மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.09

சிறுகதை: இருப்பதைக் காப்பாற்றினால் போதும்!


சிறுகதை: இருப்பதைக் காப்பாற்றினால் போதும்!

(அடியவன் எழுதி, ஜனவரி ’2009ல், மாத இதழ் ஒன்றில் வந்த சிறுகதையை,
நீங்கள் படித்து மகிழ இன்று இங்கே பதிவிடுகிறேன்)

Over to my short story
--------------------------------------------------------------

காலம்: 1988ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் - முதல் முகூர்த்த நாள்.

தஞ்சை சிவகங்கை பூங்காவிற்கு அருகில், மேல ராஜ வீதியில் இருக்கும் பத்திர
எழுத்தர் திருப்பதியின் அலுவலகம். அலுவலகம் என்று சொல்வதை விட கடை
என்று சொல்லலாம். பத்துக்குப் பதினைந்து அடி இடத்தில் இருந்தது.

வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த கதிரேசன் செட்டியாரும்,
அவருடைய மகன் சிவநேசனும் எழுத்தர் கூப்பிட்டவுடன், எழுந்து உள்ளே
சென்றார்கள்.

பன்னிரெண்டு மணிக்குள் பத்திரத்தை, பதிவு அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகம் அருகில்தான் இருக்கிறது.

தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் இருக்கும், தனது
பூர்விகச் சொத்தான பத்து ஏக்கர் நிலத்தை செட்டியார் இன்று விற்கிறார். இடத்தை
வாங்கிக் கொள்ளும் புண்ணியவான் பத்திரத்தைப் படித்துப் பார்த்து வீட்டில்
இருந்தே கையெழுத்தைப் போட்டு அனுப்பிவிட்டார். பதியும் நேரத்திற்கு
நேரடியாக பதிவு அலுவலகத்திற்கே வருகிறேன் என்று சொல்லி விட்டார்.

அப்போதுதான் இது நடந்தது.

செட்டியாரால் பேனாவைப் பிடிக்க முடியவில்லை. கை நடுங்கிற்று. கையில்
பிடித்திருந்த ரைட்டர் பேனா

நெட்டுக்குத்தாகத் தரையில் விழுந்து தன் முனையை இழந்துவிட்டது.

பார்த்துக்கொண்டிருந்த சிவநேசன், அப்பச்சியின் கையை அழுத்தமாகப் பிடித்தான்.
"சார் ஒரு நிமிடம் பொறுங்கள்!" என்று எழுத்தரிடம் சொல்லி விட்டு, கடையை
விட்டு வெளியே வந்து, தன் தந்தையாரிடம் பேச்சுக் கொடுத்தான்:

"அப்பச்சி, முழுச் சம்மதத்துடன்தானே வந்தீர்கள்? கை நடுக்கம் ஏன்?"

"தவறு செய்கிறேனோ என்று நினைத்தேன்.....அதனால்தான் நடுக்கம்!"

"உங்கள் நிலத்தை நீங்கள் விற்கிறீர்கள்.அதுவும் மகனின் மேல்படிப்பிற்காக
விற்கிறீர்கள். அதில் என்ன தவறு?"

"நான் சம்பாதித்து வாங்கியிருந்த நிலம் என்றால் நடுக்கம் வராது. இது எனது
பூர்வீகச் சொத்து. வழிவழியாக வந்தது. அதை விற்கும் உரிமை எனக்கு இல்லை.
அதில் வரும் வருமானத்தை நான் பெருக்கலாம் அல்லது அனுபவிக்கலாம்.
தர்மப்படி விற்கும் உரிமை எனக்கு இல்லை?"

"வைத்திருந்து கடைசியில் என்ன செய்யப்போகிறீர்கள்?"

"அதைக் காப்பாற்றி குடும்பவாரிசான உனக்காக வைத்துவிட்டுப் போவதுதான் முறை!"

"என் படிப்புச் செலவிற்காகத்தானே விற்கிறீர்கள்?"

"உன்னைப் படிக்க வைப்பது என் கடமை. அதற்காகப் பூர்வீகச் சொத்தை விற்பது
நல்லதல்ல! தர்மத்தை மீறுவதாகத் தோன்றுகிறது."

முன் ஜென்மம் ஒன்றில் பஞ்சபாண்டவர்களில் மூத்தவராக தன் தந்தை
இருந்திருப்பாரோ என்று ஒரு கணம் நினைத்த சிவநேசன், மெல்லிய குரலில்
பேசத் துவங்கினான்.

"அப்பச்சி மாட்டைக் கொன்று தின்பதுதான் தப்பு. மாட்டை விற்று விட்டு வேறு
நல்ல செலவு செய்வதில் தப்பு இல்லை. நம்பிக்கை வையுங்கள். இடத்தை
விற்போம். என்னைப் படிக்க அனுப்புங்கள். பல சிரமங்களுக்கிடையே
என்னை நீங்கள் பொறியியல் பட்டப் படிப்புவரை படிக்க வைத்து விட்டீர்கள்.
அமெரிக்கா சென்று எம்.எஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது என்பதால்
மேலே படிக்க ஆசைப்படுகிறேன். படித்து முடித்த மூன்று ஆண்டுகளுக்குள்
இதைப்போல இரண்டு மடங்கு இடத்தை உங்களுக்கு நான் வாங்கித் தருகிறேன்.
எனக்கு சிவநேசன் என்று பெயர் வைத்தீர்கள். சிவன்மேல் உங்களுக்கு நம்பிக்கை
வேண்டாமா? தஞ்சைப் பிரகதீஷ்வரர் நமக்குத் துணையிருப்பார். நடுக்கத்தை
விட்டு விட்டு நம்பிக்கையோடு வாருங்கள். நேரம் ஆகிறது!"

மகன் பேச்சில் இருந்த தெளிவை உணர்ந்ததும், கதிரேசன் செட்டியாரின் மனம்
ஆறுதல் அடைந்தது.

சட்டென்று உள்ளே சென்றவர், பத்திரத்தின் அத்தனை பக்கங்களிலும்
சிரத்தையாகக் கையெழுத்தைப் போட்டு முடித்தார்

சொன்னபடி சிவநேசன் செய்தானா?

தொடர்ந்து படியுங்கள்!

**********************************************

காலம் 2008ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் பெளர்ணமித் திதியுடன் கூடிய
நன்னாள். அதிகாலைச் சூரியன் தன் பவனியைத் துவங்கிவிட்ட காலை நேரம்.
தென்றல் மனதை ரம்மியமாக வருடிக்கொண்டிருந்தது.

"பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை யென்பிழையைப் பொறுப்பானை பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையனென்றறிய வொண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி யாரூரானை மறக்கலுமாமே ! "

என்று நாவுக்கரசப் பெருமானால் பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜப் பெருமான்
கோவில் வளாகத்திற்கு முன்பு, படகுபோல வந்து நின்ற ரோல்ஸ் ராய்ஸ்
ஃபாண்ட்டம் வி.12 காரைப் பார்த்தவுடன், வாசலில் நின்று கொண்டிருந்த
தலைமைக் குருக்கள் பட்டு அய்யர் பரபரப்படைந்தார். அவ்வளவு பெரிய
மற்றும் அழகான காரை அவர் இதுவரை பார்த்ததில்லை. ஆகையால் அந்தப்
பரபரப்பு.

வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய சிவநேசன், 30 ஏக்கர் இடத்தில் அமைந்த
அந்தத் திருக்கோவிலையும், எதிரில் பிரம்மாண்டமாக இருந்த கமலாலயம்
திருக்குளத்தையும் பார்த்து மகிழ்ந்து கைகளைத் தன் சிரசிற்கு மேலே உயர்த்தி
வணங்கினான்.

என்ன வினோதம் பாருங்கள். வந்தவன் கோவிலை வணங்க, கோவிலின்
தலைமைக் குருக்களோ அவனை வணங்கி "வாங்கோ, வாங்கோ" என்று
அன்பு மேலிடச் சொன்னார்.

காரின் பின் இருக்கையில் இருந்து இன்னோருவரும் இறங்கினார். அவர்
பெயர் அண்ணாமலை செட்டியார். வயது அறுபத்தைந்து. தேசிய வங்கி ஒன்றின்
தலைமைப் பதவியில் இருந்து பணி ஓய்வுபெற்றவர், தற்சமயம்

சிவநேசனின் நிறுவனங்களுக்குத் தலைமை மேலாளராகப் பணி புரிகின்றார்.

அதற்குள் வண்டியின் ஓட்டுனர் ஓடிச்சென்று காரின் டிக்கியைத் திறந்து,
அதிலிருந்து இரண்டு பெரிய தூக்குக் கூடைகளை இறக்கி வைத்தார்.
ஒன்றில் பன்னீர்ப்பூ மாலைகள் இருந்தன. மற்றொன்றில் அர்ச்சனைச்
சாமான்கள் இருந்தன.

குருக்களைத் தொடர்ந்து வந்த கோவில் சிப்பந்திகள் இருவர், அவற்றைக்
கையில் எடுத்துக் கொண்டனர்

சொற்றுனை வேதியன், சோதி வானவனான சிவபெருமானை மனதில்
நினைத்துக் கொண்டே சிவநேசன் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தான்.
மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

அடுத்த முப்பது நிமிடங்களில், சுவாமி, மற்றும் அம்பாள் சன்னதியில்
சிவநேசனுக்கு சூப்பராக தரிசனம் செய்து வைக்கப்பட்டது.

தலைமைக்குருக்கள் கோவில் பிரசாதங்களை வழங்க, பெற்றுக் கொண்ட
சிவநேசன், மெல்லிய குரலில் கேட்டான்," எத்தனை பேர்கள் இங்கே
பணிபுரிகிறீர்கள்?"

அய்யர் பதில் உரைத்தார், "நிரந்தப் பணியில் முப்பது பேர்கள் இருக்கிறோம்."

முப்பது ஆயிரம் ருபாய்த் தாள்களைத் பிரசாதத் தாம்பளத்தில் வைத்துக்
கொடுத்த சிவநேசன், "அனைவருக்கும் சமமாகக் கொடுத்து விடுங்கள்" என்றான்.
தொடர்ந்து திருக்கோவில் வங்கிக் கணக்கின் பெயரைக்கேட்டு,
ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையையும் எழுதிக் கொடுத்தான்.

குருக்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போவிட்டார்,"நீங்கள் என்றும் ஷேமமாக
இருக்க வேண்டும்' என்று பலத்த குரலில் சொல்லவும் செய்தார். அருகில் இருந்த
கோவிலின் சிப்பந்திகளும் அதையே சொன்னார்கள்.

திருக்கோவிலை விட்டு வெளியே வந்த சிவநேசன், "சுவாமி, தேரடி வீதியில்
திண்ணப்ப செட்டியார் மடம் இருந்ததே, அது எப்படி இருக்கிறது?" என்று
வினவினான்.

இச்சுக் கொட்டிய அய்யர்,"சிலாகித்துச் சொல்லும்படியான நிலைமையில்
அது இல்லை!'" என்று துவங்கி அதன் இன்றைய நிலைமையை விவரித்துச்
சொன்னார். அதைக் கேட்ட சிவநேசன் ஒரு நிமிட நேரம் வருத்தத்திற்கு
ஆளானாலும், மனதை வசப்படுத்திக் கொண்டு பேசினான்.

"அந்த மடத்தின் வாரிசுதாரர் ஆதப்ப செட்டியார் இங்கே இருப்பதாகச்
சொன்னீர்களே, அவருடைய வீட்டைக் காட்ட முடியுமா?"

"உங்களுக்குச் செய்யாமலா? நானே வந்து காட்டுகிறேன்!"

சிவநேசனுடன், அய்யரும், அண்ணாமலை செட்டியாரும் ஏறிக் கொள்ளக்
கார் புறப்பட்டது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நகரத்தார்கள் வீடுகளுக்கு ஒரு பெருமை உண்டு. அதன் பிரம்மாண்டத்தை,
பொறியாளர்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் இல்லாத காலத்தில்
கட்டப்பெற்ற அதன் சிறப்பைப் பலர் சொல்வார்கள். அதைவிடச் சிறப்பு
ஒன்று உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வரலாறு இருக்கும். வாழ்ந்த
வரலாறு இருக்கும்.

இன்றைய வருமானத்தில் அல்லது பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள்
இருந்தாலும், வரலாறுகள் அதன் சுவையில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி
அசத்தலாக இருக்கும். திரைகடலோடி திரவியம் சேர்த்த வரலாறு அது.
கேட்கக் கேட்கச் சுவையாக இருக்கும். மனதைப் புரட்டிப்போடும். ஒவ்வொரு
வீட்டின் வரலாற்றையும் கேட்டு பக்கம் பக்கமாக, தனித்தனியாக எழுதலாம்.

