மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.6.08

நீங்கள் புத்திசாலியா? பதில் சொல்லுங்கள்!

கீழே பத்துக் கேள்விகள் உள்ளன.

எலலாம் சும்மா முடிச்சுக் கேள்விகள். That is all the questions are with a
knot

பத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை! ஐந்தைச்
சாய்சில் விட்டு விடலாம்.

ஒவ்வொரு சரியான பதிலிற்கும் 20 மதிப்பெண்கள்.

100/100 எடுத்துவிட்டால் நீங்கள் புத்திசாலிதான் சந்தேகமில்லை. பத்துக்
கேள்விகளுக்குமே சரியான பதிலைச் சொல்லி விட்டால் நீங்கள் அதி புத்திசாலி!.
அதிலும் சந்தேகம் இல்லை!

எங்கே பதில்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்!

1. உலகில் தனித்தே நிற்கக்கூடியது எது?

2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?

3. நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம் என்று பதில் சொல்ல
முடியாது?

4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்- ஏவாளிற்கும்
இல்லை! அது என்ன?

5, நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது எது?

6. இதை அளக்க முடியும்.ஆனால் இதற்கு நீளம்,அகலம், உயரம் கிடையாது
அது என்ன?

7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?

8. இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது
இயற்கையின் நியதி! அது ஏன்?

9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?

10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?

வாத்தியார் இரண்டு நாட்கள் விடுமுறையில் ஊருக்குப் போகின்றார்.
அதனால் பின்னூட்டப் பெட்டி பூட்டப்பட்டுள்ளது.

வழக்கம்போல விடைகளை எழுதி பின்னூட்டப் பெட்டியில் போட்டுவிடுங்கள்.
அது வெளிவர வில்லையே என்று விசனப் படாதீர்கள்

பின்னூட்டப் பெட்டி 1.7.2008 செவ்வாய்க் கிழமை மாலை திறக்கப்படும்.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் அப்போது தெரிய வரும்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26.6.08

எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ் - அடுத்த பகுதி!

நாட்டு வைத்தியர் ஒருவர் இருந்தார். நாட்டு வைத்தியம் என்றால் மூலிகைகளைக்
கொண்டு வைத்தியம் செய்பவர். அவர் இருந்த இடம் ஒரு கிராமம்.

கிராமத்துக் கதை என்பதையும், வருடத்தையும் வைத்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்
இது என் சொந்த சரக்கல்ல - என் தந்தையார் சொல்லிய கதைகளில் ஒன்று என்று!

கதை நடந்த காலம் ‘சபாபதி' திரைப்படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்த காலம்.
அதாவது 1941ஆம் வருடம்.

அந்தப் படத்தில் பள்ளிக்கூட வாத்தியார் பாத்திரத்தில் வரும் திருவாளர் கே.சாரங்கபாணி
போலவே நமது வைத்தியரும் அச்சு அசலாக அப்படியே இருப்பார். வயது 50

அக்கம் பக்கத்துக் கிராமத்துக்காரர்கள் எல்லாம் தேடி வருவார்கள். அந்தக் காலத்தில்
மாதம் முப்பது ரூபாய் கிடைத்தாலே பெரிய வருமானம். அப்போது விலைவாசியும்
நாம் நம்ப முடியாத அளவிற்குக் குறைவாகவே இருந்தது.

ஒரு அணாவிற்கு (இன்றைய மதிப்பு ஆறு நயா பைசா) நாஷ்டாவை முடித்து விடலாம்
நாஷ்டா என்றால் காலைப் பலகாரம்.மற்றதை நீங்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்

வைத்தியர் நாளொன்றுக்கு பத்து ரூபாய் பார்த்துவிடுவார். பத்து ரூபாய் என்பது 160 அணா.
தலைக்கு இரண்டணா நாலணா என்று வருகிறவர்கள் கொடுப்பார்கள்

அதோடு சிலர், அரிசி, பருப்பு, புளி, காய்கறி என்று தங்கள் தோட்டத்தில் விளயும்
பொருட்களையும் கொண்டு வந்து கொட்டிவிடுவார்கள்.

அதனால் வைத்தியர் மதிப்பு, மரியாதை, செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தார்

வீட்டின் முன் பகுதியில் கிளினிக். தன்னுடைய ஒரே மகனையும் தயார் செய்து
வைத்திருந்தார். தந்தையோடு சேர்ந்து அவனும் வைத்தியம் பார்ப்பான்

வைத்தியர் ஒரு சீட்டாட்டப் பைத்தியம். மூலிகைகளைத்தவிர அவர் மண்டையில்
எப்போதும் கிங், க்யூன், ஜாக்கிதான் ஓடிக்கொண்டிருக்கும்.

அலாரம் வைக்காமலேயே காலை ஐந்து மணிக்கெல்லாம் டானென்று எழுந்து விடுவார்.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, உள்ளூர் மாரியம்மன் கோவிலைக் கடனே
என்று (மனைவிக்காக) சுற்றி வந்துவிட்டு, காலைப் பலகாரம், காப்பித் தண்ணி
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, சரியாக ஏழு மணிக்கெல்லாம் தன் தொழிலைத்
துவங்கி விடுவார்.

பத்து மணிவரைதான் வைத்தியம் பார்ப்பார்.அதற்குப் பிறகு சீட்டாடக் கிளம்பி விடுவார்.
அதற்குப் பிறகு கூட்டம் வராது. அப்படியே தப்பித்தவறி வருகிறவர்களுக்கு அவருடைய
புத்திரன் தனக்குத் தெரிந்த மருந்தைக் கொடுத்து அனுப்பி விடுவான். நாட்டு மருந்து
என்பதால் பக்க விளைவுகள் (Side effects) வராது. பயமில்லை!

அவர் வீட்டு மாடியில்தான் சீட்டாட்டம் நடக்கும். ஜமக்காளம் விரித்து அமர்க்களமாக
நடக்கும். ஊரில் உள்ள மிட்டா, மிராசுகள் எல்லாம் கூடி விடுவார்கள். அந்தக்
கால கட்டத்தில் வேலை வெட்டியில்லாத பணக்காரர்கள் (நிலச்சுவான்தாரர்கள்)
நிறைய இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பகலில் இதுதான் வேலை!

மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
என்று வைத்தியர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்

வைத்தியருக்கு லாப ஸ்தானத்தில் 40 பரல்கள்.அதோடு லாபாதிபதியும், லக்கினாதிபதியும்
கூட்டணி போட்டு லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலிருந்து லக்கினத்தை நிரந்தரமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் வைத்தியருக்கு சீட்டாட்டத்தில் பணம் கொட்டும்

வருகின்ற பணத்தை அப்படியே அன்று இரவு வீட்டு அம்மணியிடம் கொடுத்துவிடுவார்
அதனால் அந்த அம்மணியும் அவருடைய ஆட்டங்களுக்கு ஒன்றும் சொல்வதில்லை!

அடிப்படைத் தகவலையெல்லாம் கொடுத்துவிட்டேன். இனி வருவதுதான் மெயின்
ஸ்டோரி.
-------------------------------------------------------------------------------------
நம்ம வைத்தியர் மருந்து அரைப்பதற்கு இளைஞன் ஒருவனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

காலை 9 மணிக்கு முதல் மாலை ஐந்து மணி வரை மாங்கு மாங்கென்று மருந்தரைப்பது
தான் அவன் வேலை. விதம் விதமான மருந்துகள்.ஆசாமி சின்சியாரானவன். அது மாதிரி
ஆளெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் இப்போது கிடைக்காது.

அரைப்பது அவன் வேலை. கலக்கி ஜாடிகளில் வைப்பது தர்மபத்தினியின் வேலை.

அரைத்த மருந்தில் ஒரு கரண்டி அளவிற்குத் தட்டில் எடுத்துக் கொண்டு வந்து
அரைத்தது போதுமா என்று கேட்பான்.

வைத்தியர் திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து,“பத்தாது இன்னும்
கொஞ்சம் அரை!” என்பார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அவன் காட்டும்போது
அதே போலத் திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து விட்டு,
“வெண்ணை போல அரைடா விளக்கெண்ணெய்!” என்பார்.

இரண்டு மணி நேரத்தில் முதல் மருந்து முடிந்து அடுத்த மருந்தை அவன் அரைக்கும்போதும்
இதே லோலாயி. எல்லாம் சீட்டாட்டம் படுத்தும் பாடு. அதோடு ஒரு நாளைக்கு அவனுக்கு
நான்கு மணி நேரம்தான் வேலை இருக்கும் என்றாலும், அவனுக்கு மாலை ஐந்து மணி
வரை வேலை சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் இந்த வெண்ணைப் புராணம்.

ஒரு ஆண்டாக வேலை பார்த்தவனுக்கு, ஒரு நாள் கடுப்பாகி விட்டது.

இன்றைக்கு இந்த வெண்ணெய்ப் புராணத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று எண்ணியவன்
ஒரு தட்டில் கால் கிலோ அளவிற்கு சுத்தமான வெண்ணெயையே வைத்துக் கொண்டு
போய்த்தட்டை நீட்டினான்.

நம்ம வைத்தியரும் வழக்கப்படி திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து,
“வெண்ணை போல அரைடா விளக்கெண்ணெய்!” என்றார்

கோபம் கொண்ட அவன், தட்டைச் சீட்டாடிக் கொண்டிந்த அத்தனை பேர்களுக்கும்
நடுவில் வைத்து விட்டுக் கனத்த குரலில் சொன்னான்:

“வெண்ணெயை எப்படி அய்யா வெண்ணை மாதிரி அரைக்க முடியும்? கடவுளே வந்து
அரைத்தாலும் அரைக்க முடியுமா? இப்போது சொல்லுங்கள் நான் விளக்கெண்ணையா?
இல்லை நீங்கள் விளக்கெண்ணையா?”

