மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.14

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்!

 

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
1. இரண்டு கால்களால் நடக்கத்துவங்கினால் என்ன ஆகும்?


2. ஆஹா... என்ன இது?



3. புதிய கண்டு பிடிப்பு. மடிக் கணினியில் இதையும் நீங்கள் செய்யலாம்!


4. ஸ்பைடர்மேன் குடும்பஸ்தனாக ஆனால்.......!


5. இந்தக்காலத்து மக்களின் குறுக்குச் சொற்களுக்கான விளக்கங்கள்!


6. வாத்தியார்களின் வசனங்கள்


 7.பொது மக்களின் பொருளாதாரம்


 8. திருமணச் சடங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான வரி!


இவைகள் எல்லாம் இணையத்தில் கிடைத்தவை.  இவற்றில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது? அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
==============================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.6.14

நெஞ்சம் எப்போது உருகும்?

நெஞ்சம் எப்போது உருகும்?
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை, திரைப்பட நடிகர் சித்தூர்' திரு. V. நாகையா அவர்கள் பாடிய  'திருமுருகா என்று' துவங்கும் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

=======================================================
திருமுருகா .... என்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்
திருமுருகாவென்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்
(... திருமுருகா)

சிறுமதியால் உள்ளம் இருண்டிடும் வேளையில்
  அருளொளி வீசும் ஆண்டவன் நீயே
திருமுருகாவென்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்
(... திருமுருகா)

அப்பனும் பிள்ளையும் நீதான் ஐயா
  அடிப்பதும் அணைப்பதும் உன்கை தான் ஐயா
கற்பனை வாழ்வினில் கதி இனி ஏது
  கருணாநிதியே கதிர்வடிவேலா

திருமுருகாவென்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்

திருமுருகா, திருமுருகா, திருமுருகா.

பாடியவர் 'சித்தூர்' V. நாகையா - 'திருமுருகா என்று'
இசை:  C.N. பாண்டுரங்கன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.6.14

Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!

 

Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!

ஜவ்வாது மேடையிட்டு  சர்க்கரையில் பந்தலிட்டு 
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில்தேனெடுத்து தா தா தா..
(ஜவ்வாது)
வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே
ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ....ஹே...
(ஜவ்வாது)
பூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே
சிலை போல வந்த பெண்ணே
அத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ..ஹே..
(ஜவ்வாது)

பாடல்:  கவியரசர் கண்ணதாசன்.
திரைப்படம் பணத்தோட்டம்

-----------------------------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. அம்மணிக்கு 27 வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு ஆண்டுகூட நிலைக்கவில்லை. விவாகம் ரத்தானது.

2. அம்மணி மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது.

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!

1. ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி நீசமாகிவிட்டார். நீசமானால் விக்கெட் அவுட்.

2.லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் சனீஷ்வரன். இன்னொரு பக்கம் செவ்வாய். சங்கடமான அமைப்பு.

3.பெண்களுக்கு முக்கியமான பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் லக்கினத்திற்கு எட்டிலும், தன் வீட்டிற்குப் பன்னிரெண்டிலும் அமர்ந்து ரன் அவுட்டாகி விட்டார். அவரால் எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டது.

4. புதன், சுக்கிரன், சனி ஆகிய மற்ற 3 கிரகங்களும் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்கள். Retired hurt - ஆடமுடியாத நிலைமை என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

5. சுபக்கிரகங்கள் 3ம் கெட்டிருக்கின்றன. அதுவும் ஒரு சாதகமில்லாத அமைப்பு

6. ஜாதகியின் 7ஆம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில். மேலும் அந்த வீட்டிற்கு ஆறில். அதுவும் ஒரு மோசமான அமைப்பு.

7. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல்

8. பிறகு எப்படி ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது என்ற கேள்வி எழலாம். குரு பகவானின் விஷேசப்பார்வை  சனி மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சுக்கிரனுடன் கை கோர்த்து, ஜாதகிக்குத்
திருமணத்தை நடத்தி வைத்தார்.

9. இரண்டாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய். அத்துடன் 2ஆம் வீட்டின் மேல் குரு பார்வை. என்ன பிரயோஜனம்? சனியின் 3ஆம் பார்வையால்
அந்த அமைப்பு க்ளீன் போல்டானது. (Clean Bowled)

10. அது மட்டுமா? 2ஆம் வீட்டுக்காரன் சூரியன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தான். அவனுக்கும் விக்கெட் பறிபோனது.

11. ஏழாம் வீட்டுக்காரன் சனி 12ஆம் வீட்டில் அந்த வீட்டுக்காரன் புதனுடன் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். (association of 7th lord and 12th lord) அந்த அமைப்பு திருமண மகிழ்ச்சிக்கு (marital happiness) எதிரானது.

12. போதாததிற்கு சந்திரனும் ராகுவும் சேர்ந்து உள்ளான். மனகாரகனுடன் ராகு சேர்ந்தால் என்ன ஆகும். வேண்டிய அளவிற்கு மனச் சங்கடங்களையும், மனப் போராட்டங்களையும், கவலைகளையும் கொடுத்தான். அவனால் முடிந்தது அதுதான்.

ஆக மொத்தம் இரண்டாம் வீடும் கெட்டுப்போனதால் ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போனது.

ஜாதகிக்குத் தன் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் வெறுத்துப்போய் தன் பெற்றோர்களிடமே திரும்பி வந்துவிட்டார். விவாகத்தையும் ரத்து செய்துவிட்டார்.

துரதிர்ஷ்டமான ஜாதகம். வேறு என்னத்தைச் சொல்வது?

அலசல் போதுமா?

போட்டியில்  29  பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் .16.பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.

அந்த .16. பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் சரியாக இரண்டு பதில்களையும் எழுதியவர்கள் 7  பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான

பதிலை ஒட்டி எழுதியவர்கள் .9  பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------

