மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.15

கூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்களா?"


கூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்களா?"

இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கின்றன...
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்..நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....உண்மை தான் என்றோம்.

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

" Fault makers are majority, even they protected in most situations ".

இன்றை நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
-----------------------------
2
உறவு முறைகள் ....பற்றி ....மிகவும் சிந்திக்கவேண்டிய விஷயம்: 

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன்,பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்

காரணம், ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை! திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்? கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

இனி யார் போவார்?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்படப் போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும் இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்  எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்! கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு
முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.12.15

பணப் பரிவர்த்தனைக்குத் தனி வங்கிகள் வரப்போகின்றன!


பணப் பரிவர்த்தனைக்குத் தனி வங்கிகள் வரப்போகின்றன!

பேமெண்ட் வங்கிகள் (PAYMENT BANKS) என்றால் என்ன... எப்படி செயல்படும்?

ரிலையன்ஸ், ஏர்டெல். வோடஃபோன், ஆதித்ய பிர்லா உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வங்கிகள் செயல்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற அளவில் வங்கி சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேமெண்ட் வங்கி என்றால் என்ன?

பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ( ஆரம்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை) டெபாசிட்டுகளை பெறலாம். மேலும் இண்டர்நெட் பேங்கிங், பண பரிமாற்ற வசதி, இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளை அளிக்கலாம்.

பேமெண்ட்வங்கியின் நோக்கம் என்ன?

பேமெண்ட் வங்கி அமைக்கப்படுவதினால் நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேலும் அதிகமாகும். குறிப்பாக சேமிப்பு கணக்குகள், பேமண்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் (remittance) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்பு சாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கிடைக்கும்.

டெபிட்/கிரெடிட் கார்டு கிடைக்குமா?

கிரெடிட் கார்டு கிடைக்காது. ஆனால் பேமெண்ட் வங்கிகள் ஏடிஎம்/டெபிட் கார்டுகளை வழங்கும்.

பேங்கிங் முறைக்கு பேமண்ட் வங்கிகளின் பங்களிப்பு என்ன?

வழக்கமான வங்கிகளுக்கு மேலும் அதிகமான நிதி வருவதையும், கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கவும் இதுபோன்ற பேமண்ட் வங்கிகள் உதவும். மேலும் தற்போது பேமெண்ட் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள், நாடு முழுவதும் உள்ள 1,54,000 தபால் அலுவலகங்களும் (1,30,000 கிராமப்புற தபால் அலுவலகங்கள் உட்பட) மக்களுக்கு வங்கி சேவைகள் அளிக்க வகை செய்யும்.

லோன் கிடைக்குமா?

இந்த பேமெண்ட் வங்கிகள் கடன் வழங்குதல் போன்ற சேவைகள் எதிலும் ஈடுபட ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.எனவே லோன் பெற நினைப்பவர்கள் வழக்கமான வங்கிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.

குறை தீர்க்கும் அமைப்பு உண்டா?

நிச்சயம் உண்டு. பேமெண்ட் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க உயரதிகாரம் கொண்ட வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு அமைப்பு செயல்படும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரத்தை ஒட்டி இந்த வங்கியின் செயல்பாடுகள் அமைய உறுதி செய்யப்படுவதோடு, பேமண்ட் வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் வலையமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

முன்னதாக நேற்று தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டது.

சன்பாரமா் தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி, ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.

இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும். இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.

Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?

நேற்று ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்கு Payment Bank என்ற புது விதமான வங்கி முறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பின்புலத்தை அறியும் போது இந்த வங்கி முறை நமது வங்கித் துறைக்கு பெருமளவு மாற்றத்தைக் கொடுக்கலாம் என்பதை அறியலாம்.

இந்தியாவில் வங்கிகளைப் பயன்படுத்தாமல் இருக்கும் நாற்பது சதவீத மக்களை வங்கித் துறைக்குள் நுழைக்கும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய முறையில் செயல்படும் வங்கிகள் ஒரு வங்கி கிளையை எளிதில் செல்ல முடியாத மலைவாழ் புறத்தில் திறக்க வேண்டுமானால் அதிக செலவாகும்.

ஆனால் அந்த செலவிற்கேற்ப டெபாசிட்கள் கிடைக்காது. லோன் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இதனால் நஷ்டத்திலே அந்த கிளை இயங்க வேண்டி வரும்.

இதனால் தான் தொலை தூர ஏரியாகளில் அரசு வங்கிகளே அதிகம் செயல்படுகின்றன. தனியார் வங்கிகள் மிகவும் குறைவே.
எவ்வளவு தூரம் அரசு வங்கிகளை வைத்து விரிவாக்கம் செய்ய முடியும் என்பது இந்தியா போன்ற பரந்த நாட்டில் ஒரு சந்தேகமே.

வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார அளவில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது ரிசர்வ் வங்கி கென்யா போன்ற ஆப்ரிக்கா நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்திய ஒரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வியாபாரங்கள் மூலம் அதிக அளவு நுகர்வோர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மூலமாக வங்கித் துறைக்கு அதிக பயனாளிகளை சேர்ப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதனை கிட்டத்தட்ட பின்புற வாசல் வழியாக வங்கிகளின் பயன்களை மக்களுக்கு எடுத்து செல்வது என்றும் கருதிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் நெட்வொர்க் உள்ளது. அதிக அளவில் பயனாளிகள் உள்ளனர். அதிக அளவில் சேவை மையங்கள் நாடு முழுவதும் வியாபித்துள்ளன.

