மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.12

Astrology எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?


அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்!
-- கவியரசர் கண்ணதாசன்!
============================================
Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

Doubts: கேள்வி பதில் பகுதி 20

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது!

Question &  answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.81

அருள் முருகன்,
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில்
ஜோதிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்
(ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு, என்னை விரிவாகப் பதில் எழுத வைத்தமைக்கு, அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

கேள்வி:
Sir, why so many conflicts and changes in your opinion within two years?
In the beggining stages of lessons, you told that thirukanitha panchanga is the right one by citing an example of horoscope of a child born in chennai. Later on you said to cast horoscopes by both the methods, and take vakiya panchanga if the lagna changes or else take thirukanitha. To my surprise in an answer given three days ago, you have told that for casting horoscopes vaakiya is only right one, thirukanitha is suitable only for mathematical calculations, why so many contradictions? As I am going to seriously pursue diploma course offered by Sastra University, Tanjore in Astrology I am really confused and surprised by the statements. My intention is not to blame you or find fault. But I tell openly what I feel, as in my horoscope Guru is in dhanus lagna. ( 15.07.1984, 5:20 pm, madurai).

நீங்கள் சொல்வது உண்மை. துவக்க காலங்களில், வகுப்பறையில், மாணவக் கண்மணிகளுக்கு, திருக்கணிதத்தைப் பயன்படுத்த அறிவுரை சொல்லியிருக்கிறேன். பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை
அதிகமாகி, உள்ளே நுழைந்தவர்களில் பலபேர்கள், தங்கள் வீடுகளில்
தங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்திற்கும்,
கணினியில் கணிக்கும் ஜாதகத்திற்கும் லக்கினம் வித்தியாசமாக
இருக்கிறதே என்று கூறிய போது, நிலைமையை உணர்ந்தேன்.

அதாவது 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற ஜாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.
அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) லக்கினம் வித்தியாசப்படும்

யார் அந்த சிலர்?

ஒரு லக்கினத்திற்கு 30 பாகைகள் - காலம் சுமார் 120 நிமிடங்கள் - 2.25 நட்சத்திரங்கள் - 9 நட்சத்திரப்பாகைகள்.

லக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த லக்கினத்தின் முடிவில் பிறக்கும் ஜாதகக் காரர்களுக்கு, லக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக லக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம லக்கினம் என்று மாறிக்காட்சியளிக்கும்.

அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 விநாடிகள். மணியில் சொல்வதென்றால் 6 நிமிடமும் 28 விநாடிகளும் ஆகும். நட்சத்திரத்தின் அளவு 13.3 பாகைகள் அதை 4ஆல் வகுத்தால் ஒரு பாகையின் அளவு 3.33 பாகைகள். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள்.

அதனால் கடைசிப் பாதத்தின் பின் பகுதியில் (அதாவது காலசந்தியில்) பிறந்த ஜாதகனுக்கு, இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் மேலே கூறியுள்ளபடி லக்கினம் மாறியிருக்கும். இது எல்லாக் கால சந்திப் பிறப்புக்களுக்கும் உள்ள பிரச்சினை!

அதற்கு என்ன தீர்வு?

காலசந்திப்புப் பிறப்புக்களுக்கு, இரண்டு லக்கினங்களின் குணங்களும் இருக்கும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள மக்கள் இரண்டு மாநில மொழிகளையும் சரளமாகப் பேசுவார்கள். இரண்டு மாநிலக் கலாச்சாரங்களும் அவர்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

அதனால் காலசந்திப்பில் பிறந்தவர்கள், அந்த இரண்டில் எந்த முறையை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். பெரிய வித்தியாசம் இருக்காது.
-------------------------------------------------------------------
சரி, எந்தமுறை சரியானது?

அது பற்றி பெரிய யுத்தம் நடத்தும் அளவிற்கு இரண்டு முறைகளுக்குமே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் திருக்கணிதத்திற்கும் (Lahiri Ayanamsa), வாக்கியத்திற்கும் (Raman's Ayanamsa) உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்

Lahiri Ayanamsa.its value is 23 degrees, 51 minutes, 10 seconds.
Raman's Ayanamsa its value is 22 degrees, 24 minutes, 44 seconds.
Diffrence 1 degree, 27 minutes

இந்த வித்தியாசத்தின் காரணமாக நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பதிப்பாகம் வித்தியாசம் இருக்கும். ஒரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் கடைசி பாதத்தில் பிறந்த ஜாதகனின் நட்சத்திரப்பாதம் (உதாரணத்திற்கு) லஹிரியில் சிம்ம லக்கினம் (உத்திரம் ஒன்றாம் பாதம்) என்றும், ராமன் முறையில் கன்னி லக்கினம் (உத்திரம் 2ம் பாதமாகவும்) என்றும் இருக்கும்.

ஜாதகன் குழம்பிப்போவான். தான் சிம்ம லக்கின ஜாதகனா? அல்லது கன்னி லக்கின ஜாதகனா என்று குழம்பிப்போவான். கால சந்திப்பில் (அதாவது லக்கின சந்திப்பில்) பிறந்த ஜாதகர்களுக்கு இந்தக் குழப்பம் இருக்கும்.

அதேபோல ராசி சந்திப்பில் உள்ள, புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் இடம் மாறி (ராசி மாறி) உட்கார்ந்து நம் கழுத்தை அறுக்கும்!

என்னுடைய ஜாதகத்தில் அந்தக் குழப்பம் உண்டு. நான் காலசந்திப்பில் பிறந்தவன். லஹிரி (திருக்கணித) முறையில் என்னுடைய லக்கினம் கடகம் என்று வரும். வாக்கிய முறையில் (ராமன் அயனாம்சப்படி) சிம்மம் என்று வரும்.

என் அன்னைவழிப் பாட்டனார், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்னும் பிரபல ஜோதிடரிடம், எங்கள் ஜாதகத்தை எல்லாம் கணித்து எழுதிவைத்துள்ளார். அதில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பெங்களூர் வெங்கட்ராமன் (அவர்தான் இந்த ராமன் அயனாம்சத்தின் நந்தை என்று பகழப்படுபவர். இந்தியாவின் முதல் நிலை ஜோதிடராகத் திகழ்ந்தவர்) அவர்களுக்கு என்னுடைய பிறப்பு விவரங்களை அனுப்பி ஜாதகத்தை எழுதி வாங்கினேன்.(பணம் அனுப்பித்தான் சுவாமி)

அதுவும் என்னுடைய பாட்டனார் எழுதி வைத்துள்ள ஜாதகமும் (மிகத் துள்ளியமாகச்) சரியாக இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அவர் இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கிறார் என்று! அதனால் முழு நம்பிக்கையுடன் நானும் அதைத்தான் உபயோகித்து வருகிறேன். எனக்கு என்னுடைய லக்கினத்தின்படி பலன்களும் சரியாக உள்ளன! (அதானால் அந்த நம்பிக்கை பலமடங்கு கூடிவிட்டது)

என்னைப் பொறுத்தவரை, அவர்தான் அற்புதமான ஜோதிட ஞானம் உடைவராகத் திகழ்ந்தவர். விற்பன்னர். ஜோதிடத்தின் காரகராகப் போற்றப்பெற்றவர் (authority of vedic astrology). எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை ஜோதிடர்களும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கின்றார்கள்.

இந்தக் கணினியில் ஜோதிடம் கணிக்கும் முறைகள் எல்லாம் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நமது பிரதேசத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

ஆகவே அதற்கு முன்பாகப் (அதாவது 1990ற்கு முன்பாகப்) பிறந்தவர்கள் அனைவருடைய ஜாதகங்களும் வாக்கிய முறையிலேயே கணிக்கப் பெற்றதாக இருக்கும்.

கணினி ஜாதகத்தில் உள்ள option தெரியாமல், திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, பல இளைஞர்கள் என்னிடம் லக்கினம் மற்றும் கிரக அமைப்புக்கள், தங்கள் பெற்றோர்கள் கணித்து அல்லது எழுதி வைத்துள்ளதுபோல இல்லையே எனும்போது, நான் அவர்களுக்கு, உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ளதையே உபயோகியுங்கள் என்று சொல்வேன்.

ஆனால், தற்சமயம் உள்ள கணினி மென்பொருட்களில், வாக்கிய முறைகளிலும் கணிக்கும் வசதி வந்துவிட்டதால், அனைவருக்கும் அதன்படியே கணிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். திருக்கணிதத்தை மறந்துவிட்டு, நீங்கள் அனைவரும், வாக்கிய முறையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்து/எழுதி வைத்துக் கொள்வது நல்லது!

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் ஆறரை நிமிடங்கள் மட்டுமே எனும்போதும், நமது வீடுகளில் அந்தக் காலத்தில் இருந்த கடிகாரங்களை நம்பி அவர்கள் பிறந்த நேரத்தைக் குறித்துவைத்தார்கள் - அது 5 நிமிடங்கள் முன் பின்னாக நேரத்தைக் காட்டவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லாததாலும், நான் அலட்டிக்கொள்ளாமல், இரண்டு முறைகளுக்குமே கொடிகாட்டி வருகிறேன்.

ஆகவே பழைய பிறப்புக்களுக்கு, அவரவர் விருப்பப்படி எதை வேண்டு மென்றாலும் உபயோகியுங்கள். சராசரியாக 9 பேர்களில் ஒருவர்தான் காலசந்திப்பில் பிறந்திருப்பார். அவருக்கு மட்டும்
இரண்டு மனைவிகள். அதாவது இரண்டு லக்கினங்கள்:-))))))
-----------------------------------------------------------
சில இடங்களில் வேஷ்டியுடன் செல்வது உபயோகமாக இருக்கும். சில இடங்களில் கால்சட்டையுடன் (pant)செல்வது உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு சமயம் வேஷ்டி அணிந்து கொள்கிறீர்கள், ஒரு சமயம் கால் சட்டை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? ஒரே வரியில், என் வசதிக்காக அணிந்து கொள்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். தேவகோட்டையில் வேஷ்டிதான் செளகரியமான ஆடை. கோவையில் கால்சட்டைதான் செளகரியமான ஆடை.

இந்த இரட்டைமுறை கணிக்கும் வசதி ஆரம்பகால மென்பொருட்களில் இல்லாததால், நான் கணினி ஜாதகங்களுக்கு திருக்கணிதத்தை சிபாரிசு செய்தேன். இப்போது வந்துவிட்டதால், குழப்பம் இல்லாமல் இருக்க வாக்கியமுறையையைச் சிபாரிசு செய்கிறேன்.

விளக்கம் போதுமா அன்பரே?
----------------------------------------------------------------------
உபரித் தகவல்கள்:

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது.

நமது ஜோதிடம் வேதகாலத்தில் உருவானது. அதை Indian Vedic Astrology என்பார்கள். நமது ஜோதிடமுறை சந்திரனையும், அதன் சுற்றுப்பாதையில் உள்ள நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நமது முறைக்கு Sidereal astrology என்று பெயர்.

மேலை நாட்டவர்களின் ஜோதிடம் சூரியனின் எழுச்சியை அடைப்படையாகக் கொண்டது. அதை அவர்கள் Sun Signs என்பார்கள். அவர்களுடைய முறைக்கு Tropical astrology என்று பெயர்.

The difference between the Tropical ( Western ) & The Sidereal ( Indian ) Zodiacs is round about 23 degrees this year. Sidereal Astrology is based on the immovable Zodiac- the Sidereal Zodiac - and Western Tropical Astrology is based on the Tropical Zodiac which is movable.