1 ******
Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம். QUIZ NO.60
    30.07.1974 ஆம் தேதி காலை 7.15.05 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கடக லக்கினம். செவ்வாய் யோககாரகன்.
    ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி 40வது வயதில் விவாக ரத்து எற்பட்டது.
    திருமணத்திற்க்கு எதிரான அமைப்புகள் இந்த ஜாதகத்தில் நிறைய உள்ளன.
    1. லக்கினம் பாபகர்த்தாரி தோஷம். ஒரு பக்கம் சனி 12ல், மறுபக்கம் செவ்வாய் 2ல். லக்கினம் பலவீனம் (3 பரல்).
    2. லக்கினாதிபதி சந்திரன் (3 பரல்). விருச்சிக ராசியில் நீசம். நீசபங்க யோகம் உண்டாகி உயர்ந்த நிலையை அடையமுடியும். மேலும் ராகுவுடன் கூட்டு 5ம் வீட்டில். 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.
    3. 7ம் வீட்டு அதிபதி சனி (2 பரல்). லக்கினத்திற்க்கு 12ம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரனுடன், புதனுடன் கூட்டு. 12ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன்.
    4. நவாம்சத்தில் லக்கினாதிபதி சந்திரனும், 7ம் வீட்டு அதிபதி சனியும் கூட்டு சேர்ந்து இருப்பதால் புனர்ப்பு தோஷம்.திருமணம் பிரிவில் தான் முடியும். மேலும் களத்திரகாரகன் சுக்கிரனும் இவர்களுடன் கூட்டு.
    5. 9ம் வீட்டு பாக்கியாதிபதி குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. 6ம் வீட்டு அதிபதி வில்லனும் அவரே. இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் 8ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும்.
    6. 2ம் வீட்டு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் பாபகர்த்தாரி தோஷத்தில். அதாவது 2ம் வீட்டிற்க்கு 12ல் விரைய ஸ்தானத்தில்.2ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை. நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம் அடைந்துள்ளார்.
    7. வக்கிரம் அடைந்த குருவின் 5ம் பார்வை 12ம் வீட்டின் மீதும், 7ம் பார்வை 2ம் வீட்டில் மீது பார்ப்பதாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.
    8. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.
    9. குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு, அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் சனியின் பார்வையுடன். வீக்காக உள்ளார்.குழந்தைக்குக் காரகன் வக்கிர குரு அஷ்டமத்தில் மறைந்து விட்டார். ஜாதகிக்கு குழந்தையில்லாமல் போய்விட்டது.
    குரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது குருவின் பார்வையால் எந்த பலனும் கிடைக்காது.
    யோககாரன் செவ்வாயின் பார்வை சந்திரன் மீது இருப்பதாலும், நீசபங்க யோகத்தினால் சந்திர தசையில் ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி சந்திர தசை சனி புக்த்தியில் 40 வது வயதில் விவாக ரத்து எற்பட்டது. விவாக ரத்து எற்பட்டதற்கு காரணம் நவாம்சத்தில் சனியும், சந்திரனும் கூட்டு.
    இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
    1. கஜகேசரி யோகம் சந்திரனிலுருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.அதிர்ஷ்ட்டம் உண்டாகும், முன்னேற்றம், வெற்றி உண்டாகும்.
    2. நீசபங்க யோகம் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, June 25, 2014 8:53:00 AM/////
---------------------------------------------------------
2
/////Blogger seethalrajan said...
    1. லக்னாதிபதி நிசம் உடன் ராகு, லக்னமும் பாபகர்தாரியோகம் உள்ளது.
    2.9ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவு, 5ல் ராகு யோகம் அனைத்தும் கெட்டுவிட்டது.
    3. 7ம் வீட்டு அதிபதி சனி 12ல் உடன் சுக்ரன்,புதன் ஆனால் அம்சத்தில் சுக்ரன் உச்சம் உடன் லக்ன அதிபதி சந்திரன் மற்றும் களத்திர காரகன் சனி அகையல் சுக்ர திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    7.சிம்ம லக்ன யோக காரகன் செவ்வாய் 2ல் நல்லது ஆனால் அந்த வீட்டு அதிபதி சூரியன் அந்த வீட்டுக்கு 12ல் மற்றும் அம்சத்தில் நிசம். குடும்ப வாழ்கை நன்றாக இல்லை தோல்வி அடைந்து இருக்கும்.
    Wednesday, June 25, 2014 10:11:00 AM/////
-------------------------------------------------------
3
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 60 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    கடக லக்கின ஜாதகரான இவருக்கு லக்கினாதிபதி நீச்சம். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.
    குடும்ப ஸ்தானத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து பாக்யஸ்தான அதிபதி குருவின் பார்வை பெறுவதால் செவ்வாய் தோஷம் இருந்தாலும், சுக்கிர திசை குரு பக்தியில் அதாவது ஜாதகியின் 21 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.
    ஆனால் குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் அந்த இடத்துக்கு 12ல் அமர்ந்து சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் மாட்டிக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் நீச்சம் அடைந்து விட்டது. மேலும் களத்திர ஸ்தானாதிபதி சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் 12ல் மறைந்து விட்டது. அதனால் இவர் கணவரை இழந்து இவரே குடும்பதை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
    புனர்பூ தோஷம் இருப்பதும் இந்த நிலையை உறுதிப் படுத்துகிறது.
    Wednesday, June 25, 2014 11:06:00 AM/////
-------------------------------------------------------- 
4 ****** 
Blogger murali krishna g said...
    ரொம்பவும் கடினமான ஜாதகமாக உள்ளது !.
    முதலில் 7-ம் வீட்டை பார்க்கலாம் ! 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை !. அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி !. 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை !. களத்திர தோஷம் உண்டு !. தாமதமான திருமணம் !. கஷ்டப்பட்டு நடந்தேறிருக்கும் !. சுக்கிர தசையின் முடிவிலோ அல்லது சூரிய தசை ஆரம்பத்தில் நடந்திருக்கும் !. சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் !.சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் ! அதனால் நிச்சயம் படுக்கை சுகம் உண்டு !
    2-ம் வீட்டு அதிபதி சூரியன் அதற்கு 12-ல். இரண்டாம் வீட்டில் செவ்வாய் (தோஷம்) !. அதற்கு சனியின் பார்வை வேறு !. வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை !.எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது ! விவாகரத்தில் முடிந்திருக்கும் !. நவாம்சத்தில் ஏழாம் வீடு புனர்பூ தோஷத்துடன் சுக்கிரனும் கூட்டணி. காரகோ பாவ நாசனாய என்பது இங்கே மிகவும் பொருந்தும் !.    சரியா அய்யா ? அலசலுக்கு காத்திருக்கிறேன் !
    Wednesday, June 25, 2014 11:34:00 AM
-------------------------------------------------------
5   
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,2ம் வீட்டதிபதி சந்திரன் 5ல் நீச்சம் மற்றும் ராகு வுடன் கூட்டணி.
    2).இரண்டாம் வீட்டில் செவ்வாய்.பரிவர்த்தனை யோகம்.குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது.
    3).5ம் வீட்டிலுள்ள நீச்ச சந்திரனுக்கு அந்த வீட்டதிபதி செவ்வாயின் பார்வை.
    4).7ம் வீட்டதிபதி சனியும்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் மறைவு அத்துடன் 12ம் பதி ஆட்சி பெற்ற புதனுடன் சேர்க்கை.
    7ம் வீட்டிற்கு சூரியன் பார்வை.
    5).களஸ்திர ஸ்தானதிபதி சனிக்கும், களத்திர காரகன் சுக்கிரனுக்கும் வக்கிரம் பெற்ற குருவின் பார்வை.
    6).களத்திரஸ்தானாதிபதி சனி தன் வீட்டிற்க்கு 6ல் மறைவு.
    எனவே ஜாதகிக்கு சுக்கிரதசை முடிவில் 30 வயதிற்க்கு மேல் நோயாளியான கணவன் வாய்த்திருப்பார்.
    7).2ல் செவ்வாய் நிற்ப்பதாலும்,2ம் பதி நீச்சமடந்ததாலும்,12ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தாலும் குடும்ப வாழ்வில் சுகமில்லை.
    Wednesday, June 25, 2014 12:21:00 PM/////
 --------------------------------------------------------------- 
6 ******
///////Blogger venkatesh r said...
    ஆசிரியருக்கு வணக்கம். இரண்டாம் கேள்வியே, முதல் கேள்விக்கு பதிலாக உள்ளது.
    புதிர் எண்: 60 க்கான விடை.
    1. ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும்.
    2. குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை. மன/ மண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்வார்.
    அலசல் இதோ:
    கடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள ஜாதகம்.
    1. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இல்லை. லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் மனக்காரகனுமான‌ சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.
    2. குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2க்கு 12ல், லக்கினத்தில் அமர்ந்துள்ளார்.இது அவருக்கு நல்ல இடமில்லை.
    3. இரண்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து 6/9ம் அதிபதி குருவின் பார்வையில் உள்ளார். சனி 12ல் அமர்ந்து தன் 3ம் தனிப் பார்வையில் செவ்வாயை பார்க்கிறார்.இந்த காரணங்களால் இரண்டாமிடமும், செவ்வாயும் பலமாக இல்லை.
    4. களத்திராதிபதி சனி,காரகன் சுக்கிரனுடன் 12ல் மறைந்து விட்டார். தவிர 12ம் அதிபதி புதனின் கூட்டணி அவர்களை வலிமை இழக்க‌ வைத்துள்ளது.
    5. 6/9ம் அதிபதி குரு தன் 5ம் தனிப் பார்வையில் இவர்களை பார்க்கிறார்.
    இந்த காரணங்களால், ஜாதகிக்கு, 26 வயதிற்கு மேல் சுக்கிர தசை, குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும். அதற்கு பிறகு வந்த சந்திர தசை ராகு (அ) சனி புக்தியில் மண முறிவு ஏற்பட்டிருக்கும்.
    இதற்கான காரணங்கள் :
    1. நவாம்ச லக்னத்திற்கு ஏழில் சனி+சந்திரன் கூட்டணி. புனர்பூ தோசம்.
    2. சந்திரன் நீசமடைந்து, ராகுவுடன் கூட்டணி.இதனால் மன வலிமை குறைந்துள்ளது.
    3. ஏழாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    4. ஜாதகத்தில் சொல்லிக் கொள்ளும்படியான யோகங்களில்லை.
    இதனால், ஜாதகிக்கு கோச்சாரத்தில் வந்த நீச சந்திர தசை ராகு புக்தியில் ஏற்பட்ட மனச் சலனம் காரணமாக‌ மண முறிவுக்கு வித்திட்டு இருக்கும்.
    Wednesday, June 25, 2014 2:28:00 PM//////
-----------------------------------------------------------------------
7
////Blogger Senthil Nathan said...
    ஐயா.
    இந்த பெண்மணியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனீஸ்வரன் பன்னிரண்டில் களத்திர காரகன் சுக்கிரனுடன் இருப்பதாலும் சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பதாலும் இவர் 1990-1991 ல் திருமணமாகி விதவையானவர்,
    மேலும் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டிற்கு பன்னிரண்டில் இருப்பதாலும் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் இவருக்கு குடும்பம் இல்லை .
    அதாவது
    இலக்கினாதிபதி ஐந்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் உடன் உச்ச இராகுவும் நீச்ச கேதுவும், செவ்வாயும் சந்திரனை பாதிப்பதாலும் இவர் குழந்தை இல்லாதவர். குறை ஆயுளை கொண்டவர்.
    Wednesday, June 25, 2014 5:25:00 PM/////
-------------------------------------------------------------------- 
8******
/////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகருக்கு தாமதித்த திருமணம் யோகம்தான். 30 வயதிற்கு மேல் சூரிய தசையில் சந்திர புத்தியில் என்று சொல்லலாம். 7ம் அதிபதி சனி, களத்திர காரகன் சுக்கிரன் இருவருமே ஒரு சேர 12ல் மறைந்ததும் அந்த இடம் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதும் தாமதத்திற்கு முக்கிய காரணம். திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். செவ்வாய் வாக்குஸ்தானமான 2ல் இருப்பது வீண் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகலாம்.
    Wednesday, June 25, 2014 8:15:00 PM/////
----------------------------------------------------------
9******   
////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்..60
    கடக்க லக்னம் .லக்னாதிபதி 5 ல் திரிகோணத்தில் நீசமாக.. ரகுவுடன் கூட்டு . மனநோயாளி .
    லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் ..
    லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் குரு7ம் பார்வை ..
    களச்திரகாரகன்சுக்கிரன் &ஏழாம் வீட்டதிபதி சனி 12 ல் மறைவு ..
    எட்டில் குருவுடன் மாந்தி ...திருமணம் ஆனாலும் விதவையாகும் வாய்ப்பு. அல்லது விவாகரத்து ..
    Wednesday, June 25, 2014 8:24:00 PM//////
---------------------------------------------------------
10
Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா,வணக்கம்.
    புதிர் 60க்கு விடை:லக்கணாதிபதி நீசம்,2ம் வீட்டு அதிபதி அதற்கு பனிரெண்டில், 7ம் வீட்டு அதிபதி அதற்கு 6ல், களத்திரகாரகன் சுக்கிரன் லக்கணத்திற்கு பனிரெண்டில்.சுக்கிரதிசையில் திருமணம் முடிந்திருக்கும்,குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.
    Wednesday, June 25, 2014 8:28:00 PM/////
------------------------------------------------------------  
11
///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.60:
    The Native of the horoscope is 40 years old.
    1. She has got married and short span of Married life.
    2. Her marriage or family life is in trouble.
    Reasons:
    1. Lagna lord Moon is in debilitated position at fifth house along with exalted Rahu.
    2. Bagyathipathi (Jupiter) is in twelfth house from its own house.
    3. Seventh lord and 4th lord is in twelfth house from lagna,
    4. There is Kala sarpa dhosa.
    5. There is kuja dosha.
    6. Seventh house lord Saturn and Kalathra karaga Venus is hemmed between Kethu and Sun. (baba kathiri yoga)
    7. Lagna and second house lord is in Baba kathri yoga. (Saturn and Mars)
    8. There is Vibaretha Raja Yoga.(Eighth house lord Satrun and Twelfth house lord Mercury is in Twelfth house).
    Marriage:
    i)Though seventh house lord and kalathra karaga is in twelfth house,she has married at the age of 26 to 29 during Venus Dhasa period because Jupiter is aspecting as its 5th aspect and aspecting second house too. Because of vibareetha raja yoga also supported to get marry.
    ii) In Navamsa, Venus is exalted, associated with seventh house lord and parivarthna yoga with Jupiter.
    Hence, all the above reasons she got married.
    Marriage or Family life:
    i)Family life is not happy due to seventh house lord and kalathra karaga are in baba kathiri yoga nd sitting in twelfth house from lagna,
    ii) Saturn is aspecting second house as its 3rd aspect. Its bad and second house lord is sitting twelfth house from its own house.
    iii) Mars is sitting in second house and getting saturn's aspect. Its too bad for family life.
    iv) Saturn is aspecting 9th house and 9th house lord is sitting 12th house from its own house. Its not good sign.
    v) Fourth house lord sitting in twelfth house along with saturn.It shows bad sign.
    Her Husband deceased or seperation due to Sun is sitting twelfth house from its own house( 8th house lord from 7th house)
    vi)Saturn is sitting twelfth house from lagna and under baba kathiri yoga and getting sixth house lord aspects.