அந்த சேவையையும், பயனாளிகளையும் வங்கித் துறைக்குள் இணைத்தால் என்ன? என்பது தான் இந்த Payment வங்கியின் முக்கிய ஐடியா.
இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதும் எளிது. புதிதாக கிளைகள் எதுவும் திறக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் பெருமளவு செலவு எதுவும் கிடையாது.

தங்கள் கஸ்டமர் தொடர்பான KYC விவரங்கள் ஏற்கனவே நிறுவனங்களிடம் உள்ளன. அந்த தகவல்கள் மட்டும் போதுமானது என்று சொல்லப்பட்டு உள்ளதால் பெரிய அளவில் காகித வேலைகள் இருக்காது.

இன்டர்நெட் வங்கி சேவை, டெக்னாலஜி போன்றவையே Payment வங்கி சேவைக்கு முக்கிய தேவையாக அமையும்.

இந்த வங்கி சேவை கொடுக்கும் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பிரதான வங்கியுடன் சேர்ந்து செயல்படும்.

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் எஸ்பிஐயுடன் இணைந்து செயல்படும். ஏர்டெல் கோடக் மகிந்திரா வங்கியுடன் இணைந்து செயல்படும். ஆனால் பிரதான வங்கிகளின் பங்கு சதவீதம் 30%க்கு மேல் இருக்க கூடாது.

இந்த Payment வங்கியால் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட் பெறலாம். அதனை தங்கள் சேவைகளுக்கு பணம் கட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த வங்கிகள் கடன் எதுவும் கொடுக்க அனுமதி இல்லை. நமது பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணம் இந்த வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக பார்க்கப்படும். இது தவிர டெபிட் கார்ட், ATM போன்றவையும் திறந்து கொள்ளலாம். இதனால் நிறுவனங்களுக்கு வருவாயை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பு.

ரிசர்வ் வங்கியின் CRR, SLR போன்றவை இந்த வங்கிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த பணத்தின் 75% பகுதியை பாதுகாப்பான அரசு பத்திரங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் கூட்டிக் குறைக்கும் போது அந்த பலன் மக்களுக்கு சென்றடைவதில்லை. ஏனென்றால், பாதி பேர் வங்கித் துறையையே பயன்படுத்தவதில்லை.

அதனால் ரிசர்வ் வங்கி பணவீக்கம் இவ்வளவு குறையும் என்று காகிதத்தில் ஒன்றை எழுதலாம். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கும்.

பெரும்பாலான மக்களை இவ்வாறு வங்கி சேவைகளில் இணைப்பதன் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் கணக்கீடு செய்வது எளிதாக அமையும்.

இது நீண்ட கால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

இது பற்றிய உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.12.15

பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!


பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்! உங்களுக்காக சஷ்டி கவசப் பாடலை வரிகளுடன் பிடித்துக் கொடுத்துள்ளேன். கேட்டுப்
பாருங்கள் ஆனந்தமாக இருக்கும்.

மேலும் அப்பாடலை இயற்றிய அருளாளர் தேவராய சுவாமிகளைப் பற்றிய செய்திகளையும் உடன் கொடுத்துள்ளேன். அவைகள் மூன்றையும் நமது
வகுப்பறைத் தோழி திருமதி. என். அன்பழகன் அவர்கள் கொடுத்ததாகும். அவர்களுக்கும் உங்கள் சார்பில் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்





------------------------------------------------------

Our sincere thanks to the person who uploaded this video in the net



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

28.12.15

எதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய நேரிடும்!

எதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய நேரிடும்!

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன்
மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். இந்தக் கட்டுரையை முழுமையாகப்
படியுங்கள்! விபரம் தெரியும்!

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும்
கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும்
அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது
இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன்.அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்துவிடுவோம். அவன் அதை
உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
 காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும்
அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும்
காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை
போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும்
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப
அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால்,
உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும்
மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று
வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? அப்படியே செய்தார் அந்த மகானுபாவர். அவர் ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற
நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை
நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில்

வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள்
முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள்
சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.

''மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர்
உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான
காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை
நச்சென்று விளக்குகிறது

மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும்
ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில்
கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.''
வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக
வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது.

வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே
கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

ஒருவர் தன் நண்பரோடு கூட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
நண்பரை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் பணம் சுருட்டினார்.
கூட்டு வியாபாரம் நொடித்துப் போனது. தான் சுருட்டிய பணத்தை வைத்துக்கொண்டு புது வியாபாரம் தொடங்கினார். இந்த முறை தன் மனைவியை மட்டுமே கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டார். வியாபாரம் தழைத்தது.

"அநியாயம் செய்தவன் அமோகமாக இருக்கிறானே' என்று அனைவரும் அங்கலாய்த்தார்கள்.வருடங்கள் உருண்டோடின.