Jyotish (Sanskrit meaning “Science of Light”), is based on the Sidereal, or Nirayana, zodiac, which is fixed in relation to the stars, as opposed to the symbolic Tropical, or Sayana, zodiac, which is based on the Vernal, or Spring, Equinox. The difference between the two zodiacs lies in the ayanamsa, the difference in degrees and minutes between 0° Aries in the sidereal zodiac, and the Vernal Equinox. Since the earth's rotational axis moves slowly in a circular, or “precessional,” motion, the Vernal Equinox, the point where the Sun crosses the celestial equator each year, moving from south declination to north declination, never quite returns to its starting place.
---------------------------------------------------------------------------------------------

Unlike Western astrology that is based on the Tropical zodiac, the Vedic system of astrology (jyotish) employs the Sidereal (or true) position of the planets. The difference between the two, due to the precession of equinox, is called the "Ayanamsa".

However the apparent position of the planets (including Sun) in relation to the constellations is subject to this precession of the equinox which, basically, is the earth's slight backward movement through the constellations (aprox. 50.25 seconds per year) as it wobbles on it's axis.

There are several different Ayanamsa in use today but the one most widely used by traditional astrologers is the Lahiri ayanamsa which is sanctioned by the Indian government. This puts the degree of precession for (Oct) 2002 at approximately 23:53:26.

இந்த லஹிரி அயனாம்சம் என்பதைத்தான் நாம் திருக்கணிதம் என்கிறோம். கணினிகளில் இதன் முறைப்படி கணிப்பதற்கு option கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கியம் என்பது இதற்கெல்லாம் முற்பட்டது. காலம் காலமாக நாம் பாவிப்பது (உபயோகிப்பது)
---------------------------------------------------------------------------------
URL for ayanamsa calculation
---------------------------------------------------------------------
கணினி மென் பொருட்களில் இரண்டு முறைகளுக்கும் உள்ள வசதியைக் (option) காட்டும் படங்கள் கீழே உள்ளன. படஙகளின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


1. லஹரி முறை (அதாவது திருக்கணித முறை)

2. ராமன் அயனாம்ச முறை (வாக்கிய முறை)

3. அயனாம்சத்தைக் கண்க்கிட உதவும் தளம்

4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி மற்றும் வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் கிரக பாதாச்சாரங்கள் (லக்கினத்தைக் கவனியுங்கள்) இரண்டு முறைகளுக்கும் உள்ள , கிரக பாகைகளைக் கவனியுங்கள்

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி:

Failure seldom stops you, What stops you is the fear of failure.
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!


30.5.12

Astrology யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?



++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?

Doubts: கேள்வி பதில் பகுதி 19

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பத்தொன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.76
செந்தில் குமார்

Respected sir,
Sir I having one doubt kindly clear my doubt: planets : 27 Avasthas
In a day each planet does 27 avasthas. But i want to know how it can be calculated
like waking, seeing sleeping But i know it is calculated by using agasu something like that.
If you answer this question it would be great . I will we very happy
I am waiting your reply
Regards
Senthil.

நாம் இன்னும் ப்ளஸ் டூ வையே தாண்டவில்லை. அதற்குள் நீங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடத்தைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?

கிரக அவஸ்தை (condition of Planets) என்பது, கிரக வக்கிரம், கிரக யுத்தம் போன்று ஒரு தனிப்பட்ட கிரக நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் பலன்களையும் குறிக்கக்கூடிய பாடம்!.

உதாரணத்திற்கு Shayanadi Avasthasல் இருக்கும் கேது, சிலராசிகளில் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும். சில ராசிகளில், நோய் நொடிகளால் ஜாதகனை இருப்புச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துவிடும்.
அதைத் துள்ளியமாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் அந்த கிரக அவஸ்தைகள் பயன்படும்.

1.Jagradadi Avasthas, 2 Baladi Avasthas, 3 Lajjitadi Avasthas, 4 Deeptadi Avasthas, 5 Shayanadi Avasthas என்று கிரக அவஸ்தைகள் பலவகைப்படும். அதிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் படித்தால் தலை சுற்றல், வாந்தி, பேதி எல்லாம் வரும் (அதாவது புதிதாகப் படிப்பவர்களுக்கு)

சொல்லப்போனால், அது மேலான மேல் நிலைப் பாடம். 40 அல்லது 50 பக்கங்களுக்கு மேல் அதைப் பற்றி எழுதலாம். இப்போது நேரமில்லை. அதோடு நமது லெவலுக்கு அது தேவையுமில்லை. ஆகவே பொறுத்திருங்கள். பின்னால் சமயம் வரும்போது அது பற்றி எழுதுகிறேன்.
-------------------------------------------
email.No.77
கார்மேக ராஜா

ஐயா!
கேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால்:

1.கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா! கேந்திராதிபத்திய தோஷம் எத்தனையாண்டுகள் நீடிக்கும்?

ஒரு நன்மையளிக்கும் கிரகம், கேந்திர அதிபதியாகிவிடும் நிலையில், நன்மையளிக்கும் கிரகமாக இல்லாமல் தன் நிலை மாறிவிடுவார். சுக்கிரன், குரு, புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு இத்தன்மை
உண்டு. ஒரு சுபக்கிரகம் இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியாகும் நிலையில் மிகவும் தீயவர் ஆகிவிடுவார். அதைத்தான் கேந்திராதிபத்திய தோஷம் என்பார்கள். தோஷத்திற்கு உள்ளாகும் கிரகத்தின் தசா/புத்தி காலம்வரை அந்த தோஷம் நீடிக்கும்!
When a naturally benefic planet becomes the lord of a Kendra, it does not remain benefic but turns a malefic. Venus, Jupiter, mercury and waxing moon get afflicted with this Dosha in that order. When a naturally benefic planet becomes the lord of a two Kendras, it turns out to be very malefic and gets afflicted with what is known as Kendra Adhipati Dosha. If this planet is lord of the ascendant as well it will be rendered neutral and will not be a malefic as ascendant lord can never be malefic for the native. However its overall effects will depend upon its position in the horoscope.A natural benefic becoming the lord of two Kendras is possible only in four ascendants; Gemini, Virgo, Sagittarius and Pisces. In case Gemini and Virgo, mercury, the ascendant lord turns out to be a neutral while Jupiter becomes a malefic planet. In case of Sagittarius and Pisces, Jupiter becomes neutral and mercury is a malefic.However Kendra Adhipati Dosha is neutralized if the planet afflicted with it is posited in the Kendra of which it is the lord. For example, if Jupiter in Gemini is posited in the 7th house, it becomes free from this Dosha.

2.மற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்லக் கேட்கிறேன். நிஜமா ஐயா?

கணவனால் மனைவிக்கு (வீட்டுக்குப்) பலன் இருக்காது. எதிர்த்த வீட்டுக்காரிக்குத்தான் பலன் என்று சொல்வதைப்போல உங்களது கூற்று. First benefit will come from the placement of a planet to the house where he is placed.

யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா? நீங்களே சொல்லுங்கள்:-))))
------------------------------------------------
email.No.78
சந்திரசேகரம் சஞ்சீவ்காந்த்!

vanakkam sir
ragu, kethu pontra shadowy planets i ean mattra kirakankaludan serthu mukkiyathuvam tarukirarkal? athu eppothu nadaimurayil vantathu? ean avatrayum sertharkal? please itharku sariyana pathilai sollavum. what about ragu,ketu? why astrologists give them important?

நவக்கிரகங்கள் என்பது காலம் காலமாக உள்ளது ராசா! ராகு & கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள் ஆயிற்றே - அவற்றை எப்படிச் சேர்க்கலாம்? ஏன் சேர்த்தார்கள்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்வது? அதுவும் நீங்கள் கேட்கும் விதத்தில் சரியாக எப்படிப் பதில் சொல்வது?

நல்ல வேளை ஜோதிடத்தை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கினார்கள்? உருவாக்குவதற்கு அவர்களுக்கு என்னென்ன தகுதி இருந்தது? அதைக் காலம் காலமாக மக்கள் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் கேட்காமல் விட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

உச்ச நீதி மன்றத்தில் ஒரு ரிட் போட்டால், சரியான பதில் கிடைக்கலாம்! ஜோதிடத்தில் பாண்டித்யம் உள்ளவர்கள் யாராவது உதவிக்கு வந்து பதில் சொல்லலாம். என் அறிவிற்குத் தெரியவில்லை ராசா!:-)))))
------------------------------------------------------------
email.No.79
R.பிரபு

Dear Sir,

Doubt 1: For example, for Thanusu Lagna mars is paavathi pathi for 5th and 12th house. Sani is paavathi pathi for 2nd and 3rd house. If they are jointly in 8th place, can we say it is Vibareetha Raja Yogam? Both the planets having one good house and another bad house. Sorry sir. In my previous email it was written as Neesa Banga Raja Yogam.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் (Vibareetha Raja Yogam) உண்டாகும். நீங்கள் சொல்லும் அமைப்பிற்கு விபரீத ராஜ யோகம் உண்டு. அதற்கான பலன்களை அவர்கள் தங்கள் தசா/புத்திகளில் தருவார்கள்!

Doubt 2: If the paavathi pathis of 9th and 10th place are jointly in 6,8 or 12 th place, is it Tharma Karmathi Pathi Yogam?


ஒன்பதாம் அதிபதி பத்தாம் வீட்டிலும், பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலும் மாறி அமர்வதுதான் முதல் நிலை தர்மகர்மாதிபதி யோகம்! மற்ற அமைப்பெல்லாம் (அதாவது அந்த அதிபதிகள் இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் வேறு வீடுகளில் அமர்ந்திருப்பது) அதற்கு அடுத்த நிலைதான். 6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் அந்த யோகம் கடைசி நிலைக்கு வந்துவிடும். அதிகப் பயன் இல்லை. First Prize, Second Prize, Third Prize, Consolation Prize என்று பரிசுகளில் பலநிலைகள் உள்ளன இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual exchange (பரிவர்த்தனை), or mutual aspect, that planetary combination is called as Dharma Karma Adhipati Yoga.
----------------------------------------------
email.No.80
ஆதிராஜ்

வணக்கம் அய்யா,

செவ்வாய் பற்றி விளக்கத்தில் ஒரு சந்தேகம் அய்யா, செவ்வாய் ஒரு லக்னத்திற்கு யோககாரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்னதுக்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில்)பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு பலன் தரும் .அது 2 ம் வீடாக இருப்பின் அந்த ஜாதகன் செல்வம் ஈட்டுவதில் செவ்வாய் சிறப்பு செய்வாரா?
நன்றி வணக்கம்...

குழப்புகிறீர்களே சுவாமி! ஒரு லக்கினம் என்று சொல்லி விடுகதை போடாமல், என்ன லக்கினம் என்று சொல்லுங்கள். அத்துடன் செவ்வாய் எங்கே இருந்து உச்ச வீட்டைப் பார்க்கிறார் என்பதையும் சொல்லுங்கள்.

எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள். அன்பு மிகுதியால், உங்கள் தோளில் சாய்ந்துகொள்ளும் மனைவியும், உங்களைக் கட்டித் தழுவி, உங்கள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சும் குழந்தையும் அரிய செல்வங்கள்தான். அது கிடைக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்! அவைதான் உண்மையான செல்வம்! உண்மையான சொத்து!

பணம் வருவது மட்டும்தான் யோகமா? அதற்கு யோககாரனைப் பார்க்காமல், 2ஆம் மற்றும் 11ஆம் அதிபதிகளையும், அந்த வீடுகளையும் பாருங்கள்..

அத்தோடு ஈட்டும் செல்வத்தை அனுபவிப்பதற்கு உரிய கிரகங்கள் ஜாதகத்தில் ஒழுங்காக இருக்கிறார்களா என்றும் பாருங்கள்.(சம்பாதித்த பணத்தைக் கொஞ்சமேனும் நாமும் அனுபவிக்காமல் முழுதாக வைத்துவிட்டு, வைகுண்டம் போவதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள்?):-))))))
---------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி:
Failure is the opportunity to begin again, more intelligently.
 ------------------------------------------------------------------------

29.5.12

Astrology நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 18

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினெட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.71
வெண்மதி, மலேசியா
1
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் கேள்வி பதில் வகுப்புக்கு நன்றி.
என்னுடைய கேள்விகளுக்கும் பதில் தர வேண்டுகிறேன்.
என்னுடைய கேள்விகள் இதோ.