    vii)In Navamsa, Second house lord is debilitated.
    viii) lagna lord and seventh house lord are in 6/8 position.
    Hence all the above reasons, She has short span of marriage life and family life was not happy.
    Since Venus and Saturn are associated and sitting in twelfth house, she involves in illicit sex. She has more sexual feelings and It spoils her life.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, June 25, 2014 9:04:00 PM/////
-------------------------------------------------------   
12******
/////Blogger valli rajan said...
    Dear Guruji,
    1. Lagna lord is neecham
    2. Lagnam is in PapaKarthari Yoga
    3. Jupiter in eight house
    4. Venus in 12 house.
    5. 7th Lord in twelfth house but aspected by guru.
    6. Venus is uccham in navamsam. Neecha banga raja togam.
    7. 2nd lord is neecha in navamsam.
    Answer:

    1.Marriage is held at the age of 30 when surya dasa period.
    2.But there will separation within 4 years when surya dasa saturn sub
    period.
    3. Marriage happened because strong venus and aspect of guru on seventh lord.
    Wednesday, June 25, 2014 10:16:00 PM/////

------------------------------------------------------------  
13   
////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதி நீசம். 7ம் வீட்டுக்கார சனி அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு மறைவிடமான 12ல். களத்திரகாரகர் சுக்கிரனும் 12ல். 2ம் வீட்டுக்கார சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில். 2ம் வீட்டில் செவ்வாய். ஆனால் இவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகர் ஆகிறார். பாக்கியாதிபதியும் முதல் நிலை சுப கிரகமான குரு பகவான் இலக்கினத்திற்கு எட்டில். உடன் மாந்தி. திருமண வாழ்விற்கு அவ்வளவு விசேஷம் இல்லாத ஜாதகம். ஒரே ஆறுதல் களத்திரகாரகர் மேலும், 7ம் வீட்டுக்காரர் மேலும், 2ம் வீட்டின் மேலும், குரு பகவானின் பார்வை விழுவது மட்டுமே. சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். இராகுவும் சந்திரனும் சேர்ந்து 5ம் வீட்டில் இருக்கின்றனர். அதுவும் வலிமை இல்லாத சந்திரன். ஜாதகியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக இருக்கும். சந்தேக குணம் இருக்கும். புத்திர தோஷம் உண்டு. 12ல் சனி இருப்பதால அயன சயன பாக்கியத்திற்கு கேடு. மண வாழ்க்கை இனித்திருக்காது. பிரிந்து வாழவும் வாய்ப்புள்ளது.
    Thursday, June 26, 2014 12:24:00 AM/////
-----------------------------------------------------  
14
/////Blogger Dallas Kannan said...
    The chart has lot of yogams, but with a catch..
    Vipareetha raja yogam -- in papakarthari yogam
    Gajakesari -- Guru in 8th place and Moon is neecham
    Gurumangala - Guru is in 8th place.
    For a girl 9th place/lord and Guru is important. In this chart all 3 are spoiled.
    7th lord is in 12 plance... the consolation is, it is in vipareetha rajayogam and Guru is looking at it.
    2nd place is lord is in 12th place from it and Mars is there.
    So I am going to say, she is married late after Sukra Dasa.
    But Marrage life did not last long.
    Thursday, June 26, 2014 12:37:00 AM/////

------------------------------------------------------------------------------  
15******
////Blogger sivaradjane said...
    7 - ம் அதிபதி சனி’ 12 ல் மறைவு. உடன் களத்திரக்காரகன் சுக்கிரனும் மறைவு மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்’ சிக்கிக் கொண்டுள்ளனர். பாக்கியாதிபதி குரு’ அந்த வீட்டுக்கு 12 ல் மறைந்துள்ளார்.2 ம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் மறைவு ,கூடவே அவரும் பாபகர்த்தாரியில் சிக்கியுள்ளார். ஆயினும் 9,6 க்குடைய குரு’வின் பார்வை 7 ம் அதிபதி சனி’க்கும் ,சுக்கிரனுக்கும் இருக்கிறது. 2-ம் இடத்திற்கும் குரு பார்வை உள்ளது.மேலும் அம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில்..உடன் லக்னாதிபதி சந்திரனுடன் 7-ம் அதிபதி
    கூட்டாக உள்ளதால் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் 12-ம் இடமான அயன ,சயன போகத்தில் சனி இருப்பதால் இல்லற வாழ்க்கை சுகப்பட்டிருக்காது. மேலும் 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை.2-ம் அதிபதி ’சூரியன்’அம்சத்தில் நீசமாகியிருப்பதால் ஜாதகி கணவனை பிரிந்தவராயிருப்பார்.
    Thursday, June 26, 2014 2:21:00 AM/////
-----------------------------------------------------
16 
/////////Blogger kmr.krishnan said...
    இந்த ஜாதகத்தில் குருவின் பார்வை என்ற ஒரு விஷயம் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாற வைக்கிறது.
    1.முதலில் லக்கினம் செவ்வாய் சனி ஆகிய கிரஹங்களால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் உள்ளது.லக்கினத்திற்கு 22 பரல்தான். லக்கினாதிபதி சந்திரன் நீசம் அடைந்ததும் இன்றி ராகுவுடன் கூட்டணி. எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஜாதகம்.
    2.இரண்டாம் அதிபன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது, தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது சிலாக்கியமில்லை.எனவே குடும்ப வாழ்க்கை சுகமில்லை.
    3. ஏழாம அதிபன் சனைச்சரன் 12ல் அமர்ந்தது கணவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகம் பிரிந்து வாழும் சூழல். அது வேலை காரணமாகவும் இருக்கும்.
    4 ஏழாம் அதிபன் குருவின் பார்வை பெறுவதும் களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதும் எட்டாம் அதிபன் 12ல் மறைவதும் இவருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்ப்தை சுட்டுகிறது.சுக்கிர தசா புத புக்தியில் 28 வயதுபோல் திருமணம்.
    5.இந்த லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்தது சுமாரான குடும்ப வாழ்வை கொடுத்திருக்கும்.
    6. லக்கினத்திகு ஐந்தில் ராகு அமர்ந்தது குழந்தைப்பேறு இல்லாமல் செய்கிறது.
    28 வயதில் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இன்றி வருந்த்திக்கொண்டு, மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
    மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு.

    Wednesday, June 25, 2014 2:58:00 PM/////



((மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
    மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு என்று ஈரெட்டாகச் சொல்லலாமா?  ஸ்திரமாக ஒரே பதிலை அல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும் மிஸ்டர் கிருஷ்ணன்!).
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.6.14

Astrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா!

 

Astrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா!

Quiz No.60: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபது
25.6.2014
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் ஜாதகத்தில் 7ஆம் வீட்டையும் 2ஆம் வீட்டையும்  ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.


The same chart is given with navamsam


இன்றைய கேள்விகள்:

1
ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

2
குடும்ப வாழ்க்கை அதாவது மண வாழ்க்கை எப்படி இருந்தது?

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.6.14

பரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையனும்!



பரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையனும்! 

திறமை எங்கெல்லாம் இருக்கிறது. எப்படி எல்லாம் மிளிர்கிறது.
இன்று 3 காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன்.
பார்த்து மகிழுங்கள்!

அன்புடன், 
வாத்தியார் 
----------------------------------------
காணொளி ஒன்று
முதலில் வெறும் கைகளால் தூணில் ஏறும் சிறுவனைப் பாருங்கள்.


---------------------------------------
காணொளி இரண்டு
பரோட்டாக் கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டரின் லாவகத்தைப் பாருங்கள்!


---------------------------------------
காணொளி மூன்று

கால்பந்து விளையாட்டில், எதிரணி ஆட்டக்காரர்களுக்குப் போக்குக் காட்டி, கோல் அடிக்கும் ஜெர்மானிய வீரர்கள்.



இந்த மூன்றில் எது நன்றாக உள்ளது? அதாவது எது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது?  சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.6.14

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான பதிவு இது!

 

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான பதிவு இது!

இன்றையப் பதிவு சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு மட்டும்! உம்மண்ணா மூஞ்சிகள், அதாவது எப்போதும் சீரியசாக இருக்கும் அன்பர்கள் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் தொடரவும்!
----------------------------------------------
ஒரு நாடு வளமாக இருந்தது. நாட்டின் மன்னரும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆட்சியில் அதுதான் முக்கியம்.

ஒரு நாள் மன்னருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. உடனே தன்னுடைய பிரதான அமைச்சரை அழைத்தார். அவரும் என்னவோ எதோ என்று ஓட்டமும் நடையுமாக உடனே வந்து சேர்ந்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாட்டில் முட்டாள்களும் இருப்பார்கள் அல்லவா?” என்று அவரிடம் மன்னர் கேட்டார்.

அமைச்சர் பதில் சொன்னார், "ஆம் மன்னா, அதில் என்ன சந்தேகம்? புத்திசாலிகளுடன் முட்டாள்களையும் கொண்டதுதான் உலகம்”

“அப்படியென்றால் நம் நாட்டிலுள்ள முட்டாள்களில் அதி முட்டாள்களான ஐந்து பேர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்”

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. அதி புத்திசாலிகளைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னால், ஏதாவது போட்டிவைத்து, அதில் வெற்றி பெறும் ஐவரைக் கொண்டு வந்து விடலாம். முட்டாள்களைக் கொண்டுவரச் சொன்னால் என்ன செய்வது? என்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்

ஆனாலும் என்ன செய்வது? மன்னரின் விருப்பமாயிற்றே, அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்று, அதற்கு ஒப்புக்கொண்டு, “சரி மன்னா!” என்றார்.

ஒரு மாதகாலம் நாடு முழுவதும் பயணம் செய்து, இரண்டு பேர்களை மட்டும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து அரசர் முன் நிறுத்தினார் அமைச்சர்.

அவரைப் பார்த்த உடன்,” என்ன அமைச்சரே இது?” என்றார் மன்னர்.

”இல்லை, மன்னா! நடந்ததைச் சொல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

“சரி, சொல்லுங்கள்” என்றார் மன்னர்.

”மன்னா, நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்து கொண்டு, தன் துணி மூட்டையைத் தன் தலை மேல் வைத்தவாறு, பயணம் செய்து கொண்டிருந்தான். ஏனப்பா அவ்வாறு செய்கிறாய் என்று கேட்டபோது, என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு அதிகச் சுமையால் வலிக்கக்கூடாது அல்லவா? அதற்காகத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது பெரிய முட்டாள்!.” என்று விளக்கமாகச் சொன்னார் அமைச்சர்.

“சரி, அடுத்து?”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரை மேல் வளர்ந்த புல்லை மேய்வதற்காக, தன் எருமை மாட்டைக் கூறையின் மேல் இழுத்து ஏற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான். இவன் தான் நம் நாட்டின் நான்காவது பெரிய முட்டாள்”

“மிக்க மகிழ்ச்சி அமைச்சரே.மிக்க மகிழ்ச்சி. எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் உங்கள் ஒப்புதலுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதை எல்லாம் விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் அலைந்து கொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்”

மன்னரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு,” அடுத்து?” என்றார்.

