மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label வாரணாசி. Show all posts
Showing posts with label வாரணாசி. Show all posts

26.11.11

வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!

----------------------------------------------------------------------------------------
வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!
நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம். ஒட்டு மொத்த இந்தியாவும் புண்ணிய ஸ்தலம்தான். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்னும்போது எல்லா இடங்களும் புண்ணிய ஸ்தலம்தான். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும். பணம் படைத்தவர்கள் பணத்தை வைத்து பல அறச் செயல்களைச் செய்யலாம். பணவசதி இல்லாதவர்கள். உடல் உழைப்பால் பல தர்மச் செயல்களைச் செய்யலாம். வலிமையான மனம் மற்றும் அறிவு படைத்தவர்கள் அதைவைத்துப் பல அறச் செயல்களைச் செய்யலாம்.

வலைப்பதிவில் என் அரிய நேரத்தைச் செலவழித்து ஆறு ஆண்டுகளாக நான் எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்! பாடம் நடத்திக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்!

நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!

எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!
-----------------------------------------------------------------------------------------------------
சரி, இனி இன்றைய கட்டுரைக்குப் போவோம்.

வாரணாசியைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன். ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் வாரணாசிக்குத்தான் முதல் இடம். வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.

கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.

1. அயோத்யா (உத்திரப்பிரதேசம்)
2. மதுரா (உத்திரப்பிரதேசம்)
3. ஹரித்துவார் (மாயா - உத்திரகாண்ட் மாநிலம்)
4. காசி (வாரணாசி - உத்திரப்பிரதேசம்)
5. காஞ்சி (தமிழ்நாடு)
6. உஜ்ஜெயின் (அவந்திகா - மத்தியப்பிரதேசம்)
7. துவாரகை (ஜாம்நகர் மாவட்டம், குஜராத்)

ஏழு இடங்களுக்கும் சென்றால்தான் மோட்சம் என்றில்லை. அவற்றில் ஒரு இடத்திற்குச் சென்றாலும் அந்தப் பலன் உண்டு!

செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.

டாஸ்மாக் பார்ட்டிகள், அஜால்-குஜால் பார்ட்டிகள், ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள், எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது.

தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்

கங்கா தேவிக்கு ஆராதனை நடைபெறுகிறது Ganga Arti
 ------------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பார்த்துவிட்டீர்கள். அடுத்து என்ன?



வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு ராமபிரானின் ஜென்ம பூமியான அயோத்திக்குச் சென்றுவரும் ஆசை இருக்கும். வாரணாசியில் இருந்து
அயோத்யா 180 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 4 மணி நேரப் பயணம்.

அயோத்தியாவின் இணையதள முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். அதிலேயே அயோத்தியாவைப் பற்றிப் படித்துவிடுங்கள் போதும். அங்கே நீங்கள் செல்ல வேண்டாம். ராமர் ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டார். அங்கே அநியாயத்திற்குக் கெடுபிடி என்று கேள்விப்பட்டேன்.  Security check. 3,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்களாம்.

அவர்களில் 2 பேர்கள், செல்லும் வழியில் 3 அல்லது 4 இடங்களில் உங்கள் சட்டைப்பைகளில் கை விடுவார்கள். இடுப்பு, அக்குள் பிரதேசங்களில் தடவிப்பார்ப்பார்கள். பெண்கள் என்றாலும் தப்பிக்க முடியாது. பணியில் பெண்காவலர்கள் உள்ளார்கள். ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!

அத்தனை சிரமங்களுக்கிடையே சென்று எதைப் பார்க்கப்போகிறீர்கள்? 200 அடி தூரத்தில் இருந்து, இராமர் - பாபர் மசூதி தகராறில் இடிபட்ட கட்டட மிச்சங்களைப் பார்த்துவரலாம். அவ்வளவுதான்.

வேஸ்ட். அதனால் செல்லாதீர்கள். இருந்த இடத்தில் (அதாவது வாரணாசியில்) இருந்தே ராமரை நினைத்துக்கொள்ளுங்கள் போதும்!

URL for the Article on Ayodhya: http://en.wikipedia.org/wiki/Ayodhya

அதெல்லாம் முடியாது சென்று வருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக அயோத்தியாவில் உள்ள நகரத்தார் விடுதியின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். தாராளமாகச் சென்று, தங்கி, அதிகாலையில் எழுந்து திவ்யமாக ராமஜென்ம பூமியைத் தரிசித்து விட்டு வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!!!

