மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பக்திப் பாடல்கள். Show all posts
Showing posts with label பக்திப் பாடல்கள். Show all posts

3.10.17

உங்கள் நட்சத்திரத்திற்கான தேவாரப் பாடல்!!


உங்கள் நட்சத்திரத்திற்கான தேவாரப் பாடல்!!

சிவாய நம...

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்!!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு: உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

1
அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

2
பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.

3
கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

4
ரோகிணி:
எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

5
மிருக சீரிடம்:
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

6
திருவாதிரை/ஆதிரை:
கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

7
புனர்பூசம்:
மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.

8
பூசம்:
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

9
ஆயில்யம்:
கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே

10
மகம்:
பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

11
பூரம்:
நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

12
உத்திரம்:
போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.

13
அஸ்தம்:
வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

14
சித்திரை:
நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

15
சுவாதி:
காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.

16
விசாகம்:
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

17
அனுஷம்:
மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

18
கேட்டை:
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே

19
மூலம்:
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

20
பூராடம்:
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

21
உத்திராடம்:
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

22
திருவோணம்/ஓணம்:
வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

23
அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

24
சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

25
பூரட்டாதி:
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

26
உத்திரட்டாதி:
நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

27
ரேவதி:
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.
================================
மின்னஞ்சலில் வந்தது. அறியத் தந்துள்ளேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.17

வருவாய் (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?


வருவாய்  (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?

வருவாய்  (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?  கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்!!!!


கடவுளைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் அவர்!

earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...........................................................
இறைவன் ஒருவன்தான். நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம். அருணகிரியார் குமரக்கடவுளின் வடிவமாக இறைவனை வணங்கினார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் போன்ற சிவபக்தர்கள் இறைவனைச் சிவ வடிவமாக வணங்கினார்கள்.

அதுபோல உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை, எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்.

ஞானத்தைத் தரும் இறைவன் பணத்தைத் தரமாட்டாரா என்ன?

அதைத்தான் இந்த வீடியோவில் உள்ள செய்தி சொல்கிறது!

ஆகவே நீங்களும் அந்தப் பாடலைப் பதம் பிரித்து “வருவாய் அருள்வாய் குகனே!” என்று தினமும் பிரார்த்தனை செய்ய்ங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து உங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பார் நம் குமரக் கடவுள்!!!!


-----------------------------------------
நட்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.1.17

அனுமன் சாலிஸாவின் மகிமை.......!!!


அனுமன் சாலிஸாவின் மகிமை.......!!!

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே... எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்" என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்
.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற
துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி
வழி பட்டார்.

இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ
வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து
தொல்லை செய்ய ஆரம்பித்தன.

படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.

அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.

அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர்.

மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.

துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான்
‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.

இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
--------------------------------------------------------



=========================================================
பாடலின் வரிகள் - படிப்பதற்கு ஏதுவாக!

Shree Hanuman Chalisa | Bhakti Songs, Aarti, Bhajan, Mantra, Stotra, Sloka


Shri Hanuman Chalisa in English | Hanuman Chalisa Lyrics in English (Text)
Sri Hanuman Chalisa


Doha

Shri Guru Charan Sarooja-raj Nija manu Mukura Sudhaari
Baranau Rahubhara Bimala Yasha Jo Dayaka Phala Chari
Budhee-Heen Thanu Jannikay Sumirow Pavana Kumara
Bala-Budhee Vidya Dehoo Mohee Harahu Kalesha Vikaara


