----------------------------------------------------------------------------------------
வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!
நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம். ஒட்டு மொத்த இந்தியாவும் புண்ணிய ஸ்தலம்தான். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்னும்போது எல்லா இடங்களும் புண்ணிய ஸ்தலம்தான். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!
மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும். பணம் படைத்தவர்கள் பணத்தை வைத்து பல அறச் செயல்களைச் செய்யலாம். பணவசதி இல்லாதவர்கள். உடல் உழைப்பால் பல தர்மச் செயல்களைச் செய்யலாம். வலிமையான மனம் மற்றும் அறிவு படைத்தவர்கள் அதைவைத்துப் பல அறச் செயல்களைச் செய்யலாம்.
வலைப்பதிவில் என் அரிய நேரத்தைச் செலவழித்து ஆறு ஆண்டுகளாக நான் எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்! பாடம் நடத்திக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்!
நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!
எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!
-----------------------------------------------------------------------------------------------------
சரி, இனி இன்றைய கட்டுரைக்குப் போவோம்.
வாரணாசியைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன். ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் வாரணாசிக்குத்தான் முதல் இடம். வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.
கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.
1. அயோத்யா (உத்திரப்பிரதேசம்)
2. மதுரா (உத்திரப்பிரதேசம்)
3. ஹரித்துவார் (மாயா - உத்திரகாண்ட் மாநிலம்)
4. காசி (வாரணாசி - உத்திரப்பிரதேசம்)
5. காஞ்சி (தமிழ்நாடு)
6. உஜ்ஜெயின் (அவந்திகா - மத்தியப்பிரதேசம்)
7. துவாரகை (ஜாம்நகர் மாவட்டம், குஜராத்)
ஏழு இடங்களுக்கும் சென்றால்தான் மோட்சம் என்றில்லை. அவற்றில் ஒரு இடத்திற்குச் சென்றாலும் அந்தப் பலன் உண்டு!
செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.
டாஸ்மாக் பார்ட்டிகள், அஜால்-குஜால் பார்ட்டிகள், ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள், எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது.
தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்
------------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பார்த்துவிட்டீர்கள். அடுத்து என்ன?
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு ராமபிரானின் ஜென்ம பூமியான அயோத்திக்குச் சென்றுவரும் ஆசை இருக்கும். வாரணாசியில் இருந்து
அயோத்யா 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 4 மணி நேரப் பயணம்.
அயோத்தியாவின் இணையதள முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். அதிலேயே அயோத்தியாவைப் பற்றிப் படித்துவிடுங்கள் போதும். அங்கே நீங்கள் செல்ல வேண்டாம். ராமர் ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டார். அங்கே அநியாயத்திற்குக் கெடுபிடி என்று கேள்விப்பட்டேன். Security check. 3,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்களாம்.
அவர்களில் 2 பேர்கள், செல்லும் வழியில் 3 அல்லது 4 இடங்களில் உங்கள் சட்டைப்பைகளில் கை விடுவார்கள். இடுப்பு, அக்குள் பிரதேசங்களில் தடவிப்பார்ப்பார்கள். பெண்கள் என்றாலும் தப்பிக்க முடியாது. பணியில் பெண்காவலர்கள் உள்ளார்கள். ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!
அத்தனை சிரமங்களுக்கிடையே சென்று எதைப் பார்க்கப்போகிறீர்கள்? 200 அடி தூரத்தில் இருந்து, இராமர் - பாபர் மசூதி தகராறில் இடிபட்ட கட்டட மிச்சங்களைப் பார்த்துவரலாம். அவ்வளவுதான்.
வேஸ்ட். அதனால் செல்லாதீர்கள். இருந்த இடத்தில் (அதாவது வாரணாசியில்) இருந்தே ராமரை நினைத்துக்கொள்ளுங்கள் போதும்!