Nattukkottai Nagara Satram
Natkot Sri Ram Mandhir
Baboo Bazar
Ayodhya - 224123
Faizabad
Uttar Pradesh
Phone No: 05278 - 232703
-------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?
காயாவில் உள்ள ஃபல்கு நதி!

வாரணாசியில் இருந்து கயா 210 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்துக்கள், பெளத்தர்கள் என்று இரு சாராருக்குமே கயா ஒரு புனித ஸ்தலம். கயாவைப் பற்றிய விவரங்களுக்கான சுட்டியைக் கீழே படித்துப் பாருங்கள்.

URL for the Article on Gaya: http://en.wikipedia.org/wiki/Gaya,_India

கயாவில் நகரத்தார் விடுதி உள்ளது. அதன் முகவரி:

Nattukkottai Nagara Satram,
No.171, Chand Chowra
Gaya - 823 001
Bihar State
Telephone No: 0632 - 2226480
-----------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?


மூன்று நதிகள் சங்கமிக்கும் அலாகாபாத்!

வாரணாசியில் இருந்து அலாகாபாத் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 3 மணி நேரப் பயணம்.

அலகாபாத் முப்புறமும் யமுனை, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிகளால் சூழப்பெற்ற ஊர். எங்கே சென்றாலும் வழியில் பிரமாண்டமான, நீண்ட பாலங்கள் உள்ளன.

யமுனை, கங்கை மற்றும் ஊற்றாக உள்ள சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும், அதாவது ஒன்றுடன் ஒன்று சேரும், கலக்கும் இடத்திற்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர். படகில் அழைத்துச் செல்வார்கள். சுற்றிலும் பார்ப்பதற்கு நம்மியமாக இருக்கிறது. அவசியம் சென்று வாருங்கள்.

அலாகாபாத்தில் உள்ள மற்றுமொரு முக்கியமான இடம். இரண்டு முன்னாள் பிரதமர்கள் பிறந்த மாளிகையான ஆனந்தபவனம். ஆமாம் திரு.ஜவஹர்லால் நேரு மற்றும் அவருடைய அன்பு மகள் திருமதி.இந்திரா பிரியதர்சினி ஆகியோர் பிறந்த மாளிகை அது. இப்போது அந்த மாளிகை நாட்டிற்கு அர்ப்பணிக்கபெற்று, தேசிய வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.

பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது. அதையும் பார்த்து வாருங்கள்

Bharadwaja was one of the greatest Hindu sages (Maharshis) descendant of rishi Angirasa, whose accomplishments are detailed in the Puranas. He was one of the Saptarshis (Seven Great Sages Rishi) in the present Manvantara; with others being Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamadagni, Kashyapa. Bhardwaj Rishi was father of Guru Dronacharya and grandfather of Ashwatthama. Bhardwaj Maharishi, a sage of the Vedic period, is renowned for his thirst for knowledge. He attained extraordinary scholarship and the power of meditation.

அனுமார் கோவில் ஒன்று உள்ளது. சிறப்பானது. அதையும் பார்த்து வாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Allahabad

அலாகாபாத்தில் நகரத்தார் விடுதி உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. 200 பேர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதியானது. 3 வேளை உணவு வசதியும் அங்கே உள்ளது. ஆனால் முன் கூட்டியே வருகையைத் தொலைபேசியில் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்! அதுதான் நல்லது.அதன் முகவரி:

Nattukkottai Nagara Satram,
149, Mori, Daraganj,
Allahabad - 211 006 (U.P)
Telephone No: 0532 - 2501275
----------------------------------------------------------------------
வாரணாசியில் இருந்து இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வர வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கும். 4 பேர்கள் வரை செல்வதென்றால் இண்டிகா கார் கிடைக்கும், 8 பேர்கள்வரை சென்று திரும்புவதென்றால் டாடா சுமோ வண்டி கிடைக்கும். அதற்கும் மேலான எண்ணிக்கை என்றால் அவற்றிற்குத் தகுந்தார்ப் போல பெரிய வேன்கள் மற்றும் பேருந்துகள் கிடைக்கும்.

வாரணாசி நகர விடுதியில் சொன்னால் ஏற்பாடு செய்து தருவார்கள்.

