மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.18

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!!


நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!!

*ஒட்டக சிவிங்கியிடம் கற்க வேண்டிய பாடம்*

ஒட்டகச் சிவிங்கி குட்டியை ஈனும் போது அந்த  குட்டி சுமார் எட்டடி உயரத்திலிருந்து விழும். குட்டி ஈரமான நஞ்சுப்பை சூழ சுருண்டு கிடக்கும்.

தாய்  அன்போடு குனிந்து குட்டியை நாவால் வருடும்.

பின் குட்டியை தன் கால்களால் பந்தை உதைப்பது  போல் எட்டடி உயரத்திற்கு தூக்கி அடிக்கும். குட்டி நிலைகுலைந்து பொத்தென்று விழும். மீண்டும்  தூக்கி ஒரு உதை. குட்டி கிறுகிறுத்து விழும். மீண்டும் ஒரு உதை. கால்களைப் பரப்பிக் கொண்டு
விழும். அடுத்த முறை குட்டி சுதாரித்து தரையில் நிற்கும். நின்று பழகிய குட்டியை மீண்டும் மீண்டும்  தூக்கியடிக்கும். இப்போது குட்டி பர்பெக்ட் லேண்டிங்.

சிங்கம் புலி போன்ற வேட்டையாடும் மிருகங்களுக்கு ஒட்டகச்சிவிங்கியின் மாமிசம் மிகவும் பிடிக்கும். உறுதியான கால்களும் வேகமாக  ஓடும் திறமையும் இல்லையெனில் மிருகங்கள் எளிதாக வேட்டையாடிவிடும்.

நம் குழந்தைகளை நாம் எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையத்தினுள்ளே வைத்துக் கொள்கிறோம். எந்த கஷ்டங்களையும்  அவர்கள் கண்ணுக்கு காட்டுவதே இல்லை.

பின்னாளில் அவர்கள் உலகத்தில் அடியெடுத்து வைக்கும் போது நாம் கொடுக்காமல் விட்டுவைத்த உதைகளை உலகம் கொடுக்கிறது.

இதில் நாம் எடுத்துக்  கொள்ளவேண்டியது we should teach our children survival skill and life skill!
நட்புடன்!
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.18

நம்பியவர்க்கு நன்மைகளை நல்கும் நரசிம்மர்!


நம்பியவர்க்கு நன்மைகளை நல்கும் நரசிம்மர்!

என்ன தம்பி நீங்க எங்க சாமிய வெச்சிருக்கீங்க?’ ஓலா காரில் ஏறி, டேஷ்போர்டில் இருந்த அலங்கார லக்ஷ்மிந்ருஸிம்ஹ விக்ரஹத்தைக் கண்டவுடன் கேட்டேன்.

‘அட, இவன் உங்களுக்கும் சாமியா, சரிதான். அவன் தனக்கு வேணுங்கறவங்களைத்தான் வண்டில ஏத்துவான்..’ என்ற கார்த்திக் சிரித்தார்.

‘அது சரி. நரஸிம்மர் விக்ரஹம் எப்படி இங்க..?’ கேட்டேன்.

‘நரஸிம்மனப் பத்தி சொன்னா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருப்பேன்,’ முக மலர்ச்சியுடன் சொன்ன ஓட்டுனர் மேலும் தொடர்ந்தார்.

‘இவரு எங்கிட்ட வந்தது எப்பிடின்னு தானே கேக்கறீங்க? இவரு என்னோட கத்தாருக்கே வந்தாரு. இவரு இல்லாம நான் இல்லை’ என்றவரின் முகமலர்ச்சி உண்மையாகவே தோன்றியது.

‘ஆமாங்க, கத்தார்ல நம்ம சாமில்லாம் இருக்கக் கூடாது. ஆனா, இவரு இருந்தாரு. அங்ஙன கம்பி கட்ற வேலைக்கிப் போனேன். தினமும் காலைல இவருக்கு ஒரு பத்தி ஏத்தி வெச்சுட்டுப் போயிடுவேன். ராத்திரி எந்த நேரமா இருந்தாலும் வந்து, குளிச்சுட்டு, இவரு மேல தண்ணி ஊத்தி ஒரு அபிசேகம் பண்ணிட்டு, பொறவு தான் நான் சாப்புடுவேன். சனிக்கிழமைகள்ல ஒட்டகப் பால் வாங்கி அபிசேகம் செய்வேன்,’ என்றவர் என்னைத் தனது உலகத்துக்குள் ஈர்த்தார். பின் இருக்கையில் இருந்த என் மனைவி, மகன் முகங்களில் ஆச்சரியக் குறிகள். நீண்ட உபன்யாசத்திற்குத் தயாரானேன்.

‘ஆனா ஒண்ணுங்க. வெறும் கம்பி கட்டற வேலைக்குப் போன என்னை அந்த காண்டராக்ட்ல பல பேர வெச்சு வேலை வாங்கற நிலைக்கு ஒசத்தினார் சார் நரஸிம்மர். பொறவு நான் கம்பியே கட்டல..’

‘அப்புறம் எப்பிடி இங்க, இந்தியால?’ என்றேன்.

‘வந்தப்புறம் ஒரு லாரி வாங்கி விட்டேன். எட்டரை லட்சம் கடன். முழுகிடுவேன் போல இருந்துச்சு. போன மாசம் வரைக்கும் தலை வரைக்கும் கடன். ஆனா, இப்ப வெறும் அம்பதாயிரம் தான் கடன் இருக்கு. அவன் கொடுக்கணும்னு நினைச்சான்னா யாரால தடுக்க முடியும்?’ என்றவரை நம்புவதா இல்லையா என்று மனதில் ஓட, வியப்பில் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

‘ஒண்ணு மட்டும் உண்மைங்க. இவன் பேசற தெய்வம். நான் இவனைப் பார்த்து அழுதுகிட்டே இருக்கேன். முன்னாடி இவன் எங்கிட்ட இல்லீங்க. இவன் எங்கிட்ட வந்தது பெரிய கதை..’ என்று தொடர்ந்தவரைக் குறுக்கிடாமல் வாயை மூடிக்கொண்டேன்.

‘மொதல்லயும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப, இவரு எங்கிட்ட இல்லை. டேஷ்போர்டுல பிள்ளையார் பார்க்கறீங்கல்ல அவரு மட்டும் தான் இருந்தாரு. அவரும் நான் செஞ்ச பிள்ளையாரு. நான் எதப் பார்த்தாலும் செஞ்சுடுவேன். பிள்ளையாரு, முருகன், அம்மன் இப்பிடி பல தெய்வங்களைக் கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஒரு மாதிரி முருகன் பைத்தியமாவே இருந்தேன். ஆனா பிள்ளையார், முருகன்னு மாறி மாறி வந்து இப்ப கடைசில நரஸிம்மரப் புடிச்சிருக்கேன்,’ என்றவர் ஒரு நிமிடம் அமைதி காத்தார்.

‘இவுரு எப்பிடி வந்தார்னு சொல்லல இல்ல? டேஷ்போர்டு வெறும இருந்துச்சு. வெச்சா இவரதான் வெக்கணும்னு இருந்தேன். உங்கள மாதிரி ஒரு அய்யிரு ஏறினாரு. நரஸிம்மர் சிலை எங்க கிடைக்கும்நு கேட்டேன். அவுரு ‘கிரி டிரேடர்ஸ்’லன்னாரு. ஒடனே போயி வாங்கிடணும்னு பார்த்தேன்.  கைவரல. ஒவ்வொரு முறை மயிலாப்பூர் போனாலும் உடனே சவாரி வந்து வேற எங்கியாவுது போயிடுவேன்.

நார்மலா சனிக்கிழமைல வண்டிய எடுக்க மாட்டேன். அன்னிக்கி பெருமாளுக்கான நாள். அவருக்கான பூஜை, கோவில் அப்டின்னு இருந்துடுவேன். ஆனா ஒரு சனிக்கிழமை வண்டிய எடுத்தேன். நரஸிம்மா உன்னை வாங்காம ஓய மாட்டேன், இரு வறேன். இன்னிக்கி எவ்வளாவு வசூல் ஆகுதோ அதை வெச்சு வாங்கறதுன்னு முடிவு செஞ்சு காலைல வண்டிய எடுத்தேன். நாள் முழுக்க சவாரி. அதுவரைல அவ்வளவு சவாரி எடுத்த்தே இல்லை. சரி நரஸிம்மன் ஆழம் பார்க்கறான்னு எல்லா சவாரியையும் எடுத்தேன். பாருங்க, அன்னிக்கி மட்டும் மூணு முறை மயிலாப்பூர் சவாரி வந்துச்சு. ஒவ்வொரு முறை கிரி டிரேடர்ஸ் போகணும்னு இறங்கினாலும் உடனே வேற ஒரு சவாரி வந்துடும். கடைசியா கடை சாத்தற நேரத்துல கபாலி கோவில் சவாரி ஒண்ணு வந்துது. ஆள இறக்கி விட்டுட்டு கடைக்குள்ள ஓடறேன். கடை சாத்தற நேரங்கறாங்க. லைட்டு கூட அணைச்சுட்டாங்க. எப்பிடியாவுது எங்கிட்ட வந்துடு நரஸிம்மானு அழுதுகிட்டே அங்க கேக்கறேன். மேல போங்கறாங்க. நரஸிம்மர் சிலை விக்ரஹம் வேணும்னு அழுதுகிட்டே கேக்கறேன். இருட்டுல ஒருத்தர் எடுத்துக் கொடுக்கறாரு. பார்க்கக் கூட இல்ல. அப்பிடியே வாங்கினு வந்துட்டேன். அன்னிலேர்ந்து இவுரு எங்கூட இருக்காரு.

தினமும் பூ அலங்காரம். வாரம் ஒரு முறை வஸ்திரம் மாத்துவேன். உள்ள பாருங்க,’ என்றார். டேஷ்போர்டில் இருந்த பெட்டியில் பல வண்ணங்களில் வஸ்திரங்கள்.

‘இந்த மண்டபம்?’ என்று கோவிலாழ்வாரைப் பற்றிக் கேட்டேன்.

‘அது இன்னொரு கதைங்க,’ என்று துவங்கியவரைச் சிறிது பொறாமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நரஸிம்மர் வந்துட்டாரு. அவர வண்டில அமர்த்தியாச்சு, பூவெல்லாம் போட்டாச்சு, ஆனா நாள் பூரா வெய்யில்ல உக்காந்திருக்காரு. நாம ஏஸில இருக்கமே, இவரு இப்பிடி வெய்யில்ல வாடறாரேன்னு மனசு கேக்கல. ஒரு சின்ன குடை வாங்கி வெச்சேன். போதல, ஒரு கண்ணாடிக் கூண்டு செஞ்சு அதுக்குள்ள கார் ஏஸிய விடலாம்னு முயற்சி பண்ணினேன். ஒரு அய்யிரு சவாரில வந்தாரு. அது வேண்டாம். கண்ணாடில்லாம் வாணாம். சின்ன மண்டபம் மாதிரி இருக்கட்டும். காத்தோட்டமா இருக்கட்டும்நு சொன்னாரு. மண்டபம் பலதும் வெச்சு பார்த்தேன். ஒண்ணும் சரியில்லை.