1. குரு 8‍‍ம் இடத்தில் (மறைவிடம்)இருந்து அந்த வீட்டின் பரல்களும் மிக குறைவாக (23) இருக்கின்றபோது குருவின் நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள குருவை வணங்குவதா அல்லது சிவனின் அம்சமாக(குருவான நிலை) உள்ள தெட்சிணாமூர்த்தியை வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு
விளக்கமாக கூறங்கள்.

தெட்சிணாமூர்த்தி என்பது சிவனின் வடிவம்தான். எந்தவடிவத்தை வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்! (Dakshinamurthy is one form of Lord Shiva, where Lord Shiva is the Guru or teacher of all types of knowledge.)

2. இதேபோல் சனிபகவான் மறைவிடத்திலோ அல்லது வக்கிரமாகி இருந்தாலோ சனிபகவானின் (சுய பரல்கள் 2) நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள சனிபகவானை வணங்குவதா அல்லது ஆஞ்சனேயரை
வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு விளக்கமாக கூறங்கள்.

சனிக்கும், ஆஞ்சனேயருக்கும் புராணங்களின்படி ஒரு தொடர்பு உண்டு. அதை எழுதினால், இன்றைய இளைஞர்கள், நம்பாமல், அதற்கும் சான்று கேட்பார்கள். எல்லாவற்றிற்குமே நம்பிக்கைதான் அடிப்படை. ஆகவே சனியின் உபாதைகளில் இருந்து மீள்வதற்கு, ஆஞ்சனேயர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு, அவரையே வணங்குங்கள். குறிப்பாக ஏழைரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி ஆட்டிவைக்கும்போது, ஆஞ்சனேயரை வழிபடலாம்! மற்ற காலங்களில் சனீஷ்வரனை வழிபடலாம்.

3. விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டதிபதியும் கூட. செவ்வாய் கடகத்தில் நீச்சமாகி இருக்கின்றபோது செவ்வாய் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா? லக்கினாதிபதியின் அருளைப்பெற வழி (பரிகாரம்) உண்டா? விளக்க வேண்டுகிறேன்.

நீசமானவரிடமிருந்து எப்படி நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்? அதற்கு ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்டநீடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலையை விடுங்கள். செவ்வாயின் பாதிப்புக்களில் இருந்து விடுபட
குமரக்கடவுளை வழிபடுங்கள் (Mars is ruled by Muruga also called Subramanya or Karthikeya. Propitiation of Muruga controls the bad results from Mars)

4. 9 கிரகங்களின் ஓரப்பார்வை எவை? விளக்க வேண்டுகிறேன் (நேர்ப்பார்வை 7ம் பார்வை என்பதை அறிவேன்)

ஓரப்பார்வை என்பது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. அதற்கு உண்மையான பெயர் விஷேசப் பார்வை (special aspect) குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டுமே விஷேசப் பார்வைகள் உண்டு.
குருவிற்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 5ஆம் இடம், 9ஆம் இடம். செவ்வாய்க்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 4ஆம் இடம், 8ஆம் இடம். சனிக்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 3ஆம் இடம், 10ஆம் இடம்

5. ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

விளக்கங்கள் போதுமா சகோதரி?
--------------------------------------------------------
email.72
ரமேஷ் வேலுச்சாமி

Sir,
This Question is Regarding Parents
9th house & 10 th house are in Parivartna [10 th lord exchange in exaltion [sukran - kanni & Budhan - Thulam]]. and in thasmsa three planets are utcham[i,e sevvai, bhudan, ketu ] and two planets are in their own house [i,e guru & sani]. chandran in thasmsa lagna and sukran in 2nd house]. My question is :
i had gone through horoscope of my friend's daughter. before her birth their parents are not well settled after her birth they are continously in positive node. is it because of her chart. because you had told that a child horoscope will work after 12 years but the child is only 5 yrs old.

பொதுவாக 12 வயதுவரை குழந்தையின் ஜாதகம் பெற்றோர்களை வைத்துத்தான். அக்குழந்தை செல்வச் செழிப்புடன் வளர வேண்டும் என்றால், அந்தக் குழந்தையை வைத்துப் பெற்றோர்களுக்கு அதற்குத் தேவையான பணம் வரும்!
------------------------------------------------------
email.73
சேகர் வெங்கடேசன்

அன்புள்ள அய்யா,

கேள்வி பதில் பகுதி மிகவும் சுவை. அதிலும் உங்கள் பதில்கள் சில கொஞ்சுகிறது. சிலவற்றில் உரிமையுடன் கண்டிப்பும் தெரிகிறது. அதுதான் சிறப்பு என்று நினைக்கின்றேன். என் சந்தேகங்கள்.

1 அயனாம்சம் சித்ர பக்க்ஷ (365 .25 days ) முறையில் துலாமில் சனி உச்சம். மகரத்தில் குரு நீச்சம். குறிப்பு. நீச்ச பங்க பலன்( பிறந்த போது கொடுக்கப்பட்ட ஜாதக கட்டம் இந்த முறை ) ராமன் (360 days ) முறையில் லக்னத்தில் சனி. மகரத்தில் குரு நீச்சம். நீச்ச பங்க பலன் என்று குறிப்பு.
சனி விசேஷ மூன்றாம் பார்வையால் நீச்ச பங்கமா என்பது என் சந்தேகம். பிறந்த தேதி 05-06-1985 நேரம் 18- 22 இடம் சென்னை] 2. இரு முறையிலும் அம்சங்கள் மாறுகிறது. எது சரி?

கால சந்திப்பில் பிறந்தவர்களுக்கு சமயத்தில் லக்கினமும் மாறும். ராசி சந்திப்பில் உள்ள கிரகங்களும் மாறும். நீங்கள் ராமன் அயனாம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்!

3. விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் எட்டில் தோஷமா? தோஷம் என்று குறிப்பு உள்ளது.

லக்கினாதிபதி எட்டில் இருப்பது ஜாதகனுக்கு நன்மையைச் செய்யாது. போராட்டம் மிகுந்த வாழ்க்கை. எதையும் போராடித்தான் பெற வேண்டும். விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. அதிபதி தனக்குத்தானே தோஷத்தைச் செய்துகொள்ள மாட்டான். அதனால் தோஷம் இல்லை!
--------------------------------------------------------------
email.74
சரவணகுமார்

அன்புள்ள ஐயா,

1.ஜாதகருக்கு, பஞ்சமகாயோகத்தில் எதாவது ஒரு யோகம் இருந்தால் அவயோகம் எல்லாம் தடைப்படுமா? உதாரணமாக, மாளவ்யா யோகம் உள்ளவர்களுக்கு மற்ற அவயோகம் எல்லாம் செயல் இழக்குமா?

ஒரு யோகத்தை வைத்து மற்ற அவயோகங்கள் எப்படி நீங்கும்? நல்ல யோகங்களும், அவயோகங்களும் கலந்ததுதான் ஜாதகம். ஒன்றிற்குப் பயந்து மற்றொன்று எப்படிப் போகும் அல்லது நீங்கும்? நாட்டாமையின் மகன் என்பதற்காக ஊரில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவானா என்ன?

2.யோகம் ராசியில் இருந்தால் பலன் உண்டா? அல்லது அம்சதில் சுக்ரன் நிலையும் பொறுத்து உண்டாகுமா?
அன்புடன்
சரவண்

அம்சத்தை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அம்சப் பாடத்தை மீண்டும் மீண்டும் புரிகின்றவரை படியுங்கள். சுக்கிரனைப் பொறுத்து என்றால் பிடிபடவிலை ஸ்வாமி. என்ன சொல்ல வருகிறீர்கள்? சுக்கிரன் என்ன நம் மாமானாரா? அவரைப் பொறுத்து எதற்காக எதன் நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
-------------------------------------------
email No.75
சுந்தரி பரமசிவம், சென்னை

சார் வணக்கம்,

1.நீங்க குழந்தை இருக்கா? இல்லையா? என்று தெரிந்து கொள்வதைப் பற்றி சொல்லிதந்திங்க அதுல 5ம் வீட்டின் அஷ்ட வ்ர்கம் அதில் இருக்கிற கிரகத்தின் சுய வர்கம்,5ம் வீட்டின் அதிபதி சொன்று அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்ட்வர்கம் அதன் சுய வர்க ப்ரல் ம்ற்றும் புத்திரகாரன் குரு அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்டவர்கம் அதன் சுயவர்கம் இந்த மூன்றையும் பார்த்துதான் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும்
என்று எடுத்துகாட்டுட‌ன் விளக்கினீர்கள் மேலும் குருவின் பார்வை 5ஆம் வீட்டில் விழுந்திருந்தாலும் நிச்சயமா இருக்கும் சொன்னீங்க ஆனால் எத்தனை குழந்தைங்க அதுல பொண்ணு பையன் எத்தனை என்று கண்டு
பிடிக்க கற்றுத் தாருங்கள். மேலும் 5ம்வீட்டை 9ம் வீட்டை பார்க்கணும் என்று ரொம்ப பேரு சொல்றங்க நீங்க இதைப்ப்ற்றி சொல்லி தாங்க எல்லோருக்கும் ரொம்ப பயனாக இருக்கும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் குழந்தைப்பேறு முக்கியமானது. ஒரு ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு எத்தனை குழந்தைகள் என்று பார்ப்பதைவிட அவர்களுக்கு ஒரு குழந்தையாவது பிறக்குமா? என்று பார்க்க வேண்டும்! அதைவிட முக்கியம் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் ஆகுமா? அல்லது ஆகாதா? என்று பார்க்கவேண்டும்!

சரி திருமணம் ஆகிவிட்டது. குழந்தைப்பேறு இருக்கிறதா? என்று தம்பதிகள் இருவரில் ஒருவர் ஜாதகத்தை மட்டும் பார்த்துப் பயன் இல்லை. அந்த பாக்கியம் இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது கூட்டு முயற்சி:-))))

1. குழந்தை உண்டு
2. குழந்தை இருக்காது
3. ஒரு குழந்தை மட்டுமே இருக்கும்
4. ஆண் விந்தில் உயிர் அணுக்கள் என்னிக்கையில் குறைபாடு
5. பெண்ணிற்குக் கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பையில் குறைபாடு
6. கர்ப்பச் சிதைவுகள். அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தன்மை
என்று தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயங்கள் ஐந்தாம் பாவத்திற்கு உண்டு!

சுருக்கமாகச் சொன்னால் பெண் என்பவள் நிலம். ஆண் என்பவன் விதை. இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும். இருந்தால்தான் செடி முளைக்கும். இல்லை என்றால் நர்சரியில் இருந்து செடியை வாங்கி வளர்க்க வேண்டியது தான். அதற்குப் பெயர் தத்து எடுத்தல், சுவீகாரம்    Progeny = descendants எனும் ஆங்கிலச் சொல், சந்ததி, வம்சம் என்று பொருள் படும்

இதை அறிந்துகொள்ள குறுக்கு வழி ஒன்றை முன்பு சொல்லிக்கொடுத்தேன். ஐந்தாம் வீடு.ஐந்தாம் வீட்டு அதிபதி அமர்ந்திருக்கும் வீடு, புத்திரகாரகன் குரு அமர்ந்திருக்கும் வீடு, ஆகிய 3 வீடுகளிலும் 28 பரல்களுக்குமேல் இருக்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகத்தில் சரியான அளவில் பரல்கள் இருந்து, இன்னொருவர் ஜாதகத்தில் பரல்கள் சரியாக இல்லை என்றால், குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இருவர் ஜாதகத்திலுமே பரல்கள் மிகக்குறைவாக இருந்தால், குழந்தை இருக்காது!

ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்திற்கான முக்கிய அமைப்புக்கள்:

1. நல்ல நிலையில் உள்ள குரு பகவான்
2. நல்ல நிலையில் உள்ள ஐந்தாம் வீடும், அதன் அதிபதியும்
3. Saptamsa chart
4. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு
5. நன்மை தரக்கூடிய நடப்பு தசை/புத்திகள்

மேலே உள்ளவற்றில் கோளாறு இருப்பின், அது குழந்தை பாக்கியத்திற்குத் தடையை உண்டாக்கும். பொதுவாக சனி, செவ்வாய் மற்றும் 6 & 8ஆம் இட அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும், தாமதங்கள் தடைகள் உண்டாகும். குரு பகவான் 6 அல்லது 8ல் போய் சுகமாக உட்கார்ந்து கொண்டுவிட்டாலும் சிக்கல்தான்!

குழந்தைகளின் எண்ணிக்கை சப்தாம்ச சக்கரத்தின் மூலம் தெரியும். அதை அலசுவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. (problems like miscarriages and difficulty in conception) அதைப் பிறகு நேரம் இருக்கும்போது அலசுவோம். இப்போது அஷ்டகவர்க்கத்தை மட்டும் உபயோகித்துப் பலனை அறிந்து கொள்ளுங்கள்.

2. ராகு, கேது குருவின் பார்வை பெற்றால் அவங்க எந்த வீட்டிலிருந்தாலும் அவங்க மகா தசையில சும்மாயிருப்பங்களா?
சுந்தரி

ராகு & கேது சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலும் அல்லது திரிகோணங்கள் அல்லது கேந்திரங்களில் இருந்தாலும் தங்களுடைய தசா/புத்திகளில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார்கள்.நீங்கள் சொல்வதுபோல சும்மா இருக்க மாட்டார்கள்:-))))
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
இன்றைய பொன்மொழி
Change yourself and your work will seem different
வாழ்க வளமுடன்!


28.5.12

Astrology யாருடைய ஆதிக்கம் செல்லும்?


படகு கவிழாது. ஆசாமிக்கு ஆயுள்காரகன் உச்சமாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யாருடைய ஆதிக்கம் செல்லும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 17

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினேழு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.67
முருகன் அடிமை சரவணன்

மரியாதைக்குரிய வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
இரண்டு சந்தேகங்கள். கேட்கலாமா?

1.அதாவது,என் ஜாதகத்தில்,மீன லக்னம் நான்கில் செவ்வாய் ஐந்தில் சூரியன் ராகு ஆறில் புதன்ஏழில் குரு சுக்கிரன் சனி பதினொன்றில் சந்திரன் கேது சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருந்தால் சூரிய கிரகணத்தில் பிறந்ததாக அர்த்தம் என்று எதிலோ படித்த ஞாபகம். ஆனால் என் ஜாதகத்தில் சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் இணைந்திருக்கிறது. இது என்ன வகை என்று சொல்லுங்களேன்?

உடல்காரகன் சூரியனுடன் ராகுவும், மனகாரகன் சந்திரனுடன் கேதுவும் சேர்ந்திருப்பது நல்ல வகையாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது:-))))))

ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு:
1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)

2.ஒரு ஜாதகன் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்கமா அல்லது பெண்ணாதிக்கமா என்பதைக் கண்டறிய வாய்ப்பிருக்கிறதா?
நன்றியுடன்,
முருகன் அடிமை சரவணன்

அது அமையும் மனைவியைப் பொறுத்து உள்ளது. பெண் சகிப்புத்தன்மை உடையவர் என்றால் ஆணாதிக்கத்தைப் பொறுத்துக்கொள்வார். இல்லையென்றால், ஆதிக்கம் செய்பவர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று உதை வாங்க வேண்டியதிருக்கும்.

ஜாதகத்தில் லக்கினத்தைவிட 7ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். இல்லை என்றால் நீங்கள் நல்ல கணவனாக இருக்க வேண்டியதுதான். புரிந்ததா?
----------------------------------------------------
email.No.68
S.குமார். ஈரோடு.

ஐயா,
கேள்வி கேட்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.
எனது கேள்விகள் .
1) பொது தொண்டு செய்யும் எண்ணம் யார் யாருக்கெல்லாம் அமையும்? 2) லக்ன அதிபதியும் , 5 ம் இட அதிபதியும் கேந்தரத்தில் இருந்தால் இந்த அமைப்பு உண்டா?

பொதுத்தொண்டில் இரண்டுவகைகள் உள்ளன. பணத்தைச் செலவழித்துச் செய்யும் தொண்டுகள். பணம் இல்லாமல் உடல் உழைப்பை வைத்துச் செய்யப்படும் தொண்டுகள். இரண்டிற்குமே முதலில் நல்ல மனம் வேண்டும். அதற்கு ஜாதகத்தில் மனகாரகன் சந்திரனும், ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். அத்துடன் கர்மகாரகன் சனியும் நன்றாக இருப்பவர்கள் உடல் உழைப்பால் பொதுத் தொண்டுகளைச் செய்வார்கள்.

பணத்தை வைத்து பல தர்மங்களைச் செய்வதற்கு, 1, 5, 9ஆம் வீடுகளும் அதன் அதிபதிகளும் நன்றாக இருக்க வேண்டும்! அப்படி அமைப்புள்ள ஜாதகங்கள் தர்ம ஜாதகம் எனப்படும்!
-------------------------------------
email.No.69
கோபி கார்த்திகேயன், வடினார், குஜராத்

MY DOUBTS:
1) 6,8,12 VEEDUGALIN ADHIBHADHIGAL ENGU SENDRU AMARNDHALUM NANMAI ILLAI OK.
SURIYAN CHANDHIRAN ai THAVIRA SEVVAI, SUKRAN, BHUDHAN, GURU, & SANI KU THALA 2U VEEDUGAL ALLAVA. 6,8,12 VEEDUGAL INDHA 5 GRAHANGALIL 1 in VEEDAGA IRUNDHU MATRORU VEEDU NANMAI PAYAKUM VEEDAGA IRUNDHAL ENNA PALAN KIDAIKUM AYYA..

EXAMPLE: FOR MIDHUNA LAGNAM SUKRAN, 5TH (POORVAPUNYA) & 12TH (LOSS) VEETIN ADHIBHADHI APDI IRUKA AVAR ENGU SENDRU AMARNDHALUM THEEMAI ENDRUM NANMAI ENDRUN KOORA MUDIYADHU ALLAVA? MIXED RESULT KIDAIKUMA? NANMAI MATTUMAE KIDAIKA VAENDUM ENDRAL AVAR 5 il AATCHI PERA VAENDUMA?

கலவையான பலன்கள் கிடைக்கும்! உங்கள் மொழியில் சொன்னால் Mixed Results

2) 6,8,12 AGIYA VEEDUGAL MARAIVIDANGAL OK. ANGU SUBHA GRAHANGAL AMARAKOODADHU OK. AMARNDHAL NANMAI ku MARAGA THEEMAI PAYAKUM ALLAVA. ANDHA MARAIVIDANGALIL ASUBHA GRAHANGAL AMARNDHAL THEEMAI IRATIPPU (DOUBLE) AGUMA?

ஆமாம். அதன் வலிமையைப் பொறுத்து அளவு வேறுபடும்!

3) 8il SEVVAI AMARNDHAL MATHIMA VAYADHILAEYAE SIVANADI SAERA NAERIDUM ENDRU KOORI IRUNDHEERGAL. 8 am VEETIN ADHIBHADHI UCHCAM PETRALO, 8 il SEVVAI UCHCHAM PETRALO MAERKOORIYA PALAN ADIPATTU POGUMA? ILLAI ADHAI VIDA SERIOUS MATTER AAGIVIDUMA AYYA.

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் இன்னும் எழுதவில்லை. இதெல்லாம் அதில் வரும். பொறுத்திருங்கள்!
--------------------------------------------
email.70
செந்தில்குமார் செல்வராஜன்

ஐயா வணக்கம்
Thanks for Question & Answer Part,
Q1. When you published printed books ( Astrology Subject)?

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிவரும். அச்சாகி வந்தவுடன் முறையான அறிவிப்பு பதிவில் வெளிவரும். பொறுத்திருங்கள்!

Q2. தாங்கள், பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார். என்று கூறியுள்ளிர்கள். In விருச்சக லக்கினத்திற்கு tenth house சிம்ம லக்னம் [27]. இங்கு சூரியன் [7] மற்றும் சனி [6]. இங்கு சூரியன் உச்சம் பெற்று இருந்தாலும் , துன்பங்கள் ஏற்படுமா? in second house Guru[6] also atchi.

பொதுவிதியை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். எந்தகிரகமும் உச்சமாகியும், அதிக பரல்களுடனும் இருந்தால், விதிவிலக்கு உண்டு. லக்கின அதிபதி அதிபதி செவ்வாய் எங்கே இருக்கிறார்? அவர் முக்கியமில்லையா? இங்கு சூரியன் என்றால் எங்கே? நீங்கள் சொல்லியுள்ளபடி சூரியன் சிம்மத்தில் இருக்கிறார் என்றால், அவர் அங்கே எப்படி உச்சம் பெறுவார்? சூரியன் உச்சமாவது மேஷத்தில் அல்லவா? என்ன குழப்பம். சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டாமா?

Q3. Please Explain - Ragu Dasu - செவ்வாய் புத்தியில் சுய தொழில் தொடங்கலாமா?

பணம் இல்லாத சுய தொழில் என்றால் எப்போது வேண்டுமென்றாலும் துவங்கலாம். பண முதலீட்டுடன் சுய தொழில் என்றால், ராகு தசையில் வேண்டாம்!

Q4. in rasi chart - Guru[5] & chandran [7] in first house - ரிஷபம் [32] but here guru is enemy, இந்த ஜாதகருக்கு guru dasa நல்லபடியாக இருக்குமா?

குரு ஐந்து பரல்களுடன் இருப்பதால் குரு தசை நன்மைகளை உடையதாக இருக்கும்! அத்துடன் ரிஷபத்தில் சந்திரன் உச்சம். அவருடைய புத்தியும் நன்மைகளை உடையதாக இருக்கும்!
-------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி
Genius does what it must and talent does what it can.
--------------------------------------------------------
 
வாழ்க வளமுடன்!


26.5.12

வானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததடி

 
மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 6 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததடி
ஆக்கம்: தேமொழி
மேலே உள்ள வரைபடமும் அவர் வரைந்ததுதான்!