திருவாரூர் திண்ணப்ப செட்டியார் மடத்திற்கும் அப்படியொரு வரலாறு
உண்டு. நூறு ஆண்டு வரலாறு சென்ற தலைமுறையைச் சேர்ந்த செட்டியார்கள்
அனைவருக்கும் அது தெரியும்.

1908ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் கட்டப்பெற்ற
பெரிய மடம். இருநூறு பேர்கள் வசதியாகத் தங்கலாம். அந்தக் காலத்தில்
திருவாரூரின் சுற்றுப் புறங்களில் பண்னைகள் இருந்த நகரத்தார்கள்
வண்டிகட்டிக் கொண்டு வரும் வழியில் இளைப்பாறிவிட்டுச் செல்வதற்கும்,
வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் நான்கைந்து நாட்கள் தங்கிவிட்டுச்
செல்வதற்கும் அது பயன் பட்டது. உவந்து தங்குவதற்கு இடமும், உபசரிப்போடு
மூன்று வேளை உணவும் கிடைத்ததால் அது புகழோடு, பெருமையையும்
பெற்றது.

அதைக் கட்டிய பெருந்தகை அதற்குச் சிவமடம் என்றுதான் பெயர்வைத்தார்.
காலப்போக்கில் அது திண்ணப்பசெட்டியார் சிவமடமாகி, பிறகு திண்ணப்ப
செட்டியார் மடம் என்று அறியப்பெற்றது.

மாதம் மும்மாரி பொழிந்த காலம் அது. தஞ்சை மாவட்டம் தரணிபோற்றும்
பூமியாக, காவிரி அன்னை காதல் கொண்ட பூமியாக மற்றும் அவளுடைய
புகுந்த வீடாக விளங்கிய காலம் அது.

திண்ணப்ப செட்டியாருக்கு திருவாரூரைச் சுற்றி ஐநூறு ஏக்கர் விளை
நிலங்கள் இருந்தன. வருடம் மூன்று போகம் நெல் விளைச்சல்.
பணம் மழையாகக் கொட்டியது.

நகரத்தார்கள் இறைவனைப் பங்குதாரனாக வைத்துக் கொண்டுதான் வணிகம்
செய்வார்கள். லாபத்தில் இரண்டிலிருந்து பத்து சதவிகிதம் வரை எடுத்து
இறைப் பணிக்காகச் செலவு செய்வார்கள். சிவபக்தரான திண்ணப்ப செட்டியார்,
சிவனைச் சரி பங்குதாரனாக மனதில் வரிந்து கொண்டு விவசாயம் செய்ததோடு
இறைப் பணியையும் செய்தார். அதனால்தான் அவரால், அவ்வளவு பெரிய
மடத்தைக் கட்டவும், பெரும்பொருட் செலவில் தொடந்து அதை நடத்தவும்
முடிந்தது.

மூன்று தலைமுறைகள் வாழ்ந்தவர்களும் இல்லை, மூன்று தலைமுறை
களாகக் கெட்டுப் போனவர்களும் இல்லை என்பார்கள். திண்ணப்ப செட்டியாரின்
கொள்ளுப் பேரன் ஆதப்பனின் காலத்தில்தான் சரிவு ஆரம்பமானது.

காவிரித் தாயின் கண்ணீரை மட்டும் வைத்து எப்படி விவசாயம் செய்வது?
வறண்டு போன தஞ்சை மாவட்டத்தை விட்டு, வெளியேற மனமில்லாமல்,
பல தொழில்களைச் செய்த ஆதப்பன் கடைசியில் பல வழிகளில் அனைத்தையும்
இழந்தான். மிஞ்சியது மடம் மட்டுமே! நெல் வணிகர் ஒருவருக்கு அதை
வாடகைக்கு விட்டுவிட்டு, அந்த வாடகையில் கடந்த பத்து ஆண்டுகளாக
குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான்.

'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று சொல்லும் விதமாக கல்யாண
வயதில் இரண்டு மகள்களும், கல்லூரிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனும்
உடன் இருந்தார்கள். அவனுடைய மனைவி புண்ணியவதி. வாயையே திறக்க
மாட்டாள். நீங்கள் பிழைத்த பிழைப்பு சரியில்லை என்று குத்திக் காட்டவும்
மாட்டாள். அது ஒன்று மட்டுமே ஆறுதலான விஷயம்.

************************************************

படகு போன்ற கார் ஒன்று தங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பதையும்,
அதிலிருந்து இருவர் இறங்குவதையும் பார்த்த ஆதப்ப செட்டியாரும்,
அவருடைய மனைவியும் ஒருவிதக் குறுகுறுப்போடு வாசலை எட்டிப்
பார்த்தார்கள்

வந்தவர்கள் படியேறி வரவும், "வாங்க' என்று அன்போடு வரவேற்றார்கள்.

ஆச்சி ஓடிச் சென்று, இருப்பதில் நல்ல பாயாக ஒன்றை எடுத்து உள் கட்டில்
விரித்து, வந்தவர்களை அமரச் சொன்னார்கள்.

சிவநேசன்தான் முதலில் பேசினான்.

"அண்ணே, என்னைத் தெரிகிறதா?"

ஆதப்ப அண்ணன் நெளிந்தார். என்ன சொல்வது? ஞாபகப்படுத்திப் பார்க்க
முடியவில்லை. புன்னகை செய்தார்.

சிவநேசன் தொடர்ந்து பேசினான்.

"இருபது வருடங்களுக்கு முன்பு இங்கே சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் கடை
வைத்திருந்தார்களே கதிரேசன் செட்டியார் - அவருடைய மகன் நான்"

சுரீர் என்றது அவருக்கு. நினைவு வந்துவிட்டது.

"கதிரேசண்ணன் மகனா நீங்கள்? உங்களை நீங்கள் சின்னப் பையனாக
இருந்த காலத்தில் பார்த்தது. உங்கள் தந்தையாருடன் எங்கள் மடத்திற்கு
அடிக்கடி வருவீர்கள்"

தொடர்ந்து பழைய கதைகளைப் பேசினார்கள். இருந்த பாலில் ஆச்சி
இருவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்கள்.

கடைசியில் அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்படும் முன் சிவநேசன்
முத்தாய்ப்பாகச் சொன்னான்.

"அண்ணே பல தர்மங்களைச் செய்த குடும்பம் உங்கள் குடும்பம்.
தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள் உங்கள் குடும்பத்தினர்.
மடமும், உங்கள் குடும்பமும் பழைய நிலைமைக்கு வர வேண்டும்.

இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். எல்லா உதவிகளையும்
முன்னின்று செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். எந்தப் பிரதிபலனும்
எனக்கு வேண்டாம். இந்த விஸிட்டிங் கார்டில் என்னுடைய சென்னை
முகவரி இருக்கிறது. ஒரு வாரத்திற்குள் வந்து பாருங்கள்.வேண்டியதைச்
செய்கிறேன்"

விஸிட்டிங் கார்டுடன், ஐம்பதாயிரம் ரொக்கத்தையும் சேர்த்து நீட்டினான்
சிவநேசன்

******************************************

அடுத்தடுத்து எல்லாம் நடந்தன.பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தால்
என்னதான் நடக்காது?

மூன்றே மாதங்களில் மடம் பழைய பொலிவைப் பெற்றது. மடத்தின் திறப்பு
விழாவிற்கு ஆயிரம் பேர்களுக்கு மேல் அழைப்பு அனுப்பப்பெற்றது.
இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தன்னை, தன் உதவியை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத சிவநேசன்,
மூன்று தினங்களுக்குப் பிறகே மண்டபத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினான்.

திரும்பும் முன்பாக ஆதப்ப செட்டியாரின் குடும்பத்திற்கு, தன்னுடைய
என்.ஆர்.ஐ வங்கிக் கணக்கில் இருந்து மாற்றி எடுக்கப்பெற்ற வைப்பு நிதிக்
கணக்கிற்கான ரசீதையும் அவர் கையில் கொடுத்தான். ஒரு கோடி ரூபாய்
பணத்திற்கான வைப்பு நிதி அது. வருடம் ஆறு லட்ச ரூபாய் வட்டிப் பணமாக,
வீடு தேடி வரும். அவருடைய குடும்பம் உணவிற்காகப் பொருள் தேடுதல்
இன்றி இருப்பதற்காக அந்த உதவி.. அதோடு உங்கள் பெண்கள் இருவருக்கும்
வரன்களைத் தேடுங்கள், திருமணத்தை நான் நின்று நடத்தி வைக்கிறேன் என்று
வாக்கும் கொடுத்து விட்டு வந்தான்.

கார், தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் விரைந்த போது, மேலாளர்
அண்ணாமலை செட்டியார், சிவநேசனுடன் பேச்சுக் கொடுத்தார்.

"தம்பி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஒன்று மட்டும் சற்றுப் பிடிபடவில்லை.
கிட்டத்தட்ட உங்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.
உங்களுக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல! பத்து நாள் வருமானம்.
இருந்தாலும் அத்தனை பணத்தையும் இந்த ஒரே குடும்பத்திற்குக்
கொடுத்ததற்கு ஏதாவது ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறதா
சொல்லுங்கள்!"

"ஆகா, இருக்கிறது!"

"சொல்லுங்கள். கேட்டுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்"

"படிப்பதற்காக நான் அமெரிக்கா சென்றபொது, எங்கள் தந்தையார்
எங்களுடைய பூர்வீகச் சொத்தான பத்து ஏக்கர் நிலத்தை விற்றார் என்று
சொல்லியிருக்கிறேன் அல்லவா? இந்த ஆதப்ப செட்டியாரின் தந்தைதான்
அந்த நிலத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்குப் பணத்தைக் கொடுத்தார்.
படிப்பிற்காக விற்கிறோம் என்று தெரிந்ததால், சந்தை மதிப்பைவிட இரண்டு
மடங்கு பணத்தை அன்று அவர் கொடுத்தார். அந்தப் பெருந்தன்மைக்கும்,
கொடைத் தன்மைக்கும் நான் என் உயிர் உள்ளவரை தலை வணங்க வேண்டும்."

"அதற்குக் காரணம் சரியானதுதான். மடத்தை எதற்காக இவ்வளவு பொருள்
செலவு செய்து சீரமைத்தீர்கள்?

அந்தப் பணத்தில் நீங்கள் புதிதாகத் தங்கும் விடுதி ஒன்றை உங்கள் குடும்பத்தின்
பெயரில் கட்டியிருக்கலாமே?"

"தர்மம் செய்வதில் பெயர் முக்கியமில்லை. கோவிலில் ஒரு குழல் விளக்கைப்
போட்டுவிட்டு, அதில் பெயரை எழுதினால் பெயர் நிற்கும். தர்மம் அடிபட்டுவிடும்.
ஆகவே பெயர் முக்கியமில்லை. நகரத்தார்கள் வசிக்கின்ற ஊர்களிலும்,
ஸ்தலங்களிலும் போதுமான அளவிற்கு விடுதிகள் உள்ளன. யாரும், எதையும்
புதிதாகக் கட்ட வேண்டாம். அவசியமுமில்லை! இருப்பதைப் புதுபித்தாலே
போதும்! இருப்பதைப் பராமரித்தாலே போதும்! அல்லது பராமரிப்பதற்கு உதவி
செய்தாலே போதும்!

என்னவொரு தெளிவான சிந்தனை. அதுவும் இந்த வயதில். அண்ணாமலை
செட்டியார் அசந்து போய்விட்டார். கண்கள் இரண்டும் பனித்து விட்டன.
தன்னையறியாமலேயே அவருடைய இரண்டு கரங்களும் சிவநேசனை
வணங்கின! உள்ளம் மகிழ்ந்து உவகையால் நிறைந்தது.

===========================================================================
”வாத்தி(யார்) எதற்காக வகுப்பறையில் நீங்கள் எழுதிய சிறுகதை? இதுவும் பாடக்கணக்கிலா?”

“படிப்பனைக் கணக்கில்!”

“என்ன படிப்பினை?”

“படிக்கவைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் விற்கலாம். இரண்டு அவ்வாறு படித்துவிட்டு வருபவன், தான்

வந்தவழியை, தனக்கு உதவியர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.”

--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

28.7.09

மறுக்கமுடியாத உண்மைகள்!

மறுக்கமுடியாத உண்மைகள்

இன்று, வீடுகள் பெரியதாகி விட்டன;குடும்பங்கள் சின்னதாகிவிட்டன.

பட்டப்படிப்பு வகைவகையாக வளர்ந்து விட்டது; பொது அறிவு தளர்ந்து விட்டது.