அவரது மனைவிக்கும் வேறு ஒரு தொழிலதிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர் எப்படித் தன் கூட்டாளியின் பணத்தைக் கொள்ளை அடித்தாரோ, அதே பாணியில் இவரது மனைவி இவரது பணத்தைக் கொள்ளையடித்தார்.

இன்று விவாகரத்தாகி, செல்வத்தை எல்லாம் இழந்து ஏறக்குறையத் தெருவில் நிற்கிறார்

.நீங்கள் செய்த வினை உங்களுடைய கன்றுக்குட்டி. ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் அது உங்களைக் கண்டுபிடித்து உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான்
காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை!!!!!
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.15

Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!

Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!

ஃபேஸ்புக் எம்!

டெக்னாலஜியின் அடுத்த கட்டம்…

டெக்னாலஜியின் தீர்க்கதரிசியாக வலம்வரும் ஃபேஸ்புக் தற்போது தொட்டிருப்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்னும் உச்சத்தை. அதன் புதிய கண்டுபிடிப்பான ஃபேஸ்புக் – எம் (Facebook M)-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தி யிருந்தாலும் உலகம்  முழுவதும் அதன்  மெஸ்மெரிஸத்தில் திகைத்துப் போயிருக்கிறது.


ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் மெஸன்ஜர் ஆப்புக்குள்ளேயே வலம் வருகிறது இந்த ஃபேஸ்புக் – எம். மைக்ரோசாஃப்ட்டும் ஆப்பிளும் கூகுளும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸில் முன்பே பாதம் பதித்திருந்தாலும் ஃபேஸ்புக் அவற்றைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே சென்று நிற்கிறது என்பதே உண்மை என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் பலர். நீங்கள் நினைத்துப் பார்க்காத எண்ணற்ற நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின் துணையுடன் பதில் தருவதோடு, அதை ஒரு ஹ்யூமன் டச் கலந்து தருவது ஃபேஸ்புக் – எம்-மின் சிறப்பு.

உதாரணமாக, நீங்கள் வாங்க விரும்பும் ஹெட்போனின் விலை இன்று அமேசானில் சற்று அதிகமாக இருக்கிதே என்று ஃபேஸ்புக் -எம்-மிடம் நீங்கள் வருத்தம் தெரிவித்தால் போதும்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விலை குறைந்த ஹெட்போனுடன் ஃபேஸ்புக் – எம் உங்களை அணுகி  விடுகிறதாம்.


நீங்கள் பார்க்க விரும்பும் படத்துக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்க வில்லையா? கவலையை விடுங்கள்; அடுத்த ஆறு நிமிடத்தில் ஃபேஸ்புக் – எம் உங்களுக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வதோடு மட்டும் அல்லாமல், அதற்கான காப்பியை உங்களுக்கு மெயிலில் அனுப்பவா என கேட்கவும் செய்கிறது. ‘சரி’ என்று நீங்கள் அனுப்பிய அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் உங்கள் இன்பாக்ஸில் மெயில் இருப்பது உறுதி என்கிறார்கள்.

உங்கள் காதலிக்கு ஒரு கவிதை எழுதித் தர சொன்னால், அடுத்த இரண்டு நிமிடங்களில் நச்சென்ற கவிதை எழுதித் தந்து அசத்துகிறதாம் இந்த ஃபேஸ்புக் -எம். இதில் ஆச்சர்யத்தின் உச்சகட்டமாக நீங்கள் ஏதேனும் ஒரு பிரபலத்தை வரைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல ஆசைப்பட்டால், அந்தப் பிரபலத்தையும் வரைந்து அதனருகில் ‘ஹேப்பி பர்த்டே’ என்று எழுதி வைத்துவிடுகிறதாம். (ஃபேஸ்புக் – எம் தொடங்கப்பட்ட புதிதில் தான் வரைந்த படங்களில்  M என்று கையெழுத்திட்டு வந்ததாம். இப்போதுவரும் படங்களில் அந்த M-ஐக் காணவில்லையாம்!).

இதைப் பார்த்த சில குசும்பர்கள், ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜகர்பெர்க்கை ஒரு எரிமலையின் உச்சியில் நிற்பதைப் போல் வரைந்து கொடுக்கச் சொன்னார்கள். எரிமலையின் உச்சியில் ஒரு மனிதன் நிற்பதைப் போன்ற படத்தை வரைந்து அதனருகில் அவ்வாறு வரையச் சொன்னவர்களின் பெயரை போட்டுவிட்டதாம்.

அமெரிக்காவில் சில ஆயிரம் பேர் வசிக்கும் அந்த பே (Bay) ஏரியாவில் மட்டுமே இந்த ஃபேஸ்புக் – எம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் கேட்கும் படத்தை வரைந்து தரலாம்; கவிதையை எழுதிக் கொடுக்கலாம். ஆனால், உலகெங்கும் மூலைமுடுக்குகளில் உள்ள பல கோடிக்கணக்கானவர்கள் கேட்டால், இப்படி வரைந்து கொடுப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதில்லையா?

ஃபேஸ்புக் இதற்கும் பதில் வைத்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸானது, நம் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும் கவனித்து நம் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக்கொண்டே வருமாம்.