செலவு: வாரணாசியில் இருந்து அலாகாபாத்திற்கு நாங்கள் 7 பேர்கள் சென்று வந்தோம், தலைக்கு 300 ரூபாய்கள் ஆயிற்று

வாரணாசியை முழுமையாக சுற்றிக் காட்டவும் வாகனங்கள் கிடைக்கும்

உங்களுக்காக Travels  நடத்தும் அன்பரின் முகவரியைக் கொடுத்துள்ளேன். அவர் பெயர் ‘பிமல்’. தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆகவே பிரச்சினை இல்லை. அவர் மூலமாகவும் நீங்கள் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசியில் வாங்க வேண்டிய சாமான்கள்

1. ருத்திராட்சம்
ஐந்துமுக, ஆறுமுக உத்திராட்சங்கள் நிறையக் கிடைக்கும். ஒரு உத்திராட்சத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே!

2. மாலையாக அணிந்து கொள்ள 108 சிறு உத்திராட்சங்கள். ஒரு செட்டின் விலை ரூபாய் நூறு மட்டுமே. பெரிய சைஸ் உத்திராட்சமும் கிடைக்கும் ஒரு செட்டின் விலை இருநூறு ரூபாய். அவற்றை வாங்கிக் கொண்டு வந்து செப்புக்கம்பி அல்லது வெள்ளிக் கம்பியில் கட்டி, கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

3. காசித் திருநீறு & குங்குமம். சின்னச் சின்ன கவர்களில் அழகாகக் கிடைக்கின்றது. 10 சின்ன பாக்கெட் அடங்கிய செட்டின் விலை பத்து ரூபாய்கள் மட்டுமே!

4. கையில் அணியும் காசிக்கயிறு. 50 கயிறுகள் கொண்ட செட்டின் விலை பதினைந்து ரூபாய்கள் மட்டுமே

5. காசித் தீர்த்தம். சிறு செம்புகளில் அடைக்கப்பெற்ற கங்கை நீர். பல அளவுகளில் கிடைக்கின்றது. விலை 15ல் துவங்கி 120 வரை செல்கிறது
விருப்பம்போல் வாங்கிக் கொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்தும் நகரத்தார் விடுதியில் கிடைக்கும்.

அங்கேதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெருக்களில் பல கடைகள் உள்ளன. பார்த்து, பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம்.

பிறகு பித்தளையில் அன்னபூரணி பதுமைகள், பசுமாடு-கன்றுக்குட்டி பதுமைகள், காப்பர் தட்டுக்கள், சின்னச் செம்புகள், சின்னச் சின்ன விளக்குகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும். மனதை அள்ளும் விதமாக இருக்கும் பார்த்து வாங்கி வரலாம். நான் வாங்கிய இடம் ஒரு மொத்த வியாபார ஸ்தலம். விடுதியின் அருகில் உள்ளது. அதன் முகவரியைக் கொடுத்துள்ளேன்.



தேனில் ஊறிய நெல்லிக்கனி கிடைக்கும். சுவையாக இருக்கும் ஒரு கிலோ வாங்கினால் 20 முதல் 22 கனிகள் இருக்கும் விலை கிலோ 100 ரூபாய்.
அதை விற்கும் கடைகளில் ஒன்றின் முகவரியைக் கீழே தந்துள்ளேன்.

----------------------------------------------------------------------------
வாராண்சியில் தடுக்கி விழுந்தால் சேலைகள், சுடிதார்கள் விற்கும் கடைகள்தான். விடுதிக்கு  அருகில் உள்ள கடை ஒன்றின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன்

--------------------------------------------------------------------------------

மேற்கூரிய ஐயிட்டங்கள் அனைத்தையுமே அல்லது உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொண்டு வந்தால், வாராணசிக்குச் சென்று திரும்பிவுடன், உங்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொடுப்பதற்குச் செளகரியமாக இருக்கும்.

அவர்கள் மகிழ்வார்கள். கொடுப்பதால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்
---------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்





காசி பயணக்கட்டுரை நிறைவுறுகிறது

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------------





வாழ்க வளமுடன்!

25.11.11

வாரணாசியில் இட்லி சாம்பார்!



வாரணாசியில் இட்லி சாம்பார்!

ஒரு பழைய திரைப்படத்தில் எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்:

“அவனவன் நீராவியில கப்பல் விடுறான், ரயில் விடுறான். நீங்க இட்லி, புட்டு விடுறீங்களாடா? விடுங்கடா!!!!!!”

யார்தான் என்னதான் கலாய்த்தாலும் இட்லி சாம்பாருக்கு இணை ஏதும் கிடையாது. சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்கள். அதன் அருமை தெரியும்.

தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இந்த இட்லி & சாம்பார்!

யாருக்குக் கொடுப்பது என்பது தெரியாததால் அதற்கு இன்றுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை!