Chopai

Jai Hanuman gyan gun sagar
Jai Kapis tihun lok ujagar


Ram doot atulit bal dhama
Anjaani-putra Pavan sut nama


Mahabir Bikram Bajrangi
Kumati nivar sumati Ke sangi


Kanchan varan viraj subesa
Kanan Kundal Kunchit Kesha


Hath Vajra Aur Dhuvaje Viraje
Kaandhe moonj janehu sajai


Sankar suvan kesri Nandan
Tej prataap maha jag vandan


Vidyavaan guni ati chatur
Ram kaj karibe ko aatur


Prabu charitra sunibe-ko rasiya
Ram Lakhan Sita man Basiya


Sukshma roop dhari Siyahi dikhava
Vikat roop dhari lank jarava


Bhima roop dhari asur sanghare
Ramachandra ke kaj sanvare


Laye Sanjivan Lakhan Jiyaye
Shri Raghuvir Harashi ur laye


Raghupati Kinhi bahut badai
Tum mam priye Bharat-hi-sam bhai


Sahas badan tumharo yash gaave
Asa-kahi Shripati kanth lagaave


Sankadhik Brahmaadi Muneesa
Narad-Sarad sahit Aheesa


Yam Kuber Digpaal Jahan te
Kavi kovid kahi sake kahan te


Tum upkar Sugreevahin keenha
Ram milaye rajpad deenha


Tumharo mantra Vibheeshan maana
Lankeshwar Bhaye Sub jag jana


Yug sahastra jojan par Bhanu
Leelyo tahi madhur phal janu


Prabhu mudrika meli mukh mahee
Jaladhi langhi gaye achraj nahee


Durgaam kaj jagath ke jete
Sugam anugraha tumhre tete


Ram dwaare tum rakhvare
Hoat na agya binu paisare


Sub sukh lahae tumhari sar na
Tum rakshak kahu ko dar naa


Aapan tej samharo aapai
Teenhon lok hank te kanpai


Bhoot pisaach Nikat nahin aavai
Mahavir jab naam sunavae


Nase rog harae sab peera
Japat nirantar Hanumant beera


Sankat se Hanuman chudavae
Man Karam Vachan dyan jo lavai


Sab par Ram tapasvee raja
Tin ke kaj sakal Tum saja


Aur manorath jo koi lavai
Sohi amit jeevan phal pavai


Charon Yug partap tumhara
Hai persidh jagat ujiyara


Sadhu Sant ke tum Rakhware
Asur nikandan Ram dulhare


Ashta-sidhi nav nidhi ke dhata
As-var deen Janki mata


Ram rasayan tumhare pasa
Sada raho Raghupati ke dasa


Tumhare bhajan Ram ko pavai
Janam-janam ke dukh bisraavai


Anth-kaal Raghuvir pur jayee
Jahan janam Hari-Bakht Kahayee


Aur Devta Chit na dharehi
Hanumanth se hi sarve sukh karehi


Sankat kate-mite sab peera
Jo sumirai Hanumat Balbeera


Jai Jai Jai Hanuman Gosahin
Kripa Karahu Gurudev ki nyahin


Jo sat bar path kare kohi
Chutehi bandhi maha sukh hohi


Jo yah padhe Hanuman Chalisa
Hoye siddhi sakhi Gaureesa


Tulsidas sada hari chera
Keejai Nath Hridaye mein dera


Doha

Pavan Tanay Sankat Harana
Mangala Murati Roop
Ram Lakhana Sita Sahita
Hriday Basahu Soor Bhoop
==========================================

12.4.16

திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!


திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்        

பல அவதாரங்களை எடுத்தவர் திருமால். அவர் பெருமைகளைப் பாடுவதற்கு அந்தக் காலத்தில் அவரது அடியார்களான ஆழ்வார்கள்
இருந்தார்கள்

ஸ்ரீநாராயண மூர்த்தி உன்னைப் பாடிப் பரவசப்படுவதைவிட எங்களுக்குப் பெரிதாக வேறு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒன்றும் வேண்டாம்
அது இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்கள் அவர்கள்.

பிறகு முண்டாசுக் கவிஞர் பாரதி வந்து திருமாலின் கண்ணன் அவதாரத்தின் மேல் தீராத பக்தி கொண்டதோடு அவரைப் பலவிதமாக தன் மனதிற்கண்டு இன்புற்றுச் சிறப்பாகப் பல பாடல்களை இயற்றினார்.

