Astrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!
அலசல் பாடம் (மேல்நிலைப் பாடம்)
எனது கஷ்டங்கள் எப்போது தீரும்? என்னும் தலைப்பில் முன்பு ஒரு முறை சூரியனை வைத்து அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன்.
இன்று சந்திரனை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!
சந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.
(He is the authority for mind and Mother)
ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.
வலு அல்லது வலிமையாக இருப்பது என்றால் என்ன?
1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை
2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை
3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை
4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.
++++++++++++++++++++++++++++++
அப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?
தேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.
தீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம், போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும்.
வாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.
எதற்கெடுத்தாலும் கவலைப்படத்தோன்றும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூட ஜாதகன் கவலைப் பட்டுக்கொண்டிருப்பான். எதிலும் சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.
உதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம் தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால் மனதில் நிம்மதியாக இருக்காது.
ஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும் வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்
மேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப் பார்ப்போம்!
சந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம்.
நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம் எப்போது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப் பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் அதைக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.
உதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.
உங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத் தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் ராசிக்கு எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.
அது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை அன்று செய்தால் அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day!
அதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.
ஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில் இருந்தால், மனைவியுடன்
அந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும் நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.
உதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை விலக்குவது நல்லது.
1. The transiting Moon in houses from the natal Moon will show the attitude a person has on any given day.
2. It is ideal to have the Moon in a good position from the natal Moon for daily events to run smoothly.
ராசிக்கான நட்சத்திரங்கள்:
மேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)
கடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)
துலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)
விருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை
தனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)
கும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)
மீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி
என்ன பாடம் புரியும் படியாக உள்ளதா?
அன்புடன்
வாத்தியார்
பின் குறிப்பு: இது பெண்களுக்கு மட்டும்: மாதவிடாய் (periods) அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அலசல் பாடம் (மேல்நிலைப் பாடம்)
எனது கஷ்டங்கள் எப்போது தீரும்? என்னும் தலைப்பில் முன்பு ஒரு முறை சூரியனை வைத்து அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன்.
இன்று சந்திரனை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!
சந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.
(He is the authority for mind and Mother)
ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.
வலு அல்லது வலிமையாக இருப்பது என்றால் என்ன?
1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை
2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை
3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை
4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.
++++++++++++++++++++++++++++++
அப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?
தேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.
தீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம், போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும்.
வாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.
எதற்கெடுத்தாலும் கவலைப்படத்தோன்றும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூட ஜாதகன் கவலைப் பட்டுக்கொண்டிருப்பான். எதிலும் சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.
உதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம் தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால் மனதில் நிம்மதியாக இருக்காது.
ஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும் வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்
மேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப் பார்ப்போம்!
சந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம்.
நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம் எப்போது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப் பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் அதைக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.
உதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.
உங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத் தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் ராசிக்கு எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.
அது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை அன்று செய்தால் அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day!
அதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.
ஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில் இருந்தால், மனைவியுடன்
அந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும் நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.
உதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை விலக்குவது நல்லது.
1. The transiting Moon in houses from the natal Moon will show the attitude a person has on any given day.
2. It is ideal to have the Moon in a good position from the natal Moon for daily events to run smoothly.
ராசிக்கான நட்சத்திரங்கள்:
மேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)
கடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)
துலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)
விருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை
தனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)
கும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)
மீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி
என்ன பாடம் புரியும் படியாக உள்ளதா?
அன்புடன்
வாத்தியார்
பின் குறிப்பு: இது பெண்களுக்கு மட்டும்: மாதவிடாய் (periods) அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!