வைத்தியர் திகைத்துப் போய் விட்டார். அவன் அப்படிச் செய்வான் என்று அவர் எதிர்
பார்க்கவில்லை. அதோடு அங்கேயிருந்தவர்களெல்லாம் சிரிக்க, அவருக்கு வெட்கமாகி
விட்டது.

அவன் தொடர்ந்து சொன்னான்., “அய்யா,வைத்தியம் பார்ப்பது தெய்வத் தொழில்.கடவுள்
கொடுத்த வரம். அதை ஒழுங்காகப் பார்க்காமல் இப்படி அநியாயமாகச் சீட்டாடிக்
கொண்டிருக்கிறீர்களே! கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார். என்னை போன்ற ஏழை
எளியவர்களை வதைக்காதீர்கள், போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ,
படிப்பில்லாமல் உடல் உழைப்பால் வயிற்றைக் கழுவ வேண்டியதிருக்கிறது. அடுத்த
பிறவியில் நீங்கள் செக்கு மாடாகப் பிறந்து அவஸ்தைப் படப் போகிறீர்கள்! இந்த
வேலை பார்பதற்குப்பதில் தெருவில் குப்பை கூட்டிப் பிழைக்கலாம். ஊருக்கு உதவி
செய்த புண்ணியமாவது கிடைக்கும். வருகிறேன்.”

அடுத்த நொடியில் அவன் வெளியேறிவிட்டான்.

அங்கிருந்த அனைவரின் மண்டையிலும் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது!

யார் முகத்திலும் ஈயாடவில்லை!

(தொடரும்)

பதிவின் நீளம், மற்றும் என்னுடைய தட்டச்சும் நேரம், உங்களுடைய பொறுமை
அனைத்தையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!

தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, இன்னும் இரண்டு பதிவுகள் இத்தலைப்பில்
உள்ளன. நிறைவுப் பதிவில் அது வரும்!

வாழ்க வளமுடன்!

25.6.08

தேவதையின் பெயர் தெரியுமா?

எத்தனை எத்தனை தேவதைகள்?

கடவுளே இந்த தேவதைகளையெல்லாம் நீ படைக்காமல் இருந்திருந்தால்
.....................நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது!

இந்த உலகம் மொத்தமும் போர்க்களமாகவே போயிருக்கும்!

அன்பை அறியாமல் இருந்திருப்போம்!

பாசத்தை உணராமல் போயிருப்போம்!

நீ எங்களைப் படைக்கும் போது கொடுத்த இந்தப் பரிசிற்கு நிகரான
பரிசு இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!

அதனால் எங்கள் அறிஞன் ஒருவன் எழுதினான் போலும்:
கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் இவளே என்று!

அந்தத் தேவதை யார்? பெயரென்ன?

யோசித்துவிட்டு கர்சரைக் கீழே கொண்டுபோய் உங்கள் ஊகம் சரிதானா
என்று பார்த்துக்கொள்ளுங்கள்!

V

V

V

V

V

V

V

V

V

V

V

V















++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊகம் சரியாக இருந்ததா?

இது வகுப்பறையின் 150வது பதிவு!
அதனால் ஒரு சிறப்புப் பதிவு - தேவதையைவைத்து!

வாழ்க வளமுடன்!

24.6.08

எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு சொல்ல முடியுமா?


எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு சொல்ல முடியுமா?

ஜோதிடம் கற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலைவிட, ஓரளவு கற்றுக்கொண்ட பின்
ஏற்படும் சிக்கல் அவஸ்தையாக இருக்கும். அதாவது பல சமயங்களில் இக்கட்டாக
இருக்கும்.

இந்த இக்கட்டு என்பது எங்கள் பகுதியில் (காரைக்குடி) உள்ள வழக்குச் சொல்!

"என்னடா, உன்னை நம்பி வந்தேன் பெரிய இக்கட்டில மாட்டிவிட்டாயே" என்று
ஒருவர் சொன்னால், இருக்கவும் முடியாமல், தப்பிக்கவும் முடியாமல் உள்ள
சூழலில் அவர் மாட்டிக்கொண்டு விட்டார் என்று பொருள்!

அதாவது விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாத சூழ்நிலை!

ஆங்கிலத்தில் சொன்னால் Bottleneck Situation!

அந்தக் காலத்தில் கோலி சோடா இருக்கும். அதன் கழுத்துப் பகுதியில் இருக்கும்
கோலிக்குண்டு உள்ளேயும் போகாமல், வேளியேவும் வந்து விழுகாமல் இருக்கும்
அதை நினைவில் கொள்ளலாம்.

அதற்கு ஒரு கதை சொல்கிறேன் பாருங்கள். இந்தக் கதை என் தந்தையார்
சொல்லக் கேட்டது. சொன்னது என்னிடம் அல்ல! அவர் தன் நண்பர்களிடம்
சொல்லிக் கொண்டிருக்கும்போது கேட்டது. கதை கொஞ்சம் 'அ' கதை!
அதனால்தான் இந்த டிஸ்க்ளைமர் அல்லது உங்கள் மொழியில் டிஸ்கி!
--------------------------------------------------------------------------------------------
காலம்: 100 வருடங்களுக்கு முற்பட்டது

இடம்: ஒரு செழிப்பான கிராமம்

நாயகர்: பெரிய நாட்டு மருத்துவர்.கோட்டா தொந்தரவு இல்லாத காலத்தில்
படித்தவர். அனுபவம் மிக்கவர், கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர்.
சுற்றியுள்ள 18 பட்டிக் கிராமங்களுக்கும் அவர்தான் மருத்துவர்.
வேறு ஆள் கிடையாது.அறுவை சிகிச்சையைத் தவிர மற்ற எல்லாச்
சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யக்கூடியவர். வயது 50.

உப செய்தி: 50 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்திற்கு சென்றால்தான்
வேறு வைத்தியர்கள் கிடைப்பார்கள். ரோடு மண் ரோடு. வாகனம்
மாட்டு வண்டிகள் மட்டுமே! இதைக் கவனத்தில் கொள்ளவும்

நாயகி: பூவாத்தாள். செடியில் இருந்து பறித்த பூவைப்போன்று இருப்பாள்
வயது 22. மருத்துவருடைய மருமகள்

பில்ட் அப் கொடுத்து விட்டேன். இப்போது கதைக்குப் போவோம்
-------------------------------------------
பூவாத்தாளுக்குத் தொடையில் பெரிய கட்டி. அது வீங்கி எழுமிச்சம்பழ
அளவிற்குப் பெரிதாகி, பழுத்து உடையும் நிலையில் இருக்கிறது.
நான்கு நாட்களாகத் தாங்க முடியாத வலி!.

கணவன் வேறு ஊரில் இல்லை! தனியாக அமர்ந்து கண்ணீரில் கரைந்து
கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்த அவளுடைய தோழி, விசனத்திற்குக் காரணம் கேட்க
விவரத்தைச் சொன்னதோடு, தன்னுடைய சேலையை விலக்கி, அவளுக்கு
அந்தக் கட்டியைக் காட்டவும் செய்தாள்.

தோழி அரண்டு விட்டாள், "என்னடி இவ்வளவு பெரிதாக வீங்கி உடையும்
நிலையில் உள்ளது. சுத்த பைத்தியக் காரியாக இருக்கியே - உன்
மாமனாரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே?
சொல்லாம அழுதுக்கிட்டிருந்தா சுகமாயிருமா?"

"எப்படியடி காட்டுவேன், அவர் என் மாமனார் ஆயிற்றே?"

"மாமனார் என்று ஏன் நினைக்கிறாய்? வைத்தியர் என்று நினத்துக் காட்டு!"

"மனசு என்று ஒன்று இருக்கிறதே - எப்படிக் காட்ட முடியும்? காட்டிவிட்டு
அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு குறுகுறுக்குமே? அதோடு இந்த
கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய
பார்வையை எப்படித் தாங்குவேன். உனக்கு இப்படி ஒரு நிலைமை என்றால்
என்ன செய்வாய்? அதற்கு முதலில் பதில் சொல்லடி!"

தோழி மெளனமாகி விட்டாள்.

அழுதுகொண்டே தொடர்ந்து பூவாத்தாள் சொன்னாள்:

"எல்லாம் என் தலை எழுத்து. இப்படி ஒரு இக்கட்டு. காட்டினால் மானம்
போகும்; காட்டாவிட்டால் பிராணன் போகும்!"
--------------------------------------------------------------------
நான் மாட்டிக் கொண்ட இக்கட்டு ஒன்றைச் சொல்கிறேன்

புதுசா கல்யாணம் செய்துகொண்டவன் கையும், புண் வந்தவன் கையும்
சும்மா இருக்காது என்பார்கள் (அதெல்லாம் பதிவில் விவரமாகச் சொல்ல
முடியாது. ஆகவே புரிந்து கொள்ளுங்கள்) அதேபோல ஜோதிடம் கற்றுக்
கொண்டவன் கையும் சும்மா இருக்காது.

யார் கிடைத்தாலும் அல்லது எந்த ஜாதகம் கிடைத்தாலும் நோண்டிப்
பார்க்கச் சொல்லும்.

நான் தொடர்ந்து சொல்லப்போவதேல்லாம் 15 அல்லது 20 வருடங்களுக்கு
முன்பு நடந்த சம்பவங்கள்
--------------------------------------------------------------------
ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் , நேற்று என்னை நாய்
கடித்து விட்டது!” என்றார்.

என் போதாத காலம், சும்மா இருக்காமல், அவரிடம் கேட்டேன்,” உங்களுக்கு
ராகு திசை சுய புத்தி நடக்கிறதா?”