URL for the Article on Ayodhya: http://en.wikipedia.org/wiki/Ayodhya
அதெல்லாம் முடியாது சென்று வருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக அயோத்தியாவில் உள்ள நகரத்தார் விடுதியின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். தாராளமாகச் சென்று, தங்கி, அதிகாலையில் எழுந்து திவ்யமாக ராமஜென்ம பூமியைத் தரிசித்து விட்டு வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!!!
Nattukkottai Nagara Satram
Natkot Sri Ram Mandhir
Baboo Bazar
Ayodhya - 224123
Faizabad
Uttar Pradesh
Phone No: 05278 - 232703
-------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?
வாரணாசியில் இருந்து கயா 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்துக்கள், பெளத்தர்கள் என்று இரு சாராருக்குமே கயா ஒரு புனித ஸ்தலம். கயாவைப் பற்றிய விவரங்களுக்கான சுட்டியைக் கீழே படித்துப் பாருங்கள்.
URL for the Article on Gaya: http://en.wikipedia.org/wiki/Gaya,_India
கயாவில் நகரத்தார் விடுதி உள்ளது. அதன் முகவரி:
அடுத்து?
மூன்று நதிகள் சங்கமிக்கும் அலாகாபாத்!
வாரணாசியில் இருந்து அலாகாபாத் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 3 மணி நேரப் பயணம்.
அலகாபாத் முப்புறமும் யமுனை, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிகளால் சூழப்பெற்ற ஊர். எங்கே சென்றாலும் வழியில் பிரமாண்டமான, நீண்ட பாலங்கள் உள்ளன.
யமுனை, கங்கை மற்றும் ஊற்றாக உள்ள சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும், அதாவது ஒன்றுடன் ஒன்று சேரும், கலக்கும் இடத்திற்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர். படகில் அழைத்துச் செல்வார்கள். சுற்றிலும் பார்ப்பதற்கு நம்மியமாக இருக்கிறது. அவசியம் சென்று வாருங்கள்.
அலாகாபாத்தில் உள்ள மற்றுமொரு முக்கியமான இடம். இரண்டு முன்னாள் பிரதமர்கள் பிறந்த மாளிகையான ஆனந்தபவனம். ஆமாம் திரு.ஜவஹர்லால் நேரு மற்றும் அவருடைய அன்பு மகள் திருமதி.இந்திரா பிரியதர்சினி ஆகியோர் பிறந்த மாளிகை அது. இப்போது அந்த மாளிகை நாட்டிற்கு அர்ப்பணிக்கபெற்று, தேசிய வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.
பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது. அதையும் பார்த்து வாருங்கள்
அனுமார் கோவில் ஒன்று உள்ளது. சிறப்பானது. அதையும் பார்த்து வாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Allahabad
அலாகாபாத்தில் நகரத்தார் விடுதி உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. 200 பேர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதியானது. 3 வேளை உணவு வசதியும் அங்கே உள்ளது. ஆனால் முன் கூட்டியே வருகையைத் தொலைபேசியில் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்! அதுதான் நல்லது.அதன் முகவரி:
வாரணாசியில் இருந்து இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வர வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கும். 4 பேர்கள் வரை செல்வதென்றால் இண்டிகா கார் கிடைக்கும், 8 பேர்கள்வரை சென்று திரும்புவதென்றால் டாடா சுமோ வண்டி கிடைக்கும். அதற்கும் மேலான எண்ணிக்கை என்றால் அவற்றிற்குத் தகுந்தார்ப் போல பெரிய வேன்கள் மற்றும் பேருந்துகள் கிடைக்கும்.
வாரணாசி நகர விடுதியில் சொன்னால் ஏற்பாடு செய்து தருவார்கள்.
செலவு: வாரணாசியில் இருந்து அலாகாபாத்திற்கு நாங்கள் 7 பேர்கள் சென்று வந்தோம், தலைக்கு 300 ரூபாய்கள் ஆயிற்று
வாரணாசியை முழுமையாக சுற்றிக் காட்டவும் வாகனங்கள் கிடைக்கும்
உங்களுக்காக Travels நடத்தும் அன்பரின் முகவரியைக் கொடுத்துள்ளேன். அவர் பெயர் ‘பிமல்’. தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆகவே பிரச்சினை இல்லை. அவர் மூலமாகவும் நீங்கள் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசியில் வாங்க வேண்டிய சாமான்கள்
1. ருத்திராட்சம்
ஐந்துமுக, ஆறுமுக உத்திராட்சங்கள் நிறையக் கிடைக்கும். ஒரு உத்திராட்சத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே!