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கும்போது, அதைக் கவனிக்காமல், முட்டாள்களைத் தேடிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்று அதிரடியாகச் சொன்னார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிப் போய்விட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

அரசன் புத்திசாலியானதால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்.” என்று அமைச்சரின் கூற்றை ஒப்புக் கொண்டார்.

“சரி, முதலாவது முட்டாள் எங்கே?”

அமைச்சர் சொன்னார்: “ மன்னா, அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு, வலைப் பதிவுகளே கதி என்று வாழ்ந்து கொண்டிருப்பதோடு, இந்த மொக்கையான கதைக்கு வந்து, நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று ஆர்வத்துடன் தேடிப் படித்துக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதலாவது முட்டாள்!”
--------------------------------------------------------------
”அட சாமி (வாத்தி) கடைசியில் என்னையே முட்டாளாக்கி விட்டீர்களே?”

“நான் ஒன்றும் தப்பவில்லை. நானும் இந்தக் கதையை இணையத்தில் படித்து, முதல் முட்டாள் என்ற பட்டத்தோடுதான் இங்கே வந்துள்ளேன். மேலும் வெட்டித்தனமாக அதைத் தட்டச்சு செய்து வலையில் ஏற்றியிருக்கிறேன்.”
----------------------------------------------------------------
என்ன கதை நன்றாக உள்ளதா?
=========================================
முக்கிய அறிவிப்பு:

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆனால் வகுப்பறைக்கு விடுமுறை இல்லை. இல்லை. இல்லை. இன்று ஒரு பதிவு வெளியானதைப் போல நாளையும் ஒரு பதிவு உண்டு. அனைவரும் வகுப்பறைக்கு வந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூகுள் ஆண்டவரின் auto post வசதியால் அது சாத்தியப்படுகிறது. அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அவ்வப்போது நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்!

உங்களுடைய பின்னூட்டங்களும், அவற்றிற்கான வாத்தியாரின் பதில்களும் 25.6 2014 புதன்கிழமை காலையில் வெளியாகும். பொறுத்துக்கொள்ளவும்

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

20.6.14

நில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்!

 
நில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்!

யாக்கை என்பது உடம்பைக் குறிக்கும் (அதன் பொருள் அறியாதவர்களுக்காகக் குறிப்பிட்டுள்ளேன்)

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள் 

அன்புடன்,
வாத்தியார்

------------------------------------------------
பழநி மலை முருகா பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்கு தா
ஞான பழம் ஒன்று எந்தனுக்கு தா... முருகா ...
(பழநி மலை)

இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது
நிலமை இதுவாக தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்கு தா ... முருகா ...
(பழநி மலை)

உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சிலநாள் வாழ்ந்தாளும் செம்மையையே தேடி
செந்தமிழே அன்பே நீயும் நானும் கூடி

மகிழ்ந்திட வரம் ஒன்று தா - மனம்
மகிழ்ந்திட வரம் ஒன்று தா...முருகா ...
(பழநிமலை).


'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================

19.6.14

Astrology: quiz 58: Answer: கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...!

 


Astrology: quiz 58: Answer: கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...!

''கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...''  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் இது... 
திருச்சி லோகநாதன் அவர்கள் தன் இனிய குரலில் இப்பாடலை 
மிகவும் அருமையாக பாடியிருப்பார்..!இப்பாடல் இடம் பெற்ற படம்: 
இரும்புத் திரை,  இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கட்ராமன், படம் வெளிவந்த ஆண்டு: 1960
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, ஒரே ஒரு கேள்விக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேள்வி இதுதான்:

ஜாதகரின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது? பணக்காரரா அல்லது ஏழையா? பணக்காரர் என்றால் பிறவிப் பணக்காரரா? அல்லது சுய சம்பாத்தியத்தில் பணக்காரர் ஆனவரா? இல்லை ஏழ்மை நிறைந்தவரா? அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துபவரா? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் கையில் காசு 
தங்கவில்லை. துவக்கத்தில் செய்த சொந்தத் தொழிலைத்
 தொடர்ந்து செய்ய முடியவில்லை. தொழிலுக்கு முடிவு 
கட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். நிரந்தரமான வேலையும் கிடைக்கவில்லை.பல இடங்கள். பல வேலைகள். வரவிற்கும் 
செலவிற்கும் சரியாக இருந்தது. கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை. 
கடன் இல்லாத வாழ்க்கை. சிக்கனமாக வாழ்ந்தார். 
குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்தது. அது ஒன்றுதான் 
ஆறுதலான விஷயம்

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!


1. லக்கினாதிபதி குரு பகவான் 3ல். மாந்தியுடன் கூட்டணி.

2. ஐந்தாம் இடத்துக்காரன் (பூர்வ புண்ணியாதிபதி) சந்திரன் நீசம்.

3. சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய 4 கிரகங்களும், அஸ்தமனம், மற்றும் கிரகயுத்தத்தில்

4. முக்கியமான 7 கிரகங்களில் புதன் மட்டும்தான் தப்பித்தார். அவர் 4 & 7ற்கு உரியவர். அவர் 11ல் அமர்ந்ததால் நல்ல மனைவி அமைந்தார்.

5. 2ல் ராகு. நிதியில் ராகு இருந்தால் ஓட்டை அண்டா. 11ற்கு உரிய சனி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். பைப்பும் அடைபட்டிருக்கிறது.
    2 & 11 கெட்டால் பணம் எப்படி வரும்? செல்வம் எப்படி சேரும். ஆகவேதான் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.

6. பத்தாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்கு ஆறில். அதனால்தான் நல்ல வேலை கிடைக்கவில்லை. அமையவில்லை.

7. முக்கியவில்லன்களான 6ஆம் வீட்டுக்காரன் சூரியனும், எட்டாம் அதிபதி சுக்கிரனும் 10ல் சென்று அடிதடி சண்டையில் ஈடு பட்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் பாக்கியாதிபதி செவ்வாயும், தொழில்காரகன் சனீஷ்வரனும் சேர்ந்து சண்டையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கிரகயுத்தம்
மோசமானது. அது பத்தாம் வீட்டில் அமைந்ததால் ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை.

8. சுபக்கிரகங்கள் 3ல் ஒன்றுகூட தப்பிக்காமல் கெட்டுப் போயிருக்கின்றன. சுபக்கிரகங்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை
ஒளிமயமாகஇருக்கும்

கடன் இல்லாத வாழ்க்கை. சிக்கனமாக வாழ்ந்தார். குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்தது. அது ஒன்றுதான் ஆறுதலான விஷயம்

அலசல் போதுமா?

போட்டியில் 24 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 15 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.

அந்த 15 பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் ”நிரந்தரமான வேலையும் கிடைக்கவில்லை.பல இடங்கள். பல வேலைகள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்தது. கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.” என்பதை  எழுதியவர்கள் 6 பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால்
********ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன்.  பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சரியான பதிலை ஒட்டி எழுதியவர்கள் 9 பேர்கள். அவர்களின் பெயரும்  பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
**********////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    2nd Place: Rahu is there. 2nd lord Mars is in 9th place from it (10th house). But With 6th, 3rd/8th and 11/12th lords with giraha utham. Laknathipathi and Guru is in 3rd place in Enemy house and vakram. So he is not Rich.
    9th place: 5th lord Moon is there. But it is neecham. Guru's look is there. But 9th lord Mars is in 10th house with 6th, 8th ans 12th lord.
    10th house: All villans are there. 10th lord also in 6th place from 10th place. Will not have stable job.
    11th house: 11th lord is in 12th place from it. But 4th and 7th lord subha buthan is there. That is the consolation for him. Will be better off after marriage.
    Wednesday, June 18, 2014 7:59:00 AM//////