“ஆமாம் எப்படி கரெக்டாகச் சொல்கிறாய்?”

“ராகு திசை சுய புத்தி நடந்தால், ஏதாவது ஒன்று கடிக்கும், அதுதான் கேட்டேன்”

“ஏதாவது ஒன்று என்றால்?”

“நாய், பாம்பு, தேள், பூரான் இப்படி ஏதாவது ஒன்று கடிக்கும். ஜாதகத்தின்
அமைப்பை வைத்து, கடிகள் வித்தியாசப்படும்!”

அவ்வளவுதான் ஜேட் வேகத்தில் தனது வீட்டிற்குப் போய்விட்டு பத்தே நிமிடங்களில்
திரும்பி வந்து விட்டார்.

அவர் கையில் ஒரு தடிமனான நோட்டுப் புத்தகம். அதில் அவருடைய குடும்பத்து
உறுப்பினர்களின் ஜாதகங்கள்.

நான் தப்பிப்பதற்காக, ”எனக்கு முழுமையாக ஜோதிடம் தெரியாது அமெச்சூர்,”
என்று சொல்லிப் பார்த்தேன்.

“தெரிந்தவரை பார்” அவர் விடுவதாக இல்லை!

கடைசியில் அன்றையப் பொழுதில் என்னுடைய நேரத்தில் நான்கு மணிகளை
இரண்டு ஃபில்டர் காப்பியுடன் சேர்த்துக் குடித்துவிட்டுத்தான் அவர் என்னை
விட்டார்!
--------------------------------------------------------------
அதேபோல இன்னொரு சமயம் எனக்கு நன்கு பரீட்சையமான நண்பர்
தன் சகோதரனுடன் என்னைத் தேடிவந்தார்.

வந்தவர் தன் தம்பியை அறிமுகப் படுத்துவிட்டு, மகாதேவி படத்தில் பி.எஸ்.வீரப்பா
தன் இடுப்பிலிருந்து பட்டாக் கத்தி ஒன்றை உருவி மிரட்டுவதைப் போல, ஒரு
ஜாதகத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் சொன்னார், “இந்த ஜாதகத்தில்
ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன என்று கண்டுபிடி பார்க்கலாம்?”

அவருடைய தம்பி மகனின் ஜாதகம் அது. அந்தப் பையனுக்கு வயது இருபது.

பிரச்சினை என்றால், மாந்தி இருக்கும் இடத்தைத்தான் பார்க்க வேண்டும்
அந்தப் பையனின் ஜாதகத்தில் ஐந்தில் மாந்தி. ஐந்தில் மாந்தி இருந்தால்
மன நோய் ஏற்படும் அபாயம் உண்டு. ஆறாம் வீட்டு அதிபதி (Sixth lord -
lord for diseases) எங்கே இருக்கிறார் என்று பார்த்தேன். அவர் தன்னுடைய
வீட்டிற்குப் பின் வீட்டில் (That is 12th house from his own house) அதாவது
அதே ஐந்தாவது வீட்டில் மாந்தியுடன் சேர்ந்து இருந்தார். இருவரும் ஒன்று
சேர்ந்தால் மனநோய்தான்!

உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be a
mentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)

இருவரும் திகைத்துப்போய் விட்டார்கள்

“எப்படிச் சொன்னாய்?”

“ஜாதகம் அதைத்தான் சொல்கிறது!”

(தொடரும்)

பதிவின் நீளம், மற்றும் என்னுடைய தட்டச்சும் நேரம், உங்களுடைய பொறுமை
அனைத்தையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!

தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, அதுவும் அடுத்த பதிவில்
________________________________________________________

Request


Many people are asking my contact details and wants to speak with me either over
phone or in person. I do not have free time to speak with anybody for consultation or
discussion or clarification.

I know one contact will multiply by several times and totally disturb my routine
business work

I am writing in blogs out of my own interest

I am not a professional astrologer and I learned a portion of astrology only out
of interest

I am writing in blogs to share my knowledge and experiences with my
beloved blog readers like you!. In turn I never expect anything from anybody

I request all, particularly my blog readers to send their queries only
through blog comment box and if it is personal through email!

Please understand my problem and co-operate with me!

Those who know my phone number please do not give it to your friends!

Thanks & regards
SP.VR.Subbiah

வாழ்க வளமுடன்!

22.6.08

Evidence இருந்தால் பேசு, இல்லையென்றால் பேசாதே!

Evidence இருந்தால் பேசு, இல்லையென்றால் பேசாதே!”

உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
-குறள் 339

இறப்பு என்பது உறங்குவதைப்போன்றது
பிறப்பு என்பது உறங்கியவன் விழிப்பதைப் போன்றது
என்றார் வள்ளுவர் பெருந்தகை!

என்ன எளிமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் வள்ளுவர்
------------------------------------------------------------
”வள்ளுவர் சொன்னால் சொல்லிவிட்டுபோகிறார். Evidence இருந்தால் பேசு
இல்லையென்றால் பேசாதே!”

ஆகா, அது இல்லாமலா? பதிவுலகில் மூன்று வருடமாக சந்து சந்தாக, வீடு வீடாக
ஜன்னல் ஜன்னல் சுற்றியும், எட்டிப் பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்.

எனக்குத் தெரியாதா - என்ன நடக்கும் என்று?

எல்லாம் வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாகத் தருகிறேன்!

இதனுடன் சம்பந்தப் பட்ட முன்பதிவைப் படித்தீர்களா? சுட்டி இங்கே!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்குத் தெரியாத எதையுமே நான் எழுதுவதில்லை! அதுபோல சிக்கலான
மேட்டர்களுக்கு ஆதாரத்தைப் பிடித்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுதுவேன்

பதிவுலகில் உள்ள ஒரே கோளாறு இங்கே சராசரி வயது 32 தான். அந்த வயதில்
இதையெல்லாம் படிக்க வைப்பதே பிரம்மப் பிரயத்தனம்.

தேவாரப் பாடலை எழுதிப் பதிவு போட்டால் 10 அல்லது 20 பேர்கள் படிப்பார்கள்

அதே நேரத்தில்

“சட்டை போட்ட சாத்துக்குடி
சரசம் பண்ண சேத்துக்கடி”

என்ற பாடலைப்போட்டு கூடவே நாயகனும் நாயகியும், ஆடி, ஒருவரை ஒருவர்
பிராண்டும் காட்சியைப் படமாகப் போட்டு, அதற்கு, ”சட்டைபோட்ட சாத்துக்குடியின்
சரசம்” என்று சுண்டி இழுக்கும் தலைப்பையும் கொடுத்துப் பதிவு போட்டால்,
அந்தப் பதிவு பதிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சூடான இடுகைகள் பகுதிக்குப்
போய்விடும்.

மேலும் அதை அங்கேயே மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கக் கூடிய அளவிற்குப்
பின்னூட்டட்ங்களும் மலை போலக் குவிந்து விடும்.

இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது அதுவே 12/20 ஹிட்ஸ் வாங்கி வாசகர்கள்
பரிந்துரைப் பகுதியிலும் போய் உட்கார்ந்து கொண்டுவிடும்.

நான் என்ன செய்வது? எனக்குக் கணினி, தமிழ் தட்டச்சும் வசதி,வலைப்பூ, தமிழ்மணம்
எல்லாம் டிக்கெட் வாங்க வேண்டிய காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டும். தூள் கிளப்பியிருப்பேன்.

இப்போதும் அது போல எழுத முடியும். ஆனால், “யோவ், வாத்தி (யார்) உனக்கு
இதெல்லாம் தேவையா?” என்று பின்னூடம் வரும் அபாயம் இருக்கிறது.

இங்கே மிகவும் தெரிந்த பதிவர் ஒருவர் இருக்கிறார். அவர் வந்து உடனே பின்னூட்டம்
போடுவார். ”சார் உங்களுக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா?”

அவருக்காக முன்கூட்டியே இது:

ஐம்பது வயதிற்கு மேல் டிக்கெட்டும், போர்டிங் பாஸ்சும் (Boarding Pass) நம்மைக்
கேட்காமலேயே எப்போது வேண்டும் என்றாலும் வரும். கூடவே நம்மை வலுக்கட்டாயமாக
அனுப்பி வைக்க Undertaker Office இல் இருந்து ஆட்களும் வருவார்கள்.
------------------------------------------------
சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Illustrated Weekly Of India (Times of India qroup) வார இதழில்
(Dated 1st December'1985) மறுபிறவியைப் பற்றி ஒரு சிறப்பிதழ்
வெளியிட்டுருந்தார்கள்.

22 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரைகள் இவைகள். அதை நினைவில்
வையுங்கள்!

அதில் அசத்தலாகப் பல கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்கள்.
அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறியத்தருகிறேன்:

அந்த வார இதழைப்பற்றி அனைவருக்கும் தெரியும். மெகா சைஸில்
12 பக்கங்களைக் கட்டுரைகளாலும் படங்களாலும் நிறைத்திருந்தார்கள்
இடம் மற்றும் பதிவின் நீளம் கருதி சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்.
------------------------------------------------------------

இந்தப் படத்தில் உள்ள குழந்தை, படத்தில் உள்ள பெரியவரின் அம்மா -
அதாவது முன் பிறவியில் அந்தக் குழந்தை அவரைப் பெற்ற தாய்!

நம்ப முடிகிறதா?
-----------------------------------------------------------------------------

ஐந்து வயதிலேயே அந்தக் குழந்தைக்குத் தன் முன்பிறவி நினைவுகள் மலர,
பல போராட்டங்கள், சோதனைகளுக்குப் பிறகு தன் முன் ஜென்ம மகனை,
குடும்பத்தினரைத் தேடி வந்து விட்டது!

