மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 501 - 510. Show all posts
Showing posts with label Lessons 501 - 510. Show all posts

30.1.12

Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?



Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?

Star Temples - Part 8

தேவயானி என்ற பெயரைப் பார்த்தவுடன், கோடம்பாக்கம் நினைப்போடு நீங்கள் உள்ளே நுழைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!

இது வேறு தேவயானி!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் முன்னொரு காலத்தில் நடந்த கடும் யுத்தத்தில், அசுரர்களில் பலர் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் போய்விட்டார்கள்.

அவர்களுக்கு ஏதய்யா மேல் உலகம் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். எல்லோருக்குமே ஒரு மேல் உலகம் உண்டு. ஒபாமாவுக்கும் உண்டு உங்களுக்கும் உண்டு எழுதும் எனக்கும் உண்டு. அதுதான் இறைவன் இருக்குமிடம். சிவலோகம் அல்லது வைகுண்டம் அல்லது சொர்க்கம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரவர் நோக்கப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றிற்குப் போய்விட்டார்கள். அதாவது மரணமடைந்து விட்டார்கள்.

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சக்திவாய்ந்த மருதசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் இறந்துபோன அத்தனை பேர்களையும் மீண்டும் உயிர் பெறச்செய்தார்.

அந்த மந்திரம் தெரிந்தால், தங்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நினைத்த தேவர்கள் ஒரு ஆசாமியைப் பிடித்தார்கள். அவன் பெயர் கசன். குரு பகவானின் மகன். அவனைச் சரிகட்டி அனுப்பிவைத்தார்கள். மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுவருவதற்காக. அவனும், அசுரகுருவிடம் சென்றான்.
அவனுடைய தந்தை குரு பகவானும் அவனை ஆசிர்வதித்து அசுரலோகத்திற்கு அனுப்பிவைத்தார்.

சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி அவனுக்கு உதவி செய்ய, அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். இதைக் கண்ணுற்ற அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்குப் ஆபத்து வந்துவிடும் என நினைத்து, கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில், சாம்பலைக் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார்.

கசனைக் காணாது கலங்கிய தேவயானி, கசனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொல்லும்படி தன் தந்தையிடம் வேண்டினாள்.

அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு, தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான்.

சுக்கிராச்சாரியார், தன் மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று அவனிடம் கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவருடைய மகள் தேவயானி தனக்கு சகோதரி முறை வேண்டும் என்று கூறி, அவரது வேண்டுகோளைக் கடாசி விட்டு, தேவலோகத்திற்குப் புறப்பட்டான்.

கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை சப்தமலைகளாலும் தேவலோகத்திற்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டாள். பையன் அசுரலோகத்தில், தேவயானியின் அரவணைப்பிலேயே தங்கும்படியாகிவிட்டது.

கசனைக் காணாத குருபகவான், தன் மகனை மீட்டுத்தரும்படி பெருமாளை வேண்டி, தவமிருந்தார். பெருமாள், கருணை கொண்ட பெருமாள், சக்கரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு குருபகவானின் வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த தலத்தில் எழுந்தருளினார்.

அந்தத்தலம்தான் இன்று சித்திரரத வல்லபபெருமாள் கோவில் இருக்கும் இடம்.

சித்திரை நட்சத்திர தலம் அது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமியன்று), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் அவர், சித்தி ரரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.

எனவே அத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.

அத்தல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம்.

கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.  குருபார்க்கக் கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலன் அடையலாம். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிராத்தனை செய்து வலம் வந்தால், பலன் கிடைப்பது நிச்சயம்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தைக் கையில் ஏந்தியபடி இந்தப் பெருமாளை சுற்றி வருவது நல்லது. நன்மையளிக்கும்.

கோவில் இருக்கும் இடம்: குருவித்துறை என்னும் சிறு கிராமம். ரியல் எஸ்டேட்காரர்களின் கையில் சிக்கி தனது அடையாளத்தை இழக்காத சிறு கிராமம்.

மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது.

தில்லியில் வாசம் செய்தவாறு அரசியல்வாதிகள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கும் அன்பர் சுப்பிரமணிய சுவாமியின் சொந்த ஊர்தான் இந்த சோழவந்தான்,

அங்கே செல்ல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன. வசதி உள்ளவர்கள் வாடகை ஊர்திகளில் சென்று வரலாம். குலுக்கல் வண்டி - அதான் நம்ம ஆட்டோ ரிக்ஷா வசதியும் உள்ளது.

பவுர்ணமி நாட்களில் அல்லது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் செல்வது உசிதமானது.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30மணி முதல் - மதியம் 12 மணி வரை. பிறகு மாலை 3மணி முதல் - 6 மணி வரை. விழாக்காலங்களில் இந்த நேரம் மாறுபடும்.
-------------------------------------------------------------
‘Star of Prosperity’ என்று புகழப்படும் சித்திரை நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் பற்றிப் பிறகு பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்

புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம். அதுதான் உசிதமானது. நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி எழுதுகிறேன். சுக்கிராச்சாரியாரின் மருதசஞ்சீவினி மந்திரம், கசனைக் கொன்று, எரித்து சாம்பலை டாஸ்மாக் சரக்கில் சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்த செயல்கள் எல்லாம் நடக்குமா?’ என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கான தலம் குறிவித்துறையில் இரூக்கிறது என்ற தகவலை மட்டும்  எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

25.1.12

Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?

Amala Paul from the film Vettai. Thanks to the person who uploaded the image in the net
 கீழே இடைச்சேர்க்கையில் ஐந்து படங்கள் உள்ளன அவற்றையும் பாருங்கள்
-----------------------------------------------------------------
Astrology   ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?

தினமும் தயிர் சாதம் என்றால் எப்படிச் சாப்பிடுவீர்கள்? சைடு டிஷ்சாக எண்ணெய் வாழைக்காய் பொரியல் அல்லது உருளைக்கிழங்கு காரகறி அல்லது மாங்காய் தொக்கு இருந்தால் சாப்பிடலாம். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்றால் சாப்பிடலாம். தினமும் என்றால் எப்படியும் முடியும் சாமி?

தொண்டைக்குப் பிறகு எல்லா உணவும் ஒன்றுதான் என்றாலும், நாக்கு விடாதே ராசா!

நாக்கைக் கட்டுப்படுத்தலாம் என்றால் குரங்கு விடாதே சாமி!

நாக்கோடு சம்பந்தப் பட்ட குரங்கு எது என்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்!

அதனால் எளிய உணவாக இருந்தாலும் விதம் விதமாக இருந்தால்தான் நல்லது.

அதுபோல தினமும் நட்சத்திரக் கோவில்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந் தால், படிக்கும் நீங்கள் கட்டையை எடுத்து என் தலையில் ஒரு போடு போட்டால் என்ன ஆவது?

ஆகவே வாரம் இரண்டு கோவில்கள் அறிமுகமாகும். மற்ற நாட்களில் வேறு தலைப்புக்களில் பாடங்கள். மீண்டும் அடுத்த வாரம் இரண்டு நட்சத்திரக் கோவில்களுக்கான பாடங்கள் வெளியாகும். தங்கள் நட்சத்திரக் கோவிலுக்காகக் காத்திருக்கும் கண்மணிகள் பொறுத்திருக்கவும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?

அஷ்டகவர்க்கப் பாடம் எண்.15

உட்தலைப்பு: Key Points in ashtakavarga

ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன? உங்கள் மொழியில் சொன்னால் up & down periods  என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாகனம் செல்லும் வழியில் - அதுவும் திம்பம் போன்ற வனப்பகுதிகளில் நின்று போய் இடக்கு செய்தால் என்ன செய்ய முடியும்?

இரவு நேரம் கும்மிருட்டு. யானைக்காடு. கடந்து செல்லும் சகவண்டிக்காரன் நிறுத்தாமல் போய்க்கொண்டிருப்பான். விடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.

சிலருக்குப் பார்த்தீர்கள் என்றால், தடம் புரண்ட வண்டியைப்போல வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கும். செல்வச் செழிப்போடு இருந்தவன், பணச்சிக்கலுக்கு ஆளாகியிருப்பான். கடன் தொல்லை வாட்டி எடுக்கும். கஷ்டங்கள் கசக்கிப் பிழியும். ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை உண்டாகிவிடும். இன்னோவா காரில் வலம் வந்தவன், ச்ட்டை கசங்க நகரப் பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருப்பான். ஆட்டோவிற்குக் காசில்லாமல் நடராஜா சர்வீசில் சென்று கொண்டிருப்பான். அடையார் பார்க் கேட் ஹோட்டலின் ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், நடைபாதைக் கடைகளில் சாப்பிடத் துவங்குவான்.