‘அப்பதான் ஒரு சவாரி வந்ததுங்க. ஏறினவரு  நரஸிம்மரையே பார்த்துக்கிட்டிருந்தாரு. என்னங்கன்னு கேட்டேன். இல்ல, சோளிங்கர் போகணும். வேளையே அமையலன்னு வருத்தப்பட்டாரு. இங்கன இவரப் பார்த்தீங்கல்ல, இவரு உங்கள கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. ஒரு வாரம் கழிச்சுப் பாருங்கன்னேன். சிரிச்சுக்கிட்டே ‘ ஏம்பா ஒரு மண்டபம் வைப்பா’ ன்னாரு. ‘தேடிக்கிட்டிருக்கேன்’ன்னேன்.

ஒரு வாரம் கழிச்சு  போன் பண்றாரு. இங்க வாப்பான்னு ஒரு அட்ரஸ் சொல்றாரு. போயி பார்த்தா பெரிய மரப் பட்டறை ஓனரு. அறுபது பேர் வேலை செய்யறாங்க அவர்ட்ட. என்னப் பார்த்துட்டு ஓடி வராரு. நாலு பேரக் கூப்பிட்டு தம்பிக்கு என்ன மாடல் புடிக்குதோ அதுல ஒரு சின்ன மண்டபம் செஞ்சு குடுங்கறாரு. எனக்குப் புல்லரிக்குது. அவரு எங்க, நான் எங்க. நாலு டிசைன் கொடுத்தாங்க. கடைசில இந்த டிசைன் தான் புடிச்சுது. செஞ்சும் குடுத்தாரு. அதே வாரம் சோளிங்கர் போயிட்டு போன் பண்றாரு.

நான் ஏதோ செய்யறென்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அவன் செஞ்சுக்கறான். நாமெல்லாம் பொம்மைங்க சார். அவன் ஆட்டறான், நாம் ஆடறோம்,’ என்றவர் அவ்விடத்தில் ஒரு சின்ன சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர் போல தெரிந்தார்.

‘அன்னிலேர்ந்து பெருமாள் மண்டபத்துல ஒக்காந்துட்டு இருக்கார்,’ என்று தொடர்ந்தவர், ‘ஆங், நான் எப்படி நரஸிம்மர் பித்து ஆனேன்னு கேட்டீங்கல்ல?’ என்று கேட்டவர் தொடர்ந்தார். கேட்டதையே மறந்து நான் அமர்ந்திருந்தேன்.

நெய்வேலி பக்கத்துல முத்தாண்டிக் குப்பம்னு ஒரு ஊர் இருக்கு ( நானும் நெய்வேலி என்பதால் தெரிந்திருந்தது). அங்க கருப்புசாமி கோவில்ல பூசாரியா இருந்தேன்,’ என்றார்.

‘கருப்பு கோவில்ல பூசாரியா?  நீங்க வேலூர்ன்னு தானே சொன்னீங்க?’ என்றேன் சந்தேகத்துடன்.

‘சொல்றேன், சொல்றேன். வேலூர் தான். திருச்சில ஐ.டி.ஐ. படிக்கப் போனேன். அங்க முத்தாண்டிக் குப்பத்துல இருந்து இன்னொரு பையன் படிச்சான். அவன் கைல ‘கருப்பு சாமி’ பச்சை குத்தியிருந்திச்சு. என்னன்னு கேட்டேன். சாமின்னான். போயி பார்க்கலாம்னு போனா, கருப்பு என்னைப் புடிச்சு இழுத்துக்கிட்டான். ஐ.டி.ஐ., அப்புறம் கருப்பு கோவில் பூசாரியாயிட்டேன். அப்ப, பெரிய பூசாரி மகாபலிபுரம் பக்கத்துல இருந்து ஒரு சாமி விக்ரஹம் கொண்டு வந்தார். ‘டேய், இது சின்ன சைஸ்னு பார்க்காத. ரொம்ப பவரு. சுத்த பத்தமா இருக்கணும். பேரு நரஸிம்மர்’ன்னாரு. அப்பலேர்ந்து நரஸிம்மர் மேல பக்தி வந்துடுச்சு. ரெண்டர மணி நேரம் ஒத்தக் கால்ல நின்னு, நரஸிம்மா, நரஸிம்மான்னு அவரோட பேரையே சொல்லிட்டு அழுதேன். பொறவு என் வாழ்க்கையே மாறிடுச்சு. அவரோட சிலைய வாங்கணும்னு அப்பவே தீர்மானிச்சேன். ஆனா, அவன் தீர்மானிக்கணுமே. அவன் எப்ப நினைக்கறானோ அப்பதான் நம்மகிட்ட வருவான்,’ என்ற கார்த்திக் வேறு தளத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்.

‘நரஸிம்மர் விக்ரஹம் வந்ததும் வண்டில இன்னும் யந்திரம் தான் வெக்கலை. மத்தபடி எல்லாம் பண்ணிட்டேன். பலரும் வருவாங்க, யந்திரம் இருந்தா தோஷம் வரும். அதால வெக்கலை. பாருங்க  பெருமாளுக்கு வஸ்திரத்துக்குள்ள பூணூல் போட்டிருக்கேன், தாயாருக்கு கருகுமணி போடணும்னு ஒரு மாமி சொன்னாங்க, போட்டிருக்கேன். சின்னச்சின்னதா கிரீடம், மாலைன்னு செஞ்சு போட்டுக்கிட்டே இருக்கேன். இவருக்கு எவ்வளவு செஞ்சாலும் இன்னும் செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்கு. நான் எங்க செய்யறேன். அவன் செஞ்சுக்கறான்.

‘சில மாசம் முன்னால ஒரு வயசானவரு ஏறினாரு. நரஸிம்மன் வந்தா சிவனும் வரணுமேன்னாரு. புரியல விட்டுட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சி மச்சான் சின்ன பஞ்ச லோக சிவ லிங்கம் வாங்கியாந்தான். ஒரு மாசம் வெச்சு பூஜை பண்ணினான். முடியல்லடா, நீ வாங்கிக்கோன்னு எங்கிட்ட குடுத்துட்டான். இப்ப அவரு ஊர்ல ஒரு சின்ன ஊஞ்சல்ல உக்காந்திருக்காரு. சின்ன கலசம் செஞ்சு அதிலேர்ந்து தண்ணி விழறாப்ல செஞ்சிருக்கேன். சிவன் அபிஷேப் பிரியன், ஆனா நரஸிம்மர் அலங்காரப் பிரியர். அதால தினமும் இவருக்கு இங்க பூ அலங்காரம்,’ என்றார்.

நீண்ட நெடிய கலாச்சார விழுமியத்தின் தாக்கம் ஏழை எளிய மக்களின் உள்ளும் இறங்கி, வடிந்து, கலந்து, உதிரத்தில் ஓடிக்கொண்டிருப்பதையும், பெருமாள் தனது பக்தர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறான் என்றும் மனதில் ஓட, நானும் ஜானகியும் மகன் பரத்ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

‘எனக்கு ஒரு ஆசையும் இல்லை சார். நம்ம பெருமாளுக்கு ஊர்ல ஒரு சின்ன கோவில் கட்டணும். விதம் விதமா அலங்காரம் செய்யணும். அவன் எப்பவும் குளிர்ச்சியாவே இருக்கணும், அவ்ளோதான் சார்’

‘கல்யாணம் ஆயிடுச்சா?’ என்றேன், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள.

‘இல்லை. பார்த்துக்கிட்டிருக்காங்க. ஒரு பாலிஸி உண்டு சார். பொண்ணு ஏழையா இருந்தாலும் எப்பிடி இருந்தாலும் என்னை நம்பி வாழ வந்தா, சுகமா இருக்கணும். அதால ஊர்ல பதினஞ்சு லட்சத்துல கீழயும் மேலயுமா வீடு கட்டியிருக்கேன். அம்மா அப்பா அங்க இருக்காங்க. லாரி ஓடுது. கார் இருக்கு. வர்ற பொண்ணு கஷ்டப்படாம இருக்கும்,’ என்றவரை வாழ்த்துவதா, வணங்குவதா என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன்.

‘ஓரமா நிறுத்துங்க. ஏ.டி.எம்.ல பணம் எடுக்கணும்’ என்றவனிடம், ‘நீங்க பணம் கொடுக்கல்லேன்னாலும் பரவாயில்லீங்க. பெருமாளுக்குப் பிரியமானவர் நீங்க,’ என்றவருக்கு என்னிடம் பதில் இல்லை.

ஒரு ஏ.டி.எம். கையிருப்பை மட்டும் காட்டி, பணம் தர முடியாது என்றது ( ஐ.சி.ஐ.சி.ஐ.). வண்டிக்கு வந்தவுடன்,’ சார், எனக்கு வர வேண்டியது எப்படியும் வந்துடும் சார். ஒரு சவாரி நூறு ரூபா கொடுக்கணும், பணம் இல்லை, கையிருப்பு எண்பது ரூபா தான். இருக்கறதக் கொடுத்துட்டு பின்னாடி சில நாள் கழிச்சு மனசு கேக்கல தம்பி ஒன்னோட பாங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுன்னு கேட்டு கூட நூறு ரூபா அனுப்பி வெச்சார். எனக்கு என்ன தரணும்னு நரஸிம்மருக்குத் தெரியும் சார்,’ என்ற அந்த வேதாந்தி பாரதத்தின் ஆன்மா என்றால் தவறில்லை என்று நினைத்தேன்.

அருகில் எச்.டி.எப்.சி. ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து வந்த போது,  ‘அது போகட்டும் சார். உங்க நம்பரக் கொடுங்க. என்னோட ‘நரஸிம்மர் வாட்ஸப்’ குரூப்ல சேர்த்துக்கறேன். வாரா வாரம் என்ன அலங்காரம்னு என்னோட பேசஞ்சர்ஸ் எல்லாருக்கும் அனுப்பிக்கிட்டிருக்கேன்,’ என்று கூக்ளி போட்டு வீழ்த்தினார்.

சரி தம்பி. நரஸிம்மருக்கு சாப்பிடறதுக்கு என்ன கொடுப்பீங்க?’ என்றேன்.

‘நைவேத்யமா ஸார்? பானகம் தான். தினமும் பானகம் உண்டு,’ என்றவரிடம் மேலும் கேட்க ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பரிபூரணமான பிரேமையுடன், அசைக்கமுடியாத பக்தியுடன் நரஸிம்மரின் சேவையே தனது வாழ்வின் பயன் என்று வாழ்ந்துவரும் கார்த்திக்கை விட சிறந்த ஸ்ரீவைஷ்ணவன் உண்டோ என்று எண்ணிக் கொண்டிருந்தபோது,

‘ இன்னொரு விஷயம் சார். இன்னிக்கிக் காலைல ஒரே சவாரில என்னோட டெய்லி டார்கெட் முடிஞ்சுது. வீட்டுக்குப் போகலாம்னு ‘Go Home’ அழுத்திக்கிட்டே இருக்கேன். பதில் வரலை. மீண்டும் அழுத்தினேன். வரலை. சரி, நரஸிம்மன் நமக்கு வேற வேலை வெச்சிருக்கான் போல’ ந்னு பத்து நிமிஷம் செல்போன நோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப உங்க கால் புக் ஆச்சு. பெருமாள் தன் அடியார்களைத்தான் தன் கிட்ட அனுமதிப்பார் சார்,’ என்ற கார்த்திக்கின் உருவில் பார்த்தசாரதி அமர்ந்திருந்தார்.