அவரும், அவரது சகோதரர்களும் அதிர்ச்சி கலந்த இன்பத்துடன் அதை
ஏற்றுகொண்டு விட்டார்கள்.

"My mother has come back!" என்னும் தலைப்பில் அவர் பல உண்மைகளைச்
சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

முத்தாய்ப்பாக அவர் சொல்கிறார்:

யாருக்கும் தெரியாத, யாரும் துப்பறிந்து அறிய முடியாத எங்கள் குடும்ப
ரகசியங்களை அந்தக் குழந்தை சொல்லியவுடன்தான் நாங்கள் முழுமையாக
உணர்ந்தோம்.

"When people heard that Sakshi was from a poor family, they all
suggested that I get my head examined. But I know how honest and
innocent her mother is. She or her people cloud never have
made up all this. Besides, which all the evidence I could have
possibly wanted to ascertain that Sakshi is really my mother
reincarnated is staring me in the face - personal details given by the
girl which no amount of research or spying by outsiders could have
ever produced. To deny everything and harbour thoughts of being
cheated is absolutely ridiculous!"

மேலும் படிக்க கீழே தந்துள்ளேன். படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்
படங்கள் பெரிதாகத் தெரியும்!




Cover of the cover story

Opening Page

Second Page

1

2

3

4


Sakshi's Story First Page

Box information 1

Son's statement by his reincarnated mother

Another interesting detail


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுபோல இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன!
போதும் என்றால் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் அவற்றையெல்லாம்
கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.

ஒரு முக்கியமான விஷயம், இதையெல்லாம் படித்துவிட்டு, சிலர்
இதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லது உட்டாலக்கடி என்று சொல்லக்கூடும்
அப்படி சொன்னால் எனக்கு வருத்தம் வராது! ஏனென்றால் நான்
எதையும் எதிர் பார்த்து இவற்றை எல்லாம் பதிவில் இடவில்லை!
அதெல்லாம் எனக்குப் பழகியதுதான். ஆகவே மறுப்புத் தெரிவிக்கின்றவர்கள்
பின்னூட்டத்தில் தெரிவித்துவிட்டுப் போகலாம்.

அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
எழுதவைக்கும்!:-))))

நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா
----------------------------------------------------------
கீழே உள்ளது கொசுறு!
முடிந்தால் படிக்கலாம். இல்லையென்றால் விட்டு விடலாம்

Hinduism

Reincarnation and Hinduism

In India the concept of reincarnation is first recorded in the Upanishads (c. 800 BCE),
which are philosophical and religious texts composed in Sanskrit.
According to Hinduism, the soul (atman) is immortal, while the body is subject
to birth and death.
The Bhagavad Gita states that:
Worn-out garments are shed by the body; Worn-out bodies are shed by the dweller
within the body. New bodies are donned by the dweller, like garments.
The idea that the soul (of any living being - including animals, humans and plants)
reincarnates is intricately linked to karma, another concept first introduced in the
Upanishads. Karma (literally: action) is the sum of one's actions, and the force that
determines one's next reincarnation. The cycle of death and rebirth, governed by
karma, is referred to as samsara.

Hinduism teaches that the soul goes on repeatedly being born and dying. One is
reborn on account of desire: a person desires to be born because he or she wants to
enjoy worldly pleasures, which can be enjoyed only through a body. Hinduism does
not teach that all worldly pleasures are sinful, but it teaches that they can never bring
deep, lasting happiness or peace (ānanda). According to the Hindu sage
Adi Shankaracharya - the world as we ordinarily understand it - is like a dream:
fleeting and illusory. To be trapped in Samsara is a result of ignorance of the true
nature of our existence.

After many births, every person eventually becomes dissatisfied with the limited
happiness that worldly pleasures can bring. At this point, a person begins to seek
higher forms of happiness, which can be attained only through spiritual experience.
When, after much spiritual practice (sādhanā), a person finally realizes his or her own
divine nature—ie., realizes that the true "self" is the immortal soul rather than the
body or the ego—all desires for the pleasures of the world will vanish, since they will
seem insipid compared to spiritual ānanda. When all desire has vanished, the person
will not be reborn anymore.

When the cycle of rebirth thus comes to an end, a person is said to have attained
moksha, or salvation.[8] While all schools of thought agree that moksha implies the
cessation of worldly desires and freedom from the cycle of birth and death, the exact
definition of salvation depends on individual beliefs. For example, followers of the
Advaita Vedanta school (often associated with jnana yoga) believe that they will spend
eternity absorbed in the perfect peace and happiness that comes with the realization
and that the immortal soul is part of that existence. The followers of full or partial
Dvaita schools ("dualistic" schools, such as bhakti yoga), on the other hand, perform
their worship with the goal of spending eternity in a loka, (spiritual world or heaven),
in the blessed company of the Supreme being (i.e Krishna or Vishnu for the
Vaishnavas and Shiva for the dualistic schools of Shaivism)

வாழ்க வளமுடன்!

மறுபிறவியைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மறுபிறவியைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?

”மறுபிறவி என்பது இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். அதைத் தெரிந்து
கொண்டு என்ன ஆகப்போகிறது?”

“பைசா பிரயோஜனம் இல்லாத பதிவை எழுதிக்கொண்டிருக்கிறாய்? மாய்ந்து மாய்ந்து
பல பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறாயே - அவற்றால் என்ன பயன்? அந்த
நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாமே? நான்கு காசு அதிகமாகச் சம்பாதிப்
பதில் உன்னுடைய முனைப்பைக் காட்டலாமே?”

“உடல் முழுவதும் விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு மண்ணில் உருண்டாலும்
உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும்' என்று நீதானே சொன்னாய். அதனால் வருகிற
பணம் வரட்டும் என்று இப்போதெல்லாம் பணத்திற்காக அலைவதை நிறுத்திவிட்டேன்”

“வேறு எதை நிறுத்தினாய்?

“பலவற்றை நிறுத்தி விட்டேன். அவற்றையெல்லாம் பதிவில் சொல்ல முடியாது!”

“எப்போது நிறுத்தினாய்?”

“நாற்பது வயதில் நிறுத்தினேன். நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது!”

“அதென்ன கணக்கு நாற்பது வயது?”

“கண்ணதாசன் சொன்னார் - அனுபவம் என்பது சீப்பு; அது தலை வழுக்கையான
பிறகுதான் கிடைக்கும் என்று - எனக்கு நாற்பது வயதில்தான் சீப்புக் கிடைத்தது.
அதற்குள் பாதித்தலை வழுக்கையாகிவிட்டது. மீதித் தலையையாவது வருந்திக்
காப்போம் என்று நிறுத்திவிட்டேன்”

“ஓஹோ.. அனுபவம் பெற்று விட்டாயா? சரி, இப்போது சொல் - உலகில் எது நிலையானது?”

“நிலையானது எதுவும் இல்லை! நிலையாமைதான் நிலையானது - uncertainty is certain!"

“அதே கண்ணதாசன் உடமைகளைப் பற்றிச் சொன்னது தெரியுமா?”

“தெரியாது! சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்”

”ஒரு மனிதன் தன்னுடைய சொத்துக்களைப் பற்றிப் பெருமையாகச் சொன்னபோது,
கண்ணதாசன் சொன்னார் - உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை; நீயென்ன
உடமைகளைப் பற்றிப் பேசுகிறாய்? உன் ஆத்மா வாடகை வீட்டில் குடியிருக்கிறது.
அந்த வீட்டை ஒரு நாள் அது காலி செய்துவிட்டுப் போகவேண்டும் - தெரியுமா?”

“ஆமாம் படித்திருக்கிறேன்”

“அந்த ஆத்மா எங்கே இருந்து வந்தது? எங்கே போகிறது? என்பதுதான் இந்த மறுபிறவி
வியாக்கியானங்கள். அதையும் படி!”

"படித்தால் நம்பிக்கை வருமா?”

”நீ நம்புவதால் யாருக்கும் லாபம் இல்லை!; நம்பாவிட்டாலும் யாருக்கும் நஷ்டமும் இல்லை!
உன் பாடு உனக்கு; எழுதியவன் பாடு எழுதியவனுக்கு!”
------------------------------------------------------------------
மறுபிறவி என்பது ஒரு நம்பிக்கை! ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய உடல் அழிந்து
விடுகிறது. ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை! அந்த ஆன்மா முன் கர்மவினைகளுக்கேற்ப
வேறு ஒரு உடம்பில் ஐக்கியமாகி ஒரு புதுப்பிறவி எடுக்கிறது. அந்தப் புதுப்பிறவி மீண்டும்
மனித ஜென்மமாகத்தான் இருக்கும் என்பதில்லை.

டாபர்மேன் நாய் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறக்கலாம். மனிதன் அடுத்த பிறவியில்
கழுகாக அல்லது காட்டெருமையாகக் கூடப் பிறக்கலாம்.

இந்த நம்பிக்கையில்தான் மலைவாழ் பழங்குடி மக்கள் சில மிருகங்களை உணவாக்கிக்
கொள்வதில்லை. அது தங்களுடைய முன்னோர்களாக இருக்கலாம் என்பது அவர்களுடைய
நம்பிக்கை!

(Reincarnation is the belief that when one dies, one's body decomposes, but
something of oneself is reborn in another body. It is the belief that one has lived
before and will live again in another body after death. The bodies one passes in and
out of need not be human. One may have been a Doberman in a past life, and one
may be a mite or a carrot in a future life. Some tribes avoid eating
certain animals because they believe that the souls of their ancestors
dwell in those animals.)