2. மாலையாக அணிந்து கொள்ள 108 சிறு உத்திராட்சங்கள். ஒரு செட்டின் விலை ரூபாய் நூறு மட்டுமே. பெரிய சைஸ் உத்திராட்சமும் கிடைக்கும் ஒரு செட்டின் விலை இருநூறு ரூபாய். அவற்றை வாங்கிக் கொண்டு வந்து செப்புக்கம்பி அல்லது வெள்ளிக் கம்பியில் கட்டி, கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
3. காசித் திருநீறு & குங்குமம். சின்னச் சின்ன கவர்களில் அழகாகக் கிடைக்கின்றது. 10 சின்ன பாக்கெட் அடங்கிய செட்டின் விலை பத்து ரூபாய்கள் மட்டுமே!
4. கையில் அணியும் காசிக்கயிறு. 50 கயிறுகள் கொண்ட செட்டின் விலை பதினைந்து ரூபாய்கள் மட்டுமே
5. காசித் தீர்த்தம். சிறு செம்புகளில் அடைக்கப்பெற்ற கங்கை நீர். பல அளவுகளில் கிடைக்கின்றது. விலை 15ல் துவங்கி 120 வரை செல்கிறது
விருப்பம்போல் வாங்கிக் கொள்ளலாம்.
மேற்கூறிய அனைத்தும் நகரத்தார் விடுதியில் கிடைக்கும்.
அங்கேதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெருக்களில் பல கடைகள் உள்ளன. பார்த்து, பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம்.
பிறகு பித்தளையில் அன்னபூரணி பதுமைகள், பசுமாடு-கன்றுக்குட்டி பதுமைகள், காப்பர் தட்டுக்கள், சின்னச் செம்புகள், சின்னச் சின்ன விளக்குகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும். மனதை அள்ளும் விதமாக இருக்கும் பார்த்து வாங்கி வரலாம். நான் வாங்கிய இடம் ஒரு மொத்த வியாபார ஸ்தலம். விடுதியின் அருகில் உள்ளது. அதன் முகவரியைக் கொடுத்துள்ளேன்.
தேனில் ஊறிய நெல்லிக்கனி கிடைக்கும். சுவையாக இருக்கும் ஒரு கிலோ வாங்கினால் 20 முதல் 22 கனிகள் இருக்கும் விலை கிலோ 100 ரூபாய்.
அதை விற்கும் கடைகளில் ஒன்றின் முகவரியைக் கீழே தந்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
வாராண்சியில் தடுக்கி விழுந்தால் சேலைகள், சுடிதார்கள் விற்கும் கடைகள்தான். விடுதிக்கு அருகில் உள்ள கடை ஒன்றின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன்
--------------------------------------------------------------------------------
மேற்கூரிய ஐயிட்டங்கள் அனைத்தையுமே அல்லது உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொண்டு வந்தால், வாராணசிக்குச் சென்று திரும்பிவுடன், உங்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொடுப்பதற்குச் செளகரியமாக இருக்கும்.
அவர்கள் மகிழ்வார்கள். கொடுப்பதால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.
கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்
---------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்
காசி பயணக்கட்டுரை நிறைவுறுகிறது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!
நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம். ஒட்டு மொத்த இந்தியாவும் புண்ணிய ஸ்தலம்தான். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்னும்போது எல்லா இடங்களும் புண்ணிய ஸ்தலம்தான். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!
மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும். பணம் படைத்தவர்கள் பணத்தை வைத்து பல அறச் செயல்களைச் செய்யலாம். பணவசதி இல்லாதவர்கள். உடல் உழைப்பால் பல தர்மச் செயல்களைச் செய்யலாம். வலிமையான மனம் மற்றும் அறிவு படைத்தவர்கள் அதைவைத்துப் பல அறச் செயல்களைச் செய்யலாம்.