புத்திசாலித்தனமாக நடந்திருந்தால், நிலைமை இப்படி ஆகியிருக்காதா?

என்ன சாலித் தனம் இருந்தாலும் விதிவிடாது. கிரகங்கள் விடாது. எல்லாம் கர்மவினைப் பலன்!

விதியைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அய்யன் வள்ளுவர் எழுதிய குறளின் 38ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள் தெரியவரும். அந்த அதிகாரம்தான் பொருட்பாலின் கடைசி அதிகாரம். விளக்க உரையோடு படியுங்கள். அதன் தலைப்பு ஊழ்வினை (Destiny) அற்புதமான அதிகாரம்.
-------------------------------------------------------------------------
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

சனீஷ்வரன்தான் கர்மகாரகன் (Authority for work) அவனால்தான் உங்களுடைய ஜீவனம் நடந்துகொண்டிருக்கும். பூர்வீகச் சொத்தில் அல்லது மனையாட்டி கொண்டுவந்த செல்வத்தில் ஜீவனம் நடத்திக்கொண்டிருப்பவன் கதை எல்லாம் தனிக்கதை. அவனைப்பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். உழைக்கும் வர்க்கத்தின் கதையை, உணர்வுள்ளவனின் கதையை இன்று பார்ப்போம்

திடீரென்று இறக்கங்கள் உண்டானால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். 30 - 40 வயது உள்ளவன் பார்க்க மாட்டான். மனத் தெம்பு விடாது. 40ஐக் கடந்தவன், கண்டிப்பாக கையில் ஜாதகத்தை எடுத்துவிடுவான். அவர்களுக்காகத்தான் இன்றையப் பதிவு.
---------------------------------------------------------------------------
கஷ்டங்கள் எப்போது உங்களை அணைக்கத்துவங்கும்?

சனி மகாதிசை/புத்திகளில் அல்லது கோள்சாரச் சனியின் காலத்தில் (Changed period of transit Saturn) காலத்தில் சனி நம்மை அணைக்கத்துவங்கும். சனீஷ்வரனின் அணைப்பில் சுமார் 19 ஆண்டுகாலம் நான் இருந்திருக்கிறேன். சுகமான அணைப்பு அல்ல அது. அவஸ்தையான அணைப்பு. தேவதையின் அணைப்பு அல்ல அது. பிசாசின் அணைப்பு அது!

கோசாரச் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாறும். ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்குச் செல்லும். சென்ற 21.12.2011 அன்று கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார் சனீஷ்வரன். கன்னி ராசியில் எத்தனை பரல்கள் என்று பாருங்கள். அதைவிட அவர் செல்லும் துலாம் ராசியில் கூடுதலான பரல்கள் இருந்தால் ஏற்றமான பலன்கள்அடுத்துவரும் இரண்டரை ஆண்டு காலத்திற்கு இருக்கும். இருந்த இடத்தைவிட, செல்லும் இடத்தில் குறைவான பரல்கள் இருந்தால், இறக்கமான காலம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இறக்கம் மூன்று அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தால், அதிகமான இறக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

ஒரு உதாரண ஜாதகத்துடன் இதை விளக்கியுள்ளேன். கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


விருச்சிகராசி ஜாதகம். ஏழரைச் சனி காலம் துவங்கி .நடைபெற்றுக் கொண்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க, அஷ்டகவர்க்கத்தை வைத்து இப்போது பலனைப் பார்ப்போம்.

ஜாதகருக்கு சிம்மத்தில் 37 பரல்கள், கன்னியில் 27 பரல்கள், துலாத்தில் 24 பரல்கள், விருச்சிகத்தில் (ராசியில்)  22 பரல்கள்,

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது சிம்ம ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு சிரமங்கள் உண்டாகத்துவங்கின.

பணப் பற்றாக்குறை. அதைவைத்து சொல்ல முடியாத கஷ்டங்கள். அந்தக் கஷ்டங்கள் ஏழரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். அடுத்தடுத்துப் பரல்கள் குறைந்து கொண்டே போவதைப்  பாருங்கள். சனீஷ்வரன் விருச்சிகத்தைக் கடந்து தனுசு ராசிக்குள் நுழைந்த பிறகுதான் அவருடைய பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு பரல்கள் உயர்வான வரிசையில்  இருப்பதைப் பாருங்கள் 27 மற்றும் 31 என்று உயர்வாக இருப்பதைப் பாருங்கள்.

இரண்டரை வருடங்களாகக் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகரின் சிரமங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்குப் பிறகு நல்ல காலம்.

37 பரல்களில் இருந்து ஏழரை ஆண்டுகளுக்குள் 22 பரல்கள் உள்ள நிலைக்கு வந்ததால், சுமார் 15 பரல்கள் குறைவாகிப் போய்விட்டதால், இன்னோவா கார் பயணம் பேருந்துப்  பயணமாகிவிடும். அதற்குப் பிறகு நிலைமை சீராகி. ஒரு மாருதி ஆல்டோ காராவது வாங்கிப் பயணித்து, ஜாதகர் ஒரு பெருமூச்சு விடுவார். சற்று நிம்மதி கொள்வார்.

அதுவரை நமது விசு அய்யர் அவர்கள் சொல்வதைப் போல ஒரு பாடலைச் சுழல  விட வேண்டியதுதான்

“ எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”

---------------------------------------------------
வாத்தியார், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் அமலாபாலின் படம் எதற்காக?

சென்ற மாணவர்மலர் பதிவின் பின்னூட்டத்தில், தொடர்ந்து மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் இரண்டு மூத்த மாணவர்களுக்காக அந்தப்படம். கொஞ்சம் கூலாகட்டுமே என்றுதான்:-)))
---------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.1.12

Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

 Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 7

மிருகசீரிடம்

சொந்த வீடு என்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள (பொதுவான) கனவு. ஒரு வீடு உள்ளவன்கூட இரண்டாவது வீட்டிற்கு ஆசைப்படுவது இயல்பே!
சென்னையில் சிலருக்கு தி.நகரில் சொந்தவீடு இருக்கும். பழைய மகாபலிபுரம் சாலையில் (அதாங்க ஓ.எம்.ஆர் ரோட்டில்) ஒரு பண்ணை வீடும் இருக்கும்.
அப்படி இருக்கும்போதே ஊட்டி அல்லது கொடைக்கானலில் ஒரு சொந்த வீட்டிற்கு அவன் ஆசைப்படுவான்.

கிரகங்களில் ராகு & கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உள்ளது. அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரு சொந்த வீடுதான். ஆனால் செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளன.

அதுபோல நடசத்திரங்களுக்கு சொந்த ராசியாக ஒவ்வொரு ராசி இருக்கும். சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசிகளைப் பங்கிட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களுக்கு ரிஷப ராசியில் இடம். அடுத்த இரண்டு பாதங்களுக்கு மிதுன ராசியில் இடம். ஆகவே மிருகசீரிடத்தில் பிறந்த ஜாதகனுக்கு அவன் பிறந்த பாதத்தை வைத்து ராசிகள் மாறுபடும்.
----------------------------------------------------------------------------------------------
மிருகசீரிடம்

இது நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இது செவ்வாய் கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நட்சத்திரம்.

மிருகசீரிட நட்சத்திரம் தோற்றத்தில் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். சீர்ஷம் அல்லது சிரசு என்றால் தலை. நட்சத்திரத்தின் தலைப் பகுதி மானின் தலையைப் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும். அதனால்தான் அதற்கு - அந்த நட்சத்திரத்திற்கு மிருகசீரிடம் என்ற பெயரைச் சூட்டினார்கள்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பார்கள். காசு, பணம் (செல்வம்) சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்கள். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறரின் மனதறிந்து நடப்பார்கள்.