"Lucy in the Sky with Diamonds" என்ற பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழு புகழ் ஜான் லென்னான் (John Lennon) அவர்கள் எழுதிய பாடல் வரிகளைக் கேட்டபொழுது எனக்குத் தோன்றியதை வரைந்ததுதான்  இந்த ட்ஜிட்டல் கிராபிக்ஸ் ஓவியம்.  மின்னும் கண்களை வரைய அதற்கேற்ற தூரிகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  இந்தப் பாடல் பீட்ல்ஸ்ஸின் புகழ்பெற்ற பாடல்கள் வரிசையில் உள்ள ஒரு பாடலும் கூட.  ஜான் லென்னான் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

இந்தப் பாடலைப் பற்றிய சுவையான கதைகளும் உண்டு.  நர்ஸரி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான் ஜான் லென்னானின் மகன் ஜூலியன் (Julian).   தன் பள்ளித்தோழியுடன் வகுப்பில் படம் வரைவதில் ஈடுபட்டிருந்த பொழுது தன் தோழி லூசியை பார்த்து ஒரு ஓவியம் வரைந்தான்.  குழந்தைகள் வரைந்த படம் இதுவரை யாருக்குத்தான் புரிந்திருக்கிறது.  எனவே மகனைப் பள்ளியில் இருந்து அழைத்துப் போக வந்த ஜான் லென்னான் தன் மகனிடமே விளக்கம் கேட்டிருக்கிறார்.  அவனோ அது தன் தோழி "Lucy — in the sky with diamonds" என்று விளக்கியிருகிறான்.  அவன் வரைந்த அந்தப் படத்தை இந்த இணையதளத்தில் சென்று பார்க்கலாம் (http://cdn.sheknows.com/articles/Lucyintheskywithdiamonds.jpg).  நாமாக இருந்தால், "சரி, அது கிடக்குது, மத்தியானம் ஒழுங்கா சாப்பிட்டியா இல்லையா?" என்று அடுத்து ஆக வேண்டிய வேலையைப்  பற்றி அக்கறையாக இருந்திருப்போம்.  ஆனால் அவன் தந்தைதான் வித்தியாசமானவர் என்ற பெயர் எடுத்த பாடகர் ஆயிற்றே.  உடனே ஒரு கவிதை எழுதி, தன் இசைக்குழுவுடன் பாடி, பதிவிட்டு ஒரு புகழ் பெற்ற பாடலை உருவாக்கிவிட்டார்.

பாடல் வெளியான ஆண்டு 1967.  பாடலைப் பற்றிய மேலும் பல தகவல்களை அறியவிருப்பம் உள்ளவர்களுக்கு விக்யில் ஒரு கட்டுரையும் இருக்கிறது.  பொதுவாக பீட்டில்ஸ் இசைக்குழுவை, அவர்கள் நடவடிக்கைகளை போதைப் பொருட்களுடன் தொடர்பு படுத்தி விமரிசிப்பது பொதுமக்கள் வழக்கமாக இருந்த காலம் அது.  எனவே "Lucy in the Sky with Diamonds" என்பது LSD போதைப் மருந்தின் முதல் எழுத்துக்களைக் குறிக்கிறது என்ற கதை பரவ ஆரம்பித்தது.  ஜான் லென்னான் தெரிவித்த மறுப்பினை யாரும் பொருட்படுத்தவில்லை.  இரண்டாண்டுகளுக்குமுன் ஜுலியனின் தோழி லூசி தன் 46 வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்த பொழுது மீண்டும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு நினைவில் வந்து சென்றது.

பாடலின் வரிகள் கீழே:
Lucy in the sky with diamonds

Picture yourself in a boat on a river,
With tangerine trees and marmalade skies.
Somebody calls you, you answer quite slowly,
A girl with kaleidoscope eyes.

Cellophane flowers of yellow and green,
Towering over your head.
Look for the girl with the sun in her eyes,
And she's gone.

{CHORUS}
Lucy in the sky with diamonds,
Lucy in the sky with diamonds,
Lucy in the sky with diamonds,
Ah... Ah...

Follow her down to a bridge by a fountain,
Where rocking horse people eat marshmallow pies.
Everyone smiles as you drift past the flowers,
That grow so incredibly high.

Newspaper taxis appear on the shore,
Waiting to take you away.
Climb in the back with your head in the clouds,
And you're gone.

{CHORUS}

Picture yourself on a train in a station,
With plasticine porters with looking glass ties.
Suddenly someone is there at the turnstile,
The girl with kaleidoscope eyes.

{CHORUS}

பாடலின் காணொளி சுட்டி: http://youtu.be/A7F2X3rSSCU



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2



கௌமாரம்
ஆக்கம்: பார்வதி ராமச்சச்ந்திரன், பெங்களூரு

முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

செந்தூர்ப்பதிகொண்டோன், செந்திலாண்டவன் , பக்தர் சிந்தைக் குடிகொண்டான் கந்தக் கடவுள் , வந்தனை செய்வாரையும் சொற்றமிழால் தன்னை வைதாரையும், அத்தமிழின்பத்துக்காக, வாழ்வாங்கு வாழவைக்கும் எந்தை, எம்பெருமான் முருகக் கடவுளைப் பரம்பொருளாகப் போற்றும் ,'கௌமாரம்', பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

"ஸ்வாமி' என்ற பெயர், வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது
நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான், அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் சுப்பிரமணியர்தான், அவர் குழந்தையாக இருக்கிற கடவுள், குமாரஸ்வாமி" என்று காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவர் அருளியிருக்கிறார்.

சுப்பிரமணியர் என்ற திருநாமமே, சு+பிரம்மண்யம் என்று சிரேஷ்டமான்
பிரம்மம் என்ற பொருளில் விளங்குவதாக இருக்கிறது. 'கௌ' என்றால் மயில்
என்றும் பொருள். ஆகவே, மயில் வாகனனான முருகப்பெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடும், இந்த மார்க்கத்திற்கு, கௌமாரம் என்று பெயர்.

முருகப்பெருமான், 'தமிழ்க்கடவுள்'என்றே போற்றப்படுகிறார். திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், முருகபக்தியை, சென்ற இடமெங்கும் கோவில்கள் கட்டி, வெளிப்படுத்தினர்.

'முருகு' என்றால் அழகு என்று பொருள். கந்தன், பெயரழகன்,வடிவழகன்,
அருளழகன், பக்தருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கும் கொடையழகன்.

சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகன். அந்த சச்சிதானந்தப்
பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் (ஸஹ உமா ஸ்கந்தர்) என்று போற்றி
வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே
பிரகிருதி மாயை. எனவே மாயைக்கு 'குக மாயை' என்னும் பெயரும் உண்டு.
பிரம்மா முதலான படைப்புகளுக்கு காரணம் மாயையே.

மயிலானது மாயைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. அதுதன் தோகையை விரிப்பது போலும் ஒடுக்குவது போலும் சிருஷ்டியும் சம்ஹாரமும் நடைபெறுகிறது. அந்த அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட ஞான சக்தி எம்பிரான்.

சிவபெருமானின், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம்,
அதோமுகம் என்னும் ஆறு முகங்களின் அம்சமான ஆறு நெருப்புப் பிழம்புகள்,
சிவனாரின் நெற்றிக் கண்ணின் வழியே வெளிப்பட்டு,   பரம்பொருளாகிய‌ முருகப் பெருமான் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.   (ஸ்ரீ கந்தபுராணம்)

பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்ததால், 'முருகன் மட்டுமே ஆண்பிள்ளை'
என்பார் வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபகவான், "படைத்தலைவரில் நான் கந்தன்" என்றுரைக்கிறார்.

ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: (கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்,)

ஸ்ரீ ருத்ரத்தில் வரும் 'நமோ ஹிரண்யபாகவே ஸேநாந்யே' என்ற வரிகள்,
தேவசேனாபதியாகிய முருகனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

ஓம் எனும் ஓங்கார ஒலியே வேதங்கள் தோன்றுவதற்கு மூல காரணம். ஓம் எனும் பிரணவம் மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவம்

 அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
 'உ' காராஸ்து மகேச்வர:
 'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
 பிரணவஸ்தி த்ரியாத்மக:

பிரணவ ஸ்வரூபமாக, அதன் உட்பொருளாக விளங்கும் பரம்பொருளே முருகன்.

'ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய் ' என்கிறார் ஸ்ரீ குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில்.

சுந்தரனே சுகந்தனே சுப்ரமணியனே சூரசம்காரனே!
அந்தமாதியில்லா பரமே அருவ உருவ பெம்மானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)

நிர்க்குணப்பரம்பொருளாகவும், சகுண நிலையில், படைப்பிற்குக் காரணமாகவும் உள்ளவ‌ன் முருகப் பெருமான்.

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு.

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய். (கந்தர் கலிவெண்பா).

என்று குமரகுருபரர், ஐந்தொழிலுக்கும் அப்பாற்பட்ட, குறியும், குணமும்,
வடிவுமற்று எங்கும் நிறை பரப்பிரம்மமாய் முருகன் அருளுவதைப் புகழ்கிறார்.

திருமுருகப் பெருமானின், ஆறுமுகங்களின் அழகையும் அவை செய்யும்
அருட்செயல்களையும் நக்கீரப் பெருமான் தமது 'திருமுருகாற்றுப் படை'யில்,

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்

உலகம் கொண்ட இருள் (அஞ்ஞான இருள்) நீங்கப் பொலியும் சூரியனாய் ஒரு முகம். பக்தருக்கு வரம் கொடுக்கும் ஒரு முகம், வேத விதி வழுவாது வேள்வி செய்வோர் வேள்விப் பயனைத் தந்தருளும் ஒரு முகம். வேதத்தில் உள்ள மறை பொருளை, யாவரும் மகிழும் வண்ணம், பூரண சந்திரன் போல் விளக்கி நின்றதொரு முகம். பகைவரை மாய்த்து, இனி பகைவருண்டோ என்று போர்க்களத்தை விரும்பி நின்றதொரு முகம். வள்ளியம்மையிடத்து முறுவல் செய்து மகிழும் ஒரு முகம் என்று இனிது விளக்குகிறார்.

திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் 'சரவணபவ' என்பதாகும். 'சரவணபவன்'
என்றால், நாணல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். 'சரவணபவ' மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

ச... ‍செல்வம்
ர ... கல்வி
வ ... முக்தி
ண ... பகை வெல்லல்
ப ... காலம் கடந்த நிலை
வ ... ஆரோக்கியம்

முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

கந்த புராணக் கதை, அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததே,

பாதாளச் சிறையிலே பாதகர் விரித்த வலையிலே
வேதா மேதைகள், தேவர்கள் யாவரும்; தங்கள்
கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
நாதா காப்பாய்தேவ தேவாவென்றே - நிந்தன்
பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)

என்ற வரிகளில்,முருகன் அவதாரக் காரணத்தை அறியலாம். குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன் இருப்பான் என, முருகன் நின்றாடும் தலங்கள் பல
இருந்தும், ஆறுபடை வீடுகள் என குறிக்கப்பெறும் தலங்கள் முருகப்பெருமானது வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையவை. அவையாவன,

ஓங்கார ஸ்வரூபியான முருகன், தந்தைக்கு அதனை உபதேசித்த, 'சுவாமிமலை', ஞானப்பழத்துக்காக, கோபம் கொண்டு, பின் சினம் தணிந்த 'பழனி', சூரனை சம்ஹரித்து, பின் சிவபூஜை செய்த 'நிராகுலத்' தலமான 'திருச்செந்தூர்', முருகன், தெய்வானைத் திருமணம் நடந்த 'உல்லாசம்' எனப் போற்றப் பெறும் 'திருப்பரங்குன்றம்', வள்ளியை மணம் புரிந்த,சல்லாபம்' எனப் புகழப்படும் 'திருத்தணி', ' வள்ளி தெய்வானை சமேதராக அருள்மழை பொழியும் 'சர்வ வியாபக'த் தலமான 'பழமுதிர்சோலை'.

கந்தபுராணத்தைச் சுருக்கமாக,  "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்”
(சிவனாரின் மகன், சஷ்டித் திதியில் மாமரமாகி நின்ற சூரனை வேல் கொண்டு
பிளந்தான்) என்று கூறுவதுண்டு.

சிவனாரிடமிருந்து, முருகன் தோன்றியதால், 'சிவமும் முருகனும்' ஒன்றே
என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை, சைவத்தின் ஒரு
கூறாகவே கருதுகிறது.