வலைப்பதிவில் என் அரிய நேரத்தைச் செலவழித்து ஆறு ஆண்டுகளாக நான் எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்! பாடம் நடத்திக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்!
நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!
எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!
-----------------------------------------------------------------------------------------------------
சரி, இனி இன்றைய கட்டுரைக்குப் போவோம்.
வாரணாசியைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன். ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் வாரணாசிக்குத்தான் முதல் இடம். வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.
கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.
1. அயோத்யா (உத்திரப்பிரதேசம்)
2. மதுரா (உத்திரப்பிரதேசம்)
3. ஹரித்துவார் (மாயா - உத்திரகாண்ட் மாநிலம்)
4. காசி (வாரணாசி - உத்திரப்பிரதேசம்)
5. காஞ்சி (தமிழ்நாடு)
6. உஜ்ஜெயின் (அவந்திகா - மத்தியப்பிரதேசம்)
7. துவாரகை (ஜாம்நகர் மாவட்டம், குஜராத்)
ஏழு இடங்களுக்கும் சென்றால்தான் மோட்சம் என்றில்லை. அவற்றில் ஒரு இடத்திற்குச் சென்றாலும் அந்தப் பலன் உண்டு!
செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.
டாஸ்மாக் பார்ட்டிகள், அஜால்-குஜால் பார்ட்டிகள், ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள், எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது.
தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்
![]() |
கங்கா தேவிக்கு ஆராதனை நடைபெறுகிறது Ganga Arti |
வாரணாசியைப் பார்த்துவிட்டீர்கள். அடுத்து என்ன?
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு ராமபிரானின் ஜென்ம பூமியான அயோத்திக்குச் சென்றுவரும் ஆசை இருக்கும். வாரணாசியில் இருந்து
அயோத்யா 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 4 மணி நேரப் பயணம்.
அயோத்தியாவின் இணையதள முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். அதிலேயே அயோத்தியாவைப் பற்றிப் படித்துவிடுங்கள் போதும். அங்கே நீங்கள் செல்ல வேண்டாம். ராமர் ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டார். அங்கே அநியாயத்திற்குக் கெடுபிடி என்று கேள்விப்பட்டேன். Security check. 3,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்களாம்.
அவர்களில் 2 பேர்கள், செல்லும் வழியில் 3 அல்லது 4 இடங்களில் உங்கள் சட்டைப்பைகளில் கை விடுவார்கள். இடுப்பு, அக்குள் பிரதேசங்களில் தடவிப்பார்ப்பார்கள். பெண்கள் என்றாலும் தப்பிக்க முடியாது. பணியில் பெண்காவலர்கள் உள்ளார்கள். ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!
அத்தனை சிரமங்களுக்கிடையே சென்று எதைப் பார்க்கப்போகிறீர்கள்? 200 அடி தூரத்தில் இருந்து, இராமர் - பாபர் மசூதி தகராறில் இடிபட்ட கட்டட மிச்சங்களைப் பார்த்துவரலாம். அவ்வளவுதான்.
வேஸ்ட். அதனால் செல்லாதீர்கள். இருந்த இடத்தில் (அதாவது வாரணாசியில்) இருந்தே ராமரை நினைத்துக்கொள்ளுங்கள் போதும்!
URL for the Article on Ayodhya: http://en.wikipedia.org/wiki/Ayodhya
அதெல்லாம் முடியாது சென்று வருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக அயோத்தியாவில் உள்ள நகரத்தார் விடுதியின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். தாராளமாகச் சென்று, தங்கி, அதிகாலையில் எழுந்து திவ்யமாக ராமஜென்ம பூமியைத் தரிசித்து விட்டு வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!!!
Nattukkottai Nagara Satram
Natkot Sri Ram Mandhir
Baboo Bazar
Ayodhya - 224123
Faizabad
Uttar Pradesh
Phone No: 05278 - 232703
-------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?