‘அஹோபிலம் போயிருக்கீங்களா?’ என்றேன்.

‘அவசியம் போகணும் சார். ஆனா, நாம முயற்சி பண்ணா நடக்காது. அவனுக்குத் தெரியும். எப்ப வரச் சொல்றானோ போகணும். கூடிய சீக்கிரம் வரச் சொல்வான்னு நினைக்கறேன்,’ என்றார்.

இறங்குமிடம் வர, மனமில்லாமல் இறங்கி விடைபெற்ற பின் கார் நகர்ந்தது. நரஸிம்மரும் அவரது ஆத்மார்த்தமான பக்தரும் சிறிய ஆட்டத்துடன் நகர்ந்தனர்.

‘ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா வென்று வாடிடும் இவ்வாணுதளே’

படித்தவுடன் பகர்ந்தேன், ஐயா!!
----------------------------------------------------------------------
நரசிம்ம பக்தரின் மேன்மையை நமக்கு அறியத் தந்தவர்
நமது வகுப்பறை மாணவர் திருவாளர் வரதராஜன், சென்னை!
அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.18

Astrology: ஜோதிடம்: 27-7-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 27-7-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் பிரபல இந்திப் பட நடிகர் அமீர் கானுடையது. ஏறாளமான படங்களில் நடித்துப் பெயர் வாங்கிய முன்னனி நடிகர்.
பிறப்பு விபரம்: 14-3-1965ம் தேதி காலை 6:15 மணிக்கு மும்பை நகரில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  16 பேர்கள் சரியான விடையை
எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Name: Aamir Khan
Date of Birth: Sunday, March 14, 1965
Time of Birth: 06:15:00
Place of Birth: Mumbai
Longitude: 72 E 50
Latitude: 18 N 58
Friday, July 27, 2018 7:51:00 AM
---------------------------------------------------------
2
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 27-7-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் நடிகர் அமிர் கான் ஆவார். பிறந்த தேதி மார்ச் 14, 1965. ஊர்

மும்பை,
நேரம் காலை 6 மணி அளவில்.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, July 27, 2018 7:54:00 AM
----------------------------------------------------------
3
Blogger anand tamil said...
அமீர் கான் , ஆமிர் உசைன் கான், பிறப்பு: மார்ச் 14, 1965), இவர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்

ஆவார். கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி

திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
Friday, July 27, 2018 9:29:00 AM
--------------------------------------------------
4
Blogger bg said...
Mr.Aamir khan born on Mar 14 1965.
Friday, July 27, 2018 10:04:00 AM
---------------------------------------------------
5
Blogger sfpl fab said...
Answar for quiz 27.07.2018
Mr.Aamir Khan
Date of Birth: 14-Mar-1965
Place of Birth: Mumbai, Maharashtra, India
Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter
Nationality: India
Friday, July 27, 2018 10:17:00 AM
-------------------------------------------------
6
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Acotr Aamir Khan
DoB: 14th March 1965 @ 06.15 AM
Place of Birth: Mumbai
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, July 27, 2018 11:45:00 AM
---------------------------------------------------
7
Blogger ponnusamy gowda said...
AAMIR KHAN cini actor.
Aamir Hussain Khan (pronounced [ˈaːmɪr ˈxaːn]) (born March 14, 1965) is an Indian film actor, director, and producer

who has established himself as one of the leading actors of Hindi cinema. Starting his career as a child actor in his

uncle Nasir Hussain's film Yaadon Ki Baaraat (1973), Khan began his professional career eleven years later with Holi

(1984) and had his first commercial success with... Read more at Wikipedia
Date of Birth: 14-Mar-1965 @ 6-30 a.m
Place of Birth: Mumbai, Maharashtra, India
Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter
Nationality: India
-PONNUSAMY
Friday, July 27, 2018 12:42:00 PM
-------------------------------------------------------
8
Blogger kmr.krishnan said...
இது ஆமீர் கான் என்ற் பாலிவுட் நடிகரின் ஜாதகம். பிறந்த தேதி 14 மார்ச் 1965.
நேரம் காலை 6 மணி 17 நிமிட‌ம் . பிறந்த ஊர் மும்பய்.
யோககாரகன் சுக்கிரன் லக்கினாதிபதியுடன் ஒன்றாம் பாவத்தில் அமர்ந்தது, சந்திரன், சனி ஆட்சி, புதன் நீசபங்கம், சச மகா

யோகம் கஜ கேசரி யோகம் ஆகியவை அவருக்கு நன்மை செய்தன.
Friday, July 27, 2018 1:01:00 PM
-----------------------------------------------------
9
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, இப்போது

இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பரிமளிக்கும் "முகம்மது ஆமிர் ஹுசைன் கான்"

என்ற ஆமிர்கான் அவரின் ஜாதகம்.
பிறப்பு : 14/03/1965
இடம் : மும்பை.
நேரம் : காலை 5 மணி 15 நிமிடம்.
Friday, July 27, 2018 1:08:00 PM
----------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் :அமீர்கான்
DOB- TIME 14/3/1965 TIME:6.45AM
PLACE :MUMBAI
நன்றி
Friday, July 27, 2018 2:18:00 PM
-----------------------------------------------------
11
Blogger angr said...
பிரபல திரைப்பட நடிகர் திரு. அமீர்கான் அவர்கள்
Friday, July 27, 2018 3:50:00 PM
-------------------------------------------------
12
Blogger BM said...
Name : Aamir Khan
D.O.B : 14.03.1965
Time : 06.15 AM
Place of Birth : Mumbai
Friday, July 27, 2018 5:19:00 PM
---------------------------------------------------
13
Blogger ராஜன் said...
Mr.Aamir Khan 14 March 1965 morning
Friday, July 27, 2018 6:44:00 PM
-------------------------------------------------------
14
Blogger ARAVINDHARAJ said...
Name:Aamir Khan
Date of Birth:14-Mar-1965
Place of Birth:Mumbai
Profession:Actor.
Friday, July 27, 2018 10:42:00 PM
------------------------------------------------
15
Blogger Rajam Anand said...
Dear sir
The answer to the quiz is Aamir Khan who was born on the 14th of March 1965 in Jammu in India.
Kind Regards
Rajam Anand
Friday, July 27, 2018 10:56:00 PM
------------------------------------------------------------
16
Blogger Chandrasekaran Suryanarayana said...
Aamir Khan
DOB. March 14th 1965 Sunday
Birth time 06.15 AM
Place. MUMBAI
Longitute 72E50
Lattituse 18N58
Nick name Chocplate Boy
Acted famous movie- Yadoon Ki Baraat
Saturday, July 28, 2018 12:36:00 AM
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். திரைப்படத்துறை அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. திருவண்ணாமலை தல புராணத்தில் உள்ள ஒரு கதையை திரு.சுகி சிவம் அவர்கள் தனக்கே உரிய பாணியில் விவரிக்கின்றார். அனைவரும் பார்த்து/கேட்டு ரசியுங்கள்!


2.இன்றைய சமூக சிந்தனையுடன் கூடிய உரை. மனதைத் தொடும் நிகழ்வுடன் உள்ளது. பாருங்கள்!


3. உங்களுடைய ஆரோக்கியத்தை எப்படித் தெரிந்து கொள்வீர்கள். சொல்லித் தருகிறார் ஒருவர். அவசியம் பாருங்கள்



4.ஆண் வர்க்கத்தினருக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு அதிரடியாகப் பேசுகிறார் பெண்மணி ஒருவர். அவசியம் பாருங்கள்



அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.18

ஞானம் பிறந்த கதை!


சிறுகதை

ஞானம் பிறந்த கதை!
SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்
-------------------------------------------------
அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில் இந்த மாதம் வெளியான சிறுகதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன்
-------------------------------------------------
அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன்
ஒருவன் இருந்தான்.அவனுடைய நாடு நன்றாக இருந்தது.
அவனது ஆட்சியில் நாட்டு மக்களும் நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று குழந்தைகள். நித்தமும் அரண்மனையில்
சண்டைகள். சச்சரவுகள்.

வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில் ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத்
தினமும் துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம்
விளைவிப்பவர்களை அல்லது குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி மக்களை
தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி. தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான். அனைத்தும் அவனை அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை.
செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக்
குறிப்பிட்டு, அழுகாத குறையாக தன்னுடைய மனக்
குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா
என்று இளம் துறவி ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால், எல்லாப்பிரச்சினைகளும் ஓடிப்போய்
விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை
என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும்
சொன்னார். அதோடு அந்த இளம் துறவி தற்சமயம் பல்லவ
நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச் சொன்னான். முதன்மந்திரியும்,
 நான்கு வீரர்கள் துணையுடன், உடனே புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அரசர்களைவிடத்தான்
மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச்
சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய
வேலை என்றும் சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான்
முக்கியம் கொடுப்பதில்லை என்றும் சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்கவில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால்
நடைப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், திரும்பும்
வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார்.
அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும் கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில் பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு
தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது என்ற
முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம் ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு வாரங்கள் கழித்து அரசன் நினைவு
படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச் சொல்லி
மேலும் ஒருமாத காலத்தை ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து தினங்களுக்குள் அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை
நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில்
சிலரது மூளை அற்புதமாக வேலை செய்யும். மந்திரியின்
மூளையும் அப்படியொரு வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு
வந்து நிறுத்திட மந்திரி முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும் முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததால் போலியான
ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினால் யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத்
தேடி, மந்திரி பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக
இருந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக்
கிடைத்தான்.

மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி
விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி, என் கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்"

முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன் மந்திரியை எதிர்கொள்வது எப்படி?

------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப் பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப்பெற்றது. அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. பட்டையாக விபூதி பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு
என்னென்ன பதில்கள் அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின்
பெயரை மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது. மொத்தமாகப் பயிற்சி அளிக்கப் பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில் அவன் உட்கார வைக்கப்பட்டான்.
அரண்மனை பல்லக்கு ஒன்று அனுப்பட்டது. அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல்
மலர்களால் அலங்கரிகப்பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

தொடர்ந்து படியுங்கள்

அரண்மனை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன், சுவாமிகளின் வரவை ஆவலுடன் எதிர்
நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான் அல்லவா மன்னன்?

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், இளம் துறவியை ஏற்றிக்கொண்டு வந்த பல்லக்கும் வந்து சேர்ந்தது.

இளம் துறவி பல்லக்கில் இருந்து இறங்கியவுடன், பட்டத்து யானையின் மூலம், பெரிய மலர்மாலை ஒன்று அவருக்கு அணிவிக்கப்பெற்றது.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றை மன்னன் செய்தான்.