மருத்துவத்தில் முன்னேறிவிட்டோம்; ஆரோக்கியத்தில் பின்தங்கி விட்டோம்.

சந்திரனைத் தொட்டு விட்டோம்; ஆனால் அடுத்த வீட்டில் குடியிருப்பவன் பெயர் தெரியாது.

வருமானம் அதிகமாகிவிட்டது; மன அமைதி குறைந்து விட்டது

இதுதான் நிதர்சனமான உண்மை!
--------------------------------------------------------------

அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.

இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்தது இறைவனின் கருணை!

கவலைகளை உதறிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள்.

மற்றவர்களையும் அனுபவிக்க விடுங்கள்!
-----------------------------------------------------------------
”வாத்தி (யார்), எதற்காக இது?”

”சும்மா, ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருந்தால் போரடித்துவிடும்.
ஒரு மாறுதலுக்காக இது!”

வாழ்க வளமுடன்!

27.7.09

பந்து பொறுக்கிப்போட மட்டுமே அவர்கள்!


பந்து பொறுக்கிப்போட மட்டுமே அவர்கள்!

அஷ்டக் வர்கா (அஷ்டக வர்கம்) என்பது ஏதோ வடநாட்டைச் சேர்ந்த நொறுக்குத்தீனி.
பானிபூரி, பேல்பூரியைப் போல அதுவும் தமிழ் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த
சாட் (chat) அயிட்டம் என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
இது உங்களுக்கான பதிவு அல்ல!

மற்றவர்கள் உள்ளே வாருங்கள்!
---------------------------------------------------------------------
Ashtaka means “consisting of eight”
Varga means “a group”.

எட்டுப் பேரைக் கொண்ட ”படை” என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் படையில் உள்ள வீரர்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,
சுக்கிரன், சனி & லக்கினம்.

அந்த வீரர்களின் வலிமை ஜாதகத்திற்கு ஜாதகம் வேறுபடும்.

ராகு & கேது?

அவர்களை இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. பந்து பொறுக்கிப்போட
மட்டுமே அவர்கள்.

அவர்களை ஏன் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால், அவர்களுக்கு சொந்தமாக
Dress, Shoe, Tennis Rocket என்று எதுவும் கிடையாது (அதாவது அவர்களூக்குச்
சொந்த வீடு இல்லை!)

தோற்றம், அறிவு, படிப்பு, புத்திசாலித்தனம், திறமை, குணம், பார்க்கும் வேலை,
வாங்கும் சம்பளம், சொல்வாக்கு, செல்வாக்கு, ஆகியவற்றை வைத்து மதிப்பெண்கள்
கொடுத்தால், எல்லோருக்கும் விதம்விதமான மதிப்பெண்கள் வரும்.

அதுபோல உங்கள் ஜாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, உங்கள் ஜாதகத்தில்
உள்ள கிரகங்கள், உள்ள 12 வீடுகள் ஆகியவற்றிற்கு மதிப்பெண் போட்டால் என்ன
கிடைக்கும்?

அது உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள், இருக்கும் இடம், இருக்க வேண்டிய இடம்,
ஆதிபத்யம், காரகத்துவம், பார்வை, சேர்க்கை போன்றவற்றை வைத்து, கிடைக்க
வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கும்!

கிரகம் எல்லா செமஸ்டர்களிலும் பாஸான அல்லது பெயிலான மார்க் சீட் கிடைக்கும்.
அதுபோல எல்லா கிரகங்களுக்கும் ப்ளஸ் லக்கினத்திற்கும் போட்டால் மொத்தம் எட்டு
மார்க் சீட்டுகள் கிடைக்கும். அந்த எட்டு சீட்டையும், மேஷம் முதல் மீனம் வரை வரும்படி
அமைத்துக் கூட்டிப் பார்த்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண்கள் தெரியவரும்.
அதைவைத்துப் பலன் சொல்வது கொஞ்சம் சுலபம்!

மதிப்பெண்களுக்குப் பெயர் பரல்கள்.

தனித்தனியாக கிரகங்களுக்குப் போடுவது சுயவர்க்கப் பரல்கள்.
மொத்தமாகக் கூட்டி வருவது மொத்தப் பரல்கள் அல்லது அஷ்டகவர்க்கப் பரல்கள்.

அப்பாடா, ஒரு வழியாகப் புரிய வைத்து விட்டேன் (?)
இதற்குப் பெயர்தான் அஷ்டகவர்க்கம்!
===========================================================================
அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று நிறையப் பேர்கள்
கேட்டுள்ளார்கள். அதைக் கீழே கொடுத்துள்ளேன். இப்போது மென்பொருள் உள்ளதால்
அது கணித்துக் கொடுத்துவிடும்.

ஆகவே அந்தப் பாடத்தைக்கற்றுக் கொள்வது தேவையற்றது. நேரத்திற்குக் கேடு
என்பது என் எண்ணம். ஒரு மணி நேரம் ஆகும்

நான் கற்றுக்கொண்ட காலத்தில் கணினி எல்லாம் கிடையாது. வேறு வழியில்லாமல்
மண்டையைக் குடைந்து அதையெல்லாம் மனதில் ஏற்றினேன்.

இல்லை, நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். என்பவர்களுக்காக
அவற்றைக் கஷ்டப்பட்டு Excel Formatல் தட்டச்சு செய்து 6.2.2008 தேதியிட்ட
இடுகையில் கொடுத்திருக்கிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் அதைப் படித்து இன்புறலாம் அல்லது கஷ்டப்படலாம்:-)))
----------------------------------------------------------------------------------
மற்றவர்கள் இந்த இணைய தளத்தில் உள்ள மென்பொருளைத் தரவிறக்கம் செய்து
உங்கள் கணினியில் சேமித்து வைத்து உபயோகியுங்கள்.
(மென்பொருள் = software, தரவிறக்கம் = download)
அது உங்களுக்குச் சிறந்த முறையில் பயன்படும்!
======================================================
அதற்கான மென்பொருள் - Jagannatha hora - இணையத்தில் கூவிக்கூவி இலவசமாகத்
தருகிறார்கள். வாங்கிக் கொள்ளூங்கள். கூவிக்கூவிக் கொடுக்கும் இடத்தின் பெயர்
இங்கே உள்ளது.

மவுசை வைத்துக் கிளிக்கினால், அங்கே போய்விடலாம்!


---------------------------------------------------------------------
இப்போது உங்களுக்காக இரண்டு விளக்கப் படங்கள்





இது இந்தியாவின் ஜாதகம்

இது இந்தியாவின் அஷ்டகவர்க்க் Chart
சிவப்புக் கலரில் குறியிடப்பட்டிருப்பது இந்த்திய ஜாதகத்தில்
குரு’ வின் சுயவர்க்கப்பரல்
=================================================
இந்திய ஜாதகத்தின் பரல்களைப் பார்த்து, இப்படிக் குறித்துக் கொள்ளுங்கள்!

ரிஷப லக்கினம் - 4
மிதுனத்தில் செவ்வாய் - 2
...................................
கடகத்தில் சூரியன் - 4
கடகத்தில் சந்திரன் - 5
கடகத்தில் சனி - 2
கடகத்தில் புதன் - 4
கடகத்தில் சுக்கிரன் - 4
இந்த ஐவரும் லக்கினத்தில் இருந்து 3ஆம் இடமான கடகத்தில் இருக்கிறார்கள்.
அவர்களின் சுயவர்க்கப் பரல்களை, அவர்களின் பெயர்களுக்குப் பக்கத்திலேயே
குறித்துள்ள்ளேன். தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்
------------------------
துலாத்தில் குரு - 4
=====================================
இந்தியாவின் லக்கினம் ரிஷப லக்கினம். லக்கினத்தில் 44 பரல்கள்.
உலகிலேயே மிகப் பெரிய, அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு
என்னும் பெருமை இந்த அதிகப் படியான பரல்களால்தான்

சரி, இரண்டாம் வீடான மிதுனத்தில் எத்தனை பரல்கள். 19 பரல்கள்தான்.
நாட்டிற்கு அது பொருளாதாரத்தைக் குறிக்கும் இடம். அங்கே பரல்கள்
இவ்வளவு குறைவாக இருப்பதால்தான் நம் நாட்டுப் பொருளாதாரம்
இன்றைய நிலையில் மெச்சிக்கொள்ளூம்படியாக இல்லை.
அதிக அளவில் கடன் உள்ளது

எதிர்காலத்தில், அது சரியாகும். அதை இப்போது சொன்னால் சஸ்பென்ஸ்
போய்விடும். சமயம் வரும்போது சொல்கிறேன்!
-----------------------------------------------
உங்கள் ஜாதகத்திற்கும் இப்படியே குறித்து வைத்துக் கொள்ளூங்கள்.

அதைவிடுத்து, சார், சுய வர்க்கப் பரல்கள் என்றால் என்ன?’ வென்று
அப்பாவித்தனமாக இனியும் கேட்காதீர்கள்.
கேட்டால், உங்களை வகுப்பறை மானிட்டர் உண்மைத்தமிழரிடம்
பிடித்துக் கொடுத்துவிடுவேன். உடன் நாரதர் சிபியும் இருப்பார்!:-))))))

இந்தக் கட்டுரையை எழுதக் காரணம்: கடந்த 3 நாட்களில் சுயவர்க்கம் என்றால் என்ன?
என்று கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துவிட்டன. அதற்காக அவசரம்
அவசரமாக எழுதினேன்.

அஷ்டகவர்க்கம் தெரியாமல் ஜோதிடப் பாடங்களைப் படிப்பது,
கோனார் நோட்ஸ் இல்லாமல் பத்தாம் வகுப்பு படிப்பதைப் போன்றது!

இதை Record Room ல் சேமித்து வைத்துள்ளேன், இனிமேல் வந்து கேட்பவர்களுக்கு,
cut & paste ready made reply: Please go & see in the Record Room

வகுப்பறையில் 500 பேர்களையும், வகுப்பிற்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு
கேள்வி கேட்பவர்கள் 500 பேர்களையும் - ஆக மொத்தம் 1,000 பேர்களை வைத்துக்
கொண்டு பாடம் நடத்துவது எவ்வளவு சிரமம், தனி ஆளாக நான் வேறு என்ன
செய்ய முடியும்? என்று யோசித்து நீங்களே ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்
--------------------------------------------------

வகுப்பறையில் புதிதாகக் கட்டப் பெற்றுள்ள Record Room ஐப் பார்த்தீர்களா?
உங்களுக்கு வேண்டிய அடிப்படைபாடங்கள் அங்கே கிடைக்கும்
அதற்குச் செல்லும் வழி இங்கே!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------
உருப்படியான விளக்கம் கீழே உள்ளது. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.
அப்படியே தந்துள்ளேன். படித்து மேலும் தெளிக!


The "Ashtakvarga" is recognized as an outstanding system of prediction
among the several systems advocated in the standard works on Indian Astrology.

It has been commended as the best and the most indispensable key,
so that all predictions have to be made only after a consideration of the
Ashtakvarga.

The system appears to have originated in the very remote past.

Acharya Varahmihira (circa 500 A.D.) mentions it rather casually,
as if it had already become an integral part of the standard teaching
on astrology in his day, not requiring a very detailed exposition.
It is quite likely, therefore, that the system originated some centuries
before Varah, perhaps a couple of centuries before Christ.
==================================================================
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26.7.09

புதுமுகமா? வாருங்கள் குறுக்கு வழியில் போவோம்!



புதுமுகமா? வாருங்கள் குறுக்கு வழியில் போவோம்!

புதிதாக நுழைபவர்கள், இங்கே இன்று நடக்கும் பாடத்தை முதலில் படித்தவுடன், ஒன்றும் புரியாது. அதே நேரத்தில் ஆர்வமாகவும் இருக்கும்.

என்ன செய்வது என்று தெரியாது. யாரைக் கேட்பது என்றும் தெரியாது. சரி, சைடு பாரைப் பார்ப்போம் என்று பார்த்தால், திகைப்பாக இருக்கும். 215 பாடங்களா? என்றைக்குப் படிப்பது? என்றைக்கு முடிப்பது?

அதோடு இங்கே இருக்கும் சீனியர்களுடன் என்றைக்கு ஐக்கியமாவது?