They are seekers and are powerful investigators and researchers. Highly intelligent their quest will eventually take them to spiritual dimensions of their soul.
-----------------------------------------------------------------------------------------------
அந்த நட்சத்திரத்திற்கான கோவில்:

ஆதிநாராயண பெருமாள் திருக்கோவில், எண்கண் கிராமம், திருவாரூர் மாவட்டம்.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 50 கி.மீ தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. அங்கிருந்து, ஒரு கி.மீ. தூரத்தில் எண்கண் என்ற சிறுகிராமம் உள்ளது. அங்கேதான் ஆதிநாராயண பெருமாளின் திருக்கோவில் உள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருத்தலம்.
சுவாமியின் பெயர்: ஆதிநாராயணப் பெருமாள்
அம்மன்களின் பெயர்: ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்: வன்னி மரம்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: மாலை 5 மணி முதல் - இரவு 7 மணி வரை.

தல வரலாறு:

முற்காலத்தில் வன்னி மரக்காடு என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில், பிருகு முனிவர், பெருமாளின் அருள் வேண்டித் தவம் இருந்தாராம். அப்போது சோழ மன்னன் ஒருவன் (பெயர் தெரியவில்லை) தன் படைகளுடன் பெரும் சப்தம் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட அங்கே வந்தானாம். (அந்தக் காலத்தில் திருவாரூர் பகுதி பெரிய வனாந்திரமாக இருந்திருக்கிறது. அத்துடன் சிங்கம் போன்ற கொடிய வனவிலங்குகளும் இருந்திருக்கின்றன. Mr.KMRK note this point) அந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்ததாம். கோபம் கொண்ட முனிவர், முனிவர்கள் தவம் செய்யும் அந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தன் தவத்தைக் கலைத்த அரசனுக்கு சாபமிட்டுவிட்டார். என்ன சாபம்? சிங்க முகத்துடன் அவன் அலையக் கடவது என்று சாபமிட்டு விட்டாராம்.

வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாட, மனம் இரங்கிய முனிவர், விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினாராம். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தானாம். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தர, பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததாம். அதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப் படுகிறது.

தான் உறைகின்ற கோவில்களில் பெருமாள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி அருள்பாலிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இதுபோன்ற அமைப்பைக் காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையைத் தினமும் இங்கு தரிசிக்கலாம்.

மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. நம்பிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது!

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பதும் இங்கே நிலவுகின்ற நம்பிக்கை.

உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல்நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பெற்றவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் ஆகியோர் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்!

ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று வாருங்கள். வந்த பிறகு ஏற்படும் பலன்களைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------
வாழ்க வளமுடன்!

23.1.12

Astrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்!


Astrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்!

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 6
திருவோணம்

27 நட்சத்திரங்களில், திரு என்னும் அடைச் சொல்லுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம்

திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம். ஆருத்திரனுக்கு (Arudra) உகந்த நட்சத்திரம். ருத்திரன் என்னும் சொல் ஆருத்திரன் ஆகியுள்ளது.
ருத்திரன் என்றால் தீய சக்திகளை அழிப்பவன் என்று பொருள்படும்.  
Rudra means the destroyer of evil forces

திரு என்றால் இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை. a prefix added to holy or auspicious objects etc உதாரணம்: திருக்கோவில், திருவடி, திருமாங்கல்யம். இன்னொன்றும் உண்டு: மதிப்புத் தரும் விதமாக ஒருவரின் பெயருக்கு முன் இடப்படும் அடை. ருத்திர தரிசனத்தைத்தான் நாம் ஆருத்ரா தரிசனம் என்று கொண்டாடுகிறோம்.

அதுபோல திருவோணம் எம்பெருமான் ஸ்ரீஹரியின் (விஷ்ணுவின்) நட்சத்திரம். பகவான் தன் வாமன அவதாரத்தை திருவோண நட்சத்திரத்தன்று காட்டி  மக்களுக்கு அருள் பாலித்தார். பகவான் ஸ்ரீனிவாச பெருமாள் தன் தேவியை நாடி ஏழுமலையில் தன் திருவடியை வைத்ததும் ஒரு திருவோண நந்நாளில்தான் திருமலையில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோத்சவ விழா திருவோண நாளில்தான் நிறைவு செய்யப்ப்டுகிறது.
----------------------------------------------------------------------
இதைக் கேட்டவுடன் திருவோண நட்சத்திரக்காரகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்.

எல்லா நட்சத்திரங்களும் சமமானவைதான். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், உங்களுடைய கர்ம வினைப்படி, ஜாதகப்படிதான் வாழ்க்கை

அமையும். நல்ல நட்சத்திரம் என்பதற்காகக் கிரகங்கள் விட்டு வைக்காது. உரிய பலன்களைக் கொடுத்தே தீரும். நல்லதும் கிடைக்கும். தீமைகளும் உண்டாகும்.
நன்மை தீமைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இரவு பகலைப் போல!

நான் திருவோண நட்சத்திரக்காரன்தான். அதற்காக சனி விட்டு வைக்க வில்லை. தன்னுடைய மகா திசையில் புரட்டி எடுத்துவிட்டுப் போனான். அதற்கு அடுத்து  வந்த புதன் மகா திசையில்தான் நிமிர்ந்து உட்கார முடிந்தது. அதை எல்லாம் பின்னொரு நாள் விவரிக்கிறேன்
---------------------------------------------------------------------
திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பார்கள். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். மற்றவர்களைப்  புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பார்கள். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பார்கள் (இது மட்டும் ஜாதகத்தை  வைத்து மாறுபடும்)

இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலைகளில் தேற்ச்சியுற்றவர்களாக இருப்பார்கள் அல்லது ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். உண்மை யானவர்களாக  இருப்பார்கள். ஸ்திரமான மனதுடையவர்களாக இருப்பார்கள். அதிக நண்பர்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிரிகளைப் பந்தாடிவிடுவார்கள். அறிவு  ஜீவிகளாக இருப்பார்கள். பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

தங்கள் உறவுகளால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே பேச்சுத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.

They will be financially successful and lead a materially comfortable life. Their organizational and leadership skills are well developed, and they may do  well in business. They will make a good manager or project leader. They also like to spend a lot of time working for charitable organizations. They need  to be careful with their finances or they may bankrupt themselves. Careers that will suits them: Engineering, management related jobs, charitable and  social institutions etc. They will be happiest if they could work for charitable or social work organizations.
---------------------------------------------------------------------
திருவோண நட்சத்திரத்திற்கான கோவில்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் கிராமம், காவேரிப்பாக்கம் வட்டம்

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்னும்
கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் குடிகொண்டுள்ளார்.

வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 4 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் எனக் கேட்டுச் செல்வது நல்லது!

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை, மாலை 4.30மணி முதல் - இரவு 7.30 மணி வரை

ஸ்தல வரலாறு:

ஒருமுறை புண்டரீக மகரிஷி, பெருமாள் கோவில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் ஸ்தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர்  வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை  மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு  கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து, ரிஷியே ! ”உங்களால் திருப்பாற்கடல்  சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும்  இங்கு காண்பித்த தால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்”, என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால்  (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். அவருடன், அலர்மேலுமங்கை தாயார் அருள் அங்கே அருள் பாலிக்கின்றார்.

சிறப்பம்சம்:

சந்திரபகவான், சாபமொன்றினால், இருளடைந்து இருந்தார். அதனால், அவரது மனைவியரில் ஒருத்தியான, திருவோண நட்சத்திரதேவி மிகவும் வருத்தமுற்றாள். இத்தலத்தின் பெருமையை அறிந்த அவள், இங்குள்ள பெருமாளை வேண்டித் தவமிருந்தாள். அவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவரது தோஷத்தைப் போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர ஸ்தலமானது.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அல்லது மூன்றாம் பிறைநாளிலோ இத்தலப் பெருமாளுக்கு அபிஷேக
ஆராதனை செய்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். வேண்டியது கிடைக்கும். வேண்டியது கிடைத்தால் தொல்லைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வி அறிவு
வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், அந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது நன்மை பயக்கும்!

ஒருமுறை சென்று வாருங்கள். உரிய பலனைப் பெற்று வாருங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------




வாழ்க வளமுடன்!

19.1.12

Astrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சும்மாவா?

விக்டோரியா மகாராணி
Astrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சும்மாவா?
அதனால் அவரை மேதகு விக்டோரியா மகாராணி என்று அழைத்ததில் தவறில்லை!