மேலும் படிக்க: சுட்டியை அழுத்தவும்!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

21.6.08

வாக்களியுங்கள்: முற்பிறவி, மறுபிறவி என்பது எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா?

====================================================
வாக்களியுங்கள்: முற்பிறவி, மறுபிறவி என்பது எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா?

முதலில் பாட்டைப் படியுங்கள்; கேள்வி கடைசியில் உள்ளது! அடுத்து வாக்களிப்புப் படிவம்!
-------------------------------------------------------

இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம்

"பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே"

பொழிப்புரை :
பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு , குளிர்ந்த மதி , ஊமத்தை மலர் ஆகியனமேலே
பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும் , வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும்
ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும்
மன முடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது .
--------------------------------------------------------------

”இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மன முடையார்க்கு மறுபிறப்புக் கிடையாது”
என்று பாடல் முடிகிறது!

நம்மில் எத்தனை பேர்கள் இறைவனை நினைத்து மயங்குபவர்கள் உள்ளார்கள் என்று
தெரியவில்லை! எனக்குத் தெரிந்து ஒரு பதிவர் இருக்கிறார். அவர் இறைவனை நினைந்து
மனம் உருகிப் போகின்றவர். அவர் பெயர் உ'னாவில் ஆரம்பித்து ன்' ல் முடியும்

நயன் தாராவிற்கும், நமீதாவிற்கும் உருகி ஓய்ந்து போகிறவர்களின் எண்ணிக்கையில்
பாதிப்பேர்கள் கூட இறைவனுக்காக உருகுகிறவர்கள் இல்லை!

விபூதி, பஞ்சாமிர்தத்தைவிட, ஜிஞ்சாமிர்தம், ஊறுகாயை பிரசாதமாக நினைத்து அடித்து
அல்லது புசித்து மகிழ்பவர்கள் எண்ணற்றவர்கள் உள்ளார்கள்

அவ்வளவு ஏன்? இறைவனே இல்லை, இருந்தால் காட்டு, இல்லையென்றால் பேசாமல்
உட்கார் என்பவர்களும் இருக்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சுத்தமாக இறை நம்பிக்கை இல்லாதவர்.
என்னைப் பார்த்தால் ஒவ்வொருமுறையும் கேட்பார்:

”உங்கள் கடவுளுக்கு அவருடைய உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா?
ஏன் கோவில்களுக்கு இத்தனை பூட்டுக்களை போட்டுப் பூட்டி வைக்கிறீர்கள்?”

நான் சொல்வேன்: “ கடவுள் எங்கே கோவில் கேட்டார்? மனிதனல்லவா ஊருக்குப் பத்துக்
கோவில்களைக் கட்டி வைத்துள்ளான். அதற்கு அவரைக் குறை சொல்லி என்ன பயன்?
அதோடு கோவிலில் உள்ள விக்கிரங்களுக்கு, அவனே ஆடை அணிகலன்களை
அணிவித்து விட்டு, அது திருட்டுப்போகாமல் இருக்கப் பூட்டையும் மாட்டியுள்ளான்.
அதற்கு அவர் எப்படிக் காரணமாக முடியும்? அவர் கருணை மிக்கவர். கும்பிடுகிறவனும்,
திருடுகிறவனும் அவருக்கு ஒன்றுதான்.”

"கும்பிடுகிறவனுடைய செயலுக்கும், திருடுகிறவனுடைய செயலுக்கும் என்ன வித்தியாசம்?”

“இருவினைப் புண்ணியமும், பாவமும் என்று பட்டினத்தார் சொன்னாரே அந்தக் கணக்கில்
அவ்விரண்டும் சேரும்”
----------------------------------
கேள்வி இதுதான்:

முற்பிறவி, மறுபிறவி என்பது எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா?
அதாவது அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?

வாக்களியுங்கள்
உங்கள் கருத்தைச் சொல்வதற்கான படிவம் கீழே உள்ளது!
============================================

============================================
வாழ்க வளமுடன்!

19.6.08

ரத்தத்தின் யுத்தங்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரத்தத்தின் யுத்தங்கள்!

“பலராமன்: பலராமன்” என்று மூன்று முறை அழைக்கிறார் நீதி மன்றத்தின் டவாலி.
அடுத்தாற்போல “பரசுராமன் மகன் ரங்கராஜன்” என்று மூன்று முறை அழைக்கிறார்.

மகன் வாதி; தகப்பன் பிரதிவாதி.

நீதி மன்றத்திலே ரத்தம் நேருக்கு நேராக மோதிக் கொள்கிறது. பாச அணுக்களால்
ஊறி வளர்ந்த ரத்தம், பகை அணுக்களுக்கு இடம் கொடுத்தது எப்படி?

உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும்
உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.

மனிதனுடைய மந்த புத்தியும், இறைவனுடைய சொந்த புத்தியும் சம அளவில் தேடித்
தரும் உறவு மனைவி உறவு. அது சரியாக அமைந்தாலும், தவறாக அமைந்தாலும்
அதைத் தேடி எடுத்ததில் மனிதனுக்குப் பங்கு இருக்கிறது. ஆனால் பிறப்பிலும்
உடன் பிறப்பிலும் மனித அறிவுக்கு வேலையே இல்லை!

அது முழுக்க முழுக்க இறைவனுடைய நியதியில் வருவது. பின் ஏனங்கே பகை வந்து,
பாசம் சாகிறது?

பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு
உணர்வை வழங்கி இருக்கிறான் இறைவன். சில பிறப்புக்கள் பந்த பாசத்தினால்
உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன்
நிர்ணயித்திருக்கிறான் போலும்!
-- ---------------------------------------- எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!

18.6.08

அள்ள அள்ள பணமா? தள்ள தள்ள விதியா?

அள்ள அள்ள பணமா? தள்ள தள்ள விதியா?

"காசேதான் கடவுளடா - அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா!"

என்று ஒரு கவிஞன் பாட்டெழுதினான். இப்பொழுதல்ல - 35 வருடங்களுக்கு
முன்பே எழுதினான். அது எவ்வளவு உண்மை என்பதை இன்று நாம் கண்
கூடாகப் பார்க்கிறோம்.

ஒரு படத்தில் திரு.M.R.ராதா அவர்கள் பணக்காரராகவும் அதே நேரத்தில்
வடிகட்டின கஞ்சனாகவும் நடித்திருப்பார். படம்: பட்டினத்தார்

அந்தப் படத்தில் தன்னுடைய நெறிமுறைகளை அட்டைகளில் எழுதி வீட்டில்
தொங்க விட்டிருப்பார். அதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கீழே
கொடுத்துள்ளேன்.

1. கட்டிய மனைவியானாலும் வட்டியை வாங்கு!
2. ஊரான் பொருளானாலும் உனதென்று நினை!
3. மனதைச் செலவிட்டாலும் பணத்தைச் செலவிடாதே!
4. கணக்கன் சம்பளத்திற்குக் கடனைச் சொல்லு!
5. உற்ற தாயானாலும் உள்ளதைச் சொல்லாதே!

இன்று பல பேர் கஞ்சனாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் சுயநலம்.

என் தந்தையார் பர்மாக் கதையொன்று சொல்லுவார் (அவர் சின்ன வயதில்
பர்மாவில் உள்ள சூம்பியோ நகரில் சில காலம் வியாபார நிமித்தமாக இருந்தவர்)
பர்மா மிகவும் செழிப்பான நாடு. நமது கேரளாவைப்போல எங்கும் பச்சைப் பசேல்
என்று இருக்குமாம்.

அது 1940 களில் பிரபலம்

அங்கே வியாபாரம் செய்து கொண்டிருந்தவனிடம் அவனுடைய நண்பன் சொன்னானாம்

"நாளை வீயட்நாமிலிருந்து 1,000 இளம் பெண்கள் இங்கே வருகிறார்கள்

உடனே நம்ம ஆள் கேட்டான், "என்ன செய்யப்போகிறீர்கள்?"

"கேட்கிறவர்களுக்குக் கேக்கிறபடி பெண்களைக் கொடுக்கப்போகிறோம்"

"அப்படியென்றால் எங்கள் வீட்டிற்கு 3 பெண்களைப் பதிவு செய்துகொள்"

அவன் கேட்டான்,"என்ன கணக்கு?"

"எனக்கொன்று, என் அப்பாவிற்கொன்று, என் தம்பிக்கொன்று!"

வந்தவன் எழுதிக்கொண்டு போய்விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவன் வந்து கேட்டான், " முன்னூறு ரூபாய் கொடு!"

நம்ம ஆள் திரும்பக் கேட்டான், " எதற்கு?"

அவன் சொன்னான், " பெண்களெல்லாம் ஃப்ரீ; ஆனால் கூட்டிக் கொண்டு வந்த
கப்பல் செலவு தலைக்கு நூறு ரூபாய்!. உங்கள் வீட்டிற்கு 3 பெண்கள் ஆகவே
முன்னூறு ரூபாய்"

இவன் உடனே பதட்டத்துடன் சொன்னான்,"நான் டோட்டலாகப் ஃப்ரீ என்று
நினைத்திருந்தேன் காசென்றால் வேண்டாம்" என்று சொல்ல வந்தவன், அப்படிச்
சொல்லாமல்," ராத்திரி யோசித்துப் பார்த்தேன், எங்களுக்கு வேண்டாம்!" என்றான்

அவன் விடவில்லை, "இதற்கென்ன கணக்கு?" என்றான்.

நம்ம ஆள் நெத்தியடியாகப் பதிலைச் சொன்னான்.

"எனக்குக் கல்யாணமாகிவிட்டது. எங்கப்பாவிற்கு வயதாகிவிட்டது. எனதம்பி
சின்னப்பயல்!"