முன்பு ஒரு சமயம், ஒரு ஜோதிட நூலில், அதை எழுதிய பெருந்தகையாளன், அசத்தலாகச் சொல்லியிருந்தான்:

“அடேய், சரவளி, காலப் பிரகாசிகா, ஜெய்மானி ஜோதிடம், அகத்தியருக்கு முருகன் சொன்ன குமாரசுவாமிய ஜோதிடம் ஆகிய நூல்களையெல்லாம் கற்றுத் தேர்வதென்றால் உனக்கு ஆயுள் பற்றாது. சமஸ்கிருதத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஜோதிட சுலோகங்கள் உள்ளன. அனைத்தையும் உன் மண்டையில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றுவதற்குள், உனக்கு கர்மகாரகன் போர்டிங் பாஸ் கொடுத்து, உன்னை மேல் உலகத்திற்கு அனுப்பி விடுவான். அந்தக் காலத்தில் படித்தார்கள் என்றால், கவனச் சிதறல் இல்லாத வேப்ப மரத்தடிக் கல்வி. இன்றைய சூழ்நிலையில், நம்மைச் சூழ்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு புகையில் நமக்கு ஏதாவது ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதே பெரிய காரியம். ஓசோன் படத்திலேயே ஓட்டை விழுந்து விட்டது. உனக்கு விழுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆகவே என்னுடன் வா, நான் ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு குறுக்கு வழியைக் காட்டுகிறேன்” என்றான். காட்டினான். 100 பக்கப் புத்தகம். நான் படித்து வியந்திருக்கிறேன்.

என்ன கொடுமை என்றால், என்னிடம் இருந்து அதைப் படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிக் கொண்டு போன சிநேகிதன் அதை போக்கடித்து விட்டான். தொலைந்து போய்விட்டதென்று தலையச் சொறிந்தான் (அவனுடைய தலையைத்தான்). நானும் தொலைந்து போகிறான் என்று விட்டு விட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோகம் அது! அதிலிருந்து நான் யாருக்கும், எந்தப் புத்தகத்தையும் இரவலாகக் கொடுப்பதில்லை. கெட்ட பின்னே ஞானம்!

ஒரு சிந்தனையாளன் சொன்னான்:
”மனைவியையும், புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது”

அவன் சொன்னது அசத்தலான உண்மை!
========================================
புதிதாக வருகிறவர்களுக்கு, நானும் ஒரு குறுக்கு வழியைக் காட்டப் போகிறேன்.
அதைக் காட்டுவதற்காகத் துணைப் பதிவு ஒன்றை இன்று ஆரம்பித்திருக்கிறேன்.
அதில் தினமும் பாடங்கள் சுருக்கமாக upload ஆகும்.

அனைத்துமே பழைய பாடங்கள்தான். தெரிவு செய்து படிப்பதற்குச் சுலபமாக
இருக்கும்.

அதை book mark செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது உள்ளே சென்று பாருங்கள்.
உங்களுக்குத் தேவையான செய்திகளைக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் அல்லது
உங்கள் கணினியில் copy செய்து வைத்துக் கொள்ளுங்கள். உதவியாக இருக்கும்.

அந்தப் பகுதிக்குக் கேள்வி, பதில், பின்னூட்டம் என்று எதுவும் கிடையாது.
அதை மனதில் கொள்க.

சென்று பாருங்கள். அதற்கான சுட்டி ( Link) இங்கே!

Enjoy!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

23.7.09

புதுமுகமா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!


புதுமுகமா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!

வகுப்பறைக்கு வந்த கடிதத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அதற்குப் பதில்
அளிக்கும் முகமாக அனைவருக்குமாகச் சேர்த்து இந்தப் பொது அறிவிப்பு!
கடிதத்தை அனுப்பிய அன்பருக்கு நன்றி உரித்தாகுக!

/////எனக்கு எனது ராசி,நட்சத்திரம்,லக்னம் இதெல்லாம் தெரியும். ஆனால்...
ஒன்பது கிரகங்களும் என் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர்,
அது லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதறகுக்
காரகன் என்னும் அடிப்படை விசயங்கள் எனக்கு தெரியவே தெரியாது.

லக்கினத்தில் இருந்து எந்த இடம் என்பதை எப்படி எண்ணுவது ?
அல்லது எண்ணிக்கை கொள்ளவது ?
காரகனை எப்படி தெரிந்து கொள்வது ?
இதையெல்லாம் நான் எப்படி தெரிந்து கொள்வது.....?

கொஞ்சம் அதை பற்றியும் சொல்லுங்களேன்..என்னை மாதிரி அறியாத பலரும்
இங்கே இருக்கலாம் இல்லைய்யா...? விடை தெரியாமல்
உங்களின் விளக்கத்திற்காக எதிர் பார்த்து காத்திருக்கும்
சராசரி மாணவனாய்...../////////
ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டிய மாணவரை, ப்ளஸ் டூ வகுப்பில்
உட்காரவைத்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட நிலைமைதான் இது.

புதுமுகங்களுக்காச் சிறப்பு வகுப்பு நடத்த முடியாது!

வகுப்பறையில் இதுவரை (கடந்த இரண்டு ஆண்டுகளாக) 215 பாடங்களை
நடத்தியுள்ளேன். அதைப் படித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இப்போது
எழுதுகின்ற பாடங்கள் பிடிபடும். உங்கள் மொழியில் சொன்னால் விளங்கும்.
முக்கியமான அடிப்படைப் பாடங்களைப் படித்து விட்டு இப்போது எழுதுவதைப்
படிப்பது நல்லது.

அந்த 215ல், அடைப்படைப் பாடங்களை எப்படித் தெரிவு செய்வது?
அதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது.

வகைப்படுத்தப்பட்ட ஜோதிடப்பாடங்கள் எனும் தலைப்பில்,
நமது வகுப்பறையின்
பெருமைக்குரிய மாணவர் கூடுதுறை அவர்கள், தனியாக விவரங்களைப் பிரித்துக்
கொடுத்து,
அதற்கான சுட்டியையும் (Link URL) தனது தளத்தில் கொடுத்துள்ளார்.
That is in his blog

அங்கே சென்று பாருங்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது.


வகுப்பறையின் சைடு பாரில் (side bar) இந்த விவரம் ஏற்கனவே உள்ளது. அதையெல்லாம்
பார்க்க புதுமுகங்களுக்கு நேரம் இல்லை! அதுதான் சோகம்!

அவற்றில் முக்கியமான அடிப்படைப் பாடங்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
அவற்றைப் படித்து விட்டு இங்கே வாருங்கள். அதற்கு ஒரு மாத காலம்
பிடிக்கலாம். பரவாயில்லை. ஒரு மாதத்தில் என்ன ஆகிவிடப்போகிறது?
படியுங்கள். அதோடு தொடர்ந்து நேரம் இருக்கும்போது வகுப்பறையில் உள்ள
மற்ற பாடங்களையும் படியுங்கள்.

என்ன சரிதானா?

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.7.09

Lesson No.216. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா? பகுதி இரண்டு!



Lesson No.216. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா? பகுதி இரண்டு!

ஜோதிடத்தில், ஜோதிட ஞானத்தில், பல லெவல்கள் உள்ளன! என்னுடைய
லெவல் என்னவென்று எனக்குத் தெரியாது.

பல ஜோதிட நூல்களைப் படித்த படிப்பறிவும், பலருடைய ஜாதகங்களையும்
பார்த்த பட்டறிவும் முக்கியம்.

ஜோதிடம் கற்பதற்கு முதலில் நல்ல நினைவாற்றல் முக்கியம். மனதில்
உற்சாகமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் முக்கியம்.
உத்வேகம் என்று சொல்லலாம். உங்கள் மொழியில் சொன்னால்
killing instinct வேண்டும். ஒரு கை பார்த்துவிடுவோம் எனும் தன்முனைப்பு
வேண்டும்.

அவனுக்கு ஏறுகிறது நமக்கு ஏன் ஏறாது எனும் நம்பிக்கை வேண்டும்.

சமீபத்தில் ஒரு சினிமாப் பாடலைக் கேட்டேன்:

”படிச்சுப் பார்த்தேன் ஏறவில்லை
குடிச்சுப் பார்த்தேன் ஏறிடுச்சு”

இந்த மாதிரி மஸ்கா ஆசாமிகள் எதைப் படித்தாலும் ஏறாது. பன்னிரெண்டாம்
வீட்டுக் காரனும், சனீஷ்வரனும் சேர்ந்து, அவர்களுடைய லக்கினத்தில் வீடு
கட்டிக் குடியிருப்பார்கள். ஏறக்கூடாதவைகள் மட்டுமே அவர்கள் மண்டையில்
ஏறும். அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி!

அதை விடுங்கள், விஷயத்திற்கு வருகிறேன்.

ஆகவே முதல் இரண்டு பத்தியில் சொன்னவற்றை மனதில் வைத்துக் கொண்டு
பாடங்களைப் படியுங்கள்.

இதுவரை 215 ஜோதிடப் பாடங்களை எழுதியுள்ளேன். எத்தனை பாடங்களைப்
படித்தீர்கள்?. எத்தனை பாடங்களை மனதில் ஏற்றியிருக்கிறீர்கள் என்று நீங்களே
யோசித்துப் பாருங்கள். அடிப்படை விஷயங்கள் அத்தனையும் மனதில்
ஏறியிருக்க வேண்டும்.

ஒரு டாக்டர் தன்னிடம் வரும் நோயாளியைப் பரிசோதித்தவுடன், அவனுக்கு என்ன
மருந்து கொடுக்கலாம் என்று தான் படித்த புத்தகங்களைப் பக்கத்தில் வைத்துக்
கொண்டு, அவற்றைப் புரட்டிப் பார்த்து மருந்து கொடுத்தால் எப்படி இருக்கும்?

ஒரு Heart Specialist Doctor என்றால் இருதயம் சம்பந்தப்பட்ட நூறு மாத்திரை
களையாவது அவர் கடகடவென்று சொல்ல வேண்டும்!

27 நட்சத்திரங்களின் பெயர்களையும் கடகடவென்று சொல்ல வருகிறதா
என்று பாருங்கள்! 12 ராசிகளின் பெயர்களையும், அவற்றின் அதிபதிகளின்
பெயர்களையும் சொல்ல வருகிறதா என்று பாருங்கள்! வீடுகளின்
காரகத்துவங்களையும் (portfolios), 9 கிரங்களின் ஆட்சி, உச்ச, நீச, பகை
வீடுகளை மனப்பாடமாகச் சொல்ல வருகிறதாவென்று பாருங்கள்.

வரவில்லையா?

அட்லீஸ்ட் முயற்சி செய்து, இனியாவது அவற்றை மனதில் ஏற்றி, வேண்டும்
போது அடித்துச் சொல்ல முயற்சி செய்யுங்கள்.
-----------------------------------------------------------------------------
இனி, அலசல்!
இது இரண்டாவது வாளி!

ஒரு நண்பர் வந்தார். ஆசாமிக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். மூடிற்குத் தகுந்த
மாதிரிப் பேசுவார். ஒரு நாள் ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும் என்பார்.
அடுத்த நாள் ஒன்றுமே நடக்க மாட்டேன் என்கிறது. ஜோதிடம் எல்லாம்
பொய். சுத்த ஹம்பக் என்பார்.

நான் பிடித்துக் கொண்டு விட்டேன். “விளக்கமாகச் சொல்லுங்கள்!”

”என் இரண்டாம் வீட்டுக்காரன் திரிகோணம் ஏறி 9ல் நல்ல நிலைமையில்
இருக்கிறான். தனகாரகன் குருவும் உச்சம். எனக்கு ஏன் எப்போது பார்த்தாலும்
பணக் கஷ்டம்?”

”சிட்டி பேங்க் கிரிடிட் கார்டு வைத்துக் கொள்ளச் சொன்னது யார்? தனகாரகனா?
உன் சம்பளத்திற்கு, உனக்கு ஹோண்டா மோட்டார் சைக்கிளே அதிகம். உன்னை
மாருதி கார் வாங்கச் சொன்னது யார்? சுக்கிரனா? மாதம் இரண்டு பாட்டில் பீட்டர்
ஸ்காட் வாங்கி, வீட்டில் வைத்து மஜா பண்ணுகிறாயே? அதைச் செய்யச்
சொன்னது யார்? ராகு பகவானா?”

ஆசாமி பேச வில்லை. எஸ்கேப்பாகிவிட்டார்.
--------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், பணம் வரும். அதை வீண் செலவுகளைப்
பண்ணாமல் காப்பாற்றி வைத்துக் கொள்வது உங்கள் கடமையாகும்.

எறும்புகள் வெய்யில் காலத்தில் உணவை சேமித்து வைத்து மழை காலத்தில் பயன்
படுத்தும். அதுபோல ஒரு தசா புத்தியில் வரும் பணத்தைச் சேர்த்து வைத்து, பணம்
வராத தசா புத்தி காலங்களுக்குப் பயன் படுத்தவேண்டும்.

இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி!