அதாவது, நம்மைப் பற்றிய டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். உங்களது ப்ரிஃபரன்ஸ்களை நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யவேண்டியதில்லை. நாளாக நாளாக அவற்றை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளுமாம் இது. இதனை ‘டீப் லேர்னிங் டெக்னாலஜி’ என்கிறது ஃபேஸ்புக்.


நிறை என்று இருந்தால் குறை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யுமல்லவா? இந்த ஃபேஸ்புக் – எம் சில இடங்களில் தடுமாறிப் போகிறதாம். குறிப்பாக, பெயரில் பெரிதாகவே குழம்புகிறதாம். உதாரணமாக, ஒரே பெயரில் இரண்டு நண்பர்கள் இருந்தால், யாரிடம் எதை சொல்வது என்பதில் இந்த எம்-முக்கு குழப்பம் வருகிறது. தவிர, அரசியல் பற்றியோ, சர்ச்சையான விஷயங்கள் பற்றியோ இந்த எம்-மிடம் கேள்வி கேட்டால், பதில் எதுவும் கிடைக்காது.

இதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க ட்ரைனர்ஸ் (Trainers) என்பவர்களை நியமித்திருக்கிறது ஃபேஸ்புக். இந்த எம்-மின் செயல்பாடுகளை பொதுவாக நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் நிலையில், நாம் எழுப்பும் கேள்வி உள்ளே செல்லும். இரண்டாவதில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அதற்கு பதில் தரும். மூன்றாவதாகத்தான் இந்த ‘ட்ரைனர்’கள் வருவார்கள். இவர்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தரும் பதில்களை சரி பார்க்கிறார்கள். சமயத்தில் நமக்கு தேவைப்படும் பதில்களை இவர்களே எழுதித் தருகிறார்களாம்.  (கவிதை எழுதுவதும் படங்கள் வரைவதும் இவர்களே என்று கூறுகின்றனர்). இவ்வாறு அவர்கள் அளிக்கும் பதில்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பார்த்துக் கற்றுக் கொள்கிறதாம். நான்காவது நிலையில்தான் பதில் நம்மை அடைகிறது.
ஆக,  நம் எல்லா விஷயங்களையும் ‘ட்ரைனர்’களே செய்தால், பிறகு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது எதற்கு என்று பலர் ஃபேஸ்புக்கை விமர்சிக்கின்றனர். ஆனால், ஃபேஸ்புக்கோ, ஒரு குறுகிய பகுதி மட்டுமே இவர்களால் செய்யப்படுகிறது என்று சொல்கிறது.

லேட்டஸ்ட் டெக்னாலஜி என்கிற அளவில் இந்த ஃபேஸ் – புக் ஆர்வமூட்டும் விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நடைமுறையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்!

நமக்கு இந்தச் செய்தியை அறியத்தந்தவர் நமது வகுப்பறை மாணவர் கே.வரதராஜன். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
==========================================================
2
திகைக்கவைக்கும் புகைப்படங்கள்!

நமக்கு அறியத்தந்தவர்: நமது வகுப்பறை மாணவர் பொன்னுச்சாமி அண்ணன்
--------------------------------------------------------
Touching Stories Behind these Pictures…. 2015
  
And yet, in many cases it still unable to convey the entire story.
In 2015, there were some heartbreaking moments -- from desperate refugees drinking rainwater to hippos out on the street, to children running from death in Syria.
Reuters photographers tell the story behind some of the most iconic pictures of the year.

Ghazal, 4, (left) and Judy, 7, carrying 8-month-old Suhair, run away after the shelling of a Red Crescent convoy in Damascus, Syria on May 6.


The story: I was covering the Syrian Arab Red Crescent convoy’s visit to the Douma neighborhood of Damascus, which was carrying medical aid and supplies used to give psychological support to children affected by war. Every time the aid convoy arrived, children would gather around it, happy that they were going to be supplied with food and medicine.
Before the shell landed on the convoy I was sitting on the pavement relaxing; the children gathered around me so I could photograph them. While I was taking these photos, the shell exploded. It killed a female volunteer and wounded many people and volunteers nearby.
The children were terrified and began to scream and cry, especially when they saw a female volunteer covered with blood from a head injury. The challenge to portray this image was just like the challenges we face daily in time of war. I knew that there might be another shell falling within a matter of seconds; then one did exactly that a little further away. Do you want to protect yourself, like everyone else, by walking into a shop or home? Help carry the injured or be satisfied to take photos while others transfer them to ambulances? Do you want to calm screaming children? Or do you just want to cry because of what’s happened?
All these questions need answers in a matter of seconds before you can capture such an image. In this particular photograph, it was the first time I had seen how children’s innocent laughter could turn into screams, fear and tears. It was a very sad moment when I put my eye to the viewfinder to take pictures of laughing children; then when I looked back after taking the picture, I saw the same children crying, distraught. It takes only a few seconds for life to turn to ashes and blood.
Photograph: Bassam Khabieh/Reuters
Crossing over for a better life
Syrian migrants cross under a fence into Hungary at the border with Serbia, near Roszke in August