பிரம்மதேவர் பிரணவப்பொருள் அறியாததால் அவரைச் சிறையில் அடைத்து, அவரது படைக்கும் தொழிலைத் தானே செய்தது, சூரனை அழித்தது, தேவர்களைக் காத்தது, தனது உண்மையுருவை மறைத்து, வேடனாகவும் விருத்தனாகவும் வந்து வள்ளியை மணம் புரிந்தது, பக்தருக்கு நித்தமும் அருளுவது என்று ஐந்தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் முதலியவற்றைச் செய்யும் பரம்பொருள் கந்தனே என்பதை,  கந்தபுராணக் காட்சிகள் மறைமுகமாக நமக்கு எடுத்தியம் புகின்றன.

முருகப்பெருமான், இச்சாசக்தியான வள்ளியையும், கிரியாசக்தியான
தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.

கௌமாரத்தில், முருகனே, குண்டலினியாக உருவகப்படுத்தப்படுகிறார். ஆகவே , சில மாநிலங்களில், நாகரூபமாக முருகனை வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக'  (ஸ்ரீகந்தர் ஷஷ்டிக் கவசம்).

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும் ஆறு ஆதாரத் தலங்களாகக்
கூறப்படுகின்றன.அவை,  மூலாதாரம்....திருப்பரங்குன் றம்,
சுவாதிஷ்டானம்...திருச்செந்தூர் , மணிபூரகம்....பழனி,
அநாஹதம்...சுவாமிமலை, விசுத்தி.....திருத்தணி, ஆஜ்ஞா....பழமுதிர்சோலை.
ஞானசக்தியாகிய முருகப்பெருமான், அன்பர் பலருக்கு ஞானோபதேசம் தந்து
ஆட்கொள்ளும் கருணைப் பெருங்கடல். சிவனாருக்கு உபதேசித்த ஏரகத்துச்
செல்வன், சித்தர் பலருக்கு ஞானோபதேசம் தந்து முக்தி நிலையை அருளிய
காருண்ய மூர்த்தி. ஸ்ரீ போகர், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ அருணகிரிநாதர்,
வள்ளலார்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்,  என‌ ஷண்முகக் கடவுள், பல மகான்களுக்கு ஞானாசிரியனாக அருள் மழை பொழிந்து வருகிறார்.

பழமுதிர்சோலையில், ஔவைக்கு 'சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டு, அகந்தை அகற்றி, ஞானம் அருளிய குகக் கடவுளின் கேள்விகளுக்குப் செந்தமிழ்ப்பாமாலை சூட்டி விடையளித்தார் தமிழ் மூதாட்டி.அரியது எது? என்ற கேள்விக்கு,

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

என்று துவங்கி, விரிகிறது ஔவையின் பாமாலை.

சரவணப்பொய்கையில் உதித்த ஷண்முகக் கடவுளை, கார்த்திகைப் பெண்கள்
வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபட உகந்த தினமாகும். வைகாசி விசாகம், முருகனின் திருஅவதாரத்தினமாகக் கருதப்படுகிறது. தைப்பூசத்தில், பிரம்ம வித்யா ஸ்வரூபமான வேல் சக்தியால் முருகனுக்கு வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தில் தெய்வானையை அம்மையை மணம் புரிந்தார். ஆகவே, இந்தத் தினங்கள் 'கௌமாரர்கள்' எனப்படும் முருகபக்தர்களால் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. காவடிகள் எடுத்துவந்து பக்தர்கள் முருகப்பெருமானை இந்தத் தினங்களில் வழிபாடு செய்கின்றனர்.

சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன்,
பின் முருகனின் கருணையைப் பெற வேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை, பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் வைத்து, பொதிகை நோக்கிச் சுமந்து வரும் வேளையில், பழனியில், தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான்.

சுமை காவுபவர்கள்(தூக்குபவர்கள்), சுமை இலகுவாக இருக்க வேண்டி, ஒரு
தடியில் சுமைகளைக் கட்டி, இம்மாதிரிச் சுமந்து செல்வர். காவுதடி, என்பதே
காவடியாக உருமாறியது. வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே காவடியின் தத்துவம்.

இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. தமிழில் கா என்ற சொல், காப்பாற்று என்று பொருள்படும். முருகனின் திருவடிகள் காப்பாற்றும் என்பதால் முருகனுக்குரிய காணிக்கைகளைச் சுமந்து அவர் திருவடி சேர்க்கும் இம்முறைக்கு காவடி எனப் பெயர். காவடிகள், பால் காவடி, பன்னீர்க்காவடி, என‌ எண்ணிலா வகைகளைக் கொண்டது.

காவடியைச் சுமந்து செல்லும் பக்தர்கள், அரோஹரா' அல்லது 'அரோகரா' என்று முழங்குவது வழக்கம்.  'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கமே அரோகரா என்றாயிற்று. இதன் பொருள்,

'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
என்பதாகும்.

திதிகளில் ஷஷ்டித் திதி, முருகனுக்கு உகந்தது. ஷஷ்டிதிதிக்குரிய தேவி,
ஷஷ்டிதேவி எனப் போற்றப்படும் தெய்வானை அம்மை. (ஷஷ்டியில்) சட்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (கரு) வரும் என்ற சொல்வழக்கு, ஷஷ்டி விரதத்தின் மகிமையை உணர்த்துவதாகும். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஆறு தினங்கள் கந்தர்ஷஷ்டி என சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அந்தத் தினங்களில், முருகப்பெருமான் விரதம் இருந்து, ஷஷ்டியன்று சூரசம்ஹாரம் செய்தார். ஆகவே, அந்தத் தினங்களில், முருகப் பெருமானின் தலங்களில், சூரசம்ஹாரப் பெருவிழா பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, முருகன் வேல் வாங்கிய தலமான சிக்கலில், வேல்பூஜைக்குப் பின், வேல்நெடுங்கண்ணியம்மையிடம் இருந்து, முருகன் வேல் வாங்கும் போது, முருகனின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம்.

திருத்தணித் திருத்தலத்தில் மட்டும்,  கந்தர்ஷஷ்டி, பூச்சொரிதல்
விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப் பெருமானது புகழைப்பாடும் துதிகள் அநேகம்...அநேகம். சிவபெருமானது புகழைப்பாடும் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருப்பது போல் முருகப்பெருமானது புகழைப் பாடும் நூல்களும் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பெரும்பணியைச் செய்தவர், திரு.தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆவார்.

திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாம் திருமுறை
திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாம் திருமுறை
திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காம் திருமுறை
குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாம் திருமுறை
பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாம் திருமுறை
பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாம் திருமுறை
கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாம் திருமுறை
திருவகுப்பு - ஒன்பதாம் திருமுறை
கந்தரனுபூதி - பத்தாம் திருமுறை
நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,   முதலானவர்கள் பாடல்கள் -
பதினோராம் திருமுறை
சேய்த்தொண்டர் புராணம் (சிவனாரது சேய் ஆன முருகனின் அடியவர் வரலாறு) -
பன்னிரண்டாம் திருமுறை இயற்றியவர்.தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.
முருகப்பெருமானுக்கும் அவதாரங்கள் உண்டு. ஸ்ரீ குமாரில பட்டர், மாமதுரை
அரசி மீனாட்சியம்மை, சொக்கநாதப்பெருமானின் திருக்குமாரர்
உக்கிரபாண்டியனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரை முருகனின்
திருஅவதாரங்களாகக் கருதுகிறார்கள்.

'வேலை வணங்குவதே வேலை' என்றிருப்போர் வேதனை தீரும். நாதன் முருகன் நல்லருள் தந்து சோதனை நீக்கிச் சுகம் பல தருவான். ஆறுமுகமும்
பன்னிருகரமும் கொண்டு, சேவல்கொடியேந்தி மயில்வாகனத்தில், வள்ளி
தெய்வானையோடு, வேல்முருகனாகக் காட்சியளிக்கும் எம்பெருமான் முருகனின் திருவுருவத்தை மனதிலிருத்தி, முருகப்பெருமானின் திருவடிகளைப் பணிவோம். முருகன் திருவடிகளே சரணம்.

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே 
(பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய
தௌத்தியம் (திருவடித் துதி)).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


அப்புறம் நடப்பது நடக்கட்டும்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

தஞ்சை மாவட்டக்காரர்களுடைய‌ கோபத்திற்கு ஆளாவது என்றே முடிவெடுத்து விட்டேன்.

'சரி உன் விதி! யார் என்ன செய்ய முடியும்?' என்று என் மனசாட்சி திரைப்படங்களில் வருவதுபோலத் தனியாகப் பிரிந்துசென்று  புகை உருவத்தில் நின்று கூறுகிறது.

நான்: 'இப்போ என்ன சொல்கிறாய்? நான் இதைப் பேசவா வேண்டாமா?'

ம சா:'நான் வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறாய்? எப்போது என்    பேச்சை கேட்டுள்ளாய்,இப்போது கேட்பதற்கு?'

ம சா சொன்னதுபோல எப்போதும் ம சா கூறிய எச்சரிக்கைகளை நான் செவி மடுத்ததே இல்லை.ஆகவே இந்த முறையும் செவி மடுக்காமல், கூற நினைத்த‌தைக் கூறிவிடுகிறேன்.அப்புறம் நடப்பது போல் நடக்கட்டும். ஈஸ்வரோ ரக்ஷது.

நான் பிறந்தது வளர்ந்தது சேலம் நகரம்.என் பெற்றோர்களோ நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள்.ஆகவே மதுரை, நெல்லை, குமரி மாவட்ட மக்களுடன் பரிச்சயம் உண்டு. மாமனகள் கோவையில் வாழ்ந்ததால் கோவை ஈரோடு மக்களுடன் பழகியிருக்கிறேன்.என் மூத்த சகோதரியும் மூத்த அண்ணனும் சென்னையில் வாழ்ந்ததால் சென்னையும், என் பங்காளிகள் வேலுரில் இருந்ததால் வடஆற்காடும், அப்பாவின் சந்நியாசித் தொடர்புகளால் தென்னாற்காடு, திரு அண்ணாமலைத் தொடர்பும் எனக்கு உண்டு. பல ஊர் தண்ணீர் குடித்து பல மக்களுடைய இயல்புகளையும் அருகாமையிலிருந்து கண்டிருக்கிறேன்.

தஞ்சையில்தான் 38 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தேன். ஆகவே தஞ்சைதான் என் குழந்தைகளுக்கு பிறந்த மண். ஆனாலும் எனக்கு தஞ்சை மண் ஒட்டவில்லை.

'ஏன் ஒட்டாது? கொஞ்சம் மண்ணில் நீர்விட்டுக் குழைத்து பூசிப்பார்ப்பதுதானே?'என்று எடக்கு மடக்காக சிலர் கேட்கலாம்.

நான் சொல்ல வருவது அந்த மக்களுடன் எனக்கு ஒட்டுறவு ஏற்படவில்லை என்பதுதான்.காரணம் என்ன?

'இன்டெர் பெர்சனல் ரிலேஷன்ஷிப்'எனக்குத்தான் குறைவோ அல்லது தஞ்சைக்காரர்களுக்குத்தான் குறைவோ?

தஞ்சையில் ஒரு அலுவலக சக ஊழியர், நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்,மாதந்தோறும் 15 தேதியில் இருந்து மாதக் கடைசி வரை  எல்லோரிடமும் சிறு தொகைகளைக் கைமாத்துக் கடனாகக் கேட்பார்.இவர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று ஆராய்ந்தபோது வங்கியில் அந்த நாட்களில் இருக்கும் தொகைக்கு வட்டி சேருமாம்.தன் வங்கிக் கையிருப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூச்ச நாச்சம் இல்லாமல் தன்னைவிட அலுவலகப் படித்தரத்தில் கீழ் உள்ளவர்களிடம் கூட 50, 100 என்று வாங்கிக் காலம் தள்ளுவார். 

அவர் அப்படி யென்றால் இன்னொருவருடைய குணம் இன்னும் வக்கரம்.