----------------------------------------------------------
2
**********Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    நல்ல நிதி நிலமைக்கு குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் வலுவாக இருக்கவேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்களும் வலுவாக இல்லை.
    ஜாதகன் வசதியாக இருக்க வாய்ப்பில்லை. எழ்மையான ஜாதகம். உழைத்து சம்பாதிக்கும் நிலமை.
    லக்கினத்தின் மீது செவ்வாயின் 4ம் பார்வை.
    லக்கினத்தில் 34 பரல்கள் உள்ளது. லக்கினம் பலமாக இருப்பதற்க்கு அடையாளம்.
    இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு (5 பரல்) 3ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு. அதுவும் ரிஷப ராசியில் பகை வீட்டில்.
    சந்திரன் (3 பரல்) 9ம் வீட்டில் விருச்சிக ராசியில் நீசம். மேலும் பாபகர்த்தாரி தோஷம். நிதி மேலான்மைக்கு இது இடைஞ்சல்.
    சுக்கிரன் (3 பரல்) 10ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி வில்லன் சூரியனுடன் கூட்டு.மேலும் அதே வீட்டில் சனி, செவ்வாயுடன் கூட்டு.கிரகயுத்தம்.
    2ம் வீடு தன வீடாகும் (25 பரல்). 2ல் ராகு சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிக்க கூடிய சுழ்நிலை. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் (3 பரல்) 6ம் வீட்டு
அதிபதி வில்லன் சூரியனுடன் கூட்டு.9ம் வீட்டிற்க்கும் அவனே அதிபதி. கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது.
    ஆகையினால், 2ம் வீடு படு சுத்தமாக கெட்டு போய்யிருக்கிறது.
    9ம் வீட்டு அதிபதி 10ல்.அதாவது 9ம்வீடு 10ம் வீட்டிற்க்கு 12ல்.
    10ம் வீடு கிரக யுத்ததில் உள்ளது. எந்த வேலையிலும் நிரந்திரமாக இருக்க வாய்ப்பில்லை. 6ம் வீட்டு அதிபதி வில்லன் 10ல் இருந்தால் வேலைக்கு
போராட்டந்தான்.
    11ம் வீட்டு அதிபதி 10ம் வீட்டில் அதாவது 12ல். தன நஷ்ட்டம்.4ம் வீட்டு அதிபதி புதன் (5 பரல்) 11ம் வீட்டில் இருப்பதால், தன்னுடைய
புத்திசாலிதனத்தினால் ஒரளவு பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
    மேலும் நவாம்சத்திலும் புதன் மகர ராசியில் இருப்பதால் புதன் வர்கோத்தமம் அடைந்துள்ளது. வர்கோத்தம் அடைந்த கிரகம் உச்ச அடைந்த
கிரகத்திற்க்கு சமானம்
    As per Kalyana varma, the four planet SUN-MARS-VENUS-SATURN ,
    One, who has these four planets together at birth, will be deformed, mean in conduct, obliquesighted, will hate his relatives and will always be insulted.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Wednesday, June 18, 2014 8:41:00 AM//////
----------------------------------------------------------
3
////Blogger seethalrajan said...
    அய்யா வணக்கம்! இவரின் நிதி நிலமை மோசமாக உள்ளது ஏன் ஏனில் 2,9ம் அதிபதி செவ்வாய் 6,8ம் அதிபதிகளான சூரியன், சுக்ரன் உடன்
சேர்கை மற்றும் 12ம் அதிபதி சனி சேர்கை, போதுவாக 11ம் அதிபதி 10ல் அமர்தாலே லாபம் அனைத்தும் உழைப்பாக மாறிவிடும், பயன் சுத்தமாக
இருக்காது. பிறவியில் எதொ நல்ல நிலமை இருந்து இருக்கும், போததற்கு 2ல் ராகு, குரு பகை விட்டில். புதன் மீன லக்னதிர்கு முதல் தர பாதகதிபதி அவர், அகவே அவரும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை, சூரியன் 6ம் அதிபதி 10ல் பலமாக அமர்ந்ததால் காவல்துறை, ரானுவம் போன்ற
வேலை கிடைத்துருக்கும்.
    நன்றி, பிழை இருப்பின் மன்னிகவும்
    Wednesday, June 18, 2014 10:06:00 AM/////
---------------------------------------------------------
4
**********/////Blogger murali krishna g said...
    ஜாதகர் கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துகிறவர். வாழ்க்கையின்
    பெரும் பகுதி போராட்டமாகவே இருக்கும். சிலசமயங்களில் மட்டுமே காசு புரண்டு இருக்கும்.
    (1) 2-ம் வீடு - இரண்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் செவாய்யாக இருந்து அவர் 10-ல் இருந்தாலும் அஸ்தமனம் ஆகி இருக்கிறார்.
இரண்டாம் வீட்டில் ராகு. பரல்கள் 25 மட்டுமே. இது சுமாராகவே உள்ளது.
    (2) 9-ம் வீடு - மேற்கூறியபடி செவ்வாய் அஸ்தமனம். 9-ம் வீட்டில் இருக்கும் சந்திரன் தேய்பிறை சந்திரன். கடுமையான பாபாகத்ரி யோகத்தில்
மாட்டி கொண்டிருக்கிறார். சந்திரன் கெட்டால் வாழ்க்கையே கெட்டது போல். அதுவும் பாக்யா ஸ்தான சந்திரன் கெடக்கூடாது !. சுய வர்கத்தில் 3
பரல்கள் மட்டுமே.குரு பார்வை காப்பாற்றினாலும் வக்ர குரு மாந்தியுடன் இருப்பதால் பலன் இல்லை.
    (3) 10-ம் வீடு - மேலும் பத்தாம் வீட்டில் நாலு கிரகங்கள். சூரியன், சுக்ரன், சனி மற்றும் செவ்வாய். எல்லாமே பலமுள்ள கிரகங்கள் ஆனால்
கடுமையான கிரக யுத்தத்தில். சூரியனோடு அஸ்தமனம் வேறு. சூரியனும் இந்த கிரகங்களால் முழு பலனை தர முடியாமல் போகிறார். சில
சமயங்களில் அரசு வழியில் ஆதாயம் உண்டு. கர்மகாரகன் சனி கர்ம ஸ்தானத்தில் இருப்பது நல்லது என்றாலும் கடும் பகைவனான சூரியனிடம்
அஸ்தமனம். சுக்கிரனும் அவ்வாறே. மொத்தத்தில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒன்றும் இல்லாமல் பண்ணி விட்டது. பத்தாம் அதிபதியும் லக்னாதிபதியும்
குருவாக இருந்தாலும் அவர் மூன்றாம் ஸ்தானத்தில் வக்கிரமாகி மாந்தியோடு கூட்டணி வைத்துள்ளார். மேலும் லக்னாதிபதியே மரண காரக
ஸ்தானத்தில் இருப்பது பயனை தராது ! அடிக்கடி வேலை மாற்றம் !. ups and downs நிறைய உண்டு !
    (4) 11-ம் வீட்டில் புதன் தனித்து இருந்தாலும் அவர் நட்சதிராதிபதியாக இருப்பதால் அவர் தசை பிறந்தவுடன் ஆரம்பித்து சிறு வயதிலே
முடிவடைகிறது!. அவர் தன் புக்திகளில் மட்டுமே பலனை தர கூடியவர், ஆனால் அவரும் பலம் பெறவில்லை.11-ம் அதிபதி சனி அதற்கு 12-ல் (10-ம்
வீட்டில்) அஸ்தமனம். கிரக யுத்தம் ! பிரயோஜனமில்லை !. ஆக 11-ம் வீடும் out !. பரல்கள் 30 இருப்பதால் மேற்கூறியபடி சில சமயங்களில் காசு
புரண்டு இருக்கும் !
    Wednesday, June 18, 2014 10:36:00 AM//////
-------------------------------------------------
5
***********////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Lagnadhipathy Guru 3-il Vakkiram + Maandhi.
    2-il Raagu and 9-il Neecham petra chandran. 2&9-m adhipathy Chevvai 10-il sooriyanukku 12 degree-il Asthangam.
    10-m adhipathy Guru 3-il. 11-m adhipathy Sani 10-il(Avar veetirku 12-il).
    Budhan dhasa piragu Kethu dhasa then Sukra Dhasa. 13 vayadhu mudhal 33 vayadhu varai Sukhra dhasa. Sukran 3 & 8-ku adhipathy avar 10-il. Kadinamana kaalamaga irundhirukkum.
    33-39 vayadhu varai Soorya dhasa. Sooriyan 6-m adhipathy. 39-49 chandra dhasa. Chandran 5-m adhipathy 9-il Neecham petru amarvu.
    Nalla dhasavum illai and jadhagathil nalla amippum illai.
    10-m adhipathy Vakkiram petru 3-il amarvu and 10-il 4 gragangal amarvu idhanal jadhagar sila tholilgalai seithu adhil tholviyai thaluvi iruppar.
    Kaikkum Vaaikkumana Nilai. Selvandhar Illai.

    Thank You.
    Wednesday, June 18, 2014 11:04:00 AM/////

---------------------------------------------------------
6
//////Blogger GOWDA PONNUSAMY said...
    Ayya vanakkam.
    In this horoscope,the Lagan lord guru in 3rd house.He is thana kaarakan also.Disappeared from Lagna.(2).Second house lord in 10th house, but Ragu sitting in second house will make him as poor.(3).Fifth house lord Chandra in 9th house in neecham but having ascending of Dhanakaaakan Guru and also made Gajakesari yogham.
    (4). 10th house is not in good shape as this house is associated with suriyan(6th lord) sukkiran(3&8),sevvay(2&9) and Sani(11&12).10th house is suffered by 3,6,8and 12th lords.
    The native IS POOR.
    SOME WEALTH BENIFITED AFTER 39 YRS BECAUSE OF CHANDA DASA, AND PLACEMENT O BUDHAN IN 11TH HOUSE.
    Wednesday, June 18, 2014 11:49:00 AM/////

-------------------------------------------------
7
/////Blogger SIVA said...
    வணக்கம் அய்யா.,
    ஜாதகரின் பிறப்பு : 29/december/1929
    நேரம் :- 11:45 am,
    கேட்டை நட்சத்திரம் ,
    பூர்விகஸ்தானம் , புண்ணியஸ்தானம் குறைந்தபரல்களுடன் உள்ளன அதன் அதிபதிகளும் குறைந்த சுய பரல்கள்., தேய்பிறை சந்திரன் நீசம்,
மேலும் பாபகர்த்தாரி யோகத்தில், சூரியன், சுக்கிரன் , சனி , செவ்வாய், சேர்க்கையால்
    தாய் தந்தை சொத்துக்கள் இல்லை, அல்லது அதனால் பயன் கிடைக்காது, இருந்தால் இவர் அதை அழிப்பார்
    கஜகேசரி யோகத்தில் இவருக்கு வெற்றிக்கு உரிய இடத்தில குரு ,
    குரு மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை .,
    இவர்கள் இருவரும் சுபதன்மை பெற்று சுபர்கள் ஆகிவிட்டார்கள்., மேலும் தொழில்கரகணின சேர்க்கை சுக்கிரன் பெற்றிருக்கிறார்
    பத்தாமிடம் சுபகர்தாரி யோகத்தில் .,
    புத்தினாதன் புதனும் குரு பார்வையுடன் சுபராக உள்ளார் 11 ம் அதிபதி பத்தாம் இடத்தில இருப்பதால் பிறரிடத்தில் லாபம் வருவது உறுதி .,
    புதன் மற்றும் குரு வர்க்கோத்தமம் அடைகிறார்கள்., மேலும் குருவுடன் சுக்கிரன் நவாம்ஷாத்தில் பத்தாமிடத்தில் ஆட்சியாகி இணைகிறார் .,
நவாம்ஷ லக்கினத்தில் லக்கினாதிபதி ஆட்சி எனவே இவர் தனது சுய சம்பாத்தியம் ,
    தனகாரகன் குரு வக்கிரம் ., ஆறாமிடம், எட்டு, மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகளின் சேர்க்கை பெற்று 10 ல், மற்றும் இரண்டமிடத்தில் உள்ள
ராகு.. 10 மற்றும் இரண்டாமிடத்திற்கு சுபர் பார்வை இல்லாத காரணத்தினால் வரவுக்கு செலவு சரியாக இருக்கும்
    தங்கள் பதிவிட்டுள்ள நவாம்சம் சரியானதா என்பதில் எனக்கு ஐயப்பாடு உள்ளது
    Wednesday, June 18, 2014 12:04:00 PM////
------------------------------------------------
8
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The given horoscope person is poor person. He did not earn money. He did not save money.
    7th lord is in 11th. Hence he got money through his wife. but he spent all the money which he earned.
    2nd place rahu, 2nd lord is in 10th with sani. 10th lord is with mandhi. Sani 11th lord is in 10th, which is 12th place to that position.
    Thanking you sir.
    C.Jeevanantham.
    Wednesday, June 18, 2014 2:37:00 PM/////

-------------------------------------------
9
///Blogger amuthavel murugesan said...
    He is running his life as hand to mouth.Due to
    1. 11th lord in 10th place.
    2. 10th lord in enemy place.
    3. 2nd lord also joint with suriyan,sani(papa graga)
    But he is living as comfortable.
    Thanking you,
    With best regards,
    M.Santhi
    Wednesday, June 18, 2014 5:32:00 PM//////