அப்படி கிரக அமைப்புள்ள ஜாதகர்கள், வரும் பணத்தை, மனைவி. மக்கள்
பெயர்களில் முதலீடு செய்து வைத்தால் கையில் காசு தங்கும்!

சில பெண்ணிகளிடம் போன பணம் திரும்ப வராது என்றாலும்,
மகராசி உட்கார
வைத்து சோறாவது போடுவாள்:-)))))

அதீத பணம் வருவதற்குப் பதினொன்றாம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.

கையில் காசு சேர்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.

முதலில் உள்ளது குழாய்.இரண்டாவது உள்ளது அண்டா!

வீடு நன்றாக இருப்பதென்றால், வெள்ளையடித்துப் பளிச் சென்று இருப்பதாக
அர்த்தமில்லை. அந்த இரண்டு வீடுகளின் அஷ்டகவர்க்கப் பரல்கள் 30
அல்லது 30ற்கு மேற்பட்டு இருக்க வேண்டும். அந்த இரண்டு வீட்டு நாயகர்களும்
தங்கள் சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும். அந்த இரண்டு வீடுகளும் தீய கிரகங்களின் ஆளுகைக்கு
உட்பட்டோ அல்லது பார்வைக்கு உட்பட்டோ இருக்கக்கூடாது!
------------------------------------------------------
சரி பணம் எப்போது வரும். எப்பொது போகும்?

அரசியல்வாதிகளுக்கு எப்போதும் வரும். என்றும் போகாது.
அவர்கள் இருக்கும் ஃபீல்டு அப்படி. அவர்கள் எல்லாம் மகா புருஷ யோகம்
அல்லது லக்‌ஷ்மி யோகம் போன்ற யோகங்கள் உள்ளவர்கள். அல்லது அவர்களின்
ஜாதகத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருக்கும்.
அல்லது அவர்களுடைய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் இருக்கும்.

யோகங்கள் 200 க்கும் மேல் உள்ளன. பின்னால் அவற்றை எழுத உள்ளேன்.
இன்றைய பின்னூட்டத்தில் அவைகளைப் பற்றிக் கேட்டு என்னைக் கலக்கி
விடாதீர்கள். பொறுத்திருங்கள். இப்போது அலசலை மட்டும் பாருங்கள்.

மற்றவர்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரும்;அல்லது போகும்!

அந்த இரண்டு வீட்டு நாயகர்களின் தசா புத்திக் காலங்களில் வரும்.
ஆறாம் அல்லது எட்டாம் அல்லது 12ஆம் அதிபதிகளின் தசா புத்திக்
காலங்களில் போகும்.

எப்படிப் போகும்?

எப்படி வேண்டுமென்றாலும் போகும். இடம் வாங்கி வைத்திருந்தால், போலி
டாக்குமெண்ட்டால் போகும். நகைகள் வாங்கி வைத்திருந்தால் திருட்டால்
போகும். கம்பெனிகளில் முதலீடாகப் போட்டு வைத்திருந்தால், போட்டுவைத்த
கம்பெனிக்காரனின் தலைமறைவால் போகும். இப்படி எழுதிக் கொண்டே
போகலாம்.

வேலி போட்டுத் தடுத்தாலும் போகும்.
வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்தாலும் போகும்!

அதி புத்திசாலியாக இருந்து காப்பாற்றி வைத்திருப்பவனை, கிரகங்கள்
அடித்துப் படுக்க வைத்து, மருத்துவச் செலவுகள் செய்ய வைத்து அதன்
வழியாகப் போக்கவும் செய்யும்!

இன்றைய மருத்துவமனைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும்!
சில மருத்துவ மனைகளில் சிகிச்சை முடிந்து திரும்பி வரும்போது
சொத்தையே எழுதிக் கொடுத்துவிட்டு வரும்படி ஆகிவிடும்!

ஸ்வாமிஜி தயானந்த சரஸ்வதி சொல்வார்:

For a single body manifested by God, we are having society of Doctors
If yama comes, only the prana will go: if a doctor comes prana and
money will go!

கடவுளால் படைக்கப்பெற்ற மனித உடம்பிற்கு அறுபது விதமான மருத்துவர்கள்
உள்ளார்கள். எமன் வந்தால், உயிர் மட்டும்தான் போகும். மருத்துவர் வந்தால்
(அதாவது மருத்துவமனைக்குப் போனால்) உயிருடன் சேர்ந்து பணமும் போகும்!

(நமது வகுப்பறை மாணவர் டாக்டர் திரு.ப்ரூனோ அவர்கள் மன்னிப்பாராக!)

எல்லா மருத்துவ மனைகளும் அப்படியல்ல என்றாலும் சராசரிக்கும் அதிகமாக
அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!

”சேர்த்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா

அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு

அவ ஆறை நூறு ஆக்கிடுவா செல்லக்கண்ணு”


என்னும் பழைய பாடலை மனதில் கொண்டு வரும் பணத்தை உங்கள்
வீட்டுப் பெண்களிடம் (அன்னை அல்லது மனைவி) கொடுத்து பாதுகாப்புடன்
வையுங்கள்.

இருப்பதைவைத்து, எளிமையாக வாழ்பவனுக்குப் பணக் கஷ்டமே வராது!

கடவுள் உங்கள் தேவைகளுக்கு மட்டும்தான் உதவிக்கு வருவார்!
உங்கள் ஆசைகளுக்கு உதவ மாட்டார்!


God doesn't give you what you want, He gives you what you need!

உலகில் யார் செல்வந்தன் என்றால்,நோயும், கடனும் இல்லாதவனே
செல்வந்தன்!


(அலசல் தொடரும்)




வாழ்க வளமுடன்!

21.7.09

வாத்தியாரின் வேண்டுகோள்!

வாத்தியாரின் வேண்டுகோள்!

மின்னஞ்சலில் எழுத்துக்களுடன் படத்தையும் உள்ளிடுவது எப்படி என்று கண்மணிகளில் விவரம் தெரிந்தவர்கள் யாராவது அறியத்தர வேண்டுகிறேன்

How to insert images either before the text lines or after the text lines in the mail (Not as attachment) ?

உதாரணத்திற்கு எனக்கு வந்த மெயில் ஒன்றின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.



============================================
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்.

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்.
வாழ்க வளமுடன்!

20.7.09

Lesson No.215. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா?



Lesson No.215. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா?

லக்கினம், ஒன்பது கோள்கள், பன்னிரெண்டு ராசிகள் ஆகியவற்றை வைத்து எத்தனை விதமான ஜாதகங்களை எழுதலாம்?

1+9 = 10 to the power of 12 = One followed by 12 zeros = 1,00,000,00,00,000 = ஒரு லட்சம் கோடி
ஜாதகங்களை எழுதலாம். இன்றைக்கு உலக ஜனத்தொகை வெறும் எழுநூறு கோடிகள்
மட்டும்தான் லக்கினம் என்பது 2 மணி நேரக் கணக்கு, 4 நிமிடக் கணக்கு நமக்கு வேண்டும்.
ஆகவே அதை 30 பாகைகளுக்காக மீண்டும் 30 ஆல் பெருக்கினால் என்ன வரும்? தலை சுற்றல் வரும்! ஜோதிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

இதைப்போன்று இன்னும் பல ஆச்சர்யமான உதாரணங்கள் உள்ளன. அதற்கான பாடம்
வரும்போது அவற்றைச் சொல்கிறேன்.

அதைப்போன்றே ஒவ்வொருவரின் லக்கினத்தை வைத்தும், அவரவருடைய ஜாதகத்தில் கோள்களின் அமைப்பை வைத்தும் ஜோதிடப் பலன்களும் பல்லாயிரக் கணக்கில் மாறுபடும்.

நானும் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று ஒரு ஜோதிட நூலை வாங்கிக் கொண்டுபோன என் நண்பர் ஒருவர், ஒரு நாள் குஷியாக வந்து என்னிடம் சொன்னார்.

“என் ஜாதகத்தில் வில்லத்தனத்திற்கும், வில்லங்கத்திற்கும் வழியே இல்லை!”

“எப்படிச் சொல்கிறாய்?” இது நான்.

“ஆறாம் வீடும் 12ஆம் வீடும் காலியாக இருக்கிறது! எந்தக் கருமாந்திரம் பிடித்த கிரகமும்
இல்லை. முக்கியமாக சனி இல்லை. ஆகவே நான் தப்பித்து விட்டேன்” என்றார்.

நான் ஒரு புன்னகையோடு விட்டுவிட்டேன். அவருடைய சந்தோஷத்தை எதற்காகக்
கெடுக்க வேண்டும்? என்று ஒன்றும் சொல்லவில்லை!
--------------------------------------------------------
திருப்பூரில் உள்ள தொழிலதிபர்களின் சட்டைப் பை காலியாகத்தான் இருக்கும். எதையும்
அவர்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லா வேலைகளுக்கும் உடன் எடுபிடிகள்.
வாகனத்தை ஓட்ட ஓட்டுனர். வரும் தொலைபேசி அழைப்பை வடிகட்டிக் கொடுக்க,
கொஞ்சும் குரல் மங்கைகள். கைபேசிகள், Hand Bag, சிகரெட் பாக்கெட், லைட்டரை,
வைத்துக்கொள்ள உடன் ஒரு வேலையாள் என்று அம்சமாக இருப்பார்கள். சட்டைப்
பையைப் பார்த்துவிட்டு மேட்டர் ஓவர் என்று நினைக்க முடியுமா? பின்பலத்தைப்
பார்க்க வேண்டாமா?

அதைப்போல ஜாதகத்தில் காலியாக இருக்கும் கட்டங்களைப் பார்த்துவிட்டு மேட்டர்
ஓவர் என்று நினைக்கலாமா? திருப்பூர் தொழிலதிபருக்கே அத்தனை பின்பலம்
இருக்கும் போது கிரகங்களுக்கு எத்தனையோ கோடி மடங்கு பின்பலம் இருக்காதா?

முகேஷ் அம்பானி ”சரக்கு” வேண்டுமென்றால் வாங்குவதற்கு அவரா போவார்? கண் பார்வையிலேயே எல்லாம் நடக்காதா?

அதுபோலத்தான் கிரகங்களுக்கும் பல விஷயங்கள் பார்வையிலேயே நடக்கும்.

ஓட்டுனர் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும், வாகனம் எவ்வளவுதான்
அருமையாக இருந்தாலும், விபத்து நேர வேண்டுமென்று இருந்தால் நடந்தே தீரும்.
நாம் நன்றாக ஓட்டினாலும் எதிரில் வருபவன் ஒரு சாத்து சாத்தினால் என்ன செய்வது?
அதுவும், நெடுஞ்சாலையில் படு வேகமாக வரும் டிப்பர் லாரிக்காரன் சாத்தினால்
என்ன ஆகும்?

அதுபோல ஒரு கிரகம் எவ்வளவுதான் வலுவாக இருந்தாலும், வேளை வந்தால்
இன்னொரு கிரகம் உள்ளே நுழைந்து நம்மை முடக்கிப் போட்டுவிட்டுப் போய் விடும்.

ஒரு விதிமுறையை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது!

அலச வேண்டும்!

ஏழிற்கு உரிய கிரகம் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் கலப்புத்
திருமணம் செய்துகொள்வான் என்பது ஜோதிட விதி.

உடனே, ”மாப்ளே, உனக்குக் கலப்புத் திருமணம்டா, பொள்ளாச்சியிலே பொண்ணு
பார்க்காதேடா, கூட ஆணி பிடுங்குகிற பொண்ணுங்கள்ள (அதாவது உடன் வேலை
பார்க்கும் பெண்களில்) திருவரங்கம் அல்லது மைலாப்பூர் டிக்கட்டா ஒன்னு
செட்டாகுமான்னு பாருடா. வாழ்க்கை கலர்ஃபுல்லா இருக்கும்டான்னு” கூட
இருக்கிறவன் சொன்னால் அவனை என்ன செய்வது?

முதலில் ஜாதகனுக்கு உரிய வயசில் திருமணம் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.
ஏழிற்கு உரியவன் 12ல் இருந்து தொலைக்கட்டும். அதுவா முக்கியம்?
7ல் ராகுவும், சனியும் பாய் விரித்துப் படுத்திருந்தால் என்ன செய்வது? அதோடு
ஜாதகத்தில் சுக்கிரனும் அடிபட்டு கை கால் உடைந்து மருத்துவ மனையில்
படுத்திருந்தால் என்ன செய்வது? (அதாவது சுக்கிரன் நீசமாகி இருந்தால் என்ன செய்வது?) திருமணஞ்சேரி, கூடுவாஞ்சேரி என்று பல ஊர்க் கோவில்களுக்கு ஜாதகன் காவடி எடுக்க வேண்டியதிருக்கும். அப்படி எடுத்தாலும் கணிசமான தொகை காலியாகுமே தவிர
ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் ஆகாது!