ஒரு நாள் திடீரென அலுவலக நேரத்தில் என் இருக்கை அருகில் வந்தார்.
'நான் சொல்வதுபோல சத்தமாகச்சொல்லு'என்று கூறினார்.

"என்ன கூற வேண்டும்?"

"புதன்கிழமை வாருங்கள் கட்டாயம் தருகிறேன்' என்று சத்தமாகச் சொல்லு"

 இதை யார் காதில் ப‌டவேண்டும் என்று சொல்லச் சொல்கிறார் என்று சுற்று முற்றும் பார்த்தேன்.பொதுமக்கள் அமரும் வெளி இருக்கையில் ஒரு பட்டாணியர் கையில் தடியை வைத்துக் கொண்டு எங்களையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

"நானும் உங்களுக்கு ஒன்றும் தர வேண்டாம்; நீங்களும் எனக்கு ஒன்றும் தர வேண்டியது இல்லை" என்று சத்தமாகக் கூறினேன்.

"ஆபத்துக்கு உதவாத நீயெல்லாம் ஒரு மனிதனா?"என்று திட்டிவிட்டுப் போனார்.அப்பாவியான‌ என்னைப் பாட்டாணியிடம் சாட்டிவிடப் பார்த்த அவர் மனிதராம்! நான் மனிதனல்ல, மிருகமாம்! என்ன ஒரு நியாயம்? வாழ்க தஞ்சை!

ஒரு நாள் பார்யாள்  'மோருஞ்சாம்'கூடக் கட்டித் தரவில்லை.சரி. நமக்குத்தான் இருக்கவே இருக்கு மங்களாம்பிகா ஓட்டல் என்று மதியம் சாப்பிடப் போனேன்.கூட‌வே ஒரு நபர், முன்பின் தெரியாதவர் என்னோடு ஒட்டிக் கொண்டு உள்ளே வந்துள்ளார். கல்லாவில் இருப்பவருக்கும் மற்ற சர்வர்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்து வந்தவர்கள் என்று எண்ணம் வரும்படி நடந்து கொண்டுள்ளார்.என் ஒருவனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நாங்கள் நண்பர்கள், சேர்ந்து சாப்பிட வந்திருக்கிறோம் என்றே தோற்றம் கொடுத்திருக்கிறது.

என்னுடன் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த நபர். நான் எது ஆர்டர் பண்ணினாலும் அவருக்கும் அது வருகிறது. நான் தோசை என்றால் அவரும் 'அதே' என்பார்.இப்படி சாப்பிட்டு முடித்துவிட்டு காப்பிக்குக் காத்திருக்கும் வேளையில் ஆள் 'எஸ்கேப்'! எனக்கு இரட்டை தொகைக்கு பில் வந்தது. நான் காரணம் கேட்க, அவர்கள் 'உங்களுடன் சாப்பிட்டவருக்கும் சேர்த்து பில்' என்க 'அவரை எனக்குத் தெரியவே தெரியாது' என்று நான் சொல்ல, 'இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க' என்று என் சட்டையைக் கோக்க...ஹும், இன்று நினைத்தாலும் அவமானம் பிடுங்கித் தின்கிறது  வாழ்க தஞ்சை! வாழ்க  எத்தர்கள்!

ஒரு சக ஊழியர் செய்ததது இன்னும் பெரிய எற்று வேலை.சொல்கிறேன் கேளுங்கள்.

நான் அந்த ஊழியருக்கு கண்காணிப்பாளன். சாதாரணமாக எங்கள் அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம் கிடையாது. வந்த வாடிக்கையாளர்களை சரியாக வரவேற்கவில்லை,சரியாகப் பதில் அளிக்கவில்லை,ஊழியர்கள் கோபமாக பதில் சொன்னார்கள் என்றெல்லாம் புகார் வருமே அல்லாது லஞ்சம் கேட்டார்கள் என்ற புகாரே வராது.

குறிப்பிட்ட அந்த ஊழியர் இந்த நல்ல பெயருக்கும் களங்கம் வரும்படி நடந்து கொண்டார். அவர் கெட்ட பெயர் எடுத்தால் பரவாயில்லை. அவர் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு நான் லஞ்சம் வாங்குவது போன்ற ஒரு காட்சியை  உருவாக்கினார். நடந்தது என்ன?

ஒரு நாள் மாலை அலுவலகம் முடியும் நேரம் "சார் ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்கள். நாளை காலை கொடுத்து விடுகிறேன்"என்றார். நானும் கொடுத்து விட்டேன்.

மறுநாள் காலை அலுவலகத்தில் என் மேஜைக்கு அருகில் ஒரு கோப்பைக் கொண்டு வந்து என் கையொப்பத்திற்கு நின்றார்.அந்த ஃபைலுக்கு அடியில் அந்த ஐம்பது ரூபாயை வைத்தார்.காதருகில் வந்து "நேற்று வாங்கிய ரூபாயை  வைத்து இருக்கிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்"என்றார்.

எதேச்சையாக நிமிர்ந்த நான் அவர் தடுப்புக்கு அப்பால் இருந்த ஒரு வாடிக்கையாளருக்குக் கண் ஜாடை காட்டுவதைக் கண்டு கொண்டேன்.உடனே என் மூளைக்கு செய்தி எட்டிவிட்டது. எனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று அந்த வாடிக்கையாளரிடம் கூறிப் பணம் பெற்று இருக்கிறார் என்றும்,அதனை அவர் முன்பாகவே எனக்குக் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் என்றும் புரிந்து கொண்டேன்.

"பணத்தை எடு" என்று கண்டிப்புடன் கூறினேன்.அந்த வாடிக்கையாளரிடம் "இந்த வேலைக்கோ அல்லது வேறு எந்த வேலைக்குமோ எங்கள் அலுவலகத்தில் யாருக்கும் லஞ்சம் தர வேண்டியதில்லை. அப்படி ஏதாவது கொடுத்திருந்தால் திரும்பக் கேட்டுப் பெற்றுக் கொள்"ளும்படி அறிவுறுத்தினேன்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் ஜாக்கிரதை உணர்வை அடைந்தேன்.நான் அந்த ஊழியரை வாடிக்கையாளர் முன்பாக அவமானப் படுத்தி விட்டதாக பெரிய சர்ச்சை வந்தது. நான் ஓய்வு பெறும் வரை அவரால் எனக்கு நிறைய தொல்லைகள்தான். வாழ்க தஞ்சை.வாழ்க எத்தனுக்கு எத்தர்கள்!
============================================
ஓர் அலுவலக ஊழியரிடம் மிகவும் நட்புப் பாராட்டி விட்டேன்.

அந்தக் காலத்தில் ராலே சைக்கிள் விலை ரூ.400/=  அலுவலகத்தில் ரூ.280/= சைக்கிள் கடன் கொடுப்பார்கள். மீதமுள்ள ரூ120/=நாம் அலுவலகத்தில் செலுத்தி மொத்தத் தொகைக்கு காசோலை பெற்று சைக்கிள் விற்கும் கடையில் கொடுத்து வண்டியை டெலிவரி எடுக்க வேண்டும்.(இந்தத் தொகை எல்லாம் மிக அற்பமாக இன்று லட்சத்தில் ஊதியம் வாங்குபவர்களுக்குத் தோன்றலாம்.மொத்த சம்பளமே ரூ290/= என்னும் போது இந்தத் தொகை மிகவும் பெரியது அப்போது)

அப்படி எனக்கு வண்டி எடுக்கச் சென்ற போது நண்பரும் கூட வந்தார். வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன்," என்னால் ஒரு 120/= சேமிக்க முடியவில்லை. அது இருந்தால் நானும் வண்டி எடுப்பேன்" என்றார்.

"உங்களுக்கும் வண்டி வேண்டுமா? நான் தொகை செலுத்தி விடுகிறேன். நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்"

மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். மறுநாள் அவர் பெய‌ருக்கு அலுவலகத்தில் பணம் கட்டி காசோலை பெற்று அவருக்கும் வண்டி எடுத்துக் கொடுத்தேன்.
அவருக்குப் பணம் கொடுத்ததற்கு என்னிடம் எந்த சான்றும் நான் வைத்துக் கொள்ளவில்லை.

மாதம்தோறும் ரூ10/=திருப்பி அளிப்பார்.ஒவ்வொரு முறை திருப்பி அளிக்கும் போதும் என்னிடம் 'ரூ10/‍= பெற்றுக்கொண்டேன்' என்று ரசீது பெற்றுக் கொள்வார். நட்புக்கு நான் செய்தேன். ஒரு வேளை அவ‌ர் அந்தத் தொகையைக் கொடுக்கவில்லை என்றாலும் அவரைக் கேட்டு இருக்க மாட்டேன். ஆனால் அவர் நட்பை விட கணக்கு வழக்கில் சரியாக இருந்தார்.
இது வாழ்க்கையில் ஒரு பாடம். அதன் பின்னர் ஆழ்ந்த நட்பு எனக்கு யாரிடமும் தோன்றாமல் போயிற்று.தாமரை இலைத் தண்ணீர் போல வாழ ஆரம்பித்தேன்.அந்த வகையில் கீதையின் சாரத்தை உணர்த்திய அந்த நண்பருக்கு என் நன்றிகள்.
======================================
எனக்குத் திருமணம் ஆயிற்று.திருமணம்  ஆனாலே அடிக்கடி "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று எல்லோரும் கேட்பது வழக்கம் தானே? அப்படி அலுவலகத்தில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெகு சீக்கிரமாகவே அந்த சந்தர்ப்பமும் வந்தது. 'ஆம், விசேஷம் உண்டு!'என்று கூறிவந்தேன்.

ஒரு சக ஊழியர் என்னைத் தனியாக அழைத்துச் சென்று ரகசியமாக‌க் கேட்டார்

"ஆமாம், அந்த மூன்று நாட்கள் உன் புது மனைவிக்குத் திருமணம் ஆன பின்னர் வந்து விட்டதா? அதனை உறுதி செய்து கொண்டாயா?" என்று தூண்டித் தூண்டிக் கேட்டார்.என்ன ஒரு ஜாக்கிரதை உணர்வு. அவர் கட்டியுள்ள ஆடையையாவது அவர் நம்புவாரோ என்னமோ?

இப்படி பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தஞ்சைக்காரர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்தான். இதனால் எல்லாம்தான் எனக்கு அந்த மண்ணும் அதன் மைந்தர்களும் 38 ஆண்டுகள் வாழ்ந்தும் பிடிபடவில்லை என்றேன்.

தஞ்சை அன்பர்கள் கோபப் பட வேண்டாம்.பின்னர் ஒரு முறை பாஸிடிவ் செய்திகளைத் த‌ஞ்சையைப் பற்றிச் சொல்கிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

சகோதரிகள் பார்வதி அவர்கள் "போர் முழக்கம்' எனும் பெயரிலும் ,தேமொழி அவர்கள், 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' எனும் பெயரிலும் கவிதைத் தொகுப்பு தனுசு வெளியிடலாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்கள். என்னால் அந்த மாதிரி தொகுப்பெல்லாம் வெளியிட முடிகிறதோ இல்லையோ அது இறைவன் செயல்.ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கும் என்னுடைய ஆர்வத்துக்கும் அவர்கள் சொன்ன அந்த இரு தலைப்புகளுக்கும்  (போர் முழக்கம், காதல் வந்தால் சொல்லி அனுப்பு ) இரண்டு கவிதைகள் அனுப்பி உள்ளேன்.என்னை உற்சாகப்படுத்திய பார்வதி அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.




போர் முழக்கம்
கவிதையாக்கம்: தனுசு

ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
வேங்கைமரம் யாவும் தெய்வமரங்கள்-ஆனால்
தேடிப்பார்த்தேன் தென்படவில்லை
தெய்வத்திடமே போய்விட்டதோ?