பயிற்சிப் பாடம் 27
Practical Lesson No.27
----------------------------
மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.

யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த பெண்மணியை மேதகு என்று சொல்வதில் தவறில்லை!

ஜாதகப்படி அவருடைய மேன்மைக்கு என்ன காரணம்?

அதை இன்று அலசுவோம்!

அவரைப் பற்றித் தெரியாதவர்கள், இந்தத் தளத்திற்குச் சென்று அவரைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

http://en.wikipedia.org/wiki/Queen_Victoria
++++++++++++++++++++++++++++++++++++++

விக்டோரியா மகாராணியின் ஜாதகம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயர்: Alexandrina Victoria
வாழ்ந்த காலம்:  24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
பதவிக்கு வந்த காலம்: 28.06.1838 (தனது 20வது வயதில்)

பிறப்பு விவரம்:
23/24.5.1819
அதிகாலை 4:40 மணி
L attitude: 51.30 North
Longitude: 0.5 West
Birth Star: Rohini
ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறப்புக்கள்:
1. லக்கினம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரு ராசியில் அமையப்பெற்றுள்ளது. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் அமர்ந்தது. மிகவும் சிறப்பு.

2. சந்திரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் சந்திரன் உள்ளது.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனி, அத்துடன்  ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியுமான சனி 11ஆம் வீட்டில் அமர்ந்தது சிறப்பு

4. முக்கிய ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார்

5. குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, உயர்ந்த பரிவர்த்தனை யோகத்தைக் கொடுத்துள்ளார்கள்.

6. புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை. அவர்கள் முறையே பூர்வ புண்ணிய அதிபதியும் லக்கினாதிபதியும் ஆவார்கள்.

7. குருவின் விஷேச பார்வை (5ஆம் பார்வை) லக்கினத்தின்மேல்.

8. நவாம்சத்தில் சூரியன் உச்சம். புதன் உச்சம்.

9. ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திரன் உச்சம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு!
.................................................................................
பலன்கள்:

1. ரிஷப லக்கினக்கிரக்காரகள் நடைமுறைக்கு ஒத்துப்போகும் லக்கினக்காரர்கள். உறுதியான மனதைக்கொண்டவர்கள். ஜாதகத்தில் அதன் அதிபதி 12ல் மறைந்திருந்தாலும், அந்த அடிப்படைக் குணங்கள் இருக்கும்.

2. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும் சந்திரனும், ஒன்றாக இருந்து குருபகவானின் பார்வையைப் பெற்றதால். ஜாதகிக்கு நல்ல ஆளுமை கிடைத்தது. ஜாதகிக்கு அவர் பிறந்த நோக்கத்தைச் செயல் படுத்தும் தன்மையை, சூழ்நிலைகளைக் கொடுத்தது.

அம்மையாருடைய காலத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியம் (British Empire) பரந்து விரிவடைந்தது.

3. 5ஆம் வீடு,  ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது. குடும்ப அதிபதி புதன் தன்னுடைய வீட்டில் இருந்து லாபஸ்தானத்தில் உள்ளார். இந்த அமைப்புக்களால் மகராணிக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்தது. நிறையக் குழந்தைகளும் பிறந்தன.(மொத்தம் 9 குழந்தைகள்)

யோகங்கள்:
1. அரச கிரகமான சந்திரன் உச்சமடைந்ததுடன், வர்கோத்தமமும் பெற்றுள்லது. அத்துடன் லக்கினத்திலும் அமர்ந்து பலத்த யோகத்தைக் கொடுத்தது.

2. செவ்வாயும், ராகுவும் 11ஆம் வீட்டில் அமர்ந்ததுடன், வர்கோத்தமும் பெற்றுள்ளன.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகன் சனி, 11ல் அமர்ந்தது மட்டுமின்றி பரிவர்த்தனை பலத்துடன் இருக்கிறார்.

4. குரு நீசமடைந்தாலும் பரிவர்த்தனையால் மிகவும் பலமாக இருக்கிறார். அத்துடன் அது பாக்கியஸ்தானம். ஜாதகிக்கு அரசாளும் யோகத்தைக் கொடுத்தார்.

5. தனது 18 வது வயதில் அவர் அரியனையில் அமர்ந்தார். அப்போது அவர்க்கு ராகுதிசை, குரு புத்தி. வர்கோத்தம ராகுவும், பரிவர்த்தனை மற்றும் திரிகோண பலத்துடன் இருக்கும் குருவும் அதைச் செய்தார்கள்.

6. சனி 9 & 10ஆம் இடங்களுக்கு உரிய தர்மகர்மா அதிபதி. அவர் பரிவர்த்தனை யோகத்துடன் 11ல் அமர்ந்ததால் அவருடைய தசை முழுவதும் ராணிக்கு பலத்த யோகங்களைக் கொடுத்தான். அந்த காலகட்டத்தில்தான்  (Between 1867 to 1886) சாம்ராஜ்யம் விரிவடைந்தது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கபெற்றது. ராணி இந்தியாவிற்கும் ராணியானார்.

ஏழு கிரகங்கள் 100 பாகைக்குள் அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!

ஏழாம் அதிபதி செவ்வாயும், தர்மகர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்து மகாராணிக்கு, கணவர், பிள்ளைகள், குடும்பம், அரசாட்சி, நாட்டு மக்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்ததுடன், செல்வாக்கையும் கொடுத்தார்கள்.
-------------------------------------------------------------------------
பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க வேண்டுமே!
ராணியார் 1903ஆம் ஆண்டு இறந்தார்.
புதன் திசை, சனியின் புக்தி!
புதன் மாரகன் (2nd Lord), சனி ஆயுள்காரகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18.1.12

Astrology சந்திப்போமா இன்று சந்திப்போமா?



Astrology சந்திப்போமா இன்று சந்திப்போமா?

அலசல் பாடம்

   “சந்திப்போமா இன்று சந்திப்போமா
        தனிமையில் நம்மைப்பற்றி சிந்திப்போமா?”

என்ற பாடல் வரிகள் சித்தி  திரைப்படத்தின் பல்லவியாக வரும். காதலி, தன் காதலனிடம் வேண்டுகோள் வைப்பாள். மகிழ்ச்சியாக இருக்கும். காதல் என்றாலே மகிழ்ச்சிதானே!

ஆனால் நான் சொல்லப்போகும் சந்திப்பு வேறு. அது துன்பத்தைக் கொடுக்கக்கூடியது.

சந்திப்பில் துன்பம்கூட இருக்குமா? என்று கேள்வி கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா சந்திப்பிற்கு வேறுவிதமாக விளக்கம் சொல்கிறது. சந்திப்பு அல்லது கூட்டம் என்பது இரண்டு அல்லது அதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்னேற்பாட்டின் படி ஒரு நோக்குக்காக கூடிவது என்றும், நேரடியாக, அல்லது தொலைபேசி அல்லது இணையம் மூலமாக அந்த சந்திப்பு நிகழலாம் என்றும் சொல்கிறது.

சந்திப்புக்களை வகைப்படுத்தியும் அது கொடுக்கின்றது. திட்டமிடல்/ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், முடிவு செய்தல், சிக்கல் தீர்வு, அணி உருவாக்கம், வெற்றிகளைக் கொண்டாடுதல், ஆதரவு திரட்டல் போன்ற வற்றை சந்திப்பில் நடைபெறும் நிகழ்வுகளாக அது சித்தரிக்கின்றது.

நான் சொல்லவிருக்கும் சந்திப்பு முற்றிலும் மாறானது.

கிரகங்கள் (ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள்) ராசி சந்திப்பில் இருக்கும் நிலையில் பிறந்த ஜாதகனைப் பற்றியது அது.

ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் 12 ராசிகளுக்கும் சேர்த்து மொத்தம் 360 பாகைகள். ஒரு வட்டத்திற்கு 360 பாகைகள்தானே. கிரகங்கள் வட்ட வடிவில்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. நாம் நம் வசதிக்காக சதுரங்களைப் போட்டு ஜாதகங்களை எழுதுகிறோம். ஆனாலும் பாகைகள் மாறாது. ஒவ்வொரு கட்டத்திற்கும் 30 பாகைகள்தான்.