எங்கே சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் கெடுதி செய்யாத உணவு இந்த இட்லி சாம்பார்! வயிற்றிற்கு ஆதரவான உணவு. வயது முதிந்தோர்க்கும், நோயில் படுத்திருப்போர்க்கும் அதன் அருமை சற்றுக் கூடுதலாகத் தெரியும்!

சரி, வாரணாசியில் இட்லி சாம்பாருக்கு என்ன செய்வது?

அதைச் சொல்லத்தான் இன்றையப் பதிவு. தொடர்ந்து படியுங்கள்
--------------------------------------------------------------------------------------------------
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater  உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரணசியில் மட்டும்தான் இந்த வசதி உள்ளதா?

இல்லை. அலகாபாத், அயோத்தியா, கயா, நாசிக் ஆகிய 4 ஸ்தலங்களிலும் இந்த வசதி உள்ளது. அது பற்றிப் பிறகு ஒருநாள் பதிவிடுகிறேன்

தமிழ் நாட்டில்?

திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் போன்று சுமார் 20 ஸ்தலங்களில் இந்தத் தங்கும் வசதி உள்ளது. அது பற்றியும் பிறகு ஒருநாள் பதிவிடுகிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விடுதியைப் பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டு வந்தேன். மொத்தம் 100 படங்கள். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பற்றி இன்னும் செய்திகள் உள்ளன. அவற்றை நாளை தருகிறேன். நாளையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறும்!

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

விடுதியின் முபுறத் தோற்றம்
அறிவிப்புப் பலகை!

நுழை வாயிலில் ஒரு பக்கம் படிக்கட்டு, ஒருப்க்கம் லிஃப்ட்,  
                                        இரவு பகலாக டூட்டியில் இரண்டு காவல்காரர்கள்
3 தளங்களுக்கும் போய்வருவதற்கான லிஃப்ட்

நுழைவாயிலில் உள்ள நீண்ட நடை பாதை
                          உங்கள் செருப்புக்களைப் பாதுகாக்க உள்ள ஸ்டாண்டுகள்


நடை பாதையின் உட்புறத்தோற்றம்

முகப்புப் பகுதியில் உள்ள நிலைக் கதவு
விடுதியின் உட்புறம் உள்ள ஈஸ்வரன் கோவில்
 விடுதிக்கோவிலின் உட்புறம்

 விடுதிக்கோவிலின் உட்புறம்
 விடுதிக்கோவிலின் உட்புறம் - படம் 2
உள்ளே விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், முருகர்
ஆகியோருக்குக் கருவறை உள்ளது. அவற்றைப் படம் எடுக்கவில்லை
இதுபோன்று தங்கும் மண்டபங்கள் பல உள்ளன.
முதல் தளத்தின் முகப்புப் பகுதியில் இருந்து  வெள்யே தெரியும் தெருவின் தோற்றம்
ஆயிரம் சதுர அடி வளாகத்தில் நிர்வாக அலுவலகம்
நிர்வாக அலுவலகத்தில் இருந்து உணவுக்கூடத்திற்குச் செல்லும் வழி
இரண்டாவது தளத்தில் உள்ள தங்கும் அறைகளில் ஒன்று


விடுதிக்குள் இருக்கும் கோவிலின் கோபுரத்தை வளைத்து விரிவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது

வாரணாசியில் நிறைந்திருக்கும் குரங்குகள் விடுதிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி
முதல் தளத்தில் துவக்க காலத்தில் கட்டப்பெற்ற தங்கும் அறைகள் உள்ள பகுதி
இரண்டாவது தளத்தின் ஒரு பக்கக் காட்சி


இரண்டாவது தளத்தில் இருந்து மேல் பகுதிக்கான காட்சி
உள் மண்டபங்களுக்கான் நுழைவிடம்

நிர்வாக அலுவலத்திற்குச் செல்லும் படிக்க்ட்டுப் பாதை
அந்தத் தளத்தில் மற்றுமொரு கோணம்

அந்தக் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அறையின் தோற்றம்
நிர்வாக அலுவலகத்தில்  பணி செய்யும் அறுவரில் ஒருவர்

வருகைப் பதிவேட்டில் வாத்தியார் தன் கையெழுத்தை இடும் காட்சி
மண்டபங்களில் தங்கள் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள உதவும் லாக்கர்கள். சூட்கேஸ்களோடு அப்படியே உள்ளே வைக்கலாம்
லாக்கர்களின் அளவைப் பாருங்கள்