ஆமாம், திடீரென்று துறவியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

மன்னனே காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்த அங்கிருந்த தேவியர்கள் முதலிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் விழுந்து வணங்கினார்கள்.

முதன் மந்திரி முதல் யானைப்பாகன் வரை அங்கிருந்த மற்றவர்களும் விழுந்து வணங்கினார்கள்.

முதலில் அதிர்ந்து போய்விட்ட துறவி, சற்று சுதாகரித்துக் கொண்டு, "நமச்சிவாய" என்று சொல்லி அனைவரையும் வாழ்த்தினார்

மன்னன் எழுந்து வழிகாட்ட, துறவியார் அரண்மனைக்குள் நுழைந்தார். உடன் அரச குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டர்கள். முதல் மந்திரியும், அரண்மனைத் தலைமைக் காவலரும் உள்ளே சென்றார்கள். வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!

பிரதான அரங்கத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பெற்று,
ஒரே ஒரு சிம்மாசானம் மட்டும் போடப்பட்டிருந்தது.

துறவியாரை, அதில் அமரும்படி கேட்டுக்கொண்டான் மன்னன்.

அவர் அமர்ந்தவுடன், அவர் அருகில், அவருடைய காலடி அருகே, தரையில், அதாவது ரத்தினக்கம்பளத்தின் மீது மன்னன்
அமர்ந்து கொண்டான்.

மற்ற அனைவரும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.
அந்தக் காட்சியைக் கண்ணுற்ற நமது துறவியாருக்குச் சற்று அச்சமாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

பின்னே இருக்காதா? அரசனுக்கு 50 வயது. துறவிக்கோ இருபத்தியோரு வயதுதான். அதோடு பதவியில் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம். எல்லாம் விதியின் விளையாட்டுப்போலும் என்று துறவி மனதில் நினத்துக்
கொண்டார்.

உண்மை தெரிந்தால் தலை போகுமா? அல்லது கால் போகுமா? என்று தெரியாத  சூழ்நிலை. நடப்பது நடக்கட்டும் என்று தனது நாடகத்தைத் தொடர்ந்தார்.

மன்னன்தான் முதலில் பேசினான்.

"சுவாமி உங்களுக்குப் பாதபூஜை செய்ய விரும்புகிறோம்.
உத்தரவு கொடுங்கள்." என்றான்.

சுவாமிகள் கண்களினாலேயே சம்மதத்தைத் தெரிவித்தார்.

மன்னன் கையை உயர்த்த, தூரத்தில் நின்று கொண்டிருந்த
இரு தாதிப்பெண்கள் பெரிய வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக்குடத்தில் தண்ணீர், இன்னொரு தாம்பாளத்தில்,
பூஜைப் பொருட்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்கள்.

தேவியர் இருவரும் அருகில் வர, அவர்கள் துணையுடன்,
மன்னன் துறவிக்குப் பாத பூஜையைச் செய்து முடித்தான்.
அதோடு விழுந்தும் வணங்கினான்.

துறவியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. இத்தனை சின்ன வயதில் முகத்தில் இப்படி ஒரு அருளா?

எல்லாவற்றையும் கொடுத்த இறைவன் இந்த நிர்மலமான
முகத்தை மட்டும் நமக்கு ஏன் தரவில்லை? அப்படி நினைத்த மாத்திரத்திலேயே மன்னன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. அதைக் கவனித்த தேவியர்கள் இருவருமே உணர்ச்சி வசப்பட்டார்கள்.

சூழ்நிலையின் இருக்கத்தைக் குறைக்க விரும்பிய துறவியார், அருகில் தாம்பாளத்தில் இருந்த மலர்மாலை ஒன்றை எடுத்து, மன்னனுக்கு அணிவித்து, ஆசீர்வதித்தார்.

மீண்டும் தரையில் துறவியின் எதிரே அமர்ந்து கொண்ட
மன்னன், தன் அரச, மற்றும் குடும்ப வரலாறுகளை
பொறுமையாகச் சொன்னான். அதைவிடப் பொறுமையாகத் துறவியும் காது கொடுத்துக் கேட்டார்.

இறுதியில் மன்னன் தன் பிரச்சினைகளைச் சொல்லி,
அதற்குத் தங்களுடைய மேலான யோசனைகளைச்
சொல்லுங்கள் என்று துறவியைக் கேட்டுக் கொண்டான்.

துறவி நறுக்குத் தெரித்தார்ப்போல பேசினார்.

"உங்கள் துன்பங்களைக் கூட்டிக் கழித்தால் இரண்டு
சொல்லில் அடக்கிவிடலாம். ஒன்று கோபம், இன்னொன்று படபடப்பு, இல்லையா?" என்று கேட்டார்.

"ஆகா, அவையிரண்டும்தான் தலையாய பிரச்சினைகள்"
என்று மன்னன் பதில் சொன்னான்.

துறவி அவற்றிற்குப் பதில் சொன்னார்.

முதலில் அவனுடைய மனைவிகள் இருவரையும் தனித்தனி மாளிகைகளில் தங்கும்படி செய்ய வேண்டும் என்றார்.
அதோடு ஒவ்வொரு தேவியின் குழந்தைகளும், அவர்களுடனே தங்கும்படியாகச் செய்ய வேண்டும் என்றார். மன்னன்
மாதத்தில் முதல் பதினைந்து நாட்கள் மூத்தவள் வீட்டிலும்,
அடுத்த பதினைந்து நாட்கள் இளையவள் வீட்டிலும் தங்கி
வருவது நல்லது என்றார். மன்னனும் அது நல்ல தீர்வு என்று
சொல்லி மகிழ்ந்தான். பிரச்சினைகள் பாதியாகக் குறைந்து விடுமல்லவா?

இன்பம், துன்பம் ஆகிய இரண்டையுமே அவைகள் வந்து
சேரும் கணத்தில் ஏற்றுக் கொள்ளாமல், ஒரு நாழிகை
கழித்தே (அதாவது 24 நிமிடங்கள் கழித்தே) மனதிற்குள்
கொண்டு செல்ல வேண்டும் என்றார். அதாவது சட்டென்று
react செய்யக்கூடாது எனும் பொருள்படத் துறவியார் சொன்னார்.

இன்பம் வந்தால் உடனே துள்ளிக் குதிக்காதே! துன்பம் வந்தால் உடனே கோபப்பட்டு மற்றவர்களைப்ப் பிறாண்டதே! என்பதை மன்னனுக்குப் புரியும் வண்ணம் இரண்டு குட்டிக் கதைகள் மூலமாகப் பாடம் நடத்தினார். மன்னன் மகிழ்ந்து விட்டான்.

அப்படிச் செய்தால் கோபம் வராது என்பதை மன்னன் உணர்ந்தான்.

அடுத்து படபடப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் துறவி சொன்னார்.

மன்னனாக இருப்பதால், பல சோதனைகளைத் தாங்கும்
போது படப்படப்பு ஏற்படுவது இயற்கை என்றும், அந்தமாதிரி நேரங்களில், ஆறு குவளைகள் தண்ணீரை அடுத்துத்துக் குடித்துவிட்டு, சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

ஆறு குவளைகள் நீரைக்குடித்தால் என்ன ஆகும்?
வயிறு முட்டிப்போகும்.
அதோடு மஞ்சத்தில் ஓய்வெடுத்தால் என்ன ஆகும்?
தூக்கம் வரும்.
தூக்கம் வந்தால் என்ன ஆகும்?
படபடப்புப் போய்விடாதா?
அது பாட்டி வைத்தியம்.
அதை அறிந்திராத மன்னன் ஆகா அற்புதமான தீர்வு என்று தனக்குள் சொல்லி மகிழ்ந்தான்.
--------------------------------------------------------------------------------------------
துறவிக்குச் சிற்றுண்டியாகச் சர்க்கரைபொங்கலும், வெண்பொங்கலும் வழங்கப் பெற்றது. அதுவும் தங்கத்
தட்டுக்களில் வழங்கப்பெற்றது.

துறவியும் கிடைத்ததை மண்டிவைக்காமல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு மட்டும் சுவைத்து உண்டார்.

மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. துறவியும், "மன்னா நான் புறப்படுகிறேன். இறையருள் இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி எழுந்துவிட்டார்.

மன்னனும் கெஞ்சி ஒருவாரம் இங்கே தங்கிச் செல்லும்படி
வேண்டிக் கொண்டான்

ஒருவாரம் தங்கினால் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த துறவி, சற்று நிதானித்துப் பதில் சொன்னார்.

தான் எங்கேயும் தங்குவதில்லை என்றும், ஊருணிக்கரைகளில் உள்ள மண்டபங்களில் மட்டுமே தங்கி ஓய்வெடுப்பது வழக்கம் என்றும் சொன்னார். ஒரு ஊரில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில்லை என்றும் சொன்னார். தன்னுடைய சீடர்கள்
இருவர் காத்துக் கொண்டிடுப்பார்கள் என்றும் சொன்னார்

அரை மனதுடன் அதற்குச் சம்மதித்த மன்னன், சமிக்கை
செய்ய, தேவியரில் மூத்தவள் எழுந்து விரைந்து சென்று
ஒரு தங்கத் தாம்பாளத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்
கொண்டு வந்தாள். அது நிறையப் பொற்காசுகளும், வைர ஆபரணங்களும் இருந்தன. இன்றைய மதிப்பில் அவைகள்
பத்துக்  கோடிகளுக்குத் தேறும்.

அதைக் கையில் வாங்கிய மன்னன், துறவியிடம் நீட்டி,
"இந்த எளியவனின் காணிக்கையாக இதை ஏற்றுக்
கொள்ளுங்கள்" என்றான்.

துறவி புன்னகைத்து மறுத்துவிட்டார்.

"நான் முற்றும் துறந்த துறவி. எனக்கெதற்கு இதெல்லாம்?
ஏழை மக்களுக்குக் கொடுங்கள். எனக்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும் அது மனித நேயம் மட்டுமே!"

மன்னன் விடவில்லை,"என் அரண்மனைக்கு வந்து விட்டு
நீங்கள் வெறும் கையுடன் போகக்கூடாது. வேறு என்ன
வேண்டும் கேளுங்கள். ஆசிரமம் அமைப்பதற்கு நூறு வேலி
இடம் தரட்டுமா?" என்றான்.

"ஆசிரமம் என்னை ஒரு இடத்தில் முடக்கிவிடும். அதுவும் வேண்டாம். ஏதாவது அவசியம் தர வேண்டும் என்று
நினைத்தால், அந்த மாம்பழத்தில் இரண்டைக் கொடுங்கள். அதுபோதும்!"

அதிர்ந்துவிட்ட மன்னன். இரண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தான். துறவி முகமலர்ச்சியுடன்
அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இதுவரை இங்கு வந்தவர்களில் இவரைவிட எளிமையானவர்
எவரும் இல்லை என்பதை உணர்ந்த மன்னன், அந்த எளிமையை வணங்கும் முகமாக அவரை மீண்டும் ஒருமுறை விழுந்து வணங்கிவிட்டுச் சொன்னான்.