மேஷத்திற்கும் முப்பது பாகைகள்தான் மேஷம் முடிந்து அடுத்து உள்ள ரிஷபத்திற்கும் முப்பது பாகைகள் தான். அதைத் தொடந்து வரும் அத்தனை ராசிகளின் பாகை அளவும் அதுதான்.
----------------------------------------------
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ராசி சந்திப்பில் ஒரு கிரகம் இருந்தால் என்ன ஆகும்?

நெடுஞ்சாலைகளில், சாலையின் மத்தியப் பகுதியில் மஞ்சள் கோடு ஒன்றைப் பட்டையாகத் தெரியும்படி போட்டு இருப்பார்கள். அந்தக்கோடு சாலையை இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கும்.ஒன்று இடது பக்கம் செல்லும் வாகனங்களுக்கு. அடுத்து உள்ளது வலது பக்கப் பாதை. எதிரில் வரும் வாகனங்களுக்கு. keep Left

லேன் மாறி அதாவது பாதை மாறி ஓட்டினால், அல்லது நடுவில் உள்ள மஞ்சள் கோட்டின் மீதே ஓட்டினால் என்ன ஆகும்? நேரம் நன்றாக இல்லை என்றால் அடிபட நேரிடலாம். வீட்டிற்கு திரும்ப முடியாமல் போகலாம்.

ராசி சந்திப்புக்களில் கிரகங்கள் இருந்தாலும் அதே நிலைதான்.

என்ன நிலை? கிரகங்களையும், அதன் காரகத்துவத்தையும் (working nature) வைத்து அந்த நிலைப்பாடுகள் மாறுபடும். துன்பத்தின் அளவு மாறுபடும். கூடலாம் அல்லது குறைவாக இருக்கலாம்.

ராசி சந்திப்பில் இருக்கும் கிரகம், அதாவது ஒரு ராசியின் கடைசி பாகைகளில் இருக்கும் கிரகம் பிரச்சிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

ஒரு உதாரண ஜாதகத்துடன் அதை விளக்கியுள்ளேன். படித்துப் பாருங்கள்.



லக்கினாதிபதி செவ்வாய் உச்சம். ஜாதகன் யோகத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை!

ஏன்?

செவ்வாய் திசையில் ஜாதகனுக்குப் பல பிரச்சினைகள் உண்டாகின. மேலோட்டமாகப் பார்த்துப் பலன் சொல்பவன் லக்கினாதிபதியின் திசை, அவன் உச்சம் பெற்று இருப்பதால், அற்புதமான பலன்கள் உண்டாகும் என்று தவறாகச் சொல்லியிருப்பான்.

மாறாக அந்த திசையில் ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகள். அடிக்கடி வயிற்றுக் கோளாறு. வியாபாரத்தில் கூட்டாளி செய்த மோசடியால் பணப் பிரச்சினை. பண விரையம். வருமானம் சுருங்கிப்போனது. வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலைமையில் ஜாதகன் அல்லாடினான்.

ஏன்?

தசாநாதன் உச்சமாக இருந்தாலும், அவன் அமர்ந்திருக்கும் 10ஆம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனி, மறுபக்கம், சூரியனும் ராகுவும். மூன்றுமே தீய கிரகங்கள். உச்சமான செவ்வாயை ஒழுங்காகச் செயல்பட விடவில்லை. அவர் 10ல் ஸ்திரமாக அமர்ந்திருந்தாலும், தொழிலில் பல பிரச்சினைகள்.. செவ்வாய் திசையில் அத்தனை கோளாறுகளும் ஏற்பட்டன.

செவ்வாய் ராசி சந்திப்பில். அத்துடன் வணிகத்திற்கு உரிய கிரகமான புதனும் ராசி சந்திப்பில். இருவரும் சொதப்பல் ஆட்டம் ஆடி ஜாதகனை‘ரன்’ அவுட்டாக்கிவிட்டார்கள்.

இருவரின் நிலைப்பாட்டைப் பாருங்கள் செவ்வாய்க்குப் பன்னிரெண்டில் புதன். புதனுக்கு அடுத்து செவ்வாய். 12/1 நிலைப்பாடு

கேட்கவும் வேண்டுமா?

ஜாதகங்களை இப்படித்தான் சர்ஃப் எக்செல் போட்டு அலச வேண்டும்!
----------------------------------------------
ராசி சந்திப்பின் வகைகள் என்ன? ராசி சந்திப்பிறகான பாகை அளவுகோள்கள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் விரிவாக நாளை அலசலாம். இங்கேயல்ல!
மேல் நிலை வகுப்பில். இங்கே அலசினால் துவைத்துக் காயப்போட்ட துணிகள் எல்லாம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு. ஆகவே மேல்நிலை வகுப்பில் அலசுவோம். வாத்தியாரின் தனி இணைய தளத்தில் அலசுவோம். அதில் உறுப்பினராக இல்லாதவர்கள் எல்லாம், புத்தக வடிவில் மேல் நிலைப் பாடங்கள் வரும்போது படித்துகொள்ளலாம். படித்துத் தெரிந்து கொள்ளலாம்.. அதுவரை பொறுத்திருங்கள்.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

12.1.12

Astrology பாளையங்கோட்டையும் திகாரும்!

 Astrology பாளையங்கோட்டையும் திகாரும்!

அலசல் பாடம்
-----------------------

   “டேய், மாப்பிள்ளை எங்கேடா இருக்காரு?

   “பாளையங்கோட்டையில”

   “அவரோட மாமனாரு?

   “அவரு, அவரோட தகுதிக்குத் தகுந்தாற்போல திகாரில இருக்காரு!”

   “ஆகா, கேட்கவே புல்லரிக்குதேடா!”

இதுபோல இருவருடைய உரையாடலை நீங்கள் கேட்டால் என்ன நினைப்பீர்கள்?

அதுபோன்ற நிலைமை எந்தக் குடும்பத்துக்கும் வரக்கூடாது. இரண்டு பேர்கள் சிறையில் இருந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலைமை என்ன ஆகும்?

சரி, வேறு ஒரு உரையாடலைத் தருகிறேன்.

    “டேய் உங்க மாமா மந்திரியாக இருக்காரேடா, கொடுத்துவைத்த மகராசன்டா நீ”

    “என்னவிட அவருடைய மாப்பிள்ளைதான்டா கொடுத்துவைத்தவர்!”

    “எப்படிச் சொல்றே?”

    “மாப்பிள்ளை மத்திய அமைச்சரா இருக்கார்டா, மாமனார் தன்னோட செல்வாக்கில வாங்கிக்கொடுத்தாராக்கும். அதுவும் கேபினெட் மினிஸ்டர்னா பார்த்துக்கயேன்!”

இதுபோன்ற நிலைமையில் ஒரு குடும்பம் இருந்தால் அங்கே எப்படி மகிழ்ச்சி தாண்டவமாடும்?

இதை ஒரு உதாரண உரையாடலாகத்தான் சொல்லியிருக்கிறேன். யாரும் விவகாரமாக்கவேண்டாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள உரையாடல்கள் இரண்டையும் நினைவில் வைத்துக்கொண்டு இன்றையப் பாடங்களைப் படியுங்கள்

யோகங்களில் முதன்மையான யோகம். பரிவர்த்தனை யோகம் ஆகும்.

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்வது பரிவர்த்தனை யோகம் ஆகும்
----------------------------------------------------------------
பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாக அனைவரும் கையில் எடுக்கும் ஜாதகம் மறைந்த நம் முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் ஜாதகம் ஆகும். அதைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்

Horoscope of Indira Gandhi
முதல் பரிவர்த்தனை 1/7 ஆம்  நிலையில் பரிவர்த்தனை
சந்திரனின் (கடக வீட்டில்) சனி
சனியின் (மகர வீட்டில்) சந்திரன்

இரண்டாவது பரிவர்த்தனை 4/10 ஆம் நிலையில் பரிவர்த்தனை
சூரியனின் (சிம்ம வீட்டில்) செவ்வாய்
செவ்வாயின் (விருச்சிக வீட்டில்) சூரியன்
செவ்வாய்க்கு நான்காம் இடத்தில் சூரியன்.சூரியனுக்குப் பத்தாம் இடத்தில் செவ்வாய்

மூன்றாவது (பரிவர்த்தனை) 6/8 ஆம் நிலையில் பரிவர்த்தனை
குருவின் தனுசு வீட்டில் சுக்கிரன்
சுக்கிரனின் (ரிஷப வீட்டில்) குரு
சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து குரு ஆறாம் இடத்தில். குரு இருக்கும் இடத்தில் இருந்து சுக்கிரன் எட்டாம் இடத்தில்

மொத்தம் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
அது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றதற்குச் சமம்.
அவரைப் பற்றி புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை

நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக என்று பலரும் விரும்பிய வண்ணம் அவர் ஆட்சியில் அமர்ந்து, உலக அளவில் பெரும் புகழைப்பெற்றார்.