உரிய காலத்தில் அல்லவா திருமணம் ஆக வேண்டும்?

ஆசாமி அஜீத்குமார் போல இருந்தாலும் 50 வயதில் திருமணம் செய்து கொண்டு
என்ன பயன்?

பெண் ஐஷ்வர்யா பச்சனைப்போல அம்சமாக இருந்தாலும் உரிய காலத்தில் அல்லவா
அவளுக்கு மண வாழ்க்கை கூடி வரவேண்டும். 21 to 32ற்குள் நடக்கவேண்டாமா?

பெண்ணிற்கான (awarded) வசந்த காலம் 36 ஆண்டுகள். ஒரு பெண் 12 வயதில்
பூப்படைகிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள், 48 வயதில் அவளுக்கு
(90% பெண்களுக்கு) வசந்த காலம் முடிந்து விடும். அதற்குப் பிறகு வெய்யில்
(Summer Period) காலம். அப்போது அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதால்
என்ன பயன்?

ஆகவே ஒரு விதியை வைத்து மட்டும் எதையும் முடிவு செய்யாதீர்கள்.

ஒரு வீட்டிற்கு 3 செயல்பாடுகள். 12 வீடுகளுக்கும் சேர்த்து மொத்தம் 36 செயல்
பாடுகள்.
இந்த 36ல் பாதிதான் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். எனக்கு
25 கிடைக்கும் உங்களுக்கு
10தான் கிடைக்கும் என்றெல்லாம் கிடையாது.
எல்லோருக்கும் சம எண்ணிக்கையில்தான்
கிடைக்கும். இல்லையென்றால்
எல்லோருக்கும் பொதுவான மதிப்பெண் மட்டும்
337 ஆக இருக்க முடியும்?

அந்த 36ல் உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? என்ன கிடைக்கவில்லை என்பதைப்
பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஜாதகத்தை நன்றாக அலச வேண்டும்.

(தொடர்ந்து அலசுவோம்)


வாழ்க வளமுடன்!

18.7.09

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

வருகைப் பதிவேட்டில் பதிந்துள்ளவர்களில் சிலரின் பெயரைப் பாருங்கள்.
அது என்ன பெயர் என்று முடிந்தால் சொல்லுங்கள்.

வாத்தியாரை நோகடிப்பதற்கு வேறு ஐடியா இல்லையா?
உட்காரும் ஆசனத்தில் குண்டூசி வைக்க முடியவில்லையே எனும் கோபமா?

புனைப் பெயர்களுக்கா பஞ்சம்?
கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்

வகுப்பில் 399 பேர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோசப்படுவதா?
அல்லது இந்தமாதிரி 4 ஆசாமிகளும் உட்கார்ந்திருக்கிறார்களே என்று வருத்தப் படுவதா?

நீங்களே சொல்லுங்கள்?

இதுக்குப்போயி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
***************************************
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படங்கள் பெரிதாகத் தெரியும்


1


2


3


4
---------------------------------------------------------
கரடியாக மூன்று நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவைச் சரியாகப் படித்து தங்களைப் பற்றிய விவரங்களை மின்னஞ்சலில் கொடுத்தவர்கள் இந்த 399 பேர்களில் இதுவரை 115 பேர்கள் மட்டுமே! மற்றவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கேது பகவானிடம்தான் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டியதாயிருக்கும் போல் இருக்கிறது

அவர் தராவிட்டால் வந்தவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் பாடத்தின் முதல் பகுதியை அனுப்பிவைத்து விட்டு, அடுத்த பகுதியை எழுதத் துவங்க வேண்டியதுதான்

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நட்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

17.7.09

ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன்!

ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன்!

200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

இடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும்
மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர் (எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)

அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக் காசு பார்ப்பதை
விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த
ரட்சகனாக தன்னை எண்ணிக் கொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக்
கொண்டிருந்தார். பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்

அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே
விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.

தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப்பட்டான்.

தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.

77 ஆண்டுகள் என்று தெரிந்தது!

மரண தண்டனை கிடைக்கும் படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக்
காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால்
ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு
செய்தான்.

இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.

நடந்தது என்ன?

படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்!

(இது நடந்த கதை. முழுக்கதை, ஆதாரத்துடன் மின்னஞ்சல் பாடமாக!
ஏன் மின்னஞ்சல் வழியாக?
பதிவில் எழுதினால், காப்பி ரைட் பிரச்சினை வரலாம்.
மின்னஞ்சல் நமக்குள் மட்டுமே. ஆகவே மின்னஞ்சலில்)

இது போன்று சில முக்கியமான பாடங்கள் இனி மின்னஞ்சல் கல்வியாக!

எப்போது துவங்கும்?

பதிவேட்டில் 357 பேர்கள் (இன்று காலை வரை) பதிவாகியுள்ளது.
என் முன் பதிவைப் படித்து விட்டு, விவரங்களை அனுப்பியவர்கள்
இதுவரை 64 பேர்கள் மட்டுமே!

குறைந்தது 200 பேர்களாவது விவரங்களைத் தந்த பிறகே அது துவங்கும்.

அவர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் கல்வியின் முகவரி தரப்படும்!

முன் பதிவைப் படித்திராதவர்கள், உடனே படித்து விட்டு, விவரங்களை
அனுப்ப வேண்டுகிறேன்.


பதிவில் எழுதும் பாடங்கள் வழக்கம்போல பதிவிலேயே தொடரும்
அடுத்த பாடம் திங்களன்று!

வகுப்பறை என்றும் வகுப்பறையாகவே இருக்கும். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை!

நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

15.7.09

பதிவேட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா?

பதிவேட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா?

வகுப்பறைப் பதிவேட்டில் இன்றையத் தேதியில் என்னையும் சேர்த்து
மொத்தம் 300 பெயர்கள் இருக்கின்றன. பதிவேடு வாத்தியாருக்கும் உண்டு.
கீழே பட்டியல் இட்டிருக்கிறேன். உங்கள் பெயர் அதில் இருக்கிறதா?
என்று பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பதிந்து கொள்ளுங்கள்

பதிந்து கொள்வது ஈஸி!
-----------------------------------------------
வருகைப் பதிவேட்டில் பெயர் உள்ளவர்களுக்கு என்று சில சலுகைகளை
அறிவிக்க உள்ளேன்.
----------------------------------------------------
இப்போது வருகைப் பதிவேட்டைப் பார்ப்போம்

கூகுள் மெயில் அக்கவுண்ட் இருந்தால் போதும்.
இல்லையா?
ஒரே நிமிடத்தில் அதை ஏற்படுத்திக் கொள்ளலாம் (இலவசம் அது)
அதை வைத்து ஒரு Blogger கணக்கைத் துவங்கிவிடலாம் (அதுவும் இலவசம்)
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
துவங்கினால் மட்டுமே நீங்கள் இங்கே மாணவராகப் பெயரைப் பதிய முடியும்
இல்லையென்றால் வழக்கம் போல எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம்

அதற்கான சுட்டியை (Link) இங்கே கொடுத்துள்ளேன்.



பதிவை (Blog) ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களா?
Okkay. இப்போது பதிவைத் திறந்து, Dashboard பகுதியில் பாருங்கள்.
Blogs I am following எனும் பகுதி கண்ணில் படும்
அதில் Add என்னும் option ஐ Click செய்து அதில் வகுப்பறையின்
யு.ஆர்.எல் (http://classroom2007.blogspot.com) ஐ ஒட்டி விட்டு
Okkay. செய்யுங்கள்.

இப்போது வகுப்பறையில் உங்கள் பெயர் நுழைந்து விடும்!
Dashboard பகுதியில் உள்ள Profile பகுதியில் ஒரு படத்தைக்
கொடுத்தால் (உங்கள் படம், அல்லது நமீதாவைத் தவிர்த்து, வேறு ஏதாவது
ஒரு படம்) அதுவும் சேர்ந்து வகுப்பறையின் முகப்புப் பகுதியில்
டாலடிக்கும்

தமிழில் தட்டச்ச ஆசையா?
இணையதளத்தில் ekalappai என்னும் மென்பொருள் இலவசமாகக்
கிடைக்கிறது.உங்கள் கணினியில் இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கீ போர்டு பயிற்சி எல்லாம் தேவையில்லை.

அது மிகவும் சமர்த்தான மென் பொருள். ammaa என்று தட்டினீர்கள்
என்றால் அம்மா என்று அடிக்கும், appaa என்று தட்டினால் அப்பா என்று
அடிக்கும். தங்கிலீஷ் (Tanglish = தமிழும் ஆங்கிலமும் சேர்ந்த கலவை)

அதெல்லாம் ஒத்து வராதா?

கவலையில்லை. வழக்கம்போல ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்.
No problem!
--------------------------------------------------------
இதுவரை பதிந்துள்ளவர்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.

1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்

---------------------------------------------------------
எதற்காக இது?
சலுகைகளைச் சொல்கிறேன். அப்போது எதற்கு என்று தானாக விளங்கும்

1. பதிவேட்டில் உள்ளவர்களுக்கு, தனியாக என்னுடைய புதிய மின்னஞ்சல்
முகவரியைத் தரவுள்ளேன். அந்த மின்னஞ்சலுக்கு வரும் சந்தேகங்களை
மட்டுமே தெளிவு படுத்த உள்ளேன். (கண்மணிகளுக்கு முன்னுரிமை)
இது கச்சா முச்சா என்று வரும் ஏராளமான மின்னஞ்சல்களை வடிகட்டுவதற்காக!

2. சில விஷேச பாடங்களை அவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் மூலம்
அறியத் தரவுள்ளேன்.( சில பாடங்களைப் பதிவில் எழுத முடியாத நிலை
சாமிகளா.)

4. ஆகஸ்ட் 15 முதல் நீங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் எட்டாம்
இடத்தைப் பற்றிய பாடம். அதைப் பதிவில் எழுதினால், அறைகுறையாகப்
படித்துவிட்டு, எனக்கு இப்படியிருக்கிறதே நான் இறந்து விடுவேனா
என்று கேட்டு வரும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது.
ஆகவே எட்டாம் வீட்டைப் பற்றிய எட்டு பாடங்களும் PDF கோப்பாகவே
உங்களுக்கு அறியத்தரப்படும். எட்டுப் பாடங்களையும் ஒவ்வொன்றாகப்
படித்து முடித்தபிறகு நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்

3. எனது ஜோதிடப் பாடங்கள் அழகாகப் பிரிக்கப் பெற்று புத்தகங்களாக
(மொத்தம் 3 பாகங்கள்) வரவுள்ளன. அது பதிந்துள்ள மாணவர்களுக்கு
- அவர்களில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் - முன்னுரிமையில் வழங்கப்
பெறும். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அஞ்சலில் printed books
என்னும் சலுகையுடன், அவர்கள் கையில் சேரும்படி அனுப்படும்.
அதற்குத் திட்டமிடவே, நீங்கள் வசிக்கும் ஊரின் பெயரையும், நாட்டின்
பெயரையும் கேட்டுள்ளேன்.

4. நீங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். கவலை
வேண்டாம்!