"சுவாமி, இப்போதுதான் எனக்கு ஞானம் வந்ததுள்ளது.
ஆசையும், உடைமைகளும்தான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்."

புன்னகைத்த இளம் துறவி புறப்பட்டுவிட்டார். பல்லக்குத்
தூக்கிகள் அவரை ஏற்றிக் கொண்டு போய், புறப்பட்ட
இடத்தில் இறக்கிவிட்டுத் திரும்பி வந்து விட்டார்கள்

மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்ற மன்னன், முதன்
மந்திரியைப் பாராட்டி, அவரிடம் ஆயிரம் பொற்காசுகள் அ
டங்கிய பணமுடிப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினான்.
--------------------------------------------------------------------------------------
அன்று மாலை சூரிய அஸ்தமனமாகி மூன்று நாழிகைகள்
கழித்து, சற்று இருட்டிய நேரத்தில், முதன் மந்திரி, முத்தழகன் வீட்டிற்கு வந்தார்.

ஐந்து மணித்துளிகள் அவன் தந்தையுடன் பேசிவிட்டு, மகிழ்ச்சியுடன் முத்தழகன் இருந்த அறைக்குள் வந்தார்.

மரியாதை நிமித்தமாக எழுந்த முத்தழகனைக் கட்டித் தழுவி, பாராட்டினார்.

"அற்புதமாக நடித்தாய். என்னுடைய எதிர்ப்பார்ப்பையும்
பூர்த்தி செய்தாய். இந்தா இதை வைத்துக்கொள்" என்று
சொல்லி மன்னர் கொடுத்த ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தார்.

அதில் என்ன இருக்கும் என்றுணர்ந்த முத்தழகன் சொன்னான்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம்"

மந்திரிக்கு ஆச்சரியமாகி விட்டது. "மன்னர் கொடுத்தை நீ வேண்டாம் என்று சொன்னதற்கு என்ன காரணம் என்று
என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை அவ்வளவு பணம் இருந்தால் ஆபத்து என்று நினைத்து நீ வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இதை ஏன் வேண்டாம் என்கிறாய்? இதை நான் அல்லவா உவந்து கொடுக்கிறேன்" என்று கேட்டார்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

மந்திரிக்குக் கோபம் வந்துவிட்டது."அட, புரியாதவனே, எதற்கு
இதை வேண்டாம் என்கிறாய்? அதைச் சொல்!"

"இன்று ஒரு நாளில் பல விஷயங்களைத் தெரிந்து 
கொண்டேன். ஒரு உண்மையான துறவிக்கு உள்ள 
மதிப்பைத் தெரிந்து கொண்டேன். எத்தனைபேர்கள் 
காலில் விழுகிறார்கள்!
 எத்தனை உள்ளங்களில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது? 
எத்தனை கண்களில் நீர் சுரக்கிறது? எத்தனை உள்ளங்களில் அமைதி குடிகொள்கிறது? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். 
அதில் ஒரு மகத்துவம் இருக்கிறது. அது என்ன என்பதை 
முழுதாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இன்று 
முதல் நான் துறவியாகி விட்டேன். இந்தப் பாழாய்ப்போன பணத்தைக் காட்டி என் மனதைக் கெடுக்க 
முயற்சிக்காதீர்கள்
 (Don't try to pollute my mind by giving this money!)

"............................."

"மன்னனுக்குச் சொல்லியதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன். இதை ஏழை மக்களுக்குக் கொடுத்து அவர்களுடைய பசியை நிரந்தரமாகப் போக்குங்கள். நீங்கள் இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் பயனில்லாது போகும். ஆகவே நீங்கள் செல்லலாம்"
என்று சொன்னவன் தரையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

மந்திரிக்கு சம்மட்டியால் அடித்தைப் போன்று ஆகிவிட்டது. திகைத்துப்போய் விட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்லமுடியவில்லை. செய்யவும் இயலவில்லை.

அங்கிருந்து கிளம்பித் தலைநகருக்குத் திரும்பினார்.

ஒரு உண்மையான துறவியை உருவாக்கிய மகிழ்ச்சி மட்டும் அவருடைய உள் மனதில் நீண்ட நாட்கள் குடிகொண்டது!
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு ஞானம் பிறக்கிறது என்றால், அதன் பின்னணியில்
கேது இருப்பார். அவர்தான் ஞானகாரகன். ஞானம் ஒருவனுக்கு
எந்த வயதில் வேண்டுமென்றாலும் வரலாம். அல்லது வராமலும் போகலாம்.

ஞானத்தைப் பெற்று ஒருவன் ஞானியாகி விட்டால், இந்த
வாழ்வியல் துன்பங்கள் அவனை ஒன்றும் செய்யாது. அவன்
எந்த பாதிப்பிற்கும் உள்ளாக மாட்டான். அதற்கு ஒரு
கொடுப்பினை வேண்டும்.

ஒரே நாளில் அந்த இளைஞனுக்கு ஞானம் கிடைத்தது பாருங்கள், அதுவும் கொடுப்பினைக் கணக்கில்தான் வரும்!!!!!!
                   
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.18

பஜ்ஜி மகாத்மியம்!!


பஜ்ஜி மகாத்மியம்!!

மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’
– இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல
ஒரு திருப்தி!

மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி
போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு!

அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும்
என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்!
அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி
காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு
நல்ல கும்பகோணம் டிகிரி காப்பியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும்
பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல!
பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வாழ்நாள்
முழுவதும் ஆடிய தலையுடனேயே இருப்பது பஜ்ஜியின்
நீண்ட கால வெற்றியின் ரகசியம்!

மாலை மூணு மணியளவில் கடலை மாவு கரைபடும்போதே களைகட்டி விடும் கிச்சன், உருளை, வாழை, கத்தரி,
வெங்காயம், செள செள எனப்படும் பெங். கத்தரிக்காய்,
எல்லாம் சில்லு சில்லாய் வெட்டப்பட்டு (வெங்காயம் ரிங்கு
ரிங்காய் பிரியாமல், தின் ஸ்லைசுகளாய் சீவுவது ஒரு
தனிக் கலை –ன்னும் பஜ்ஜிக் கலை), பஜ்ஜி மாவில் முக்கி
எடுக்கப் பட்டு, பதமாய்க் கொதிக்கும் புது
எண்ணையில் (முதல் நாள் சுட்ட எண்ணை உதவாது  சில கடைகளில் பஜ்ஜி வாய்க்கு வந்தவுடன் காட்டிக் கொடுத்து
விடும்! மெதுவாய் விடப்படும் - சிறு குமிழிகளுடன் பொறிந்து, பொன்னிறம் ஆனவுடன் சட்டுவத்தில் ( அதாங்க, ஓட்டைகள் நிறைந்த கரண்டி) எடுத்து பாத்திரத்தில் போட்டு விட்டால்
பஜ்ஜி ரெடி!

கொஞ்சம் கரகரப்பாகவும், அதிகம் உப்பாமலும், உள்ளிருக்கும் காயின் வடிவத்தில் சூடாக வந்து விழும் பஜ்ஜியே, உன்னை ஆராதிக்கிறேன்! அப்படியே சூடாகக் கடித்துவிட, முழுங்கவும் முடியாமல், துப்பவும் மனமில்லாமல் வாய் வழியே புஸ் புஸ்
என்று அனல் காற்று வெளியே விட, தின்னும் பஜ்ஜி ஜோர்! பஜ்ஜியைப் பிய்த்து, காயையும், பஜ்ஜி உறையையும் தனித்
தனியே ஊதி ஊதித் தின்பவர்கள் பஜ்ஜியால் சபிக்கப்
பட்டவர்கள்!

காரம் கம்மியாக, திப்பி திப்பியாக தேங்காய்ச் சட்னியும்,
கொஞ்சம் வெங்காய சாம்பாரும் கூட இருந்தால் கோடி சுகம். சாஸோ, கெச்சப்போ ஆபத்துக்குப் பாவமில்லேன்னாலும், இரண்டாம் பட்சம்தான்!

(யாரு, டாக்டரா? எண்ணை கூடாதாமா? .. தண்ணீரில்
பொறியாதே சரி, சரி சாயந்திரம் கிளினிக்குலெ வந்து பார்க்கிறேன்னு சொல்லுங்க ரெண்டு பஜ்ஜியோட!)

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் கிடைக்கிறது  கொஞ்சம் இட்லி/
தோசை மாவைச் சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி கரகரப்பாக இருக்கும் -

ஓரிரண்டு மிமி தடிமனில் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா சீவின
காய்கள், நல்ல பஜ்ஜிக்கு நளபாகத் தரம் தரக்கூடியவை!
ரொம்ப நேரம் எண்ணையில் விடக் கூடாது; ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் நடுவான கலர் உசிதம் அதிகம் சூளையில் சுட்ட கருஞ்செங்கல் நிறம் காசிக்குப் போகாமலேயே பஜ்ஜியை
ஒதுக்கி வைத்துவிடும்! மேற்படி ’டிப்ஸ்’ அகில உலக ’பஜ்ஜி
ரிசர்ச் கமிட்டி’ யினால் பொது மக்கள் நலம் கருதி
பரிந்துரைக்கப் படுகின்றன!

‘மானசரோவரி’ல் கிராமத்து சாலையோர டீக்கடையில்
பஜ்ஜி பொறித்துப் போடுவதை சுவையாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்!

வாழைக்காயை நீளவாட்டில் சீவிப் போடும் பஜ்ஜியை
சின்ன நியூஸ் பேப்பர் தாளில் வைத்துக் கொடுப்பார்கள்
அதில் அழுத்தி எண்ணையை உறிஞ்சிய பிறகு கொஞ்சம்
உலர்ந்த பஜ்ஜி – டீயுடன் அதற்கு மக்களிடையே கிராக்கி அதிகம்!

கேரளாவின் நேந்திரம் பழ பஜ்ஜி ‘பழம்புழுங்கி' ('பழம்பொறி' ?)
ஓர் அசட்டுத் தித்திப்புடன் ரொம்பவும் பிரபலம். ஒன்று
தின்றாலே, ஒரு நாள் முழுக்க பசிக்காது!.

காரம் கம்மியான ஸ்பெசல் மிளகாய் பஜ்ஜி  கடற்கரையில்
மிகவும் பிரசித்தம். பஜ்ஜியின் இக்காலப் பரிணாம வளர்ச்சி!
பிரட் பஜ்ஜி கூட கிடைக்கிறது

‘தூள்பஜ்ஜி’ என்ற சொல்வழக்கு காரைக்குடி பக்கங்களில்
உண்டு பஜ்ஜிக்கும், பக்கோடாவுக்கும் இடைப்பட்ட
ஒரு வஸ்து பொட்டலமாகக் கட்டி விற்பார்கள் – செட்டிநாட்டு சுவையுடன்!

எண்பதுகளில் பாண்டிபசார் சாந்தா பவனில் அறுபது
பைசாவுக்கு ஒரு ப்ளேட் ஆனியன் பஜ்ஜியும் (மூன்று),
நாற்பது பைசாவுக்கு ஒரு ஸ்ட்ராங் காபியும் குடித்த நினைவு
இன்று ஒரு ரூபாய்க்கு சின்ன வெங்காயம் ஒன்று கிடைக்குமா என்பதே சந்தேகம்!