அந்த மூன்று நிலைப் பரிவர்த்தனைகளில், அந்த மூன்றாம் நிலைப்பாடுதான் கொஞ்சம் சுமாரானது. 6/8 ஆம் நிலைப் பரிவர்த்தனை சிலாக்கியமானதல்ல.

ஆனாலும் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களுமே சுபக்கிரகங்கள் ஆகும். அதிலும் குருபகவான் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டிற்கும் உரியவர் (அதாவது பாக்கியாதிபதி. Lord for gains) அவர் லக்கினத்தில் இருந்து பதினொன்றில் அமர்ந்ததால் ஜாதகியைக் காப்பாற்றியது.

6/8 நிலையைப் போலவே 1/12 நிலைப்பாட்டில் பரிவர்த்தனையும் மோசமானது. ஜாதகத்தில் அந்த மோசமான நிலைப்பாட்டிற்கு வேறு சுபக்கிரகங்களின் பார்வை இல்லை என்றால் ஜாதகனை அல்லது ஜாதகியை அது படுத்தி எடுத்துவிடும்.

அதை உங்களுக்கு விளக்குவதற்காக கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
------------------------------------------------------------------------------------


ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

மருத்துவ சோதனைகள் ஜாதகிக்கு எந்தவித உடற்குறைபாடுகளும் இல்லை என்று சொல்லிவிட்டன.

ஆனாலும் குழந்தை இல்லை.

ஏன் குழந்தை இல்லை?

என்ன கிரகக் கொளாறு?

லக்கினாதிபதி குருவும், ஐந்தாம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். ஆகா, அப்படியென்றால் ஜாதகிக்கு உடனே குழந்தை பிறந்திருக்க வேண்டுமே?

அதுதான் இல்லை. என்ன நிலையில் பரிவர்த்தனையாகி உள்ளார்கள் என்று பாருங்கள்.

லக்கினாதிபதி குரு 12ஆம் வீட்டில். செவ்வாயின் வீட்டில். விருச்சிகத்தில்.
செவ்வாய் லக்கினாதிபதி குருவின் வீட்டில் தனுசுவில்

இருவரும் 1/12 நிலைப்பாட்டில் பரிவர்த்தனை.

லக்கினாதிபதி 12ல் இருந்தாலே ஜாதகன் அல்லது ஜாதகி ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படப் பிறந்தவர்கள் ஆவார்கள். அத்துடன் லக்கினாதிபதிக்கு வேறு எந்த சுபப்பார்வையும் இல்லை.

அத்துடன் ஐந்தாம் வீட்டில் (குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில்) சனீஷ்வரன்!


கேட்கவும் வேண்டுமா?

உடையவர்கள் ஒழுங்காக இல்லாததால் ஐந்தில் நுழைந்த சனி ஜாதகியைப் போட்டுத்தள்ளிவிட்டான்.

ஜாதகிக்குக் கடைசிவரை குழந்தையே இல்லாமல் போவிட்டது.

இங்கே உள்ள சனி  நீச சனி. நீசமடைந்திருந்தாலும் சனி சனிதான். நீசம் பெற்றிருந்தாலும் குரு குருதான் என்பதைப்போல - கெட்டாலும் மேன்மக்கள் மக்களே. என்பதைப்போல, கெட்டாலும் தீயவர்கள் தீயவர்களே. அதை மனதில் வையுங்கள்.
----------------------------------------------------
மோசமான பரிவர்த்தனைக்கு மேலே துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாளையங்கோட்டை திகார் உதாரணத்தையும், நல்ல பரிவர்த்தனைக்கு அதற்கு அடுத்துக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்கள் திகார் உதாரணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்

பரிவர்த்தனையாகியும் கிரகங்கள் 6, 8 அல்லது 12ல் அமர்ந்தால், அது சிறப்பானதல்ல!

ஜாதகத்தை ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு  - அதாவது குழந்தை இல்லையே என்பது போன்ற அல்லது திருமணம் நடைபெற வில்லையே அல்லது  நல்ல வேலை கிடைக்கவில்லையே என்பது போன்ற கேள்விகளுக்கு  இப்படித்தான் அதாவது இந்தக் கோணத்திலும் அலச வேண்டும். அர்த்தம் ஆனதா?

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை

தன்னிலை விளக்கம்:

10.1.2012ல் எழுதிய “இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள்?” என்ற தொடர் பதிவைத் தொடராமல் நிறுத்தியதில் சிலருக்கு மகிழ்ச்சி.

சிலருக்கு வருத்தம். சிலர் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் வெளிப்படுத்தவில்லை.

உங்களுக்காக அவற்றை - அதாவது வந்த பின்னூட்டங்களைத் தொகுத்துக் கொடுத்து, என்னுடைய பதிலையும் அடிக்குறிப்பாக எழுதியுள்ளேன். படித்துப்
பாருங்கள்

1. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னூட்டம்

Blogger csekar2930 said...
    ஆசிரியர்க்கு வணக்கம். இறைவன் கருணை மிக்கவன். அதனால் தான் ஆசிரியரை இறைவன் என்கிறோம். வேண்டுதல் வேண்டாமை இறைவனுக்கு

கிடையாது. ஆசிரியரும் அதை கடை பிடித்து, மாணவனின் உள்ளத்தில் என்றும் குடி கொண்டுள்ளார். இது தான் கல்வியின் சிறந்த தன்மை என்பது.
மிக்க மகிழ்ச்சி. நன்றி
----------------------------------
2. வருத்தத்தை வெளிப்படுத்திய நான்கு பின்னூட்டங்கள்

Blogger redfort said...
    ஐயா வணக்கம், நீங்கள் இந்தியாவின் ஜாதக அலசலை தொடராததில் மிகவும் வருத்தமே.மேலும் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையானதே.
அப்படியிருக்க திரு அய்யர் அவர்கள் வேண்டாம் என்பதற்கான காரணத்தை கூற வேண்டுகிறேன். பெரும்பான்மையோரின் விருப்பம் இதுவாயிருக்க நீங்கள்  திரு அய்யர் அவர்கள் ஒருவரின் கருத்திற்க்காக மட்டும் இந்தியாவின் ஜோதிட அலசலை நிறுத்தியிருப்பது சரியா ஐயா?

Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    காய்ச்சலால் சரியாக வகுப்பறைக்கு வர இயலவில்லை...மாணவர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் ஜாதகத்தை பற்றிய அலசலை படிப்பதற்காகவே அம்மாவிடம் கெஞ்சி கேட்டு கொண்டு வகுப்பறைக்கு வந்தால்...ஏமாற்றமாக இருந்தது(அம்மாவுக்கும் தான்!)...
அய்யர் அவர்களின் கருத்து சரியாகத் தோன்றினாலும்,அவதார மூர்த்திகளான இராம பிரான்,கிருஷ்ணர்,அனுமந்தர் போன்ற தெய்வங்களுக்கும் ஜாதகங்கள் எழுதப்பட்டு,கணிப்புகளும் மிக சரியாகவும் இருக்கின்றனவே!!!

Blogger Ramanathan said...
Was eagerly expecting India's Prospects in Astrology. If Iyer is not interested that is fine. But for other's sake, pls publish.

Blogger Rajaram said...
ஐயா வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் இருக்கும் போது ஒரு மாணவருக்காக மட்டும் இந்தியாவின் ஜாதகத்தை அலசாமல் விட்டது கொஞ்சம் வருத்தம்.அலசியிருந்தால் முண்டேன் ஜோதிடம் பற்றியும் அலசித் துவைத்துக் காண்பித்திருப்பீர்கள்.கற்றுக்கொண்ட மாதிரியும் இருந்திருக்கும்.பழனியாண்டி பேரைச் சொன்னவுடனே சும்மா அதிருதுல்ல.
+++++++++++++++++++++++++
அடியவனுடைய பதில்.