The story: Rail tracks, unguarded, line the border with Serbia. Most refugees used the tracks, a few miles long, as a highway into Hungary. I arrived at the border every day at 6.00 am. The crossing was the only spot still not blocked. A triple coil of razor wire was up everywhere else as Hungary prepared to fence off the border. The rail crossing was easy enough but many migrants chose to jump the fence to avoid the police waiting a few hundred metres inside. The razors were not too sharp to handle with heavy gloves.
Dozens of other photographers and I paced the fence, some way from the rail tracks. Among the shrubs we could make out the contours of migrants waiting for the right moment. Everyone watched everyone else. We watched the refugees, who watched the police, who watched us. It was like an elaborate board game. It was more than just waiting. The people on the other side of the fence filled the atmosphere with strange, unspeakable tension.
This family decided they had waited enough. They started for the fence. Aware of the stakes, they lifted the razor wire, looked around, then went for it. Once across they vanished in the woods. I never saw them again. Photographing the migrants was the ultimate test of staying out of the story: observe keenly, wait, shoot. Don’t cut the wire, don’t invite the refugees in, don’t alert the police. There was little human contact with the thousands of refugees scaling the fence. You learnt nothing about them. They came and went. But those who walked along the tracks stopped and talked. They accepted water or the odd chocolate bar. They even shared stories - stories that will haunt me forever.
There is no way to shake the emotional impact. Once I put the camera down and had time to reflect it all came back. You have to let the story wash through you to remain human.
Photograph: Bernardett Szabo/Reuters
A bloody evening in Paris


An injured man is carried out of the Bataclan following fatal shootings in Paris, France, in November.
The story: The weekend appeared calm. I had the evening off. Just before 10, the phone rang: in a grave voice my editor told me that a shooting had occurred at a cafe in eastern Paris and I should get there as quickly as possible.
Around the same time, colleagues who were covering the France v Germany match heard explosions at the Stade de France. They turned their lenses away from the match and scanned the crowd to try and catch something. I took the bulletproof vest from my car -- it had been there since the Charlie Hebdo attacks in January -- and got on my scooter. I stopped by the bureau to pick up a 400mm lens, certain that the security perimeter would be wide.
En route I heard about another shooting incident. When I arrived at the Bataclan, police warned journalists that we could be considered targets. They ordered us to take cover. The streets were silent. Security forces evacuated some victims, who were taken to safety. Special Forces units started arriving on the scene in huge numbers.
With two colleagues we decided to seek shelter. A young man let us into his apartment and we took up position at the windows. Just before midnight explosions were heard at the music hall. We could not see what was happening; no angle gave us a direct view to the entrance to the Bataclan.
Once the Special Forces operation finished, people covered in blood and wrapped in blankets came flooding out of the theatre. We descended from our window perches to photograph the victims. We tried to record the emotion that these instants provided. Some people, covered in blood, spoke to us. Their stories were chilling. The moments they lived will remain with them forever. They also mark the life of a photojournalist.
Photograph: Christian Hartmann/Reuters
Hope floats
Download Image
This image from September captures a Syrian refugee holding a baby swims towards the Greek island of Lesbos.
The story: Another inflatable boat packed with dozens of migrants and refugees heading towards the shore. That’s what I noticed in the distance. The sea was calm and they were cheering on the dinghy. Suddenly, some 200 metres away, the rear of the boat deflated for no obvious reason, and people started falling into the sea.
Screams replaced cheers as they frantically tried to stay afloat on life tubes, or by clinging on to the boat. Those who could swim tried to help those who couldn’t. As this dramatic scene unfolded and people drifted away from each other, the biggest challenge was to capture as many of the different scenes as I could.
There were people falling overboard; two men trying to keep their friend afloat; a man still on the boat lifting his child in the air; another man, nearing collapse from exhaustion, swimming towards the shore; volunteers rushing towards the boat. In this hectic moment, one man, tense and yelling really loudly, caught my eye so I shot some frames.
Later, as he tried to catch his breath on the beach, I asked him where he was from. “Syria,” he told me before heading towards a volunteer holding a baby. The distance of the shot hadn’t allowed me to see the details of the picture clearly. It was only when I began editing that I could make out the tiny head of a baby in a life tube, and the screaming man trying to keep himself and the baby above water.
Everything I cover, from riots to politics and sports, trains me to be on the alert and try to get the best from what I am shooting. I learned from this experience that disaster can occur even in what appears to be the calmest of situations.
Looking back, the most memorable moment was when I opened the picture and saw the baby, who looked fast asleep as if in a cradle - dreaming or listening to a lullaby.
Photograph: Alkis Konstantinidis/Reuters
Lookout, there’s a hippo on the street!
In June, Tbilisi was lashed with heavy rains, causing many animals, including this hippopotamus to flee the zoo and roam the flooded streets.
-----------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.12.15

கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?


சென்னிமலை முருகன்
கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?

கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் சென்னிமலை

ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக் கோவில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், மலை மீது அமைந்துள்ள திருத்தலம் இதுவாகும். இதன் சிறப்பு, இன்று உலகமெல்லாம் பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர், இந்த தலத்தில் உள்ள முருகபெருமான் முன்னிலையில் அரங்கேற்றினார்.