இன்று ‘நொந்து நூடுல்ஸ்’ ஆவதின் அன்றையப் பிரயோகம் ‘பஜ்ஜியாய்ட்டேம்பா!’!

வாழ்க ப.நே.ம.க.!! (பஜ்ஜி நேசிக்கும் மனிதக் கட்சி!).

நன்றி: மாலி சதாசிவம்.
------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.18

துரியோதனனை அலற வைத்த தக்‌ஷகன் என்னும் நாகம்!


துரியோதனனை அலற வைத்த தக்‌ஷகன் என்னும் நாகம்!

கட்டின பொண்டாட்டியே என்றாலும்,,,,,,,,,,,என்ன கேள்வி கேட்கிரோம்ன்னு யோசிச்சு கேளுங்க,,!

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ''ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.

'கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான். உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'

ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, ''இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.

ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.

துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.

அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். #பானுமதி #புற்றில்பால் ஊற்றி #என்னைஉபசரித்து, #வணங்கிஅனுப்ப வேண்டும். அப்போது அவள் #கற்புக்குக்களங்கம் #இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான #துரியோதனனும் என்னை #வணங்க #வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

''அன்று முதல் இன்றுவரை #பௌர்ணமி தோறும் #பாம்புக்குப் #பாலூற்றி #வருகிறாள் #பானுமதி. #துரியோதனனும் #பயபக்தியோடு #பங்குகொள்கிறான். #இந்தச் சம்பவம் #துரியோதனனுக்கும் #பானுமதிக்கும் #தக்ஷகனுக்கும்மட்டுமே #தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.18

Astrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகர் மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் திருவாளர் ஜோதி பாசு அவர்கள்’ தொடர்ந்து 23 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமைக் குறியவர்பிறப்பு விபரம்: 8-7-1914ம் தேதி காலை 11.00 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  20 பேர்கள் சரியான விடையை
எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் மறைந்த முன்னாள் மேற்கு வங்க‌ முதலமைச்சர் மாண்புமிகு ஜோதிபாசுவினுடையது. பிறந்த தேதி 8 ஜூலை 1914
காலை 11 மணி 2 நிமிடங்களுக்கு.பிறந்த ஊர் : கொல்கொத்தா.23 ஆண்டுகள் முதல் அமைச்சராகவே பணி புரிந்தவர்.
ஐந்துக்குடையவர் பத்தில் இருப்பதால் ராஜயோக பலன் உண்டானது. ராஜகிர‌ஹமானவர் 10 ல் இருப்பதால் அரசாங்க நிர்வாகம் உண்டானது. 2,9க்கு உடையவர் லக்கினாதிபதியுடன் 11ல் அமர்ந்தது எல்லாவித செல்வாக்கையும் அளித்தது.
Friday, July 20, 2018 6:14:00 AM
------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Former Chief Minister of West Bengal Mr.Jyoti Basu, born on 08/07/1914 time 11.00am, place West Bengal, Uttradam nakshra magara rasi kanni lagna,lagn Lord in 11th house, Dharma Karmathipathy yoga present,Venus,Saturn and Sun is exalted in navamsa, 10 the house having 34paral, Sun having 8paral, and Saturn having 7paral, During Saturn dasa Venus bukthi makes him Chief Minister.During Ketu dasa
Jupiter bukthi on 17th January 2010 he was died.
Friday, July 20, 2018 9:33:00 AM
--------------------------------------------------
3
Blogger ராஜன் said...
My.Jyothi Basu Former CM of Paschim Banga, longest serving CM in india
Friday, July 20, 2018 10:17:00 AM
-------------------------------------------------
4
Blogger Ravichandran said...
Ayya,
The name of person is: Jyoti Basu..DOB- 8th July 1914.
Yours,
Trichy Ravichandran
Friday, July 20, 2018 11:18:00 AM
------------------------------------------
5
Blogger BM said...
Sir,
Name: Jyoti Basu
Date of Birth: Wednesday, July 08, 1914
Time of Birth: 11:00 AM
Place of Birth: Calcutta
Friday, July 20, 2018 11:37:00 AM
---------------------------------------------------
6
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Ex Chief Minister Jyoti Basu
DoB: 8th July 1914 @ 11.00 AM
Place: Kolkata, India
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, July 20, 2018 11:41:00 AM
-----------------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answer for 20.07.2018 astrology quiz
Mr.Jyoti Basu
Place of Birth: Kolkata, West Bengal, India
Date of Death: 17-Jan-2010
Profession: Politician
Nationality: India
Time :11.45am
Friday, July 20, 2018 11:49:00 AM
----------------------------------------------
8
Blogger angr said...
மேற்கு வங்க மறைந்த முன்னாள் முதல்வர் திரு.ஜோதிபாசு அவர்கள் ஜாதகம்
Friday, July 20, 2018 12:01:00 PM
---------------------------------------------------
9
Blogger ARAVINDHARAJ said...
Name:Jyoti Basu
Date of Birth:08-Jul-1914
Place of Birth:Kolkata,West Bengal.
Profession:Politician.
Friday, July 20, 2018 1:29:00 PM
---------------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் :முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு
DOB/TIME :8-JULY-1914/10.25 A.M
PLACE:KOLKATTA
நன்றி
Friday, July 20, 2018 3:18:00 PM
----------------------------------------------
11
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (CPI-M) அரசியல்வாதியும், 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி, இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றவருமான மறைந்த மாண்புமிகு. சோதி பாசு அவர்கள்.
பிறப்பு : சூலை 8, 1914.
இடம் : கல்கத்தா, பெங்கால் , ப்ரிட்டிஷ் இந்தியா.
நேரம் : காலை 11 மணி.
தமது கட்சியின் பொலிட்பீரோவில் 1964ஆம் ஆண்டு கட்சியின் தொடக்கத்தில் இருந்து 2008 வரை உறுப்பினராக இருந்த
பெருமையும் கொண்டவர்.
Friday, July 20, 2018 5:36:00 PM
--------------------------------------------
12
Blogger ponnusamy gowda said...
JYOTI BASU (Bengali: জ্যোতি বসু Joti Boshu, 8 July 1914 – 17 January 2010; also Jyotirindra Basu) was an Indian politician belonging to the Communist Party of India (Marxist) from West Bengal, India. He served as the Chief  Minister of West Bengal from 1977 to 2000, making him the longest-serving Chief Minister of any Indian state. Basu was a member of the CPI(M) Politburo from the time of the part.
Date of Birth: 08-Jul-1914 @ 13-00 hrs
Place of Birth: Kolkata, West Bengal, India
Date of Death: 17-Jan-2010
Profession: Politician
Nationality: India
Friday, July 20, 2018 6:11:00 PM
----------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 20-7-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர்
முன்னாள் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு ஆவார். பகல் 11.30 மணி அளவில் கொல்கத்தாவில் 8-7-1914ல் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, July 20, 2018 6:55:00 PM
-----------------------------------------------
14
Blogger vijay said...
Name: Jyoti Basu
Date of Birth: 8 July 1914
Place: Calcutta.
Friday, July 20, 2018 7:50:00 PM
------------------------------------------------
15
Blogger Rajam Anand said...
Dear Sir
Answer to the quiz is Jyoti Basu who was born on 8th July 1914 in Kolkata India.
Kind Regards
Rajam Anand
Friday, July 20, 2018 7:52:00 PM
--------------------------------------------
16
Blogger bg said...
Jyoti Basu born on June 8 1914 in Calcatta
Friday, July 20, 2018 8:15:00 PM
------------------------------------------------
17
Blogger thozhar pandian said...
8 ஜூலை 1914 கொல்கத்தாவில் பிறந்த முன்னாள் மேற்கு வங்க முதல்வரான திரு.ஜோதி பாசு அவர்கள்
Friday, July 20, 2018 10:55:00 PM
-----------------------------------------------------
18
Blogger RAMVIDVISHAL said...
Jyothi BasuJuly 1914
Saturday, July 21, 2018 1:37:00 AM
--------------------------------------------------------
19
Blogger Chandrasekaran Suryanarayana said...
Indian Politician : Jyoti Basu
DOB : 8th July 1914 Wednesday
Birth Time : 11:00:00 PM
Birth Place : Calcutta
Log: 88E20
Lat: 22N30
Last Indian president
Saturday, July 21, 2018 2:53:00 AM
---------------------------------------------------
20
Blogger சங்கரராம் நாராயணன் said...
Jyoti Basu on 8 july 1914
Saturday, July 21, 2018 5:24:00 AM
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்! ந


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். அரசியல்வாதி. அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.18

இறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி!

இறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி!


1
ஆப்பிரிக்கா நாட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி இறந்து விட்டாள்.
அவளை அடக்கம் செய்து ஒரு மாதத்திற்கு பின் மண்ணரையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுகொன்டே இருந்தது
தோண்டிப் பார்த்து அந்த குழந்தையை எடுத்த காட்சி காணொளியாக உள்ளது
அவசியம் பாருங்கள்.
இறைவனின் கருணையை என்னவென்பது?


2
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. வெற்றி, தோல்வியை விடுங்கள். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நடுவர்கள் (Referees) நிலைமைதான் சிரமங்கள் மிகுந்தது. காணொளியைக் கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள்



அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.18

நாம் இறந்த பிறகு கூட வருவது எது?


நாம் இறந்த பிறகு கூட வருவது எது?

*பட்டினத்தாரின் ஊசி..*

✨பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே.
ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.
         
*வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்.!!!!*
-------------------------------------------------------------------
படித்தத்தில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.7.18

அதுதான் கொடிய நோய்!


அதுதான் கொடிய நோய்!

இன்றைய சிந்தனை
.............................................

''தற்புகழ்ச்சி..'' Self-praise
-----------------------------------------

போதைகளில் மீளா கடும் போதை - மயக்கங்களிலேயே ஏலா மயக்கம் - எது தெரியுமா? தற்புகழ்ச்சிதான்.

எவ்வளவு சிறந்தவர்களையும் வீழ்த்தும் படுகுழி தற்புகழ்ச்சிதான்!

பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான், நான், நான்,’ ‘தான்’; மறந்தும் ‘நம்ம’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது!

கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘சுயபுராணத்தை கூறிக்கொண்டே இருப்பார்கள்

கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!அவரோ எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்! என்னே தன்னடக்கம்!

உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூடத் தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக்
கொண்டதில்லை..

வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல.நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்..,

ஆம்.,நண்பர்களே..,

அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம்.எந்தவித  எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலை செய்வோம்!!!!
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.7.18

சகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்!


சகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்!

பரமாத்வாவின் வாய்மொழியால் நல்லவன் என்ற பெயரைப் பெற்ற சகுனி!

சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,

இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.

கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.

நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான்.

அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?.கேட்டான் சகுனி.

மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.

இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.

எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.

தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.

மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.

ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.

உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.

இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.

தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.

தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.

நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு...எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.

தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.

காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.

யாகம் தொடங்கலாமே...சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார்.

ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.

யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர்.

குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.

வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.

என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.

ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.

பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி.? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. ?. கேட்டான் அர்ஜுனன்.

அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன்.

போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.
உங்கள் வாரிசுகளை அழித்த பின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.

அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.

அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.

என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.

கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.

பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.

இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.

துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.

இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்...

தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.

என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.

அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.

கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.

தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?

போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.

பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.

பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன், எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.

பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.

கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.

பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.

யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.

பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.

சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.

அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.

என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.

அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.

"என்னை விரும்பி ஏற்பதோ.. விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல. என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.." என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்
-----------------------------------------------------
படித்து வியந்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.18

Astrology: ஜோதிடம்: 13-7-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 13-7-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகரின் பெயரைச் சொன்னால் போதும். அறிமுகம் தேவை இல்லை.
பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவக்! அதிரடி ஆட்டக்காரர்.
பிறப்பு விபரம்: 20-10-1978ம் தேதி அதிகாலை 2:45 மணிக்கு தில்லியில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரமும் கலந்து கொள்ளவில்லை. காரணம் தெரியவில்லை. சுமார்  15 பேர்கள்
சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள்
அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

1
Blogger Maheswari Bala said...
Name: Virender Sehwag
Date of Birth: Friday, October 20, 1978
Time of Birth: 02:45:00
Place of Birth: Delhi
Longitude: 77 E 13
Latitude: 28 N 39
Friday, July 13, 2018 6:29:00 AM
----------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Famous Indian Cricketer Virender Sehwag was born on 20/10/1978 time 2.45am, in New Delhi,Rohini nakshra 2padam,Rishaba rasi, Simma Lagna,Neecha banga raja yoga,Bhramma yoga,Sathurgraha yoga,Maathrumoolathana yoga,vasumathi yoga present, during his rahu dasa he become a famous Cricketer,venus and Mercury combinations makes him sports man along with mars makes him a cricketer.
Friday, July 13, 2018 7:44:00 AM
-----------------------------------------------------
3
Blogger angr said...
பிரபல கிரிக்கெட் வீரர் திரு வீரேந்திர சேவாக் அவர்கள் ஜாதகம்
Friday, July 13, 2018 7:56:00 AM
-----------------------------------------------------
4
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
13-7-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் வலது கை
அதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் ஷேவாக் ஆவார். பிறந்த தேதி அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி. புது டில்லி. நேரம் அதிகாலை 2.48.
இப்படிக்கு
அ.நடராஜன்.
Friday, July 13, 2018 8:18:00 AM
----------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் விரேந்தர் ஷேவாக். கிரிக்கெட் ஆட்டக்காரர்.(தமிழில் துடுப்பு ஆட்ட‌க்காரர்)பிறந்ததேதி 20 அக்டோபர் 1978. காலை 2 மணி 46 நிமிடங்கள். பிறந்த இடம் டெல்லிக்கு அருகில். நல்ல பாட்ஸ்மான் ஆக விளங்குவதற்குக் காரணம் குரு உச்சம், சந்திரன் உச்சம், லக்கினாதிபதி சூரியன் நீச பங்கம் , மூன்றாம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிலேயே.செவ்வாய் தன் வீடான 9 ஐப் பார்வையில் வைத்திருப்பது.படிப்பில் சோடை போகக் காரணம் புதன் அஸ்தங்கதம். நான்காம் வீட்டு அதிபன் செவ்வாய் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தது.ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் காரர்களுக்கு ராகுதசா நன்மை பயப்பதால், ராகு தசா புதன் புக்தியில் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக் கால் பதித்தார்.
Friday, July 13, 2018 9:16:00 AM
----------------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answer for 13.07.2018Quiz
Mr.Virender Sehwag
Date of Birth: 20-Oct-1978
Place of Birth: Delhi, India
Profession: Cricketer
Nationality: India
Zodiac Sign: Libra
Friday, July 13, 2018 10:15:00 AM
----------------------------------------------
7
Blogger vijay said...
Full name Virender Sehwag
Born 20 October 1978 (age 39)
Najafgarh, Delhi,
India
Friday, July 13, 2018 12:03:00 PM
---------------------------------------------------
8
Blogger bg said...
Virender Sehwag famous Indian Cricketer born on October 20 1978 in Delhi.
Friday, July 13, 2018 12:25:00 PM
----------------------------------------------------
9
Blogger ARAVINDHARAJ said...
Name:Virender Sehwag
Date of Birth:20-Oct-1978
Place of Birth:Delhi,India.
Profession:Cricketer.
Friday, July 13, 2018 2:42:00 PM
-------------------------------------------------
10
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is the cricketer Virender Sehwag who was born on 20th October 1978 in Delhi.
Kind Regards
Rajam Anand
Friday, July 13, 2018 2:49:00 PM
----------------------------------------------------
11
Blogger Bala Murugan said...
Name : Virendar Sehwag
D.OB : 20.10.1978
Time : 02.45AM
Friday, July 13, 2018 3:34:00 PM
-----------------------------------------------------
12
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
இந்தியாவின் முன்னாள் வலது கை பேட்ஸ்மேனான "வீரு" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்.
பிறப்பு : அக்டோபர் 20, 1978
நேரம் : காலை 2 மணி 45 நிமிடம்.
இடம் : புதுதில்லி.
Friday, July 13, 2018 6:02:00 PM
-------------------------------------------------------
13
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உய்யவர் :வீரேந்திர சேவக்
DOB/TIME:20-OCTOBER-1978 TIME: 2.45
PLACE :DELHI
நன்றி
Friday, July 13, 2018 6:12:00 PM
---------------------------------------------------
14
Blogger Chandrasekaran Suryanarayana said...
Vanakkam Sir,
Horoscope -Player Name : Virendar Sehwag
DOB : Friday, 10th October 1978
Birth Time : 02:45:00
Place: Delhi
Indian National Cricket Player
Friday, July 13, 2018 10:51:00 PM
-----------------------------------------------
15
Blogger RAMVIDVISHAL said...
Virendhar Sehwag
20/10/1978
Saturday, July 14, 2018 1:40:00 AM
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். விளையாட்டு வீரர் அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.7.18

Astrology: ஜோதிடம்: அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?


Astrology: ஜோதிடம்: அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?
SP.VR. சுப்பையா
-------------------------------------
இன்று உலகில் உள்ள மனிதர்களை இரண்டு பிரிவாக வகைப் படுத்தலாம். ஒன்று பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மலைத்துப் போய் நிற்கும் மனிதர்கள். அதாவது சேர்ந்த பணத்தை, குவிந்து கொண்டி ருக்கும் பணத்தை அல்லது கொட்டிக்கொண்டிருக்கும் பணத்தை எங்கே முதலீடு செய்யலாம் அல்லது பதுக்கலாம் அல்லது என்ன செய்தால் பாதுகாக்கலாம் என்று மண்டையைப் பியத்துக் கொண்டிருப்பவர்கள் முதல் வகை.

பணத்திற்கு, அதாவது தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் அல்லது கிறுகிறுத்துப்போய் செயலற்று நிற்கும் மனிதர்கள் மற்றொரு வகை.

இருவருக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்.

இரு பிரிவினருக்கும் ஜாதகப்படி என்ன வித்தியாசம்?

அதீத பணக்காரர் (Enormously Rich) பெரிய பணக்காரர் (Very rich) பணக்காரர் (rich) செள்கரியமானவர் (well to do) மேல்தட்டு மக்கள் (upper Middle class) நடுத்தர வர்க்கத்தினர் (Middle class) ஏழை (Poor) மிகவும் ஏழ்மையானவர் (Very poor) மற்றும் பரம ஏழை (extremely poor) என்று சற்று விரிவாக வகைப் படுத்தலாம்.

ஜாதகப்படி வகைப்படுத்தலாமா?

படுத்தலாம். முடிந்தவரை விவரித்துக் காட்டுகிறேன். சற்று நீண்ட கட்டுரை. ஒரே ஸ்ட்ரோக்கில் எழுதினால் திகட்டிவிடும். ஆகவே சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுத உள்ளேன். அவைகள் வாரம் ஒரு பகுதியாக சில வாரங்களுக்கு வரும். பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். பிறகு அடுத்த தலைப்பில் வேறு ஒரு மாரத்தான் பதிவு வரும்
---------------------------------------
“அது என்ன மாரத்தான் போஸ்ட் என்ற பெயர்?”

“பாப்கார்ன் பதிவுகளைப்போல, இதுவும் ஒருவகைப் பதிவு என்று வைத்துக்கொள் ராசா!. பொட்டலம் சிறிதாக இருக்கிறதே என்ற பேச்சிற்கெல்லாம் இதில் இடமிருகக்காது. செட்டிநாட்டு விருந்தைப்போல முழுச் சாப்பாடாக இருக்கும். சுவைத்துச் சாப்பிடு ராசா!:-)))
-----------------------------------------
1

நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! முதலில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தலுக்காக எழுதத் துவங்கினேன். அதை நான் விபத்து என்று வேடிக்கையாகச் சொல்வேன்.. அது நடந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தொடர்ந்து பல குட்டிக்கதைகளைச் சொல்லிச் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தேன். வியந்து பாராட்டிய அவர், இத்தனை சுவாரசியமாகப் பேசுகிறீர்களே - எழுதுவீர்களா? என்றார். எழுதினால் இன்னும் அதிகமான சுவாரசியத்துடன் எழுதலாம் என்றேன்.

“இதுவரை ஏன் எழுதவில்லை?” என்றார்

“எழுதினால் அதைப் பிரசுரிப்பதற்கு ஆள் வேண்டுமே? குமுதம் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் எல்லாம், ஸ்டார் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டும்தான் பிரசுரிப்பார்கள். (இது அன்றைய நிலை) ஸ்டார் எழுத்தாளர் ஆவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆகவே எழுதவில்லை!” என்றேன்

“நாங்கள் குறும் பத்திரிக்கைக்காரர்கள்தான். எங்களுக்கு எழுதிக்கொடுங்கள். நாங்கள் பிரசுரிக்கிறோம்” என்று வாக்களித்தார். அப்படித்தான் துவங்கியது எனது எழுத்துப் பயணம். அந்தப் பத்திரிக்கையில் தொடர்ந்து இதுவரை 140ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். ஏராளமான வாச்கர்களின் ஆதரவு இருக்கிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இதழின் ஆத்மார்ந்த வாசகரும், காரைக்குடியின் மூத்த குடிமக்களில் ஒருவருமான திரு.வேங்கடாசலம் செட்டியார் என்பவர் நேரில் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தார்.