1. வாத்தியார் ஒன்றைச் செய்தால், அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் உங்களுக்கு. ஆகவே நம்பிக்கை வையுங்கள். நேரம் கனியட்டும்
அப்போது நிச்சயம் அலசுவோம்.

2. ஆர்வமாக இருந்தவர்கள் வருந்த வேண்டாம். வாத்தியார் அலசாவிட்டால் என்ன? வேறு பெரியவர்கள், அதாவது மகான்கள், பெரிய ஜோதிடர்கள்
இந்தியாவின் மேன்மையைப் பற்றி சொல்லிவைத்த செய்திகள் வாத்தியாரின் சேகரிப்பில், News Paper Cuttings வடிவில் உள்ளன. வாத்தியாரின் முப்பது
ஆண்டுகால சேமிப்புக்கள் அவை. அவற்றில், இரண்டு அல்லது மூன்றை ஸ்கேன் செய்து உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பத் தயாராக உள்ளேன்.
பார்த்து மகிழ விருப்பம் உள்ளவர்கள் வாத்தியாருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

classroom2007@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்
சப்ஜெக்ட் பாக்சில் Subject: Paper cutting என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

10.1.12

Astrology இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?


Astrology இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

முண்டேன் என்றால் என்னவென்று தெரியுமா?

முண்டேன் என்ற சொல் ஏதோ வட இந்தியக் கிராமத்தில் இருக்கும் தேவதையின் பெயர் என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

முண்டேன் என்ற சொல் நம்ம கிராமத்துத் தேவதையான முண்டக்கன்னி அம்மன் போன்று தெய்வத்தின் பெயர் அல்ல! அதைவிட மேலானது என்று சொல்ல முடியாது. அப்புறம் தெய்வக்குத்தம் வந்துவிடும். ஆனால் அதைவிட முக்கியமானது என்று சொல்லலாம்.

நமது செம்மழித் தமிழைப்போன்ற இன்னொரு செம்மொழியான லத்தீன் மொழியில் இருந்து வந்த சொல். முண்டூஸ் என்றால் உலகம் என்று பொருள்படும்

முண்டேனின் வேர்ச்சொல் மண்ட் என்ற சொல்லாகும். clean area or area in order which is an area enlightened by the Sun and visible to human eyes. என்ற அர்த்தத்தையும் கொடுக்கும் சொல்லாகும். உலகம் என்பது அழகானது. அரிய ஆபரணம் போன்றது அது சூரிய ஒளியால் தகதகக்கிறது. பலரையும் மகிழச் செய்கிறது என்று நம்பினார்கள் ஆதி மக்கள். அதனால்தான் உலகத்தைப் பற்றிய ஜோதிடத்திற்கு முண்டேன் ஜோதிடம் என்ற பெயர் வைத்தார்கள்.

முண்டேன் ஜோதிடம் என்பது உலக நிகழ்வுகளையும், உலக நடப்புக்களையும், இயக்கங்களையும் அறிந்து கொள்ள உதவும் ஜோதிடமாகும். Mundane astrology is the application of astrology to world affairs and world events அதைப்பற்றித் தொடர் பாடம் நடத்தலாம் என்று உள்ளேன். இப்போது அல்ல. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து - அதுவும் நீங்கள் விருப்பட்டால்! அதற்கு நடுவில் (இடையில்) இந்திய ஜோதிடத்தின் முக்கியமான பகுதிகள், பிரிவுகள் எல்லாம் பாடங்களாக நடத்தப்படவுள்ளன.

பிரம்மாண்டமான ஜோதிடத்தின் ஒரு பிரிவுதான் இந்த முண்டேன் ஜோதிடம். ஜோதிடத்தில் இன்னும் பல பிரிவுகள் உள்ளன. அதையெல்லாம் இப்போதே விவரித்து உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. பின்னால் பார்த்துக்கொள்வோம். பொறுமையாக இருங்கள்.

நம் வகுப்பறைக்கு வரும் நியூஜெர்சி நிம்மி முதல் உள்நாட்டில் காரியாபட்டி கண்ணுச்சாமி வரை இந்திய ஜோதிடத்தின் அடிப்படைப் பாடங்களைப் புரிந்து கொண்டு தேரிய பின்பு, அதையெல்லாம் கையில் எடுப்போம்.

உலகத்தில், குறிப்பாக ஒரு நாட்டில் ஏற்படும் அதிரடி மாற்றங்களைத் தெரிந்து கொள்ள அந்த ஜோதிடம் உதவும். நாட்டில் மாற்றங்கள் இரண்டு விதமாக ஏற்படும். அரசியலால், அரசியல்வாதிகளால் ஆட்சியாளர்களால் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரை. பூகம்பம், சுனாமி, கடும் புயல்கள் போன்ற இயற்கைச் சீரழிவுகளால் ஏற்படும் மாற்றங்கள் இரண்டாவது வகை! அவைகளைத் தெரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த முண்டக்கன்னி ஜோதிடம்... மன்னிக்கவும் இந்த முண்டேன் ஜோதிடம்.

அரசியல் ஜோதிடம் இந்த முண்டேன் ஜோதிடத்தின் ஒரு பிரிவு. அரசு, அரசியல், அரசியல்வாதிகள், குறிப்பாக ஆட்சியாளர்களைப் பற்றியது

முண்டேன் ஜோதிடத்தின் உட்பகுதியை, அதாவது அதன் காரகத்துவங்களை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள். மனிதர்களால் ஏற்படும் அழிவுகள்.

மனிதர்களால் எற்படும் அழிவிற்கு உதாரணமாக இரண்டாம் உலக யுத்தத்தைச் சொல்லாம். ஹிட்லர், முசோலினி போற சர்வாதிகாரிகளால் ஏற்பட்ட பெரும் அழிவுகளைச் சொல்லலாம். இயற்கையால் ஏற்படும் அழிவுகளுக்கு கடலுக்குள் மூழ்கிய பூம்புகார், தனுஷ்கோடி போன்ற நகரங்களைச் சொல்லலாம்.

முண்டக்கன்னி ஜோதிடத்திற்கு (சொல்வதற்கு எவ்வளவு வசதியாக இருக்கிறது பாருங்கள்) முதலில் தேசத்தின் ஜாதகம் வேண்டும். உதாரணத்திற்கு நம் நாட்டின் ஜாதகம் என்றால், 15.08.1947ஆம் தேதி நடுநிசியில் நாம் சுதந்திரம் பெற்ற நேரத்தை வைத்து நமது நாட்டின் ஜாதகத்தைக் கணித்துகொள்ளலாம்.

கணினி மென்பொருளில்,
பெயர்:  இந்தியா
பிறந்த இடம்:  தில்லி
பிறந்த நாள்:  15.08.1947
பிறந்த நேரம்.  00.01

என்று நீங்கள் உள்ளிட்டால் தேசத்தின் ஜாதகம் உங்கள் கைக்கு வந்து விடும்

இதுபோன்று மற்ற நாடுகளுக்கும் ஜாதகம் உள்ளது. அதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். ஒரேநாளில் தமிழில் வெளியான அத்தனை படங்களையும் பார்க்க முடியுமா என்ன? அது போலத்தான் அனைத்தையும் ஒரே நாளில் தெரிந்துகொள்ள முடியாது.

இந்த மு.க ஜோதிடத்தில் இரண்டு செயல்பாடுகள் உள்ளன. அதாவது இரண்டு மேட்டர்கள் உள்ளன. நம் ஜப்பான் மைனரின் அகராதியில் உள்ள மேட்டர் அல்ல அது. அவ(ள்) சரியான மேட்டர்டா என்று நீங்கள் விமர்ச்சிக்கும் மேட்டரல்ல அது. இது உருப்படியான, நேரடியான மேட்டர்.

இந்த மு.க ஜோதிடம் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றை அலசலாம். சரித்திர நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்க்கலாம். சாம்ராஜ்யங்களின் எழுச்சிகளையும்,  வீழ்ச்சியைகளையும் பார்க்கலாம். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யாவில் ஜார் மன்னர் காலத்தில் நடந்த ரஷ்யப் புரட்சி போன்ற தேசிய எழுச்சிகளைப் பார்க்கலாம்.

ராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் காலடி வைத்த நேரம் தெரிந்தால், ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் நாம் மாட்டிக்கொண்டு முழித்த வரலாற்றை அலசலாம்.
அதேபோல எதிர்காலத்தில் நாட்டில் என்ன நடக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டலாம்.