1.கண்ணன் என் தோழன், 2.கண்ணன் என் தாய் 3.கண்ணன் என் தந்தை 4.கண்ணன் என் சேவகன்
5.கண்ணன் என் அரசன் 6.கண்ணன் என் சீடன் 7.கண்ணன் என் சற்குரு 8. கண்ணம்மா என் குழந்தை
9.கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை 10.கண்ணன் என் காதலன் (5 பகுதிகள்)
11.கண்ணன் என் காந்தன் என்று அந்த மாயக்கண்ணனைப் பல வடிவங்களில் கண்டு இன்புற்று,உருகி உருகி எழுதியவர் அவர்.

இறைவனையே, தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் கற்பனை செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல் தோழனாகவும், சீடனாகவும்,
ஏன் சேவகனாவும், அதற்கும் மேலே ஒரு படி சென்று காதலனாகவும் எழுதிக் களிப்புற்றதோடு பலரையும் கிறங்க வைத்தவர் அவர்.

அவருக்குப் பிறகு, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன.
------------------------------------------------------------
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்

ஸ்ரீராகம்:

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)

படம்: திருமால் பெருமை - வருடம் 1968

பரந்தாமன் எடுத்த அவதாரங்களைப் பட்டியலிட்டவர், எடுக்க வேண்டிய அவதாரத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொல்லிப் பாடலை நிறைவு செய்ததுதான்
இந்தப் பாடலின் சிறப்பு
-------------------------------------------
மற்றுமொரு பாடல்:

மலர்களிலே பலநிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பலமணம் கண்டேன் - அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன்!
(மலர்)

பச்சைநிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்!
(மலர்)

பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்
பாசமென்னும் சிறு நூலெடுத்துச்
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
(மலர்)

நானிலம் நாரணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருப்பாட்டு
ஆயர் குலப்பிள்ளை விளையாட்டு - இந்த
அடியவர்க் கென்றும் அருள்கூட்டு!
(மலர்)

படம்: திருமால் பெருமை - வருடம் 1968

அந்தப் பரந்தாமனுக்குக் கவியரசர் எதைச் சாற்றினார் பார்த்தீர்களா?

பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப் பாசமென்னும் சிறு நூலெடுத்துச் சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!

சத்தியம் என்னும் சரத்தில் பக்தி, பாசம் எல்லாவற்றையும் தொடுத்தல்லவா சாற்றியுள்ளார்!!

அந்தப் பரந்தாமனின் அருள் கிடைக்க நாமும் அதையே சாற்றுவோம்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.1.16

இன்று தைப்பூசம்!

இன்று தைப்பூசம்!

தை மாதத்தில் பொங்கலுக்கு இணையாக இன்னொரு விசேட நாள் இருக்கிறது என்றால் அது தைப்பூச தினம்தான்! ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் நடைப் பயணமாக பழநிக்குச் செல்லும் நாள் இது. இன்னன்நாளில் நாமும் முருகப் பெருமானை நினைத்து, வழிபட்டு அவனருளைப் பெறுவோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக முருகனைப் பாடிய சில பாடல்களை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் குவலயத்தோர் வழிபடட்டும் என்று சிறப்பாகத் தன் வசனத்தில் எழுதிப் படங்களிலும்
அதைச் சிறப்பாகக் காட்டியவர் திரு.ஏ.பி.நாகராஜன்.

எல்லா இடங்களிலும் குன்றில் உறையும் குமரன், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் மட்டும் கடலோரத்தில் குடிகொண்டுள்ளார்.

சூரனைவென்று தேவர்களைக் காத்தகுமரன், இன்றும் இன்முகத்துடன் அங்கே நின்று, தன் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திருச்செந்தூர் சண்முகநாதனைச் சிறப்பித்துப் பாடிய  பாடல்களை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவிட்டுள்ளேன்!