இன்னுமொரு தங்கும் மண்டபம்

அந்த மண்டபத்தில் உள்ள லாக்கர்களின் அணிவகுப்பு


ஒவ்வொரு காலகட்டத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் பொருட்செலவில் விடுதியை மேம்படுத்தியுள்ளார்கள். 2004 - 2007 ஆம் ஆண்டு இருந்த குழுவினர் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் செலவில் பணிகள் செய்துள்ளார்கள். அதைக் காட்டும் படம். இது போன்ற விவரங்கள் அங்கே காணக் கிடைக்கின்றன


காசி அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கிய பெரியவர்களின் படம் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளது. நிறைய உள்ளன.  இடது பக்கம் முதல் படம் தேவகோட்டை ஜமீன்தார் திரு. AL.AR. சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் படம். அவர் லால்பகதூர் சாஸ்திரியின் நண்பர். ராமேஷ்வரம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்

படத்தில் இருப்பவர் தேவகோட்டை திரு. AR.SM. சோமசுந்தரம் செட்டியார் (அவருடைய காலம் 1861 - 1923) கல்கத்தாவில் பெரிய அளவில் வணிகம் செய்தவர். ஹூக்ளி நதிக்கரையில் ஹெளரா பாலத்தின் அருகே உள்ள எர்சா தெருவில் இடம் வாங்கி, மிகப் பெரிய சத்திரம் ஒன்றைக் கட்டியவர். அதன் இன்றைய மதிப்பு நூறு கோடி ரூபாய். அதை காசி அறக்கட்டளைக்கு அன்றே தானமாகக் கொடுத்துவிட்டார். அவர் சத்திரம் சோவன்ன மானா என்று அனைவராலும் அறியப்பெற்றவர். இலங்கைப் பேராசான் அறுமுக நாவலரின் நண்பர்.

தங்கள் பெற்றோர்களின் பெயரில் ஏதாவது தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள், காசியில் நிறையத் தர்மம் செய்துள்ளார்கள். சிலர் இதுபோன்ற தங்கும் அறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்கள். அப்படி ஒரு குடும்பத்தார் கட்டிக் கொடுத்த டீலக்ஸ் அறையின் தோற்றம். கதவிற்கு மேற்புறம் அதை அளித்த குடும்பத்தாரின் பெயர் உள்ளது!

விசுவநாதருக்கு விடுதியில் இருந்து சம்போ கட்டளை செல்லும் போது உடன் செல்லும் பூஜைப் பாத்திரங்கள்

நாளொன்றுக்கு மூன்று வேளைகள். ஒரு வேளைக்கு 30 லிட்டர் பால் விசுவநாதருக்கு விடுதியில் இருந்து சம்போ கட்டளையாகச் செல்கிறது. அதற்கான காட்சிப் படம்
காசித் தீர்த்தம் சிறு செம்புகளில் பல அளவுகளில் தாயாராகின்றது. அவைகள் உங்களுக்கு விடுதி வளாகத்திலேயே விலக்குக் கிடைக்கும்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உணவுக்கூடம்


உண்வுக்கூடத்தில் உங்களை வரவேற்கும் அன்னபூரணி


சாப்பிடும் கூடம் (Dining Hall)


சாப்பிடும் கூடம் (Dining Hall) இன்னும் ஒரு கோணத்தில்

சாப்பிடும் கூடம் (Dining Hall) மேலும் ஒரு கோணத்தில்






காய்கறிகள் நறுக்குவதற்கென்றே தனியாக ஒருவர் உள்ளார்

சமையல்காரர் திரு. வீராச்சாமி, வேந்தன்பட்டிக்காரர்

சமையல் அறையில் உள்ள சாதனங்கள்

சமையலறைக்குத் தேவையான எரிபொருள் தொகுப்பு



உணவு பறிமாறும் பணியாளர்கள் (உள்ளூர்க்காரர்கள்)




Man made Panana Leaf
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அருள்பழுத்த காசியிலே அகிலேசன்றன்
    அடிபரவ நகரத்தார் அமைத்த தர்மம்
இருள்நீக்கி ஒளிபரப்பும் இரவிபோல
    என்றென்றும் நீசில்பெற்று வளமிக்கோங்க
மருள்நீக்கி உலகையெல்லாம் காக்கும் அன்னை
    விசாலாட்சி விசுவேசன் மலர்ப் பதத்தை
பொருள்வழங்கித் தினம் மூன்று காலம் போற்றும்
    புண்ணியராம் தனவணிகர் பொலிந்து வாழ்க!

- என்ற பாடல் எக்காலத்தில் எழுதப்பெற்றதோ! இன்றும் காசியில் காட்சியளிக்கிறது. அதன் படத்தை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!