இப்படித்தான் பலபேர் ஓசி'யென்றால் பத்து என்பார்கள். காசென்றால் ஒன்றும்
வேண்டாமென்று சொல்லிவிடுவார்கள்.
------------------------------------------------------------------
கஞ்சனைக்கூடச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் அவனைவிட மோசமானவன் கருமி.

கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்?

தன் வீட்டுத் தோட்டத்தில் விளையும் மாம்பழங்களில், தன் மனைவிக்கும், பிள்ளை
களுக்கும் மட்டும் பத்து அல்லது இருபது பழங்களைக்கொடுத்துவிட்டு மற்றதை
யெல்லாம் சந்தையில் விற்றுக் காசாக்குபவன் கஞ்சன்.
(அவன் தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அந்தப் பழங்களைக் கண்ணிலேயே
காட்ட மாட்டான்)

கருமி தன் மனைவி மக்களுக்குக் கூட ஒன்றையும் கொடுக்காமல் அத்தனை
பழங்களையும் சந்தையில் விற்றுக் காசாக்கிவிடுவான் ( மனைவி மக்களிடம்
சொல்லுவான். இது உயர்ந்த வகைப் பழம் - நல்ல விலை இடைத்தது. ஆகவே
விற்றுவிட்டேன். நமக்கு வேண்டுமென்றால் அவ்வப்போது வாங்கித் திண்போம்!)
-----------------------------------------------------------------
சரி, மனிதன் பணத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறியாக இருக்கிறான்?

அதை வெறி என்று சொல்ல முடியாது. பக்தி என்று கொள்ளலாம்
அவர்களுக்கெல்லாம் காசுதான் கடவுள்.

அது நல்லதா?

அல்ல! அது அறியாமை!

"பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம"
- குறள் 376

ஊழால் நமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும்
நம்மிடத்து நிற்கமாட்டா. ஊழால் நமக்கு உரிய பொருள்கள் வெளியே
கொண்டுபோய்க் கொட்டினாலும் நம்மை விட்டுப் போக மாட்டா!
------------------------------------------------------------
சரி, ஜாதகத்தைப் பார்த்து ஒருவன் கஞ்சனா என்று தெரிந்து கொள்ள
முடியுமா?

முடியும்!

குரு 12ல் அல்லது 6ல் இருந்தாலும் அல்லது நீசம் பெற்றிருந்தாலும்
அவன் கஞ்சன் (Miser)

அப்படியிருந்து ஒன்பதாம் அதிபதி உச்சமாக இருந்தால் அதற்கு
மட்டும் விதிவிலக்கு!
----------------------------------------------------
எத்தனை பேர்கள் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை!

ஜாதகம் கணிக்கும் மென்பொருள், அதற்கான இணைய தளம்,
அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளைக் கொடுக்கும் தளம் ஆகியவற்றிற்கான
சுட்டிகளை side bar ல் நிரந்தரமாகக் கொடுத்துள்ளேன்.

புது மாணவர்களின் வசதிக்காக அதைக் கொடுத்துள்ளேன்
அனைவரும் தேவையானபோது அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளலாம்
---------------------------------------------------
ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு எளிய உபாயம் இருக்கிறது.

முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் முழுமையாக மனப்பாடம்
செய்து வைத்துக் கொள்ளுங்கள். நட்சத்திரம், லக்கினம், சந்திர ராசி,
12 வீடுகளுக்கும் அதிபதிகள் அமர்ந்திருக்கும் இடம், அஷ்டக வர்க்கம்,
பிறந்த போது இருந்த தசா இருப்பு, இப்போது நடைபெறும் தாசா புக்தி
என்று எதைக்கேட்டலும், எப்போது கேட்டாலும், எப்படிக் கேட்டாலும்
சொல்லத் தெரிய வேண்டும்!

உங்கள் ஜாதகம் உங்களுக்கே தெரியவில்லை என்றால் என்ன பயன்?

ஒரு புது விதியைப் படிக்கும்பொது, முதலில் (பாழாய்ப்போன) நமது மனது
அந்த விதி நமக்குப் பொருந்துகிறதா என்றுதான் எண்ணிப் பார்க்கும்
அப்பொது அது கை கொடுக்கும். அந்த மனப் பாடம் கை கொடுக்கும்

என்ன நான் சொல்வது சரிதானே?

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கம்

(தொடரும்)

17.6.08

Toll Free Numbers in India:

Toll Free Numbers in India:

உங்களுக்குப் பயன்படும் குறித்துவைத்துக்கொள்ளூங்கள்!

Save this file in your disc!

Airlines
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101

Banks
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655

Automobiles
Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636

Computers/IT
Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralized Railway Enquiry
1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers
ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171

Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432

Investments/ Finance
CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101

Travel
Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344
Healthcare
Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262

Insurance
AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090

Hotel Reservations
GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825

Teleshoppin
Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777

Others
Domino's Pizza - 1800 111 123

Cell Phones
BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111


வாழ்க வளமுடன்!

16.6.08

Astrology: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Astrology: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

சிலருடைய வாழ்க்கை பார்ப்பதற்குச் சீராக இருக்கும். சிலருடையது சீர்
இல்லாமல் இருக்கும்.

சீராக இருப்பவனைக் கேட்டால், “என்னங்க உப்புச் சப்பில்லாமல் ஒரே மாதிரி
வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது - அப்ஸ் அண்ட் டவுன் இருந்தால்தானே
சுவாரசியமாக இருக்கும்” என்பான்.

அடுத்தவனைக் கேட்டால், “என்னங்க, நாய்ப் பிழைப்பாக இருக்கிறது. எப்போது
நல்ல காலம் வரும்? பணம், காசு வேண்டாங்க, நிம்மதி வேண்டும்! அந்த நிம்மதி
கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறேன்” என்பான்.

எல்லோருக்குமே ஆசைகளும், கனவுகளும் அதிகமாகி விட்டன! பணத்
தேவைகளும், தேடல்களும் அதிகமாகி விட்டன!

‘திருக்குறளைப் பற்றியும், பட்டினத்தாரைப் பற்றியும் எழுதினாலோ அல்லது
எழுதிப்புத்தகமாகப் போட்டாலோ, ஒருத்தனும் வாங்க மாட்டான். வாங்கிப் படிக்க
மாட்டான்.

'பங்குச் சந்தையில் பணம் பண்ணுவது எப்படி?', 'இருக்கின்ற பணத்தை இரட்டிப்
பாக்குவது எப்படி?' என்று எழுதினால் மாய்ந்து மாய்ந்து படிப்பான். அதுதான்
இன்றைய நிலைமை!

ஒரு மனைவி, ஒரு வீடு, ஒரு வாகனம் என்று ஒவ்வொன்று இருந்தால் போதாதா?
இல்லை பத்தாது என்பான்.

அம்பத்தூரில் வீடு இருப்பவன், அண்ணாநகரில் வீடு வேண்டும் என்பான்.
அண்ணா நகரில் வீடு இருப்பவன், நுங்கம்பாக்கத்தில் வீடு வேண்டும் என்பான்.
நுங்கம்பாக்கத்தில் வீடு இருப்பவன், தி.நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் வீடு
வேண்டும் என்பான்.

மாருதி வைத்திருப்பவன், டொயோட்டா வேண்டும் என்பான், டொயோட்டா
வைத்திருப்பவன் பென்ஸ் வேண்டும் என்பான்.

மொத்தத்தில் இருப்பவனும் நிம்மதியாக இல்லை; இல்லாதவனும் உள்ளபடியே
நிம்மதியாக இல்லை.
---------------------------------------------------------------

சீரான வாழ்க்கைக்கு இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

ரயில்வேயில், ஆரம்பத்தில் சரக்கு ரயிலில் Guard ஆகச் சேருகிறவன், பதவி
உயர்வுகள் பெற்று, Passenger Train, Express Train, Sathapthi Super Fast என்று பல
வண்டிகளையும், பல ஸ்டேசன்களையும், பல டிவிசன்களையும் பார்த்து விட்டுக்
கடைசியில் கட்டாய ஓய்வு பெறுவான். அவனுடைய வாழ்க்கை இரயிலுடனே
இருந்திருக்கும் அல்லது முடிந்திருக்கும்.

அதேபோல சாதாரண செய்தி நிருபராகப் பத்திரிக்கையில் சேர்ந்து, பல பதவி
உயர்வுகளைப் பெற்றுக் கடைசியில் செய்தி ஆசிரியர் பதவிவரை பார்த்துவிட்டுப்
பிரிதொருவனின் வாழ்க்கை, நாளிதழ் ஒன்றில் நாராக முடிந்திருக்கும்.

அத்தனை பேர்களுக்குமா பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் சினிமா
அல்லது வியாபாரத்துறைகளில் வாழ்க்கை அமைந்து விடுகிறது?

சினிமாவில் கூட ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசிப்பவன் கடைசிவரை
வயலின்ஸ்ட்டாகவே இருந்து மாய்ந்து விடுவதில்லையா?

இன்று பணம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது என்றாலும், பணம் வருவது
போவது நம் கையில் இல்லை!

எல்லாம் வாங்கி வந்த வரம்!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக இப்படிச் சொன்னார்

”உன்னைக்கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?”
---------------------------------------------------
சரி, வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது?

அதற்கும் வழி இருக்கிறது.