பாடலைப் பாருங்கள்:
-------------------------------------------------
"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலர்கள் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா!

படம்: தெய்வம் - வருடம் 1972

"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - அவனைத் தேடித்தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" என்று

பாடலைத் துவங்கியவர், கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் - தலையா கடல் அலையா? என்று வியந்ததோடு, குழந்தைகள், பெரியவர் என்று

அனைவரையும் அங்கே வரவழைக்கும் செயல் குமரனுக்கு மட்டுமே தெரிந்த கலை!" என்று சொன்னது இந்தப்பாடலின் சிறப்பாகும்.

நம்பியவர் வந்தால், நெஞ்சுருகி நின்றால், முருகன் வந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்று முத்தாய்ப்பாய்ப் பாடலை முடித்தது கவியரசருக்கே

கைவந்த கலை என்றால் அது மிகையல்ல!
---------------------------------------------
மற்றுமொரு பாடல்:

செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்

(செந்தூர்)

என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா,
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா!

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா?
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா?"

படம்: சாந்தி - வருடம்.1965
-------------------------
மேலும் ஒரு பாடல்:

இந்தப் பாடலை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். என்னதொரு சொல் விளையாட்டு என்று கண்டு கூறுங்கள்!

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா

(காவ..)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா

(காவ..)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

(காவ..)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!

திருப்பதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ"

படம்: மனிதனும் தெய்வமாகலாம் - வருடம் 1975

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா - குமரா நீயிருக்கும் இடம் தானடா" என்று கோவிலுக்கு ஒரு புது

விளக்கம் சொல்லிப் பாடலைத் துவக்கியவர், "நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும், ஏன் எங்கும் உன்முகம் தான் தெரியுது  சண்முகா"

என்று சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு.

புவியைக் காப்பவனே, உன் திருவடிகளை நாங்கள் தாங்குவோம் என்று முத்தாய்ப்பான வரிகளில் சொன்னது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!!!

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.10.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.15

தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?


தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?

பக்தி மலர்

6.10.2015

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்
பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பழமுதிரும் சோலையிலே ... பால் காவடி ஆடிவர
தணிகை மலை தென்றலிலே ... பன்னீர் காவடி ஆடிவர
சாமிமலை கோயிலிலே ... சர்க்கரை காவடி ஆடிவர 
செந்தூரின் வாசலிலே ... சந்தனக் காவடி ஆடிவர 

குமரன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே

பரங்குன்றின் மலையோரம் ... சேவற்கொடி ஆடிவர
குன்றக்குடி என்நாளும் ... வண்ண மயிலும் ஆடிவர
மயிலத்தின் மலைமேலே ... மணி ஓசை முழங்கிவர 
விராலிமலை மேலிருந்து ... வீரவேலும் வெற்றி தர.

கந்தன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.9.15

பாடவந்தது ஏன் மறந்தது?


பாடவந்தது ஏன் மறந்தது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
(உன்னைத்தான் ...)

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் 
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் 
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் 
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் 
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.9.15

பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?


பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வேல் வந்து வினை தீர்க்க ... 
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி ... 
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப் 
பழம் தந்து பாராட்டி 
பூமாலைப் போட்டேனடி ...
பூமாலைப் போட்டேனடி ... 
திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில் ... 
பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டேனடி ...
கந்தன் என்னைக் கண்டேனடி ... 
எந்தன் சிந்தையில் நின்றானடி 

வேலழகும் மயிலழகும் ... 
வீற்றிருக்கும் பேரழகும் 
காலமெல்லாம் இருக்குமடி ... அந்த ... 
காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.9.15

தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!


தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து
மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.9.15

எத்தனை திருநாட்கள் அவனுக்கு!


