உளைச்சலும், வேலையில் அலைக்கழிப்பும் தொடர்கதை தான்.
Friday, August 09, 2019 2:49:00 PM
-----------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
தனுசு லக்கினம், ஆறாம் அதிபதியின் தசை, சுக்கிர தசை நன்மை செய்வதாக அமையவில்லை.
பத்தாம் அதிபதி, பாக்கியாதிபதி, மனோகாரகன் யாவரும் 8 இல் மறைவது, வெறுப்பு மற்றும் மன அழுத்தத்தினை அளித்திருக்கும். 
நிலைமை சூரிய தசையில் ஓரளவு சரியாகவும் செவ்வாய் தசையில் நிவர்த்தியாகவும் கூடும்.
Saturday, August 10, 2019 5:16:00 PM
-----------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
மிக நீண்ட நாளுக்கு பிறகு தங்கள் புதிர் வந்து உள்ளது .. அதற்கான பதில் :
ஜாதகரின் வேலையின் மீதான வெறுப்பு விருப்பு விற்கான காரணங்கள் :
1 . ஜாதகருக்கு புதன் தசையில் சனி புக்தியில் வேலை கிடைத்தது. ஆனால் அதன் மீது ஜாதகருக்கு பிடித்தம் இல்லாமல் போனது . ஏனென்றால் புதன் ஆனது ஜாதகரின், ஜாதகரின் பத்தாம் இடத்து அதிபதி ஆவர். பத்தாம் இடமானது ஒருவரின் வேலையையும் , வேலை செய்யும் துறையையும் குறிக்கும் இடம் ஆகும். ஆதலால் பத்தாம் இடத்து அதிபதி புதன் மற்றும் கர்மகாரகன் சனியின் புக்தியில் வேலை அமைந்தது. ஆனால் லக்கின அதிபதி குரு விற்கு ஒண்ணாம் நம்பர் வில்லன் புதன் ஆவார் . மேலும் புதன் எட்டில் மறைந்து ராகு பார்வை பெற்று கேது வுடன் கூட்டணியில் உள்ளதால் மனக்கசப்பை மேலும் வேலை மீது அதிக படுத்தியது.
2 . மேலும் எட்டாம் இடத்தின் அதிபதி மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள் பொதுவாக நல்ல பலன்களை தராது. அது கஷ்டங்களை தான் அதிக படுத்தும். அந்த வேலையை புதன் சரியாக செய்தது. மேலும் அது ஆறாம் இடத்தில் அமர்ந்த சனியின் பார்வையில் உள்ளதால் கஷ்டங்களை அதிக படுத்தியது.
3 . இந்த நிலை பின்னர் 22 வயதில் வந்த கேது தசையிலும் 29 வயதில் வந்த சுக்கிர தசையிலும் தொடர்ந்தது. அது 49 வயதில் வந்த சூரிய தசையிலும் ஓரளவு சரியானது என சொல்லலாம். ஆனால் முழுவதும் சரியாகி இருக்காது. ஏனென்றால் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் கேது பிடியில் எட்டாம் இடத்தில் உள்ளது.
நன்றி
ப சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Saturday, August 10, 2019 6:48:00 PM
-----------------------------------------------
4
Blogger Lokes said...
பிறப்பு 08-08-1972, 16:40, சென்னை.
சனி தசையின் இறுதியில் பிறந்த ஜாதகர்க்கு, தன் 6 வயது முதல் 23 வயது வரை நடந்த 10 க்குரிய சுய சாரத்தில் கேதுவின் பிடியில் அமர்ந்த புதன் தசையில் வேலை அமையவில்லை. தொடர்ந்து வந்த குருவின் சாரம் வாங்கிய கேது தசையின், குரு புத்தியில் வேலை கிடைத்திருக்கும். 10 ஆம் வீட்டு அதிபதி புதன் 8 ஆம் வீட்டில் ஆட்சிபலம் பெற்ற சந்திரனுடன் அமர்ந்து, சனி பார்வையிலிருக்க கிடைத்த வேலை பிடிக்காமல் வெறுப்பு மிஞ்சியது. மேலும் 10 க்குரிய புதனே மாரக-பாதகஸ்தானமான 7 குரியவன் என்பதால் வேலை கொடுத்து அதன் விளைவாக பாதகம் செய்வான். தனுசு லக்கினமாகி, லக்கினாதிபதியும் ஜாதகத்தின் முழுமுதற்சுபருமான குரு 1 ஆம் வீடாகிய முதல் கேந்திரகோணத்தில் அமர்ந்து, 11 குரிய பாதகாதிபதியின் பார்வையில் அமர்ந்ததால், ஜாதகர் தன் நல்ல குணத்தால் எளிதில் பிறரால் ஏமாற்றப்பட்டு பின்பு வருந்துபவராக இருப்பார். மனோகாரகன் சந்திரனுடன் கேது 10 டிக்ரீக்குள் இணைவு. சுக்கிர தசை முதல் சற்று நிம்மதியடைந்திருப்பார்
Sunday, August 11, 2019 1:53:00 AM
--------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன? அது எப்போது சரியாகும்? அல்லது நிவர்த்தியாகும்?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 11-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
====================================================================

8.8.19

எது கெடும் ? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!!


எது கெடும் ? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!!

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) திகட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பம் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

படித்ததில் அசந்தது....☝
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!