அன்று பெண்ணாசைக்கொண்டு
காட்டிலிருந்த சீதையை
கடத்தினான் ராவணன்.
இன்று
காட்டையே கடத்துகிறானோ?
வனமெல்லாம் பாலைவனமாகிவிட்டதே!

கடத்தட்டும்!
முப்படைக் கொண்டும் கடத்தட்டும்!-ஆனால்
நான் நட்டுவளர்த்த மரத்தை
மட்டும் விட்டுவிடட்டும்!
அவை
என் ஒரு பிறப்புக்கு மட்டும்
நிழல் கொடுத்த வம்சங்களல்ல!

நாய்க்கு வெறிபிடித்தால்
வெள்ளையும் கருப்பும் ஒன்றுதான்-பண
பேய்க்கு வெறிபிடித்தால்
மரமும் மட்டையும் ஒன்றுதானோ?
போகையில் கொண்டுசெல்வது
மட்டும் போதாதா?

மண்ணாசை கொண்ட
ராவணனின் படைகள்
அழகை காட்டி சிரித்த-என்
ஊரோர மரத்தை வெட்டினால்
எனக்கு வெறி எட்டும்-என்
உயிரில் நெரிகட்டும்

பெற்றால்தான் பிள்ளையா
நட்டு வளர்த்தால் இல்லையா?
பச்சைக்கு
பாடை கட்டும் வேலை
கண் முன்னே நடந்தால்
பார்த்துக்கொண்டிருக்க நானென்னா பிணமா?

ஒரு யுத்தம் செய்ய
சத்தமாக சொல்கிறேன்!
கிளை அறுக்கும் தலையும்
வேர் அறுக்கும் உயிரும்
வீடு போய் சேராது!
சுடுகாட்டுக்கும் ஏதும் மீறாது!!

தீ திரியிட
தீம்தரிகிட
ஓம் பிளிறிட
ஓர் பிரகடனம்!-அது
போர் முரசிட-மர
வேர் அறுவடை தடைபட
தொடங்கிடும் யுத்தம் -இது
வேண்டுமா?

வளர்ந்து வாழவேண்டியது
பிள்ளைகளும் மரங்களும்
கோடாரியை புதைத்துவிட்டு
நம் குழந்தைகளை கற்றுப்போக்கில்
நம்மோடு வாழவிடுங்கள்
பிள்ளைகள் நம்மை காப்பதுபோல்
மரங்கள்
இந்த பூமியை காப்பாற்றும்.
-தனுசு-

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
கவிதையாக்கம்: தனுசு

காலையின் கதிராய்
கலைநயம் ஒன்னு
மாலையின் நிறத்தில்
மயக்குது நின்னு.

மாங்குயில் குரலில்
பாடுது கண்ணு
மார்கழி குளிறாய்
அழகிய பொண்ணு.

கோடையின் நிழலாய்
ஈரெட்டு வயசு
அவளின் பார்வை
செய்வதும் புதுசு.

இதழை விரித்து
இதயம் வருடி
என்னை கவரும்
இனிய திருடி.

வாணத்தின் வில்லாம்
மன்மதன் அம்பு
நீயதை தொடுத்தால்
இதுயென்ன வம்பு.

நூலிடை ஆடையில்
நவரச பின்னல்
நானதை நோக்கிட
நானத்தின் மின்னல்.

ஏனடி அழகி
என்னிடம் சொல்லு
என்னடி விஷயம்
தயக்கம் தள்ளு.

காதுக்குள் கேட்குது
உந்தன் துடிப்பு
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு.

கேளடி  கண்ணே
கொடுப்பேன் உயிரு
யாரடி தடுப்பார்
தெளிவாய்க்கூறு.

மாமன் முறையன்
அச்சம் விலக்கு
துனிந்து வருவேன்
நீதான் இலக்கு.

தடையும் படையும்
எனக்கில்லை பெருசு
குலமும் பலமும்
அதைவிட சிருசு.

சொடுக்கு போட்டு
சிறையை உடைத்து
ஜெயத்தில் முடிப்பேன்
மூன்று முடிச்சு.
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

WHAT IS LOVE....!?
Sent by S.Sabari Narayanan.S

When a little girl puts her energy to give her dad a kiss;That is Love
When a wife makes tea for her husband & take a sip before him ;That is Love
When a mother gives her son the best piece of cake ; That is Love
When your Friend holds your hand tightly on a slippery road ;That is Love
When your brother/sister messages you & ask if you reached home on time ;That is Love
Love is not just a guy holding a girl & going around the city!
Love is actually another name of "Care "!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி
"Pride destroys the merit of service"
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.5.12

Astrology கழுதை எப்போதும் கழுதைதான்!


இதல்லவா சிரிப்பு!
மகிழ்ச்சி குழந்தையின் கண்களிலும் வெளிப்படுவதைப் பாருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: கழுதை எப்போதும் கழுதைதான்!

Doubts: கேள்வி பதில் பகுதி 16

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினாறு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.63
C.ரத்தினவேல்

Dear Sir.

I have only one question.
According to you,உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய தசா/ புத்திகளில் ஜாதகனுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்கள். For me Sani is in Tulam (uchaam).I will be getting Sani dasa as 4th dasa.I have read and heard from astrologers that sani dasa coming as 4th dasa is not good.I would like to hear your expert comment on this.
Thanks
Rathinavel.C

4ஆவது தசையும், 6ஆவது தசையும் நன்மை அளிக்காது என்றும், ஒரு ஜாதகன் 6 தசைகளுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டான் என்றும் கூடச் சில ஜோதிடர்கள் சொல்வார்கள். எதை வைத்து அப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜோதிட நூல்களில் அதற்கான குறிப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. ஜோதிடம் பெரிய கடல். நான் க்ற்றது கைமண் அளவுதான்!

ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை வைத்துத்தான், அவற்றிற்கான தசா/புத்திப் பலன்கள் கிடைக்கும்/ நடைபெறும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். சனி உச்சம் பெற்றதற்கான அர்த்தம் வேண்டாமா? அவர் ஜாதகத்தில் தீய இடங்களுக்கான (6,8 & 12ஆம் வீடுகள்) அதிபதி இல்லை என்னும் பட்சத்தில் ஜாதகனுக்கு நன்மைகளையே வாரி வழங்குவார்!
-------------------------------------------
email.No.64
sendhil J. செந்தில்

Dear sir,
1.Navamsathil "Utchanai utchan parthal" - What is the result sir?

உச்சனை உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான் என்று யாரோ விளையாட்டாகச் சொல்லியதை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

கிரகங்களின் தன்மைகளை வைத்துத்தான் முதல் பலன். பார்வைகளை வைத்துப் பலன்கள் என்பது இரண்டாவது நிலை. ஆகவே அம்சத்தில் இரண்டு கிரகங்கள் உச்சமாக இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
அவர்கள் நன்மைகளையே செய்வார்கள் என்று நம்பிக்கை வையுங்கள்!

In Astrology, aspects are defined by the nature of the planet, and NOT the nature of the aspect. Aspects from a natural benefic strengthen a planet and aspects from a natural malefic weaken it.Planets that aspect another planet give the result of their natural tendency, and the house(s) they rules. Rather than categorizing an aspect

2. Dhumadhi ubagrahangal - Could you explain this sir?
With Kind Regards,
J.SENDHIL

உபகிரகங்கள் என்பது என்ன என்று தெரியும்.
Kaala, Mrityu, Arthaprahaara, Yamaghantaka, Gulika and Maandi என்று உபகிரகங்கள் உள்ளன! அவைகளைக் கணித்து ஜாதகத்திற்குள் கொண்டு வருவது சிரமமான வேலை
Kaala is a malefic upagraha similar to Sun.
Mrityu is a malefic upagraha similar to Mars.
Arthaprahaara is similar to Mercury.
Yamaghantaka is similar to Jupiter.
Gulika or Maandi is similar to Saturn.
ஆனால் நீங்கள் சொல்லும் Dhumadhi ubagrahangal இதைத்தான் குறிக்கின்றனவா என்று தெரியவில்லை.

ஜோதிடப் பாடங்களே புரிந்து கொள்வதற்குச் சற்றுக் குழப்பம் மிகுந்தவை. இருக்கிற குழப்பங்கள்/ சந்தேகங்கள் போதும். நீங்கள் புதிதாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். மற்றதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்!
---------------------------------------------------
email.No.65
ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை

அன்புள்ள SP.VR. Subbiah ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

1.பல ஆண்டுகளுக்கு முன் MLT [Medical Lab Technician ] ஆக இருந்த ஒருவர் எனக்கு கூறினார் ஏழில் செவ்வாய் காரரின் ( அல்லது செவ்வாய் குற்ற காரகரா என மறந்து விட்டேன் ஞாபகம் இல்லை ) இரத்தம் வகை குறிப்பிட்ட வகையைச் சார்ந்ததென்று! [எனது குருதி “O” positive. நான் மேட இலக்கினம் விருச்சிக ராசி. எட்டில் செவ்வாய் அப்பொழுது எனக்கு சோதிடத்தில் நம்பிகை இருந்தது. ஆனால் அதனை கற்க ஆர்வம் இருக்க வில்லை. எனவே எந்த வகை என நான் கவனிக்கவில்லை.
குருதி வகைக்கும் செவ்வாய் தோசதிட்கும் உள்ள தொட்ர்ர்பை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியமா. ? தெரிந்தால் அறியத் தரவும்
இப்படிக்கு
தங்கள் class room student
ஸ்ரீ(T.Sriskandarajah

ஜோதிடத்தைக் கணித்த முனிவர்கள் ரத்தத்தின் வகைகள்/பிரிவுகளைப் பற்றி எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் இடைச் சொருகலாக இருக்கலாம்! அது பற்றி நான் அறியேன்!
---------------------------------------------------
email.No.66
எழில் அரசன்

Dear Sir,

1.In your Question and Answer section, for Question No: 16. You Answered,
“Since the said house is under papa kartari yogam that house benefits was obstructed. Moreover the house lord is also debilitated.” So that house factors were denied.
My question if a house suffering from papa kartari yogam receives Guru Paarvai then will the yogam be thwarted.Else if the kaaragan of that house is in good position (means with 5 suyavargam parals) will the yogam be foiled? Will the ascendant receive the benefits of the concerned house?

யோகங்களை அலசிப் பலன் சொல்வது கடினமானது. பாப கர்த்தாரி யோகத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட வீட்டின்மேல் குருவின் பார்வை பட்டால் என்ன ஆகும் என்பது உங்களுடைய கேள்வி. பாபகாரத்தாரி யோகம் ஓடிப்போய்விடும் என்று சொன்னால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள். உங்கள் சந்தோஷப் படுத்துவதற்காக அப்படிச் சொல்ல முடியுமா? பாப கர்த்தாரி யோகம் நிச்சயமாக வேலை செய்யும். குருவின் பார்வையால் அதன் தாக்கம் குறையும். அவ்வளவுதான்.

2.One more Question if maandhi in navamsa receives the aspect of Guru, will the effect of maandi be mitigated or that concerned house will be relieved by the effects of maandhi?

மாந்தியுடன் வேறு நல்ல/சுபக் கிரகங்கள் சேர்வதால், மாந்தி நல்லவனாக மாறமாட்டான். பார்வை பட்டாலும் நல்லவனாக மாறமாட்டான். அந்த இடத்திற்கு உரிய பலன்கள் ஜாதகனுக்குக் கிடைப்பதற்கு மாந்தி தடையாக இருக்கும். கழுதை எப்போதும் கழுதைதான்; அது ஒரு நாளும் குதிரையாக மாறாது! Donkey is always a donkey and It will not become a horse! மாந்தி எப்பொதும் மாந்திதான்!
---------------------------------------------------------------
(தொடரும்)

இன்றைய பொன்மொழி
The only way to get the best of an argument is to avoid it.
              
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!