ஈரோடு-கோவை செல்லும் வழியில் இங்கூர் என்ற ரெயில் நிலையத்தி லிருந்து 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சென்னிமலை. ஈரோட்டிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு தூரம். பெருந்துறையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு. கடல் மட்டத்தி லிருந்து 600 மீட்டர் உயரத்தில், 1320 படிக்கட்டுக்களுடன் மலையில் உள்ள கோவில் ஆகும். மலை உச்சி வரை பஸ் செல்லும் வசதி உண்டு. தேவஸ்தானத்தில் தங்கும் வசதிகளும் இருக்கின்றன.

நொய்யல் ஆற்றுக்கு அருகில் ஒரு விவசாயி ஒரு பசு வளர்த்து வந்தார். அந்த பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் மட்டும் பாலை சொரிந்தது. இதை கவனித்த அந்த பசுவின் உரிமையாளர், என்ன காரணத்தால் இந்த இடத்தில் மட்டும் பாலை தானாகவே சொரிகின்றது என்று அறிந்து கொள்ள, அந்த இடத்தை தோண்டியபொழுது, அந்த இடத்தில் ஒரு அழகிய முருகப் பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல அழகிய வேலப்பாடுகளுடன் இருந்தது.

சிலையிலிருந்து பீறிட்ட ரத்தம்

கீழ் பகுதி கரடு முரடாக இருந்தததால், அதை உளி கொண்டு செதுக்க முனைந்தபொழுது, சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டதாம். அதைக் கண்டு பயந்து போய் ஓடி விட்டார். பின்னர் அங்கு வசித்து வந்த ஒரு முனிவரிடம் இது பற்றி கூறினர். அவரின் பெயர் சரவண முனிவர். அவர் ஆராய்ந்து, இந்த முருகன் அப்படியேதான் இருக்க விரும்புகின்றார். ஆகவே அப்படியே வைத்து பிரதிஷ்டை செய்யும்படி கேட்டுக்கொண்டதால் இந்த முருகன் அன்று கண்டு எடுத்தது போலவே உள்ளார் என்பது வரலாறு.

இன்றும் இந்த முருகபெருமானின் சிலை இடுப்புக்கு கீழே வேலைப் பாடுகள் இல்லாமலேயே இருப்பதை காணலாம்.
தவிர, ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர்.
12.2.1984 அன்று, இரட்டை காளைகள் பூட்டிய மாட்டு வண்டி செங்குத்தான வளைந்து வளைந்து செல்லும் படிகளில் ஏறி, மலைக் கோவிலுக்கு சென்று அதிசயம் நடத்திய இடம் ஆகும். வேறு எங்கும் காண இயலாதபடி, இன்றும் பொதி காளைகள் மூலம் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த திருத்தலம் 500-1000 வருட பழமை வாய்ந்தது. இதை புஷ்பகிரி, என்றும், கரை கிரி என்றும், மகுடகிரி என்றும் பல பெயர்களில் குறிப்பிடு கின்றனர்.

மூலவர் பெயர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் தண்டாயுதபாணி என்ற நாம கரணம் கொண்டவர். மூலவர் முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து, மூலவரை சுற்றி, எட்டு நவகிரகங்களும் உள்ளன. மூலவரை வழிபட்டாலே, நவகிரகங்களை வழிபட்ட பலனும் கிட்டும் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அமிர்தவல்லி, சுந்தரவல்லி பெயரில் தவம்…

வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்ய தனிப் பெருங்கோவிலாக இங்கு அமைந்து உள்ளது. இவை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. அருணகிரி நாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத் தானே பூஜித்த தலம் இதுவாகும். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய தலம் என்றும் கூறுகின்றனர்.

இரண்டு தலை முருகன்

இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும். இது மிகவும் விசேஷமான தலம் ஆகும். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லாத தேர் இங்கு உள்ளது. இது வேங்கை மரத்தில் செய்யப்பட்டது ஆகும்.

மலையின் மீது அடர்ந்த மரங்களுடன், அமைதியான, அழகான கோவில் இதுவாகும். மேலும் சிறப்பான அம்சமாக, இங்குள்ள மாமாங்க தீர்த்தக்குளம் என்பது ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வறட்சியான கோடை காலத்திலும், மழையே இல்லாத நேரத்திலும், மலைக் கோவிலின் தென்புறம் உள்ள தீர்த்த குளத்தில் விநாயகர் முன்பு, திடீரென்று பொங்கி வழிந்தோடுவது மிகவும் அதிசயமான ஒன்றாகும். இத்தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்த தாகவும் சகல பிணிகளையும் களைய வல்லதாகும் என்கின்றனர்.

சித்தர்கள் வாழ்ந்த மலை

இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் சன்னதியில் இருந்து பின்புறம் சென்றால், மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு (புண்ணாக்கு) சித்தர் கோவில், வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகில், சரவணமா முனிவரின் சமாதியும் உள்ளது. அந்த முனிவர்கள் வசித்த குகைகள் உள்ளது.

சென்னிமலை என்பதில் சென்னி என்றால் சிரம், கிரி என்றால் மலை ஆகவேதான் சிரகிரி சென்னிமலை என்கின்றனர்.