என்ன, சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
==========================================
வருகைப் பதிவேடு
S.No Names
1 உண்மைத் தமிழன் (சட்டாம்பிள்ளை)
2 அகநாழிகை
3 அகில் பூங்குன்றன்
4 அமர பாரதி
5 அருப்புக்கோட்டை பாஸ்கர்
6 அன்புடன் அருணா
7 ஆதிபகவன்
8 ஆர்.கார்த்திகேயன்
9 ஆர்.கே.சதீஷ்குமார்
10 இராகவன் நைஜிரியா
11 இராசகோபால்
12 இளைய பல்லவன்
13 உங்கள் மாணவி
14 உருத்திரா
15 உலவு.காம்
16 கத்துக்குட்டி(Selli)
17 கதிரவன்
18 கனிமொழி
19 குசும்பன்
20 குமரன் (Kumaran)
21 குறும்பன்
22 கூடுதுறை
23 கெக்கே பிக்குணி
24 கோவி.கண்ணன்
25 கோவை விமல்(vimal)
26 கோவை விஜய்
27 ச.இலங்கேஸ்வரன்
28 சப்ராஸ் அபூ பக்கர்
29 சிவகுமார்.டி
30 சிவமுருகன்
31 சுபானு
32 செந்தழல் ரவி
33 செல்லி
34 ஞாபகம் வருதே...
35 ஞானா
36 தமாம் பாலா (dammam bala)
37 தமிழ் ஊடகம் (ஆனந்தன் )
38 தமிழ்குட்டி
39 தமிழினி
40 தியாகராஜன்
41 திரட்டி.காம்
42 திருநெல்வேலி கார்த்திக்
43 தேவன் மாயம்
44 நாகராஜன்
45 நாமக்கல் சிபி
46 நிலா
47 நெல்லை காந்த்
48 பட்டாம்பூச்சி
49 பட்டாம்பூச்சி
50 படித்துறை.கணேஷ்
51 பரமார்த்த குரு
52 பாலாஜி இமலாதித்தன்
53 பிரசங்கி
54 புதுகைச் சாரல்
55 புதுகைத் தென்றல்
56 புதுவை சிவா
57 புருனோ Bruno
58 பொ.ப.சந்தோஷ் குமார்
59 பொதிகைத் தென்றல்
60 போ. பால்கண்ணன்
61 மகி..
62 மதி
63 மாயாவி
64 மெட்ராஸ்காரன்
65 மென் தமிழன்
66 மென் தமிழன்
67 மெனக்கெட்டு
68 ராம்
69 ரிஷி
70 வடிவேலன் ஆர்
71 வடிவேலன் ஆர்.
72 வண்ணத்துபூச்சியார்
73 வில்லியனூர் சந்தோஷ்
74 வெட்டிப்பயல்
75 வேலன்.
76 ஸ்வாமி ஓம்கார்
77 ஹோஷியா
78 abbas
79 Abdul Hameed
80 achukichan
81 amudkrishnan
82 ananth
83 Anbupriyan
84 Ara
85 ARJUN S
86 Arulkumar Rajaraman
87 arulrajan
88 arumuga nainar raja
89 Arun
90 Arun
91 ashok kumar
92 Asokaa Photo
93 Astro
94 ayyasamykkumar akk
95 babaa
96 Babu
97 Balaji
98 Balaji Balaji
99 bhaskar s
100 Bujjee
101 chaks
102 chandru
103 chasebala
104 cheenu
105 chinnasamys
106 chittrarasan
107 choli ganesan
108 citizen
109 color life
110 d.gowtham
111 dayal
112 DD
113 Devarajan.K Madurantakam
114 DevikaArul
115 Dr.Vinothkumar
116 dubai saravanan
117 Durai D
118 futureindia
119 ganapathy
120 Geekay
121 gkp
122 Gobenath Muthusamy
123 Gobinat Ga
124 gobinath
125 gokul
126 Gopal
127 gopala krishnan
128 gopinath_mannargudi
129 govindarajan ramakrishnan
130 gr murugan
131 guna
132 Guru
133 harikrishnan kulathu
134 hems chander
135 hotcat
136 jai..
137 Jaya kumar
138 Jayakumar
139 jeeyadeen alavudin
140 JP
141 Kailasam subbiah
142 kalaise
143 kalpana Ayyasamy
144 Kamesh
145 Kanal
146 kanax thivjhan
147 kandhiah
148 Kannan
149 KANNANESAN
150 karmegaraja
151 Karthic
152 karthikeyan B
153 KaveriGanesh
154 kavitha
155 keyan
156 King Maker
157 KingBala
158 KMR.Krishnan KMR.Krishnan
159 krish
160 KrushnaCumaar MN
161 KS
162 KS
163 Kumar balasubramaniam
164 kumar jakumar
165 kumar.S
166 Kumaran
167 lic
168 Loganathan Nishanthan
169 Loosu
170 M.R.Saravanakumar
171 maadhu
172 Madurai dhana
173 MAHI
174 malar
175 mangai
176 mano
177 mano fnb
178 Maran
179 MarmaYogi
180 Mathi
181 medes waran
182 Meera pillai
183 Mohan
184 Mohan Sundar
185 Mrs.Pingu
186 Munikrishnan muni
187 murugan s
188 Muthu Arasan Ilango
189 N.K.S.Anandhan.
190 Nagarajan BR
191 natrajan
192 Nithi
193 oshopriyan
194 P.A.PONNIAH ALAGARSAMY
195 palani
196 POJA RAJAN
197 poobalan
198 Prabhakaran Thiagarajan
199 prabu prabu
200 pracash114
201 Premanandhan
202 pukalini
203 Pulliraajaa
204 puratchi thamizhan
205 raage shan
206 Radha
207 Radhakrishnan
208 Ragavendiran
209 Ragu Sivanmalai
210 raja
211 Raja KL
212 Raja M
213 RAJAN
214 Rajarajan
215 RAJASEKAR P
216 Rajee
217 rajesh
218 Rajesh Kumar
219 RajeshEra
220 ram chandran
221 ramana
222 Ramesh
223 RAMESH BABU J
224 Ramkumar
225 RamKumar
226 Rathinavel.C
227 RAVI
228 Renganathan Varatharajan
229 S.J.வீரன்
230 S.Jai
231 S.M.
232 S.Prabhu Navaneethakrishnan
233 Sabarinathan Arthanari
234 Sabesan
235 sankar ganesh
236 sant
237 Saran
238 saran
239 SARATHY PALANI
240 saravana karthikeyan
241 saravanan d
242 Saravanan Ravi
243 sarupraba
244 Sathish
245 sek
246 SenSel
247 senthil
248 senthil chennai
249 Senthil Murugan
250 shankar
251 Siva
252 SivaSankaraVadivelu Subramanian
253 SkyBlue
254 Slakshmanan
255 sowri
256 SP Sanjay
257 spselvam
258 sri
259 sri raam
260 sridhar
261 Sridhar
262 sridhar v
263 Sridharan
264 SUBBIAH ARUNAGIRI
265 sundar
266 supersubra
267 sury
268 Surya Narayanan
269 svpr
270 swamy
271 Tamil Girls
272 TAMILKUDUMBAM
273 The Botanist
274 thirunarayanan
275 Thirunavukkarasu Rajasekaran
276 thoppae
277 VA P RAJAGOPAL
278 vaishnavy naidu
279 Vannamalar
280 Varsha
281 VEERA
282 Velu.M
283 venki64 thiru
284 Vetrimagal
285 vetrivel
286 Vijay S
287 VIKNESHWARAN
288 vino, canada
289 Vinodh
290 vipoosh
291 visaga
292 vishnu
293 vishnu anand
294 vsaaravanan
295 yishun270
296 YOGANANDAM M
297 YOGANANDAM M
298 YUVARAJ N
299 zeorcc
300 வாத்தியார்

வாழ்க வளமுடன்!

13.7.09

நம்பாவிட்டால் நஷ்டமில்லை!

நம்பாவிட்டால் நஷ்டமில்லை!

எந்தவித உபாயமும் இல்லாமல் நாளை நடக்கவிருப்பதை துல்லியமாகச்
சொல்லும் ஆறாவது அறிவு எனும் புகழ் பெற்ற - ஈ.எஸ்.பி சக்தி
(extrasensory perception) கொண்டவர்களைப் பற்றிய பல செய்திகள்,
கதைகள் உண்டு.

இணையத்தில் ஏறாளமாகக் கொட்டிக்கிடக்கிறது. விருப்பமுள்ளவர்கள்
தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் அவற்றை
நான் புத்தகங்கள் மூலமாகத்தான் படித்துத் தெரிந்து கொண்டேன்.

அதைப் பற்றி முன்பே வகுப்பறையில் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
நாஸ்ட்ரடாமஸ் அவர்களில் ஒருவர்.

நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர் ஒருவர், அதைப் பற்றிய
புத்தகம் ஏதாவது உள்ளதா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

புத்தகத்தின் விவரம் கீழே உள்ளது. அந்தப் பதிப்பகத்தில் புத்தகத்தைக்
கேட்டு, வாங்கிப் படித்துப் பரவசம் அடையுங்கள்.

சிலருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. அவர்களுக்கு ஒரு
வணக்கம் சொல்லிவிடுகிறேன்.
உங்கள் நம்பிக்கையின்மை வாழ்க! வளர்க!

உங்கள் நம்பிக்கையின்மையால யாருக்கும் நஷ்டமில்லை.
அதுதான் மகிழ்ச்சியளிக்கூடிய விஷயம்!
------------------------------------------------------
ஈ.எஸ்.பி சக்தி (extrasensory perception) யைப் பற்றிய விளக்கம்!

Telepathy = Communication through means other than the senses,
as by the exercise of an occult power.

Occult = The word occult comes from the Latin word occultus
(clandestine, hidden, secret), referring to "knowledge of the hidden".

ESP or extrasensory perception = Extrasensory perception (ESP)
involves awareness of information about events external to the self
not gained through the senses and not concluded from previous
experience. The term was coined by Duke University researcher
J. B. Rhine to denote psychic abilities such as telepathy,
precognition, retrocognition, intuition and psychokinesis.
ESP is also sometimes casually referred to as a sixth sense,
gut instinct or hunch. The term implies sources of information
currently unexplained by science.

உபயம்: விக்கி மகராஜா! மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.
தனித் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்!
--------------------------------------------------
புத்தகத்தைப் பற்றிய விவரம்:

அதிசய மனிதர்களின் அதிசய சாதனைகள்
எழுதியவர்: மஞ்சரி மாத இதழ் புகழ் எழுத்தாளர் எம்.எஸ்.பிரகாஷ்
பக்கங்கள் 243
விலை: Rs.17:00 (20 ஆண்டுகளுக்கு முந்திய விலை. இப்போது
என்ன விலை என்று தெரியவில்லை)

பதிப்பிட்டவர்கள்:

நர்மதா பதிப்பகம்
16, ராஜபாதர் தெரு
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை - 600 017
=======================================









வாழ்க வளமுடன்!

8.7.09

பணம் வழங்கும் பெட்டியும், வோட்டுப் பெட்டியும்!

பணம் வழங்கும் பெட்டியும், வோட்டுப் பெட்டியும்!

தானியங்கிப் பணம் வழங்கிப் (Automatic Teller Machine) பெட்டிக்கும்
வோட்டுப் பெட்டிக்கும் என்ன வித்தியாசம்?

தானியங்கிப் பணம் வழங்கி (Automatic Teller Machine) ஓட்டைப் போட்ட
பிறகுதான் (after inserting our card) பணம் தரும்.

ஆனால் ஓட்டுப்பெட்டி ஓட்டைப் போடும் முன்பே பணம் தரும்!

சென்ற தேர்தலில், சில தொகுதிகளில் ஒரு வாக்கிற்கு ஆயிரம் முதல்
முவாயிரம் வரை பணம் விளையாடியதாகத் தகவல்.

இப்போது அது முக்கியமல்லை!

அதை வழங்கியவர்களுக்கு, அரசியல் கட்சிகளுக்குத்தான் எத்தனை
கோடிப் பணம் - மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக?

பார்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், அரசியலில் ஆர்வம் வரும்.
நாமும் சேர்ந்து கிளப்புவோமா என்று நினைப்பான்.

கிளப்ப முடியுமா?

அதெப்படி முடியும்? அதெற்கெல்லாம் ஜாதகப்படி ஒரு அம்சம் வேண்டாமா?

அதற்கான அம்சங்களைக் கீழே கொடுத்துள்ளேன்

உங்களுக்கு ஏதாவது தேறுமா? பாருங்கள்
*******************************

1
ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் உரிய கோளான சூரியன்,
ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
நன்றாக இருந்தால் மட்டும் போதுமா? இல்லை!,
கோள்களில் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் ஆசீர்வாதத்தையும்
- அதாவது பார்வையையும் அவர் பெற்றிருக்க வேண்டும்!

2
ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் உரிய கோளான செவ்வாய் ஜாதகத்தில்
வலிமையாக இருக்க வேண்டும்.

3
சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!

4.
நல்ல நிலைமையில் இருக்கும் புதன் மட்டுமே ஜாதகனுக்குப் பேச்சாற்றலைக்
கொடுக்கும். பேச்சாற்றல் அரசியலில் எவ்வளவு முக்கியம் என்பது
உங்களுக்குத் தெரியாதா என்ன?

5
ஐந்தாம் வீட்டதிபதி அதற்கு முன் வீட்டில் இருந்தால் - அதாவது 4ல் இருந்தால்,
ஜாதகன் தன் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, மந்திரியாகி விடுவான்

6
ஓன்பதாம் வீட்டில் குரு இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அரசியல்
வாழ்க்கைக்கு அது மிகவும் நன்மையளிக்கும்

7.
நான்காம் வீடு பொது வாழ்க்கையைக் குறிக்கக்கூடியது. அதில் வலிமையான
கிரகம் இருந்தாலோ அல்லது பார்வையிட்டாலோ, ஜாதகன், அரசியலில்
பெரும் வெற்றியைப் பெறுவான்.

------------------------------------------
இன்று இவ்வளவுதான்.
அடுத்த பாடம் நாளை!