-----------------------------------------------------
10
/////Blogger Raja Murugan said...
    ஆசிரியருக்கு வணக்கம், ஜாதகத்தில் லாபதிபதியும், தொழில் காரகனும், விரையதிபதியுமாகன சனி 10 ல், உடன் 6 ம் அதிபதி சூரியன், மேலும் 2
மற்றும் 9 ம் அதிபதி செவ்வாய், 3 மற்றும் 8 ம் அதிபதியும் உடன் உள்ளார்கள். தனகரகன் குரு 3 ல் மாந்தியுடன். எனவே ஜாதருக்கு 10 ல் உள்ள சனி
வேலை வாய்ப்பை கொடுப்பார். மேலும் செவ்வாய் சம்பாதிக்கும் ஆற்றலையும், திறமையையும் கொடுப்பார். ஆனால் 6 ம் வீட்டு அதிபதி சூரியன் உடன் இருப்பதாலும், சனி 3 ம் பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்ப்பதாலும் மிக பெரிய செல்வந்தராக இருக்கமுடியாது.
    Wednesday, June 18, 2014 8:04:00 PM//////
-----------------------------------------------------
11
/////Blogger Kirupanandan A said...
    ஜாதகர் ஏழ்மை நிறைந்தவர். காரணம் இரண்டில் பாப கிரகமான ராகு இருக்கிறார். இரண்டாம், ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 3,8க்குரிய
சுக்கிரனுடன் 10ல் இருக்கிறார். உடன் 6க்குரிய சூரியனும் இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும்
. லக்கினாதிபதி 3ல் மாந்தியுடன் மறைவு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 11ல் இருப்பதும் பாதகம் செய்யும் அமைப்புதான். அத்துடன் 5ம் அதிபதி சந்திரன் 9ல் நீசம்.
    Wednesday, June 18, 2014 8:34:00 PM//////
------------------------------------------------------
12
**********/////Blogger venkatesh r said...
    கொடுக்கப்பட்ட புதிர் எண் :59க்கான விடை
    1) ஜாதகர் ஏழையாகப் பிறந்தவர்.
    2) ஏழ்மையில் வாழ்பவர். அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்பவர்.
    அதற்கான காரணங்கள்:
    மீன லக்னம், விருச்சிக ராசி ஜாதகர்.
    1)லக்னாதிபதி, 10மிட அதிபதி மற்றும் தன காரகன் குரு 3ல் மாந்தியுடன் வக்கிர கதியில் உள்ளார்.
    2)தனஸ்தானமான 2ல் ராகு குடியுள்ளார். அதன் அதிபதியும் 9மிட பாக்யாதிபதியுமான செவ்வாய் 10ல் அஸ்தங்கமாகி விட்டார்.
    3)11மிடமான லாபஸ்தானத்தில் புதன் அமர்ந்துள்ளார். லாபாதிபதி சனி 11மிடத்திற்கு 12மிடமான பத்தில் அமர்ந்துவிட்டார்.
    4)2மிடத்திற்கு எந்த சுபரின் பார்வையுமில்லை.
    எனவே ஜாதகர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.
    ஜாதகருக்கு தொழில் ஸ்தானமான 10மிடத்தில் 4 கிரகங்கள் கிரக யுத்தத்திலுள்ளன.
    1) கர்மகாரகனான சனி 10ல் அமர்ந்து காரகோ பாவ நாசாய: என்று ஒரு நிரந்தர வேலை கிடைக்காமல் கெடுத்துவிட்டார்.
    2) கர்மாதிபதி குரு 10க்கு 6மிடத்தில் மாந்தியுடன் மறைந்துவிட்டார். தவிர கஹல பரிவர்த்தனையில் சுக்கிரனுடன் சேர்ந்து ப்லமிழந்துவிட்டார்.
    3) 10மிடத்தில் ஜாதக வில்லன் 6மிட அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார்.
    இவையெல்லாம் சேர்ந்து ஜாதகருக்கு நிரந்தர வேலையில்லாமல் செய்து விட்டன. தவிர, ஜாதகருக்கு அடுத்தடுத்த வந்த தசா புக்திகள் புதன் 6
வருடம் + கேது 7 வருடம் + சுக்கிரன் 20 வருடம் + சூரியன் 6 வருடம் என கிட்டத்தட்ட 39 வருடங்கள் படுத்தி விட்டன. அதற்கு அடுத்த வந்த
பாக்யாதிபதி நீச சந்திர தசை 10 வருடமும் அவருக்கு உதவவில்லை. 9மிடம் பாபகர்த்தாரியில் இருப்பதை கவனிக்கவும்.
    ஆக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்று கைக்கும் வாய்க்குமாக சிரமப்பட் டுள்ளார் என்றே சொல்லலாம். தங்களின் திறமையான அலசலுக்காக காத்திருக்கிறேன்.
    Wednesday, June 18, 2014 9:15:00 PM/////
----------------------------------------------------
13
**********/////Blogger kmr.krishnan said...
    ஜாதகர் 29 12 1929ல் காலை 11 45 அளவில் பிறந்தவர்.
    லக்கினாதிபதி குரு ராகு மாந்தியால் சூழப்பட்டுள்ளார்.குரு வக்கிரமாகவும் உள்ளார்.
    இரண்டாம் இடத்தில் ராகுவும்,இரண்டாம் வீட்டு அதிபதியும் ஒன்பது பாக்கிய வீட்டு ஸ்தானதிபதியும் ஆன செவ்வாய் பத்தில் அமர்ந்தாலும் 6ம்
அதிபதியான சூரியனால் அஸ்தங்கம் ஆனதால் தனம்(2) பாக்கிய ஸ்தானம்(9) பலன் இல்லாமல் போனது.
    5ம் அதிபனான சந்திரன் ஒன்பதில் அமர்ந்தாலும் நீசம் ஆனதும், பல தீய கிரஹங்களால் சூழப்பட்டதும் சிறப்பல்ல.
    பத்தாம் அதிபதியும் குருவேதான்.அவர் தன் வீட்டூக்கு ஆறிலும்,மூன்றிலுமாக நின்றது அவரால் உத்தியோகத்திற்குப் பலன் இல்லாமல் போனது.
மேலும் பத்தாம் இடத்தில் ஆறாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் பன்னிரணடாம் அதிபதியும் அமர்ந்தது சரியான நிரந்தர வேலை
கிடைக்காததைக் குறிகிறது.

    ஒன்பதாம் வீடு கேது, சூரியன்,செவ்வாய், சனி ஆகியவர்களல சூழ்ந்ததால் 9ம் இடத்திற்குண்டான பாக்கியங்கள் கிடைத்தது குறைவு.
    கர்மகாரனும், 11, 12க்குண்டான சனி பத்தில் அமர்ந்தாலும் சூரியனால் அஸ்தங்கம்.
    14 வயது வரை, கேது தசா முடியும் வரை கஷ்ட ஜீவனம்தான்.
    சுக்கிர தசாவில் எட்டாம் அதிபதி தசா ஆனதால் பெரிய லாபமில்லை. அதன்பின்னர் சூரிய தசா ஆறாம் அதிபதி தசாவும் சரியில்லை.
    40 வயதிற்குப்பின்னர் சந்திர தசாவில் சிறிது தலைதூக்கினார்.சுய தொழில் செய்து 57 வயதுவரை பொருள் ஈட்டினார்.4,7 வீட்டுக்கு உரிய புதன்
11ல் அமர்ந்ததால் சுய தொழிலில் தன்னை சமாளிக்கும் அளவு முன்னேறியிருப்பார்.
    சூரியன் 10ல் அமர்ந்ததால் அரசின் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு; அல்லது அரசியல் வாதியாக நல்ல புகழ். வசதிக்குறைவான
வாழ்க்கைதான்.

    Wednesday, June 18, 2014 9:39:00 PM/////
----------------------------------------------------------
14
////Blogger valli rajan said...
    Answer to Quiz 59:
    Guruji my first try to answer your question.
    1.2,9,11 lords are in war
    2.Moon in 9th house and it is neecha but guru aspect will reduce evil effect.
    3.10th lord with maandi.
    4.Exchange of 3 and 10 lord will benefit business.
    5. Mercury in 11 place with Jupiter aspect - good position.
    6. Rahu in second place bad.
    Answer: He is not rich by Birth.
    Earning will be sufficient for his survival.

    Wednesday, June 18, 2014 9:56:00 PM/////

-----------------------------------------------------------------
15
//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.59:
    The Native of the given horoscope was not born with silver spoon.
    He struggled upto 39 years thereafter he came up in his life.
    Reasons:
    1. Lagna lord is in Third place (enemy house) along with Mandi. It's bad.
    2. It has kala sarpa dosa.
    3. 7 1/2 Saturn (transit) during his 25 to 33 age.
    4. Poorva punniyathipathi is debilitated.
    5. sixth house lord sun dasa also upto 39 years.
    6. Rahu is in second house.
    7. Eleventh lord is in twelfth house from its own house.
    Hence, all the above reasons, He had struggled upto 39 years of his age.
    Form 39 years onwards, during Moon dasa, he had come up in his life.
    With kind regards,
    Ravichandran M.////////

-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.6.14

Astrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு!

 
Astrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு!


Quiz No.59: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தி ஒன்பது

18.6.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகரின் 2,9,10,11ஆம் வீடுகளை ஆராய்ந்து பதில் எழுதுங்கள். ஜாதகரின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது? பணக்காரரா அல்லது ஏழையா? பணக்காரர் என்றால் பிறவிப் பணக்காரரா? அல்லது சுய சம்பாத்தியத்தில் பணக்காரர் ஆனவரா? இல்லை ஏழ்மை நிறைந்தவரா? அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துபவரா? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?



நவாம்சம் எங்கே வாத்தியார்?’ என்று கேட்பவர்களுக்காக கீழே உள்ளது அதே ஜாதகம் - நவாம்சத்துடன்!




பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.6.14

குழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி!



குழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி!

இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு விட்டது. மாற்றங்களில் பல நன்மையாக உள்ளன. சில மாற்றங்கள் நம் முகத்தைச் சுளிக்க வைக்கின்றன.

குழந்தை வளர்ப்பும் மாறிவிட்டது.

இன்று 3 காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

1. Child refusing milk and opening its mouth for whisky


2. Child asking for beer


3.Good show by small kids


-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.6.14

Astrology: பெயர்ச்சிப் பலன்கள்!

 
 குரு பகவான்

Astrology: பெயர்ச்சிப் பலன்கள்!

பெயர்ச்சிப் பலன்களைப் படித்துவிட்டுத் தளர்ச்சி ஆகிவிடாதீர்கள்.

ஆனி மாதம் 5ஆம் தேதி வியாழக்கிழமை (19.6.2014) அன்று காலை 9 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குக் குடி பெயருகிறார். இந்த வீட்டில் இன்னும் ஒரு ஆண்டு காலம் இருப்பார். குரு பகவானுக்கு அது உச்ச வீடு என்பதால் அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கும். அது பொதுப்பலன்.

உங்களுடைய அடிப்படை ஜாதகம் நன்றாக இருந்தாலும், அல்லது உங்களுடைய ஜாதகத்தில் நன்மையான திசாபுக்திகள் நடந்து கொண்டிருந்தாலும் இது போன்ற பெயர்ச்சிகளால் உங்களுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது.

குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதும். அங்கே ஒரு ஆண்டு காலம் இருப்பதும் கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையானதாகும்!

1. மிதுன ராசி – 2ல் குரு
2. கன்னி ராசி - 11ல் குரு
3. விருச்சிக ராசி - 9ல் குரு
4. மகர ராசி - 7ல் குரு

ஆகிய மேலே குறிப்பிட்டுள்ள நான்கு ராசிக்காரர்களும் அதிகமான நன்மைகளைப் பெறுவார்கள்.

1. கடக ராசி - 1ல் குரு (ஜென்மத்தில் குரு)
2.ரிஷப ராசி - 3ல் குரு
3.கும்ப ராசி - 6ல் குரு
4.தனுசு ராசி - 8ல் குரு
5.சிம்ம ராசி - 12ல் குரு

ஆகிய இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் தீமையான பலன்களே அதிகமாக இருக்கும். தடைகள், தாமதங்கள் அலைச்சல்கள், அவதிகள் அதிகமாக இருக்கும்

1.மேஷ ராசி - 4ல் குரு
2.துலாம் ராசி - 10ல் குரு

ஆகிய இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் ஓரளவு நன்மையானதாக இருக்கும்.

3. மீன ராசி - 5ல் குரு (அஷ்டமச் சனியும் நடை பெறுவதால்) இந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு, சனி இடம் மாறிய பிறகு நன்மைகள் உண்டாகும்.

நன்மை என்றால் என்ன?

நன்மை என்பது ஆளாளுக்கு, வயதிற்கு வயது, பொருளாதார நிலைக்குத் தகுந்தது (That is status and age of the life) போல மாறுபடும். திருமணம் கூடிவருதல், இடம்,வீடு வாங்குதல், நல்ல வேலை கிடைத்தல், வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, பண வரவு, நோய்த் தொல்லை நீங்குதல், குடும்ப ஒற்றுமை, குழப்பங்கள் நீங்குதல், புகழ், செல்வாக்குக் கிடைத்தல், அலைச்சலின்மை. காரிய சித்தி, மன நிம்மதி போன்று பல மேட்டர்கள் நன்மையின் கீழ் வரும். கஷ்டங்கள் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும் என்று ஒரே வரியில் சொல்லலாம்

இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடிகள். சராசரியாக ஒரு ராசிக்குப் பத்துக் கோடி மக்கள். ஒரு ராசிக்கு உரிய பலன் பொதுப்பலன். அந்த ராசிக்கு உரிய பத்துக் கோடிமக்களுக்கும் எப்படிப் பொருந்தும்?

இரண்டாம் வீட்டிற்கு வரும் குரு திருமணத்தை நடத்திவைப்பார் என்பது பொது விதி.திருமணம் ஆகாமல் அவதிப்பட்டவர்களுக்கு, இந்தப் பெயர்ச்சியினால் உங்களுக்குத் திருமணம் ஆகும் என்று கூறலாம். அதேபலன் திருமணமானவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?

நீங்கள் வீடு வாங்குவீர்கள் என்று அதற்கு வாய்ப்பு உள்ளவர்களுக்குப் பலன் பொருந்தும்.  அன்றாடக் கைக்கூலியில் கஷ்டப்படுபவருக்கு எப்படிப் பொருந்தும்?

ஆகவே நன்மையான பலன் என்பதை, அது என்னவாக இருக்கும் என்று நோண்டிக் கொண்டு இருக்காமல், அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள்.
நன்மைகள் தானாகவே வரும். வந்த பிறகு தெரிந்துகொள்ளுங்கள்.

”சார், அதெல்லாம் இருகட்டும் எங்களுக்கு  ராசிகள் வாரியாக மாற்றத்திற்கான பலனைச் சொல்லுங்கள்”  என்கிறீர்களா? கேலக்சி வகுப்பில் பதிவிடலாம் என்று உள்ளேன். தினமும் 3 ராசிகள்.என்ற கணக்கில் அங்கே இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதிவாகும். எழுதிப் பதிவிட வேண்டும் சாமிகளா! அதற்குத்தான் அந்த 2 நாட்கள் அவகாசம்!
-------------------------
உங்களுக்கு நன்மையான தசா புத்திகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால், அதுவே போதும். இந்தக் கோள்சாரங்கள், கோச்சாரப் பலன்கள் பெரிய பாதிப்புக்களை, அது நன்மையோ அல்லது தீமையோ உண்டாக்காது. அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.6.14

Devotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது?

 

Devotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது? 

பக்தி மலர் 

இன்றைய பக்திமலரை திருமதிகள் சூலமங்கலம் சகோதரிகள் பக்திப் பரவசத்துடன் பாடிய பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா - அதை
தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?  - முருகன்
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா

அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து - நல்ல
அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து
அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து - நல்ல
அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து

அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து - நல்ல
ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து

வேலன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கன்னியரைக் கற்பு வழியில் நடத்தும் மருந்து
இளங் காளையரைக் காலமெல்லாம் காக்கும் மருந்து

மங்கையர்க்கு மழலைச்செல்வம் கொடுக்கும் மருந்து
திருமங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து

குமரன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் கவிதைப்பாட செய்யும் மருந்து
பெருங் கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து

முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து

கந்தன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?

முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

  
- பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள்

பாடலின் காணொளி வடிவம்:
our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------------------------------

12.6.14

Astrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்!

Astrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்!

படிப்பை மட்டும் வைத்து ஒருவரை மேதை என்றோ அல்லது படிக்காததை மட்டும் வைத்து ஒருவரை முட்டாள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

ஜாதகத்தில் படிப்பிற்கும் அறிவிற்கும் தனித்தனி இலாக்காக்கள் (வீடுகள்). கல்விக்கு நான்காம் வீடு. அறிவிற்கு (keen intelligence) ஐந்தாம் வீடு.

நான்காம் வீடு நன்றாக இல்லை என்பதற்காக, ஐந்தாம் வீடும் கெட்டிருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

சிலருக்கு 4ஆம் வீடு நன்றாக இருக்கும். சிலருக்கு 5ஆம் வீடு நன்றாக இருக்கும். நூற்றில்  பத்து அல்லது பதினைந்து பேர்களுக்குத்தான் இரண்டு வீடுகளும் நன்றாக இருக்கும். அதெல்லாம் வாங்கி வந்த வரம்!

அதனால்தான் பெரியவர்கள் இப்படிச் சொல்வார்கள்: படித்த முட்டாள்களும் உண்டு. படிக்காத மேதைகளும் உண்டு!

கவியரசர் கண்ணதாசன் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். அவருக்கு இல்லாத அறிவா? திறமையா? அனுபவமா?

அவர் இந்த படித்த முட்டாள்கள், படிக்காத மேதைகள் பிரச்சினையைத் தன்னுடைய பாடல் ஒன்றில் ஏற்றியதுடன், அதற்கு அற்புதமானதொரு விளக்கத்தையும் கொடுத்தார்

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

- கவியரசர் கண்ணதாசன்

படம்: படிக்காத மேதை. முழுப்பாடலும் வேண்டுமென்பவர்கள் இணையத்தில் உள்ளது. பாருங்கள்.
---------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:


திருமதி ஸிமிரிதி இராணி அவர்கள் மோடியின் மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.Minister of Human Resource Development of Government of India.

23.3.1976ல் தில்லியில் பிறந்த அவருக்கு 38 வயதுதான் முடிந்துள்ளது. 40 வயதிற்குக் கீழே உள்ளவர்களை எல்லாம் இளமையானவர்கள் என்று எடுத்துக்கொண்டால் அவரும் இளமையானவர்தான்!

அழகான தோற்றம் உடையவர். ஆரம்ப காலத்தில் மாடலாகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து மக்களிடையே பிரபலமானவர். அவருடைய தந்தை பஞ்சாபி. தாய் பெங்காலி. மூன்று சகோதரிகளில் அவர்தான் மூத்தவர். பன்மொழிகளில் வல்லவர். திறமையாகப் பேசக்கூடியவர்.

கல்வி: 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

பட்டப் படிப்பு படிக்காத அவருக்கு எப்படி முக்கியமான துறையைக் கொடுக்கலாம் என்று பல அன்பர்கள் (காங்கிரஸ்காரர்கள்) கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



பட்டப் படிப்பு ஒன்று மட்டும் எப்படித் தகுதி என்று எப்படிக் கொள்ள முடியும்? அறிவு, புத்திசாலித்தனம், திறமை எல்லாம் முக்கியமில்லையா?

அவர் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றின் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே அவர் தகுதியானவரா அல்லது இல்லையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்




அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.6.14

Astrology: quiz 58: Answer: வந்தது கிளியுமில்லை. வாழ்க்கை கொடுக்கவுமில்லை!


Astrology: quiz 58: Answer: வந்தது கிளியுமில்லை. வாழ்க்கை கொடுக்கவுமில்லை!

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா

பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
(பாடுவது கவியா)

பாடல்:  கவியரசர் கண்ணதாசன்.
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகருக்கு தாமதமாக 33 வயதிற்கு மேல் திருமணம் நடைபெற்றது.

2. ஆனால் மண வாழ்க்கை ஒரு ஆண்டிற்கு மேல் நிலைக்க வில்லை. திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!


1. சிம்ம லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சூரியன் 12ல். லக்கினாதிபதி விரையத்தில் அமர்ந்தால் ஜாதகர் வாழ்க்கை அவருக்குப் பயன்படாது என்பது விதி.

2. சிம்ம லக்கினத்திற்கான யோககாரகன் செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருந்தாலும், உடன் அமர்ந்த ராகுவால் கெட்டிருக்கிறார்.

3. ஏழாம் வீட்டில் கேது இருந்தால், அது அந்த பாவத்திற்குக் கேடானது.

4. ஏழாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். சோபிக்க வில்லை.

5. பூர்வ புண்ணியாதிபதி குரு ஆறாம் வீட்டில் அமர்ந்து கெட்டிருக்கிறார். உடன் அந்த வீட்டுக்காரன் சனியின் கூட்டு. அதுவும் சோபிக்க வில்லை.

6. குடும்ப வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டிய 2ஆம் வீட்டுக்காரன் புதன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்து விட்டான். அதுவும் சரியில்லை.

7. செவ்வாய் லக்கினத்தில் இருந்து தனது பார்வையால் 7ஆம் வீட்டையும் அங்கே இருக்கும் கேதுவையும் பார்க்கிறார். இருவரும் சேர்ந்து ஜாதகருக்குக் கடுமையான ரோகம் உள்ள மனைவியைக் கொடுத்தார்கள். அதன்காரணமாக அவதியுற்ற ஜாதகர் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டியதாயிற்று.

