வேலை வேண்டுமா - இதைப் படியுங்கள்!!!!
*விவசாய வேலைக்கு ஆள் தேவை*
-----------------------------------------------------------------------
எங்கள் இயற்கை விவசாயப் பண்ணைக்கு, தங்கி பணி செய்ய ஆள் தேவை. விவசாயம் செய்வது மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
*பணியிடம்:* திருவில்லிபுத்தூர் அருகில்
*தொடர்புக்கு:* 9655458148, முனீஸ்வரன் கருப்பசாமி
குறிப்பு: நேர்காணலுக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து செலவு தரப்படும்.
*சம்பளமும் மற்ற சலுகைகளும்*
--------------------------------------------------------------
1. மாத ஊதியம் *ரூ.12000* *+ மாதாந்திர வைப்புநிதி*
2. மாதம் *25கிலோ அரிசி* பை
3. *தங்குமிடம் இலவசம்*
4. *24 மணிநேர இலவச மின்சாரம் (இன்வெர்டர்* தரப்படும்)
5. வருடம் இருமுறை *போனஸ்*(லாபத்தில் பங்கு)
6. வருடம் ஒருமுறை *சம்பள உயர்வு* வழஙகப்படும்
7. பணிக்கொடை எதிர்கால வைப்பு நிதி *(கிராஜூவிட்டி)* உண்டு
8. மாதமொரு நாள் *சம்பளத்துடன் விடுப்பு*
9. *இலவசக் காப்பீடு* (இன்ஷூரன்ஸ்)
10.தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கனிகளை தங்கள் குடும்பத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
11. பணிச்சுமை அதிகமாகும் அறுவடை காலங்களில் தேவையான அளவு உபரி ஆட்கள் வேலைக்குத் தரப்படும்.
12. வருடம் ஒரு முறை *சம்பளத்துடன் கூடிய நீண்ட நாட்கள் விடுப்பும்,* ஊருக்கு சென்று வர போக்குவரத்து செலவும் அளிக்கப்படும்.
13. அரசு பள்ளிக்கூடம் பண்ணைக்கு மிக அருகில் உள்ளது.
*பணி சார்ந்த எங்கள் எதிர்பார்ப்பு*
----------------------------------------------------------------
1. குடும்பமாக வருபவர்களுக்கு/ஆதரவற்றோருக்கு *முன்னுரிமை* அளிக்கப்படும்.
2. விவசாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயத்தின் மீதுள்ள பற்றும் பக்தியுமே முக்கியத் தகுதி
3.படிப்பறிவு அவசியமில்லை
4. பண்ணையிலுள்ள பயிர்களையும், கோழி,மாடு போன்ற உயிர்களையும் பற்றோடு பராமரிப்பது.
5. தேவையான தகவல்களை எங்களுக்கு உடனடியாக அளிப்பது.
6. எங்களோடு தினசரியோ, வாரம் ஒருமுறையோ கலந்துரையாடல் செய்வது.
7. குறைந்த பட்சம் *3 ஆண்டுகள்* கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!