“உங்கள் கதைகளில் ஒரு இருபது கதைகளைப் பிரதி எடுத்துக் கொடுங்கள்” என்றார்

“என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முத்து விழா (எண்பதாம் ஆண்டு நிறைவு விழா) வரவுள்ளது. அந்த விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு, உங்கள் கதைகளை ஒரு புத்தகமாக்கிப் பரிசாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்”

“நல்லது. அப்படியே செய்யுங்கள். ஆனால் நான் ஒரு புத்தக ரசிகன். என் புத்தகம் எப்படி வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரு கனவு உள்ளது. ஆகவே நானே ஏற்பாடு செய்து, அச்சிட்டுப் புத்தகமாகத் தருகிறேன். உங்களுக்கு எத்தனை பிரதிகள் வேண்டும்?” என்று கேட்டேன்

“650 பிரதிகளை வாங்கிக் கொள்கிறேன்” என்றார்

அது நல்ல எண்ணிக்கை. உள்ளம் உவகை கொண்டது. சரி தருகிறேன் என்று என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

அடுத்த நொடியே இரண்டு நூறு ரூபாய்க் கட்டுகளை எடுத்து என் மேஜை மேல்வைத்தார்.

“இது எதற்கு?” என்றேன்

“தமிழில் எழுதி எல்லாம் சம்பாதிக்க முடியாது. புத்தகங்களை அச்சிடும் வேலையை உங்கள் கைக்காசை வைத்துச் செய்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் இதை  முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தகம் அச்சாகி வந்தவுடன் மீதம் எவ்வளவு தரவேண்டும் என்று சொல்லுங்கள். தந்துவிடுகிறேன்”

என் கைகளைப் பிடித்துக் குலுக்கி விட்டு, ஆசி வழங்கிவிட்டு, அவர் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இளையராஜா அவர்களின் பின்னணி இசையுடன் அந்தக் கணம் நான் காற்றில் பறந்ததென்னவோ உண்மைதான்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு. அதைத்தான் விதி என்போம்!

என்ன நடந்தது?

என் வாசகருக்குக் கொடுத்த வாக்குப்படி என் புத்தகத்தை 20 சிறுகதைகளின் முதல் தொகுப்பாக இரண்டுமாத காலத்திற்குள் அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன்.

அடுத்த நாளே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்

எனக்குத் தெரிந்த பதிப்பாளர்கள் (Book Publishers) இருவர் சென்னையில் இருந்தார்கள். புத்தகம் வெளியிடுவதில் எனக்கு அனுபவம் (அப்போது) இல்லையாதலால, ஒரு பதிப்பகத்தின் மூலம் புத்தகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன்.

முதலில் ஒருவரிடம் என் புத்தகத்தை வெளியிடுவது குறித்துப் பேசினேன்.

அவர் சாதகமாகப் பேசவில்லை. தமிழில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதைத் தெளிவு படுத்தினார். அத்துடன் கதை, கவிதைப் புத்தகங்களுக்கெல்லாம் அச்சடித்தால் வாங்க ஆள் இல்லை என்றும் கூறினார். ஒரு பிளேட் அடித்தால் (அதாவது ஆயிரம் பிரதிகள் பிரசுரித்தால்) அதை விற்பதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டு காலம் ஆகும் என்றார். புத்தகக் கண்காட்சிகளில் போட்டுத்தான் விற்க வேண்டும் என்றார். அத்துடன் சுஜாதா, பாலகுமாரன் போன்ற பிரபலங்களின் புத்தகங்கள் விற்கும் அளவில் மற்றவர்களுடையது ஐந்து சதவிகிதம் கூட விற்காது என்றும் கூறினார்.

“என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்

“நீங்கள் கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு, ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் எழுதுங்கள். நிறைய விற்கும்!” என்றும் யோசனை சொன்னார்

“அள்ள அள்ளப் பணம் என்னும் தலைப்பிலா?” என்று கேட்டேன். மெல்ல புன்னகைத்தார்

அள்ள அள்ளப் பண்மெல்லாம் எல்லோருக்கும் வராது. அதற்கெல்லாம ஜாதக அமைப்பு வேண்டும். ஜாதகத்தில் இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு பைப். பைப்பிலும் தொடர்ந்து தண்ணீர் வரவேண்டும். அண்டாவும் ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் லக்கினாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். சிலருக்கு இரண்டாம் வீட்டில் பரல்கள் அதிகமாக இருக்கும். கூடவே சனி அல்லது ராகு இரண்டாம் வீட்டில் டென்ட் அடித்துக் குடியிருப்பார்கள். அண்டா இருந்தும் அது ஓட்டை அண்டா. வரும் காசெல்லாம் பல வழிகளில் கரைந்து கொண்டிருக்கும்

“அள்ள அள்ளப் பணம் என்பதெல்லாம் பொய். தள்ளத் தள்ள விதி என்பதுதான் உண்மை! - ‘தள்ளத் தள்ள விதி!’  என்னும் தலைப்பில் எழுதித் தரட்டுமா என்று நகைச்சுவையுடன் கேட்டேன்.

அவர் உற்சாகமாகிவிட்டார். “ஆகா...எழுதிக்கொடுங்கள். ஜோதிடப் புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது!” என்றார்.

“சரி, அதைப் பிறகு பார்ப்போம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்

“நீங்கள் பாதி, நாங்கள் பாதி என்ற கணக்கில் பணம் போட்டால், புத்தகம் சாத்தியப்படும்” என்றார்.

Type setting, page alignment, wrapper designing, bulk purchase of 16.8 map litho paper, off set printing, multicolor wrapper printing, glue binding' என்று பல வேலைகள் உள்ளன. உத்தேசமாக 35 முதல் 40 ஆயிரம்வரை செலவாகும் என்றார்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அடுத்த பதிப்பாளரும் அதையேதான் சொன்னார். பழநி அப்பன் இருக்கிறான் பார்த்துக்கொள்வோம். நாமே முழுப்பணததையும் போட்டு புத்தகத்தைத் தயார் செய்துகொள்வோம் என்று முடிவிற்கு வந்தேன். அத்துடன் உடனே புறப்பட்டுக் கோவைக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

செட்டியார் வந்த அன்றுதான் எனக்கு சனி மகாதிசை முடிந்து, புதன் மகா திசை ஆரம்பமாகியிருந்தது. நான் சிம்ம லக்கினக்காரன் புதன் என் ஜாதகத்திற்கு இரண்டு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஏழில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வைத்திருக்கிறான். நான் நினைத்தபடி எனக்குப் புதன் கை கொடுத்தான். ஒன்று அல்ல மூன்று பத்தகங்களை ஆறு மாத காலத்திற்குள் அடுததடுத்து வெளிக் கொணர்ந்தேன். செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் தொகுப்பு ஒன்று, தொகுப்பு இரண்டு, தொகுப்பு மூன்று என்று என்னுடைய மூன்று புத்த்கங்களும் வெளிவந்ததுடன், அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. (மூன்று தொகுப்புக்களிலும் சேர்த்து மொத்தம் 60 சிறுகதைகள். ஒவ்வொரு தொகுப்புமே 160 பக்கங்கள்.)

புத்தகங்களைப் பதிப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை எல்லாம் புதன் எனக்குக் கற்றுக் கொடுத்தான். அத்துடன் வடிவமைக்கவும், அச்சிடவும் தேவையான நபர்களை எல்லாம் அவனே என் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

புத்தகங்களுக்கு அணிந்துரை வாங்க வேண்டுமே!

என்னுடைய முதல் புத்தகத்திற்கு மனமுவந்து மூவர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். முன்னாள் உச்சநீதி மன்ற நீதியரசரும், அப்போது இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக (Chairman, Law Commission of India) இருந்தவருமான திருவாளர்.டாக்டர், ஜஸ்டிஸ். AR.லெட்சுமணன் அவர்கள்

சிறப்பானதொரு பாராட்டுரை நல்கினார்கள்.  சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் தலைவரான திருவாளர் ப.லெட்சுமணன் அவர்கள் (இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர்) எனது கதைகளை அலசி நல்லதோர் அணிந்துரை நல்கினார்கள். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த திருவாளர். முனைவர், பேராசான், தமிழண்ணல் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கினார்கள். மூவரின் அணிந்துரையுடன் புத்தகம் அழகு பெற்றது.

இரண்டாவது புத்தகத்திற்கு இயக்குனர் SP.முத்துராமன் அவர்களும், பெரும் புலவர்.திரு.ப.நமசிவாயம் அவர்களும், கவித்தென்றல் திரு.காசு. மணியன் அவர்களும் அணிந்துரை வழங்கினார்கள்

என்னுடைய மூன்றாவது புத்தகத்திற்கு தில்லியைத் தலைமைச் செயலகமாகக் கொண்டிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் திரு. சோம வீரப்பன் அவர்கள் அணிந்துரை வழங்கினார் (இவர் இயக்குனர் வசந்த அவர்களின் மூத்த சகோதரர்)

மூன்று புத்தகங்களுமே காரைக்குடியில் உள்ள செல்வந்தர்கள் மூவரின் வீடுகளில் நடந்த மணி விழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் வெளியிடப் பெற்றன.

வெளியீடு என்றால் மண்டபத்தைப் பிடிக்க வேண்டும். அழைப்பிதழ்கள் அனுப்பி வாசகர்கள் மற்றும் நண்பரகளைச் சேர்க்க வேண்டும். தலைமை தாங்க ஒருவரையும், வெளியிட ஒருவரையும், முதல் பிரதியை வாங்கிக் கொள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் பேச இருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். வந்திருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும்.

ஆனால் எனக்கு ஒரு பைசாக் கூட செலவு ஏற்படாமல் பழநிஅப்பன் அதற்கும் வழி வகுத்தான்.

எப்படி நடந்தது அது?

பெரியவர் திரு.மு.வெ,தெ வேங்கடாசலம் செட்டியார்  அவர்கள் மூலமே என்னுடைய முதல் புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்பிக்க
பழநியாண்டவர் அருள்பாலித்தார். ஆமாம். பெரியவரின் முத்து விழா 12-4-2009ம் தேதி காரைக்குடி ஆலங்குடியார் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்றபோது, என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவும் அங்கேயே நடைபெற்றது.

குழந்தைக் கவிஞர் திரு. செல்ல கணபதி அண்ணன் அவர்கள் வெளியீட்டிற்கு தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட, தேவகோட்டை ஜமீந்தார் திரு.சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு கெளரவித்தார்கள்
நகைச்சுவை மன்னரும், பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான திரு.கண.சிற்சபேசன் அவர்கள் பாராட்டுரை நல்கி விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரளான பெருமக்களுக்கு  மதிய விருந்து  அவர்கள் வீட்டிலேயே சிறப்பாக வழங்கப்பெற்றது,

அடுத்து வந்த ஆறு மாதங்களுக்குள் மேலும் இரண்டு புத்தகங்களை காரைக்குடியிலேயே வெளியிட்டுச் சிறப்பிக்க பழநியாண்டவர்
அருள்பாலித்தார் என்றால் அது மிகையல்ல!

கடந்த 9 ஆண்டுகளில் 15 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன். அவற்றுள் “சனீஷ்வரன் படித்த பள்ளிக்கூடம்” என்ற கதைப் புத்தகமும் ”வாரணாசிக்கு வாருங்கள்” என்ற பயணக் கட்டுரைப் புத்தகமும் பலருடைய பாராட்டுக்களையும் பெற்று என்னை ஆதீத மகிழ்ச்சிக்கு ஆளாக்கின!!!!“

அன்புடன்
SP.VR. சுப்பையா,
கோயமுத்தூர் - 641 012
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!