8. சிம்ம லக்கினத்திற்கு சுக்கிரதிசை நன்மையானதல்ல. சுக்கிரதிசை செவ்வாய் புத்தியில் விவாகம் ரத்தானது.

9. சுக்கிரதிசையின் பின்பகுதியில் ஜாதகர் தனது 2ஆவது விவாகத்திற்கு முயற்சி செய்தார். அது ஈடேறவில்லை.

10. சனியின் 3ஆம் பார்வை சந்திரனின் மேல். புனர்பூ தோஷம். தம்பதிகளின் பிரிவிற்கு அதுவும் ஒரு காரணம்

11. 4ஆம் வீட்டில் மாந்தி. சுகக்கேடான ஜாதகம்

அலசல் போதுமா?

போட்டியில் 27 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 9 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்

அந்த 9 பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் ‘பிரிவில்’ முடிந்திருக்கும் என்று எழுதியவர்கள் 3 பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் *******ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான பதிலை ஒட்டி எழுதியவர்கள் 6 பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Here is my quick analysis.
    1. Kethu is in 7th place
    2. Mars is in lakna looking at 7th place, but he is yogakaraha for Simha lakna.
    3. 2nd lord Budha is in 12place, but with laknathipaty and Guru looks at it. Guru looks at 2nd house as well.
    4. 7th lord is 6th place. But he is also 6ht lord and 8th log Guru is with him. Vipareetha Rjayogam.
    5. Sukran is in good place (Friend's house and in 11th place).
    6. Sukra Dasa comes at the right time.
    So he got married after 27 in sukra Dasa.
    Married life will have problems because of Kethu, Mars look and Sani being in 6th house, but who does not in these days...
    Tuesday, June 10, 2014 4:07:00 AM//////

-----------------------------------------------------
2 ******
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    ஜாதகருக்கு 26 வயதிற்க்கு மேல் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.7ம் வீட்டிற்கு செவ்வாய்,ராகு பார்வை. 7ம் அதிபதி சனி 6ல்(வக்கிரம்),தன் வீட்டிற்க்கு 12 மற்றும் லக்கினத்திற்க்கு 6ம் இடத்தில்.குடும்பாதிபதி புதன்,லனாதிபதி சூரியனுடன் சேர்ந்து 12ல் மறைவு.
    திருமணத்திற்க்கு பின் மனைவி பிரிவு அல்லது மறைவு.
    Tuesday, June 10, 2014 12:28:00 PM//////
-----------------------------------------------------------
3
/////Blogger murali krishna g said...
    லக்னாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில். ஏழாம் அதிபதி சனியும் அதற்கு விரய ஸ்தானமான 6-ல் வக்கிரம் பெற்று வர்கோதமும் ஆகி இருக்கிறார். லக்னத்தில் செவ்வாய் ராகு. மனிதர் காதல் வசப்பட்டு தோல்வியுற்று இருப்பார். சனி குரு ஆறாம் இடத்தில் சேர்க்கை பெற்று வக்கிரமும் பெற்றிருப்பதால் கிட்டத்தட்ட துறவி போன்று வாழ்க்கை அமைந்திருக்கும். கேது தசை புதன் புக்தியில் திருமணம் ஆகிருக்கலாம். ஆனால் அது நிலைத்திருக்காது அல்லது மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்!
    Tuesday, June 10, 2014 12:50:00 PM/////
-------------------------------------------------------
4
//////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 58 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    சிம்ம லக்ன ஜாதகரான இவருக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதன் 12ல் லக்னாதிபதி சூரியனுடன் சேர்ந்து குரு பார்வையைப் பெறுவதாலும், யோக காரகனான செவ்வாய் லக்கினத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் அவருடைய 30 ஆவது வயதில் சுக்கிர தசை சூரிய புக்தியில் திருமணம் ஆகி இருக்கும்.
    ஆனால் களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கேது வியாதி உடைய துணையை அளித்திருப்பார். மேலும் களத்திர ஸ்தான அதிபதி சனி அந்த இடத்துக்கு 12ல் அதாவது 6ல் ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்காது.
    Tuesday, June 10, 2014 12:52:00 PM/////
----------------------------------------------
5 ****** 
//////Blogger Kirupanandan A said...
    கஷ்டமய்யா. திருமணம் புரிந்து சேர்ந்து வாழாதவர்களும் இருக்கிறார்கள். திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். மண முறிவு ஆகி இரண்டாவது திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். மணமுறிவு ஆகாமலேயெ இரண்டாவது திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.
    சரி இன்றைய ஜாதகத்திற்கு வருவோம். 7ல் கேது. 7ம் அதிபதி 6ல் மறைவு. ஆயினும் களத்திரகாரகன் சுக்கிரன் 11ல் நல்ல நிலையில் இருப்பதால், திருமணம் பாக்கியம் உண்டு. ஆனால் தாமதத் திருமணம். 30 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் சந்திர புத்தியில். 2ம் அதிபதி புதன் 12ல் சூரியனுடன் மறைந்திருப்பதாலும் அவருக்கு நீச குரு, சனி பார்வை இவற்றால் திருமண வாழ்க்கை சுகமில்லை. வாழ்க்கைத் துணையை பிரிய வேண்டி வரும்.
    Tuesday, June 10, 2014 3:22:00 PM/////
----------------------------------------------
6
/////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 58 இற்கான பதில் !!!
    ஜாதகர் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சூரியன் 12 இல் பகை ராசியில் விரையம். சிம்ம இலக்கின யோககாரகர் செவ்வாய் லக்கினத்தில் ராகுவுடன். 7 ஆம் அதிபதி சனி லக்கினத்திற்கு ஆறாம் வீட்டில், எழிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் வக்கிர நிலையில். மேலும் சனி ஐந்தாம்அதிபதி மற்றும் கோனாதிபதியான குருவுடன் ஆறில் உள்ளார். களத்திரகாரகன் சுக்கரன் பதினொன்றில். அதலால் திருமணம் உண்டு !!! சுக்கரதிசை சனி புத்தி ஜாதகர்க்கு 27 ஆம் வயதில் வந்திருந்தாலும், திசை புத்திக்குரிய நாயகர்கள் 6/8 ஆம் ஸ்தானத்தில் உள்ளதால் அந்த சமயத்தில் நடைபெற வாய்ப்பில்லை. அதன்பின் வந்த புதனும் 2/12 அமைப்பில் உள்ளார் !!! ஆதலால் சுக்கர திசையில் திருமணம் நடைபெறவில்லை. லக்கினாதிபதி சூரிய திசை செவ்வாய் புத்தியில், தனது 32 ஆம் வயதில் நடைபெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை விரையாதிபதி சந்திரனின் பார்வை, மற்றும் ஐந்தாம் அதிபதி குருவின் பார்வையும் இருப்பதும், குடும்ப ஸ்தானாதிபதி புதன் 12 இல் உள்ளதாலும் குடும்ப வாழ்வு வெகு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை !!!!!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, June 10, 2014 3:58:00 PM/////
---------------------------------------------
7
/////Blogger MS RAJU said...
    வாத்தியார் ஐயா, இந்த ஜாதகரின் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் வீட்டதிபதி இனைவு, வர்கோத்தமம் பெற்ற லக்னம், இரண்டாம் அதிபதி,7ம் அதிபதி ஆகியன குடும்ப வாழ்வை உறுதி செய்கின்றது.
    லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவு, 7ம் அதிபது 7ற்கு 12ல் மறைவு ஆகியன தாமதமான திருமண வாழ்வை அதாவது 30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர திசையில் நடை பெற்று இருக்க வேண்டும். லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவுற்றதால் மகிழ்சி அற்ற வாழ்வாக அமைந்திருக்கும்.
    Tuesday, June 10, 2014 4:07:00 PM/////
-----------------------------------------------------------------------
8
/////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்
    இன்றைய புதிருக்கான விடை:
    1.தாமத திருமணம் ஆகி இருக்கும்.
    2.மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை.

    *சிம்ம லக்கினம்,மீனராசி ஜாதகர்.லக்கினாதிபதி 12ம் இடத்தில்,குடும்ப ஸ்தானாதிபதியான புதன்கூட்டணி போட்டு அமர்ந்து உள்ளார்.போராட்டமான வாழ்க்கை.
    *7க்குரியவனான சனி பகவான் அந்த ஸ்தானத்திற்க்கு 12மிடம் அத்துடன்
    லக்கினத்திற்க்கு 6மிடம் எனினும் ஆட்சி என்ற அந்தஸ்தை அடைவது நன்மை.
    *7இல் கேது அமர்ந்தாலும் அது சுபகர்த்தாரி யோகத்தில் அமைந்து உள்ளது. எனவே தாமதமாக இருந்தாலும் திருமணத்தை கொடுத்தது.சுக்கிர‌
    தசையில் சுய புத்தியில் 30 வயதிற்க்கு மேல் மணமாகி இருக்கும்.
    *எனினும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களான சனியும் சூரியனும்
    சப்தமமாக அமர்ந்த்து திருமண,குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மையினை
    கொடுத்தது.
    *அத்துடன் களத்திரகாரகன் சுக்கிரன் அமர்ந்த வீட்டுக்காரரான புதன் 12இல்
    அம‌ர்ந்ததும் மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கையினை கொடுக்காது.
    எனது கணிப்பு சரியா என தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.
    நன்றி
    ல ரகுபதி
    Tuesday, June 10, 2014 9:00:00 PM/////
-------------------------------------------------------------------
9 ******
 Blogger thozhar pandian said...
    7ம் அதிபதி சனி 7க்கு 12ல், ஆறாம் வீட்டில். குடும்ப ஸ்தான அதிபதி புதன் இலக்கினத்திற்கு 12ல் மறைவிடத்தில். 7ம் வீட்டில் கேது. 7ம் வீட்டிற்கோ 7ம் அதிபதிக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை (புதன் சனியை பார்த்தாலும், அவர் சூரியனோடு இருப்பதால் முழு சுப கிரகமாக கருத இயலாது). 7ம் வீடு வியாழனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்தாலும் இதை சுபகர்த்தாரி யோகமாக கருத முடியாது. காரணம், தேய்பிறை சந்திரன். இலக்கினாதிபதி சூரியனும் 12ல் மறைவிடத்தில். குரு நீசம். களத்திரகாரகன் சுக்கிரன் மட்டும் இலக்கினத்திற்கு 11ல் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டு. 7ம் வீட்டு அதிபதி சனியும் குடும்ப ஸ்தான அதிபதி புதனும் வர்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள். இலக்கினமும் வர்கோத்தமம். மேலும் சனி சொந்த வீட்டில் இருப்பதால், திருமணம் நடந்திருக்கும். ஆனால் மண வாழ்க்கை இனித்திருக்காது. தம்பதிகள் பிரிந்திருப்பர்.
    Wednesday, June 11, 2014 1:55:00 AM////
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!