அன்புடன்
வகுப்பறை
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

6.7.09

இன்றையத் தேவைகள்!

இன்றையத் தேவைகள்!

அப்பாவிற்கு:
பணம் காய்க்கும் மரம்
குணம் நிறைந்த உறவுகள்
மகிழ்ச்சியைக் கொடுக்கும் குழந்தைகள்
மறுப்புத் தெரிவிக்காத மனைவி!


அம்மாவிற்கு:
வீட்டுவேலைகளுக்குத் தானியங்கி இயந்திரங்கள்
விளம்பரமில்லாத தொலைக்காட்சித்தொடர்கள்
சொன்னதைக் கேட்கும் பிள்ளைகள்
சொல்லாமல் புரிந்து நடக்கும் கணவன்!


பிள்ளைகளுக்கு:
கட்டணமில்லாத அலைபேசி
கால்,அரை,முழுத் தேர்வில்லாத பாடத்திட்டம்!
ஓட்டிச் செல்ல வாகனம்
ஒதுக்கீடு இல்லாத கல்லூரி
- SP.VR. சுப்பையா

வாழ்க வளமுடன்!

3.7.09

அது உங்கள் சாய்ஸ்!

அது உங்கள் சாய்ஸ்!

Choice என்னும் ஆங்கிலச் சொல் பொறுக்கி எடுத்தல் அல்லது
தேர்வு செய்தல் என்று பொருள்படும் Things choosen or things
selected

இன்னும் விளக்கமாக இப்படியும் சொல்லலாம்:
Act of choosing; the voluntary act of selecting or separating from
two or more things that which is preferred; the determination
of the mind in preferring one thing to another; election.
The power or opportunity of choosing; option.

இந்த option என்னும் சொல் இன்னும் நெருக்கமான பொருளைக்
கொடுக்கும்

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

உலகில் பல விஷயங்கள் அல்லது செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு
விடப்பட்டுள்ளன. சில விஷயங்களும், செயல்களும் உங்கள்
விருப்பத்திற்கு விடப்படவில்லை; விருப்பத்திற்கு அப்பாற்பட்டவை.

பிறப்பை எவனும் தேர்ந்தெடுக்க முடியாது.
தாய், தந்தையை எவனும் தேர்ந்தெடுக்க முடியாது
உடன்பிறப்புக்களையும் தேர்ந்தெடுக்க முடியாது
உறவுகளையும் தேர்ந்தெடுக்க முடியாது!

அதுபோல இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது.
தற்கொலைக்கு முயன்றவனில் பலபேர் மனவருத்தங்களுடன்
இன்றும் இருக்கிறான்.

இதுபோன்று பல விஷயங்கள் உங்கள் Choiceற்கு
அப்பாற்பட்டவை

அவைகள் எல்லாம் விதிப்படி நடப்பவை
விதித்தபடி நடப்பவை
அவற்றில் உங்கள் விருப்பத்திற்கு இடமேயில்லை!

மணவாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இருப்பதுபோல் தோன்றும்
அது காதல் திருமணமானாலும் சரி அல்லது பெற்றோர்கள்
செய்து வைக்கும் திருமணமானாலும் சரி,அதுவும் விதித்தபடிதான் நடக்கும்!

மெல்லியலாள் தோளில் சாய்ந்தாலும் சாய்வாள்
அல்லது தன் காலில் சாயவைத்தாலும் வைப்பாள்
தேவதையாகவும் இருக்கலாம்
அல்லது பிசாசாகவும் வந்து சேரலாம்!.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல
ஒரு ஆணின் தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்!

எல்லாம் வாங்கி வந்த வரம்
நம் மொழியில் சொன்னால் ஜாதகப் பலன்

நண்பனிடம் ஒருவன் கேட்டான்: “உங்கள் வீட்டில்
யார் முடிவெடுப்பீர்கள்? நீயா? அல்லது உன் மனைவியா?”

புன்னகையுடன் பதில் வந்தது!

“பெரிய விஷயங்களுக்கெல்லாம் நான் முடிவெடுப்பேன்.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவள் முடிவெடுப்பாள்!”

“விளக்கமாகச் சொல்லுடா!”

“ஃபிரிஜ்ஜை மாற்றுவது, புதுக் கார் வாங்குவது, ஏரியா பார்த்து வீடு
மாறுவது, பையனை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது போன்ற சின்ன
விஷயங்களுக்கெல்லாம் அவள் முடிவெடுப்பாள். எந்தக் கட்சிக்கு
ஓட்டுப் போடுவது, யார் வீட்டுக் கல்யாணத்திற்குப் போவது போன்ற
பெரிய விஷயங்களுக்கெல்லாம் நான் முடிவெடுப்பேன்!”

எப்படியிருக்கிறது பாருங்கள்?:-)))))

ஒரு சிந்தனையாளன் சொன்னான்:

“எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள்
அல்லது நாட்டிற்கு ஒரு தத்துவஞானி கிடைப்பான்.”

ஆகவே எதிர்பார்ப்பில்லாமல் வாழுங்கள்!
வருவது வரட்டும்
நடப்பது நடக்கட்டும்
இன்பம் துன்பம் எதுவந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்போம்
நம் சந்தோஷத்தை எதற்காகவும் அடகு வைக்க வேண்டாம்
பறி கொடுக்க வேண்டாம்.
பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டாம்

எந்தப் பறவையாவது கவலைப் படுகிறதா?
அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகிறதா?
கிடைத்த பழத்தின் மிச்சத்தைக் கொண்டுபோய் கூண்டில் வைத்துக் கொள்கிறதா?
கிடைக்கும் தானியத்தை லவட்டிக் கொண்டு போய்க் கூண்டில் ஒளித்து வைக்கிறதா?
கூடு கட்டும் கடனுக்காக வங்கியில் போய்க் கைகட்டி நிற்கிறதா?

அதைத்தான் கவியரசர் இப்படிப் பாட்டில் வைத்தார்:
“சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?”
+++++++++++++++++++++++++++++++++++
சரி, கவலைப் படாமல் இருக்க முடியுமா?
கவலைகள் தேடி வருகின்றனவே?
ஐந்தாம் வீடு கெட்டிருந்தால் கவலைகள் அலைபோல
நம்மைத் தேடி வரத்தான் செய்யும்!
Fifth house is the house of mind!
ஆகவே கவலைப் படாமல் இருக்க முடியாது!

ஆனால் அதில் நமக்குச் சாய்ஸ் உண்டு!

சாய்ஸ் உள்ள விஷயங்களுக்கு மட்டும் கவலைப் படுங்கள்
சாய்ஸ் இல்லாத விஷயங்களுக்குக் கவலைப் படாதீர்கள்!
முடிந்த விஷயங்களுக்கு மட்டும் கவலைப் படுங்கள்
நம்மால் முடியாத விஷயங்களுக்குக் கவலைப் படாதீர்கள்!

கவலைப் படுவது உங்கள் Choice
கவலையின்றி இருப்பதும் உங்கள் சாய்சே!

அன்புடன்
வகுப்பறை
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

2.7.09

கனவுக் கன்னிக்காக ஒரு பதிவு

கனவுக் கன்னிக்காக ஒரு பதிவு

கனவுக்கன்னி (Dream Girl) என்கிற தலைப்பைப் பார்த்துவிட்டு,
யாராக இருக்கும்?
பாவ்னா?
நயன்தாரா?
அனுஷ்கா சர்மா?
அல்லது தமன்னா? என்று ஆர்வத்துடன் பதிவிற்குள்
நுழைந்தவர்கள் பதிவை விட்டு விலகவும்.

ஏமாற்று வேலை இல்லை! இதுவும் ஒரு கனவுக் கன்னியின்
கதைதான். 1942ஆம் ஆண்டு தமிழகத்தில் கனவுக்கன்னியாக
இருந்தவரைப் பற்றிய சுவாரசியமான செய்தியைத்தான்
பதிவாக எழுதியுள்ளேன்
================================================
யாரந்த கனவுக்கன்னி?

பசுபலேட்டி கண்ணாம்பாதான் அவர்!

1942ஆம் ஆண்டு வெளிவந்த ‘கண்ணகி’ திரைப்படத்தில் கண்ணகியாக
நடித்து தனது சொந்தக் குரலில் அசத்தலாக தமிழில் வசனம் பேசியவர்
அவர்.

மனோகரா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னையாகவும்
(பொறுத்தது போதும், பொங்கியெழு மனோகரா’’ என்று வசனம் பேசியவர்)
படிக்காத மேதை படத்தில் நடிகர் திலகத்தின் வளர்ப்பு அன்னையாகவும்
நடித்தவர். அதெல்லாம் பின்னாளில்

அவர் தெலுங்கில் நடித்த படங்கள் 44 என்று பட்சி கூறுகிறது.
மொத்தம் நடித்த படங்கள் 150
நடித்த தமிழ்ப் படங்கள் எத்தனை?
விக்கி மகாராசா தெரியவில்லை என்று சொல்லி விட்டார்
நடித்த முதல் திரைப் படம் ஜ்யோதிஷ் சின்ஹா (Jyotish Sinha) என்னும்
தெலுங்கு மொழித்திரைப்படம்,உடன் கதாநாயகனாக நடித்தவர்.
S.R.Anjaneyulu (கேள்விப் படாத பெயராக இருக்கிறது)

அவர் சிறந்த பாடகி. சுந்தரத் தெலுங்கில் மட்டுமே பாடியுள்ளார்
என்று என் அறிவிற்கு எட்டின வரை ஞாபகம்.
தமிழில் அம்மையார் பாடிய பாடல் எதாவது நினவிற்கு வந்தால்
பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தெலுங்கைத் தாய் மொழியாகக்
கொண்ட திருமதி கண்ணாம்பா அவர்கள் தான் கதாநாயகியாக
நடிக்கவிருந்த ’கண்ணகி’ திரைப்படத்தில் பேசி நடிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருந்த்தால் தமிழை மூன்றே மாதங்களில் கற்றுக் கொண்டு,
அச்சரசுத்தமாகக் தன்னுடைய கணீர்க் குரலுடன் அப்படத்தில்
தமிழில் பேசி நடித்தார்.

(அப்போதெல்லாம் டப்பிங் வசதி இல்லை)

அப்படத்தின் கதை வசனகர்த்தாவான திரு.இளங்கோவன் அவர்கள்
(அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற வசனகர்த்தா அவர். அதை
நினைவில் வையுங்கள்) மூன்றே மாதங்களில் செல்வி (அப்பொது அவர்
செல்விதான். நம்புங்கள்) கண்ணாம்பாவிற்கு மூன்றே மாதங்களில்
தமிழைக் கற்றுக் கொடுத்தார். அவரும் கற்றுக்கொண்டு தமிழிலேயே
பேசி நடித்தது இன்றையவரை ஒரு ஆச்சரியமான செய்தி மற்றும்
திரையுலக வரலாறு!

அந்தப் படத்தில் கோவலனாக நடித்தது.திரு.P.U.சின்னப்பா.
===================================================
“வாத்தியார், எதற்காக இது? இதையும் பாடக் கணக்கில்
சேர்க்க வேண்டுமா?”

“நிச்சயமாக! ஒரு இளம் பெண்ணால் மூன்று மாதங்களுக்குள் அசத்தலாக
ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறபோது, மாய்ந்து மாய்ந்து
இரண்டு
ஆண்டுகளாக உங்களுக்கு ஜோதிடத்தைப் பாடமாக நடத்திக்கொண்டிருக்கிறேன். பாதிப்பேர்கள் சரியாகப் படிக்கவில்லை என்பதை வரும் பின்னூட்டங்களில் இருந்து அறிகிறேன். அதை உணர்த்தத்தான் இந்தக் கனவுக்கன்னி கதை!
இனிமேலாவது பாவனவும் சோபனாவையும் உதறிவிட்டு - கண்ணாம்பாவை மனதில் நிறுத்தி பாடத்தை ஒழுங்காகப் படியுங்கள்”
----------------------------------------------------
கண்ணாம்பாவை மனதில் நிறுத்துவதற்காக
(படிப்பதற்குத்தான் சாமிகளா!)

அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

* பிறந்த ஆண்டு: 1912. பிறந்த ஊர் ஆந்திரத்தில் உள்ள கடப்பா நகரம்.
* 7.5.1964ஆம் தேதியன்று சென்னையில் இயற்கை எய்திவிட்டார்.
தனது 52வது வயதிலேயே இறந்து போனார். அதுதான் சோகம்!
* கணவரின் பெயர்: இயக்குனர் திரு. நாக பூஷணம்.


கண்ண்கி திரைப்படத்தில் கண்ணகியாகக் கண்ணாம்பா!


வாழ்க வளமுடன்!