காயாவில் உள்ள ஃபல்கு நதி!
வாரணாசியில் இருந்து கயா 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்துக்கள், பெளத்தர்கள் என்று இரு சாராருக்குமே கயா ஒரு புனித ஸ்தலம். கயாவைப் பற்றிய விவரங்களுக்கான சுட்டியைக் கீழே படித்துப் பாருங்கள்.
URL for the Article on Gaya: http://en.wikipedia.org/wiki/Gaya,_India
கயாவில் நகரத்தார் விடுதி உள்ளது. அதன் முகவரி:
Nattukkottai Nagara Satram,
No.171, Chand Chowra
Gaya - 823 001
Bihar State
Telephone No: 0632 - 2226480
-----------------------------------------------------------------------------------------------------------------அடுத்து?
மூன்று நதிகள் சங்கமிக்கும் அலாகாபாத்!
வாரணாசியில் இருந்து அலாகாபாத் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 3 மணி நேரப் பயணம்.
அலகாபாத் முப்புறமும் யமுனை, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிகளால் சூழப்பெற்ற ஊர். எங்கே சென்றாலும் வழியில் பிரமாண்டமான, நீண்ட பாலங்கள் உள்ளன.
யமுனை, கங்கை மற்றும் ஊற்றாக உள்ள சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும், அதாவது ஒன்றுடன் ஒன்று சேரும், கலக்கும் இடத்திற்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர். படகில் அழைத்துச் செல்வார்கள். சுற்றிலும் பார்ப்பதற்கு நம்மியமாக இருக்கிறது. அவசியம் சென்று வாருங்கள்.
அலாகாபாத்தில் உள்ள மற்றுமொரு முக்கியமான இடம். இரண்டு முன்னாள் பிரதமர்கள் பிறந்த மாளிகையான ஆனந்தபவனம். ஆமாம் திரு.ஜவஹர்லால் நேரு மற்றும் அவருடைய அன்பு மகள் திருமதி.இந்திரா பிரியதர்சினி ஆகியோர் பிறந்த மாளிகை அது. இப்போது அந்த மாளிகை நாட்டிற்கு அர்ப்பணிக்கபெற்று, தேசிய வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.
பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது. அதையும் பார்த்து வாருங்கள்
Bharadwaja was one of the greatest Hindu sages (Maharshis) descendant of rishi Angirasa, whose accomplishments are detailed in the Puranas. He was one of the Saptarshis (Seven Great Sages Rishi) in the present Manvantara; with others being Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamadagni, Kashyapa. Bhardwaj Rishi was father of Guru Dronacharya and grandfather of Ashwatthama. Bhardwaj Maharishi, a sage of the Vedic period, is renowned for his thirst for knowledge. He attained extraordinary scholarship and the power of meditation.
அனுமார் கோவில் ஒன்று உள்ளது. சிறப்பானது. அதையும் பார்த்து வாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Allahabad
அலாகாபாத்தில் நகரத்தார் விடுதி உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. 200 பேர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதியானது. 3 வேளை உணவு வசதியும் அங்கே உள்ளது. ஆனால் முன் கூட்டியே வருகையைத் தொலைபேசியில் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்! அதுதான் நல்லது.அதன் முகவரி:
Nattukkottai Nagara Satram,
149, Mori, Daraganj,
Allahabad - 211 006 (U.P)
Telephone No: 0532 - 2501275
----------------------------------------------------------------------வாரணாசியில் இருந்து இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வர வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கும். 4 பேர்கள் வரை செல்வதென்றால் இண்டிகா கார் கிடைக்கும், 8 பேர்கள்வரை சென்று திரும்புவதென்றால் டாடா சுமோ வண்டி கிடைக்கும். அதற்கும் மேலான எண்ணிக்கை என்றால் அவற்றிற்குத் தகுந்தார்ப் போல பெரிய வேன்கள் மற்றும் பேருந்துகள் கிடைக்கும்.
வாரணாசி நகர விடுதியில் சொன்னால் ஏற்பாடு செய்து தருவார்கள்.