எதிர்காலத்தில் ஒரு நாட்டில் என்ன நடக்கும் என்பதை எந்தக் கொம்பனாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. விதி விடாது. ஒரு ஜோதிடன் கோடிட்டுக்காட்டலாம்.

An astrologer only can indicate what is going to take place. He should not certainly say what will happen. It is the first rule of astrology

என்ன நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்வதற்கு ஒருவர் இருக்கிறார். கடவுள் என்பது அந்த அன்பரின் பெயர்.

(தொடரும்)

என்னடா வாத்தி (யார்) தொடரும் என்று போட்டு விட்டாரே என்று நினைக்க வேண்டாம். இதன் அடுத்த இரண்டு பகுதிகள் நாளையும், நாளை மறுநாளும் வெளியாகும். பொறுத்திருங்கள்.

Paracetamol மாத்திரையை வேளைக்கு ஒன்றுதான் சாப்பிட வேண்டும். பத்து மாத்திரைகளை ஒன்றாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? ஜோதிடப் பாடங்களும் அப்படித்தான். ஒரேயடியாக எழுதித் தள்ளுவதற்கு எனக்கும் உரிய நேரம் கிடைக்க வேண்டாமா? புரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

9.1.12

Astrology திருமண வாழ்க்கை!

நேற்றைய பதிவைப் பார்த்தீர்களா? அதில் சுவையான 6 ஆக்கங்கள் உள்ளன. அதைப் படித்திராதவர்கள். அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது

http://classroom2007.blogspot.com/2012/01/blog-post_08.html
-------------------------------------------------------------------------------------------

Astrology திருமண வாழ்க்கை!

Key Points - Lesson Number 4

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.

கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?  சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப் பயன் பெறுக!
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.

3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (associaton or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந் திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.

6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.

7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கை யைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!

9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.

11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,

12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!

எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டகவர்க்கப்பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------
Key Points 4 உள்ளதே - அதற்கு முந்திய பாடங்கள் எங்கே என்கிறீர்களா? அதெல்லாம் மேல் நிலை வகுப்பில் உள்ளது. மேல் நிலை வகுப்பில் சேர விரும்புவர்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள். வகுப்பிற்கான விதிமுறைகள் உங்களுக்குத் தெரியப்படுத்தபெறும். அது உங்களுக்கு ஒத்து வந்தால் நீங்கள அதில் சேர்ந்து படிக்கலாம். இல்லையென்றால் அவைகள் புத்தக வடிவில் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

இங்கே அவைகளைப் பதிவிட்டால், திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஜோதிடம் அனைவருக்கும் பொதுவனதுதான். பிறக்கும்போது யாரும் ஜோதிட ஞானத்துடன் பிறப்பதில்லை. அனைவரும் பழைய நூல்களைக் கற்றுத் தேறியவர்கள்தான். அனுபவ ஞானம் உள்ளவர்கள்தான். அறிந்தவர்கள், படித்தவர்கள் அனுபவசாலிகள், ஜோதிடத்தைத் தங்கள் நடையில் எழுதிப் பதிவிடலாம். அதைவிடுத்து அடுத்தவன் எழுதியதைக் cut & paste செய்து பதிவிடுவது விரும்பத்தக்கதல்ல! அடுத்தவனின் உழைப்பைத் திருடுவது எந்த விதத்தில் நியாயம்?

இணையம் ஒரு திறந்த வெளி. இங்கே எழுதுவது ஒரு பெண் திறந்த வெளியில் குளிப்பதற்குச் சமம். மறைப்பின்றி, பாதுகாப்பின்றி, ஆடைமாற்றுவதற்குச் சமம் ஆகவே அதன் சாதக பாதகங்களைத் தெரிந்துதான் இங்கே எழுத வேண்டும்!

நம் வகுப்பறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஐநூக்கும் மேற்பட்ட அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். புதியவர்கள் முதலில் அவற்றைப் படித்துவிட்டு மேல்நிலைப் பாடங்களைப் படிக்கலாம்.

அடுத்த பாடம்: வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா? ஜாதகத்தை வைத்து அதைத் தெரிந்து கொள்ள முடியுமா?
முடியும். அடுத்த பாடம் வெளிவரும் வரை பொறுத்திருங்கள்


வாழ்க வளமுடன்!

21.12.11

Astrology உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!

Astrology உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!

நிறைய மின்னஞ்சல்கள். அத்துடன் இணையத்தைத் திறந்தால் நிறையக் கட்டுரைகள். நம் நிம்மதியைக் குலைக்கும் கட்டுரைகள்.

உலகம் இந்த ஆண்டின் இறுதியில் அழியப்போகிறதாம்!

இயற்கைச் சீரழிவுகளால் மனிதகுலம் அழியப்போகிறதாம்.

பூச்சாண்டி காட்டும் பதிவுகள். எண்ணற்ற பதிவுகள், ஆயிரக் கணக்கான பதிவுகள்.

கூகுள் ஆண்டவரிடம் Mayan calender என்று தேடித் தரும்படி கேட்டால், சுமார் 55 லட்சம் கட்டுரைகள் இருப்பதாகச் சொல்லி, அதற்கான சுட்டிகளைத்
தருகிறார். அவை அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் நம் ஆயுள் தீர்ந்துவிடும்.

ஆகவே விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள இரண்டே இரண்டு சுட்டிகளை உங்களுக்காகக் கிழே கொடுத்துள்ளேன். அவற்றைப் பொறுமையாகப் படித்துப்பாருங்கள். நேரம் இல்லையென்றால், படிப்பதைத் தவிர்த்து விட்டு, உங்களுக்கு ஆறுதலான செய்திகள் சிலவற்றைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். அதற்குத் தாவி வந்து விடுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------

இதற்கான சுட்டி: http://www.whatwillhappenin2012now.com/category/mayan-prophecies/



Yahoo News இதற்கான சுட்டி: http://in.lifestyle.yahoo.com/reasons-world-end-2012-160356171.html

------------------------------------------------------------------------------------------
சரி, வந்துவிட்டீர்களா?

உலகவெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. துருவப் பனிப் பாறைகள் உருகிக்கொண்டே இருக்கின்றன. கடல் மட்டம் உயரலாம். சுனாமி, சூறாவளி
போன்றவைகள் ஏற்படலாம். அதில் கடலோரம் உள்ள நகரங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறுப்பதற்கில்லை

ஆனால் உலகம் அழிந்துவிடும் என்பதை மட்டும் ஏற்பதற்கில்லை.

நம்  பாரதப் பூமி புண்ணிய பூமி. பல மகான்கள் அவதரித்த நாடு. பல சித்தர்கள் இன்னும் அருவ வடிவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு.
அத்துடன் நம்நாடு சூப்பர் பவராகப் போகிறது. அந்தக் கனவோடு நாம் இருக்கிறோம், நமது கனவுகள் எல்லாம் நனவாவது தூரம் வெகு தூரத்தில் இல்லை.

அதை நாம் மட்டும் பார்த்து இரசிக்காமல் உடன் இரசிப்பதற்கு மற்ற நாடுகளும் இருக்க வேண்டும். நாம் ஆடப்போகும் ஆட்டங்களைப் பார்ப்பதற்குப்
பார்வையாளர்கள் வேண்டாமா?

மற்ற நாடுகள்தான் பார்வையாளர்கள்!

ஆகவே துணிவோடு இருங்கள். இத்தகைய கட்டுரைகளை எல்லாம் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

அந்தக் கட்டுரைகள் சிலவற்றில் நாஸ்டர்டாமஸை வம்பிற்கு துணை சேர்த்துள்ளார்கள். அதே நாஸ்டர்டாமஸ்தான் இந்தியா சூப்பர் பவராகும் என்று கணித்து எழுதிவைத்துள்ளார். அதை மறக்க வேண்டாம்!

என் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாசாவின் கட்டுரை ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படியுங்கள். குறிப்பாக நாஸா விஞ்ஞானிகளின்
நேர்காணல் பதில்களில் உள்ள கடைசி வரிகளை ஒன்றிற்கு இரண்டு முறையாவது படியுங்கள்


இதற்கான சுட்டி: http://www.nasa.gov/topics/earth/features/2012.html
-------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!