ஒரு சிந்தனையாளன் இப்படிச் சொன்னான்

Life is 10 percent what you make it and 90 percent how you take it.
--Irving Berlin

வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் - அந்தக் குணம்தான் இனிய
வாழ்க்கைக்கு வழிவகுக்கும்

அதற்கும் ஒரு தீர்வைக் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்து விட்டுப்போயிருக்கிறார்

”வந்ததை வரவில் வைப்போம்
சென்றதைச் செலவில் வைப்போம்”

என்ன, சரிதானே இது?
---------------------------------------------------------
மொத்தத்தில் வாழ்க்கை சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் இருந்தால் போதும்

விவேகானந்தர் சொன்னார்: “உன்னுடைய சுதந்திரத்தைப் பறிக்கக்கூடியது எதுவாக
இருந்தாலும் அதன்மீது எச்சரிக்கையாக இரு!”

“Beware of Everything that takes away your freedom!"
-Swami Vivekananda

தந்தை பெரியார் சுயமரியாதையைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்

ஆகவே சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் இருந்தால் போதும் என்று நினையுங்கள்
மகிழ்ச்சி தானாகவே தேடிவரும்! நிம்மதியும் அதன் பின்னாலாயே ஓடி வரும்!
-------------------------------------------------------------------------------
வாழ்க்கை சாராசரியாக இருந்தால் போதும். ரோட்டி,கப்டா, மக்கானுக்கு எவரையும்
எதிர்பார்க்காத நிலை இருந்தால் போதும்.

என் தந்தை சொல்லுவார், ”எளிமையாக இரு. எல்லா உணவும் ஒன்றுதான். தொண்டை
வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்
ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். உறக்கம் வரும் வரைதான் இடம்
வேறுபடும். வந்து விட்டால் எல்லா இடங்களும் ஒன்றுதான். ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக
இருந்தாலும் சரி அல்லது திண்ணையாக இருந்தாலும் சரி! உடலை மறைக்கத்தான்
உடை. அது காதியாக இருந்தாலென்ன - அல்லது பீட்டர் இங்கிலாந்து பிராண்ட்
சட்டையாக இருந்தாலென்ன?”

ஆகவே வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொள்ளுங்கள். எல்லாம் வசப்படும்!
--------------------------------------------------------------------
சரி, இப்போது பாடத்திற்கு வருவோம்!

பாடம் 1

சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்:

ஒரு ராசியில் பரல்களின் சராசரி அளவு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
மொத்த பரல்கள் 337 வகுத்தல் 12 ராசிகள் = 28

அப்படி எல்லாம் எல்லோருக்கும் இந்த சராசரி அளவே அமைந்து விடாது.

அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும்
பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று
நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே
கொடுத்துள்ளேன்.

1. லக்கினம் 25
2ஆம் வீடு - 22
3ஆம் வீடு 29
4ஆம் வீடு 24
5ஆம் வீடு 25
6ஆம் வீடு ............34
7ஆம் வீடு 19
8ஆம் வீடு 24
9ஆம் வீடு 29
10ஆம் வீடு ..........36
11ஆம் வீடு ...........54
12ஆம் வீடு 16

விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக
இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.
4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல்
போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து
இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?
ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.
அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும். அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்

உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.
இருந்தால் போதும். சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------------------------------------
பாடம் 2

வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இளமை, நடு வயது, முதுமை

இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து
கொள்ள முடியுமா?

முடியும்!

1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை
இளமைப் பருவம்
2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
நடு வயதுக் காலம்.
3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
முதுமைக் காலம்.

இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்
தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்

மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்

-------------------------------------------------------------
பாடம் 3

பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.

ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்

10th house >11th house <12th br="br" house="house">10th house >11th house >12th house = நல்லதல்ல
---------------------------------------------------------------
4.
லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, லக்கினநாதன் 4th or 10th or 11th அதிபதி உடன்
சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும்
உதவியாக இருப்பான்.
-----------------------------------------------------------------
5. கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது
அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத்
திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.
-----------------------------------------------------------------
6.
லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
(Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!
-----------------------------------------------------------------
இன்று பாடம் அதிக நீளமாக உள்ளது. பொறுத்துக்கொள்ளவும்!

மற்றவை அடுத்த பாடத்தில்

அன்புடன்
வாத்தியார்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

14.6.08

பன், பட்டர், ஜாம் பதிவுகள்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
பன், பட்டர், ஜாம் பதிவுகள்

உன்னைக்கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
---------------------------------------
இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார்?
பாடலின் பல்லவி என்ன?
அதாவது முதல் வரி என்ன?

எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்?
(எத்தனை பேர் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல்தான் - வேறென்ன?)

------------------------------------------
தசாவதாரப் புயல் அடித்துக்கொண்டிருக்கிறது!
அது முடியும் வரை, இப்படி பன், பட்டர், ஜாம் பதிவுகள் மட்டுமே!

வாழ்க வளமுடன்!

13.6.08

ஞானக் கதைகள்(3) - எவன் வெற்றி பெறுவான்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள எண் 3-

எவன் வெற்றி பெறுவான்?

புத்தர் தன்னுடைய சீடன் ஒருவனுக்கு தீட்சை அளித்து விடை கொடுக்கும்
போது கேட்டார்:

“நீ எந்தப் பகுதிக்குச் சென்று மக்களை நல்வழிப் படுத்தப் போகிறாய்?”

அவன் சொன்னான்; புத்தர் தொடர்ந்து கேட்டார்:

“அந்தப் பகுதி மக்கள் உன் பிரச்சாரத்தைக் கேட்க விரும்பாமல் உன்னை
நிந்தனை செய்தால் என்ன செய்வாய்?”

“இந்த மாட்டோடு விட்டர்களே என்று நினைக்காமல் மீண்டும் மீண்டும்
பிரச்சாரம் செய்வேன்”

“உன்னை அடித்தால்....?”

“ஆயுதம் கொண்டு தாக்கவில்லையே என்று சந்தோஷப்படுவதுடன், மீண்டும்
மீண்டும் பிரச்சாரம் செய்வேன்”

“ஆயுதம் கொண்டு தாக்கி உன்னைக் கொல்ல வந்தால்......?”

“இந்த ஜீவனுக்கு முக்தியளிக்க எவ்வளவு பேர்கள்? நமக்கு இவர்கள் சுலபமாக
முக்தி அளித்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று மகிழ்வேன்!”

புத்தர் சொன்னார்:

“நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”


வாழ்க வளமுடன்!

ஞானக் கதைகள் - பகுதி 2

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள் - பகுதி 2

குருவும் சீடனும் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

வழியில் துளிவிட்டிருந்த சிறு செடியைப் பிடுங்கும்படி குரு சீடனிடம் சொல்ல
அவனும் சட்டெனெ அதை ஒரு நொடியில் செய்து முடித்தான்.

சற்றுத் தள்ளி, நன்கு வளர்ந்திருந்த செடியொன்றைப் பிடுங்கும்படி பணித்தார்.
சீடன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனது இரண்டு கைகளாலும் அச்செடியைப்
பிடுங்கிப் போட்டான்.

சற்றுத்தூரம் சென்ற பிறகு, ஒரு சிறு மரம் அளவிற்கு வளர்ந்திருந்த செடி
ஒன்றைப் பிடுங்கும்படி அவர் சொன்னபோது, சீடன் தன்னுடைய முழு பலத்தை
உபயோகித்தும் பிடுங்க முடியாமல் போய்விட்டது.

அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த குரு சொன்னார்,”பிரச்சினை
களும் இப்படித்தான்!”

உடனே சீடன் கேட்டான், “பிரச்சினைகளுக்கும் செடிக்கும் என்ன சம்பந்தம்?”

குரு புன்னகையுடன் அவனுக்கு விளங்கும்படி சொன்னார்:

“பிரச்சினைகள் துளிர் விடும்போதே, அதைத் தீர்க்க முயன்றால் தீர்த்து விடலாம்.
அதை வளர விட்டால் - அது மரம்போல வளர்ந்து பெரிதாகி விட்டால் - அப்புறம்
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!”


வாழ்க வளமுடன்!

12.6.08

ஞானக் கதைகள் - 1

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள் - 1

ஞானம் என்றால் முழுமையான அறிவு (wisdom) என்று பொருள். முழுமையான
அறிவைக்கொடுக்கின்ற குட்டிக்கதைகளை வகுப்பறைக் கண்மணிகளுக்குச்
சொல்லலாம் என்று துவங்கியுள்ள புதிய பகுதி இது!

இன்று முதல் கதை!
----------------------------------
கடவுள் எப்படியிருப்பார் என்று நச்சரித்த தன்னுடைய எட்டு வயதுக் குழந்தைக்
குத் தாய் ஒருத்தி, ஒரு நாள் பெருங்கூட்டம ஒன்றிற்கு உரை நிகழ்த்த வந்திருந்த
ஸ்வாமி விவேகானந்தரைக் காட்டி - இவர்தான் கடவுள் என்று சொல்லி வைத்தாள்.
அதுவும் நம்பிவிட்டது!

அதோடு நில்லாமல் தன் குழந்தைக்குப் பயபக்தி உணர்வு மேலிட வேண்டுமென்
பதற்காகத் தினமும் இருவேளைகள் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் இருந்த
விவேகானந்தரின் படத்திற்குப் பூக்களை அர்ச்சித்துக் கும்பிடவும் வைப்பாள்

தன் குழந்தை சாப்பிட, படுக்க என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் இதோபார்
கடவுள் பார்த்துத்துக் கொண்டிருக்கிறார், அவர் கோபப் படுவாரா இல்லையா?
உன்னால் அவர் நம் வீட்டைவிட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்று சொல்லி
அதை வழிக்குக் கொண்டு வருவாள்.

குழந்தையும் நெறியோடு வளர்ந்தது. விவேகானந்தரின் தயவால் அன்னை சொல்லி
யவற்றையெல்லாம் கேட்டது - ஒன்றே ஒன்றைத் தவிர. அதாவது தினமும் ஏகப்பட்ட
மிட்டாய்கள், இனிப்புகள் தின்பதைத் தவிர!