செலவு: வாரணாசியில் இருந்து அலாகாபாத்திற்கு நாங்கள் 7 பேர்கள் சென்று வந்தோம், தலைக்கு 300 ரூபாய்கள் ஆயிற்று
வாரணாசியை முழுமையாக சுற்றிக் காட்டவும் வாகனங்கள் கிடைக்கும்
உங்களுக்காக Travels நடத்தும் அன்பரின் முகவரியைக் கொடுத்துள்ளேன். அவர் பெயர் ‘பிமல்’. தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆகவே பிரச்சினை இல்லை. அவர் மூலமாகவும் நீங்கள் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசியில் வாங்க வேண்டிய சாமான்கள்
1. ருத்திராட்சம்
ஐந்துமுக, ஆறுமுக உத்திராட்சங்கள் நிறையக் கிடைக்கும். ஒரு உத்திராட்சத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே!
2. மாலையாக அணிந்து கொள்ள 108 சிறு உத்திராட்சங்கள். ஒரு செட்டின் விலை ரூபாய் நூறு மட்டுமே. பெரிய சைஸ் உத்திராட்சமும் கிடைக்கும் ஒரு செட்டின் விலை இருநூறு ரூபாய். அவற்றை வாங்கிக் கொண்டு வந்து செப்புக்கம்பி அல்லது வெள்ளிக் கம்பியில் கட்டி, கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
3. காசித் திருநீறு & குங்குமம். சின்னச் சின்ன கவர்களில் அழகாகக் கிடைக்கின்றது. 10 சின்ன பாக்கெட் அடங்கிய செட்டின் விலை பத்து ரூபாய்கள் மட்டுமே!
4. கையில் அணியும் காசிக்கயிறு. 50 கயிறுகள் கொண்ட செட்டின் விலை பதினைந்து ரூபாய்கள் மட்டுமே
5. காசித் தீர்த்தம். சிறு செம்புகளில் அடைக்கப்பெற்ற கங்கை நீர். பல அளவுகளில் கிடைக்கின்றது. விலை 15ல் துவங்கி 120 வரை செல்கிறது
விருப்பம்போல் வாங்கிக் கொள்ளலாம்.
மேற்கூறிய அனைத்தும் நகரத்தார் விடுதியில் கிடைக்கும்.
அங்கேதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெருக்களில் பல கடைகள் உள்ளன. பார்த்து, பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம்.
பிறகு பித்தளையில் அன்னபூரணி பதுமைகள், பசுமாடு-கன்றுக்குட்டி பதுமைகள், காப்பர் தட்டுக்கள், சின்னச் செம்புகள், சின்னச் சின்ன விளக்குகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும். மனதை அள்ளும் விதமாக இருக்கும் பார்த்து வாங்கி வரலாம். நான் வாங்கிய இடம் ஒரு மொத்த வியாபார ஸ்தலம். விடுதியின் அருகில் உள்ளது. அதன் முகவரியைக் கொடுத்துள்ளேன்.
தேனில் ஊறிய நெல்லிக்கனி கிடைக்கும். சுவையாக இருக்கும் ஒரு கிலோ வாங்கினால் 20 முதல் 22 கனிகள் இருக்கும் விலை கிலோ 100 ரூபாய்.
அதை விற்கும் கடைகளில் ஒன்றின் முகவரியைக் கீழே தந்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
வாராண்சியில் தடுக்கி விழுந்தால் சேலைகள், சுடிதார்கள் விற்கும் கடைகள்தான். விடுதிக்கு அருகில் உள்ள கடை ஒன்றின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன்
--------------------------------------------------------------------------------
மேற்கூரிய ஐயிட்டங்கள் அனைத்தையுமே அல்லது உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொண்டு வந்தால், வாராணசிக்குச் சென்று திரும்பிவுடன், உங்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொடுப்பதற்குச் செளகரியமாக இருக்கும்.
அவர்கள் மகிழ்வார்கள். கொடுப்பதால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.
கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்
---------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்
காசி பயணக்கட்டுரை நிறைவுறுகிறது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!