எத்தனை திருநாட்கள் அவனுக்கு!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 
(முருகனுக் கொருநாள் ... )

வைகாசி விசாகத் திருநாள்
அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள் 
வடிவேல் குமரனின் திருநாள் 
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள் 
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

சரவணன் பிறந்தத் திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள் 

செந்தூர் வாசலில் ஒருநாள் 
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்

வள்ளிக் குமரனின் மண நாள் 
நம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்

முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்

நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=======================================================
2


நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்

வெளி நாடுகளில் வசிக்கும் நமது மாணவக் கண்மணிகள் பலரிடம் இருந்து, வாத்தியாரின் புத்தகம்’ எங்களுக்கில்லையா? என்று கேட்டு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏன் இல்லை? அவர்களுக்கும் உண்டு.

என்ன வித்தியாசம். அஞ்சல் செலவுதான் அதிகமாக உள்ளது. இந்தியாவிற்குள் எந்த ஊரில் இருந்தாலும் கூரியர் அல்லது தபாலில் (Post) 50 ரூபாய் செலவில் புத்தகத்தை யாருக்கும் கிடைக்கும்படி செய்து விடலாம்.

ஆனால் வெளிநாடுகளுக்கு அவ்வாறு குறைந்த செலவில் அனுப்ப முடியாது. அந்தந்த நாடுகளின் பொருளாதார சூழ்நிலை அப்படி!

புத்தகத்தின் எடை 360 கிராம்கள் (பக்கங்கள் 320)

இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு  வகுப்பறை ஜோதிடம் - முதல் தொகுதியை அனுப்ப ரூ.800:00 முதல் ரூ.900:00 வரை தபால் செலவு ஆகும். அதுபோல சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூர் போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு அனுப்ப
ரூ.600:00 அல்லது ரூ.700:00 ஆகும். அத்துடன் புத்தகத்தின் விலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதற்கு சம்மதம் உள்ளவர்கள் எழுதுங்கள். உங்களுக்கு புத்தகம் உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்!

பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.9.15

அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது?




அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------

திருநீறில் மருந்திருக்கு தெரியுமா

திருநீறில் மருந்திருக்கு தெரியுமா? 
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா? 
முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து 
நல்ல அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து
அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து

அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து 
நல்ல ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து 
வேலன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கன்னியரைக் கற்பு வழியில் நடத்தும் மருந்து
இளங் காளையரைக் காலமெல்லாம் காக்கும் மருந்து 
மங்கையர்க்கு மழலைச்செல்வம் கொடுக்கும் மருந்து 
திருமங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து 
குமரன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் கவிதைப்பாட செய்யும் மருந்து
பெருங் கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து
முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து

கந்தன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?
முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.8.15

கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!


கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல் 
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்திவடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால்மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்!
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.15

குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!


குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன.
அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------
அழகெல்லாம் முருகனே

அழகெல்லாம் முருகனே ... 
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... 
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ... 
பழநிக்கு வந்தவன் 
பழமுதிர்ச்சோலையிலே ... 
பசியாறி நின்றவன் 
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ... 
குகனாக வாழ்பவன் 
குறவள்ளிக் காந்தனவன் ... 
குறிஞ்சிக்கு வேந்தனவன் 
பூவாறு முகங்களிலே ... 
பேரருள் ஒளிவீசும் 
நாவாறப் பாடுகையில் ... 
நலம்பாடும் வேலனவன் 
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.8.15

காலை இளம் கதிரில் என்ன தெரியும்?

காலை இளம் கதிரில் என்ன தெரியும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதிகொள்ளுது 
குமரா உனை மனம் நாடுது கூத்தாடுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது
சிவ சுப்ரமண்ய சுப்ரமண்யம் என்று சொல்லுது 
சுகமாகுது ... குக நாமமே ... சொல்லாகுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
சக்தி வேல் சக்தி வேல் என்றே சேவல் கூவுது
சக்தி வேல் வேல் சக்தி வேல் வேல் என்றே சேவல் கூவுது

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
வினை ஓடுது வடி வேலது துணையாகுது
ஆகுது ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்
முருகா ... முருகா ...
பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
முருகா ...