இயற்கை மூலிகைகள், மரங்கள், செடி கொடிகள் அதிக அளவில் இங்கு இருப்பதாகவும், இங்கு வந்து செல்லும் பக்தர்கள், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, நெஞ்சு வலி, மூச்சு இறைப்பு உள்ளோர் குணம் அடைகின்றனர் என்று கூறுகின்றனர். இது அனுபவ பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் பலர். திருமணம் வரங்கள், விவசாயம், கிணறு வெட்டுதல், புதிய தொழில் துவங்க,வியாதிகள் தீர, முடிவு செய்ய, அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்திரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்பு, காரியத்தை தொடங்குகின்றனர். உத்தரவு கிடைக்கா விட்டால் அந்த காரியத்தை துவங்குவது இல்லை.
இத்தலத்தில் உள்ள சக்தி வாய்ந்த சுப்ரமணிய சுவாமியை வழிபட்டால், கல்யாண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும்,செவ்வாய் தோஷம் நீங்கும், நோய்கள் அகலும், ஆயுள் தீர்க்கமடையும், ஞானம் பெருகும், சுபிட்சமான வாழ்வு கிட்டும் என்பது திண்ணம்.

பால், தயிர் அபிஷேகம்

முருகப் பெருமானுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது.மேலும் காவடி எடுத்தல், முடிக்காணிக்கை செலுத்துவது, அன்னதானம் செய்வது, காது குத்தும் வைபவம் செய்வது என்பதற்காக பக்தர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.12.15

ரசாயனங்கள் இல்லாத உணவு எப்போது கிடைக்கும்?


ரசாயனங்கள் இல்லாத உணவு எப்போது கிடைக்கும்?

நாம் மனது வைத்தால் கிடைக்கும். கீழே உள்ள செய்தியைப் படியுங்கள். தெரியவரும்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------
ஒரு குட்டீயூண்டு நாடு கியூபா... அதை யாராலும் மறக்க முடியாது... அந்த நாடு இன்னோரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. அது எதில்?

ரசாயனங்கள் இல்லாத உணவுகள்
கற்றுத் தரும் கியூபா...

கியூபா... இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபாதான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா?

‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை!

கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம். அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.

கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது.

அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன்வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது.

அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்... இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது. நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத் துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன.

சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில் இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது. ரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்குகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித் திறனை இழந்தன.

தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர்மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன. விளைவு... கிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது.

இந்தச் சூழலில்தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுயசார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது.

தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார்.

அதன்படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கைவிட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல்.

நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டுமொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது.

கிழங்கு உற்பத்தியில் தென் அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா. கியூபாவின் மொத்த மக்கள்தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில்தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.

பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள். வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள்.

மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள். இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.

அதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி.

இது எவ்வளவு பெரிய வேறுபாடு? தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தனிமனிதனின் காய்கறித் தேவையை அறிவிக்கிறது. அதன்படி, ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி தேவை. இந்த உலகக் கணக்கை கியூப மக்கள் மிஞ்சி விட்டார்கள். அவர்களுடைய அன்றாட காய்கறிப் பயன்பாடு, ஒரு தனிநபருக்கு 469 கிராம்.

நிலமும், விவசாயத்திற்கான சூழலும் குறைவாக இருந்த கியூபா மாதிரியான குட்டி நாடு ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி தங்கள் மண்ணையும் விவசாயத்தையும் உணவுகளையும் மக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது. விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட கோடிக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களும், ஏராளமான வசதிகளையும் கொண்ட நம் நாடு, உணவில் ரசாயனம் இருப்பதை வெறுமனே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது வேடிக்கையானது.

சமீபத்தில் தமிழகக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாகக் கூறிய கேரளா, தன் காய்கறித் தேவைக்காக மாற்று வழிகளைத் தேடத் துவங்கியுள்ளது. மாடித்தோட்டம், இயற்கை வழி வேளாண் முறைகள் மூலமாக காய்கறி உற்பத்தியைத் துவங்குவதற்கான தீவிர வழிகளை ஆய்வு செய்து வருகிறது கேரளா.

நாமோ, நல்ல விளைச்சல் உருவாகும் என்று நம்பி ரசாயன மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் உணவுப் பயிர்களின் மீது பயன்படுத்தி விவசாயத்தை ஒரு ரசாயன தொழிற்சாலையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

உலகமெல்லாம் ரசாயனங்களின் மீது ஏற்பட்டிருக்கிற அச்சத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டு, ரசாயனங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடுவது காலத்தின் கட்டாயம். நம் உணவுப் பொருட்களை விளைவிக்கும்போது அதன் உட்செல்லுகிற ரசாயனங்கள் ஒரு புறம்.

அதை அறுவடை செய்த பிறகும் நாம் சும்மா விடுவதில்லை. உணவுப் பொருட்களை அழகுபடுத்துவதற்கும், கெடாமல் பாதுகாப்பதற்கும் பல வகையான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள சிறிய நிலத்தில்.... மாடியில்.... இயற்கை முறை விவசாயத்தை பயன் படுத்தி உங்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, உற்பத்தி செய்து, அதனை உண்டு பயன் பெறுங்கள். ரசாயனம் என்ற விஷம் கலவாத ஆரோக்யமான உடலை பெற்று நோயின்றி வாழுங்கள்.