ஒருநாள் விவேகானந்தரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்த அந்தத்தாய், குழந்தையைத்
தன் கணவரிடம் விட்டுவிட்டு, அவள் மட்டும் ஸ்வாமிஜீயைப் பார்த்து தன் குழந்தையைப்
பற்றிச்சொல்லி அவனுக்கு நீங்கள்தான் கடவுள். ஆகவே நீங்கள் சொன்னால் நிச்சயம்
கேட்பான். அவனுடைய பற்கள் கெடுவதற்கு முன்பு இந்த மிட்டாய்களை அதிகமாகத்
தின்னும் பழக்கத்தை நிறுத்திவிட விரும்புகிறேன்.நீங்கள் உதவி செய்ய வேண்டும்
என்று கேட்டுக் கொண்டாள்

அவரும் சற்று யோசித்தவர், சரி அம்மா, உன் குழந்தையை அடுத்தவாரம் மீண்டும்
அழைத்து வா, நான் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அந்த இளம் தாய் விடவில்லை. அடுத்த வாரமே ஸ்வாமிஜீ குறிப்பிட்டிருந்த தினத்தில்
மீண்டும் ஒரு முறை தன்னுடைய குழந்தையுடன் அவரைச் சென்று பார்த்தாள்

தன்னை விழுந்து வணங்கிய சிறுவனை, வாஞ்சையோடு தன் கைகளில் துக்கிய அவர்
புன்னகையோடு அவனை உற்று நோக்கியபிறகு, "கண்ணா, நீ அதிகமாக மிட்டாய்கள்
தின்பாய் போலிருக்கிறதே - உன் பற்கள் சொல்கின்றனவே! இனிமேல் மிட்டாய்
திங்கக்கூடாது சரியா?" என்று சொன்னார்.

குழந்தையும் பய பக்தியுடன் "சரி" என்றது!

சற்று நேரம் அவருடன் பேசிய அந்தத்தாய், தன்னுடைய மகனை வெளியே நின்று
கொண்டிருந்த தன் தாயாரிடம் விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் ஸ்வாமிஜி
அவர்களிடம் வந்து, " ஸ்வாமிஜி, தாங்கள் சென்றமுறை நான் என் குழந்தையுடன்
வந்திருந்தபோதே இதைச சொல்லியிருக்கலாமே! ஒருவாரம் கழித்து வரச் சொன்னதில்
உள்ள தங்களுடைய அன்பான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.

புன்னகைத்த விவேகானந்தர் சற்று மெல்லிய குரலில் சொன்னார்.

"தாயே சென்றவாரம் அந்தக் குழந்தைக்கு மிட்டாயைப் பற்றியும், இனிப்பைப்
பற்றியும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லாமல் இருந்தது.ஏனென்றால் நானும்
அவற்றை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால் சொல்லவில்லை. இந்த ஒரு
வாரத்தில் அதை நானும் நிறுத்தி விட்டேன். இனிமேல் நானும் அவற்றைச் சாப்பிடப்
போவதில்லை. இப்போதுதான் எனக்கு அதற்குரிய தகுதி வந்திருக்கிறது. புரிந்து
கொண்டாயா அம்மா?

அந்தத் தாய் அசந்து விட்டாள்.

இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், போதிப்பதற்கும் உள்ள வழி.

வாழ்க வளமுடன்!

புயலில் சிக்கிய கப்பல்!

புயலில் சிக்கிய கப்பல்!

புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் படங்கள் - என்ன பயங்கரம் பாருங்கள்!
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத்தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1

2

3

4


5
================================================
இந்தப் படத்தை (எண். 5) எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?

வாழ்க வளமுடன்!

8.6.08

Astrology அடுத்த மாற்றம் எப்போது?

Astrology அடுத்த மாற்றம் எப்போது?

‘அடுத்தது என்ன?” என்று தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும்.
திரைப்படம், அல்லது வாய்மொழிக்கதை , வாழ்க்கை நிகழ்வுகள் என்று எதைப்பற்றியதாக
இருந்தாலும் அடுத்து நடக்க இருப்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையானது.

அதுவும் சொந்த வாழ்க்கை பற்றியதாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா?

ஜோதிடத்தில் பெரிய காய்களை நகர்த்துவது சனிதான், ஆகவே சனி எப்பொழுதெல்லாம்
இடம் மாறுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாற்றங்களும் நிகழும். இங்கே இடமாற்றம்
என்பது சனி ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்கு இடம்பெயர்வதைக் குறிக்கும்.

சனி, வானவெளியில் ஒரு முழுச்சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் சுமார்
30 ஆண்டுகள் 30 ஆண்டுகள் x 12 மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 டிகிரிகள
= மாதம் ஒன்றிற்கு ஒரு டிகிரி

ஜோதிடத்தில் விருப்பம் உள்ளவர்கள் மிகப் பெரிய கோள்களான சனி மற்றும் குரு ஆகிய
இரண்டு கிரகங்களும் இன்றைய தேதியில் எங்கே உள்ளன என்பதை நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும்!

சனி இன்றைய தேதியில் எங்கே உள்ளது?

சிம்ம ராசியில் உள்ளது

சிம்ம ராசியில் 128.48 டிகிரியில் உள்ளது.

அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் எல்லாம் பிட்ஸா காலத்தவர்கள், பஞ்சாங்கம் தெரியாது வேறு வழி சொல்லுங்கள்!

வழி இருக்கிறது

ஒரு இணையதளம் இருக்கிறது!

இந்த இணைய தளத்திற்குச் சென்று இன்றைய தேதியில் Mr.Chennai என்று குறிப்பிட்டு
பிறந்த நேரம் காலை 6 மணி அல்லது உங்களுக்குத் தோதான நேரத்தையும் - உடன்
சென்னையின் அட்சரேகை (Latitude) 13.05 North மற்றும் தீர்க்கரேகை (Longitude)
80.18 East கொடுத்தால் அது அன்றைய கிரக நிலைமையைக் கொடுக்கும். அடித்துப்
பாருங்கள்

இன்றைய தேதிக்கு சனி : 128.20 டிகிரியில் உள்ளது. அதாவது சிம்மராசியின் 8..2
டிகிரியில் உள்ளது சரி, அது எப்போது சிம்மத்தை விட்டு கன்னி ராசிக்கு இடம் பெயரும்?

15.09.2009 அன்று பெயர்கிறது. அதையும் உள்ளிட்டுப்பாருங்கள். அந்தத் தேதியில் சனி
150.34 என்ற டிகிரியில் இருக்கும்

நட்சத்திரங்களுக்கிடையே உள்ள இடைவெளி சம அளவில் இல்லை. சந்திரன் சில
நட்சத்திரங்களை 22 மணி நேரங்களிலும், சில நட்சத்திரங்களை 25 மணி நேரங்களிலும்
கடக்கும். அதுபோல சனியின் சுழற்சியின் வேகம் நேரான வேகம், வக்கிரகதியில்
(பின்சுழற்சி) என்று வித்தியாசம் உடையதாக இருக்கும். அதனால் ஒரு ராசியைக்

கடக்கும் காலம் துல்லியமாக 30 மாதங்கள் என்று இருக்காது. கூடுதல் குறைச்சல் இருக்கும்

இப்போது கடகம், சிம்மம், கன்னி ஆகிய மூன்று ராசிக்காரர்களும் முறையே கழிவுச் சனி,
ஜென்மச்சனி, விரையச்சனி என்று மூன்று வெவ்வேறு நிலைகளில் துன்பங்களைச் சந்தித்துக்
கொண்டிருப்பார்கள். அதேபோல மகர ராசிக்காரர்கள் அஷ்டமச்சனி (8ஆம் இடத்துச் சனி)
யால் சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் ஏற்படும்.

இதையே அஷ்டகவர்க்கத்திலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்துவரும் மாற்றம் நல்லதா? அல்லது கெட்டதா? என்று அதில் தெரியும்.

இப்போது சனி இருக்கும் சிம்மத்தைவிட அடுத்து மாற இருக்கும் கன்னி ராசியில் அதிக
பரல்கள் என்றால் நல்லது. ஏற்றமாக இருக்கும். இல்லை அதை விடப் பரல்கள் குறைவு என்றால்
இறக்கமான காலம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவ்வாறு அடுத்து வரும் ராசியின் பரல்களின்
அளவு ஒரேயடியாக அதிகமாக இருந்தால் சூப்பரான ஏற்றமாக இருக்கும். அடுத்து வரும் ராசியின்
பரல்களின் அளவு ஒரேயடியாகக் குறைவாக இருந்தால் சூப்பராக அடி விழுகும்

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்.

படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

------------------------------------------------------------------
கிரகங்களின் கோச்சார நிலைமையை (Transit Position) தெரிந்து கொள்ள மற்றொரு
இணையதளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளேன். இதில் சுற்றி வளைக்கும் வேலையெல்லாம்
கிடையாது. உடனே தெரிந்து கொள்லலாம். இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும்,
இதைத் தோண்டித் துருவி அதில்

கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற விஷயங்களையும் பாருங்கள்

அதற்கான சுட்டி இங்கே!


________________________________________

படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

இது நன்றாக மனதில் வாங்கிக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். ஆகவே இன்று
இது மட்டும்தான். அடுத்த பாடம் - இரண்டு நாட்கள் கழித்து வரும்

இது திங்கட்கிழமைக்கான பாடம். 12 மணி நேரம் முன்னதாகவே பதிவிட்டுள்ளேன்

முன்னதாகக் கொடுத்தால் தவறில்லையல்லவா? என்ன சொல்கிறீர்கள்?

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!