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது குருநாதனே
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
குருநாதனே முருகா 

பாடலைப் பாடிப் பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.8.15

முதல் வேலை எது?


முதல் வேலை எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
========================================================
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையை நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுரமும்
மான்மகள் வள்ளி மறுபுரமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

சூலமங்கலம் சகோதரிகள் - முருகா உனக்கு புகழ் மாலை
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.7.15

எது நடக்காது?


எது நடக்காது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
பழநிக்குச் சென்று ... அழகனைப் பார்த்து
உருகிய மேனி உலகிலே
தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?

தணிகைக்கு வந்து ... தலைவனைக் கண்டு
வணங்கியப் பின்னால் வாழ்விலே 
அன்பில் ... கும்பிட்ட கைகள் விலகுமா?
பொன் கோடி தந்தாலும் தீண்டுமா?
(பழநிக்குச் சென்று ... )

அறுபடை வீடும் ... அடியவரோடு
நடந்திடும் கால்கள் புவியிலே 
இனி ... வேரொருப் பாதையில் செல்லுமா?
வடிவேலவன் உறவைத் தள்ளுமா?
(பழநிக்குச் சென்று ... )

காவடிக் கொள்ளும் ... பூவடி நிழலில்
கலந்தப்பின் உள்ளம் கனவிலும் 
நாம் ... வாவென அழைத்தால் திரும்புமா?
அது வானுலகாயினும் விரும்புமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
 --------------பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.7.15

பழம் உதிர்த்த சோலை அது!


பழம் உதிர்த்த சோலை அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா 
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பக்தியோடு நீரணிந்து வருவோரை எல்லாம்
பற்றோடு காப்பவனே வேல் முருகா 
பச்சை மயிலேறி உலகைச் சுற்றி வலம் வந்த வேல் முருகா 
பாதத்தைப் பற்றி உன் கோயிலைச் சுற்றியே வந்தேன் வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பாடும் குயிலினங்களும் ஆடும் மயில் இனங்களும்
பாடிடும் குகா குகா என்றே வேல் முருகா 
பறக்கும் பறவையெல்லாம் உன் பெயர் சொன்னால் வேல் முருகா 
நான் ... பாடிடவும் வேண்டாமா
நாளும் கொண்டாடிட வேண்டாமா? 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 
- பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.7.15

அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?


அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?

பக்தி மலர்

14.7.2015

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே 
சிவ குமரனையே வணங்கிடுனே தினமே
குமரனையே வணங்கிடுனே தினமே

அரு மறையின் ஒரு பொருளை அறுமுகத்தின் திருவருளை
பெறுபவர்க்கு பிணிகள் இல்லை நினைவாய் 
அந்தப் பேரின்பச் சோலையிலே நுழைவாய் 

(அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே
குமரனையே வணங்கிடுனே தினமே)

வளரெழிலும் மலர் மணமும் ... வழிநெடுக தேன்சுவையும் 
விருந்தாக நிறைந்து மனம் இனிக்கும்
வடிவேலுடனே மயிலும் வந்து அழைக்கும்
(அருணகிரி ... )

புதிய மனம் புதிய சுவை ... புதிய நிலை புதிய வழி 
தெறிந்தவர்க்கு திகைப்பேது பின்னே
இங்கு எதுவந்து எதுபோயின் என்னே 
(அருணகிரி ... )

அழகுவிழி பழகியபின் அமுத மழை பொழியும் அதில்
நனைந்தவர்க்கு வாய்த்ததுவே தருணம் 
குருநாதனவன் தாள் சரணம் சரணம்
(அருணகிரி ... )

குமரனையே வணங்கிடு தினமே

பாடிப்பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.7.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது?


இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==============================================
ஆறுமுகன் வாசம் செய்யும்

ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல் 
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!