ஒரு சிறிய நாடே (கியூபா) நமக்கெல்லாம் ஒரு நல்ல முன்னோடியாக இருக்கும் போது..... நாம் நினைத்தால்.... செயல் படுத்தினால்...நடக்காதா என்ன?
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.15

தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள் 

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்
 கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 )  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 2004

 8 )  தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

 72993

9 )  தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

 சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

 1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

 1986

12 )  தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

 கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

 13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

 14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

 15 )  தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

 68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 234

 18 )  தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

 1

 19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

 12 துறைமுகங்கள்
 தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

 சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

 71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 561

 24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 146

25 )  தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

 18

 26 )  தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

 39

27 )  தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

 28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

 29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

 31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

 3,74,901

 32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

 32

33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

 35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

 வரையாடு

38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

 சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை
4. திருச்சி  
5 தூத்துக்குடி
6 சேலம்

41 )  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

 999பெண்கள்(1000 ஆண்கள்)

42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி        
2. சேலம்        
3. வேலூர்        
4. கன்னியாக்குமாரி

43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்    
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி    
4. கடலூர்

44 )  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

 45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

www.tn.gov.in

46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

 சென்னை

47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

48 )  தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

 திருவில்லிபுத்தூர் கோபுரம்

49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

 கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

 நீராடும் கடலுடுத்த

51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

52 )  தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

 கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

 1,30,058 ச.கி.மீ

57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958              
ஆண் 36158871      
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள்
அன்புடன்
வாத்தியார்...
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.15

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck


குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை

.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.

“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல,

அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.12.15

இணையத்தில் கிடைக்கும் அரசு சேவைகள்


இணையத்தில் கிடைக்கும் அரசு சேவைகள் 

கொடுத்துள்ள  குறிப்பிட்டுள்ள தளங்களில் உங்களுக்குத் தேவையாயான அரச சேவைகள் கிடைக்கும். ஆகவே அவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
அன்புடன்
வாத்தியார் 
---------------------------------------

🔘 INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

🔴4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

🔴5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

🔴6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

🔴7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2
----------------------------------------------------------------------------
Apply for:
🔴1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

🔴2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

🔴3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

🔴4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

🔴5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10
------------------------------------------------------------
Register:  
🔴1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

🔴2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

🔴3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

🔴4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

🔴5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

🔴6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

🔴7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25
--------------------------------------------------------
Check/Track:
🔴1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

🔴2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

🔴3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

🔴4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

🔴5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

🔴6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

🔴7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

🔴8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

🔴9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

🔴10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6
------------------------------------------------------------
Book/File/Lodge:
🔴1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

🔴2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

🔴3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

🔴4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14
-------------------------------------------------------------------
Contribute to:
🔴1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
🔴1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20
----------------------------------------------------------
Global Navigation  
🔴1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

🔴2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

🔴3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

🔴4.     Government
http://www.india.gov.in/govtphp

🔴5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

🔴6.     Sectors
http://www.india.gov.in/sector.php

🔴7.     Directories
http://www.india.gov.in/directories.php

🔴8.     Documents
http://www.india.gov.in/documents.php

🔴9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

🔴10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

🔴11.  Rules
http://www.india.gov.in/govt/rules.php
-------------------------------------------
Social media
🔴1. Indian
http://m.facebook.com/hindu6dec

PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.12.15

மருதமலை முருகன் கோயில்


மருதமலை முருகன் கோயில்

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.

முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

அமைவிடம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

அருகிலுள்ள விமான நிலையம்: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்.

கோயில் அமைப்பு

கல் கொடிமரத்தில் வலம்புரி விநாயகர்

புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

மருதமலைக் கோயில் - விவரம்
மூலவர் சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி
உற்சவர் அம்மன்/தாயார் வள்ளி, தெய்வயானை
தல விருட்சம் - மருதமரம்
தீர்த்தம் - மருத தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை சுமார் 800 ஆண்டுகள்
புராண பெயர்
ஆதிமூலஸ்தானம்
மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில்

பாம்பாட்டி சித்தர் சன்னிதி

இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.

பஞ்ச விருட்ச விநாயகர்

ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது.பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.

நடைபயணப் பாதை

அடிவாரத்திலிருந்து நடைபயணமாக மலையேறும் பாதையில் படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தான்தோன்றி விநாயகர் உள்ளார். இப்பாதை ஆதிமூலஸ்தானத்தில் முடிவடைகிறது. இப்பாதையில் செல்வோர் கவனிக்கக்கூடிய முக்கிய இடங்கள்: பதினெட்டாம் படி எனப்படும் முதல் பதினெட்டுப் படிகள்; காவடி சுமந்த வடிவிலுள்ள இடும்பன் கோயில்; குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறை.

குடமுழுக்கு விழா

தண்டாயுதபாணி சன்னிதிக்கு நேராக புதியதாக ஏழுநிலை இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் இந்து சமய அறநிலைத் துறையால் நிர்மாணிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாளன்று இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது

திருப்புகழ் பாடல்

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

கோவைக்கு வந்து செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், ஒருமுறையேனும் மருதமலையாண்டவரை தரிசித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!